மனச்சாட்சி சுதந்திரத்தின் அடிப்படையில்தான் ஒருவன் மதம் மாறுகிறான். அவன் பால்பவுடரைக் காட்டி மாற்றப்பட்டானா, பரம பிதாவைக் காட்டி மாற்றப்பட்டானா என்பதை ஆராய நீதிமன்றத்திற்கு ஏது உரிமை?
என் தவம், ஞானம், நேமம், நிஷ்டை , அருள் இவைகளையெல்லாம் நாசம் செய்து கொள்ளச் சொல்கிறாயா? ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 18-ம் பாகம் ...
ஐ-கேட் நிறுவனத்தின் "சதித்திட்டம் அம்பலம்" என்ற தொடர் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் ஐடி சேவைகளை வழங்கும் அதன் போட்டி நிறுவனங்களுக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.
வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.
சடையன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்த்து நடத்தும் உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு நாவல்.
ஏன் இரத்தம், எச்சிலோடு முடித்து விட்டார்கள் என்பது தெரியவில்லை. சச்சினது சளி, வியர்வை, விந்து என எல்லாவற்றையும் சேர்த்திருக்கலாமே?
ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே அயல்பணி தொழிலாளர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள்.
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற தனியார் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல் பெருகி விட்டன.அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வக்கில்லாத அரசு கருத்துக் கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏய்க்கிறது.
ஆறு ஆண்டுகள்
ஆயினும் ஆரா ரணமாய்
ஆர்ப்பரிக்கிறது தூத்துக்குடி துப்பாக்கி சூடு…
நீர் வெப்பத்தில் ஆவியாகி
மேகத்தை முட்டி
மண்ணில் மழையென பொழிந்து
வீரத்தின் விதைகளாய் மண்ணில் புதைந்து
“போராடு” எனும்
உரத்தினை ஊட்டிச்
சென்ற நாள்!!!
30 ஆண்டுகால புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க
மலடாய் மாறிவிட்ட மண்ணினை மீட்டெடுக்க,
தாகம் தணிக்கும் தண்ணீரை விஷமாக்கிய
ஸ்டெர்லைட் எனும்
கொலைகார கார்ப்பரேட் கம்பெனிக்கு
எதிராகப் போராடி
15 உயிர்களின் குருதி கொடுத்து
தங்களின் அடுத்த சந்ததியினரின்
இன்னுயிர் காத்த
தூத்துக்குடி மக்களின்
வீரம்...
‘இந்து’க்களின் நலனைக் காப்பாற்றுவதற்காகவே 'அவதாரமெடுத்திருக்கும்' இந்து முன்னணியும், அவர்களின் சித்தாந்த குருவான சோ ராமஸ்வாமி அய்யரும் நித்தியானந்தாவை தேர்ந்தெடுத்திருப்பதை எதிர்க்கக்கூடாதென அருளுரை வழங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் புதுமைப் பெண்கள் அல்ல; போராடும் பெண்கள். போராடும் கடமையை உணர்த்தும் வலிமையான பெண்கள். அந்தப் போராட்டத்தில் தங்களது உயிரையும் வாழ்வையும் இழந்த பெண்கள்.
கண்ணகி - முருகேசன் வழக்கு தீர்ப்பு:
சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தோழர் சாந்தகுமார்
https://youtu.be/1PnHPftZwtI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

















