Sunday, June 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 516

பிள்ளை ஊனம்னு விட்டுட்டு போக முடியுமா ?

0

சனவரி 11- திருவாரூரில் அணிதிரள்வோம்!

மாணவர்கள் , இளைஞர்கள் தொழிலாளிகளோடு இங்கே டெல்டாவிற்கு வந்திருக்கிறோம். கடந்த 3 நாட்களில் 28 கிராமங்களைக் கடந்து இருக்கிறார்கள். கிராமச் சுற்றுலாவிற்காக வரவில்லை. உலகிற்கு சோறு போட்ட விவசாயி கொத்து கொத்தாக செத்துப்போவதை கேள்விப்பட்டு பதைபதைத்து ஓடிவந்த ”மக்கள் அதிகாரம்” அமைப்போடு வந்தவர்கள். வந்தவர்களில் பலருக்கும் டெல்டா என்பதை வார்த்தையில் கேள்விபட்டவர்களாகவே இருந்திருக்கிறோம். விவசாயம் என்பதை ஒரு பெயராக மட்டுமே  பார்த்து வந்தவர்கள்தான் பலர்.

posterவிவசாயிகளின் மரணத்திற்கு காரணமான காவிரியை தடுத்த மோடியை, ஆற்றுமணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலை கண்டித்தும், இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசயிகளுக்கு நிவாரணமும் நீதியும் வழங்க கோரியும் நாளை 11.01.2017 அன்று நாள் முழுவதும் திருவாரூரில் நடக்கவிருக்கிற ”தர்ணா போராட்டத்திற்கு” அழைப்புவிடுத்து டெல்டா மாவட்டங்களில் குவிந்து விவசாயிகளை சந்தித்து வருகிறோம்.

விவசாயி ஒருவரை பார்த்து “விவசாயம் செய்யறதுல இவ்வளவுப் பிரச்சினை இருக்கு விட்டுட்டு போகவேண்டியதுதானே” என்று நாங்கள் கேட்டபோது “புள்ளைய பெத்து வளர்க்குறீங்க, திடீர்னு ஊனமாயிட்டுனா உட்டுட்டு போவ முடியுமா” என்று அந்த விவசாயி எங்களை கேட்டபோதுதான் தெரிந்தது விவசாயம் பெயர் அல்ல அது உயிர் என்று.

திரும்பிய பக்கமெல்லாம் கருகிய வயல்களும் காய்ந்து போன கரும்புகளும்தான் வரவேற்கின்றன. பசுமை பசுமை எங்கு காணினும் பசுமை என்று படத்தில் கிராமங்களை வைத்து கல்லாக்கட்டிய இயக்குனர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடையத் தட்டி, மீசைய முறுக்கி பாரம்பரியம் – பண்பாடு என முழங்கும் தமிழர்க’ள் விவசாயிகள் படுகொலைக்காக பேசுவதில்லை.

tiruvarur-farmers-suicide-propagandaதிருவாரூரில் ஒரு கிராமத்துக்கு ஒரு பம்ப் செட் இருப்பதே பெரிய விசயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 மணிநேரம்தான் தண்ணீர் வருகிறது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை யாராவது விவசாயிகளின் சாவைப்பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக கிராமத்தில் காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள் தான் மக்களைப் பார்க்கமுடியும். அதன் பிறகு வேலைக்குச் சென்று விடுவார்கள். தற்போதோ வேலை இல்லாததால் வீட்டில்தான் எப்போதும் முடங்கிக் கிடக்கிறார்கள். விவசாயம் இல்லாத போதும் மாடு வாங்கியதற்காக நோட்டீசு அனுப்புகின்றன வங்கிகள். டெல்டாவிலேயே திருவாரூரின் நிலைமை கொஞ்சம் தேவலாம் என்கிறார்கள். .

நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டியை நோக்கிச் செல்லச் செல்ல குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை இருக்கிறது . நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்கிறார்கள். திருவாரூர் – திருத்துறைப்பூண்டியை நோக்கி சென்ற கிராமங்கள் எங்கும் விவசாயம் இல்லை.சிறு விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தான் அதிக பாதிப்பில் இருக்கிறார்கள். தண்ணீர் பஞ்சம் நினைக்க முடியாத அளவிற்கு இருக்கிறது. குடிக்கத்தண்ணீர் கேட்டால்கூட இல்லையென்று பலர் சொல்லுகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு 3 நாட்களுக்கு 10 குடம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதில்தான் குடிப்பது, குளிப்பது, சமையல் செய்வது என எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை. அதனால் தேங்கிய குட்டையில் துணி துவைக்கிறார்கள். துணி துவைத்த பின்னர் அந்தத் தண்ணீரிலே குளிக்கிறார்கள். இதெல்லாம் தெரியுமா தமிழினத்தலைவர்களுக்கு.

ஒரு நாள் பிரச்சாரம் முடித்த பின்னர் இரவு ஒரு ஊரில் தங்கினோம். வண்டியில் கட்டப்பட்டு இருந்த பேனர்களைப் பார்த்துவிட்டு அவ்வூரைச்சேர்ந்த அதிமுக-காரர் ஒருவர் குடித்து விட்டு சண்டையிட ஆரம்பித்தார். ”எப்புடி விவசாயிகள் வறட்சியில சாவுறாங்கன்னு சொல்லலாம்? எங்க ஊர்ல விவசாயி செத்துப்போனாரு. நான்தான் வறட்சியால செத்துப்போனாருன்னு சொல்லி நிவாரணம் வாங்கிக்கொடுத்தேன். என்கட்சியை எப்படி தப்பாப் பேசலாம்”.  சரி போதையில் பேசுகிறாரே என்று விலகிச்சென்றோம். அவரோ நாங்கள் இருந்த இடத்திற்கு எதிரே இருந்த  ஒருகடையில் நின்று கத்திக்கொண்டு இருந்தார். அப்போது கடைக்காரர் அவங்க சொல்லறது என்னய்யா தப்பு? நாம ரெண்டாயிரம் ரூபாய்க்கு அலையுறோம். அவன்கிட்ட மட்டும் எப்படி கட்டுகட்டா பணம் வந்துச்சு? அவங்க சொத்தை பறிமுதல் செஞ்சா என்ன தப்பு? என்று அவருக்கு பதிலளித்தார்.

tiruvarur-farmers-suicide-propaganda6நாங்கள் பிரச்சாரம் செய்த பல இடங்களிலும் நிவாரணம் வேண்டும் என்று பேசியவர்கள் கூட நமது வாழ்க்கை இந்த அளவு மோசமானதற்கு காரணமானவர்களின் கொள்ளையடித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பேசியிருப்பதை பார்க்க முடிகிறது. நமது பிரச்சாரம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுவிவசாயிகள், நடுத்தர விவசாயிகள் என பலரும் நாம் வைக்கும் கோரிக்கை சரிதான் என்பதை பதிவு செய்கிறார்கள். அதிமுக, திமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட வெளிப்படையாக அக்கட்சியை திட்டுகிறார்கள். ”இவனுங்க எல்லாம் திருட்டுபசங்க, தின்றானுங்க, விவசாயிகள் எல்லாம் சாவுறோம். ஒருத்தன் கூட வந்து  எட்டிப்பார்க்கல, நாகப்பட்டினத்துலதான் ஜவுளித்துறை அமைச்சர் இருக்கான். அவனுக்கு நாங்க செத்துப்போனது தெரியாதா? எங்க பிரச்சினை எல்லாம் தெரியாதா?

நாங்க செத்துக்கிட்டு இருக்கிறோம் ஆனா ஜல்லிக்கட்டு நடத்தணும்னு சொல்லுறாங்க. எங்களுக்கு சோத்துக்கே வழியில்லாம அல்லோலபடுறோம். ஜல்லிக்கட்டு நடத்தறது முக்கியமா? நாங்க பொங்கலே கொண்டாட முடியாது. எங்க பானையிலேயே அரிசியில்லை”.

இதற்கு முன் கிராமத்திற்கு சென்றால் உணவுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் இப்போது எங்களுக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள். கையில் ஒரு பைசாகூட இல்லை என்கிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் பறையடித்து அனைவரையும் ஒரு இடத்தில் வரவழைத்து பிரச்சாரம்  செய்வோம். அதை முடித்துவிட்டு “உங்களிடம் பணம் ஏதுவும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் கொடுக்கும் நிதியில் இருந்துதான் நாங்கள் பிரச்சாரம் செய்ய முடியும். உங்களை சார்ந்துதான் வந்திருக்கிறோம்” என்று சொன்னவுடன் தங்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டில் இருக்கும் 5 ரூபாயோ பத்து ரூபாயோ எடுத்து வருகிறார்கள். எத்தனையோ பேர்கள் காசுகொடுக்க முடியவில்லையே என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

பிரச்சாரத்திற்கு வந்த தோழர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டில் இருந்தாவது சோறு, குழம்பு போன்றவற்றை வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார்கள். நமக்காக போராட வந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். எந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லை. விவசாய சங்கங்கள் உட்பட. ரொம்ப நாளா போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள். அரசை நிர்பந்திக்கக்கூடிய போராட்டங்கள்தான் தேவை என்பதை உணர முடிகின்றது.

tiruvarur-farmers-suicide-propaganda3உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை.  அதனால் ஒன்றும் ஆகாது என்று கூறுகிறார்கள். விவசாயம் செய்வதற்கு பயமாக இருக்கிறது என்கிறார்கள். இன்னும் சிலரோ தண்ணீர் வந்தால் கூட விவசாயம் செய்வதற்கு பயமாக உள்ளது. ஏற்கனவே கடன் மேல் கடனாக இருக்கிறது. மறுமடியும் விவசாயம் செய்து கடனில் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு பகுதியில் பிரச்சாரம் செய்தோம். பெண்கள், இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோருடன்  இரவு பேசினோம். பிரச்சாரப் பாடல்களைப் பாடினோம். அவர்கள் நாட்டுப்புறப் பாடலை பாடினார்கள். பெண்களும் இளைஞர்களும் போராட்டத்திற்கு வருவதாகக் கூறுகிறார்கள்.

இன்று அடுத்து ஊருக்கு கிளம்புகிறோம். விவசாயிகளைக் கொன்ற அரசை தண்டிக்காமல் பயணம் ஒருபோதும் நிறைவு பெறப்போவதில்லை.

காவிரியை விட, வயல்வெளியைவிட வறண்டு போய்விட்டான் விவசாயி வான்மழை பொய்த்தாலும் காவிரி பொய்க்காது என்பார்கள்.  இப்போது வான் மட்டுமல்ல இந்த அரசும்தான் பொய்த்துப்போயிருக்கிறது. ஆனால் மாற்றத்தை விதைக்க முடியும் என்ற நம்பிக்கை பொய்க்காது. இதுதான் விவசாயிகளின் நிலை, தமிழனின் நிலை. சூடு சொரணை இருப்போர் இதைக்கேட்ட பின்னரும் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் விவசாயிகளோடு அவர்கள் துக்கத்தை எங்களது சொந்தமாக்கி இருக்கிறோம்.  இதைப்பற்றிப் பேசாமல் ஜல்லிக்கட்டு, பொங்கல், உழவர் திருநாள் என்று பேசுவோரை என்ன செய்வது?

தகவல்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு 9962366321

***

விவசாயிகள் தற்கொலையை தடுக்க வக்கற்ற அரசு கட்டமைப்பை தூக்கியெறிவோம்
விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

கண்டன ஆர்ப்பாட்டம்.

தினம்தினம் விவசாயிகள் தற்கொலை, மாரடைத்து சாவது என்ற தமிழ்நாட்டின் சொல்லொன்னா துயரம் தொடர்ந்துக்கொண்டே வருகிறது. இதுவரை 150-க்கும் அதிகமான விவசாயிகள் இறந்துள்ளனர். நேற்று தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் ஒருவிவசாயி தற்கொலை செய்துக்கொண்டார். இப்படி டெல்டா மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் தற்கொலை தொடங்கியுள்ளது. இதனை தடுத்து விவசாயிகளை பாதுகாக்கும் அரசே கொலைகாரனாக இருக்கும் போது விவசாயிகள் இனி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்று அறைகூவி அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது விவிமு, புமாஇமு அமைப்புகள்.

பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில்  நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவிமு வட்டார செயலர் தோழர் கோபிநாத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் உலகில் பெரிய டெல்டா என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்று கொத்துகொத்தாக விவசாயிகள் இறப்பது என்பது தொடர்கதையாக மாறியுள்ளது. மாடுகட்டி போர் அடித்தால் மாலாது என்று யானை கட்டி போர் அடித்த சோழ நாடு. இன்று தண்ணீர் இன்றியும், கடன் வாங்கி பயிரிட்டும் விவசாயம் பொய்த்து போனாதாலும் மனம் உடைந்து நெஞ்சு வெடித்து இறக்கிறான் விவசாயி. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற இடங்களில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, தற்போது புற்றுநோயாக தமிழ்நாடு விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறது. இந்த நிலைக்கு காரணம் காங்கிரசு, பிஜேபி கட்சிகள் ஓட்டுபொருக்க மாறி மாறி கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் கொடுப்பதை மறுத்ததுதான் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். மறுப்பக்கத்தில் டெல்டாவை பாலைவனமாக்கி மீதேன் எடுக்க முதலாளிக்கு சேவை செய்ய காத்திருக்கிறார் மோடி. சேகர் ரெட்டி, ராவ், ஓபிஎஸ் அதிமுக தான் ஆற்று மணல் கொள்ளையடிப்பது, கழிவு நீரை ஆறு குளம் ஏரிகளை அழிப்பது என்ற வேலையை செய்த இந்த திருட்டு கும்பலிடம் நீதி கேட்க முடியுமா? அம்பானி, மல்லையா முதலாளிக்கு கடன் தள்ளுபடி  செய்யும் அரசு, சோறுபோட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய மறுக்கிறது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நாம் கறுக்கறுவாலை கையிலெடுத்து வீதிக்கு வரவேண்டும் என்று அறைகூவி அழைத்தார்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தரும்புரி

விளையற பூமியை தரிசா போட முடியாது !

8
பக்கிரிசாமி அவருடைய தம்பி வீராச்சாமி
cow-at-paddy-field
வயல் வெளிகளில் ஆடு, மாடுகள் என கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் துவண்டு கிடந்தன. கணிசமாக ஏக்கரில் இறால் பண்ணைகளும் அமைக்கப்பட்டு அதற்கு தேவையான தண்ணீரை ராட்சத மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சேமங்கலம் என்ற கிராமத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம். மேடும் பள்ளமுமாய் இருந்த அந்த சாலையில் செல்வதே பெரும் சிரமாய் இருந்தது. வழியில் ஒரு பக்கம் ஏரியும் மறு பக்கம் வயல்களும் இருந்தது. அந்த ஏரியில் இருந்த நீரை இஞ்சின் வைத்து விவசாயிகள் பாசனத்திற்காக உறிஞ்சியதால் ஏரி வறண்டு காணப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாததால் வயல்களும் வறண்டிருந்தன.

வயல் வெளிகளில் கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்தன. இரண்டு விவசாயிகள் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களிடத்தில் ஐயா, ராஜ்குமார் வீடு எங்க இருக்கு என்று கேட்டோம். அவர்கள், நாங்கள் எதற்காக வருகிறோம் என்பதை புரிந்து கொண்டு “நேரா போயிட்டு வடக்க திரும்புங்க என்று வழிகாட்டினார்கள்.

இறால் பண்ணைகளுக்காக தண்ணீரை உறிஞ்சும் வகையில் ராட்சத மின்மோட்டார்கள்
இறால் பண்ணைகளுக்காக தண்ணீரை உறிஞ்சும் வகையில் ராட்சத மின்மோட்டார்கள்

அந்த தெரு வெறிச்சோடி போய் இருந்தது. சற்று தூரத்தில் கீற்றுப் பந்தல் போட்ட வீடு ஒன்று தெரிந்தது. அந்த வீட்டின் முன் உள்ள திண்ணையில் அமர்ந்து   ஊர் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். எங்களை பார்த்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.

எங்களை வீட்டிற்குள் அழைத்து சென்றனர். ராஜ்குமாரின் மனைவி  ஒரு மூலையில் துக்கம் தாளாமல் அழுததில்  களைப்பாக இருந்தார். வெளியில் இருந்து ஓஓஓஒ……. வென்ற அழுகுரல்  நெஞ்சை பிளக்கும் சத்தத்துடம் கேட்டது. அந்த குரல் ராஜ்குமாரின் உறவினர் வீட்டு பெண் சுபா. அவரை சமாதானப்படுத்த முயன்ற ஊர் பெரியவர்கள் தோற்றுப்போயினர்.

எல்லோருடைய கண்களிலும் கண்ணீர் ததும்ப கனத்த இதயத்துடன் பேசினார் அந்த இளம் பெண் சுபா.

“கேரளாவுல வேல பார்த்தாரு சார்.. அங்க இருந்து வந்து 4 ஏக்கரு குத்தகைக்கு வாங்கி தான் பயிறு வச்சாரு…. இதுக்காக    ஊர்ல எல்லார்கிட்டயும் கடன் வாங்கினாரு… தை மாசம் அறுவடையாயிடும் குடுத்துடுறேன்னு சொன்னாரு.

எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார்
எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார்

“சீட்டு கம்பனி காரன் தான் ஏமாத்துவான். கஷ்ட படுறவன்.. ஏமாத்த மாட்டான்னு எல்லாரும் அவரு மேல இருந்த மதிப்புல குடுத்தாங்க..”

வெளில வாங்கின கடன் போதாதுன்னு பொண்டாட்டியோட தாலிய கூட அடமானம் வச்சாரு என்று சொல்லும் போதே பேசமுடியாமல் குரல் விம்மியது.

இவ்வளவு கடன் வாங்கி பயிர் செய்யணுமா என்று கேட்டோம் ?

“கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே பேச ஆரம்பித்தார்… விவசாயமாச்சே…. வெளையிர பூமின்னு தெரிஞ்சி எப்படி சார் தரிசா போடா முடியும்?”

rajkumar_mourning-poster
ராஜ்குமாரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி

“எங்கண்ணனுக்கு அப்துல்கலாம ரொம்ப புடிக்கும் சார். அவரோட நினைவு நாளுக்கு ஊர்ல மரக்கண்ணு வாங்கி வந்து நட்டு விழிப்புணர்வு செஞ்சாரு…”அப்பேற்பட்ட மனுஷன் எப்படி சார் விவசாயத்தை விட முடியும்?

சரி, அப்புறம் ஏன் தற்கொல பண்ணிக்கிட்டாரு என்று கேட்டோம்…!.

“ஊர சுத்தி கடன் வாங்கிட்டாரு”. பூமி வெளையில… தண்ணி பாய்ச்சவும்  முடிலய. கையில காசும்  இல்லை.!

அரசாங்கம் கொடுக்கிறது ஒரு லிட்டரு மண்ணெண்ணெய்.. அத வச்சிக்கிட்டு எப்படி சார் முடியும். மேற்கொண்டு மண்ணெண்ணெய் வாங்கனும்னா பணம் இல்லை. ஒரு பக்கம் பாயும். இன்னொரு பக்கம் காயும்.. இத பாக்க முடியாம தான் சார் அந்த நெலத்துலையே உசுர வுட்டுருச்சி..!

***

அழகிய நத்தம் கிராமம். பெயரில் இருக்கும் அழகு விவசாயிகள் வாழ்க்கையில் இல்லை. விவசாயி நடராஜன் வீட்டிற்கு சென்றோம். வீட்டு வாசலில் உளுந்து, தேங்காய் உலற வைத்திருந்தனர்.  உள்ளே சென்ற எங்களை எலிப்புழுக்கைகள்  தான் வரவேற்றது. அது மிகவும் பழமையான வீடு.

நடராஜன்
நடராஜன்

நடராஜனின் உறவினர் சாமிநாதன் எங்களை பார்த்ததும் யார் என்பதை புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார். இவருக்கு “விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். எதை செஞ்சாலும்  கொஞ்சம் புரட்சிகரமா தான் செய்வார். சொந்தமா ஆறு ஏக்கர் நிலம் இருக்கு சார். அதுல ரெண்டு ஏக்கர் மட்டும் தான் நெல்லு தெளிச்சாறு. மீதி எல்லாம் தரிசா கெடக்கு.

எஞ்சின் வச்சி ராவும் பகலுமா ஏறச்சாலும் கூட ரெண்டு  ஏக்கருக்கு மட்டும் தான் பாயும்.  ஒரு எறப்புக்கு பத்து  லிட்டரு டீசல்  வேணும். அதெல்லாம் வாங்கணும்னா பணம் வேணும். கையில காசு இல்ல.

ஏற்கனவே ரெண்டு லட்சம் கடன் வாங்கியிருக்காரு.  யாரு கிட்ட போயிட்டு காசு கேக்கறது? மோடி 500, 1000 செல்லாதுன்னு சொன்னதால யாரும் காசு கொடுக்க மாட்றாங்க. உரம் வாங்கவோ, ஆளுவ கூலி கொடுக்கன்னாலும் பணம் இல்ல.

ரெண்டு லட்சம் கடன் எதனால வந்தது?

பசங்கள படிக்க வெக்கவும், பயிர் செய்யவும் வாங்கின கடன் தான் சார். பையன் படிச்சி முடிச்சிட்டான். மூணு வருசமா வேல தேடறான் கெடக்கல. அடுத்து பொண்ணு இருக்கு. அத கட்டி கொடுக்கணும். எல்லாமும் இந்த நெலத்த  நம்பி தான் வாங்கினது. நெல்லும் விளைச்சல்  இல்லாம போனதால மனசு உடஞ்சி நிலத்துலையே உயிரை விட்டுட்டாரு.

இந்த முறை விளையிலனா அடுத்த முறை பாத்துக்கலாம் . அதுக்காக உயிரை விடுவதா என்று கேட்டோம்.

சாமிநாதன் மற்றும் நடராஜன் குடும்பத்தினர்
சாமிநாதன் மற்றும் நடராஜன் குடும்பத்தினர்

கடந்த அஞ்சி வருசமாவே விவசாயத்துல ஒன்னும் லாபம் இல்லங்க. நிலைத்த விக்கவும் மனசு வரல.. தரிசா போடா முடியுமா?

வருஷம் வருஷம் பயிர் காப்பீடு கட்டிட்டு வராரு … ஆனா நஷ்ட ஈடு யாரும் தரது இல்ல.. உழவு மானியம் 500, களைக்கொல்லி மானியம் 300, சின்சல்பெட் மானியம் 200 அறிவிக்கிறாங்க.. ஆனா குடுக்கிறதே இல்ல.

இனி எதை நம்பி பயிர் செய்றது. எனக்கு 30 ஏக்கர் இருக்கு தம்பி. எல்லாத்தையும் நான் தரிசா தான் போட்டிருக்கேன்.

நலமுத்தூர், கருப்பூர் ஆகிய இடங்களிள் தடுப்பணை கட்டி தண்ணீர் தேக்கி வைத்தால் இரண்டு மாவட்டத்திற்கு பாசன பிரச்சனை இருக்காது   என்று பல முறை மனு கொடுத்தோம், போராடினோம். எதையும் செய்து தரவில்லை. இந்த அரசாங்கத்து மேல எங்களுக்கு நம்பிக்கையே இல்ல.

இனிமே எதை  நம்பி யாரை  நம்பி எங்களை விவசாயம் பண்ண சொல்றீங்க? என்ற கேள்விக்கு நம்மால் பதில் கூற முடியவில்லை. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் வேண்டும், அவர்களுக்கு பிரச்சனை என்றால் எதையும் கண்டு கொள்வதே இல்லை என்ற அவருடைய ஆதங்கம் நம்மை செருப்பால் அடித்த மாதிரி இருந்தது.

***

ராமர்மடம்  விவசாயி பக்கிரிசாமி. ஊரில் ஓரளவுக்கு செல்வாக்கான விவசாயி. சொந்தமா எட்டு ஏக்கர் இருக்கு. அவரோட தம்பி வீராசாமி. விஞ்ஞானி வீராசாமி என்று கூப்பிடுவார்கள். அந்தளவிற்கு விவசாயத்தில் நடந்து வரும் புதிய மாற்றங்களை தெரிந்து கொண்டு விவசாயம் செய்பவர். மற்ற விவசாயிகளுக்கும் ஆலோசனை சொல்லக்கூடியவர்.

பக்கிரிசாமி அவருடைய தம்பி வீராச்சாமி
பக்கிரிசாமி அவருடைய தம்பி வீராசாமி

இப்படி விவராமாக இருப்பவருக்கு மாரடைப்பு வர என்ன காரணம்?

விவசாயம் தாம் அவரோட செல்லபிள்ளை.  சின்ன பையன் மாதிரி ஓயாமல் ஒழைச்சிகிட்ட இருப்பார். எப்பவும் வயக்காட்லயே தான் இருப்பார்.

இந்த முறை 2 ஏக்கர் மட்டும் நெல் தெளிச்சோம். தண்ணி இல்ல. பயிர் கருகிறத பார்த்ததும் மனசு உடஞ்சி போய்ட்டாரு. எந்த வருசமும் இல்லாத அளவு இந்த வருஷம் 60,000 செலவாகிடுச்சி. ஏரி, குட்டை நீரை தான் பாசுவோம். இப்ப எல்லாம் வறண்டு போய்டுச்சி.

நா.. பதினேழு வயசுல இருந்து விவசாய வேலய தான் பாக்குறேன். அப்பல்லாம்  வேளாண்மைத்துறை என்ற ஒன்று இருந்தது. விரிவாக்க பணியாளர்கள் வீடு தேடி வந்து ஆலோசனை சொல்லுவாங்க.., மண்புழு உரத்துக்கு மானியம் கொடுப்பாங்க. இப்ப யாரும் வருவதே இல்லை என்றார்.

லாபம் இல்லாத இந்த தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு?

“பிறந்த குழந்தை ஊனமாகிவிட்டால் விட்டுவிடுவோமா? அது போலத்தான் விவசாயம். இதுல லாப நஷ்டம் பாக்குறது இல்லை”. இத்தனை வருஷம் விவசாயம் பண்றோம். சாப்பிடுறோம். அவ்ளோ தான். இது ஒரு பண்டமாற்று மாதிரி தான் தம்பி…! என்று விவசாயத்தின் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார் வீராசாமி. உண்மையில் அவர் விஞ்ஞானி தான்.

***

கடிநெல்வயல் விவசாயி வேதையன் வீட்டிற்கு சென்றோம்.  காரியம் நடந்து கொண்டிருந்தது. நம்மை பார்த்ததும் அனைவரும் எழுந்து நின்றவர்கள் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர வைத்துவிட்டு பேச ஆரம்பித்தார்கள் ஊர் பெரியவர்கள்.

“ஒரு ஏக்கர் நெலம் இருக்கு அதுல தான்  நெல் தெளிச்சோம். வெளச்சல் ஒன்னும் இல்லாம பயிர் எல்லாம் கருகிடுச்சி. இத நம்பி  கடன் வாங்கியாச்சி. அரசு சலுகை எதுவும் தரது இல்ல. கேட்டா சிறு விவசாயிங்களுக்கு இல்லன்னு சொல்றாங்க.

நாங்க  சம்பா மட்டும் தான் பயிர் செய்வோம். குறுவை, தாளடி எல்லாம் கிடையாது. மற்ற நேரம் கட்டிட வேலைக்கு, உப்பளத்துக்கு தான் வேலைக்கு போவோம்.

இப்ப யாருக்குமே வேலை இல்லை. என்ன பண்றது. இதே மாதிரி நெலமை இருந்தா ஊரை விட்டு தான் போகணும். கூலி வேலையும் இல்லை. சம்பாவும் கை வுட்டுடுச்சி என்றார் வேதனையுடன் கூறுகிறார் வேதியன் மகன்.

சாம்பல் ஆறு, மனங்கொண்டாறு இரண்டு ஆத்துலயும் தடுப்பணை கட்ட பலமுறை மனு கொடுத்துட்டோம். இந்த அதிகாரிங்க கண்டுக்கவே இல்ல. இத செஞ்சு கொடுத்திருந்தாங்கன்னா இந்த இழப்பு வந்திருக்காது.

எத்தனை முறை அதிகாரிங்களை சந்திச்சி மனு கொடுத்திங்கன்னு கேட்டோம்.

25 வருசமா மனு கொடுக்குறோம். எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

ஏறக்குறைய  நாங்கள் சந்தித்த விவசாயிகள் அனைவரும் விவரமானவர்கள். விவசாயத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள் தான். எல்லோருக்கும் பொதுவான பிரச்சனை கடன். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவது, அந்த கடனை அடைக்க முடியாமல் மேலும் கடன் வாங்கி  பயிர் செய்வது  என்ற சுழற்சி முறையில் தான் தங்களது வாழ்கையை  கழித்திருக்கிறார்கள்.

ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் கூறுவது போல் “வறட்சி” என்ற காரணம் மட்டும் விவசாயிகளுக்கு பிரச்சனை இல்லை. இது முற்றிலும் பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக எழுதுவது. கடைந்தெடுத்த பொய்.

நெல்லிற்கு தகுந்த விலையை அரசு கொடுக்கவில்லை, உரங்களின் விலையேற்றம், மின்வசதி இல்லை. தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு சென்ற ஆண்டு நெல்லை விவசாயிகளிடம் இருந்து பெற்றார்கள். அன்று முதலே கடனில் தத்தளித்திருக்கிரார்கள்.

இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கும்   வெள்ளந்தியான விவசாயிகளை ஏமாற்றியது யார்? இயற்கையா? அரசா?

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

சுரங்கத்திலிருந்து ஒரு குரல்

0

சந்திரனில்
உயிர் வாழ முடியுமா? – என
ஆராய்ச்சியின் உச்சத்தில்
திளைப்பவர்களே,
உங்கள் காலுக்கடியில்
சில உயிர்கள் தவிப்பதை
உணர முடிந்திருக்கிறதா
உங்களால் !

மூலதனத்தின் பெருங்குடல்
மனிதர்களை செரிக்கும்
லாபப் பசியெடுத்தவர்களின்
கரங்கள் ஆட்டுவிக்கும்
அந்த இடங்களுக்குப் பெயர்
சுரங்கங்கள்.

minerஅங்கே…
விழிகள்  எங்களுக்கானதாக
இல்லை,
நெற்றிக்கண் வெளிச்சத்தில்
முதலாளிகளுக்கான
தாதுக்களை குவிக்கும்
தசைச் சுரங்கங்களாக
அதுவும்
அவர்கள் கையில்.

உழைத்துக் கொடுப்பதற்காக
மட்டுமே
எங்கள் உடலில்
ரத்தம் ஓட அனுமதிக்கப்படுகிறது,
ஒரு மனிதனாக
உணரத் தலைப்பட்டால்
உயிர் தடை படுகிறது.

பிழியப்படும் உழைப்பில்
தாயின் மார்பிலும்
தாது வடிகிறது.
சுரங்க வாழ்வின் இருளோ
எம் பிள்ளைகளின்
தாய்ப்பால் வரை நீள்கிறது.

சிதைக்கப்படும்
பூமியின் அலறலை
எதிரொலிக்கிறார்கள்
எங்கள் குழந்தைகள்

அறுக்கப்படும்
இயற்கையின் மார்பை
வலியோடு சுமக்கிறார்கள்
எங்கள் பெண்கள்.

உலகின்
நிலக்கரி அனைத்தும்
எங்கள் கண்ணீர் பசையால்
இறுகியிருக்கின்றன…

உலகின்
தங்கங்கள்  எல்லாம்
எங்கள் ரத்தத்தால்
ஜொலிக்கின்றன.

நாங்கள்
வெளியே எடுத்துத்தரும்
பொருட்களுக்கு
உள்ள மதிப்பு கூட
உள்ளே இருக்கும்
எங்கள் இதயத்துக்கும்
நுரையீரலுக்கும் இல்லை
உணர்ச்சி
மறுக்கப்பட்ட வாழ்க்கையில்
உருமாறி
அவைகளும் கரியாகிவிட்டன.

வெட்டி முறிக்கும்
முதலாளிகளோ
உலகப் பணக்காரன் வரிசையில்
வெட்டி எடுக்கும்
உழைப்பாளிகளோ
உயிரினங்களிலேயே வறுமையில்.

வேண்டும் ஊதியம்
உழைப்பு நேரம்
உரிய பாதுகாப்பு, இழப்பீடு
உரிமைகள்
எதுவுமற்று
மக்கி மண்ணாகி
மீண்டும்
மூலதனம் வெட்டி எடுத்து
இலாபமீட்டும்
மனிதத் தாதாக
மடிகிறது  வாழ்க்கை.

பூமியின் புதையல்களை
கொள்ளையடிக்கிறார்கள்,
பூமியின் புதல்வர்களை
சாகடிக்கிறார்கள்…

வேறு யாருக்கோ
நடப்பதாய்
விலகி இருக்க முடியுமா
உங்களால் ?

செம்பு
அலுமினியம்
பாக்சைட்
தங்கம்
கரி…  இப்படி
நீங்கள் நேரடியாகவும்
மறைமுகமாகவும்
அனுபவிக்கும் பொருள்
ஒவ்வொன்றிலும்
கலந்திருக்கிறோம் நாங்கள் !

துரை. சண்முகம்

திருவாரூர் ஆர்ப்பாட்டம் – குடும்பத்தோடு வாருங்கள் !

0

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி …

காவிரியை தடுத்த மோடியும், ஆற்றுமணலை கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்.

இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

சோறு திங்கும் அனைவருக்கும் சொந்தமான துக்கம் இது !
உழவு இழவான நாட்டில் பொங்கல் ஒரு கேடா ?
உழவருக்காக பொங்கி எழாவிட்டால் இது உயிருள்ள நாடா ?

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து பாழாய்ப்போன பயிர்களுக்கும், உயிரை பறிகொடுத்த விவசாயிகளுக்கும் வேலையிழந்த கூலி தொழிலாளிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கு !

ஆறு, ஏரி, குளம், கால்வாய்களை, தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடு !

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு !!
விளைபொருளுக்கு விலை சொல்லும் உரிமையை தனியார் பள்ளிகள் போல் விவசாயிகளுக்கு வழங்க சட்டம் இயற்று !

மூடு டாஸ்மாக்கை !

திருவாரூரில் தர்ணா
11-1-2017 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
புதிய ரயில் நிலையம் அருகில்.

அனைவரும் கும்பத்தோடு வாரீர்

pp_6

pp_1 pp_5
pp_4 pp_3
pp_2

ஒருங்கிணைப்பு:
மக்கள் அதிகாரம்

திருவாரூர் நாகை தஞ்சை  மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321

மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு – கேலிச்சித்திரம்

0

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் பருக காத்திருக்கும் கழுகு

meathane-dying-farmers

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்

32

கோட்ஸே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. – ஆர். விஜயசங்கர்

ADVANI_அத்வானி
கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ல் இல்லை என்று அத்வானி சொன்னது பொய் என்கிறார் நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

கோட்சே பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரம்.

மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும், கோபமும், சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைக்கும் தனக்கும் இருந்த தொடர்பை கோட்சே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பாரதிய ஜனதா தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்க தலைவர்களும் கூறி வந்தனர்; கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார்.

அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து கண்டித்தவர் நாதுராம் கோட்சேயின் இளைய சகோதரரான கோபால் கோட்சேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். அவர் எழுதிய ”நான் ஏன் காந்தியைக் கொன்றேன்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்சே தானும் சகோதரன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்ற பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.

அதற்குப் பின் ஜனவரி 1994-ல் “ஃபிரண்ட்லைன்” இதழுக்கு பேட்டியளித்த கோபால் கோட்சே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களாயிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்எஸ்எஸ்-ஸின் பவுதிக் கார்யவாஹ் (கொள்கைப்பரப்பு செயலர்) ஆக இருந்தார். தான் ஆர்.எஸ்.எஸ்-ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்சே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால்கரும் (ஹெட்கேவாருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-ன் இரண்டாவது தலைவராக இருந்தவர்) ஆர்.எஸ்.எஸ்-ஸும் பெரும் பிரச்சினையிலிருந்தனர். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விட்டு விலகவில்லை,”என்றார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் கோட்சேவுக்கு தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானியின் கூற்றை கடுமையாக மறுத்தார் கோபால் கோட்சே. ”அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்று நான் அவரை மறுதலித்து விட்டேன். ஆர்.எஸ்.எஸ். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்சேயை நீங்கள் கழற்றி விடமுடியாது. இந்து மகாசபை அவரைக் கழற்றி விடவில்லை. 1944-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பவுதிக் கார்யாவாஹ் ஆக இருந்த அவர் இந்துமகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.”

பிரபல அமெரிக்க வாரப்பத்திரிக்கையான டைம் இதழுக்கு 2000-ம் ஆண்டில் அளித்த பேட்டியில், கோபால் கோட்சேயிடம் ஏன் காந்தியைக் கொல்ல திட்டமிட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. ”காந்தி ஒரு கபடாதாரி. முஸ்லிம்கள் இந்துக்களை படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மை கொடி.” என்றார்.

GODSE_நீதிமன்றத்தில் கோட்சே
படத்தில் இடமிருந்து வலம்: நாதுராம் கோட்சே, நாராயண் தத்தாத்ராய் ஆப்தே, விஷ்ணு ராமகிருஷ்ணா – காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது. படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

சமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட்டிருப்பவர் சத்யகி சவார்க்கார். இவர் கோபால் கோட்சேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சவார்க்கார் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்தி வந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

தங்கள் குடும்பம் நாதுராமும், கோபாலும் எழுதியவற்றை பராமரித்து வருவதாகவும், நாதுராம் ஆர்.எஸ். எஸ். அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்று உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சவார்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகிறார்.

“நாதுராம் 1932-ல் சாங்லியிலில் இருக்கும்போது ஆர். எஸ். எஸ்-ல் இணைந்தார். இறக்கும் வரை அதன் பவுதிக் கார்யவாஹ் – கொள்கைபரப்பு செயலராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்-ன் தினசரி ஷாகாவுக்கு செல்லும் உறுப்பினர்களின் பெயர்) என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்.எஸ்.எஸ். மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக்கூடாது, என்கிறார் சத்யகி.

இன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு (இவர் தான் பா.ஜ.க-வின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951-ல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்           ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூர சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்கு கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”

GANDHI_காந்தியின் இறுதி ஊர்வலம்
காந்தி இறுதி ஊர்வலத்தில் நேரு மற்றும் பட்டேல். படம் நன்றி : ஃபிரண்ட்லைன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு செப்டம்பர் 11,1948-ல் எழுதிய கடிதம் இப்படிச் சொல்கிறது. “இந்து சமுதாயத்திற்கு ஆர்.எஸ்.எஸ். செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்வித சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர்கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்துவிட்டெரிய முஸ்ஸல்மான்களை தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம். ஆனால் அவர்களின் துன்பங்களுக்கு பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப் படுத்தி ஒன்று திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்கும் விஷத்தைப் பரப்பவேண்டிய அவசியமில்லை. இந்த விஷத்தின் இறுதி விளைவாக காந்திஜியின் உயிர்த்தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்.எஸ்.எஸ். மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளிக் கூட பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப் பின் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.”

அன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங்கபரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம்பரியத்தை தனதாக்கிக் கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாக கோட்சேயின் பாரம்பரியத்தைதான்  பாஜக வரித்துக்கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது.. வரலாற்றையும் மறைக்க முடியாது.

-நன்றி: மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர்

மேலும் படிக்க:

  • RSS & Gandhi’s murder By A.G. NOORANI
    (There is enough historical evidence to nail the RSS’ lie that Nathuram Godse was not a member of that organisation when he assassinated Mahatma Gandhi in 1948.)

டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் – உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்

1

comrades-propaganda-at-tanjoreமிழக வரலாற்றில் இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சம்பவம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி செத்துக்கிடக்கிறார்கள், வயல்வெளிகளில்.டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் என்றுதானில்லை. டெல்டாவில் எங்கு திரும்பினாலும் யாரிடம் பேசினாலும் விவசாயிகளின் மரணங்களும் கருகிய பயிர்களும் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கல்லூரி மாணவனிடம்  “ எப்படி கல்லூரி படிப்பு போகிறது” என பேசினால் கூட விவசாயிகளின் சாவைப்பற்றி பேசுகிறான்.  ஒரு ஓட்டல் உரிமையாளரிடம்  “பொங்கல் எப்படி கொண்டாடப் போறீங்க?” என்று கேட்டால் “தம்பி நீங்க வெளியூரா? விவசாயி சாவுறான் எப்படி பொங்கல் கொண்டாட முடியும்?” என்கிறார்.

comrades-propaganda-at-tanjore1ஒவ்வொரு நாளும் எத்தனை விவசாயிகள் செத்துப் போவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால்  வயல்வெளிக்குச் சென்றாலே தாங்கள் செத்துப்போய் விடுவோம் என்கிறார்கள் விவசாயிகள். ஜெயலலிதா  மறைவை தாங்க முடியாமல் செத்துப்போனார்கள் என்று 3 லட்ச ரூபாய் கொடுத்த அதிமுகவோ விவசாயிகள் சாவை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ஏளனம் செய்கிறது. கரும்பு காய்ந்து போனதை பார்க்க மாட்டாமல் நெஞ்சு வெடித்து செத்துப் போன விவசாயி குடும்பத்துக்கு பொங்கலை முன்னிட்டு 2 அடி கரும்பு கொடுக்கிறோம் என்கிறது தமிழக அரசு. பணமதிப்பிழப்பிற்கு பின்னர் கடன்கூட வாங்க முடியாத நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இத்தனை விவசாயிகளைக் கொன்றது காவிரியைத் தடுத்த மோடி அரசும்  ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக – ராவ் – ரெட்டி கும்பல்தான். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு  செல்கிறது மக்கள் அதிகாரம். இனியும் ஒரு விவசாயி கூட சாகக்கூடாது. பொங்கல் நமக்கு இல்லை. உழவர்கள் சாகும் போது உழவர்திருநாள் எப்படி நடத்த முடியும்? விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஜல்லிக்கட்டின் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பதையும் சசிகலா ஆட்சியைப்பிடிக்க தகிடுதத்தங்கள் ஆடிக்கொண்டிருப்பதையும் மோடியின் உளறல்களையும்  எப்படி சகிக்க முடியும். நமது இதயம் கல்லால் செய்யப்பட்டிருக்கிறதா என்ன?

comrades-propaganda-at-tanjore2விவசாயிகளுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும். அதை முன்வைத்து மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளிகளும் இதோ தஞ்சை டெல்டாவில் விவசாயிகளை சந்திக்கிறார்கள். நம்முடைய வாழ்வை அழித்த இந்த அரசை அழிக்காமல் தீர்வு இல்லை என்பதை முழங்குகிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன  என்று பேசுவோர்களை நீ வயிற்றுக்கு சோற்றை தின்கிறாயா இல்லையா என்று சவுக்கால் அடித்து சொரணையை வரவழைக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் சொல்லுகிறார்கள்   ஆறு  குளங்களைத் தூர்வாராமல் நம் வாழ்வை அழித்த அரசை தூர்வாருவதுதான்  போகி.

சோழநாடு சோறுடைத்தது என்பார்கள் இன்றோ சோழநாடு சுடுகாடாகிவிட்டது. இதைப்பற்றி பேசாமல் இருப்பது அவமானம் மட்டுமல்ல; மனிதனாக வாழ்வதற்கே தகுதியற்றதற்கான அடையாளம். உலகிற்கே சோறு போட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க ஆதரவுக் கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம் என மக்கள் அதிகாரம் தோழர்கள் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள்.

உரிமையோடு அழைக்கிறது மக்கள் அதிகாரம்.

(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

மக்கள் அதிகாரம்
திருவாரூர் நாகை தஞ்சை  மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – திருவாரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !

0
  • நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி ... 
    காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்!
    இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல்செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு!
  • தமிழக விவசாயிகளின் அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்.
  • நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.25,OOO, கரும்பு ஏக்கருக்கு ரூ.5O,OOO, மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கு.
  • வேலையிழந்த விவசாயத் தொழிலாளிக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கு.
  • அதிர்ச்சியாலும் தற்கொலையாலும் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கு. 
  • தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வந்து மீண்டும் விவசாயம் செய்யும் வரை மின் கட்டணம், கல்வி கட்டணம் மற்றும் அனைத்து வரிகளையும் வசூலிப்பதை நிறுத்து.
  • டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்கு ரேசன் கடை மூலம் மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை பொருள்களை இலவசமாக வழங்கு.
  • குடிநீர் பஞ்சம், விவசாயம் அழிவு, விவசாயிகள் மரணம் ஆகியவற்றை பேரிடராக கருதி தமிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களை தூர் வாரி மராமத்து செய்வதை இந்த ஆண்டு முழுவதும் அரசு வேலையாக அறிவித்து பொதுப்பணித்துறையின் கீழ் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கு.
  • விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலையை தீர்மானிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்க சட்டம் இயற்று!
  • தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடு.
  • உடனே டாஸ்மாக்கை மூடு.
farmers
மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரைவிட்ட விவசாயிகள்

தர்ணா
11-1-2017 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
புதிய ரயில் நிலையம் அருகில், திருவாரூர்.

உலகுக்கே சோறுபோட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க, அவர்களுக்கு ஆறுதல் சொல்ல, ஆதரவு கரம் நீட்ட இந்த சமூகம் முன்வருமா ! இந்த அரசு நம்மை காப்பாற்றுமா ? என நம்பிக்கையிழந்து தற்கொலையாலும் அதிர்ச்சியாலும் மரணமடைகிறான் விவசாயி.

நாங்கள் இருக்கிறோம். இந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள், சோறு திங்கும் அனைவருக்கும் சொந்தமான துக்கம் இது. உழவருக்காக பொங்கி எழாவிட்டால் இது உயிருள்ள நாடா? நமக்கு பொங்கல். உழவர் திருநாள் என்பது விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதுதான். இந்த ஆண்டு பொங்கல் அனைவருக்கும் கருப்பு நாள்.

தொடரும் தமிழக விவசாயிகளின் அகால மரணத்திற்கு காரணம் !

  • மத்திய, மாநில அரசுகளின் தனியார்மய – தாராளமயக் கொள்கை
  • காவரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்பட்டது.
  • ஆறு, ஏரி, குளம் தூர் வாராமல் குடி மராமத்தை தமிழக அரசு செய்யாதது.
  • அதிமுக – மன்னார்குடி மாஃபியா கும்பல், ஆற்று மணலை கடந்த பல ஆண்டுகளாக வரைமுறையற்று கொள்ளையடித்தது.
  • ரூ. 500, 1000 செல்லாது என்ற மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு ஆகிய அனைத்தும் விவசாயம் அழிந்து வருவதற்கும் விவசாயிகள் தற்கொலை அதிர்ச்சி மரணத்திற்கும் அடிப்படை காரணம்.
  • மழை பெய்யவில்லை, என்ன செய்ய முடியும்? என்ற வாதம் விஞ்ஞானம் வளர்ந்த 21 ஆம் நூற்றாண்டில் பேசுவது பித்தலாட்டம் மட்டுமல்ல, விவசாயிகளை ஏமாற்றுவது. நிலங்களை பறித்து மீத்தேன் ஷேல் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் சதித்திட்டமும் ஆகும்.
  • மேலும் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் செயலிழந்து மக்களின் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க வக்கில்லாமல் தோல்வி அடைந்ததுடன் மக்களுக்கு எதிர்நிலை சக்தியாகவும் மாறிவிட்டது.

darna(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

ஒருங்கிணைப்பு:
மக்கள் அதிகாரம்
திருவாரூர் நாகை தஞ்சை  மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321

முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்

0

விவசாயத்திற்கு தண்ணீர் வழங்குவேன் – மோடியின் தேர்தல் வாக்குறுதி
modi-cheating-farmer
உங்களுக்கு சொன்னாலும் செய்யமாட்டார். எங்களுக்கு சொல்லாமலே செய்வார். தட் இஸ் மோடி

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

மித்ரோன் மீம்களுக்கு பயப்படும் மோடி !

0

மோடியின் கோணல் அறம் நம்மிலும் பிரதிபலிக்கிறது !

பிரதமர் நரேந்திர மோடியின் 2017 புது வருடப் பிறப்பு உரை, அவருடைய வழக்கமான உரைகளிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகான ஐம்பது நாட்களில் பெருமளவில் கேலிக்குள்ளாக்கப்பட்டு மீம்கள் ஆக்கப்பட்ட ‘மித்ரோன்’ (நண்பர்களே) எனும் வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய உரைகளில் பெருமளவில் உபயோகிக்கப்பட்ட ‘மித்ரோன்’ எனும் வார்த்தை தற்போது, ஏளனச் சிரிப்பை உண்டாக்குகிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

modiபொதுமக்களின் மனநிலை குறித்து நன்கு புரிந்துவைத்திருக்கும் பிரதமர், வங்கி வரிசைகளிலும், பணத் தேவையால் தற்கொலை செய்தும் மரித்த நூற்றுக்கும் மேலான மக்கள் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கக் கூடியது. உயர்மதிப்பு பணத் தாள்களை தடை செய்ததால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறை காரணமாக வேலையிழந்த, வணிகங்களை இழந்த பலர் குறித்தும் பிரதமர் ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை.

சந்தேகமேயின்றி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் படும் துயர்குறித்து சில வார்த்தைகளை பேசத்தான் செய்தார். இருப்பினும், அத்துயரின் தீவிரத்தைக் குறைக்கும்விதமாக, “இக்காலத்தில், உங்கள் சொந்தப் பணத்தை பெறுவதற்காக, நீங்கள் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டியிருந்தது” – என்பன போன்ற எளிய வரிகளைப் பயன்படுத்தினார். அதாவது, இந்தியர்களுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த துயர், தங்கள் சக்தியையும், நேரத்தையும் செலவழித்து வங்கிக் கணக்குகளை கையாண்டது மட்டும்தான்.

தன் டிசம்பர் 31 உரையில் ‘மித்ரோன்’ எனும் வார்த்தையை பயன்படுத்தாதது, இந்திய மக்கள் படும் துயரின் தீவிரத்தை குறைத்துக் காண்பித்ததன் வழியே மோடியின் மனதை நாம் கொஞ்சம் புரிந்துகொள்ள முடிகிறது. அதிகாரம், அறம் குறித்து அவருடைய எண்ண ஓட்டம் எப்படியிருக்கிறது என்பதைப் படிக்க முடிகிறது.

மித்ரோன் எனும் வார்த்தையை பயன்படுத்தாதன் வழியே, அவர் நகைச்சுவையாக்கப்படுவதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. ‘மித்ரோன்’ மீம்கள், சமூக ஊடகத்துக்கு உட்பட்டவை. அதை உருவாக்குபவர்களால் மோடியை தொடர்புகொள்ள முடியாது என நாம் நினைக்கலாம். ஆனால் மோடி, சமூக ஊடகத்தை தீவிரமாக கருத்தில் கொள்கிறார், அதற்கு கதையை மாற்றி எழுத வல்லமை இருப்பதாக நம்புகிறார். அவர் குறித்த நகைச்சுவைகளை தனிப்பட்டதாக எடுத்துக் கொள்கிறார்.

people-outisde-banks-in-queueபீஹார் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு இருக்கும் துணிச்சல் மோடிக்கு இல்லை. சினிமாக்களிலும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், அவரைப்போல தோன்றும் பஃபூன் பிரதிகள் குறித்து கேட்டதற்கு, “என்னால் அவர்கள் பணம் பார்க்கிறார்கள்” என, லாலுபிரசாத் யாதவ் பதிலளித்தார். லாலு, தான் தானாக இருப்பதில் சௌகர்யமாக இருக்கிறார் என்பதற்கு இது சாட்சி.

இதற்கு நேர்எதிராக மோடி, தன் உரையில் ‘மித்ரோன்’ எனும் வார்த்தையை உபயோகிக்காதது, மக்கள் தன்னை கடுமையானவராக கருத வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அவரைப் பார்த்து சிரிப்பதனால் – மதிக்கப்பட வேண்டிய, அஞ்சப்பட வேண்டிய ஒரு தலைவர் எனும் அவருடைய பிம்பம் உடைவதாக அவர் நினைக்கிறார். ஜவஹர்லால் நேரு சங்கரிடம் கேட்டதுபோல, மோடி ஒரு கார்டூனிஸ்ட்டிடம் தன்னை விமர்சித்து வரையக் கேட்க வாய்ப்பேயில்லை.

மோடி, சுயபிம்பம் குறித்து உணர்ச்சிவசப்படுகிறவராக இருப்பதன் காரணமாகவே, தன் கொள்கைகளின் பாதக விளைவுகளை ஏற்றுக் கொள்வதில்லை. அங்கேதான் அவருடைய விமர்சகர்கள் வலிமையடைகிறார்கள் என அவர் நினைக்கிறார். உதாரணமாக, தன் உரையில் “இந்தியர்கள், மக்கள் அதிகாரத்தின் வலிமையையும் தீவிர ஒழுக்கத்தையும் புயல்போல தவறான தகவல்கள் வெளியான வேளையிலும் உண்மையைக் கண்டறியும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார். குறிப்பிடப்படும் புயல், அவருடைய அரசியல் போட்டியாளர்களாலும் விமர்சகர்களாலுமே கிளப்பிவிடப்பட்டதாக இருக்க வாய்ப்புண்டு.

அவர்களின் வாயை அடைக்கவும், தவறான தகவல்கள் மக்களை அசைக்கக் கூடாது எனும் நோக்கிலும், மோடி அடிக்கடி தேசப்பற்று உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார். கருப்புப் பணத்தின் மீதான போரை, இந்தியா வெளியிலிருந்து தாக்குதல்களைச் சந்தித்த 1962, 1965, 1971 ஆண்டு, கார்கில் போருடன் ஒப்பிட்டுப் பேசினார். அப்போது, குடிமக்களின் ஒருமித்த வலிமை வெளிக்காட்டப்பட்டது என்றும் கூறினார். மேலும், “வெளியிலிருந்து அச்சுறுத்தல்களை சந்திக்கும்போது, இப்படியான ஒருமித்த ஆற்றலும் தேசப்பற்றும் வெளிப்படுவதை புரிந்துகொள்ளலாம். இருப்பினும், உள்ளிருக்கும் தீமைகளுக்கு எதிராகப் போராட இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றுபடும்போது, அதற்கு ஈடு இணை வேறெதுவுமே கிடையாது” என்றும் அவர் கூறினார்.

நாம் போரை நினைவுகூரும்போது, வழக்கமாக, போர்க்களத்தில் இறந்தவர்கள் குறித்து நினைப்போம். பணமதிப்பு நீக்கம், கருப்புப் பணத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர் எனில், முதல் இரண்டு நாட்களில் உயிரிழந்தவர்கள்தான் வீரத் தியாகிகள். ஆனால் மோடி, அவர்கள் குறித்து பேச மறுத்திருக்கிறார்.

வெளியிலிருந்து ஒரு தேசம் தாக்கப்படும்போது, அதை எதிர்கொண்டு, தவிர்க்க முடியாமல் சில உயிர்களை தியாகம் செய்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஆனால் இந்த தவிர்க்கமுடியாத மரணங்கள், “நாட்டுக்குள்ளிருக்கும் தீமைகளை” குறிப்பாக, கருப்புப் பணத்தை எதிர்த்த காரணத்தால் நிகழ்ந்தவை கிடையாது.

கருப்புப் பணத்துக்கு எதிரான போரில், தவிர்க்கமுடியாத மரணங்கள் நிகழ்வதனால், அவை குறித்து வருத்தம் தெரிவித்தால்கூட, மோடி தன் தவறுகளை மௌனமாக ஏற்றுக்கொள்கிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானது அல்லது மிக மோசமாக அமல்படுத்தப்பட்டது என அர்த்தம் வந்துவிடும். இதனால், மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்.

ஆனால் மன்னிப்புக் கேட்டால், தான் தொலைநோக்குப் பார்வை இல்லாதவர், நம்பத் தகுதியானவர் அல்ல என, அவர் ஏற்றுக்கொண்டதைப் போலாகிவிடுமே. தலைவன் என்பவனுக்கு என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றில் ஒரு சந்தேகமும் இருக்கக்கூடாது. அதற்காகவே அவன் போற்றப்படுகிறான். மோடி, தான் மிகச்சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைவர் எனும் பிம்பத்தைக் கட்டமைத்து – அதை வெற்றிகரமாக 2014 மக்களவை தேர்தல்களில் மக்களிடம் விற்றிருக்கிறார்.

தான் முதலமைச்சராக இருந்தபோது, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமிய எதிர்ப்பு கலகங்களுக்காக அவர் மன்னிப்பு கேட்காததற்கும் இதேதான் காரணம். கலகங்கள் குறித்த மௌனத்தை தகர்க்க நினைத்தபோதும்கூட, 2014 மக்களவை தேர்தல்களுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில், செய்தி ஏஜென்சி ஒன்றிடம், “வேறு ஒருவர் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். நாம் பின்னே அமர்ந்திருக்கிறோம். அப்போது, ஒரு நாய்க்குட்டி சக்கரத்தில் வந்து விழுந்தால், நமக்கு வேதனையாக இருக்குமல்லவா? நான் ஒரு முதலமைச்சரோ, இல்லையோ! நான் ஒரு மனிதன். எங்கேயாவது, ஏதாவது மோசமாக நடந்தால் நான் கவலைப்படுவது இயல்பானது” என்றுதான் கூறினார். ஆனால் அவர் வருத்தம் தெரிவித்ததனால், அவர் குஜராத் கலகத்தை கட்டுப்படுத்தாததற்கு பொறுப்பேற்றார் என்று அர்த்தம் கிடையாது.

2015ஆம் ஆண்டு, உத்திரப்பிரதேசம், தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதற்காக கொலை செய்யப்பட்ட மொஹமத் அக்லக்கை எடுத்துக் கொள்ளுங்கள். சில வார காலம் மௌனமாக இருந்த மோடி, ஆனந்த்பஸார் பத்ரிகா தினசரியிடம், “தாத்ரி போன்ற சம்பவங்கள் உண்மையில் துயரகரமானவை. ஆனால் மத்திய அரசுக்கு அதில் என்ன பங்கு இருக்கிறது” என்றுதான் தெரிவித்தார்.

ஆமாம். தாத்ரி சம்பவத்துக்காக முழுமையாக மோடி அரசை குற்றம்சொல்ல முடியாது. ஆனால் மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா அரசியல்தான், கும்பல் வன்முறைக்குப் பின்புலமாக இருந்தது. தன் சொந்த கட்சிக்காரர்களை வேற்றுப்படுத்தி விடுவோமா எனும் பயத்தில், பிரதமர் இந்துத்வா வெறியர்களை கண்டிக்காமல் இருந்திருக்கலாம்.

ஊனா எச்சரிக்கை

இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக ஊனாவில் தலித்துகள் தாக்கப்பட்டபோது, மோடி நேரடியாக களத்தில் இறங்கினார். “உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், உங்களுக்கு யாரையாவது தாக்க வேண்டும்போல இருந்தால் என்னை அடியுங்கள், என் தலித் சகோதரர்களை அல்ல” என கோஷமிட்டர். “உங்களுக்கு யாரையாவது சுட வேண்டும் என்றால், என்னைச் சுடுங்கள், என் தலித் சகோதரர்களை அல்ல” என முழங்கினார். மேலும் ஒருபடி மேலே சென்று, “போலி பசு ரட்சகர்கள் குறித்து கவனமாக இருங்கள். அவர்களுக்கும் பசுக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அரசு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இது நிச்சயமாக, பசு ரட்சகர்கள் மீதான மேலோட்டமான விமர்சனம்தான். அவர்களில் பெரும்பாலானோர், மோடியின் பாரதிய ஜனதா கட்சி இருக்கும், இந்துத்வா அமைப்புகளின் குடும்பமான சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள். அப்போதுவரை தங்கள் இலக்காக இஸ்லாமியர்களை வைத்திருந்த பசு ரட்சகர்களைக் கண்டிக்க, அவர்கள் தலித்துகளைத் தாக்கும் வரை ஏன் மோடி காத்திருந்தார் என்பது பலரின் கேள்வி.

அதற்கான பதில், எளிது: தான் பிரதமரானது முதலே தன்வசப்படுத்த நினைத்திருந்த தலித்துகளை சமரசப்படுத்த வேண்டும் என மோடி நினைத்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக, இஸ்லாமியர்கள் அவருடைய கட்சிக்கு வாக்களிப்பதில்லை. அதனால், அப்போது அறம்சார்ந்து இயங்க வேண்டிய தேவையை அவர் உணரவில்லை. மோடியின் அற உலகம், வாக்குகளை பெறுவதற்கும் அதிகாரம் பெறுவதற்கும் உகந்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொருத்து, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.

அதைவிட மோசமானது, இப்படியான அற உலகை நாம் தழுவியிருப்பது. உதாரணமாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மோடிக்கு தேர்தல் ரீதியாக வெற்றி கிடைக்குமா என ஊடகத்தில் பெரும் விவாதங்கள் நடந்தபடி இருக்கின்றன. மோடியின் வெற்றி என்பது, கடந்த 50 நாட்களில் நிகழ்ந்த மரணங்கள், இழந்த வேலைகள், மூடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றிவிடும்போல் இருக்கிறது. மோடியின் கோணல் அறம், நம்மிலும் பிரதிபலிக்கிறது.

அஜாஸ் அஷ்ரஃப்

நன்றி: மின்னம்பலம் (தமிழாக்கம்), scroll.in மூலக்கட்டுரை

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !

4
PTI3_31_2012_000062B
ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ. -2 வான சசிகலா, அதிமுக-வின் பொதுச்செயலர் ஆகி விட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளி மா.மி இ.தெ பு.த ஜெயலலிதா, 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டு விட்டார். ஏ-1 சந்தனப்பேழையில் உறங்கும் நிலையில் ஏ. -2 வான சசிகலா, அதிமுக-வின் பொதுச்செயலர் ஆகி விட்டார். ஏ-3 யான இளவரசிக்கும் “சின்ன சின்னம்மா” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவிட்டன. ஏ-4 ஆன அம்மாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஏற்கனவே சின்ன எம்ஜியார் என்பதால் அவரைப் பற்றித் தனியே சொல்ல வேண்டியதில்லை.

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், 1996 ஜுலையில், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளான வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொமு ஆகிய அமைப்புகள் நடத்திய “விநோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டம்” இப்போது நினைவுக்கு வருகிறது. 1996 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ஊழல் வழக்கு பதிவு செய்து ஜெயலலிதாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாகக் கூறியது. ஜெயா சசி கும்பலை தண்டிப்பதோ அவர்களுடைய திருட்டுச் சொத்துக்களை பறிமுதல் செய்வதோ, சட்டபூர்வமான வழியில் சாத்தியமில்லை என்ற அரசியல் உண்மையை எடுத்துக் காட்டியது அந்தப் போராட்டம்.

அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும்  ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம். கள்ளச் சாராயப் பேர்வழிகள், ஒயின்ஷாப் ஓனர்கள், கந்து வட்டிக்காரர்கள், லாட்டரி சீட்டு வியாபாரிகள், கட்டைப் பஞ்சாயத்து ரவுடிகள் உள்ளிட்ட ஒரு கூட்டம் திபுதிபுவென்று அரசியலில் நுழையத் தொடங்கியிருந்த காலம் அது. ஒவ்வொரு ஊரிலும் ஓட்டுக்கட்சிகளில் இருந்த இத்தகைய நபர்களை பெயர் சொல்லி அடையாளப்படுத்தி, அவர்களுடைய மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்ட இயக்கத்தின் தொடர்ச்சியாக அமைந்ததே அந்தப் போராட்டம்.

இன்று “சிங்கப்பூருக்கு அருகில் தீவு வாங்கியிருக்கிறார், இந்தோனேசியாவில சுரங்கம் வாங்கியிருக்கிறார், துபாயில் வணிக வளாகம் வாங்கியிருக்கிறார்” என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களே, அந்த நத்தம் விசுவநாதன் முதல் புதுக்கோட்டை ராமச்சந்திரன் வரையிலானோர் அன்றைய ஒயின் ஷாப் ஓனர்கள் அல்லது கள்ளச் சாராய வியாபாரிகளே. இப்படிப்பட்ட கொள்ளைக் கூட்டத்தையே ஒரு கட்சி என்ற பெயரில் நடத்திக் காட்டிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

admk-1212-600-15-1481775039
அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் ஓட்டுக்கட்சிகளில் செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்த புதிய வகை கிரிமினல் கும்பல்களை, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் – என்று அடையாளப்படுத்தியிருந்தோம்.

இதன் விளைவாகத்தான், 1991 முதல் 1996 வரையிலான முதல் தவணை ஆட்சியில் ஜெயா – சசி கும்பலும், அமைச்சர்களும் ஆடிய ஆட்டத்தைக் கண்டு ஆத்திரமுற்ற மக்கள், ஜெயலலிதாவை பர்கூர் தொகுதியில் தோற்கடித்தனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அவரது அமைச்சர்களை ஊருக்குள்ளேயே நுழைய விடாமல் அடித்து விரட்டினர். வேறு வழியின்றி, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றி, வளர்ப்பு மகனை தகுதி நீக்கம் செய்து தன்னை உத்தமியாக காட்டிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெயலலிதா. இது இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.

இன்று, சேகர் ரெட்டியிடம் தங்க கட்டிகளும் 2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளும் கைப்பற்றப்படுகின்றன. தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடக்கிறது. முதலமைச்சரான பன்னீர், சேகர் ரெட்டியுடன் திருப்பதியில் மொட்டை போட்ட புகைப்படம் வெளியாகிறது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி ஒரு மொட்டைத் தமிழர் கூட்டம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியேறி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்திறங்கி, சின்னம்மா வாழ்க என்று ஜெயா டிவி காமெராவின் முன் டான்ஸ் ஆடிவிட்டு, டாஸ்மாக் பாரில் இளைப்பாறுகிறது. இருபது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தையும் அரசியலையும் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் இதுதான்.

000

நாடாளுமன்ற அரசியல் சீரழிவின் வரைவிலக்கணமாக இருபது ஆண்டுகளுக்கு முன் இனங்காணப்பட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்கள்  ஆகிவிட்டார்கள். அதாவது இந்த அரசமைப்பின் “கற்பை” அழிப்பவர்களாக அன்று அடையாளம் காணப்பட்டவர்கள்தான் இன்று அதன் சட்டபூர்வமான கணவன்மார்கள்.

“ராம மோகன ராவ் ஊழல் தடுப்புத்துறையின் கண்காணிப்பு ஆணையராக என்ன தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்?” என்று பத்திரிகைகள் இன்று அதிசயித்துக் கொள்கின்றன. “81 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்” என்று, 2010 ஆம் ஆண்டிலேயே, அன்றைய ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநரான உமாசங்கரால் குற்றம் சாட்டப்பட்டவர் ராம மோகன ராவ். ஒரு தேர்ந்த ஊழல் பேர்வழியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்ததன் மூலம் “நேர்மை” என்ற விழுமியத்தையே எள்ளி நகையாடியவர் ஜெயலலிதா.

Slider
ஒரு தேர்ந்த ஊழல் பேர்வழியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்ததன் மூலம் “நேர்மை” என்ற விழுமியத்தையே எள்ளி நகையாடியவர் ஜெயலலிதா.

இது ஜெயலலிதா என்ற வக்கிரமான ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல; இந்த அரசின் கட்டுமான உறுப்புகளே எப்படி வக்கரித்துப்போய் தமது எதிர்நிலை சக்திகளாக மாறி நிற்கின்றன என்ற உண்மையைப் புரிந்து கொள்வதற்கான எளிய சான்றும் கூட. சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கானவை என்று கூறப்படும் எல்லா விதமான அதிகார அமைப்புகளிலும் குற்றவாளிகள்தான் கோலோச்சுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் சான்று இது.

ராம் மோகன் ராவின் கீழ் துறைச்செயலாளர்களாகவும், மாவட்ட ஆட்சியர்களாகவும் பணியாற்றிய கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகளும், கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம், ஹவாலா, சிட்பண்டு மோசடி உள்ளிட்ட எல்லா வகை கிரிமினல் நடவடிக்கைகளையம் ஒருங்கிணைத்து நடத்திய போலீசு துறையும், குமாரசாமி, தத்து, சதாசிவம் போன்றோரடங்கிய  நீதித்துறையும், ஆற்று மணற்கொள்ளையை ஒருங்கிணைத்த பொதுப்பணித்துறையும், துணை வேந்தர் பதவிகளை ஏலம் விட்ட கல்வித்துறையும் அடங்கியதுதான் இந்த அரசமைப்பு. இதனை நிரூபிக்கின்ற உண்மைகள் அன்றாடம் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இருந்த போதிலும் இந்த அரசமைப்பை சீர்திருத்திவிட முடியும் என்ற சட்டவாத மாயையில் படுத்து சுகம் காண்பவர்களை எந்த உண்மையாலும் எழுப்ப முடிவதில்லை.

“சொத்துக் குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்து விட்டதால், மற்ற மூன்று குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா?” என்று கேள்வியை ஊடகங்கள் கிளப்புகின்றன. “முதல் குற்றவாளி இறந்து விட்டாலும், கூட்டுக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது” என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பை ஆதாரமாக காட்டுகிறார்கள் சட்ட வல்லுநர்கள். சசிகலா தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு சட்ட வல்லுநர்கள் எதை ஆதாரமாக காட்டுகிறார்களோ, அதே ஆதாரத்தின் அடிப்படையில் சசிகலாவை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்கிறார்கள் அதிமுக அடிமைகள்.

“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார், அ.தி.மு.க வும் இருந்திருக்காது” என்று வெளிப்படையாக பொதுக்குழுவில் பேசியிருக்கிறார் வளர்மதி. “விசுவாசமான கூட்டுக் குற்றவாளி” என்பதுதான், இன்று அம்மாவுக்கு அடுத்தபடி முதல்வராவதற்கு சசிகலா பெற்றிருக்கும் முதன்மையான தகுதி.

Vituthalai
“தங்களிடமிருந்து திருடப்பட்ட சொத்து, திருடியின் மருமகளுக்கு சேருவது நியாயமா, திருடியின் தோழிக்கு சேருவது நியாயமா?” என்று டீக்கடை பெஞ்சுகளில் விவாதம் நடத்துகிறார்கள் தமிழர்கள்.

ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக. உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக பொதுக்குழு சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது. குற்றம் பதவிக்கான தகுதியாகிவிட்டது. போதாக்குறைக்கு பொன்னையன் சசிகலாவின் வாரிசுரிமையை வேறு கோணத்திலிருந்து விளக்குகிறார். தனது ஸ்ரீராம் சிட் பண்டு பணத்திற்கு வாரிசாக சசியைத்தான் அம்மா குறிப்பிட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டி, தனக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் சசிகலாதான் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார். முதல்வர் பதவியை சிட் பண்டு பணத்தோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறாரே, இதைவிடக் கூர்மையாக இந்த அரசியலை யாரேனும் விளக்க இயலுமா?

“பெரியண்ணி ஜானகிக்கு ராமாவரம் தோட்டம், சின்னண்ணிக்கு தமிழகமே போயசு தோட்டம்” என்று 1992 இல் ஒலித்தது ம.க.இ.க வின் இருண்டகாலம் ஒலிப்பேழைப் பாடல். “என்னுடைய அத்தை வளர்த்த கட்சி” என்று உரிமை கொண்டாடுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அத்தை தி.மு.க என்றாலும் அ.தி.மு.க தானே!  “கொடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நியாயமான வாரிசு சசியா தீபாவா?” என்ற பட்டிமன்ற ஆராய்ச்சியைக் கிளப்புகின்றன ஊடகங்கள். “தங்களிடமிருந்து திருடப்பட்ட சொத்து, திருடியின் மருமகளுக்கு சேருவது நியாயமா, திருடியின் தோழிக்கு சேருவது நியாயமா?” என்று டீக்கடை பெஞ்சுகளில் விவாதம் நடத்துகிறார்கள் தமிழர்கள். வடிவேலுவின் தராசுத் திருட்டு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிக்க முடிந்தது. அதைவிடக் கேடுகெட்ட நிலைக்குத் தாழ்ந்து விட்டது தமிழ்ச் சமூகம். சிரிக்கவா முடியும்?

000

ம்மாவின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் நிரப்பப்பட்டு விட்டது. சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றுவிட்டார். தூய வெள்ளை ஆடை தரித்த அட்டைகளின் சட்டைப்பையில் அம்மாவுடன் சின்னம்மாவின் படம். வெள்ளை என்பதும் திருடர்களின் உடையாகிவிட்டது. எவ்வளவு கருப்போ அவ்வளவு வெள்ளை.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நால்வர் குழுவை ஜெ அமைத்திருந்தாலும், பேச்சுவார்த்தையை சசிகலாதான் நடத்துவாராம். ஒரு மூத்த கம்யூனிஸ்டு கட்சி தலைவர் கூறியதாக ஆங்கில இந்து நாளேடு எழுதியிருக்கிறது. அந்த மூத்த தலைவர் தா.பா வா, டி.கே.ரங்கராசனா தெரியவில்லை. ஏன் முக்காடு போட்டுக் கொள்ளவேண்டும்? அடுத்த கூட்டணிக்கு சின்னம்மாவுடன்தானே பேச்சுவார்த்தை! இனி வெட்கப்பட என்ன இருக்கிறது?

jaya1
முதலமைச்சரான பன்னீர், சேகர் ரெட்டியுடன் திருப்பதியில் மொட்டை போட்ட புகைப்படம் வெளியாகிறது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி ஒரு மொட்டைத் தமிழர் கூட்டம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு உரிய தொகையைப் பெற்றுக் கொண்டு, வண்டியேறி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்திறங்கி, சின்னம்மா வாழ்க என்று ஜெயா டிவி காமெராவின் முன் டான்ஸ் ஆடிவிட்டு, டாஸ்மாக் பாரில் இளைப்பாறுகிறது.

அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும். நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறை அமைச்சரின் அன்றாட வசூல் எவ்வளவு, அதில் தோட்டத்துக்கு சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை வேவு பார்த்து சொல்வதற்கு உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்த தெரியும். ஏமாற்றுகின்ற அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பதவியைப் பறிப்பதற்கும் தெரியும்.

சாதிக்காரர்களை நியமித்து போலீசு துறையை கட்டுப்படுத்துவது எப்படி, மற்ற ஆதிக்க சாதி அமைச்சர்கள் அதிகாரிகளை கண்காணிப்பது எப்படி, சமாளிப்பது எப்படி, மற்ற கட்சிகளில் கைக்கூலிகளை உருவாக்குவது எப்படி என்பது உள்ளிட்ட நிர்வாகக் கலைகள் தெரியும்.  தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதல் நீதியரசர்கள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கும் வழிமுறைகள் தெரியும். ஒரு கிரிமினல் மஃபியாக் கும்பலின் தலைவிக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரியும்.

வழக்கமாக, ஒரு கிரிமினல் மஃபியா கும்பல் என்பது, கொலை, கொள்ளை, போதை மருந்து வியாபாரம், கட்டைப் பஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களை செய்வதற்கான சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் ஒரு வலைப்பின்னலாக உருவாக்கிப் பராமரிக்கிறது. ஜெ – சசி கும்பலோ, அரசு எந்திரத்தையே அத்தகைய மஃபியாவாக மாற்றியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு ராம மோகன் ராவும் பிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் போலீசு அதிகாரிகளும் துணைவேந்தர்களும் காட்டும் விசுவாசம் என்பது கொள்ளையில் அவர்கள் பெறுகின்ற பங்குடன் நேரடித் தொடர்புள்ளது.

ஷீலா பாலகிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற அதிகாரியை ஆலோசகர் என்ற சட்டவிரோதப் பதவியில் ஜெ வைத்துக் கொண்டிருந்ததற்கும், ராம மோகன ராவுக்கு முறைகேடாகப் பதவி உயர்வளித்து தலைமைச் செயலர் ஆக்கியதற்கும், இன்று சசிகலா முதல்வராக வேண்டுமென்று வெளிப்படையாகவே துணைவேந்தர்கள் காவடி எடுப்பதற்கும் இதுதான் காரணம்.

000

jaya2
பாப்பாத்தி ஜெயாவை காப்பாத்தி விடுவதற்குத்தான் வாஜ்பாயி முதல் மோடி வரை அனைவரும் முயன்றார்கள்.

ற்று மணல் கொள்ளை பற்றி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறும் விவரங்களைப் பாருங்கள். 2003-04 ஆம் ஆண்டில் 3639 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய் 2013-14 இல் 23,401 கோடியாக அதிகரித்துள்ளது என்றும், அதே நேரத்தில் 2003-04 இல் 150 கோடியாக இருந்த மணல் வருவாய் 2013-14 இல் 133.37 கோடியாக குறைந்துள்ளது என்றும் எடுத்துக்காட்டுகிறார் ராமதாஸ். நாளொன்றுக்கு 8300 லாரி மணல்தான் விற்கப்படுவதாக அரசு கணக்கு. உண்மையில் ஒரு லட்சம்  லாரி மணல் அள்ளப்படுகிறது என்றும், கடந்த 13 ஆண்டுகளில் 4.75 லட்சம் கோடி ரூபாய் இதில் வருமானம் கிடைத்துள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார் ராமதாஸ். ஆற்று மணலை அரசாங்கமே விற்கலாம் என்று ஆலோசனையைச் சொன்னவர் ராம மோகனராவ். அமல் படுத்தியவர்கள் ஆறுமுகசாமி, படிக்காசு, சேகர் ரெட்டி, புதுக்கோட்டை ராமச்சந்திரன், பன்னீரின் பினாமி பாஸ்கர் என்ற பெரியதொரு கூட்டம்.

தமிழகத்திலுள்ள சாராய ஆலைகளிலிருந்து மாதத்திற்கு 80 லட்சம் பெட்டிகள் சாராயமும்,  ஒரு கோடி பீர் பாட்டில்களும் கொள்முதல் செய்யப்படுவதாகவும், சாராயப் பெட்டிக்கு 60 ரூபாயும்,  பீர் பெட்டிக்கு 35 ரூபாயும் பிரிமியர்  சாராயத்துக்கு பெட்டி ஒன்றுக்கு 10 ரூபாயும் கமிசன் என்றும் கணக்கு சொல்கிறது நக்கீரன். இதில், போயசுக்கு 60 % பல்வேறு அதிகாரிகளுக்கு 35% மந்திரிக்கு 5 % பங்கு வைக்கப்படுவதாக கூறுகிறது.

10,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் சேகர் ரெட்டிக்குத் தரப்பட்டிருப்பதாகவும், அதில் 2500 கோடி போயசுக்குத் தரப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது ஜுவி. அரசுப் பயன்பாட்டுக்கான மென்பொருட்கள், இலவச லேப்டாப், மருத்துவ மனை உள்ளிட்ட இடங்களின் கான்டிராக்ட் ஊழியர் பணிகள் அனைத்தும் ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு தரப்பட்டிருக்கின்றன.

இன்றைக்கு சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராம மோகன ராவ், விவேக், ரோசய்யா, வெங்கய்யா நாயுடு ஆகியவர்கள் தெரிகிறார்கள்.  இதற்கு முன்னர் சாராய முதலை சுப்பிராமி ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், விஜய் மல்லையா போன்றோருடன் ஜெ சசி கும்பல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது. கோவை கன்டெயினர் உள்ளிட்ட கள்ளப்பணங்களைத் தற்காலிகமாகப் பதுக்கி வைப்பதற்கான இடமாக ஆந்திரமும் தெலுங்கானாவும்தான் ஜெ வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. செல்லாத நோட்டை மாற்றுவதற்கு திருப்பதி உண்டியலை சேகர் ரெட்டி பயன்படுத்தியிருப்பதால், இவர்களுக்கு ஏழுமலையானின் ஆசியும் உண்டு என்று தெரியவருகிறது.

இன்றைக்கு சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, ராம மோகன ராவ், விவேக், ரோசய்யா, வெங்கய்யா நாயுடு ஆகியவர்கள் தெரிகிறார்கள். இதற்கு முன்னர் சாராய முதலை சுப்பிராமி ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், விஜய் மல்லையா போன்றோருடன் ஜெ சசி கும்பல் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது.

பரஸ்மால் லோதா என்ற கல்கத்தா மார்வாடியின் மூலம் துபாயில் ஒரு வணிக வளாகம், இந்தோனேசியாவில் சுரங்கம், தாய்லாந்தில் தனித்தீவு உள்ளிட்ட சுமார் 30,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை நத்தம் விசுவநாதன் மட்டுமே வாங்க முடிந்திருக்கிறது என்றால் மன்னார்குடி மஃபியா அடித்திருக்கக்கூடிய கொள்ளையின் அளவை கற்பனையும் செய்து பார்க்க இயலவில்லை.

“ஜெயா ஆட்சியில் ஊழல் நடந்தது” என்று கூறுவது தவறு. பொதுச்சொத்தையும் கருவூலத்தையும் கொள்ளையிடுவதற்காகத்தான் ஆட்சியே நடந்தது. லேப் டாப் முதடல் சத்துணவு வரையிலான அனைத்தும் இந்தக் கும்பலின் கொள்ளையை மையப்படுத்தியே திட்டமிடப்பட்டன.

சேகர் ரெட்டி மூலம் ஒரு வேட்பாளருக்கு 4 கோடி ரூபாய் வீதம் 197 வேட்பாளர்களுக்கு கடந்த தேர்தலில் பணம் விநியோகிக்கப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் ராமதாஸ். இது மிகவும் குறைவான மதிப்பீடு என்பதுதான் சென்ற சட்டமன்றத்தேர்தல் காட்டும் உண்மை. இருந்த போதிலும், கரூர் அன்புநாதன் சுதந்திரமாகத் திரிகிறான். கோவை கன்டெயினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. சேகர் ரெட்டிக்கும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வருமான வரித்துறை சோதனைகள் எனப்படுபவை என்றைக்குமே வசூலுக்காக நடத்தப்படும் நாடகங்கள்தான்.

இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதாக காட்டுவதற்கு மோடி நடத்தி வரும் நாடகத்தில் இது இன்னுமொரு காட்சி.  திருடனிடம் பிடுங்கித் தின்னும் கிரைம் பிராஞ்சு போலீசைப் போல, இவர்களிடமிருந்து முடிந்த வரை கறப்பதற்கு நடத்தப்படும் வேட்டை. இது மோடிக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது கன்டெயினர்.

anna-square
தமிழகத்தின் முகத்தின் மீது நெளிந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.

மற்றபடி பாப்பாத்தி ஜெயாவை காப்பாத்தி விடுவதற்குத்தான் வாஜ்பாயி முதல் மோடி வரை அனைவரும் முயன்றார்கள். வாஜ்பாயி காலத்தில் தம்பிதுரையை மத்திய சட்ட அமைச்சராக நியமித்தது முதல் மோடி ஆட்சியில் வருமானவரித்துறை வழக்கிலிருந்து ஜெயாவை விடுவித்தது வரை இதற்கு சான்றுகள் பல. நாலும் மூணும் எட்டு என்று குமாரசாமி அளித்த தீர்ப்பை பாஜக வினர் கொண்டாடியதையும், தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக ஜெயா இருந்தபோதே போயசு தோட்டத்துக்கு நிதியமைச்சர் விஜயம் செய்ததையும் நாடறியும். திராவிட இயக்கத்தை உள்ளிருந்து அழித்த தன்னுடைய இயற்கையான கூட்டாளியான ஜெயலலிதாவின் செயற்கரிய சாதனையை பார்ப்பன பாசிசக் கும்பல் ஒருபோதும் மறந்து விடாது.

“சுயமரியாதையும் கவுரவமும் இழந்த கையேந்திகளாகவும் அடிமைகளாகவும் தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிப்பது என்கிற பார்ப்பனப் பாசிசக் கும்பலின் கனவுத் திட்டத்தையே, தனது தனிப்பட்ட இலட்சியமாகக் கொண்டிருக்கும் ஒரு சதிகாரியின் பிடியில் சிக்கியிருக்கிறது தமிழகம். ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர்க் கொள்ளை, ரியல் எஸ்டேட் என்று இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் கிரிமினல் கும்பல்கள், அதிகார வர்க்க கிரிமினல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தரகுக் கும்பல்கள் தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருக்கின்றன. பிழைப்புவாத அடிமைகளின் கும்பலாகத் தோன்றிய அ.தி.மு.க. என்ற கட்சியோ, மேற்சொன்ன தொழில்கள் அனைத்திலும் ஊடுருவியிருக்கும் தொழில்முறை கிரிமினல் மாஃபியாவாக வளர்ந்திருக்கிறது”

என்று நவம்பர் 2014 இல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது மஃபியாவின் தலைமைப் பதவியை உடன்பிறவா சகோதரி கைப்பற்றியிருக்கிறார். கொள்ளைக் கூட்டத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக அதிமுக கும்பல் தமக்குள் மோதிக் கொண்டு அழியவும் கூடும். அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. தமிழகத்தின் முகத்தின் மீது நெளிந்து கொண்டிருக்கும் அதிமுக என்ற விஷப்பூரானை நம் சொந்தக் கரங்களால் நசுக்கி அழிப்பதொன்றுதான், தமிழகம் பிழைப்பதற்கு வழி.

  • சூரியன்,
    புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

கூகிளின் NO 1 ஆபாசம் : மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !

3

sasi admk“மன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது. முதலமைச்சரும் இன்னபிற அதிமுக தலைவர்களும் பொதுக்குழுவின் வேண்டுகோள் கடிதத்தை சின்னம்மாவிடம் வைத்து கெஞ்சியதையும், வேறு வழியில்லாமல் தலைமைப் பதவியை சுமக்க சின்னம்மா ஒப்புக்கொண்டதையும் தொலைக்காட்சிகள் வாயிலாக சின்னம்மாவே ஒளிபரப்பக் கண்டோம். இதை விஞ்சுகின்ற ஒரு  ஆபாசக் காட்சியை கூகிளில் உலகம் முழுக்க வலைவீசித் தேடினாலும் யாராலும் கண்டு பிடிக்கவியலாது.

தனக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுமாறு புரட்சித்தலைவர் தன்னிடம் ரகசியமாக சத்தியம் செய்து வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருப்பதாகவும் தனது வாரிசுரிமைக்கு ஆதாரம் காட்டி வாதாட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை அம்மாவுக்கு இருந்தது.

அத்தகைய நிலைமை சின்னம்மாவுக்கு இல்லை.  அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி அவர்தான் என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை. அந்த உண்மையைத் தமிழக மக்களுக்குப் புரிய வைக்கும் பொருட்டுத்தான், மேற்படி ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலை சின்னம்மாவுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

“தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் பெரியாரை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிப்பதற்கும்” சின்னம்மாவே முதல்வர் பதவியிலும் உடனே அமர வேண்டுமென்று கோரினார் தம்பிதுரை.

sasi-revised-postஇதைவிடக் கேவலமான சொற்களால் தமிழ் மக்களை யாரும் அவமதிக்க முடியாது. இருந்த போதிலும், “துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்படி சொற்களை தம்பிதுரை உதிர்த்திருப்பாராயின் அரசமைப்புச் சட்டம் அவமானத்திலிருந்து தப்பியிருக்குமே” என்று அரசமைப்பு சட்டத்தின் மாண்பு பற்றிக் கவலை வெளியிட்டார் ஸ்டாலின். “வீழ்வது தமிழனாக இருந்தாலும் வாழ்வது அரசியல் சட்டமாக இருக்கட்டும்” என்ற உணர்வு போலும்!

000

“அம்மாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ஒரு வார்தா புயல்தான் வரப்போகிறது” என்று வட இந்திய அரசியல் ஞானிகள் கூறிக்கொண்டிருக்க, சங்க பரிவாரத்தினரையே விஞ்சும் ராணுவக் கட்டுப்பாட்டை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அந்த ஞானம் தோற்றுவித்ததுதான் இந்த அதிசயிக்கத்தக்க ஒற்றுமை!

இந்த ஒற்றுமை ஒருபுறமிருக்க, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவிலேயே வெளிவரக்கூடும் என்பதால், முதல்வர் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டியும் அமைச்சர்களிடையே தீவிரமடைந்திருக்கிறது. மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராகப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால், சின்னம்மாவின் நம்பிக்கையைப் பெறுவதற்கான போட்டி நடக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் பன்னீரை அகற்றி சசிகலாவை முதல்வராக அமர வைத்தால்தானே, உச்சநீதிமன்றம் சசிகலாவை அகற்றும்போது அந்த இடத்தில் அமர முடியும்! அதனால்தான் சின்னம்மாவை முதல்வராக்குவதற்கு எல்லை மீறி உணர்ச்சிவசப் படுகிறார் தம்பிதுரை.

“ஜெயலலிதா சிறை சென்றால் முதல்வர் நாற்காலியில் யார் அமர்வது” என்று ரகசியமாகச் சதி செய்த காரணத்தினால் சின்னம்மாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் அம்மா. இது 2011 இல் நடந்த கதை. இன்று அதே போயஸ் தோட்டத்தில் அதே சின்னம்மாவுக்கு எதிராக பகிரங்கமாகச் சதி நடக்கிறது.

“நீங்கள்தான் பொதுச்செயலராகி எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று கைகூப்பிக் கெஞ்சுகிறார்கள் சதிகாரர்கள். “கூப்பிய கரங்களுக்குள் குத்துவாள் இருக்கிறது” என்று தெரிந்த போதிலும் புன்னகை மாறாத முகத்துடன் தரிசனம் தருகிறார் சின்னம்மா. அம்மாவின் படத்துக்கு முன்னால் நின்று கண்ணீரும் விடுகிறார். “இந்த நாடகத்தைக் காண்பதற்கு அம்மா இல்லையே” என்ற நமது ஏக்கத்தை நிவர்த்தி செய்வதற்காகவாவது, “அம்மாவின் ஆன்மா பார்த்துக் கொண்டிருக்கிறது” என்ற சசிகலாவின் கூற்று உண்மையாகிவிடக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது.

admk-volunteer (1)
அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி சசிகலா என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.

இன்னொரு புறம், கொலைப்பழியும் சசிகலாவைத் துரத்துகிறது. அரசு அலுவல்கள் அனைத்தையும் மர்மமான அந்தப்புர நடவடிக்கையாக மாற்றி, அதற்கே பழகிவிட்ட ஜெ-சசி கும்பல், அப்போலோவிலும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. அப்போலோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக்கொண்டு யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு, “சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறோம்” என்று  அப்போது உறைத்திருக்க நியாயமில்லை.

அன்று எம்ஜியார் சாவுக்கு ஜானகி மீதும், ராஜீவ் சாவுக்கு கருணாநிதி மீதும் பொய்ப்பழி சுமத்தி முதல்வர் நாற்காலியைப் பிடித்தார் ஜெயலலிதா. அவரது சாவுக்கான பழி, உடன்பிறவாத் தோழி மீது விழுந்திருப்பது ஒரு விதத்தில் கவித்துவ நீதி. சீரியல்களின் கலர் கலரான சதிகளால் தமிழ்நாட்டுத் தாய்க்குலத்தின் மூளை கூர்மைப்படுத்தப் பட்டிருப்பதால், சசிகலாவின் ஒவ்வொரு அசைவு பற்றியும் தாய்க்குலத்தின் வாயிலிருந்து ஒரு “எபிசோட்” அநாயாசமாக வந்து விழுந்து, அப்போலோ மர்மத்தை மெகா சீரியலாக மாற்றுகிறது.

இதுதான் சசிகலாவின் நிலை. இன்று சின்னம்மாவின் காலில் விழும் கூட்டம் நாளை எந்தக் காலில் வேண்டுமானாலும் விழும். உட்கட்சி பதவிப் போட்டிக்காக ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்வதை சர்வ சாதாரணமாகச் செய்கின்ற அதிமுக கும்பல், காலில் விழும்போதே முதுகில் அரிவாளும் வைத்திருக்கும் என்பது சின்னம்மாவுக்கோ, மன்னார்குடி மாஃபியாவுக்கோ தெரியாததல்ல.

000

ருப்பினும், அதிமுக என்பது ஒரு “கட்சி” என்பதாகவும், அதன் தலைவியாக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவது “அந்தக் கட்சியின் உள் விவகாரம்” என்பதாகவும் மிகவும் நாகரிகமாகப் பேசுகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர். “சசிகலா தேர்தலில் நின்று மக்கள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும்” என்று ஆலோசனை வேறு கூறுகின்றனர்.

“மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவது எப்படி” என்று சசிகலாவுக்குத் தெரியாதா? மன்னார்குடி மாஃபியா மட்டுமல்ல, சேகர் ரெட்டி, அன்புநாதன், ராம மோகன ராவ் போன்றோரும் கூட தேர்தலில் நின்று மக்களின் அங்கீகாரத்தை “வாங்க”வேண்டுமென்றால், “வாங்கி” விடுவார்களே. சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பெரும்பான்மை தொகுதிகளை “வாங்கிக்  கொடுத்தவர்கள்” அல்லவா இவர்கள்! தேர்தல் முடிவுக்குப் பின்னர் இதையெல்லாம் சொல்லிப் புலம்பிய எதிர்க்கட்சிகள் இப்போது நடந்ததையெல்லாம் மறந்து விட்டதை எண்ணும்போது புல்லரிக்கிறது.

people-anna-square (4)
உட்கட்சி பதவிப் போட்டிக்காக ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்வதை சர்வ சாதாரணமாகச் செய்கின்ற அதிமுக கும்பல், காலில் விழும்போதே முதுகில் அரிவாளும் வைத்திருக்கும் என்பது சின்னம்மாவுக்கோ, மன்னார்குடி மாஃபியாவுக்கோ தெரியாததல்ல.

சும்மா சொல்லக்கூடாது. ஜெயலலிதா அப்போலோவுக்கு மாறியதிலிருந்தே தமிழகத்தில் அரசியல் நாகரிகம் தலைவிரித்தாடுகிறது. “சசிகலாவைப் பற்றி அவருடைய எதிர்காலச் செயல்பாட்டை வைத்துத்தான் கருத்து கூற முடியும்” என்கிறார்கள் மாண்புமிகு எதிர்க்கட்சிகள். “கடந்த காலச் செயல்பாட்டை”க் காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன். சொத்துக் குவிப்பு வழக்கு முதல் சேகர் ரெட்டியின் மணற்கொள்ளை வரை அனைத்தும் கடந்த காலச் செயல்பாட்டில் விளைந்தவையே என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா என்ன?

ஜெ ஆட்சியின் எந்த செயல்பாடுகளுக்காக “அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் பேசினார்களோ, அந்தச் செயல்பாடுகளுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லையா? முதல்வரின் தோழியாக இருந்தபோதே அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், முதல்வராகிவிட்டால் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கும்போதே நமக்கு நெஞ்சு நடுங்குகிறதே!

“இருப்பினும் பார்ப்பன மதவெறிக் கும்பல் தமிழகத்தில் வேரூன்ற விடாமல் சசிகலா தடுத்து விடுவார்” என்பது திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தையே குடிகாரர்களாக்கி, தமிழ் மக்களை மத மூட நம்பிக்கைகளிலும் அடிமைத்தனத்திலும் ஆழ்த்தி, அதானிக்கும் அம்பானிக்கும் தமிழகத்தைப் பிரித்து விற்ற கும்பல், பாரதிய ஜனதாவிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றும் என்று நம்புகிறது திராவிடர் கழகம். மலையாள மாந்திரீகம் மற்றும் பில்லிசூனியம் முதலானவற்றில் சசிகலா கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கிறது திராவிடர் கழகத்தின் இந்த நம்பிக்கை.

திமுக வின் கதை வேறு. கடந்த காலத்தில் கருணாநிதி அனுபவித்த ராஜீவ் கொலைப்பழி முதல் ரூ. 1,70,000,00,00,000 அலைக்கற்றை ஊழல் என்ற பத்து தலை ராவணன் கதை வரை, பார்ப்பனக் கும்பலால் பலவிதமாகப் பாதிக்கப்பட்டவர் கருணாநிதி. அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் வழங்கியிருக்கிறது.

“ஜெயலலிதா  மரணத்தில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்த கற்றறிந்த நீதிபதியின் உணர்ச்சிவயப்பட்ட நாக்கு, “நாம் கருணாநிதியின் மகனுக்கு ஒரு பம்பர் பரிசை வழங்குகிறோம்” என்பதை உணராமலேயே சுழன்றிருக்க வேண்டும்! “இயற்கை நீதி” எனப்படுவது இதுதான் போலும்!

MGR-Jayalalitha-movie
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

“நான் கூறவில்லை, உயர் நீதிமன்றமே கூறியிருக்கிறது” என்ற ஒற்றை வரியின் மூலம், அதிமுகவின் இழிபுகழ் பெற்ற ஓட்டு வங்கியான தாய்க்குலத்தின் வாக்குகளைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதற்கான வாய்ப்பை தளபதிக்கு வழங்கி விட்டார் நீதிபதி. அதுமட்டுமல்ல, இறந்தவர்களை விமரிசிக்கின்ற, “அநாகரிக அரசியலை” தவிர்த்து தப்பிச் செல்வதற்கான சந்தும் ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது.

“முன்னாள் மூன்றாவது அணி சாணக்கியர்” வை.கோபால்சாமியோ, நாஞ்சில் சம்பத் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே அவருடைய இடத்தில் துண்டைப் போட்டுவிட்டார். மூன்றாவது அணியில் மிச்சமிருக்கும் மூன்று பேரில் முக்கியமானவரான திருமாவளவன், “வருவாய்த்துறை ரெய்டிலிருந்தும், மதவெறி அபாயத்திலிருந்தும் இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு” சசிகலாவைச் சந்தித்திருக்கிறார்.

இடதுசாரிகளின் மூத்த தலைவரான தா.பா, முன்னம் ஒரு நாளில் சசிகலாவை விமரிசித்துப் பேசியிருப்பதை நிருபர்கள் எடுத்துக் காட்டியபோது, “அது நானாக இருக்காது, என் அசரீரியாக இருக்கும்” என்று பதிலளித்தாராம். “மன்னார்குடி மாஃபியாவை ரெய்டு அபாயம் அச்சுறுத்திய சூழலில், கோவையில் வைத்து சுப்பிரமணியசாமியை நீங்கள் ஏன் சந்தித்தீர்கள்” என்று பின்னர் ஒரு நாளில் யாரேனும் ஒரு நிருபர் அவரைக் கேட்க நேர்ந்தால், “அது நான் அல்ல, மங்கி சங்கி” என்றும் அவர் பதிலளிக்கக் கூடும். “டீக்கடைக்காரர் பிரதமராகும்போது, வீடியோக் கடைக்காரி முதல்வராகக் கூடாதா?” என்று வர்க்கப்பார்வையில் வக்கணையானதொரு எதிர்க் கேள்வியையும் எழுப்பக் கூடும்.

Nattu
“முன்னாள் மூன்றாவது அணி சாணக்கியர்” வை.கோபால்சாமியோ, நாஞ்சில் சம்பத் எழுந்திருப்பதற்கு முன்னாலேயே அவருடைய இடத்தில் துண்டைப் போட்டுவிட்டார்.

உண்மைதான். “முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். “தகுதி” பற்றிய கேள்வியை ஜெயலலிதாவோடு நிறுத்திக் கொண்டாலோ, எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

ஆகையினால், ஆராய்ச்சியை நிறுத்திக் கொள்வோம். எப்படிப் பார்த்தாலும் சசிகலா என்பவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி. நாளை மறுநாள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். ஆனால் நாளை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அவர் அமரும்போது, “மாண்புமிகு முதல்வர்” என்று என்று அவரை நாம் அழைக்காமலிருக்க முடியாது.

சசிகலாவை அவ்வாறு அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மன்னார்குடி மாஃபியாவையும் “மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். புதியதொரு அரசியல் நாகரிகம் தமிழகத்தில் தழைத்தோங்குவதற்கான துவக்கமாகவும் அது அமையும்.

  • தொரட்டி
    புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !

1
திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”

2017 புத்தாண்டும் இந்திய இளைஞர்கள் சிலரின் நினைவுகளும் – பாகம் 1

  • ஊனா : “நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்

திவ்யேஷ் சோலன்கி : 9ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய தலித் இளைஞன். மாட்டுத் தோலை உரித்தத ‘குற்றத்திற்காக’ தாக்கப்பட்ட ஏழு தலித் இளைஞர்களின் ஊரான ஊனாவைச் சேர்ந்தவர் திவ்யேஷ். போலீசாக வேண்டுமென்பது இவரது ஆசை.

திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”
திவ்யேஷ் சோலன்கி: நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்?, அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்”. படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

“இன்றைக்கும் காசு இல்லை” என்கிறார் திவ்யேஷ் சோலன்கி. நாள் முழுக்க வெங்காயப் பயிர்களை அறுவடை செய்து விட்டு தனது தாய் மற்றும் சகோதரியுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் திவ்யேஷ். 160 ரூபாய் தினக் கூலிக்கு அவர்கள் மூன்று நாட்களாக வேலை செய்கிறார்கள். இந்த நாட்களுக்கான கூலி இன்னும் வழங்கப்படவில்லை.

மறுநாளும் வருமாறு நில உரிமையாளரான விவசாயி தெரிவித்ததாகச் சொல்லும் திவ்யேஷ், பிழைப்பதற்கு வேறு வழியெதுவும் தெரியவில்லை என்கிறார். ஆனால் “என்ன செய்யக் கூடாதென” தனக்குத் தெரியும் என்கிறார். “சில மாதங்கள் முன்பு வரை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சாதியைச் சேர்ந்தவர்களும் பிழைப்புக்காக மாட்டுத் தோலை உரிக்கும் வேலை செய்து வந்தனர். நான் அந்த வேலையைக் கற்றுக் கொள்ளவில்லை. அப்படியே கற்றுக் கொண்டிருந்தாலும், எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்குப் பின் அதைக் கற்பனையில் கூட செய்ய மாட்டேன்” என்கிறார் திவ்யேஷ்.

கடந்த ஜூலை 11-ம் தேதி “பசுப் பாதுகாவலர்கள்” செத்த மாட்டின் தோலை உரித்த ஏழு தலித் இளைஞர்களை கம்புகளால் அடித்து விளாசினர். அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் எழுந்த தலித் எழுச்சியின் குவிமையமாக விளங்கிய மோடா சமாதியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் திவ்யேஷ். ”பசுப் பாதுகாவலர்கள்” தாக்கிய ஏழு தலித் இளைஞர்களில் வாஷ்ராம் மற்றும் ரமேஷ் சர்வைய்யா ஆகியோர் தனக்கு தூரத்து சொந்தக்காரர்கள் என்கிறார் திவ்யேஷ்.

திவ்யேஷின் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். அந்த ஐவரில் திவ்யேஷ் மூன்றாவதாகப் பிறந்தவர். தனது பெற்றோருக்கு உதவும் பொருட்டு 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டதாகச் சொல்கிறார். வயல் வேலையைத் தவிர மேல்சாதி விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இரவுக் காவலராக பணிபுரிவதாகவும், ஒரிரவுக்கு 300 ரூபாய் சம்பளம் என்றும் திவ்யேஷ் தெரித்தார்.

உனா தாக்குதலுக்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போராட்டம்!
உனா தாக்குதலுக்கு எதிராக குஜராத் தலித் மக்கள் போராட்டம்! படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

திவ்யேஷின் தந்தை அரசு ஒதுக்கீடு செய்த கால் ஏக்கர் நிலத்தில் கால்நடைத் தீவனங்களை வளர்க்கிறார். அதே கிராமத்தில் உள்ள தலித் காலனியில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் ஒரே அறை கொண்ட வீடு ஒன்றில் வசிக்கிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் பதினெட்டு வயதை எட்டும் திவ்யேஷ், ஜூலை 11-ம் தேதியன்று நடந்த சம்பவம் தனக்கும் மாறாத கசப்புணர்வைத் தோற்றுவித்ததாகச் சொல்கிறார். ”மற்றவர்களைப் போலவே நாங்களும் மாடுகளை மதிக்கிறோம். நாங்கள் எப்போதும் அவற்றைக் கொல்வதில்லை; இறந்த மாடுகளின் தோலை மட்டுமே உரித்தோம். ஆனாலும், எம்மேல் குற்றம் சுமத்தப்பட்டது. இதெல்லாம் மாறுமா எனத் தெரியவில்லை” என்கிறார் திவ்யேஷ்.

திவ்யேஷ் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ரசிகர். சாதி ஒடுக்குமுறையின் கீழேயே வாழ்வது குறித்த பேச்சு எழுந்த போது, ”நாங்கள் மற்றவர்களின் வயல்களில் வேலை செய்யும் போது கூட சாப்பிடவும், தேனீர் குடிக்கவும் எங்கள் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்துச் செல்ல வேண்டும். சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.

என்றைக்காவது போலீசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்பது திவ்யேஷின் ஆசை. ”அது எனக்கு மரியாதையையும் சம்பளத்தையும் பெற்றுத் தரும். ஆனால் அதற்கு நான் பத்தாம் வகுப்பு படிக்க வேண்டும். நான் பள்ளிக்குப் போகவில்லை என்றாலும், வெளியிலிருந்தே தேர்வெழுத விண்ணப்பித்துள்ளேன். இந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வெழுதப் போகிறேன்” என்கிறார் திவ்யேஷ்.

ஜம்மு காஷ்மீர் : படிப்பது ஒன்று தான் வழி; ஆனால் என்னால் முடியுமா?

ஜூலை 8ம் தேதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் கிளர்ந்தெழுந்தது. அதைத் தொடர்ந்து சுமார் 10,000 மக்கள் பெல்லெட் குண்டுகளால் துளைக்கப்பட்டனர் என்கிறது மருத்துவமனைப் புள்ளிவிவரங்கள். ஆயிரத்துக்கும் அதிகமானோரின் கண்களில் பெல்லெட் குண்டுகள் பாய்ந்தன. அதில் குறைந்தது ஏழு பேருக்கு இரண்டு கண்ணிலும் பார்வை பறிபோனது.

tabish
தபீஷ் ரபீக் பட்: ”எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது” படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (MBA) படிக்க வேண்டுமென்று தனக்கு எப்போதுமே ஆசை என்கிறார் தபீஷ் ரபீக் பட். ஆனால், அவரது இடது கண்ணைத் துளைத்துச் சென்ற பெல்லட் குண்டுகள் அவரது கண்ணின் கருவிழியையும் கனவுகளையும் சிதைத்து விட்டன. இப்போதெல்லாம் கண்ணில் நீர் வழியாமல் எழுத்துக்களை வாசிக்கவே முடியவில்லை என்கிறார் தபீஷ்.

”எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது” என்கிறார் 17 வயதான தபீஷ். சென்ற நவம்பரில் தான் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிய தபீஷ், தேர்வெழுத உதவியாளர் ஒருவரைக் கோரியதை போது பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டதாகத் தெரிவிக்கிறார். ”தேர்வு எழுதும் போது எனது இடது கண் பயங்கரமாக வலித்தது” என்றார் தபீஷ். அந்த வீடு ஒரு சிறிய அறை. அதன் மத்தியில் தடுப்பு வைத்துப் பிரித்துள்ளனர். அதில் ஒன்று சமயலறை; மற்றொன்று படுக்கையறை. தபீஷ் தனது படுக்கையில் இருந்தார்.

அந்தக் குடும்பம் தபீஷின் கண்ணில் செய்யப்படவுள்ள நான்காவது அறுவை சிகிச்சைக்காக தயாராகிக் கொண்டிருந்தது. “இன்னும் இரண்டு பெல்லெட் குண்டுகள் உள்ளேயே இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பெல்லெட்டுகளை மட்டுமே தங்களால் எடுக்க முடியுமென்றும், அதற்குப் பின் இடது கண்ணின் பார்வை போய்விடுமென்றும் அவர்கள் சொல்கிறார்கள்” என்கிறார் தபீஷ்.

பாம்போரில் உள்ள எண்ணைக் கிட்டங்கியில் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார் தபீஷின் தந்தை ரபீக் அகமது பட். அவரது தாயார் ஷெஸாதா வீட்டு வேலைகளை மட்டும் கவனித்துக் கொள்கிறார். பாம்போரில் உள்ள “தில்லி பொதுப் பள்ளியில்” படிக்கும் மாணவரான தபீஷ், தனது மாலை நேர டியூஷனுக்குப் பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பெல்லெட் துப்பாக்கிகளால் சுடப்பட்டுள்ளார்.

அது 2016 ஜூலை 9-ம் தேதி. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு மறுநாள். அன்றைக்கு காஷ்மீர் முழுவதும் போராட்டங்களால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

”நானும் எனது நண்பன் ஜிப்ரானும் வந்து கொண்டிருந்தோம். கற்களை எறிந்து கொண்டிருந்த போராட்டக்காரர்கள் எங்கள் வழியில் தான் கூட்டமாக இருந்தனர். திடீரென்று துணை ராணுவப் படையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி விரட்டி வந்தனர். சட்டென்று எனது உடலில் நெருப்பு பிடித்தாற் போல் உணர்ந்தேன். பின்னர் தான் நான் பெல்லெட் குண்டுகளால் தக்கப்பட்டதையே அறிந்து கொண்டேன். இடது கண்ணில் மட்டும் ஆறு குண்டுகள். ஜிப்ரான் அதிர்ஷ்டக்காரன் – அவனுக்கு இரண்டு குண்டுகள் தான் கிடைத்தன” என்கிறார் தபீஷ்.

அந்த சம்பவத்திற்குப் பின் சுமார் இரண்டரை மாதங்கள் சிறீநகரில் உள்ள ’சிறீநகர் மகாராஜா ஹரிசிங் அரசு’ மருத்துவமனையில் கழித்திருக்கிறார் தபீஷ். கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு சீர்படுத்தவே முடியாதென மருத்துவர்கள் சொன்ன போதும் அந்த குடும்பம் நம்பிக்கையிழக்கவில்லை. தபீஷை அம்ரிஸ்தரில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவரது தந்தை. என்றாலும், அந்த அலைச்சல்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

”நாங்கள் நொறுங்கிப் போனோம்” என்கிறார் தபீஷின் தாயார் ஷெஸாதா. தனது கையில் தபீஷின் மருத்துவ அறிக்கைகளையும், நாளிதழ்களில் அவர் தாக்கப்பட்டதைப் பற்றி வந்த செய்தித் தாள்களையும் புரட்டிக் கொண்டிருந்தார் அவர்.

புர்ஹான் வானி கொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்!
புர்ஹான் வானி கொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராட்டம்! படம் நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொடர்ந்து தான் தாக்கப்பட்டதற்கு முந்தைய நாள் நண்பர்களோடு சிறீநகர் சென்று வந்ததை தபீஷ் விவரித்துக் கொண்டிருந்த போது கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி அங்கிருந்து அகன்றார் அவரது தாயார். ”அன்றைக்கு ஜூலை 8ம் தேதி… நானும் எனது நண்பர்களுமாக எட்டுப் பேர் சேர்ந்து சிறீநகருக்குப் போனோம். அங்கே உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்த்தோம். அன்றைக்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்” என்று தபீஷ் சொல்லும் போதே அவரது முகத்தில் புன்னகை விரிந்தது. அந்தச் சிரிப்பு அவரது இடது கண்ணை ஒரு மெல்லிய கோடாகச் சுருக்கியது.

கடந்த நான்கு மாதங்களாக வீட்டுக்கும் மருத்துவமனைக்குமாக அலைந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார் தபீஷ். தாக்குதலுக்குப் பின் கடந்த நவம்பர் 14-ம் தேதி தேர்வெழுதச் சென்ற போது தான் தனது நண்பர்களை மீண்டும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.

”தேர்வுகளை எழுதிவிடலாம் என்ற உறுதி இல்லை. சரியாக படிக்கவும் இல்லை. ஆனால், படிப்பு ஒன்று தான் முன்னேறுவதற்கு இருக்கும் ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்டேன்” எனத் தெரிவித்த தபீஷ், பத்தாம் வகுப்புத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் சொல்கிறார்.

தபீஷுக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். இளைய தம்பி தலீபுக்கு 11 வயது; இன்னொருவனான தபீனுக்கு 12 வயது; தங்கை சௌலியாவுக்கு இரண்டரை வயது.

தன்னுடன் பிறந்தவர்களை நினைத்தால் கவலையாக இருப்பதாகச் சொல்கிறார் தபீஷ். ”இவர்கள் மீதும் பெல்லெட் குண்டுகள் பாயாது என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது? மிருகங்களை வேட்டையாடத் தானே பெல்லெட் குண்டுகளைப் பயன்படுத்துவார்கள், எங்களுக்கு எதிராக ஏன் அதைப் பயன்படுத்தினர்?”

ஆம். ஒடுக்கப்பட்ட மக்களின் புத்தாண்டு விடியல் இப்படித்தான் இருளடைந்து கிடக்கிறது. புத்தாண்டை வாழ்த்துடனும், வேட்டுடனும் கொண்டாடிய உள்ளங்கள் சிந்திக்கட்டும்.

தமிழாக்கம்: முகில்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்

0

PTI3_31_2012_000062Bல்லணை முதல் செம்போடை வரை தியாகச்செல்வி.. சின்னம்மாவைத் தலைமை ஏற்க வருந்தி அழைக்கும் கட்அவுட்-சுவரொட்டிகளில் பச்சை வண்ணம் தூக்கலாய் இருந்தது. சின்னம்மா அ.தி.மு.க பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற வைபவத்தை ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்வேட்டு முழங்க கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அதே நல்ல நாளில் சின்னம்மா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் பதினோரு பேர் இறந்தனர் என்ற செய்தி கொண்டாடியவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. திருத்துறைப்பூண்டி சின்னம்மா திருமண மண்டபம் அருகில் அ.தி.மு.க-விலிருந்து விலகி  பாஜக-வில் அண்மையில் இணைந்துள்ள ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. செல்லா நோட்டு மோடி குறித்துச் சிறிது நேரம் பேசிவிட்டு விவசாயிகள் இறப்பு குறித்துக் கேள்வி எழுப்பினார் உடன் இருந்த நண்பர்.

“சீக்கு வந்து அம்மாவாசை, பவுர்ணமிக்குச் செத்தவனையெல்லாம் விவசாயி சாவுன்னு பத்திரிகைக்காரன் எழுதுறான்” என்றார் அந்த பாஜக நபர். அந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் இருந்தது தகரவெளி மல்லிகாவின் கருத்து.

ஆதிச்சபுரத்ல பட்டினியில் ஒருபையன் செத்தான். அவன் வயத்துல நாலு பருக்கைச் சோறு இருந்ததுன்னு மெடிக்கல் ரிப்போட் சொல்லுதுன்னு பேசினவங்கதான் அதிமுக-காரங்க. அவங்க கிடக்குறாங்க. வயலப் பார்த்தா வயிறு எரியுது. நா வயப்பக்கமே போறதில்ல. எம்பொண்ணு வயப்பக்கம் போகாதே பிரஷர் எகிறிடும்ங்கிறா” என்று உண்மை நிலையை வாய்வார்த்தைகளில் படம்பிடித்துக் காட்டினார் இரண்டரை ஏக்கர நிலத்தில் நெல் விதைத்திருக்கும் மல்லிகா.

“குஞ்சங்கட்டி அழகாயிருக்குப் பயிறு, மேலேருந்து வாடிக்கிட்டே வருது, நாலுநாள் முன்னாடி வரை திடமாத்தான் போயிட்டு வந்தேன். இனிமேல் போய்ப்பார்க்க மனசுவல்ல. ஆறுபேரையும் (குடும்ப உறுப்பினர்கள்) அனாதையாகக்கிடாதேன்னு பசங்க சொல்லுதுங்க” என்கிறார் மூன்று ஏக்கரில் நெல் விதைத்துப் பிள்ளைகளை வளர்ப்பது போல் பயிரைப் பேணிக் காத்த தோளாச்சேரி புவனா.

farmer“பேருதான் பார்வேர்டு, நெலம பேக்வேடுதான்” என்று தொடங்கிய ஐயர் வீட்டுப்பெண்மணி இரண்டு ஏக்கரில் நெல் விதைத்திருக்கிறார். வயல்லேயே கிடப்பாங்க என்று மற்றவர்கள் அவரைப்பற்றிக் கூறினார்கள். “போன வருசமாவது ஆறு மூட்டைநெல் கிடைச்சுது. நிவாரணபணம் வந்தது. அதுவே நட்டம்தான். அந்த வருஷம் தம்பிடி நெல் கிடைக்காது. புதுர் சமைக்கக் கூட வழியில்ல. நிவாரணப் பணம் கிடைச்சாலும் யாரும் சமாளிக்க முடியாது போன வருஷ இன்ஷியூரன்ஸ் பணமே இன்னும் வரல” என்றார் ஐயர் வீட்டு அம்மா. இதைச் சந்தித்த விவசாயிகள் அனைவரும் வழிமொழிந்தார்கள்.

இதைப் பதிவு செய்யும் நேரத்தில் விவசாயிகள் இறப்பின் எண்ணிக்கை நூறைத் தொட்டுவிட்டது. அதில் சரிபாதி பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 2,500 என்கிறது புள்ளிவிவரங்கள்.

02-01-2016 அன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார் திருக்குவளை நாட்டிருப்பு பன்னீர் செல்வம். பன்னீர்செல்வம், கணேசன், ஜோதிபாசு சகோதரர்கள் திருக்குவளை தியாகராஜசுவாமி கோயில் நிலம் மூன்றரை ஏக்கரில் பயிர் செய்திருக்கிறார்கள். குடும்பம் தனித்தனியாக இருந்தாலும் வருடத்திற்கு ஒருவர் என்று முறைபிரித்து சாகுபடி செய்கிறார்கள். இந்த வருடம் பன்னீரின் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகளுக்குத் திருமணம் செய்த கடனையும் சேர்த்து நான்கரை லட்சம் கடன் உள்ளது. இரண்டரை லட்சம் வங்கியில் நகைக்கடன் மீதம், கந்து வட்டிக் கடன் பிரச்சனை, வாடும் பயிர் துக்கம் தாளாமல் தூக்கு மாட்டிக் கொண்டு உயிர்விட்டார்.

இரண்டரை லட்சம் கடனில் உள்ள பன்னீரின் சகோதரர் கணேசன் “பேச்சலரா வெளியூர் போய் சம்பாதிக்க? மண்ண விட்டுப் போக முடியாது” என்று உறுதியாகக் கூறுகிறார். “குடிக்கத் தண்ணி இல்ல, குழாயில் தண்ணி வரலைன்னா ஆறுகிலோமீட்டர் போய் குடிதண்ணி கொண்டுவரணும். எதச் சொல்லிப் பொலம்ப?” என்றார் பன்னீரின் மற்றொரு சகோதரர் ஜோதிபாசு.

800-03தெருவே கூடி தெருமுனைவரை வந்து, “பார்த்துப் போங்க. ரோடு ரொம்ப மோசமா இருக்கு” என்று நம்மை வழி அனுப்பி வைத்த காட்சி கடைமடை விவசாயிகளின் உயர்ந்த பண்பை எடுத்துக் கூறுகிறது. கிராமப்புற இணைப்புச் சாலைகள் பளபளப்பாக இருந்தாலும் சேரிக்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகவே உள்ளன. பிரதான சாலையிலேயே இருசக்கர வாகனத்தை வைத்துவிட்டு வெண்மணி, நினைவிடத்தைப் பார்க்க நடந்தே செல்ல வேண்டியிருந்தது.

“கிராமப்புற கூட்டுறவு சொசைட்டி பேங்குகளிலும், தபால் நிலையத்திலும் வரவு செலவு முடக்கப் பட்டதால் கிராமப்புற மக்கள் தவியாய்த் தவிக்கிறார்கள். கூலி விவசாயிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது” என்றார் தபால்துறை ஊழியர் ஒருவர். செல்லா நோட்டுப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கூலி விவசாயிகள். வேலை இருந்தாலும் கூலிகொடுக்கக் காசு இல்லை என்ற நிலை கிராமப்புற கூலி விவசாயிகளை நடை பிணமாக்கியுள்ளது.

“64 வேலி கொளப்பாடு கிராமபுத்தில் 100குழி கூட அறுத்துக் கரை சேர்க்க முடியாது” என்று கூறிய படியே அறிமுகப்படுத்திக் கொண்ட கொளப்பாடு சண்முகம். “இப்படியே போனா ஒருத்தன ஒருத்தன் அடிச்சிப் புடுங்குற நிலை வந்துரும்” என்று எச்சரித்தார்.

“15 பவுன் நகை அடமானம் இருக்கு. ஐந்து லட்சம் வெளிகடன் இருக்கு. ஆடு மாடு இருக்கு, சுகர் இருக்கு, பிரஷர் இருக்கு, எந்தக் குறைச்சலும் இல்ல. வயப்பக்கம் போக மட்டும் பிடிக்கல” என்றார் இரண்டு வேலி சாகுபடி செய்யும் மாங்குடி சண்முக வேல்.

“சோம்பிக்கிடக்க மாட்டான் சோலி (வேலை) கண்டா” என்று கீழத்தஞ்சை விவசாயிகளை வர்ணிப்பார் மக்கள் கலைஞர் திருமூர்த்தியார்.

அறுபது அடியில் இருந்த நீர்மட்டம். 200 அடிக்குச் சென்றுவிட்டது. தரைக்கு மேல் உள்ள இறவை இயந்திரத்தை வைத்து நீர் இறைக்க முடியவில்லை. இருந்தாலும் மக்களின் முன்முயற்சி குறைந்து விடவில்லை. மூன்று நான்கு விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆழ்குழாய் அமைத்து முறைவைத்துத் தண்ணீர் பாய்ச்சும் கூட்டுப் பாசன முறையைச் சிலர் முயற்சித்துள்ளனர். 240 அடிக்குக் கீழே நீர் மட்டம் சென்றுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. 200 அடிகுழாய் போட்டு உப்பு நீராகித் தோற்றவர்களும் உள்ளனர். 250அடிக்குக் கீழ் சென்றால் 1000 அடி ஆழத்தில்தான் நீர் கிடைக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

“கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே சாவான் விவசாயி” என்ற புதுமொழியே கீழத்தஞ்சையில் உருவாகியுள்ளது. பெரிய அம்மாவைப் பராமரித்த களைப்பில் உறங்கிக்கொண்டிருந்த சின்னம்மா-பன்னீர் அரசு தற்போதுதான் விழித்தெழுவது போல பம்மாத்து காட்டுகிறது. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்கள் அதிமுக-வை பெரிய அளவுக்கு அசைக்கவில்லை. இப்போதுதான் வறட்சி பாதிப்பைக் கணக்கிட ஆய்வுக்குழுவை அரசு அறிவித்துள்ளது.

சென்ற ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரவேண்டிய தொகையே இன்னும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. தற்போது பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஃபார்ட்டி பர்சண்ட் (40%) கமிஷன் கவர்மென்ட் என்று பெயரெடுத்துள்ள அ.தி.மு.க அரசு எதுவும் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடம் இல்லை.

“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது
வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது
என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல
இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”

என்ற ம.க.இ.க பாடலை நினைவு கூர்ந்த கூலி விவசாயி தோழர் அய்யாவு பத்தாயிரம் பேர் மக்கள் ஒன்று கூடி ஒரே நாளில் பாமனி ஆற்றின் கரையை உயர்த்தி 35 கி.மீட்டருக்கு மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை மக்கள் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார். “S.G.முருகையன் தலைமையில் நடந்த சிரமதான இயக்கம் போல மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்” என்ற அவரது கூற்று மெய்ப்பட வேண்டும்.

  • வினவு செய்தியாளர்

modi-farmerகேலிச்சித்திரம்: முகிலன்
மக்கள் கலை இ லக்கியக் கழகம், சென்னை.

வியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை !

0

கோவை விசைத்தறி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்நூற்றாண்டு கண்ட தறித் தொழில் தமிழகத்தின் மரபார்ந்த தொழில்களில் ஒன்று. கொங்கு மண்டலத்தின் அடையாள முகங்களில் பஞ்சு மில்களுக்கு இணையாய் சுதந்திரமான கைத்தறி அதைத் தொடர்ந்து விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும் முக்கிய இடமுண்டு. ஆள் மாற்றி ஆள் என 24 நான்கு மணி நேரமும் இடைவிடாமல் தறி இயங்கும். இத்தகைய கிராமங்களில் தறிச் சத்தம் கேட்டால் தான் தூக்கம் வருவோரும் “கரண்ட் இல்லையா., தறி ஓடுது..பாரு கரண்ட் இருக்கு.” என்பது போன்ற பேச்சுக்களும் சாதாரணம். இப்படி மக்கள் வாழ்வோடு ஊடும் பாவுமாய் பிணைந்த தறியும் அதன் தொழிலும் கொங்கு மண்டலத்தின் சிறப்புக்களில் ஒன்று. இத்தகைய தொழிலிலிருந்து ஒவ்வொரு கிராமமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது. அறுபடும் ஒவ்வொரு இழையும் விசைத்தறி கூலி நெசவாளர்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் துயரத்தை கூறுபவை.

உளுத்துக் கொண்டிருக்கிறது விசைத்தறி தொழில் இங்கே. பஞ்சு செயற்கை விலையேற்றம். பதுக்கல். ஆன்லைன் வர்த்தகம். வெள்ளைத் தங்கமான பஞ்சை பார்த்து கூட இராதவன் பஞ்சில் நிதி மூலதனத்தை கொட்டி அதை வியாபாரம் செய்து விட்டுப் போவான். விளைவிக்கும் விவசாயிக்கு விலைவைக்க உரிமையில்லை. வாங்கும் நெசவாளிக்கும் உரிமையில்லை. பெட்டி பெட்டியாக பணத்தை கொண்டு வந்து பணத்தை இன்னும் சில பெட்டிகள் சேர்த்து எடுத்து போகின்றவர்களுக்காகவே பெட்டி வாங்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அரசு எந்திரம். வொயிட் காலர் கிரிமினல்களை கண்டு கொள்ளாமல் ஏ‌டி‌எம் வாசலில் போராடுபவர்களின் மண்டையை பிளக்க ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பலாய் காவல் துறை இருக்க பின்னர் கேட்கவா வேண்டும்.

ஆம் கேட்க வேண்டும். அரசியல்வாதிகளை மட்டுமல்ல இந்த அதிகாரிகளை கேள்வி கேட்க வேண்டும். இவர்கள் தப்பிக்க வழி வைத்திருக்கும் இந்த அரசு அமைப்பை கேள்வி கேட்க வேண்டும். அப்போது தான் விடிவு காலம் பிறக்கும். நெசவாளிக்கும் விவசாயிக்கும்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழு தோழர்களின் பாடல் கோவை மண்ணின் தொழிலாளர்களை பற்றி ஒன்றிருக்கிறது. உலகுக்கே ஆடை தந்த கோவையப் பாரு ! அதன் உயிர் மூச்சு அடங்குதே காரணம் யாரு ? என துவங்கும் அப்பாடலின் ஒரு சரணம் இப்படி இருக்கும்.,

தறியாலே நெய்ததடா உன்னோட வாழ்க்க….
அதில் இழையாக ஓடுதடா உன்னோட வேர்வ….!
பறிபோகுது பல்லாயிரம் கனவு நம்பிக்க…..
அந்த பன்னாட்டு கழுகை விரட்ட எடுடா துவக்க… துவக்க…!

இது போல நாம் துவக்கை எடுத்தால் மட்டுமே மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நாளன்றே நமக்கு விடிவு காலம்.

கொங்கு மண்டல விசைத்தறி தொழிலாளர்கள் ஜவுளி முதலாளிகள் இடையே அரசு நடுநிலை நாடகம் போட்ட பேச்சு வார்த்தை நாடக சமயத்திலும் விவசாயிகள் நெசவாளிகளுக்காகவே எனக் கூறிக் கொண்டு கருத்துக் கேட்பு நாடகத்தை மின் வாரியம் அரங்கேற்றிய போதும் முதல் ஆளாய் அம்பலப்படுத்திக் குரல் எழுப்பியது கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. அதன் தொடர்ச்சியாய் இப்போது நலிந்து வரும் விசைத்தறித் தொழிலை பாதுகாக்க தற்போது மிச்சமிருக்கும் தறித் தொழிலாளர்கள் பருண்மையாக வாழும் சோமனூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர் சரவணன்
தோழர் சரவணன்

சோமனூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டின் முன்னால் மாலை சுமார் 4:30 வாக்கில் ஆர்ப்பாட்டம் துவங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் சரவணன் தனது தலைமையுரையில், மோடி அரசு இரண்டு வருடங்களாக பதவியேற்றவுடன் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி எசமான் ஒபாமாவுக்கு படையல் வைத்தது முதல் மோடியின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார். இறுதியில் பெங்களூர் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தையும் அதே போல ஒரு போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் நடத்துவதே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை தர முடியும் என கூறி முடித்தார்.

தோழர் வினோத்
தோழர் வினோத்

அடுத்ததாக உரையாற்றிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் வினோத், கேஷ்லெஸ் எக்கானமி எனக் கூறிவிட்டு உண்மையிலேயே பேங்க், ஏ‌டி‌எம் என எந்த இடத்திலுமே கேஷே இல்லாமல் மக்கள் கையில் பணமே இல்லாமல் பொருளாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி என பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சாடியவர் அதன் தொடர்ச்சியாய் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்டவிரோதத் தன்மையை அம்பலப்படுத்திப் பேசினார். 12 மணி நேரம் குடோனில் வேலை கூலியை வாங்கிக் கொண்டு வந்து குடும்பம் நடத்துவது என இருந்த தொழிலாளர்களை, பேங்கின் நடைமுறை பற்றிய அடிப்படை அறிவில்லாமல் இருக்கும் மக்களிடம் பேங்க் ஏ‌டி‌எம் போன்றவற்றை கொண்டு போய் சேர்க்காமல் இப்படி ஒரு நடவடிக்கையை அறிவித்து அறியாமையில் இருக்கும் மக்களை துன்பத்தில் உழல விட்டுள்ளார் மோடி என்பதை விளக்கினார்.

அடுத்து உரை நிகழ்த்திய காங்கேயம் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் வசந்தன், அனைவருக்கும் பொதுவான சட்டத்தை அரசு மதிக்காத போது நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்..? என கேள்வி எழுப்பினார். வெனிசுலாவில் மக்கள் திருப்பி அடித்து பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறியடித்தனர். அதே போல் விசைத்தறி தொழிலாளர்களும் திருப்பி அடிக்க வேண்டும் அப்போதுதான் நாம் ஒரு மாற்றத்தை காண முடியும் என வலியுறுத்தினார்.

அடுத்து உரையாற்றிய கரூர் தோழர் ராமசாமி, புதிய தாராளமய கொள்கையின் விளைவாய் சிறு தொழில் அனைத்தும் அழிக்கபடுவதை அதன் தொடர்ச்சியாய் பாதிப்புக்குள்ளாகும் தறித் தொழிலை காக்க வேண்டியதன் அவசியத்தையும் பேசினார்.

அடுத்து பேசிய ஈரோட்டை சேர்ந்த தோழர் புஷ்பராஜ், விவசாயத்திற்கு அடுத்த படியாய் ஆதாரமான தொழிலாக விளங்கும் தறித் தொழிலலையும் அது எப்படி நசிந்து வருகிறது என்பதையும் கூறியவர்., ஈரோட்டில் நடைபெற்ற மின்சார வாரியத்தின் நுகர்கோர் கருத்துக் கேட்பு கூட்டம் எனும் நாடகத்தையும் அதில் கலந்து கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினரும் இணைந்து மின் வாரிய அதிகாரிகளை அவர்தம் பொய்களை தோலுரித்ததை நினைவுபடுத்திப் பேசினார்.

அடுத்து பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் சம்புகன் மோடியின் நடவடிக்கையை திரை கிழித்துப் பேசினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் வெகுண்டெழுந்த உ.பி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு சென்ற சம்பவத்தை கூறி மக்கள் போராட்டமே அனைத்துக்கும் தீர்வு என முன்வைத்தார்.

அடுத்தாக உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட பொருளாளர் தோழர் நித்தி, வெளி நாட்டு துணி இறக்குமதி பஞ்சு விலையேற்றம் போன்றவற்றின் விளைவாக நலிந்து வரும் விசைத்தறி தொழிலை தமது பிரச்சார அனுபவத்தில் கண்ட மக்களின் துயரங்களை பகிர்ந்து கொண்டார்.

  • படங்களைப் பெரிதாக பார்க்க அழுத்தவும்.

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் தோழர் விளவை இராமசாமி,

Coolie Photographer
தொழிலாளிகளை படமெடுக்கும் போலீசு!

“நாங்கள் அனைவரும் இன்று விடுப்பு எடுத்துக் கொண்டு மனைவி குழந்தை என குடும்பத்துடன் இருப்பதை மறுத்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க, அதற்கான போராட்டங்களை கட்டியமைக்க இங்கு வந்துள்ளோம்.இங்கோ காவல் துறை அனைவரையும் புகைப்படம் எடுக்க ஆள் வைத்து மிரட்ட முயற்சிக்கிறது. நாங்கள் என்ன கிரிமினல்களா..? இந்த மண்ணின் மைந்தர்கள். கட்டபொம்மன் பகத்சிங் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளின் வாரிசுகள் நாங்கள்.

கோவை சோமனூர் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்னால் பருத்தி விளைந்த மண் இது. பருத்தியை வெள்ளைத் தங்கம் என நம் முன்னோர்கள் மரியாதை கொடுத்தார்கள். பருத்தி காய்ந்து வெடித்தால் செடி சிரிக்கிறது என்பார்கள். மழை இல்லாமல் பஞ்சுக்கு விலை இல்லாமல் எல்லோரும் விசைத்தறிக்கு மாறினோம். விவசாயத்தை நினைவில் மட்டும் வைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த 50 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு என்ன நேர்ந்தது. இ‌எஸ்‌ஐ வசதி உண்டா ? பி‌எஃப், பணிக்கொடை எதுவும் கிடையாது. தொழிலாளர்களுக்கான சட்டப்படியான சலுகைகள் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் எல்லா கட்சிகளும் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஓட்டுப் போட்டு தேர்வு செய்தவர்கள் திட்டமிட்டு இந்த உரிமைகள் நமக்கு கிடைக்காமல் செய்தார்கள். முதலாளிகளுக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்கள்.

புஜதொமு 2014இல் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் இதே பிரச்சினைகளுக்காக நடத்தினோம். விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினையில் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். நடந்திருப்பது சட்டப்படியான ஒப்பந்தம் அல்ல கட்டப்பஞ்சாயத்து என்றோம். 12/3 ஒப்பந்தம் போட சொன்னோம். அதனை விசைத்தறி சங்கத் தலைவர்கள் மறுத்தார்கள். விளைவு மீண்டும் நெருக்கடி இந்த முறை நெருக்கடி முற்றிப் போயி உள்ளது. இதனை போராடித்தான் தீர்வுக்கு கொண்டு வர முடியும். சாதுரியமாக நடந்து கொண்டால் டெல்டா மாவட்டங்களில் ஏற்படும் நிலைதான் தறி மாவட்டங்களிலும் ஏற்படும்.

தஞ்சையில் கடந்த டிசம்பர் முதல் இன்று வரை ஒரே மாதத்தில் 90-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்ந்த பயிரைக் கண்டு கண்ணீர் வடித்து நெஞ்சு வெடித்து வயலில் விழுந்து சாகிறார்கள்.

இதே போல் சோமனூர் பகுதி அறிவாளிகள் அது போல நடக்காது என நினைக்கலாம் ஆனால் நிலைமை அப்படி இல்லை. வெளி மாவட்ட தொழிலாளிகள் இப்போது வெளியேறி உள்ளார்கள். இதுவே அபாயமணி என எடுத்துக் கொள்ளுங்கள் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாமல் தான் விசைத்தறிக்கு மாறினோம். விசைத்தறியும் இல்லையெனில் அடுத்து எங்கு மாறுவது ? போராட்டம் தான் தீர்வு.

Vilavai Ramasamy (2)
தோழர் விளவை ராமசாமி

2007 இல் காங்கிரஸ் கவர்ன்மெண்ட் நம் தொழிலுக்கு அடிப்படையான பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது. பஞ்சு இந்தியாவுக்கு அவசியம் இல்லையா…? ஏன் பி‌ஜெ‌பி சர்க்கார் காங்கிரஸ் முடிவை மாற்றி பஞ்சை அத்தியாவசிய பொருட்கள் இடத்தில் மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வில்லை. பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் நமது தொழில் நலிவடையாது. அதே நூலின் விலையையும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் பதுக்கி வைத்து விலையேற்றுகிறான். பஞ்சில் விலை ஏறுது ஆனால் நாம் உற்பத்தி செய்யும் ஜவுளி விலை குறையுது. பின்னர் குறைந்த விலையில் வாங்கியபிறகு விளம்பரம் செய்து துணியின் விலையை ஏற்றிக் கொள்கிறான்.

நாம் உற்பத்தி செய்த துணியின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நமக்கே வேண்டும். பஞ்சைப் பதுக்கும் முதலாளிகளை கைது செய்ய வேண்டும்.

இதற்காக நாம் விசைத்தறியில் ஓடும் நாடாவை கையில் எடுக்க வேண்டும். நாட்டை கைப்பற்ற வேண்டும் சோமனூர் வீதியில் இறங்கவேணும். கோவை ஜெயிலை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அங்கு அதிகபட்சம் 2500 பேரை அடைக்கலாம். அதன் கொள்திறனே அவ்வளவு தான். இரண்டாயிரம் பேர் முன்னரே உள்ளே இருக்கிறான். நாம் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறோம். நாம் ரோட்டுக்கு வந்தால் அனைத்தும் நிறைவேறும் என வீதியில் இறங்கி போராடுவோம்”, எனக் கூறி முடித்தார்.

பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட செயலர் தோழர் திலீப் அவர்களின் நன்றியுரையோடு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

  • தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
    கோவை