வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.
பொண்ணுக்கு பூர்வீகம் ஒடிசா. கல்யாணம் முடிஞ்ச ரெண்டு வருசமா வாழ்க்கை சென்னையில. இந்த ரெண்டு வருசத்துல நண்பர்னு சொல்லிக்க சென்னையில யாரும் இல்ல.
இந்துமதவெறியர்களின் செல்வாக்கு பகுதிகளில் இந்தப் போக்கு அதிகம் என்பதிலிருந்தே அங்கு பெண்களுக்கு எந்த மதிப்பும், இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
செல்பி நாயகனின் அதிரடி அறிவிப்புக்கு, அடிப்படை இல்லாமல் இல்லை !
ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் ! பின்பு மாட்டை வைத்து மடக்கினான் ! அதன் மூத்திரத்தை வைத்து முழங்கினான் !
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளி இப்படி சீரழிந்து கிடப்பதை ஊர் சார்பாகவும், கிராமசபை தீர்மானத்தின் மூலமாகவும் பலமுறை கொடுக்கப்பட்ட மனுக்கள் அதிகாரிகளின் குப்பைதொட்டியில் தான் நிரம்பின அதனால் எங்களுக்கு அதில் நம்பிக்கையில்லை.
காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.
''பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது''
கோலமாவு கோகிலால் அறம் புகழ் நயன்தாரா போதைப் பொருள் கடத்துவதை தியேட்டரே சிரிக்கிறது. ரசிகர்கள், ரசனை, இயக்குநர், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து……? திரை விமர்சனம்
நடந்தது குழாயடிச் சண்டையல்ல, மறப்பதற்கு. 2002 இல் குஜராத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலை. இருந்தாலும், 'அன்று நடந்ததற்காகத்தான் இன்று நடக்கிறது' என்பதையாவது நேர்மையாக ஒப்புக் கொள்கிறாரே குந்தவை. அந்த வரையில் மகிழ்ச்சி.
"வடிவேல் ராவணன் என் உறவினரே கிடையாது. அவன் வேறு சாதி, நான் வேறு சாதி. அவன் பள்ளன், நான் பறையன். இனி சாதி சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஓட்டுக் கேட்க வேண்டும் போல இருக்கிறது"
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும்.
சாதாரண மனிதக் கண்களுக்குத் தட்டுப்படாத மிகச் சிறிய மாற்றங்களைக் கூட நியூரோரீடர் போன்ற மென்பொருட்கள் கண்டறிந்து விடுவதால் மேற்கொண்டு சோதனை செய்ய வேண்டியதன் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது.





















