தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!

தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.

ன்னிரண்டு மணி நேர வேலைக்கான தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவானது பா.ஜ.க தவிர்த்து தமிழ்நாட்டு மக்கள், அரசியல் இயக்கங்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டமன்றக் கூட்டத்தொடரின் அதே நாளில் 17 மசோதாக்கள் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கூட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் முக்கியமானது, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்பு திட்டங்களுக்கான) சட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special ProjectsAct) என்பதாகும்.

இந்தச் சட்டம் கடந்த மூன்றாண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க அரசால் பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளது என்பது கவனத்திற்குரியது.

நீர்நிலைகளான ஆறுகள், ஓடைகள், குளம், குட்டை, ஏரிகள் ஆகிய இடங்களை எந்தத் தடையுமின்றி தொழில்வளர்ச்சிக்காக எடுக்கலாம் என்பதை அடிப்படையாக கொண்டு இந்த மசோதா வந்துள்ளதாகத் தெரிகிறது.


படிக்க: அரசு வேலைகளும் அரசு துறைகளும் அனைத்தும் தனியாருக்கே! “நம்ம ஸ்கூல் திட்டம்” திராவிட மாடலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்!


இச்சட்ட மசோதா அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவிருக்கும் பயணத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் இன்னும் மோசமாக சுற்றுச் சூழலை அழிக்கப் போவது திண்ணம்.

காவி – கார்ப்பரேட் கும்பல் தமிழ்நாட்டை சுடுகாடாக்க துடிக்கும் கொண்டிருக்கும் நிலையில், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட இயற்கையை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலாபம் கொழிக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க இச்சட்ட மசோதா வழிவகை செய்யும். கொலைகார ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் இச்சட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆலையை மீண்டும் திறப்பதற்கும் கூட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடும். விவசாயிகளின் நிலங்களை பறித்து பரந்தூர் விமான நிலையம், சிப்காட்கள் அமைப்பது போன்ற திட்டங்களுக்கும் இனி தடை இல்லாமல் போய்விடும்.

ஒருபக்கம் பா.ஜ.க எதிர்ப்பு, சமூகநீதி பேசிக்கொண்டே இன்னொரு பக்கம் திமுக அரசு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான திட்டங்களையும், அதற்கேற்ப சட்டத் திருத்தங்களையும் ஒன்றிய மோடி அரசின் பாணியிலேயே செய்து வருகிறது. கார்ப்பரேட் கும்பலின் வேட்டை நிலமாக நாட்டை மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு துணை போகிறது.


படிக்க: காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!


கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் தொடர்ச்சியான போர்க்குணமிக்க போராட்டங்களை கண்ட பின்பும் தி.மு.க அரசு கார்ப்பரேட் சார்பு சட்டங்களை கொண்டு வந்து, தன் கார்ப்பரேட் வர்க்கச் சார்பை மூடி மறைக்க வேண்டிய அவசியமின்றி, தான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆள்தான் என வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறது.

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவிற்கு எந்தளவிற்கு கடும் எதிர்ப்பை தமிழ்நாடு காட்டியதோ, அதே அளவிற்கு நமது இயற்கை வளங்களை அழிக்க வழிவகைக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதாவிற்கும் கடும் எதிர்ப்பை காட்ட வேண்டும். களப் போராட்டங்களின் மூலம் தி.மு.க அரசின் கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முறியடிக்க வேண்டும்.

அய்யனார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க