பாதையோரத்தில் போர்வைக்குள் குடும்பம் நடத்தும் நிலையில் உள்ள மக்களை உருவாக்கி இருக்கும் அரசுக்கு ஒண்ணுக்கு போறதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளில் ஒன்று
அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான்.
பகலில் மட்டும் உற்பத்தியாகும் சூரிய சக்தி மின்சாரம் நிலையற்றதாகும். மிகவும் நிலையற்ற இம்மின்சார உற்பத்தி, தமிழகத்தின் மின்வெட்டைத் தீர்ப்பதற்கு எந்த வழியிலும் உதவப் போவதில்லை.
தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, இந்தியாவில் அந்நிய வங்கிகள் காலடி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவை கிடைத்து வந்தது; ஆனால், கூடுதல் வருமானத்திற்கான வாதங்களின் முன்பு தார்மீக பொறுப்பு தோற்றுப் போனது.
மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறோம். "சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்" என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
சட்டப்படி அனுமதி வாங்கி நடத்தும் மது ஆலையிலிருந்து சட்டப்படி அனுமதியுடன் நடத்தும் டாஸ்மாக்கை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது இது அரசின் கொள்கை முடிவு என்று சட்டமே வடிவான நீதிமன்றமே சொல்லிய பின்பு சட்டப்படி போராட்டம் என்பது சாத்தியமே இல்லை.
லெனின் எதிரிக்குப் பதில் அளிப்பதில்லை. எதிரியின் வாதங்களைக் கூறுபோடுகிறார். அவர் மழிப்புக் கத்தி முனை போலக் கூர்மையானவர். அவருடைய அறிவு வியப்பூட்டும் நுண்மையுடன் செயல்படுகிறது. வாதப் போக்கில் உள்ள எல்லாப் பிழைகளும் அவருக்குப் புலனாகிவிடுகின்றன.
இவர்களது வேலை ஜீன்ஸ் துண்டுகளை கத்தரித்து அதை பேக் செய்வது. பத்து நிமிடத்தில் பத்து எண்ணிக்கை. இதில் கடைசியாக முடிப்பவருக்கு சுத்தியல் அடி கட்டாயம்.
அரபி படிக்க விருப்பமில்லாத மகபூபை மதரஸாவில் இரும்பு சங்கிலியிலால் கட்டி வைத்திருந்தனர். இது நடந்தது ஆப்கானிலோ பாகிஸ்தானிலோ அல்ல, ஆந்திராவில்
நிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம்.
கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

















