Tuesday, December 30, 2025
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது.
பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல்.
பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவென்று கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் இறுதிப்பாகம்
மதத்தின் பேரால் கலவரங்களில் மரித்து போனவர்களின் சாம்பல்கள் சொல்லும்., காற்றில் கரைந்த இந்திய சுதந்திரத்தை...! பாலியல் சீண்டல்களால் பாதிப்புக்கு உள்ளான மல்யுத்த வீரர்களின் கனவுகள் சொல்லும்., ஒலிம்பிக்கில் பறிபோன இந்திய சுதந்திரத்தை...! தகுதித் தேர்வுகளால் கனவுகள் பறிபோன மாணவர்களின் கடைசி மூச்சு சொல்லும்., கல்வி கார்ப்பரேட்மயமான இந்திய சுதந்திரத்தை...! 420 எல்லாம் இணைந்து 370-யை நீக்கிய போது காஷ்மீரிகளின் உரிமைகள் சொல்லும்., அம்பானிகளிடம் தாரைவார்க்கப்பட்ட இந்திய சுதந்திரத்தை...! பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பெற்ற இராணுவத்தின் துப்பாக்கி முனை சொல்லும்., காடுகளிலிருந்து விரட்டப்படும் பழங்குடிகளின் இந்திய சுதந்திரத்தை...! மருத்துவமனையில் உறங்கும் வேளையில் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்ட மருத்துவரின் உடல் சொல்லும்., ஆணாதிக்க வெறியின் இந்திய...
இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்' என முறையிட்ட மக்கள், இப்போது 'எங்களை உயிரோடாவது விடுங்கள்' எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.
பயிர்கள் பொய்த்துப் போய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நாட்டிலிருந்துதான் குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதற்காக கொடூரமாக கொலைகள் செய்யும் ரகுநந்தனும் தோன்றியிருக்கிறான்.
மெரினா போராட்ட களத்தில் முகம் தெரியாத ஆணும் பெண்ணும் கைகோர்த்து நின்ற அந்த நிலையில் ஒரு ஆணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற அச்சமோ – ஒரு பெண்ணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற எண்ணமோ ஏற்படவில்லை. காரணம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இதை சாத்தியப்படுத்திது.
உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா?
சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது, தெரியுமா உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும்.
“விதையுங்கள், கொள்ளையன் அறுவடை செய்ய அனுமதிக்காதீர்! செல்வம் கண்டெடுங்கள், எத்தர்களை எட்ட நிறுத்துங்கள்! ஆடைகளை நெய்யுங்கள், சோம்பேறி அணியவிடாதீர்! ஆயுதம் செய்யுங்கள், நீங்களே ஏந்துங்கள்!” - கவிஞர் ஷெல்லி
தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தையும், ஆங்கில மோகத்தின் திரிசங்கு சொர்க்கத்தையும் விளக்கும் கட்டுரை இது.
இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது.
இந்திய நாட்டுச் சட்டங்கள் திருமண உறவிலான பாலியல் வல்லுறவைத் தண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிப்பதில்லை. இச்சட்டங்கள் மனு ‘நீதி’ அடிப்படையில் அமைந்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
அமெரிக்க மக்களின் மூளைகளில் ஹாலிவுட் தடுப்பூசி போட்டிருக்கிறது. அமெரிக்கா என்றாலே இரக்க குணம் கொண்ட நாயகன் என்ற பிம்பம்தான் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. சி.ஐ.ஏ – ஹாலிவுட் கூட்டணி அவர்களை இராணுவ வெறி பிடித்த முட்டாள்களாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் சில வார்டு கவுன்சிலர்களையாவது உருவாக்கியே தீர வேண்டும் என்றால் சந்தையிழந்த நடிகர்களையும் சேர்க்க வேண்டும் என்று அலையும் பா.ஜ.க-விற்கு பொன்னம்பலம் போன்ற பிழைப்புவாதிகள் அவசியம் தேவை.

அண்மை பதிவுகள்