இந்தியா – பாரதம் : பாசிஸ்டுகளின் தோல்வி பயம்!

வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.

பாசிச மோடியின் அரசு, Group of 20 (G20) உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட இரவு உணவு அழைப்பிதழில் இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்றியுள்ளது.

செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 5 அன்று G20 மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் திரௌபதி முர்மு “இந்திய ஜனாதிபதி” என்பதற்கு பதிலாக “பாரதத்தின் ஜனாதிபதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிச மோடி தலைமையிலான பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார கும்பல் பாரதம் என்று இந்தியாவின் பெயரை மாற்றி எழுதி இருப்பதை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன.

படிக்க : BNYS மருத்துவ படிப்பு என்ற பெயரில் மோசடி | புமாஇமு புகார் மனு

இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ் காலனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அது “அடிமைத்தனத்தின் சின்னம்” என்றும் மோடி அரசும் சங்கிகளும் வாதிடுகின்றனர். 1947-இல் நாடு போலி சுதந்திரம் பெறும் வரை சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பிரிடிஷ் காலனிய மற்றும் முகலாய ஆட்சியை தொடர்பு படுத்தும் பெயர்களை அழிக்க ஆர்.எஸ்.எஸ்-பாஜக நீண்டகாலம் முயற்சித்து வருகிறது. அரசியலமைப்பு ரீதியாக மதச்சார்பற்ற இந்தியா என்று கூறப்படும் நிலையை மாற்றி ஓர் (இந்து) மதம் சார்ந்த அரசாக உருவாக்கும் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை கொண்டதுதான் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு.

இந்தியா என்ற பெயரை வைத்துக்கொண்டு மோடி அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இந்திய தேசப்பெருமிதம் காட்ட முற்பட்டது. ஆனால் மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபக்கம் இந்தியா என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தோல்வி மற்றொருபக்கம் எதிர்கட்சிகளின் கூட்டணியின் பெயர் இந்தியா என இருப்பதால், இந்திய தேசியவெறியை தூண்டுவதிலும் தோல்வி. இந்த தோல்வி பயத்தில் இருந்துதான் இந்தியா – பாரதமாக உருமாறவிருக்கிறது.

படிக்க : தொடை நடுங்கும் பாசிஸ்டுகளின் கூச்சல்கள்!

வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த கோழைகளுக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய விடுதலை போராட்ட உணர்வை எண்ணிப் பார்க்க கூட அருகதை கிடையாது.

இந்துராஷ்டிரம் கட்டியமைப்பதில் சிதைவு – நாடாளுமன்ற தேர்தல் நெருக்கடி ஆகியவற்றின் பயத்தில் இருந்தே, காலை நக்கியவர்களும் காவடித்தூக்கியவர்களும் காலனியாதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நிர்மல்
புமாஇமு முகநூலிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க