ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.
பெற்றோர்களே! உழைக்கும் மக்களே ! வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோட கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம் !
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு நிர்ணியத்த கட்டணத்தை விட அதிகம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தது. இதை பெற்றோர்கள் விடாது போராடி அரசு நிர்வாகத்தை பணிய வைத்து முறியடித்தனர்.
மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடத்துவங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்திவருகிறது!
துப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது - நான்தாம்பா ரஜினிகாந்த்!
தானே வடிவமைத்த துப்பாக்கியை பொதுச் சொத்தாக்கிய சோவியத் மனிதனும், பிறரது இசையை காப்புரிமையின் பெயரால் களவாடிய வார்னர் மியூசிக் நிறுவனமும்.
சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகளின் ''பெட்ரோல் டெக்'' மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். எனக் கூவிக் கூவி அழைக்கிறார்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை! மன்மோகன், சோனியா, ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு! ரயில் மறியல்! மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு, விவிமு புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள், புகைப்படங்கள்!
இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள்.
''மூலதனம்'' நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் ஜீவானந்தம்.
மனநலம் பாதிப்போடு உள்ள மாரியம்மாள், வேலைக்கான கூலியை கிண்டி இரயிலடி டாஸ்மாக்குக்கே சமர்ப்பணம் செய்கிறார். எங்கள் கண் முன்னே காசை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு பறந்து போனார்.
பகத்சிங், காங்கிரசின் துரோகத்தால் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி.
ஏப்ரல் 14:
அம்பேத்கர் பிறந்த நாள்
LOVE ALL NO CASTE
அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
பாலின சமத்துவம் படைப்போம்!
காதலைப் பற்றி
பல்லாயிரம் மெட்டுப்போட்டு பாட்டெழுதி
சீன்போட்டு நடனமாடி
காசு பார்க்கும் சினிமாகாரர்கள்,
ஆணவக்கொலைகள் அரங்கேறும்போது
வாய்திறப்பதில்லை.
சாதி கொலையாளிகளின் கொலைவெறியும்
காதல் கலையாளிகளின் கள்ளமெளனமும் கைக்குலுக்குமிடம் சாதிவெறியல்லவா?
தலித்துகளை காதலிப்பதை தடுக்க
நாடகக் காதல்!
இஸ்லாமியர்களை காதலிப்பதை தடுக்க
லவ் ஜிகாத்!
இது, இணையை தேர்ந்தெடுக்கும்
பெண்களின் உரிமையை மறுக்கும்
சாதிவெறியர்களும்...
கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன்...
இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.




















