Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 511

பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

0
உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.

சுயமரியாதையை அழித்து…  பார்ப்பனப் பண்பாட்டைத் திணித்து…

‘‘டவுள் மீதும் தேசியத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட, திராவிட இயக்கத்தால் வெறுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், அத்திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கட்சிக்குத் தலைவியாகி, அதனைத் தனது இரும்புப் பிடியில் வைத்திருந்தது வரலாற்று முரண், அதிசயம்’’ என்றெல்லாம் ஊடகங்கள் ஜெயா அ.தி.மு.க.விற்குத் தலைமை தாங்கியதை ஆச்சரியத்தோடு விவரிக்கின்றன.

42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)
42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)

கடந்த ஐம்பது, அறுபது ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாற்றிலிருந்து இருந்து பார்த்தால், அ.தி.மு.க.வின் தலைவியாக பார்ப்பன ஜெயா கோலோச்சியது, அதிசயமாகவோ, முரணாகவோ இருக்காது. பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம், பெரியாரின் கொள்கைகளைப் பூஜைக்குரியாதாக்கி, பெரியார் திடலுக்குள்ளேயே ஒடுங்கிப் போய்விட்டது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து உருவான திராவிட முன்னேற்றக் கழகமோ, அதன் தொடக்கத்திலேயே பெரியாரின் கடவுள் மறுப்பு, நாத்திகப் பிரச்சாரம், பார்ப்பன எதிர்ப்புகளில் சமரசம் செய்துகொண்டு, பின்னோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் திராவிட இயக்கத்தின் அங்கமாகக் கருதுவதே கேலிக்குரியது. மீசை வைத்தவனெல்லாம் வீரன் எனப் பார்ப்பதைப் போன்று பாமரத்தனமானது. பெரியாரை இன்றுவரை இந்து மத விரோதியாக, தேச விரோதியாகப் பார்க்கிறது, ஆர்.எஸ்.எஸ். ஆனால், பெயரில் மட்டுமே திராவிடத்தைக் கொண்டுள்ள அ.தி.மு.க.வை, ‘‘நாத்திகத்தை நாகரிகமாக்கிய, தேசியத்தை எள்ளி நகையாடிய, நாட்டு ஒற்றுமையைக் குலைத்த, தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி (அ.தி.மு.க.)’’ என மதிப்பிடுகிறார், ஆர்.எஸ்.எஸ்.−ஐச் சேர்ந்த குருமூர்த்தி (துக்ளக் தலையங்கம், 28.12.16).

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி இந்து முன்னணியின் விஜயபாரதத்தில் வந்த கட்டுரையின் தலைப்பு, ‘‘எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை.’’

ஒருவனுடைய கொள்கை உறுதியை எதிரிகள் எப்படி மதிப்பிடுகிறார்கள் என்ற அடிப்படையைக் கொண்டு பார்த்தால், அ.தி.மு.க. திராவிட இயக்கத்தில் தோன்றிய கோடாரிக்காம்பு, புல்லுருவி என்பதற்கு, குருமூர்த்தி, விஜயபாரதத்தின் மதிப்பீடுகளைத் தாண்டி வேறு சான்றுகள் தேவையில்லை.

நாத்திகம், கடவுள் மறுப்புக்கு விரோதமான கோவில், குளங்களைச் சுற்றி வருவது, சாதி ஒழிப்பைக் கைவிட்டு சாதி அரசியல் நடத்துவது, ஓட்டுப் பொறுக்குவதற்கும், அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் பெரியாரின் கொள்கைவிட, பார்ப்பன ஆதிக்க சக்திகளோடு சமாதான சகவாழ்வு வாழ்வது எனத் திராவிட ஓட்டுக்கட்சிகள் சீரழிந்தும், பார்ப்பன அடிமைத்தனத்திலும் பிழைப்புவாதத்திலும் மூழ்கிப் போய்விட்ட நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கழிசடைக் கட்சிக்கு ஒரு பார்ப்பனத்தித் தலைவியாக வந்தது இயல்பான பரிணாம வளர்ச்சிதான்.

பா.ம.க. போன்ற சாதிக் கட்சிகளைத் தவிர, மற்றைய ஓட்டுக்கட்சித் தலைவர்கள் பொதுவெளியில் தம்மைக் குறிப்பிட்ட சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் பிற்போக்குத்தனத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனால், ஜெயாவோ தனது சாதி அடையாளத்தைக் காட்டிக் கொள்ள தயங்கியதேயில்லை. அவர் முதன் முறையாக முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்தவுடனேயே, தமிழகப் பிராமணாள் சங்கம், ‘‘நடப்பது நம்மவா ஆட்சி’’ எனப் புளகாங்கிதத்தோடு அறிவித்தது. அதற்கு அங்கீகாரம் கொடுப்பதைப் போல, ‘‘நான் பார்ப்பனத்திதான்’’ எனச் சட்டமன்றத்திலேயே சாதித் திமிரோடு அறிவித்தார், ஜெயா.

ஆட்சிக்கு வந்த நான்காவது மாதத்திலேயே (செப்.91) கும்பகோணம் மகாமகம் திருவிழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி 48 தமிழர்களைப் பலியிட்டார். தனது தோழி சசியோடு குளத்தில் நீராட வந்த ஜெயாவிற்குத் தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், கெடுபிடிகளால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, அரசின் கணக்குப்படி 48 தமிழர்கள் உடல் நசுங்கி, மூச்சுத் திணறிச் செத்துப் போனார்கள். இவ்வளவு பேர் இறந்து போனதை, பலர் படுகாயமடைந்ததை அறிந்தும்கூட, பார்ப்பன ஜெயா நேரில் வந்து பார்வையிடவில்லை, ஆறுதல் தெரிவிக்கவில்லை. மாறாக, நீராடி முடித்த கையோடு, விருந்து சாப்பிட்டுவிட்டு சென்னை திரும்பினார். பார்பனியமும் அதிகாரமும் சேர்ந்த கலவை எப்படியிருக்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்று.

உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.
உடல் நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிடும் வளர்மதி, சரசுவதி, பாத்திமா பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.வின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள்: பார்ப்பன மூடத்தனம்.

நரசிம்ம ராவ் அரசில் அமைச்சராக இருந்த காங்கிரசைச் சேர்ந்த அருணாசலம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதாலேயே, அவரைத் தனது தனி விமானத்தில் ஏற்றிச் செல்ல மறுத்து, விமானத்திலிருந்து இறக்கிவிட்டு அவமதித்தார். ‘‘அம்முவுக்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும்’’ என எம்.ஜி.ஆர். சொன்னதாக நக்கீரன் இதழ் கட்டுரை வெளியிட்டவுடன், அவ்விதழ் அலுவலகத்தின் மீது அ.தி.மு.க. குண்டர் படையை ஏவிவிட்டுத் தாக்குதல் தொடுத்தார். முதல்வர் ஜெயாவைக் கேவலப்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி நக்கீரன் இதழ் ஆசிரியர் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. மாட்டுக் கறி தாழ்த்தப்பட்டோருடனும் தீண்டாமையோடும் தொடர்புடையது என்ற பார்ப்பன சாதிவெறிதான் நக்கீரன் இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் வழக்குகளுக்கும் காரணம். தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சாதியைச் சொல்லி இழிவுப்படுத்தி, வளர்மதி சட்டமன்றத்தில் பேசியதை பெயருக்குக்கூடத் தடுக்காமல், ரசித்தார்.

நடிகர் சிவக்குமார், தனது மூத்த மகன் சூர்யா−நடிகை ஜோதிகா திருமணப் பத்திரிகையை  ஜெயாவிடம் கொடுக்கச் சென்றபொழுது, கூட வந்திருந்த சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியிடம், ‘‘நீயாவது உங்க அப்பா, அம்மா விருப்பப்படி சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்’’ என ஜெயா புத்திமதி சொன்னதாக நினைவுகூர்ந்திருக்கிறார், சிவக்குமார். இது ஏதோ கவுண்டர் சாதிவெறியர் சிவக்குமாரை அந்தச் சமயத்தில் திருப்திபடுத்தச் சொல்லப்பட்ட அறிவுரை மட்டுமல்ல; சனாதன சாதிக் கட்டுமானத்தின் மீது ஜெயாவிற்கு இருக்கும் பிடிப்பு, வெறியின் வெளிப்பாடும்கூட.

இவையெல்லாம், ஜெயா, தன்னளவிலேயே பார்ப்பன சாதிவெறி பிடித்தவர், தீண்டாமை பாராட்டுபவர் என்பதைப் பொதுவெளியில் அம்பலப்படுத்திய நிகழ்வுகள். அவரது அரசோ, பார்ப்பனத்தி தலைமையின் கீழ் தேவர், கவுண்டர் சாதிவெறிக் கும்பல் குத்தகைக்கு எடுத்த ஆட்சியாக இருந்தது.

சங்கப் பரிவார அமைப்புகளுள் ஒன்றான இந்து முன்னணி தமிழகத்தில் காலூன்ற எம்.ஜி.ஆர்., அரசு ஆதரவாக இருந்தது என்றால், எம்.ஜி.ஆரின் தோழியான ஜெயா ஜி, காக்கி டவுசர் போடாத ஆர்.எஸ்.எஸ். பேர்வழியாகவே நடந்துகொண்டார். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாக, மைய அரசு நடத்திய தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், ‘‘ராமனுக்கு அயோத்தியில் கோவில் கட்டாமல், பாகிஸ்தானிலா கட்ட முடியும்?’’ எனக் கூச்சமின்றி ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு ஆதரவளித்துப் பேசினார். வருமானமில்லாத கோவில்களில் பூஜை, புனஸ்காரங்களை நடத்துவதற்கு வைப்பு நிதித் திட்டம், திருக்கோவில்களில் அன்னதானத் திட்டம் − என அரசு நிதியை மானியமாக பார்ப்பனக் கோவில்களுக்கு அள்ளிக் கொடுத்தார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின், தமது மீட்பரைச் சந்திக்கும் தில்லைவாழ் தீட்சிதர்கள். (கோப்புப் படம்)
சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட பின், தமது மீட்பரைச் சந்திக்கும் தில்லைவாழ் தீட்சிதர்கள். (கோப்புப் படம்)

சூத்திர சாதி மக்களின் வழிபாட்டு முறைகளை மறுக்கும் விதமாக, கிடா வெட்டும் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல, மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தைப் பார்ப்பன செல்வாக்கு மண்டலமாக மாற்ற முயன்றார். இந்த இரண்டு சட்டங்களைத் தமிழகத்தில் ஆதரித்தவர்கள் இரண்டு பிரிவினர்தான். ஒன்று, ஆர்.எஸ்.எஸ். கும்பல், மற்றொன்று பார்ப்பன சாதிவெறியர்கள். இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பிறகு நடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மண்ணைக் கவ்வியதையடுத்து, இந்த இரண்டு சட்டங்களை ஜெயா திரும்பப் பெற்றதைத் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல் கசப்பு மாத்திரையைப் போல விழுங்கி நின்றது.

தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டமும், தீட்சிதர்கள் என்ற கொள்ளைக்கூட்டத்தின் பரம்பரைச் சொத்தாகக் கருதப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் நிர்வாகம், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவும் பார்ப்பன ஜெயா ஆட்சியில்தான் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டன என்பது தற்செயலான நிகழ்வு அல்ல. பார்ப்பன ஜெயா அரசு தீட்சிதர்களோடும் சிவாச்சாரியர்களோடும் கள்ள உறவு வைத்துக் கொண்டு இந்த இரண்டு வழக்குகளைத் தோற்கடிக்கும் விதத்திலேயே உச்சநீதி மன்றத்தில் நடத்தியது.

இப்படி ஒருபுறம் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலிருந்து பார்ப்பனப் பண்பாட்டை, பார்ப்பன ஆதிக்கத்தைத் திணித்த ஜெயா, மறுபுறம் கீழே தனது கட்சி அணிகள், தன்னை ஆதரித்த உதிரி வர்க்கங்களிடம் பார்ப்பன மூடத்தனங்களை வளர்த்துவிட்டார். சசிகலாவிற்கு அடுத்து, ஜெயாவைச் சுதந்திரமாகச் சந்தித்தவர்கள் மலையாள ஜோதிடர்களும், வாஸ்து நிபுணர்களும்தான். அ.தி.மு.க. அமைச்சர்களும், நிர்வாகிகளும் தமிழகத்தை மொட்டையடித்தற்கு அப்பால் செய்த வேலை அம்மாவுக்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கியதுதான்.

ஜெயாவின் பிறந்த நாட்களின்பொழுது தங்கத் தேர் இழுத்த, பால் காவடி எடுத்த, உடம்பில் வேப்பிலையைச் சுற்றிக் கொண்டு தீச்சட்டி ஏந்திய உடன்பிறப்புகள், அவர் ஊழல் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளப்பட்டபொழுதும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையிலும் யாகம் வளர்த்தார்கள், மண் சோறு சாப்பிட்டார்கள், மொட்டையடித்துக் கொண்டார்கள், அலகு குத்திக் கொண்டார்கள். இதற்கெல்லாம் ஆட்களைப் பிடிப்பதற்கு ரேட் வேறு நிர்ணயிக்கப்பட்டது. பக்தி என்ற பெயரில் பார்ப்பனக் கும்பல் திணித்திருந்த மூடப்பழக்கங்களுக்கு எதிராக இயக்கம் கண்டு இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகம், ஜெயாவால், அவரது விசுவாசக் கூட்டத்தால் அவமானப்பட்டு, கேவலப்பட்டு நிற்கிறது.

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோவிலுக்குத் தங்க வாளைக் காணிக்கை செலுத்தித் தொடங்கி வைத்த இந்த அருவருக்கத்தக்க பார்ப்பன மூடப் பண்பாட்டை, இழிந்த, உச்சநிலைக்கு எடுத்துச் சென்றார் ஜெயா. சுயமரியாதை அரசியலைப் பேசிவந்த தமிழகத்தில், அதற்கு எதிரான அடிமைத்தனமும், மூடத்தனமும் மீண்டும் கோலோச்ச தொடங்கியதைத்தான், தமிழகத்தில் மீண்டும் ஆன்மீகம் தழைக்கத் தொடங்கிவிட்டது எனவும், தமிழகம் தேசிய நீரோட்டத்தோடு கலக்கத் தொடங்கி விட்டது எனவும் குறிப்பிட்டுக் கொண்டாடுகிறது, ஆர்.எஸ்.எஸ்.

– ரஹிம்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

1

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

யாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

“சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள்  நந்தினி.

பன்னீரின் கண்ணீரும் சசிகலாவின் கைக்குட்டையும்

5

அம்மா சமாதி

ன்னீர் வடிக்கும்
கண்ணீரில்
அம்மா சமாதியே
அரை அடி உயரும்.

opsசசி துடைக்கும்
கைக்குட்டையில்
காவிரி டெல்டா
ஒருபோகம் விளையும்.

அம்மாவை நினைத்தாலே
அழத்தான் முடியும்.
அவர்களுக்கோ,
அழுகை
சிரிப்பின் முக்காடு
சிரிப்பு
அழுகையின் வேக்காடு.

அழுகைப் போட்டியில்
யாருக்கு முதல் பரிசு?.
தடுமாறுது தமிழகம்
அழுகாச்சி காவியத்தில்
அமுக்கி எடுக்குது ஊடகம்.

சிரித்ததனால்
நான் மனிதன் என்பது
பன்னீரு
சிரித்ததனாலேயே
நீ மனிதனில்லை
என்பது வெந்நீரு.

நீ
பெரிய  குளமென்றால்
நான்
மன்னார் குடி!

அம்மாவுக்கே
நான்தான் ஆன்மா
அடைக்கலம் தருமோ
அம்மா ஆன்மா?
மெரினா தியானத்தை
கலைக்கும்  சின்னம்மா!

பேயைப்  பற்றி
அதன் பாட்டியிடம்
புகார் சொல்வது போன்றது
சின்னம்மாவைப் பற்றி
பெரியம்மாவிடம்
முறையிடுவது.

sasikalaமுதலில்,
எனக்கு எதிரே
உட்காரும் தைரியம்
உங்களுக்கு எப்படி வந்தது?
கடைக்கண் பார்வைக்கு
கிடையாசனத்திலேயே கிடந்தவர்
அரியாசனத்திற்காக
பத்மாசனமா?
கோபத்தில் குமுறுது
அம்மாவின் ஆவி!

பேய்களை சமாளிக்க
ஒரே வழி
பேயாகி விடுவதுதான்.
பேய்களுக்கு கால்களில்லை
நிமிர்ந்து நிற்க முடியாது
நேரத்திற்கேற்ப நெளியலாம்.
இடம் தாவி அலைகின்றன
கரைவேட்டி ஆவிகள்.

பினைக்கைதிகளோடு
ஊரையே சுற்றுது
மன்னார்குடி பஸ்.
அம்மாவைச் சுற்றிவந்து
பழத்தைக் கேட்கிறார்
ஒ.பி.‍எஸ்.

நாம்
வாழ்வுக்கு வழி தேடுகிறோம்
அவர்களோ
சமாதி தேடுகிறார்கள்.

செத்தாலும் விடமாட்டார்
ஜெயலலிதா!
எச்சரிக்கைத் தமிழகமே
ஏய்ப்பவருக்கு
அம்மா சமாதி
ஏமாந்தவனுக்கு
அடுத்த சமாதி!

துரை. சண்முகம்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

1

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 3

மது விவசாயத்தை அழிக்க திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது தான் பசுமைப் புரட்சித் திட்டம். அதைப் பற்றி நாம் விரிவாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் மரபுசார் விவசாயச் செயல்பாட்டாளர் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றார்.

drought2
கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு.

“அது பற்றி ஏற்கனவே நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறைய ஆய்வுகளும் நம்மிடம் இருக்கின்றன. நீங்க… இந்த சமயத்தில் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைக்கு பாரம்பரிய விவசாயம் முன்வைக்கும் தீர்வுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்றோம்.

”அதாவதுங்க.. நம்மளோட பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களையெல்லாம் பசுமைப் புரட்சியிலே அழிச்சிட்டாங்க. அதில் சில ரகங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடியவை; அதே போல சில ரகங்கள் கடுமையான வெள்ளத்தையும் தாங்கி வளரக் கூடியவை. பாரம்பரிய ரக நெல்லுக்கு இப்ப போடக்கூடிய அளவுக்கு ரசாயன உரங்கள் தேவையில்லை”

“ஆனால், பாரம்பரிய நெல் ரகங்கள் ஒட்டு ரக பயிர்களை விட விளைச்சல் குறைவாக இருக்கும் என்று தானே சொல்றாங்க?”

”அது ஒரு விசமத்தனமான பிரச்சாரம் சார். ஒரு ஏக்கருக்கு முப்பது மூடை என்பது தான் நவீன ரக பயிர்களுக்கு அரசே நிர்ணயம் செய்திருக்கிற சராசரி உற்பத்தி அளவு. இதுலே அரசே நிர்ணயம் செய்திருக்கிற செலவு பார்த்தீங்கன்னா 20 ஆயிரம். அதாவது, மழை, தண்ணீர் எல்லாம் சரியா இருந்தா… அரசு சொல்லும் கணக்குப் படி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு போக விளைச்சலுக்கு கிடைக்கப் போற லாபம், 5,500. இன்னொரு போகம் நெல்லும் விளைஞ்சி, நடுவுல மாற்றுப்பயிரும் சரியா விளைஞ்சா ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் 20 ஆயிரத்துக்கும் கொஞ்சம் குறைவா வரலாம். அதே பாரம்பரிய விவசாய முறையிலயும் ஏறக்குறைய இதே அளவுக்கு விளைச்சல் இருக்கும்.. ஆனா, செலவுன்னு பார்த்தா உர செலவு மிச்சம். அதுல ஒரு மூன்று அல்லது நான்காயிரம் ரூயாய்கள் ஒரு போகத்துக்கு மிச்சமாகும். வருசத்துக்கு பத்துலேர்ந்து பன்னிரண்டு ஆயிரம் அதிகமா கிடைக்கும்”

”சரிங்க.. ஆனா ஒட்டுமொத்த விவசாயத்துக்கான அடிக்கட்டுமானமே அரசின் கொள்ளைகளால உடைத்து நொறுக்கப்படுது. அரசோட நோக்கமே விவசாயத்தை அழிக்கிறதா இருக்கும் போது பாரம்பரிய விவசாயம் மட்டும் இந்த சூழல்லே இருந்து தப்பிக்க முடியுமா?”

“அது முடியாது என்பதை ஏற்கிறேன். அரசினுடைய விவசாய விரோத கொள்கைகளுக்கும் சேர்ந்தே தான் நாங்க போராடிகிட்டு இருக்கோம். ஆனா, இதற்கு மேல விவசாயம் உயிரோட இருக்கனும்னா அதுக்கு பாரம்பரிய விவசாயம் மட்டுமே ஒரே தீர்வா இருக்கும்னு நம்புறோம்” என்றார்.

தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்
தனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்

“ஆனால், கருநாடகத்திலேர்ந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் அந்த மாநிலத்தின் மொத்த கழிவும், குறிப்பா பெங்களூரில் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் இரசாயனக் கழிவு நீரும் கலந்து தான் வருது. இதே நிலைமை இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் நீடிச்சா தஞ்சை மண்ணே விசமாகிப் போகாதா? ஒட்டுமொத்த சூழலும் மாசுபடும் போது, பாரம்பரிய விவசாயம் மட்டும் எப்படிக் காப்பாற்றும்?”

”அது முடியாது என்பது சரி தான். அப்படியான பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்பதையும் ஏற்கிறேன். ஆனால், இந்த சூழலுக்குள்ளேயே பாரம்பரிய விவசாய முறை ஓரளவுக்காகவது விவசாயியைக் காப்பாற்றும் என்பது தான் எங்களது வாதம்” என்றார்.

நாங்கள் அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினோம். விவசாயம் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டு வரும் போக்கை அவர் உணர்ந்துள்ளார். எனினும், அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தை பாரம்பரிய முறைகளின் மூலம் காப்பாற்றி விட முடியும் என்பதை ஆணித்தரமாக நம்பவும் செய்கிறார். பாரம்பரிய விவசாயத்தைப் பரவலாக்க நம்மாழ்வார் துவங்கி எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளையும், தற்போது நடத்தப்பட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் குறித்தும் விளக்கினார்.

”விவசயாம் சார்ந்த மாற்றுத் தொழில்கள்” எனும் பெயரில் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதே அரசின் கொள்கையாக இருக்கும் சூழலில் மரபுசார் விவசாய உத்திகள் மட்டும் விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட முடியாது என்கிற எதார்த்தத்தை உணரவில்லை என்பது ஒருபுறம் இருக்க; இன்னொரு புறம் மரபுசார் வேளாண்மை குறித்த பிரச்சாரங்கள் ஏதோவொரு வகையில் விவசாயிகளுக்கு தற்காலிக நம்பிக்கை ஏற்படுத்தும் என்.ஜி.ஓ அரசியலையே முன்வைக்கின்றன.

தற்போது ஆங்காங்கே நடந்து வரும் மரபுசார் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு – அதில் குறிப்பாக அரிசி ரகங்களுக்கு – சந்தையில் உள்ள வரவேற்பைக் குறித்து அறிந்து கொள்ள தஞ்சையில் உள்ள அரிசி ஆலை மற்றும் அரிசி மண்டி ஒன்றின் உரிமையாளர் திரு பால்ராஜ் அவர்களைச் சந்தித்தோம்.

”நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது உண்மை தான். அதெல்லாம் ஆரம்பத்திலேயே முடிஞ்சி போச்சு. இப்ப அதிகமா யாரும் கேட்கிறதில்லே. ஒரு சிலர் வாங்கிட்டு இருக்காங்க.. மத்தபடி பாரம்பரிய ரகங்களை வாங்கி வைத்தா தேங்கிடுது” என்கிறார் பால்ராஜ்.

”பாரம்பரிய அரிசி ரகங்கள். சிறு தானிய உணவு வகைகளை சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி மாதிரியில்லே சொல்றாங்க? அப்புறம் ஏன் மக்கள் அதை விரும்பி வாங்கறதில்லே”

“அதுல உண்மை இருக்குன்றது என்னோட சொந்த அனுபவம் தம்பி. நானே கூட பாரம்பரிய ரகங்களை சாப்பிடுவேன். அதைச் சாப்பிட்டா உடம்பே லேசான மாதிரி இருக்கும். உடம்புலே அசுத்தம் தேங்காது.. சர்க்கரை வியாதி கட்டுக்குள்ளே இருக்கும்..”

Organic-Rice2
நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது

“எங்களோட கேள்வி… அப்படி இருக்கும் போது மக்கள் ஏன் விரும்பி வாங்குறதில்லே?”

”நம்ம ஆளுங்களுக்கு சோறைப் பிசைந்து கையில் ஏந்தினால் அதில் சாம்பாரோ ரசமோ பற்றி நிற்கணும். வழிஞ்சி ஓடினா ஆகாது. சாம்பார், பருப்புக் குழம்பு, காரக்குழம்பு, ரசம் மாதிரியான நம்முடைய சமையல் முறைக்கு இந்த ரகங்கள் சரியா செட் ஆகிறதில்லே. கர்நாடகா பொன்னி, ஆந்திர பொன்னி ரகங்கள் இங்கே எடுபடாம போகிறதுக்கும் இதே தான் காரணம். ஆனாலும், சிறு தானியங்களை வாங்கறவங்க வாங்கிக்கிட்டு தான் இருக்காங்க.. ஏதோ உப்புமா பொங்கல் மாதிரியாச்சும் வச்சி சாப்பிடுறாங்க…. சிக்கல் என்னான்னா, இப்படி உடல் நலனுக்காக பிடிவாதமா வாங்குறவங்க சிறுபான்மையா இருக்காங்க. மத்தபடி பெரும்பாலானவங்க சாதாரண அரிசி தான் வாங்கறாங்க”

“அதுக்கு என்ன காரணம்?”

“நம்முடைய சமையல் முறை தான். இந்த முறையான சமையலுக்கு எத்தனையோ தலைமுறைகளா நாம் பழக்கப்பட்டிருக்கோம். மாற்றிக் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை… எனக்குத் தெரிஞ்சு பாரம்பரிய விவசாயத்துக்கு மாறினவங்க பலரும் விளைச்சலுக்கு சந்தை இல்லாத காரணத்தாலே பழையபடி நவீன விவசாய முறைக்கு மாறியிருக்காங்க..”

”நீங்க பல வருசங்களா விவசாயிகள் கிட்டே இருந்து நெல் கொள்முதல் செய்திருக்கீங்க. உங்களோட அனுபவத்திலேர்ந்து இத்தனை வருசங்கள்லே சாகுபடி முறைகள்லே என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கு?”

பசுமைப் புரட்சிக்கு முன்னே மேலத் தஞ்சைலேர்ந்து மேற்கே திருச்சி வரைக்கும் வரகு சோளம் தான் பயிரிடுவாங்க. இந்தப் பகுதிகள்லே இயற்கையா அமைஞ்சிருந்த ஆற்றுப் பாசன முறையும் சரி, மழையை நம்பியிருந்த மானாவரி பாசன முறையும் சரி, அந்த மாதிரி பயிர்களுக்குத் தான் ஏதுவானதா இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்னே, இந்தப் பகுதிகள்லே ஒரு சில இடங்கள்லே இருந்த நெல் சாகுபடி பரவலாச்சி. இன்னைக்கு நீங்க எங்கயுமே வரகு பயிரைப் பார்க்கவே முடியாது”

“அப்படின்னா நெல் உற்பத்தியோட அளவு அதிகரிச்சிருக்க வேணுமே?”

“ஆமாம். சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கத் தான் செய்தது. இப்ப கடந்த பத்தாண்டுகள்லே என்ன நிலைமைன்னா.. கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு. இயற்கையா நெல் விளையறதுக்கு ஏதுவான அந்தப் பகுதியோட உட்கட்டமைப்புகள் எதுவும் புனரமைக்கப்படவே இல்லை”

“இப்ப உங்களோட கொள்முதல் எப்படி இருக்கு?”

“டெல்டா மாவட்டங்கள்லே நெல் விளைச்சல் எந்தளவுக்குக் குறைஞ்சிருக்கோ அதே அளவுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள்லே அதிகரிச்சிருக்கு. அங்கெல்லாம் ஆறு-கால்வாய் பாசனம், போர்வெல் பாசனம்னு செய்யுறாங்க. அதே மாதிரி வெளி மாநிலங்கள்லே இருந்தும் நெல் வருது. ஆந்திரா கருநாடகாவிலேர்ந்து நெல் வருதுன்றது ஒரு பக்கம்… இப்ப சில வருடங்களா ஒரிசா, மேற்கு வங்கத்திலேர்ந்து கூட வருது. அதுவும் ரொம்ப சல்லிசான விலைக்கே வருது”

”சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் இப்படி ஒரு வாதம் முன்வைக்கிறாங்க.. அப்படியே விவசாயம் டெல்டா பகுதியிலே அழிஞ்சாத் தான் என்ன? வேறு தொழில் பிழைப்புன்னு போயிட வேண்டியது தானே. லாபமில்லாத விவசாயத்தை ஏன் கட்டியழ வேணும்? தொழிற்சாலைகள், ஐ.டி அப்படின்னு எத்தனையோ வழியிருக்கே?”

”இல்லைங்க.. அவங்க சொல்ற மாதிரி இல்லை. நான் விவசாயிகளோட நெருங்கிப் பழகியவன் என்கிற முறையில சொல்றேன். இங்கேர்ந்து திருப்பூருக்கு வேலைக்குப் போனவனெல்லாம் கொஞ்ச நாள்லே திரும்பி ஓடியாந்துடறான். ஏன்னா.. இது அவன் நிலம். அவனோட சொந்தம். திருப்பூர் பனியன் கம்பெனி அப்படியா? காலைலே சோத்தைக் கட்டிக்கிட்டு உள்ளே போனா சிறைக்கைதி மாதிரி சாயந்திரம் வரைக்கும் அடைஞ்சி கிடக்கனும். அங்கே எதுவும் சொந்தம்னு இல்லை. சுதந்திரமா வேலை செஞ்சி பழகினவங்களை இப்படி அடிமைகளைப் போல அடைச்சி வேலை வாங்கறதும் கஸ்டம்.. இவங்க அப்படி வேலை செய்யிறதும் கஸ்டம்..”

”சரி, இங்க வந்தா மட்டும் என்ன சொர்க்கமாவா இருக்கப் போகுது?”

“இது சொர்க்கம் இல்லை தான். இங்கே பிழைப்பு இல்லை தான். சோத்துக்கு வழி இல்லை தான்.. ஆனா அடிமையா இருக்க வேண்டியதில்லை தானே… சுதந்திரம் இருக்கில்லே?”

“கூலி விவசாயிகளோட நிலைமை?”

“அவங்க தங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்டாங்க. நூறு நாள் வேலைத்திட்டத்திலே கிடைக்கிற கொஞ்சம் கூலிய வைத்து வாழ்க்கையை ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை”

photo-26
உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை

”சரி, குறைந்த பட்சம் டெல்டா மாவட்டங்களோட தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்காவது நெல் சாகுபடி நடக்குதா?”

“இல்லைங்க.. இப்ப வெளி மாநில நெல் கணிசமா வர ஆரம்பிச்சிடுச்சி. இனி வர்ற வருசங்கள்லே இது அதிகரிக்கும்”

“ஆந்திரா கர்நாடகா பொன்னி பற்றி சொன்னீங்க. அதுக்கும் நம்முடைய அரிசிக்கும் என்ன வித்தியாசம்?”

“நம்முடைய முறைக்கும் அவங்க முறைக்குமான வித்தியாசம் தான். அதாவது நாங்க நெல்லை வாங்கி ஒரு இரவு முழுக்க ஊற வைப்போம். அடுத்த நாள் அவித்து காயவைத்து பின்னாடி மிசின்லே போடுவோம். நம்முடையது பழைய முறை. அவங்களோடது நவீன முறை. நேரடியா நீராவில அவிச்சிருவாங்க..”

“எப்படியும் அவிக்கிறது தானே.. இதிலே என்ன வித்தியாசம்?”

”வித்தியாசம் இருக்கு. பழைய முறைப்படி அவிக்கும் போது நெல் ஒரே சமமா அவியும் – காயும். நீராவில அவிக்கும் போது நெல்லோட இரண்டு பக்கங்களும் அதிகப்படியா அவியும். அப்புறம், ஆவி நெல்லுக்குள்ளே ஊடுருவிப் போயிரும். அதனால ரெண்டு பிரச்சினை இருக்கு.. ஒன்னு, அந்த அரிசியை நீங்க ரொம்ப நாளைக்கு சேமித்து வைக்க முடியாது – வண்டு விழும். இன்னொன்னு, சோறு வடிக்கும் போது அரிசியின் முனைப்பகுதிகள் வெந்து நடுப்பகுதி வேகாமலும் போயிடும். சோறு விரை விரையா நிற்கும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்முடைய சமையல் முறைக்கு இது ஒத்து வராது. குழம்பில் சோற்றைப் பிசைந்து கையில் ஏந்தினால் எல்லாம் தனித்தனியா நிற்கும்.. சேராது. ஆனா இனி வேற வழி இருக்காது.. பழகிக்க வேண்டியது தான்”

அவர் சொன்னதில் உண்மை இருந்தது. மக்கள் இதற்குள் வாழக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். விவசாயம் பொய்த்ததற்கு இயற்கையின் மேல் கைநீட்டிய பலரும், உட்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டிருப்பதைக் கேள்விக்குட்படுத்தவில்லை. பலரும் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு சரியாக கூலி கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அதே நேரம், அந்த திட்டமே விவசாயத்தை புதைகுழியில் வீழ்த்தும் ஒரு சதியின் அங்கம் என்பதை உணரவில்லை.

என்.ஜி.ஓ குழுக்கள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை மக்களுக்கு ஏதோவொரு வகையிலான நம்பிக்கையை விதைக்க முற்பட்டு வருகின்றன. இந்தப் பேரழிவை எதிர்த்துப் போராடாமல், அதற்குள்ளேயே தங்களுக்கென்று ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட முடியும் என்கிற சிந்தனையை விதைப்பதில் கணிசமான அளவுக்கு வெற்றி ஈட்டியுள்ளன.

எனினும், எதார்த்த வாழ்க்கையின் பாடங்கள் மக்களுக்கு உண்மை எதுவென்று பளிச்சென்று காட்டி வருகின்றன. விவசாயத்தைக் காப்பதற்கான போராட்டங்களாக இல்லாவிடினும், கீழத் தஞ்சையின் பல பகுதிகளில் வேறு வேறு காரணங்களை முன்னிட்டு சிறு சிறு பகுதிப் போராட்டங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டார் உடன் வந்த தோழர். விவசாயத்தின் அழிவே டெல்டா மாவட்டங்களின் மற்ற பிரச்சினைகளுக்கான அனைத்தும் தழுவிய காரணமாக உள்ளதை மக்கள் அறிந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே நீண்ட கால நோக்கில் இதற்கான தீர்வாக இருக்கும்.

– முற்றும்

நேர்காணல் : வினவு செய்தியாளர்கள்

காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 1
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? – பாகம் 2

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – போராட்டச் செய்திகள்

0

kanchipuram-ndlf-protest- (2)

காஞ்சிபுரம்

டந்த ஜனவரி 17 முதல் 23 வரை சென்னை மெரினாவில் துவங்கிய போராட்டம்  மதுரை கோவை திருச்சி உள்பட  தமிழகம் முழுவதும்  ஜல்லிகட்டு  உரிமைக்கான  போராட்டமாக  துவங்கி  தமிழக மக்களின்  உரிமைக்கான போராட்டமாக  வளர்ந்தது. பல லட்சகணக்கான மக்கள் திரண்ட போராட்டம் பாசிச மோடி தலைமையிலான மத்திய அரசையும்  மாநில அரசையும் பணிய வைத்தது.

மாணவர்கள் – இளைஞர்கள்  துவங்கிய  இப்போராட்டத்தில்   “மக்கள் அனைவரும்  உணர்வுப் பூர்வமாகவும் சுய கட்டுப்பாட்டுடனும்  போராடியது  அரசு அதிகார வர்க்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வெற்றியடைந்து விட்டோம் என்ற  பெருமித  உணர்வை அனுபவத்தையும் மாணவர்கள் இளைஞர்கள்  மக்கள் பெற்று விடக் கூடாது என்பதற்க்காகதான்  போலீசு கும்பல்  கொலை வெறித் தாக்குதலை நடத்தியது. இதற்கெதிராக மக்களை திரட்டி உடனடியாக  ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற அடிப்படையில்  மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே “ போலீசு ராஜ்ஜியம் காட்டு மிராண்டி தர்பாரை கண்டித்து ” என்ற முழக்கத்தின் அடிப்படையில்  கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

kanchipuram-ndlf-protest- (1)தனது தலைமை உரையில்  “போலீசின்  காட்டு மிராண்டித் தனத்தை கண்டித்தும்  மாணவர்கள் – மக்கள் போராட்டத்தை உயர்த்திப் பிடித்தும்  பேசினார்.  அதைத் தொடர்ந்து  போலீசின் கொலை முகத்தை அம்பலப்படுத்தியும் அதன் தாக்குதலை  கண்டித்தும்  அதேப் போல  மோடி  தலைமையிலான மத்திய அரசை அம்பலப்படுத்தியும்  முழக்கமிடப்பட்டது. அடுத்து  பு.மா.இ.மு – வின் தோழர் துணை வேந்தன் பேசுகையில் ” இளைஞர்களின்  போராட்டத்தில்  சுயகட்டுப்பாடும்  ஒழுங்கும்,  அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தையும்  அவர்களது  இருப்பையும் செல்லா காசாக்கி விட்டது.  மாணவர்கள் எல்லாவற்றையும்  பேசினார்கள்  அதன் விளைவு  கோக் –பெப்சி  புறக்கணிக்கும்படி முழங்கிய அவர்களது முழக்கம்  நடை முறை சாத்தியமாயிருக்கின்றது  இப்படிப்பட்ட சீரிய போராட்டத்தை  திட்டமிட்டுதான் போலீசு தாக்குதல் நடத்தி தடுத்திருப்பதை  சுட்டிக்காட்டி  தமது கண்டனத்தை பதிவு செய்தார்”

இறுதியாக  கண்டன  உரையாற்றிய  பு.ஜ.தொ.மு – வின் மாவட்டச் செயலாளர்  தோழர் சிவா  பேசுகையில் ”மாணவர்கள் – இளைஞர்கள் மெரினாவில் மூட்டிய தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. தன்னெழுச்சியாக திரண்ட பல லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களை ஒழுங்குப்படுத்தியதும் அதற்கு கட்டுப்பட்டு  மற்றவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தது என்பதை மக்கள் ஒவ்வொருவரும்  போராட்டத்தை உணர்வு  பூர்வமாக  பார்த்தனர்”. நாளை ஒவ்வொரு பிரச்சனைக்கும் இப்படி திரண்டு விட்டால் தமது கொள்ளையை, சுரண்டலை நடத்த முடியாது அல்லவா !  அதன் வெளிப்பாடுதான்  போலீசு கும்பலின் கொலை வெறித்தாக்குதல்.  இந்த தாக்குதலுக்கு  திட்டமிட்டு  உத்தரவிட்டது  RSS  – ன் அடியாளான  ஆளுநர் வித்யசாகர்தான்  இதற்கு பன்னீரும் பக்க kanchipuram-ndlf-protest- (3)வாத்தியம் வாசித்திருக்கின்றார்.  இந்த போலீசு கும்பலை தற்போது இருக்கும் சட்ட – நீதிமன்ற  முறையில்  ஒரு போதும் தண்டிக்க முடியாது. இதுவரை தண்டித்ததாக  வரலாறும் இல்லை. ஏனெனில்  மக்களுக்கு எதிராக இருக்கும்  அரசமைப்பின்  ஒர் அங்கம்தான்  இந்த  போலீசு.  ஆகவே  மக்களுக்கு எதிராக இருக்கும்,  நிலுவுகின்ற  அரசமைப்பை  துக்கியெறிந்து விட்டு  மக்களுக்கு  அதிகாரம் அளிக்க கூடிய  புதிய ஜனநயக புரட்சிக்கு  அணி திரள வேண்டுமென கூறி தனது உரையை  நிறைவு செய்தார்.

அதைத் தொடர்ந்து முழக்கமிடப்பட்டது இப் போராட்டத்தில்  மாணவர்களும், இளைஞர்களும்,  AX  கிளை தொழிலாளர்களும், பெண்களும்  உணர்வுடன்  முழக்கமிட்டனர். இறுதியாக   மாவட்ட செயற் குழு  உறுப்பினர் தோழர் பழனி வேல்  நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
காஞ்சிபுரம்  மாவட்டக்குழு
8807532859.

***

கும்மிடிப்பூண்டி

tiruvallur-east-ndlf-protest1போலீசு ராஜ்ஜியம்: காட்டுமிராண்டி தர்பாரைக் கண்டித்து…. கண்டன தெருமுனைக்கூட்டம்.

ல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமெங்கும் அமைதிவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீசு நடத்திய வெறியாட்டத்தைக் கண்டித்து பு.ஜ.தொ.மு சார்பாக, கடந்த 02.02.17 அன்று மாலை 5 மணியளவில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே கண்டன தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு  மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் SRF புதிய ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் தனது கண்டன உரையில், போலீசை நாம் கண்டிக்க தனியாக கூட்டம் போட்டு கண்டிக்க தேவையில்லை! மக்களே போலீசை பற்றி நன்கு அறிந்து கொண்டுள்ளனர் என்பதையும், மூன்று நாள் தன்னுடைய மெரினா அனுபவத்தில் இளைஞர்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். மேலும் இளைஞர்களின் போராட்டம் என்பது ஜல்லிக்கட்டோடு நின்று விடக்கூடாது. தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

tiruvallur-east-ndlf-protestஜனநாயக தொழிற்சங்க மையத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் அப்பு தனது கண்டன உரையில் போலீசு திட்டமிட்டு வன்முறை நடத்தி, நடுக்குப்பத்தில் மீன் சந்தையை கொளுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த மீன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது கேவலமாக இல்லையா என சாடினார். இனி வரும் தருணங்களில் புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைந்து பாசிச அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.

இறுதியாக, பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் கண்டன உரையில், போலீசின் வன்முறை வெறியாட்டம் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நம் கண் முன்னே பல உதாரணங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போலீசு உள்ளே புகுந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை தாக்கியது கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம், முல்லை பெரியாறு போராட்டத்தின் போது போராடிய லட்சக்கணக்கான விவசாயிகளை தாக்கியதை சுட்டிக்காட்டினார். போலீசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பதை நாம் புரிந்துகொள்ள மேற்கண்ட நிகழ்வுகளில் உணரவேண்டும் என்று பேசினார். அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பில், தான் ஏற்று கொண்ட வேலைகளிலிருந்து எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், அதனை திமிர்த்தனமாக செய்யும் அளவிற்கு நடைமுறையில் இன்று மாறிவருகிறது. இதனை மக்கள் சக்தியால் வெல்ல முடியும்! என்பதை வலியுறுத்தி பேசினார்.

இந்த கூட்டத்தின் வாயிலாக,

மெரினா போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் பஞ்சாயத்த கலைக்கப் பார்த்தாரு பன்னீரு, சுப்புர.. சுப்புர.. சுப்புமணி சாமி என்ற இரண்டு பாடல்கள் பாடியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கண்டன முழக்கமிட்டு தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
94444 61480

***

சென்னை பட்டாபிராம்

tiruvallur-west-ndlf-protest2புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 02.02.2017 அன்று மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில், மெரினாவில் கலவரம் செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டித்து: எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுதிக்கு உட்பட்ட கிளை மற்றும் இணைப்பு சங்கத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

தலைமையுரை ஆற்றிய தோழர் சரவணன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமாக மட்டும் இப்போராட்டத்தை சுருக்கி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருவதற்கு எதிராக தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை மத்திய-மாநில அரசுகளின் துணையோடு, காவல்துறையினர் கலவரமாக்கினர் என்றும், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.

tiruvallur-west-ndlf-protest3டிஐ மெட்டல் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல், கூட்டத்தை வாழ்த்தி பேசினார். குறிப்பாக சரியான நேரத்தில் காவல்துறையை கண்டித்து இத்தெருமுனைக் கூட்டம் நடைபெறுவதாகவும். மக்கள் எந்த பிரச்சனைக்காக போராடினாலும் முதலில் வருவது காவல்துறையினர் தான் என்றும், ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கையும் காவல்துறையினர் தான் பாதுகாப்பது போல் போலி மாயையை உருவாக்க முனைகின்றனர். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் ஒரு வன்முறையோ, வழிப்பறியோ, அசம்பாவிதங்கள் இன்றி கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இதனை கலவரமாக்கியது காவல்துறையினர் தான் என்றும், அவர்களை தண்டிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என கூறினார்.

இத்தெருமுனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் தோழர் முகிலன் சிறப்புறையாற்றினார். காவிரி பிரச்சனை, பாலாற்றில் தடுப்பணை, சிறுவானி ஆற்றில் புதிய அணை டெல்டா விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, நியூட்ரினோ,கெயில்,மீத்தேன் திட்டங்கள் திணிப்பு ஆகிய ஒட்டு மொத்த பிரச்சனையில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டம். மீனவர் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கியுள்ளனர், வீடுகளை அடித்து உடைத்தும், குடிசைகளுக்கும், ஆட்டோக்களுக்கும் தீவைத்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், அப்பகுதி பெண்களுடைய சுருக்கு பை மற்றும் உடைமைகளை திருடியும், தஞ்சம் புகுந்த மக்களுக்கு அரணாக நின்ற மக்களை கண்மூடித்தனமான முறையில் தாக்கியும் வாழ்வாதாரத்தையே சூறையாடியுள்ளனர். கலவரத்தை செய்த காவலர்களையும், வழிநடத்திய அதிகாரிகளையும் கைது செய்யாமல், 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். காவல்துறையினர் தான் நாட்டில் சீருடை அணிந்த சமூக விரோத கும்பல் என்றும், அவர்களுடைய சமூக விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அம்பலத்தினார். காவல் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சிறையிலடைக்க வேண்டும், கைது செய்யப்பட்ட tiruvallur-west-ndlf-protest1அப்பாவி மக்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் லெட்சுமணன் நன்றியுரையாற்றினார்.  பகுதி மக்கள் அனைவரும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்தனர்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

***

பட்டுக்கோட்டை

ல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிரான போலீசின் ரவுடித்தனத்தைக் கண்டித்து 01.02.2017 காலை 10.30 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மண்டலக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

pattukottai-protestசமுக ஆர்வலர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் C.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரத் தலைவர் தோழர் ராமலிங்கம், உழைக்கும் மக்கள் கட்சி தோழர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் முரளி, கவிஞர் முருகையன், மக்கள் அதிகாரம் தோழர் ராஜா ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போலீசின் அராஜக ரவுடித்தனத்தைக் கண்டித்தும் குறிப்பாக விசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் உழைப்பாளிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த அரசு கட்டமைப்பு எதிராக நிற்கிறது, பச்சை துரோகம் செய்கிறது என்பதை தோலுரித்துக் காட்டினார்கள்.

பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மக்கள் அதிகாரம்
பட்டுக்கோட்டை

***

தருமபுரி

போலீசு  ராஜ்ஜியம்…. எழுந்து  நின்ற  தமிழகமே! எதிர்த்து  நில்! என்கிற  முழக்கத்தின்  கீழ்   தருமபுரியில்   மக்கள்  அதிகாரம்  சார்பாக   நடைபெற்ற   கண்டன  ஆர்ப்பாட்டம்.

தமிழமகத்தின்  உரிமைகள்  பல பறிக்கப்பட்ட நிலையில்  தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டையும்   ஜல்லிக்கட்டுக்கும்  தடைவிதித்தது   டெல்லிக்கட்டு.  அந்த  டெல்லிக்கட்டுக்கு  எதிராக  மெரினாவில்  லட்சகணக்கான  மாணவர்கள்  இளைஞர்கள்  ஒன்று கூடி  எந்த அரசியல்  கட்சிகளையும்  அனுமதிக்காமல்     அமைதியான  வழியில்  போராடிக்கொண்டிருந்த   மாணவர்கள்  போராட்டத்தை    கண்டு  உலகமே  வியக்கும் வண்ணம்  அமைந்த  அந்த போராட்டத்தை      காவிக்கூட்டமும், காவல்துறையும்  கைக்கோர்த்துக்கொண்டு  காட்டுமிராண்டிதனமாக   தாக்கியும்,  மீனவ குடும்பங்களை தாக்கியும், அவர்களுடைய  சொத்துக்களையும்  துவசம் செய்து  வெறிக்கொண்டு  தாக்கியதையும் உலகமே அறியும்.

20170203 Pstr - Colour-800x600போலீசின்   ரவுடித்தனத்தை  அம்பலப்படுத்தி  தமிழகம்  முழுவதும்  மக்கள்  அதிகாரம் பல்வேறு கட்ட பிரச்சாரங்களையும்,  கண்டன  ஆர்ப்பாட்டங்களையும்  நடத்தி  வருகிறது.  அதனுடைய  ஒரு பகுதியாக   தருமபுரியில் 03.02.2017 அன்று  மாலை  3  மணியளவில்   பி.எஸ்.என்.எல்.   அலுவலகம்  அருகே  கண்டன  ஆர்ப்பாட்டத்தை  நடத்தியது.  காமராஜர்  சிலையிலிருந்து  பறையிசை  முழங்க  போலீசு ராஜ்ஜியத்தை  அம்பலப்படுத்தி  வழிநெடுகிலும்  பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதனை ஆயிரகணக்கான மக்கள்  நின்று  கவனித்தனர். ஆர்ப்பாட்டத்தினை   தருமபுரி   மண்டல  ஒருங்கிணைப்பாளர்  தோழர். முத்துக்குமார்  தலைமை தாங்கினார்.  அவர் பேசுகையில், சமூகத்தில்  வாழ்வுரிமைகள்  பறிக்கப்படுவதற்கு  எதிராக  போராடும்  மக்களை  எங்குபார்த்தாலும் போலீசு  கடுமையாக  ஒடுக்கி வருகிறது. மெரினாவில்   லட்சகணக்கான  மக்கள்   ஜல்லிக்கட்டுக்காக   தொடங்கிய  போராட்டம்   அடுத்தடுத்து  காவிரிப் பிரச்சினை, விவசாயி பிரச்சினை,  மீத்தேன் திட்டம்,  மீனவர் பிரச்சினை, கல்வி  உரிமை  பரிப்பு  நோக்கி    வடிவமெடுத்தது. அப்படி  வடிவமெடுக்கும்  போதுதான்  மோடியும், ஓபிஎஸ்-ம்   இந்த அடக்கு முறையை  ஏவிவிட்டனர்.   மக்களின்  பாதுகாவலன்   மக்களின்  நண்பன்  எனறு சொல்லிக்கொள்ளும்  போலீசு,  மக்களின்  சொத்துக்களை  சூறையாடி  தாக்குகிறது.  எனவே  அரசின்  உறுப்பாகிய  போலீசும், ராணுவமும்  ஆக்டோபஸ்  போல   மக்களின்  உரிமைகளை  பறிக்கிறது. இந்த  அரசமைப்பே   மக்களுக்கு  எதிரானது.  எனவே  ஜல்லிக்கட்டுக்காக   லட்சகணக்கான   மக்கள்   ஒன்றிணைந்தது போல  ஒட்டுமொத்த  பிரச்சினைகளுக்காகவும்   போராட வேண்டிய  தருணமிது என்று  அறைகூவினார்.

அடுத்தாக  விடுதலை சிறுத்தைகள்  கட்சி  தருமபுரி மண்டல செயலாளர்  நந்தன்  பேசுகையில் இந்திய  பேரரசால் காவிரி, முல்லை, பாலாறு, மீத்தேன், அணுஉலை என  பல்வேறு  திட்டங்களால் தமிழினம்  வஞ்சிக்கபடுகிறது.  தமிழகத்தின்   பண்பாடு கலாச்சாரத்தில்   கைவைத்ததின் விளைவாக லட்சகணக்கான மாணவர்களும்  இளைஞர்களும் ஒன்றிணைந்து  அறவழியில் சாதி, மதம்  கடந்து  குடும்பம் குடும்பமாக  கலந்து கொண்டு போராடினார்கள்.  இந்திய  பேரரசுக்கு எதிராக, பண்பாட்டை  மீட்டெடுக்கும்  போராட்டம்  நாளுக்கு நாள்  அரசியல் பரிமாணமாக  மாறியதன்  விளைவாக  இவ்வளவு பெரிய  வன்முறையை  கட்டவிழ்த்துவிடப்பட்டுருக்கிறது.  தமிழக வரலாற்றில்   பரமக்குடி, மாங்குடி, திட்டக்குடி என்று போலீசால் ஒடுக்கப்பட்டுள்ளன. எனவே  மிகப்பெரிய  காண்டுமிராண்டி, ரவுடித்துறை என்றால்  போலீசும், ராணுவமும்தான்.  இப்படி  காஷ்மீரில்  இராணுவம்   அத்துமீறுகிறது. தமிழகத்தில்  போலீசு அத்து மீறுகிறது.  இந்தியாவில்   மிகப்பெரிய  பயங்கரவாதி  பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் -ம் தான்    இவர்கள்  கூட்டம் போட, கொடிபிடிக்க   அனுமதி வாங்கவேண்டியதில்லை, ஆனால்  மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடி புடிச்சாலோ  குச்சி வைத்து இருந்தாலே தேச விரோதி என்கிறார்கள். காக்கி உடையும்,  மிடுக்கு மீசையும் யாருக்காக,   மேட்டுக்குடிக்காக  இருக்கிறார்கள். எனவே  அதிகாரத்தை  சாதி, மதவாத  சக்திகளோடு கைக்கோர்த்து செயல் படுவதை காவல்துறை  கைவிடவில்லை என்றால்   தமிழகம்  மீண்டும்  மக்கள்  புரட்சியாக  வெடிக்கும் என்று காவல்துறைக்கு  எச்சரிக்கை விடுத்தார்.

20170203 Program-600x900ஓய்வு பெற்ற   ஆசிரியர் திருவேங்கடம் பேசுகையில்,   மக்களுக்கு  நடக்கும்  தீய செயலுக்கு எதிராக   குரல் கொடுக்கும்  இயக்கம்தான்   மக்கள் அதிகாரம். சாதி, மதம் கடந்து  மாற்றுக்கட்சியினர் ஆசிரியர்கள் உட்பட  எங்களை எல்லாம் ஒன்று சேர்த்த  மக்கள் அதிகாரத்திற்கு  நன்றி. ஜனநாயக நாட்டில்  விளையாட கூட உரிமையில்லை, ஐல்லிக்கட்டை  நடத்த  முடியவில்லை என்று மன்னிப்பு கேட்கிறார் மத்தியமைச்சர் என்றால்  இதற்காகவா  இவர்களுக்கு ஓட்டுப்போட்டோம். இவர்களை நம்பி  ஜல்லிக்கட்டை  நடத்த முடியாது  போராடினால் தான்  தீர்வு என்று  அறவழியில்  போராடிய  மாணவர்களுக்கு  பரிசு கொடுக்காமல் லத்திசார்ஜ் கொடுக்கிறார்கள். இருப்பினும் லட்சகணக்கான  மாணவர்கள்  ஒன்று சேர்ந்து உறுதியாக  போராடியது நாங்க எல்லாம் வாழமுடியும் என்ற  தன்னம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது. எனவே  தாக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை  விடுதலை செய்யவேண்டும். அதோடு  தமிழகம் வீறுகொண்டு  எழுந்துவிட்டது  இனிமேல்  எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்.

சி.பி.எம்  மாவட்ட  செயற்குழு உறுப்பினர்  அர்ச்சுணன்  பேசுகையில்,  தமிழகத்தில்  ஜனவரியில்  கடுமையான வறட்சி, 200 க்கும் மேற்பட்ட  விவசாயிகள்  இறப்பு,  குடிநீர்  பஞ்சம், நீட் தேர்வு என பல்வேறு பிரச்சினைகளால் ஆசிரியர், அரசுஊழியர்கள்  என   பல போராட்டங்களை  நடத்தியிருக்கிறார்கள்.  எல்லா போராட்டங்களிலும் காவல் துறை  வஞ்சகம்  செய்துள்ளது. ஜல்லிக்கட்டு  மத்திய  அரசு  கண்டுகொள்ளாத  நிலையில் எதிச்சதிகார  ஆட்சிக்கு எதிராக  ஜல்லிக்கட்டுக்கான   போராட்டம்  தொடங்கி  விவசாயத்துக்கும்  போராடுவோம் என்று  அடுத்தக்கட்ட நகர்வை எடுத்த போது  லத்தி கம்பு  நிற்கிறது. அடுத்ததாக  கடுமையான  அடக்குமுறையை  ஏவிவிடுகிறது.  தண்ணீர்  பிரச்சினைக்கு ரோட்டுக்கு வந்தால் போலீசின்  லத்தி வருகிறது.  அதே  பால்குடம்,தேன் குடம், ஆர்.எஸ்.எஸ்-ன் ஸ்வாக நடத்தினால்  பாதுகாக்கிறது  அவர்கள் அனுமதி வாங்க தேவையில்லை, இதிலிருந்தே  காவல்துறையில் எந்த அளவிற்கு  ஆர்.எஸ்.எஸ்  ஊடுருவியிருக்கிறது என்பதை  பார்க்க முடியும். காவல்  துறை என்பது   அடக்குமுறை  கருவி  என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறைகள் வர, வர  உழைக்கும்  மக்கள்  திரண்டு  முறியடிப்பார்கள்  என்பதுதான்  வரலாறு  என்றார்.

மக்கள்  உரிமை  பாதுகாப்பு மையம்  மாவட்ட செயலாளர்  ஜானகிராமன்  பேசுகையில், பயங்கரவாதம், தீவிரவாதம்  சேர்ந்ததுதான் போலீசு ராஜ்ஜியம். போலீசே வகுத்துக்கொண்ட  சட்டத்தை  பூட்சு காலால்   புதைத்துவிட்டு ஜல்லிக்கட்டுக்காக  போராடிய மாணவர்களை   தாக்கியிருக்கிறார்கள். இது உலகத்திலே  நடக்காத ஒன்று. மிருகம் வேட்டையாடுவதை  போல  இங்கே  மக்களை வேட்டையாடிருக்கிறார்கள் . தன்னெழுச்சியாக  எழுந்த  போராட்டம்  ஒரு தலைமையின்  கீழ்  திரண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்   இந்த தாக்குதல். கல் எடுத்து  மண்டையை உடைக்கிறது  காவல் துறை  இந்த செயலை ரவுடிகள்தான் செய்வார்கள் . இந்த  ரவுடிதனத்தின் மூலம்  7  கோடி  தமிழ் மக்களுக்கும்  பல கோடிகளை  செலவு செய்து  அம்பலப்படுத்த வேண்டியதில்லை போலீசே  அம்பலப்படுத்திக் கொண்டது. இந்த  அரசுகட்டமைவில் நேர்மையாக வேலை செய்யமுடியாது, அதுதான்  விஷ்னுபிரியா  தற்கொலை எனவே   போலீசு, நீதீமன்றம், சட்டமன்றம், எல்லாமே   பீட்டாவுக்காக இருக்கிறது.  மான்சாண்டோ, பெப்சி  போன்ற  பன்னாட்டு  நிறுவனங்களை  பாதுகாப்பதற்காக  இருக்கிறது. இவர்களை  வீழ்த்துவதை  தவிர  நமக்கு  வாழ்வு இல்லை, தாக்குவோம், போராடுவோம் வெற்றிபெறுவோம்  என்றார்.

புதிய  ஜனநாயக  தொழிலாளர்  முன்னணி  செயலாளர்   தோழர் பரசுராமன்  பேசுகையில்,  ஜல்லிக்கட்டு போராட்டம்   மோடியின்  அதிகாரம்  தமிழகத்தில்  செல்லாது  என்பதை  நிருபித்திருக்கிறது.  பெரியார் பிறந்த  மண்ணில்  பார்ப்பன  பண்பாட்டுக்கு  ஒரு செருப்படி  விழுந்திருக்கிறது என்றால்  மிகையல்ல திட்டமிட்டு   சினிமாவால்    ஆபாச வக்கிரங்களை  பரப்ப படும்   தமிழ் மண்ணில்   இந்த போராட்டத்தில்  அது போன்ற  அசம்பாவதம் ஏதும்  நடக்கவில்லை,  கிடைத்த  உணவை   சரியாக  பகிர்ந்து  உண்பது இப்போராட்டத்தில்  வெளிப்பட்டது. அப்படி  அமைதியான  வழியில்  போராடி கொண்டிருந்த   மாணவர்களை  காட்டுமிராண்டித்தனமாக  தாக்கியது  போலீசு, எனவே  போலீசு  ஆளும் வர்க்கத்தின்   அடியாள் படை, கூலிப்படை   முசாப் நகர் கலவரத்தில்  அடியாட்கள்  இருந்தார்கள்,  தமிழகத்தில்   காக்கி உடைகள் கொண்ட அடியாட்களை  கட்டவிழ்த்து விட்டுருக்கிறார்கள்.  இந்த  மாணவர்களின்  உறுதியான  போராட்டம்   தமிழக மக்களுக்கு  மட்டுமல்ல  காஷ்மீர், நாகாலாந்து, உத்திரப்பிரதேசம்  மக்களுக்கும்   நம்பிக்கையை  ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மோடியின்  அதிகாரம் செல்லாது என்பது அடித்து நொறுக்கிருக்கிறது இந்த போராட்டம்  எனவே  இது போராடும் தருணம் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

புரட்சிகர  மாணவர்- இளைஞர் முன்னணி   மாவட்ட செயலாளர்  தோழர்  அன்பு  பேசுகையில், தமிழகத்தில் லட்சகணக்கான  மாணவர்கள் ஒன்றுதிரண்டு அமைதியான  முறையில் போராடி கொண்டிருந்தோம்.  அதில் யார் வன்முறையை  தூண்டியது, ஆட்டோவுக்கு  தீ வைப்பது   யார்?  மீனவர்களின் சொத்துக்களை சூறையாடுவது யார்? போலீசா? மாணவர்களா?  காவல்துறை  மக்களின்  நண்பன்  என்கிறார்கள்   ஏன் அடிக்கிறார்கள்  அடிக்கிறவர்களா  நண்பர்கள்.  டாஸமார்க், சமச்சீர்கல்வி, ஜல்லிக்கட்டு இது போன்ற  பல உரிமைகளுக்காக போராடும்போது  அடக்குமுறைகள்  ஏவப்படுகிறது. இந்த  அடக்குமுறைக்கு  எதிராக  எழுந்து நின்றுவிட்டோம். எதிர்த்து நிற்போம். மீண்டும்  இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக  ஒன்று கூடுவோம். என்று  போலீசுக்கு  எச்சரிக்கை விடுத்தார். இப்படி  போலீசுக்கு  எதிராக  வலுத்த குரல்  ஜனநாயக சக்திகளுக்கும் , மக்களுக்கும்  நம்பிக்கை ஏற்படுத்தும்  விதமாக  ஆர்ப்பாட்டம்  அமைந்தது.

தகவல்: மக்கள்  அதிகாரம், தருமபுரி
தொடர்புக்கு: 81485 73417

ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை : மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

4

people-power-press-release-header09.02.2017

பத்திரிகைச் செய்தி

 

ஓ.பி.எஸ் – சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல.

னைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் – எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர்-சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல தேர்தல் சூதாட்டத்தில் ஆளை மாற்றுவதைத் தொடர்ந்தால் இன்று பன்னீர், நாளை சசிகலா, அப்புறம் வளர்மதி என்பதுதான் கதியாகும்.

“மூன்றுமுறை முதல்வராக இருந்த என்னை மிரட்டி பதவியைப் பிடிங்கிக் கொண்டார்கள்” என்று ஒப்பாரி வைக்கிறார், பன்னீர்! அதைப் பார்த்து நாம் அனுதாபப்படலாமா? “இதோ, இன்னும் எங்கள் காயங்கள் ஆறவில்லை, வலிகுறையவில்லை. கடந்த வாரம் நீதானே போலீசை ஏவி எங்கள் மாணவனின் கண்ணைப் பறித்தாய், இன்னொருவனின் கையை முறித்தாய்; எங்கள் மீனவரின் முகத்தைச் சிதைத்து ஜெயிலில் அடைத்தாய்; எங்கள் தாயின் மண்டையை பிளந்தாய்; எங்கள் சொத்துக்களைச் சூறையாடினாய்! இப்போது பதவி பறிபோனதென்று எங்களிடம் வந்து முறையிடுகிறாயே, வெட்கமில்லையா? கடந்த மாதம்தான் அலங்காநல்லூரில் நாங்கள் விரட்டியடித்ததை அதற்குள் மறந்துவிட்டாயா” என்றல்லவா நாம் விரட்டவேண்டும்?

“துரோகம் செய்துவிட்டார்! அம்மாவின் கட்சியைப் பிளந்து விட்டார்! எதிரிகளோடு சேர்ந்து சதி செய்கிறார்!” என்று பன்னீரைப் பார்த்துப் பதறுகிறது, சசியின் மன்னார்குடி மஃபியா. 25 ஆண்டுகள் தமிழ்நாட்டையே கொள்ளையடித்துக் கோடி கோடியாக சொத்துக்களைக் குவித்து வைத்துள்ள அந்தக் கும்பலின் கூப்பாட்டிற்குக் காதுகொடுப்பார் எவருமில்லை. தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் அந்தக் கும்பலைத் திட்டித் தீர்ப்பதைக் காண்கிறோம்.

இன்று, கொலை வெறியோடு கத்தியை உருவிக்கொண்டு நிற்கும் சசி – பன்னீர் இருவருக்குமே குறி பதவியும் அதிகாரமுமே. ஜெயலலிதா விவாதம், கட்சி ஒற்றுமை தவிர இப்போது நடக்கும் சண்டையில் கூட தவறியும் அவர்களின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளைப் பேசுவதில்லை. அந்தப் பழைய கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஜெயலலிதாவும் அவரது கட்சியும் இன்று எந்த நிலையில் தமிழகத்தை விட்டுப் போயிருக்கின்றனர் பாருங்கள்!

வாழ்விழந்த விவசாயிகள், வேலையிழந்த தொழிலாளர்கள், எதிர்காலம் இழந்த வணிகர்கள், உயிரை பறிகொடுக்கும் மீனவர்கள், கல்வி இழந்த தம்பிமார்கள், சமத்துவத்திற்கு ஏங்கும் சகோதரிகள், சாதி தீண்டாமையால் கருகும் தளிர்கள் என போராட்ட வரிசைகள் ஒன்றை ஒன்று முந்துகிறது. மணலை பறிகொடுத்த ஆறுகளும், நீரை பறிகொடுத்த ஏரிகளும், கிரானைட் கொள்ளையால் அழிந்த மலைகள், தாது மணல் கொள்ளையால் பாழான கடற்கரைகள், நீர்நிலைகளை அழித்தவர்கள்தான் விவசாயிகள் மரணத்தை கொச்சைப்  படுத்துகிறார்கள். செய்த வேலைக்கு ஆறு மாதமாக கூலி கொடுக்க வக்கில்லாதவர்கள், வாங்கிய கரும்புக்கும், பாலுக்கும் காசு கொடுக்க திராணியற்ற இந்த அரசும், அதிகார வர்க்கமமும்தான் மக்களிடம் சுரண்டிய பணத்தை கோடிக்கணக்கில் சம்பளமாகவும், லஞ்சமாகவும், கொள்ளையடித்துத் கொழுக்கிறது! பறிகொடுத்த மக்கள் இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமே ஆட்சியைக் கொடுக்கலாமா?

அதிகாரிகள் சட்டப்படி செயல்படுவார்கள்; அரசியல்வாதிகள் மக்கள் விருப்பபடி நடப்பார்கள்; நீதிபதிகள் நடுநிலையோடு மனசாட்சிப்படி தீர்ப்பு சொல்வார்கள்; ஒருவர் தவறு செய்தால் மற்றவர்கள் தடுப்பார்கள், தண்டிப்பார்கள் என நம்பிய காலம் மலையேறிவிட்டது ! இதை மாற்றியமைக்கப் போராடுவதுதான் ஒரே தீர்வு. இதை சரி செய்வதோ பழுது பார்ப்பதோ முடியாது. மீண்டும் மீண்டும் இந்த கட்டமைப்புக்குள் தீர்வை தேடினால் வாழ்வாதாரங்களும், வாழ்வுரிமைகளும் மேலும் மேலும் பறிபோகும். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தொகுத்து பாருங்கள். மோடி அரசியல், ஓ.பி.எஸ். அரசியல் எல்லாம்  அழுகி நாறுகிறது.

நல்ல நீதி, நிர்வாகம் நிலைநாட்டப்படும் என யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த அமைப்புமுறைக்குள் மக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றி தரமுடியாத நிலைக்குப் போய்விட்டது. ஓட்டுக்கட்சிகள் வேண்டாம், அதிகாரிகள் வேண்டாம் நாங்களே பார்த்து கொள்கிறோம் என இந்த அமைப்பு முறைக்கு வெளியில் நின்று போராடிய மாணவர்களோடு குமுறி கொண்டிருந்த அனைத்து மக்களும் ஒன்றிணைந்தனர். அத்தகைய மெரினா போராட்ட உணர்வுக்கு, கருத்தாக்கத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆளை மாற்றி சிந்திப்பதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

ஊழலும், கொள்ளையும், கிரிமினல்மயமும், தேசத்துரோகமும், புற்றுநோயாக இந்த அரசகட்டமைப்பு முழுவதும் பரவி பயனற்றதாகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டால் அதற்கு செவிசாய்க்காமல் அடித்து நொறுக்கப்படுகிறார்கள். மக்கள் விரோதமாக மாறிய, நெருக்கடிக்குள் சிக்கிய இந்த அரசுகட்டமைப்பை சரி செய்யலாம் என மீண்டும் மீண்டும் எடுக்கும் முயற்சிதான் சசிகலாவா? ஓ.பி.எஸ்ஸா? என நிற்கிறது.  மெரினா போராட்ட அனுபவத்தில் இந்த அரசுகட்டமைப்பிற்கு வெளியில் மாற்றை, தீர்வைத் தேட வேண்டும் உருவாக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் தமிழக மக்களை மன்றாடுகிறோம்.

தீ பிடித்த வீடு போல் தீர்க்கப்படாமல் மக்களின் பிரச்சினைகளால் நாடே பற்றி எரிகிறது. ஆங்கிலேயனிடம் கோரிக்கை வைக்கவில்லை, வெளியேறு நாங்கள் பார்த்து கொள்கிறோம் என போராடினோம். இந்த அரசு கட்டமைப்பை நம்பாமல், தமிழக மக்கள் விடமாட்டோம் என விடாப்பிடியாக போராடியதால் வென்றது மெரினாப் போராட்டம்! எப்படி போராட வேண்டும் என அது கற்றுக்கொடுத்துள்ளது!

மெரினா போராட்டம்,  குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஒன்றிணைந்த மாபெரும் மக்கள் எழுச்சி. சாதி மத பிளவுகளை சுக்கு நூறாக்கி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த முன்னுதாரணமிக்க போராட்டம். மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த போராட்டத்தை,  அரசும், போலீசாரும் எப்படி பழிதீர்த்தனர் என்பதை கண்கள் சிவக்க, நெஞ்சம் பதற மக்கள் அனைவரும் பார்த்தார்கள். கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என கூசாமல் பழி போட முயன்று அவமானபட்டு தோற்றது போலீசு.

காளையில் பற்றிய தீ காவிரி உரிமைக்கும், கல்வி உரிமைக்கும், பரவக்கூடாது என்ற பய பீதியால் அலங்காநல்லூரிலும், சென்னையிலும், கோவையிலும் திட்டமிட்டு  நடத்தப்பட்டதுதான் போலீசு வன்முறை வெறியாட்டம். அடைக்கலம் கொடுத்த மீனவர்கள், ஆதரித்த மக்கள்,போராடிய மாணவர்கள், முன்னின்ற இளைஞர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக போராடுவதுதான் வீரம்.

மாணவர்களே, இளைஞர்களே வாருங்கள்! தமிழகத்தை மெரினாவாக்குவோம்!

இவண்
வழக்கறிஞர். சி,ராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்,  தமிழ்நாடு.

***

இது வேற தமிழ்நாடு !
மாணவர்களே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே வாருங்கள் !
தமிழகத்தை மெரினாவாக்குவோம் !

ops-sasi-poster-1பொதுக்கூட்டம்:
19-2-2017 ஞாயிறு மாலை 5 மணி,
அம்பேத்கர் பாலம், சிட்டி சென்டர் அருகில், சென்னை

நிகழ்ச்சிநிரல்:

தலைமை:
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்

சிறப்புரை:
தோழர் மருதையன்
பொதுச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு

தோழர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தோழர் தியாகு, ஆசிரியர்
உரிமைத் தமிழ் தேசம்

திரு.இரா.சங்கரசுப்பு
மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

திரு. சாமுவேல்
சமூக ஆர்வலர், அம்பேத்கர் பாலம்

மற்றும் பாதிக்கப்பட்டோர் நேருரை

அனைவரும் வாருங்கள் ! தமிழகத்தை மெரீனாவாக்குவோம் !!

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம் – 9176801656

ஜெயா ஆட்சியின் குற்றப் பட்டியல் – ஒரு தொகுப்பு

0
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

வன்முறையே சட்டமாக… கொள்ளையே ஒழுங்காக…

 ‘‘ஒன்றரைக்கோடிஉறுப்பினர்களைக்கொண்டபெரியதொருஅரசியல்கட்சிக்குத்தலைமைதாங்கியஜெயலலிதா, தன்மீதுதொடரப்பட்டவழக்குகளைமுகாந்திரமாகக்கொண்டு, வன்முறையில்ஈடுபடக்கட்சியினரைநேரடியாகவோ, மறைமுகமாகவோதூண்டியதில்லை.’’ (புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், தினமணிக் கதிர், 11.12.2016)

‘‘அவரது ஆட்சியைப் பற்றி எத்தனையோ குறைகளைக் கூறலாம். ஆனால், ஜெயாவின் நிர்வாகத் திறமையும், அவரது ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட சட்டம்ஒழுங்கு நிலையும், ….. பெண்மைக்குத் தரப்பட்ட மரியாதையும் பாதுகாப்பும் தமிழகம் உள்ளவரை நினைவுகூரப்படும்.’’ (தினமணி தலையங்கத்தில்)

L&O_P1
ஸ்பிக் நிறுவனப் பங்குகள் விற்பனை ஊழல் வழக்கில் ஜெயாவிற்கு எதிராகக் கோப்பில் குறிப்புகள் எழுதியதற்காக ஆசிட் வீசித் தாக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவுடனேயே, ‘‘தமிழகத்தில் இருந்த தாலி பறிக்கும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக’’த் தடாலடியாக அறிவித்தார், ஜெயா.  இதன் மூலம் தனது வருகையே, இருப்பே சமூக விரோதக் கும்பலுக்குக் கிலி ஏற்படுத்திவிட்டதாகக் காட்டிக் கொண்டார், அவர்.

ஆனால், கடந்த ஐந்தாண்டில், 2016 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை, தமிழகத்தில் 7,630 கொலைகளும், 8,119 கொள்ளைச் சம்பவங்களும், 11,245 கொலை முயற்சிகளும் நடந்துள்ளன.

பெண்களின் பாதுகாப்போ, தினமணி தலையங்கத்தில் மெச்சிப் பாராட்டியிருப்பதற்கு நேர்மாறாக, 3,360 பாலியல் வன்முறைகளும், 6,431 பெண் கடத்தல் சம்பவங்களும் நடந்து, பெண்கள் அச்சத்தோடுதான் தெருவில் இறங்கி நடமாட வேண்டிய சூழ்நிலை நிலவியது.

மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற உள்ளூர் இளைஞர்கள் மட்டுமல்ல, போலீசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்கூட மணல் கொள்ளை மாஃபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய பல பேர் காணாமல் போனார்கள். ரியல் எஸ்டேட் தொழில் தகராறு, போட்டி காரணமாக நடுரோட்டில் படுகொலைகள் நடந்தன. இப்படித் தமிழகம் தொழில்முறை கிரிமினல் மாஃபியா கும்பலின் களமாக மாறிப் போயுள்ள சூழ்நிலையில், ஜெயா ஆட்சியில் சட்டம்−ஒழங்கு சிறப்பாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகவும் இருந்ததாகப் பச்சைப் பொய்யை எழுதுவதற்கு தினமணி கூச்சப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனைவிடப் பெரிய பொய் அ.தி.மு.க.வை அகிம்சாமூர்த்திகளாகப் பாராட்டும் பத்திரிகையாளர் மாலனின் புகழாரம். தமிழகத்தில் எப்பொழுதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், அக்கட்சியும், முதலமைச்சர் ஜெயா தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரையிலான அக்கட்சியின் அதிகாரப் பிரதிநிதிகளும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் சட்டத்தின் ஆட்சிக்கே சவாலாக இருந்தனர் என்பதும், அந்த வகையில் சட்டவிரோத கிரிமினல் மாஃபியா கும்பலைவிட அ.தி.மு.க. அபாயகரமானதாக இருந்தது, இருந்து வருகிறது என்பதும்தான் உண்மை.

ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.
ஜெயா மீது ஊழல் வழக்குத் தொடரவேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு போட்டதற்காக அ.தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.

பத்திரிகையாளர் மாலன் அ.தி.மு.க. வன்முறையை ஆராதிக்கும் கட்சி அல்ல என்ற தனது புகழாரத்தில் அ.தி.மு.க.வினரால் மூன்று கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வன்முறைச் சம்பவத்தை விதிவிலக்கு எனக் குறிப்பிடுகிறார். ஆனால், தன்னை எதிர்ப்பவர்கள், எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் ஜெயா வகுத்த விதியாக இருந்தது. ஜெயாவின் மூன்று தவணை ஆட்சிகளில் அ.தி.மு.க. கும்பல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடத்திய வன்முறைகளை, கிரிமினல் குற்றச் செயல்களைப் பட்டியல் இட்டுப் பாருங்கள், அக்கட்சியைப் பயங்கரவாதக் கட்சி என்று குற்றஞ்சுமத்த, யாரும் தயங்கவே மாட்டார்கள்.

ஜெயா, முதல் முறையாகத் தமிழகத்தின் முதல் அமைச்சராக மே,1991−இல் பதவியேற்றார். அவர் முதலமைச்சராகிய அடுத்த மூன்றாவது மாதத்திலேயே ”தராசு” வார இதழ் அலுவலகம் மீது அ.தி.மு.க. கும்பல் கொலை ஆயுதங்களைக் கொண்டு நடத்திய வன்முறைத் தாக்குதலில், அப்பத்திரிகையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கத்திக் குத்துப்பட்டு இறந்து போனார்கள்.

மே 19, 1992 அன்று பட்டப்பகலில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் அவரது முகம், கழுத்து மற்றும் கைகள் வெந்து போயின. இத்தாக்குதல் நடந்தபோது, அவர் தமிழக வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்தார். ஜெயா சம்பந்தப்பட்டிருந்த ஸ்பிக் பங்குகள் விற்பனை ஊழல் தொடர்பான கோப்புகளில், சந்திரலேகா ஜெயாவிற்கு எதிராகக் குறிப்புகளை எழுதியிருந்தார் என்ற காரணத்திற்காகவே, அதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் வெறியோடு அவர் மீது ஆசிட் வீசப்பட்டது என்பது பின்னர் அம்பலமானது.

இந்த இரண்டு தாக்குதலுக்கும் இடைப்பட்ட காலத்தில், அப்பொழுது மைய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், அவர் பயணம் செய்த காரின் மீது கற்கள், தடிகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ப.சிதம்பரத்தின் மீது தாக்குதலை நடத்திய வன்முறைக் கும்பலுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தளபதிகளாகச் செயல்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
சொத்துக் குவிப்பு வழக்கை சட்டப்படியும் நேர்மையாகவும் நடத்தியதால், ஜெயா-சசி கும்பலால் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அவ்வழக்கின் முன்னாள் அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா மற்றும் அவ்வழக்கின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

ஜெயா−சசி கும்பல் தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவன நிலத்தை அடிமாட்டு விலையில், அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வளைத்துப் போட்டது அம்பலமான நிலையில், அவர்கள் மீது இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 169−ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தொடரும் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், தி.மு.க. வழக்குரைஞர் சண்முகசுந்தரம்.  இதையடுத்து அவரது அலுவலகத்தில் புகுந்த ரவுடிக் கும்பல், ‘‘அம்மா மீதே வழக்குத் தொடரும் தைரியமா உனக்கு?’’ எனக் கேட்டபடியே, கத்தி, இரும்புக் கம்பிகளைக் கொண்டு அவரைத் தாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாகச் சிதைத்துப் போட்டது. உடம்பின் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை எப்படியாவது கொன்றுவிடத் திட்டம் தீட்டிய அ.தி.மு.க. கும்பல், அந்த மருத்துவமனையின் மின் இணைப்பைத் துண்டித்தது.

ஜெயா ஆட்சியின் ஊழல்களையும், வன்முறைகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்த நக்கீரன் இதழின் பிரிண்டர் கணேசன் அய்யா போலீசு நிலையத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டு, போலீசாரல் சித்திரவதை செய்யப்பட்டார். இச்சித்திரவதை நடந்த இரண்டு, மூன்று நாட்களிலேயே உடல் நலிவுற்று இறந்துபோனார் அவர்.

எதிர்கட்சியினர், பத்திரிகைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல, அச்சமயத்தில் தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சேஷன் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு எதிராகவும் ஜெயா−சசி கும்பல் வன்முறைகளையும் மிரட்டல்களையும் ஏவிவிட்டது.

ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர சுப்பிரமணிய சுவாமிக்கு அனுமதி தந்து உத்தரவளித்தார், ஆளுநர் சென்னா ரெட்டி. இதற்குப் பாடம் கற்பிக்கும் முகமாக, சென்னாரெட்டி புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த வழியில் திண்டிவனம் அருகே வழிமறித்த அ.தி.மு.க. கும்பல், அவர் காரின் மீது  கற்களையும் செருப்புகளையும் வீசியெறிந்து தாக்குதல் தொடுத்தது. சுப்பிரமணிய சுவாமி உரையாற்றிக் கொண்டிருந்த சென்னை பொதுக்கூட்டத்தில் ஆசிட் பல்புகளும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.
அரசு பயங்கரவாத அட்டூழியம்: பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜெயா போலீசு நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை.

ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்த சென்னாரெட்டியின் உத்தரவு குறித்த வழக்கில், அந்த உத்தரவை ஏற்றுத் தீர்ப்பளித்த நீதிபதி சீனிவாசனின் வீட்டிற்கு மின் இணைப்பும், குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டன.

நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி அருணாச்சலத்தின் மருமகன் மீது கஞ்சா வழக்கைப் போட்டு, அந்நீதிபதியை மறைமுகமாக மிரட்டியதையடுத்து, அவர் விசாரணையிலிருந்து விலகிக் கொண்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனா மீதும், அவ்வழக்கின் அரசு வழக்குரைஞராக இருந்த பி.வி. ஆச்சார்யா மீதும அடுக்கடுக்காக அவதூறுகளையும் வழக்குகளையும் தொடுத்து, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. இந்த மனரீதியான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசு வழக்குரைஞர் பி.வி. ஆச்சார்யா அவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

ஜெயாவின் இரண்டாவது தவணை ஆட்சியில், தி.மு.க. சென்னையில் நடத்திய ஊர்வலத்தைக் கலைப்பதற்காக, அயோத்திகுப்பம் வீரமணியைப் பயன்படுத்திக் கொண்டது அவரது அரசு. கடற்கரைச் சாலையில் ஊர்வலம் சென்றபோது, ரவுடி வீரமணி கும்பல் கற்களை வீசித் தாக்கி மோதலை ஏற்படுத்தியது. இதனைச் சாக்கிட்டு போலீசும், வீரமணி கும்பலும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு தி.மு.க.வினரையும் பத்திரிகையாளர்களையும் ஓட ஓட விரட்டி அடித்தனர். ஒரு பெண்ணின் ஆட்சியில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, பெண் பத்திரிகையாளர்களைக்கூட போலீசு விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மூன்றாவது தவணை ஆட்சியின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால் ஜெயா தண்டிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அ.தி.மு.க.வினர் சட்டம்−ஒழுங்கை, பொதுமக்களின் பாதுகாப்பை, நீதித்துறையை எந்தளவிற்கு மதித்து நடந்து கொண்டனர் என்பது உலகமே காறிஉழிழ்ந்த ஒன்று.

அ.தி.மு.க. கும்பல் நடத்திய அத்துணை ரவுடித்தனங்களுக்கும் தமிழக போலீசு உடந்தையாக இருந்தது என்பது மட்டுமல்ல, ஜெயாவின் ஆட்சியில் போலீசும் உளவுத் துறையும் போயசு தோட்டத்தின் கூலிப்படையாகவே நடந்து கொண்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதியை வீடு புகுந்து கைது செய்தபொழுது, தமிழக போலீசும் உயர் அதிகாரிகளும் ஆடிய ஆட்டமும்; ஜெயாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் கணவர் நடராஜனின் தோழி செரீனா, ஜெயாவின் ஆடிட்டராக இருந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது தமிழக போலீசு போட்ட கஞ்சா வழக்குகளும் அத்துறை ஜெயாவின் ஏவல் நாய் என்பதைத் தமிழகத்திற்கே புரிய வைத்தன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பல் தண்டிக்கப்பட்டதையடுத்து, அ.தி.மு.க. காலிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் காஞ்சிபுரத்தில் எரிக்கப்பட்ட அரசுப் பேருந்து.

கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது தொடங்கி, அவர்கள் மேலிடத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைத்த சொத்துக்களைக் கைப்பற்றி போயசு தோட்டத்தில் ஒப்படைப்பது வரை ஜெயாவிற்கு அனைத்துமாக இருந்து சேவை செய்தது, தமிழக போலீசு. இந்த விசுவாசம் காரணமாக, போலீசுக்கு சலுகைக்கு மேல் சலுகையாக வாரி வழங்கி, அதனை வளர்த்துவிட்டார். பெருந்தீனி தின்று கொழுத்துப் போன பங்களா நாய் சும்மா இருக்குமா? பொய் வழக்குகள், கொட்டடிக் கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போலீசின் அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்ததோடு, தமிழகத்தின் பாளையக்காரனாகவும் போலீசு நடந்து கொண்டது.

கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய போலீசு, அம்மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தும் கிணற்றில் விஷத்தைக் கலந்தது. இந்த அட்டூழியம் நடந்த சமயத்தில் முதல்வராக இருந்த ஜெயாவோ, தனது வளர்ப்பு மகனின் ஆடம்பர திருமண தயாரிப்புகளில் மூழ்கிப் போயிருந்தார். பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைச் சட்டமன்றத்திலேயே ஆதரித்துப் பேசினார், அவர்.

இவை அனைத்தும் கால்தூசு என்பது போல, அரசியல் சாசனத்திற்கே பெப்பே காட்டியவர்தான் புரட்சித் தலைவி; எவையெல்லாம் புனிதமாகக் கூறப்படுகிறதோ, அவற்றின் டவுசரைக் கழட்டி, அம்மணமாக்கியவர்தான் அம்மா.

சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில், சபாநாயகரைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது என்பது மரபு. அந்த மரபைத் துச்சமாகத் தூக்கிப் போட்டு, அந்த இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினரே அல்லாத சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் உட்கார வைத்தும் சட்டமன்றத்தை போயசு தோட்டமாக்கினார்.

2001 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வந்த சமயத்தில், ஜெயா, பிளஸண்டே ஸ்டே விடுதி வழக்கிலும், டான்சி ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்தார். ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற உண்மையை மறைத்து இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஜெயாவின் வேட்பு மனு தாக்கல் விவாதப் பொருள் ஆன நிலையில், மேலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார், ஜெயா.

ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.
ஜெயாவிற்கு மாட்டுக் கறி சமைக்கத் தெரியும் என நக்கீரன் இதழில் வெளியான செய்தியையடுத்து, அப்பத்திரிகை அலுவலகத்தை போலீசின் பாதுகாப்போடு தாக்கும் அ.தி.மு.க. குண்டர்கள்.

ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாதென்பது தேர்தல் விதி. அந்த விதியை மீறி அவர் நான்கு தொகுதிகளுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததற்குக் காரணம், தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற அடிப்படையில் தனது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடக் கூடாதென்ற கிரிமினல் தந்திரப் புத்தியாகும். அவர் போட்ட கணக்குப்படியே அவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனினும், அப்போதிருந்த தி.மு.க. அரசுதான் சதி செய்து, ஜெயாவைப் போட்டியிட முடியாதவாறு செய்துவிட்டதாக ஜெயாவும் அவரது விசுவாசிகளும் கூசாமல் அவதூறுகளை அள்ளிவிட்டனர்.

அச்சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக மெகா கூட்டணியை அமைத்திருந்த அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஆட்சியமைத்தது. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்திருந்த ஜெயா, அப்போதைய தமிழக ஆளுநராக பாத்திமா பீவியை விலைக்கு வாங்கி முதலமைச்சராகி, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த குற்றவாளி நாட்டை ஆளலாம் என்ற புரட்ச்சியை நிகழ்த்திக் காட்டி, மரபு, சட்டம், அரசியல் சாசனம் என்ற புனிதங்களின் மீது சாணியைக் கரைத்து ஊற்றினார்.

இங்கே நாம் தொகுத்திருக்கும் ஜெயா−சசி கும்பலின் கிரிமினல் குற்றச் செயல்கள் அனைத்தும் ஏதோ அநாதிக் காலத்தில் நடந்தவை அல்ல. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழக மக்களின் கண் முன்னே நடந்தவை. 1996 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வைத் தமிழக மக்களே ஓரங்கட்டித் தோற்கடித்தனர். 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மட்டுமல்ல, ஜெயாவும் தோற்கடிக்கப்பட்டதற்கு அவரது ஊழல், வக்கிர ஆட்சிதான் காரணமாக இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் திட்டமிட்டு மறைத்துவிட்டு, ஜெயாவை உன்னதத் தலைவியாகப் புகழந்து தள்ளுகின்றன, ஊடகங்கள். தமிழக மக்களும் பழசையெல்லாம் மறந்துவிட்டு, தமக்கேயுரிய இரக்க குணம் காரணமாக, ஊடகங்களின் பொய்யுரைக்குத் தலையாட்டுகிறார்கள்.

ஜெயலலிதா மீது ஒன்பது ஊழல் வழக்குகள் பதியப்பட்ட பிறகு, ஒரு பொட்டு நகைகூட அணியாமல் தனது தோற்றத்தை எளிமையாக மாற்றிக்கொண்ட அவர், ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நகைநட்டு இல்லாமல் பார்த்த பெண்கள், ‘‘அந்தப் படுபாவி (கருணாநிதி) எல்லாத்தையும் புடுங்கி வெச்சுக்கிட்டாராமில்லே’’ எனப் பேசிக் கொண்டதாகத் தனது அஞ்சலியில் பதிவு செய்கிறார், பத்திரிகையாளர் வாஸந்தி. பொதுமக்களிடம் காணப்படும் இந்தப் பாமரத்தனம்தான், ஒரு கிரிமினல் மாஃபியா தலைவியைத் தமிழகத்தின் அம்மாவாகத் திணிப்பதற்கான அடிப்படையைத் தருகிறது.

– குப்பன்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

வங்கிகள் : கருப்புப் பணத்தை மாற்றித்தரும் அரசாங்க ஏஜெண்டுகள் !

1

ருப்புப் பணத்தையும், தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பது, போதை மருந்து கடத்தல் ஆகியவற்றையும் தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒழித்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார் மோடி.  ஆனால், நவம்பர் 8−ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 50 நாட்களில் கருப்புப்பணம் கடுகளவும் ஒழியவில்லை. கருப்புப்பண பேர்வழிகள் அஞ்சி நடுங்கிடவுமில்லை. மாறாக,  ஒரு புதிய கருப்புப்பணச் சந்தை உருவாகியுள்ளதோடு, வங்கிகளின் துணையோடு கருப்பை வெள்ளையாக்கும் மோசடிதான் பெருகியுள்ளது.

பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.
பணமாற்ற மோசடி தொடர்பாக சென்னையில் கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரிகள்.

கருப்பை வெள்ளையாக்குவதிலும் பணக்கடத்தலிலும் ஈடுபட்ட குற்றத்துக்காக கடந்த ஜூன் 2013−இல் ரிசர்வ் வங்கியால் ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்ட தனியார் நிறுவனம்தான், ஆக்சிஸ் வங்கி. அப்பேர்பட்ட யோக்கியவானாகிய ஆக்சிஸ் வங்கியின் டெல்லி− சாந்தினி சவுக் கிளையில், கடந்த நவம்பர் 8−ஆம் தேதி முதலாக ஒருவார காலத்திற்குள் போலி ஆவணங்கள் மூலம் 44 புதிய வங்கி கணக்குகளைத் தொடங்கி, அவற்றில் ஏறத்தாழ ரூ.450 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதவிர, பல நூறு கோடி அளவுக்குப் பணப்பரிமாற்ற மோசடிக்கு உடந்தையாக இருந்த டெல்லி காஷ்மேரே கேட் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையை சேர்ந்த இரு மேலாளர்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

‘‘கோப்ரா போஸ்ட்’’ எனும் வலைத்தளம், நாட்டின் ஐந்து மண்டலங்களில் நடத்திய இரகசிய விசாரணையின் மூலம் ( Operation Red spider)  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய தனியார் வங்கிகள் பல்வேறு வழிகளில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 8−ம் தேதி முதல் டிசம்பர் 7−ம் தேதி வரை தமிழகத்தில் 9,000 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு, ஒரு கிளைக்கு ஏறத்தாழ ரூ.87 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 900 கிளைகளைக் கொண்டுள்ள தனியார் வங்கிகளுக்கு, ஒரு வங்கிக் கிளைக்கு ஏறத்தாழ ரூ.6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாகும்.

கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.
கைது செய்யப்பட்ட டெல்லி ஆக்ஸிஸ் வங்கி மேலாளர்கள் வினித் குப்தா, ஷஷாங்க் சின்ஹா ஆகிய இருவரையும் நீதிமன்றத்திற்குக் கூட்டிவரும் போலீசு அதிகாரிகள்.

பொதுத்துறை வங்கிகளில் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகவும், தனியார் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் உள்ள நிலையில், இவ்வளவு பணத்தை கொண்டு தனியார் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பணம் வழங்கியிருக்கலாம். ஆனால், தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது. இதிலிருந்தே தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட புதிய நோட்டுகள் கருப்புப் பணப் பேர்வழிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதை உணர முடியும்.  நவ.8 முதல் ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி. ஆகிய தனியார் வங்கிகள் எவ்வளவு பழைய நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களை வழங்கியுள்ளன என்பதை ரிசர்வ் பாங்க் கவர்னர் தேதி வாரியாக அறிவிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கோரியுள்ள போதிலும், இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளிலும் பழைய நோட்டுகளை மாற்றவும், பணப் பரிமாற்றங்களுக்கும் தடை விதித்து, தமிழகம் உள்ளிட்ட எதிர்த்தரப்பு ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து வருமான வரித்துறையினரைக் கொண்டு சோதனைகள் நடத்துகிறது, மோடி அரசு. ஆனால், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவை நிர்வாக இயக்குனராகக் கொண்டுள்ள குஜராத்தின் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.500 கோடி அளவுக்கும், குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் மற்றொரு கூட்டுறவு வங்கியில் ரூ.200 கோடி அளவுக்கும் பணப் பரிமாற்றம் நடந்துள்ளபோதிலும், மோடி அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. குஜராத் கூட்டுறவு வங்கிகளில் கமிசன் அடிப்படையில் புதிய நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக யாதீன் ஓசா என்கிற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மோடிக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள போதிலும், இதுவரை மோடி அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

axis bank_pic3
தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டைதான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே, ஏடிஎம் கடவு எண்களைத் திருடும் மோசடிகள் தொடரும் நிலையில், ஒருவரது வங்கிக் கணக்கில், அவருக்குத் தெரியாமல் பணத்தைப் போட்டு எடுப்பதென்பதும் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. உ.பி. மாநிலம் மீரட்டில் வசிக்கும் ஏழைப் பெண்ணாகிய ஷீதல் யாதவ் என்பவரது பாரத ஸ்டேட் வங்கியிலுள்ள ஜன்தன் கணக்கில் ரூ. 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டு, பின்னர் அது கணினிக் கோளாறினால் ஏற்பட்ட தவறாகச் சித்தரிக்கப்பட்டது. தருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியிலுள்ள புலிகரை கிராமத்தின் இந்தியன் வங்கியில், நகைக் கடனுக்கு வட்டிக் கட்டவில்லை என்பதால் முடக்கப்பட்டிருந்த சிவகுமார் என்ற விவசாயியின் கணக்கில் 1,32,758. ரூபாய் போடப்பட்டு பின்னர் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. வங்கி மேலாளரான பிரபாகரன், இதுபோல பல விவசாயிகளது வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு பின்னர் வேறு கணக்கிற்கு பல இலட்சங்களை பரிமாற்றம் செய்துள்ள மோசடியை மக்கள் அதிகாரம் அம்பலப்படுத்தியது.

இறக்குமதிக்கான கோடிக்கணக்கான தொகையை வெளிநாட்டிலுள்ள நிறுவனத்துக்கு அனுப்புவதாகக் கூறித்தான், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி − இறக்குமதி வர்த்தகம் வாயிலாக வருடந்தோறும் பல லட்சம் கோடி கருப்புப் பணம் கருப்பணம் வெளியேறி வருகிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் உள்ளிட்ட மின்னணு பரிமாற்றங்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் நடந்துள்ளன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு  இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் நிழல் உலகப் பின்னணியை ஏற்கெனவே அம்பலமாக்கியிருக்கின்றன.

மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு...!
மோடிஜி, உங்கள் டிஜிட்டல் இந்தியாவின் பாதுகாப்பு ரொம்ப நல்லாருக்கு…!

உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், அதில் முறைகேடுகள் இருக்காது, இதன் மூலம் சட்டப்படியான வருமான வரியை விதிக்க முடியும், மின்னணு பரிமாற்று முறை வந்தால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நாட்டு மக்களின் காதுகளில் இன்னமும் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் அச்சகம், ரொக்கப் பணத்தைப் பாதுகாக்கும் கருவூலம் ஆகியவற்றின் வழியாகவும் பணப் பரிமாற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த இடங்களிலும் சோதனை நடத்த வேண்டுமென்கிறார். ஆனால் இதற்கு விளக்கமளிக்காத மோடி அரசோ, ஒருசில வங்கிக் கிளைகளில் மட்டும் சோதனை நடத்துவதோடு நின்றுவிட்டது. மணற்கொள்ளை மாஃபியா சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட புதிய ரூ. 2,000 நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வந்தது என்பதை அந்த நோட்டுகளின் எண்ணை வைத்தே கண்டறிய முடியும் எனும் போது, மோடி அரசோ அது பற்றி வாய்திறக்க மறுக்கிறது. மறுபுறம், நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் சோதனை செய்து மோசடிகளைத் தடுப்போம் என்று வெற்றுச் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சோதிக்குமளவுக்கு அடிக்கட்டுமான வசதிகளோ, போதிய எண்ணிக்கையிலான அதிகாரிகளோ இல்லை என்று வங்கி ஊழியர் சங்கங்களே இந்த வெற்று வாக்குறுதியை அம்பலப்படுத்துகின்றன.

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது உலகறிந்த ஒரு மோசடி. மோடி அரசோ, இன்றைய கிரிமினல் முறையிலான அரசுக் கட்டமைப்பைக் கொண்டே இதனைச் சாதிக்க முயற்சிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகளும் கருப்புப் பணப் பேர்வழிகளும் தங்களது வழக்கமான கிரிமினல் நடவடிக்கைகளால், மோடியின் ஊதிப் பெருக்கப்பட்ட கருப்புப்பண ஒழிப்புத் திட்டத்தின் காற்றைப் பிடுங்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

– குமார்

***

பணமற்ற பொருளாதாரம்: உமி கொண்டு வருபவன் அவல் தின்பான் !

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர், அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.

swipingலாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து, போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து, போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.

அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணை முதலாளிக்கிட்ட குடுத்து, போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், போன மாசம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது, சில்லறை இல்லைன்னு 2,000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல, இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், போன மாதம் தங்கி இருந்த ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை லாட்ஜ் ஓனர்கிட்ட குடுத்தாரு.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை, நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.

இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே திரும்பிப் போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, வைத்திய பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி, யாருக்கும் இழப்பில்லாம.

இப்ப நம்ம மோடியின் புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?

வேலைக்கார அம்மாவோட பே டிஎம் ஆப்ல 1%, டீக்கடை ஆப்ல 1%, பால் பண்ணை ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பே டிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பே டிஎம் ஆப்ல 1% – இப்பிடி பே டிஎம் பாக்கெட்டுக்கு ரூ.5 + 4.95 + 4.90 + 4.85 + 4.80 = ரூ.24.50- போயிடும். 500 ரூவாயில ஆரம்பிச்ச ட்ரான்ஷாக்சன், லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது ரூ.475.50 ஆகிடும்.

(குறிப்பு : இப்போதைக்கு ட்ரான்ஷாக்சன் சார்ஜ் 2.9% வரைக்கும் இருக்கு. எளிதா கணக்குப் போடுறதுக்காக 1% ஆக எடுத்துக்கிட்டோம்.)

இதுல யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? இப்பவாவது புரிஞ்சிக்குங்கோ, இது யாருக்கான திட்டம்னு !

– அன்பு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?

0

ஞ்சம் பொழைக்க
தவிக்கும் ஊரில்
பஞ்சரத்ன கீர்த்தனை
பட்டுப்போன
ஆற்றங்கரையில்
பட்டுப்புடவைகள் வாசனை.

slideரசிக்க முடிந்தவர்
ரசிக்கலாம்
உழவர் நெஞ்சு வெடித்த
ஓசை மறந்து
உஞ்ச விருத்தி பஜனை !

காவிரியின் தாள கதி
காவியால் நிர்க்கதி
கர்நாடாகாவிடம் மல்லுக்கட்டி
கழனிகள் அதோ கதி !
இதற்கு இல்லை
உங்களிடம் ஒரு சுருதி
கூச்சமில்லாமல்
கொலைக்களத்தில்
களிப்புடன் கர்நாடக `சங்கதி’ !

வந்தவருக்கெல்லாம்
சோறு போட்ட
தஞ்சை பூமியே காலி
தியாகய்யரையும்  ஊட்டி வளர்த்த
நெற்களஞ்சியம் மூளி !

நாற்றசையும் சுவரம் இன்றி
மருதப்  பண் மரணம்
பார்த்துப் பதறாத
உங்கள் `அலங்காரம்’.
பசும் பால் காபிக்கு
கும்பகோணம்
பாடி மகிழ
ஆரோகணம், அவரோகணம்.

“கருணையிலாதது கண்ணா ?”
கேட்டார் வள்ளுவர்
கண்டும் சுரணையிலாதது
பண்ணா ?
கேட்கத் துடிப்பது உழவர்.

கார்ப்பரேட்  ஆராதனை
விளைநிலம் விழுங்கி
கொள்ளையிடுது நாட்டை.
வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல்
உங்கள் நாவில் துள்ளுது ‘நாட்டை

மதகோசை முடங்கி
பயிரோசை ஒடுங்கி
உயிரோசை அடங்கும் புல்லினம்.
இதற்கொரு உணர்ச்சியில்லாமல்
இதயம் மரத்தது இசையா !
நீங்கள்
என்ன வகை உயிரினம் ?

கழுத்து மணி இல்லாமல்
கலை இழந்து
கால்நடைகள் குரலெடுக்க  முடியாமல்
வாயில் நுரை தள்ளி.
கழுத்து ஆரம் ஆட்டி
காதணி குழையக் காட்டி
காய்ந்த ஊருக்கு நடுவே
களைகட்டும் உங்கள்
ஆரபி, வராளி

குரல், துத்தம், கைக்கிளை
உழை, இளி, விளரி, தாரம்
எனும் ஏழுவகைத் திருடி
தமிழ் தாள உறுப்புகள்
“அலகு ”  லகுவாகி
“துரிதம்”  த்ருதம்  ஆகி
‘அரைத்துரிதம்’ அனுத்ருதம்  ஆகி
களவாடி   தமிழிசையை
கர்நாடக இசையாக்கி
தமிழ் நிலம் பாடாமல்
வக்ர ராகமும்,
தமிழில் பாடினால் தீட்டு எனும்
அக்ரகாரமும்

கெளளை‘ பாடும் சத்தத்தில்
தன்மானத்தில்
தவளை சாகுது  மொத்தத்தில்.

வரப்பில்
வேலி முள்
எனத் தொட்டால்
வெளுத்து காய்ந்து கிடக்கும்
ஓணாண்.

வெங்காயச் சருகென
விலக்கினால்
வாசலில்
மக்கிக்கிடக்கும்
வண்ணத்துப் பூச்சி

தொட்டிலின் மேல்
ஒட்டடை
எனத் தட்டினால்
துருப்பிடித்து
வெகு நாளாய்
மறந்துபோன கருக்கரிவாள்

இறந்த விவசாயியின் முகத்தை
நிழற்படத்தில் வெறித்து,
வடியும் தாயின் கண்ணீரைப்   பார்த்து
விளங்காமல் பயந்து
செதும்பும் குழந்தை.

ஏன் இந்தத் துயரம்
எது இதன் அடி நாதம் ?
ஊன் உருகும்
உங்கள் புல்லாங்குழலில்
இதற்கோர் இழை உண்டா…

‍பொங்கலுக்கு வழியின்றி
உழவன் வீட்டில் கருமாதி
உங்களுக்கு என்ன ?
உறுத்தாமல்   அனுபவிக்க
காம்போதி

இந்தனைக்கும்  நடுவே
இத்தரையில் அமர்ந்து
தொடை தட்டி, சுதி கூட்டி
பஞ்சமம், சட்சம்
உங்களால் முடியும்
ஆம்
உங்களால் முடியும்
பசையற்ற நிலத்தில்
இசைக் கூத்தடித்த
உங்களால் மட்டுமே முடியும் !

– துரை. சண்முகம்

குறிப்பு: ஒற்றை மேற்கோளில் வருபவைகள் ராகங்களின் பெயர்கள்.

டெல்லிக்கட்டுக்காக விழுப்புரத்தில் திரண்ட மாணவர் படை !

0

மிழகம் முழுவதும் “ஜல்லிக்கட்டு வேண்டும்” என்று ஆரம்பித்த மாணவர்களின் போராட்டம் தமிழக மக்களின் போராட்டமாக எப்படி மாறியதோ, அதேபோல் தான்   “ ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு” என்ற முழக்கமாக மாறி, சென்னை மெரினாவில் ஆரம்பித்த  இந்த போராட்டம் தமிழகமெங்கும் பற்றிப் பரவியது.

 

villupuram_jallikattu-protestகடந்த ஜனவரி 19-ம் தேதி விழுப்புரத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நான்கு நாட்கள் இந்த போராட்டம் நடைபெற்றது. மாணவர்களில் ஒரு பகுதியினர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர்கள் திரட்டினர்.

இந்த போராட்டத்தை  மாணவர்களும், இளைஞர்களும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். புரட்சிகர சக்திகள் அதிக அளவில் இருப்பதை மோப்பம் பிடித்த காவல்துறை, ஒருங்கிணைப்பில் உள்ளவர்களை அழைத்து  பு.மா.இ.மு மற்றும்  மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்கள் அதிக அளவில்  வந்துள்ளார்கள் அவர்களை பேச விடாதீர்கள் என்று எச்சரித்தது.  தோழர்கள் பேசிவிடக்கூடாது என்பதிலேயே இந்த ஏவல்துறை குறியாக இருந்தது.

மாணவர்களின் இந்த தன்னெழுச்சியை பார்த்து விட்டு வெகுஜன மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து  கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் தங்களால் முடிந்த உதவிகளையும் இந்த போராட்டத்திற்கு செய்து வந்தார்கள்.

புமாஇமு விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள்
புமாஇமு விழுப்புரம் அமைப்பாளர் தோழர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள்

திருவிழாவை போன்று மக்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். தொடர்ந்து போராடக்கூடிய மாணவர்களுக்கு ஓர் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தது  என்றே கூறலாம். மாணவ – இளைஞர்களின் இந்த போராட்டம் தமிழகத்தின் விடிவெள்ளி என்றே பலரும் கருதினார்கள்.

பெண்கள் ஆயிரக்கணக்கில்  வந்து ஆர்வமாக கலந்து கொண்டனர். சிலர் கைக்குழந்தைகளோடு பங்கேற்றனர். வெயில், மழை, பனி, குளிர் என்று எதையும் பார்க்காமல் மாணவர்கள், இளைஞர்கள் அங்கே சங்கமித்தனர். சாதி, மதம் கடந்து அனைவரும் ஓர் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டதோ ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதோ அனைத்தும் மறக்க முடியாத நினைவுகளோடு நீடித்திருக்கும்.

போராட்டத்தின் இரண்டாவது நாள், மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் விதத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சார்ந்தவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இளைஞர்களையும், மக்களையும் வெகுவாக அணிதிரட்டி மோடியை அம்பலப்படுத்தி ஊர்வலமாக வந்தனர். எக்காரணம் கொண்டும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பெயர் மாணவர்களிடம்  தெரிந்து விடக்கூடாது என்று கியூ, மற்றும் பல்வேறு உளவு அமைப்புகள் தீவிரமாக இருந்ததன. ஆனால் அரசியல் கருத்து என்ற வகையில் மக்கள் அதிகாரத்தின் முழக்கங்களை மாணவர்கள் வரித்துக் கொண்டனர். அதை போலீசு தடுக்க முடியவில்லை.

villupuram_jallikattu-protest2இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்ற இந்த போராட்டம் மூன்றாவது  நாள் காவல்துறை போராட்டத்தை முடித்துக்கொள்ள தொடர்ந்து நிர்பந்தித்து மாணவர்களையும், ஒருங்கிணைப்பில் இருந்தவர்களையும் மிரட்டிக்கொண்டே இருந்தனர். இதனால் போராட்டத்தை ஒருங்கிணைத்த இளைஞர்களும் முடித்துக்கொள்வதென முடிவெடுத்து இரவு எட்டு மணிக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.

எனினும் இந்த போராட்டத்திற்கு உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மனமில்லாமல் அங்கேயே தங்கினார்கள். இதனை பார்த்த காவல்துறை தடியடி நடத்தப்போவதாக அறிவித்து கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தது. இதனை அறிந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் இரவு அந்த மாணவர்களுடன் தங்கி அடுத்த நாள் போராட்டத்தை தொடருவதற்கு ஆதரவாக நின்றனர். நான்காவது நாள் தொடர்ந்த இந்த போராட்டத்தில் மாணவர்களை மட்டுமே தலைமை ஏற்று  நடத்த வழிகாட்டுதல் கொடுத்து காவல்துறையின் மிரட்டலுக்கு எதிராக அஞ்சவேண்டாம் என்று மாணவர்களும் நம்பிக்கை பெற்றனர்.

மூன்றாவது நாள் இளைஞர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள்
மூன்றாவது நாள் இளைஞர்களுடன் மக்கள் அதிகாரம் தோழர்கள்

இதனை மோப்பம் பிடித்த காவல்துறை RSS – BJP, இந்து முன்னணி காலிகளை களத்தில் இறக்கி விட்டு ஒவ்வொருவராக சந்தித்து  மோடிக்கு எதிராக முஸ்லீம்கள் பேசுகிறார்கள் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். மோடிக்கு எதிராக பேசக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று மிரட்டினார்கள். மீறி பேசினால் அவர்களிடம் இருந்து மைக்கை பிடுங்கி கொள்வது என்று தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினார்கள். மற்றொரு புறம் கியூ மற்றும் உளவுப்பிரிவு அமைப்புகள் மாணவர்களை சந்தித்து “ஜல்லிக்கட்டுக்கு தான் அனுமதி கொடுத்து விட்டார்கள் பிறகு ஏன் போராட்டம் செய்கிறீர்கள்” என்று கூறி மாணவர்களை கலைத்தது.

தொடர்ந்து மாணவர்களை மிரட்டி தனது நோக்கத்தை நிறைவேற்றியது காவல்துறை. பிஜேபியும் – காவல்துறையும் கூட்டு சேர்ந்து இந்த போராட்டத்தை சதித்தனமாக முறியடித்து விட்டது என்பது தான் உண்மை. காவல்துறை காவிமயமாகிவிட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? எனினும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் அரசியல் மற்றும் போராட்டத்தின் பாடங்களை உற்சாகத்துடன் கற்றுக் கொண்டு சென்றிருக்கின்றனர். மாணவர்கள் அரசியல்படுத்தப்பட்ட நிகழ்வை காவிகளோ இல்லை காவல் துறையோ என்ன செய்து விட முடியும்?

(படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும்)

– வினவு செய்தியாளர், விழுப்புரம்.

“மிக்சர்” பன்னீர் “மிஸ்டர்” பன்னீர் ஆனது எப்படி ?

25
panneer selvam  (2)
பன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?

ன்னீருக்கு எப்படி ‘தைரியம்’ வந்தது?

பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?

கொஞ்ச நாளுக்கு முன்னர்தான் ”மிக்சர் பன்னீர்” என்று கடற்கரையே அவரைக் கழுவி ஊற்றியது.

அப்படிப்பட்ட பன்னீர் இன்றைக்கு தைரியமாகப் பேசுகிறார், கேள்வி கேட்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?

ஏனென்றால், தமிழக மக்கள் கேள்வி கேட்பதை அவர் பார்த்துவிட்டார். காற்று வீசும் திசையைப் பார்த்து விட்டார்.

000

“குறுக்கு வழியிலே ஆட்சியைப் பிடிச்ச குலேபகாவலி சசிகலா” என்று மெரினாவில் கோவன் பாடத் தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

போயஸ் தோட்ட வீதியிலேயே சசி கும்பலை எதிர்த்துப் பாடுகிறார் ஒரு பெண்.

சசிகலாவை தெருவில் போட்டுத் துவைக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பெண்கள்.

அந்தப் பெண்கள் ஜெ மீது வைத்திருக்கும் பக்தி முட்டாள்தனமாக இருக்கலாம். ஜெயாவை சதி செய்து கொன்று விட்டதாக அவர்கள் கூறும் குற்றச் சாட்டு ஆதாரமற்றதாகவும் இருக்கலாம்.

ஆனால், அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

“70 நாட்களாக என்ன நடந்தது? எனக்கு பதில் சொல்” என்று கேட்கிறார்கள். அது சசிகலாவைக் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, சசிகலாவுக்கு துணை நின்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம், கவர்னர், மோடி, அப்போலோ சென்று வந்து சசிகலாவுக்கு சான்றிதழ் கொடுத்த கட்சித் தலைவர்கள் – ஆகிய அத்தனை பேரையும் பார்த்து கேட்கும் கேள்வி.

000

panneer selvam  (3)
பன்னீருக்கு எப்படி ‘சுயமரியாதை’ உணர்வு வந்தது?

“ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் போட்டுவிட்டோம் கலைந்து போ” என்கிறது போலீசு. “முடியாது. சட்டத்தைக் காட்டு, படித்துப் பார்க்காமல் எப்படி போக முடியும்?” என்று கேட்கிறார்கள் மாணவர்கள்.

“போலீசையே கேள்வி கேட்கிறாயா?” என்று ரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கிறது போலீசு. “ஏன் அடித்தாய் எங்கள் பிள்ளைகளை?” என்று மீனவர்கள் கேள்வி கேட்கிறார்கள். மீனவர்களும் தாக்கப்படுகிறார்கள். “ஏன் அடித்தாய் மீனவர்களை என்று தமிழகமே கேள்வி எழுப்புகிறது“

அகிலா என்ற ஒரு பெண் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வானதி சீனிவாசனும், போலீசு அதிகாரியும், புதிய தலைமுறை நெறியாளரும் தடுமாறுகிறார்கள். உளறுகிறார்கள்.

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் உலவும் ஆளும் வர்க்க எடுபிடிகளின் சாயம் வெளுக்கிறது. மைக்கை நீட்டிக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து, மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஊடக மாமாத்தனத்தின் மானம் கப்பலேறுகிறது.

மாணவர்களையும் இளைஞர்களையும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று நினைத்துக் கொண்டு அறிவுரை சொன்ன லாரன்சு, ஹிப்ஹாப் ஆதி முதல் ரஜனிகாந்த் வரை அத்தனை சினிமாக்காரர்கள் முகத்திலும் அச்சம் படர்கிறது. ரிலீஸ் ஆனால் அசிங்கமாகி விடுவோமோ என்று “சிங்கம்” பம்முகிறது.

000

து பன்னீருக்கு வந்த தைரியம் அல்ல நண்பர்களே, தமிழ் மக்களுக்கு வந்திருக்கும் தைரியத்தின் விளைவு. பன்னீருக்கு சுயமரியாதை உணர்வு வந்துவிட்டதாக நினைக்காதீர்கள். இது தமிழக மக்களிடம் பொங்கிய சுயமரியாதை உணர்வின் விளைவு.

எல்லா எம்.எல்.ஏக்களும் மன்னார்குடி மாபியாவை ஆதரித்தாலும், தமிழகமே அவர்களை எதிர்க்கிறது என்பது பன்னீருக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. இனி குனிந்தால் லாபமா, நிமிர்ந்தால் லாபமா என்று கூட்டிக் கழித்துப் பார்த்தார் அமாவாசை – நிமிர்ந்து விட்டார்.

000

panneer selvam  (1)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி.

ல்லிக்கட்டு போராட்டத்தில் மிக்சர் பன்னீரை விட அதிகமாகக் கழுவி ஊற்றப்பட்டவர் மோடி. பன்னீரோடு சேர்ந்து கரையேறிவிடலாம் என்று பார்க்கிறது சங்க பரிவாரம். மன்னார்குடி மாபியாவிடமிருந்து தாங்கள்தான் தமிழகத்தைக் காப்பாற்றியது போலக் காட்டுவதன் மூலம், காவிரி உள்ளிட்ட எல்லா துரோகங்களையும் மறைக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யும்.

அம்மா ஆன்மாவுடன் பன்னீர் பேசிய காட்சி என்பது ஏ, பி, சி – மூன்று ஏரியாக்களிலும் நூறு நாள் ஓடும். இனிமேல்தான் இருக்கிறது படத்தின் காமெடி டிராக். சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்றும், அந்தக் கட்சியின் ஜனநாயக உரிமை என்றும் வக்கணை பேசிய யோக்கியர்களெல்லாம் “அது போன மாசம்” என்று சமாளிப்பார்கள். “உஸ்ஸ்… யப்பா…. எப்டியெல்லாம் பேசி சமாளிக்க வேண்டியிருக்கு” என்று தெனாய்ஞ்சு போவார்கள்.

அல்லது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு “மாநில உரிமை” என்று காமெடி பண்ணுவார்கள். உடனே “ஊழல் என்ன மாநில உரிமையா” என்று பாஜக நாராயணனும், வானதி சீனிவாசனும் தகரத்தில் ஆணியால் கீறியது போலக் கத்துவார்கள்.

000

ன்னீர் பேசியிருக்கும் எதுவும், யாருக்கும் புதிய விசயமல்ல. பன்னீர் பேசி விட்டார் என்பது மட்டும்தான் புதிய விசயம்.

இரவு முழுவதும் வெள்ளை வேளேரென்ற சொகுசு கார்கள் வரிசை வரிசையாக போயஸ் தோட்டத்தை மொய்க்கின்றன. காருக்குள்ளேயிருந்து மடிப்பு கலையாத மினிஸ்டர் ஒயிட்டில் பன்றிகள் பரபரப்பாக இறங்குகின்றன. இது “வந்தனோபசார கடைசி ஆட்டம்”, இந்த நான்கு ஆண்டுகளுடன் கதை முடிந்தது என்று எம்.எல்.ஏ க்கள் எல்லோருக்கும் தெரியும்.

மிச்சமிருக்கும் நான்கு வருசம் சசிகலாவுடன் இருப்பதா, அதற்குப் பிந்தைய எதிர்காலத்தை யோசித்து இப்போதே தாவுவதா என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கவலையும்.

சசிகலாவா, ஸ்டாலினா, பாரதிய ஜனதாவா – யாருக்கு “பொக்கே” கொடுத்து கும்பிடலாம். என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுடைய கவலை.

இனி, இவர்களெல்லாம் தங்களுடைய கவலையை மக்களுடைய கவலையாக மாற்றுவார்கள். அதாவது திருடர்கள் தங்களுடைய கவலையை, பறிகொடுத்தவர்களான நம்முடைய கவலையாக மாற்றுவார்கள்.

அந்த  *$#*#$*  வேலையை ஊடகங்கள் செய்யும்.

000

“கவர்னர் என்ன செய்வார்? மோடி என்ன செய்வார்? ஸ்டாலின் என்ன செய்வார்” என்று விவாதங்கள் நடக்கும்.

“பன்னீர் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக சொல்லி விட்டாரே, இதை கவர்னர் ஒப்புக்கொள்வாரா?” “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பன்னீருக்கு டயம் கொடுப்பாரா அல்லது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பாரா?” “ஜனாதிபதி ஆட்சி வருமா? தேர்தல் வருமா?”

“அரசியல் சட்டத்தின் 9999(அ) பிரிவு என்ன சொல்கிறது (ஓ) பிரிவு என்ன சொல்கிறது?” “இதற்கு முன் இதே போன்ற சூழ்நிலையில் அரியானாவில் கவர்னர் என்ன செய்தார், கர்நாடகாவில் என்ன செய்தார், வெங்காயத்தில் என்ன செய்தார்?”

“குதிரை பேரம் நடக்குமா? பன்னீரை ஸ்டாலின் ஆதரிப்பாரா? அதிமுக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவார்களா? எம்.எல்.ஏ க்களை கடத்துவார்களா? ஒரு எம்.எல்.ஏ வின் விலை என்ன? எந்த சாதி எம்.எல்.ஏ எந்தப் பக்கம் போவான்?” – இப்படி விவாதங்கள் நடக்கும்.

இதற்கு அன்றாடம் பத்து வல்லுநர்கள், ஆர்வலர்கள், நிலைய வித்வான்கள் பவுடர் போட்டுக் கொண்டு, நாக்கைத் தீட்டிக்கொண்டு தயாராக இருப்பார்கள். திருவிழா சீசன் கரகாட்ட செட் போல, இந்த சானலுக்கும் அந்த சானலுக்கும் பறந்து கொண்டிருப்பார்கள்.

000

panneer selvam  (1)_1
பன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல

ன்னீருடைய கவலையோ, சசிகலாவின் கவலையோ, ஸ்டாலினுடைய கவலையோ, மோடியின் கவலையோ நம் கவலை அல்ல.

அம்மா சமாதியில் உருக்கமாகப் பேசும் பரிதாப பன்னீரைப் பார்க்கும்போது, மணல் மாஃபியா சேகர் ரெட்டியுடன் பன்னீர் நிற்கும் திருப்பதி மொட்டை படத்தையும், பன்னீரின் சகோதரர்தான் தமிழக மணல் கொள்ளைக்கு மன்னார்குடி மாபியாவால் நியமிக்கப்பட்ட இன்சார்ஜ் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று சசிகலாவுக்கும் அதிமுகவின் ஜனநாயக உரிமைக்கும் பரிந்து பேசும் முன்னாள் மக்கள் நலக்கூட்டணியினர்தான், “அதிமுகவின் வெற்றி பணம் கொடுத்து, தில்லுமுல்லு செய்து பெறப்பட்ட முறைகேடான வெற்றி” என்று பேசியவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

இன்று மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை காக்க வந்த தேவதூதர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள முனைகின்ற பாஜகவினர்தான், சசிகலாவையும் ஜெயாவையும் ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற அரும்பாடு பட்டவர்கள், காவிரியைத் தடுத்து தமிழக விவசாயிகளின் குடி கெடுத்தவர்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

000

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார் நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !

லை முதல் கால் வரை கிரிமினல் மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு பிறகு ஏமாந்து விட்டதாகப் புலம்பியது போதும்.

மெரினா மாணவர்களும் இப்படி யோசித்து போராட்டத்தை ஏதாவது ஒரு கட்சியிடம் ஒப்படைத்திருந்தால், நிச்சயமாக ஏமாற்றப்பட்டிருப்பார்கள். வாடிவாசல் திறந்திருக்காது.

“உன் கட்சி, சட்டம், கோர்ட்” பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. “வாடிவாசலைத் திறக்காமல் வீடுவாசல் போவதில்லை” என்று தமிழகமே தெருவில் நின்றதன் விளைவாகத்தான் வாடிவாசல் திறந்தது. பொறுப்பை கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு நாம் வீட்டுக்குப் போயிருந்தால், வாடிவாசல் திறந்திருக்காது.

“அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.

“மிக்சர்” பன்னீர்செல்வம், “மிஸ்டர்” பன்னீர்செல்வம் ஆகிவிட்டார்

நாம் “மிக்சர் தமிழ்மக்கள்” ஆகிவிடக் கூடாது. எச்சரிக்கை !

  • சூரியன்

ஜெயாவின் துணிவு ரவுடித்தனம் ! ஜெயாவின் கருணை பிச்சை போடுவது !!

3
அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
  • ஜெயா, அறிவில் அவ்வையார், துணிவில் ஜான்சி ராணி, அன்பில் அன்னை தெரசா! (தினமணி, மகளிர் மணி, 14.12.2016)
  • ஜெயாவின் மனம் பொன்மனம் போன்றது. (நடிகர் ரஜினிகாந்த்)
  • போயசு கார்டனில் இட்லி கடை நடத்த அனுமதித்த மகராசி ! (இட்லிக் கடை நடத்தும் சரசுவதி, தமிழ் இந்து, 09.12.2016)
  • துணிச்சலான அரசியல் நடவடிக்கைகளாலும், ஆட்சிக் காலங்களில் உறுதியோடு அவர் எடுத்த முடிவுகளாலும் இன்னும் பல்லாண்டு காலம் தமிழர்களால் நினைவுகூரப்படுவார். (ஆனந்த விகடன், 14.12.2016)

ன்பு, துணிவு − இந்த மனிதப் பண்புகளுக்கான வரையறை என்ன?

1996−இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் அறிக்கை விட்டதைக்கூட மனதில் வைத்துக் கொள்ளாமல், எனது மகளின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் எனக் கூறுகிறார், ரஜினிகாந்த்.

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல்.
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல்.

போலீசாரிடம் என்னைத் தேடிக் கொண்டு வரச் செய்து, போயசு கார்டனில் மீண்டும் இட்லிக் கடை தொடங்கி நடத்த அனுமதித்தார் என நினைவுகூர்கிறார், சரசுவதி.

நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவக்குமார், சரசுவதி உள்ளிட்ட பல்வேறு தனிநபர்களிடம் ஜெயா வெளிப்படுத்திய அக்கறையை, பெருந்தன்மையை, அன்பைக் கொண்டு அவரை மதிப்பிடுவதா? அல்லது தமிழகத்தின் பல்வேறு மக்கட் பிரிவினரின் கோரிக்கைகளின்பால் அவரும், அவரது அரசும் காட்டிய ‘‘அக்கறையை’’க் கொண்டு அவரை மதிப்பிடுவதா?

அறக்கட்டளை நிறுவனங்களுக்கு இலட்சக்கணக்கில் நன்கொடை அளிக்கும் முதலாளிகள்தான், தனது தொழிலாளர்கள் அரைக்காசு சம்பளம் அதிகமாகக் கேட்டால் வேலையை விட்டுத் துரத்தி அடிக்கிறார்கள். முதலாளிமார்கள் தொழிலாளிகளின் வயிற்றலடிப்பதை மறைத்துவிட்டு, அவர்களது வள்ளல்தனத்தைக் கொண்டாட முடியுமென்றால், ஜெயாவின் கருணையையும் தமிழகம் கொண்டாடலாம்..

சரசுவதியைத் தேடிப்பிடித்து இட்லிக் கடை நடத்த அனுமதித்த ஜெயா, அதேவிதமான அன்பை, அக்கறையை, பள்ளிக்கூட மாணவர்களுக்குச் சமைத்துப் போடும் சத்துணவுப் பணியாளர்கள், அமைப்பாளர்களின்பால் காட்ட மறுத்தார். தமக்கு மற்ற அரசு ஊழியர்கள் போல ஊதியமும், ஓய்வூதியமும் தரக் கோரி அவர்கள் போராட முனைந்தபோது, அப்பணியாளர்களை சென்னைக்குள்ளேயே வராமல் தடுத்துத் துரத்தியது, ஜெயாவின் போலீசு.

2001 சட்டமன்றத் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வரான ஜெயா, கிட்டதட்ட பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை வேலையிலிருந்து ஒரே நாளில் துரத்தியடித்து, அவர்களின் வாழ்க்கையைச் சூனியமாக்கினார். இதற்கு, அப்பணியாளர்கள் முந்தைய தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர, வேறு காரணங்கள் ஜெயாவிற்குத் தேவையாக இருக்கவில்லை. இந்த அநீதிக்கு எதிராக அப்பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், உச்சநீதி மன்றம் வரை சென்று வழக்காடி வென்ற பிறகும், ஜெயாவின் மனதில் கருணை பிறக்கவில்லை. இறுதியாக, 2006 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், தனது தேர்தல் வெற்றிகளைக் கணக்கிட்டு, அவர்களை மீண்டும் பணியில் எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். இந்த உத்தரவைப் பெறுவதற்குள்ளாக, 80−க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் மாண்டு போனார்கள்.

அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.
அரசு வேலை உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னையில் நடத்திய போராட்டத்தின்போது போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

இதைவிடக் கொடுமையானது, மக்கள் நலப் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிய ஜெயாவின் அடாவடித்தனம். மக்கள் நலப் பணியாளர்கள் 1989−ஆம் ஆண்டில் அப்போதிருந்த தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர்கள். 13,500 ஊழியர்கள் இருபது ஆண்டு காலம் பணியாற்றி வந்ததை ஒரு பொருட்டாகவே கருதாமல், 2011−இல் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே அவர்களை வேலையிலிருந்து நீக்கியது, அம்மா அரசு.

மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. இந்த அநீதியை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அவர்களைப் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இதனை எதிர்த்து அ.தி.மு.க. அரசு தொடுத்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவர்களுக்குப் பணி வழங்காவிட்டால், ஆறு மாத சம்பளத்தை வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில், அவர்களைப் பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இந்த உத்தரவை அமல்படுத்த மறுத்து, அ.தி.மு.க. அரசு உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அம்மா அரசின் இந்த அலைக்கழிப்புகளையும், போதிய வருமானம் இல்லாத வாழ்க்கையையும் எதிர்கொள்ள முடியாத அப்பணியாளர்களுள் இருபதுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய்விட்டனர்.

தன்னை எதிர்த்து அறிக்கைவிட்ட, மேட்டுக் குடி வர்க்கத்தைச் சேர்ந்த ரஜினிகாந்திடம் காட்டிய பெருந்தன்மையை, மக்கள் நலப் பணியாளர்களிடம் ஜெயா காட்ட மறுத்தது ஏன்? தி.மு.க.வால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காழ்ப்புணர்ச்சி மட்டும் இதற்குக் காரணமில்லை. மக்கள் நலப் பணியாளர்கள் தன்னிடம் கையேந்தி நிற்காமல், விடாப்பிடியாக தன்னை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்ற ஜெயாவின் பாசிசத் திமிர்தான் இதன் அடிப்படை.

ஜெயாவின் கருணையும், எம்.ஜி.ஆரின் வள்ளல்தனமும், மக்கள் தம்மை அண்டி, தமது கருணைக்காகக் கையேந்தி நிற்க வேண்டும் என்ற பண்ணையார்களுக்கே உரிய சிந்தனையிலிருந்து பிறந்தவை. எந்தவொரு மக்கட்பிரிவும் எந்தவொரு கோரிக்கைகாகவும் போராடக் கூடாது. மாறாக, தம்மிடம் இறைஞ்சிப் பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகவே கொண்ட கட்சி அ.தி.மு.க. இந்த விதியை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கும், அவர்களை ஒடுக்குவதற்கும் எந்த எல்லை வரையும் செல்லக்கூடியவர்களாக அவர்கள் இருவருமே இருந்தனர்.

பெப்சி நிறுவனத்துக்கு நாளொன்று 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து தாரை வார்ப்பதை ரத்து செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருநெல்வேலி−சிப்காட் வளாகத்தின் அருகே நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடியில் காயமுற்ற அக்கட்சியின் தொண்டர்கள்.
பெப்சி நிறுவனத்துக்கு நாளொன்று 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றிலிருந்து தாரை வார்ப்பதை ரத்து செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் திருநெல்வேலி−சிப்காட் வளாகத்தின் அருகே நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தடியடியில் காயமுற்ற அக்கட்சியின் தொண்டர்கள்.

கும்பகோணம் பள்ளி தீக்கிரையான சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் இழப்பீடு வழக்கை எடுத்துப் பாருங்கள், கூடுதல் இழப்பீடு கோரிப் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களால் தொடரப்பட்ட வழக்கில், அது பற்றி விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையில் கமிசனை அமைக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். நீதிமன்ற உத்தரவுப்படி கமிசன் அமைப்பதால் ஜெயா அரசிற்கு நட்டமோ, அவமானமோ ஏற்படப் போவதில்லை. ஆனாலும், தன்னகங்காரம் காரணமாக அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது, அம்மா அரசு.

பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகள் சில சலுகைகளைக் கோரித் தொடர்ச்சியாகப் போராடுகிறார்கள் என்பதாலேயே, அவர்களைச் சந்திக்க மறுத்தது, ஜெயா அரசு. அதோடு, பார்வையற்றோர் என்ற பச்சாதாபம்கூட இன்றி, போலீசை ஏவிவிட்டு அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி, அவர்களை நகரத்திற்கு வெளியே கடத்திக்கொண்டு போய் சுடுகாட்டில் வீசியெறிந்தது.

தாமிரவருணி தண்ணீரை அமெரிக்க ஏகாதிபத்திய நிறுவனமான கோக்கிற்கு அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொடுப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட ஜெயாதான், அம்மா குடிநீரை அறிமுகப்படுத்தினார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது எனத் திமிராக அறிவித்த ஜெயாதான், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க முன்வந்தார்.

இப்படித் தமிழக மக்களின் மீது அம்மா பொழிந்த கருணை மழையின் பின்னே ஏமாற்றுத்தனங்களும் மோசடிகளும் நிறைந்திருக்கின்றன. நம் மீது அடிமைத்தனத்தைத் திணிக்கிறது, ஜெயாவின் கருணை. அவரது துணிவோ ரவுடிக் கும்பலின் அடாவடித்தனத்தை மட்டுமே நமக்கு நினைவூட்டுகிறது.

2006−11 தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுள் ஜெயாவைத் தவிர மற்ற அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்ட சமயத்தில், ஜெயா, சட்டசபைக்குள் அ.தி.மு.க.வின் சார்பாகத் தனியொரு ஆளாகச் சென்று ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசியதைச் சுட்டிக்காட்டி, ஜெயாவின் துணிச்சலை அசாதாரணமான ஒன்றாகக் குறிப்பிடுகிறார்கள். ஜெயாவின் இந்தத் துணிச்சலுக்கு அச்சட்டமன்றத்தில் தி.மு.க. கடைப்பிடித்துவந்த குறைந்தபட்ச ஜனநாயகம் முக்கிய காரணமாக இருந்ததை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன.

அ.தி.மு.க. அரசால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் திருச்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. அரசால் வேலைநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் திருச்சி நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்

அதேசமயம், ஜெயா, தனது ஆட்சி நெடுகிலும் சட்டமன்றத்தை எப்படி நடத்தினார்? தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை எதிர்த்தோ, விமர்சித்தோ பேச எழுந்தாலே, அக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதை, இடைநீக்கம் செய்வதை விதியாகவே மாற்றினார். சட்டமன்றத்தில் தான் ஆற்றும் உரைகளை, அறிவிக்கும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்துப் பேசக் கூடாது என்பதற்காகவே, சட்டமன்றத்தை ‘‘110 மன்றமாக’’ மாற்றினார். சட்டமன்றத்திற்கு வெளியே அவரை, அவரது ஆட்சியை விமர்சித்த எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்குகளை அடுக்கடுக்காகப் போட்டு, விமர்சன உரிமையைப் பறித்தார். ஆளுங்கட்சியை எதிர்த்து நின்ற ஜெயாவின் ‘‘துணிச்சல்’’, எதிர்க்கட்சிகளை, பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள மறுப்பதேன்?

காரணம், ஜெயா போன்ற பாசிச ஆட்சியாளர்களுக்கு உரித்தான பயம். பொதுமக்களை, எதிர்த்தரப்பை, விமர்சனங்களை எதிர்கொள்ள ஜெயா போன்ற பாசிச ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். 2011−இல் அவர் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, இனி பத்திரிகையாளர்களைத் தான் வாரம் ஒருமுறை சந்திக்கப் போவதாக அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என்பது உடனடியாகவே அம்பலமானது. அவரது ஆட்சியில் உயர் அதிகாரிகள்கூட அவரைச் சந்திக்க முடியாது என்றபடி ஜெயா போயசு தோட்டத்திற்கு பதுங்கிக்கொண்டு, மர்மமான வாழ்க்கையைத்தான் நடத்தி வந்தார்.

அவர் முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களைச் சந்தித்ததே கிடையாது. அவரோ, அவரது கட்சியோ மக்கள் பிரச்சினைகளுக்காக எந்தப் போராட்டங்களையும் நடத்தியது கிடையாது. பேரரசர்கள் உப்பரிகையிலிருந்து மக்களுக்குத் தரிசனம் தருவது போல, தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் நான்கைந்து பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டுப் பறந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஜெயா, தனது ஆட்சியில் துணிச்சலான பல நடவடிக்கைகளை, முடிவுகளை எடுத்ததாக அவரைத் துதிபாடும் பத்திரிகைகள் எழுதுகின்றன. அந்த நடவடிக்கைகளுள் பெரும்பாலானவை, அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நினைத்த நேரத்தில் தூக்கியடித்தவைதான். அடிமைகளைக் கொல்லும் வழக்கம் இன்று இருந்திருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகள் என்ற பெயரில் உலவி வந்த அடிமைகளின் கதி அதோகதியாகியிருக்கும்.

இதற்கு அப்பால், பால் விலை மற்றும் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைத் தடாலடியாக உயர்த்தி அறிவித்ததை; வேலை நிறுத்தம் செய்த இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலைநீக்கம் செய்ததை; தமிழின உரிமைக்காகக் குரல் கொடுப்பதை ஒடுக்கியதையெல்லாம் அவரது துணிச்சலாக, திறமையாகச் சொல்லுகிறார்கள். குரூரமான மனோநிலை கொண்டவர்கள்தான் மக்களின் மீதான பாசிச ஒடுக்குமுறைகளைத் துணிச்சல், திறமை என்று பாராட்ட முடியும்.

ஜெயா, பார்ப்பன சாதியில், மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர். கான்வெண்டில் படித்தவர். இந்தச் சூழலில் வளரும் யாருக்கும் தான்தோன்றித்தனமும் திமிரும் கூடப் பிறந்த குணமாகவே இருக்கும். ஜெயாவிடமோ இதற்கு மேலே அதிகாரமும் இருந்தது. அவரது துணிவு இதிலிருந்துதான் கருவாகி உருவானது. சுருக்கமாகச் சொன்னால், சரளமாக இங்கிலீஷ் பேசும் மேட்டுக்குடி பார்ப்பனத்தி என்பதாலேயே ஜெயாவின் ரவுடித்தனங்களும் தான்தோன்றித்தனங்களும் துணிவாகக் காட்டப்பட்டன.

ரவுடிகளைக் கண்டு மக்கள் ஒதுங்கிச் செல்லுவதை, ரவுடியின் வீரமாக, துணிவாக மொழிபெயர்க்க முடியாது. அதுபோலத்தான் ஜெயாவின் துணிச்சல். உண்மையில், அவர் யாரையும் நம்பவில்லை. சந்தேகம், பயம் காரணமாக தனது கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், மன்னார்குடி குடும்பத்தை உளவுத்துறையைக் கொண்டு வேவு பார்த்தார். எம்.ஜி.ஆரைப் போல, ஜெயாவிற்குத் தனது உறவினர்களோடு நெருக்கம் இருந்திருந்தால், அவர்களையும் வேவு பார்த்திருப்பார். பாசிஸ்டுகள் தமது நிழலைக்கூட நம்புவதில்லை. அதைக் கண்டும் அஞ்சும் கோழைகள் அவர்கள்.

வெளிச்சத்தைப் பார்த்துப் பயந்து சந்துபொந்துகளுக்குள் மறைந்துகொள்ளும் கரப்பான் பூச்சிகள் போல, ஜெயாவும், சசியும் அச்சம், சந்தேகம், கோழைத்தனம் காரணமாக, போயசு தோட்டம், சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட்டுகளில் பதுங்கியே காலம் கழித்தனர். ஊழல் பணத்தை எண்ணிப் பதுக்கி வைக்கும் அவர்களது நடவடிக்கைகளுக்கும் இந்தத் தலைமறைவு வாழ்க்கையே வசதியாகப் போனது.

– அறிவு
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

ஓடும் ரயிலில் மோடியின் பக்தையோடு ஒரு நேருக்கு நேர் !

17
marina2
தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது.

மிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு அடங்க மறுத்த தமிழகம் எழுச்சியுடன் போராடியதை பார்த்தோம். அந்த எழுச்சியை அடக்குவதற்கு போலீசை ஏவி வன்முறை வெறியாட்டம் போட்டது அரசு. தமிழகமே போலீசின் அட்டூழியத்தை கண்டது. போலீசு மீதிருந்த மிச்சசொச்ச நம்பிக்கைகளும் தகர்ந்தன. தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட போலீசின் ரவுடித்தனத்தை கண்டித்து ’போலீசு ராஜ்ஜியம்.. எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்’ என்கிற தலைப்பில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்திருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக சென்னை முழுவதும் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் சில பெண் தோழர்கள் ரயில் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தோம்.  சென்னையின் புறநகர் ரயில் வழித்தடங்களில் மாதந்தோறும் நாங்கள் பிரச்சாரம் செய்வது வழக்கம். தமிழக உரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் அடியாளாக செயல்படும் தமிழக போலீசைக் கண்டித்தும் பேசும் போது மக்கள் கூர்ந்து கேட்டதோடு பெரும் ஆதரவளித்தனர். நிதியுதவி செய்தனர்.

காலை முதல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம். மதியம் ஒரு மணி  அளவில் பிரச்சாரம் முடிக்க நினைத்தோம். அப்போது ரயிலின் கடைசி பெட்டியில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு எதிரே அமர்ந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கைபேசியில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். மூணு லேடிஸ் இருக்காங்க, லாஸ்ட் கம்பார்ட்மெண்ட்டுக்கு சீக்கீரம் வாங்க என்றார். காவல் துறையை சேர்ந்தவர் மஃப்டியில் வந்திருக்கிறார் என்று நினைத்தோம். ரயில்வே போலிசால் பிரச்சாரத்திற்கு அவ்வப்போது இடையூறு நடப்பதுண்டு. அவ்வப்போது அதை பேசி சரி செய்வோம்.

அச்சமயம் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வரவிருந்த கோடம்பாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கத் தயாராக நின்றோம்.

திடீரென அந்த பெண் இருக்கையை விட்டு எழுந்து எங்களுக்கருகில் வந்து நின்று கொண்டார். சைதாப்பேட்டையில் வண்டி நின்றது. வாசற்படியில் நின்றுகொண்டு பிளாட்பாரத்தை நோக்கி கையை ஆட்டி இங்கே வாங்க இங்கே வங்க என்று யாரையோ அழைத்தார். சில நொடிகளில் வண்டி கிளம்பியது, அப்போது வேகமாக ஓடிவந்த ஒரு ரயில்வே காவலர் கம்பியை தொற்றிக்கொண்டு உள்ளே வந்தார். காவலர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.

அவரிடம் அந்த பெண் எங்களைக்  காட்டி இந்த லேடிஸ் தான் அரஸ்ட் பண்ணுங்க என்றார். அத்துடன் ஒரு தோழர் வைத்திருந்த உண்டியலை பாய்ந்து பிடிங்கி அதை மேலே தூக்கிக்காட்டி பாருங்க, எல்லோரும் பாருங்க இவங்க எல்லோர்கிட்டயும் கட்டாயமா காசு வாங்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்களே கேளுங்க என்றார். பிறகு போலீஸ்காரரிடம் திரும்பி இந்தியில் ஏதோ கூறினார்.

chennai
மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு – மாதிரிப் படம்

அந்த பெண் உண்டியலை பிடுங்கிய அதே வேகத்தில் தோழர் மீண்டும் அதை பிடுங்கினார். இது போராட்டத்திற்காக மக்கள் கொடுத்த நிதி. உண்டியல் மேல் கை வைத்தால் மரியாதை கெட்டுவிடும். உனக்கு என்ன வேண்டுமோ அதை எங்களிடம் கேள் என்று குரலை உயர்த்தியதும், அருகில் நின்றுகொண்டிருந்த காவலர் லத்தியை ஒங்கிக் கொண்டு அடிப்பது போல தோழருக்கு அருகில் வந்து இந்தியில் மிரட்டினார். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு தோழர் எதுக்கு அடிக்கிற மாதிரி பாய்றீங்க? நாங்க என்ன பிரச்சாரம் பண்றோம்னு தெரியுமா உங்களுக்கு? என்றார்.

அதற்கு அவர் “தமிழ் நஹி” என்றார்.

”எங்களுக்கும் இந்தி நஹி. இது தமிழ்நாடு, தமிழ்ல தான் பேசுவோம். தமிழ் போலீஸ்காரங்களை வரச்சொல்லு” என்றதும் என்ன சொல்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார்.

நாங்கள் உடனடியாக மக்களிடம் திரும்பி துண்டறிக்கையை காட்டி “நாங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மெரினா போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய வன்முறைத் தாக்குதலை கண்டித்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் அமைப்பு தேர்தலில் பங்கேற்காத அமைப்பு. தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைக்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தி வருகிறோம். மக்கள் தரும் நிதியிலிருந்து தான் அனைத்து போராட்டங்களையும் நடத்துகிறோம். நாங்கள் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் நீங்கள் கூறுங்கள்” என்று கூறிய மறுகணமே பெட்டியிலிருந்த மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சாதாரண அடித்தட்டு மக்கள் என்று அனைவரும் திபுதிபுவென எங்களை நோக்கித் திரண்டனர்.

வந்த வேகத்தில் சிலர் அந்த பெண்ணை நோக்கி ”எதுக்குமா நீ இந்த கத்து கத்துற? உனக்கு என்ன பிரச்சனை, எதுக்காக போலீசை கூட்டிட்டு வந்திருக்க? இவங்களை பத்தி உனக்கு தெரியுமா, எங்களுக்குத் தெரியும் பேசாம எறங்கி போம்மா” என்றனர்.

உடனே அந்த பெண் ”கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க, பேசஞ்சர்ஸ் நீங்க கேக்க மாட்டீங்களா” என்றார். “அவங்க யாரையும் கட்டாயப்படுத்தி கேக்கமாட்டாங்க. எங்களுக்கு எல்லாம் தெரியும். உனக்கு கொடுக்க விருப்பம்னா கொடு இல்லைன்னா அமைதியா இரு” என்றார் ஒருவர்.

images
அவங்க அப்படித்தான் பேசுவாங்க பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப? ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ.

அந்தப் பெண்ணோ சளைக்காமல் ”மாணவர்கள்னு சொல்லி காசு கேக்குறாங்க, அதுமட்டுமில்லாம இவங்க பேசுறது தொந்தரவா இருக்கு” என்றார். அவர் பேசி முடிப்பதற்குள் முன்னால் வந்த ஒருவர் ” நிறுத்துமா சும்மா கத்தாத… நீ பேசுறதுதான் எங்களுக்கு தொந்தரவா இருக்கு ஒன் வேலை என்னவோ அதை பார்த்துட்டு போம்மா” என்றார்.

அடுத்து சில இளைஞர்கள் “அவங்க எப்ப மாணவர்கள்னு சொன்னாங்க? மக்கள் அதிகாரம்னு தான் சொன்னாங்க. அவங்க அப்படித்தான் பேசுவாங்க. பிரச்சாரம் பண்ணுவாங்க, நாங்களும் காசு போடுவோம். உனக்கென்ன இப்ப? ஒன் வேலையை பாத்துக்கிட்டு போ. அவங்க போகமாட்டாங்க நீ கெளம்பு முதல்ல. அக்கா நீங்க பேசுங்கக்கா” என்று சொல்லி நிதி போட்டனர்.

சில நிமிடங்களில் பெட்டியில் இருந்த மொத்த மக்களும் அவருக்கு எதிராக திரும்பியது, எனினும் அவர் சளைக்கவில்லை.

மோடியை பத்தி எதுக்கு தப்பு தப்பா பேசுறீங்க என்றார்.

”நீ BJP தானே ? மோடி அரசு தொடர்ச்சியா தமிழ்நாட்டுக்கு எதிரா செயல்படுதே அதை ஆதரிக்கிறியா ? போலீசு அடிச்சதையும், குடிசையை கொளுத்தினதையும் சரின்னு சொல்லுறியா” என்று ஒரு தோழர் கேட்டார். அதற்கு அவர் பதிலளிக்க வாய் திறப்பதற்குள் உட்கார்ந்திருந்த ஒருவர் எழுந்து அந்தப் பெண்ணை நோக்கி ஒருமையில் பேசத் துவங்கிவிட்டார்.

”ஏய்.. மரியாதையா இறங்கிப் போய்டு. நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும். அரசியலே சாக்கடையா கெடக்கு இதுல அவனைப் பேசாத இவனைப் பேசாதன்னு வந்துட்ட. எல்லாத்தை பத்தியும் தான் பேசுவாங்க. மரியாதையா இறங்கிப் போய்டு” என்றார்.

அவருக்கு எதிராக பேசிய அனைவரும் எங்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டனர். மொழி புரியாவிட்டாலும் நடந்துகொண்டிருந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ரயில்வே காவலருக்கு, மக்கள் தோழர்களுக்கு ஆதரவாகவும் அந்த பெண்ணுக்கு எதிராகவும் பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டதால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழக காவலர்கள் இருவர் ஏறினர். லத்தியை சுழட்டியவாறே என்ன பிரச்சனை இங்கே என்றனர்.

அந்த பெண்ணோ நீங்களாவது கேளுங்க சார் என்று எங்களை நோக்கி கையை காட்டி பொங்கினார். நாங்கள் பதில் கூற வாயெடுப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் நீங்க அமைதியா இருங்கம்மா நாங்க பேசிக்கிறோம் என்று கூறிவிட்டு காவலர்களிடம் பேசினர். முதல்ல அந்தம்மாவை எறக்கி விடுங்க சார். இவங்களால எங்களுக்கெல்லாம் ரொம்ப தொந்தரவா இருக்கு. இவங்க மேல எந்த தப்பும் இல்ல என்றனர். அதற்கு பிறகும் கூட அந்தப் பெண்  கத்தி கூச்சல் போடுவதை நிறுத்தவில்லை.

”என்னை கட்டாயப்படுத்தி காசு கேக்குறாங்க சார். மாணவர்கள்னு பொய் சொல்றாங்க” என்று மறுபடியும் பழைய பொய்யையே கூறினார். ஆனால் மொத்த கூட்டமும் அவருக்கு எதிராக பேசுவதைப் பார்த்த காவலர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் இறங்கிக் கொண்டனர். பல திசைகளிலிருந்தும் மக்கள் அவரை தாளித்துக்கொண்டிருந்தனர்.

எங்களிடம் வந்த சில இளைஞர்கள் “அக்கா நீங்க எங்க போகனும்? ” என்றனர். “கோடம்பாக்கம்பா” என்றோம்.

பாத்துப் போங்கக்கா எதுக்கும் பயப்படாதீங்க என்றனர். பலரும் பலவிதமாக ஆறுதல் கூறி உற்சாகமூட்டினர். வண்டி கோடம்பாக்கத்திற்குள் நுழைந்தது. மொத்த பெட்டியும் எங்களுக்கு ஆதரவாக பேசி வழியனுப்பிக்கொண்டிருந்ததை பார்த்ததும் அந்த பெண்ணின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. நாங்கள் இறங்கிய அதே இடத்தில் அவரும் இறங்கினார்.வேறு எங்கோ இறங்க வேண்டியவர் குழம்பி போய் எங்களுடனே இறங்கிவிட்டார் என்று தவறாக நினைத்துவிட்டோம்.

railway-station
இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க – மாதிரிப் படம்

வண்டியை விட்டு இறங்கிய உடனே பிளாட்பாரத்தில் உட்காந்திருந்தவர்களை நோக்கி சத்தமாக கத்தி இவங்க எல்லாம் கிறிஸ்டியன் ஆளுங்க டிரைன்ல வந்து பிச்சை எடுக்குறாங்க. எல்லோரும் வந்து கேளுங்க என்றார்.

பிளாட்பாரத்திலாவது தனக்கு ஆதரவாக வருவார்கள் என்று நினைத்தார். ஆனால் உட்கார்ந்திருந்த அனைவரும் அவரை வித்தியாசமாக பார்த்தனரே தவிர எழக்கூடவில்லை. ரயில் கிளம்பத் தயாராக இருந்தது. நாங்கள் வந்த பெட்டியின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் அந்த பெண் கீழேயும் இறங்கி பிரச்சினை செய்துகொண்டிருப்பதை பார்த்துவிட்டு கையை நீட்டி எச்சரித்தனர். ரயில் கிளம்பியது.

” ஏய்…  நீ கீழே இறங்கியும் கத்திக்கிட்டு இருக்கியா… அடிவாங்காம போகமாட்டியா மரியாதையா ஓடிடு” என்று வண்டி பிளாட்பாரத்தைவிட்டு கடக்கும் வரை பல்வேறு வார்த்தைகளில் திட்டிக்கொண்டே சென்றனர்.

நாங்கள் உடனே துண்டறிக்கையை உயர்த்திக்காட்டி பிளாட்பார்மில் அமர்ந்திருந்த மக்களிடம் எங்களை அறிமுகம் செய்துகொண்டு என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறோம், என்ன பிரச்சாரம் செய்கிறோம் என்பதை விளக்கினோம். நாங்கள் விளக்கிக்கொண்டிருக்கும் போதே ”இல்ல இல்ல.. இவங்க பொய் சொல்றாங்க இவங்க கிறிஸ்டின்ல ஆளுங்க” என்கிற பொய்யை மீண்டும் கூறினார். அவர் சத்தம் போட்டு முடித்ததும் அமர்ந்திருந்த இருவர் எழுந்து அவர் அருகே சென்று “நீங்க தப்பா புரிஞ்சிட்ருக்கீங்கம்மா. இவங்க கிறிஸ்டின் பிரச்சாரம் செய்யலை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க டிரெய்ன்ல பிரச்சாரம் பண்ணுவாங்க எங்களுக்குத் தெரியும்” என்றனர் பொறுமையாக.

தொடர்ச்சியாக அவமானத்திற்கு மேல் அவமானத்தை சந்தித்து வந்தவர் பிளாட்பாரத்திலும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியில் சோர்ந்துவிடாமல் கத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக எங்களைச் சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது.

”இல்ல சார் இவங்க எல்லாத்தையும் மிரட்டி காசு கேக்குறாங்க” என்றார்.

அதற்கு கூட்டத்திலிருந்த மற்றொருவர் கோபமாக பதிலளித்தார். “அவங்க அப்படியெல்லாம் கேக்க மாட்டாங்கம்மா உனக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி கத்துற?” என்றார்.

அங்கேயும் தன்னுடைய வேலை எடுபடவில்லை என்பதை உணர்ந்திருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதேதோ பேசினார். மக்களும் அவருக்கு சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தனர். அனைவருமே தனக்கு எதிராக பேசிக்கொண்டிருந்ததால் சற்று தள்ளி நின்று நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு (தோற்றத்தில் பார்ப்பனர் போன்ற) பையனை நோக்கி சென்றவர் நீயாவது வந்து கேளுப்பா என்றார். அந்த பையனோ அந்தப் பெண் தன்னை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்ததுமே ஓடிவிட்டான்.

இறுதியாக அந்தப் பெண்ணிடம் எச்சரித்தோம். நீங்க யார், எதுக்காக இப்படி துள்றீங்கன்னு எங்களுக்குத் தெரியும். இது தமிழ்நாடு, புதிய தமிழ்நாடு. இனிமேலும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணி கும்பலுக்கு இங்கே இடமில்லை. குஜராத் வேற தமிழ்நாடு வேற. ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சமாதியே தமிழ்நாட்ல தான். இது பெரியார் பிறந்த மண்.  என்று கூறியதும் அவர் கர்ண கொடூரமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.

அவர் யார்? அமெரிக்காவோ, இல்லை மயிலாப்பூரோ தெரியவில்லை. ஆனால் ரயில்களில் தோழர்கள் செய்யும் பிரச்சாரத்தை இப்போதுதான் முதல் முதலாக பார்க்கிறார். மெரினா எழுச்சியில் மாணவர் – இளைஞர்களிடம் மோடி வறுபடுவதை நேரிலோ இல்லை தொலைக்காட்சியிலோ அவர் பார்த்திருக்க மாட்டார். அல்லது அந்நேரம் எஸ்.வி.சேகர் நாடகத்திற்கு சென்று சிரித்து விட்டு வந்திருப்பார். இங்கே ரயிலில் பா.ஜ.க அரசை, மோடியை எதிர்த்தும், போலீசைக் கண்டித்தும் பேசுவது அவருக்கு தூக்கி வாறிப் போட்டிருக்கும்.

மோடியை இப்படி பகிரங்கமாக எதிர்ப்பதை எப்படி விட்டு வைப்பது என்ற ‘கடமை’ உணர்வுடன் போலீசை வரவழைத்தார். மக்களிடம் பேசினார். இறுதியால் அனாதையாக புலம்பிக் கொண்டு வெளியேறினார். இப்போது அவர் என்ன நினைப்பார்? தமிழகத்தில் இராணுவ ஆட்சியை அமல்படுத்தி தோழர்களை நடுவீதியில் சுட்டுக் கொல்வதற்கு பல்வேறு அரசு துறைகளுக்கு மனு எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனாலும் என்ன?  மோடியைத் திட்டுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் இங்கே முழு தமிழகமே சமூக விரோதியாக இருக்கிறதே? அதை என்ன செய்ய?

– மக்கள் அதிகாரம்
சென்னை.

போலீசு ராஜ்ஜியம் ஒழிக – திருச்சி, நெல்லை, கோவை, விருதை ஆர்ப்பாட்டம்

0

“போலீசு ராஜ்ஜியம் – ஒழிக”   திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்

tiruchy-protest-for-condemn-police-posterமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் மீது அதிகார போதையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது காவல்துறை. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து கைது செய்யக்கோரியும், போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் 31.01.2017 அன்று மாலை காந்தி மார்க்கெட் இராமகிருஸ்ணா தியேட்டர் பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைமையுரையாற்றிய திருச்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த், மாணவர் போராட்டத்தில் சமூகவிரோதிகள் – தேசவிரோதிகள் புகுந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது போல போலீசார் புகுந்த பின் தான் கண்ணியமான, கட்டுப்பாடான, அமைதியான போராட்டக்களம் வன்முறையானது. முன்பு ரவுடி ஒருவன் இறந்துவிட்டால் கடையை மூடு என ரவுடிகள் கூட்டம் மிரட்டும் அதுபோல இன்று ஜெயா இறப்பிற்கு கடையை அடைக்கச் சொல்லி நாங்கள் ரவுடிகள் தான் என்பதை நிரூபிக்கின்றனர் என போலீசை அம்பலப்படுத்தினார்.

tiruchy-protest-for-condemn-policeகண்டன உரையாற்றிய, குளக்குடி விவசாயி ரவி தான் திருச்சியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதையும், அங்கே மாணவர்கள் விவசாயிகளுக்காக போராடுவதைப் பார்த்து அங்கிருந்த ஒரு மாணவரிடம் பேசியதில் “நாங்கள் இருக்கிறோம்” எனக் கூறியது நம்பிக்கையளிப்பதாக கூறினார். விவசாயிகளுக்காக போராடி தடியடி வாங்கிய மாணவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் முடக்கி இருக்க வேண்டும். அவ்வாறு நடக்காதது துரோகமிழைத்துவிட்ட உணர்வை உருவாக்குவதாக கூறினார். மேலும், கீழரசுர் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு பதிலடி கொடுத்த இளைஞர்களை தடுத்து அவர்களை மக்கள் விடுவித்ததை ஒப்பிட்டு பேசி போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

லால்குடி வட்டத்திலிருந்து திருநாவுக்கரசு என்ற விவசாயி, மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்ததுடன், தங்கள் பகுதியில் மணல்கொள்ளையை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியதை விளக்கினார்.

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தபால்நிலையத்தை முற்றுகையிட்டதையும், மணல்கொள்ளை, விவசாயிகள் பிரச்சினை ஆகியற்றில் அரசு அதிகாரிகளும், போலீசும் தான் சட்டத்தை மதிப்பில்லை என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

tiruchy-protest-for-condemn-police2சிறப்புரையில் கரூர் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமசாமி, ஜல்லிக்கட்டுக்கெதிரான மாணவர் போராட்டம் என்பது பறிக்கப்படும் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் என்பதையும், போராட்டத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், மாணவர் போராட்டம் என்பது விவசாயிகள் பிரச்சினை, மணற்கொள்ளை என நீண்டு செல்வதை தடுத்து நிறுத்துவதே அரசின் நோக்கம் என்பதையும் அதற்கு எட்டப்பர்களான ஹிப் ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டுப் பேரவை ராஜசேகரன் போன்றோரை பயன்படுத்திக்கொண்டதையும், இவர்கள் RSS-BJP’ன் கைக்கூலிகள் என்பதையும் அம்பலப்படுத்தினார். மணல் கொள்ளை கிரிமினல்கள் சேகர் ரெட்டி, ராம்மோகன ராவ் போன்றோருடன் பன்னீருக்குள்ள நெருக்கத்தையும், இந்த அரசுக்கட்டமைப்பே மக்களுக்கு எதிராகி, ஆள அருகதையற்றுத் தோற்றுப்போனதையும் அம்பலப்படுத்தினார். திருச்சி மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சத்யா நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு அங்கு கூடியிருந்த மக்கள் மாணவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பேசினர். இத்தகைய போராட்டம் இதோடு நின்றுவிடப்போவதில்லை தொடரும்… தமிழக போலீசாரில் விதிவிலக்காக பேசப்படும் ஜல்லிக்கட்டுப்புகழ் திரு.மயில்வாகணன் (திருச்சி மாவட்ட உதவி ஆணையர்) உள்ளிட்டவர்களின் முகத்திரையை விரைவில் அவர்களே கிழித்துக் கொள்வர்.

செய்தி: மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்! – நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

nellai-protestமிழர்களின் பண்பாட்டில் தலையிடும் டில்லியை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்காகவும், காவிரி, கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட  பிரச்சினைகளில் மோடி தலைமையிலான மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து தமிழகமெங்கும் நடந்த மாணவர்கள் – இளைஞர்களின் மகத்தான போராட்டத்தின்மீது ஏவப்பட்ட காவல்துறையின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பரவலாக பிரசாரம் செய்து 01.02.17 மாலை நெல்லை, பாளையங் கோட்டையிலுள்ள ஜவஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு முதல்நாள் தான் காவல்துறை அனுமதி அறிவிப்பை தந்தது.  நம் பிரச்சாரத்தை முடக்கும் விதமாக கல்லூரி வாயிலில் பிரசுரம் தருவதை தடுக்க பல இடங்களில் காவலர்கள்  களமிறக்கப்பட்டனர். அதையும் மீறி பள்ளி கல்லூரிகளில் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

காக்கிகள் கோவில்பட்டியில் சுவரொட்டி ஒட்டிய தோழர்களை  காவல்நிலைத்துக்கு கொண்டுசென்று வழக்கு போட்டு அச்சுறுத்தினர். நேரில் சென்ற வழக்குறைஞரிடம் “இவங்க நக்சலைட்டுங்க; இவங்களுக்கெல்லாம் நீங்க ஆஜராகலாமா?” என்று பேசியுள்ளனர். “கேடி கிரிமினல்களுக்கு நாங்க ஆஜராகரப்ப எல்லாம் இப்படி நீங்க கேட்டதில்லையே. இவங்களுக்கு ஆஜராகரதுல என்ன தப்பு!!” என்று பதிலுக்கு பேச மூக்கறுபட்டது காவல்துறை.

பல இடங்களில் சுவரொட்டிகளை கிழித்துவிட்ட சூழலில் 01.02.17 மாலை 4.00 மணிக்கு அறிவித்தபடி தோழர்கள் பேனர், கொடிகளுடன் திரண்டனர். அரசு, போலீசின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் ம.க.இ.க. வின் பாடல்கள் போடப்பட்டது.

nellai-protest33.00 மணியிலிருந்தே உளவுத்துறையினர் சுற்றி நின்று வருபவர்களை போட்டோ எடுத்தபடி இருந்தனர்.  நிகழ்ச்சியை படமெடுத்தபடி தோழர் கணேசன் சுற்றி வந்தபோது சீருடை அணியாமல் கேமரா எடுத்துக்கொண்டிருந்த காவலர்கள் இவருடன் வாக்குவாதம் செய்து தாக்கி, கேமராவை பிடுங்கினர். இதை கண்டித்து வழக்குறைஞர்களும் தோழர்களுமான பூபதி, தங்கபாண்டி, அரிராகவன் உள்ளிட்டோர் பேச கைகலப்பானது. தோழர் பூபதியின் கையில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க ஆத்திரத்தை தூண்டுகிறார்கள் என்பதால் அணிவகுத்திருந்த தோழர்களை கலைய வேண்டாம் என்று கட்டுப்படுத்தி நிழக்ச்சியை தொடங்கினோம். அப்பொழுது ஒலித்த “பஞ்சாயத்த கலைக்கப்பாக்குறான் பன்னீரு” நிலைமையை எடுப்பாக விளக்கியது.

மக்கள் அதிகாரம் தோழர் ஆதி தலைமை தாங்க பாளையை அதிரவைக்கும்படி முழக்கங்கள் போடப்பட்டது. தமது தலைமை உரையில்   “மெரினா போராட்டத்தில் மாணவர்கள் ஒழுங்குடனும் ,கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பெண்களை மதித்து பாதுகாத்தும் போராடினர். ஆனால் போலீசு திட்டமிட்டே தாக்கி கலவரத்தை நடத்தியுள்ளது. இதற்கான ஆதாரம் குவிந்துள்ளது. ஆனால் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸ் மீது மக்களுக்கு பயம் இருக்கவேண்டும் என்றுதான் இப்படி தாக்கியுளனர்” என்று அம்பலப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கண்டன உரையாற்றிய     நெல்லை தி.மு.க. இலக்கிய அணியின் கவிஞர் மூர்த்தி பேசும்போது “1965 இன் இந்தி எதிர்பு போராட்டம் போல் இன்று தமிழ் கலாச்சாரத்தை காக்க போராட்டம் நடக்கிறது. நாம் அச்சமின்றி வாழ மக்கள் அதிகாரம் தொடர்ந்து வளர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகளின் நெல்லை மண்டல செயலாளர் தோழர் சேனா. ஐகோர்ட் பாண்டியன் “காவல்துறை இனி திருந்தியாக வேண்டும்” என்றார்.

ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல வழக்கறிஞர் அணியின் தோழர்  இளமாறன் கோபால் “ 7வது நாளில் ஏழரை நாட்டு சனியாக வந்தது ஏவல்துறையான காவல்துறை. தீவிரவாதி வந்துவிட்டான் என்று கதை விட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கை எவ்வாறு மதித்து நடக்கும் என்பதற்கு சற்று முன்னர் பொதுமக்கள், வணிகர்கள் முன்பாக போட்டோ கிராபரையும், வழக்குறைஞரையும் போலீசார் தாக்கியதே சாட்சி. இதுபோலத்தான் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் வந்ததால்தான் வெறிகொண்டு குப்பத்தை சூறையாடியது.” என்று அம்பலப்படுத்தினார்.

சிபிஎம்-மின் பாளை தாலுகா செயலாளர் தோழர் சிரீராம் மற்றும் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் தோழர் பெரும்படையான் உள்ளிட்டோரும் அரசு மீதான கண்டனங்களை பதிவு செய்தனர்.

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் மநிலக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் தோழர் ரமேஷ் “மணவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் மெரினாவில் ஒரு புரட்சியை நடத்தியுள்ளனர். அதை போலீசு நசுக்குகிறது. மக்கள் அதிகாரத்தின் போராட்டத்தில் என்றும் துணைநிற்போம்” என்றார்.

மக்கள் அதிகாரத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கோ. நாகராஜன் காவல்துறையில் புறையோடிப்போயுள்ள ஒழுக்கக்கேடுகளை, பாலியல் வெறிபிடித்த மிருகமாக நடப்பதை சிவகங்கை உதாரணத்துடன் அம்பலப்படுத்தினார். “ மாணவர்களின் போராட்டத்தை சுமுகமாக முடிக்க அனுமதித்தால் அது ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும் என்ற அச்சத்தில்தான் அரசு தாக்கியது.  கல்வி உரிமை போராட்டத்தை ஒடுக்குவது முதல், மணல் கொள்ளைக்கு துணை நிற்பது வரை அனைத்திலும் ஒன்று தெளிவாகிறது. அதாவது அரசின் அனைத்து உறுப்புகளும் அழுகி நாறுகிறது. அவர்கள் உருவாக்கிய சட்டம், விதிகளை அவர்களே மதிப்பதில்லை. எனவே மெரினா போராட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே. அது மீண்டும் வீறுகொண்டு எழும்! இந்த் அரசமைப்பையும் துடைத்தெறியும்” என்றார்.

எழுச்சியுடன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றது. சாலையில் சென்ற பலரும் வாகனத்தை ஒதுக்கி நிறுத்தி நிகழ்ச்சியை பார்த்தனர். பிரசுரத்தை வலிய வந்து கேட்டும் வாங்கினர். நம் பாடல்கள் ஒலித்தபோது “எங்கிருந்து இந்த மாதிரி பாட்டை புடிச்சாங்க!” என்று வியந்து பாராட்டினர். மக்கள் ஆதரித்து பேசப்பேச காக்கிகளின் முகத்தில் ஈ ஆடவில்லை. கடைநிலை காவலர்கள் பலரும் தமது துறையின் உயரதிகாரிகளை நாம் அம்பலப்படுத்துவதை ரசித்துப் பார்த்தனர். அந்த வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அரசின் அடக்குமுறைக்கு பணியக்கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

 

மக்கள் அதிகாரம்,
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம்

***

கோவையில் போலீசைக் கண்டித்து போராட்டம்!

ல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர் மற்றும் பொது மக்களின் அமைதி வழிப் போராட்டத்தில் தமிழக போலிசு நடத்திய கொலைவெறி தாக்குதலை கண்டித்து, ஆர்பாட்டம் நடத்த கோவை முழுவதும் 250 சுவரொட்டி ஒட்டப்பட்டு 11000  துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. கோவையில் மக்கள் அதிகாரம் சார்பாக தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே அனுமதிப் பெற்று  31-01-2017 காலை 11 மணிக்கு “ போலிசு ராஜ்ஜியம் ! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில் !! ” என கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒலிப்பெருக்கி, கொடிகள், முழக்க அட்டைகளுடன், முழக்கங்கள் முழங்க 2 மணி நேரம் வரை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர், போராட்டத்தில் கலந்து கொண்டு தாக்கப்பட்டு கை உடைந்த நிலை மாணவி, போராடிய மாணவர் மற்றும் பெண்கள் குழந்தைகள், தோழமை இயக்கங்கள் என  பேர் கலந்து கொண்டனர்.

பகுதி ஒருங்கிணைப்பாளர்
கோவை

***

viruthai-protest

போலீசைக் கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்!

ல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவியது.குறிப்பாக மெரினாவில் லட்சகணக்கானவர்கள் திரணடனர்.மாணவர் போராட்டமாக தொடங்கியது. மக்கள் போராட்டமாக மாறியது. தமிழகமே எழுந்து நின்றது. காவிரி, முல்லை பெரியார், பணமதிப்பு நீக்கம், பொங்கல் விடுமுறை ரத்து, இந்தி சமஸ்கிருத திணிப்பு, இவை அனைத்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் எனும் ஈட்டிமுனையால் மத்திய – மாநில அரசுகளை குத்தியது. இந்நிலையில் தான் ஜனவரி 23-ம் தேதி காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவரை சீராக இருந்த சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது. பாதுகாப்பாக இருந்த பெண்கள் தாக்கப்பட்டனர். ஆபாசமாக திட்டப்பட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக இருந்த மீனவர்களின் சந்தை மீன் சந்தை, வீடு காவல் துறையினரால் கொளுத்தப்பட்டது. ஆட்டோ எரிக்கப்பட்டது. இவை ஊடங்களில் வந்து அம்பலப்பட்டுப் போன அரசும், போலீசும் விசாயத்தை மடை மாற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் புளுகுகிறது.

இதைக் கண்டித்து விருத்தாசலத்தில் 03-02-2017 அன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம், விருதை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைக் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள், மாணவர்கள் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

IMG_20170203_181602மக்கள் அதிகாரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம்:

இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மீண்டும் ஒரு 1965 இந்தி திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டம் என்று அரசுக்கு உரைத்தது. அதனால்தான் போலீசை கொண்டு ஒடுக்கியது. தொடர்ச்சியாக காவேரி, முல்லை பெரியார், மீத்தேன், கூடங்குளம் என அனைத்திலும் தமிழர்களின் உணர்வு பரிக்கப்பட்டதன் வெளிப்பாடே தன்னெழுச்சியான இந்த மக்கள் பேராட்டம். இந்த திசை திருப்பலால் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டார்கள் எனக் கூறி போலீசு தாக்குதல் நடத்தியது. அந்த 1 வாரம் மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தனர் ஜல்லிக்கட்டு போராட்டம் வென்றது. அவர்களை அடிப்பணிய வைக்க தான் இந்த தாக்குதல். தாக்குதலுக்கு அஞ்சி போராட்டம் ஓயாது.

தோழர் மணிவாசகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி-விருத்தாசலம் பகுதி செயலர்

காவல்துறையில் கிட்டத்தட்ட 40 உட்பிரிவுகள் உள்ளது. இவை அனைத்துக்கும் இருக்கும் ஒரே வேலை மக்களை ஒடுக்குவது. சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதாகக் கூறி போராடும் மக்களை ஒடுக்குகின்றனர்.

IMG_20170203_173802உண்மையில் இவர்கள்தான் சமூக விரோதிகள். லஞ்சம் வாங்குவது, ஆட்டோ எரிப்பது, பெண்களை சீண்டுவது என சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது இவர்கள் தான்.

இவர்களை இந்த அரசுக் கட்டமைப்பு தண்டிக்காது. உதாரணமாக பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை இதுவரை இல்லை. பகத்சிங் பாதையை, கொள்கை பிடிப்புள்ள போராட்டம் மூலம் மட்டுமே இவர்களை தண்டிக்க முடியும்.

அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்

தமிழர் உரிமைக்கான மாணவர் போராட்டம் மிகப் பெரிய அளவில் வென்றது. அதை ஒடுக்க ஜனவரி 23 அன்று காவல் துறையினர் அராஜகத்தை செய்திகளாக பார்த்தோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர் குப்பங்களை காவல்துறை குறி வைத்து தாக்கியுள்ளது. காவல்துறை சட்டத்தை மதிக்க வேண்டும். அவர்கள் மீறும் போது மக்கள் அவர்களுக்கு எதிராக புரட்சியில் இறங்குவார்கள்.

ராமர் , கம்யுனிஸ்ட் கட்சி மா.லெ மக்கள் விடுதலை

வர்ணாசிரமத்திற்கும், அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டம். போலீசின் அடக்குமுறையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த ஆர்ப்பாட்டம். மத்தியில் ஆளும் இந்து மதவெறி கும்பல் தமிழர்களின் பாரம்பரியத்தில் கை வைக்கின்றது. இதை எதிர்த்து தான் மாணவர்கள் போராடினர். இந்த போராட்டம் தமிழக அரசை டெல்லி நோக்கி ஒடசெய்தது. அவசர சட்டம் இயற்றியது. அந்த நகலை மாணவர்கள் கேட்டனர். தரவில்லை மாறாக காவல் துறையை கொண்டு தடியடி நடத்தியது. சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என அடக்குமுறைக்கு காரணம் காட்டினர். போலீஸ் அதிகாரிகள் இதை நம்ப யாரும் தயாராக இல்லை. தமிழக மாணவர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார்கள் மீண்டும் தொடரும் போராட்டம்.

வழக்கறிஞர் செந்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

இது சட்டத்தின் ஆட்சி கிடையாது. காவல் துறையின் ஆட்சி என்பது இந்த தடியடி மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எரித்த,  குடிசைக்கு தீ வைத்த போலீசுதான் சமூக விரோதி இவர்களின் வேலை லஞசம் வாங்குவது, டாஸ்மாக்கை காவல் காப்பது, சட்ட விரோதமாக செயல்பட்ட காவல்துறையில் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. மாணவர்கள் நினைத்தால் முடியும் மெரினாவில் போடப்பட்டிருக்கும் 144 தடையும் உடையும்.

IMG_20170203_171934வழக்கறிஞர் அம்பேத்கர், விருத்தாசலம்.

போலிசின் இந்த அராஜகம் அரசின் கொள்கை பிரதிபலிப்பே. அரசு என்பது உழைக்கும் மக்களுக்கானது அல்ல, நம்மை ஒடுக்க அது பயன்படுத்தும் தடியே போலீசு. உயர்நீதிமன்ற போராட்டத்தில் வழக்கறிஞர்களை கல்லால் அடித்து பொலீசு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த மாணவர் போராட்டம் – பண்பாடு, கலாச்சார போராட்டம்.

திருமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நடப்பது மக்களாட்சியா?  போலீசு ஆட்சியா? அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்படவில்லை, சர்வாதிகார போக்கே உள்ளது. மன்னர்களை விட அடக்குமுறை செலுத்துகிறது.

நாங்கள் – மனித நேயத்தை காக்க புத்தரின் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்கள். சட்டம் போராட அனுமதித்துள்ளது, காவல்துறை மறுக்கிறது. மக்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறை அதிகாரம் செல்லாது. போலீசு – அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக வேலை செய்கிறது. மாணவர்களை ஒடுக்கிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் கருணாநிதி, விருத்தாசலம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் கலாச்சார உரிமைக்காக மீட்டெடுக்க நடத்திட்ட மாணவர் போராட்டம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்தது. சட்டம் பேச்சு உரிமை கொடுக்கிறது. போலிசு பெசக் கூடாது எனத் தடுக்கிறது. அரசு எந்திரம் தள்ளாடுகிறது. மாணவர்கள் அரசியல் புரிதலை வளர்த்து தொடர்ந்து போராட வேண்டும்.

வழக்கறிஞர் பஷ்தேவன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்  

IMG_20170203_193058காவல்துறை அராஜக போக்கினை நக்கீரன் போன்ற இதழ்கள் சிறப்பாக வெளியிகாட்டியுள்ளன. சமூக விரோதி புகுந்துவிட்டதால் தடியடி நடத்தினோம் என்கிறார்கள். சமூக விரோதி யார் என தீர்மானிக்கும்அதிகாரம் காவல் துறைக்கு  கிடையாது. நந்தினியை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கிய இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் சமூக விரோதி இல்லையா? அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சமூகவிரோதி என முத்திரை குத்தினாலும் அடக்கு முறை செலுத்தினாலும் மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்.

வழக்கறிஞர் தோழர். ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளார், மக்கள் அதிகாரம்

ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழக வரலாற்றில் முதன்முறையாக மெரினா முதல் குமரி வரை போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க சொல்கின்றனர். காவிரியில் கர்நாடகம் மதிக்கவில்லை,முல்லை பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மக்கள் நலபணியாளர் விசயத்தில் தமிழகம் மதிக்கவில்லை. டெல்லியில் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான மக்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

வெறிநாயை அவிழ்த்துவிட்டால் எப்படி கடிக்குமோ அப்படி நடந்து கொண்டது போலீசு.  மக்கள் மீண்டும் போராடக்கூடாது என்பதற்காக தடியடி நடத்தியது காவல்துறை. போராட்டம் சுமூகமாக முடிந்து விட்டால் காளையில் பற்றிய தீ காவிரி முதல் கல்வி எனப் படர்ந்து விரிவடையும் எனும் அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த தடியடி.

IMG_20170203_191606இந்த தடியடி அராஜகத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய கோரி போராடுகிறோம். அப்படி இதுவரை நடந்ததாக வரலாறு இல்லை. மக்கள் செய்யும் குற்றத்திற்கு ஆயுள்தண்டனை என்றால் அதையே போலீசு செய்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் யார் கொடுப்பது?  மனித உரிமை ஆணையத்திற்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை. சான்றாக, டாஸ்மாக் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளரின் கை-காலை சட்ட விரோதமாக உடைத்தது காவல்துறை. மனித உரிமை ஆணைய விசாரணை, உயர்நீதிமன்ற வழக்கு – எதுவும் போலீசை இன்னும் தண்டிக்கவில்லை.

இங்கு தனிப்பட்ட அதிகாரிகளின் நேர்மை உதவாது. ஓட்டு மொத்த அரசு கட்டமைப்பும் மக்களுக்கு எதிரானதாகவும், குற்றவாளிகளால் நிரம்பி உள்ளது. அதோடு தமிழ்நாட்டை ஆள்பவர்கள் கிரிமினல்களின் மையமாக உள்ளனர். இதில் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. நமது பிரச்சினைகளுக்காக நாம்தான் போராட வேண்டும். உண்மையாக போராட வேண்டும்.  அதற்கான உத்வேகத்தை ஜல்லிக்கட்டு போராட்டம் அளிக்கிறது.

தடியடியும், பொய் வழக்கும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெரினாவை  கட்டியமைப்போம். தொடர்ந்து முன்னேறுவோம்.    

மக்கள் அதிகாரம்
விருதை

சசிகலா : குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி

3

TALENT_P2மெரினா எழுச்சியால் தலை நிமிர்ந்த தமிழகத்தின் முகத்தில் சாணியால் அடிக்கப் பட்டதைப்  போன்றதொரு உணர்வு. எனினும் இது எதிர்பாராத அடி அல்ல. முதன்முறையாக வாங்கும் அடியும் அல்ல. மாண்புமிகு அம்மா ஏற்கனவே பலமுறை தமிழகத்தின் முகத்திலும், இந்த “மாபெரும்” ஜனநாயக அமைப்பின் முகத்திலும் காறி உமிழ்ந்து செருப்பால் அடித்திருக்கிறார்.

அறிவு ஜீவிகள் வலிக்காதது போல நடிக்கிறார்கள். அறிவில்லா ஜீவிகளான பாமர மக்களுக்கோ வலி பழகி விட்டது. அந்த தைரியத்தில்தான் சசிகலா முதல்வராகிறார்.

மெரினா எழுச்சி தோற்றுவித்திருக்கும் சொரணை மரத்துப் போவதற்கு முன்னால், தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.

சென்ற ஜனவரி – 2017 புதிய ஜனநாயகம் இதழில் “மாண்புமிகு மன்னார்குடி மாபியா”, என்ற தலைப்பிலும், “அ.தி.மு.க வை அழிக்காவிடில் தமிழகமே அழியும்” என்ற தலைப்பிலும் வெளிவந்த இரு கட்டுரைகளிலிருந்து சில பத்திகளை மட்டும் இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

எதிரிகளைப் பற்றி விளக்குவதன் நோக்கம் அவர்களை எதிர்த்துப் போராடுவதுதான்.

தேவைப்படுவது இன்னொரு மக்கள் எழுச்சி. அதனைத் தமிழகம் உருவாக்க முடியும். உருவாக்க வேண்டும்.

வினவு

ன்னார்குடி மாஃபியா”, “சட்ட விரோதமான அதிகார மையம்”, “கொள்ளைக் கூட்டம்” என்றெல்லாம் தமிழகத்தின் பல கட்சிகளாலும் ஊடகங்களாலும் காறி உமிழப்பட்ட சசிகலா குடும்பம், அதிமுகவின் தலைமைப் பதவியை (தற்போது முதல்வர் பதவியையும்) அதிகாரப் பூர்வமாக கைப்பற்றிவிட்டது

தனக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றுமாறு புரட்சித்தலைவர் தன்னிடம் ரகசியமாக சத்தியம் செய்து வாங்கிக் கொண்டதாகவும், அதன் காரணமாகத்தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை தான் ஏற்க வேண்டியிருப்பதாகவும் தனது வாரிசுரிமைக்கு ஆதாரம் காட்டி வாதாட வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை அம்மாவுக்கு இருந்தது.

அத்தகைய நிலைமை சின்னம்மாவுக்கு இல்லை.  அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்தின் அதிகாரப்பூர்வமற்ற தலைவி அவர்தான் என்பது அதிமுக-வில் பலரும் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கும் உண்மை.

_______

42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)
42 தமிழர்கள் உடல் நசுங்கிச் செத்த கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது தோழி ஜெயாவை நீராட்டும் சசிகலா: தமிழக நீரோக்கள்! (கோப்புப் படம்.)

ம்மாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப ஒரு வார்தா புயல்தான் வரப்போகிறது” என்று வட இந்திய அரசியல் ஞானிகள் கூறிக்கொண்டிருக்க, சங்க பரிவாரத்தினரையே விஞ்சும் ராணுவக் கட்டுப்பாட்டை அதிமுகவினர் வெளிப்படுத்தினர். மிச்சமிருக்கும் நான்கரை ஆண்டுக்காலமும் எடைக்கு எடை பொன் போன்றது என்பதையும், இதுதான் அதிமுக-விற்கு வந்தனோபசார கடைசி ஆட்டம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அந்த ஞானம் தோற்றுவித்ததுதான் இந்த அதிசயிக்கத்தக்க ஒற்றுமை!

______

“முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது” என்ற கேள்வியை நாம் எழுப்புவோமானால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். “தகுதி” பற்றிய கேள்வியை ஜெயலலிதாவோடு நிறுத்திக் கொண்டாலோ, எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

எப்படிப் பார்த்தாலும் சசிகலா என்பவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரியக்கத்தின் தலைவி. நாளை மறுநாள் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறை செல்ல வேண்டியிருக்கலாம். இருப்பினும்,  நாளை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அவர் அமரும்போது, “மாண்புமிகு முதல்வர்” என்று என்று அவரை நாம் அழைக்காமலிருக்க முடியாது.

சசிகலாவை அவ்வாறு அழைக்கும் தறுவாயில், அவரைத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய மன்னார்குடி மாஃபியாவையும் “மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா” என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தை நடத்திச் செல்வதற்கு என்ன தெரியவேண்டுமோ அது சசிகலாவுக்குத் தெரியும். நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, கல்வி, போக்குவரத்து, பத்திரப்பதிவு, மதுவிலக்கு, வணிகவரி, உள்ளாட்சி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் என்று ஒவ்வொரு துறை அமைச்சரின் அன்றாட வசூல் எவ்வளவு, அதில் தோட்டத்துக்கு சேர வேண்டிய தொகை எவ்வளவு என்பது சசிகலாவுக்குத் தெரியும். அதை வேவு பார்த்து சொல்வதற்கு உளவுத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்த தெரியும். ஏமாற்றுகின்ற அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பதவியைப் பறிப்பதற்கும் தெரியும்.

சாதிக்காரர்களை நியமித்து போலீசு துறையை கட்டுப்படுத்துவது எப்படி, மற்ற ஆதிக்க சாதி அமைச்சர்கள் அதிகாரிகளை கண்காணிப்பது எப்படி, சமாளிப்பது எப்படி, மற்ற கட்சிகளில் கைக்கூலிகளை உருவாக்குவது எப்படி என்பது உள்ளிட்ட நிர்வாகக் கலைகள் தெரியும்.  தேர்தல் கமிசன் அதிகாரிகள் முதல் நீதியரசர்கள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கும் வழிமுறைகள் தெரியும். ஒரு கிரிமினல் மஃபியாக் கும்பலின் தலைவிக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அத்தனையும் தெரியும்.

. “சசிகலாவைப் பற்றி அவருடைய எதிர்காலச் செயல்பாட்டை வைத்துத்தான் கருத்து கூற முடியும்” என்கிறார்கள் மாண்புமிகு எதிர்க்கட்சிகள். “கடந்த காலச் செயல்பாட்டை”க் காட்டிக் கதறுகிறார் பையனூர் பங்களாவைப் பறிகொடுத்த கங்கை அமரன். சொத்துக் குவிப்பு வழக்கு முதல் சேகர் ரெட்டியின் மணற்கொள்ளை வரை அனைத்தும் கடந்த காலச் செயல்பாட்டில் விளைந்தவையே என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா என்ன?

முதல்வரின் தோழியாக இருந்தபோதே அவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்பட்டவர், முதல்வராகிவிட்டால் எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயல்படுவார் என்று நினைக்கும்போதே நமக்கு நெஞ்சு நடுங்குகிறது!

“சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால், அம்மாவும் இருந்திருக்க மாட்டார், அ.தி.மு.க வும் இருந்திருக்காது” என்று வெளிப்படையாக பொதுக்குழுவில் பேசினார் வளர்மதி. “விசுவாசமான கூட்டுக் குற்றவாளி” என்பதுதான், இன்று அம்மாவுக்கு அடுத்தபடி முதல்வராவதற்கு சசிகலா பெற்றிருக்கும் முதன்மையான தகுதி.

ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக.

உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது.

குற்றம்தான் முதல்வர் பதவிக்கான தகுதி.

  புதிய ஜனநாயகம் ஜனவரி – 2017