அயோத்தியின் இராமனும்
அதானியின் இராமனும்
இதோ
இப்போது வந்திருப்பது
அயோத்தியின் இராமன் அல்ல இது
இராமன் 2.0
இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை
அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது
இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன
அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து
பெருமிதம் கொண்டான் இலக்குவன்
இந்த இராமனுக்காக கர்ப்பிணியின்
வயிற்றைக் கிழித்து
சிசுவை அறுத்து
வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள்
விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து
கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார்
2.0 இராமன்
அசுவமேத யாகத்தில்...
(சாதியக் கொடூரங்களால் பாதிப்புக்குள்ளான ஒரு மாணவனுக்கும் - ஒரு கம்யூனிஸ்ட் தோழருக்குமான உரையாடலே, இந்தக் கவிதை)
என்ன செய்ய? நான்! என்ன செய்ய?
என்ன செய்ய? நான்! என்ன செய்ய?
குடிக்கிற தண்ணித் தொட்டியில,
மலத்தக் கலக்குறான் – என்ன செய்ய?
படிக்கிற மாணவன் மூஞ்சியிலே,
மூத்திரத்த அடிக்குறான்–என்ன செய்ய?
சாதிப்பெருமையை பேசிக்கிட்டு மகளோட,
கழுத்தையே அறுக்கிறான் – என்ன செய்ய?
காட்டுசுள்ளிப் பொருக்கபோனா கம்பியில,
கரண்ட வைக்கிறான்...
அரசுப் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை அரசியல், சமூக - பொருளாதார நோக்கில் அணுகாமல் தனிப்பட்ட தவறாகக் கருதினால் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது.
புத்தாண்டே வருக!
புரட்சியின் நாயகரைத் தருக!
புதியதொரு ஆண்டு மட்டும் பிறக்கப் போவதில்லை
புதியதொரு வாழ்வும்
பிறக்கப் போகிறது
பாசிச அடக்கு முறைகள்
பிறக்கும் இதே ஆண்டில் தான்
விடுதலைக்கான கொடியும் பறக்கப் போகிறது
இதோ இந்த பாராளுமன்றம்தான் நம் உரிமைகளைப் பறிக்கிறது
என்ற முழங்கிய
பகத்சிங்கின் வார்த்தைகள்
காற்றில் கலந்து தொண்ணூற்றைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன
அடக்குமுறைகளும்
கொடுஞ் சட்டங்களும்
ஒரு போதும் விடுதலை உணர்வை சிதைக்க போவதில்லை
இங்கே கோழைகளுக்கும் துரோகிகளுக்கும் கூட இடம்...
தீர்க்கப்படவேண்டிய வழக்கு!
விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுறுவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை
கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்
கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!
தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைத்தூரம் வரை துவண்டே கிடந்தது
தோழர்களே,
அந்த துயர நாள் உங்களுக்கு தெரியுமா?
கைப்பேசியில் கதைப்பேசி
ஊர்கடக்கும் காரியமல்ல
சொல்லில் சுருக்கிட முடியாத
வரலாற்று சுவடு அது
தன்மீது தினிக்கும்
ஆண்டையின் உத்தரவை முடிக்க
கண் சொருகும் நாளிகை நெருங்கிடும்
உறை...
நூல்....!
கருவறைக்குள் ஒரு சாதி
கழிவு அள்ள ஒரு சாதி
சாதிக்கொரு நீதியென்று
நூல் வகுத்த நூல்
அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும்
எல்லைக் கோடு எழுதிய நூல்
அப்போது தடை
யாவரும் படிக்க
இப்போது
மந்திரங்கள் படித்தாலும்
தந்திரமாய் தடைபோடும் நூல்
ஏகலைவன்
சம்பூகன்
நந்தன்
இப்போது நமக்குமென
தகுதியெனும்
நீட்டை நீட்டிய நூல்
உண்மைகளைத் திருடி
கதையென அளந்த நூல்
கதைகளை எழுதி
உண்மையென ஒப்பாரி வைக்கும் நூல்
அதிகாரம் அகங்காரம்
ஆதிக்கம் ஆணவத்திற்கு
அரணாகி நிற்கும் நூல்
எளிதில் அறுபடும்
ஆனாலும் அந்நூலுக்கு
அவ்வளவு அதிகாரமாம்
நூலால் கட்டுண்டு
நூலுக்கு கட்டுப்பட்டு...
டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.
அடிமைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே உயிரோடு வாழ்வது மட்டும் தான். அன்றாடம் எஜமானர்களின் சவுக்கடிகளில் இருந்து தப்பித்தாலே போதுமானது. இதுபோன்ற வரலாற்றுச் சூழல் தான் ஸ்ப்பார்ட்டகஸ்ஸை உருவாக்கியது.
திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர்
தீவுபோல் மாறிய எங்கள் சென்னை;
உடைமைகள் எங்களிடம் இல்லை
உணவும் எங்களை தேடி வரவில்லை:
மருந்துப் பொருட்களும் வரவில்லை
மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம்
யாரால் எங்களுக்கு இந்த நிலை?
அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும்
வீட்டிற்குள் வந்து இடம் கேட்கின்றன;
வீடுகளை இழந்து வீதிகளில் நின்று கொண்டிருக்கிறோம்
நேற்று பெய்த மழையில்
எங்களின் குடிசைகளை காணோம்;
கரை ஒதுங்கிய மீன்களைப் போல்
கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறோம்...
டிசம்பர் 25, 1927 அன்று, அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனு ஸ்மிருதி எரிக்கப்பட்ட வரலாற்று பின்னணியை விளக்குகிறது இக்கட்டுரை. படியுங்கள்.. பகிருங்கள்...
சுரங்கத்திற்குள் அமைதி!
ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம்
இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்!
சுரங்கத்தின் உள்ளே அமைதி
சுற்றிலும் மண் புழுதி
மூச்சுவிட முடியாமல் அவதி
முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி
பதினான்கு நாளாகியும் பலனில்லை
நிலவிற்கு விண்கலம் அனுப்பும் உங்களின் விஞ்ஞானம்
நிலத்தின் நடுவே உள்ளவர்களை மீட்கவில்லை
இது யாருக்கான விஞ்ஞானம்?
இரவு பகலாக வேலை பார்த்து
இருட்டினில் இருதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருக்ககிறோம்
இனியும் உயிருக்கு...
இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
குஷ்புவும் செருப்பும்
வந்தாரை எல்லாம் வாழ வைத்ததா சென்னை?
இல்லை
சேரிகள் தான்
வாழ வைத்தன
வைகையின்
காவிரியின்
தாமிரபரணியின்
பெருமையை பேசுவோர்க்கு
கூவத்தின் பண்பாடு
அறிவது கடினமே
சேரி என்றால் அன்பு
அதை நீ சொல்லி
நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை
சாதி கேட்காத ஊர்
சொர்க்கம் என்றால்
சேரி தான் சொர்க்கம்
சேரியின் அன்பும்
அரவணைப்பும்
அக்கிரகாரத்தில் தேடினாலும் கிடைக்காது
துரத்தியடிக்கப்பட்டவர்களுக்கும் விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கும்
இல்லாதவர்களுக்கும்
மறு வீடு சேரிதான்
கேட்டாலும் தண்ணீர் கொடுக்காத ஊரும்
கேட்காமலே சோற்றை போடும் சேரியும் ஒன்றல்ல
எப்போதும் ஒன்றல்ல
அதனால்தான் ஊரும்...
போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம்.
நேற்றைய(19.11.23) ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிறார்கள்.