ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்! || மக்கள் அதிகாரம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

21.03.2024

ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்
அல்லது வெளியேற்றப்பட வேண்டும்!

மக்கள் அதிகாரம் அறிக்கை

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என அறிவித்த ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது. முதல்வரும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் என்று பலமுறை உச்சநீதிமன்றம் தன் தீர்ப்புகளின் வழியாக தெரியப்படுத்தியுள்ளது.

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த வழக்கில் கூட உச்சநீதிமன்றம் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.


படிக்க : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்


பாசிச பா.ஜ.க., கடந்த 10 ஆண்டுகளில் தனக்கு ஒத்து வராத அல்லது தனது வழிக்கு வராத மாநில அரசுகளை கலைப்பதற்கும் ஒடுக்குவதற்கும் ஆளுநர்களைத்தான் பயன்படுத்துகிறது.

ஊழல் வழக்கில் பெற்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி, மேல்முறையீடு செய்ததால் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்திருந்தது. அதனால் அவர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றார். இதையடுத்து பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கு ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் அனுப்பி இருந்தார்.

உச்சநீதிமன்றம் தண்டனையை நிறுத்தி மட்டுமே வைத்திருப்பதாகவும் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வரவில்லை என்று கூறி முதலமைச்சரின் கோரிக்கையை மறுத்திருந்தார் ரவி.

பொன்முடி ஊழல் செய்தாரா? உத்தமரா? என்பதல்ல தற்போதைய பிரச்சினை. மாநில அரசின் அனைத்து உரிமைகளையும் காலில்போட்டு மிதிக்கும் ரவியின் இன்னொரு நடவடிக்கையே இது.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ரவி அரசியலமைப்பின் படி செயல்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை என்றும் கடும் கண்டனம் தெரிவித்து, தீர்ப்பை நடைமுறைப்படுத்த இன்று(21.03.24) ஒரு நாள் இரவு மட்டுமே ஆளுநர் ரவிக்கு கெடு விதித்துள்ளது.


படிக்க : ஆதிஷ் அகர்வாலா – கட்டமைப்பிற்குள் பதுங்கியிருந்த கார்ப்பரேட் அடியாள்


இனியும் தமிழ்நாட்டில் இருப்பதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை. உடனே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க