போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கலீலியோவுக்கு பின் விஞ்ஞானம் வளர்ந்து மனிதனால் எட்ட முடியாத தூரங்களையும் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டது. வாயேஜர் சூரியக் குடும்பத்தையே தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
ஆலைச்சங்கு அலறிய அந்த அதிகாலையில் அவன் இறந்து போனான். சவப்பெட்டியில் திறந்த வாயோடும், வெறுப்பு நிறைந்து நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள்.
ஆணாதிக்க திமிருக்கு அதிகாரத்துவ திமிருக்கு பாலியல் தொந்தரவுகளை சகித்துக் கொள்ளும் ஊழியர்களே ஊடக நண்பர்களே அடிமைத்தனத்தை கைவிடுங்கள்! அகிலாவுக்காக போராடுங்கள்! அகிலாவை போல் போராடுங்கள்!
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
உங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் நிச்சயமாக இந்த எண்ணுக்கு (14417) புகார் அளியுங்கள் என்று ஒரு ஆசிரியராக என்னிடம் படிக்கும் பெண் குழந்தைகளிடம் இனிமேல் எப்படி, நான் சொல்ல முடியும்?
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது ஆள் பிடிக்க வந்த தனியார் கல்லூரிகளை நேரடி நடவடிக்கை எடுத்து விரட்டியது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத் தேர்தலின் போது மோடியை ஆதரித்தவர் தற்போதுதான் பிரதமரே இது நியாயமா என்று கர்த்தரே ஏன் என்னை கைவிட்டு விட்டீர் என்று ஆதங்கப்படுகிறார். இல்லையென்றால் இதற்கு முன்னர் மோடியை ஆதரித்த தனது குற்றச் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பாரா?
“எங்கள் உளவுக் கருவிகளை பயன்படுத்தினால் நீங்கள் ஒரே நேரத்தில் பல லட்சம் மின்னஞ்சல்களை உளவு பார்க்கலாம்” என்கிறது ஒரு தனியார் நிறுவனத்தின் கவர்சசிகரமான விளம்பரம்.
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம்.
கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன
இதிகாச காலத்தின் இந்திரன் துவங்கி இண்டெர்நெட் காலத்தின் தேவநாதன் வரை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
பொதுவாக புரட்சிக்காரர் என அறியப்பட்டுள்ள பகத்சிங், சிறந்த சிந்தனையாளரும், ஆழ்ந்த படிப்பாளியும் ஆவார் என்பதை பிரகடனம் செய்கிறது, இந்நூல்.




















