நித்ய சைதன்ய யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.
நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.
கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன
ஒளிபுகாத அடர்காட்டின் நடுவில் அரிவாள்களைக் கூராக்கி பாதை செய்கிறோம் ஏளனச் சிரிப்புகளும், வன்மம் பொங்கும் ஊளைச் சத்தங்களும், முற்றும் அறிந்த மேதாவித்தனங்களும், திரும்பும் திசைகளிலெல்லாம் எதிரொலிக்கின்றன.
இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா?
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறைவான பேருந்துகளை வைத்துக் கொண்டு இரண்டு மடங்கு மாணவ-மாணவியரை ஏற்றி அதிகமான வேகத்தில் வண்டியை ஓட்ட நிர்பந்தித்ததே கல்லூரி நிர்வாகம்தான். அதனால்தான் இந்த படுகொலை நடந்துள்ளது.
உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என பையை சோதனையிடுகிறது, சாப்பாட்டில் குண்டு தேடுகிறது காவல் துறை.
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
கல்குவாரிகளுக்குள்
புதைக்கப்படும் அப்பாவி உழைப்பாளி மக்கள்!
கந்தகத் துகள்களுக்குள்
சிதறிய உடல்களை பார்க்கும்
குடும்ப உறவுகளின் கண்ணீரும், கதறல்களும்
தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கின்றன.
அரசு அதிகாரிகளும், கல்குவாரி முதலாளிகளும்
இணைந்து அடிக்கும் கொட்டமும்
நீண்டு கொண்டுத்தான் இருக்கிறது.
முதலாளிகள் சொத்துகள் சேர்த்து உடல் வளர்க்க,
அற்ப கூலிக்காக உடல் சிதறி
அப்பாவி உழைக்கும் மக்கள் மட்டும்
மாண்டு போவது என்ன நீதி?
வெடித்த சத்தம் பல மைல் தொலைவில் இருக்கும்
ஊர் மக்களின் காதில்...
மாணவர்களின் போராட்டம் என்ற அளவில் சுருங்கிவிடாமல், பகுதி மக்கள், இளைஞர்களையும் இணைக்கும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், எழும்பூர் சந்தோஷ்நகர் பகுதி மக்களை அணிதிரட்டி தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.
"மதில் சுவரை அகற்றுவோம்" என்ற கோரிக்கையோடு மாணவர்கள் உறுதியோடு எதிர்த்து நின்றதன் காரணமாக, தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது அண்ணா பல்கலை நிர்வாகம்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி தமிழகம் போர்க்களமாக மாறிவருகிறது. பல்வேறு இடங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.




















