னித மூளைதான், ஊடுறுவல் மற்றும் தகவல் திருட்டின் அடுத்த கட்ட இலக்காக இருக்கக்கூடும் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், நரம்பு மண்டல பதிய தொழில்நுட்பங்களின் (neural implant technologies) மூலமாக நமது நினைவை வெளிப்படுத்தவோ, இழக்கவோ செய்யக்கூடிய அபாயங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே அடிப்படையான மூளை பதியங்கள் இங்கு இருந்தாலும், தற்போதைய அறிவியல் வளர்ச்சி, நினைவகத்தின் வேதிவினைகளில் நிபுணத்துவம் பெறும் அபாயத்தின் முனைக்கு வந்துவிட்டதைக் காட்டுகிறது.

தற்போது, ஆழ் மூளை தூண்டுதல் (Deep Brain Stimulation) எனும் சிகிச்சை முறையில், உடலில் ஒரு கருவி வைக்கப்பட்டு, குறிப்பான இடங்களில் பொருத்தப்படும் அதன் மின்வாய்களின் மூலம் மின் தூண்டுதல்களை செலுத்தி நரம்பு மண்டலத்தை சிதைக்கும்  நடுக்குவாத (Parkinson’s) நோய்க்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

கருப்பு ஆடி (Black Mirror) எனும் தொலைக்காட்சி தொடர்களில் காட்டப்படும் நினைவுப் பதிய கருவிகள் தற்போது நடைமுறையில் உள்ள DBS அமைப்பு முறையினாலெயே கூடுமானவரையில் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய அமைப்பு முறைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து காஸ்பெர்ஸ்கி ஆய்வகமும் (Kaspersky Labs) ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அவர்களது ஆய்வு முடிவுகள் மிகவும் சிறப்பாக வெளிவந்துள்ளன.

படிக்க:
♦ வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்
♦ டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்

அவர்களின் அனுமானப்படி, நினைவக பதியக் கருவிகளை பொருத்தி நினைவை கட்டுப்படுத்தக் கூடிய தொழில்நுட்பம் அடுத்த இருபது ஆண்டுகளில் கிடைத்துவிடும்.  அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் முகமையால் (Defense Advanced Research Projects Agency) நிதியளிக்கப்பட்ட ஆய்வு சமீபத்தில், மூளை குறியாக்க மின் குறியீடுகளை மனிதனிடமிருந்து பிரித்து அவர்களுக்கே திருப்பி அனுப்பச் செய்வதன் மூலம் மூளையின் குறை நேர நினைவு (short-term memory)  செயல்திறனை 37 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் பதியங்களில், பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் வலுவற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். மருத்துவர்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தும் மருத்துவ மேலாண்மைக் கருவிகளுடன் தகவல் பரிமாற்றத்துக்காக  இணைகையில் இத்தகைய பாதுகாப்பு அபாயங்கள் இருக்கின்றன.  இத்தகைய கருவிகளில் தற்போது நடைமுறையில் உள்ள அதிநவீன கருவிகள் கூட புளூடூத் தொழில்நுட்பத்திலேயே தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்த புளூடூத் தொழில்நுட்பம், புகழ் பெற்றதாகவும், எளிமையானதாகவும் இருப்பினும் இது பாதுகாப்புக் குறைபாடு கொண்டதாகவே இருக்கிறது

தகவல் திருட்டை தடுக்கும் வழிதான் என்ன?

கெடு நோக்கம் கொண்டவர்கள் இந்த கருவியின் கட்டுப்பாட்டை ஊடுறுவி கைப்பற்றுவது மட்டுமல்லாமல், உடலுக்கு வலியையும் உடலின் இயக்கத்தை சீர்குலைக்கவும் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு வளர்ந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளை கைப்பற்றுவதன் மூலம் பணயத்தொகை கேட்டு அவர்களை மிரட்டவும் முடியும் என்று அவ்வறிக்கை எச்சரிக்கை செய்கிறது.

அத்தகைய கருவிகளுக்கு இயல்பாகவே ஒரு பின்வாசல் வழி ஒன்று தேவைப்படுகிறது. நெருக்கடி நேரத்தில் மருத்துவ நிபுணர்கள் அதன் வழியாக அக்கருவியை அணுக முடியும். அதே நேரத்தில் இதில் உள்ள சிக்கலையும் ஆராய்ச்சிக் குழு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விஐபி நோயாளி ஒருவரின் கருவியை அணுகும் வழியை ஒருவருக்கு மருத்துவ நிபுணர்கள் விற்பதை எதுவும் தடுக்கப் போவது இல்லை. அதே போல, தயாரிப்பின் போது அமைக்கப்பட்ட கடவுச்சொல்லை (factory-preset password) மாற்றுவதற்கு மறந்து போவதை தடுக்கப் போவது இல்லை.

படிக்க:
♦ பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

இதுவரையிலும் நரம்புமண்டல தூண்டுதல் கருவிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, அத்தொழில்நுட்பம் இன்னமும் பரவலாகாமல் இருப்பதே காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளை காலம் கடப்பதற்கு முன்னரே சரி செய்வதற்கான நேரம் இன்னமும் இருக்கிறது.

நன்றி : RT.COM
தமிழாக்கம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க