ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்தநாளன்று நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் கிளைகளில் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துவதாக செய்திகள் வெளியாகிறது. அதில் அம்பேத்கரை இந்துமதத்தின் ஆதரவாளராக காட்டுவதற்காக, பார்ப்பனிய சித்தாந்தத்தின் உற்பத்தி கிடங்கான ஆர்.எஸ்.எஸ்-ஆல் பரப்பப்படும் கருத்துக்களில் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்போம்:
♦ அம்பேத்கர் தனது “பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்” என்ற புத்தகத்தில், மத அடிப்படையில் பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சித்தார்.
கருத்து: இந்த அறிக்கை தவறானது. அம்பேத்கர், அந்த புத்தகத்தில், தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தபடி அதிகாரப் பங்கை வழங்காமல் முதல் தேர்தலில் முஸ்லீம் லீக்கை அந்நியப்படுத்தி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசியதன் விளைவாக காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையே இடைவெளியும் அவநம்பிக்கையும் அதிகரித்தது. மேலும் அது பாகிஸ்தானுக்கான கோரிக்கையை நோக்கி வலுவாக நகரத் தொடங்கியது.
படிக்க :
♦ டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மனு ஸ்மிருதியை பகிரங்கமாக எரித்தது ஏன் ?
♦ அம்பேத்கர் சிலை உடைப்பு : குடந்தை கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ எப்போதும் தேசியவாதத்தை ஆதரித்தவர், இந்தியாவுக்காக நான் வாழ்வேன், இறப்பேன் என்று சம்பூர்ணா வாங்மை என்ற நூலில் பிரிவு-5ல் எழுதியுள்ளார்.
கருத்து: டாக்டர் அம்பேத்கர் ஆர்எஸ்எஸ் பண்புவகை இந்து தேசியவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. அவரது தேசியவாதம் அனைத்து குடிமக்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இதற்கு நேர்மாறானது. அவர் எந்த வகையான இன மற்றும் மத பாகுபாடு அடிப்படையிலான தேசியவாதத்திற்கு எதிரானவர். அப்போது அவர், “சிலர் தாங்கள் முதலில் இந்து, முஸ்லீம் அல்லது சீக்கியர் என்றும் பிறகு இந்தியர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் நான் ஆரம்பம் முதல் இறுதி வரை இந்தியன்.
♦ 1949 நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணய சபையில் பேசிய டாக்டர் அம்பேத்கர் இடதுசாரி சித்தாந்தத்தை கடுமையாக எதிர்த்தார்.
கருத்து: இந்த அறிக்கை முற்றிலும் தவறானது. அவர் தனது உரையில் எங்கும் இடதுசாரிகளை எதிர்க்கவில்லை. அவர் தனது உரையில், பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக இருந்தாலும், அனைத்து வகையான சர்வாதிகாரங்களையும் எதிர்த்தார். டாக்டர் அம்பேத்கர் தனது அரசியல் சிந்தனையில் ஒரு சோசலிஸ்ட். டாக்டர் அம்பேத்கர் உண்மையில் ஒரு லிபரல் ஜனநாயகவாதி.
அவர் அரசு சோசலிசத்தின் வலுவான ஆதரவாளராக இருந்தார். அவர் அரசு சோசலிசத்தை ஆதரிக்கிறார் என்பதற்கான மிகப்பெரிய உதாரணம், “மாநிலம் மற்றும் சிறுபான்மையினர்” என்ற சிறு புத்தக வடிவில் அச்சிடப்பட்ட அவரது சொந்த அரசியலமைப்பின் வரைவில் உள்ளது. இதில் அனைத்து விவசாய நிலங்களையும் தேசியமயமாக்கி அதில் கூட்டு விவசாயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது தவிர, காப்பீடு தேசியமயமாக்கல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் கட்டாயக் காப்பீடு ஆகியவற்றை அவர் ஆதரித்தார், அதேசமயம் இன்று ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பாஜக அரசாங்கம் இதையெல்லாம் தனியார்மயமாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
♦ டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மதச்சார்பற்ற தேசம் குறித்து ஆர்.எஸ்.எஸ்.
கருத்து: டாக்டர் அம்பேத்கர் ஒரு மதச்சார்பற்ற தேசத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. மதம் அரசியலில் நுழைவதை டாக்டர் அம்பேத்கர் எதிர்த்தார். அவர் மதத்தை ஒரு தனிப்பட்ட நம்பிக்கையாகக் கருதினார் மற்றும் அதை அரசின் விவகாரங்களில் இருந்து விலக்கி வைப்பதற்கு ஆதரவாக இருந்தார். டாக்டர் அம்பேத்கரை ஒரு மதவெறி தேசத்தின் ஆதரவாளர் என்று வர்ணிப்பதன் மூலம் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவா அரசியலையும் இந்துராஷ்டிரத்தை நிறுவுவதையும் நியாயப்படுத்த விரும்புகிறது.
♦ பாபா சாஹேப் எப்போதுமே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தை அந்நிய மதங்களாகவே கருதினார்.
கருத்து: பாபாசாஹேப் இஸ்லாம் மற்றும் கிறித்தவத்தை அந்நிய மதங்களாகக் கருதினார் என்பது உண்மைதான்; ஆனால் அவர் இந்த மதங்களை ஒருபோதும் இழிவாகப் பார்த்ததில்லை. இந்தியாவில் இந்த மதங்களில் நிலவும் ஜாதி பாகுபாடு போன்ற தீமைகளை அவர் விமர்சித்தார் என்பது வேறு விஷயம். இது இந்து மதத்தின் தொற்று என்று கருதியதுடன், அந்த மதங்களை சீர்திருத்துமாறும் கேட்டுக் கொண்டார். பௌத்தத்தை ஏற்றுக்கொள்வதில் கூட அவர் தேச நலனையே மேல் வைத்திருந்தார்.
***
இந்தியாவின் இந்து மதவெறி அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆதரவாளராக காட்ட பல்வேறு பொய் ஆதாரங்களை உருவாக்கி அம்பேத்கரை விழுங்க நினைக்கிறது. அதன்மூலம் முஸ்லீம் கிருத்துவ சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு நஞ்சை தாழ்த்தப்பட்ட மக்களின் மனதில் விதைக்க முயற்சிக்கிறது; இந்துமதவெறியை தூண்டிவிட முயற்சிக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
புகழ்
செய்தி ஆதாரம் : Countercurrents
“State socialism” என்ற பதத்தை அப்படியே மாநில சோசலிசம் என்று மொழி பெயர்த்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
State socialism என்பதற்கு அரசு சோசலிசம் என்பதுதான் பொருத்தமானதாகும்.
அதாவது அரசு என்பது வர்க்க சார்புடையது என்ற கண்ணோட்டமின்றி அரசு என்பது தனித்த அமைப்பு என்ற கருத்தாக்கத்தில் அரசே படிப்படியாக சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவது என்ற கருத்தாக்கத்தில் கூறப்படுவதாகும்..
சரி செய்கிறோம் தோழர். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!