வினவு செய்திப் பிரிவு
காசா: இஸ்ரேலின் குண்டு வீச்சால் சிதைந்து போன ரஃபா நகரம்
இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சால் அடையாளம் தெரியாமல் சிதைந்து போன ரஃபா நகரம் (Rafah)
பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்
ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!
இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம்.
கோவையில் தெருமுனைப் பிரச்சாரம்: வேண்டாம் GST! வேண்டும் ஜனநாயகம்!
GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!
காசா மீது கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 26 இரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தொடங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், இஸ்ரேல்...
இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!
இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும் பல பிரபலங்கள் ஏற்கனவே இப்போலிப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்
இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்!
இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்!
இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்!
இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்!
வாரத்துக்கு 70 மணிநேரம்...
கருக்கா வினோத் அண்ணாமலை ஆள்! | தோழர் மருது
கருங்கா வினோத் அண்ணாமலை ஆள்! | தோழர் மருது
https://youtu.be/Y5LZ1QB0Sd8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நாளை… | பாலஸ்தீனம் | கவிதை
ஏன் குண்டு வீசி குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள்?
என் மகளின் கேள்விக்கு
ஒரு தாயாய் நான்
எப்படி பதில் கூறுவேன்!
எப்படிச் சொல்வது?
வியட்நாம்
ஈராக்
சிரியா
ஆப்கானிஸ்தான்
ஈழம்
பாலஸ்தீனம் …
நாளை இங்கேயும்
அந்த குண்டுகள்
விழக்கூடும் மகளே என்று!
எப்படிச் சொல்வது?
கிரிக்கெட் போட்டியை
ரசிப்பது போல்
குண்டுகள் வீசப்படுவதை
குழந்தைகள் கொல்லப்படுவதை
ரசிப்பவர்கள் இங்கேயும்
உண்டு...
ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!
கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி, ”வேதாந்தாவின் ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டினார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! | பாலஸ்தீனம் | கவிதை
சொற்களின் கூட்டுக்குள்
ஓர் மௌனப் பறவை!
தனிமைப் பெருவெளியில் நின்றபடி
பெயர் தெரியாத அப்பறவை
பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது!
துடைத்தெறிய முடியாத துயரம்
அதன் கண்களில்!
நூற்றாண்டு களைப்பைச்
சுமந்திருந்தது அதன் உடல்!
துயரத்தின் நிலத்திலிருந்து
வந்திருக்க வேண்டும் அப்பறவை!
நான் கேட்டபோது
மெல்ல என் காதுகளில்
பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு...
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு என கதறும் ஆளுநர் மாளிகை, பிஜேபி கும்பல்!
பிஜேபி கும்பலே சொந்தக் கட்சியினர் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தி விட்டு, இஸ்லாமியர்கள் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்வது, கட்சிப் பதவிக்காக தன் வீட்டு வாசலில் தானே குண்டு வீசி விட்டு அவதூறு பரப்பியது அதன் பின்னர் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.
இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.
சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கும் சங்கி ஆர்.என்.ரவி
ஒரு பக்கம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டு இன்னொரு பக்கம், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழ்நாடு நினைவு கூரத் தவறியதாக சமீபத்தில் ஆளுநர் ரவி திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார்.
“இந்தியா அல்ல பாரத்” – NCERT-இன் கரசேவை!
ஏற்கனவே ஜி20 மாநாட்டில் ”இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் NCERT-இன் இந்தப் பரிந்துரை சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது.















