ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் – இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!
தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி! பி.ஜே.பி யை ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!
தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!
என்ற முழக்கங்களை முன்வைத்து ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பு. ஜ.தொ.மு-வின் கமாஸ் வெக்ட்ரா கிளைச்சங்கத் தலைவர் தோழர் செந்தில், பு.ஜ.தொ.மு-வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினர்.
பள்ளி குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பலரும் கலந்துக்கொண்டு விண்ணதிர முழங்கி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யும்வரை தாங்கள் போராடுவதாக உறுதியளித்தனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம், தொடர்புக்கு – 97880 11784
***
நீட்: அனிதா படுகொலை !
மோடி-எடப்பாடி இவர்கள்தான் குற்றவாளிகள் !
குற்றவாளிகளை தண்டிக்க தமிழகமே திரண்டெழு !!
– என விருதையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
***
அரியலூர் மாவட்டம் செந்துரை – கொழுமூர் மாணவி அனிதாவின் BJP அ.தி.மு.க-வின் நீட் தேர்வால் நடந்த படுகொலையை கண்டித்து மக்கள் அதிகாரம் கோவைப் பகுதியில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட 02.09.2017 அதிகாலை கோவை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காலை 11.30 மணிக்கு மேற்கண்ட இடத்தில் பெண்கள் உட்பட 22 பேர் மக்கள் அதிகாரம் பேனர்கள் மற்றும் கொடிகளுடன் கண்டன முழக்கமிட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தியின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மக்கள் அதிகாரம்
கோவை
***
மாணவி அனிதா படுகொலை ! மத்திய மோடி அரசும் – மாநில எடப்பாடி அரசும் தான் கொலையாளி !
கண்டன ஆர்ப்பாட்டம்!
மாணவி அனிதா படுகொலையை கண்டித்து திருவாரூரில் 03.09.2017 அன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவாரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களை தெரியப்படுத்தினர்.
இப்படுகொலைக்கு மத்திய மோடி அரசும், தமிழக எடப்பாடி அரசும் தான் காரணம் என்றும், தொடர்ச்சியாக நடக்கும் மோடி அரசின் ஜனநாயக விரோத – தமிழர் விரோதப் போக்கை – கண்டித்தும், NEET தேர்வில் இருந்து முற்றிலுமாக விலக்கு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக இப்போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றும் பேசினர்.
நயவஞ்சகமாக தமிழகத்தில் நுழையும் பா.ஜ.க. கும்பலுக்கு, தமிழக காற்றைக்கூட சுவாசிக்க விடக்கூடாது, நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று பங்கேற்றவர்கள் உறுதி ஏற்றனர்.
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்
————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
அரியலூர் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட்-ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், நீட் தேர்வு எழுதினார். அதில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே அவர் எடுத்திருந்தார்.
மோடி – எடப்பாடி குற்றவாளிகள்
இதனால் அவருடைய மருத்துவ வாய்ப்பு பறிபோய், இறுதியில் தற்போது தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இது தற்கொலையல்ல – படுகொலையே! ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்த்த போதும், நீட் தேர்வை தமிழகத்தின் மீது திணித்துவிட்டன மோடி – எடப்பாடி கும்பல். இவர்கள் தான் அனிதாவைக் கொன்ற குற்றவாளிகள்.
இந்தக் குற்றவாளிகளை உழைக்கும் மக்கள் மத்தியில் அடையாளம் காட்டவும், தமிழகத்தின் உரிமையைப் பறித்து, தற்போது மாணவியின் உயிரையையும் பறித்துள்ள நீட்-ஐ எதிர்த்து ”தமிழகமே திரண்டெழு, மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை உருவாக்குவோம்” என அறைகூவி நாளை செப்-2 ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களே! இளைஞர்களே! தொழிலாளர்களே! ஜனநாயக சக்திகளே! கொதித்தெழுந்து வாருங்கள்!
சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம்: அண்ணாசாலை, பெரியார்சிலை, சிம்ப்சன், சென்னை,
செப்டம்பர் – 2, காலை 11 .30 மணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. 9445112675
——————————————
விருதாச்சலத்தில் இன்று (செப்டெம்பர்-1) மாலை, ”நீட்: மாணவி அனிதா ’படுகொலை’, மோடியும் எடப்பாடியும் தான் குற்றவாளிகள்” என்ற முழகத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.’நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் மோடியும் எடப்பாடியும் தான் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த புமாஇமு தோழர்கள் பங்கேற்றனர்.
————————————————————– உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறாமாண்டை ஒட்டி (1789 – 1989) புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
– வினவு
அந்த விடியலில் நாம் வாழ்ந்திருந்தோம் என்பதே பெருமகிழ்ச்சி. பிரெஞ்சுக் கொடுங்கோல் முடியரசின் அரணாக நின்ற பாஸ்டி சிறைக்கூடம் மக்களால் தகர்த்தெறியப் பட்டதைக் கேட்டவுடன் ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் குதுகலத்தில் துள்ளினான்.
பிரெஞ்சு புரட்சி
படைகளை அனுப்பாமலேயே ஐரோப்பாவை பிரான்ஸ் ஆக்கிரமித்து விட்டது. புரட்சியின் சிந்தனை ஐரோப்பாவென்ன உலகெங்கிலும் தீ போலப் பரவியது. பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களே அதைத் தங்கள் நாட்டின் உள் விவகாரமாகக் கருதவில்லை. புரட்சி மனித குலத்தின் தேவையெனக் கருதினார்கள்.
”உலகம் தன் தலையின் மீது நின்ற காலம் அது” என்றார் ஹெகல். மனிதனது மூளையும் (தலையும்) அதன் சிந்தனையால் வந்தடையப்பட்ட கோட்பாடுகளும் நாங்கள் தான் மனிதனின் எல்லா உறவுகளுக்கும் செயல்களுக்கும் அடிப்படை என்று அறைகூவின. மதம், விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – எதுவாக இருந்தாலும் சரி, அவை ஈவு இர்க்கமின்றி விமரிசிக்கப்பட்டன. அவை ஒவ்வொன்றும் அறிவின் சன்னதியில் தங்கள் யோக்கியதையை நிருபிக்க வேண்டும் இல்லையேல் ஒழிந்து போகவேண்டும். ஆம்! உலகம் உண்மையிலேயே தலை மேல் தான் நின்றது.
வாழ்வதற்குத் தகுதியிழந்த முடியாட்சியும், மத ஆதிக்கமும் அவற்றின் அதிகார பீடங்களிலிருந்து கேலிக் குரல்களின் நடுவே இழுத்து வீசியெறியப்பட்டன. சமுதாயம் தலைகீழாக மாற்றப்பட்டது. உலகம் உண்மையிலேயே தன் தலைமீது தான் நின்றது.
தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்த மனித சமுதாயத்தை பிரான்ஸ் உசுப்பிவிட்டது ”இதோ இதுதான் நிகழ்ச்சிநிரல் முன்னோக்கிச் செல்” என்று ஆணையிட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பிரபுக்களையும் மன்னர்களையும் சக்ரவர்த்திகளையும் தன் முதுகில் சுமந்து சுமந்து கூன் விழுந்து தள்ளடிக் கொண்டிருந்த மனிதனை நிமிர்ந்து நில், நீ சுதந்திர மனிதன் என்ற பிரான்சின் அறைகூவல் நிமிர்த்தியது.
பாரிஸை சேர்ந்தவர்கள் கடுமையான பசியானால் உணவை வாங்க பொருட்களை விற்கின்றனர்.
மாபெரும் பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சி, இரண்டு நூற்றாண்டுகள் கடந்தபின்னும் சுதந்திரத்தையும் விடுதலையையும் நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் தனது கம்பீரமான சிம்மாசனமாக்கிக் கொண்டது.
”மக்கள் இங்கே புல்லைத் தின்று உயிர் வாழ்கிறார்கள் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கும். பிச்சைக்காரர்களுக்கும் மன்னராயிருப்பவரை மாட்சிமை தாங்கிய சக்ரவர்த்தி என்று எப்படி அழைக்க முடியும்?” –
1725 இல் 15ம் லூயி மன்னனின் பிரான்சைப் பற்றி ஒரு கிறித்தவ மதகுரு கொடுத்த நற்சான்றிதழ் தான் இது. அவனது மகன் 16ம் லூயி மன்னனின் ஆட்சியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம்.
“இரு கழுதைகளை அவன் ஓட்டிச்
சென்றான்.
ஒரு கழுதையின் முதுகில் ஒட்ஸ் தானிய
மூட்டை.
இன்னொரு கழுதையின் முதுகிலோ
உப்பு வரி ரசீது கட்டுகள்.”
நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது.
என்று விவசாயிகளின் அவலநிலையைப் பாடினான் ஒரு கவிஞன். பண்ணைகளும், குறுநில மன்னர்களும் கிறித்தவ மடாலயங்களும் நாட்டைப் பங்கு போட்டுக் கொண்டிருந்தன. விவசாயி ஒண்ட வந்தவனைப் போல துண்டு நிலத்தில் உயிரை விட்டுக் கொண்டிருந்தான் காடுகளும் புல்வெளிகளும் மேட்டுக்குடியினரின் பரம்பரைச் சொத்தாக இருந்தது. வன விலங்குகளோ மேட்டுக்குடி இளவல்களின் வேட்டை விளையாட்டுக்காக பாதுகாக்கப்பட்டன. ஆம் கண்ணைப் போல் போற்றி வளர்த்த தனது பயிரை குழி முயல்கள் நாசம் செய்தாலும் அவற்றைக் கொல்லும் விவசாயி குற்றவாளியானான்.
வேட்டையாடுவதற்கு குதிரை மீது பவனி வந்த மன்னர்குலக் கொழுந்துகள் விவசாயிகளின் வயல்களை நாசம் செய்தனர். வேட்டையாடிக் களித்தனர். விவசாயியின் வியர்வையையும் ரத்தத்தையும் குத்தகையாகப் பிழிந்து குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். பூலோகத்தில் வாழ்வதற்கு லூயி வரி வசூலித்தான். பரலோகத்தில் இடம் போடுவதற்கு பாதிரிகள் வரிவசூல் செய்தனர். விவசாயிகள் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். தங்கள் எதிரியைக் கொல்வதற்கோ நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தனர்.
நகரம் ரொட்டி கிடைக்காமல் செத்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள், வழக்கறிஞர்கள், பட்டறை முதலாளிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பட்டறைத் தொழிலாளிகள், உதிரி வேலை செய்வோர், கைவினைஞர்கள் விதிவிலக்கின்றி அனைவரின் வெறுப்பும், ஆத்திரமும் மன்னராட்சியின் மீதும் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினர் மீதும் ஒன்று குவிக்கப்பட்டிருந்தது.
மன்னனின் வரம்பில்லாத அதிகாரத்திற்கு எதிராகவும், மத நிறுவனத்திற்கு எதிராகவும் வால்டேர் எழுப்பிய போர்க்குரல் தனது படையணியில் ஆயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டிருந்தது. தீத்ரோவின் நாத்திகப் பிரச்சாரமும் பொருள் முதல்வாதக் கருத்தும் அறிவுஜீவிகளையும் மதக் கொடுங்கோன்மைக்கு ஆளாகியிருந்த மக்களையும் தன்பால் வெகுவேகமாக ஈர்த்தது.
மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?”
”வன்முறையைப் பயன்படுத்த முடியும் வரையில்தான் கொடுங்கோலன் எசமானனாக இருக்க முடியும். அவன் வெளியே துரத்தப்பட்டால் அவன் (தனக்கெதிராக) வன்முறை பயன்படுத்தப்பட்டது குறித்துப் புகார் செய்ய முடியாது…. வன்முறை மட்டுமே அவனை அதிகாரத்தில் வைத்திருந்தது. வன்முறை மட்டுமே அவனை வீழ்த்துகிறது” என்று ரூசோவின் விரல் செல்ல வேண்டிய பாதையைக் காட்டிக் கொண்டிருந்தது.
1789 – பிரெஞ்சுப் பொருளாதாரம் நிலைகுலைந்து கிடந்தது; தேசம் திவாலாகி விட்டது. உடனடியாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று ஆலோசனை சொன்னார்கள் மந்திரிகள்.
மன்னனை முந்திக்கொண்டு கேட்டாள் மகாராணி ”தேசம் தானே திவாலானது நமக்கென்ன?” நாடு தழுவிய பஞ்சத்தால் நொடித்துப் போயிருந்த விவசாயிகள் மீது மேலும் வரிச்சுமையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மன்னனின் கேளிக்கைக்காகவும், மகாராணியின் பீதாம்பரத்திற்காகவும், இளவல்களின் மதுவிற்காகவும், பாதிரிகளின் விருந்துக்காகவும் மக்கள் மேலும் சில துளி ரத்தத்தைத் தியாகம் செய்யுமாறு கோரப்பட்டனர். மக்களும் ஒப்புக் கொண்டனர் தியாகம் செய்வதற்கு. தங்கள் உதிரத்தை அல்ல; மன்னராட்சியை!
மன்னர்களாலும், மத குருமார்களாலும் பன்னூறாண்டு காலமாக கறைப்படுத்தப் பட்ட தங்கள் இனிய தேசத்தை, அந்த மேட்டுக்குடிப் பன்றிகளின் ரத்தத்தைக் கொண்டே கழுவினார்கள் பிரெஞ்சு மக்கள்.
1789 முதல் 1794ஆம் ஆண்டுவரையிலான காலம் முழுவதும் துப்பாக்கி வேட்டுச் சத்தமே மக்களின் இசையாக இருந்தது.
பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயி
ஆம்! புரட்சி வெடித்தது – திடீரென்று அல்ல; எதிர்பாராமல் அல்ல. வால்டேரும். தீத்ரோவும், ரூசோவும் தோற்றுவித்த அறிவொளி இயக்கம் திரியில் வைத்த தீயாகப் பிடித்துப் புகைந்து, எரிந்து பின்னர்தான் வெடித்தது. ’பாஸ்டி’ சிறை தகர்க்கப்பட்ட போதுதான் அந்த வெடிச்சத்தத்ததை உலகம் கேட்டது.
”சகோதரர்களே அணிதிரளுங்கள் சுதந்திரம் உங்களை அழைக்கிறது” என்று முழங்கினார்கள் புரட்சியாளர்கள். மன்னனின் வாளையும், மதகுருவின் சிலுவையையும் நெற்றியில் கட்டிக்கொண்டிருந்த தேசம் இப்போது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற தங்களின் லட்சியம் பொறித்த பதாகையுடன் முன்னேறிச் சென்றது.
பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் மன்னனையும், மதத்தையும், சட்டத்தையும், அரசையும், பிரபுக்கள் சபையையும் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரெஞ்சு மக்களோ தங்கள் அரசாங்கத்தை எதிர்த்தார்கள். பாதிரிகளை இகழ்ந்தார்கள். பிரபுக் குலத்தை வெறுத்தார்கள் சட்டங்களுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி, இலக்கண சுத்தமாக, துப்புரவாக நிலப்பிரபுத்துவத்தை துடைத்தெறிந்தது.
அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய அனைத்துத் துறைகளிலும் அனைத்து விஷயங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளாய் விவசாயிகளின் பக்தி நிறைந்த உதடுகளால் முத்தமிடப்பட்ட சிலுவை. காலால் மிதிப்பதற்கும் தகுதியற்ற மலத்தைப் போல வெறுத்தொதுக்கப்பட்டதென்றால் மற்றவற்றைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
”மக்களை மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்வானேன்? அவர்கள் அங்கிருந்து தங்கள் சாம்ராச்சியத்தைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களைக் கீழே இறக்கி அவர்களுக்கு உரிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் உட்காருவார்களா?” என்று மன்னராட்சிக்கு வக்காலத்து வாங்கிய அறிஞன் ஒருவன் எச்சரித்தான்.
ஆனால், அது காலங்கடந்த எச்சரிக்கையாகிப் போனது.
பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர்.
18ம் நூற்றாண்டின் அறிஞர்களால் அறிவொளியூட்டப்பட்ட மக்கள்திரள் சிகரத்தின் உச்சியிலிருந்து தங்கள் சாம்ராச்சியத்தை பார்த்ததுடன் நிற்கவில்லை. தங்களைக் கீழே இறக்கிவிடுவதற்குள் அவர்கள் சிகரத்தின் உச்சியில் கோலோச்சிக் கொண்டிருந்த பதினாறாம் லூயியை – மன்னராட்சியை – கீழே தள்ளினர். சிவப்பு. வெள்ளை, நீல நிறத்தில் தங்கள் கொடியை அங்கே பறக்கவிட்டனர். எல்லா மனிதர்களும் சம உரிமையுடன் தான் பிறக்கிறார்கள் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்துக்களைப் பேசவும், எழுதவும், அச்சிடவும் – அவை கேடாகப் பயன்படுத்தப் படாதவரை – உரிமை உண்டு என்று அறிவித்தனர்.
அடக்கி வைக்கப்பட்டிருந்த கருத்துச் சுதந்திரம் பீறிட்டுக் கிளம்பியது. முடியாட்சியை எதிர்த்த போராட்டத்தில் உழைப்பாளி மக்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டு மக்களுக்காகவே தன் உயிரையும் கொடுத்தான் மாரட் என்ற இளம் பத்திரிகை யாளன். ”நான் ஒரு குடியரசுவாதி, மன்னர்களை எதிர்த்து எழுதுபவன். நான் ஒரு குடியரசுவாதி என் தாயின் கருப்பையிலிருக்கும்போதே நான் ஒரு குடியரசுவாதி” என்று முழங்கினான் லாவிகோம்டே என்ற பத்திரிக்கையாளன். மன்னன் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தூக்கியெறியப்படாத போதே தன் உயிரைத் தூசாக மதித்து ”மன்னர்களின் கிரிமினல் குற்றங்கள் – க்ளோவி முதல் பதினாறாம் லூயி வரை” என்று கட்டுரை எழுதினான். ”பத்திரிகையாளனை தண்டிப்பதற்கு எங்கே அரசுக்கு அதிகாரம் இருக்கிறதோ, அங்கே கொடும் குற்றமிழைத்த அதிகாரிகளைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை எழுத முடியாது” என்று முழங்கினான் ரோபஸ்பியே என்ற புரட்சியாளன். ஆனால் எதிரிகள் விஷயத்தில் புரட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மன்னராட்சிக்கு ஆதரவான துதிபாடிகள் வாய் திறந்தால் தூக்கிலேற்றப்படுவர் என்று எச்சரித்தனர்.
அச்சத்திலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்தப்பட்டிருந்த மக்களை நோக்கி அறைகூவினான் ஒரு எழுத்தாளன். ”மாபெரும் மனிதர்கள் எனப்படுவோர் அப்படித் தோன்றக் காரணம் என்ன தெரியுமா? நாம் மண்டியிட்டிருப்பதுதான். எழுந்து நில்லுங்கள்” என்று ஆணையிட்டான். விவசாயிகள் எழுந்து நின்றனர்.
இளவரசர்கள், பிரபுக்கள். மத குருமார்களின் மாளிகைகளில் ஆயுதம் தரித்த விவசாயிகள் புகுந்தனர். தங்களுடைய பாஸ்டி சிறைகளை அவர்கள் தகர்த்தெறிந்தனர். ”பிரபுக்குலத்தை அடக்குவது நமது நோக்கமல்ல. அதை ஒழிப்பதுதான் என்று பிரகடனம் செய்தனர். காடுகளையும். குளங்களையும் ஆறுகளையும் பண்ணைகளின் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள். மனிதனையும் முயலையும் ஒன்றாகக் கருதும் அறிவுக்குப் புறம்பான மனித சமுதாயத்துக்கே இழுக்கான அனைத்து சட்டங்களையும் கொளுத்துங்கள்” என்ற குரல் எழுந்தது. ”பிரபுக்குலத்தோரின் பட்டாக்கள் அனைத்தும் மூன்றூ மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவை நகர கவுன்சில் மற்றும் மக்களின் முன்னிலையில் கொளுத்தப்பட வேண்டும்” என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களுக்கு நட்டஈடு கிடையாது என்பது மட்டுமல்ல. மீண்டும் இவற்றை விலைகொடுத்து வாங்கும் உரிமையும் பிரபுக்களுக்கும் மதபீடங்களுக்கும் அடையாது என்று அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் புரட்சிக்கு இலக்கணம் படைக்கப்பட்டது.
சொத்துக்களை இழந்த கத்தோலிக்க மதபிடம் பொறுமிக் கொண்டிருந்தது. போப் புரட்சியைக் கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் கண்டனக் குரல் எழுப்புவதற்காகப் பாதிரிகள் வாய் திறப்பதற்குள் அடுத்த அடி விழுந்தது.
பிராட்டஸ்டென்டுகள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்கள் மீது கத்தோலிக்க மடாலயம் செலுத்திவந்த ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. கிறித்தவர்களிடம் ஊட்டப்பட்டிருந்த யூத எதிர்ப்பு வெறியை எதிர்த்து கிரெகோ என்பவர் பேசினார்: “உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் விட்டுச்செல்லும் சொத்தில் யூத எதிர்ப்பு வெறியும் இடம்பெறப் போகிறதா? யூதர்களின் ஊழல்களையும், குற்றங்களையும் பற்றி பேசுபவர்களே கேளுங்கள்! அவர்களது ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் தோற்றுவாய் நீங்கள்தான் – கிறித்தவர்களாகிய நீங்கள் தான் உங்கள் பாவத்துக்கும், உங்கள் முப்பாட்டன்களின் பாவங்களுக்கும் கழுவாய் தேடுங்கள்! அவர்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றுவதற்கும் நீங்களே முயல்வதன் மூலம் அதைச் செய்யுங்கள்”
உள்நாட்டின் சமூக நிலை பற்றி மட்டும் பேசுவதுடன் புரட்சிக்காரர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை. மனித சமூகத்தின் சுதந்திரத்துக்கு எதிராக எவ்வித ஆக்கிரமிப்புப் போரிலும் ஈடுபடமாட்டோம் என்று அறிவித்தார்கள்.
ரொகெட் டி லிஸ்லி
”குடியரசின் கைக்கூலிகளிடம் இருந்து புரட்சியைப் பாதுகாக்க இளைஞர்கள் போர் முனைக்குச் செல்லுங்கள். மணமான ஆண்கள் ஆயுதங்களைத் தயார் செய்யுங்கள். சிப்பாய்களுக்கு உணவு கொண்டு செல்லுங்கள். பெண்கள் பாசறைகளை அமைக்கட்டும் மருத்துவமனைகளில் சேவை செய்யட்டும். சிறுவர்கள் காயங்களுக்குக் கட்டுப் போடும் துணிகளை சேகரிக்கட்டும். முதியவர்கள் வீதிமுனைகளில் நின்று சிப்பாய்களை உற்சாகப்படுத்துங்கள் சக்ரவர்த்திகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள். நாட்டின் ஒற்றுமைக்காகப் பிரச்சாரம் செய்யுங்கள்” என்று அறைகூவல் விட்டது புரட்சி அரசு.
விஞ்ஞானம், கலை, கல்வி என்று பண்பாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதுமலர்கள் பூத்தன. புரட்சிப் படையணியின் கீதமாக இறவாப் புகழ்பெற்ற ’மார்செயில்ஸ்’ கீதத்தை உருவாக்கியதன் மூலம் கோஸ்ஸெக் புரட்சியின் இசையமைப்பாளன் ஆனான். சுதந்திரத்திற்கு சமத்துவத்திற்கு, மனித சமூகத்திற்கு தாய் நாட்டிற்கு இயற்கைக்கு என்று அவனது இதயத்துடிப்பையே இசையாக மாற்றி அர்ப்பணித்தான். விஞ்ஞானமோ முன்னெப்போதும் கண்டிராத அளவு முன்னோக்கிப் பாய்ந்து சென்றது. பால்சாக், ஹியூகோ போன்ற மாபெரும் எழுத்தாளர்களை பிரான்ஸ் கருத்தரித்தது.
பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம் கூட்டும் உரிமை, உயிர்வாழும் உரிமை, ஆயுதம் ஏந்தும் உரிமை அனைத்தையும் வென்றெடுத்த பிரான்ஸ் அன்றைய மனித நாகரிகத்தின் முன்வரிசையில் எக்காளமிட்டு சென்று கொண்டிருந்தது. நூற்றாண்டுகளை நொடிகளில் கடந்து சென்று கொண்டிருந்தது புரட்சி. அகன்ற விழிகளுடனும், நின்று போன இதயத் துடிப்புடனும் பிரான்சைப் பார்த்துக் கொண்டிருந்தது உலகம். ஆம்! பிரான்சில் தோன்றிய புரட்சிப் பூகம்பம் மனித சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி ”வா… என்பின்னே” என்று ஆணையிட்டது.
பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சியை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியது என்பதும் அது முதலாளித்துவ ஜனநாயகம் மட்டுமே என்ற விஷயமும் நாம் அறிந்தது தான். ஆனால் தொழில்துறை முதலாளிகளாலேயே தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட புரட்சி என்றோ, புரட்சியின் தத்துவ ஆசிரியர்களான ருஸோ, தித்ரோ பாபெஃப் போன்றோர் முதலாளிவர்க்கத்தின் உணர்வு பூர்வமான சேவகர்கள் என்றோ புரிந்து கொள்வது தவறு.
1794 ல் ஆஸ்திரிய, டச்சு மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒன்று சேர்ந்து பிரெஞ்ச் புரட்சிகர படையினை தோற்கடித்தது.
மன்னராட்சியும், மத நிறுவனங்களும் காலத்தின் தேவையை நிறைவு செய்ய வில்லை; அவை அறிவுக்கு ஒவ்வாதவை; இனி இவையெல்லாம் ஒழிக்கப்பட்டு அவற்றினிடத்தில் நிரந்தரமான உண்மையும். இயற்கையின் அடிப்படையிலான சமத்துவமும் இழக்கவோ துறக்கவோ இயலாத மனித உரிமைகளும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அவர்களது லட்சியமாக இருந்தது. அவர்கள் முதலாளி வர்க்கத்திற்காகப் புரட்சி செய்யவில்லை. மனிதகுலம் முழுமைக்குமாகச் செய்வதாகத்தான் அறிவித்தார்கள் அவ்வாறுதான் நம்பினார்கள். அவர்கள் மனிதகுலத்தின் விடுதலை என்று பேசினார்களே ஒழிய பாட்டாளிவர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிப் பேசவில்லை. காரணம் அவர்களால் பேச இயலாது வரலாறு அவர்களது சிந்தனைக்கு விதித்திருந்த வரம்பு அது. ஸ்பார்ட்டகஸ் சோசலிசத்திற்காகப் போராடியிருக்க முடியாது!
தீத்ரோவிடம் இயங்கியலின் துவக்க வடிவம் தென்பட்டதையும், பாபெஃப் இன் கற்பனா சோசலிசத்தையும், ரூசோ புரட்சியில் வன்முறையின் பங்கு குறித்துக் குறிப்பிட்டதையும் எங்கெல்ஸ் நினைவு கூறுகிறார். இவர்கள் மட்டுமல்ல பிரெஞ்சுப் புரட்சியின் மைந்தர்களான போராளிகள் புரட்சியின் ஊடாக எழுப்பிய முழக்கங்கள் மனிதகுல விடுதலையைக் கோரும் அவர்களது தணிக்கவொண்ணாத தாகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. புரட்சியின் உக்கிரமானதொரு கட்டத்தில் அவர்கள் அறிவித்தார்கள். ”எல்லா அரசுகளுக்கும் நாங்கள் எதிரிகள், எல்லா மக்களுக்கும் நாங்கள் நண்பர்கள்” என்று. “முடியாட்சியின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுங்கள் நாங்கள் உதவுகிறோம்” என்று பகிரங்கமாகப் பிற நாட்டு மக்களுக்குப் பிரகடனம் செய்தார்கள். 1793 இல் முடியரசுவாதிகளின் கலகத்தை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்கள். அவர்களுக்கு ஜனநாயகம் கிடையாது என்பதை பகிரங்கமாக அறிவித்தார்கள். 1794க்குப் பின் எதிர்ப்புரட்சி சக்திகளின் கை மேலோங்கிய போது உவகையுடன் புரட்சியின் நலனுக்காக – மனிதகுலத்தின் நலனுக்காக தம் உயிரை ஈந்தார்கள்.
ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் தோன்ற வேண்டியிருந்தது.
அறிவின் ஆட்சி குறித்த தனது கேட்பாடு மக்களுக்கெதிரான பயங்கர ஆட்சியாக மாறும் என்று ரூசோ கற்பனையும் செய்திருக்க முடியாது. ஆனால் நடந்தது அதுதான். தனது ஆற்றலில் நம்பிக்கை இழந்த முதலாளிவர்க்கம் நெப்போலியனின் எத்தேச்சாதிகாரத்திடம் சரணடைந்தது. சுதந்திரம், சிறு விவசாயிகளும் சிறு முதலாளிகளும் தங்கள் சொத்தை விற்பதற்கான சுதந்திரமாக மாறியது. எங்கெல்லின் சொற்களில் சொல்வதானால் வாளுக்குப் பதிலாகத் தங்கம் வந்துவிட்டது, முதலிரவு உரிமை நிலப்பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவப்பட்டறை அதிபர்களுக்கு மாற்றப்பட்டது.”
ஆனால் வரலாற்றின் சக்கரம் நிற்குமா என்ன? முதலாளி வர்க்கம் லூயி மன்னனைப் போலவே அப்படித்தான் நினைத்து கொண்டிருந்தது. அதன் பிரமையை உடைப்பதற்குக் கம்யூனார்டுகள் (பாரிஸ் கம்யூனின் தொழிலாளி வாக்கப் போராளிகள்) தோன்ற வேண்டியிருந்தது. 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சைத் தனது அச்சாகக் கொண்டுதான் உலகம் சுழன்றது என்பதை யாரால் மறுக்க முடியும்?
எனில் 20ம் நூற்றாண்டு? சமீபத்தில் தமிழகத்திற்குச் சுற்றுப்பயணம் செய்யவந்த ஒரு பிரெஞ்சுப் பேராசியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பெருமைமிக்க புரட்சிகரப் பாரம்பரியத்தைப் பெற்ற பிரான்ஸில் ஒரு பாசிஸ்டு கட்சி சமீபத்திய தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் 14 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்று கவலையுடன் குறிப்பிட்டார். சிறிதுநேர சிந்தனைக்குப்பின் இல்லை. நாங்கள் ஜனநாயகப் பாரம்பரியமிக்கவர்கள் ஒருபோதும் அங்கே பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வரஇயலாது. அனுமதிக்கவும் மாட்டோம் என்று பதற்றத்துடன் கூறினார். ஆம் ரூசோவின் எழுத்துக்களும் ஜாகோயின் புரட்சிக்காரர்களின் முழக்கங்களும் காற்றில் கரைந்துவிடக் கூடியவையா என்ன?
அன்று புரட்சியின் போது ஒரு தத்துவார்த்த பாத்திரம் ஆற்றிய ரூசோ, இன்றைக்கு மற்ற நாடுகளின் சோசலிசப் புரட்சியில் ஒரு கிளர்ச்சிப் பாத்திரம் ஆற்றுகிறார் என்றூ எங்கெல்ஸ் குறிப்பிட்டார். பிரான்சின் புரட்சியாளர்கள் இந்தியப் புரட்சிக்கும் உத்வேகமூட்டுவார்கள். மார்செயில்ஸ் கீதம் இங்கேயும் ஒலிக்கும்.
– சூரியன், புதிய கலாச்சாரம் 1989
புரட்சியின் வரலாறு:
பிரஞ்சுப் புரட்சியின் கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிறைவேறி விட வில்லை முடியாட்சியும் சட்டெனத் துக்கியெறியப் பட்டு விடவில்லை. தொடர்ச்சியான போராட்டங்கள், இழுபறி நிலைமைகள், துரோகம் ஆகியவற்றைக் கடந்துதான் புரட்சி வெற்றி பெற்றது. அந்நிகழ்ச்சிகளின் தொகுப்பைக் கீழே தருகிறோம்.
பாஸ்டில் தகர்ந்தது!
பாஸ்டில் சிறை தகர்ப்பு
1789 மே 5ம் தேதி பிரான்சின் தேசிய அசெம்ளியைக் கட்டுகிறான் மன்னன் தேசிய அசம்பிளியில் மூன்று பிரிவினர் இருந்தனர். பிரபுக்கள், மத குருமார்கள், மக்கள். இதில் அதிக வரி செலுத்தியவர்கள் மக்கள்தான். ஆனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஒட்டு மட்டுமே இருந்ததால் மக்கள் தரப்பிலிருந்து சொல்லப்படும் கருத்து எப்போதுமே எடுபடுவதில்லை. எனவே ’அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்று’ என கோரிக்கையை முன்வைத்தனர். மன்னன் மறுத்தான். அவையை இழுத்துப் பூட்டினான். அருகிலிருந்த டென்னிஸ் அரங்கத்தில் கூடிய மக்கள் பிரதிநிதிகள் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல் இங்கிருந்து கலைவதில்லை என்று உறுதியேற்றனர். சில பிரபுக்களும் மத குருமார்களும் கூட அவர்களுடன் சேர்ந்தனர்.
ஜூலை 14 பாரிஸ் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு சென்று பாஸ்டி (Bastile) சிறையைத் தகர்க்கின்றனர். செய்தி கேள்விப்பட்ட மன்னன் ”எதற்காக கலாட்டா செய்கிறார்கள்?” என்று அமைச்சர்களைக் கேட்டானாம். ”கலாட்ட அல்ல மன்னர் பெருமானே இது புரட்சி” என்று பதில் சொன்னாராம் அமைச்சர். சிறை தகர்ப்பைத் தொடர்ந்து நடுத்தரவாக்கத்தினர் அடங்கிய புரட்சிக் கமிட்டி பாரிஸ் நகரத்தின் நிர்வாகத்தைக் கையிலெடுத்தது. இதைப் பின்பற்றி நாடு முழுவதும் புரட்சி அரசாங்கங்கள் தோன்றின விவசாயிகள் பிரபுக்களின் மாளிகைகளைக் சூறையாடினர் கடன் பத்திரங்களுக்கும். பிரபுக்களின் நிலப் பட்டாக்களுக்கும் தீ வைத்தனர்.
பிரபுக்கள் ஒட்டம்! குடியரசு மலர்கிறது!
பெண்களின் அக்டோபர் அணிவகுப்பு
ஆகஸ்ட் 4: விவசாயிகளின் எழுச்சியில் பீதியுற்ற பல பிரபுக்கள் நாட்டைவிட்டே ஓடுகிறார்கள் அசெம்பிளி (மக்கள்) கூடுகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட பிரபுக்களில் சிலர் தாங்களே முன்வந்து தங்கள் பரம்பரை சலுகைகளை தியாகம் செய்வதாக அறிவிக்கிறார்கள். பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. டென்னிஸ் அரங்கத்தில் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் பொருட்டு புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கத் தொடங்குகி அசெம்பிளி.
அக்டோபர் 5: கடும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஆத்திரமுற்ற மக்கள் கூட்டம் (பெரும்பாலும் பெண்கள்) மன்னனின் வெர்சேய் அரண்மனையை முற்றுகையிடுகிறது. அரசனையும், அரசியையும் பிணையக் கைதிகளாகப் பிடித்து பாரிசுக்குக் கொண்டு வருகிறது.
கிறித்தவ மடங்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப் படுகின்றன. மன்னன் நாட்டைவிட்டுத் தப்பியோட முயன்று எல்லையில் பிடிபடுகிறான். இருந்தும் அவனை மன்னனாக அங்கீகரிக்கிறது அசெம்பிளி.
1791 அக் 1: முதல் குடியரசு அறிவிக்கப்படுகிறது. மனிதனின் அடிப்படை உரிமைகள் குறித்த பிரகடனம் வெளியிடப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்யும் பொறுப்பு தேசிய சபைக்குத் தரப்படுகிறது. மன்னனை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கோஷ்டி உருவாகின்றது. பெரும் மக்கள் கூட்டம் மன்னனின் அரண்மனையில் புகுந்து அவனது காவலர்களைக் கொல்கிறது. மன்னன் சிறையிலிடப்படுகிறான். எல்லையில் போர் தொடங்குகிறது.
மன்னனுக்கு மரணதண்டனை!
பதினாறாம் லூயி கில்லட்டில் ஏற்றப்படுகிறார்
1792 செப் 21: பெயரளவில் மன்னனை வைத்துக் கொள்வதும் இல்லையென அறிவிக்கப்படுகிறது. பாதிரிகள் அனைவரும் குடியரசின் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போப் புரட்சிக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிரான்சில் இருந்த வாட்டிகனின் (போப்பின்) சொத்துக்கள் பறிகுதல் செய்யப்படுகின்றன.
இதற்கிடையே குடியரசின் அமைச்சரவை கவிழ்கிறது. புரட்சிக் கமிட்டிகள் அதிகாரத்தை மேற்கொள்கின்றன. ஓடிப்போன பிரபுக்கள் அண்டை நாடுகளின் உதவியுடன் புரட்சியை ஒழிக்க முயல்கின்றனர். லூயி மன்னன் விசாரனைக்குட் படுத்தப்படுகிறான். அந்நியருடன் கூட்டு சேர்ந்து பிரஞ்சு மக்களுக்கு எதிராக சதி செய்ததற்காக அவனது தலை (கில்லட்டினில்) துண்டிக்கப்படுகிறது. அவனது மனைவியான அரசி மேரி அண்டாய்னேட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை துண்டிக்கப்படுகிறது. குடியரசுக்கு எதிராகவும், மன்னனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட ஆயிரக்கணக்கான கைக்கூலிகள் கில்லெட்டினுக்குப் பலியாகின்றனர்.
ஜாகோபின் கழகம் 1789இல் துவக்கப்பட்ட புரட்சிக்குழு. இக்கழகத்தைச் சேர்தவர்கள் தீவிர ஜனநாயகவாதிகள். 1791இல் மன்னன் தப்பியோட முயன்றதிலிருந்து இவர்களின் அரசியல் செல்வாக்கு பெறத்தொடங்கியது. 1792இல் அமைச்சரவை கவிழ்ந்தவுடன் இவர்கள் தான் உறுதியாக நின்று முடியரசுவாதிகளின் கலகத்தையும், அயல் நாட்டு ஆக்கிரமிப்பையும் ஒருங்கே முறியடித்தார்கள். பிரெஞ்சுப் புரட்சியின் மாபெரும் தலைவர்களான ரொபாஸ்பியே, மாரட், டாண்டன் ஆகியோர் இக்கழகத்தைச் சேர்ந்தவர்களே!
பிரஞ்சு புரட்சியின் முன்னோடிகள்:
வால்டேர்
ரூஸோ
தீத்ரோ
டான்டன்
மாரட்
ரோபஸ்பியே
வால்டேர் (1694-1778): பிரெஞ்சு எழுத்தாளர் நாடகாசிரியர். முடியாட்சியை
எதிர்த்து எழுதியதற்காகச் சிறைசென்றவர்; நாடு கடத்தப்பட்டவர். மதம் நிறுவனமாக இருப்பதையும், கத்தோலிக்க மதக் கொடுங்கோன்மையையும் சாகும் வரை எதிர்த்தார். எனவே இவரது உடலைப் புதைக்கக்கூட இடுகாட்டில் இடம்தர முடியாதென்று கத்தோலிக்க மடாலயம் மறுத்துவிட்டது.
ரூசோ (1712-1778): பிரெஞ்சு தத்துவவியலாளர். அறிவொளி இயக்கவாதி. ”ஆரம்பத்தில் சமமாக இருந்த மக்கள் நாகரீகம் வளர்ந்தபின் ஏற்றத் தாழ்வுகளுக்கு ஆளாயினர். இந்த ஏற்றத்தாழ்வு விவேகமான அரசு ஒன்றின் மூலம் நீக்கப்பட வேண்டும்” என்பது இவரது தத்துவம்.
தீத்ரோ (1713 – 84): பிரெஞ்சு பொருள்முதல்வாத தத்துவவியலாளர், எழுத்தாளர்.
டான்டன் (Danton): 1787இல் இவர் மன்னரது ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர். 1790 இல் மாரட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜாகோயின் கழகத்தில் இணைந்தார். புரட்சியின் சிறந்த ராஜதந்திரி எனப் போற்றப்படுபவர்.
ரோபஸ்பியே (Robespierre): தனது 31 வயதிலேயே அசெம்பிளி உறுப்பினரான இவர் ரூஸோ’வின் தத்துவத்தைப் பின்பற்றுபவர். ஜாகோபின் கழக முன்னோடி.
மாரட் (Marat): மனிதனும் அடிமைச் சங்கிலியும் எனும் நூலை எழுதியவர். பாரிஸ் புரட்சிக் கமிட்டி உறுப்பினர். மன்னனின் தலையைச் சிவவேண்டும் என முதல் குரல் கொடுத்தவர். முடியாட்சியின் கைக்கூலிப் பெண் ஒருத்தியால் குளியலறையில் கொல்லப்பட்டார். மக்களுக்காக மடிந்த தியாகி என்பதால் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர் பெயரைச் சூட்டினர். ஒவியம், நாடகம், கதை என்று பல வடிவங்களில் மாரட்டின் புகழ் பிரான்சில் நிலை பெற்றுவிட்டது.
__________________________________
இந்த வரலாற்றுக் கட்டுரையை விரும்புகிறீர்களா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
ரோஹிங்கியா: உலகம் அறிந்திராத இனப்படுகொலை – ஆவணப்படம்
மியான்மரில் தங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறையில் இருந்து தப்புவதற்காக வங்கதேசத்தின் எல்லையை கடக்க முயன்ற ரோஹிங்க்யா மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மியான்மர் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. தாக்குதல் குறித்த காணொளிகளை ஆய்வு செய்த பின்னர் அதை வெளியிட இருப்பதாக ஐரோப்பிய ரோஹிங்கியா சங்கம் (European Rohingya Council) அறிவித்துள்ளது.
முன்னதாக ஆகஸ்டு, 27 அன்று ரோஹிங்கியா ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 12 மியான்மர் பாதுகாப்புப் படையினர் பலியானார்கள். இராணுவத்தின் பதில் தாக்குதலில் 130 ரோஹிங்கியா முசுலீம்கள் கொல்லப்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்றாலும் அனைவரும் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்களே என்று மியான்மர் நட்டு ஆலோசகரான ஆங் சான் சூ கீ கூறியுள்ளார். இவர்தான் மேற்குலகால் சமாதானப் புறவாக பீற்றப்பட்டு நோபல் பரிசு வழங்கப் பட்டவர்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அவர்கள் குடியேறியதாக கூறும் மியான்மர் அரசு அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் மறுக்கிறது. ஆனால் அவர்கள் பூர்வகுடிகளா அகதிகளா என்பதையும் தாண்டி உலகின் மிகவும் கொடுமைப்படுத்தபடும் சிறுபான்மை இனமாக ரோஹிங்கியா முமசுலீம்கள் இன்று அறியப்படுகின்றனர்.
பர்மா என்று முன்பு அறியப்பட்ட மியான்மர் சற்றேறக்குறைய 5.1 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு வகிக்கும் பர்மா இனக்குழுதான் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் அவர்களைத் தவிர 135 -க்கும் அதிகமான இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் தங்களது சொந்த கலாச்சாரத்துடன் அந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.
மியான்மர் அரசின் நடவடிக்கைகளால் நிலங்களை இழந்துள்ள அவர்களில் பலர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒரு நீண்ட கால முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்.
மியான்மரை ஆளும் பெரும்பான்மை பர்மிய இனத்திற்கும் மியான்மரின் சிறும்பான்மை இனங்களுக்கும் இடையிலான மோதல்களானது உலகின் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகால மோதல்களுள் ஒன்றாகும்.
அவர்களில் ஒரு இனம் தான் ரோஹிங்கியா முசுலீம்கள். அவர்கள் மியான்மரின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதனாலே அவர்கள் எல்லாவற்றிலும் மிக மோசமான பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுகின்றனர். எண்ணிக்கையில் தோராயமாக பத்து அல்லது இருபது இலட்சத்திற்குள் இருக்கும் ரோஹிங்கியா இனத்தவர் நாட்டின் வடக்கில் ரக்கினே மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
இந்த ஆவணப்படத்தில், ரோஹிங்கிய மக்களைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையை ஆய்வு செய்ய அல்-ஜசீராவின் அரபு நிருபர் சலாம் ஹிந்தவி மியான்மருக்கு செல்கிறார்.
ஆங் சான் சூ கீ,
மியான்மர் பலப்பத்தாண்டுகளாக இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளியாட்களை மியான்மர் அரசு எளிதில் அனுமதிக்காததால் நாட்டில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளை அணுகுவதற்கு ஹிந்தவிக்கு பெரும் சிக்கல்கள் உள்ளன.
“மக்கள் வடக்கு மவுங்டாவிற்கு (Maungdaw) [பெரும்பான்மை ரோஹிங்ய மக்கள் வாழும் நகரம்] செல்வதை இராணுவமும் அரசாங்கமும் தடுக்கின்றன. ஏனெனில் மறைப்பதற்கு பயங்கரமான ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்” என்று கூறும் மியான்மரைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் முன்னாள் இயக்குனரான டேவிட் மேத்திசன் தற்போது ஒரு சுயாதீன ஆய்வாளராகவும் பார்வையாளராகவும் இருக்கிறார்.
“செயற்கைக்கோள் படங்களும் அரசாங்கத்தின் சொந்த ஒப்புதல்களும் அங்கிருந்து வரும் நம்பகமான அறிக்கைகளும் அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதைக் கூறுகின்றன. பொதுமக்களுக்கு எதிரான உரிமை மீறல்களின் அளவை மூடி மறைக்க அவர்கள் விரும்புகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.
ரக்கினே மாநிலத் தலைநகரான சிட்வேவில் 2012 -ம் ஆண்டு ஏற்பட்ட வன்முறை அலையில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் முகாம்களுக்கு செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
“ரக்கினே மக்களால் எங்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன” என்கிறார் ரோஹிங்கிய அகதிகளில் ஒருவரான சாண்டர் வின். “ஒரு நண்பரின் வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம், பின்னர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டோம். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக நான் இங்கு இருக்கிறேன்” என்றார்.
“எங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது. எங்கள் வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. குளிர்காலத்தில் நாங்கள் தரையில் தூங்குகிறோம்… நோய்கள் வந்து எங்கள் குழந்தைகள் சாகின்றன.” என்று முகாம் மருத்துவர் என்றழைக்கப்படும் முஹம்மது யாசின் கூறுகிறார்.
அவர்கள் நடமாடுவதையும், திருமணம் செய்வதையும், கல்வியறிவு மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவதையும் அரசாங்கம் தடுக்கிறது. ஹிந்துவி சந்தித்த அகதிகள் பல ஆண்டுகளாக அந்த முகாமில் இருப்பது போல் தெரிகிறது. மேலும் அந்த குழந்தைகள் வேறு எங்கும் வசித்ததில்லை போலவும் தோன்றுகின்றனர்.
ரோஹிங்கிய மக்களுடைய பிரச்சினைகளின் மையமானது மியான்மரின் குடியுரிமை சட்டங்களில் இருக்கிறது. அது முழுமையான தேசியத்தை அவர்களுக்கு மறுப்பதன் மூலம் அவர்களின் உரிமைகளையும் சேர்த்தே மறுக்கிறது. இது அவர்களுக்கெதிரான பரந்துபட்ட அதிகாரப்பூர்வ மற்றும் வெளிப்படையான பாரபட்சத்தைப் பிரதிபலிக்கிறது.
“ஒரு பௌத்தவாதியாக அவர்களுக்காக நான் வருந்துகிறேன்” என்கிறார் பௌத்த துறவியான யு பா பர் மவுன்ட் கா. “ஆனால் மியான்மரில் வாழ்கின்ற இந்த முஸ்லிம்களின் மனித உரிமைகளை மட்டும் நாம் பார்க்க முடியாது. அவர்கள் எங்களது குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடிமக்களாக வாழத் தகுதியற்றவர்கள்… அவர்களை நாங்கள் வெளியேற்றினால் மியான்மரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். உலகின் 57 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. எனவே அந்த நாடுகளின் தலைவர்கள் இந்த மக்களை தங்களது நாடுகளில் ஏற்றுக்கொண்டால் எங்களது நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இருக்காது. இதை நாம் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.” என்று மேலும் அவர் கூறுகிறார்.
இந்த பாகுபாடு, பதட்டத்தை உருவாக்கியதுடன் 2016 -ம் ஆண்டு அக்டோபரில் பங்களாதேசுடனான எல்லையில் நடத்தப்பட்ட பல்வேறுத் தாக்குதல்களில் குறைந்தது 9 மியான்மர் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் “பயங்கரவாதிகளாக” அடையாளம் காணப்பட்டனர். அதே நேரத்தில் அவர்கள் ஒரு ஆயுதமேந்திய இசுலாமியக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்பட்டது.
அதன் எதிர்வினையாக வன்முறை உடனடியாக ஏற்பட்டது. மவுங்க்டாவில் இராணுவம் முற்றுகையைத் தொடங்கியது. பெருந்திரளான மக்கள் படுகொலைகள், சித்திரவதை, பாலியல் வன்முறைகளைப் பற்றிய அறிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய மக்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் தேடினார்கள்.
இந்த அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அதன் பின்னரும் கூட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. ரோஹிங்கிய மக்களை ஒட்டுமொத்தமாக இனவழிப்பு செய்வதுதான் மியான்மரின் தந்திரமாக இருக்கலாம் என்ற கருத்திற்கும் அது இட்டுச்சென்றது. ஒரு உண்மையறியும் குழுவொன்றை அனுப்பும் திட்டத்தை மியான்மருக்கு அது முன்வைத்தது. ஆனால் ஐ.நா ஆய்வில் பங்கு பெரும் அதிகாரிகள் நுழைவதற்கு அனுமதி கிடையாது என்று அரசாங்கம் ஜூன் மாதத்தில் கூறியது.
முன்னால் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூ கீ இப்போது நாட்டின் ஆலோசகர் பதவி வகிப்பதுடன் மியான்மர் அரசாங்கத்தின் தலைவராகவும் உள்ளார். ஆனால் அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரகராக இருந்த நாட்களிலிருந்தே ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கிய மக்களின் நிலைமையை புறக்கணித்ததாக அவர் குற்றஞ்சாட்டப்படுகிறார்.
“நடந்து கொண்டிருக்கும் பாகுபாடுகள் குறித்து ஒப்பீட்டளவில் [ஆங் சான் சூ கீ] மெளனமாக இருக்கிறார்” என்று மேத்திசன் கூறுகிறார். “ஒரு தலைவராக அவரது குரல் தேவைப்படும் போது உண்மையில் அவர் வருவதில்லை.” என்று கூறுகிறார் அவர்.
இந்த ஆவணப்பட அ றிமுகக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மாடு விற்க
ஐந்து ஆவணம்,
மாட்டிகிட்ட
கண்டெய்னருக்கு
மூன்றுமாத
திரைக்கதையில்
மக்கள் காதில்
மலர் ஆரணம் !
கோட்டுக்கு
பத்து லட்சம்,
மலம் கழிக்க
வாழை இலை,
சிலை வைக்க
காசிருக்கு – ஆக்சிஜன்
சிலிண்டர் வைக்க
காசில்லை!
ஊழல் சிறைவாசிக்கு
ஷாப்பிங் சலுகை,
சல்லாப சாமியாருக்கு
சாலை மறியல்
போராட்டம்!
அப்பாவி சிறைவாசிக்கு
தலைமுறை கடந்து
தலை நரை !
பாவமென்று
பரோலில் விட்டால்
வழக்குபோடும்
பன்னாடை
பிறப்புகள் !
ஏன்னு கேட்டா
Anti Nationalist
Uncle Nationalist,
போமா நீன்னு
சொல்லும்
பேமானி அல்லக்கைகள் !
கொதித்தெழாத
குருதி,
நரம்பு தளர்ச்சியில்
நம் மானம்,
தள்ளாடும்
கிழவனாய்
தன்மானம் !
விவசாயிக்கு
வட்டிக் கடன் !
வர்த்தக
முதலைக்கு
வாரா கடன்
வரிவிலக்கு !
நீயே சொல்?
எவன் வந்தால்
விடியல்
நமக்கு ?
-த. ஹாஜி
_____________
இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
தமிழகத்தில் வரும் 2017, செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்களும் தங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை வாகன சோதனையின்போது காண்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டவர், போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர்! தமிழக அரசுப் பேருந்து டிப்போக்களையே வங்கியில் அடமானம் வைத்து ஆட்டம் போடும் அதிமுக அமைச்சர் இவர்.
தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்கள் 13 லட்சம், போக்குவரத்து அல்லாத பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் 2 கோடியே 20 லட்சம் என மொத்தம் 2.33 கோடி வாகனங்கள் உள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 480 பேருக்கு பழகுநர் ஓட்டுநர் உரிமங்களும், 9 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேருக்கு நிரந்தர ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும்பொழுது போக்குவரத்து காவல் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டால் ஓட்டுனர்கள் தங்களின் ஓட்டுனர் உரிம நகலை காண்பிப்பது என்பது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நகல் நடைமுறையில் பல மோசடிகள் நடப்பதாக வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வருவதாக கூறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறுவது என்ன?
சென்னை குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பழகுனர் ஓட்டுனர் உரிமம், மற்றும் புதுப்பித்து வழங்கக்கூடிய வேலையை கடந்த பதினைந்து ஆண்டாக செய்து வரும் ரிஸ்வான்,
“தமிழக அரசின் இந்த திட்டம் ஓட்டுனர்களை கடுமையாக பாதிக்க கூடியது தான். உதாரணமாக சென்னையில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் பெரும்பாலானவை வாடகைக்கு எடுத்து ஓட்டக் கூடியவை. இவர்கள் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை ஆட்டோ உரிமையாளரிடம் கொடுத்து விட்டு தான் ஓட்டுவார்கள். ஆனால் இந்த முறை அமுல்படுத்தபட்டால் அவர்கள் எந்த நம்பிக்கையில் ஆட்டோக்களை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதற்க்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.
அதுபோக தொலைந்து விட்ட உரிமத்தைத் திரும்ப பெறுவதற்கு போலீசில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து அதனை RTO -விடம் ஒப்படைக்க வேண்டும். அந்த RTO, குறிப்பிட்ட இந்த நபருடைய ஒரு லைசென்ஸ் தங்கள் அலுவலகத்தில் உள்ளதா என்று கேட்டு கடிதம் எழுதுவார். அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்து தான், புது லைசென்ஸ் கிடைக்கும். இதற்கு அவர் புது உரிமத்தையே எடுத்து விடலாம்.
அதுமட்டுமில்லாமல் 2016 டிசம்பர் 25 -ம் தேதிக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணங்கள் எல்லாம் அதிகரித்து விட்டன. குறிப்பாக ஆன்லைன் முறை வந்த பிறகு அதிகரித்து விட்டது. அதே போல ஆட்டோக்களுக்கு பெர்மிட் வாங்குவதற்கு ராணுவக்கொடி என்ற பெயரில் 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. ஆனால் வாங்கினால் தான் பெர்மிட் கொடுப்போம் என்ற நிலை வந்து விட்டது. லைசென்ஸ் வாங்குபவர்களிடமும் வசூலிக்கிறார்கள்.
ஆன்லைன் முறை என்பதே இந்த துறையை தனியார்மயமாக்குவதற்கு தான். இன்னும் ஒரு வருடத்தில் இந்த துறை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, போக்குவரத்து அலுவலர், இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற அதிகாரிகளும், புகைப்பட பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களை தவிர மற்ற அனைவரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்”, என்கிறார்.
சோமு, வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் தொலைபேசியில் கேட்டபோது :
இந்த திட்டம் என்பது அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் ஒரு திட்டம் தான். எங்களை போன்ற பயிற்சி பள்ளிகளுக்கு வருமானம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதன் மூலம் பாதிக்கப்பட போவது மக்கள் தான். இந்த திட்டம் அனைத்தும் தனியார்மயமாக்குவதற்கான வேலையை தான் மோடி செய்து வருகிறார், என்கிறார்.
வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் கதிரவன்
வாகனங்களுக்கு வேகக்கட்டுபாடு கருவி பொருத்தும் கதிரவன்,
ஏற்கனவே இந்த துறையை தனியார்மயமாக்க போவதா அறிவிச்சாங்க. அதுக்கான வேலை தான் இதெல்லாம். தனியார்மயமானவுடனே எந்த நிறுவனத்தோட வாகனமோ, அவனே எல்லாத்தையும் முடிச்சி கொடுத்துடுவான். அதுக்கப்புறம் எங்களுக்கெல்லாம் வேலையே இல்ல. மக்கள் அனைவரும் ஒண்ணா சேர்ந்து இந்த திட்டத்தையே எதிர்க்கணும் என்கிறார்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் மதன்,
இந்த திட்டம் சிறப்பானது தான். வாகனம் ஓட்டுபவர்கள் லைசென்ஸ் வைத்திருப்பதே இல்லை. இந்த அறிவிப்பின் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும். மேலும் வாகனம் ஓட்டுவார்கள் பாதிபேர் இன்சூரன்ஸ் போடுவதில்லை. இந்த அறிவிப்பு இன்சூரன்ஸ் எடுக்க வழிவகுக்கும். அவர்களுக்கு இதன் மூலம் நன்மை தான் என்கிறார்.
இன்சுரன்ஸ் போட்டவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குவதில்லையே என்று கேட்டால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் பதினைந்து நாட்களுக்குள் எங்களுக்கு தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம். இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். காப்பீடு பாலிசிக்காக வலையுடன் அலையும் இந்நிறுவனங்கள், விபத்து இழப்பீடு என்றதும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை கூறி அலைக்கழிக்கிறார்கள். ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் அதே கதைதான்.
ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் கூறுவது என்ன?
குன்றத்தூர் அலுவலகத்திற்கு வந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம்
ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம், அவருடைய மனைவி பேச்சியம்மாள்
நான் மூணு வருசமா வாடகைக்கு ஆட்டோ ஓட்டுறேன். என்னோட லைசென்ஸ் ஓனர்கிட்ட இருக்கு. இப்ப இந்த மாதிரி சொன்னா நாங்க எப்படி பொழைக்கிறது? இப்ப புது ஆட்டோ வாங்கலாம்னு நெனச்சேன். அதுக்கு “பெர்மிட்” வாங்க பேட்ச் இருக்கணும்னு சொல்றாங்க. பேட்ச் வாங்க படிச்சிருக்கணும். நான் படிக்கல. சரி என்னோட மனைவி பேர்ல வாங்கலாம்னு நெனச்சேன். யார் பேர்ல எடுக்கிறோமோ அவங்களும் பேட்ச் போட்டிருக்கணும்னு சொல்றாங்க. இதெல்லாம் என்ன சார் சட்டம். கடைசி வரைக்கும் நாங்க வாடகைக்கு தான் வண்டி ஒட்டணுமா? இந்த மோடி அரசாங்கம் பன்றதெல்லாம் பார்த்தா “தூக்கு போட்டு தற்கொலை” பண்ணிகிற நிலைமை தான் இருக்கு என்கிறார்.
டாடா ஏசி ஓட்டுனர் சுரேஷ்குமார், கேரளா
தமிழ்நாடு ஒரு கேனப்பயன் ஊர் சார். இங்க கேக்க ஆளு இல்ல. இதே கேரளாவுல இந்த மாதிரி அறிவிச்சா உடனே போராட்டம் தான் நடக்கும். சென்ட்ரல் கவர்மெண்டு இன்னா சொல்லுதோ அதை தான் இங்க இருக்கவங்க கேக்குறாங்க. இந்த திட்டம் போலீசு கொள்ளையடிக்க தான் வழிவகுக்குமே… ஜெராக்ஸ் வச்சிருந்தாலே காச புடுங்கிப்பானுங்க. இப்ப ஒரிஜினல் வேற சொல்ல வேணுமா. அவன் என்ன கேக்குரானோ அத கொடுக்கணும். போலிசை எதிர்த்து பேச முடியாது. எல்லாத்தையும் புடுங்கி கொளுத்திட்டு நம்ம கிட்ட எதுவுமே இல்லன்னு கேசு போடுவன். என்ன செய்வது? என்கிறார்.
லாரி ஓட்டுனர் சுரேஷ்குமார்
சுரேஷ்குமார், லாரி ஓட்டுனர்
எங்க வேலையில இதெல்லாம் சாத்தியமே இல்ல. எங்களோட லைசென்ஸ் ஓனர்கிட்ட தான் இருக்கும். ஏன்னா, ஏதாவது ஆக்சிடென்ட் பண்ணிட்டா விட்டுட்டு ஓடிவான்னு வாங்கி வச்சிப்பாங்க. போலிசு கேட்டா நாங்க எதை கொடுக்கிறது? நாங்க எப்பவுமே லுங்கி தான் கட்டிக்கிட்டு இருப்போம். போற இடத்துல படுப்போம். இதை எல்லாம் பத்திர படுத்தி வக்க முடியுமா? காணாம போயிட்டா, திரும்ப வாங்குற வரைக்கும் பொழப்பு இருக்காது. அவ்ளோ சீக்கிரம் வாங்கவும் முடியாது என்கிறார்.
பஞ்சர் கடை ராஜ்குமார்.
ராஜ்குமார், பஞ்சர் கடை
இந்த சட்டத்தால சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. தொலைந்து விட்டால் திரும்ப வாங்குறது தான் கஷ்டம் என்கிறார்.
ராமசாமி, இரும்பு பட்டறை தொழில் செய்பவர்.
இது ஜனநாயக நாடே கிடையாது. ஒரு சர்வாதிகார நாட்டுல தான் இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் போட்டு மக்களை துன்புறுத்துவாங்க. இப்ப அதுதான் நடக்குது. இந்த சட்டத்தால மோசடிய தடுக்க முடியும்னு சொல்றாங்க. இதுல என்ன பெரிய மோசடிய தடுத்துட போறாங்க. பைக்கை திருடி போலியான ஆர்.சி. புக்கையே ரெடி பண்றாங்க. ஜிஎஸ்டி-ய கொண்டு வந்தது கூட தான் மோசடி. பெட்ரோல் விலை பதினைந்து நாளைக்கு ஒரு முறை ஏற்றப்படும்னு சொன்னாங்க. அப்புறம் தினமும் ஏறும்னு சொன்னாங்க. இன்னைக்கு ரூ.6 ஏறியிருக்கு. இது மோசடி இல்லையா? பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி வரி போடாம விட்டது மோசடி இல்லையா? இந்த அரசாங்கமே மோசடி பண்ற அரசாங்கமா தான் இருக்கு. இந்த சட்டத்தை யாரும் அவங்க பின்பற்றுவது கிடையாது. மக்களத்தான் கொல்றாங்களே.
ஹெல்மட் சட்டத்தை போட்ட நீதிபதிய ஹெல்மட் போட்டு ஓட்ட சொல்லுங்க. அதெல்லாம் ஓட்ட மாட்டாரு. ஹெல்மெட் போட்ட பிறகு எவ்ளோ ஆக்சிடென்ட் நடந்திருக்கு. பைக் ரேஸ்ல எவ்ளோ பேர் செத்து போயிருக்கான். இதையெல்லாம் இவங்க சட்டத்தால கட்டுபடுத்த முடியல. இப்ப ஒரிஜினல் லைசென்ஸ் தான் கட்டுப்படுத்த போகுதா? அரசாங்கத்துக்கு வருமானம் வேணும். அதுக்கு எந்த வழியிலாவது மக்கள் கிட்ட இருந்து புடுங்கனும். அதுக்கு தான் சார் இந்த சட்டமெல்லாம் உதவும் என்கிறார்.
***
உண்மை தான். தமிழத்தில் கடந்தாண்டில் மட்டும் 14 லட்சத்து 62 ஆயிரத்து 873 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு லைசென்ஸ் இல்லாதது, வரி செலுத்தாதது, அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக 2,37,649 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். லைசென்ஸ் இல்லாத காரணத்துக்காக மட்டும் 44,446 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அபராத கட்டணமாக போக்குவரத்து துறை 74 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது.
மேற்கண்ட இந்த வருமானத்தில் மோசடி நடந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 2013 -ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 33 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 749 ரூபாய் அரசிற்கு வருமானம் ஈட்டித்ததுள்ளதாக RTO பாஸ்கரன் தெரிவித்தார். இந்த புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிரித்திருக்க வேண்டும்.
சென்னையில் திரும்பிய திசை எங்கும் போலீசின் வாகன தணிக்கை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் அதிக பணம் வசூலிப்பதாக மக்கள் புலம்பல் என்ற செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? பல கோடிகள் கணக்கில் காட்டப்படாமல் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசும் ஏப்பம் விட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தற்பொழுது மோடி அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் -2017, வாகன பதிவு, எப்.சி., லைசென்ஸ் வழங்குவது, என அனைத்தும் தனியாரிடம் வழங்க வழிவகை செய்துள்ளது. அனைத்து விதமான வண்டிகளையும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான் இயக்க முடியும். ‘பெர்மிட்’ வழங்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறித்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிக்கு லட்சக்கணக்கான பெர்மிட் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இதன் மூலம் டிரைவர்கள், கனரக, இலகுரக வாகன உரிமையாளர்கள், இருசக்கரம் மற்றும் இரு சக்கர மெக்கானிக், பெயிண்டர், டிங்கர், எலக்ட்ரீசியன், வெல்டர், டயர் பஞ்சர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் கூலி அடிமைகளாக தள்ளப்படுவார்கள் என்ற மாபெரும் அபாயமும் உள்ளது.
எனவே போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கப்படுவதற்க்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளிகளும் ஒரே அணியில் திரண்டு எதிர்ப்பதன் மூலம் மட்டுமே எதிர்வரும் அபாயத்தை முறியடிக்க முடியும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வடகொரியா எப்படி பிரச்சாரம் செய்து வருகிறது என்பதை 29.08.2017 அன்று வெளியான கார்டியன் நாளிதழ், புகைப்படங்களாக வெளியிட்டிருந்தது.
தி கார்டியன் நாளிதழ் இப்புகைப்படங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பது ஏன்?
‘வடகொரியாவிற்கு அணு ஆயுத பலம் இருக்கிறது’. ‘சின்ன அண்ணன் சீனா பின்னாடி இருக்கிறான்’. ‘வடகொரியா ஒரு கம்யுனிச நாடு’ என்று பல தரப்பினர் தங்களுக்கு தோன்றிய பலவண்ணக் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் இது இங்கு மையமான விசயம் அல்ல.
கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் சுவரொட்டிகளை பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்துவதைக் கவனியுங்கள். அணு ஆயுத பலத்தால் அமெரிக்காவை வீழ்த்திவிட முடியாது. அணு ஆயுதத்தை விட பயங்கரமான ஆயுதம் மக்களிடையே ‘அமெரிக்கா ஏகாதிபத்தியம் வீழ்த்தப்பட வேண்டியது’ என்று அரசியல் பிரச்சாரம் செய்வதுதான்.
இப்பொழுது வரை வடகொரியா தயாரித்த மிகப் பயங்கரமான ஆயுதம் இதுவே! இது அமெரிக்காவை அச்சுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை!
இதை ஆங்கிலப்பத்திரிக்கை கார்டியனும் ஆமோதிக்கிறது! பிரச்சாரம் செய்கிறது! பாருங்கள்! பகிருங்கள்!
அமெரிக்கக் கொடியை கிழித்தெரியும் வடகொரிய பெண்: நெற்றித் துணியில் ‘அமெரிக்க ராணுவமே வெளியேறு!’ பிரகடனம். அமெரிக்க அத்துமீறலை எதிர்ப்போம்.
ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாய் ஒலிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பாக கடந்த 26.08.2017 அன்று எங்கே “அரசியல் சட்டத்தின் ஆட்சி?” கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமை உரை நிகழ்த்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் “தமிழகத்தில் மக்களுக்காகப் போராடுவோர் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் இன்று அரியானா, டெல்லி,ராஜஸ்தான், பஞ்சாபில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. சுமார் 35-40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடக்கும் என முன்பே தெரிந்தும், பாஜக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை? இதேபோல் விவசாயிகள் லட்சம் பேர் டெல்லியில் நுழைந்தால் விட்டுவிடுவார்களா?
குற்றங்களை முன்கூட்டியே தடுக்கச் சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்தும் நிறுவனங்கள் முழுக்க அரசியல் சட்டத்திற்கே விரோதமாக மாறிவிட்டன. காவி பாசிஸ்டுகள் ஆட்சியில், அரசமைப்பு நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும். இதுதான் பிரச்சனை!
அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை எனத் தீர்ப்பு வந்துள்ளது? இது எப்படி அமலாகும்? ஏற்கனவே கருத்துரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காகத்தான் இன்று வளர்மதியும், திருமுருகன் காந்தியும் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். துண்டறிக்கை கொடுப்பதும், மெழுகுவர்த்தி ஏற்றுவதும் குண்டர் சட்டத்தில் வருமா? போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்புக் காவல் சட்டம், இன்று போராடுவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
இதை முதல்வர் சட்டசபையிலேயே அறிவிக்கிறார்! கூவத்தூரிலும், புதுச்சேரியிலும்தான் அரசியல் சட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கேவலத்திற்கு சட்ட நிபுணர்கள் வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசமைப்பு நிறுவனங்கள் தோற்றுவிட்டதற்கு அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு ஓர் உதாரணம். உலகமே பார்க்க குற்றம் இழைத்த அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோசி மீது இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குற்றம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது!
ஜெயலலிதாவையும் செத்த பின்தான் தண்டித்தார்கள்! காவிரி வழக்கிலும் இதுதான் நிலை! வாழ்வுரிமை அடிப்படை உரிமைதான்! 3,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். அவர்களின் வாழ்வுரிமையை உச்சநீதிமன்றம் கேட்குமா?
அரசமைப்பின் பாராளுமன்றம், சட்டமன்றங்கள், நிர்வாகம், நீதித்துறை என அனைத்து நிறுவனங்களின் தன்மையும் மாறிவிட்டன. இதுதான் ஜெர்மனியில் நடந்தது. ஹிட்லரும் மோடியைப் போல புதிய ஜெர்மனி பேசினார். அவருக்கு அனைத்து அரசமைப்பு நிறுவனங்களும் ஆதரவளித்தன. சட்டப்படிதான் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலும் இன்று இதுதான் நடக்கிறது. இதற்கெதிராக ஓர் ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டியுள்ளது. இது எனது கருத்து மட்டுமல்ல! 70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றை ஆய்வுசெய்து “பிரண்ட் லைன்” பத்திரிக்கை சமீபத்தில் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருப்பதும் “ஜனநாயகப் புரட்சிதான்”. எனவே அனைவரும் ஒன்றிணைவோம்! போராடுவோம்!” என்றார்.
அடுத்துப் பேசிய திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலர் திரு ஆனந்த முனிராஜ் அவர்கள் “நீட் தேர்விலே சட்டத்தின் ஆட்சி இல்லை என்பது தெரிந்துவிட்டது. மனுதர்ம ஆட்சிதான் இங்கு நடக்கிறது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கிறது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடி வந்தார்கள்! இன்று போராடவிடாமல் நீதித்துறையால் ஒடுக்கப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் முன்பு போல் இருந்திருந்தால் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சி நடந்திருக்கும். அது நாடு முழுவதும் பரவியிருக்கும். இதைத் தெரிந்துதான் ஒடுக்கிவிட்டார்கள். நீதிமன்றங்கள் சாதி, மத அடிப்படையில் தீர்ப்பளிக்கின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்வு என காவிகள் அமல்படுத்துகின்றனர்.
இந்தியாவில் இது எப்படி சாத்தியமாகும்? குக்கிராமத்து மாணவனும்,டெல்லியில் சி.பி.எஸ்.சி. -யில் படித்த மாணவனும் ஒன்றா? நீதிமன்றங்கள் ஒழுங்காக இருந்தால் பாதிப் பிரச்சனைகள் சரியாகும். ஆனால் இங்கு மாற்றப்பட, எதிர்க்கப்பட வேண்டியதே நீதித்துறைதான்! கேரளாவில் ஒரு முசுலீம் பையனும், இந்துப் பெண்ணும் திருமணம் செய்த வழக்கில் “ லவ் ஜிகாத்” என்று சொல்லி தேசியப் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்கு ஒப்படைக்கிறது உச்சநீதிமன்றம் . திருமணம் அவரவர் சொந்த உரிமை. இதில் விசாரணைக்கு என்ன உள்ளது? இது இந்துத்துவத் தீர்ப்புதான். இதைத்தான் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “கோவாவில் தேர்வு செய்யப்படுவோர் ஒரு கட்சியினர், ஆட்சியில் அமர்வோர் வேறு கட்சியினர், இது மணிப்பூர், பீகார் எனத் தொடர்கிறது. தமிழகத்திலோ சொல்லவே தேவையில்லை. இந்திய அரசியல் சட்ட முகப்புரையில் சொல்லப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்டவைகளுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது.
நேரு அவர்கள் அன்றே சொன்னார் “கம்யூனிஸ்டுகளால் இந்திய அரசமைப்பிற்கு ஆபத்தில்லை! ஆனால் வலதுசாரி மதவாதிகளால் ஆபத்துவரும்” என்று. அதுதான் இன்று நடக்கிறது. பசுப்பாதுகாப்பு என்று சொல்லி நாடு முழுவதும் பலர் அடித்தே கொல்லப்படுகின்றனர். ஜீனத் என்ற சிறுவன் டெல்லியில் ஓடும் ரயிலில் அடித்தே கொல்லப்பட்டான். யாரும் தடுக்க முன்வரவில்லை. காசுமீரில் ராணுவ ஜீப்பில் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு ஊர், ஊராக இழுத்துச் செல்லப்படுகிறார். எத்தனை பெரிய மனித உரிமை மீறல் இது? இதை விடக் கொடுமை, இராணுவத்தை அவமதிக்கக் கூடாது என்று பலர் ஆதரிப்பதுதான்! அரசு மக்களுக்கா? இராணுவத்திற்கா?
இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கருவை பாராளுமன்றம், மாற்ற முடியாது என 13 நீதிபதிகள் அமர்வு கேசவானந்த பாரதி வழக்கில் சொல்லியுள்ளது. இதன்படி மதச்சார்பற்ற அரசு, சமத்துவம் எல்லாம் அடிப்படைகள். ஆனால் நீட் தேர்வில் இது மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு “மாநில அரசுகள் தேவைப்பட்டால் தனியாக தேர்வு, அட்மிசன் முறை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றக் குழுவும் இதையே தெரிவித்துள்ளது.தற்போது இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை 16 நீதிபதிகள் உட்கார்ந்து மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தின் அடிப்படை இல்லை என முடிவெடுக்கலாம்! இன்றைய நாட்டின் நிலை இப்படித்தான் உள்ளது. இதைத் தடுக்க தனித்தனியாய் புலம்பி பயனில்லை. எல்லோரும் போராட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு மத்திய அரசு அடிபணிந்தது. ஆனால் அதையும் கடைசியில் எல்லோரும் கலைந்த பின்பு, தாக்குதல் நடத்தி இழிவுபடுத்தியது அரசு.
தேசிய நீதிபதிகள் ஆணைய வழக்கில் நீதிபதிகள் நியமனம் உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், மத்திய அரசு செய்த முயற்சியை தலைமை நீதிபதி திரு.ஹெகர் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதன்படி தேசப் பாதுகாப்பு எனச் சொல்லி, தான் விரும்பாதவர்களை மத்திய அரசு தடுக்கலாம். மாட்டுக் கறிப் பிரச்சனையிலும் இதுதான் நிலை. நான் ஆஜரான வழக்கில் மாட்டுக்கறி தடை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. மறுநாளே கேரள உயர்நீதிமன்றம் “மாட்டுக்கறிக்கு எங்கே தடை உள்ளது? எனக் கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தது”.ஆனால் விதிகளில் வெட்டுவதற்காக மாட்டை விற்கவோ, வாங்கவோ கூடாது என உள்ளது. இந்தியாவின் முகம் பன்முகத்தன்மைதான். இதை சீர்குலைக்கும் முயற்சி நடக்கிறது. அதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.”
இறுதியாக உரை நிகழ்த்திய சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் “ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச சட்டத்தின் ஆட்சியும் மோடி வந்த பின்பு போய்விட்டது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாய் சட்டமே இல்லை.தேர்தல் ஆணையம்,சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. குட்கா ஊழலில் உள்ளவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தலைமைச் செயலர் வருமான வரித்துறை கடிதமே வரவில்லை என நீதிமன்றத்தில் பொய்சொல்கிறார்.
வினவு என்ற இணையதளத்தில் குண்டாஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அருமையான வெளிப்பாடு. தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைமையில் உள்ள எனக்கு இந்தத் திறமை இல்லையே எனப் பொறாமையாய் உள்ளது. அப்பாடலில் சொன்னது போல “இந்த அக்கூஸ்டு எல்லாம் சேர்ந்து மாணவர்கள் மீது குண்டாஸ்” போடுகிறது. அனைத்து நிறுவனங்களும் சேதமாகி விட்டன. நீதிமன்றங்களில் 5% தான் எப்போதாவது அந்தரங்க உரிமை போன்ற சில தீர்ப்புகள் கிடைக்கின்றன.பத்திக்கைகள் உள்ளிட்ட ஊடகங்கள் விலைபோய்விட்டன.
ஆனால் மாற்று ஊடகமாக சமூக வலைத்தளம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 50% -க்கும் அதிகமான மக்கள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். இதில் 90% பேர் இளைஞர்கள். இவர்கள் மூலம் நாம் கருத்துக்களைக் கொண்டு செல்ல முடியும். மாற்றத்தை உருவாக்க முடியும்”என்று பேசினார்.
இறுதியாக தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டு கருத்தரங்கம் நிறைவுற்றது. வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் :
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை நசுக்கி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி, மே 17 திருமுருகனை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்.
இந்திய அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணநாயகம் மூலம் தேர்தலை நிறுத்திய கரூர் அன்புநாதன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் மற்றும் மணல் மாபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை மத்திய, மாநில அரசுகள், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
அடிப்படை உரிமையான தொழில் உரிமையைப் பறித்து கடந்த சுமார் 200 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராடும் உரிமையை அரசு பறிக்கக்கூடாது. மக்களின் கோரிக்கையை ஏற்பதுடன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
நீட் தேர்வு என்பது உலக வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மனுநீதியைத் திணிக்கும் செயல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்விக் கொள்கை என்பது சர்வாதிகாரம். நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தடுப்புக் காவல் சட்டத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்ட சரத்து 22(4)(5)(6)(7) நீக்கப்பட வேண்டும். கருத்துரிமை முழுமுற்றான உரிமையாக ஏற்கப்பட வேண்டும். மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.
_____________
இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
மக்கள் கருத்துரிமையின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
தொலைக்காட்சி ஒளிபரப்பு வாகனத்தை அடித்து நொறுக்கும் வன்முறைக் கும்பல்
குர்மீத் ராம்ரஹீமுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஹரியாணா மாநில சி.பி.ஐ நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குர்மீத் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சீடர்களைப் பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 28 -ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது தான் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதாகவும், எனவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்த குர்மீத் ராம்ரஹீமை போலீசார் தரதரவென்று இழுத்துச் சென்றதாக பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன.
சாமியார் குர்மீத் ராம்ரஹிம்
குர்மீத்தின் குற்றத்தை கடந்த 25 -ம் தேதி வெளியிட்ட தனது தீர்ப்பில் உறுதி செய்தது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்ற பாஜக சொம்புகள் உள்ளிட்டு அனைத்து ஊடகங்களும் களத்தில் இறங்கிக் கம்பு சுழற்றத் துவங்கின. “கடவுளை மனிதன் தண்டிப்பது” சாத்தியமில்லை என நம்பி நீதிமன்ற வளாகத்தை உற்சாகமாகச் சூழ்ந்திருந்த குர்மீத்தின் சீடர்கள் கலவரம் செய்யத் துவங்கவே, வழக்கமான பாஜக ஊதுகுழல்கள் தங்களது சுருதியை மாற்றிக் கொண்டன. “எம்.எல் கட்டர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை” என உச்சஸ்தாயியில் சுருதி சேர்க்கத் துவங்கினார் அர்னாப் கோஸ்வாமி.
குர்மித் ராம்ரஹீமுக்காக நடந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 300 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மலோட் மற்றும் பல்லுவான்னா ஆகிய இரண்டு இடங்களில் உள்ள இரயில் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தில்லி ஆனந்த் விகார் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேவா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு கோச்சுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. என்.டி.டி.வி, இந்தியா டுடே உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் நேரலை வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மானசா பகுதியில் உள்ள தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் கொளுத்தப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி ஒளிபரப்பு வாகனத்தை அடித்து நொறுக்கும் வன்முறைக் கும்பல்
குர்மித் ராம்ரஹீமுக்கு எதிரான தீர்ப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே; அதாவது ஆகஸ்டு 23 -ம் தேதியில் இருந்தே தீர்ப்பு வெளியாகும் நீதிமன்றத்தையும் அது அமைந்திருக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சகுலா நகரையும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். ஆகஸ்ட் 23 -ம் தேதியில் இருந்தே பஞ்சகுலாவில் குவியத் துவங்கிய ராம்ரஹீமின் பக்தர்களுடைய எண்ணிக்கை, தீர்ப்பு வெளியான அன்று 2 லட்சத்தைத் தொட்டதாக கூறுகின்றன ஊடகங்கள். தீர்ப்பு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே இணைய சேவை நிறுத்தப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சி.ஆர்.பி.எப்பின் 97 அணிகள் (Companies) இறக்கப்பட்டது; சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 16 அணிகளும், சாஷ்த்திர சீமா பால் (Sashtra seema Bal) எனும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 37 அணிகளும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 21 அணிகளும், இந்தோ – திபெத் எல்லைப் போலீசு படையைச் சேர்ந்த 12 அணிகளும் களத்தில் இறக்கப்பட்டன. 48 மணி நேரத்துக்கு முன்பே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு முழு அளவிலான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு பாதுகாப்புப் படைகள் களத்தில் நிறுத்தப்பட்ட பின்னும் ஒரு கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு குர்மித் ராம்ரஹீம் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? உண்மையில் பாதுகாப்புப் படைகளின் சக்தியை மீறித் தான் கலவரம் நடந்ததா?
குர்மீத் ராம்ரஹீம் சிங்
நடிகர், பாடலாசிரியர், பாடகர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகர், “விளையாட்டு” ஆர்வலர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள 50 வயதான குர்மித் ராம்ரஹீமின் அடையாளம் – சாமியார். பலூசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா பலோசிஷ்தானி என்பவரால் 1948 -ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு மதவாதக் குழு தேரா சாச்சா சௌதா. சீக்கிய மற்றும் இந்து மத நம்பிக்கைகளைக் கலந்து கிண்டப்பட்ட இந்தக் கிச்சடியின் மேல் இசுலாம் மற்றும் கிருஸ்தவ மதங்களில் இருந்து கடன் வாங்கப்பட்ட சில கருத்துக்களைக் கொத்தமல்லி கருவேப்பில்லையாக தூவப்பட்டிருக்கும்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இடைநிலைச் சாதிகள் மற்றும் தலித்துகளிடையே பிரபலமாக இருக்கும் இந்த மதவாதக் குழுவுக்கு சுமார் 6 கோடி பக்தர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் தலைமைப் பீடத்தில் 1991 -ம் ஆண்டு அமர்கிறார் குர்மீத் ராம்ரஹீம். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் சீக்கிய மதச் சாயல் கொண்ட பல்வேறு மதக்குழுக்களில் இருந்து தேரா சாச்சா சௌதா சற்றே வேறுபட்டதாகும்; மற்ற மதக்குழுக்கள் தமது வெளிப்படையான அரசியல் முடிவுகளை அறிவித்துக் கொள்ளாத நிலையில், தேரா சாச்சா சௌதா ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிவித்து விடும்.
கடந்த 2014 -ம் ஆண்டுக்கு முன்புவரை வெளிப்படையான காங்கிரசு ஆதரவாளராக இருந்த குர்மீத், அதன் பின் தனது ஆதரவை பாரதிய ஜனதாவுக்கு மாற்றிக் கொண்டார். மற்றபடி பொதுவாக இந்து சாமியார்களும் மடங்களும் பின்பற்றும் அதே வழிமுறைகள் தான் குர்மீத்தினுடையதும். மருத்துவ முகாம்கள், பேரழிவுக் காலங்களில் உதவி செய்வது போன்ற “சமூக சேவைகளுடன்” பிரதமர் நரேந்திர மோடியே புகழும் அளவுக்கு தன்னை தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைத்துக் கொண்டார்.
குர்மீத்தின் குற்றப்பட்டியல்
குர்மீத் ராம்ரஹீம் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கும் வழக்கு 2002 -ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எழுதப்பட்ட ஒரு கடித்ததில் துவங்கியது. அக்கடிதத்தில், குர்மீத் தன்னையும் மடத்தில் இருந்த பிற பெண் சாமியார்களையும் பாலியல் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேரா மடத்தின் தீவிர பக்தர்கள் என்றும், குர்மீத்தைக் கடவுளாகவே ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் அப்பெண் குறிப்பிடுகிறார்.
ஹரியானாவின் இடைநிலை சாதிகள் மற்றும் தலித்துக்கள் மத்தியில் செல்வாக்கோடு உள்ளது குர்மீந்தின் தேரா சச்சா சவுதா அமைப்பு – சாமியாருக்கு ஆதரவாக சாலையில் காத்துக்கிடந்த பக்தர்கள்
ஒரு நாள் அந்தப் பெண்ணை தனது இரகசிய அறைக்கு அழைத்துள்ளார் குர்மீத். அங்கே நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்த “கடவுளை” கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்பெண். தனது அரசியல் செல்வாக்கை குறிப்பிட்டும் கைத்துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டிய குர்மீத், ஏற்கனவே ‘தேரா’வின் மேலாளர் ‘ஃபக்கீர் சந்த்’தை கொன்று மறைத்ததைப் போல அந்தப் பெண்ணையும் கொன்று விவகாரத்தை எந்த சிக்கலும் இல்லாமல் மறைத்து விட முடியும் என்று மிரட்டியுள்ளார். உயிருக்கு அஞ்சிய அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குர்மீத், சுமார் மூன்றாண்டுகளாக இந்தக் கொடுமையைத் தொடர்ந்து செய்துள்ளார்.
மடத்தில் தங்கியிருந்த தான் மட்டுமின்றி பிற பெண்களும் இதே போல் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அப்பெண், அதை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தார். முதலில் ஹரியாணா ஊடகங்களிலும் பிற இந்திய ஊடகங்களிலும் வெளியான இவ்விவகாரம், வட இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக மாறியது.
உள்ளூர் பத்திரிகையாளர் ராம்சந்தர் என்பவர், பாலியல் வல்லுறவு குறித்த கடிதத்தையும் குர்மீத்தின் பிற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்தார். மக்களிடையே தனது போலி பிம்பம் கலைவதைக் கண்டு ஆத்திரமுற்ற குர்மீத், தனது அடியாட்களைக் கொண்டு ராம்சந்தரை சுட்டுக் கொல்கிறார். பாலியல் வழக்கைத் தொடர்ந்து ராம்சந்தரைக் கொலை செய்ததாக மேலும் ஒரு வழக்கு குர்மீத்தின் மேல் தொடரப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக் கடிதத்தை ஹரியாணா உயர்நீதி மன்றம் தானே முன்வந்து வழக்காக ஏற்றுக் கொண்டு (suo – moto) அதைக் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடுகிறது. தேரா மடத்தை விட்டு வெளியேறிய பல பெண் சாமியார்களை சி.பி.ஐ விசாரித்த போது, இரண்டு முன்னாள் பெண் சாமியார்கள் தாங்கள் குர்மீத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். தான் கிருஷ்ணரின் அவதாரமென்றும், மடத்தில் உள்ள பெண் சாமியார்கள் கோபியர்கள் என்றும் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்த குர்மீத், அவர்களின் பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்றால் தன்னோடு உறவு கொள்ள வேண்டும் எனச் சொல்லியே பெண் சாமியர்களைப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.
வழக்கை விசாரித்த சி.பி.ஐ, 2007 -ம் ஆண்டு ஜூலை 30 -ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் சாமியார்களோடு குர்மீத் சிங்கின் உதவியாளர் ஒருவரையும் சாட்சியாக வழக்கில் இணைத்துள்ளது சி.பி.ஐ. பாலியல் குற்றங்களைத் தவிர ஏராளமான முறைகேடுகளில் குர்மீத் ஈடுபட்டுள்ளார். தனது சீடர்கள் பாலியல் ‘நல்லொழுக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மடத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆண் சாமியார்களின் விரைகளை அறுத்த குற்றச்சாட்டும் குர்மீத் சிங்கின் மேல் உள்ளது.
குர்மீத் – பாரதிய ஜனதா கூட்டணி
காங்கிரசு ஆதரவு மனநிலையில் இருந்த குர்மீத்தை பாரதிய ஜனதா கடந்த 2014 -ம் ஆண்டு வாக்கில் தனது செல்வாக்குக்குள் வென்றெடுத்தது. அப்போதே பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்களோடு குர்மீத்துக்கு கடுமையான முரண்பாடு இருந்தது. தங்களது மத நம்பிக்கைகளை குர்மீத் இழிவு படுத்துவதாக சீக்கிய குருத்வாராக்கள் தேரா மடத்துடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்தன. எனினும் ஹரியாணாவில் உள்ள ஜாட் சாதியினரின் வாக்கு வங்கியின் கணிசமான சதவீதத்தைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையேவும் தலித்துகளிடையேயும் செல்வாக்கு பெற்றிருந்த குர்மீத் தங்கள் பக்கமிருப்பது ஆதாயம் எனக் கணக்குப் போட்டது.
பஞ்சகுலாவில் வன்முறையில் ஈடுபடும் குர்மீத்தின் ஆதரவாளர்கள்
பாரதிய ஜனதாவின் தேர்தல் கணக்கு தப்பவில்லை. 2014 -ம் ஆண்டு நடந்த ஹரியாணா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா குர்மீத்தின் ஆசீர்வாதங்களோடு அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்தவுடன் சில பத்து சட்டமன்ற உறுப்பினர்களை தேரா மடத்துக்கு ஓட்டிச் சென்ற எம்.எல் கட்டார், குர்மீத்தின் ஆசிகளை பயபக்தியோடு பெற்றுக் கொண்டார். பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை மீறி குர்மீத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது “சாதனைகளை” தேர்தல் பிரச்சார மேடையிலேயே பாராட்டிப் பேசினார் நரேந்திர மோடி. சமீபத்தில் மக்களவைக்குத் தேர்வான அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானியின் வெற்றிகளுக்கான பாராட்டுதல்களை குர்மீத் தெரிவித்திருந்தார்.
ஹரியாணா மாநில பாரதிய ஜனதா அரசின் மூன்று அமைச்சர்களான ராம்விலாஸ் ஷர்மா, அனில் விஜ் மற்றும் குரோவர் ஆகியோர் தேரா மடத்துக்கு சுமார் 1.12 கோடி நிதி வழங்கினர். மாநில கல்வித்துறை அமைச்சர் “பாரம்பரிய விளையாட்டுக்களை” வளர்ப்பதற்காக அரசு நிதியில் இருந்து குர்மீத்துக்கு 51 லட்சம் வழங்கியுள்ளார். குர்மீத் பார்ப்பனியத்தின் பாரம்பரிய விளையாட்டான பாலியல் வல்லுறவுகளில் சேம்பியன் அல்லவா?
தீர்ப்பு வெளியான ஓரிரு தினங்களுக்குப் பின் அது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங், கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு கைமாறாக பாலியல் வல்லுறவு வழக்கு திரும்ப பெறப்படும் என பாரதிய ஜனதா சார்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் ஆதரவு தங்களது “கடவுளுக்கு” இருப்பதை நன்கு உணர்ந்த்தாலேயே குர்மீத்தின் அடிபொடிகளால் இவ்வளவு பெரிய கலவரத்தை துவங்கி நடத்த முடிந்தது. ஆகஸ்டு 25 -ம் தேதி நீதிமன்றம் குர்மீத்தின் குற்றத்தை உறுதி செய்து நீதிபதி வாசித்த தீர்ப்பின் விவரங்கள் நீதிமன்றத்தைச் சூழ்ந்து நின்ற அவரது சீடர்களுக்கு தெரிய வந்த கணமே கலவரம் துவங்கியது. தீவைப்புகளும், கல்வீச்சுகளும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் போலீசார் முன்னேறிச் சென்று எச்சரிக்காமலும், தடியடி நடத்தாமலும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.
கலவரம் துவங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் சாவு எண்ணிக்கை உயரத் துவங்கியது. அதே நேரம் குர்மீத்தின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரோ தங்கள் கடவுளைச் சீண்டினால் இந்தியாவையே துண்டு துண்டாக்கி விடுவோமென தொலைக்காட்சி ஊடகங்களில் சவடால் அடித்துக் கொண்டிருந்தனர். ஜே.என்.யூ மாணவர்கள் இந்தியா ஒழிக என கோஷமிட்டதாக சித்தரிக்கும் ஒரு போலி வீடியோவை முன்வைத்து “தேசபக்தியை” கிண்டிக் கிளறிக் கொண்டிருந்த ஊடகங்கள், குர்மீத்தின் அடியாட்கள் வெளிப்படையாக சவால் விடுவதைக் கண்டுகொள்ளாமல் “வன்முறை, பொது அமைதி, தீவைப்பு, கல்வீச்சு” என நடுத்தர வர்க்க மக்களின் பொதுபுத்தியை சொரிந்து விட்டு டி.ஆர்.பி -யாக கல்லாகட்டினர்.
இந்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த போது ஊடகங்களில் பேசிய பாரதிய ஜனதாவின் உ.பி மாநில பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பாராமல் ஒரு பெண்ணின் வார்த்தைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுப்பதாக” குமுறினார். மற்றொரு பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமியோ மடங்களின் குருமார்களை இது போன்ற வழக்குகளில் சிக்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் சதி நடப்பதாக ஓலமிட்டார். இந்தியா டுடே தொலைகாட்சியில் பேசிய பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஷாஸியா இல்மி, “ஓட்டு வங்கி என ஒன்று இருப்பது எதார்த்தம்; இது போன்ற சாமியார்களின் பின்னே வாக்காளர்கள் திரண்டிருப்பது இன்னொரு எதார்த்தம்; எனவே குர்மீத்தின் ஆதரவைப் பெற நாங்கள் அவரது காலில் விழுந்ததில் என்ன தவறு?” என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே காஷ்மீரில் கலரவத்தை “கட்டுப்படுத்த” அப்பாவி மக்களில் ஒருவரை ஜீப் முனையில் கட்டி ஊர்வலம் சென்ற வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரோ குர்மீத்தை பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே மாடல் ஹெலிகாப்டரில் பறந்த குர்மீத்துடன் அவரது மகள் ஹனிபிரீத்தும் மருமகனும் உடனிருந்தனர்.
மிக நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பின் குற்றம் இழைத்தவர் தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால், அவர் குற்றமிழைப்பதற்கான திமிரை வழங்கிய ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை யார் தண்டிப்பது? சந்திரா சாமி துவங்கி பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தா, அசாரம் பாபு, குர்மீத் ராம்ரஹீம் உள்ளிட்டோர் அம்பலமாகிவிட்டனர். இவர்களுக்கும் சரி, ஜக்கி, டபுள் சிரீ, பாபா ராம்தேவ் போன்றோருக்கும் சரி – குற்றமிழைப்பதற்கான அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுப்பது பொதுவாக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் என்றாலும் குறிப்பாக இந்துத்துவ பாரதிய ஜனதா தான்.
எரிவதைப் பிடுங்கும் போது, தானாகவே கொதிப்பது அடங்கி விடும் என்பதை மக்கள் உணர வேண்டிய காலம் நம் கண் முன்னே கடந்து கொண்டிருக்கிறது.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கடந்த 2016 செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கே தலைப்புச் செய்தி ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே போகாத ஜெ. எப்படி அட்மிட் ஆனார்..? போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போகாமல் அப்போலோ ஏன் போனார்…? என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதில்களை ஊடகங்கள் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கோயம்புத்தூர் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் தலைப்பு செய்தி வேறு ஒன்றாக அமைந்தது.
அது சசிக்குமார் என்ற இந்து முன்னணியை சேர்ந்த பொறுக்கி கொலை செய்யப்பட்ட செய்தி. பிற மாவட்டங்களில் இது ஒரு சாதாரண கொலையாக தெரியலாம். ஆனால் இந்து முஸ்லீம் கலவரம் நடந்த ஊர் தமிழ்நாட்டிலேயே பிஜேபி வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு ஊர் என்ற நிலையிலிருக்கும் கோவை மாநகருக்கு இது ஒரு அபாய அறிகுறி. அதைத்தொடர்ந்து காவல்துறையின் முழு ஆசியோடு 18 கிலோமீட்டர் தூரம் நடந்த சவ ஊர்வலம், கலவரம் கடைகள் சூறை செல்போன் கடையில் திருட்டு கோமாதா பக்தர்களின் கோமாதா பிரியாணி திருட்டு போன்றவை அப்பட்டமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்த விவகாரங்கள்.
மேற்படி சசிக்குமார் கொலையில் இது வரை இரண்டு முஸ்லீம்களை பிடித்து விசாரித்துக் கொண்டுள்ளார்கள். முழு விவரம் ஒரு வருடமாகியும் வெளிவரவில்லை. ஆனால் இந்த ஒரு வருடத்தில் காவிப் புழுதி கோவையை எட்டு திசைகளிலும் வளைத்து நிற்கிறது. கோவை CPM அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் விஎச்பி என்ற குண்டர் படையை சேர்ந்த பொறுக்கி ஒருவன் பெட்ரோல் குண்டு வீசுகிறான். அடையாளம் தெரியாத நபர் என்று முதலில் டக்கால்டி விட்டுக் கொண்டிருந்த போலீஸ் பின்பு வேறு வழியில்லாமல் சிசிடிவி பதிவுகள் மூலம் அவனை கைது செய்கிறார்கள். வளர்மதிகளும், திருமுருகன்களும் குண்டர் சட்டத்தில் கைதாகுகையில் பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு குண்டர் சட்டம் இல்லை.
மோகன் பகவத்
கோவை எட்டிமடையில் கடந்த மார்ச் மாதம் அமிர்ந்தானந்த மயி அம்மா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயற்குழு கூட்டம் மோகன் பாகவத் தலைமையில் நடக்கிறது. இந்நிகழ்வுக்காக பல்கலைக் கழகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கிறார்கள். அம்மா அவர்கள் பாகவத் உடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் செய்கிறார்.
கடந்த ஜூலை மாதம் புதிய மாணவன் என்ற மாணவர் பத்திரிக்கையை விற்ற காரணத்திற்காக அதன் முகப்பில் மோடி படம் போட்டிருந்ததற்காக சட்டக்கல்லூரி மாணவர் வினோத் பாஜக வழக்கறிஞர் ஒருவனின் புகாரில் பெயரால் கைது செய்து சிறையிலடைக்கப்படுகிறார். மூன்று முறை ஜாமீன் மறுக்கப்பட்டு பின்னர் 17 நாட்கள் கழித்து கிடைக்கிறது.
கடந்த ஜூலை 10 அன்று ‘அக்கா’ வானதி வீடு இருக்கும் தொண்டாமுத்தூர் அருகே ஈழ அகதிகள் முகாமில் நடந்த சிறு தகராறில் ஒரு நபர் பஞ்சாயத்து பண்ணப் போகிறார். அதில் ஏதோ பிரச்சினை ஏற்பட அந்த நபரின் மகனும் இந்து முன்னணி பகுதி நிர்வாகியுமான பொறுக்கி ஒருவன் சக பொறுக்கிகளை கூட்டி வந்து அகதி முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறான். சாதாரண அடிதடி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடக்கிறது மோகன் பகவத் தலைமையில். கொங்குநாடு, குமரகுரு, அரசுக் கலைக் கல்லூரி போல இன்னும் பல கல்லூரிகளில் நிர்வாக ஒத்துழைப்புடன் காவல்துறை ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., கூட்டங்கள் ஷாகாக்கள் நடக்கின்றன.
பிள்ளையார் சிலை வைக்க சிபிஎம் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய இந்து முன்னணி மீது வழங்கப்பட்டுள்ள புகார்.
போன வாரம் கோவிந்தம்பாளையத்தில் விநாயகர் சிலை வைக்க இடம் இல்லை என்று சி.பி.ஐ.(எம்) கட்சி கொடிக் கம்பத்தை பிடுங்கி எறிந்து அராஜகம் செய்துள்ளார்கள் இந்து மத வெறியர்கள்.
இப்படி தொழில் நகரமான கோவை எந்நேரமும் கலவர நகராக மாற்றப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. மேயராகவோ அல்லது MLA -வோ ஆகி ஸ்மார்ட் சிட்டி முதல் இன்ன பிற மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்ய நாடி நரம்பெல்லாம் துடிக்க துடிக்க அலைந்து கொண்டிருக்கிறார் வானதி ‘அக்கா’.
தமிழக உரிமை பிரச்சினைகளுக்கெல்லாம் பொங்காத, போராடாத இந்த ‘அக்கா’ ஸ்மார்ட் சிட்டி திட்ட CEO நியமனத்தில் அண்ணா திமுக அரசியல் செய்துவிட்டது என ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதிலும் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பயன்படுத்தி வங்கிகளிலும் இன்னும் பல வொயிட் காலர் ஊழல்கள் மூலம் பணம் சம்பாதித்து ருசி கண்டுள்ளார் வானதி. பாரதிய ஜனதா கிரிமினல் கும்பல் அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது தனது அதிகாரத்தை அதன் செப்டிக் டாங்க் வழியே உள்ளே நுழைந்து நிறுவியுள்ள இந்த சூழ்நிலை இந்து முன்னணி பிஜேபி பொறுக்கிகளுக்கு ஸ்டெட்ராய்ட் ஊசி போட்டுக் கொண்டதற்கு இணையான வெறியை அவர்களின் மூளையின் மூலையில் உற்பத்தி செய்துள்ளது.
ஜைலாக் ஊழல் புகழ் வானதி ‘அக்கா’
மிக அபாயகரமானது என்று தெரிந்தும் சசிகுமாரின் சவ ஊர்வலம் பதினெட்டு கிலோ மீட்டர் நடத்த அனுமதித்து இந்த கலவரத்திற்கு காரணமாயிருக்கும் கமிஷனர் அமல்ராஜ்தான்,SFI, DYFI, RSYF, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளை தேச விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கிறார். இப்படியான முறையில் அயோக்கியர்கள் + அரசு என்ற இந்த ஆபத்தான கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்நோக்கி இருக்கிறது கோவை.
இதோ விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. கடந்த வருட விநாயகர் சதுர்த்தியில் தடாகம் அருகே இந்து முன்னணி நடத்தும் விழாவில் வந்து மத்தளம் அடிக்க மறுத்ததற்காக கவுண்டர் சாதி இந்து முன்னணியினர் தாழ்த்தப்பட்ட சாதி இந்து முன்னணியினர் மீதே தாக்குதல் நடத்தினர்.
இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையின் மேட்டுப்பாளையம் ரோட்டில் மின்விளக்கு கம்பங்களின் மீது இந்து முன்னணி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். பறப்பது கொடி மட்டுமல்ல கோவை காவல் துறையின் காவிக் கோமணமும் தான்.
கோவை முழுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, இந்து மக்கள் முன்னணி, சிவ சேனா, ஸ்ரீராம் சேனா, விவேகானந்தா பேரவை, விவேகானந்தா மக்கள் இயக்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஏராளமான லெட்டர் பேட் கூலிப்படைகள் மூலம் நகர் முழுக்க 390 சிலைகளும் புறநகரில் சுமார் 1,400 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் தெரு ஓரத்தில் சாக்கடை மீதெல்லாம் மேடை போட்டு பிள்ளையாரை அமர வைத்து காக்கும் கடவுளான பிள்ளையாரை குடிகார பக்தர்களிடமிருந்தும் இன்ன பிற துஷ்ட சக்திகளிடமிருந்தும் துப்பாக்கி ஏந்திய காவல் துறை காவல் காத்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் மற்றும் பொறுக்கிகள் கூட்டணி உருவாவதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பந்தமாவதும் இரவும் பகலும் சிலையின் கீழே உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் மிதந்து கொண்டும் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான்.
சென்ற முறை விநாயகர் சதுர்த்தி வசூலின் போது துடியலூர் மகாலட்சுமி பேக்கரியிடம் வசூல் செய்துள்ளார்கள் காவிகள். ஆயிரக்கணக்கில் கொடுப்பார் என எதிர்பார்க்க அவரோ 300 கொடுத்து போதும் என அனுப்பியுள்ளார். கறுவிக் கொண்டே வெளியேறிய இந்து முன்னணியினர் சசிக்குமார் சாவு ஊர்வல கலவரத்தில் போலீஸ் துணையோடு ‘இந்துக்கடையான’ மகாலட்சுமி பேக்கரியை சூறையாடிவிட்டனர்.
இந்த முறை போஸ்டர் நோட்டீஸ் அனைத்திலும் மாவீரன் சசிக்குமார் என புகைப்படம் போட்டு நேரடி மிரட்டல் வசூலே நடைபெறுகிறது. போலீஸ் பொத்திக் கொண்டு அனுமதிக்கிறது.
போலீசின் பத்திரிக்கை அறிவிப்பிலேயே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது ; விசர்ஜன ஊர்வலம் என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்களை பார்க்கையில் கமிஷனர் ஆபீஸில் தயாரான அறிக்கையா காவிகள் ஆபீஸில் தயாரான அறிக்கையா என்றே சந்தேகம் வருகிறது.
புறநகரில் 1,000 போலீஸ் மாநகரில் 2,000 போலீஸ்,சிலைகளை கரைக்க தனி இடம், தண்ணீர் வசதி, ஆயிரக்கணக்கில் போலீஸ் பந்தோபஸ்து, தீயணைப்பு துறை என மக்களை முட்டாளாக்க மத வெறியர்களாக்க இயற்கை சுற்றுச்சூழலை மாசுபடுத்த மக்கள் பணத்தோடு நடைபெறும் இந்த அயோக்கியத்தனம் நாளுக்கு நாள் வளர்ந்தே வருகிறது.
பழனிக்கு தைப்பூச நடை, வெள்ளிங்கிரி ஆண்டவரை பார்க்க நடை, காரமடை பந்த சேவ நடை, பங்குனி உத்திரம், குமரன் குன்று, மாசாணி அம்மன் கோவில் நோன்பு என ஏராளமான நிகழ்வுகள் பல லட்சம் பக்தர்களோடு சிறு அசம்பாவிதம் என்ற பேச்சுக்கே இடமின்றி நடக்கிறது. ஆனால், நூறு பொறுக்கிகள் சேர்ந்து நடத்தும் நிகழ்வுக்கு மாநகரே பதட்டம் ஆகும் அளவு சிக்கலாகி வருகிறது.
பார்த்தீனிய செடி; யாரும் வெள்ளாமை செய்யாமல் பரவுவது போல பாசிச கும்பல் கோவை நகரெங்கும் பரவுகிறது. மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் கரம் கோர்த்து இந்த களைகளை வெட்டி வீச வேண்டும். கோவையை மீட்க வேண்டும்.
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை மாவட்டம்.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
ரேசன், கேஸ் மானியங்களை வெட்டு ! மக்களைப் பலியிடு ! நடப்பது – உலக வங்கி, கார்ப்பரேட்டுக்களின் ஆட்சி !
மத்தியில் ஆளும் பாசிச மோடி அரசு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என மக்கள் என்ன தான் கஷ்டப்பட்டாலும், அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டுவதில் குறியாய் இருக்கிறது. ரேசன் பொருட்களுக்கு நிபந்தனை, கேஸ் மானிய ரத்து என தனது அடுத்த தாக்குதலை மக்கள் மீது தொடுத்திருக்கிறது.
இதனால், வருடம் ஒரு லட்சம் வருமானமுள்ளவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள், மூன்று அறை கொண்ட வீடுள்ளவர்கள், வீட்டில் ஏ.சி. பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது. மொத்தத்தில் யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடையாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார் மோடி. மேலும், கேஸ் மானியத்தை முழுவதுமாக ரத்து செய்தும், மாதம் ரூ.4 விலையேற்றிக் கொள்ள கேஸ் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தும் அவை செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது மோடி அரசு.
ஏற்கனவே மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தொழில் இழந்தும், வேலை இழந்தும், கூலி இழந்தும் வீதியில் வீசியடிக்கப்பட்டனர். அற்ப கூலி பெறுபவர்கள் ஜி.எஸ்.டி. என்ற வரியின் மூலம் நடந்த வழிப்பறியால் போண்டியானார்கள். எத்தனை ஏக்கர் நிலமிருந்தாலும், மானிய வெட்டு, வறட்சியால் விவசாயம் இல்லாததால் செத்து வருகின்றனர் விவசாயிகள். இத்தனை மக்களின் உயிரையும் இது நாள் வரை பிடித்து வைத்திருந்தது இந்த ரேசன் அரிசி தான். இனி அதற்கும் வழியின்றி பட்டினியில் தள்ளி மக்களைக் கொல்லப் போகிறது மோடியின் கும்பல். ஏற்கனவே உத்திரவாதமான வேலையோ, கூலியோ இல்லாமல் அல்லல்படும் மக்களுக்கு கேஸ் மானிய ரத்தும், விலை உயர்வும் மேலும் ஒரு சுமையாக மாறும்.
இப்படி நம்மீது தொடுக்கப்படும் தொடர் தாக்குதல்களுக்குக் காரணம், மத்திய மாநில அரசுகள் பின்பற்றும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளே. எனவே, கொள்கைகள் என்று சொல்லி, கொள்ளையை நடத்துகின்ற, மக்களுக்கு எதிராக மாறிப்போன. இந்த அரசுக் கட்டமைப்பைத் தகர்க்காமல், இந்த கட்டமைப்பைக் கட்டிக் காக்கின்ற ஓட்டுக் கட்சிகளை மாறி மாறி தேர்ந்தெடுப்பதால் மக்கள் பிரச்சினை தீரப்போவதில்லை.
நமது பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தக் கட்டமைப்புக்கு வெளியில் தான் உள்ளது. எனவே, மக்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கும் சமூகத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் படைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதே நமது முதன்மையான பணியாகக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கி மக்கள் நெருக்கமாக உள்ள கடைவீதி அமைந்துள்ள புதுச்சேரி, வில்லியனூர் கோட்டை மேடு சந்திப்பில் 21.08.2017 அன்று மாலை 05.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.
நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஆட்சி அல்ல; 1990 -களின் துவக்கத்தில் ஆட்சியாளர்களால் கையெழுத்திடப்பட்ட அடிமை சாசனத்தின் மூலம் உலக வங்கி, பன்னாட்டு கார்ப்பரேட்டுக்களின் ஆட்சி. அவர்களது கோலுக்கு ஆடும் குரங்காகத் தான் இருக்கின்றனர் ஓட்டுக்கட்சிகள். எனவே, இந்தக் கட்டமைப்பில் இதற்கான தீர்வு இல்லை. கட்டமைப்புக்கு வெளியே தான். தேவை ஆட்சி மாற்றம் அல்ல! மக்களின் கைக்கு வரும் அதிகார மாற்றம் தான் என்பதை புஜதொமு-வின் மாவட்டத் தலைவர் தோழர். சரவணன் தனது தலைமையுரையில் பதிவு செய்தார்.
அடுத்து பேசிய புஜதொமு மாநிலப் பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு, கேஸ் மானியம், ரேசன் பொருட்கள் ரத்து மட்டுமல்ல பிரச்சினை, தொழிலாளர் சட்டத்திருத்தம், நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் போராட்டம் என இந்த அரசால் மக்கள் படும் துன்பங்களை மக்களின் மொழியில் எதார்த்தமாகப் பேசினார்.
அடுத்து பேசிய புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் மகேந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் பதவிச் சண்டை, அதிகாரச் சண்டையைத் தான் ஊடகங்கள் முதன்மைப்படுத்துகிறது, தமிழகமெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதை அம்பலப்படுத்தினார்.
இறுதியாகப் பேசிய புஜதொமு-வின் பொதுச்செயலாளர் தோழர் லோகநாதன், வேலை செய்யத் தயாராயிருக்கும் மக்களுக்கு வேலையில்லை. வேலையில் இருப்பவர்களுக்குக் கூலியில்லை. விவசாயிகளால் விவசாயம் செய்ய முடிய வில்லை இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் கேஸ் மானியம் ரத்து, ரேசன் பொருட்கள் ஒழிப்பை திணிக்கிறது மோடி அரசு. முதலாளி களுக்கு ஏற்ற திட்டங்களை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பொய் சொல்வதும், அத்திட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், ஆர்.எஸ்.எஸ். வானரங்களை வைத்து தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தி மக்களை முட்டாளாக்கும் வேலையைத் தான் செய்து வருகிறது பார்ப்பனக் கும்பல். மோடி பதவியேற்பதற்கு முன்பே, ஒரு மதவெறி பாசிஸ்டான மோடியின் நடவடிக்கைகள் எப்படி என்று உணர்ந்து அம்பலப்படுத்தினோம்.
மோடி மட்டுமல்லாது. நாடாளுமன்ற, சட்டமன்ற ஓட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு திட்டங்களையும் புரிந்து கொண்டு எதிர்ப்பதற்கு பிரச்சினையின் பின்னுள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலை வைத்துத் தான் ஓட்டுப்போடும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பாதை மக்களுக்கு எதிராகிப் போனது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தக் கட்டமைப்பை தகர்த்து, மக்களது அதிகாரத்தைக் கொண்ட மாற்றுக் கட்டமைப்பு நிறுவுவதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமே ஆகும் என வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு, வரிக்கு மேலே வரியப் போடுற அரசாங்கம், மானத்தை இழந்து வாழ்க்கை வேணுமா, எச்சரிக்கை, எச்சரிக்கை ஆகிய ம.க.இ.க.-வின் புரட்சிகர பாடல்களை தோழர்கள் பாடினர்.
அருகில் உள்ள கடைக்காரர், ஒவ்வொரு முறையும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்ன பேசி என்ன ஆகப் போகிறது என்று நினைத்ததுண்டு. ஆனால், ஒவ்வொரு விசயமும் நச்சென்று இருக்கிறது. பாடல்கள் நிலவும் சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது என்றார்.
பறையிசை, முழக்கம், உரைகள், பாடல்கள் ஆகியவை நூற்றுக்கணக்கான மக்களை நின்று கவனிக்க வைத்ததுடன், ஆர்.எஸ்.எஸ். பற்றியும், இந்த அரசின் கட்டமைப்புத் தோல்வியைப் பற்றியும் சிந்திக்க வைத்து மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி, தொடர்புக்கு : 95977 89801.
_____________
இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
என்ரான் விநாயகர் - 1995, ஆக - செப் - அக் இதழில் வெளியான ஆர்.எஸ்.எஸ். நாயகர்களின் அடிமை விநாயகர் என்ற கேலிச்சித்திரம்
சென்னையில் 2,700 சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி, பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார் என்கிறது இன்றைய செய்தி. 2,700 இடங்களில் ஆகப்பெரும்பாலானவை சாலை ஆக்கிரமிப்புகள். ஆண்டுதோறும் இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. இவை அனைத்தையும் ஆசீர்வதித்து அனுமதியும் வழங்குகிறது போலீசு.
இது ஆடி மாத கோயில் திருவிழாக்களைப் போல மத நம்பிக்கை சார்ந்த விசயம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி என்பது மத நம்பிக்கை சார்ந்த விழாவாக இருக்கலாம். ஆனால், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றோர் நடத்தும் விநாயகர் ஊர்வலமும், அதற்காக நகரம் முழுவதும் நிறுவப்படும் ஆக்கிரமிப்பு விநாயகர்களும் மத நடவடிக்கைகளோ மத உரிமைகளோ அல்ல.
மகாராட்டிரத்தில் பார்ப்பன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் திலகரால் தொடங்கப்பட்ட இந்த விநாயகர் ஊர்வலம், 1991 -96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் தலையெடுத்தது. திருவல்லிக்கேணியில் திட்டமிட்டே கலவரமும் அரங்கேற்றப்பட்டது.
இந்த பின்புலத்தில் விநாயகர் வழிபாடு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 25, 26 வழங்கும் மத உரிமை என்பது இதற்குப் பொருந்தாது என்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இதனை விசாரிக்காமல் வாய்தா போட்டு இழுத்தடித்து முடக்கியது உயர்நீதிமன்றம்.
இந்த பின்புலத்தில் 1997 நவம்பர் புதிய கலாச்சாரம் இதழில் இது குறித்து வெளியிடப்பட்ட கட்டுரையை சற்றே சுருக்கித் தந்திருக்கிறோம். இக்கட்டுரையைப் படியுங்கள்.
இந்த விநாயகர் பெயரில் இந்து மதவெறிக்காலிகள் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். நமது போராட்டத்தை நாம் தொடருவோம்.
***
சென்ற ஆண்டு (1996) விநாயகர் ஊர்வலம் தொடர்பாக சென்னை நகரக் காவல்துறைக்கு (தமிழக அரசுக்கு) எதிராக இந்து முன்னணி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு, இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும்.
கடந்த ஆண்டுகளில் அந்தப் பாதை வழியே சென்றபோது நடந்த கலவரங்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவை காரணமாக மேற்கூறிய பாதையில் ஊர்வலமாகச் செல்ல அனுமதி மறுத்த காவல்துறை, வேறு பாதை வழியாகச் செல்ல ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது.
பாக் விநாயகர்
ஊர்வலப்பாதை ‘மதச் சம்பிரதாயம் சம்மந்தப்பட்ட விசயம்’ என்றும் அதைத் தன் விருப்பம் போல் மாற்றியமைக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை என்றும் கூறி சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்து முன்னணி ‘விநாயகர் சதுர்த்தி மத்தியக் குழு’ என்ற பெயரில் வழக்கு தொடர்ந்தது.
தனது வாதங்களைக் கீழ்கண்டவாறு முன்வைத்தது :
இந்துமுன்னணியின்வாதங்கள்
கடந்த 13 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சென்னையை சேர்ந்த இந்துக்கள் தமது வீட்டிளளவில் நடத்தும் விழாவாக மட்டும் நடத்தவில்லை; பொதுச் சாலைகளில் அலங்காரப் பந்தல் அமைத்து சிலைகளை வைத்து வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகல் நடத்தி வருகின்றனர்.
பிரிட்டிஷாரை எதிர்த்து சுயராச்சியம் அடைவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் எனும் சம்பிரதாயத்தை திலகர் தான் முதன்முதலில் துவக்கினார். காந்தி கண்ட ராமராச்சியத்தைத் தோற்றுவிப்பதற்காகப் பலதரப்பு மக்களிடமும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கு மேற்கூறிய விநாயகர் ஊர்வலம் தேவையாக உள்ளது.
இது ஒரு மத சம்பிரதாயம் என்பதால் இந்த ஊர்வலத்தை நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை; ஊர்வலப் பாதையைத் தீர்மானிக்கவோ, திருத்தவோ காவல் துறைக்கு அதிகாரம் கிடையாது என்பது இந்து முன்னணியின் வாதம்.
காவல்துறையின்வாதங்கள்
காவல்துறை (தமிழக அரசு) தனது எதிர் மனுவில் கீழ்கண்டவாறு பதிலளித்தது :
கடந்த ஆண்டுகளில் பல சந்தர்பங்களில் இந்து – முசுலீம் மோதல் கலவரம், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த ஆண்டும் அவ்வாறு சட்டம் ஒழுங்கு பிரச்சினை தோன்ற வாய்ப்புள்ளது.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைப்பது என்பது சென்னையில் சமீபகாலத்தில் ஏற்பட்டதுதானேயொழிய மரபு அல்ல, எனினும் இப்பழக்கம் பற்றி ஏதும் கருத்துக் கூற அரசு விரும்பவில்லை.
திலகர் இம்மரபைத் துவக்கியதிலும் அரசியல் நோக்கம் தான் மேலோங்கியிருக்கிறது. தற்போது இந்து முன்னணி ஞாயிற்றுக்கிழமையன்று ஊர்வலம் வைத்திருப்பதும் ஆகம விதிகள் சாத்திரங்களின் அடிப்படையில் அல்ல; மயிலைக் கோயில் சார்பாக நடத்தப்படும் அறுபத்து மூவர் விழா போன்றவைகள் தான் ‘மத ஊர்வலம்’ என்ற அடிப்படையில் காவல்துறை முன் அனுமதியில்லாமல் நடத்த முடியும். விநாயகர் ஊர்வலம் அத்தகையது அல்ல. எனவே காவல்துறை முன் அனுமதி பெற்றுத்தான் தீர வேண்டும் என்பது அரசுத் தரப்பு வாதம்.
உயர்நீதிமன்றத்தீர்ப்பின்அணுகுமுறை!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் தனது தீர்ப்பில் உயர்நீதி மன்றம் கீழ்கண்ட விசயங்களை குறிப்பிட்டது.
கோக் விநாயகர்
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை நிறுவி, குறிப்பிட்ட காலத்திற்கு வழிபட்டு, பின்னர் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது மத சம்பிரதாயத்தின் பிரிக்கவெண்ணாத அம்சம்தான் என்பதை ஏற்க்கலாம்… ஆனால் அந்த குறிப்பிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்வதுதான் வெகு நீண்ட காலம் கடைபிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயம் என்று நிரூபிக்க ஆதாரம் ஏதும் (இந்து முன்னணியினரால்) தரப்படவில்லை.
விநாயகர் இந்த இடத்தில்தான் வைத்து வழிபடவேண்டும். இன்ன இடத்தில்தான் கரைக்க வேண்டும் என்பதற்கும் ஆதாரம் ஏதும் தரப்படவில்லை…
மேலும் சுதந்திரப் போராட்ட காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான அரசியல் கருவியாக இவ்விழா பயன்படுத்தப்பட்டதைப் போலவே, இன்றும் சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விட முடியாது. எனினும் இவ்வாறு அரசியல் நோக்கத்திற்கு பயன்படுகிறது என்பதலேயே இந்த ஊர்வலம் தனது மதத் தன்மையை இழந்து விடுவதில்லை.
அடுத்ததாக அரசியல் சட்டப்பிரிவு 25, 26 மற்றும் 19(1) (b) ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் முன்னுரிமைகள் அல்ல; குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலவும் எதார்த்தமான நிலைமைகள், ஊர்வலத்தின் போது கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவற்றை முறைப்படுத்த (அரசுக்கு) அதிகாரம் உண்டு.
எனவே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதென்பது மதச் சம்பிரதாயம் தான் என்ற போதிலும், அது முற்றுரிமை அல்ல என்றும் அதனை முறைப்படுத்தவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்றும் கருதுகிறோம்.”
இவ்வாறு உயர் நீதிமன்ற பெஞ்சு சென்ற ஆண்டு தீர்ப்புக் கூறியது,
எதுமதஉரிமை ?
மேற்கூறிய உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக இப்பிரச்சினை தீர்ந்துவிட்டதா? நாளையே இந்த அரசோ அல்லது வேறெந்த அரசோ – பழையபடி மசூதி வழியாகவே ஊர்வலம் செல்ல அனுமதியளிக்கலாம்.
எனவே, ஊர்வலப் பாதையல்ல பிரச்சினை – விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பார்ப்பன இந்துமதவெறி அரசியலை நடத்துவது இந்து முன்னணியின் மத உரிமையா என்பது தான் பிரச்சினை.
பாட்ஷா விநாயகர்
இந்த ஆண்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர், மாநிலக் காவல்துறை இயக்குநர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோருக்கு ஒரு தாக்கீது அனுப்பப்பட்டது. “சென்னையிலும், மற்றும் பிற நகரங்களிலும் கடைவீதிகள், முச்சந்திகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது” என அதில் கூறப்படிருந்தது. ஆனால் இதற்குப் பதில் இல்லை.
ஆனால் சிலை வைக்க இடம் பிடிப்பது தொடர்பாக இந்து முன்னணிக்கும் இந்து மக்கள் கட்சிக்குமிடையே தகராறு ஏற்பட்டதால், இரு அமைப்பினரும் எந்தெந்த இடங்களில் சிலை வைக்கலாம் என்பதை ஆர்.டி.ஓ. ஒதுக்கித் தருவாரென அரசு அறிவித்தது. அதாவது பொது இடங்களை ஆக்கிரமிக்க ஆர்.டி.ஓ. ஏற்படு செய்து தருவார் என்பது தான் இதன் பொருள்.
இந்து முன்னணி நடத்தும் விநாயகர் வழிபாடும், ஊர்வலமும் மத உரிமைகள் அல்ல என்றும், பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைக்க அரசே அனுமதிப்பது சட்டவிரோதம் என்றும் பொதுநலன் கோரும் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.க.இ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தி என்பது அனைத்து சாதியினரும் கொண்டாடும் பண்டிகை அல்ல; சிறுபான்மையான பார்ப்பன ‘உயர்’ சாதி இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை. களிமண் உருவ பொம்மையை வைத்து வழிபடுவதும் பிறகு அதை கிணறு, குளம், ஆற்றில் கரைப்பதும் அவர்களது மரபு.
அரசின்கோழைத்தனம் !
பெரிய விநாயகர் சிலகளைப் பொது இடங்களில் நிறுவி, பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதென்பது கடந்த 14 ஆண்டுகளாக இந்து முன்னணி உருவாக்கி வரும் ‘மரபு’. ‘திலகர் செய்தார்’. ‘காந்தியின் ராமராஜ்ஜியம்’ என்று இந்து முன்னணி எதைச் சொன்னாலும் அதையெல்லாம் அரசியல் நோக்கத்திற்கானவையே. இதைத் தனது எதிர் மனுவில் அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது; எனினும் இதை வலியுறுத்தாமல் கோழைத்தனமாகப் பின்வாங்கிவிட்டது.
வெகு நீண்ட காலமாக நிலவிவரும் பழக்கம் மட்டும் தான் ‘மத சம்பிரதாயம்’ என நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சம்பிரதாயம் இந்து மதத்தினர் அனைவராலுமோ, ஒரு உட்பிரிவினராலோ, ஒரு சாதியாலோ, ஒரு வட்டாரத்தினரலோ பின்பற்றப்பட்டல் மட்டுமே அது சம்பிரதாயமாக ஏற்கப்பட வேண்டும். மதச் சம்பிரதாம் என்பதற்கு உச்சநீதிமன்றம் இதுவரை அளித்துள்ள விளக்கங்கள் இவ்வாறுதான் கூறுகின்றன.
என்ரான் விநாயகர்
எனவே இந்து முன்னணி உருவாக்கியிருக்கும் இந்த விநாயகர் வழிபாடு ஒரு மத சம்பிரதாயம் அல்ல; அரசியல் சட்டப்பிரிவுடன் 25, 26 –இன் கீழ் வழங்கப்படும் மத உரிமை எனும் அடிப்படை உரிமையைப் பெறத் தகுதியானதல்ல.
மேலும், ஒரு சம்பிரதாயத்தை உருவாகுவதற்கு இந்து முன்னணி என்பது ஒரு மடமோ, ஆதினமோ, சாதியோ, உட்பிரிவோ அல்ல; சட்ட மொழியில் சொன்னால் அது ஒரு அரசியல் பன்பாட்டு அமைப்பு – அவ்வளவு தான்! மத மரபைத் தோற்றுவிக்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. யார் வேண்டுமானாலும் மதச் சம்பிரதாயத்தைப் புதிதாகத் தோற்றுவிக்கலாம் என்றால் நாமும் துடைப்பக்கட்டை வழிபாடு ஒன்றைத் துவக்கி மத உரிமை கோரலாம்; அல்லது ஊர்வலமாக விநாயகரை எடுத்துச் சென்று கரைப்பதற்குப் பதிலாக ‘உடைப்பது தான் எங்கள் சம்பிரதாயம்’ என்றும் நாம் கூறலாம்.
ஆக்கிரமிப்புஇந்துசம்பிரதாயமா?
“ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாச் செல்வது தான் மதச் சம்பிரதாயம்” என்பதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதே போல பொது இடங்களை ஆகிரமிப்பது தான் “இந்து சம்பிரதாயம்” என்று ராம கோபாலன் வாதாட முடியாது. அப்படியொரு ‘மத உரிமை’ இருந்திருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடங்களில் எல்லாம், ஜெ – சசி கும்பல் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டியிருக்கும்.
சென்னையிலும் பிற நகரங்கலிலும் பேருந்து நிறுத்தங்கள், முச்சந்திகள், கடைவீதிகள், நடைபாதைகள், நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் – ஆகியவற்றில் தான் இந்து முன்னணியின் விநாயகர்கள் எழுந்தருளுகின்றனர். மேற்கூறிய இடங்கள் ‘அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்கள்’ அல்ல; அதாவது கோயில்கள் அல்ல. எனவே எந்தப் பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என அரசு கறாராக உத்திரவு பிறப்பிக்க முடியும். ஆனால் அரசோ ஆக்கிரமிபாளர்களுக்கு இடத்தைப் பகிர்ந்தளிக்க ஆர்.டி.ஓ –வை நியமிக்கிறது.
மாயா(வதி) விநாயகர்
இவ்வழக்கில் அரசு மற்றும் நீதி மன்றத்தின் அனுகுமுறையைக் கூர்ந்து கவனியுங்கள். “அரசியல் நோக்கம் கொண்டதுதான் – எனினும் அதுபற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்கிறது அரசு. “அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துவது உண்மைதான் எனினும் ஊர்வலம் தனது மதத்தன்மையை இழந்துவிடுவதில்லை” – என்கிறது நீதி மன்றம்.
இந்து முன்னணியின் விநாயகர் (வழிபாடு) ஊர்வலம், அரசியல் நடவடிக்கையா, மதச்சடங்கா இரண்டில் எது என்பதே நம் கேள்வி. பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைப்பது மத நடவடிக்கை என்றால், பாபர் மசூதியை ஆக்கிரமித்து (இடித்து) ராமன் சிலை வைத்ததும் மத நடவடிக்கை என்று தான் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்து மதவெறியர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் மதத்தை அரசியல் நடவடிக்கையாகவும், அரசியலை மதச்சடங்காகவும் நடத்துவதற்கு இந்து முன்னணிக்கு இப்படித்தான் வாய்ப்பளிக்கப்படுகிறது.
இவ்விரண்டு உரிமைகளையும் தெளிவாக இனம் பிரிக்கவியலாதவாறு வேண்டுமென்றே மொன்னையாக்கியிருக்கிறார்கள் அரசியல் சட்டத்தை உருவாக்கிய ‘சிற்பிகள்’ அவ்வாறு இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய நெருக்கடிகள் வரும் போது அரசு வழுக்குகிறது; நீதிமன்றம் அப்போதைக்குத் தப்புவதற்கு ஒரு சந்து கிடைக்குமோ என்று தேடுகிறது.
மதஉரிமையா, மதச்சார்பற்றஉரிமையாஎதற்குமுன்னுரிமை?
மத உரிமையும், மதசாற்பற்ற சிவில் உரிமைகளும் மோதிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அரசும், நீதி மன்றமுன் மதச்சார்பற்ற உரிமைக்குத் தான் உடனே குழி வெட்டுகின்றன.
மத உரிமைகள் விசயத்தில் நீக்குப் போக்காகவும், தாராள மனதுடனும் நடந்து கொள்ளும் நீதி மன்றங்கள் சிவில் உரிமைகள் விஷயத்தில் வேறு அளவு கோலைப் பயன்படுத்துகின்றன.
கொழுக்கட்டைக்குப் பதிலாக கையெறி குண்டு போன்ற நவீன ஆயுதங்களைத் தாங்கி விநாயகர்கள் பவனி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில் வருபவர்கள் கையில் பை கூடக் கொண்டுவரக்கூடாது என நிபந்தனை விதித்தது நீதிமன்றம்.
ஜெயின் விநாயகர்
சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் கடையடைப்புகளுக்கு (பந்த்) எதிராக வழங்கியுள்ள தீர்ப்போ, அரசியல் சட்டப்பிரிவு -19 வழங்கும் அடிப்படை உரிமையை கிட்டத்தட்ட ரத்து செய்து விடுகிறது.
ஓட்டுப் பொறுக்கிகளைச் சாக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு காரணம ஏதும் கூறாமல் எந்த நடவடிக்கையையும் தடை செய்யும் வாய்ப்பை காவல்துறைக்கு வழங்குகிறது. எல்லா வகையான போராட்டங்களையும் வெறுக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் அரசியலற்ற மனோபாவத்திற்கு சட்டத் தகுதி வழங்கியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.
சட்டப் பிரிவு -25 இன் கீழ் மத உரிமை என்ற பெயரில் இந்து மதவெறியர்களின் உரிமை சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது; சட்டப்பிரிவு -19 வழங்கும் கருத்துரிமையும், அரசியல் உரிமைகளும் சட்டப்படியே பறிக்கப்படுகின்றன.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாசிசம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது; ஜனநாயகம் சட்டப்படியே தடை செய்யப்படுகிறது
–சூரியன்
புதியகலாச்சாரம், நவம்பர் – 1997 இதழில்வெளியானகட்டுரை.
கேலிச்சித்திரங்கள் : 1995, ஆக – செப் – அக், புதிய கலாச்சரம் இதழில் வெளியான ஆர்.எஸ்.எஸ். நாயகர்களின் அடிமை விநாயகர் என்ற தலைப்பில் வெளியானவை!
இந்திய விவசாயத்தைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தகச் சூதாட்டக் களமாக மாற்றுவதையே தனது வேளாண்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு! இதற்கேற்ப வேளாண்மைத் துறையின் விதை, நீராதாரங்கள், நிலம், இயற்கைவளம் என அனைத்துக் கட்டமைப்புகளும் கார்ப்பரேட் நலனுக்கேற்ப மறு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போதுள்ள வேளாண் சந்தைகளையும் கார்ப்பரேட் நலனுக்கானதாக மறுசீரமைக்கும் வகையில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகிய இரு திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (FPO)
விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் என்பது கூட்டுறவு அமைப்பின் உருத்திரிந்த வடிவம். உலக முதலாளித்துவத்துக்கு சோசலிச அரசும் சமூக அமைப்பும் சவாலாக விளங்கிய சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், சோசலிசத்தின்பால் ஈர்க்கப்படும் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடனும் எல்லாத் துறைகளிலும் கூட்டுறவுகள் திட்டமிட்டே ஊக்குவிக்கப்பட்டன.
முதலாளித்துவ சந்தையின் சுரண்டலிலிருந்து ஒப்பீட்டளவிலான ஆறுதலை இந்தக் கூட்டுறவு அமைப்புகள் வழங்கியதால், தொழிலாளர் கூட்டுறவுகள் முதல் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு வரையிலான பல்வேறு சிறு உடைமையாளர்களின் கூட்டுறவு அமைப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மக்களின் ஆதரவைப் பெற்றன. கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றிய இந்திய அரசும் அன்று கூட்டுறவை ஊக்குவித்தது.
விவசாயி விளைபொருள் சந்தையை இணையதளம் வழியாக தேசியமயமாக்குவது தொடர்பாக இந்திய அரசும் கர்நாடக மாநில அரசும் இணைந்து, கர்நாடக மாதிரியை நாடெங்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக 26 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகளைக் கூட்டி வைத்து நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் (கோப்புப் படம்)
சோசலிசம் தனக்குச் சவாலாக இருந்தவரை இந்தக் கூட்டுறவு அமைப்புகளைச் சகித்துக் கொண்ட உலக முதலாளித்துவம், சோசலிசம் வீழ்ந்த மறுகணமே கூட்டுறவு அமைப்புகளை வீழ்த்தும் நடவடிக்கையை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தொடங்கியது. புதிய தலைமுறை கூட்டுறவு அமைப்புகள் (New Generation Co-operatives) என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்புகள், கூட்டுறவு என்ற பெயரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அந்த அமைப்புகளை முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்களாக மாற்றின.
சிறு உடைமையாளர்களை அடித்து அழிப்பது, அணைத்து அழிப்பது என்ற இரு வழிமுறைகளில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தது. சிறு, குறு விவசாயிகள் தனித் தனியே சிதறி இருப்பதால், சந்தையில் அவர்களால் போட்டியிட இயலவில்லை என்றும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக மாற்றுவதன் மூலம் போட்டியிடும் திறனை அவர்களுக்கு உருவாக்குவதாகவும் இந்த அமைப்புகளுக்கு வடிவம் கொடுத்திருக்கும் உலக முதலாளித்துவ நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த வகையில் 2003 -ல் வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம். 1956 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 581-இல் ஒரு திருத்தம் செய்ததன் மூலம் இந்த சங்கங்கள் கம்பெனிகளாக அங்கீகரிக்கப்பட்டன. உற்பத்தி, கொள்முதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் தொடங்கி, பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்துகொள்வது வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தக் கம்பெனிகள் ஈடுபடலாம் என்று இச்சட்டம் அங்கீகரித்தது.
நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் அமலாகிவரும் இத்திட்டத்தின்படி, முதலில் கிராம அளவில் 15, 20 சிறு குறு விவசாயிகளை இணைத்து விவசாயிகள் விருப்பக் குழுக்களை (INTREST GROUPS) உருவாக்குவது, இதில் முறையாக இயங்கும் குழுக்களை இணைத்து 1,000 விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கமாக (FPO) அமைக்கப்படும் என்கிறார்கள்.
ஏற்கெனவே இது போல கரும்பு, தென்னை, மஞ்சள், வாழை விவசாயிகள் தனித்தனிச் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் தனித்து செயல்படுமளவுக்குத் தகுதி, திறமையைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளும் சங்கம், எதிர்காலத்தில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியாக (Farmer producer company – FPC) செயல்படுத்தப்படும் என்றும் கூறுகிறது, நபார்டு வங்கி.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பின்னணி
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து அமலாகிவரும் இத்திட்டத்தை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பது சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பு (SMALL FARMERS AGRI & BUSINESS CONSORTIUM) என்ற நிறுவனம்.
விவசாயிகள் பெயரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் விவசாயிகள் யாரும் எந்தப் பொறுப்பிலும் கிடையாது. முழுக்க ஓய்வு பெற்ற மத்திய வேளாண்துறை மற்றும் நபார்டு வங்கியின் பல்வேறு உயர் அதிகாரிகள்தான் இதன் தலைமை நிர்வாகிகளாக உள்ளனர். மத்திய வேளாண்மைத் துறையில் பதிவுபெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனமாக இது செயல்படுகிறது. மேலும், வங்கியல்லாத நிதி நிறுவனமாகவும் ரிசர்வ் வங்கியால் இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
SFAC நேரடியாக FPO -வை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, இந்தியாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடியாட்களான 21 சமூகக் குழுக்கள் மற்றும் ஆதார நிறுவனங்கள் (resource institute) என்ற பெயரிலான நூற்றுக் கணக்கான தன்னார்வக் குழுக்களை இப்பணியில் இறக்கிவிட்டு, இவற்றைக் கண்காணித்து இயக்கும் வேலையை மட்டுமே செய்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருசில ஆதார நிறுவனங்களை SFAC நியமித்துள்ளது. இந்த ஆதார நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைப்பதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் விவசாய வளம், பயிராகும் முக்கிய விளைபொருள்கள், அதன் சந்தை நிலவரம், பொதுவான மக்களின் கலாச்சாரம் மற்றும் மனநிலை, அரசியல் கட்சிகளின் செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வுசெய்து அறிக்கை தயாரிக்கும். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்படும்.
ஆய்வில் பரிந்துரைக்கப்படும் பயிர்களுக்குத்தான் உற்பத்தியாளர் சங்கத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்கான நவீன தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு, சந்தைப்படுத்துவது ஆகியவை குறித்தும், சங்கத்தை சுயமாக நிர்வகிப்பது குறித்தும் இந்த ஆதார நிறுவனங்களே விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கின்றன.
எதற்கு இந்த திடீர் கரிசனம்?
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் தொடங்கிய காலத்திலிருந்து விவசாயத்தைப் புறக்கணித்து வரும் அரசுக்கு ஏன் இந்த திடீர் கரிசனம்?
”வேளாண்மைத்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, இதற்கான விவசாயிகளின் அங்கீகாரத்தை உறுதி செய்வது ஆகியவற்றின் மூலம் இந்திய வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவது”, ”தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் இணைந்து செயல்படுவதற்கான தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்துவது” என்று தங்களின் நோக்கத்தைக் கூறுகிறது SFAC – என்ற சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பின் இணையத்தளம்.
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளும் கூடத் தனியார்தான். இந்தத் தனியார்களின் முதலீட்டை அதிகரிப்பதற்கு உதவ மறுக்கும் அரசு, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிப்பதையும், அதற்கு விவசாயிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதையும் தான் இவ்வாறு குறிப்பிடுகிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது ஒரு கம்பெனியாக பதிவு செய்யப்படுவதால், இயல்பாகவே இதில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் தலைமை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர். பிற சிறு விவசாயிகள் அனைவரும் கம்பெனியின் பங்குதாரர்களாக மட்டுமே இருப்பர். என்ன பயிரிடுவது, என்ன விலைக்கு விற்பது ஆகியவற்றை FPO -வின் தலைமை நிர்வாகிகளும், இவர்களுக்கு நிர்வாக ஆலோசகராக உள்ள ஆதார நிறுவனத்தின் பிரதிநிதிகளும்தான் முடிவு செய்வார்கள். இது சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட்டுகளின் நோக்கத்துக்கு ஏற்பவே இருக்கும்.
விளைபொருளின் விலையையும் ஒப்பந்தம் செய்திருக்கும் கார்பரேட்டுகள் தான் தீர்மானிப்பார்கள். இந்த வர்த்தகச் சந்தையில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ”குறைந்தபட்ச விலை”, ”விலை நிர்ணயம்” என்று விவசாயிகள் அரசிடம் கேட்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்த சொற்களை உச்சரிப்பதே அங்கு சாத்தியமில்லை.
மேலும், உரம், மருந்து மற்றும் வேளாண் கருவி வியாபாரம், இந்திய உணவுக் கழகத்திற்கு இணையாக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வது, அதைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பது, சங்க உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து வசூலிப்பது ஆகிய நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும் என்று மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள FPO-க்கான வழிகாட்டு நெறிமுறை அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, வேளாண் சந்தையின் மீது இதுவரை இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடு மற்றும் விவசாயிகள்பால் அரசுக்கு இருந்த கடப்பாடு ஆகியவற்றை முழுமையாகக் கைவிடுவதற்கும், விவசாயிகளை கார்ப்பரேட் முதலைகளின் வாய்க்கு தின்னக் கொடுப்பதற்கும் அரசு செய்து வரும் பல ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.
இதுவரை 25 மாநிலங்களில் மொத்தம் 975 FPO -க்கள் அமைக்கப்பட்டுள்ளன. (இதில் SFAC – நேரடியாக இயக்குவது மட்டும் 636, பிற நிறுவனங்கள் மூலம் இயங்குவது 339) சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51 FPO -க்கள் இயங்குகிறது. பசுமைப் புரட்சியின் பிதாமகன் சி.சுப்ரமணியம் உருவாக்கிய நேசனல் அக்ரோ பவுண்டேசன் உட்பட 11 நிறுவனங்கள் தமிழகத்தில் FPO அமைப்பதற்கான ஆதார நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன.
ஈஷா யோகா மையத்தில் நடைபெரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (கோப்புப் படம்)
2012 -ஆம் ஆண்டில் கோவை அருகில் உள்ள தொண்டாமுத்தூரில் ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேசன் அமைப்பு தான், தென்னை விவசாயிகள் மத்தியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கியிருக்கிறது.
2017 – 18 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தும் பொருட்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 81.18 லட்சம் விவசாயிகளில் சுமார் 92% பேர் சிறு, குறு விவசாயிகள் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 40 லட்சம் விவசாயிகளை இந்த அமைப்பில் இணைக்கவிருப்பதாகவும் அரசு அறிவிப்பு கூறுகிறது.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பல்வேறு வழிகளில் கள்ள உறவு வைத்துள்ள ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், சமூகக் குழுக்களால் இயக்கப்படும் SFAC – நிறுவனம், மத்திய வேளாண்துறையின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் துணை நிறுவனமாகவே செயல்படுகிறது. FPO -வைப் போலவே e-NAM – எனும் தேசிய வேளாண் மின்னணுச் சந்தைத் திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பையும் SFAC -க்கே கொடுத்துள்ளது மத்திய அரசு.
தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை (e-NAM)
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்பதைப் போல, தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தையை ஏற்படுத்துவது என்பதும் மோடியின் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று.
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை
”மதுரை, ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய வேளாண் சந்தைகளின் தினசரி விலை நிலவரம், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்குகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை மின்னணு விவரங்களாகத் திரட்டுவது, இதன் மூலம் எந்த மாநிலத்திலிருக்கும் ஒரு வர்த்தகரும், விவசாயியும் நாடு முழுவதுமுள்ள விலை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்ட 25 விளை பொருட்களுக்கு இலாபகரமான விலையைப் பெற பேரம் பேச முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கலாம்” என்று மத்திய வேளாண்துறை கூறுகிறது.
வணிகர்கள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற, தாராள லைசென்சு வழங்குவது, வேளாண் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தர நிர்ணயம் மற்றும் ஏல விதிமுறைகளை உருவாக்குவது, அரசின் வேளாண் விற்பனைக் கமிட்டி(APMC) -யின் செயல்பாட்டு வரம்பைக் கட்டுப்படுத்துவது, கொள்முதல் செய்யும் இடத்தில் மட்டுமே வரி விதிப்பது (single point levy), நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே லைசென்ஸ் வழங்குவது ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கித் தான் இந்த வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மற்றும் கார்ப்பரேட் வேளாண் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ளூரளவில் செயல்படும் சந்தைகளும், இடைத்தரகர்களும் பெரும் தடையாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமாகவும், ஏற்கெனவே அறிமுகமாகமானவர்களாகவும் இருப்பதால் உள்ளூர் தரகர் மற்றும் வியாபாரிகளையே விவசாயிகள் நம்பிக்கையான நபர்களாக பார்க்கின்றனர். இந்த சந்தை முறைக்கு அப்பாற்பட்ட அந்நிய நிறுவனங்களால், விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.
எனவே, உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் விடுபடவேண்டுமானால், நேரடியாக தேசிய சந்தையை அணுக வேண்டும் என்றும், அங்கே ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது மோடி அரசு. ஒரு தேசம் ஒரு வரி, ஒரு தேசம் ஒரு கல்வி, ஒரு தேசம் ஒரு பண்பாடு என்ற வரிசையில் வருகிறது ஒரு தேசம் ஒரு சந்தை என்ற இந்த ஏற்பாடு. உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலை ஒழிப்பது என்ற பெயரில் உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் நிலவுகின்ற பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுப்பதும், இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக் கொள்ளைக்கு வேளாண் சந்தைகளைத் திறந்து விடுவதுமே மின்னணு வர்த்தகச் சந்தை முறையின் நோக்கம்.
விவசாய விளைபொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு e-NAM அவசியம் என்று இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி கூறியிருப்பதும்,FICCI மற்றும் CII போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்கள், வேளாண் விற்பனைக் கமிட்டிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் e-NAM -ஐ கொண்டு வர வேண்டும் என்று கோரி வருவதும் இதற்கான நிரூபணங்கள்.
அதனால் தான் கார்ப்பரேட் காவலனான மோடி, 250-ஆக உள்ள மின்னணு வேளாண் சந்தையை நடப்பாண்டில் (2017 – 18) 585-ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது கர்நாடக மாநிலத்தின் நிலை. அங்கே ராஷ்ட்ரிய இ-மார்க்கெட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (ReMS) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், கர்நாடகா வேளாண்துறை இணைந்து 2015 -ல் ஒருங்கிணைந்த சந்தை (unified market platform) முறையை கொண்டுவந்துள்ளது.
11,000 கிராமங்கள், 22 லட்சம் விவசாயிகள், 17,000 கமிசன் ஏஜெண்டுகள், 32,000 வர்த்தகப் பங்குதாரர்கள், 157 சந்தைகள் ஆகிய பலத்துடன் ஆண்டுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது, ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனம். இந்த வர்த்தகச் சூதாட்ட நிறுவனம்தான் இன்று, கர்நாடகா மாநிலம் முழுக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற தனியார் சங்கிலித்தொடர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த கர்நாடகா மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்கும் நோக்கத்தில் சமீபத்தில் 26 மாநில வேளாண் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்.
ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் போலவே, NeML, ECO e MARKET, FRESH e MARKET, NCDFL E MARKET என்று பல பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தனித்தனியே FPO -க்களை உருவாக்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவையில் வரிசை கட்டி நிற்கின்றன. இவர்களுக்கான புரவலனாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ”ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தால் வழக்கத்தைவிட கர்நாடக விவசாயிகள் 38% சதவீதம் அதிக லாபம் பெற்றிருப்பதாக” ஒரு பிரச்சாரத்தை கிளப்பி விட்டது நிதி ஆயோக். பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு பரிசீலித்தால், அது வெறும் 13% மட்டுமே என்பது பின்னர் அம்பலமானது.
இ.சாப்பல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம். கமிசன் மண்டிக் காரர்களைவிட கார்ப்பரேட்டுகள் அதிக விலை தருகிறார்கள் என்ற புருடா அங்கே ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. அது மட்டுமல்ல, ம.பி.யில் 21 சந்தைகள் e-NAM உடன் இணைக்கப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாண்ட்சோர் சந்தையும் அவற்றில் ஒன்று.
விளைபொருட்களுக்கு நியாயமான விலை, அரசு கொள்முதல் என்பதுதான் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. 25 பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அரசு நிர்ணயம் செய்தாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது நாடுமுழுவதும் நடக்கும் விவசாய கொள்முதலில் வெறும் 6% மட்டுமே. மீதமுள்ள பொருட்களை படுபாதாள விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், அதனைத் தடுக்கவோ தண்டிக்கவோ மத்திய மாநில அரசுகள் சட்டம் எதுவும் இயற்றவில்லை.
தேசிய மின்னணு சந்தையில் குறைந்தபட்ச விலைக்கு கீழே யாரும் விலை கேட்கக் கூடாது என்ற விதியெதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சுதந்திர சந்தைக்கு எதிரானது என்பதால் குறைந்தபட்ச விலை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.
அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் நவீன வேளாண் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலமைகளால் பெரும்பான்மையான சிறு விவசாயிகளின் சிறுவீத உற்பத்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதை FPO என்ற பெயரில் ஒன்றாகத் திரட்டி, சுதந்திரச் சந்தை முறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சிறு குறு விவசாயிகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவது என்பதற்காக தந்திர வலை விரிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள். வாழ வழிகேட்டு மன்றாடும் விவசாயிகளை இந்தக் கிடுக்கியால் பிடித்து, கார்ப்பரேட் முதலைகளுக்கு தின்னக் கொடுக்கிறது மோடி அரசு.
விவசாயம் குறித்த இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
குடிமக்களின் “அந்தரங்க உரிமை” (Right to privacy), இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 24-08-2017 அன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
ஆதார் திட்டத்திற்கு எதிராக, அதனைத் தடை செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கே.எஸ்.புட்டசாமி கடந்த 2012 -ம் ஆண்டு பொதுநல வழக்காக தாக்கல் செய்தார். அவரைப் போன்றே சமூக ஆர்வலர்களான பெசவாடா வில்சன், அருணா ராய், நிக்கில் தேய் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்டவர்களும் ஆதாருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.
“அந்தரங்க உரிமை” இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனினும் மத்திய அரசு ஆதார் திட்டத்தை ரத்து செய்யுமா என்பது கேள்விக்குறியே!
இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், “ஆதார் திட்டமானது, தனி மனித அந்தரங்க உரிமையைப் பறிப்பதாகவும், சமத்துவத்திற்கான உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது” என்றும், “அது மையப்படுத்தப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற அரசை நோக்கியே இட்டுச் செல்லும்; ஆதார் என்பது தனிமனித அந்தரங்கத் தகவல்கள் திருட்டுப் போவதற்கு வழிமுறையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது” என்றும் “இதன் காரணமாக, ஆதார் திட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்ய வேண்டும்” என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்ணி ஜெனரல் கே.கே. வேணுகோபால் “எம்.பி.சர்மா வழக்கு (1954)” மற்றும் “கரக்சிங் வழக்கு(1962)” ஆகியவற்றில் உச்சநீதிமன்ற அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பைச் சுட்டிக் காட்டி ‘அந்தரங்கத்திற்கான உரிமை’ என்பது அடிப்படை உரிமை அல்ல என வாதடினார்.
மேலும் அந்தரங்கம் என்பது ஒரு மேலோட்டமான கருத்தாக்கம்; மேலோட்டமான கருத்தாக்கங்களை எல்லாம் அடிப்படை உரிமைகளாக்க முடியாது; அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகிய எந்தப் பிரிவிலும் அந்தரங்கத்திற்கான உரிமை குறித்து குறிப்பிடப்படவில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தரங்கம் போன்று முழு வடிவமற்ற எதையும் அடிப்படை உரிமைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது; உணவு, உடை, இருப்பிடத்திற்கான அடிப்படை உரிமைகள், அந்தரங்க உரிமைகளை விட முதன்மையானவை என்றும் வாதாடினார்.
இறுதியாக வளரும் நாடுகளில் கண்டிப்பாக ஒரு அடையாள அமைப்பு முறை பின்பற்றப்பட வேண்டும், என்ற உலக வங்கியின் அறிக்கையை சுட்டிக் காட்டி ஆதார் கண்டிப்பாகத் தேவை என்று வலியுறுத்தினார். ஆதார் உலக வங்கியின் உத்தரவிற்கிணங்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்திருக்கிறார், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்.
இதனையடுத்து அந்தரங்கத்திற்கான உரிமை, அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையில் வருமா என்பது குறித்து முடிவெடுக்க 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம். அரசியல் சாசன அமர்வில் மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தமது பழைய வாதங்களையே முன் வைத்து வாதாடினார்.
மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்வாதம் வைத்த மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், “அந்தரங்கம் என்பது, சிந்திப்பதற்கும், சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கும் தனிமனித சுயாட்சிக்குமான சுதந்திரமே ஆகும்; இத்தகைய அந்தரங்க உணர்வை மேற்கொள்ளாமல் எவ்வித அடிப்ப்டை உரிமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது” என வாதாடினார்.
ஆதார் திட்டம் உலக வங்கியின் ஆணைப்படி செயல்படுத்தப்படுவதை மறைமுகமாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு வழக்குறைஞர் கே.கே. வேணுகோபால்
மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய முன்னால் அட்டர்னி ஜெனரல் சோரப்ஜி, அந்தரங்கத்திற்கான உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் 14, 19 மற்றும் 21 ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் அடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் பத்திரிக்கைக்கான சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தில் நேரடியாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய சோரப்ஜி, “பத்திரிக்கை சுதந்திரம் எவ்வாறு பிரிவு 19 -லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதோ, அதைப் போலவே அந்தரங்கத்திற்கான உரிமை என்பதை பிரிவு 21 -லிருந்து பரந்த முறையில் எடுத்துக் கொள்ளலாம்” என்று வாதிட்டார்.
இந்த வாத பிரதிவாதங்களைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை 24-08-2017 அன்று அறிவித்தது. அந்தரங்கத்திற்கான உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாகும்; அது, அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையில் (Right to live) அடங்கும்; அந்தரங்கத்திற்கான உரிமை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளுக்கான ஒட்டுமொத்த பிரிவுகளுக்குள்ளும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.
இத்தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் ஆதார் திட்டத்திற்கான பலத்த அடி எனக் கருதுகின்றனர். ஆனால் இதற்கு முன்னரே உச்சநீதிமன்றம் , ஆதார் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட்ட இலட்சணத்தை வைத்து ஆதார் திட்டத்தின் மீதான இத்தீர்ப்பின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
ஆதார் குறித்த ஒரு வழக்கில், ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆதார் இருந்தால் தான் பள்ளித் தேர்வு எழுத முடியும் என்பதில் தொடங்கி, ஆதார் இருந்தால் தான் பிணத்தைக் கூட எடுக்க முடியும் என்ற வகையில் தான் இன்று வரை மத்திய அரசு பல்வேறு சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இதுவரையிலும் மதிக்காத மத்திய அரசு, இனி மேல் புதுப்பிறவி எடுத்தா உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து விடப் போகிறது?
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதல் இன்று வரை தொடர்ச்சியாக உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம் ஆகிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிறுவனங்களின் மகுடிக்கேற்ற பாம்பாய் ஆடி வருகிறது. ஜன்–தன்–யோஜனா, மானியம் வங்கிக் கணக்கோடு இணைப்பு, புதிய கல்விக் கொள்கை, மருத்துவம் தனியார்மயம், சமையல் எரிபொருள் மானியம் இரத்து, ரேஷன் கடைகள் மூடல் எனத் தொடர்ச்சியாக மக்கள் நலத் திட்டங்களை முடக்கி, மானியங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்து விட முனைந்து வருகிறது.
இந்த மக்கள் விரோத செயல்பாடுகளை எல்லாம் ஊழல் ஒழிப்பு, வெளிப்படைத்தன்மை, முறைகேடுகள் ஒழிப்பு என பல்வேறு பெயர்களில் நியாயப்படுத்தி வருகிறது
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கவும் அதன் எதிர்ப்புகளை நசுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தி தான் ஆதார். ஆதார் என்னும் தனிப்பட்ட அடையாள முறையின் மூலம் மக்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகிறது மத்திய அரசு. இன்னொரு புறம் மக்களின் அனைத்து தகவல்களையும் பதிந்து கொண்டு அவர்களது வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றை தீர்மானிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதும் ஆதாரின் நோக்கமாகும்.
அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களோ, தனிநபர்களோ போராடும் போது அவர்களை தனித்தறிந்து அவர்களது அன்றாட செயல்பாடுகளை ஆதார் அட்டையின் மூலம் முடக்க முடியும். அதன் காரணமாகவே, ஆதாரை கல்வி பயில்வதில் தொடங்கி வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என இழுத்து கடைசியில் சுடுகாடு வரைக்கும் கட்டாயமாக்கியிருக்கிறது மோடி அரசு.
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்தரங்கத்திற்கான உரிமை, ஒரு அடிப்படை உரிமை என்பதை ஒரு காகிதத்தில் அச்சடித்துத் தந்திருக்கிறது, அவ்வளவுவே. இதனை அடிப்படையாக வைத்து, பிரதான வழக்கில் ஆதார் கட்டாயமாக்கப்படுவதை இரத்து செய்து இதே நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பது கேள்விக்குறியே! அப்படியே இரத்து செய்தாலும் அதனை மோடி அரசு நடைமுறைப்படுத்தாது என்பதே நமது முன் அனுபவம் நமக்குச் சொல்லும் பாடம். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட அரசு திட்டம் – மானியத்திற்கு பயனர்கள் அனைத்து தகவல்களையும் தரவேண்டும் என்று சொல்லிக் கூட மறைமுகமாக ஆதாரை கட்டாயமாக்க முடியும். “உங்கள் தேசத்தைக் காக்க உங்களது விவரங்களை கொடுங்கள், கொடுக்காதவர்கள் தேசவிரோதிகள்” என்று பாஜக அறிவுக் கூலிப்படையினர் விவாதங்களில் மிரட்டினார்கள். ஆக அப்படியும் கூட ஆதாரை மறைமுகமாக கட்டாயமாக்கலாம்.
ரேசன் மானியம் ரத்தானதை எதிர்த்துப் போராடுவதும், ஆதார் திட்டத்தை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல! இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் முதலாளிகளுக்கு விற்று வரும் இந்திய அரசு அதற்கான பிடிமானத்தை ஆதார் மூலம் உருவாக்க நினைக்கிறது. அல்லது கிட்டத்தட்ட உருவாக்கி விட்டது. முன்னதை வீழ்த்தும் போராட்டம் வலுப்பெறும் போது பின்னது தானாகவே வலுவிழக்கும்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி