சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

எந்த ஊர் என கேட்டு, சொன்ன மாத்திரத்திலேயே கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சாதி வெறியர்களுக்கு கைது, சிறை மட்டும் போதாது; அவர்களின் சிவில் உரிமைகள் பறித்தெடுக்கப்பட வேண்டும்!

26.01.2023

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணை போகும் கருவேப்பிலங் குறிச்சி காவல் நிலையத்தின் ஆதிக்க சாதி வெறியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்!
உண்மைக் குற்றவாளிகளான ஆதிக்க சாதி வெறியர்களைக் கைது செய்!

பத்திரிகை செய்தி!

டலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, விழாவிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக 4 இளைஞர்கள் இரவு சுமார் 7 மணி அளவில் இரு சக்கர வாகனங்களில் அருகிலுள்ள விருதாச்சலம் நகருக்கு சென்றுள்ளனர்.

சாத்துக் கூடல் கிராமத்திலிருந்து விருதாச்சலம் செல்வதாக இருந்தால் ஆலிச்சிகுடி கிராமம் வழியாகத்தான் செல்ல வேண்டும்! அது நகரப் பேருந்து செல்கின்ற சாலை. ஆனால் அன்று மதியத்திலிருந்தே ஆலிச்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி வெறி வன்னிய இளைஞர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் கஞ்சா, சாராய போதையில் சாலையில் நின்று கொண்டு போவோர் வருவோரையெல்லாம் கத்திக் கூச்சலிட்டு வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனர்! இவர்களின் அத்து மீறலைக் கண்டித்தவர்களையெல்லாம் அடிக்க ஓடினார்கள்! பலரும் நமக்கெதற்கு வம்பு என நிற்காமல் சென்று கொண்டிருந்தனர்! இது ஆலிச்சிகுடி கிராமத்தினர் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்!

இரவு நேரம் ஆக ஆக இந்த கஞ்சா, சாராய கும்பலின் வன்னிய ஆதிக்க சாதி வெறி உச்சத்திற்குச் சென்று கொண்டிருந்தது! அந்த சமயத்தில்தான் சாத்துக் கூடல் கிராம இளைஞர்களும் அந்த வழியாக விருதாச்சலம் நகருக்கு சென்றனர். இவர்கள் கூச்சலிடவே, நமக்கெதற்கு வம்பு என நிற்காமல் அந்த இளைஞர்கள் சென்று விட்டனர். சாத்துக் கூடல் இளைஞர்கள் திரும்பி வரும் போது, திட்டமிட்டே வழிமறித்துள்ளது கஞ்சா, சாராய கும்பல்! வேறு வழியின்றி இளைஞர்கள் வண்டியை நிறுத்தவே, எந்த ஊருடா என எந்த மட்டு மறியாதையுமின்றி கேட்டுள்ளது சாதி வெறியிலும் போதையிலுமிருந்த கும்பல்! சாத்துக் கூடல் என்றதும் காலனியா ஊரா எனக் கேட்டுள்ளனர்! இளைஞர்கள் காலனி எனக் கூறி முடிப்பதற்குள், சரமாரியாக போதை கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது! தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்னே, ஒரு போதை ஆசாமி கனமான கட்டை ஒன்றால் ஒரு இளைஞனின் தலையிலும் உடலிலும் தாக்க, ரத்தம் கொட்டத் தொடங்கியுள்ளது. அப்போதும் தாக்குதலை நிறுத்தவில்லை அந்த போதை, சாதி வெறி கும்பல். அடிபட்டவருக்கு பத்திற்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. மற்றொரு போதை, சாதி வெறி இளைஞன், இரும்புத் தடி கொண்டு இன்னொரு தலித் இளைஞரைத் தாக்க அவருக்கு கால் எலும்பு இரண்டாக முறிந்து போனது! அவரை பரிசோதித்த விருதை அரசு மருத்துவர், மேற்கொண்டு சிகிச்சைக்காக சென்னை இராமச்சந்திரா மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது!

மற்ற இரு தலித் இளைஞர்கள் கீழே விழுந்து விடவே மற்ற எல்லோரும் சேர்ந்து காலாலேயே கண்மூடித்தனமாக மிதித்துள்ளனர். அதில் ஒரு இளைஞருக்கு நெஞ்சில் பலமாக அடி பட்டுள்ளது. ஸ்கேன் செய்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது! மற்றொரு இளைஞருக்கும் உடல் முழுவதும் வலி. சிக்கிச்சை முடிந்து அவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார்!


படிக்க: இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்


இந்த செய்தி கேள்விப்பட்டதுமே, தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசு, பாதிப்புக்குள்ளான தலித் இளைஞர்களை மருத்துவ மனைக்கு அனுப்பியதோடு, மேலும் காவலர்களை வரவழைத்து ஆலிச்சிகுடி போதை, சாதி வெறி கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த சாதி வெறி கும்பல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே.

செய்தி கேள்விப்பட்ட சாத்துக் கூடல் தாழ்த்தப்பட்ட மக்கள் கோபாவேசமாகி, கும்பலாகத் திரண்டு, நியாயம் கேட்க வந்தனர். அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அவர்களை நிறுத்தி, என்ன எனக் கேட்டு, வழக்குப் பதிய வேண்டிய போலீசோ, லத்தி சார்ஜ் செய்வோம் என மிரட்டியுள்ளது. சாத்துக் கூடல் ஊர் பெரியவர்கள், காவல் நிலையம் சென்று, புகார் தரவே நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இரண்டு நபர்களை கைது செய்து உள்ளோம் மீதி நபர்களை விசாரித்து கைது செய்வோம் உரிய குற்றவாளியை கண்டுபிடிப்போம் என்று சொல்லி அனுப்பி விட்டது கருவேப்பிலங் குறிச்சி போலீசு.

ஆனால் மறுநாள் காலை ஊர் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள்; விடுதலை சிறுத்தை கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் முக்கிய குற்றவாளிகள் 12 பேரின் பெயர்களை குறித்துக் கொடுத்தும் காவல்துறை ஏழு பேர் மீது மட்டுமே வழக்குபதிவு செய்தது. முக்கிய குற்றவாளியை இன்று வரை கைது செய்யவில்லை; உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து அருகாமை கிராம மக்கள் உட்பட 500 பேருக்கும் மேலானவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் பேரணியாக சென்றும் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு அமர்ந்தனர். மக்கள் முன்னிலையில் ஆர்.டி.ஓ அவர்கள் பேச வேண்டும் என்றனர். ஆர்.டி.ஓ அவர்கள் மக்களை சந்தித்து மனுவை பெற்றுக் கொண்டார். அன்று இரவு மூன்று நபர்களை கைது செய்தது போலீசு.


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


முதல் நாள் கைது செய்யப்பட்ட நபர் சாராய போதையில் பைக் ஓட்டிச் சென்று கீழே விழுந்து அடிபட்டவர். அப்படித்தான் அவரது முதல் வாக்குமூலம் இருந்தது. ஆனால் பாமக கட்சி நிர்வாகி தலையிட்டு, அது சாத்துக் கூடல் தலித் இளைஞர்கள் தாக்கி ஏற்பட்ட காயம் என பொய் புகார் அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட கருவேப்பிலங் குறிச்சி போலீசு, 14 தலித் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிந்து தேடி வருகிறது. இது காவல் துறையா? அல்லது காவி வெறி, சாதி வெறி போலீசா? எனத் தெரியவில்லை. ஒரு அநீதியை தட்டிக் கேட்கப் போன மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டலச் செயலாளர் முருகானந்தம், ஆலிச்சிகுடி ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன் (முருகானந்தம் தாக்குதல் நடந்த போது ஊரிலேயே இல்லை. கண்ணனுக்கு காலையில்தான் செய்தியே தெரியும்) உட்பட 14 பேர் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும். கொலை வெறித் தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளான வன்னிய ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் அதிகாரம் கோருகிறது!

எந்த ஊர் என கேட்டு, சொன்ன மாத்திரத்திலேயே கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சாதி வெறியர்களுக்கு கைது, சிறை மட்டும் போதாது; அவர்களின் சிவில் உரிமைகள் பறித்தெடுக்கப்பட வேண்டும்! அவர்களுக்கு துணை போகும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும்! டாஸ்மாக்கை மூடு என போலியாக கோசம் போட்டு, போதை ஆசாமிகளின் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி மக்களின் ரத்தம் குடிக்கும் பாமக கட்சியை தடை செய்ய வேண்டும்!

தோழமையுடன்,
முருகானந்தம்,
மண்டல செயலாளர்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க