பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | திருவாரூரில் ஆர்ப்பாட்டம்
பற்றி ஏரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! என்ற தலைப்பில் மெய்தி இன வெறியர்களால் குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மெய்தி – குக்கி ஆகிய இரு இன மக்களுக்கிடையே மத கலவரத்தை துண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடைசெய்ய வேண்டும் என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூலை 25) நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருவாரூர் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் முரளி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்ட மக்கள் அதிகாரம், இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், SDPI, மே 17 இயக்கம், M.C.ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்ட உரையாற்றினார். 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இறுதியாக, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரத்தன் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆசாத் அவர்கள் கண்டனம் உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை வீழ்த்தாமல் வாழ்வில்லை என்பதை மீண்டும் மணிப்பூர் நிரூபிக்கிறது என்றார்.
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை உருவாக்க போராடுவோம்!
தகவல்:
மக்கள் அதிகாரம், திருவாரூர் மாவட்டம்
000
பற்றி எரியும் மணிப்பூர்; பற்றவைத்தது காவி;
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி தடை செய்! |கோவையில் ஆர்ப்பாட்டம்
பாதிக்கபட்ட மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக கோவை மக்களிடம் பிரச்சாரம் செய்து, மக்களுடன் இணைந்து கண்டனம் தெரிவிக்கபட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
கோவை- 94889 02202
000
பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி! | விருதாச்சலத்தில் ஆர்ப்பாட்டம்
விருதாச்சலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக (21.07.2023) மாலை 5:30 மணி அளவில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மோடி அரசை பதவி விலகக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் தோழர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மோகன்ராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ராஜேந்திரன், சி.பி.ஐ.எம்.எல் மற்றும் தோழர் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை என்று ஆர்ப்பாட்டம் முழங்கியது.
தகவல்:
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம்.