Wednesday, January 21, 2026
பெற்றோர்களே! உழைக்கும் மக்களே ! வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோட கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம் !
வடக்கில் பிறந்த அவனையும், தெற்கில் பிறந்த என்னையும் ஏனோ இணைக்கிறது இந்த இரக்கமில்லா இரு தண்டவாளங்கள். இந்த தண்டவாளத்தில் பயணிக்கும் ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய் பயணம் நீள்கிறது. பணம் இருப்பவனுக்கு குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது மற்றொரு பெட்டியோ ஆட்டையும், மாட்டையும் அடைத்து சந்தையில் விற்க கூட்டிச்செல்வது போல நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில் நிற்கக்கூட இடம் இல்லாமல் நிற்கதியாய் பயணிக்கும் ஒர் மனிதக் கூட்டம் அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான்...
காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான்...
அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர். எளிய உணவு, உடை, வீடு, அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான் தோழர் சந்திரபோஸ்.
ஹைட்ரஜன் – புரோமின் பேட்டரி காற்றாலை, சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி திட்டங்கள் மேலதிகமாக வளர உதவும், தொழில் நுட்பம் வளர்ந்து நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தால் செலவு மேலும் குறையும்.
ஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 33 ...
இதைப் பற்றி விண்ணப்பம் எழுதி நீர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும்... செயலாளர் என் கவனத்துக்கு அதைக் கொணர்ந்திருப்பார்... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 11.
நடைமுறைக்கும் தூய்மை இந்தியாவின் குறிக்கோளுக்கும் இட்டு நிரப்பவே முடியாத ஒரு பாரிய இடைவெளி இருப்பதை ’கபார் இலஹரியா’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் எடுத்த இந்த காணொளி ஆய்வு அம்பலப்படுத்துகிறது.
பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.
நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் இப்பகுதியில் விளக்குகிறார் நூலாசிரியர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 06.
ஷோபாப்பூரில் குடியிருப்பவர்களுக்கு தங்களது வாழ்க்கை நிலைமை மீது கசப்புணர்வே மிஞ்சியிருக்கிறது, “எங்கள் குழந்தைகளை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் சமூகம் ஒரு தலித் மருத்துவரை ஏற்றுக்கொள்வதில்லை எனக் கூறுகின்றனர் அம்மக்கள்.
தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா?
நூறு ரூவாதான் காசு குடுத்துருக்கானுவொ, ஏதோ கடையில பிரியாணி வாங்கி குடுத்துருக்கானுவொ, அத தின்னுட்டு மொட்ட வெய்யில்ல உக்காந்திருந்தா என்ன செய்யும். வயித்து கடுப்பு வந்து வீட்ல சுருண்டுகிட்டு படுத்துக் கெடக்கா.
நேச நாட்டினரின் பீரங்கிக் குண்டுகளுக்கு எதிர் நிற்கும் சோவியத் படைவீரன், பின்னணியில் இருந்தபோதிலும் லெனினும் குண்டுத் தாக்குதலுக்கு எதிர் நிற்கிறார் என்பதை அறிவான். ஏனெனில் ருஷ்யாவில் மற்ற எல்லாவற்றையும் போலவே அபாயமும் சமூக உடைமை ஆக்கப்பட்டுவிட்டது.

அண்மை பதிவுகள்