வெதர்மேன் ஜான் போன்றவர்கள் வானிலை நிலவரங்களைத் துல்லியமாக கணிப்பது எப்படி?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: வானிலை ஆய்வு மையம் போன்ற நிறுவனக் கட்டமைப்பைவிட வெதர்மேன் ஜான் போன்றவர்கள் வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிக்கிறார்களே, இதை எப்படிப் பார்ப்பது?

வெதர்மேன் ஜானுடன் ஒப்பிட்டுக் கேட்டது சரியான விசயம். வெதர்மேன் ஒரு அரசு அதிகாரி கிடையாது. அப்படி இல்லாதபோதும் இயல்பாக அவர் மக்கள் சார்புடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்கிறார். மக்களின் வாழ்நிலை என்ன, பொருளாதாரம் என்ன என்பதையெல்லாம் இணைத்துப்பார்த்து பேசுகிறார். ஆனால் அதிகார வர்க்கத்திற்கு (Bureaucratic) அதைப்பற்றியெல்லாம் கவலை கிடையாது. இங்குதான் அதிகாரவர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் சமூகத் தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கும் வேறுபாடு வருகிறது. இதிலிருந்துதான் மக்களுக்கான உண்மையான மாற்றைப் பற்றிக் கூற வேண்டியுள்ளது. மக்கள் தொண்டு, மக்கள் சேவை கண்ணோட்டம் கொண்ட கட்டமைப்பை உருவாக்குவதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வே ஒழிய, இந்த அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க