எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♠ 1956-ல் ரூ.5 கோடி முதலீட்டில் துவக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம், எல்.ஐ.சி !
♠ எல்.ஐ.சி தொடங்கி 65 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைய சொத்து மதிப்பு ரூ.39 இலட்சம் கோடிகளுக்கும் மேல்!
♠ அரசு கொடுத்த ரூ.5 கோடி முதலீட்டுக்கான டிவிடென்ட் ஆக இதுவரை ஒரு இலட்சம் கோடிக்கு மேல் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளது!
♣ சுமார் 1.5 இலட்சம் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வேலை கொடுத்துள்ளது. சுமார் 12 இலட்சம் முகவர்களுக்கு வாழ்வளிக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது!
♣ தன்வசமுள்ள ரூ.39 இலட்சம் கோடிகளில் சுமார் ரூ.36 இலட்சம் கோடிகளுக்கு பல துறைகளில் முதலீடுகள் செய்துள்ளது.
♣ ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மக்கள் நலனுக்கு மூலதன நிதியளிப்பாளனாகத் திகழ்கிறது.
♣ எல்.ஐ.சி-யில் கொழுத்த பணம் இருக்கிறது. அதனை பங்கு போட்டு விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என்கிறது, மோடி அரசு!
♣ எல்.ஐ.சி-யின் உரிமையாளர் அரசு என்றாலும், அதில் போடப்பட்டுள்ள 39 இலட்சம் கோடி பணமும் மக்களது பணம்தான்!
♣ மக்களது பணத்தை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றும் நோக்கமே இந்த பங்கு விற்பனை!
♠ சுமார் 31.6 கோடி பங்குகளை (மொத்த பங்கில் 5%) விற்பதன் மூலம் ரூ.65,000 கோடிகள் அரசின் கஜானாவுக்கு கிடைக்கும் என்கிறது, மோடி அரசு!
♠ கஜானாவில் குவியும் ரூ.65,000 கோடிகளை யாருக்கு செலவிடப் போகிறார்கள்?
♠ இவ்வளவு கோடிகளும் கார்ப்பரேட் கொள்ளைக்குத்தான் தரப் போகின்றனர்!
♠ இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம் எல்.ஐ.சி.தான்!
♠ எல்.ஐ.சி-யின் சொத்து மதிப்பு பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம்!
♠ கடந்த 65 ஆண்டுகளில் நட்டம் என்பதையோ, இலாபத்தில் சரிவு என்பதையோ இதுவரை சந்தித்திராத ஒரே பொதுத்துறை எல்.ஐ.சி.தான்!
♠ கடந்த 25 ஆண்டுகளாக முழுமையாகவோ, பகுதியாகவோ நடந்த அனைத்து பொதுத்துறை விற்பனைக்கும் நட்டம் என்பதைத்தான் அரசு தரப்பில் பிரதான காரணமாக காட்டப்பட்டது!
♠ உலகத்தரம் வாய்ந்த உலகின் டாப் 10 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு நட்டம் காரணம் அல்ல; அதை அழிக்கும் முயற்சிதான்!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகள் திருடுவதற்காக கதவுகள் முற்றாகத் திறக்கப்படும்!
♠ எல்.ஐ.சி பங்கு விற்பனையால், பாலிசிதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய உபரியில் கணிசமானதை பங்குதாரர்கள் என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகள் உறிஞ்சிக் கொள்வார்கள்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க