உலகம் உற்றுப் பார்த்த ஒரு போராட்டத்தை ரத்தகளறியில் அமித்திய இந்த காவல் துறையும் அரசும் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம். நேற்றுவரை பண்புடன் பேசி கைகளை குலுக்கி வாழ்த்தியவனின் மண்டையை உடைத்து, குடிசைகளைக் கொளுத்தி வெறியாட்டம் போட்ட காவல்துறையிடம் இருந்து மக்களும் மாணவர்களும் படிப்பினை பெற்று மீண்டு வருவார்கள்.
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் -வள்ளுவர்பெண் ஒருவரின் குமுறலையும் கோபத்தையும் பாருங்கள் பகிருங்கள்.
இந்தப் பெண் திமுகவைச் சேர்ந்தவர் என்று மாணவர் போராட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் (அதிமுக, பாஜக) கூறுகின்றனர். இருக்கட்டுமே. அந்தப் பெண் போராட்டத்தில் கலந்து கொண்டதும் உண்மை. போலிஸ் அங்கே பெரும் வன்முறையை நிகழ்த்தியதும் உண்மை. நடுக்குப்பத்தில் போலீசிடம் அடிவாங்கி படுகாயமுற்று, உடமைகளை இழந்த மீனவப் பெண்களும், ஆண்களும் கூட சென்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்திருப்பார்கள். அதனால் அவர்கள் இந்த வன்முறையையும், ஏவி விட்ட அதிமுக அரசையும் மன்னித்து விடுவார்களா என்ன?
அவர்கள் திரும்ப வருவார்கள் – ஒரு பெண்ணின் குமுறல் – வீடியோ
களச்செய்தி : தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !
தமிழக மாணவர்களை ஒடுக்குகிறது மோடி அரசு !
கைப்பாவையாக செயல்படுகிறது பன்னீர் அரசு !
போராடும் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதன் மூலம்
டெல்லியின் ஆதிக்கத்தை திணித்துவிட முடியாது !
தமிழகத்தின் உரிமையை மீட்க ஒன்றிணைவோம் !
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர் – 97880 11784.
_______________
டெல்லிக்கு எதிராக எழுந்தது தமிழகம்! விடாதே…!
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு!
மாணவர்களை தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை நாகர்கோவில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
_______________
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம், தமிழக மாணவர் எழுச்சியை ஆதரித்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 22-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். உள்ளூர் பெரியவர்கள், வியாபாரிகள், நண்பர்கள் பலரும் இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலரும் நேரில் வந்து மாணவர் எழுச்சியை ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினர். குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரத்தின் இந்த தர்ணா போராட்டம் அங்குள்ள கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
மெரினாவிலும்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் மாணவர் போராட்டத்தின் சிறப்பை இங்கு விளக்கிப் பேசினர். கோவனுடைய பாடல்கள் ஒளிப்பரப்பட்டன. தோழர் மருதையனுடைய மெரினா உரைகள் போட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. இவை மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு.
கிருஷ்ணகிரி மாவட்ட தொடர்பு எண்: 80152 69381
_______________
ஜனவரி 25 – மொழிப்போர் தியாகிகள் தினம் !
சல்லிக்கட்டு தடை, பொங்கல் விடுமுறை ரத்து, கீழடி ஆய்வுக்கு மறுப்பு, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு…
- தமிழ் உள்ளிட்ட பல்தேசிய இனங்களின் பண்பாட்டை அழித்து, ஒற்றை பார்ப்பனிய இந்து மத பண்பாட்டை திணிக்கும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் !
- மொழிப்போர் தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்தி வீறு கொண்டெழுவோம் !
தமிழகத்தை ஆரிய பார்ப்பன எதிர்ப்பு போரில் தளப்பிரதேசமாக கட்டியமைப்போம் !
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம் – சிதம்பரம்.
தொடர்புக்கு : 8870. 81056.
மெரினா தாக்குதலை கண்டித்த மக்கள் அதிகாரம் தோழர் முரளிக்கு சிறை !
திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி கைது !
திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி அவரது வீட்டில் நேற்று (24.01.2017)இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் கியூ போலீஸ் தியாகராஜன் ஆகியோரால் கைது செய்யப்பட்டு கொரடாச்சேரி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று காலை 10 மணிக்கு திருவாரூர் பேருந்துநிலையம் அருகே நடக்க இருந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தை மோப்பம் பிடித்த போலீசு அவரை கைதுசெய்திருக்கிறது.
மேலும் 11.01.17 அன்று புதிய ரயிலடியில் “நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி” என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகளை ஒருங்கிணைத்து நாள் முழுவதும் நடந்த மக்களதிகாரம் தர்ணாவில் தொண்டர்கள் கம்பு வைத்திருந்தது, மாலை 5 மணிக்கு முடிக்க வேண்டிய தர்ணாவை 06.45 க்கு முடித்தது மற்றும் நேற்று (23.01.2017) அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களை போலீசு வெறிகொண்டு தாக்குவதைக் கண்டித்து சுவரொட்டிப் பிரச்சாரம் செய்தது என அவர் மீது 143, 188, 504 IB, 195/17 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கொரடாச்சேரியிலிருந்து திருவாரூர் டவுன் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டு நேற்று இரவு 07.15 க்கு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு நன்னிலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தகவல் :
மக்களதிகாரம்,
திருவாரூர்.
புதிய ஜனநாயகம் – சனவரி 2017 மின்னிதழ்
புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. போராட்டங்கள் இருட்டடிப்பு : அன்று இந்திரா… இன்று மோடி… !
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை மோடியும் தனியார் ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது இந்திராவின் “நெருக்கடிநிலை” காலத்தை நினைவூட்டுகிறது.
2. அதிகாரத்தில் உழவனின் எதிரிகள் ! எழவு வீடானது தமிழகம் !!
3. மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
சசிகலாவை மாண்புமிகு முதல்வர் என்று அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மனனார்குடி மாஃபியாவையும் மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
4. அ.தி.மு.க.வை அழிக்காவிடில் தமிழகமே அழியும் !
தொழில்முறை கிரிமினல் மாஃபியாக்களின் கூடாரம்தான் அ.தி.மு.க. கொள்ளைக்கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அ.தி.மு.க. அழியும் வரை காத்திருக்கக் கூடாது. அ.தி.மு.க. என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.
5. ஜெயா மரணம்: தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது !
6. ஜெயா: பெண்ணரசியா ? இம்சை அரசியா ?
பெண் என்ற காரணத்தை முன்வைத்து, ஜெயாவின் ஆட்சிக் காலங்களில் நடந்த அனைத்துக் குற்றங்களில் இருந்தும் ஜெயாவை விடுவித்துவிட்டு, அவரை மதிப்பீடு செய்வது அறிவுடமையாகாது.
7. சுயமரியாதையை அழித்து… பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து …
சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான பார்ப்பன அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்சும்படி தமிழகத்தைச் சீரழித்தார், பார்ப்பன ஜெயா.
8. வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…
ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டால், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்றே முத்திரை குத்த முடியும்.
9. ஜெயாவின் ஈழத்தாய் அவதாரம் : ஆடு நனைகிறதே என அழுத ஓநாய் !
சனாதன தர்மத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எப்படிப்பட்ட மோசடியோ, அதற்கு இணையானது ஜெயாவின் ஈழத் தாய் அவதாரம்.
10. மேட்டுக்குடி பார்ப்பன பொறுக்கி இங்கிலீஷ் பேசினால் படிப்பாளியாம்! பார்ப்பனக் கும்பலின் பித்தலாட்டம்
11. ஊழலுக்காகவே ஆட்சி ! – இதுதாண்டா ஜெயாவின் தனித்திறமை !!
கட்சி, ஆட்சி மட்டுமின்றி, தமிழ் சமூகத்தையே ஊழலிலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கடித்ததில் புதிய எல்லைகளைத் தொட்டவர்தான் ஜெயா.
- ரவுடித்தனமே ஜெயாவின் துணிவு ! பிச்சை போடுவதே ஜெயாவின் கருணை !!
அலட்சியமும் மமதையும் தான்தோன்றித்தனங்களும் நிறைந்த ஜெயாவின் நடவடிக்கைகள் துணிச்சலானதாகவும், தமிழர்களின் போராட்டக் குணத்தை மழுங்கடித்துக் கையேந்திகளாக நிறுத்தப்பட்டதை அவரது கருணை எனவும் காட்டுகின்றன ஊடகங்கள்.
13. வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !
கூட்டுறவு மற்றும் தொடக்க வேளாண் வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ள மைய அரசு, கருப்புப் பணத்தை மாற்ற உதவிய தனியார் வங்கிகளுக்குத் தடை விதிக்க மறுப்பது ஏன் ?
14. பணமற்ற பொருளாதாரம் : உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !
புதிய ஜனநாயகம் சனவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.
புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com
மெரினா : போலீசு பயங்கரவாதம் – ஊடக மாமாத்தனம் ! வீடியோ
போலீசு தாக்குதலை மறைக்கும் ஊடகங்கள் !
மெரினாவில் காவல்துறை நடத்திய வன்முறைகளை திட்டமிட்டே ஊடகங்கள் மறைத்தன. மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக மாணவர்களுக்கு ஆதரவாகச் நடத்திய போராட்டங்களையும் மூடி மறைத்து போலீசு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி போராட்ட உணர்வைப் பரவவிடாமல் தடுக்க முயன்றன ஊடகங்கள். இவற்றைத் தாண்டி மக்கள் போராடும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து போராடியுள்ளனர்.
ஆளும் வர்க்க ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் இந்த வீடியோவைப் பாருங்கள், பகிருங்கள்.
மெரினா : போலீசு வன்முறை வெறியாட்டம் !
மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
காவல் துறையின் உண்மை முகம் !
_______________
வன்முறைக்கு யார் காரணம் !
_______________
போலீசு ஊடகங்கள் !
_______________
போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் – ஹிப் ஆப் ஆதி & கோ
_______________
மெரினாவில் கருப்பு ஆடு !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588
இணையுங்கள்:
மெரினா : ஜல்லிக்கட்டு – டெல்லிக்கட்டு – கேலிச்சித்திரங்கள்
ஜல்லிக்கட்டை நடத்த டெல்லியின் கொம்பைப் பிடி !
________________
உண்மையான தூய்மை இந்தியா !
________________
உச்சநீதி மன்றமல்ல உச்சிக்குடுமி மன்றம் !
________________
சொறிநாய் ‘சுனா’ ஜாக்கிரதை !
________________
வாடிவாசல் திறக்க காவி மாட்டை அடக்கு !
________________
தமிழகத்தின் உரிமை காக்க பெரியாரின் தடியை எடு !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588
இணையுங்கள்:
ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்
மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் உழைத்து சேர்த்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக கூட எடுக்க முடியாமல் அனைவரும் வங்கி முன் வரிசையில் காத்திருந்தனர். பணத்தை எடுக்க அரசு 24 மணி நேரத்திற்கு நான்காயிரம் ரூபாய் எடுக்கலாம் என்பதும், கால்கடுக்க காத்திருந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தான் தரமுடியும் என்று வங்கிகள் சொல்வதும் அதன் பிறகு அரசு மீண்டும் 24 மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்பதும் மக்களை கொந்தளிக்க வைத்தன. அதனால் மோடி 50 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள் அதன் பிறகு நாட்டையே சொர்க்கமாக மாற்றிவிடுவேன் பணம் எடுக்க தடையே இருக்காது என்றும் நாடகமாடினார். அதனால்தான் பணம் எடுக்க இருந்த தடை நீங்கவில்லை.

தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகவும் பல அமைப்புகளிலும் போராடி வருகின்றனர். அப்படி வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளனர்.
11.01.17 அன்று காலை 10 மணிக்கு வங்கி திறப்பதற்கு முன்பாகவே வங்கி வாசலில் மக்கள் பணம் எடுக்க காத்திருந்தனர். வங்கி திறந்து உள்ளே நுழையும் பொழுதே வங்கி மேலாளர் இன்றைக்கு வங்கியில் பணம் இல்லை, பணம் எல்லாம் எடுக்க முடியாது கிளம்புங்க, கிளம்புங்க என்று கூறினார். அதன் பிறகும் மக்கள் வரிசையில் நிற்க மீண்டும் வங்கி துணை மேலாளர் இன்னைக்கு பணம் இல்லை கிளம்புங்க என்றார். காத்திருந்த வரிசையில் மக்கள் அதிகாரம் தோழர் உடனே வங்கி துணை மேலாளரிடம் பணம் கேட்டு பலநாள் வந்திருக்கிறோம், ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறீர்கள், இப்போது கிடைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார். அதற்கு வங்கி துணை மேலாளர் போராடினாலும் பணம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.
வங்கியில் காத்திருந்த மக்களை பார்த்து நாம் உழைத்து சேர்த்த பணம் நமக்கில்லை என்கிறார்கள். ஆனால் சேகர் ரெட்டிக்கு கட்டு, கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டு எப்படி கிடைத்தது. தமிழ்நாட்டில் பல கிரிமினல்கள் வீட்டில், BJP கட்சி பிரமுகரின் வீட்டில் புதிய நோட்டுக்கள் கிடைத்துள்ளது . அப்படி என்றால் உழைத்து சேர்த்த நமக்கு பணம் இல்லையா? வாங்க நாம நம் பணத்தை எடுக்கணும்னா போராட்டம் நடத்தலாம் என்று சொல்ல மக்களும் உடனே அணிதிரண்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராடினர். உடனே வங்கி கிளை மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவேரிப்பாக்கம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலிசு வந்து கூட்டத்தை கலைந்து செல்லுமாறு பேச மக்கள் நாங்க சேர்த்த பணத்தை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் எங்க பணத்த கொடுத்தா நாங்க ஏன் சாலைமறியல் செய்யப்போகிறோம், நீங்க போய் வங்கி மேலாளரிடம் பேசுங்கள் என்று கூறினர்.

ஆய்வாளர் சந்திரசேகர் வங்கி மேலாளரிடம் வங்கியில் உண்மையில் பணம் இல்லையா என்று கேட்க மூன்று லட்சம் ரூபாய் பணம் தான் இருக்கு என்று கூற இருப்பதை கொடுக்க ஏற்ப்பாடு செய்ய சொன்னார். அதன் பிறகு வங்கியில் பணம் கொடுப்பதாக சொல்ல கூட்டம் கலைந்து வங்கிக்குள் சென்றது. அதுவரை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசு, வங்கி மேலாளரிடம் இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டார். மக்கள் அதிகாரம் தோழர் மக்களைப் பார்த்து பாருங்க முதலில் போரடினாலும் பணம் கிடைக்காது என்று கூறிய வங்கி நாம் போராடின பிறகு இப்பொழுது பணம் கொடுக்கிறது போராட்டம் தான் இங்கு அனைத்திற்கும் தீர்வு என்றார். அங்கு இருந்தவர்கள் மக்கள் அதிகார தோழரை பார்த்து நன்றி கூறினர்.
மீண்டும் அடுத்த நாள் காலை 12.01.17 அன்றும் மக்கள் இதே போல் வரிசையில் காத்திருக்க அதில் தோழரும் இருந்தார். முந்தைய நாள் போராட்டம் செய்தாலும் பணம் கிடைக்காது என்று பேசிய வங்கி மேலாளர் வங்கி ஊழியர் ஒருவரை அழைத்து மக்களுக்கு ஃபேன் போடு வரிசையில் நிற்பவர்களுக்கு வியர்க்காதா என்று கூறினார். ஏற்கனவே போலீசு வங்கியில் இரண்டு பேரை காவலுக்கு நிற்க வைத்திருந்தனர். பணம் கொடுக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே பணம் காலியாக வங்கி மேலாளர், போலீசு ஆய்வாளரை அழைத்து வங்கியில் பணம் காலியாகிவிட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார். போலிசு ஆய்வாளர் சந்திரசேகர் மக்களிடம் வந்து பணம் காலியாகி விட்டதாம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுமாம் பொறுத்திருங்கள் என்று கூறினார்.
இந்த அரசு தானே சொல்லிக் கொள்ளும் சட்டப்படி கூட செயல்படுவதில்லை. தானே அறிவித்திருக்கும் உத்தரவுகளை மதிப்பதில்லை. இந்நிலையில் எங்கேயும் எப்போதும் மக்கள் தமக்கான உரிமையை போராடித்தான் பெற முடியும் என்பது அங்கிருக்கும் மக்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையாக உதித்திருக்கும் என்று நம்புகிறோம்.
தகவல் :
மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம்.
டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது !
டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! விடாதே !
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு !
டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் !
- தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடி இருகட்டும், டெல்லியின் கொம்பை பிடி விடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
- 7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.
- திராவிடத்தை அழிப்பேன் என சூளுரை. பெரியார் சிலை இடிப்பு. தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க மீத்தேன், ஷேல்கேஸ், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை போன்ற அழிவுத்திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தில் குவிப்பது எதிர்த்துப் போராடினால் தேசத்துரோக வழக்கு. டெல்லி கோர்ட்டில் ரவுடித்தனம் செய்த பாஜக வக்கீல் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடிய தமிழக வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி என போராடியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்திய பாதுகாப்பு படை.
- இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கிய மோடி அரசு, உலக வரலாற்றை திருப்பிப்போடும் – தமிழர்களின் தொண்மையை நிருபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை தடுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி பாபர் மசூதியை இடித்தார்கள் கடலுக்கடியில் ராமர் பாலம் என்று கூறி சேதுகால்வாய் திட்டத்திற்கு தடைவிதித்தார்கள். தமிழர்கள் போராடினால் ஆட்சியைகலைப்பேன் என அச்சுறுத்துகிறார்கள்.
- சொந்த பந்தங்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பொங்கல் நாள் போர்க்களமாக மாற்றியது அதிகார வர்க்கத் திமிரின் உச்சக்கட்டம். நம் ஊரில் வந்து நம்மாட்டை விடாதே என வாடிவாசலை மறித்து அடிப்பதும் கைது செய்வதும், கணக்கெடுப்பதும், மிரட்டுவதும் – என்ன நடக்கிறது? தமிழகத்தில் பிஜேபி. ஆட்சியா அல்லது அடிமைகளின் ஆட்சியா?
- உச்சநீதிமன்ற உத்திரவுகளை தினம்தோறும் மீறுவது இந்த ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். தீர்ப்புகளை குப்பைக் காகிதமாக கருதுவது மத்திய – மாநில அரசுகள்தான். காலம் காலமாக ஜல்லிகட்டு நடத்தும் மக்களை பார்த்து கட்டப்பஞ்சாயத்து நீதிமன்ற உத்திரவிற்கு கட்டுப்படு என சொல்லும் தகுதி, அருகதை இவர்களுக்கு கிடையாது. வாழ்வுரிமைகளை நசுக்கி, வாழ்வாதாரங்களை அழித்து தமிழர்களை மிதிக்கும் டெல்லியின் காலை முறிக்காமல் விடக்கூடாது.
உச்சநீதிமன்றதீர்ப்பை…
- காவிரியில் கர்நாடகா மதிக்கவில்லை, முல்லைப் பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மனித பிரமிடு கூடாது என்ற உத்திரவை மகாராஷ்டிரா மதிக்கவில்லை, நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசே மதிக்கவில்லை. ஜல்லிகட்டில் தமிழகத்தை கட்டுப்படுத்த என்ன அருகதை இருக்கிறது?
- சுப்பிரமணியசாமி, தமிழன் கட்டிய சிதம்பரம் கோவிலை தீட்சதர்களுக்குக் கொடு என சொன்னான், உச்சநீதிமன்றமும் கொடுத்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழ்நாட்டில் மட்டும் கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.
- ஜல்லிக்கட்டு தொன்மையான தமிழர் பண்பாடு என்கிறோம். கம்ப்யூட்டரில் விளையாடு என தமிழினத்தை கேலி பேசுகிறார் டெல்லி நீதிபதி தமிழனுக்கு இழைக்கும் அநீதி – மோடியும், உச்சுக்குடுமி மன்றமும் சொல்லும் மனுநீதி. பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தமிழின் தொன்மை, பகுத்தறிவு, திராவிடக் கொள்கை களில் தமிழகம் அடையாளமாக நிற்கிறது. இதனால் உச்சநீதிமன்றம், டெல்லி மத்திய அரசு, வட இந்திய ஊடகங்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு என்றாலே ஒரவஞ்சனைதான், வேப்பங்காய்தான்.
- தமிழர்கள் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை விளைவினால் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து இன்று காளை மூலம் டெல்லி மீது சீறிபாய்கிறது.
டெல்லி அரசின் உயிர்நிலை வசமாக மாட்டிக் கொண்டது. இம்முறை மாணவர்களின் குறி தப்பாது !
காளையில் பற்றிய தீ தமிழகத்தின் உரிமைகளை நசுக்கும் டெல்லியைப் பொசுக்கட்டும் !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.
மக்கள் அதிகாரத்தின் டெல்லிக்கட்டு – சென்னை, விழுப்புரம் – படங்கள்
சென்னை – மதுரவாயல் : டெல்லிக்கட்டு திருவிழா !
மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி அமைப்புகள் 17.1.2017 மாலை மதுரவாயலில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் முக்கிய இடங்களான அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் இப்போது, எப்படி பதற்ற நிலையில் உள்ளதோ அதேபோல், சென்னை மதுரவாயல் முழுவதும் நேற்று (17.1.2017) பதற்ற நிலையாக இருந்தது. இதனால் பீதி அடைந்த போலீசு, மதுரவாயலில் முக்கிய இடங்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசு தடுப்புகளை அமைத்து நின்றனர்.
மாலை 5.30 மணியளவில் மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் இருந்து மாடுகளுடன் மஞ்சு விரட்டு ஊர்வலமாக கிளம்பியது. இதில், தமிழகத்தை வஞ்சிக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலுக்கு எதிரான “ஜல்லிக்கட்டு இல்ல இது டெல்லிக் கட்டு, நாம் உடைக்க வேண்டியது டெல்லிக் கொம்பு” என முழக்கங்களை எழுப்பினர். ஊர் பொதுமக்கள், தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அந்த ஊர்வலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை நெருங்கியபோது, போலீசில் பந்தோபஸ்தோடு ஊர்வலம் சென்றது. இதனால், சாலையில் சென்ற வாகனங்கள் பேருந்துகள் ஊர்வலத்துடன் ஊர்வலமாக வந்தன. ஊர்வலம் இறுதியாக மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வாயிலை அடைந்தது. அங்கு தமிழர் வீர விளையாட்டான சிலம்பம் நடைபெற்றது. 1000-க்கும் மேற்ப்பட்ட மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் நிற்கின்றனர். அவர்களுக்கு இணையான எண்ணிக்கையில் போலீசும் நிற்கிறது. சாலையில் செல்பவர்கள் நின்று கவனித்து செல்கின்றனர். இதனால், அந்த பகுதியே திருவிழா போல மாறியது. மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை மக்கள் அனைவரும் முழங்கினர்.
பின் மக்களிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் போராட்டத்தின் நோக்கம் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ச்சியாக மத்திய பி.ஜே.பி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. முல்லை பெரியாரில் தண்ணீர் விடமறுப்பு, தமிழக வழக்கறிஞர்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை, மருத்துவ படிப்பில் நீட் தேர்வால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட அநீதி. காவிரி நீர் விசயத்தில் தமிழகத்தின் பங்கை தராமல் துரோகம் செய்கிறது மோடி கும்பல். இப்படித்தான் மாட்டை பிடிக்க கூடாது என்ற ஜல்லிக்கட்டின் மீதான தடை. இப்படி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிப்பது ஓர் அநீதி. தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் மனுநீதி. இந்த மனுநீதியை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
போராடினால் ஆட்சியை கலைப்போம் என்று சுப்பிரமணியசாமி சொல்கிறார். இந்த பார்ப்பன கும்பலுக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தது? தமிழக மக்கள் சூடுசுரணை அற்றவர்கள் என நினைக்கும் இந்த கும்பலுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தமிழக மாணவர்களின் போராட்டம் தமிழகத்தை தொடர்ச்சியாக வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்த பார்ப்பன கும்பலுக்கு எதிராக ஓன்றுதிரட்டபட வேண்டும். இனி காளைகளை அடக்குவது வீரவிளையாட்டல்ல, காவி காளைகளை அடக்குவதே தமிழர்களின் வீரத்திற்கு சவால் விடும் விளையாட்டு. இது ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு. நாம் பிடிக்க வேண்டியது காளையின் கொம்பிகளை அல்ல, பார்ப்பன கும்பலின் கொம்புகள். அவற்றை தமிழகத்தை விட்டே அடித்து விரட்ட வேண்டும்.
இந்தி திணிப்பின் போது, தமிழகமே எழுச்சியுடன் போராடியது, அதேபோல் திமிர் பிடித்த பி.ஜே.பி-யின் பார்ப்பன கும்பலை தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம் என இந்த போராட்டம் மக்களை, மாணவர்களை, இளைஞர்களை என அனைத்து தரப்பினரையும் அறைகூவி அழைத்தது.
இந்த மஞ்சு விரட்டு போராட்டத்திற்கு போலீசு வேறு வழியின்றி இடையூறு செய்யாமல் அமைதி காத்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் இந்தப் போராட்டம் நடைப்பெற்றது. பல்வேறு தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
– வினவு செய்தியாளர்
_______________
தேவை ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு! விழுப்புரம் போராட்டம்!
மோடி அரசின் தமிழன விரோத போக்கால் தமிழக விவசாயத்தை அழிக்கும் விதமாக காவிரி தண்ணீர் தர மறுப்பது, தமிழகத்தின் நெற்க்களஞ்சியமான டெல்டாவை அழிக்கும் விதமாக மீத்தேன், ஷெல், கெயில் போன்ற அழிவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது. மேலும் கூடங்குளம் அழிவு திட்டத்தை அமுல்படுத்துவதாகட்டும் இந்தி, சமஸ்கிருத திணிப்பு,நீட்தேர்வை அமுல்படுத்துவது, கீழடியில் தமிழர்களின் தொன்மையான ஆய்வை செய்ய மறுப்பது. இப்படி பார்ப்பன எதிர்ப்பு உள்ள மாநிலம் என்பதால் தமிழனத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அதற்கு ஏற்றாற் போல் உச்சிக் குடுமி மன்றம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த தில்லை கோயிலை தீட்சிதர் கையில் ஒப்படைத்தது, ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக போராடிய தமிழக வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடுத்து தீண்டாமையை கடைபிடிப்பது என உச்ச நீதிமன்றம் உச்சிக்குடுமி மன்றமாக செயல் பட்டு தமிழினத்துக்கு எதிராக தீர்ப்பினை வழங்கிவருகிறது. RSS, BJB, மற்றும் நீதிமன்றம் ஆகியவை இணைந்து தமிழகத்தின் தன்மானத்துக்கும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் சவால் விடுகின்றனர். ஆகையால் நாம் மோத வேண்டியது ஜல்லிகட்டு அல்ல டெல்லியோடு மல்லுக்கட்டு (மோத வேண்டும்).
என்ற அடிப்படையில் விழுப்புரம், மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் எதிரில் மஞ்சு விரட்டு 17.1.2017 காலை 11.00 மணிக்கு நடத்த திட்டமிட்டு ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தோம். இந்த செய்தியை கேள்விப்பட்ட போலீஸ் இருநூறுக்கும் மேற்பட்டோர் குவிந்து நான்கு பக்கமும் பாதுகாப்பு என்ற பெயரில் பதட்டத்தை ஏற்படுத்தினர். இதை பார்த்த மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் போலீசுக்கு தெரியாமல் திடிரென்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டவாறு காளை மாடுகளுடன் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றோம்.
மஞ்சு விரட்டு நடக்கவிருந்த இடத்திற்கு காவல்துறையினர் உடனடியாக வந்து நம்மை மறித்து வலுகட்டாயமாக வேனில் ஏற்றினார்கள். அப்போது மாடுகளை அவிழ்த்துவிட்டு மஞ்சு விரட்டு செய்தோம். அதனை தடுக்க நினைத்த போலிசார் அவர்களும் மாட்டை பிடிப்பபதாக நினைத்து அவர்களே மஞ்சுவிரட்டை நடத்தி விட்டனர். அந்த இடமே போர்க்கோலம் போல் காட்சியளித்தது. கிட்டத்தட்ட 1- மணி நேரம் போராட்டம் நடைப்பெற்றது. அந்த இடத்தில் 5௦௦ க்கும் மேற்பட்ட மக்கள் கூடிநின்று போராட்டத்தை பார்த்து ஆதரவு தெரிவித்தனர். போலீஸ் தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர். இரண்டு மாடுகளை பறிமுதல் செய்து பின்னர் அதையும் விடுதலை செய்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.
இந்தியர்களோடு செல்ஃபி எடுக்கப் பயப்படும் ஜெர்மனிப் பெண்
உனது அழகான வெள்ளைத் தோல்
வெள்ளையாகஇருப்பதால்ஒதுக்கிவைக்கப்படமாட்டீர்கள்; ரசிக்கப்படுவீர்கள். சிலநேரங்களில்பலாத்காரமும்செய்யப்படுவீர்கள்

சில சமயம் பெருநகரங்களில் அது நிகழும். சில சமயம் ஆன்மீகத் தளங்களில். அல்லது, வீதியின் மத்தியில். “உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளவா?” என்றவாறே தங்களுடைய கைப்பேசியைக் காட்டிச் சிலர் என்னை நிறுத்துவார்கள். என்னைப் புகைப்படமே எடுத்ததில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இந்தியாவில் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டி வாரத்தில் ஒருவராவது என்னை அணுகுவார்கள். எனது பெற்றோர் எப்போதும் பணிவாக இருக்க கற்றுக் கொடுத்துள்ளதால் நான் அந்தக் கோரிக்கைகளை புன்னகையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் இந்தியர்களுக்கு என் மீதான ஆர்வம் எங்கிருந்து வருகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எனது உடைகளா? நிச்சயம் இருக்காது – என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்ட அந்த மின்னும் புடவை அணிந்த மணப்பெண் என்னை விடப் பேரழகி தான்.
எனது உடலை போர்த்திக் கொள்ள தில்லி ஜூமா மசூதியில் எனக்கு வழங்கப்பட்ட பெரிய அழுக்கு அங்கியின் கதையைக் கேளுங்கள் – அந்த உடையில் நான் படு கேவலமாக காட்சியளித்தேன். ஆனாலும், ஐந்து இளைஞர்கள் என்னை எல்லாத் திசைகளில் இருந்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பாலியல் கண்ணோட்டம் தான் எனது கேள்விகளுக்கான பதிலா? அப்படியல்ல. “மேடம் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அந்த எட்டு வயது அப்பாவிச் சிறுமி வாராணசியில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் வைத்து என்னிடம் சொன்னாள். அவ்வாறு சொல்லி விட்டு தனது தோழிகளுடன் வரிசையில் வந்து என்னோடு செல்பி எடுத்துக் கொண்டாள். கடைசியில் கோவா கடற்கரையில் நான் பிகினி உடையில் இருப்பதைப் பார்த்த புடவை கட்டிய அந்தப் பெண் என்னிடம் “உங்களுக்கு அழகான வெள்ளைத் தோல்” என்று சொன்னாள். “ஆனால், உனக்கும் அழகான தோல் இருக்கிறது தானே?” என்றேன் ஆச்சர்யத்துடன்.
இந்தக் நிகழ்ச்சிப் போக்குகளுக்கான பதில், இனவெறி – தலைகீழ் இனவெறி. நீங்கள் வெள்ளையாக இருப்பதால் ஒதுக்கி வைக்கப்பட மாட்டீர்கள். ஆனால், உங்களின் வெள்ளைத் தோலுக்காக ரசிக்கப்படுவீர்கள். சில சமயம் பலாத்காரமும் செய்யப்படுவீர்கள்.
நவம்பர் மாதத்தின் இறுதி நாளான அன்று நடந்ததை போல. ஆண் புகைப்படக் கலைஞர்களைக் கொண்ட குழுவைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பெரிய காமெரா லென்சுகளைத் தூக்கிக் கொண்டு கோவாவின் பாலேலம் கடற்கரையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் எனது ஜெர்மானிய தோழிகள் உட்பட சில வெள்ளைப் பெண்மணிகளை மிக நெருக்கமாக படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

வெள்ளை தான் அழகு – மேலும் அது ஒரு வியாபார உத்தி. வெண்மையாக்கும் அழகு சாதனங்களின் சந்தை மதிப்பு சுமார் ஏழாயிரம் கோடிகள். 2010-ம் ஆண்டு அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு கோகோ கோலா மற்றும் தேனீரின் சந்தை மதிப்பைக் கடந்து விட்டதாகச் சொல்கிறது பி.பி.சி. 2012-ம் ஆண்டு 258 டன் அளவுக்கு தோலை வெள்ளையாக்கும் களிம்புகள் விற்றுத் தீர்ந்ததாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் பத்திரிகையின் செய்தி ஒன்று. ஆண்களும் கூட இவற்றைப் பூசிக் கொள்கின்றனர். பாலிவுட்டின் பாதுஷாவாக சொல்லப்படும் ஷாருக் கான் இந்தப் பொருட்களுக்கான விளம்பரதாரர்.
ஆனால், இது அருவெறுப்பானது. வெள்ளைத் தோல் மோகத்தின் பின் வர்க்க, சாதி மற்றும் காலனியவாதம் ஆகிய மூன்று பின்னணிகள் உள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புறங்களில் கருத்த நிறமுடையவர்கள் இன்னமும் ஒடுக்கப்படுகின்றனர். நகரங்களிலும் கூட அத்தகையவர்களை உதவியாளர்களாகவே, கூலிகளாகவோ, துப்புரவு வேலை செய்கிறவர்களாகவோ கருதுவார்கள் என்கிறார் எனது நண்பர்; அவருடைய பெற்றோர்களோ நன்கு படித்த மருத்துவர்கள்.
’ஆரிய திராவிட பிரிவினையின் காரணமாக வெள்ளையாக இருப்பவர்கள் பெரும்பாலும் மேல் சாதிக்காரர்கள்’ என்பதே தலித்துகள் இப்போதும் எதிர்கொள்ளும் பழைய கண்ணோட்டம். இடம் பெயரும் தொழிலாளர்கள் குறித்து எழுதி வரும் பத்திரிகையாளர் ஒருவர், இந்த வெண்மைப் பித்து இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் குறித்த விட்டகுறை தொட்டகுறையாக இருக்க வேண்டும் என்றார்.
அழகுக் கலை நிபுணர்கள் வெண்மையாக்கும் களிம்புகளை எந்த யோசனையும் இன்றி பூசும் அளவுக்கு அது சர்வசாதாரணமானது. எனது ஜெர்மானிய தோழி கார்லா மதுரையில் உள்ள அழகு நிலையம் ஒன்றுக்கு தனது மூன்று நண்பர்களுடன் சென்றிருந்தார். அந்த நிலையத்தை நடத்தியவர் இவரின் கால்களை பிளீச்சிங் களிம்பால் குளிப்பாட்டியதைக் கண்டு அதிர்ந்தே விட்டார்; அவரது கால்களோ ஏற்கனவே படு வெள்ளையானது.

”காகாசிய” (வெள்ளையினம் மற்றும் மாநிற மனித இனம்) மக்களைக் கண்டு வியப்பதோடு, அவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றது. இந்த நான்கு நண்பர்களும் மதுரையின் அந்த அழகு நிலையத்தினுள் நுழைந்த போது அங்கே மூன்று வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் தான் இருந்துள்ளன. அங்கே வேலை செய்தவர்கள் இந்த நால்வரில் ”சுத்த” வெள்ளையாக இருந்த மூவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எங்களது இந்தோ-ஜெர்மானிய தோழி ஜூலியாவின் தோல் கருப்பாக இருந்த காரணத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்
முன்பெல்லாம் எங்கள் குழுவிலேயே ஜூலியா தான் அழகானவரென்றும், அவரையெல்லாம் அழகுபடுத்தவே தேவையில்லை எனவும் சொல்லியிருக்கிறேன். இனி அப்படிச் சொல்ல முடியாது.
நவம்பர் 26-ம் தேதி தில்லி ஹாவ்ஸ் காஸ் கிராமத்திலிருக்கும் ‘இம்பெர்பெக்டோ’ என்கிற மதுக்கூடத்திற்கு எனது ஜெர்மானிய தோழி கரோலா மற்றும் இரண்டு இந்திய நண்பர்களோடு சென்றேன். அங்கிருக்கும் திறந்த மாடிக் கூடத்தில் எங்களில் மூவர் உணவுக்குச் சொல்லியிருந்தோம். எங்களில் நான்காமவரான பிரேன் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாகி விட்டது. வரவேற்பில் இருந்த பெண்மணி “தனியாக வரும் ஆண்கள் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும்” எனக் கேட்டுத் தடுத்துள்ளார். கரோலா உடனே கீழே சென்று தாங்கள் வரும் போது நுழைவுக் கட்டணம் கேட்கப்படாத போது பிரேனிடம் மட்டும் ஏன் வசூலிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
”இரண்டு அமெரிக்கப் பெண்களான நீங்கள் இந்தியன் ஒருவனுடன் உள்ளே போவதைப் பார்த்தேன்” என்றுள்ளார் அந்தப் பணிப்பெண். ”நாங்கள் அமெரிக்கர்கள் அல்ல, ஜெர்மானியர்கள்” என்று கார்லா குறுக்கிட்டுச் சொல்லியிருக்கிறார். “அதெல்லாம் சரி.. நீங்கள் வெள்ளையர்கள் என்பதால் கட்டணம் வாங்கவில்லை; இவர் இந்தியன் தானே? எனவே காசு கொடுக்க வேண்டும்” என்று அவர் பதிலளித்துள்ளார்.
இது எங்களுக்குக் கொஞ்சம் புதிய விசயம். ‘வெள்ளையர்களான எங்களுக்கு நுழைவுக்கட்டணம் இலவசம் – அதே நேரம் இந்தியர்கள் கட்டணம் செலுத்த வேண்டுமா?’ தங்களது சொந்த குடிமக்களையே பாகுபாட்டுடன் நடத்தும் என்னவொரு விசித்திரமான நாடு!
அந்த இரவில், அந்த மதுக்கூடத்தில் மேலாளர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே அங்கே இருந்தனர். ”இது தான் நிறுவனத்தின் கொள்கை. நாங்கள் எதுவும் செய்ய முடியாது” என்று அந்தப் பணிப்பெண் கூறியுள்ளார். பின்னர் நான் அந்த மதுக்கூடத்தின் பொது மேலாளரான மெர்வினிடம் பேசிய போது நடந்த விசயத்திற்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிழையே காரணமென்றும், தனியாக ஆண்கள் வருவதைத் தவிர்க்கவே அப்படி ஒரு விதியைத் தாங்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஹாவ்ஸ் காவ்ஸில் மதுவருந்த பெரும் கும்பலே வரும் என்பதால் என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு சொன்ன அவர், தனது ஊழியர் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நேர்வதைத் தவிர்க்கவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள “தேவையான நடவடிக்கைகளை” தான் எடுக்கவுள்ளதாகவும் மெர்வின் என்னிடம் தெரிவித்தார்.
வெளிப்படையாகச் சொன்னால், வெள்ளைத் தோல் மட்டும் இந்தியாவில் இருக்கும் வெள்ளைக்காரப் பெண்களின் பிரச்சினையில்லை. நாங்கள் ஜெர்மனிக்குத் திரும்பிய பின் பிரான்க்பார்ட் விமான நிலையத்தில் என்னுடன் வேலை பார்க்கும் பேபியனை இரண்டு பெண்கள் வெறித்துப் பார்த்தனர். ”வாவ், உனக்கு மிக அழகான பழுப்புத் தோல்” என்றனர் அவர்கள்.
– பெட்ரா சோஜெய்
இந்தியாவுக்கு படிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பாக சுற்றுப்பயணம் வந்த ஜெர்மன் பத்திரிகையாளர்.
தமிழாக்கம்: முகில்
செய்தி ஆதாரம்:
‘You have so beautiful white skin’: India and its problems with skin colour -indian express
வரலாறு : பார்ப்பனியத்தை வென்ற தலித் மக்களின் பீமா – கோரேகான் வெற்றித்தூண்
ஜனவரி , 2017 முதல் நாள், புனே மாநகரம் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்திருந்தது. அதே நேரத்தில் அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீமா-கோரேகான் கிராமத்தில் இருக்கும் ஒரு நினைவுத்தூணருகே மகர் பிரிவு உள்ளிட்ட தலித் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடினர். மராத்தா பார்ப்பன பேஷ்வா அரச பரம்பரையின் ஆட்சி அதிகாரத்தைச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்த்தப்பட்டதை நினைவுகூறவே அங்கே அவர்கள் ஒன்றுகூடி இருந்தனர்.

மராத்தா பேஷ்வாக்களை வீழ்த்தியதில் துணை புரிந்து இறந்து போன மகர் சமூகத்தினரைப் பெருமைப்படுத்தும் விதமாக 1851 ஆம் ஆண்டில் பீமா-கோரேகான் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் அந்த நினைவுத்தூணை எழுப்பினர். பீமா-கோரேகான் நினைவுத்தூணில் இருக்கும் 49 வீரர்களின் பெயர்களில் 22 வீரர்கள் மகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஒன்றுகூடலுக்கு பீமா-கோரேகான் ரான்ஸ்டம்ப் சேவா சங் (BKRSS) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கோரேகான் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர்களும் மகராஷ்டிரா மாநிலம் முழுவதிலும் இருந்து 500 தன்னார்வலர்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மகர் சமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவ வீரர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்து இந்தி இந்தியா அடிப்படையில் அகண்ட பாரதம் பேசும் பார்ப்பனிய பாசிஸ்டுகளுக்கு ஆண்டுதோறும் நடக்கும் இந்தத் தலித் மக்களின் ஒன்றுகூடல் வேப்பங்காயாய் கசக்கும் என்பதில் வியப்பொன்றுமில்லை.
பீமா-கோரேகான் யுத்தம்
மராத்திய அரசர் பேஷ்வா பாஜிராவ்-II யை ஆங்கிலேயர்கள் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மகர் சமூகத்தினர் மராத்திய அரசிற்குச் சேவை செய்து கொண்டிருந்தனர். ஆனால் மகர் சமூகத்தினரை பேஷ்வா நிராகரித்துவிட்டதால் அவர்கள் ஆங்கிலேயர்கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த நிராகரிப்பு என்பது நூற்றாண்டுகளாக தொடரும் பார்ப்பனக் கொடுங்கோன்மையின் அங்கம். 21-ம் நூற்றாண்டிலேயே கயர்லாஞ்சிக் கொடுமைகள் பகிரங்கமாக நடக்கும் போது 19-ம் நூற்றாண்டில் தலித் மக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த வரலாற்று வெஞ்சினம்தான் பார்ப்பனியத்தின் பிரதிநிதிகளான பேஷ்வாக்கை முறியடுக்குமாறு மகர் மக்களை ஆங்கிலேயரின் படையில் இணையச் செய்தது.
1818, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப்.ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்தியப் பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர்.
பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களின் விடுதலைக்கான ஓர் இன்றியமையாத திருப்பமாக இந்தப் போரை தலித் ஆர்வலர்களில் பலர் கருதுகின்றனர். இந்தப் போரில் 12 ஆங்கிலேய அதிகாரிகளும் மகர் வீரர்கள் உள்ளிட்டு 834 வீரர்களும் பங்கேற்றனர்.

மகர் படையின் எண்ணிக்கையை 500 அல்ல 900 என்றும் பேஷ்வா படையினரின் எண்ணிக்கையை 25000 அல்ல 20000 என்றும் சமகாலத்திய ஆங்கிலேயர்களின் தகவல்கள் சில கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பேஷ்வாக்கள் ஆங்கிலேயர்களிடம் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். அதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் கிழக்கிந்திய நிறுவனம் பேஷ்வாக்களின் தலைநகரான புனேவையும் கைப்பற்றியிருந்தது.
புள்ளிவிவரங்கள் எதுவாக இருப்பினும் இந்தப் போரானது அதுவரை வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
“மராத்திய அரசர் சிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மகர் சமூகத்தினர் இன்றியமையாத அங்கமாக இருந்து வந்தனர். அவுரங்கசிப்பால் கொல்லப்பட்ட மராத்தா அரசர் சாம்பாஜியின் உடலை மகர் சமூகத்தினர் மீட்டு வந்ததை மக்கள் மறந்து விட்டனர். பேஷ்வா படைகளுடன் சேர்ந்து பானிபட் மற்றும் கர்டா உள்ளிட்ட இடங்களில் அவுரங்கசிப்பிறகு எதிரான போர்களில் மகர் சமூகத்தினர் பங்கேற்றனர். ஆனால் வரலாறு பெரும்பாலும் பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்படுவதால் உண்மைகளில் குழப்பம் நேர்ந்து விடுகிறது” என்று BKRSS அமைப்பின் துணைத்தலைவரான கட்லக் கூறுகிறார். ஏனெனில் வரலாறு என்றுமே பார்ப்பனர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பக்கங்கள் பூஜ்ஜியம் தான். சிவாஜியின் காலத்திற்கு பிறகு ஆட்சியைப் பற்றிய பேஷ்வாக்கள் எனப்படும் சித்பவன பார்ப்பனர்கள் தமது ஆட்சியில் வருணாசிரம் கொடுங்கோன்மையை உறுதிப்படுத்தினர். இது மகர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியது.
அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் பொருளாதார – அரசியல் ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்திய மக்களைக் கொடுமைப்படுத்தினர். தமது அரசு – இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் இராணுவத்தில் தலித் மக்களை சேர்த்துக் கொண்டனர்.
ஆனால் பார்ப்பனர்கள் மகர் சமூகத்தினரை மனிதர்களாகவே நடத்தவில்லை. பார்ப்பனர்களின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்ட மகர் சமூக மக்களுக்கு வெள்ளையர்கள் வாராது வந்த மாமணிகள் போல் தெரிந்ததில் வியப்பொன்றுமில்லை. அகண்ட பாரதத்தின் காலாச்சாரப் பெருமைகளைச் மொகலாயர்கள் அழித்துவிட்டதாகப் புலம்பித் தீர்க்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இதயத்தை குத்தும் முள்ளாக, வரலாற்றின் அழியாத சின்னமாய் பீமா-கோரேகான் நினைவுத்தூண் அமைந்துவிட்டது.

மகர் சமூகத்தினர் பேஷ்வாக்களை எதிர்க்கக் காரணம் என்ன?
மராத்தி மொழி பேசும் மண்ணின் மைந்தர்களான மகர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைக் கொண்டு கட்டமைத்த கொரில்லா படைகள் தான் சிவாஜியின் மராத்திய சாம்ராஜ்ஜியத்திற்கு அடிகோலின. மராத்தா அரசின் அமைச்சர்களாக இருந்த பேஷ்வா பார்ப்பனர்கள் சிவாஜியின் காலத்திற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
பேஷ்வாக்களின் கீழ் மகர் சமூகத்தினர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மகர் சமூகத்தினரிடையே அவர்கள் தாம் அனுபவித்த கொடுமைகளைப் பற்றிய இலக்கியங்கள், நாட்டார் வழக்குகள், செவி வழிக் கதைகள் இன்றும் தொடர்கின்றன.
இடுப்பில் கட்டியத் துடைப்பத்துடனும் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும் தான் பார்ப்பனர்கள் வாழும் நகரத்திற்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். அவர்களது கால்களால் தீண்டப்பட்ட தரையைத் துடைப்பத்தைக் கொண்டு துடைத்துக் கொண்டும் எச்சிலை பானையில் துப்பிக் கொண்டும் நகரத்தினுள் அலைந்து திரிய வேண்டும் என்பது தான் பார்ப்பனர்கள் விதித்த மனுதர்மம். மகர் சமூகத்தினர் தங்களது சாதியையும் யாரிடமும் மறைக்கக்கூடாது. மற்றும் அவர்களுக்கு படிப்பறிவும் ஆயுதங்களைத் தூக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனைகள் என விலங்குகளை விட மோசமாக மகர் சமூகத்தினர் நடத்தப்பட்டனர்.
சித்பவன பார்ப்பனர்களின் தலைவர்களான பேஷ்வாக்களின் இந்த மனிதத்தன்மையற்ற செயல்கள் தான் மகர் சமூகத்தினரை ஆங்கிலேயர்களின் பக்கம் சேரத் தூண்டியது. நூற்றாண்டுகள் பல அடக்கியொடுக்கப்பட்ட மகர்களின் சுயமரியாதை வித்தானது பார்ப்பனியத்தை முட்டி மோதி முளைத்தெழுந்தது. பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர்.
இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள். அதன் பிறகுத் தொடர்ச்சியாக வெள்ளையர்கள் அவர்களை தங்களது படைக்குத் தேர்வு செய்தனர்.
சமத்துவப் படை
மகர் சமூகத்தினருக்கு நீண்ட இராணுவ வரலாறு இருந்த போதிலும் ஆங்கிலேய அரசு 1893 ஆம் ஆண்டு அவர்களைத் தங்களது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை. 1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய் கலகம் (Indian Rebellion -1857) இதற்கு இன்றியமையாதக் காரணியாக இருந்தது. பிறகு முதல் உலகப்போரில் ஆங்கிலேய அரசு அவர்களைப் படைக்கு அமர்த்தி இருந்தாலும் போருக்கு பிறகு படையில் இருந்து நீக்கிவிட்டது. கடைசியாக 1945 ஆம் ஆண்டு மகர் படைவகுப்பு (Mahar Regiment) நிரந்தரமாக உருவாக்கப்பட்டது.

அதே நேரம் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இராணுவமயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதாக அம்பேத்கர் கருதினார். எனவே அதனை எதிர்கொள்ள சமத்துவப்படை (Samata Sainik Dal) என்ற துணை அமைப்பை 1926 ஆம் ஆண்டு நவம்பரில் அம்பேத்கர் தொடங்கினார். இது பின்னர் 1955 ஆண்டு அம்பேத்கர் உருவாக்கிய இந்தியப் புத்த சமூகத்தில்(Buddhist Society of India) இணைக்கப்பட்டது. பார்ப்பனர்களின் கொடுமைகளில் இருந்து தலித் மக்களைப் பாதுகாக்க அஃது உதவும் என்று அம்பேத்கர் கருதினார்.
1927, ஜனவரி முதல் நாள் பீமா-கோரேகான் கிராமத்திற்கு வெளியே இருக்கும் நினைவுச்சின்னத்தின் அருகே நடைபெற்ற ஒருக்கூட்டத்தில் அம்பேத்கர் தலைமையுரை ஆற்றினார். அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவுச்சின்னம் இருக்குமிடத்தில் மகர் சமூகத்தினர் ஒன்றுகூடி மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
நவீனத் தீண்டாமை
தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமுமாகும் என்று பள்ளிக்கூட ஏடுகளில் கூட இன்று நாம் காண்கிறோம். ஆயினும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேஷ்வாக்களின் வாரிசுகளால் தீண்டாமை இன்று நவீன முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. புத்தாண்டு அன்று பீமா-கோரேகான் நினைவுத்தூண் இருக்கும் பாதையில் நடக்கக்கூடாது என்பது தான் அந்த நினைவுத்தூணைப் பற்றி புனேவில் இருக்கும் ஆதிக்கச்சாதி இந்துக்களின் இன்றையக் கருத்தாக இருக்கிறது என்று புனே பல்கலைகழகத்தின் வரலாற்றாசிரியரான சாரதா கும்போஜ்கார் கூறியுள்ளார்.
“அந்த நினைவுத்தூணை அடுக்கடுக்கான பல நினைவுகள் சூழ்ந்து உள்ளன. கோரேகான் போர்க்களம் பின்னர் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு 1927 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அங்கு வருகை தந்தார். அவரது வருகைக்குப் பிறகு புனிதத்தளத்திற்கான சிறப்பை அது பெற்றுவிட்டது. அவரது மறைவுக்குப் பிறகு இந்து காலாச்சாரத்திற்கு மாற்றுக் காலச்சாரம் உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தளம் மாறிவிட்டது” என்று கூறினார் சாரதா.
அந்த நினைவிடத்தைக் கடந்து நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியைத் தவிர்க்க நகரத்து நடுத்தர மக்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். “கோரேகானில் இருக்கும் அவர்களது இடத்தில் அந்த (தலித்) மக்கள் கும்பலாக இருப்பார்கள்” என்று தங்களுக்குள் எச்சரிக்கைச் செய்து கொள்கிறார்கள் என்று சாரதா கூறினார்.
இருந்தபோதிலும் பார்ப்பனியச் சாதிக்கொடுமைக்கு எதிரான மகர் சமூகவீரர்களின் போராட்டத்தை இது நலிவடையச் செய்துவிடாது.
“நான் ஒரு புத்த பிக்கு. அமைதியில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்த சமூகத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று புத்த பிக்கு பூர்ணிமா கூறினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து இவர் வந்திருந்தார்.
வெள்ளையர்களிடம் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் கூழைக்கும்பிடு போட்டதுதான் பார்ப்பனர்களின் வரலாறு. சுயமரியாதைக்காக பார்ப்பனர்களின் செருக்கை அதே வெள்ளையருடன் சேர்ந்து அழித்தொழித்தது தாழ்த்தப்பட்ட மகர் சமூகத்தின் வரலாறு. முன்னது பாரத் மாதா என்றும் ஜனகனமன என்றும் தேசபக்தி வேடம் போட்டுக்கொள்கிறது. பின்னது சுயமரியாதைக்கான வரலாற்றுச் சின்னமாக பீமா-கோரேகான் கிராமத்தில் இன்றும் நிலைத்துள்ளது.
இதை வைத்துக் கொண்டு மகர் சாதி தலித் மக்களை தேச துரோகிகள் என்று கூறுவதற்கு ஆர்.எஸ்.எஸ் தயாரா? அப்படிக் கூறினால் உனா போராட்டத்தின் தொடர்ச்சியாக செத்த மாட்டின் உடல்களை வீசினார்களே குஜராத் தலித் மக்கள், அது போன்று மராட்டிய தலித் மக்களும் அகண்ட பாரத அடையாளங்களை எரிப்பது உறுதி.
தேசபக்தி என்பது பாரதமாதா போன்ற பட்டு உடை போர்த்திய மாமி படங்களை பூஜிப்பதால் வருவதில்லை என்பதை இந்த வரலாற்றுத் தூண் கூறுகிறது. ஆங்கிலேயர்களை அண்டிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் தலைவர்களும் சரி, காங்கிரசை இந்துமயமாக்கிய திலகர் போன்ற தலைவர்களும் சரி அனைவரும் பேஷ்வாக்களைப் போன்று சித்பவன பார்ப்பனர்கள் என்பது இந்த வரலாற்றுத் தூணின் கதையை உறுதிப்படுத்திகிறது.
பேஷ்வாக்கள் ஆட்சியில் தமது பார்ப்பன சாம்ராஜ்ஜியம் பறிபோனதாலேயே சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசிலும், ஆர்.எஸ்.எஸ் – இந்து மகா சபாவிலும் சேர்ந்தார்கள். இதன் காரணம் தேசபக்தி அல்ல. இழந்து போன பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தை மீட்பதே. ஆனால் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பேஷ்வாக்களை எதிர்த்த மகர்களின் நோக்கம் தமது அடிமைத்தனத்தை ஒழிப்பதே. இப்போது சொல்லுங்கள் தேச பக்தர்கள் யார் என்று!
– சுந்தரம்
செய்தி ஆதாரம்:
Why lakhs of Indians celebrate the British victory over the Maratha Peshwas every New Year
When Mahars fought on home turf, and helped Britain win