எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?
♣ ஒருபுறத்தில் எல்.ஐ.சி-யை கைப்பற்றுவது; மற்றொருபுறத்தில் எல்.ஐ.சி விற்பனையில் கிடைக்கும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டிக் கொள்வது.
♣ இதுதான் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டம்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் மலிவான காப்பீடுகள் தடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் புதிய வேலை வாய்ப்புகள் நிறுத்தப்படும். சமூகநீதிக்கு வேட்டு வைக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் சமூகநலத் திட்டங்களுக்கு கிடைக்கும் நிதி நிறுத்தப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் பங்குதாரர்களுக்கு (கார்ப்பரேட்டுகள்) பிரித்து கொடுக்கப்படும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் அரசின் வருவாய் தடுக்கப்படும். இதை ஈடுகட்ட மேலும், மேலும் பங்குகள் விற்பனை அதிகமாகும்!
♣ எல்.ஐ.சி-யில் இலாபம் குறையும். அதனால் நிறுவனம் தள்ளாடி விழுந்து விடும். அதன் பிறகு எல்.ஐ.சி மெல்ல, மெல்ல சாகும்!
♣ அதன் சொத்துக்களையும், நிதி இருப்பு மற்றும் முதலீடுகளையும் கார்ப்பரேட்டுகள் ஆள்வார்கள்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி-யை நம்பியுள்ள சுமார் 28 கோடி பாலிசிதாரர்களின் ரூ.39 இலட்சம் கோடிகள் பணம் சூறையாடப்படும்!
♣ எல்.ஐ.சி-யின் துணை நிறுவனங்களான LICHFL, வீட்டுவசதி நிறுவனம் போன்றவையும் முடங்கிப்போகும்.
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையால் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள ரிலையன்ஸ் (அம்பானி), டி.சி.எஸ் (டாடா) போன்றவற்றில் போடப்பட்ட முதலீடுகள் கபளீகரம் செய்யப்படும்!
♣ நலிவடைந்த (IDBI வங்கி போன்ற) நிறுவனங்களை தாங்கிப் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் முடங்கி விடும்!
♣ எல்.ஐ.சி பங்கு விற்பனையை “பங்கு விற்பனைகளின் தாய்” என்று வர்ணிக்கின்றனர்.
♣ உண்மையில் இந்த பங்கு விற்பனையானது பாலூட்டிய தாயை விற்பதற்குச் சமம்!
எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கும் கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது.
நன்றி : பு.ஜ.தொ.மு,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க