மனுஷ்யபுத்திரன்
வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும், கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும், தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும், ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன.. இன்னும் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லதல்ல...
வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை
அதே துப்பாக்கி, பெயர்கள்கூட அதிகம் மாறவில்லை இன்று ராம்பக்த் கோபால் அன்று கோபால் கோட்ஸே. ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு அன்று குண்டடிபட்ட காந்தி 'ஹேராம்' என்றார் இன்று சுடுகிறவன் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்கிறான்.
அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை
அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்; தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை
நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா! உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என குழப்பமாக இருக்கிறது. என்னிடம் ஆவணங்கள் இல்லை, நான்தான் ஆவணம்!
எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்
ஒரு இளம் பெண் தன் பெயரின் சுமைதாங்காமல் தூக்கில் தொங்குகிறாள் அவள் உடலின் எடையைவிடவும் அந்த பெயரின் எடை ஆயிரம் மடங்கு கனத்ததாக இருக்கிறது...
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்
நான் ஒரு இஸ்லாமியனாகவே இருக்க விரும்புகிறேன் என் நெஞ்சில் நீங்கள் கடைசியாகப் பாய்ச்சப்போகும் ஈட்டியின் கூர்மையை நான் காண விரும்புகிறேன்...
அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்
அனிதாவிற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?... தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்; அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்; சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்; அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்!
எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்
"இந்த நாட்டில் காந்தி என்றொரு பயங்கரவாதி இருந்தார். இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு நக்சலைட் இருந்தான். அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் கொல்லப்படுகிறோம். நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான்
ஒடுக்குமுறையின் பாதை எப்போதும் ஒன்றுதான்!" - மனுஷ்யபுத்திரன் கவிதை
சமூக விரோதிகள் – நம் காலத்தின் சிறந்த பெயர் ! மனுஷ்யபுத்திரன்
இன்று மாலை கடற்கரையிலும் பூங்காகளிலும் கூடுவோம். ‘’ ஒரு சமுக விரோதியாக நான்.... ஒரு பயங்கரவாதியான நான் ... ஒரு நக்சலைட்டாகிய நான்..’’ என்று வரிசையாக உறுதிமொழி ஏற்றுகொள்வோம். - மனுஷ்யபுத்திரனின் கவிதை!
பிக்பாஸ் இன்று என்ன பொய் சொல்வார் ? மனுஷ்யபுத்திரன்
"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய
கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்." - சீசன் 2-வில் ‘பிக்பாஸின்’ எண்ண ஓட்டங்களை அறியத்தருகிறார் மனுஷ்யபுத்திரன்!
இந்த நகரத்தை இடித்து விடுங்கள் – மனுஷ்ய புத்திரன்
நான்கு வழிச்சாலை - எட்டுவழிச்சாலை - பதினாறு வழிச்சாலை - நரகத்திற்குப்போக இருபத்திநான்கு வழிச்சாலை! சேலம் எட்டு வழி பசுமைச்சாலை குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை!
டம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.
ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்
அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!