சாவர்க்கரின் அரசியலுக்கும் இந்து மகாசபாவிற்கும் எதிரான வலுவான பார்வையை போஸ் கொண்டிருந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த விவரணை எல்லாம் இன்றைய அரசியல் சூழலின் நிகழ்ச்சிநிரலால் உருத் திரிக்கப்பட்டவையாகவும் இருந்துவருகின்றன.
சாவர்க்கருக்கும் போஸிற்கும் இடையிலான உறவு மிகமிக சிறு வேறுபாடுகளைக் கொண்டது மட்டுமல்ல, அரசியலில் வேறுபாடு இருந்த போதிலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து நடந்துகொண்டனர் என்று புதிய தகவல் கூறுகிறது.
பின்னணி வரலாறு
மே 1937 ல் சாவர்க்கர் விடுதலையான போது சுபாஷ் சந்திரபோஸ் ஓராண்டு சிறைவாசம் மற்றும் வீட்டுக்காவலை அனுபவித்துவிட்டு டல்ஹவுசியில் உடல்நிலை தேறிவந்தார். ஐரோப்பியாவிற்கு நாடுகடத்தப்பட்டதிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வருவதற்காக இந்திய அரசாங்க உத்தரவுகளை மறுத்து 1936, ஏப்ரலில் போஸ் இந்தியா வந்தார். எதிர்பார்த்தப்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியாக அவர் 1937, மார்ச் மாதத்தில் விடுதலையானார். அவர் சாவர்க்கர் பொதுவாழ்க்கைக்கு திரும்பி வந்ததை வரவேற்று ஒரு செய்தி வெளியிட்டார். சாவர்க்கர் காங்கிரசில் சேருவார் அவர் என்று நம்பினார். எனினும் சாவர்க்கர் அந்த ஆண்டின் இறுதியில் இந்து மகாசபாவை ஒரு தேசிய அரசியல் சக்தியாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு அதில் இணைந்தார்.
படிக்க :
♦ சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
♦ வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
1938-ல் போஸ் காங்கிரசில் சேர்ந்ததால் சிறிய வார்த்தை போர்களை தவிர அவர்களுடைய பாதைகள் நேருக்குநேர் குறுக்கீடாகவில்லை. வர இருக்கின்ற எந்த ஒரு வட்ட மேசை மாநாட்டிலும் காங்கிரசுதான் இந்தியாவை பிரதநிதிப்படுத்தும் என்று போஸ் உறுதிபட கூறியபோது, சாவர்க்கர் அதை எதிர்த்தார். அதிகபட்சமான இந்து தொகுதிகளை முந்தய தேர்தல்களில் காங்கிரசு வெற்றிபெற்றிருந்த போதிலும் முற்றிலும் இந்துக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி அது போட்டியிட்டதில்லை என்பதை குறிப்பிட்டு இந்து மகாசபைமட்டும்தான் இந்துக்களை பிரதிநிதித்துவபடுத்த முடியும் என்று சாவர்க்கர் வாதிட்டார்.
போஸ் காந்திய தலைமையிலான காங்கிரசுடன் முரண்பட்டு புதிய ஒரு மாற்று தேசிய இயக்கத்தை தனது அனைத்திந்திய ஃபார்வடு ஃப்ளாக் என்ற கட்சி மூலம் அடைய முயல்கையில் வெவ்வேறான அரசியல் பார்வைகளோடு அவர்கள் இருவரும் (போஸ், சாவர்க்கர்) தனித்தனி தளங்களில் இயங்கினர்.
அரசியல் மோதல்
ஏகே ஃபஸ்ஸுல் ஹக் அரசாங்கத்தின் மதவாத அரசியலுக்கு எதிராக சாவர்க்கர் மாகாண இந்து மகா சபையை பலப்படுத்த 1939, டிசம்பரில் வந்தபோது, அவர்களின் அரசியல்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. சுபாசும் காங்கிரசு கட்சியில் அந்த மாகாண சட்டசபையின் உறுப்பினரான அவருடைய மூத்த சகோதரர் சரத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து இறக்க தங்களுடைய சொந்தவழியில் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் காந்தியின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டன. காந்தி, ஜிடி பிர்லா மற்றும் ஹக் அரசாங்கத்தின் நிதி அமைச்சர் நளினி ரஞ்சன் சர்கார் அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டார்.
போஸ் அவர்களின் பத்திரிகையான ஃபார்வர்டு பிளாக் கல்கத்தாவில் சாவர்க்கரின் பேச்சை தீமை விளைவிப்பதற்கான வன்முறை பேச்சு என்று குறிப்பிட்டது. போஸின் விமர்சனம், மகாசபை அணுகுமுறையுடன் உள்ள வேறுபாட்டை காட்டி மத பிரச்சினையை ஒட்டிய விசயத்தில் அவருடைய அணுகுமுறையை பிரதிபலித்தது. எல்லா முஸ்லீம்களையும் ஒன்றாக சேர வைப்பதன் மூலம், மத வேற்றுமைகளை கோடிட்டு காட்டி இந்து மகாசபா இந்திய தேசியத்திற்கு கணக்கிடமுடியாத தீமையை செய்துவருகிறது என்று பார்வர்டு பிளாக் இதழ் வாதிட்டது.
முகம்மத் அலி ஜின்னாவும் அவருடைய கூட்டத்தாரும் பரந்த இந்திய முஸ்லீம் மக்களில் ஒரு சிறு பிரிவினர் மட்டும்தான். மற்றும் அந்த பரந்தபட்ட மக்கள் கூட்டம் படிப்படியாக பொறுப்பான ஒரு தேசிய உணர்வு பெற்றுவருகிறது என்று குறிப்பிட்ட அந்த இதழ், இந்தியா உருவாவதற்கான தேசியவாத முஸ்லீம்களின் பங்கை கண்டுங்காணாமல் விடுவதன் மூலம் சாவர்க்கருக்கு நாம் அனுகூலம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டது.
