துரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  கோர வெடி  விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே  வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.  இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்தக் கட்டடம் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி (50), வல்லரசு (18), கோபி (19) மற்றும் புளிய கவுண்டன்பட்டி மகாலட்சுமி (50),  அழகு சிறையைச் சேர்ந்த பிரேமா (50), விக்னேஷ் (19) ஆகிய 6 தொழிலாளர்கள்  பலியாகினர்.

மேலும் அழகுசிறையைச் சேர்ந்த அங்கம்மாள், கருப்பசாமி, நாகலட்சுமி, மகாலெட்சுமி, ஜெயப்பாண்டி, பச்சையக்காள், கருப்பசாமி, அன்னலட்சுமி, மாயத்தேவர், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை  ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி, திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருமங்கலம், சிந்துபட்டி காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

நன்றி: தீக்கதிர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க