Tuesday, June 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 515

காவிக் காளையை அடக்கு ! கேலிச்சித்திரம்

1

தமிழகத்திற்கு எதிரான காளையை அடக்கு !

Mugilan Cartoon

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச: 95518 69588

இணையுங்கள்:

உலகம் : 2016-ம் ஆண்டில் 93 பத்திரிகையாளர்கள் படுகொலை !

0
ஐ.எஸ்.ஐ.எல் - லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

“சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம்” (International Federation of Journalists – IFJ – ச.ஊ.ச) 2016 ஆண்டில் 93 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பாக 2016-ம் ஆண்டில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர்களுக்குப் பயங்கரமான நாடுகளாக இருந்துள்ளதாக அது கூறியுள்ளது.

கொலம்பியாவில் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிர்களை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு மக்கள் நவம்பர் மாதத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கொலம்பியாவில் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிர்களை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அந்நாட்டு மக்கள் நவம்பர் மாதத்தில் அஞ்சலி செலுத்தினர்.

திட்டமிட்டத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் அல்லது இருத்தரப்புத் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களைச் சேர்த்து இந்த எண்ணிக்கையை ச.ஊ.ச தெரிவித்துள்ளது. இரசியாவைச் சேர்ந்த 9 பத்திரிக்கையாளர்களும், கொலம்பியாவைச் சேர்ந்த 20 விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களும் விமான விபத்துகளில் கூடுதலாகப் பலியாகியுள்ளனர்.

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் இயங்கி வரும் ச.ஊ.ச, 140 நாடுகளில் உள்ள 6 இலட்சம் ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2015 ஆம் ஆண்டு வரை குறைந்தது 2,297 பத்திரிக்கையாளர்களின் மரணங்களை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கைச் சற்றுக் குறைவாக இருந்தாலும் அதைப் பற்றிய விசாரணையில் மெத்தனப் போக்கு இருப்பது குறித்தும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து விலக்கு பெரும் போக்குக் குறித்தும் ச.ஊ.ச எச்சரித்திருக்கிறது. 4 விழுக்காடு இறப்புகளுக்கு மட்டுமே இதுவரை நீதி கிடைத்திருக்கிறது என்று அது கூறியுள்ளது.

“பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை சற்று குறைந்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது சிறு ஆறுதலை மட்டுமே கொடுப்பதுடன் ஊடகத்துறையில் நிலவும் பாதுகாப்பின்மை முடிவுக்கு வராமல் இருப்பது நம்பிக்கையளிப்பதாக இல்லை” என்று ச.ஊ.ச-வின் தலைவரான பிலிப்பே லேருத் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களால் 112 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பகுதிவாரியாகப் பார்க்கும் போது 30 படுகொலைகளுடன் மத்திய கிழக்கு பத்திரிக்கையாளர்களுக்கு கொலைக்களமாக இருக்கிறது. மத்திய கிழக்கை நிரந்தர போர்க்களமாக்கி தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு அல் கைதா, ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கிய அமெரிக்காவே முதன்மைக் குற்றவாளி. மத்திய கிழக்கைத் தொடர்ந்து ஆசியா – பசிபிக் பகுதியில் 24 படுகொலைகளும் ஆப்பிரிக்காவில் 8 படுகொலைகளும் ஐரோப்பாவில் 3 படுகொலைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக நடந்துள்ளதாக ச.ஊ.ச கூறியுள்ளது.

அதிகபடியான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகள்
அதிகபடியான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நாடுகள்

அதுமட்டுமல்லாமல் 2016 ஆண்டு முழுதும் பத்திரிக்கையாளர்கள் பலர் காணாமல் போயுள்ளது குறித்தும் தமக்குத் தெரிய வந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

“காணாமல் போனவர்கள் பற்றிய நம்பகமான தகவல் எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோத கும்பல்களிடமிருந்து வரும் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்க சில நாடுகளில் நிருபர்கள் சுயதணிக்கை (Self-Censorship – இங்கே பத்திரிக்கையாளர் தமது அடையாளத்தை மறைத்தல் என்ற பொருளில்) செய்து கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்” என்று ச.ஊ.ச வின் பொதுச்செயலாளர் அந்தோணி பெல்லங்கர் கூறியுள்ளார்.

“படுகொலைகள், காணாமல் போதல் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆய்வு செய்ய அரசாங்கங்களைத் துரிதபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வு வேகமாகவும் நம்பகமான முறையிலும் பத்திரிக்கையாளர்களின் உடல்ரீதியிலான பாதுகாப்பையும் அவர்கள் தனித்துச் செயல்படுவதைப் பேணும் விதத்திலும் இருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் தண்டனைகளில் இருந்து விலக்குப் பெறுவது அதிகரித்து வருவதால் பத்திரிக்கையாளர்கள் சுயதணிக்கை செய்து கொள்கிறார்கள் என்று நியூயார்க்கில் இயங்கி வரும் பத்திரிக்கையாளர் பாதுகாப்புக் குழு(The Committee to Protect Journalists) டிசம்பர் மாத அறிக்கையொன்றில் கூறியிருந்தது.

“பத்திரிக்கையாளர்களை ஆபத்தான பகுதிகளில் செயல்படுவதிலிருந்து அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை இரண்டும் துரத்தி விடுகின்றன. மோதல் நடக்கும் இடங்களில் இருந்து வெளியேறவோ அல்லது சுயதணிக்கை செய்து கொள்ளவோ அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன” என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சுயாதீன பாகிஸ்தான் பத்திரிக்கை நிறுவனம்(The independent Pakistan Press Foundation) நவம்பரில் கூறியிருந்ததை CPJ மேற்கோள் காட்டியிருக்கிறது.

2016 ஆம் ஆண்டில் பத்திரிக்கையாளர்களுக்கு சிரியா மிகவும் பயங்கரமான நாடாக இருந்ததாகவும் அதற்கு அடுத்ததாக ஈராக் மற்றும் ஏமன் நாடுகள் இருந்ததாகவும் CPJ கூறியிருக்கிறது. சிரியாவில் 2011 க்குப் பிறகு நடந்து வரும் உள்நாட்டுப்போரில் இதுவரை 107 பத்திரிக்கையாளர்கள் பலியாகி இருப்பதாக அது கூறியிருக்கிறது.

உலகம் முழுவதும் இயற்கை வளங்களுக்காகவும் அதிகாரத்திற்காகவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தோற்றுவித்திருக்கும் முரண்பாட்டுப் பின்னல்களில் சிக்கிக் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர். இதை நேரடிக்காட்சிகளாக்க ஏகாதிபத்திய செய்தி நிறுவனங்கள் முதல் தன்னார்வ ஊடகவியலாளர்கள் வரை களத்தில் குதிக்கின்றனர். இந்த அவலங்கள் தோற்றுவித்திருக்கும் சீரழிவில் மக்களோடு சேர்ந்து பத்திரிக்கையாளர்களும் மடிந்து போகின்றனர்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்புப்போரில் ஊடகவியலாளர்களை நேரடியாக களத்தில் இறக்கி கொல்லப்படும் ஈராக்கிய மக்களை தீவிரவாதிகளாக நம்ப வைத்தது அமெரிக்கா. தன்னுடைய ஆக்கிரமிப்பையும் போர்வெறியையும் நியாயப்படுத்த அமெரிக்கா உருவாக்கிய இந்த பிரச்சார உத்தியை பின்னர் உலகமே காரித்துப்பியது.

1993 ஆம் ஆண்டில் பட்டினிச்சாவின் விளிம்பில் சிக்கியிருந்த தென் சூடானைச் சேர்ந்த ஒரு பெண்குழந்தையையும் அவளை தின்பதற்காக காத்திருந்த பருந்தையும் ஒரு சேர எடுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற படத்திற்கு 1994 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசு கிடைத்தது. கல்நெஞ்சத்தையும் கதறச் செய்யும் அந்த கோரக்காட்சியை படம் பிடித்த கெவின் கார்ட்டர் என்ற தென்னமெரிக்க பத்திரிக்கையாளர் குற்றவுணர்வால் உந்தப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வியட்நாம் உடனான போரின் போது சாலையில் நிர்வாணமாக ஓடிவரும் ‘கிம் புக்’ என்ற சிறுமியை யாரும் மறந்திருக்க முடியாது. நிக் உட் என்பவர் எடுத்த இந்தப் புகைப்படம் அமெரிக்கப் போர் வெறிக்கு என்றைக்குமான கோரச்சாட்சியாக இருக்கிறது.

பத்திரிக்கையாளர்களின் மரணங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கூக்குரலிடும் இந்நிறுவனங்கள் இம்மரணங்களுக்கான மூலவேர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களில் முடிகின்றன என்பதைக் குறித்து சிறுத்தும்மலைக் கூட வெளிப்படுத்துவதில்லை. ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பத்திரிக்கையாளர்களுக்கு பயங்கரமான நாடுகள் என்றால் தனது ஏகாதிபத்திய நலன்களுக்காக அந்த சோதனைச்சாலைகளை உருவாக்கிய அமெரிக்காவை என்ன பெயரிட்டு அழைப்பது?

ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் படி டெய்லி இலெவன் (Daily Eleven) செய்திப் பத்திரிக்கையின் புலனாய்வு நிருபரான சு மோ துன்(Soe Moe Tun) 2016, டிசம்பர் 13 அதிகாலையில் மியான்மரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின் படி டெய்லி இலெவன் (Daily Eleven) செய்திப் பத்திரிக்கையின் புலனாய்வு நிருபரான சு மோ துன்(Soe Moe Tun) 2016, டிசம்பர் 13 அதிகாலையில் மியான்மரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எல் - லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் – லுக்கு எதிரான லிபிய அரசின் கொடுமைகளைப் பதிவுச் செய்ததற்காக டச்சு நிருபரான ஜெரோயின் ஓர்லேமன்ஸ்(Jeroen Oerlemans) லிபிய நகரமான சிர்ட்டேவில் அக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
இரசிய நிருபரான பாவெல் செரிமெட்(Pavel Sheremet) ஜூலை மாத கடைசியில் உக்ரைனின் கிவ்வில் நடந்த ஒரு கார் வெடிகுண்டு விபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இரசிய நிருபரான பாவெல் செரிமெட்(Pavel Sheremet) ஜூலை மாத கடைசியில் உக்ரைனின் கிவ்வில் நடந்த ஒரு கார் வெடிகுண்டு விபத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
சோமாலியாவின் தலைநகரமான மோகடிஸுவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சோமாலிய வானொலி நிருபரான அப்தியசிஸ் அலி ஹாஜி(Abdiasis Ali Haji) செப்டெம்பரில் படுகொலை செய்யப்பட்டார்.
சோமாலியாவின் தலைநகரமான மோகடிஸுவில் துப்பாக்கி ஏந்திய நபர்களால் சோமாலிய வானொலி நிருபரான அப்தியசிஸ் அலி ஹாஜி(Abdiasis Ali Haji) செப்டெம்பரில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆப்கனைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையமான அரியானாவில்(Ariana) பணிப் புரிந்து வந்த பத்திரிக்கையாளரான நெமதுல்லாஹ் ஜாகிர்(Nematullah Zaheer) சாலையோர குண்டு ஒன்று வெடித்ததில் உயிரிழந்தார்.
ஆப்கனைச் சேர்ந்த தொலைகாட்சி நிலையமான அரியானாவில்(Ariana) பணிப் புரிந்து வந்த பத்திரிக்கையாளரான நெமதுல்லாஹ் ஜாகிர்(Nematullah Zaheer) சாலையோர குண்டு ஒன்று வெடித்ததில் உயிரிழந்தார்.

– சுந்தரம்

செய்தி ஆதாரம் :
Nearly 100 journalists killed worldwide in 2016: IFJ – அல் ஜசீரா

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

0

மதுரவாயலில் மக்கள் அதிகாரம் நடத்தும் மஞ்சு விரட்டு !

 

PP Poster

pp Manjuvitattu

தமிழ் இனத்தை தமிழ் நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜெ.பி.க்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள் – இளைஞர்கள் என அனைவரும் இந்த அழைப்பை ஏற்று மதுரவாயலுக்கு வாருங்கள் !

இடம் : மதுரவாயல்,
நாள் : 17.01.2017.
நேரம் : மாலை 5:00 மணி.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம். 91768 01653.

_______________

விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

 

v

தமிழ் இனத்தை தமிழ்நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜே.பி- RSS கும்பலுக்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் இந்த அழைப்பை ஏற்று விழுப்புரத்திற்கு வாருங்கள் !

இடம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில்
நாள் : 17.01.2017

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

_______________

காஞ்சிபுரம் பகுதியில்  16.01.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தை நடத்திய அழிவிடைதாங்கி, மற்றும் அருகில் உள்ள பெருமானூர், வெம்பாக்கம் ஆகிய  ஊர்மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் இணைந்து மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் 3,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை – காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர் மக்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மாலை நேரத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மஞ்சு விரட்டு தொடங்கியது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் முன்னணித் தோழர்கள், தோழர்.கணேசன், தோழர். முகுந்தன் மற்றும் பகுதித் தோழர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Kanchi manju virattu (7)

மேலும் மக்கள் அதிகாரத்தின் “ஜல்லிக்கட்டு அல்ல! இது டெல்லிக் கட்டு!” என்ற துண்டறிக்கைகள் ஆயிரக் கணக்கில் மக்களிடம் வினியோகிக்கப் பட்டது. இந்த ஊர்களிலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் காவல் துறை நேரில் சென்று முந்தைய நாளே மக்களை மிரட்டிப் பார்த்துள்ளது, ஆனால் மக்கள் நாங்கள் வருடா வருடம் நடத்தும் இந்த நிகழ்ச்சியை யாரும் தடுக்க முடியாது என துணிச்சலாக பதிலலித்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி நடக்கும் போது மக்களை தடுக்க வந்த போலீசிடம் 70 வயது முதியவர் ஒருவர் எங்க மாட்டை விரட்டக் கூடாது என சொல்ல நீ யார் எனக் கூறி போலீசை விரட்டிவிட்டார். மேலும் இளைஞர்கள் பலரும் “தமிழண்டா ! முடிஞ்சா தொட்டுப் பார் !” என்ற டி-சர்டுகளுடன் வலம் வந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் காவல் துறை வந்து தடுத்தால் அதை எதிர் கொள்ள ஆயத்தமாக முன் நின்றனர். காவல் துறை தனது அதிகாரம் இங்கு பலிக்காது என்பதை உணர்ந்து திரும்பி சென்றது.

இவ்வாறு காவல் துறையின் அச்சுறுத்தல்களை மீறி இரவு 8:00 மணிவரை நிகழ்ச்சிகள் நடை பெற்றது இதில் சுமார் 100-க் கணக்கான காளை மற்றும் உழவுமாடுகளுடன் உற்சாக மாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம். 91768 01653.

கோவை ஜிடிஎன் ஆலையில் பு.ஜ.தொ.மு – வின் புது சங்கம் உதயம் !

0

ஜி‌.டி‌.என் நிறுவனம் பல்லடம் செம்மிபாளையத்தில் செயல்பாடு வருகிறது. 228 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் 150 பேர் உள்ளனர். ஜி‌.டி‌.என் நிறுவனத்தில் எண்ணெய் கிணறு சம்பந்தப்பட்ட வால்வு மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரித்தல் நடைபெறுகிறது. AEROSPACE விமானத்தின் உதிரி பாகங்களும் தயாரிக்கப்படுகிறது. அனைத்தும் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

NDLF Covai GDN (3)தொழிலாளர்கள் அனைவரும் ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தில் ஒரே சங்கமாக செயல்பட்டனர். ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி சங்கத்தின் மீது தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடி வந்தனர் நமது தரப்பில் “ஏற்கெனவே ஒரு சங்கம் நிறுவனத்தில் உள்ள நிலையில் இன்னொரு சங்கத்தை துவக்குவது தொழிலாளர்களை கூறு போட செய்யும்” எனவே ஏ‌ஐ‌டி‌யு‌சி சங்கத்துக்குள்ளேயே (அமைப்பு முறைப்படி) போராடுங்கள் என்று அனுப்பினோம், தொழிலாளர்கள் அதன்படி செய்தார்கள். ஆனால் அதற்குள் ஏ‌ஐ‌டி‌யு‌சி சார்பில் புஜதொமு-வை விமர்சனம் செய்து இரண்டு வகையான துண்டுப் பிரசுரம் வெளியிட்டு அவதூறு செய்தனர்.

நாம் நம்மிடம் வந்த தொழிலாளர்களிடம் “எமது அமைப்பு சார்பில் இதற்கெல்லாம் பதில் கூறத் தேவையில்லை எனக் கருதுகிறோம் நீங்களே நேரடியாக புஜதொமு போராட்டம் நடத்திய கம்பெனிகளுக்கு சென்று விசாரியுங்கள்” என அனுப்பி வைத்தோம் ஜி‌.டி‌.என் தொழிலாளர்களும் என்பெஸ்ட், கௌரி மெட்டல், ரோட்டோரோ, சி‌.பி‌.சி, சி‌.ஆர்‌.ஐ-என நேரில் சென்று விசாரித்து நிலைமையை அறிந்தனர். இதன்பிறகு புஜதொமு சங்கத்தின் கிளையை ஆரம்பித்தே ஆக வேண்டும் என அறிவித்தனர். சி‌.ஆர்‌.ஐ கம்பெனியில் கதவடைப்புக்கு எதிராக 600 நாட்களுக்கு மேலாகியும் போராடும் ஒரே சங்கம், தொழிலாளர்கள் பக்கம் நின்று உறுதியாக போராடுவது நமது சங்கம்தான் என உறுதியாக நின்றனர். அதன்பிறகு 200க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சங்கத்தில் இணைந்தனர்.

கடந்த 18.12.2016 காலை 10:30 மணிக்கு நிறுவனத்தின் முன் கொடியேற்று விழா கிளைத் தலைவர் தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் தோழர் ஆர்தர் ஜீவநேசன் கௌரவத் தலைவர் தோழர் ஜெயபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொழிலாளர்கள் தரப்பில் தோழர்கள் தோழர்கள் கனகராஜ் விஜயகுமார் அசோக், எம்.அசோக், சுப்பிரமணி, மோகன்ராஜ், முருகேசன், ஆகியோர் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். தோழர்.சந்திரஹாசன் உரைவீச்சு நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் திலீப், கோபிநாத், நித்தியானந்தம் சரவணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.

NDLF Covai GDN (2)இறுதியாக மாநில துணைத் தலைவர் விளவை ராமசாமி கொடியேற்றி வைத்து உரையாற்றுகையில், ஜி‌.டி‌.என் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மட்டும் போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் பல்லடம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் தஞ்சாவூர் விவசாயிகள் போன்றோரின் பிரச்சினைகளுக்கும் போராட வேண்டும். வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் தொழிலாளி வர்க்கம் இயல்பாக தோன்றியது. அது புரட்சிகர உணர்வின் மூலம் தனக்கான வர்க்கமாக மாற வேண்டும், மார்க்சியம் என்பது உயிராற்றல் நிரம்பிய தத்துவம். அதனைக் கொண்டு சமூகத்தை மாற்ற வேண்டும்

காரல் மார்க்ஸும், லெனின், ஸ்டாலின், மாவோவும் உயர்த்திப் பிடித்த செங்கொடியை கம்பெனி வாயிலில் முழக்கங்களுக்கிடையில் ஏற்றி வைத்துள்ளோம். செங்கொடி உயர்ந்த உடன் காவல் துறையினர் உடனே கையில் கேமராவுடன் வந்துவிட்டனர். இதுவரை இக்கம்பெனி முன்பு காவல்துறை ஏன் வரவில்லை. சமரசமாக சங்கம் நடத்தினால் யாரும் வர மாட்டார்கள். புரட்சிகர உணர்வுடன் சங்கம் நடத்தினால் வெற்றியும் வரும். கம்பீரமான தோல்வியும். வரும் இரண்டுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

NDLF Covai GDN (1)தோல்வி வந்தாலும் அதனை தனது உழைப்பால் போராட்டத்தால் வெற்றியாக மாற்றுபவனே கம்யூனிஸ்டு. ஜி‌.டி‌.என் தொழிலாளர்கள் இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். நாம் காய்த்து குலுங்கும் கனிமரம். நம்மீது கல்லடி நிச்சயம் விழும். நம் மீது ஏ‌ஐ‌டி‌யு‌சி வைத்துள்ள விமர்சனங்களை இது போலத்தான் பார்க்க வேண்டும்.

புரட்சிகர தொழிற்சங்கம் நாளும் ஒவ்வொரு பாடம் நடத்தும். அதனை உற்சாகத்துடன் படித்து வெற்றி பெற வேண்டும். தோல்வியின் அழகு மகத்தானது. அது நம்மிடம் உறங்கிக் கிடக்கும் ஆற்றல்களை தட்டி எழுப்பும். நம் புரிதலை மேம்படுத்தும். முதலாளித்துவ பயங்கரவாதம் அடுத்து நமக்கு விடுக்கப் போகும் சவாலை சந்திக்க அணியமாவோம் என அறைகூவி முடித்தார். தோழர் கிருபானந்தம் நன்றி கூற விழா நிறைவுற்றது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை மாவட்ட.ம்.

விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

1

ருவமழை பொய்த்துப் போனதையடுத்து தீவிரமாகும் வறட்சியும், விவசாயிகளின் தற்கொலைகளும் டெல்டா மாவட்டங்களையும் தாண்டி தமிழகமெங்கும் பரவி வருகிறது. குறிப்பாக பருவமழையை மட்டுமே நம்பிய மானாவாரி விவசாயம் முற்றிலுமாக அழிந்துவருவதால், மானாவாரி விவசாயிகளின் தற்கொலைகள் தொடங்கியுள்ளது.

மதுரைமாவட்டம் பேரையூர் தாலுக்கா, பி.கன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த 77 வயது பெருமாள் தேவருக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 3 ஏக்கரில் விதைத்திருந்த கம்பு பயிர், மழை போய்த்துப்போனதால் முழுவதும் கருகிவிட்டது. வர்தா புயல் மூலம் எப்படியும் மழை கிடைக்கும் என்று நம்பி 5௦ செண்டில் சாப்பாட்டிற்காக நெல்நாற்று பாவி வைத்திருக்கிறார். அதுவும் பொய்த்துப் போனது. கடைசி முயற்சியாக அவ்வப்போது ஊரும் கிணற்று நீரை நம்பி பாசிப்பயிரை நடவுசெய்துவிட்டு, அதுவும் கைசேருவதற்கு உத்திரவாதமில்லாத நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல புலம்பிக் கொண்டிருந்தவர், வீட்டிலிருந்த காலாவதியான எக்காலாக்ஸ் மருந்தைக் குடித்து இறந்துபோனார்.

இறந்து போன விவசாயி பெருமாள் குடும்பம்
இறந்து போன விவசாயி பெருமாள் குடும்பம்

பெருமாள்தேவருக்கு நான்கு மகள், இரு மகன் என மொத்தம் 6 பிள்ளைகள்! எல்லோரும் திருமணமானவர்கள். இரு மகன்களும் ஆந்திராவில் முறுக்கு போடும் தொழில் செய்து ஓரளவு வசதியாக இருக்கிறார்கள்.

இவ்வளவு வயதான அப்பாவை நீங்கள் கூட்டிக்கொண்டு போய் வைத்திருக்கலாமே? என்று மகனிடம் கேட்டதற்கு, “எங்ககிட்டதாங்க வந்து இருந்தாரு. இங்க மழைபெய்ஞ்சிருச்சுனு தெரிஞ்சவுடனே, என்காடு மட்டும் தரிசா கிடக்குறதா… அப்படினு சொல்லிட்டு ஊருக்கு கிளம்பி வந்துட்டாரு” என்றார். “ஆறு வருடமாக தனியாக சோறு ஆக்கி சாப்பிட்டுக்கிட்டு, வைராக்கியமா விவசாய வேலையும் செய்துக்கிட்டிருந்தாரு. ரொம்ப முடியலைனா நாங்க சோறு கொளம்பு கொடுத்துப் பாத்துக்குவோம்” என்கிறார் பக்கத்து வீட்டுப் பெண்மணி. “ஊர் பொதுப்பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் கடன் எடுத்திருக்கிறார். இது இல்லாமல் நூறுநாள் வேலை செய்யும் ஆட்களிடம் முப்பதாயிரம் வரை வட்டிக்கு வாங்கியிருக்கிறார். இந்தக் கடனை என்னைக்கு அடைக்கப்போகிறோம்” என்ற கவலையில்தான் தற்கொலை செய்துகொண்டு விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

காய்ந்துபோன பருத்தியில் கனவு காணும் விவசாயி.
காய்ந்துபோன பருத்தியில் கனவு காணும் விவசாயி.

பேரையூர் தாலுக்கா முழுவதும் மானாவாரி விவசாயம்தான் அதிகளவில் உள்ளது. சுமார் 15,000 ஏக்கர் பருத்தியும், 10,000 ஏக்கர் மக்காச் சோளமும் இந்த வறட்சியால் முற்றிலுமாக அழிந்து கொண்டிருக்கிறது. கன்னியம்பட்டி கிராமம் உட்பட சுற்றுக் கிராமங்களின் நீராதாரமான அல்லிகுண்டம் கண்மாயோ புதர்காடாக கிடக்கிறது. இக்குளத்தின் கீழ்புறம் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயியோ, “ஒரே ஒருநாள் மழைகிடைத்தாலும் போட்டமுதலை எடுத்துவிடுவேன்” என்று கலங்குகிறார். “ஒரு ஏக்கரில் பருத்தி பயிரிட 15,000 ரூபாய் செலவாகுது. 10 ஏக்கரில் விதைச்சிருக்கேன். பிஞ்சும்,காயுமா இருக்கு. மழையில்லாம பிஞ்சிலேயே வெடிக்குது, இந்தப் பஞ்சை யார் வாங்குவான்” என்று பெருமூச்சு விடுகிறார் பாண்டியன். இவருக்கு ஆறுதல் சொல்வதற்குக் கூட நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

உசிலம்பட்டி நகரை ஒட்டிய சிட்லம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பொன்னாங்கத்தேவர் மகன் பாண்டி(67), தனது இரண்டு ஏக்கர் மானாவாரி நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மாடு வியாபாரமும் செய்து வந்தார். இந்தவருடம் மழையை நம்பி, மக்காச்சோளம் பயிரிட்டு கதிர்வரும் நேரத்தில் மழையின்றி காய்ந்த தட்டையாக நிற்பதைக் கண்ட வேதனையில், வீட்டுக்கு வரும்வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டார். இவரின் நான்கு மகன்களில் மூவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்ய, ஒருவர் விபத்தில் காலை இழந்து வீட்டில் முடமாகி கிடக்கிறார். ஒரு மகள் கணவனை இழந்து வீட்டருகிலேயே பெட்டிக்கடை வைத்திருக்கிறார்.

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மாடு வியாபாரமும் நின்றுவிட்டது. மகனின் மருத்துவச் செலவு, பேரனின் கல்லூரி படிப்புச் செலவு ஆகியவற்றுக்கு வாங்கிய கடன் நெருக்கடிதான் பாண்டியை சாகடித்திருக்கிறது.  MSW பட்டாதாரி ஹரிஹரன் தனது இரண்டுமாடி வீட்டைக்காட்டி, “இது எங்க அப்பா சம்பாதிச்சதுங்க. நான் ரெண்டு பால்மாட்டை வச்சுதான் பொழைப்பை ஓட்டுறேன். இப்ப தீவனம்கூட கிடைக்க மாட்டேங்குது. நிலமும் தரிசாக் கிடக்குது. இந்த ஊருல பொழைக்குறதுக்கு ஒண்ணுமில்ல.” என்றவரிடம், ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்!

தீவனமில்லாமல் பால் கரைப்பது எப்படி15 வருடத்திற்கு முன்பு, சிட்லம்பட்டி கிராமம் வளமான விவசாயப் பூமியாக இருந்தது. “உசிலம்பட்டி பெரிய கண்மாய்தான் இக்கிராமத்தின் நீராதாரமாக இருந்தது. கண்மாயில் நீர் தேங்கினால் இந்த ஊர்கிணறுகளில் மட்டுமல்ல, சுற்றியுள்ள பத்து கிராமங்களிலும் நீர் வற்றாது” என்கிறார்கள் இந்த ஊர் பெரியவர்கள். மழைநீரை மட்டுமே நம்பியுள்ள 42 ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்ப்பட்டி கண்மாயில், 11 ஏக்கர் ஹவுசிங் போர்டு ஆக்கிரமிப்பில் உள்ளது. அருகில் உள்ள தனது பிளாட்டுகளுக்கு இடையூறாக இருப்பதால், இதன் வரத்துக் கால்வாயை வேறு குளத்திற்கு திருப்பிவிட்டிருக்கிறது ஓ.எஸ்.ஆர் என்ற ரியல் எஸ்டேட்டு கும்பல். எனவே மழையே பெய்தாலும் குளம் நிரம்ப வழியேயில்லை. இக்கண்மாயை நம்பியுள்ள 12 ஊரணிகளும் இன்று காய்ந்துகிடக்கிறது. சுற்றுவட்டார விவசாயிகளின் உயிராதாரமான உசிலை கண்மாயை தூர்வாருவதற்குக் கூட அரசு முன்வரவில்லை. சில விவசாயிகள் தாமாக முன்வந்து நிதிவசூலித்து சுற்றுக்கரையை மட்டும் பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், உசிலை வட்டார விவசாயத்திற்கு நிரந்தர தீர்வாக, வைகை அணைநீரை ஆதாரமாகக் கொண்டு 58 கிராமக் கால்வாய் திட்டத்தை அமுல்படுத்தியது தமிழக அரசு. கிளைக் கால்வாய்கள் எல்லாம் வெட்டிமுடித்தவர்கள், வைகை நீர்வரும் தொங்குபாலம் அமைக்கும் வேலையை பாதியில் கிடப்பில் போட்டுவிட்டது அரசு. மீதமுள்ள சுமார் 45 அடிநீளத்திற்கு பாலம் கட்டமுடியாமல் கடந்த 10 வருடமாக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத தமிழக அரசின் திமிர்தான் பாண்டியின் மரணத்திற்கு காரணம்.

ஆனால், விவசாயிகளின் சாவையும்கூட, தற்கொலை, அதிர்ச்சிமரணம் என்று வகைபிரிக்கிறது கொலைகார தமிழக அரசு. என்னிடம் நிவாரணம் பெற வேண்டுமானால் தூக்குப் போட்டோ, விஷம் குடித்தோதான் சாகவேண்டும் என்று விவசாயிகளை மிரட்டுகிறது ஓபிஎஸ் அரசு. கொலைகாரனிடமே நிவாரணம் கேட்டு கெஞ்சி நிற்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர் விவசாயிகள். ஆனால் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இதை வெறும் நிவாரணப் பிரச்சினையாக மட்டும் பார்த்து துரோகமிழைக்கிறார்கள். சோறு திங்கும் ஒவ்வொருவரும் விவசாயிகளுக்காக களத்தில் இறங்க வேண்டிய நேரமிது. இல்லையேல் இன்றைக்கிருக்கும் தமிழகம் கூட விரைவிலேயே இல்லாமல் போய்விடலாம்.

இறந்து போன விவசாயி பாண்டி
இறந்து போன பாண்டி
பாண்டியன் மனைவி கருப்பாயி. மகள் தங்கப்பாண்டி.
பாண்டியன் மனைவி கருப்பாயி. மகள் தங்கப்பாண்டி.
சருகாகிப் போன நெல்நார்று.
சருகாகிப் போன நெல்நாற்று.
தொங்கு பாலம்.1
கட்டி முடிக்காமல் பாதியில் நிற்க்கும் தொங்கு பாலம்
கருகிய அவரை செடி.
கருகிய அவரை
அல்லிகுண்டம் கண்மாய்
அல்லிகுண்டம் கண்மாய்
வற்றிப் போயுள்ள கிணறு
வற்றிப் போயுள்ள கிணறு

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி.
உசிலம்பட்டி வட்டாரம்.

இவர்களுக்கில்லை பொங்கல் !

0

சென்ற ஆண்டு மே 5, 2016 ஆம் தேதி, டாஸ்மாக் மூடுவிழா போராட்டம் நடத்தி பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்து வெற்றி கண்ட, சென்னை மதுரவாயல் – நொளம்பூர் மாதாகோவில் நகர் மக்கள் பொங்கல் தினத்தை, துக்க தினமாக கடைபிடித்தார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கீழ் இயங்கும், நொளம்பூர் பகுதி ஊர் பாதுகாப்பு கமிட்டியின் மூலம் ஊர் கூட்டம் கூட்டினர். அதில், தமிழகம் முழுவது தாங்கள் வைத்த பயிர் கருகியதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஊருக்கே உணவு தரும் விவசாயி-ன் வீடு, எழவு வீடாக இருக்கும் போது, நாம் பொங்கல் கொண்டாடுவது மிகவும் இழிவான செயல். எனவே இந்த பொங்கல் தினத்தை, துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என அனைவரும் தீர்மானித்தனர். அதன் அடிப்படையில், இன்று (14.1.2017) ஊர் முழுவதும் வீதிகளிலும், தங்கள் வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றி கருப்பு பொங்கலாகவும், துக்க தினமாகவும் அனுசரித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை. பேச – 9445112675

______________

உழவன் வீட்டில் இழவு – பொங்கல் நாள் கருப்பு நாள் !

பொங்கல் நாளை போராட்ட நாள் ஆக்குவோம் !

என்று தஞ்சை மாவட்டம், குடந்தை வட்டம், அய்யாவாடி கிராமத்தில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றமும், கிராம மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

பருவ மழையும் ஏமாற்றி விட்டது. காவேரியில் தண்ணீர் விடாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் 17 பேர் என்று கணக்கு காட்டுகிறது. மற்றவர்கள் குடும்ப பிரச்சனையால் இறந்தார்கள் என்று விவசாயிகள் தற்கொலையை அமைச்சர் கொச்சை படுத்தினார். இறந்த விவாசாயிகளுக்கு 3 லட்சமும், கருகிய பயிருக்கு 5600 ரூபாய் நிவாரண அறிவிப்பு ஒரு கண்துடைப்பு. விவசாயிகள் இறந்து விவசாயம் அழிந்த பிறகு எதை சாப்பிடுவார்கள் பணத்தையும், கட்டிடத்தையுமா….? என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

Kutanthai (1)

Kutanthai (2)

கோரிக்கை:

  1. உயிரிழந்த விவசாயிகளுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும்.
  2. கருகிய பயிருக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் வழங்க வேண்டும்.
  3. உயிரிழந்த விவசாய குடுபத்தினர் ஒருவருக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும்.
  4. விவசாயிகளின் மின் கட்டணம்,கல்வி கட்டணம் அனைத்தையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  5. விவசாயிகளுக்கு மாதம் இரண்டாயிரம் வழங்க வேண்டும்.

 முழக்கம்

நமக்கு சோறு போட்ட விவசாயி
கொத்து கொத்தா சாகிறானே !
கருகிய பயிரை பார்த்துப்பார்த்து
சாகிறானே சாகிறானே
நெஞ்சு வெடித்து சாகிறானே !

உழவன் வீட்டில் இழவானால்
உனக்கும் எனக்கும்
எதற்குப் பொங்கல் !

மத்திய மாநில அரசுகளே
பதில் சொல் ! பதில் சொல்!

சோறு திங்கும் அனைவருக்கும்
சொந்தமான துக்கம் இது
விவசாயிகளின் மரணத்திற்கும்
கருகிப் போன பயிர்களுக்கும்
முழுமையான நிவாரணம்
பெறும்வரை போராடுவோம்

போராடுவோம் போராடுவோம்
பெறும் வரை போராடுவோம் !

பிச்சையல்ல பிச்சையல்ல
விவசாயிகளின் நிவாரணம்
உரிமையடா உரிமையடா
உரிமையடா உரிமையடா…..!!!!!!

 தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை. 9790215184.

______________

“உழவன் வீட்டில் எழவு விழுந்தால் உனக்கும் எனக்கும் எதற்க்குப் பொங்கல்”

திருவாரூர் மாவட்டம் குழிக்கரை பகுதி கிராம மக்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் இணைந்து பொங்கல் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி துக்க தினமாக கடைபிடித்தனர்.

3

2

1

தகவல் :
மக்கள் அதிகாரம்.

40-வது சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய நூல்கள் !

19

ரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்களின் தேடல்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்றின் புதிய வரவுகள்.

kizhai-adகாவிரி : பா.ஜ.க.வின் பாக்கிஸ்தானா தமிழ்நாடு ?

பாகிஸ்தானா தமிழ்நாடு

1991 தனியார்மய சீர்திருத்தம் பலன் யாருக்கு ?

தனியார்மய சீர்திருத்தம்

வியாபம் ஊழல் அரசையே கபளீகரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க

vyapam

எது கருப்புப் பணம்? – மோடியின் டிஜிட்டல் பாசிசம்

கருப்புப் பணம்

அம்பேத்கர் – இந்துமதத் தத்துவம்

dr அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி ?

சிறந்த கம்யூனிஸ்ட்

 
40-வது சென்னை புத்தகக் காட்சியில் …
கடை எண் 434 – 435.
செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை – 30
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் )
சனவரி 6-19, 2017

வேலை நாட்கள் : மதியம் 2 – 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 – 9 வரை

அரசியல் தெளிவுபெற…
உழைக்கும் மக்களுக்கான தேடல்கள் ஒரே கூரையின் கீழ் …
வாருங்கள் ….!

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே. 044-2841 2367

ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்

1
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழங்கும்

ஜல்லிகட்டு இல்ல – இது டெல்லிக் கட்டு பாடல்

பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை?  காளையையா, டில்லியையா?

“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று இப்பாடல் விளக்குகிறது.

 

இணையத்தில் நாங்கள் வந்த பிறகு வெளியான ம.க.இ.க பாடல்கள் அனைத்தும் வீடியோ பாடல்களாக இலவசமாக வெளியிடப்படுகின்றது.

ஆகவே இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்ய உங்களால் இயன்றதை அல்ல, இன்னதுதான் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கூடிய தொகையை நன்கொடை அளியுங்கள். சினிமா உலகைச் சேர்ந்த நண்பர்கள் வாடகை இன்றியோ இல்லை குறைந்த வாடகையுடன் கூடிய ஒலிப்பதிவு அரங்கங்கள், படப்பிடிப்பு கருவிகள், கட்டணமின்றி வாசிக்க கூடிய தொழிற்முறை இசைக் கலைஞர்கள் போன்றோரை ஏற்பாடு செய்து உதவுங்கள். இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084
செல்பேசி  – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி!

நட்புடன்,
வினவு

பாடல் வரிகள்

ஜல்லிகட்டு இல்ல – இது
டெல்லிக் கட்டு

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு – மாட்டை
அடக்கி விட்டோம் அன்று தொட்டு – இனி
வாடிவாசல் விட்டு விட்டு
மோடி அரசை அடக்கி காட்டு

காவிரியைத் தடுத்து எங்கள்
கழனியைக் கருக்கி, உழவன்
உயிர்களைக் குடித்து மண்ணைக்
கெடுத்தவனை எதிர்த்து மோது

தமிழினை அழித்து – செத்த
சமஸ்கிருதம் திணித்து – எங்கள்
பாடத்தை திரித்த – மோடி
வேடத்தை கலைக்கிறோம் பார்

பொங்கலுக்கு விடுமுறை ரத்து – நம்மை
சீண்டிப் பார்க்குது டெல்லிக்காத்து
வீரம் எங்கே, இங்கே காட்டு – காவிக்
காளையின் கொம்பை முறித்து வீழ்த்து.

 Lyrics

Not a Bull fight – this
Is a fight with Delhi

Yes, we tamed the bull since long
At Alanga nallur and so on
That’s not a big deal, oh… come on
Tame Modi, if you can.

HE is the one who blocks Cauvery
HE is the one who parches our fields
HE is the one who takes our peasants’ lives
Tame modi, if you can.

He sends Tamil to despair and death
Shoves Sanskrit down our throat
Distorts history present and the past
Unmask modi, Yes we can.

Teasing us  is the Delhi power
Throws our  Pongal  to the sewer
Show your valour here and now
Take the saffron bull  by its horn.

Share this song. spread the message. Please support us.

டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !

3

people-power-press-release-header

பத்திரிகை செய்தி

 

“டெல்லியின் கொம்பைப் பிடி”
தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு!

அன்பார்ந்த தமிழ் மக்களே,

மிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

“அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி வந்திருக்கிறார்கள் அதிமுக எம்பிக்கள்.

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களிலெல்லாம் போலீசு குவிக்கப்பட்டுள்ளது. “ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்” என்று காளை வளர்ப்பவர்களிடம் எழுதிக் கையெழுத்து வாங்குகிறது தமிழ்நாட்டு போலீசு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்! நீதிமன்றத் தீர்ப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் இவர்கள் நிலைநாட்டுகிறார்களாம்!

jallikattu 2
நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?

நீதி, நியாயம், சட்டத்தின் ஆட்சி என்ற சொற்களை உச்சரிப்பதற்கான யோக்கியதை இந்த உச்ச நீதிமன்றத்துக்கோ மோடி அரசுக்கோ உண்டா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர் அழிவதற்கும், விவசாயிகள் நெஞ்சடைத்து சாவதற்கும், உழவு மாடுகளும் பால்மாடுகளும் தண்ணீருக்குத் தவிப்பதற்கும் யார் காரணம்? காவிரி நீர் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளத்தனமாக கர்நாடக அரசுக்குத் துணை நின்றதுதான் இந்த உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீருக்காக கதறிய போதும், “தீர்ப்பை அமல்படுத்த முடியாது” என்று கர்நாடக அரசு திமிர்த்தனம் செய்த போது, வாயை மூடிக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றத்துக்கு தமிழகத்தின் மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது?

தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதில் கர்நாடக அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சிய கிரிமினல்தான் மோடி அரசு. காவிரி ஆணையம் அமைப்பதைத் தடுத்து, தமிழகத்துக்கு நிரந்தரமாக காவிரி நீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி. தமிழ்நாட்டின் விவசாயத்தை அழித்த மோடியிடம், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தருமாறு கெஞ்சுவதும் மனுக் கொடுப்பதும் கேவலமில்லையா?

“ஒரு நாடு – ஒரு சட்டம்” என்று சொல்லிக் கொண்டு இவர்கள் ஆடுகிற ஆட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம், பார்ப்பனியம் ஆகியவற்றை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பதால், உச்ச நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சுக்குடுமி மன்றத்தின் நீதிபதிகளுக்கும், உச்சுக்குடுமி கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் தமிழ்நாடு என்றாலே வேப்பங்காயாய்க் கசக்கிறது.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான சிதம்பரம் நடராசர் கோயிலை, அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி, அங்கே மணியாட்டும் பார்ப்பன தீட்சிதர்களுக்குச் சொந்தமாக்கி தீரப்பளித்தது உச்ச நீதிமன்றம்தான்.

சாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதி மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக நியமிக்க முயன்றது தமிழக அரசு. “பார்ப்பன அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் சாமி சிலையைத் தீண்டக்கூடாது”என்று தீர்ப்பளித்து, சாதியையும் தீண்டாமையையும் நிலை நாட்டியது உச்ச நீதிமன்றம்தான்.

“தமிழ்நாட்டு கோயில் தமிழ் மக்களுக்குச் சொந்தம். தமிழில் வழிபடுவதும் தமிழர்களை அர்ச்சகர்களாக நியமித்துக் கொள்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கோ மத்திய அரசுக்கோ அதிகாரம் இல்லை” என்று நாம் குரல் எழுப்பவேண்டிய நேரம் இது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு என்ன பாடத்திட்டம் என்பதை சொல்வதற்கு மத்திய அரசு யார்? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திட்டத்தையும், செத்த மொழியான சமஸ்கிருதத்தையும் இந்தி திணிப்பையும் தூக்கி வெளியே வீச வேண்டிய நேரம் இது.

தமிழக மாணவர்கள் படிப்பதற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி கட்டினால், அதில் யாருக்கு சீட் கொடுப்பது என்று நீட் தேர்வு வைத்து டில்லி முடிவு செய்யும் என்கிறது உச்ச நீதிமன்றம். அடுத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அதே முறையை கொண்டுவரப் போவதாக சொல்கிறது மோடி அரசு.

கேடி கிரிமினல்களும் ஹவாலா பேர்வழிகளும் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டிருக்கையில், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்த தமிழ்நாட்டு வக்கீல்களுக்கு மட்டும் வாழ்நாள் தடை விதித்திருக்கிறது அனைத்திந்திய பார் கவுன்சில். பாரதிய ஜனதாக் கட்சிக்காரன்தான் இதற்கும் தலைவர் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

அணு உலை வேண்டாமென்று கேரள மாநிலம் விரட்டியடித்தால் அது கூடங்குளத்தில் திணிக்கப்படுகிறது. “கெயில் எரிவாயுக் குழாய் எங்கள் விவசாயத்தை அழிக்கும்” என்று தமிழக விவசாயிகள் முறையிட்டாலோ, அதனை நிராகரித்து விளைநிலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிடுகிறது உச்ச நீதிமன்றம். “சட்டத்தின் ஆட்சி” என்ற பெயரில் திணிக்கப்படும் நியாயத்துக்குப் புறம்பான இப்படிப்பட்ட தீர்ப்புகளுக்கு எதற்காக நாம் கட்டுப்பட வேண்டும்?

“கரசேவை செய்யப்போகிறோம்” என்று சொல்லி உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கடப்பாரை சேவை செய்து, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் பாரதிய ஜனதாக் கட்சியினர். மசூதியை இடித்து மதவெறியைத் தூண்டி ஆட்சியையும் பிடித்து விட்டார்கள். ஆனால் மசூதியை இடித்த குற்றத்துக்கு இவர்களை இதுவரை நீதிமன்றம் தண்டிக்கவில்லை.

Jallikattu
டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.

மகாராட்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடக்கும் “உறியடித் திருவிழா”வில் மனிதக் கோபுரம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தபோது, “உச்ச நீதிமன்றத்துக்கு கட்டுப்பட முடியாது” என்று வெளிப்படையாகவே அறிவித்து விழாவை வழக்கம்போல நடத்தியது பாஜக சிவசேனா அரசு. உச்ச நீதிமன்றம் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சேதுக்கால்வாய் திட்டத்துக்காக தமிழகத்தில் கடையடைப்பு நடந்தபோது மட்டும் “ஆட்சியைக் கலைப்போம்” என்று திமுக அரசை மிரட்டியது. இதுதான் உச்ச நீதிமன்றத்தின் நடுநிலை. சட்டத்தை மதிக்குமாறு தமிழகத்துக்கு உபதேசம் செய்யும் அருகதை பாஜக-வுக்கோ, இந்த நீதிமன்றத்துக்கோ கிடையாது.

எல்லா விசயங்களிலும் இரட்டை வேடம் போடும் பாரதிய ஜனதா, வழக்கம் போல இந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுகிறது. “விஜில்” என்ற ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பினைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர்தான் ஜல்லிக்கட்டுத் தடைக்கு குரல் கொடுப்பவர். மாடுகளின் மீது பெருங்கருணை கொண்டுள்ள இந்த அம்மையார், மாட்டுக்கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி அக்லக் என்ற இசுலாமிய முதியவரை கொலை செய்தார்களே, அந்தக் கொலையை நியாயப்படுத்துபவர்.

மதத்தின் பெயரில் மனிதப் படுகொலை நடத்தும் இத்தகைய பார்ப்பன மேட்டுக்குடியினர்தான், விலங்குகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் “பீட்டா” போன்ற அமைப்புகளிலும் நிறைந்திருக்கின்றனர். “விநாயகர் சதுர்த்திக்கு கறிக்கடையை மூடு, கோயில் நகரங்களில் கறிக்கடையே கூடாது, மாட்டுக்கறியை தடை செய்” என்பன போன்ற கோரிக்கைகளுக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கும் அதிக வேறுபாடு இல்லை. “மாட்டை அடக்குபவர்கள், மாட்டை வெட்டுபவர்கள், புலால் உணவு புசிப்பவர்கள் போன்றோர் கீழானவர்கள், அவர்களது பண்பாடும் கீழானது” – என்பதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து.

“மாட்டை அடக்குவதுதான் வீரம், அதுதான் உயர்ந்த பண்பாடு” என்பதல்ல நம் கருத்து. ஜல்லிக்கட்டு முதல் கோயில் திருவிழாக்கள் வரை தமிழகத்தின் பண்பாட்டு நடவடிக்கைகள் பலவற்றில் ஊடுருவியிருக்கும் சாதிப்பாகுபாட்டையும் தீண்டாமைக் கொடுமையையும் நாம் ஒருபோதும் “தமிழ் வீரம்” என்று கொண்டாட முடியாது.

மாட்டுக்கொம்பால் குத்துப்பட்டு சாவதற்கும் தயாராக இருக்கும் வீரர்கள், உச்ச நீதிமன்றம் தடை விதித்தவுடனே மொட்டை போட்டு ஒப்பாரி வைப்பது ஏன்? காவிரியைத் தடுத்தும் மணற்கொள்ளை அடித்தும் தமிழகத்தின் விவசாயத்தை அழித்து, நூற்றுக்கணக்கான விவசாயிகளை கடனுக்கும் சாவுக்கும் தள்ளிய எதிரிகளுக்கு எதிராகத் தமிழ் வீரம் கிளர்ந்து எழாதது ஏன்? விவசாயம் அழிந்த பின், விவசாயி அழிந்த பின், மாடுகள் ஏது? மஞ்சு விரட்டு ஏது? சிந்திக்க வேண்டாமா?

பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று திமிராக கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்று பொங்கல் வாழ்த்து சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். நாம் அடக்க வேண்டியது யாரை?  காளையையா, டில்லியையா?

“உன்னுடைய அதிகாரம் தமிழகத்தில் செல்லாது” என்று டில்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் இன்று தமிழகம் பயின்று கொள்ள வேண்டிய வீர விளையாட்டு. இதன் பெயர் ஜல்லிக்கட்டு அல்ல, டில்லிக்கட்டு.

இவண்.
ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

மாவோயிஸ்டுகளுக்கு வழக்காடினால் கைதா ? ஆர்ப்பாட்டம் !

3

மதுரை வழக்கறிஞர் முருகனை விடுதலை செய் !

murugan arrest 2ழக்கறிஞர் முருகனை விடுதலை செய்! மாவோயிஸ்டுகளுக்கு சட்ட உதவி அளிப்பது குற்றமல்ல! என்ற முழக்கத்தின் கீழ் 12.01.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வழக்கறிஞர்களின் நீண்ட மவுனத்தை உடைக்கும் வகையில் விண்ணதிரும் முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில், வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நெடுஞ்செழியன், ஏ.கே.ராமசாமி,வழக்கறிஞர்கள் பானுமதி,பகத்சிங்,அகவன்,பழனியாண்டி,முத்து அமுதநாதன்,ஆதி நாராயணமூர்த்தி, அய்யப்பன், ராஜா, சிவக்குமார், வழக்கறிஞர் முருகன் மனைவி வழக்கறிஞர் தேவி, வழக்கறிஞர் கனகவேல் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

உரைகளின் தொகுப்பு:

வழக்கறிஞர் முருகன் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே சாதாரண மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தவர்.தனது வழக்கறிஞர் தொழிலையும் மக்கள் நலனை முன்னிறுத்தியே செய்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி கரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசு முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு சட்ட உதவிகள் செய்தார் என்பது. தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வது வழக்கறிஞர்களின் அரசியல் சட்ட அடிப்படை உரிமை. முருகன் அல்ல எந்த வழக்கறிஞரிடம் மாவோயிஸ்ட் வழக்குகள் வந்தாலும் நடத்துவோம்.

இப்பிரச்சனையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இரண்டு வழக்குகளை முருகன் நடத்தி வருகிறார். அதில் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆகும் சூழல் உள்ளது. அதைத் தடுக்கவே முருகனைக் கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் அறிவுத்துறையினர் மீது அரசு பாசிசம் பாய்கிறது.முருகன் மீது பாய்ந்த கொடூர ஊபா சட்டம் ஓர் கருப்புச் சட்டம். இதன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும்.இதை நாம் எதிர்க்க வேண்டும். தமிழக கியூ பிரிவு போலீசு நீதித்துறை சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது.இது வழக்கறிஞர் சமூகத்திற்கு விடப்பட்ட சவால்.இதை நாம் எதிர்கொள்வோம்.

இந்தியா முழுவதும் கண்ணபிரான்,ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் மாவோயிஸ்டுகள், இசுலாமிய அமைப்பினர் உள்ளிட்ட பலருக்கு ஆஜராகியிருக்கிறார்கள். அவர்களையும் சிறையில் அடைத்து விடலாமா? மூத்த வழக்கறிஞர் கண்ணபிரானிடம் நீதிபதிகள் மாவோயிஸ்டுகளுக்கு சட்டத்தில் நம்பிக்கை இல்லையே, நீங்கள் ஏன் ஆஜராகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீதிமன்றத்திற்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது, எனவே காவல்துறையை சட்டப்படி நடக்கச் சொல்லி உங்களிடம் வந்துள்ளோம்” என்றார்.

முருகன் என்ன குற்றம் செய்தார் என்பதைப் போலீசு இன்றுவரை சொல்ல மறுக்கிறது. எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.காவல்துறை தொடர்ந்து எல்லை மீறுகிறது.முருகனை மாவோயிஸ்ட் அமைப்பினர் வழக்கிலிருந்து விலகச் சொல்லி தொடர்ந்து மிரட்டி வந்த போலீசு இப்போது பொய் வழக்குப் போட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீது தொடர்ந்து போலீசு அடக்குமுறையை ஏவிவருகிறது. இது தமிழகம் தழுவிய வழக்கறிஞர் போராட்டத்தால் முறியடிக்கப்படும். முருகன் தனிநபரல்ல. அவருக்குப் பின் 80,000 தமிழக வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். பொங்கலுக்குப் பின் தொடர் போராட்டம் நடத்துவோம்.

ஆர்ப்பாட்டத்தில் மதுரை வழக்கறிஞர்களின் பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது.murugan arrest 1

 பத்திரிக்கை செய்தி

துரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 13 வருடங்களாக  வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் முருகன். இவரை கடந்த 08/01/2017 அன்று கரூர் மாவட்ட கியூ பிரிவு காவல்துறை கு.எண் 01/2016 வழக்கில் 18-A , 18-B , 20 , 38 OF UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT 1967  மற்றும் 120-B IPC பிரிவுகளில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளது. பத்திரிக்கை செய்திகளின்படி வழக்கறிஞர் முருகன் மீதான குற்றச்சாட்டு மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு சட்ட உதவிகள் செய்தார் என்பதே. கைது குறிப்பாணையில் மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினர்களுக்கு உதவி செய்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் முருகன் தேனி மாவட்டம் பெரியகுளம் ASST SESSIONS COURT- ல்  S.C.136/2011 என்ற வழக்கில் மாவோயிஸ்ட் அமைப்பினராக இருந்து போராடியதாக குற்றம் சாட்டப்பட்ட சுந்தரமூர்த்தி, ரஞ்சித், விவேக் ஆகியோருக்கும், பெரியகுளம் ADDL. DISTRICT COURT -ல் நடைபெறும் S.C 93/2014 வழக்கில் பாலமுருகன், முருகானந்தம், லெனின், மகாலிங்கம் உள்ளிட்டோருக்கும் மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், என்.செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து வழக்கு நடத்தி வருகிறார். மேற்படி வழக்குகள் தற்போது முடிவுரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆக வாய்ப்புள்ளது.

இவ்வாறான சூழலில் வழக்கறிஞர் முருகனை கடந்த ஒரு மாதமாக  மேற்காணும் வழக்குகளில் இருந்து விலகச் சொல்லி கியூ பிரிவு போலிசார் மிரட்டி வந்துள்ளனர். விலகாவிட்டால் பொய்யாக வழக்கில் சேர்ப்போம் என்றும் சொல்லியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே கைது நடந்துள்ளது

இந்திய அரசியல் சட்டத்தில் தொழில் உரிமை அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. தன்னிடம் வரும் கட்சிக்காரருக்கு அவர் என்ன குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவருக்காக வழக்கு நடத்த வேண்டியது வழக்கறிஞரின் சட்டப்படியான கடமை என்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டப்படியான உரிமையும் கூட. மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப்புக்கு நீதிமன்றமே அரசு செலவில் வழக்கறிஞர் அமர்த்தி கொடுத்தது. எனவே வழக்கறிஞர் முருகன் தன்னிடம் வந்த கட்சிக்காரர்களுக்கு சட்டப்படியான உரிமைகளின் கீழ் வழக்கு நடத்தி வந்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் முருகன் தனது கட்சிக்காரர்கள் தொடர்பான ரகசியங்களை பாதுகாக்க இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 126-ன் கீழ் கடமைப்பட்டவர். இதை மீறினால் அவர் மீது அவரிடம் வழக்கு கொடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வழக்கறிஞர் மீதான கருர் கியூ பிரிவு போலிசின் நடவடிக்கை சட்டவிரோதமானது ,மட்டுமல்லாமல் மிகப்பெரிய மனித உரிமை மீறல் மற்றும் அரசியல் சட்ட அடிப்படை உரிமை மீதான தாக்குதல். மேலும் சுதந்திரமாக இயங்க வேண்டிய, நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களை அச்சுறுத்துவது நீதித்துறையின் மீதான காவல்துறையின் மேலாதிக்க முயற்சியாகும்.

வழக்கறிஞர் முருகனை UAPA –  சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது மிகவும் கொடூரமானது. இச்சட்டம் தடா, பொடா சட்டங்கள் போன்ற கருப்புச் சட்டமாகும். இச்சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு விசாரணையே இன்றி சிறை வைக்க முடியும்.  குற்றவாளி அல்ல என்பதை சம்மந்தபட்டவர்தான் நிருபிக்க வேண்டும். சென்ற ஆண்டு , கேரள வழக்கறிஞர்கள் மீது இதே சட்டம் பாய்ந்துள்ளது.

எனவே வழக்கறிஞர் முருகன் மீதான நடவடிக்கை வழக்கறிஞர் தொழிலுக்கும், அரசியல் சட்டத்திற்கும் விடப்பட்ட சவால் ஆகும். இனிவரும் நாட்களில் காவல்துறை விரும்பாத வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களை கைது செய்யும் போக்கு உருவாகும். இது சட்டத்தின் ஆட்சி என்பதை மாற்றி போலீசின் ஆட்சி என்பதை உருவாக்கும்.

ஆகவே வழக்கறிஞர் முருகன் கைதை மதுரை வழக்கறிஞர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக வழக்கறிஞர்கள் இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என வலியுறுத்துகிறோம். வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்வதோடு நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களின் தொழில் உரிமையை காக்க சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு கருர் மாவட்ட கியூ பிரிவு போலிசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.murugan arrest 3

  • வழக்கறிஞர்கள், மதுரை.

பணமில்லா வர்த்தகம் : மக்களை நச்சுக் கூண்டுக்குள் தள்ளிய மோடி !

6

ணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர். நவம்பர் 8 அறிவிப்பிற்கு முன் சுழற்சியில் இருந்த 15.44 லட்சம் கோடியில் சுமார் மூன்றிலிருந்து ஐந்து லட்சம் கோடி வரை திரும்ப வராது என்றனர். அதே போல் சுழற்சியில் இருப்பதாகச் சொல்லப்பட்ட கள்ளப் பணமும் திரும்ப வராது என்றும் பீற்றிக் கொண்டனர்.

500-and-1000-rupee-notes
பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சமயத்தில் அது கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழித்து விடும் என மோடியும் அவரது பக்தர்களும் சொல்லிக் கொண்டனர்.

ஆனால், இவையெல்லாம் வெற்றுச் சவடால்கள் என்பது தற்போது சர்வ நிச்சயமாக நிரூபணமாகியுள்ளது. டிசம்பர் 30-ம் தேதி வரை சுழற்சியில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்களில் 97 சதவீதம் (சுமார் 15 லட்சம் கோடி) வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சில பத்தாயிரம் கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள் நேபாள் மற்றும் பூடான் நாடுகளின் மத்திய வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கவுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு என்கிற ஊத்தைப் பீற்றல் எதார்த்தத்தில் காலை வாரி விட்டவுடன், மோடி பக்தர்கள் வேறு சில வாதங்களைத் தூக்கிக் கொண்டு வந்தனர்.

முதலாவதாக, சுழற்சியில் இருந்த பணம் மொத்தமும் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவது ஒரு வகையில் நல்லது தான் என்றும் அவ்வாறு வந்த பின் ஒவ்வொரு வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து யாரெல்லாம் கணக்கில் காட்டாத, வருமான வரி கட்டாத பணத்தைச் செலுத்தினர் என்பதைக் கண்டறிந்து விடுவோம் என்கிற வாதத்தை வைக்கின்றனர்.

மோடி பக்தர்களின் சிறப்பே தங்கள் முகத்தில் அப்பிக் கிடக்கும் சாணியைக் குறித்து கிஞ்சித்தும் வெட்கப்படாமல் அடுத்தவன் முதுகில் ஒட்டியிருக்கும் சுண்ணாம்பைப் பார்த்து கூச்சலிடுவது தான். வங்கிக்குள் வராது என்று சொன்ன பணம் வந்துள்ளதற்கு எந்த விளக்கத்தையும் சொல்லாமல் இந்தப் புதிய வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது பூ விழுந்தால் உனக்குத் தோல்வி, தலை விழுந்தால் எனக்கு வெற்றி என்பது தான் இதன் சாரம்.

jaitley-modi
மோடி, ஜேய்ட்லி உள்ளிட்டவர்கள் தமது உண்மையான நோக்கமே ரொக்கமற்ற பரிவர்த்தனை தான் என்பது போல் பேசத் துவங்கினர்.

ஒரு வாதத்திற்காக இதை ஒப்புக் கொள்வோம். 2015 நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 53 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இருந்ததாகச் சொல்கிற உலக வங்கியின் கணக்கெடுப்பு ஒன்று (World bank – gallup survey). இந்த ஓராண்டில் திருவாளர் 56 இன்சு அறிவித்த ஜன்தன் திட்டத்தின் மூலம் குறைந்தது மூன்று சதவீத அளவுக்கு வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ளதென எடுத்துக் கொண்டால், இன்றைய தேதிக்கு சுமார் 70 கோடி வங்கிக் கணக்குகள் உள்ளன. நவம்பர் 8 அறிவிப்பிற்குப் பின் இதில் ஒரு சதவீத கணக்குகளில் அதிக வைப்பு நிதி செலுத்தப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் 70 லட்சம் என்றாகிறது.

எழுபது லட்சம் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து, அதன் உரிமையாளரின் வருமானத்தை ஆராய்ந்து, அவரிடம் விளக்கம் கேட்டு, அந்த விளக்கத்தை பரிசீலித்து, அவர் செலுத்தியது வருமானத்திற்கு அதிகமானதா இல்லையா என்பதைக் கண்டறியும் அளவுக்கு நம்மிடம் அரசு இயந்திரமோ, நிர்வாக வசதிகளோ, தொழில்நுட்ப வசதிகளோ இல்லை என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம். கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட (தோராயமாக) சில ஆயிரம் கணக்குகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றால், அவ்வாறு செலுத்தியவர்கள் விவரங் கெட்டவர்களாக இருக்கப் போவதில்லை. அப்படியே கடும் சிரமங்களுக்கிடையே சலித்து எடுத்து சில பத்து பேர்களை பிடித்தாலும் நீதிமன்றம், வழக்கு நடைமுறைகள் என வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டு போகும் வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு உண்டு. இதை வாய்தா ராணியின் வழக்கிலேயே பார்த்து விட்டோம். அதையும் மீறி பல வருட போராட்டங்களுக்குப் பின் அபராதத்தை வசூலித்தால் அது பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பின் முன் வெறும் பொறியுருண்டையாகவே இருக்கும்.

இரண்டாவதாக, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பின் ரொக்கமில்லாப் பொருளாதாரப் பரிவர்த்தனை முறைகள் வளர்ச்சி பெறும் என்றும், இவ்வகையான பரிவர்த்தனைகளே வெளிப்படையானவைகள் என்றும், எல்லோருடைய வருமானமும் வெளிப்படையாக இருக்கும் போது வரி கட்டுவோரின் எண்ணிக்கையும் கூடுமென்றும், இதன் மூலம் வரி ஏய்ப்பை தடுத்து விட முடியும் என்றும் சொல்லிக் கொண்டனர். சொல்லப் போனால், கருப்புப்பணம் மற்றும் கள்ளப்பண ஒழிப்பு என்கிற பல்லவியோடு துவங்கிய ஒப்பாரி, தனது சரணத்தில் ரொக்கமற்ற பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்தது. மோடி, ஜேய்ட்லி உள்ளிட்டவர்கள் தமது உண்மையான நோக்கமே ரொக்கமற்ற பரிவர்த்தனை தான் என்பது போல் பேசத் துவங்கினர்.

சொல்லி வைத்தாற் போல் ரொக்கமற்ற பரிவர்த்தனைச் சேவையை வழங்கும் ரிலையன்சின் ஜியோ மணி குறித்த அறிவிப்பும் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியானது. ஒருபக்கம் உச்சநீதிமன்றத்தில் பணமதிப்பழிப்பு தொடர்பாக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், 500 ரூபாய்த் தாள்களை அச்சிட ஏற்படும் தாமதமானது அரசின் முடிவின் படியே ஏற்படுகிறது என தெரிவிக்கிறார். நாடெங்கும் திட்டமிட்ட ரீதியில் பணத்தாள்களை புழக்கத்தில் இருந்து நீக்கும் வெறியோடு மத்திய அரசு செயல்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட 125 கோடி மக்களையும் கழுத்தைப் பிடித்து ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் தள்ளி விட்டனர்.

ஆனால், நடந்தது என்ன? மக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டனரா?

ரொக்கமற்ற பரிவர்த்தனையின் வளர்ச்சி குறித்து தொகுப்பான புள்ளி விவரங்களை ரிசர்வ் வங்கியே வெளியிடும் என்றும், அப்போது தான் மோடியின் வெற்றியை உலகம் அறிந்து கொள்ளும் என்றும் பக்தர்கள் கூத்தாடிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய தேதி வரை ரிசர்வ் வங்கியிடம் இருந்து அப்படி எந்த தொகுப்பான விவரங்களும் வெளி வரவில்லை. மாறாக வழக்கமாக வெளியிடும் தனித் தனி வங்கிகளின் பரிவர்த்தனை விவரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. அந்த விவரங்களை ப்ளூம்பர்க் பத்திரிகை தொகுத்துள்ளது. அது பற்றிய ஒரு சித்திரம் கீழே

Digital-Transactionsஇதில் 7 மடங்காக அதிகரித்துள்ள UPI பரிவர்த்தனையின் மொத்த மதிப்பே வெறும் 700 கோடி தான். 2 லட்சத்துக்கும் அதிகமான தொகை பரிமாறிக் கொள்ளப்படும் முறையான RTGS 15 சதவீதம் வீழ்ந்துள்ளது. 2 லட்சத்துக்கும் குறைவான தொகை பரிமாறிக் கொள்ளப்படும் முறையான IMPS மட்டும் கணிசமாக (32 சதவீதம்) அதிகரித்துள்ளது. ஈ-வாலட்டுகள் உள்ளிட்ட முறைகளில் பரிவர்த்தனையின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தாலும், அந்தப் பரிவர்த்தனைகளின் சராசரி பண மதிப்பு குறைவு என்பதால் மொத்த மதிப்பும் குறைவாகவே உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரொக்கமற்ற பரிவர்த்தனை 12 சதவீதம் வீழ்ந்துள்ளது.

தடை செய்யப்பட்ட ரூபாய்த் தாள்கள், தடை செய்யப்படாத ரூபாய்த் தாள்கள், வங்கிகளிடம் இருப்பில் இருந்தவை, அரசு கஜானாவின் இருப்பு, ரிசர்வ் வங்கியின் இருப்பு என அனைத்தையும் சேர்த்து நவம்பர் 4ம் தேதி சுழற்சியில் இருந்த மொத்த ரூபாய்த் தாள்களின் மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். இதே மோடியின் அறிவிப்புக்கும் பிந்தைய முதல் வங்கி வேலை நாளான நவம்பர் 11ம் தேதி 17.88 கோடியாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த டிசம்பர் 28-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, டிசம்பர் 23-ம் தேதியன்று சுழற்சியில் இருந்த மொத்த பணத்தாள்களின் மதிப்பு வெறும் 8.55 லட்சம் கோடியாக சுருங்கியுள்ளது. இது புதிதாக அச்சிட்ட 2000 மற்றும் 500 தாள்களின் மதிப்பையும் உள்ளடக்கியது.

departmental-store
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, ரொக்கமற்ற பரிவர்த்தனை 12 சதவீதம் வீழ்ந்துள்ளது.

ஆக, அச்சிட்ட ரொக்கத்தின் புழக்கம் சரிபாதியாக சுருங்கியுள்ள அதே நேரம், மோடி பக்தர்கள் பீற்றிக் கொண்டதைப் போல் ரொக்கமற்ற பரிவர்த்தனையும் சொல்லிக் கொள்ளும்படி உயரவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ளது. தற்போது வேறு வழியின்றி ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் பிடித்துத் தள்ளப்பட்டவர்களும் கூட நாளை ரொக்கத் தாள்கள் புழக்கத்திற்கு வந்தபின் மீண்டும் பழைய பாணியிலான பரிவர்த்தனை முறைகளுக்கே திரும்பிச் சென்று விடுவார்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

இது வரை மோடியும் அவரது அடிமைகளும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் லட்சிய நோக்கங்கள் என்பதாகச் சொன்ன எந்தக் காரணங்களும் நாளது தேதி வரை நிறைவேறவில்லை – அவ்வாறு நிறைவேறும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பது பட்டவர்த்தனமாக நிரூபணமாகியுள்ளது. எனினும், தனது கோமாளித்தனமான நடவடிக்கையில் ஏதாவது ஒரு ‘வெற்றியை’ காண்பித்தே தீர்வது என்கிற வெறியில் உள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு.

கள்ளப்பணம் குறித்த தமது அலப்பறைகளின் சாயம் வெளுத்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் வசம் வந்துள்ள தாள்களை மீண்டும் சோதித்து அதில் கள்ளப்பணம் இருக்கிறதாவென ஆராய்ந்து வருவதாக அறிவித்துள்ளனர். ஒருவேளை இந்த மறுசோதனையில் சில கோடி கள்ளப்பணம் இருப்பது தெரிய வந்தாலும் கூட, இவைகளுக்குச் சமமான நல்ல நோட்டுகளை ஏற்கனவே வங்கிகள் மாற்றிக் கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு மாற்றிச் சென்றவர்களைப் பிடிப்பதும் வைக்கோல் போரில் ஊசியைத் தேடும் சமாச்சாரம் என்பதே எதார்த்தம்.

அடுத்து, ஆங்காங்கே வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனைகளில் பிடிபடும் கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை ஆரவாரமாக விளம்பரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்களிடையே கருப்புப் பணம் ஒழிகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 500 கோடிகள் பிடிபட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இந்நடவடிக்கைகள் துவக்கத்தில் அவர்கள் எதிர்பார்த்தது போன்ற பொதுக்கருத்தை உண்டாக்கினாலும், பிடிபட்ட தொகையில் கட்டுக்கட்டாக இருந்த 2000 ரூபாய்த் தாள்களை பத்திரிகைகளில் பார்த்த மக்கள் சீக்கிரம் விழித்துக் கொண்டனர்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு ஏ.டி.எம் இயந்திரங்களின் முன்னே வரிசையில் தாம் நிற்கும் போது கருப்புப்பண முதலைகளோ கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்துடன் பிடிபடுவதைப் பார்க்கும் மக்கள், பணமதிப்பழிப்பு நடவடிக்கை எந்த வகையிலும் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை உணரத் துவங்கினர்.

அடுத்து முழுவதும் ரொக்கமற்ற பொருளாதார பரிவர்த்தனையே இந்தியா போன்ற ஏழை நாடுகளில் சாத்தியமில்லை என்பதை வளர்ந்த பணக்கார நாடுகளின் புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் ரொக்கமற்ற பரிவர்த்தனை எந்த அளவுகளில் நடக்கிறது என்பதை கீழே உள்ள படத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்:

cashless
(Source : Bloomberg)

இந்நாடுகளில் தடையற்ற மின்சாரம், தடையற்ற இணைய இணைப்பு, பரவலான கல்வி அறிவு, இணைய அறிவு ஆகியவை உள்ளன. ஒரே ஒரு வார்தா புயலுக்கு ஒரு மாதமாக இணையத் தொடர்பு அறுபட்டுப் போகும் நாட்டைக் குறித்து நாம் பேசுகிறோம். சுமார் 25 சதவீதம் பேருக்கு கல்வியறிவே இல்லை. இணையப் பயன்பாட்டின் அளவும் பாதிக்கும் குறைவு. இவ்வாறிருக்க மக்களை ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளுவதை மூடத்தனம் என்றும் சொல்லலாம் – பாசிசம் என்றும் சொல்லலாம்.

125 கோடி மக்களின் பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, உளவு பார்ப்பது, கட்டுப்படுத்துவது, அம்பானி போன்ற ஒருசில தனிப்பட்ட முதலாளிகளின் கையில் ஒப்படைப்பது, வங்கி வலைப்பின்னலுக்குள் வந்த லட்சக்கணக்கான கோடியை முதலாளிகளுக்குத் தாரைவார்ப்பது, முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் அறிவிப்பது மற்றும் பரந்துபட்ட மக்களிடம் வரிபிடுங்குவது – இவை தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் மோடி அடைய நினைக்கும் லட்சியங்கள். இந்த பாசிச உள்நோக்கங்களைக் நிறைவேற்றுவதற்கே ரொக்கமற்ற பரிவர்த்தனைக்குள் அதற்கு எந்த வகையிலும் தயாரில்லாத மக்களை வலுக்கட்டாயமாக திணிக்க முயல்கிறார் மோடி.

கிட்டத்தட்ட மொத்த பொருளாதாரத்தையும் நாட்டையும் மக்களையும் ஹிட்லரின்  நச்சுப்புகைக் கூண்டுக்குள் தள்ளி விட்டுள்ளார் மோடி.

– சாக்கியன்.

செய்தி ஆதாரம்:
In India bank account penetration surges, but 43% dormant
Cashless Economy Still a Fantasy for India
Demonetisation complete failure? 97% of banned notes back in banks: Report
Value Of Online Payments Falls In December Despite Government’s Digital Blitz
Across the aisle | Cashless economy: A distracting mirage

எறும்பும் செத்த வீட்டில் கரும்பெதற்கு ? – துரை சண்முகம்

3
ஊருக்கு ஒரு கடுதாசி!

பொங்கலுக்கு
வருவதாய் இருந்தால்
எங்களுக்கு விருப்பமில்லை

என்ன இருக்கிறது இங்கே…
தினம்
ஒரு பிணம்song slider
விவசாயி வீட்டில்

முளைப்பாரி
கேட்ட ஊரில்
ஒப்பாரி

என்னை விட்டு போயிட்டியே!…
எனச் சுற்றிலும் கதறல்
இடையே
பொங்கலோ! பொங்கல்!
எனக் கத்த எங்களால் முடியாது.

வரப்பு வெடித்து
கிடக்கையில்
வயல் நண்டுக்கேது
கொண்டாட்டம்.
வயக்காத்து நிற்கையில்
நாரைக்கேது நடமாட்டம்.

எறும்பும் செத்த வீட்டில்
கரும்பெதற்கு?
பாடைக்கு பக்கத்தில்
விருந்தெதற்கு?
விவசாயத்தின்
இடுப்பை ஒடித்து விட்டு
எம்.சி.ஆர்., ராம்ராஜ்
வேட்டி எதற்கு!
வேதனைக்குப் பொங்காமல்
ஒருநாள்தமிழன்
வேசம் எதற்கு?

போரடிக்க
வழியில்லாமல்
ஊர் மாரடிக்குது
‘போர்’ அடிச்சா மட்டும்
நீங்க எட்டிப் பார்க்க
ஊரு கேக்குது!

கருகிய நெற்பயிர்கள்
கருகிய நெற்பயிர்கள்

எங்க
ஆத்து மண‍ல சுரண்டும் போது
யாரு வந்தீங்க,
எங்க
ஆடு, மாடு தவிச்சபோது
யாரு வந்தீங்க,
தெருக்குழாயில் ஈரம்தேடி
கரிக்குருவி ஏமாந்து
கத்தும் போது யாரு கேட்டீங்க!
உருத்தெரியாமல்
ஊரு சிதைஞ்சு  கிடக்ககையில்
எங்க
பொங்க வந்தீங்க?

நெல்லு
வளர்த்துக் கொடுத்தோம்
வகை வகையா தின்னீங்க
மாடு வளர்த்துக் கறந்தோம்
மடிப்பாலு குடிச்சீங்க.

ஆடு வளர்த்துக் கொடுத்தோம்
கறிக்குழம்பு  ருசிச்சீங்க
கோழி வளர்த்துக் கொடுத்தோம்
நாட்டுக்கோழி ரசிச்சீங்க

நாங்க
மாரடைச்சி கிடந்தோம்
யாரு வந்து தடுத்தீங்க?

உழவருக்கு இல்லாத
உழவர் திருநாள்
உங்களுக்கு ஏங்க?
உழவருக்காக போராட
ஊருக்குள்ள வாங்க!

துரை. சண்முகம்

ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்

6
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழங்கும்

ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு
பாடல்

__________________________________

நண்பர்களே,

மிழக வரலாற்றில் இதுவரை நமது விவசாயிகள் இப்படிச் சாகவில்லை. கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள். அந்த ஆத்திரத்தை அரசியல்படுத்தி இதர பிரிவு உழைக்கும் மக்களின் துணையுடன் மக்கள் அதிகாரம் அங்கே பிரச்சாரம் செய்து வருகிறது. பல மாணவர்கள், தொழிலாளிகள், இளைஞர்கள், பெண்கள் இதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த முயற்சியை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொருட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் இந்தப் பாடலை தயாரித்து வெளியிடுகிறது.

இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசை, தாளக்கருவிகள், ஸ்டூடியோ அனைத்தும் மிகக் குறைந்த செலவில் செய்வதற்கு போராடியும் செலவு எமது கணிப்பைத் தாண்டிவிட்டது. மேலும் நிதிச்சுமை காரணமாகவே இந்தப்பாடலை குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதிகளோடு மட்டுமே தயாரித்திருக்கிறோம். இருப்பினும் விவசாயிகளின் துயரத்தையும், அதற்கான நமது கோபத்தையும் கலை வடிவில் இந்தப் பாடல் தட்டி எழுப்புமென்றே நம்புகிறோம். இசையமைப்பு நிலையத்தில் ஒரு மணிநேர வாடகை மிகக்குறைந்த அளவு வைத்துக் கொண்டாலும் ரூ.500 ஆகும். தொழிற்முறை இசைக் கலைஞர்களை தாளம் மற்றும் இதர கருவிகளுக்கு மிகக்குறைந்த அளவு பயன்படுத்தினாலும் ஒரு பாடலுக்காக ஒரு கலைஞருக்கு அளிக்க வேண்டிய குறைந்தபட்சம் ரூ 5000 அளிக்க வேண்டும். இதுவே ஒரு கால்ஷீட் அளவு அவர்களை பயன்படுத்தினால் அதன் செலவு இன்னும்அதிகம். இது போக வயலின், கித்தார் என்று கருவிகளுக்கேற்ப கட்டணமும் மாறுபடும்.

இணையத்தில் நாங்கள் வந்த பிறகு வெளியான ம.க.இ.க பாடல்கள் அனைத்தும் வீடியோ பாடல்களாக இலவசமாக வெளியிடப்படுகின்றது.

ஆகவே இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்ய உங்களால் இயன்றதை அல்ல, இன்னதுதான் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வுடன் கூடிய தொகையை நன்கொடை அளியுங்கள். சினிமா உலகைச் சேர்ந்த நண்பர்கள் வாடகை இன்றியோ இல்லை குறைந்த வாடகையுடன் கூடிய ஒலிப்பதிவு அரங்கங்கள், படப்பிடிப்பு கருவிகள், கட்டணமின்றி வாசிக்க கூடிய தொழிற்முறை இசைக் கலைஞர்கள் போன்றோரை ஏற்பாடு செய்து உதவுங்கள். இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084
செல்பேசி  – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

அனைவருக்கும் ரசீது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். நன்றி!

நட்புடன்,
வினவு

_______________________________________________

பாடல் வரிகள்

ரே காஞ்சிருச்சி உயிர் மூ…ச்சு ஓய்ஞ்சிருச்சு
ஆ…ய்வு என்னங்கடா ஆய்வு – நீங்க
அழிஞ்சாத்தான் எங்களுக்கு வாழ்வு.

கருகின பயிரப் பாத்து சரிஞ்சா…ங்க கதிரப்போல
காவிரிய தடுத்த மோடி பேச்சப்பா..ரு யோக்கியன்போல
செல்லாத நோட்ட மாத்த சாகிறோம் வரிசையில – உழவை
இல்லாம செஞ்சி இங்கே போடப்போறான் மீதேன் போரை

போலீசு கம்பிளைண்டுக்கு போடணும் வாய்க்கரிசி
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டு அதுக்கொரு வாக்கரிசி
வி.ஏ.ஓ வெரிபிகேசன் அவனுக்கும் வாக்கரிசி
வேளாண்மை அதிகாரி அங்கேயும் வாக்கரிசி
நிவாரணம் திங்கிறதெல்லாம் நீங்கதாண்டா பொணத்த வச்சி

ஊ…ரை சுத்தி சுத்தி வாய்க்கா.. குளம் ஆறு
முப்போகம் விளஞ்சபோது பஞ்ச… மில்லாத ஊரு
தஞ்சையின் தைரியத்தில் தலை நிமிர்ந்த… நாடு – ஒரு
கொள்ளைக் கூட்டம் ஆள்வதாலே மெல்லச் சாகுது தமிழ் நாடு

கா..விரி பாமினி கோரையாறு குடமுருட்டி
வெட்டுன மணலுதாண்டா செங்கல்லாட்டம் தங்க கட்டி
சின்னம்மா ஓபிஎஸ் சிக்குனவன் சேகர் ரெட்டி
அங்க போயி தோண்டுங்கடா ஆய்வுக் குழுவாம் கம்முனாட்டி

இரணியன் களப்பாள் குப்பு சீனிவாசராவ் வளர்த்த தஞ்சை
வெண்மணி தியா…கிகளை விளைய வைத்த கீழத்தஞ்சை
அறுவடைப் போரா….ட்டம் அடங்கியது… பண்ணை – அந்த
நினைவுகள் அழிவதில்லை அஞ்…சாதே நிமிர்த்து நெஞ்சை

___________________________________________________

படத்தொகுப்பு
துரை. சந்திரன்

ஒளிப்பதிவு
இரா. கண்ணா

பாடியவர்
கோவன்

ஒருங்கிணைப்பு
வினவு

பாடல், இசை, தயாரிப்பு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு

பாடலில் இடம் பெறும் காட்சிகள்
திருவாரூர், நாகை மாவட்ட கிராமங்கள்

விவசாயிகள் மரணம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு !

0

people-power-press-release-header
பத்திரிகை செய்தி

11-1-2017

விவசாயிகளுடைய மரணத்திற்கும் கருகிய பயிர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது விவசாயிகளை வஞ்சிக்கும்  கண்துடைப்பு இதை ஏற்கமுடியாது. இந்த அரசு விவசாயிகளை காப்பாற்றாது என்பதற்கு மீண்டும் ஒரு நிரூபணம் தான் இந்த அறிவிப்பு

people-power-protestகர்நாடக காங்- பா.ஜ.க-வின் அடாவடியாலும், மோடி அரசின் துரோகத்தாலும் இந்த ஆண்டும் காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கீட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் தீர்வு காண முடியாமல் திராணியற்று நிற்கின்றது. பருவ மழையும் பொய்த்ததால் தஞ்சை டெல்டா விவசாயம் கருகியது மட்டுமல்ல குடிநீருக்கே மக்கள் விலங்குகள் போல் அலையும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்து எச்சரிக்கின்றனர்.

ஆறுகள், ஏரி, குளம் கண்மாய் அனைத்தும் வறண்டுபோன நிலையில், வரைமுறையற்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விவசாயிகள் கடன் சுமையாலும், விளைச்சலுக்கு கட்டு்படியான விலை இல்லாமலும் அழிவின் விளிம்பில் நிற்கின்றனர். தமிழக அரசும், வேளாண்மை துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டலையோ, எச்சரிக்கையையோ, அறிவுறுத்தலையோ வழங்காதது கண்டனத்திற்குரியது. விவசாயத்தின் அழிவிற்கும், விவசாயிகள் மரணத்திற்கும் நேரடியாக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

உலகுக்கே சோறு போடும் உழவர்களுக்கு நன்றி செலுத்துவதுதான் உழவர் திருநாள்.  பெரும்பாலான  விவசாயிகளின் வீடுகள் பயிரை இழந்து, சொந்தங்களை இழந்து, இழவு வீடாக மாறியுள்ள நிலையில் பொங்கல் விழா ஒரு கேடா ? நமது வீட்டில் இழவு விழுந்தால் பொங்கலை நாம் கொண்டாடுகிறோமா? எனவே இந்த பொங்கல் தினத்தை கருப்பு தினமாக கருதி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

கர்நாடகாவும், கேரளாவும் உயிரிழந்த விவசாயிகளைக் கணக்கெடுத்து, வறட்சிப் பகுதிகளை பதிவு செய்து மத்திய அரசிடம்  வறட்சி நிவாரணம் பெற்று விட்டது. தமிழக அமைச்சர்கள் காலில் விழுவதற்கும், கும்பிடுவதற்கும் ஒதுக்கும் நேரத்தை ரத்து செய்துவிட்டு தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். இல்லை என்றால் பதவி விலக வேண்டும். அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராசன் போன்றோர் விவசாயிகளின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவசாயிகள் புறக்கணிப்பதுடன் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

people-power-protest3மத்திய மாநில அரசுகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் வாழ்விப்பதற்கு பதிலாக அவர்கள் நிலங்களை கைப்பற்றி, அகதிகளாக நகரத்தை நோக்கி விரட்டுவது என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. ஆற்றுமணல் கொள்ளை, மீத்தேன் திட்டம், பணமதிப்பு நீக்கம், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்காமல், அவற்றை அழித்தல் ஆகியவற்றினை அசுர வேகத்தில் செயல்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராடினாலோ அவர்களை போலீசை வைத்துத் தாக்கி, பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்துகிறது.

பாதிப்புகளை தடுக்க முயலாமல், வெள்ள பேரழிவிலும், வறட்சி பேரழிவிலும் மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என அதிகாரிகளும் ஆளும் கட்சியினரும் திட்டம் போட்டு செயல்படுகின்றனர். வறட்சி பாதித்துள்ள முக்கியப் பகுதியான நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. மேலும் தமிழகத்தில் வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் சம்பளப் பணம் வழங்கப்படவில்லை. தமிழக கரும்பு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளாக சுமார் 2,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கவில்லை. பெரம்பலூரில் சொசைட்டியில் பால் கொடுத்தவர்களுக்கு சொசைட்டி மூன்று மாதமாக நிலுவைத் தொகை வழங்கவில்லை. ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் எப்படி ஊழல் செய்யலாம், எப்படி கொள்ளையடிக்கலாம் எனப் போதைக்கு அடிமையான குடிகாரனாக மாறி நிற்கிறது. இத்தகையவர்கள் விவசாயிகள் மரணத்திற்கும், கருகிய பயிர்களுக்கும் கண்ணீர் சிந்துவார்கள், பிரச்சினையை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில்  மாற்று வழியை பற்றி சிந்திக்க வேண்டும் என தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் மனு கொடுப்பது, கவர்ச்சி அறிவிப்புகளை கண்டு ஏமாறுவது, தானாக ஏதாவது நடக்கும் என விவசாயிகள் வெயிலில் ஏன் காத்திருக்க வேண்டும்? பாதிக்கப்பட்ட மக்கள்தான், நிவாரணம் கிடைக்கவும், நிரந்தரத் தீர்வு காணவும், போராடியாக வேண்டும். இது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என்பதைப் பிற மக்களுக்கு உணர்த்தினால் மட்டுமே விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.

கருகிய பயிர்களைக் கண்டோ, வாங்கிய கடனை நினைத்தோ தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைய வேண்டாம். இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. வங்கிக்கடன், கந்து வட்டிக் கடன், அரசின் நிவாரணம், இழப்பீடு என அனைத்தையும் நம்மால் எதிர் கொள்ள முடியும். மக்கள் அதிகாரம்தான் மாற்று என்பதை நாம் புரிந்து கொண்டால், செயல்படுத்தினால் இந்த நாட்டையும், மக்களையும், இயற்கை வளங்களையும் காக்க முடியும். ஏனென்றால் காக்க வேண்டிய அரசுகட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது.

உரிய நிவாரணம் கொடுத்து, விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.

தோழமையுடன்
வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.

அதிபர் டிரம்ப் : நலன்களின் முரணா ? நகைப்புகளின் முரணா ?

0

மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் அவர் பதவி ஏற்றதும் ஏற்படப் போகும் நலன்களின் முரண்கள் (Conflict Of Interests) பற்றி ஊடகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அக்கறையை வெளிப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ உலகில் புழங்கும் பல்வேறு வார்த்தைகள் ஏதோ மாபெரும் தத்துவ விளக்கத்தைக் கொண்டிருக்கும் சிக்கலான நுட்பங்களாக நினைக்கப்படுகின்றன. உண்மையில் இவ்வார்த்தைகளை ஒரு பள்ளிக் கூட சிறுவன் ஆய்வு செய்தாலே அவற்றில் இருப்பது வெறும் வார்த்தைகளே அன்றி வாழ்க்கை பற்றியவை அல்ல என்பதை அறியமுடியும்.

அதன்படி நலன்களின் முரண்கள் என்றால் என்ன? டிரம்ப் எனும் தனிமனிதரின் நலன்களும், அதிபர் என்ற முறையில் உள்ள நலன்களும் மோதிக்கொள்கின்றனவாம். எனில் டிரம்ப் எனும் நபரின் நலன்கள் ஏன் அதிபர் என்ற வகையில் முரண்படவேண்டும்? அதாவது அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கையில் வர்த்தகம் சார்ந்தவை இருக்க கூடாதாம்.

trump
டொனால்ட் டிரம்ப்

இது குறித்து எதிர்வினையாற்றிய டிரம்ப் முதலில், நலன்களின் முரண்களைச் சுட்டிக் காட்டுபவர்களை கடுமையாக தாக்கி, முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்து வந்தார். “தேர்தலுக்கு முன்னரே உலகம் முழுவதும் உள்ள எனது சொத்துக்களில் எனக்கிருக்கும் நலன்கள் அனைவரும் அறிந்தது தான். சில நேர்மையற்ற ஊடகங்கள் தான் தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்குகின்றன” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கருத்திட்டிருந்தார்.

பின்னர் தனது வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ளப்போவது தொடர்பாக டிசம்பர் 15 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று வரை நடைபெறவில்லை. ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் அச்சந்திப்பு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தனது நிலைப்பாட்டை சிறிது மாற்றிக் கொண்டதாக அவர் காட்டிக் கொண்டாலும், சட்டவிதிகளின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ள தனக்கு எந்த கட்டாயமும் இல்லை என்பதை சுட்டிகாட்டி வலியுறுத்தி வருகிறார். அதாவது, நலன்களின் முரண் தொடர்பான அமெரிக்க சட்டத்தில் அதிபருக்கு விலக்கீட்டு உரிமை (Impunity) இருப்பதாக அவர் கூறுகிறார். எனவே அவர் சொல்லும் எதுவும் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பதை இது காட்டுகிறது.

trump-tower-wall-streetவானளாவிய உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் கோல்ப் மைதானங்கள், ஆண்கள் ஆடைகள், தளவாடங்கள் மற்றும் உலகம் முழுவதும் அவரது தனிப்பட்ட ”பிராண்ட்”டுக்கான உரிமம் ஆகியவற்றை உள்ளடக்கியது டிரம்ப்பின் மீப்பெரும் வணிக சாம்ராஜ்யம். இது வணிகம் மற்றும் அரசியலுக்கிடையில் முடிவற்ற பின்னல்களைக் கொண்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் நன்கொடைகள் அளிப்பதன் மூலம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும், செல்வந்தர்களும் அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவதையே அமெரிக்கர்கள் அரசியலில் ஊழல் எனக் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

ஆனால், டிரம்ப்பின் நிர்வாகம் இவற்றைத் தாண்டி மிக நேரடியான ஊழல் வகை அபாயத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, இங்கே தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கொடை பெறுவது என்பதையும் தாண்டி அதிபரின் சொந்த தனிப்பட்ட செல்வக்கொழிப்பு (Personal Enrichment) என்ற அபாயத்தைக் கொண்டிருக்கிறது. எனினும் சட்டப்படியே இந்த தனிப்பட்ட செல்வக் கொழிப்பு சரிதான் என்று நிறுவுவதே டிரம்பின் விருப்பம். ஊழலை சட்டபூர்வமாக்கி, கையூட்டையும், கழிவையும், தரகர் வேலைகளையும் வர்த்தக சேவை என்று மாற்றிய பிறகு முதலாளித்துவம் தன்னைக் ‘கற்புக்’கரசனாக பிரச்சாரம் செய்ய முடியாது. செய்தால் அது நலன்களின் முரண் அல்ல, முரண்களின் நகை.

இந்த ஊழல்கள், நலன்களின் முரண்கள் இல்லாதபோதும் கூட அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளிகளின் உள்நாட்டு மற்றும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்த வகையில் மட்டுமே அமெரிக்க அரசின் அரசியல், கொள்கை முடிவுகள் நடைமுறை படுத்தப்படுகின்றன.

அதாவது, இதுவரை கோட்டு சூட்டு கனவான்கள் அமெரிக்க அதிபராக கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை செய்த ’பாரம்பரிய மரபு’ போய், ஒரு கார்ப்பரேட் முதலாளியே நேரடியாக அதிபராகியிருக்கிறார். அதிலும், ட்ரம்பை போன்ற ஒரு பொறுக்கி அதிபராகியிருப்பது அமெரிக்க ஜனநாயகத்தை முற்றிலும் அம்மணமாக்கி விட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவ பத்திரிக்கைகள் நலன்களின் முரண்களைக் குறித்து ஒப்பாரி வைக்கின்றன. அந்த ஒப்பாரி ஏகாதிபத்திய நலன்களை நல்லதென்று அங்கீகரிக்கும் வரை பலருக்கும் ஆணவச் சிரிப்பாகவே தோன்றும். எனினும் இந்த நலன்களின் முரண்கள் குறித்து அவர்கள் அழுவதை அப்படி முழுவதுமாக அலட்சியம் செய்து விடமுடியாது. அதன்படி டிரம்ப் சார்பாக எழுந்திருக்கும் இந்த நலன்களின் முரண்களை முதாலளித்துவத்தின் போட்டியாகவும் பார்க்கலாம். இறுதியில் அவர்கள், அவர்களே சொல்லிக் கொள்ளும் ஜனநாயகத்தின்படி கூட வாழ முடியவில்லை. இந்த இலட்சணத்தில் முதலாளித்துவ தாசர்கள் அனைவரும்  விரதமிருந்து மலையேறுவதால் பயனில்லை.

இனி நலன்களின் முரண்களைப் பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நலன்களுக்கிடையிலான முரண்கள் :

பொது சேவைகள் நிர்வாகம் (General Services Administration): முரண்களில் ஒன்று வெள்ளை மாளிகைக்கு மிக அருகிலேயே இருக்கும் வாசிங்டன் டிரம்ப் சர்வதேச விடுதி (Trump International Hotel, Washington DC). 2013-ம் ஆண்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் டிரம்ப் குழுமம் அமெரிக்க மைய அரசிடமிடுந்து பழைய தபால் அலுவலக கூடத்தை (Old Post Office Pavilion) குத்தகைக்கு எடுத்துள்ளது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசு அதிகாரியும் இந்த குத்தகையில் பங்கு வைத்திருப்பதையோ அல்லது அதிலிருந்து ஆதாயமடைவதையோ அதன் ஒப்பந்த விதிகள் தடை செய்கின்றன.

பழைய தபால் அலுவலகம் பெவிலியன் குத்தகையை கண்காணிக்கும் பொறுப்பு பொது சேவைகள் நிர்வாக அமைப்பிடம் இருக்கிறது. டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும் அமெரிக்க அரசு மாற்றத்தின் பகுதியாக இவ்வமைப்பின் தலைவரை நியமனம் செய்யவிருக்கிறார்.

அதிபரின் குடும்பத்தினருடன், குத்தகை விதிகள் குறித்து மறுபேச்சு (Renegotiation) நடத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு பொது சேவைகள் நிர்வாகம் தள்ளப்படும்.

TrumpConflicts_GSA-post

தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (National Labor Relations Board): லாஸ் வேகாஸ் டிரம்ப் விடுதியின் பெரும்பான்மை தொழிலாளிகள் அங்கத்தினராக உள்ள தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த பிரச்சினையில் சென்ற நவம்பர் மாதம் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் டிரம்ப் விடுதி நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.

இப்போது புதிய அரசில் தேசிய தொழிலாளர் வாரியத்தின் உறுப்பினர்கள் ஐவரில் காலியாக இருக்கும் இருவரை நியமிக்கும் பொறுப்பில் இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். மேலும் அடுத்த 2017 நவம்பரில் இவ்வாரியத்தின் சட்ட ஆலோசகரின் (General Counsel) பதவிக்காலம் முடிவடையவுள்ளது. புதிய ஆலோசகரை நியமிக்கும் அதிகாரமும் ட்ரம்பின் கையில் தான் இருக்கிறது.

இவ்வாரியத்தின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் டிரம்ப் குழுமம் மேல்முறையீடு செய்துள்ளது. அவ்வழக்கில் டிரம்ப்பால் நியமிக்கப்படுபவர்கள் டிரம்ப் குழுமத்தை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படும்.

TrumpConflicts_NLRB-post

அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ): டாயிஷே வங்கி தனது கடன் பத்திரங்களை (mortgage securities) கைமாற்றியதில் செய்த முறைகேடுகளும் 2008 பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. இதை விசாரித்த அமெரிக்க நீதித்துறை (Department of Justice -DoJ) 2016-ம் ஆண்டு செப்டம்பரில் டாய்ஷே வங்கிக்கு 14 பில்லியன் டாலர் (92,400 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

அபராதத் தொகையை குறைக்க அமெரிக்க நீதித்துறையுடன் டாய்ஷே வங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. உடன்பாடு எட்டப்படாத நிலையில் ட்ரம்பின் அரசிலும் பேச்சுவார்த்தைகள் தொடரும். இப்பேச்சுவார்த்தைகள் அமெரிக்க தலைமை வழக்குரைஞரின் மேற்பார்வையில் நடக்கும்.

ட்ரம்பிற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் டாய்ஷே வங்கியின் முக்கிய கடனாளிகளாக உள்ளனர். சுமார் 2.5 பில்லியன் டாலர் (16250 கோடி ரூபாய்) அளவிற்கு டிரம்ப் குழும நிறுவனங்கள் டாய்ஷே வங்கியிடமிருந்து கடன் பெற்றுள்ளன.

இந்நிலையில், புதிய அரசுத் தலைமை வழக்குரைஞரை (அட்டர்னி ஜெனரலை) நியமிக்கும் அதிகாரமும், அமெரிக்க நீதித்துறையை மேற்பார்வையிடும் அதிகாரமும் அதிபராகப் பொறுப்பேற்கும் டிரம்ப்பிடம் உள்ளது.

TrumpConflicts_DeutscheBank-post

பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission): நியூயார்க்கின் வால் வீதியில் எண் 40-ல் இருக்கும் 72 மாடி கட்டிடம் ட்ரம்புக்கு சொந்தமானது. இதை டிரம்ப் குழுமம் பல்வேறு நிதி சூதாட்ட நிறுவனங்களுக்கு அலுவலக குத்தகைக்கு விட்டுள்ளது. பங்கு பத்திர மோசடிகள் தொடர்பாக இக்கட்டிடத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய குடியிருப்போருக்கு எதிராக ஐந்திற்கும் மேற்பட்ட அரசாங்க விசாரணைகள் நடந்து வருகின்றன.

இவ்விசாரணைகளை பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மேற்கொள்கிறது. டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் ஆணையத்தின் புதிய தலைவரை நியமிக்கவிருக்கிறார்.

உள்துறை (Interior department – DoI): அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் சுமார் 18,000 கோடி ரூபாயில் டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் திட்டம் வர இருக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தங்களது நீர் வளம், நில வளம் அழிக்கப்படும் என அங்குள்ள பூர்வகுடி மக்கள் போராடி வருகிறார்கள்.

இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் நிறுவனத்தில் சுமார் ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6,50,00,000) டிரம்ப் முதலீடு செய்துள்ளார். டிரம்ப் தனது பங்குகளை விற்றுவிட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் சொன்னாலும், டிரம்ப் பங்குதாரராக இருக்கும் மற்றொரு நிறுவனமான ’பிலிப்ஸ் 66’ டகோட்டா பைப்லைன் திட்டத்தில் சுமார் 25% பங்குகளை வைத்திருக்கிறது.

மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்க உள்துறை தற்காலிகமாக திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அரசு மாற்றத்தில் டிரம்ப் உள்துறை செயலரையும் நியமிக்கவிருக்கிறார்.

trumpplaneஇரகசிய சேவை அமைப்பு (Secret Services): அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்கும் கடமையை செய்வது இரகசிய சேவை அமைப்பு (Secret Services). அமெரிக்க அதிபர் வேட்பாளரையும் பாதுகாக்கும் கடமையையும் இவ்வமைப்புக்கு உள்ளது.

டிரம்ப் அதிபர் வேட்பாளராக பிரச்சாரத்திற்கு சென்ற போது அவரது டிரம்ப் ஏரோப்பிளேன் கம்பெனியின் (TAG Air) விமானத்தில் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக இரகசிய சேவை அமைப்பினரும் உடன் சென்றனர். இதற்கு டிரம்ப்பின் விமானக் கம்பெனி இரகசிய சேவை அமைப்பிடம் கட்டணம் வசூலித்திருக்கிறது.

டிரம்ப் அதிபர் பதவியேற்ற பின் அவர் அமெரிக்க விமானப்படையின் ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தை பயன்படுத்துவார். ஆனால் அவரது குடும்பத்தினர் டிரம்ப் ஏரோப்பிளேன் கம்பெனியின் (TAG Air) விமானத்தை பயன்படுத்தலாம். அவர்களை பாதுகாக்க அதில் இரகசிய சேவை அமைப்பினரும் பயணிக்க நேரிடும். இரகசிய சேவையினர் தமது அப்பயணத்திற்கு டிரம்ப்பின் விமானக் கம்பெனிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வகையில் டிரம்ப் குடும்பத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பயணத்தின் கட்டணத்தை டிரம்ப் குடும்பத்திற்கே செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் : இவை தவிர டிரம்ப் குழுமத்தின் 111 நிறுவனங்கள் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக நடவடிக்கைகளில் பங்குதாரராக, நலன் பெறுபவையாக இருக்கின்றன.

atul-sagar-meet-trump1
இந்திய முதலாளிகளான அதுல் மற்றும் சாகர் சோர்டியா சகோதரர்கள் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை சந்தித்துள்ளனர்.

இந்தியாவில் டிரம்ப் பிராண்டுக்கான உரிமத்தை பெற்று இந்திய தரகு முதலாளிகள் கட்டுமான திட்டங்களை செயல்படுத்துகின்றனர். ட்ரம்பின் பிராண்டில் ஐந்து அதி ஆடம்பர அடுக்குமாடி திட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மும்பையைச் சேர்ந்த லோதா குழுமம் கட்டிவரும் அதி ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்றாகும். இந்த லோதா குழுமத்தின் தலைவர் மங்கள் பிரபாத் லோதா, மராட்டிய பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர்.

பூனே நகரில் டிரம்ப் டவருக்கான (Trump Tower, Pune) நிலம் போலியான ஆவணங்களை தயாரித்து கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரனையில் இருக்கிறது. பூனே டிரம்ப் டவர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிவரும் இந்திய முதலாளிகளான அதுல் மற்றும் சாகர் சோர்டியா சகோதரர்கள் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை சந்தித்துள்ளனர். தங்களுக்கிடையிலான வணிகம் இனி சிறப்பாக தொடருமென்றும் டிரம்ப் இவர்களுக்கு உறுதியளித்துள்ளார். டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதை அடுத்து ’டிரம்ப் பிராண்டு’க்கான மவுசு அதிகரித்துள்ளதாக பிரணவ் பக்தா என்ற கட்டுமானத் துறை ஆலோசகர் தெரிவிக்கிறார்.

மேற்சொன்ன நலன்களின் முரண்கள் சில வகைமாதிரிகள் மட்டுமே. டிரம்ப் தன்னுடைய வருமான வரி விவரங்களையோ அல்லது தனது கடன்களை பற்றிய தகவல்களையோ வெளியிட மறுக்கிறார். அதோடு யார் உரிமையாளர் என எளிமையாக கண்டறிய முடியாத வகையில் கம்பெனிகளுக்கிடையிலான வலைப்பின்னலைக் கொண்ட தனது வணிக சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டியமைத்துள்ளார். அதனால் இந்தச் சிக்கலின் முழுப் பரிமாணத்தை நாம் அறிய முடியாது.

பூனேவில் உருவாகும் டிரம்ப் டவர்
பூனேவில் உருவாகும் டிரம்ப் டவர்

ஒருவேளை, அவரே கூறிக்கொள்வது போல தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து துண்டித்து கொண்டு அவற்றின் கடிவாளத்தை தனது குழந்தைகளிடம் ஒப்படைப்பதாக இருந்தாலும், இந்த நலன்களின் முரண்கள் தீர்ந்து விடப்போவதில்லை.

டிரம்ப் தனது வணிக நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு ஐவான்கா, டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகிய தனது பிள்ளைகளிடம் அதை ஒப்படைக்கப் போவதாக சொல்லிவருகிறார். புதிய அதிபர் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனங்களில் அறிவுரை வழங்கும் அரசு மாற்ற குழுவில் (Transition Team) ஐவான்கா, டொனால்ட் ஜூனியர் மற்றும் எரிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், வெளிநாட்டு தலைவர்களுடனான டிரம்ப்பின் சந்திப்பிலும் அவர்கள் பங்கேற்கின்றனர்.

டிரம்ப்பின் பல வணிகங்கங்கள் ‘டிரம்ப்’ பெயரைக் கொண்டுள்ளன. அவரது வணிக நடவடிக்கைகள் அவரது பெயரைக் கொண்டிருக்கும் வரை, அவற்றில் அவருக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது அவரது வேண்டப்பட்டவர்களுக்கோ பங்குகள் இருக்கும் வரை இம்முரண்கள் தீர்க்கப்படாது என்பதை பல முதலாளித்துவ பத்திரிக்கைகளே சுட்டிக்காட்டி வருகின்றன.

அமெரிக்க சட்டத்தின் படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளைப் பெற முடியாது. இனி அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளால் பலன் அடைபவர்கள் “டிரம்ப்” பிராண்டுக்கான உரிமத்தை பெற்று டிரம்ப்புக்கு ’நன்றிக் கடன்’ தீர்க்கலாம். அல்லது அமெரிக்க அரசு அதிகாரத்தையும், இராணுவ பலத்தையும் பயன்படுத்தி வெளிநாடுகளில் டிரம்ப் குழுமம் தனது வர்த்தகத்தை வளர்த்துக் கொள்ளலாம். இது போன்ற எண்ணற்ற முடிவில்லா ‘வாய்ப்புகளை’ கொண்டிருக்கிறது ட்ரம்பின் அரசு நிர்வாகம்.

அமெரிக்க நாட்டு நலன்களுக்கும், டிரம்ப் குழும நிறுவனங்களின் நலன்களுக்கும் இடையிலான முரண்களை தான் நலன்களின் முரண் என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டி வருகின்றன. இங்கு அமெரிக்க நாட்டு நலன் என குறிப்பிடப்படுவது அமெரிக்க முதலாளிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் ஏகாதிபத்திய நலன்களே அன்றி சாதாரண அமெரிக்க மக்களின் நலனை அல்ல. ஏகாதிபத்திய நலன்களும், டிரம்ப் குழும நலன்களும் ஒத்திசைவாக செயல்படுவதற்கே அதிக சாத்தியமுள்ளது.

ஆக, முதலாளித்துவ பத்திரிக்கைகள் கூறிவருவது போல டிரம்ப்பின் நலன்களுக்கிடையான முரண்கள் தீர்க்கப்பட்டாலும் கூட அமெரிக்க மக்களுக்கோ, உலக மக்களுக்கோ அதனால் விடிவு கிட்டப்போவதில்லை.

– நாசர்

மேலும் படிக்க:
A running list of how Donald Trump’s new position may be helping his business interests
All of Donald Trump’s known conflicts of interest in one place
Donald Trump’s Conflicts of Interest: A Crib Sheet
Donald Trump: A list of potential conflicts of interest
Trump’s conflicts of interest: a visual guide
Trump’s extensive deals in India raise conflict-of-interest concerns