3 மார்ச் 1931
ன் அன்பு குல்தார்,
கண்களில் கண்ணீர் வழிய இன்று நான் உன்னை பார்க்கும்போது வருத்தமடைந்தேன். இன்று உன் பேச்சில் ஆழமான வலி இருந்தது. நீ அழுது என்னால் பார்க்க முடியவில்லை.
என் செல்லமே, உன் படிப்பை தொடர்வதில் கவனம் செலுத்து, உன் உடல் நலத்தில் கவனமாக இரு.
மனதில் உறுதி வேண்டும். வேறு என்ன… சொல்ல? (வேறு என்ன எழுத முடியும்?)… என்னால் என்ன கவிதை பாடிவிட முடியும்?
கேள்:
அடக்குமுறையின் புதிய புதிய வடிவங்களை கண்டுபிடிப்பதில் அவர்கள் எப்போதும் முனைப்பாக இருக்கின்றார்கள். அடக்குமுறையின் எல்லைதான் என்ன என்று தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கின்றோம்.
நாம் ஏன் உலகத்தின் மீது கோபப்பட வேண்டும், புகார் செய்ய வேண்டும்? இது உலகம், நமக்கான உலகம், அவ்வளவுதான், அதற்காக நாம் போராடுவோம்.
படிக்க :
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?
என் சக பயணிகளே, நான் இங்கே ஒரு தற்காலிக விருந்தாளி, அவ்வளவுதான்,
நான் ஒரு விளக்கு, விடியும்வரை எரிவேன், அணைக்கப்படும் நேரத்தை எதிர்பார்த்து இருப்பேன்.
வீசும் தென்றல் என் சிந்தனையின் சாரத்தை எங்கெங்கும் எடுத்துச்செல்லும்
இந்த உடலோ கையளவு மண் அன்றி வேறில்லை, எங்கு வாழ்ந்தாலும் எங்கே மடிந்தாலும்.
சரி, செல்கின்றேன்.
நாட்டு மக்களே, மகிழ்ச்சியுடன் இருங்கள், பயணத்தை தொடங்கி விட்டேன்.
துணிச்சலுடன் வாழுங்கள்.
வணக்கம்.
உன் சகோதரன்,
பகத் சிங்.
….
1931 மார்ச் 3 அன்று சிறையில் அவர் குடும்பத்தினர் கடைசியாக அவரை சந்தித்தார்கள். இளைய சகோதரன் குல்தார் கண்ணில் நீர் வழிய நின்ற காட்சியை பகத் சிங்கால் தாங்க முடியவில்லை. குல்தாருக்கு பகத் எழுதிய கடிதமே இது.
(ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் எனது)
முகநூலில் : இக்பால் அகமது
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க