சாவர்க்கரின் அரசியலுக்கும் இந்து மகாசபாவிற்கும் எதிரான வலுவான பார்வையை போஸ் கொண்டிருந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த விவரணை எல்லாம் இன்றைய அரசியல் சூழலின் நிகழ்ச்சிநிரலால் உருத் திரிக்கப்பட்டவையாகவும் இருந்துவருகின்றன.
சாவர்க்கருக்கும் போஸிற்கும் இடையிலான உறவு மிகமிக சிறு வேறுபாடுகளைக் கொண்டது மட்டுமல்ல, அரசியலில் வேறுபாடு இருந்த போதிலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து நடந்துகொண்டனர் என்று புதிய தகவல் கூறுகிறது.
பின்னணி வரலாறு
மே 1937 ல் சாவர்க்கர் விடுதலையான போது சுபாஷ் சந்திரபோஸ் ஓராண்டு சிறைவாசம் மற்றும் வீட்டுக்காவலை அனுபவித்துவிட்டு டல்ஹவுசியில் உடல்நிலை தேறிவந்தார். ஐரோப்பியாவிற்கு நாடுகடத்தப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வருவதற்காக இந்திய அரசாங்க உத்தரவுகளை மறுத்து 1936, ஏப்ரலில் போஸ் இந்தியா வந்தார். எதிர்பார்த்தப்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக அவர் 1937, மார்ச் மாதத்தில் விடுதலையானார். அவர் சாவர்க்கர் பொதுவாழ்க்கைக்கு திரும்பி வந்ததை வரவேற்று ஒரு செய்தி வெளியிட்டார். சாவர்க்கர் காங்கிரசில் சேருவார் அவர் என்று நம்பினார். எனினும் சாவர்க்கர் அந்த ஆண்டின் இறுதியில் இந்து மகாசபாவை ஒரு தேசிய அரசியல் சக்தியாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு அதில் இணைந்தார்.
படிக்க :
சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
1938-ல் போஸ் காங்கிரசில் சேர்ந்ததால் சிறிய வார்த்தை போர்களை தவிர அவர்களுடைய பாதைகள் நேருக்குநேர் குறுக்கீடாகவில்லை. வர இருக்கின்ற எந்த ஒரு வட்ட மேசை மாநாட்டிலும் காங்கிரசுதான் இந்தியாவை பிரதநிதிப்படுத்தும் என்று போஸ் உறுதிபட கூறியபோது, சாவர்க்கர் அதை எதிர்த்தார். அதிகபட்சமான இந்து தொகுதிகளை முந்தய தேர்தல்களில் காங்கிரசு வெற்றிபெற்றிருந்த போதிலும் முற்றிலும் இந்துக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி அது போட்டியிட்டதில்லை என்பதை குறிப்பிட்டு இந்து மகாசபைமட்டும்தான் இந்துக்களை பிரதிநிதித்துவபடுத்த முடியும் என்று சாவர்க்கர் வாதிட்டார்.
போஸ் காந்திய தலைமையிலான காங்கிரசுடன் முரண்பட்டு புதிய ஒரு மாற்று தேசிய இயக்கத்தை தனது அனைத்திந்திய ஃபார்வடு ஃப்ளாக் என்ற கட்சி மூலம் அடைய முயல்கையில் வெவ்வேறான அரசியல் பார்வைகளோடு அவர்கள் இருவரும் (போஸ், சாவர்க்கர்) தனித்தனி தளங்களில் இயங்கினர்.
அரசியல் மோதல்
ஏகே ஃபஸ்ஸுல் ஹக் அரசாங்கத்தின் மதவாத அரசியலுக்கு எதிராக சாவர்க்கர் மாகாண இந்து மகா சபையை பலப்படுத்த 1939, டிசம்பரில் வந்தபோது, அவர்களின் அரசியல்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. சுபாசும் காங்கிரசு கட்சியில் அந்த மாகாண சட்டசபையின் உறுப்பினரான அவருடைய மூத்த சகோதரர் சரத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து இறக்க தங்களுடைய சொந்தவழியில் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் காந்தியின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டன. காந்தி, ஜிடி பிர்லா மற்றும் ஹக் அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நளினி ரஞ்சன் சர்கார் அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டார்.
போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது. போஸின் விமர்சனம், மகாசபை அணுகுமுறையுடன் உள்ள வேறுபாட்டை காட்டி மத பிரச்சினையை ஒட்டிய விசயத்தில் அவருடைய அணுகுமுறையை பிரதிபலித்தது. எல்லா முஸ்லீம்களையும் ஒன்றாக சேர வைப்பதன் மூலம், மத வேற்றுமைகளை கோடிட்டு காட்டி இந்து மகாசபா இந்திய தேசியத்திற்கு கணக்கிடமுடியாத தீமையை செய்துவருகிறது என்று பார்வர்டு பிளாக் இதழ் வாதிட்டது.
முகம்மத் அலி ஜின்னாவும் அவருடைய கூட்டத்தாரும் பரந்த இந்திய முஸ்லீம் மக்களில் ஒரு சிறு பிரிவினர் மட்டும்தான். மற்றும் அந்த பரந்தபட்ட மக்கள் கூட்டம் படிப்படியாக பொறுப்பான ஒரு தேசிய உணர்வு பெற்றுவருகிறது என்று குறிப்பிட்ட அந்த இதழ், இந்தியா உருவாவதற்கான தேசியவாத முஸ்லீம்களின் பங்கை கண்டுங்காணாமல் விடுவதன் மூலம் சாவர்க்கருக்கு நாம் அனுகூலம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டது.
சாவர்க்கர்
சிறு ‘மோதல்களை’ விட மிகமிக சிறு வேறுபாடே இருவருக்கும் இடையில் இருந்தது.
அவர்களுக்கிடையில் அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் ஆச்சர்யமூட்டும் வகையில் போஸ் இந்து மகாசபையுடன் கல்கத்தா மாநகராட்சி கழகத்திற்கு 1940-ல் நடந்த தேர்தலில் கூட்டுவைத்தார். இந்த ஒரு அத்தியாயம் அவருடைய நிலையான வாழ்க்கை வரலாறுகளில் புறக்கணிக்கப்பட்டதாகவே இன்றும் உள்ளது.
இருப்பினும் இந்த கூட்டு நீடிக்கவில்லை மற்றும் தேர்தல் நடப்பதற்கு முன்னரே கூட எரிச்சலூட்டி ஷியாமா பிரசாத் முகர்ஜியால் தலைமை தாங்கப்பட்ட அந்த உறவு நிறுத்தப்பட்டது.
இப்போது வரை விடைகாணாமல் தொடர்ந்து வந்த கேள்வி என்னவென்றால், போஸை போன்ற இடது சாரி என்று தன்னை அறிவித்துக்கொண்ட ஒருவர், ஏன் மதவாத இந்து மகாசபா போன்ற ஒரு மத அமைப்புடன் கூட்டணி வைத்திருந்தார்?
பார்வர்டு பிளாக் இதழில் போஸ் கையெழுத்திட்ட ஒரு தலையங்கத்தில் மற்ற விவகாரங்களில் வேறுபாடு நீடித்தாலும் உள் விவகார நிர்வாகத்தில் ஆதரவு கேட்டு குறிப்பாக இந்து மகாசபா மற்றும் முஸ்லீம் லீக் அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்ததாக விவரித்தார்.
இந்து மகாசபா முதலில் பதில் அளிக்க நேர்ந்தது. இந்து மகாசபாவில் உள்ள தேசியவாத ஆதரவு சக்திகளை அவருடன் கூட்டணி சேரவைத்தற்காக பாராட்டிய அதே நேரத்தில் மத அடிப்படைவாத சக்திகளை அவர் குற்றஞ்சாட்டினார். அவர்கள் காங்கிரசை அழிப்பதற்காக அதனுடன் எந்த உடன்பாடும் ஏற்படுத்த கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்தனர்.
போஸ் குறிப்பிட்ட ஒரு உடன்பாடு என்பது ஒரு வலுவான ஒற்றுமைதான். அது வரும்காலங்களில் மதவாத சக்தி அல்லாமல் தேசியவாத வெற்றியை உறுதிபடுத்தும் என்பதுதான். இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக ஒன்று சேரவேண்டிய அவசியம் இருந்தது.
அந்த கூட்டணி முறிவுக்கு பின்னர், அதிருப்தி அடைந்த சந்திர போஸ் தான் உள்ளபடியே மகா சபாவை எதிர்க்கவில்லை, காங்கிரசை அப்புறப்படுத்த நினைக்கும் அதன் பேராசையைத்தான் எதிர்ப்பதாக தெளிவுபடுத்தினார்.
பார்வடு ப்ளாக் இதழில் அவர் எழுதினார், “இந்து மகாசபா ஒரு அரசியல் பாத்திரத்தை ஆற்றுவதற்கும் வங்கத்தின் அரசியல் தலைமைக்காக அல்லது குறைந்தபட்சம் வங்கத்தின் இந்துக்களுக்காக பாத்திரம் ஆற்றுவதற்கும் முன்வந்துள்ளது. அவர்கள்தான் இந்த நாட்டில் உள்ள தேசியவாதத்தின் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். உண்மையான இந்து மகாசபாவுடன் நமக்கு எந்த வாக்குவாதமோ சண்டையோ அல்ல. ஆனால் காங்கிரசை வங்கத்தின் பொதுவாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்த விரும்பும் இந்துமகா சபா-வின் அரசியல் தான் எங்களுக்கு பிரச்சினை. காங்கிரசை அப்புறப்படுத்தும் நோக்கிற்காக ஏற்கனவே எங்களுக்கு எதிரான தாக்குதல் நிலை எடுத்துள்ளது. அந்த ஒரு சண்டை தவிர்க்கமுடியாதது. இந்த சண்டை இப்போதுதான் தொடங்கியுள்ளது’’
Subhas Chandra Bose1940 ஜூலையில் அவர் சிறைபடுத்தப்படுவதற்கு கொஞ்சம் முன்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு பரந்துவிரிந்த தேசிய இயக்கத்தை தோற்றுவிப்பதற்காக போஸ் அவர்கள் சாவர்க்கரையும், ஜின்னாவையும் சந்தித்தார். ஆனால் அவருக்கு இருவரிடமும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்திய போராட்டம் என்ற அவருடைய புத்தகத்தின் இரண்டாவது பகுதியில், ஜின்னா அவர்கள் பிரிட்டிஷ் உதவியுடன் எப்படி பாகிஸ்தான் பிரிவினை திட்டத்தை வெளிப்படுத்துவது என்று மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த நிலையில் சாவர்க்கர் சர்வதேச சூழ்நிலைகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவராகவும் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வதன் மூலம் இந்துக்கள் எப்படி ராணுவ பயிற்சி எடுப்பது என்பது குறித்து மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தார் என்று எழுதினார்.
அந்த இரு தலைவர்களுடனான நீண்ட விவாதங்கள் முஸ்லீம் லீக் அல்லது இந்து மகாசபாவிடமிருந்து, அவருடைய திட்டமான தேச எழுச்சியை எதிர்பாக்கமுடியாது என்ற முடிவுக்கு போஸ் அவர்களை கொண்டுவந்தது. .
தற்செயலாக, தேர்தல் கூட்டு சாத்திய எல்லைக்குள் இருப்பதற்கு முன்பு மற்றும் போஸ் அப்போதும் சாவர்க்கர் அரசியலின் மீது விமர்சனம் கொண்டிருக்கின்ற பொழுதும் எஸ். கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட டிசம்பர் 30, 1939 பார்வடு பிளாக் இதழ் கட்டுரை சாவர்க்கர் குறுங்குழுவாத அரசியலுக்கு சென்றது குறித்து வருந்தி புலம்பியது. இருப்பினும் அது வியக்கத்தக்க வகையில் அவர் மீது உயர்ந்த மதிப்பை கொண்டிருந்தது.
மற்ற விஷயங்கள் ஒருபுறம் இருக்க, அந்த இதழ், “இந்திய போராட்ட களத்திற்கு கொண்டுவரப்பட்ட அந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டின் சுதேசி இயக்கம் கண்ட பெரும் ஆளுமைகளில் சாவர்க்கரும் ஒருவர்” என்று அந்த இதழ் குறிப்பிட்டது.
மேலும், “ஒரே அச்சில் உண்மையான கதாநாயகர்கள் உருவாக்கப்பட, மகாராஷ்டிரத்தின் இந்த துணிகர மனிதனின் மொத்த வாழ்க்கை பயணம் தவிர்க்க இயலாமல் வாழ்க்கை நெடுக துன்பங்கள் இணைந்த பயணங்களுடன் கொடுங்கனவு மற்றும் சாதனைகள் கொண்ட பரபரப்பூட்டும் நீண்ட கதைகள் கொண்ட ஒன்றாகும். 25 ஆண்டுகளுக்கான தொடர் சிறைவாசத்திற்கு பிறகு அவர் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுதலையான போது எல்லாருடைய பார்வையும் அவர் மீது இருந்தது. ஒரு சாதாரண மனிதன் இந்த அடக்குமுறையால் முழுமையாக பிழியப்பட்டிருப்பான். ஆனால், சாவர்க்கர் நிலைத்து நின்றார். இயற்கையின் உண்மையான வெகுமதியை (அறிவாற்றலும் ஆற்றல் மிகுந்த பண்புகளையும்) முழுமையாக பாதிக்கப்படாதவாறு திரும்ப கொண்டுவந்தார். என்ன ஒரு வியக்கத்தக்க வகையில் ஊக்கத்தை அவர் கொண்டிருந்தார்! ஆனால் பாவம் என்ன செயவது!
மிக அருமையான கொடையை காங்கிரசால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேசிய நலனுக்காக சிறப்பாக்குவதற்கு பதிலாக அவர் இந்து மகாசபா என்ற பதாகையை சுற்றுவதையும் மத கீத மத்தையும் தேர்வு செய்திருக்கிறார். சாவர்க்கர் நாட்டில் தீமை விளைவிக்கும் முஸ்லீம் மதவாத வளர்ச்சியை கண்டு எரிச்சலூட்டப்பட்டிருக்கிறார். அது சந்தேகத்திற்கிடமின்றி இன்றய இந்திய அரசியலில் அதிர்ச்சியும் கோபமும் அடையச்செய்கின்ற ஒரு அபாயகரமான இன்றய நிகழ்வு. ஆனால் அவருடைய பெரிய கொடுமைகளுக்கான அவருடைய தீர்வு என்பது சந்தேகத்திற்கிடமின்றி விரக்தி அடைந்த ஒன்று. நாட்டை இரு போர் முகாம்களாக பிளவுபடுத்தி இவ்வாறு எதிர்காலத்தில் ரத்த ஆறு ஓடுவதற்கான ஒன்றை தயாரிப்பது நடைமுறைக்கு உகந்ததோ அறிவு பூர்வமான ஒன்றோ அல்ல.’’ என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த இதழ்.
இந்த வார்த்தைகளை போஸ் அவரே எழுதவில்லை என்றாலும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் இந்த இடதுசாரி இதழில் எழுதப்பட்டது என்று கருதமுடியாது.
படிக்க :
ஆதாய அரசியலுக்கு உதவுகிறதா நீதிமன்ற தீர்ப்புகள் ? || அரவிந்தாக்ஷன்
தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !
சாவர்க்கரின் புகழ் வார்த்தைகள்
சாவர்க்கரும் கூட, எங்கெல்லாம் போஸ் குறித்து பொதுவெளியில் பேசுகிறாரோ அங்கெல்லாம் அவரைப் பற்றி புகழ்ந்துரைப்பார். இந்தியாவை விட்டு போஸ் சென்ற கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு பிப்ரவரி 23, 1941 அன்று அவருடைய பாதுகாப்பிற்காக கவலையை வெளிப்படுத்தி கடைபிடிக்கப்பட்ட, ‘அனைத்திந்திய சுபாஷ் தினம்’ அமைப்பாளர்களுக்கு சாவர்க்கர் ஒரு செய்தியை அனுப்பினார்.  “அவர் எங்கிருந்தாலும், தேசத்தின் நல்விருப்பமும் இரக்கமும் நன்றியுணர்வும் அவருக்கான ஆறுதலாகவும், ஊக்கமாகவும் அமையட்டும்”என்று அதில் குறிப்பிட்டார்.
மறுபடியும், 1969ல் ராஷ்ட்ரிய சுயம் சேவக்கின் முதன்மை பத்திரிகையான ஆர்கனைசரில் அவருடைய இறுதிகாலகட்ட நேர்க்காணல் ஒன்றில் இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்த நான்கு முதன்மை காரணிகளாக சாவர்க்கரால் பட்டியலிடப்பட்டவற்றில், மூன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் சுபாஷ் சந்திரபோசுடன் தொடர்புடையவையாக இருந்தது.
சாவர்க்கரின் கூற்றுப்படி, “இந்திய விடுதலைக்குப் பங்காற்றிய பல காரணிகள் இருக்கின்றன. இந்துஸ்தானத்திற்கு காங்கிரஸ் மட்டுமே விடுதலை பெற்றுத்தந்தது என்று கற்பனை செய்துகொள்வது தவறானது ஆகும். அதே போல் ஒத்துழையாமை இயக்கம், கைராட்டினம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கமே நமது நாட்டிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரத்தை பின்வாங்கவைத்தது என்று நினைப்பதும் முட்டாள்தனத்திற்கு இணையானது. பல ஆற்றல் மிக்க உறுதியான சக்திகள்தான் இறுதியாக விடுதலையை உறுதிசெய்தன.
முதலாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக சார்ந்திருந்த ராணுவத்திடம் இந்திய அரசியல் கொண்டு செல்லப்பட்டது. இரண்டாவதாக, இந்திய கப்பல் படை கலகம் மற்றும் விமானப்படை அச்சுறுத்தல், மூன்றாவதாக, ஐஎன்ஏ மற்றும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரமிக்க பாத்திரம். நான்காவதாக, 1857-ல் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம். அது பிரிட்டிஷ் அரசை உலுக்கியது. ஐந்தாவது, காங்கிரசிலும் மற்ற குழுக்களிலும் கட்சிகளிலிருந்தும் செய்யப்பட்ட விலைமதிப்பற்ற தியாகம்’’
கட்டுரையாளர் : சந்திரச்சுர் கோஷ் – The Print
மொழியாக்கம் : முத்துக்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க