தெரசா படம் இருந்தால் உனக்கென்ன பிரச்சினை? || தோழர் மருது

திருவண்ணாமலை கோவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் விளம்பரத்தில் அன்னை தெரசா படம் அச்சிட்டு இருந்ததை கண்டு புகார் அளித்த பாரதிய இந்து முன்னனியினர் இதற்கு காரணமான இரண்டு அர்ச்சகர்களை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என பிரச்சினை செய்தனர்

இக்கும்பலுக்கு பணிந்த அக்கோவில் நிர்வாக ஆணையர் அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தெரசா யார், இவர்கள் போராடுவதாக கூறும் இதே இந்து மதத்தை சார்ந்த நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவையை மேற்கொண்ட தெரசாவை எதிர்க்கும் இவர்கள், கோவிலின் உட்பகுதியில் ஏறியும் எடிசன் கண்டுபிடித்த விளக்கை பயன்படுத்துவது வெட்ககேடானது இல்லையா?

இப்படி இவர்கள் செயல்படுவதன் நோக்கம் தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்டுபாட்டில்தான் இயங்குகிறது என அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கான செயல்பாடு. இப்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் சாதிய மத துவேஷத்தை பரப்பி வரும் இவர்களை உதைத்து கைது செய்யாமல் இவர்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பதுதான் சமூகநீதி அரசின் வேலையா.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க