மார்ச் 28,29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள கிளை இணைப்பு சங்கங்களில் ஆலைவாயில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலைவாயில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தனது தலைமை உரையில், “போராடிப் பெற்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தும்  கார்ப்பரேட் – பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றப்படுகிறது என்றும் மேலும் விவசாயம், கல்வி, சிறு-குறு தொழில்களும் பொதுத்துறை நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதை தொழிலாளர் வர்க்கமாக ஒன்றினைந்து முறியடிப்பது நமது வரலாற்று கடமை” என்று பேசி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
பொதுச்செயலாளர் தோழர் ப.சக்திவேல் தனது உரையில் “தொழிலாளர் நலச்சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே எந்த ஆலை முதலாளிகளும் சட்டத்தை மதிப்பது கிடையாது. இன்று அந்த சட்டங்கள் நமக்கு ஆதரவாக இல்லை என்றால் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை கோர முடியாது. கடுமையான உழைப்பு சுரண்டலும், அடக்குமுறைகளும் அதிகரிக்கும். தன்மீது இப்படிப்பட்ட அநீதி இழைக்கப்படுகிறது என்பதை கூட தொழிலாளி வர்க்கம் உணராமல் இருக்கின்றனர். சாதி மத உணர்வுகளை மழுங்கச் செய்து தொழிலாளி வர்க்கம் வர்க்க உணர்வை மேம்படுத்திக் கொண்டு தமக்கான அதிகாரத்தையும், உரிமையையும் நிலைநாட்ட வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

This slideshow requires JavaScript.

எமது சங்கத்தின் சிறப்புத் தலைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – முன்னாள் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் தனது கண்டன உரையில், “தொழிலாளர் நலச்சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறு-குறு தொழில்கள், கல்வி-மருத்துவம், இயற்கைவளம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வைக்கப்படுகிறது. நாம் எதை சாப்பிட வேண்டும், நாம் எதை உடுத்த வேண்டும் என காவி கொள்கையில் அவர்கள் தீர்மானிக்கின்றனர். இதை தொழிலாளி வர்க்கம் உணராமல் இருப்பதற்காக சாதி, மத உணர்வுகளை மேலோங்கச் செய்து, காவி சிந்தனை மக்களுக்கு திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு சாகா பயிற்சி அளிக்கப்படுகிறது.  கார்ப்பரேட்டுக்கு சேவை செய்வதே காவி அரசின் நோக்கமாக உள்ளது. இவற்றை முறியடிக்கின்ற வகையில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்வது நமது வரலாற்றுக் கடமை. ஆகவே நாடு தழுவிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அகில இந்தியப் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம்! இதை முன்னெடுத்துச் செல்லும் டி.ஐ  மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்திற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் விண்ணெதிர தொழிலாளர்கள் கண்டன முழக்கமிட்டனர். இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
தகவல் :
டி.ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு
000
மார்ச்: 28,29 பொது வேலைநிறுத்தத்தை ஒட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து ஆவடி பேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் சாலை மறியல் செய்யப்பட்டது, இதில் எமது பு.ஜ.தொ.மு  சென்னை, திருவள்ளூர் காஞ்சி மாவட்டம் சார்பாக தொழிலாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
புதிய தொழிலாளி
000
பு.ஜ.தொ.மு. சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் உள்ள டி.பி.ஐ ஆவடி, ஆலையில் மார்ச்:28,29 வேலைநிறுத்தத்தை ஒட்டி இன்று ஆலை வாயில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, இதில் பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தகவல்:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
டி.பி.ஐ. ஆவடி.
000
மார்ச் 28-29 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில்  பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு  பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமை தாங்கினார். பு.ஜ.தொ.மு -வின் மாவட்டச் செயலாளரும்,மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினருமான தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.
தமிழ்த் தேசிய குடியரசு இயக்கம் அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர்.விக்னேசு மற்றும் திராவிடா சிட்டி மூவ்மெண்ட் ( குப்பம் ) அமைப்பைப் சேர்ந்த திரு.அபி கவுடா ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.திரளான தொழிலாளர்களும்,ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
புதிய தொழிலாளி
000
மார்ச் 28 29 பொது வேலைநிறுத்தம் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம் மாநிலம் தழுவிய போராட்டம் ஆர்ப்பாட்டம் சாலை மறியல் என்று தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் தொழிற்சங்கங்கள் கட்சிகள்  புரட்சிகர அமைப்புகள் என் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை சமயநல்லூர் பகுதியில் விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் கட்சிகள் பெண்கள் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தோழர் லாசர் தலைமையில் நடைபெற்றது. அதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
ம.க.இ.க, தமிழ்நாடு
000
ஒன்றிய மோடி அரசை கண்டித்து! மார்ச் 28,29 அகில இந்திய பொது வேலை நிறுத்ததின்  ஒரு  பகுதியின்   இன்று மறியல் போது நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டோம்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
000
28.03.22 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளி வர்க்கத்துடன் போராட்ட களத்தில் விருதை பகுதி மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்தனர்.

This slideshow requires JavaScript.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
விருதை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க