Friday, June 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 513

போலீசு வன்முறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

1

போலீசு ராஜ்ஜியம்…
எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 01.02.2017
இடம் : தலைமை தபால் நிலையம், மஞ்சக்குப்பம். கடலூர்
நேரம் : மாலை 4:00 மணி

கடந்த 23-ம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தமிழகமெங்கும் போராடிய மாணவர்களை போலீசு கொடூரமகாத் தாக்கியது. அது மட்டுமில்லாமல் வீடுகளைக் கொளுத்துவது வாகனங்களை நொருக்குவது என வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது.
வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து வருகின்ற 01.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !

தலைமை :

தோழர் முராமலிங்கம், மக்கள் அதிகாரம் நகர்குழு உறுப்பினர், கடலூர்

கண்டன உரை :

  • தோழர் கு.பாலசுப்ரமணியன், மாநிலதலைவர், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம், கடலூர்.
  • திரு இள. புகழேந்தி, மாநில மாணவரணி செயலாளர் (தி.மு.க), கடலூர்
  • தோழர் பால்கி, நூல் விமர்சகர், கடலூர்
  • திரு T. மதிசேகர், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை, கடலூர்
  • திரு திலகர், B.A.B.L., வழக்கரிஞர், கடலூர்
  • திரு பண்டரிநாதன், வட்டபொதுச்செயலார்,தனியார்பேருந்து தொழிலாளர் சங்கம், கடலூர்
  • திரு கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளர் நல சங்கம், கடலூர்
  • திரு பூங்குண்றன், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு
  • திரு இளங்குமார், வர்ம வைத்தியம், கடலூர்
  • திரு ரவிச்சந்திரன், ராஜகுமார், மாற்றுதிறனாளிகள்நல சங்கம், கடலூர்
  • திரு ராஜேஷ், கட்டிடதொழிலாளர், கடலூர்

சிறப்புரை :

தோழர் நந்தா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், குறிஞ்சிப்பாடி வட்டாரம்.

noticeதகவல் :
மக்கள் அதிகாரம்.
கடலூர் வட்டாரம். 81108 15963

நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

7

ல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார்.

Nirmala dislike
நிர்மலா சீத்தாராரமனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் வெறுப்புக்களை அள்ளுகின்றன. இங்கே 54 பேர் விரும்புகிறார்கள் என்றால் 445 பேர் வெறுக்கிறார்கள்!

எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது. அதனால் தான் அவர் பேட்டிக்கு YOUTUBE -ல் வெறுப்புக்கள் குவிந்து வருகின்றது.

“நுணலும் அதாவது தவளையும் தன் வாயாலே கெடும். பாஜக-வும் தன் கையாலே புழுதி வாரித் தூற்றிக் கொள்ளும்.”

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

31

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 1

கைபேசியில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளித் துண்டின் காட்சிகள் நடுக்கத்தோடு விரிகின்றது. கவிழ்த்துப் போட்ட நாடாக் கட்டில் ஒன்றின் மேல் வெள்ளுடை போர்த்தப்பட்ட உடல் கிடக்கிறது. காவல் துறை அதிகாரிகள் சிலர் கலைந்து நிற்கின்றனர். ”ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்… கொன்னுட்டானுகளே… கொண்டுட்டுப் போன அன்னிக்கே கொன்னுட்டானுகளே” – வயதான பெண் ஒருவரின் ஓலம் அந்தக் காட்சியில் பின்னணியாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கையறு நிலையில் தன்னறியாமல் ஒலிக்கும் அந்தக் குரல் நமது செவிப்பாறைகளைக் கடந்து இதயத்தைப் பிளக்கிறது.

Nandhiniயாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

”சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள் நந்தினி.

நந்தினியின் குடும்பத்தார் அவளை “பாப்பா” என்றே அழைக்கின்றனர். பதினேழு வயதான அவள், தந்தையில்லாத அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. நந்தினிக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உண்டு. மூத்த சகோதரிக்குத் திருமணமாகி விட்டது. அந்தப் பிள்ளைகளில் எவருமே மேல்நிலைக் கல்வியைக் கூட எட்டாதவர்கள்; பிள்ளைகள் தோளுக்கு வளர்ந்ததும் கூலி வேலை செய்தால் தான் சாப்பாடு எனும் அளவுக்கு வறுமை. தாய் ராசக்கிளியும் கூலி வேலைக்குத் தான் செல்கிறார்.

“இந்திரா ஆவாஸ் யோஜனா” என்கிற அரசின் வீட்டு வசதித் திட்டம் ஒன்றின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அவர்கள் வீட்டில் தரைத்தளம் இல்லை; சாணியால் மொழுகப்பட்ட மண் தரை. புழங்குவதற்காக தற்காலிக தடுப்பு வைத்து இரண்டாக பிரிக்கப்பட்ட ஒரே நீண்ட கூடம் கொண்ட அந்த வீட்டில், தாயின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார் நந்தினி. எட்டாம் வகுப்புடன் நந்தினியின் படிப்பை நிறுத்தி விட்ட அவளது தாயார், கிடைக்கும் சிறு சிறு கூலி வேலைகளுக்கு அவளுக்கு ஒத்த வயதுடைய தோழி தேவியுடன் அனுப்பி வைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி
கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி

கடந்த 29-ம் தேதி தேவியுடன் வீட்டை விட்டுச் சென்ற நந்தினி 14-ம் தேதி பிணமாகத் தான் கிடைத்துள்ளார். இது வெறும் மரணமல்ல; திட்டமிட்ட பச்சைப் படுகொலை. நந்தினி ஏன் கொல்லப்பட்டாள்? யாரால் கொல்லப்பட்டாள்? எப்படிக் கொல்லப்பட்டாள்? எதற்காக கொல்லப்பட்டாள்?

சிதைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல் புதையுண்டு போனாலும், இந்தக் கேள்விகள் முக்கியமானவை. ஏனெனில், மீண்டும் ஒரு நந்தினி கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டுமென்றால் நமக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

29-ம் தேதி இரவு நந்தினி வீடு திரும்பவில்லை; ஆனால், அன்று இரவு 8:30 மணிக்கு ராசக்கிளியின் அக்காள் மகள் வெண்ணிலாவுக்கு _____ என்கிற தொலை பேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. நந்தினி தான் பேசியிருக்கிறார். தான் செந்துறை அருகில் உள்ள வெல்லூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தனது தாயார் ராசக்கிளியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்து விட்டு உடனே அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார் நந்தினி. வெண்ணிலா இந்த விசயத்தை உடனடியாக தனது சித்தி ராசக்கிளியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்துள்ளனர்; ஆனால் அந்தக் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

உடனே ராசக்கிளியும், உறவினர்களும் நந்தினியின் தோழி தேவியிடம் விசாரித்துள்ளனர். தனக்கு ஏதும் தெரியாது என தேவி மறுத்து விடவே, உடனே இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்துக்கு ஓடியுள்ளனர். தங்கள் மகள் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்த அதிகாரிகள் எதுவாக இருந்தாலும் நாளை காலை வந்து பார்த்துக் கொள்ளும்படி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

பார்க்க:
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

மறுநாள் மீண்டும் புகாரளிப்பதற்குச் சென்ற போது, காவல் நிலையத்திலிருந்த அதிகாரி மணிவண்ணன் என்பவர், “உன் பிள்ளை எவனோடோவோ ஓடிப் போயிருச்சி… இதையெல்லாம் கடத்தல் புகாரா வாங்க முடியாது. கேர்ள் மிஸ்ஸிங் என்று எழுதிக் கொடுங்க” என்று எழுதி வாங்கியுள்ளார். பொதுவாக பதினெட்டு வயதுக்கு மேலான பெண்கள் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி அது புகாரானால் மட்டுமே ”கேர்ள் மிஸ்ஸிங்” என புகாரைப் பதிவு செய்வது வழக்கம் – பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்ணை ஒருவர் பெற்றோரின் சம்மதமின்றி அழைத்துச் சென்றால் “கடத்தல்” என்றே புகார் பதியப்பட்டிருக்க வேண்டும்.

Nandini (20)
தாய் ராசாக்கிளியின் புகார் மனு

இதற்கிடையே 30-ம் தேதி தங்கள் உறவினர் ஒருவரை வெல்லூருக்கு அனுப்பி விசாரித்ததில், அந்த ஊரில் இருக்கும் ஒரே தமிழரசனும் மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிய வருகின்றது. ஆக, நந்தினியைக் கடத்திச் சென்றவர்கள் அவளது வீட்டாரைக் குழப்ப வேண்டுமென்பதற்காக தவறான தகவலை நந்தினியை விட்டே சொல்ல வைத்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது. உடனே நந்தினியின் குடும்பத்தார் தேவியிடம் விசாரிக்கின்றனர்; அவர் மீண்டும் மறுக்கவே ஊர் பஞ்சாயத்தை கூட்டி விசாரிக்கின்றனர்.

விவகாரம் பெரிதாவதைக் கண்டு பயந்த தேவி உண்மையை பஞ்சாயத்தில் தெரிவித்து விடுகிறார். இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கடந்த ஆறேழு மாதங்களாக நந்தினியை காதலித்ததாகவும், அவனே நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி தெரிவித்துள்ளார். மணிகண்டன் வன்னியர் என்பது தெரிந்தவுடன் நந்தினியின் உறவினர்கள் பதறியுள்ளனர். மணிகண்டன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதோடு, மணிகண்டன் கொலை செய்யவும் அஞ்சாதவன் என்பதையும் அப்படிச் செய்தாலும் அவனை தண்டனையிலிருந்து தப்புவிக்க இந்து முன்னணி என்கிற பயங்கரவாத அமைப்பு அவனுக்குப் பின் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இதற்கிடையே அரியலூர் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளை அணுகும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி நடப்பதாகவும், மணிகண்டன் தங்களது அமைப்பில் இருந்து டிசம்பர் 29 தேதியன்றே விலகி விட்டாரென்றும் மனு ஒன்றை அளித்துள்ளார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற ரீதியிலான மேற்படி மனுவை கர்ம சிரத்தையுடன் பெற்றுக் கொண்ட காவல்துறை, இன்று வரை ராஜசேகரை விசாரிக்க மறுத்து வருகின்றது.

நந்தினியின் உறவினர்கள் சிலர் காவல் துறையில் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ளனர். இவர்களுக்கு இந்து முன்னணியின் பயங்கரவாத முகம் நன்கு தெரியும் என்பதால் நந்தினியின் குடும்பத்தை எச்சரிக்கை செய்து உடனே மீண்டும் இரும்புலி காவல் நிலையத்தை அணுகுமாறு ஆலோசனை கொடுத்துள்ளனர். 30-ம் தேதியே மீண்டும் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்ற இவர்களை அதிகாரிகளின் அலட்சியமும் திமிரும் வரவேற்றுள்ளது. சிறீரங்கத்துக்கு பந்தோபஸ்து பணிக்காக காவலர்கள் செல்ல வேண்டியுள்ளதைச் சொல்லி இந்தக் குடும்பத்தை மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.

Nandini (12)
மாவட்ட காவல் கண்கானிபாளரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுக்கப்பட்ட புகார் மனு

அடுத்த ஓரிரு நாட்கள் ஏற்கனவே கணவனை இழந்திருந்த ராசக்கிளி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்துள்ளார். காதல் விவகாரத்தில் மகள் வெளியேறியிருப்பதால், எப்படியும் திரும்பி வந்து விடுவாள்; எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்கிற மெல்லிய நம்பிக்கை அந்தத் தாயின் மனதில் இருந்துள்ளது. எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் மீண்டும் ஜனவரி 3-ம் தேதி காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இம்முறை தேவியையும், மணிகண்டனையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் வைத்து மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார் தேவி. மேலும் ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் நந்தினிக்கு தொடர்ந்து ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததாகவும், நண்பர்களோடு எந்நேரமும் அவளைப் பின்தொடர்ந்ததாகவும் தெரிவித்த தேவி ஒரு கட்டத்தில் மணிகண்டன் ஏதேதோ ஆசை வார்த்தைகளைச் சொல்லி நந்தினியை தன் வலையில் வீழ்த்தியதாகவும் இதன் காரணமாக நந்தினி கருவுற்றதாகவும், அந்தக் கரு ஐந்து மாதத்திற்கும் மேல் வளர்ந்து விட்ட நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள நந்தினி மணிகண்டனைக் கேட்ட நிலையிலேயே அவன் நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி காவல் நிலையத்தில் விரிவாக சாட்சியளித்துள்ளார்.

இவ்வளவு விரிவான சாட்சிக்குப் பிறகும், மணிகண்டனிடம் பெயருக்கு விசாரித்து விட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர் இரும்புலி போலீசார். அந்த விசாரணைகளில் முன்னுக்குப் பின் முரணாக மணிகண்டன் உளறியதோடு தனக்கு ஏதும் தெரியாது என்றும் மறுத்துள்ளான். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த உடனேயே தலைமறைவாகிறான் மணிகண்டன்; அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அழைத்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவன் பயந்து போய் மருந்தைக் குடித்து விடவே போலீசாருக்குத் தலைவலி துவங்குகிறது.

மணிகண்டனின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் துவங்குகிறார்கள், இரும்புலிகுறிச்சி போலீசார். எனினும், தங்களது நடவடிக்கைகளில் மெத்தனத்தையும் அலட்சியத்தையும் போலீசார் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இதற்கிடையே நந்தினி கடத்தப்பட்ட வழக்கும் இதில் இந்து முன்னணிக்கு இருக்கும் தொடர்பும் போலீசாரின் அலட்சியமும் பொன்பரப்பி மற்றும் செந்துறை பகுதிகளில் இந்து முன்னணியின் அராஜகங்களைத் தொடர்ந்து தட்டிக்கேட்டு வந்த தோழர்கள் சிலரின் கவனத்துக்கு வருகின்றது.

Nandini (19)
மணிகண்டனை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட் BSP – சுவரொட்டி

பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து சுவரொட்டி பிரச்சாரமும், ஆர்பாட்டங்களையும் செய்யத் துவங்கவே காவல் துறைக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இதற்கிடையே 8-ம் தேதி மாவட்ட எஸ்.பியிடம் மணிகண்டன் மற்றும் அவனது கிரிமினல் நடவடிக்கைகளை வழிகாட்டி இயக்கும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அனுப்பப்படுகின்றது.

வெளியே விவகாரம் முற்றி வருவதை உணர்ந்து திசை திருப்பும் சதித்திட்டத்துடன் 12-ம் தேதி மருந்தைக் குடிக்கும் மணிகண்டனை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். 13-ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் மணிகண்டனின் கூட்டாளிகளுமான மணிவண்ணன், திருமுருகன் மற்றும் ராஜதுரை ஆகியோரைத் தூக்கி வந்து விசாரிக்கும் காவல்துறை, 14-ம் தேதி நந்தினியின் பிணத்தை மணிகண்டனின் கிராமமான கீழமாளிகையில் அவனது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து கைப்பற்றுகிறது.

29-ம் தேதி நந்தினியை நண்பர்கள் துணையுடன் கடத்திய மணிகண்டன் தடயத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறான். அவனது செல்போன் அடுத்த ஓரிரு நாட்களில் கீழமாளிகையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாடம் டவரின் எல்லையில் பதிவானதாக (Tower login) காவல்துறை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகரிடம் தெரிவித்துள்ளார்.

நந்தினியைக் கடத்திய மணிகண்டன் அவளைத் தனது சகாக்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கருவைக் கலைக்க முயற்சித்துள்ளான். இதற்காக சில மருத்துவமனைகளுக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளான். ஆறு மாதக் கருவைக் கலைக்க முடியாது என்பது தெரிய வந்தவுடன், அவளைக் கொல்லும் முடிவை எடுத்துள்ளான். கடத்தப்பட்டதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நந்தினியின் வாயைத் துணியால் கட்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளான். ஒருவேளை காவல்துறையினர் புகார் கிடைத்ததும் 29-ம் தேதி இரவே தங்கள் நடவடிக்கையைத் துவங்கியிருந்தால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

மயங்கிய நிலையில் கிடந்த நந்தினியின் உடலைச் சிதைத்த மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் பிளேடால் அவளது பெண்ணுறுப்பைக் கிழித்துள்ளனர்; பின்னர், பெண்ணுறுப்பின் வழியே கையை விட்டு உள்ளேயிருந்து சிசுவை எடுத்து எரிக்க முயற்சித்துள்ளனர். மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் நந்தினியின் வயிற்றிலிருந்த சிசுவைத் துணியில் சுற்றி எரித்து விட்டதாகவே பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

கொடுக்கூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லுக்குழியில் வைத்து இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய அவர்கள், அவளது துணியை அங்கேயே எரித்து விட்டு நிர்வாண உடலை மறைக்க இடம் தேடி ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் ஜீப்பில் போட்டுக் கொண்டு அலைந்துள்ளனர். பின்னர் கொடுக்கூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழமாளிகையே பிணத்தை மறைப்பதற்கு தோதான இடம் என முடிவெடுத்துள்ளனர்.

Nandini (3)
கொலை செய்யப்பட்ட நந்தினி வீசப்பட்டிருந்த கிணறு

கிணற்றில் வீசினால் அதன் நாற்றம் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும் என நினைத்து பக்கத்திலேயே ஒரு நாயை அடித்துப் போட்டு விடலாம் என முடிவெடுத்துள்ளனர். செத்த நாயின் நாற்றம் பிண வாடையை அமுக்கி விடும் எனத் திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனும் கூட்டாளிகளும் வெள்ளை ஜீப் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் நாயைத் தேடி அலைந்ததை கீழமாளிகை கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த வயதான பெண் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். நாய் கிடைக்காமல் போகவே நந்தினியின் பிணத்துடன் கல்லைக் கட்டி எரிந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள். காமவெறியேறிய சொறிநாய் கூட கர்ப்பம் தரித்த பெண் நாயை உறவுக்கு நாடாது… ஆனால் இந்த மிருகங்களோ ஒரு கர்ப்பினிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கேட்பவர் நெஞ்சம் பதறும் வகையில் கொன்று போட்டுள்ளனர்.

நினைத்தாலே குலை நடுங்கும் இந்தக் காரியங்களைச் செய்ய இவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது? இவர்களின் குற்றப் பின்னணி என்ன? இவர்களின் பின்னே யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்து மாபியா கும்பலான இவர்களின் உள்ளூர் மற்றும் வெளியூர் தலைவர்கள் யார்? நந்தினியின் கொலையில் மூளையாகச் செயல்பட்ட இந்து முன்னணியின் முக்கிய பிரமுகர் யார்? அவன் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அரியலூர் போலீசார் இவர்களின் குற்றங்களுக்கு உடன்பட்டுப் போவது ஏன்?

மிக முக்கியமாக… இந்து முன்னணிக் காமவெறிக் கொலையாளிகளுக்கு இது புதிதல்ல என்பதும் எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.

( தொடரும்… )

– வினவு செய்தியாளர்கள்

இரண்டாம் பாகம் :
♣ நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2 ( நிறைவுப் பாகம் )
♣ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

ஆர்.எஸ்.எஸ் – அந்தப்புரம் : கேலிச்சித்திரங்கள்

5

ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்கள் !

3கூட்டத்துல பின்லேடன் படத்தை எடுத்துட்டுப் போங்க.
எல்லோர் கையிலும் தேசியக் கொடியை குடுங்க.
ABVP பசங்களை இறக்கிவிட்டு பொண்ணுங்களை சீண்டுங்க.
ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்க. மொத்தத்துல…
கூட்டத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்கங்கிற கருத்தை உருவாக்கிடனும்.

_______________

மெரினா கூட்டத்தில் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர் ! – மிக்ஸர் பன்னீர்

1-1

மெரினா கூட்டத்தில் சமூகவிரோதிகள் பின்லேடன் படத்துடன் நுழைந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

எல்லாம் சரி பன்னீரு…
ஆனா பின்லேடன் படம் ஒட்டியிருந்த பைக்கு
“இந்து முன்னணிக்காரனோடதுங்கிறதை” மட்டும் மறைச்சிட்டீங்களே…?

_______________

மேகாலயா ராஜ்பவன் RSS-இன் அந்தப்புரம் !

02

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை. 95518 69588

இணையுங்கள்:

கலவரம் செய்த போலீசை கைது செய் ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்

1

மாணவர்கள் பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் !
தீ வைப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காவல் துறையினரைக் கைது செய் !
பணிநீக்கம் செய் !

கண்டன ஆர்ப்பாட்டம்

10  x 3  PRPC  Print

நாள் : 30.01.2017
இடம் : விக்னேஷ் ஓட்டல் அருகில்,மத்திய பேருந்து நிலையம், திருச்சி.
நேரம் : திங்கள் மாலை 5.00 மணி.
            

தலைமை :
வழக்கறிஞர் ப.முருகானந்தம்
, B.A.,B.L.,
மாவட்ட செயலாளர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

கண்டன உரை :

  • வழக்கறிஞர். சீனிவாசன், B.COM.,B.L.,  தலைவர்
    திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம்
  • வழக்கறிஞர் ராஜேந்திரகுமார்,
    தலைவர், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், திருச்சிராப்பள்ளி
  • வழக்கறிஞர் மருதநாயகம் ,  மூத்த வழக்கறிஞர் திருச்சி
  • வழக்கறிஞர் இரா ஆதிநாரயணமூர்த்தி.B.COM.,BL,
    (செயற்குழு உறுப்பினர்), மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி
  • சே.வாஞ்சிநாதன் BSC.,B.L., (வழக்கறிஞர் பணிநீக்கம்)
    மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
  • வழக்கறிஞர் சு.  ஜோதி, B.A., B.L.,  திருச்சி.
  • காவேரிநாடன், தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி
  • நன்றியுறை : வழக்கறிஞர். மா.சிவசங்கர், M.A.,B.L.,
    செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

PRPC

அன்பார்ந்த பொதுமக்களே ! வழக்கறிஞர்களே ! மாணவர்களே !

கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஒன்று. இப்போராட்டத்தை இந்தியாவே ஏன் உலகமே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர், அறிவுஜீவிகள், என அனைவராலும் பேசப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட போராட்டம் வன்முறை வெறியாட்டமாக மாற யார் காரணம்.? கலவரத்தை நடத்தியவர்கள் யார்?

கடந்த 16.01.2016 தொடங்கிய இந்த போராட்டத்தில் எந்த அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ தன்னுடைய அடையாளத்தோடு பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தை ஆதரித்து பங்கேற்றுள்ளனர். இது எதுவும் யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. தொடங்கிய நாளிலிருந்தே ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்லாமல் தமிழர்களின் உரிமையான காவிரி , நீட் தேர்வு , சமஸ்கிருத திணிப்பு,ம் மீனவர் பிரச்சினை போன்றவற்றையும் உள்ளடக்கியே அனைவரும் பேசினர். ஆரம்பம் முதலே காவல்துறை , போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது போன்ற  தோற்றத்தினை மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வந்தது..

தொடங்கியதிலிருந்து ஆறு நாட்களாக காவல் துறையுடன் சிறு முரண்பாடுகூட ஏற்படாததுடன் காவல்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ஏழாவது நாள்  அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் போராடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து அவர்களை களைக்க முயன்றதேன் ? ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பற்றி வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து கலைந்து செல்வதாகவும் அதற்கு இரண்டு மணிநேரம் மட்டும் அவகாசம் கேட்டதை கூட அனுமதிக்காமல்  அவசரகதியில் அடித்து துரத்தும் வேலையில் காவல்துறை  அராஜகமாக ஈடுபட்டதேன். என்ற கேள்விகளை அனைவரும் எழுப்புகின்றனர் ஆனால், அரசும் காவல் துறையும் தங்கள் ஜனநாயக விரோத, சட்டவிரோத செயலை நியாயப்படுத்துவதற்காக மாணவர்களையும் அவர்களை ஆதரித்து வந்த ஜனநாயக சக்திகளையும் வன்முறையாளர்களாக சித்தரிக்க முயன்றுள்ளது. இதற்காக தானே திட்டமிட்டு குடிசைகளுக்கு தீ வைத்தல், வாகனங்களை கொளுத்துதல், பொதுச் சொத்துகளை சேதப் படுத்துவது போன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டுள்து. குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொது மக்களைத் தாக்கி கைது செய்து பீதியூட்டி வருகிறது. இவையனைத்தும் சமுக ஊடகங்கள் வழியே பல்வேறு ஊடகங்களில் அம்பலமாகி  மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். இந்த வன்முறையை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், கோவை மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், காவல் நுண்ணறிவுத்துறை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்களை கொண்டு காவல்துறையும் அரசும்  நிறைவேற்றி இருக்கிறது.

முல்லை பெரியாறு, கூடங்குளம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான  பிப்ரவரி 19 தாக்குதல் போன்ற அனைத்திலுமே போராடியவர்கள் மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்ற சாயத்தை ஊற்றி தனது கோர முகத்தை மறைப்பதில் கைதேர்ந்தது இந்த காவல்துறை.

அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையையும் அரசியல், பண்பாட்டு உரிமைகளையும் இழந்து நிற்கும் மக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயம் அழிந்த விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்ட எழச்சி அத்தகைய பல பிரச்சினைகளுக்கானதாகவும் மாறிவிடக்கூடாது என்ற அரசின் அச்சத்தின் விளைவாகவே போராட்டத்தை அவசர அவசரமாக முடிக்க முயற்சித்தது. அதற்காக ஜனநாயக விரோத, சட்ட விரோத வழிமுறைகளைக் கையாள முயற்சித்துள்ளது.

அரசியலைப்பு சட்டம் ஷரத்து 14,  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. அந்த வகையில் இந்த கலவரத்தை ஏற்படுத்திய காவல் துறையினர் அனைவரும்  தண்டிக்க பட வேண்டியவர்களே!  தீ வைத்து தனிநபர் சொத்துக்களை சொத்தழிப்பு செய்தது, பொதுசொத்துகளை சேதப்படுத்தியது, கொடுங்காயம் ஏற்படுத்தியது, கொலைமுயற்சி மற்றும் கருவில் இருந்த சிசுவை எட்டி உதைத்து அதை கொலை செய்தது, பெண்களை மாணபங்கபடுத்தியது , உள்ளிட்ட இந்திய தண்டணை சட்ட பிரிவுகளின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அவர்கள் அரசியலைப்பிற்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்களல்ல. அந்த வகையில் கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களே!

நீதித்துறையே !

  • காவல் துறையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது மட்டுமே நீதியாகாது.
  • காவல் துறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் நீதித்துறை முனைவு (JUDICIAL ACTIVISM) கொண்டு வழக்குபதிவு செய் ! கைது செய்து விசாரணை செய்ய உத்திரவிடு! பணிநீக்கம் செய் !

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி. 94875 15406

_________________

PP Logo

போலீசு ராஜ்ஜியம் எழுந்துநின்ற தமிழகமே ! எதிர்த்து நில்!

ஆர்ப்பாட்டம்


நாள் : 30.
01. 2017
நேரம் : மாலை 4 மணி
இடம் : குமணன் சாவடி (பூந்தமல்லி அருகில்), சென்னை.

  • பொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசுதான், போராடுபவர்கள் அல்ல !
  • அமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் ! கைது செய் !

தலைமை : தோழர். வெற்றிவேல செழியன்,
சென்னை மண்டலஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

உரைவீச்சு :

  • தோழர் இளஞ்சேகுவேரா, தலைமை நிலையச்செயலர், விசிக
  • தோழர் கே.சுகுமார் வழக்கறிஞர், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ
  • தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில மாணவரணிச் செயலர்,திக
  • தோழர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர்,சென்னை மாவட்டச் செயலர், சிபிஐ  – எம்.எல்
  • தோழர் அஜிதா, இணைச்செயலர், சென்னைக்கிளை,பெண்கள் விடுதலை முன்னணி
  • தோழர் கார்த்திக்கேயன், மக்கள் கலை இலக்கியக் கழகம்
  • தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் அதிகாரம்

 தகவல் :
தோழர்.வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.91768 01656.

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

5

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர வேண்டும் என்கிறார் தோழர் ராஜு.

போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !

0

போலீசின் கொலைவெறி : மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அமைதியாகப் போராடிய மாணவர்கள்-மக்கள் மீது திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு தமிழகத்தில் அரசியல் சட்ட சீர்குலைவை ஏற்படுத்திய, சமூக விரோத காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  நேற்று (27.01.2017) காலை 11.30-க்கு மதுரை வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கனகவேல், வில்லவன்கோதை, பொற்கொடி, நாகை.திருவள்ளுவன், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்து போராடியதால் வாழ்நாள்தடை விதிக்கப்பட்ட வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னாள் செயலர் திரு.ஏ.கே. இராமசாமி கலந்து கொண்டார். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, பலருக்கு தகவல் சொல்ல முடியாத சூழலிலும் நிறைய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பேசிய அனைவரும் “அமைதியாகப் போராடிய மாணவர்கள்-மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது காவல்துறைதான் என்றும், போலீசே தீவைப்பது, பஸ்சை, இருசக்கர வாகனங்களை உடைப்பது ஆகிய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன” எனக் குறிப்பிட்டனர். அலங்காநல்லூர், மதுரை செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காவல்துறை சட்டவிரோதமாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தாக்குவதை, மிரட்டி பொய்வழக்குப் போடுவதை அம்பலப்படுத்தினர். குறிப்பாக அலங்காநல்லூர் ஆய்வாளர் அன்னராஜ், செல்லூர் ஆய்வாளர் ராஜேந்திரன், தல்லாகுளம் ஆய்வாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பலரையும் காவல்நிலையத்தில் பிடித்துவைத்து கொடூரமாகத் தாக்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதைக் கண்டித்தனர். மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்றும், வழக்கறிஞர்கள் நாங்கள் இருக்கிறோம் எனவும், இலவச சட்ட உதவி செய்வோம்-அதற்கான குழுவை அமைத்துள்ளோம், குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளை நிச்சயம் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்” என்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் குறிப்பாக இத்தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டு நடத்திய தமிழ்நாடு டி.ஜி.பி. இராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகள் எனப் பீதியூட்டும் வேலையை உளவுத்துறை மேற்கொள்கிறது. இது எடுபடாது. மக்கள் தெளிவாக உள்ளனர். இதே போல் போராட்டத்தில் தமிழர்கள் என்ற முறையில் கலந்து கொண்ட இசுலாமிய சகோதரர்களை காவல்துறை குறிவைக்கிறது.

இதை நாம் அனுமதிக்கக் கூடாது. உண்மையில் மக்கள் விரோத, தேச விரோத சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-அ.தி.மு.க-காவல்துறை-உளவுத்துறைக் கூட்டம்தான்; இவர்கள்தான் “இனிமேல் தமிழ்நாட்டில் இப்படி ஒரு போராட்டம் வேறு கோரிக்கைகளுக்கு வரக்கூடாது, “போலீசு, அரசு என்றால் மக்களுக்கு பயம் இருக்க வேண்டும்” எனத் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.” “இவ்வாறு சட்டத்தின் ஆட்சியை காக்கவேண்டிய அரசின் அமைப்புக்களே, திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடுவது அரசியல் சட்ட சீர்குலைவை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது, இதனால் நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட வேண்டும்” என்றனர்.

 

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.

____________________

போலீசின் கொலைவெறியைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடு!

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி ஜனவரி 16 முதல் 22 வரை சென்னை , மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும்  மாணவர்கள் – இளைஞர்கள் – பொது மக்கள்  ஆதரவோடு அனைவரும் அறவழிப் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் வெற்றிபெறும் தருவாயில் காவல் துறை முறையான நம்பகத்தன்மையுள்ள அறிவிப்பு ஏதும் வழங்காமல் அனைவரையும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து போக வற்புறுத்தியது.

போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாத சூழ்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை  பின் வாங்க மறுத்தனர். “காவல் துறை உங்கள் நண்பன், உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் ” என்று  பீற்றிக் கொண்டிருந்த  போலீசு  உடனே தனது காட்டு மிராண்டித்தனமான கொலை வெறித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது.

2

பெண்களை மானபங்கப்படுத்தி அடித்து உதைத்துள்ளது. குழந்தைகள் என்றும் பாராமல் மண்டைய உடைத்து பிளந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் காவல் துறையே கலவரத்தை ஏற்படுத்தி, குடிசைகளை கொளுத்தி, வாகனங்களை நொறுக்கி சேதப்படுத்தியுள்ளது. இவை ஆதாரங்களுடன் ஊடகங்களில் அம்பலப்பட்டுள்ள போதும் போலிசின் இந்த காட்டு மிராண்டி நடவடிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே கலவரத்திற்கு காரணமான  காவல்துறையினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனவரி 26, 2017 அன்று திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் மாலை 6.00 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகள் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த அமைப்புகளின் முன்னணி தோழர்கள் போலீசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக தங்களது உரிமைகளுக்காக போராடிய குடிமக்களை, குற்றவாளிகளை போல் நடத்தி அடித்து துன்புறுத்திய பிறகு குடியரசு தின விழா ஒரு கேடா? என கேள்வி எழுப்பினர்.3

மேலும் ஜல்லிக்கட்டு முழக்கம், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான அரசியல் முழக்கமாக மாறியது தான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணம் என்பதை ஆணித்தரமாக நிறுவினர். அதை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வழக்கறிஞர் ஆதி நாராயண மூர்த்தி அவர்கள் ,  “போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது  மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்து குதறும் என” காவல் துறையின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

விவசாயிகள் சங்கத்தலைவர் ம.பா. சின்னத்துரை அவர்கள், ஜெயலலலிதா இறந்த பிறகு அதிர்ச்சியில் இறந்த தொண்டர்கள் என இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு அரசு, விவசாயிகள் தற்கொலைக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும் மாணவர்கள் விவசாயிகளுக்காகவும் களம் இறங்கி போராடுவது தங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்றார். இடையிடையே ம.க.இ.க தோழர்கள், போலிசின் அடக்குமுறையையும், கையாலாகாத்தனத்தையும் பாடல்கள் வாயிலாக அம்பலப்படுத்தினர்.

திருச்சியை தவிர அனைத்து இடங்களிலும் காவல் துறையினரால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் தான் அடக்குமுறை நடக்கவில்லையே  என காவல்துறையிடமே போய் செல்பி எடுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாடுவது வக்கிரமானது. ஏனெனில் பிற இடங்களில் அடி வாங்கியதும் தமிழர்கள் தானே !

உரிமைக்காக  ஒன்றாக போராடிய நாம் , மாணவர்கள் மீதான காவல் துறையின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போரடவேண்டும் என இப்போராட்டம் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

செய்தி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி. தொடர்புக்கு:99431 76246

____________________

போலீஸ் கொலை வெறி தாக்குதலை கண்டித்து புதுச்சேரி ஆர்ப்பாட்டம் !

​ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடிய மாணவர்கள் – மக்கள்  மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் செய்ததை கண்டித்து ஜனவரி  24-ஆம் தேதி புதுவை அண்ணாசலை, அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசின் வன்முறை வெறியாட்டங்களை  அம்பலப்படுத்தி பேசினர்.

Pudhucery (8)
இதில் மக்கள் அதிகாரம் தோழர் பிரகாஷ் தலைமையேற்றார் அதைத் தொடர்ந்து பெரியார் திராவிட விடுதலை கழக தோழர் கோகுல் காந்தி நாத், பு.மா.இ .மு அமைப்பாளர் தோழர் பரத்,  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணை செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
புதுச்சேரி ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​.

ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ

8

கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் துரோகிகள் எட்டப்பனும், தொண்டைமானும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றனர். அதே போலத்தான் நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும் வருகிறார்கள். எப்படி வரலாறு தொண்டைமானை காறி உமிழ்கிறதோ அதே போல இவர்களையும் வரலாறு காறி உமிழும். போராட்டக்காரர்கள் துரோகிகளுக்கு தந்த செருப்படியைப் பாருங்கள் பகிருங்கள்.

 

பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !

2

Shanmuganathan”கடந்த பல ஆண்டுகளில் ஏழு சகோதரிகள் எனச் சொல்லப்படும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு வகையான சிந்தனைகளுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்களிடம் தேசிய சிந்தனைகளைப் புகுத்துவதே ஆளுநராக எனது முக்கிய பணி” என்று 2015-ம் ஆண்டு மே மாதம் பத்திரிகை ஒன்றின் பேட்டியில் குறிப்பிட்டார் வி.சன்முகநாதன். மேகாலயா மாநில ஆளுநராக மத்திய பாரதிய ஜனதா அரசால் அப்போது அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் இந்துத்துவ அரசியலை மேலிருந்து திணிக்கும் ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு கேந்திரமான புள்ளியாக சண்முகநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இதற்குப் பரிசாக அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின்  பொறுப்பு ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

மேற்படி சண்முகநாதன் மேகாலையா ஆளுநர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் பதவிகளை தற்போது ராஜினாமா செய்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களின் வாயில் புனல் வைத்து புகட்டிய தேசிய சிந்தனைகள் அஜீரணமாகியதன் விளைவாக ராஜினாமா செய்தாரா?

இல்லை. மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஆளுநர் மாளிகையை அந்தப்புரமாக மாற்றியது அம்பலமாகி நாறியுள்ள நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் சண்முகநாதன். அவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என மேகாலய இளம்பெண் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேகாலய மாநில மக்கள் தொடர்பு அதிகாரி பதவிக்கு தாமே நேர்காணல் செய்வதாக கூறி தெரிவு செய்யப்பட்டவர்களை கவர்னர் மாளிகைக்கு வரவழைத்துள்ளார் சண்முகநாதன். கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி இரவு 7 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று இப்பெண்ணை அழைத்திருக்கிறார்கள்.  அங்கு சென்ற இப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கிறார் சண்முகநாதன்.

“அவர் என்னை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். எனக்கு கவர்னர் மாளிகையில் ‘பகுதிநேரமாகவோ இல்லை முழுநேரமாகவோ’ வேலை தருவதாக கூறினார்” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண். தனக்கு நேர்காணல் நடக்கும் போது யாரும் அருகில் இல்லை என்றும் ஆளுநர் மாளிகையில் ஆடம்பரமான ஒரு அறையில் நேர்காணல் நடந்தது என்று தெரிவித்துள்ளார் அப்பெண்.

ஆனால் இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளான டிசம்பர் 7-ம் தேதியே மேற்கண்ட பதவிக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. எமோர்தினி தங்ஹியூ என்ற பெண்ணிற்கு நேர்காணல் முடிந்து அவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அப்பெண்ணிடம் தெரிவித்திருக்கிறது ஆளுநர் மாளிகை.

இது தொடர்பாக சண்முகநாதன் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்களிடம் பேசிய அம்மாநில டி.ஜி.பி. சிங் இவ்விவாகரத்தை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், சட்டநிபுணர்களின் ஆலோசணையை நாடியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வாரம் தங்களது ஆளுநரின் மைனர்தனங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆளுநரின் நடவடிக்கைகள் (பொம்பிள்ளைப் பொறுக்கித்தனம் என்று வாசிக்க) ராஜ்பவனின் மேன்மையைக் குலைப்பதாகவும், அவர் ராஜ்பவனை “இளம் பெண்களின் கிளப்பாக” மாற்றி ஊழியர்களுக்கு பெரும் அவமரியாதையைச் செய்து விட்டாரென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாகவே பழங்குடியினச் சமூக விழுமியங்களைப் போற்றக் கூடியவை. இந்தச் சமூகங்களின் கலாச்சாரங்கள் வரலாற்று ரீதியாகவே பெண்களுக்கான முக்கியத்துவத்துவத்தையும், மதிப்பையும் உத்திரவாதப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே தங்களது ஆளுநரின் மைனர்தனங்களால் கொதித்துப் போயிருந்த ஆளுநர் மாளிகை ஊழியர்களின் கவனத்தில் சண்முகநாதனின் பாலியல் அத்துமீறல் முயற்சி தெரிய வந்ததும் கொந்தளித்து எழுந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் சண்முகநாதன் வேலை கிடைக்காததால் இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்புகிறார்கள் என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதே போன்று 2009-ல் ஆந்திர மாநிலத்தில் ஆளுநராக இருந்த என்.டி திவாரி மீது பாலியல்  குற்றச்சாட்டு எழுந்தபோது முதலில் மறுத்து பின்னர் வேறு வழியில்லாமல் மன்னிப்புகேட்டு ராஜினாமா செய்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்பாலியல் குற்றவாளியை பா.ஜ.க தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கிடைத்த தகவலின்படி சண்முகநாதனும் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் பாலியல் பேதமின்றி  போராட்டக்களங்களில் கூடியிருந்த நிலையில் பெண்களுக்கு எதிராக எந்தவிதமான அத்துமீறலோ, துன்புறுத்தலோ நிகழவில்லை. இதை ஒட்டுமொத்த வடநாட்டு ஊடகங்களும் வியந்து பார்த்துக் கொண்டிருந்த அதே நாட்களில் தான் ’காவித் தமிழர்’ சண்முகநாதனின் அயோக்கியத்தனங்களும் அம்பலமாகின.

இதை தொடர்ந்து நேற்று (26-01-2017) குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தந்தை போன்ற பதவி. அதில்  இருப்பவர் மீது இதுபோன்ற புகார் எழுந்திருப்பதால் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற ஒழுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையினால் ஆளுநரை பதவிநீக்க கோருவது தங்களுக்கும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.” மேலும் இதற்காக கையெழுத்து இயக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட யோக்கியர்களையும் சட்டமன்றத்தில் பலான படம் பார்க்கும் மகா யோக்கியர்களை கொண்ட ஆர்.எஸ்.எஸ்-ன் ராதா ராஜனோ மெரினாவில் கூடிய தமிழ் மக்களை கட்டற்ற பாலுறவுக்காக கூடிய கூட்டமென்று கொச்சைபடுத்துகிறார். இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி கூட்டத்தின் பங்காளியான பா.ஜ எம்.பி சுப்பிரமணிய சாமி தமிழர்களை இன்றளவும் பொறுக்கிகள் என வசைபாடி வருகிறார்.

யார் இந்த சண்முகநாதன்?

டெல்டா மாவட்டமான நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் பிறந்த சண்முகநாதன் தஞ்சாவூரில் படித்தவர். பின்னர் திருச்சி நேஷனல் கல்லூரியில் உயர்கல்வி படித்துள்ளார். 1969-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்காக (திருமணம் செய்து கொள்ளாத முழுநேர ஊழியர்) சேரும் அவர், அறந்தாங்கி பகுதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராக செயல்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்த சண்முகநாதன், 90-களின் துவக்கத்தில் மாநில அமைப்பாளராகவும் (பிராந்த பிரச்சாரக்), பின் தென்னிந்திய அமைப்பாளராகவும் (தக்‌ஷண ஷேத்திர பிரச்சாரக்) பதவி வகித்துள்ளார்.

சண்முகநாதன் மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பாளராக இருந்த போது இணை அமைப்பாளராக இருந்த இல.கணேசன் பின்னர் பாரதிய ஜனதாவுக்குச் சென்று அங்கே பதவிகளைப் பெற்று அரசியல் செல்வாக்கில் உயர்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்கான இல.கணேசனும் பாலியல் விவகாரங்களில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தான். இந்நிலையில் தனக்கு கீழ் இருந்த இல.கணேசனின் திடீர் வளர்ச்சியைக் கண்டு தானும் பாரதிய ஜனதாவுக்குச் செல்கிறார் சண்முகநாதன்.

இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்கத்தில் இவ்விருவருக்குமான கோஷ்டி அரசியலைக் கண்டு ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது. கோஷ்டி அரசியலில் இல.கணேசனின் கை ஓங்கவே, சில காலம் பாரதிய ஜனதாவில் ஒப்புக்குச் சப்பாணியாக இருந்தார் சண்முகநாதன். பின் ஆலய பாதுகாப்புக் கமிட்டி என்கிற சங்பரிவார் அமைப்பு ஒன்றின் மாநிலப் பொறுப்பில் சில ஆண்டுகள் குப்பை கொட்டினார்.

இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்தே இல.கணேசனின் செல்வாக்கு குறைந்து வந்த நிலையில் மத்தியில் தனக்கு ஆதரவான அதிகாரத் தரகர்களின் துணையுடன் செல்வாக்கை உயர்த்திக் கொள்கிறார் சண்முகநாதன். மேகாலயா ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற பாரதிய ஜனதாவின் கூடுதல் செயலாளராக செயல்பட்டு வந்தார். இறுதி வரை ஓட்டுப் பொறுக்கி அரசியலில் விலை போகாத மொக்கையாகவே காலம் தள்ளி வந்த சண்முகநாதன், கடைசியில் ஓட்டரசியல் சந்தையில் விலை போகாத சொத்தைக் கத்தரிக்காய்களின்  இறுதிப் புகலிடமான ஆளுநர் பதவியைப் பிடித்துள்ளார்.

தற்போது 68 வயதாகும் சன்முகநாதன், முன்பு ஆர்.எஸ்.எஸ் பொறுப்புகளில் இருந்த போதே பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என முணுமுணுக்கின்றன காக்கி டவுசர் வட்டாரங்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் ஒழுக்கத்துக்கும் எள் முனையளவுக்கும் தொடர்பில்லை என்பதை கர்நாடக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்ட சபையில் பிட்டுப் படம் பார்த்த சம்பவமே உலகுக்கு பறைசாற்றியது வரலாறு. சந்நியாசினி உமாபாரதி – பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா விவகாரங்கள் இந்தியாவே நாறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். சஞ்சய் ஜோஷியின் களியாட்டங்கள் குறுந்தகடுகளாக அம்பலமாகி ஊரே இந்துத்துவ கும்பலைக் காறித் துப்பியது.

காங்கிரசு உள்ளிட்ட பிற கட்சிகள் அவ்வப் போது அணிந்து கொள்ளும் மக்கள் நல அரசியல் போன்ற முகமூடிகளெல்லாம் இந்துத்துவா முகரைகளுக்குப் பொருந்தாது என்பதால், அவர்களது அரசியலின் அச்சாணி தனிநபர் ‘ஒழுக்கம்’ தான். ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர்கள் கடைபிடிப்பதாகச் சொல்லப்படும் ’பிரமச்சரிய’ விரதம் என்கிற பம்மாத்து தான் இந்துத்துவ அரசியலின் உள்ளே உறைந்து கிடக்கும் பார்ப்பன பாசிச வெறிக்கும் அந்நிய கைக்கூலித்தனத்துக்குமான ஆணுறை.

பாசிச அரசியல் வழங்கும் திமிரும் அதிகாரம் கையிலிருப்பதால் எதையும் மூடி மறைத்து விடலா என்கிற இறுமாப்பும் தான் இந்துத்துவ கும்பலுக்கு தவறு செய்யும் தைரியத்தை வழங்குகின்றது. மலிவான உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை மத ரீதியில் பிளவு படுத்தி விடலாம் என்கிற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும் வரையில் இந்தக் கயவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க முடியாது.

சனாதன தருமத்தின் ‘புனிதங்களை’ தூக்கி வரும் இவர்களைக் களத்தில் முறியடிப்பதுடன் ஓட ஓட விரட்டுவது ஒன்றே அப்பாவிப் பெண்களைக் காப்பாற்ற ஒரே வழி.

புதுப்பிக்கப்பட்ட நேரம் இரவு 8.50,
27.1.2017

மேலும் படிக்க :

ஜெயா பெண்ணரசியா ? இம்சை அரசியா ?

3
ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)

‘‘பெரியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணாக நான் அவரைக் காண்கிறேன்.’’ (திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பத்திரிகையாளர் வாஸந்தியிடம் கூறியதாக. தமிழ் இந்து, டிச.7,2016, பக்.11)

‘‘பெண்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், அவமானங்கள் மற்றும் தனிமையோடு ஜெயலலிதாவையும் அவரது வாழ்க்கையையும் ஆறுதலாகவும், விடுதலையாகவும் அடையாளம் காண்கிறார்கள்.’’ (ஷங்கர் ராமசுப்ரமணியன், தமிழ் இந்து, டிச.7, 2016, பக்.11)

ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)
ஜெயா போலீசாலும், வனத்துறை காவலர்களாலும் பாலியல் வன்முறை உள்ளிட்ட அக்கிரமங்களுக்கு ஆளான வாச்சாத்தி கிராமப் பெண்கள். (கோப்புப் படம்)

உண்மையை, நியாயத்தைக் கொண்டு ஒரு விசயத்தை நிரூபிக்க முடியாத போது, நம்பிக்கை என்ற அம்சத்தை முன்னிறுத்தி, அதனை விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்றுவது மதவாதிகளின் குயுக்தி. அதுபோல, ஜெயாவின் அரசியல் வாழ்வை, நடவடிக்கைகளைப் பெண் என்ற பாதுகாப்பான அம்சத்தை முன்னிறுத்தி ஆராதிக்கும் போக்கு தமிழகத்தின் பொதுவெளியில் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்படுகிறது.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றார் பெரியார். ஆனால், ஜெயலலிதாவோ தன்மான உணர்ச்சியையும் அறிவு உணர்ச்சியையும் தமிழகத்திலிருந்தே துடைத்தெறிந்துவிட வேண்டும் என்பதை மூர்க்கமான கொள்கையாகக் கொண்டு செயல்பட்டவர். தன் காலில் விழுபவனை, தன்னிடம் கையேந்தி நிற்பவனை ரசித்து மகிழ்ந்த வக்கிர புத்தி கொண்ட அவர், தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீது அவதூறு வழக்கு தொடங்கி தேசத் துரோகக் குற்றச்சாட்டு வரை சுமத்திச் சிறையில் தள்ளிய சர்வாதிகார மனப்பாங்கு கொண்டவர்.

இப்படிபட்ட பெண்மணியை, பகுத்தறிவு பேசும் கி.வீரமணி பெரியார் கண்ட புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார் என்றால், பாமர தமிழ்ப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கியது வரையிலான, ஜெயாவின் கவரச்சித் திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி அவரைத் தமிழகப் பெண்களின் வழிகாட்டியாகத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

ஜெயா அறிவித்த பெண்களுக்கான நலத் திட்ட உதவிகளால் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எந்தளவிற்கு விடிவு ஏற்பட்டிருக்கிறது ? ஒரு பறவைப் பார்த்தாலேகூட, அவரது ஆட்சியைப் பெண்களுக்குச் சாதகமான, பரிவான ஆட்சி என்று கூற முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

தாலிக்குத் தங்கம் திட்டத்தை அறிவித்த ஜெயா அரசுதான், தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து பெண்களின் தாலியை அறுத்தெறிந்தது. கடலூர் மாவட்டத்தில், 450 குடும்பங்களே உள்ள கச்சிராயநத்தம் கிராமத்தில் 105 பெண்களைக் கைம்பெண்களாக்கியிருக்கிறது, அம்மாவின் டாஸ்மாக் கடை. முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராடியபொழுது, முன்னணியில் நின்ற கல்லூரி மாணவிகளை, இளம் பெண்களைப் பாலியல் வக்கிரத்தோடு தமிழக போலீசு அடித்து மிதித்ததைக் கண்டு தமிழகமே விக்கித்து நின்றது.

2016 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த ஜெயா, தனது தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுவது போல 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், இந்த 500 கடைகளும் போதிய அளவிற்குப் போணியாகாமல் காத்து வாங்கிய கடைகள் என்பதும், போணியாகும் கடைகளில் விற்பனை இலக்கு முன்பைவிட அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகி, ஜெயாவின் அறிவிப்பு மக்களை, குறிப்பாகப் பெண்களை ஏய்க்கும் நாடகம் என்பது நாறிப் போனது.

பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் தோரணையில் அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)
பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதைக் கண்டிக்கும் தோரணையில் அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி. (கோப்புப் படம்)

ஜெயாவின் காலில் அவரது கட்சியைச் சேர்ந்த ஆண்கள் நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து எழுந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, சினிமாத்துறையிலும், அரசியலிலும் ஜெயாவை ஆண் உலகம் அவமானப்படுத்தியதற்கான பரிகாரமாக இது இருக்கட்டும் என எழுதுகிறார், வாஸந்தி. ஜெயாவின் காலடியில் ஆண்கள் மட்டுமா விழுந்து எழுந்தார்கள். வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட அவரது கட்சியைச் சேர்ந்த பெண்கள்கூடக் காலில் விழுந்து எழுந்தார்கள்.

கட்சிக்காரர்களின் அடிமைத்தனம் நிறைந்த விசுவாசத்தை எம்.ஜி.ஆர். என்ற ஆணிடமிருந்து வரித்துக் கொண்ட ஜெயா, அதனை அருவருக்கத்தக்க உச்சத்துக்கு எடுத்துச் சென்றார். ஆண்களைக் காலில் விழச் செய்த ஜெயாவின் சாதனை, பெண் விடுதலையின் குறிபொருள் அல்ல. மாறாக, பிழைப்புவாத, அடிமைத்தனத்தனத்தின் குறியீடு.

ஒருபுறம் ஆண்களைக் காலில் விழவைத்த செல்வி ஜெயலலிதாதான் இன்னொருபுறத்தில், எம்.ஜி.ஆர். இறந்த பிறகு உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்துத் தமிழகப் பெண்களைத் திடுக்கிட வைத்தார்.

இது மட்டுமா, சுப்பிரமணிய சுவாமி, முதல்வர் ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடுக்க ஆளுநரிடம் அனுமதி பெற்றதையடுத்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற விசாரணைக்கு வந்தபோது, அவரை அசிங்கப்படுத்துவதற்கு அ.தி.மு.க. மகளிர் அணியை இறக்கிவிட்டார், ஜெயா. அன்று அந்தக் கும்பல் ஆடிய ஆபாச, வக்கிர ஆட்டம் ஜெயா பொறுக்கி அரசியலில் புரட்சித் தலைவி என்பதை நிரூபித்தது.

ஜெயா, மூன்று முறை தேர்தல்களில் வென்று, ஆட்சி அமைத்திருக்கிறார். அவரது ஆட்சி நெடுகிலும் சாதாரண உழைக்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளைத் தொகுத்துப் பார்த்தால், அவரது ஆட்சி பெண்களுக்கு அனுசரனையான ஆட்சி அல்ல, பேயாட்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியில் (1991−96) தமிழக போலீசு நிலையங்கள் பாலியல் வன்கொடுமைக் கூடங்களாகத் திகழ்ந்தன. சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, வாச்சாத்தி கிராமப் பெண்கள் என அந்தக் கொடூரத்திற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழக போலீசு நடத்திய இந்தப் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தபோது, ‘‘அரசிடமிருந்து பணம் பெறுவதற்காகவே, போலீசின் மீது அபாண்டமாகப் பழி போடுகிறார்கள்’’ எனப் பாதிக்கப்பட்ட பெண்களை வேசிகளைப் போலச் சித்தரித்து அவமானப்படுத்தினார், பெண் முதல்வர் ஜெயா.

பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயா தண்டிக்கப்பட்டவுடன், அ.தி.மு.க. கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். மூன்று இளம் மாணவிகளைக் கொன்ற தனது கட்சிக்காரர்களுக்கு எதிராகப் பெண்ணாகிய ஜெயா நெற்றிக் கண்ணைத் திறக்கவில்லை. மாறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்தக் கொலை வழக்கை ஊத்தி மூடிவிட முயன்று தோற்றுப் போனார். மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது கட்சிக்காரர்களுக்காக உச்சநீதி மன்றத்தின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டி, அத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கச் செய்தார்.

கோகுல்ராஜ் கொலை மற்றும் மணற் கொள்ளை விவகாரங்களில் நியாயமாக விசாரணை நடத்தியதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. (கோப்புப் படம்)
கோகுல்ராஜ் கொலை மற்றும் மணற் கொள்ளை விவகாரங்களில் நியாயமாக விசாரணை நடத்தியதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு மரணமடைந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா. (கோப்புப் படம்)

அவரது இரண்டாவது தவணை ஆட்சியில் (2001−06) சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் மீது தமிழகப் போலீசு நடத்திய பாலியல் வன்கொடுமைகளையும், சித்திரவதைகளையும் சோளகர் தொட்டி என்ற நாவல் பதிவு செய்திருக்கிறது. இந்த மனித உரிமை மீறல்களை விசாரித்த சதாசிவம் கமிசன் போலீசின் அட்டூழியங்களைச் சாட்சியங்களோடு ஆவணப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஜெயாவோ குற்றமிழைத்த போலீசாரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பணப் பரிசுகளையும், வீட்டு மனைகளையும், பதவி உயர்வுகளையும் வாரி வழங்கி கௌரவித்தார்.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, பெண் போலீசு அதிகாரியான விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். கவுண்டர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞனின் கொலை வழக்கை நேர்மையாக விசாரித்த ஒரே காரணத்திற்காக, அவர் உயர் அதிகாரிகளால் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்பட்டார். அந்த நேர்மையான பெண் அதிகாரியின் அநியாயச் சாவிற்கு பெண்ணான ஜெயா அனுதாபம்கூடத் தெரிவிக்கவில்லை. தனது மகளின் சாவில் மறைந்துள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக, விஷ்ணுபிரியாவின் தந்தை சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்குத் தொடுத்தபோது, விஷ்ணுபிரியாவைத் தற்கொலைக்குத் தள்ளிய போலீசு உயர் அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கில் சி.பி.ஐ. விசாரணையை மறுத்து வாதிட்டது, ஜெயா அரசு.

இந்த அநீதிகள் உங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ நடந்திருந்தால், உங்களால் ஜெயாவைப் பெண்களின் ஆதர்சனத் தலைவராக வியந்தோத முடியுமா? பார்ப்பன சாதித் திமிரும், பணமும், அரசியல் அதிகாரமும் இணைந்து உருவாக்கிய அகந்தையும், மேட்டுக்குடி பொறுக்கித்தனமும் கலந்த கலவைதான் ஜெயா. அருவருக்கத்தக்கதும், உழைக்கும் மக்களுக்கு எதிரானதுமான இந்த தீயகுணங்களைக் கொண்ட ஆளுமையான ஜெயாவைப் பெண் என்பதாலேயே அவரின் தனிப்பட்ட இன்ப, துன்பங்களைப் பெரிதுபடுத்திப் பேசுவதையும், அவரின் கிரிமினல் குற்றங்களை மறைத்துவிட முயலுவதையும் அனுமதிக்க முடியாது.

– திப்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

5

போலீசு ராஜ்ஜியம்…

எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 30.01.2017
நேரம் : மாலை 4:00 மணி
இடம் : குமணன்சாவடி

PP Notice Slider

ன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே! வணக்கம்,

தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லிக்கு எதிராக தமிழகமே எழுந்து நின்றது. பணிந்தது பன்னீர் அரசு. தற்காலிகமாக ஜல்லிக்கட்டில் வென்றோம். வங்கக் கடற்கரையில் சீறி எழுந்த மக்கள் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை பீதியடைய செய்தது. போலீசின் அதிகாரம் செல்லக் காசானது. காளை போராட்டம் காவிரி, விவசாயிகள் தற்கொலை என விரிவடையக் கூடாது என்ற போலீசின் அச்சம் தான் மாணவர்கள் – மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலுக்கு காரணம்.

ஆட்டோக்களை கொளுத்தியது. மீன் மார்க்கெட்டை வெண்பாஸ்பரஸ் மூலம் எரித்தது. வாகனங்களை அடித்து நொறுக்கியது. வீடுகளில் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, ஆண்களை அடித்து இழுத்து சென்றது என போலீசாருக்கு எதிரான ஆதாரங்களை நாள்தோறும் மக்கள் அள்ளி வீசுகிறார்கள். இதுவரை எந்த போலீசார் மீதும் விசாரணை நடவடிக்கை இல்லை.

காவல்துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ், கோவை கமிஷ்னர் அமல்ராஜ் மற்றும் வன்முறை சம்பவத்திற்கு காரணமான, தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரியுள்ளனர். நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசோ பொய் மேலும் பொய் என்ற மோடி வித்தையை தமிழகத்தில் செயல்படுத்த முயன்று மூக்கறுபட்டு நிற்கிறது.

மாணவர்கள் போராட்டத்தில் ஊடுருவி விட்டனர் என்று சில அமைப்புகள் பெயர்களை சொல்லி பழிபோடும் போலீசார், ஊடுருவி என்ன செய்தார்கள்? என்பதைச் சொல்ல முடிய வில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்., பாஜக, ஏபிவிபி அமைப்பை சேர்ந்த சிலர் ஊடுருவி மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றதாக இணையதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதை பற்றி போலீசார் பேச மறுக்கின்றனர்.

கலவர தினத்தன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் மெரினாவில் இருந்தார்கள். ஜல்லிக் கட்டு நடத்த நிறைவேற்றப்பட்ட சட்ட நகலை தாருங்கள், கலைந்து செல்ல இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும் என போலீசு அதிகாரிகளிடம் கேட்டனர். ஏழு நாள் பொறுத்தவர்கள் இரண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?

மாலையில் செய்த வேலையை காலையே செய்திருக்கலாமே. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தமனை முன்பே அழைத்து வந்து பிரச்சினையை சுமூகமாக தீர்த்திருக்க முடியும் அதை விட்டு தடியடி ஏன் நடத்த வேண்டும்? கர்ப்பிணி பெண் வயிற்றில் ஏன் உதைக்க வேண்டும்? உணவு கொடுத்த மீனவர்களை ஏன் குப்பத்தில் புகுந்து தாக்க வேண்டும்? மாணவர்களுக்கு வந்த உணவு பெட்டியை போலீசார் ஏன் பறித்து திண்ண வேண்டும்? எதற்கும் காவல்துறையில் பதில் இல்லை. ஆனால் காக்கியின் உடம்பில் காவி புகுந்துள்ளது போலிசு அதிகாரிகளின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

தீர்ப்புகளால், சட்டங்களால் சாதிக்க முடியாததை மெரினாவில் மாணவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் போராட்டம் சாதித்தது. தினம்தோறும் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் கூடினர். மாணவர்களே தங்களை ஒழுங்குபடுத்தி கொண்டனர். பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. காரணம் அங்கு போலீசு அதிகாரம் இல்லை. ஒருவார காலம் அதிகார போதையை இழந்தபோலீசார் அதிகாரத்தை மீண்டும் சுவைக்கவும் மக்களை அச்சுறுத்தவும் நடத்தப்பட்ட கலவரம் தான் இது.

பண்பாட்டு அடையாளங்கள், இயற்கை வளங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வதாரங்கள், தாய் மொழி மீதான தாக்குதல் என அனைத்தையும் எதிர்த்துப் போராடி திகைத்த தமிழகத்தில், அனைவரும் பங்கேற்க நடந்த அமைதிப் போராட்டம், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. சாதி மத பேதமின்றி, ஆண் பெண் அனைவரும் ஒற்றுமையாக போரடியதன் பலத்தை பங்கேற்ற அனைவரும் நேரடியாக உணர்ந்தனர். அதை கருக்கும் முயற்சி தான் போலீசாரின் தாக்குதல்.

காவிரி தொடங்கி கல்வி உரிமை வரை தமிழக மக்கள் போராட வேண்டிய பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.

காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது. உரிமைகளுக்காக தொடரும் உறுதியான மக்கள் போராட்டம், போலீசு ராஜ்ஜியத்தை வீழ்த்தும் !

unnamed

  • பொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசு தான், போராடுபவர்கள் அல்ல !
  • அமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் !
    கைது செய் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656

ஜெயாவின் மறைவுக்கு அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை !

1
சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.

ம்மா என அரிதாரம் பூசிக்கொண்ட கோமளவல்லி என்ற ஜெயலலிதா எப்படி இறந்தார், எப்பொழுது இறந்தார், எதனால் இறந்தார் என்பது அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், சசிகலா குடும்பம், நரேந்திர மோடி உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர, மற்ற அனைவருக்கும் மர்மமான புதிராகிவிட்டது. அதன் காரணமாகவே, அவரது மரணம் குறித்து சந்தேகங்களும், வதந்திகளும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதேசமயம், இந்த வதந்திகளுக்கு இணையாக, ஜெயா குறித்தும், அவரது ஆட்சி குறித்தும் அவிழ்த்துவிடப்படும் கட்டுக்கதைகளுக்கும் எந்தப் பஞ்சமுமில்லை.

சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.
சென்னை−ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயாவின் சடலம்.

தி.மு.க.வின் குடும்ப, வாரிசு அரசியலை அக்குவேறு ஆணி வேறாக அலசும் ஊடகங்கள், ஜெயா கட்சியிலும் பதவியிலும் திணிக்கப்பட்ட வரலாறை மறந்தும் எழுதுவதில்லை. ஜெயா, எம்.ஜி.ஆரோடு 20−க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் என்பதுதான் ஊர் உலகம் அறிந்த விடயம். ஆனால், எம்.ஜி.ஆர். இறந்தவுடன், தான் உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்தார், ஜெயா. அவர், எம்.ஜி.ஆரின் சட்டபூர்வமான மனைவி இல்லை என்ற நிலையில் இந்த அறிவிப்பு உணர்த்தும் பொருள் என்ன என்பதை விளக்கத் தேவையில்லை.

இப்படிபட்டதொரு தகுதியை மட்டுமே கொண்டு கட்சிக்குள் நுழைந்த அவர், எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அந்த ஒரே தகுதியைக் கொண்டே அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் ஆனார். ராஜீவின் சாவால் எழுந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.

தமிழகத்தைக் கொள்ளையிடும் உரிமை தனக்கு மட்டுமே உரியது என்ற தோரணையில், தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் எனத் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். அவர் நடத்திய கொள்ளையை எதிர்த்தவர்கள் மீது அவதூறு வழக்குகள் உள்ளிட்ட அடக்குமுறைகளை ஏவிவிட்டார். இதன் காரணமாகவே தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, 1996, 2006 சட்டமன்றத் தேர்தல்களிலும் 2004 பொதுத் தேர்தலிலும் மண்ணைக் கவ்வினார்.

தேர்தலில் தோற்றாலும், ஊழல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டாலும், அவர் தனது மேட்டுக்குடி பொறுக்கித்தனத்தை மாற்றிக் கொண்டதேயில்லை. ஊழல்தான் நிர்வாகம், நிர்வாகம்தான் ஊழல் என ஆட்சி முறைக்குப் புதிய பொழிப்புரை எழுதியவர் ஜெயா.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி மாநில முதல்வராக முடியும் என்ற புர்ரட்ச்சசியை நடத்திக் காட்டியவரும் அவர்தான். முதலமைச்சர் பதவியில் இருந்தபோதே சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு, பதவி பறிக்கப்பட்ட முதல் முதலமைச்சரும் அவர்தான். நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முடியும் எனக் காட்டி, நீதித்துறையின் புனிதத்தைத் தோலுரித்துக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியும் அவர்தான்.

தானே உருவாக்கி வைத்திருக்கும் சட்டம், மரபு ஆகியவற்றுக்கே எதிராகத் திரும்பித் தோல்வியடைந்து நிற்கிறது இந்திய அரசியலமைப்பு. இந்தத் தோல்வியின் எடுப்பான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உதாரணமாக விளங்கியவர்தான் ஜெயா.

எனினும், பொறுக்கி அரசியலில் புதிய எல்லைகளைத் தொட்ட ஜெயாவைத் திறமைசாலி, துணிச்சல்காரி, சிறந்த நிர்வாகி என்று பார்ப்பனக் கும்பல் துதிப்பதற்கும்; ஜெயா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்குகள், அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த தி.மு.க. மேற்கொண்ட சதி என அக்கும்பல் உண்மையைத் திரித்துப் புளுகுவதற்கும், தமிழகத்தில் பெரியார் விதைத்துச் சென்ற பார்ப்பன எதிர்ப்பு மரபைத் துடைத்தெறிவதற்கு ஒரு பார்ப்பனத்தியே ஆயுதமாகக் கிடைத்தார் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

கட்சி, அரசியல் உள்ளிட்ட பொதுவாழ்விலும், ஆட்சி நிர்வாகத்திலும் அந்தப் பார்ப்பன பீடை வளர்த்துவிட்டுச் சென்றுள்ள அருவருப்பான அலங்கோலங்களை நினைவுகூர்ந்தால், பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் மறைவுக்காகத் தமிழக மக்கள் அனுதாபம் கொள்ள எந்த நியாயமும் இல்லை.

– செல்வம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

மெரினா : போலீசின் கொலைவெறித் தாக்குதல் – புதிய வீடியோ

0

ந்தியாவே பார்த்து வியந்த ஒரு போராட்டத்தை ரத்தத்தில் அமித்தியது போலீசு. பெண்களை அகற்ற மானபங்கப்படுத்தியுள்ளது போலீசு. மீனவக் குப்பத்தை சார்ந்த இளைஞர்களையும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் துடிக்கத் துடிக்க கொலை வெறியோடு தாக்கியிருக்கிறது போலீசு. காவலர்கள் மத்தியில் சிக்கியவர்களை வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன. இந்த காட்சிகள் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வரவில்லை. ஒரு சிலர் தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி எடுத்த வீடியோ பதிவு இது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞரின் நேர்காணலும் இடம்பெறுகிறது.

புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா – கோவன் பாடல்

2

மெரினாவில் நடைபெற்ற போரட்டத்தை இன்று அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். டெல்லிக்கட்டை அடக்க எழுந்த மெரினா எழுச்சியைப் போன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் மக்கள் போராடி வருகின்றனர். நந்திகிராம் போராட்டம், நியாம்கிரி போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், அரபு மக்கள் போராட்டம்,  அமெரிக்காவில் வால் வீதி போராட்டம் அனைத்தும் இத்தகைய எழுச்சிகளின் அங்கம் என்பதை இசையால் இணைக்கிறது இந்தப் பாடல்.

கவனியுங்கள் புரட்சியின் இசை உங்கள் செவிகளில் கேட்கும், சற்று நிமிர்ந்து  பாருங்கள் புரட்சியின் புதிய உலகம் உங்கள் கண்களுக்கு தெரியும்.

புரட்சி… புரட்சி… உன் காதில் விழவில்லையா…?
புதிய உலகம் உன் கண்ணில் தெரியலையா…?

அந்த போர்க்களத்தைப் பார் புரட்சி காதில் கேட்கும்.

சென்னை மெரினா போராட்டத்தில் தோழர் கோவன் பாடிய பாடல் பாருங்கள், பகிருங்கள்.

தடியரசு தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரம்

0

’தடி’யரசு தின வாழ்த்துக்கள்

republic-day-cartoon

————-

குடிகளுக்கு குறி வைக்கும்  ’குடி’யரசு !

republic-day-cartoon2

————-

republic-day-cartoon3

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

இணையுங்கள்: