1855-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியன்று சோட்டா நாக்பூர் பிராந்தியத்தில் சந்தால் பழங்குடி மக்களின் ஆயுத எழுச்சி தொடங்கியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய இந்த சோட்டா நாக்பூர் என்ற இந்தியாவின் முக்கியமான பீடபூமி பகுதியாகும். இது பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் விரவிக்கிடக்கிறது. கிழக்கில் கங்கை சமவெளியையும், தெற்கே மகாநதி ஆற்றுப்படுகையும் அமைந்துள்ளது.

ஆங்கில ஏகாதிபத்தித்திற்காக, சந்தால் மக்களை ஒடுக்கிய ஜமீன், சவுக்கார் சுரண்டல் அடையாளங்கள் கருதப்பட்டன. ரயில், அரசு அலுவலகங்கள், சாலைகள் ஆகியவை சுரண்டலின் சின்னங்கலாக கருத்தப்பட்டன. கயிறுகள் சந்தால் மக்களுக்கு ஓர் அடக்குமுறைக்கருவி.

“எத்தனை ஆயிரம் அடி கயிறு உனக்குக் கிடைத்துவிடும், பார்த்து விடலாம்; அமைதியான எல்லாச் சந்தால்களையும் கட்டிப்போட்டு இழுத்துச் சென்று ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விடுவாயா, பார்த்து விடுவோம்” என்றார் கொக்கரித்தனர் சந்தால் மக்கள்.

“வரியக் கொடுடா என்றா கேட்கிறான்? அவனை வெட்டி வீசுங்கள்! எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் நியாயத்துக்காகக் கலகம் செய்யுங்கள்! ஆயுதங்களை கர்ரூ நதியில் ரத்தம் போகக் கழுவி எடுங்கள்” – இது சோட்டா நாக்பூர் ‘கோல்’ பழங்குடிகளின் வீரச் சூளுரை.

படிக்க :

♦ வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

♦ நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் !

1855-ன் மைய நாட்கள் சந்தால் ஆயுதப் போராட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.

“சரணடைந்து விடு, பிழைத்துக் கொள்வாய்” என்கிறான் ஆங்கிலேய சிப்பாய். ஒரே எட்டில் முதிய சந்தால் வீரர் அந்தச் சிப்பாய் மீது பாய்ந்தார். கையிலிருந்த சண்டைக் கோடரியால் ஒரே வெட்டில் வீழ்த்தினார். இதனை கண்ட அந்நியப் படை அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.

சந்தால் மக்கள் சமவெளி மக்களில் பல்வேறு தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவினரை போராட்டத்தின் நட்புச் சக்திகளாக வென்றெடுத்து களமிறக்கினார்கள். பழங்குடிக் கலையின் கருவிகளான முழவுகளும், குழலும் போராட்டக்களங்களில் செய்தி அறிவிப்புக் கருவிகளாகவும், வீர எழுச்சி இசையாகவும் மாறின. அந்நியப்படை அவற்றை அழித்துவிடும் பட்சத்தில் விரைவிலேயே புதிய முழவுகள், புதிய குழல்கள் களத்திற்கு விரைந்தன.

“கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளால் சண்டை போட்டார்கள்” என்று சந்தால் மக்களின் எழுச்சியை பற்றி அந்நியப்படை தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

தலைவர் என்பவர் வீரரில் ஒருவர். சந்தால் தலைவரும் போரிடுவார்; சாதாரண மக்களும் போரிடுவார்கள். கூடுதலாக அவர் தலைமை தாங்கி வழிநடத்துவார்.

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு சிலை

எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு மற்றும் பிற தலைவர்கள் சந்தால் மக்களோடு மக்களாக கலந்திருந்தார்கள். இலையால் செய்யப்பட்ட தொன்னையில் மஞ்சளும், எண்ணெய்யும் எடுத்துக்கொண்டு அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றார்கள். முன்பு அது பொது நிகழ்விற்கான அழைப்பு, இப்போது அது போராட்டத்திற்கான ரகசியத் செய்தி அறிவிப்பு. அதேபோல, சால்மரக் கிளைகள் கொண்டுவருவோரிடம் “எங்கே கூட்டம்?” என்று கேட்டு அறிந்து கொள்வார்கள் சந்தால் மக்கள்.

சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள். எழுச்சியைக் குறிப்பிட வேட்டை, மீன் பிடித்தல் என்ற சொற்களை சந்தால் மக்கள் பயன்படுத்தினார்கள். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் ஆயுதம் ஏந்தினார்கள்.

அந்நியர்களை அண்டிப் பிழைத்த கூலி எழுத்தாளர்கள், “ரத்தவெறி பிடித்த இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு எதிராகப் பயங்கரத்தைக் கட்ட விழ்க்காமல் இந்த எழுச்சியை நாம் அடக்க முடியாது” என்று ஆங்கிலேய அரசினை தூண்டிவிட்டு வகையில் எழுதினார்கள். பகல்பூர் ஜமீன்கள், உள்ளூர் அவுரிப் பயிர் முதலாளிகள், முர்ஷிதாலாத் பகுதி நவாப் நசீம், ஐரோப்பிய அவுரி முதலாளிகள் ஆகியோர் சந்தால் மக்களை ஒடுக்க ஆங்கில அரசுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார்கள்.

ஆங்கிலேய அரசின், சந்தால் மக்கள் மீதான தாக்குதல் மிகவும் கொடூரமாக இருந்தது. பல சந்தால் மக்களின் கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. பயிர்கள், வீடுகள், பெண்கள், குழந்தைகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் ஆங்கிலேய வெறிநாய்கள் குதறின. பல ஆயிரம் மக்களை கொலை செய்தார்கள்.

சீதுவும் கானுவும் மற்ற தலைவர்களும் ஆங்கிலேய வெறிநாய்களால் தூக்கிலிடப்பட்டார்கள். அன்று 20,000 சந்தால் வீரர்கள் கொடுத்த இன்னுயிர்கள் இன்றும் புரட்சிக் கனலை வீசிக் கொண்டுதான் இருக்கிறது.

வினவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க