வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் – திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு முன்பே இங்கு திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நீதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு நிதி முறைகேடுகளை பற்றி திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் பச்சை பொய் என்று ரவி பேட்டியில் கூறுகிறார்.

இவர்களுக்குள் இருக்கும் முரண்பாடு மிகவும் குறிப்பிட்ட பிரச்சினைகளின் மட்டும்தான். மக்கள் பிரச்சினைகளில் இருந்ததில்லை. அதாவது பரந்தூர் விமான நிலையை பிரச்சினையிலையோ, காட்டுப்பள்ளி துறைமுகப்பிரச்சினையிலையோ, எட்டுவழிச்சாலையிலையோ, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளிலோ இவர்களுக்கு முரண்பாடு இல்லை..

தமிழ்நாடு அரசு செயல்படுத்துக்குடிய மேற்சொன்ன பிரச்சினைகளை பற்றி ஆளுநர் வாய்திறந்து பேசுவதில்லை.

மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தி.மு.க அரசு பற்றிய பல்வேறு விமர்சனங்களை இந்த காணொலியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க