ந்தைப் பெரியாரை எண்ணி
மனம் வருந்துகிறேன்,
ஒரு தடியையேனும்
விட்டுச் சென்றிருக்கக் கூடாதா!

கிடைத்ததை மேய்ந்துவிட்டு
கண்டதை வாந்தியெடுத்துக்கொண்டிருக்கும்
அண்ணாமலை போன்ற அரைப்பைத்தியங்களின்
நடமாட்டங்கள் அதிகரித்துவிட்டன.

தடியின்
ஒரு சிதிலமேனும் இருந்திருந்தால்
தாமரைக் கம்பங்கள்
தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்!
கமலாலயங்கள்
கற்குவியலாய் மாறியிருக்கும்!

அரசியல் கட்சிகளும்
மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களும்
அரசியல் – ஜனநாயகம் என்று
பாசிச சர்வாதிகாரத்திற்கு
பக்க மேளம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது
மனிதர்களுக்கான பூமி
“பறையா” என இகழும் இழிபிறவிகளுக்கு
இங்கு இடமில்லை என பாடம் புகட்டுவோம்.

கேலிச்சித்திரம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க