ம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் குறித்து விமர்சித்து கருத்துப் பதிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தியில் ஜனவரி 22 அன்று திறக்கப்பட்ட ராமர் கோயில் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து கருத்துகளை தெரிவித்ததாக குற்றம்சாட்டியுள்ளது ஜம்மு-காஷ்மீர் போலீசு. ஜம்மு மாவட்டத்தை சேர்ந்த கன்னா – சார்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜாஃபர் உசேன் ஆகிய இருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமர் கோவில் குறித்த விமர்சன கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காக இதுவரை 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஜம்மு-காஷ்மீர் போலீசு. ஜம்மு பிரிவில் உள்ள ரியாசி, ரம்பன், ரஜோரி மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 22 அன்று அனைத்து சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்படும் என்றும், அனைத்து பதிவுகள் மற்றும் கருத்துகளும் கண்காணிக்கப்படும் என்றும் ராமர் கோவில் குறித்து தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசு எச்சரிக்கை விடுத்திருந்தது.


படிக்க: ராமன் கோவிலை எதிர்த்து சென்னையில் போராட்டம் | ஊடகங்களில் வெளியான வீடியோக்கள்


1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று காவி பயங்கரவாதிகளால் பாபர் மசூதி இடிப்பப்பட்டது. ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பொய்ப்பிரச்சாரமானது கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதனை வைத்து நாடுமுழுவதும் மதக்கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றியது சங் பரிவாரக்கும்பல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம், பாபர் மசூதி இடிக்கப்பட்டதென்பது சட்டவிரோதனானது என்று கூறிய உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. இடித்தவனுக்கே நிலம் சொந்தம் என்ற இந்த அநீதி தீர்ப்பை எதிர்த்து குரல் எழுப்பியவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது போலீசும், காவிக்கும்பலும்…

தற்போது மோடி அரசின் தலைமையில் பல்லாயிரம் கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 22, 2024 அன்று ராமர் கோவில் திறப்பை நடத்திய பாசிச மோடி அரசு, பாபர் மசூதியின் இடிபாடுகளின் மேல்தான் – இஸ்லாமிய மக்களின் பிணங்களில் மீதுதான் – ராமர் கோவிலை கட்டி வருகிறது.

இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடும்போம். வரலாற்றின் அநீதிகளையும், உண்மையான வரலாற்றையும் ஒருபோதும் காவிப்புழுதியால் மறைத்துவிடமுடியாது!


இலக்கியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க