அருமை தோழனே பகத்சிங்! || கவிதை

கோடான கோடி தாய்களுக்கு மகனாய், சகோதரர்களுக்கு சகோதரனாய், மாணவர் படையின் தலைவனாய், இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்.. நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் தோழனே!!

0

அருமை தோழனே பகத்சிங்
நீ இன்னும் சாகவில்லை

கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களிலும்
இளைஞர்களின் நெஞ்சங்களிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!

பகத்சிங் நீ ஓர் இளம்புயல்!!
உன்னை ஆளும் வர்க்கம் அச்சுறுத்தியது
ஆனால், அடங்கவில்லை
உன் தேச விடுதலை உணர்வு!


படிக்க : தோழர் பகத்சிங்கும் மதவெறி சர்வாதிகாரமும்!


விடுதலைப் போராட்டத்தில்
வீரத்துடன் பங்கேற்றாய்
வீதி வீதியாய் சென்று
துண்டு பிரசுரங்களை கொடுத்தாய்!

நாட்டின் விடுதலைக்காக
குடும்பத்தை தியாகம் செய்தாய்!
காதலை தியாகம் செய்தாய்!

தியாகம் நிறைந்த
உன் வாழ்க்கையில்
போராட்டங்களுக்கு
பஞ்சமில்லை தோழனே!

போர்க்களமே
உன் வாழ்க்கையானது
போராட்டமே
உன் மகிழ்ச்சி!

நாடாளுமன்றத்தில்
குண்டு வீசினாய்..
அடக்குமுறை சட்டத்தை
திரும்ப பெற்றிட!

நாடாளுமன்றத்தில்
நீ எழுப்பிய முழக்கம்
நாட்டையே
திரும்பிப் பார்க்க
வைத்தது தோழனே!

இன்குலாப் ஜிந்தாபாத்
நீ எழுப்பிய முழக்கம்!
ஆங்கிலேயர்களின் தலையில்
இடியென இறங்கியது!

கைது செய்தது காவல்துறை
உன்னை கலங்கவில்லை
உன் நெஞ்சம்!

சிறைக் கம்பிகளுக்கு பின்னால்
அடைத்த போதும்
அங்கேயும் தொடர்ந்தது
உன்னுடைய போராட்டம்
சிறை கைதிகளுக்காக!

நீதிமன்றமும்
நிலைகுலைந்து போனது
உன்னுடைய வார்த்தைகளால்!

தூக்கு தண்டனை வழங்கிய போதும்
துவளவில்லை நீ!
துணிந்தே தூக்கு கயிற்றை
முத்தமிட்டாய்!

நாட்டின் விடுதலைக்காக
உன்னையே
அர்ப்பணித்துக் கொண்டாய்
தோழனே!!


படிக்க : பகத்சிங்கும் இளைஞர்களின் எதிர்காலமும்


உன்னுடைய தியாகம்
இளைஞர்களுக்கு
அரசியலை கற்றுக் கொடுத்தது….

உன்னுடைய தியாகம்
இளைஞர்களின் மனதில்
விதையாய் விழுந்தது!

கோடான கோடி
தாய்களுக்கு மகனாய்
சகோதரர்களுக்கு சகோதரனாய்
மாணவர் படையின் தலைவனாய்
இளைஞர்களின் இதயம் நிறைந்த வீரனாய்..
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
தோழனே!!

நன்றி: பு.மா.இ.மு, தமிழ்நாடு – முகநூலிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க