Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 510

குழந்தைக்கு நல்ல நேரம் – தாய்க்கு கெட்ட நேரம் !

0

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ரவி. முதுகலை வேதியியல் படித்தவர், நல்லச் சம்பளத்தில் வேலை. இளங்கலை பட்டப் படிப்பு முடித்தவர் ரவியின் காதல் மனைவி. மனைவிக்கு இது இரண்டாவது பிரசவம். முதல் குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்தது. இரண்டாவது கர்ப்பம் எட்டு மாதம் முடிவதற்குள் ஏற்கனவே போட்ட ஒட்டுத்தையல் கொஞ்சம் பிரிந்து விட்டதால் வலி ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

maternity psமருத்துவரோ குழந்தை போதுமான வளர்ச்சி அடையவில்லை அதனால் இன்னும் மூன்று வாரங்களுக்கு வயிற்றில் இருந்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். வலி குறைந்தால் தையல் பிரியும் அபாயம் குறைவு. இருந்தாலும் அவ்வப்போது பிரசவ வலிவரும். வலி குறைவதற்கான மருத்துவத்தை செய்து கொண்டு படுக்கையிலேயே ஓய்வெடுக்க வேண்டும். அப்போது தான் தாயும் சேயும் நலமாக இருக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

குழந்தை என்பது மக்களால் மகிழ்ச்சியின் குறியீடாக கொண்டாடப்படும் நிலையில் அந்த மகிழ்ச்சிக்குப் பெண்களால் கொடுக்கப்படும் வலி அதிகம். ஓரிரு நாள் இல்லாது ஒரு மாத காலமாக பிரசவ வலியைப் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு பேருந்து பயணத்தில் கூட தோள் வலி தவிர்க்க தோல் பையத் பேருந்தில் பக்கத்து இருக்கையில் கொடுக்கிறோம். ஆனால் பிரவசச் சுமையை ஒரு பெண் யாரிடம் பகிர முடியும்?

பெண்களின் மறு பிறப்பு பிரசவம் என்பார்கள். அப்படி செத்துப் பிழைக்கும் நேரத்தில் கூட குழந்தை ‘நல்ல நேரத்தில்’ பிறக்க வேண்டும் என்று காட்டுமிராண்டித்தனமாக பலர் முயல்கின்றனர். அதில் ரவியும் ஒருவர். மனைவியின் உடல் நிலையைப் பற்றிக் கவலை இல்லாத ரவி இன்னும் ஒரு வார காலம் தாமதமாகக் குறிப்பிட்ட நாளில் குழந்தைப் பிறந்தால் ஜாதகப்படி ராசிபலன் அற்புதமாக இருக்கும் என்று மருத்துவரிடம் கூறியுள்ளார்.

அறிவியல் வளராத அந்தக் காலத்தில் கூட ஏழை பாழைகளிடம் இந்த கொடூரமான மூட வழக்கம் இல்லை. பண்ணையார்தனமாக வாழ்ந்தோரிடம் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். மேலும் பெண்ணின் மதிப்பை உணராத காலமது. அரண்மனையின் ஜோதிடர் குறித்துக் குடுத்த நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்று அரச குலப்ப பெண்களுக்கு பிரசவ வலி வந்த பிறகு இயற்கைக்கு மாறாக தலைகீழாகக் கட்டிவைத்துக் குழந்தை பிறக்கும் நேரத்தைத் தள்ளி வைத்தக் கதையெல்லாம் உண்டு. ஆனால் இன்று அறிவியலும், மருத்துவ விழிப்புணர்வும் மேலோங்கிய காலத்தில் இப்படி ‘நல்ல நேரம்’ வேண்டி மனைவியின் உயிரை சூதாடும் நிலையை என்னவென்று சொல்வது?

ரவியின் மனைவிக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இந்த முறையும் அவர் இறுதி மாதங்களில் பெரும் அவஸ்தையோடுதான் இருந்துள்ளார். திரும்பிப் படுக்க முடியாது, எழுந்து உட்கார்ந்து பிறகு தான் படுக்க முடியும். ஒரு தடவை எழுந்து உட்காரப் பத்து நிமிடமாகும். எழுந்து நடந்தால் வலிக்கொஞ்சம் குறையும் ஆனால் முடியாது. கை, கால் அசைத்தாலே பழைய தையல் பிரிவது போல் இருந்ததால் பாத்ரூம் போகக் கூட யோசிக்கும் நிலையில் இருந்துள்ளார்.

சுடாது என்று தெரியும் வரை தான் கற்பூரத்தை கையில் ஏந்தும் பக்தியெல்லாம் பக்தனுக்கு இருக்கும். கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் தான் அந்தப் பெண்ணும். ஆனால் உயிர் போகும் நிலையில் ராசிபலன் பார்ப்பதை எந்தப் பெண்ணும் சகித்துக் கொள்வதில்லை. காதலித்து கல்யாணம் செஞ்சுகிட்டேன். ஒவ்வொரு நொடியும் நான் படும் வேதனையைப் பார்த்த பிறகும் பிரசவத்தைத் தள்ளிப் போடும் மனம் அவருக்கு எப்படி வந்தது. அந்தாளு மனுசனா மிருகமா என கண் கலங்கியுள்ளார் அந்தப் பெண்.

இத்தனை நாள் பொறுத்துகிட்ட இன்னும் ஒரு வாரம் தானே என்று மனைவியிடம் மன்றாடினார் ரவி. தீபாவளி கொண்டாட முடியாமல் போய்விடும், முதல் குழந்தை ஏமாந்து போய்விடுவான் எனவும் மனதை மாற்ற முயற்சித்துள்ளார். மருத்துவரும், மனைவியும் இதற்கு சம்மதிக்கவில்லை. கடைசியாகக் குலதெய்வ வழிபாடு செய்யும் வரை இரண்டு நாள் பிரசவத்தைத் தள்ளி வைத்து நினைத்ததைக் கொஞ்சமேனும் சாதித்துள்ளார்.child ps

வாடிக்கையாளர்களுக்கு வசதியாக நல்ல நாள் பார்த்து அறுவைச் சிகிச்சை செய்யும் பல மருத்துவர்களில் ரவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் ஒருவர். சிறு நகரங்களில் உள்ள இவரைப் போன்ற மருத்துவர்கள் இப்படித்தான் கம்பெனி நடத்துகிறார்கள். இருந்தாலும் மிகவும் பிரச்சனை உள்ள ஒரு கேசில் இனியும் தாமதம் ஆக்க முடியாது என்பது தான் இந்த மருத்துவரது கருத்தாகஇருந்துள்ளது.

“இந்து மத நம்பிக்கைகளுக்கு பெயர் போனவர்கள் கொங்கு மண்டலத்தில் வாழும் கவுண்டர் சாதி இன மக்கள். பார்ப்பனர் – வேளாளரைப் போல கவுண்டர் சாதி மக்களும் கடவுள் மேல அதிக நம்பிக்கை வைச்சுருக்காங்க. எதைச் செய்தாலும் சடங்கு சம்பிரதாயம் பார்த்து தான் செய்வார்கள். இது போல் இந்த நேரத்தில் கூட தன் உடல்நிலைக் குறித்து முடிவெடுக்க முடியாமல் குடும்பம், கணவன் சொல்லுக்கு செவிசாய்க்க காரணம் இந்தப் பகுதியில் பெண்களுக்கு கட்டுப்பாடு அதிகம்.” என்றார் இந்த தகவலைச் சொன்ன தோழி.

மழைப் பிறப்பும், பிள்ளைப் பிறப்பும் அந்த மஹாதேவனுக்கேத் தெரியாது என்ற பழமொழியை மாற்றி அமைத்தது அறிவியல். அந்த அறிவியல் வளர்ச்சியை முறியிடிக்கும் முகமாக அழிக்க முடியாத இரவு நேரக் கொசு போல ஆன்மீகம் இன்றும் மக்களை கடித்து வருகிறது.  குழந்தை பிறந்த நேரத்தை வைத்து தான் இதுவரை ஜாதகம் எழுதப்பட்டது. இப்பொழுது அதிஷ்டத்தைத் தனதாக்கிக் கொள்ள நல்ல நேரத்தைத் தெரிவு செய்து குழந்தைப் பிறப்பை நடத்துகிறார்கள் ஆன்மீகத்தைக் கண்மூடித் தனமாக நம்பும் மக்கள்.

கரு தாயின் வயிற்றில் 300 நாள் தான் இருக்க முடியும் என்பது இயற்கை. அதுக்கு முன் ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவம் கை கொடுக்க வாய்ப்பிருக்கு. 400-வது நாள் தான் நல்ல நாள் என்று தாமதப்படுத்த முடியுமா? குழந்தை என்பது மனிதனின் பரிணாம வாழ்க்கைச் சுழற்சியின் இயற்கை நிகழ்வு. மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லாது அறிவியலின் துணை கொண்டு பார்க்கத் தான் மருத்துவம். ராகு காலம், எமகண்டம், வளர்பிறை, தேய்பிறை, பாத்து பக்குவமா செய்யறதுக்கு பிரசவம் ஒன்னும் பாட்டி சுடுற பலகாரம் கிடையாது.

ஜெயலலிதாவும், சசிகலாவும் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் சகலவிதமான சடங்கு, யாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஊட்டியில் கஜ முக யாகம் முதல் திருநள்ளாற்றில் காஞ்ச மிளகாய் யாகம் வரை எதையும் விடவில்லை. ஆனால் இன்று ஜெயா சமாதியை குற்றவாளியின்  சமாதி என்றும், சசிகலா குற்றவாளியாக பெங்களூருவிலும் இருப்பதை யார் மறைக்க முடியும்?

எப்போது பிறந்தோம் என்பதல்ல, என்ன செய்தோம், எப்படி வாழ்ந்தோம் என்பதை வைத்தே மனிதர்கள் மதிப்பிடப்படுகிறார்கள். ஆகவே உங்கள் குழ்ந்தைகள் தாயின் வேதனையை குறைக்கும் நேரத்தில் பிறக்கட்டும். இல்லையேல் அதை மருத்துவம் முடிவு செய்யட்டும். மதி கெட்டு ஜோதிடம், ஜாதகம் என்று ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடாதீர்கள்.

-சரசம்மா
(உண்மைச் சம்பவம் – பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

ஜெயா பெயரை நீக்கு – அதிமுக சொத்துக்களைப் பறிமுதல் செய் ! மக்கள் அதிகாரம்

4

ஜெயா சமாதியில் அடித்துச் சபதம் போடும் ஆத்திரம்! தீர்ப்புக்குக் குற்றவாளி கொடுக்கும் மரியாதை இதுதான்!

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 16.02.2017 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. தோழர்கள் கணேசன், ராஜு, கற்பகவிநாயம் செய்தியாளர்களிடம் பேசுகின்றனர்.

சொத்துக் குவிப்புக் கிரிமினல் குற்ற வழக்கில் இறந்துபோன ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள் என அறிவித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்குமான சிறைத் தண்டனையை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். சிலர் வாதிடுவதைப்போல “வரலாற்றுச் சிறப்புமிக்கதோ, அரசியல்வாதிகளுக்கு ஒர் எச்சரிக்கையோ, பாடமோ, காலதாமதமானாலும் இறுதியில் நீதி வென்றதாகக் கருதி வரவேற்கத்தக்கதோ” அல்ல.

அவர்கள் நால்வரும் தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றவாளிகள்தாம் என்பது ஊரறிந்த உண்மை. வேறுவழியின்றி நாட்டு மக்களிடையே ஏற்கெனவே நீதிமன்றங்களின் மீது வேகமாகச் சரிந்து விழும் நம்பிக்கையை மீட்பதற்கான இறுதி முயற்சியின் ஒரு பகுதிதான் இந்தத் தீர்ப்பு.

தன் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் இலஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுக்களை வரம்புக்குட்பட்ட முறையில் மட்டுமே விசாரணை  நடத்தி, குறைந்தபட்ச தண்டனை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கணவன், மனைவி இணையாமல் குழந்தை பிறக்காது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதிகள் கூட்டு இல்லாமல் ஊழல் முறைகேடுகள் செய்திருக்க முடியாது.

ஜெய-சசி கும்பலுக்கு மட்டுமே தண்டனை; ராம் மோகனராவ், குமாரசாமி, தத்துக்களுக்கு என்ன தண்டனை? இது என்ன நீதி? இவர்கள் போட்ட சட்டத்திட்டங்கள் எடுத்த நடவடிக்கைகள் செல்லுமா? நியாயமானவையா?

மிகப்பெரிய ஊழல், முறைகேடு புரிந்த ஒரு கிரிமினல் குற்றவாளி தண்டனையின்றி 21 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தையும், உல்லாச ஊதாரி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து, நாட்டையே கொள்ளையிட்டு, மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்துள்ளார். அதனால்தான், சாதாரண கிரிமினல் குற்றவாளிகளே சிறைச்சாலைகளை ஐந்து நட்சத்திர விடுதிகளாக மாற்றிக்கொண்டு, அங்கிருந்தவாறே குற்றக்கும்பல் தலைவர்களாகி ஆதிக்கம் புரியும் இந்த அமைப்பில், சிறை செல்லும்போதுகூட ஜெயா-சசி கும்பல் நெஞ்சை நிமிர்த்துகொண்டு, தனது பரிவாரப்படைகள் புடைசூழ சிறைத் தண்டனைகளுக்கு அஞ்சமாட்டோம் என்று சவால்விட்டுப் போகிறது.

ஆனால் இந்த தீர்பைத்தான் ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை, பாடம் என்றெல்லாம் நம்பச் சொல்லுகிறார்கள். பொதுச்சொத்துகளை மட்டுமல்ல, தான் ஆசைப்படும் தனியார் கட்டுமானங்கள், வியாபாரங்கள், தொழில்கள், நிலங்கள் எல்லாவற்றையும் உருட்டி மிரட்டி அபகரித்துக் கொண்டார்கள். ஜெயா-சசி கும்பலின் குரூரமான ஆட்சியதிகாரத்தால் போலி மோதல்களால் பலர் கொல்லப்பட்டனர்; பலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். பலரது வாழ்வும் சிதைக்கப்பட்டன. உடலும் மனித உரிமைகள் காலில்போட்டு மிதிக்கப்பட்டன. இந்த தேசத்தின் ஆறுகள், மலைகள், கடற்கரைகள், குடிநீர் உட்பட அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு, இந்த சமூகத்தையே போதையில் தள்ளி, இதன் பகுத்தறிவும் பண்பாடும் சீரழிக்கப்பட்டன.

இத்தகைய பகற்கொள்ளை வேட்டைக்காகவே அரசிலும், வெளியிலும், கட்சியிலும் திட்டமிட்டு ஒரு தொழில் முறைக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஊழல்-கிரிமினல் கொள்ளைக் கும்பல் அரசுக் கட்டமைப்போடு கலந்து அதற்கு இணையாகத் தம்மை எதிர்ப்போரும் கேட்போரும் அஞ்சும் நிலையை உருவாக்கிவிட்டனர். அந்தக் கும்பலிடம் காலில் விழுந்து நத்திப் பிழைப்பது மட்டுமே முடியும். எந்த உரிமையும் போராடிப் பெறமுடியாது என்ற பயபீதியை, அவநம்பிக்கையை அடிவரை பரப்பி விட்டார்கள்.

ஓட்டுக்கட்சி வரம்புக்குள், சட்டவரம்புக்குள், இந்த அரசமைப்புக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்பி மக்கள் சிந்திப்பதும், காத்திருப்பதும், ஏமாந்து போவதும் தான் பிரச்சனை. இனி, ஒரு அநீதி நடக்கும்போது, இன்னொரு கும்பலிடம் போய்த்தான் நியாயத்தை முறையிட வேண்டும் என்ற நிலையை மாற்றி, மக்களே நேரடியாகத் தலையிட்டுத் தட்டிக்கேட்கும் துணிவையும், நீதியையும் நிலைநாட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டும்.

இனி ஒரு முறை இதுபோல கிரிமினல் குற்றங்கள் செய்துவிட்டு யாரும் தப்பித்துகொள்ள முடியாது என்று பயபீதி கொள்ளும் வகையிலான தண்டனையை மக்களே நேரடியாக வழங்க வேண்டும். அத்தகைய அதிகார முறையைக் கொண்டுவரவேண்டும்.

மாணவர்களே, இளைஞர்களே வாருங்கள்! தமிழகத்தை மெரினாவாக்குவோம்!

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட வேண்டும்.

ஜெயாவின் சின்னத்தை வைத்து போற்றுவது எதிர்கால சமூகத்திற்கு தவறான சமிக்ஞை ஆகிவிடும்.

  •  மெரினாவில் அரசு மரியாதையுடன் உள்ள ஜெயா சமாதியை உடனே அகற்ற வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயா புகைப்படத்தை நீக்க உத்தரவிட வேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் பாட நூல்களில் உள்ள கிரிமினல் ஊழல் குற்றவாளி ஜெயாவின் படத்தை திருவள்ளுவர் படத்தை ஒட்டி மறைக்க வேண்டும்.
  • விலையில்லாப் பொருட்களில் உள்ள ஜெயா படத்தை மக்கள் அழிக்க வேண்டும்.
  • ஜெயா சசியின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
  • அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள், மற்றயம் ஜெயா காலத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் இவை அனைத்தும் பொது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.இது தனிநபர் மீதான வெறுப்பு அல்ல. தமிழகத்தை கொள்ளையடித்த, சீரழித்த ஒரு கொள்ளை கும்பலின் தலைமை ! ஜெயா-சசி கும்பலை தமிழகத்தின் தீய சக்தியாக கருத வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு மக்களின் இந்த செயல்தான் பாடமாக அமையும். நீதிமன்றத் தீர்ப்புக்களை கண்டு எந்த ஊழல்வாதியும் பயப்பட போவதில்லை.

இவண்
வழக்குரைஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66321

இரட்டிப்பாவது விவசாய வருமானமா? விவசாயிகள் சாவா?

0

fiscal-budget-7591ருவமழை எதிர்பார்த்த அளவிற்கும் மிகக்குறைவாக பெய்திருப்பதாலும், மற்றும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாலும் நாடு முழுவதும் விவசாயமும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களைப் போலவே பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும் விவசாயிகளின் சாவு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கோதுமைக் களஞ்சியமான பஞ்சாப்பில் கடன் நெருக்கடியால் இரண்டு நாளுக்கு மூன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என பத்திரிகை செய்திகள் வெளிவரும் இச்சூழ்நிலையில் மோடி அரசு 2017-18–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்திருக்கிறது !

“விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவோம்” என்று சவடால் அடிக்கும் மோடி அரசு, இந்தப் பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்காக மொத்தம் 51,026 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. இது மொத்த பட்ஜெட்டில் வெறும் 2.3%தான்!

நீர்பாசனம் மற்றும் நீராதாரங்கள் திட்டங்களுக்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய 20,000  கோடியில் என்னென்ன திட்டங்கள் நடந்தது என்ற விளக்கமேதும் இல்லாமலே, இந்த பட்ஜெட்டிலும் 20,000 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள் ! இப்போதும் கூட இத்தொகை எப்போது, எங்கு, என்னென்ன திட்டங்களுக்காக செலவிடப்படும், எந்த அரசு அமைப்பின் கீழ் கண்காணிக்கப்படும் என்று எந்த விவரமும் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை ! இந்த லட்சணத்தில் நடுத்தர, நுன்பாசனத் திட்டங்களுக்கான நிதியம் அமைக்க தனியாக 5,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது ! இவ்வாறு ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடிகள் எங்கு போகிறது என்பது மோடி வகையறாவுக்கே வெளிச்சம்!

punjab-farmer
வறட்சியின் பிடியில் பஞ்சாப் விவசாயி

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு 10 லட்சம் கோடிரூபாய் இலக்கு தீர்மானித்திருப்பதாகக் கூறும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடன் மானியத்திற்கு என 15,000 கோடி ரூபாயை ஒதுக்கி மானியத்திற்கும் வரம்பு நிர்ணயித்திருக்கிறார். இதை மாநிலவாரியாகப் பிரித்தால் சராசரியாக ஒரு மாநிலத்திற்கு 460 கோடிதான் மானியமாக கிடைக்கும். அப்படியானால் எத்தனை பேருக்கு மானியக் கடன் கிடைக்கும்? இதில் சிறுகுறு விவசாயிகள் எத்தனைபேருக்கு வழங்கப்படும்? எந்தெந்த வகைக்கடனுக்கு இந்த மானியம் பொருந்தும்? அல்லது பொருந்தாது என்று எவ்வித வரையறையும் பட்ஜெட்டில் விளக்கப்படவில்லை ! மேலும், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்போவதாக சொல்லும் 10 லட்சம் கோடிரூபாய் என்பது மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகையல்ல. இது வங்கிகள் வழங்கும் விவசாயக் கடனுக்கான இலக்குதான்! வங்கிகள் வழங்கும் இந்தக் கடனுக்கான மானியமாகத்தான் 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது! அதாவது இத்தொகையை அரசு நேரடியாக வங்கிகளுக்கு செலுத்திவிடும்! எனவே இந்த மானியத்தை அனுபவித்தவர்கள் சிறு குறு விவசாயிகளா அல்லது விவசாயிகள் பெயரில் செயல்படும் வேளாண் வர்த்தக நிறுவனங்களா என்ற விவரம் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும்!

வங்கிகளை தனியார் மயமாக்கும் நோக்கத்தில், “பொதுத்துறை வங்கிகள் லாபகரமாக இயங்குவதை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்கள் உத்தவாதம் செய்துகொள்ளவேண்டும்” என்று ஏற்கனவே, மத்தியஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், யாருக்கு எவ்வளவு கடன் வழங்குவது? வழங்கக்கூடாது என்பதை வங்கிகளின் கிளை மேலாளர்கள்தான் நடைமுறையில் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்! சாதாரணப் பயிர்கடன் பெறுவதற்கே “வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும்! இரண்டுவருட கணக்குப் பராமரிப்பும், குறைந்தபட்ச இருப்புத் தொகையும் கணக்கில் இருக்க வேண்டும்!” என்று கறார் காட்டுவார்கள். இதற்கும் மேலாக கிளைமேலாளரின் கடைக்கண் பார்வையும் இருந்தால்தான் கடன்பெற முடியும்!

டிராக்டரை விற்பதாக சந்தையில் நிற்த்தி வைத்திருக்கும் தல்வாண்டி (பஞ்சாப்) விவசாயிகள்
டிராக்டரை விற்பதாக சந்தையில் நிற்த்தி வைத்திருக்கும் தல்வாண்டி (பஞ்சாப்) விவசாயிகள்

நிலத்தை ஈடுவைத்து கடன் வாங்க வேண்டுமானால், போர்வெல் இருக்கிறதா? எத்தனை அடியில் தண்ணீர் இருக்கிறது? அதில் எத்தனை மணிநேரம் பாய்ச்சல் இருக்கும்? என்ன பயிர் இருக்கிறது? அதன் ஆண்டுவருமானம் எவ்வளவு? விவசாயம் தவிர வேறு என்னென்ன வருமானங்கள் இருக்கிறது? குடும்பத்தில் எத்தனை பவுன் நகை உள்ளது? சொந்தவீடா வாடகைவீடா ஒத்தியா? சொந்தவீடு என்றால் அது யார் பெயரில் இருக்கிறது? எத்தனை சதுரஅடி? அதன் சந்தை மதிப்பு எவ்வளவு? இதுதவிர, நிலத்திற்கு 32 வருட வில்லங்க சான்றிதழ், நோட்ரிபப்ளிக் சான்று, பட்டா, சிட்டாஅடங்கல், என்று தனிப் புத்தகம் போடுமளவுக்கு உத்தரவாதம் காட்டவேண்டும்! இதற்கெல்லாம் பிறகு நிலத்தை நான்கு, ஐந்து முறையாவது  வங்கி அதிகாரிகள் பார்வையிட்டுத்தான் கடன் தருவதற்கு சம்மதமே தெரிவிப்பார்கள்! இறுதியாக, விவசாயி தனது சொந்த செலவில் நிலத்தை வங்கிக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் ! இதற்கே ஆறு மாதங்கள் ஓடிவிடும்! நடுத்தர விவசாயிகள் கூட இந்த நடைமுறை சிக்கலுக்கு பயந்தே பாதிப்பேர் வங்கிக்கடன் வாங்குவதைக் கைவிட்டுவிட்டு தனியார் பைனான்ஸ் கும்பலிடம் அடைக்கலமாகி விடுகிறார்கள்!

இந்த எதார்த்தத்தைக் கடந்து எத்தனை விவசாயிகளால், மோடி சொல்லும் 10 லட்சம் கோடியை கடனாக பெறமுடியும்? ரிலையன்ஸ் ஃபிரஷ், ருச்சி, டாபர் போன்ற ஏற்றுமதிக்கான நவீன விவசாயம் செய்பவர்களும், குளிர்பதனக் கிடங்கு நடத்துபவர்களும், வேளாண் தரகுத்தொழில் செய்பவர்களும்தான் பெருமளவில் விவசாயக் கடன் பெறுகிறார்கள் ! உண்மை என்னவென்றால் இவர்கள் யாரும் கிராமங்களில் தொழில் செய்வதில்லை. பெரு நகரங்களில்தான் செயல்படுகிறார்கள் ! “மராட்டிய மாநிலத்தில் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேளாண் கடனில் 40% மும்பை நகரில் உள்ள இத்தகைய நிறுவனங்களுக்குத்தான் சென்றிருக்கிறது” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் பிரபாட் பட்நாயக் ! ஆனால், சிறுகுறு விவசாயிகளில் 40% பேர் வங்கிக்கடன் பெற வசதியின்றி  தவிப்பதாக மத்திய அரசே வெட்கமின்றி கூறிவருகிறது!

தண்ணீரின்றி காய்ந்துபோன நெற்கதிரை மாட்டுதீவனத்திற்காக அறுத்து செல்லும் உ.பி விவசாயி

பயிற்காப்பீட்டு திட்டத்திற்காக இந்த பட்ஜெட்டில் 9,000  கோடியை ஒதுக்கியுள்ள ஜெட்லி, நாட்டின் 40% விவசாயிகளை இதில் இணைக்கப் போவதாக பெருமையுடன் கூறுகிறார் ! ஆனால் உண்மை என்ன? கடந்த 2016-17 பட்ஜெட்டில் இதே திட்டத்திற்காக 5,500 கோடி ஒதுக்கப்பட்டது. இது ஆண்டு முடிவில் (திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி)  13,500 கோடியாக உயர்ந்துவிட்டது! இதன்மூலம் நாட்டின் 26% விவசாயிகள் இணைக்கப்பட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார். 26% பேருக்கு 13,500 கோடி செலவாகியிருக்கும்போது நடப்பு பட்ஜெட்டில் 40% பேருக்கு 9000 கோடி ஒதுக்கீடு என்பது எந்த ‘குமாரசாமி’யின் கணக்கு என்று தெரியவில்லை!

9000 கோடி, 13,500 கோடி என்பதெல்லாம், தாங்கள் காப்பீடு செய்துள்ள தொகைக்கு விவசாயிகள் செலுத்தும் பிரிமியத் தொகைக்கு, மத்தியஅரசு கொடுக்கம் மானியத் தொகைகள். இத்தொகை முழுவதும் பயிர் காப்பிட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசால் நேரடியாக வழங்கப்பட்டுவிடும் என்பதே உண்மை! ஏற்கனவே அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டுவந்த இடத்தில், ICICI LAMBARD, IFFCO-TOKIYO, HDFC போன்ற 16 அன்னிய தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பயிர் காப்பீட்டுத் துறையில் செயல்பட மோடி அரசு அனுமதி வழங்கியுள்ளது ! விவசாயிகளின் நலனுக்காக அல்ல, இந்நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகவே ஒவ்வொரு ஆண்டும் இத்தொகையை அதிகரித்து வருகிறது மத்திய அரசு!

mp-young-farmers-lost-job
விவசாய வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட ம.பி கிராம இளைஞர்கள்

“விவசாய விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவுடன், 50% லாபமும் சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும்” என்ற M.S.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமுல்படுத்தக் கோரும் விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை, இன்றுவரை கிடப்பில் போட்டுவைத்துள்ள மோடி அரசு, ரிலையன்ஸ் ஃபிரஸ் போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு சாதகமான டிஜிட்டல் வேளாண் சந்தைகளை 585 ஆக உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறது! மேலும் பால்பொருள்கள் பதப்படுத்தும் தொழில் வளர்ச்சிக்காக நபார்டு வங்கிமூலம் நிதியம் அமைப்பதற்காக 8,000 கோடியை ஒதுக்கியுள்ளனர்!  ஆவின் போன்ற உள்நாட்டு பால்நிறுவனங் களை ஒழித்துக்கட்டிவிட்டு அன்னிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கே இந்த நிதியம் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில், விவசாயத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களை வரையறையின்றி அனுமதித்து, விவசாயத்தை அவர்களின் வேட்டைக் காடாக்குவதே மத்திய மாநில அரசுகளின் திட்டமாக இருந்து வருகிறது. இதையே தனது பட்ஜெட்டிலும் உறுதி செய்திருக்கிறார்கள் மோடியும், ஜெட்லியும்!

இந்த வேசித்தனத்தை மூடிமறைப்பதற்காக , “2019-க்குள் ஒருகோடி ஏழைகளை வறுமையிலிருந்து மீட்கப்படும், வீடில்லாத ஒருகோடி ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும், வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்” என்று சில வாசனைத் திரவியங்களைத் தெளித்து விட்டிருக்கிறார்கள்!

“இந்தியா விவசாயக் குடும்பங்களின் சராசரி மாதவருமானம் 3,800 ரூபாய்! விவசாயிகளின் சராசரி கடன்அளவோ 47,000 ரூபாய்! (சில மாநிலங்களில் இது ஒரு லட்சத்திற்கும் மேல் !) நாட்டின் 52% விவசாயக் குடும்பங்கள் கடனில் சிக்கித்தவிக்கின்றன !” என்று பல்வேறு அரசுக் குறிப்புகளே கூறுகிறது!

4.பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட குஜராத் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட குஜராத் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

“தினமும் 2000 விவசாயிகள் தனது விவசாய அடையாளத்தை இழந்து வெளியேறுகிறார்கள்.  ஒவ்வொரு மணிநேரமும்  சராசரியாக 47 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்!” என்கிறார் பிரபல வேளாண் ஆய்வாளர் திரு.சாய்நாத்!

மோடி கூறுவதுபோல, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகவில்லை! மாறாக, விவசாயிகளின் வறுமையும், கடனும், விவசாயத்தின் அழிவும், தற்கொலைச் சாவுகளுமே இரட்டிப்பாகி வருகிறது! விவசாயிகள் இரட்டிப்பு வருமானத்தைக் கேட்கவில்லை. கண்ணியமாக வாழ்வதற்கான வருமானத்திற்கு உத்தரவாதம் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்! பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதுகாவலனான மோடியின் காதுகளில் விவசாயிகளின் குரல் ஒலிக்கும் என நம்புவது அப்பாவித் தனமல்லவா!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2017 மின்னிதழ்

0

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பன்னீர் எதிர் சசி:  முன் விட்டையா, பின் விட்டையா?
இரண்டு திருடர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது? சிரித்த முகமும் அடிமைக்குரிய பணிவும் காட்டும் பன்னீரையா? மன்னார்குடி மாஃபியாவின் தலைவியான சசிகலாவையா?

2. மிக்சர் பன்னீரா? மிஸ்டர் பன்னீரா?
தலை முதல் கால் வரை கிரிமினல்மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு, பிறகு ஏமாந்துவிட்டதாகப் புலம்பியது போதும். “அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.

3. மக்கள் அதிகாரம் விடுத்த மெரினா பிரகடனம்!
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் ராஜு 22.1.17 அன்று மெரினாவில் திரண்டு போராடிய மக்களிடையே ஆற்றிய உரை(சுருக்கப்பட்ட வடிவம்).
ஜல்லிக்கட்டு கோரிக்கை என்பது ஒரு குறியீடு மட்டுமே என்று வலியுறுத்தி, தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக 11 கோரிக்கைகளை உள்ளடக்கிய மெரினா பிரகடனம் வெளியிடப்பட்டது.

4. மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு!
போராட்டமென்றும் கொண்டாட்டமென்றும் பலவாறாக விளக்கப்படுகின்ற மெரினா எழுச்சி என்பது தனியொரு கோரிக்கைக்கான போராட்டமல்ல. இது ஒரு உணர்வெழுச்சித் தருணம். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை.

5. விவசாயி பயிரை வளர்க்கவில்லை, பிள்ளையை வளர்க்கிறான்!
தொழில் நொடித்து, கடனாளியாகும் ஏனைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொள்ளாதபோது, விவசாயிகள் மட்டும் உயிரை மாய்த்துக் கொள்ளும் காரணம் இதுதான்.

6. வறட்சி நிவாரணம்: வரும், ஆனா வராது!
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.

7. புதிய பயிர்க் காப்பீடு: விவசாயிகளை வஞ்சித்த மோடி!
மோடி அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய வேளாண் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்குச் சுண்ணாம்பையும், தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வெண்ணெயையும் வழங்குகிறது.

8. நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள்!
பண்ணையார்களுக்கும் கங்காணிகளுக்கும் பயந்து நடுங்கிய மக்கள், இப்பொழுது நுண்கடன் நிறுவனங்களின் வட்டிப் பணம் வசூலிக்கும் துரைமார்களைக் கண்டுதான் அச்சப்படுகிறார்கள்.

9. விவசாயி வீட்டில் இழவு: யார் குற்றவாளி? இயற்கையா? அரசின் உதாசீனமா?
சாகுபடி பரப்பு குறையக்கூடாது, உற்பத்தி குறையக்கூடாது என உத்தரவிடும் அரசு, விவசாயத்திற்கு அடிப்படையான பாசன வசதிகளை, நீர்நிலை பராமரிப்பைத் திட்டமிட்டு புறக்கணிக்கிறது, அழிக்கிறது.

10. போலீசு ராஜ்ஜியம்! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில்!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

மெரினா எழுச்சியின் அனுபவத் தொகுப்பு – தோழர் மருதையன்

3

மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு !

ந்த மாபெரும் மக்கள் எழுச்சியை கண்ணால் பார்ப்பதற்காகவேனும் இன்னும் சில நாட்கள் ஜெயலலிதா வாழ்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. மெரினா எழுச்சியின் நாட்களில், ஜெயலலிதாவின் கல்லறை அங்கு இருப்பதை கடற்கரையே மறந்து விட்டது. “அம்மா இருந்திருந்தால் கிழித்திருப்பார்” என்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசுவதற்குக்கூட ஒரு அடிமையோ கைக்கூலியோ இல்லை. “தமிழகத்தின் சுக துக்கங்கள் அனைத்தையும் நிர்ணயிப்பது தான் மட்டுமே” என்றெண்ணி இறுமாந்திருந்த ஒரு சர்வாதிகாரி, குப்பையைப் போல தமிழ் மக்கள் தன்னை ஒதுக்கித் தள்ளியதைப் பார்க்காமலேயே போய் விட்டாரே என்று நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக்தான் இருக்கிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்தப் போராட்டமே நடந்திருக்காது என்று கருதுவோர் உண்டு. ஏனென்றால், தன்னுடைய தைரியத்திலும் அறிவாற்றலிலும் கருணையிலும்தான் தமிழகம் பிழைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை ஜெயலலிதா தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார். உண்மை அவ்வாறில்லை. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் சுமார் 25% தமிழகத்தில்தான் நடந்திருக்கின்றன. சென்ற ஆண்டு நடைபெற்ற டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் கிளர்ச்சி என்பது சமீபத்திய சான்று.

இருப்பினும், ஈழம், காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மூவர் தூக்கு, கெயில், மீதேன் உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்திலும், மக்கள் போராட்டத்தின் மீது ஜெயலலிதா சவாரி செய்தார். அப்போராட்டங்களின் புரவலராகத் தன்னைக் காட்டிக்கொண்டே அவற்றைச் சீர்குலைத்தார். இதனை ஆமோதித்துக் கூவுவதற்கு நத்திப் பிழைக்கும் கட்சிகளும் தலைவர்களும் இருந்த காரணத்தினால் இந்தப் பொய்மை உண்மையானது.

ஜெயலலிதாவை  “மாநில உரிமைப் போராளி”யாக சித்தரிப்பதன் வாயிலாக, பார்ப்பன-இந்து தேசியத்துக்கு எதிரான திராவிட இயக்க அரசியலை அடியறுப்பதும், தமிழ் மக்களை அடிமை மனநிலையிலேயே இருத்தி வைப்பதும் ஆளும் வர்க்கத்தினரின் நோக்கமாக இருந்தது. நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து கிடக்கும் அ.தி.மு.க. அடிமைகள், வளைந்து நெளியும் அதிகார வர்க்கம், சுயமரியாதையற்ற ஊடகங்கள், இலவசத் திட்டங்கள், வாக்குகளை விற்கப் பயிற்றுவிக்கப்பட்ட வாக்காளர்கள் என்று எல்லாத் திசைகளிலிருந்தும் தமிழ்ச் சமூகத்தின் மனதில் அடிமை மனோபாவமும் திணிக்கப்பட்டது. இவையனைத்தையும் மீறி நடந்தவைதான் தமிழக மக்களின் போராட்டங்கள்.

அ.தி.மு.க. என்ற கொள்ளைக் கூட்டத்துக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவதற்கான காரணங்கள் தமிழ் மக்களுக்கு ஏராளமாக இருந்தன. எனினும், இந்த எதிர்வினையின் பரிமாணம் வியக்கத்தக்கது.  இது, தமிழ்ச் சமூகத்தின் உடல் முழுவதிலும் அட்ரீனலின் பொங்கிப் பாய்ந்ததைப் போன்றதொரு எழுச்சி! அடிமைத்தளையில் புழுங்கிக் கொண்டிருந்த சமூகம், தானே அறிந்திராத ஒரு கணத்தில் அதனை அறுத்தெறிந்து மேலெழும்பியது போன்றதொரு நிகழ்வு. தன்னிடம் இப்படி ஒரு உள்ளுறை ஆற்றல் இருப்பது கண்டு வியப்புற்ற சமூகம், இது நனவுதானா என்று தன்னைத்தானே கிள்ளிப்பார்த்து உறுதி செய்து கொண்ட ஒரு தருணம்.

போராட்டமென்றும் கொண்டாட்டமென்றும் பலவாறாக விளக்கப்படுகின்ற மெரினா எழுச்சி என்பது தனியொரு போராட்டமல்ல. இது ஒரு உணர்வெழுச்சித் தருணம். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை (mood). ஒரு நீண்ட நிகழ்ச்சிப்போக்கில்தான் இந்த மனநிலையை வந்தடைந்திருக்கிறது தமிழகம். எனினும், வெடித்துக் கிளம்பாமல் குக்கர் குண்டு போல தமிழகத்தை அழுத்திக் கொண்டிருந்தது இரும்புப் பெண்மணியின் சர்வாதிகாரம். இரும்புக் குண்டு அகன்றிருக்கவில்லையெனில், மக்கள் போராட்டத்தால் அது அகற்றப்பட்டிருக்கும்.

000

ல்லிக்கட்டு என்பது, காவிரி, முல்லைப்பெரியாறு, கூடங்குளம், மீதேன், கெயில், ஜி.எஸ்.டி, நீட் போன்றவற்றோடு  ஒப்பிடுகையில், ஒரு ‘ஆபத்தில்லாத’ பண்பாட்டுக் கோரிக்கை. ஆளும் வர்க்கத்தினரே கூட அங்கீகரிக்கும் ஒரு கோரிக்கை. பீட்டா என்ற அரூபமான அந்நிய சக்தியை எதிரியாகக் காட்ட முடிவதாலும், கிறித்தவ என்.ஜி.ஓ. சதி என்று பேசுவதற்கான வாய்ப்பு இருப்பதாலும், மோடியின் காலைக் கையைப் பிடித்தாவது சாதித்துவிட இயலும் என்ற நம்பிக்கை இருந்ததனாலும் இக்கோரிக்கையைத் தமிழக பாரதிய ஜனதா தனது கையில் எடுத்துக் கொண்டது.

காவிரி போன்ற பல பிரச்சினைகளில் மோடி அரசு தமிழகத்துக்கு இழைத்த துரோகத்தை மறைப்பதற்கும், “இந்துப் பண்பாடு” எடுபடாத தமிழகத்தில், தன்னை தமிழ்ப் பண்பாட்டின் காவலனாகக் காட்டிக் கொள்வதற்கும் இதைவிட மலிவான வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தினால், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்று ஒன்று நடந்தால் அதன் பெருமை மோடியை மட்டுமே சாரும்” என்று அடித்துப் பேசிக்கொண்டிருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். நடக்காமல் போனால் அதற்கும் மோடிதான் அடிவாங்க வேண்டியிருக்கும் என்று சிந்திப்பதற்கு, அதிக மூளை தேவையில்லை. என்றாலும் பொன்னார் அப்படி சிந்திக்கவில்லை. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை வீரவசனம் பேசுவதற்குத் தோதான “அடையாளக் கோரிக்கை” என்பதால், வறட்சி, காவிரி முதலான பிரச்சினைகளைக் காட்டிலும் ஜல்லிக்கட்டு அவர்களது கைக்கு அடக்கமானதாக இருந்தது.

தமிழகமெங்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணத்துக்கும் தள்ளப்பட்டு வந்த சூழலில், விவசாயத்தின் அழிவு, காவிரி உரிமை, நீர் மேலாண்மை, வறட்சி நிவாரணம் ஆகியவையே தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளாக இருந்தன. “உழவன் வீட்டில் இழவு – உனக்கும் எனக்கும் எதற்குப் பொங்கல்?” என்ற முழக்கத்துடன் பொங்கலை கருப்பு நாளாக கடைப்பிடிக்கும்படி அறைகூவல் விட்டிருந்தது “மக்கள் அதிகாரம்”.

இத்தகைய சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் ஒப்பீட்டளவில் கையாள்வதற்கு எளியது என்று மத்திய, மாநில அரசுகள் கணக்குப் போட்டிருக்கலாம். மெரினாவில் கூட்டம் கூடவிடாமல் தொடக்கத்திலேயே அரசும் போலீசும் தடுக்காததற்கு சசிகலா – பன்னீர் அதிகாரப்போட்டி என்பது உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தப் போராட்டத்தை அதன் தொடக்க நாட்களில் அனுமதித்ததற்கும், பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதியதற்கும் ஆளும் வர்க்கத்திடமும் அதிகார வர்க்கத்திடமும் பல கணக்குகள் இருந்திருக்கும். பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் காளையும் கூட அவிழ்த்து விடப்படுகிறது. எனினும், மெரினாவில் “காளை” தப்பிவிட்டது.

இதனைச் சாவி கொடுத்து இயக்கப்பட்ட போராட்டம் என்று புரிந்து கொள்வது அபத்தமானது. மக்களின் சீற்றத்துக்கான தூண்டுதல்கள்தான் போராட்டத்தின் நெம்புகோல்களாக இருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களில் காளை வளர்ப்போரிடமும் ஜல்லிக்கட்டு வீரர்களிடமும் போலீசு கெடுபிடி செய்தது. “மாடுகளை அவிழ்க்க மாட்டோம்” என்று எழுதி வாங்கியது. “மோடி அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று வீர விளையாட்டுக் குழு தலைவர்களும் கட்சிகளும்  வழக்கம்போல புலம்பினார்கள். ஆனால், அவசரச் சட்டத்துக்காக வழக்கம்போல மக்கள் காத்திருக்கவில்லை என்பதுதான் மாறிவிட்ட புதிய நிலைமைக்கு அறிகுறியாக இருந்தது.

மடிப்புக் கலையாத வெள்ளுடையுடன், வெயில் படாத ஷாமியானாக்களின் கீழ், வரிசை குலையாத நாற்காலிகளில் அமர்ந்து கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, எல்லா இடங்களிலும் தடையை மீறி மக்கள் நடத்திய ஜல்லிக்கட்டுகள் தமிழகமெங்கும் புழுதி கிளப்பின. குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, அதன் உண்மையான பொருளில், தமிழகம் முழுவதன் கோரிக்கையாக உருவெடுத்து விட்டது. சேலத்திலும் மதுரையிலும் ரயிலைப் பிணையக் கைதியாகப் பிடித்தார்கள் மாணவர்கள். ஜல்லிக்கட்டு டில்லிக்கட்டாக மாறத் தொடங்கிவிட்டது.

000

“விவசாயிகள் துயரத்துக்காகப் போராடாத தமிழ்ச்சமூகம் ஜல்லிக்கட்டுக்காகப் போராடும்போது அதனை ஆதரிப்பதா?” என்றொரு கேள்வி இதனையொட்டி எழுப்பப்படுகிறது. ஒரு பிரச்சினையை மற்றொன்றுடன் எதிர்நிலைப்படுத்தி ஒப்பீடு செய்து எடை போட்டுப் பார்க்கும் இந்தப் பார்வை, பல சந்தர்ப்பங்களில் அறிவியல் வகைப்பட்ட அணுகுமுறையாக இருப்பதில்லை.

சாதி, மதம், மொழி, இனம், பாலினம், வர்க்கம் – எனப் பலவாறாகப் பிளவு பட்டுள்ள இந்திய சமூகத்தில், ஒன்றைப் பேசும்போது “இன்னொன்றை ஏன் பேசவில்லை” என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கவியலாது. இது, இந்தச் சாதிய சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் ஒரு கசப்பான எதார்த்தம். ஒன்றின் வழியாக இன்னொன்றிற்கு மக்களை எப்படி இட்டுச் செல்வது என்ற கோணத்தில்தான் இதற்கு நாம் விடை காண வேண்டும்.

இதனை வேறு ஒரு கோணத்தில் பார்ப்போம். அரசு, போலீசு, நீதிமன்றம், கட்சிகள் என்று பல்வேறு முனைகளிலும் வெவ்வேறு விதமாகத் தாக்கப்படும் மக்கள் குமுறிக் கொண்டுதானிருக்கிறார்கள். காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதால் மோடி மீது வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள். பண மதிப்பழிப்பு காரணமாக ஆத்திரமடைந்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றுக்காகவும் சிலர் போராடுகிறார்கள், பலர் போராடாமல் இருக்கிறார்கள்.

இப்பிரச்சினைகள் அனைத்துக்குமான காரணத்தை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள முடிந்தவர்கள், இவை அனைத்துக்குமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அவ்வாறு அறிவுபூர்வமாக ஆய்வு செய்வதில்லை. இருப்பினும், அவர்களுடைய மனதில் குமுறிக் கொண்டிருக்கும் கோபம், அவர்களுடைய அரசியல் உணர்வுக்குப் பொருத்தமான பிரச்சினையில், பொருத்தமான தருணத்தில் கருத்தாய் உருவெடுக்கிறது. போராட்டமும் பொருத்தமானதொரு வடிவத்தை எடுக்கிறது.

வாழ்க்கையிலும் இது இப்படித்தான் தொழிற்படுகிறது. ஒரு பெண் மணவிலக்கு என்ற முடிவுக்கு வருவதற்கான குறிப்பிட்ட சம்பவத்தைத் தனியே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், அது அற்பமானதாகத் தோன்றக்கூடும். ஆனால் அது “அச்சை முறிக்கின்ற மயிற்பீலி” யாக இருக்கும். இதய நோயாளியாக அறியப்பட்ட ஒருவரது மரணம் மாரடைப்பினால்தான் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுபூர்வமானதல்ல. ஒரு சாதாரணக் காய்ச்சல் கூட அந்த நோயாளியின் மரணத்திற்கான பாதையைத் திறந்து விடலாம்.

2013-இல் வங்கதேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த “ஷாபாக் எழுச்சி”யை எடுத்துக் கொள்வோம். அங்கே அடிப்படைவாதிகளின் அட்டகாசம் தொடங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. பல பகுத்தறிவாளர்கள் “கேட்பாரின்றி” கொல்லப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த அநீதியைக் “கேட்பார்” வருவதற்கு ஒரு அழைப்பு தேவைப்பட்டது. பகுத்தறிவாளர்கள் விடுத்த அழைப்புக்கு மக்கள் வரவில்லை. 1971-இல் பாக். இராணுவத்துடன் சேர்ந்து வங்க மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்திய ஜமாத் ஏ இசுலாமி அமைப்பின் தலைவன் அப்துல் காதர் முல்லாவுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று நாடே எதிர்பார்த்தது.  ஆனால் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவுடனே, போலீஸ் வேனில் இருந்தபடி “வெற்றி” என்று அலட்சியமாக இரண்டு விரல்களைக் காட்டினான் அந்தக் கிழவன். அடுத்த கணமே ஷாபாக் மக்கள் எழுச்சி தொடங்கியது.

“நம் ஊரில், நம்முடைய மாட்டை வைத்து மாடு பிடி நடத்தக் கூடாது என்று உத்தரவு போடுவதற்கு மோடி யார்?” என்ற கோபம், தமிழகத்தின் ஒரு சாதாரணக் குடிமகனுக்கு ஏற்பட்ட உணர்வு. இந்தக் கோபத்தைக் கொஞ்சம் உரசிப் பார்த்தால் அதன் அடித்தளத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, மீதேன், கூடங்குளம், கெயில், நியூட்ரினோ, நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ. திணிப்பு, இந்தி-சமஸ்கிருத திணிப்பு, மீனவர் பிரச்சினை – என டில்லிக்கு எதிராக ஆத்திரம் கொள்வதற்கான நியாயம் எல்லாத் தரப்பு மக்களிடமும் இருந்தது. பண மதிப்பழிப்பு தோற்றுவித்த பேரழிவும், பொங்கல் விடுமுறைப் பிரச்சினையும் மோடியின் மீது தாங்கொணாக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. போதாக்குறைக்கு “மோடி பொங்கல், மோடி ஜல்லிக்கட்டு” என்று, வாயால் வடை சுடுபவரான மோடிக்கு, தன் வாயாலேயே குழி வெட்டி வைத்திருந்தார் பொன்னார்.

000

மிழகம் எனும் கோட்டைக்குள் நுழைவதற்கு ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஒரு “டிரோஜன் காளை”யாகப் பயன்படுத்த முனைந்தது பாரதிய ஜனதா. ஆனால், இந்த டிரோஜன் காளைக்குள்ளிருந்து குதித்துக் கிளம்பிய முழக்கங்கள் மோடியையும், இந்து தேசியத்தையும் மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களையும் ஓட்டுக் கட்சிகளையும் நீதிமன்றத்தையும் அதிகார வர்க்கத்தையும் தாக்கின.

“தமிழன்டா” என்ற முழக்கம், டில்லிக்கு எதிரான முழக்கமாக, தமிழ்ப் பெருமிதத்தின் வெளிப்பாடாக, இந்த அரசதிகாரத்தின் மீதான இளைஞர்களின் வெறுப்பாக … என்று ஒரே நேரத்தில் பலவிதமான அர்த்தங்களைக் கொடுத்தது. எனினும், எல்லா அர்த்தங்களும் சங்கப் பரிவாரத்துக்கு மட்டும் அனர்த்தமாகவே இருந்தது. புரட்சிகர – ஜனநாயக அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் பகுத்தறிவாளர்களும் விதைத்த விதைகள் மெரினாவின் மணற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கத் தொடங்கி, யாரும் எதிர்பார்த்திராதவொரு கணத்தில் திரும்பிய திசையெல்லாம் சில்லென்று பூத்தன.

முகநூல்கள் “முகமற்ற” நூல்களாயின. தன்னை முன்நிறுத்துவதற்காக முன்தள்ளப்பட்ட சமூக ஊடக வடிவங்கள், சமூக உள்ளடக்கத்தை முன்நிறுத்தின. தனக்கான நுகர்பொருளைத் தேடித் தெரிவு செய்ய அலைபாய்ந்தவர்கள், “தமக்கான” முழக்கங்களிலிருந்து “தனக்கான” முழக்கமொன்றைத் தெரிவு செய்து கையில் ஏந்துவதற்காக அலைபாய்ந்தார்கள். தனி மனிதன் பெருந்திரளில் கரைவதும்,  தன்னைத் தனித்து அடையாளப்படுத்திக் கொள்வதும் முயங்கிக் கலந்த விசித்திரத் தருணமாய் விரிந்திருந்தது கடற்கரை.

எந்தப் பாடலுக்காக கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டாரோ, அந்த “ஊருக்கு ஊரு சாராயம்” என்ற பாடலை மெரினா கடற்கரை மேடையில் மீண்டும் மீண்டும் பாடச் சொன்னார்கள் மக்கள்.  தனியார்மயத்துக்கும் இந்து மதவெறிக்கும் பெப்சி-கோக்குக்கும் எதிரான பாடல்களைக் கொண்டாடினார்கள். பன்னீர், சசிகலா, சு.சாமி, மோடி போன்றோரை எள்ளி நகையாடும் பாடல்களுக்கு சன்னதம் கொண்டவர்கள் போல் ஆடினார்கள். “ஜல்லிக்கட்டு பிரச்சினையைத் தவிர மற்றவற்றைப் பேசக்கூடாது” என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்கி, தோழர் ராஜு (மக்கள் அதிகாரம்) ஆற்றிய உரையைக் கூர்ந்து கவனித்தார்கள். எண்ணற்றோர் பேச வாய்ப்பு கேட்டு பொறுமையாகக் காத்திருந்தார்கள். மெரினாவெங்கும் இதுவரை மேடையேறாதவர்கள் ஏறினார்கள் என்று கூறலாம். மேடை என்பதே அகன்றது என்றும் கூறலாம்.

“யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேச முடிந்தவரை பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காட்சி கண் கொள்ளாக் காட்சி. நாடகக் கூடங்களில், பள்ளிகளில், சோவியத் கூட்ட மண்டபங்களில், தொழிற்சங்கங்களில், ரயில்களில், டிராம்களில் எங்கும் பேச்சுப் பெருவெள்ளம், விவாதம்” .. என்று 1917 ரசிய நவம்பர் புரட்சியின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்களை” பரவசத்துடன் விவரிப்பார் ஜான் ரீடு. ஒரு நூற்றாண்டுக்குப் பின் மெரினாவில் அது நிகழ்ந்தது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிரிட்டனிலும் அது நிகழ்ந்திருக்கிறது. திருச்சபைக்கு எதிராக பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தை மார்க்ஸ் விவரிக்கிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் மீது கிறித்தவ நல்லொழுக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு 1855-இல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த சட்டம், ஞாயிற்றுக் கிழமைகளில் பொழுதுபோக்கு கூடங்கள், பீர் விடுதிகள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்தது. இதற்கெதிராக பல்லாயிரக் கணக்கான தொழிலாளிகள் நடத்திய போராட்டம், மாட்சிமை தங்கிய மகாராணியையும் திருச்சபையையும் எள்ளி நகையாடியதையும், அந்தப் பேரணியில் திரண்ட தொழிலாளர்கள் கிளப்பிய ஊளைச் சத்தம், விசில், கூச்சல்களையும் களிப்புடன் விவரிக்கிறார் மார்க்ஸ். அந்தக் கிளர்ச்சியை “அநாகரிகமானது, அவமானகரமானது, சட்ட விரோதமானது, ஆபத்தானது” என்றெல்லாம் சாடி எழுதிய பிரபுக்குல எழுத்தாளரையும் எள்ளி நகையாடுகிறார். மோடியின் சூப்பர்மேன் பிம்பத்தில் ஊசியைக் குத்திய மாணவர்களின் முழக்கங்கள், மோடியின் “கடி” டயலாக்குகளால் புண்பட்டு நொந்திருந்த மக்களுக்கு இதமாக அமைந்தன.

மாபெரும் மக்கள் எழுச்சிகள் கொண்டாட்டமாக, போராட்டமாக, கல்விக்கூடமாக … அனைத்துமாகவும்தான் பரிணமிக்கின்றன. தேச எல்லைகளும் நூற்றாண்டுகளும் கடந்து அவற்றிடையே தெரியும் ஒற்றுமை நம்மை கர்வம் கொள்ள வைக்கிறது. எதிரிகளின் எதிர்வினையும் கூட அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒத்ததாகவே இருக்கிறது.

பேரணியில் சென்ற தொழிலாளிகளுக்கு தேவனின் ஆசீர்வாதத்தை வழங்கும் பொருட்டு, குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்த ஒரு சீமாட்டி பைபிள் புத்தகங்களை விநியோகித்ததாகவும், “அதை உன் குதிரைக்குக் கொடு” என்று தொழிலாளிகள் கூச்சலிட்டதாகவும் எழுதுகிறார் மார்க்ஸ். மெரினாவிலும் கூட கூட்டத்தினர் மத்தியில் தேசியக் கொடியைக் கொண்டு வந்து ஆட்டினார்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். அது யாருக்கும் தேசபக்தியை உருவாக்கவில்லை. மாறாக, தேசியக் கொடிக்கு எதிரான ஆத்திரத்தையே உருவாக்கியது.

கருப்பு சட்டையை எதிர்ப்பின் குறியீடாகத்தான் போராடியவர்கள் அணிந்திருந்தனர். ஆனால் பா.ஜ.க.வுக்கு அது “பெரியார் கலராக” தெரிந்திருக்கிறது. கடற்கரை முழுதும் செல்பேசி ஒளியை அசைத்தது போல, குடியரசு தினத்தன்று இந்தக் கூட்டம் சட்டையைக் கழற்றி “இருட்டை” அசைத்தால், தெற்கே ஒரு காஷ்மீர் உருவான தோற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய பா.ஜ.க. வினர், போலீசு வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு, குடியரசு தினப் புறக்கணிப்பில் தமிழகம் காஷ்மீரை விஞ்சுமாறு செய்தனர்.

000

தான் மட்டும் இல்லாவிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து நாடே செயலற்று நின்றுவிடும் என்று கருதிக் கொண்டிருந்த போலீசையும் அரசு எந்திரத்தையும் மெரினா போராட்டம் நிலைகுலைய வைத்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, உணவு-தண்ணீர் விநியோகம், துப்புரவுப் பணி உள்ளிட்ட அனைத்தையும் முன்வந்து செய்தார்கள் இளைஞர்கள். அவர்களில் கணிசமானோர் பெண்கள். இதுநாள்வரை “தவிர்க்க இயலாதவர்கள்” என்று தாங்களே நம்பிக்கொண்டிருந்த போலீசார் தேவையற்றவர்கள் என்பதை மக்கள் தம் அனுபவத்தில் உணர்ந்தார்கள். அநேகமாக மெரினாவில் மைக்கைப் பிடித்த அனைவரும் பலத்த கைதட்டல்களுக்கிடையே இந்த உண்மையை உரைத்தார்கள். இனம்புரியாத ஒரு கர்வம் மக்களைப் பற்றிக்கொண்டு விட்டது. சமூகத்தின் மீது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தாங்கள் தவிர்க்கவியலாதவர்கள் என்று நிரூபிக்கும் வெறியை இது போலீசாரிடம் தோற்றுவித்திருக்க வேண்டும்.

சினிமாக் கழிசடைகளால் சிதைக்கப்பட்ட ஆண்-பெண் உறவின் மாண்பை மெரினா மீட்டது. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தனர். பேசினர், பாடினர், ஆடினர். பறை இசையின் தாள கதிக்கு ஆண்களும் பெண்களும் ஆடிக்கொண்டிருக்க, அந்தச் சூழ்நிலையால் உந்தப்பட்ட பர்தா அணிந்த ஒரு இசுலாமியப் பெண், தன் கணவனின் கையைப் பற்றியபடியே வெட்கத்துடன் மெல்ல நடனமாடிய காட்சி மறக்கவொண்ணாதது. எந்த இசைக்கருவியை தீண்டாமைக்குரிய குறியீடாக பார்ப்பனியம் ஒதுக்கி வைத்திருந்ததோ, அந்தப் பறையின் தாளத்துக்கு தமிழ்ச் சமூகமே தன்னை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தது.

ஒரு மக்கள் திரள் எழுச்சி இயல்பிலேயே சுயநல மறுப்பைத் தனது பண்பாடாக்கிக் கொள்கிறது. “சுயநலன் பேணுதல்தான் மனிதனின் மாற்றவொண்ணாத இயல்பு” என்கிற முதலாளித்துவக் கருத்து, மக்கள் மனதிலிருந்து நழுவி மெரினாவில் மணற்பரப்பில் வீழ்ந்து மிதிபட்டுக் கொண்டிருந்தது. தம்மால் இயன்ற அளவு உணவோ தேநீரோ தண்ணீரோ பழங்களோ கொண்டு வந்து, சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப் போன்ற வாஞ்சையுடன் முகம் தெரியாத அந்தக் கூட்டத்துக்கு விநியோகித்து விட்டு, நன்றி என்ற ஒரு சொல்லைக்கூட எதிர்பார்க்காமல் சென்று கொண்டிருந்தார்கள் பல எளிய மனிதர்கள்.

கையிலிருந்த உணவுப் பொட்டலங்களை உணவு கிடைக்காதவர்களின் கையில் திணித்து விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள் சில மாணவர்கள். “புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது, புவியை நடத்து, பொதுவில் நடத்து” என்று ஆணையிட்ட பாரதிதாசனின் சிலைக்குக் கீழே, யாரோ குவித்திருந்த  வாழைப்பழங்களையும் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பார்த்தபடியே பலர் கடந்து சென்றனர். தேவைப்படாதவர்கள் நெருங்கவில்லை. தேவைப்படுவோர் தேவைக்கு மேல் ஒன்றைக் கூட எடுக்கவில்லை.

“பாரடா உனது மானிடப் பரப்பை” என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் மேடையில் இசைக்கப்பட்டபோது, அடிமை மனநிலையை உதிர்த்திருந்த தமிழகம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒளிர்ந்த கைபேசி விளக்குகளால் “மேதினிக்கு ஒளி” செய்து கொண்டிருந்தது. ஜனநாயகத்துக்கான மக்கள் திரள் போராட்டம், பல பத்தாண்டு கருத்துப் பிரச்சாரம் சாதிக்க முடியாதவற்றைச் சாதிக்கும். புதிய மனிதர்களையும் புதிய விழுமியங்களையும் உருவாக்கும் என்ற உண்மையை மெரினா நிரூபித்தது. மீனவர்களும், குடிசைவாழ் மக்களும், அலங்காநல்லூரின் விவசாயிகளும் தோழமைக்கும் வீரத்துக்கும் புதிய இலக்கணத்தை தமிழ்ச் சமூகத்திற்கு அறியத் தந்தார்கள்.

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான குறியீடாக மாட்டைப் பயன்படுத்தியது சங்க பரிவாரம். சமூகத்தை ஒன்றுபடுத்துவதற்கான குறியீடாக மாட்டை நிறுத்தியது தமிழ் மக்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். “உன் கோமாதாவுக்கு எதிராகக் எங்களது காளை. உன் வழிபாட்டுக்கு எதிராக எங்களது விளையாட்டு. உன் ஆதிக்கத்துக்கு எதிராக எங்கள் சகோதரத்துவம்!” – இதுதான் தமிழகம் விடுத்த செய்தி.

000

“கலைந்து செல்லுங்கள்!” என்று கூறியவுடனே மக்கள் கூட்டம் கலைந்து சென்றுவிடும் என்று அரசு எண்ணியது. “முடியாது!” என்று சொன்னவர்கள் “தீவிரவாத, பிரிவினைவாத” அமைப்பினராக இருந்திருந்தால் போலீசார் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். ஆனால், “சட்ட நகலைக் காட்டு; படித்துப் பார்த்துவிட்டு சொல்கிறோம்!” என்ற பதில் காக்காய் கூட்டம் என்று அவர்கள் கருதியிருந்த மக்களிடமிருந்து வந்தது. தங்களுடைய அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தைரியம் மக்களுக்கு வந்துவிட்டது என்ற எதார்த்தத்தை போலீசால் சீரணிக்க முடியவில்லை.

மோடி அரசின் ஆணவம், உச்ச நீதிமன்றத்தின் அலட்சியம், மாநில அரசின் கையாலாகாத்தனம் ஆகிய அனைத்தையும் பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் கண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டறிவு தோற்றுவித்த உள்ளுணர்வுதான் “நம்பாதே” என்று அவர்களை எச்சரித்தது. கடலை நோக்கிச் சென்ற சில ஆயிரம் மக்களை ஒரு குழுவோ, சில குழுவினரோ தலைமை தாங்கி அழைத்துச் செல்லவில்லை. இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மைதான் அவர்களுக்குத் தலைமை தாங்கியது. இந்த உண்மையைக் காண விரும்பாத ஊடக அறிவாளிகள் சதிக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துப் பரப்புகிறார்கள்.

ஊடக வித்தகர்கள், போலீசு அதிகாரிகள், சங்க பரிவாரத்தினர் மற்றும் ஆதி – லாரன்சு போன்ற மொக்கைகள் – இவர்களுடைய மூளைகள் வியக்கத்தக்க விதத்தில் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. “தங்களது ரசிகர்களின் அறிவு தங்களுடையதைவிட மேம்பட்டதாக உயர முடியாது” என்று ஆதியும் ஆர்.ஜே. பாலாஜியும் கருதியிருப்பார்கள். அவர்கள் அரசின் கூற்றை நம்பச் சொன்னார்கள். மாணவர்களோ நம்ப மறுத்து அவர்களை விரட்டினார்கள். ஒரே வாரத்தில் தாங்கள் செல்லாக்காசாக்கப்பட்டதற்குப் பின்னால் யாரேனும் சதி செய்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கற்பித்துக் கொண்ட நியாயம்.

ஊடக அறிவாளிகளின் கோணமும் ஏறத்தாழ இதுதான். அன்றாடம் அரசியலில் உழலும் தாங்களே “வயிற்றால் சிந்திப்பவர்களாக” இருக்கையில், வெறும் ஒரு வார காலம் மட்டுமே அரசியலுக்கு அறிமுகமான நடுத்தர வர்க்கத்தினர் தம்மைவிட மேம்பட்ட முறையில் எங்ஙனம் சிந்திக்க இயலும்? சதிகாரர்கள்தான் மூளைச்சலவை செய்து அவர்களை தைரியசாலிகளாக மாற்றியிருக்க வேண்டும் என்பது ஊடக வித்தகர்கள் கற்பித்துக் கொண்ட நியாயமாக இருந்திருக்கும்.

பா.ஜ.க.வினரைப் பொருத்தவரை, மோடியைத் தமிழகமே கழுவி ஊற்றியது என்ற உண்மையை அவர்கள் மறைக்கவும் மறக்கவும் விரும்பினார்கள். “தேசவிரோதிகளின் சதி” என்று கூச்சலிட்டதன் வாயிலாகத் “தீவிரவாதிகளையும் பிரிவினைவாதிகளையும்” ஒடுக்குவதற்கான முகாந்திரத்தை உருவாக்கியது மட்டுமல்ல, “மோடியை கழுவி ஊற்றியது தமிழக மக்கள் அல்ல, தீவிரவாதிகள்தான்” என்று இருட்டில் தனியே வழி நடப்பவனைப் போல தமக்குத்தாமே சத்தமாகப் பாடிக் கொண்டார்கள்.

போலீசையும் உளவுத்துறையையும் பொருத்தவரை “தீவிரவாதிகளுக்கு மட்டுமே உரியது” என்று அவர்கள் கருதுகின்ற அரசியல் முழக்கங்களை இலட்சோப லட்சம் தமிழ் மக்களும் தம் சொந்த முழக்கமாக எடுத்துக் கொண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை. “போலீசின் அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள்” என்ற எதார்த்தத்திற்கு அவர்களால் முகம் கொடுக்கவும் இயலவில்லை. அவர்களுக்கும் “தீவிரவாதிகளின் சதி” தேவைப்பட்டது.

இது தோல்வியடைந்துவிட்ட, அதே நேரத்தில் அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்ற ஆளும் வர்க்கத்தின் உளவியல். மெரினாவில் மக்கள் புரட்சிக்காரர்களாக போராட்டக் களத்துக்கு வரவில்லை. அந்த மாபெரும் மக்கள் திரளுக்கு யாரோ சில புரட்சிக்காரர்கள் தலைமை தாங்கி வழிநடத்தவும் இல்லை. டில்லியின் மீதான வெறுப்பும், இந்த அரசமைப்பின் மீதான அவநம்பிக்கையும்தான் மக்களை வழிநடத்தியது. அவர்களில் பலருக்கு இந்த அரசமைப்பின் மீது மிச்சமிருந்த நம்பிக்கையையும் தகர்க்கும் பொறுப்பை போலீசு ஏற்றுக்கொண்டது. “பல சந்தர்ப்பங்களில் போலீசுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துகிறது” என்பார் லெனின்.

சென்னை-மெரினாவில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு சீந்துவாரின்றி முடிந்தது.

அது உண்மைதான். எனினும், அவநம்பிக்கையும் எதிர்மறை அனுபவங்களும் மட்டுமே சமூக மாற்றத்துக்கான தூண்டுதல்களாகிவிடுவதில்லை. அவற்றிலிருந்து நேர்மறையான கண்ணோட்டங்கள் தானாகவே பிறந்து விடுவதுமில்லை. சில நேரங்களில் இவை கிளர்ச்சி மனோபாவத்தைத் தூண்டுகின்றன என்ற போதிலும், பல நேரங்களில் சோர்வடைந்து நிலவுகின்ற அரசமைப்பிடம் தஞ்சமடைகின்றன.

நிலவுகின்ற அமைப்பில் தங்களுடைய நிலை குறித்து ஒவ்வொரு பிரிவு மக்களும் – ஒரு விவசாயி, மாணவன், மீனவன், ஐ.டி. ஊழியன், தொழிலாளி – வெறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அத்தகையதொரு வெறுப்புதான் ஜல்லிக்கட்டுக்குத் தொடர்பற்றவர்களையும் மெரினாவை நோக்கி ஈர்த்திருக்கிறது. மேலோட்டமானதொரு பார்வையில் இந்த வெறுப்பு, அரசமைப்புக்கு எதிரான வெறுப்பு போன்றதொரு தோற்றத்தைத் தரக்கூடும். அது தோற்றம் மட்டுமே.

மெரினாவின் உணர்வெழுச்சி என்பது தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை. மனநிலைகளைச் சார்ந்து ஒரு தனிமனிதனால் கூடத் தன் வாழ்க்கையின் திசையை நிர்ணயித்துக் கொள்ளவியலாது எனும்போது, சமூக மாற்றத்திற்கு “மனநிலை”யை எந்த அளவிற்கு சார்ந்திருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மெரினாவின் மக்கள் திரள் எத்தனை சமூக – அரசியல் பிரச்சினைகளைப் பேசிய போதிலும், அதற்கு ஒரு அரசியல் திசையோ, அமைப்போ இல்லை. அப்படி ஒன்று இல்லாமலிருப்பதே தமது பலம் என்று பலரும் கருதிக் கொண்டனர். இல்லாமலிருத்தல் என்பதன் பொருள் நிலவுகின்ற அமைப்பிடம் சரணடைதல் என்பதேயாகும்.

“சரணடைய முடியாது” என்ற புள்ளியில்தான் தொடங்கியது இந்தப் போராட்டம். மாநில அரசு, மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் என்று பந்தாடப்பட்ட ஜல்லிக்கட்டு பிரச்சனையில், தமிழக மக்களின் எழுச்சி அரசமைப்பையும் அதன் அதிகாரத்தையும் பணிய வைத்தது. எனினும், அரசமைப்பு அப்படியேதான் இருக்கிறது.

தமிழ் மக்களின் மீள் வருகைக்காக மெரினா காத்திருக்கிறது.

-மருதையன்.
புதிய ஜனநாயகம் பிப் 2017

ஜல்லிக்க்கட்டு தொடர்பாக 2008-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தையக் கட்டுரைக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழுவின் மறு பரிசீலனை விளக்கம்.

ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?

தினமணி வைத்தி- புதிய தலைமுறை மாலன் : போயஸ் பூசாரிகள் அன்றும் இன்றும்

6

வினவு குறுஞ்செய்திகள்

தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் – போயஸ் தோட்டத்து  பூசாரி அன்றும் இன்றும்

தினமணி வைத்தியநாதன்

ன்று ஜெயா சசி கும்பலின் சொத்துத் திருட்டு வழக்கில் தீர்ப்பு வந்ததும் அ.தி.மு.க அடிமைகள் சாலைகளில் குத்தாட்டம் போட்டனர். ஊடக அடிமைகளோ தலையங்கங்களில் எழுத்தாட்டம் போட்டனர். அதில் தினமணியின் வைத்தி முதன்மையானவர். அன்று அவர் எழுதிய தலையங்கத்தின் (12-05-2015) இறுதியில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளைப் பாருங்கள்.

//இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29-09-2014-ல் வெளியான “தினமணி’ தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

“ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும் தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை” என்பது தான் அது.

இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!”//

தினமணி (மே 5, 2015 தலையங்கம்):

இன்று தினமணி வைத்தியின் தலையங்கம் “சட்டம் கடமையைச் செய்யட்டும்!” அதிலிருந்து சில மேற்கோள்கள்:

இன்று,

//நாட்டில் ஊழல் மேலிருந்து அடிமட்டம் வரை புரையோடிப் போய்விட்டிருக்கிறது என்றும், சட்டம் பண பலம் படைத்தோரையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் எதுவும் செய்து விடாது என்றும் பரவலாகப் பேசப்பட்டாலும், யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே ஜெயலலிதாவே தண்டிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார் என்பதும், இப்போது மேல்முறையீட்டிலும், உச்சநீதிமன்றம் அந்த தண்டனையை உறுதிப்படுத்தி இருக்கிறது என்பதும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகள்.

ஜெயலலிதா மறைந்து விட்டார் என்பதால் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் செயல்படுத்தாமல் விட்டு, ஏனைய மூன்று குற்றவாளிகளான வி.கே. சசிகலா, ஜெ. இளவரசி, வி.என். சுதாகரன் ஆகிய மூவரும் எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இப்போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத் தான் இருக்கிறது. இப்படியொரு அவமானத்தை எதிர்கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லது தான் என்று கூறத் தோன்றுகிறது.//

தினமணி ( பிப் 15, 2017):

பரவாயில்லை தினமணி வைத்தியாவது உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தாலும், விசுவாசம் காரணமாக ஜெயாவின் சிறை வாசம் போகும் அதிர்ஷடம் அவரது மரணம் காரணமாக மறைந்து விட்டது என்று மனதுக்குள் ஆர்ப்பரிக்கிறார்.

வைத்தி – தினமணியின் ஆசிரியர், போயஸ் தோட்டத்தின் ஆஸ்தானப் பூசாரி!

புதிய தலைமுறை மாலன் – போயஸ் தோட்டத்து ஊடக பூசாரி

புதிய தலைமுறை மாலன்

குமாரசாமி தீர்ப்பு வந்ததும் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் வாடி என் ராசாத்தி பாட்டைப்போட்டு கொண்டாடியவர் மாலன். அன்று முழுவதும் அவர் ஃபேஸ்புக்கில் ஏகப்பட்ட பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டார். அடுத்த நாளும் அவரது கொண்டாட்டம் தொடர்ந்தது. அதில் ஒன்று கீழே:

மாலன் நாராயணன் may 12 2015 , 9:23am

குன்ஹா எங்கு தவறு செய்தார் என்பதை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விளக்கியுள்ளார்:

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக் கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது.

திருமண செலவு:

சுதாகரன் திருமண செலவு ரூ 3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்தச் செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

நன்றி: இன்றைய தினத்தந்தி

குன்ஹா தீர்ப்பு வெளியான போதே அது சட்டத்தின் பார்வையில் பிழைகள் கொண்டது எனக் கூறியிருந்தேன். என் கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாலன் (மே 13 2015):

இன்று……

குன்ஹா தீர்ப்பு பிழை என்று அன்றே கூறியதாக மார் தட்டும் மாலன் இன்று என்ன கூறியிருக்கிறார்? அன்று போல பதிவுகளை தொடர்ச்சியாக மட்டுமல்ல நேற்று முழுவதும் ஒன்று கூட போடவில்லை. இன்று காலையில் ஒன்று மட்டும் வெளியிட்டுள்ளார். அதுவும் ஆங்கிலத்தில்…..

Very many discussions are on FB about the verdict of Jaya’s DA case. But most of them are on the political implications and legal processes. The verdict has a social dimension, which is discussed by Justice Amitava Roy in the supplement

What ought to have been discussed, apart from political and legal fall outs is this supplement ( A brilliant one, though not unfamiliar view. I wish somebody translates into Tamil and publish in FB or elese where. Dinamani? Hindu Tamil?)

Justice Roy says ” the militant dominance of this sprawling evil, that majority of the sensible, rational and discreet constituents of the society imbued with moral values and groomed with disciplinal ethos find themselves in minority, besides estranged and resigned by practical compulsions and are left dejected and disillusioned. A collective, committed and courageous turnaround is thus the present day imperative to free the civil order from the suffocative throttle of this deadly affliction”

Has Tamilnadu finally arrived at this “present day imperative”?

ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்படும் ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிகம் பேர் இந்த தீர்ப்பின் அரசியல் பாதிப்பு குறித்தும், சட்ட நடைமுறை குறித்து மட்டுமே பேசுவது குறித்து வருந்துகிறார் மாலன். என்ன இருந்தாலும் அறிஞர் அல்லவா? தீர்ப்பு இணைப்பில் நீதிபதி அமித்தவா பேசியிருக்கும் கருத்தின் சமூக பரிமாணங்கள் குறித்து பேசுவோம் என்று அதை  தி இந்துவோ இல்லை தினமணியோ மொழிபெயர்க்க வேண்டுமென்று கோருகிறார். சுருங்கச் சொன்னால் நீதிபதியின் கருத்தை “ ஊழல் பிசாசுவின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுதலை செய்ய வேண்டும்” என்று பொருள் கொள்ளலாம்.

அப்படி எனில் பச்சமுத்துவின் அவைப் புலவர் மாலன் போன்ற அறங்கொன்ற அறிஞர்களிடமிருந்து தமிழகம் விடுதலை பெற வேண்டுமே?


கைதி எண் 10711 சில குறிப்புக்கள்:

சசிகலா நடராஜன்

ரப்பன அக்ரகாரா சிறையில் சின்னம்மாவுக்கு கைதி எண் 10711-ம், இளவரசிக்கு கைதி எண் 10712-ம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் எண்ணைக் கூட்டினால் இறுதியில் 1 வருகிறது. அவரது ராசியான எண் என்ன என்று தெரியவில்லை. இருவரும் பெண் கைதிகளின் பிரிவில் பொது சிறையிலேயே அடைக்கப்படுகிறார்கள். மூன்று சேலை, ஒரு குடிநீர் குவளை, ஒரு பெரிய மக், ஒரு தட்டு, ஒரு போர்வை ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும்.

தனக்கு நீரிழவு நோய் மற்றும் ரத்த அழுத்தமும் இருப்பதால் வீட்டுச் சாப்பாடு தவிர வேறு எதுவும் ஒத்துக்கொள்ளாது என்று சிங்கம் தனி நீதிபதியிடம் கோரினாலும் நீதிபதி அவற்றை மறுத்து விட்டார். சின்னம்மாவுக்கு சிறப்புச் சலுகைகள் ஏதும் சிறையில் கிடையாது என்று கன்னட செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறையில் சின்னம்மாவுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வரையில் ம.நடராசன் அங்கேயே டோரா போடுவார் என்று குருவிகள் தெரிவிக்கின்றன.

சிறையில் அன்றாட வேலையாக ஊதுபத்தி தயாரிப்பது, மெழுகுவர்த்தி செய்வது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சின்னம்மாவுக்கு ஒதுக்கப்படும். இதற்கு நாளொன்றுக்கு ரூ.50 ரூபாய் கூலி ஜாஸ் சினிமாசின் ஓனருக்கு வழங்கப்படும்.

சசிகலா கூட வந்த கார்களில் ஐந்து கார்கள் அங்கே இருந்த அதிமுக காரர்களால் தாக்கப்பட்டன. காரணம் சின்னம்மாதான் அம்மாவை 33 வருடங்களாக ஏமாற்றி விட்டாராம்.

இதன்படி பார்த்தால் இரட்டை இலை சின்னம் சசிகலா கும்பலிடமே இருப்பது நல்லது. அப்போதுதான் அந்த சின்னம் தோற்றுவித்திருக்கும் மூடநம்பிக்கை மக்களிடம் ஒழியும். இறுதியில் இரட்டை இலையும் மறையும்.

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்

இணையுங்கள்:

ஏழை இந்தியர்களும் பில்லியனர் இந்தியர்களும் – ஒரு பார்வை

0
billionares in india
இந்தியாவில் பில்லியனர்கள்

ஆக்ஸ்பாம் அறிக்கை: இந்தியா – ஏற்றத்தாழ்வின் இருப்பிடம்

ந்தியாவின் 58 விழுக்காடு சொத்துக்களை இங்குள்ள பெரும்பணக்காரர்களில் ஒரு விழுக்காட்டினர் வைத்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இஃது உலக சராசரியான 50 விழுக்காட்டையும் விட அதிகம். இந்தியாவின் முதல் 57 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 70 விழுக்காடு ஏழை இந்திய மக்களின் சொத்து மதிப்பும் ஒன்றுதான். அதாவது 14,47,200 கோடி ரூபாய் சொத்துக்களை 57 பேர்கள் வைத்திருக்கின்றனர்.  பெருகிவரும் இந்திய சமூக ஏற்றத்தாழ்வின் இழிநிலையை இந்த ஆய்வறிக்கை பறைசாற்றுகிறது.

டாவோசில்(Davos) நடைபெற்ற உலகப் பெரும்பணக்காரர்கள் கலந்து கொண்ட உலகப் பொருளாதார மன்ற (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தில் “99 விழுகாட்டு மக்களுக்கான பொருளாதாரம் (An economy for the 99 per cent)” என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸ்பாம்(Oxfam) என்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதனை வெளியிட்டிருக்கிறது. இப்படி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் இந்த ஏற்றத் தாழ்வு கவலைகள் பொதுவாக கார்ப்பரேட் நன்கொடையுடன், கார்ப்பரேட் நிறுவனங்களை மனிதாபிமான முகத்துடன் காட்டும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. எனினும் அதற்காகவாவது இவர்கள் இந்த உண்மையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.

130 கோடி இந்திய மக்களின் மொத்தச் சொத்துமதிப்பு 2,077 இலட்சம் கோடி ருபாய் என்கிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை. முகேஷ் அம்பானி, திலிப் ஷங்வி மற்றும் அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 பெரும்பணக்காரர்களிடம் மட்டும் 16,61,600 கோடி ருபாய் சொத்து இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு இந்தச் சொத்துக்களை மட்டுமல்ல அவற்றின் பூஜ்ஜியங்களின் எண்ணிக்கையைக் கூட எண்ணுவதற்கு கடினமாக இருக்கும்.

உலகின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 1,71,319 இலட்சம் கோடி ரூபாயாகும். அவற்றில் 4,355 இலட்சம் கோடி ருபாய் பெரும்பணக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது. பில்கேட்சிடம் 5,02,500 கோடியும் ஸ்பெயினின் அமென்சியோ ஒர்தேகாவிடம் (Amancio Ortega) 4,48,900 கோடியும் வாரன் பஃபெட்டிடம் 4,07,360 கோடியும் இருக்கிறது. உலகின் 8 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் உலகின் கடைக்கோடி 50 விழுக்காடு ஏழை மக்களின் சொத்துமதிப்பும் ஒரே அளவிலானதாக இருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சின் சொத்துமதிப்பின் அதிவேக வளர்ச்சி தொடருமாயின் இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லியனராக (670 இலட்சம் கோடி) அவர் இருப்பார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் வெறும் 500 தனிநபர்களிடம் மட்டும் 1,407 இலட்சம் கோடி ருபாய் குவிந்துவிடும். 130 கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

உலகின் பாதிக்கும் மேற்பட்ட வறிய மக்களின் சொத்து மதிப்பானது முன்பு கருதியதை விடக் குறைவானதாகவே இருக்கிறது. சீனா, இந்தோனேசியா, இந்தியா, லாவோஸ், பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் பணக்கார 10 விழுக்காட்டினரின் வருமானம் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்து இருக்கிறது. அதேநேரத்தில் வறிய 10 விழுக்காடு மக்கள் தங்களது வருமானத்தில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக இழந்துள்ளனர்.

பாலினப் பாகுபாட்டின் காரணமாக ஆண்களின் வருமானத்தில் 70-90 விழுக்காடு மட்டுமே ஆசியப் பெண்களுக்குக் கிடைக்கிறது. ஊதியம் வழங்குவதில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பாலின வேறுபாடு இருப்பதாகவும் பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டில் உலக அளவில் இந்தியா ஒரு மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறிகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட உலக ஊதிய அறிக்கை 2016-17-யின் அடிப்படையில் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெண்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மிகக்குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். வெறும் 15 விழுக்காட்டுப் பெண்கள் மட்டுமே அதிக ஊதியம் பெறுகின்றனர். அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களில் குறைவான எண்ணிக்கையில் இருப்பது மட்டுமல்ல கடைக்கோடி இந்தியப் பொருளாதாரத்தில் பாலின அடிப்படையிலான ஊதிய வேறுபாட்டையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இந்நிலை தொடருமாயின் இன்னும் 170 ஆண்டுகள் கழித்துதான் ஆண்களுக்குச் சமமான ஊதியத்தைப் பெண்கள் பெற வாய்ப்பிருக்கிறது

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த பட்டியல்களை பாலியல் சார்ந்து பிரிப்பதற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எனினும் ஏழைகள் என்று வரும் போது இந்த பாலின பேதம் வர்க்க ரீதியாகவே பாதிப்பு ஏற்படுத்துகிறதே அன்றி பாலின ரீதியாக மட்டும் அல்ல. சான்றாக ஏழைகள் அனைவரும் குழந்தைகளையும் உள்ளிட்டு அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த குடும்பத்த தலைவரின் வருமானம் போதுமானதாக இருக்கவில்லை என்ற உண்மையை அடிப்படையாக வைத்து எழுகிறது.

கிராமப்புறங்களில் வாழும் 40 கோடி இந்தியப் பெண்களில் 40 விழுக்காட்டினருக்கும் அதிமானோர் விவசாயம் அல்லது தொடர்பான வேலைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு நிலத்தின் மீதான உரிமைகள் இல்லாததால் விவசாயிகளாகக் கருதப்படுவதில்லை. இதன் காரணமாக அரசின் திட்டங்கள் மற்றும் கடன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக வெறுமனே விவசாய உற்பத்தியில் ஈடுபடுவதோடு நின்றுவிடுகின்றனர். இதனால்தான் விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண் விவசாயிகளை ஏதோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்வதாக அரசு பதிவு செய்கிறது. ஆகவே இந்த பாலின பேதம் ஆளும் அரசுகளுக்கு தமது குறைகளை மறைக்கவும் பயன்படுகிறது.

இந்திய கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களும் கூட ஏற்றத்தாழ்விற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அவர்களது நிறுவனங்களின் கடைநிலை ஊழியர் ஒருவரை விட 400 மடங்கிற்கும் அதிகமாக கூட ஊதியம் பெறுகிறார்கள்.

அமெரிக்காவில் பெரும்பணக்காரர்கள் அடிக்கடி நட்டத்தைச் சந்திப்பது மட்டுமல்லாமல் அவர்களது சொத்தும் நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை. அமெரிக்காவில் பில்கேட்ஸ் போன்ற சிலர் மேலும் மேலும் அதிக பணக்காரர்களாக ஆகும் போது இந்த போட்டியில் குறைந்த அளவு பணக்காரர்கள் தோற்பது இயல்பானதே. இதற்கு முரணாக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் தலைமுறைகள் கடந்தும் பெரும்பணக்காரர்களாக பலர் நீடித்து இருக்கின்றனர். காரணம் இந்நாடுகளில் சிறு, நடுத்தர முதலாளிகளின் அழிவு என்பது அதிவேகமானதாக இருக்கிறது. ஒன்றை அழிக்காமல் மற்றொன்று வளர்வதில்லை.

இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பணக்காரர்கள் பலர் தங்களது வாரிசுகளுக்குச் சொத்துக்களை மடைமாற்ற இருக்கின்றனர். எனவே சொத்துக்களைக் கடத்தும் இந்த வாரிசுரிமைக்கு எதிராக வரி வசூலிக்ககூடிய ஓர் அமைப்பு முறையை உருவாக்க வேண்டியது கட்டாயமாகிறது என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது இந்த ஏற்றத் தாழ்வின் கோபத்திலிருந்து பணக்காரர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்களின் பினாமி முயற்சிகளுக்கும் வரி வசூலிக்க வேண்டும் என இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

உலகின் பெரும்பாலான பெரிய ஆடை நிறுவனங்களுக்கு இந்தியப் பருத்தி-நூற்பு ஆலைகளுடன் நெருங்கியத் தொடர்புள்ளது. இந்திய நூற்பாலைகள் தொடர்ந்து சிறுவர்களை வைத்துக் கட்டாயவேலை வாங்குவது குறித்தான சான்றாதாரங்கள் இருக்கின்றன என்று அந்த அறிக்கைக் கூறுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி இந்தியாவில் 58 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தக் குழந்தை உழைப்பு குறித்த கவலையும் கூட ஒரு  என்ஜிவோ கவலைதான். ஏனெனில் வயது வந்தோர் ஏழைகளாக இருக்கும் போது அவர்கள் வீட்டு குழந்தைகள் வேலை செய்ய வேண்டியிருப்பது என்பது ஒரு நிர்ப்பந்தமே அன்றி ஏதோ அந்த குழந்தைகளின் உழைப்பை பெற்றோர்கள் பறித்துவிட்டனர் என்பதல்ல.

பங்குதாரர்களுக்கு இலாபத்தை அதிகரித்துக் கொடுப்பது தான் உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெருநிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான ஒரே தாரக மந்திரமாக இருக்கிறது. இங்கிலாந்தில் 1970 ஆம் ஆண்டுப் பங்குதாரர்களுக்குக் கிடைத்த இலாபம் 10 விழுக்காட்டில் இருந்து தற்போது 70 விழுக்காடாக எகிறியிருக்கிறது.

இந்திய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பங்குதாரர்களுக்குக் கொடுக்கும் ஈவுத்தொகையை 2014-15 ஆண்டில் இந்தியாவின் 100 பெரிய தனியார் நிறுவனங்கள் 34 விழுக்காடாக அதிகரித்துவிட்டன. அவற்றில் 12 க்கும் அதிகமான நிறுவனங்கள் தமது இலாபத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஈவுத்தொகையைக் கொடுக்கின்றன. இதன்படி இந்த அறிக்கையை வைத்து பங்கு சந்தைகளில் பிரச்சாரத்தை நடத்தி பல நிறுவனங்களின் பங்குகளை அதிகம் விற்பதற்கும், விலை அதிகரித்து நடுத்தர மக்கள் தலையில் கட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

நிலக்கரியை எரிப்பதன் மூலமாக ஏற்படும் காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் ஏறத்தாழ ஒரு இலட்சம் அகால மரணங்கள் ஏற்படுகின்றன. “இந்தியாவும் தென் கிழக்காசிய நாடுகளும் நிலக்கரிச் சுரங்கங்களை கணிசமான அளவிற்கு வைத்திருந்தாலும் மின் இணைப்புக்கான வாய்ப்புகள் ஒரு பகுதி மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்தியாவில் 75 விழுக்காடு மின்சாரம் நிலக்கரி மூலமாகவேப் பெறப்படுகிறது. நிலக்கரி செறிவாக இருக்கும் பகுதிகள் கூட குறைவான அளவே மின்சார வசதியைப் பெற்றிருக்கின்றன” என்று அந்த ஆய்வு மேலும்  கூறுகிறது. நிலக்கரியை எரித்து மண்ணையும், நீரையும் மாசுபடுத்து நாம் தயாரித்து அனுப்பும் கார்களும், சட்டைகளும் மேலை நாடுகளுக்கு தேவை. பாதிப்போ நம் தலைமையில்.

ஒரு விழுக்காட்டினருக்காக மட்டுமல்ல அனைத்து மக்களுக்குமானப் பொருளாதாரத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய நேரமிது என்று இந்த ஆய்வறிக்கையில் ஆக்ஸ்பாம் வலியுறுத்துகிறது. ஒரு சிலரின் கைகளில் தீவிரமாகக் குவியும் சொத்துக்களைத் தடுப்பதன் மூலம் வறுமையை ஒழிக்குமாறு இந்திய அரசிடம் இந்நிறுவனம் கேட்டுள்ளது. வாரிசுரிமை வரியை அறிமுகப்படுத்தவும் சொத்துவரியை அதிகரிக்கவும் அந்நிறுவனம் கேட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வரி வருவாயில் இந்த வரிகளின் பங்கு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. பணக்காரர்கள் அதிக பட்சம்30% வரி கட்டினால் போதும் என்ற நிலைமை தொடரும் போது இந்த ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகரிக்கும். பணக்கார்களுக்கான வரியை 75% போட்டால் மட்டுமே ஓரளவு அந்த ஏற்றத்தாழ்வின் வேகத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதைச் செய்யுமாறு இந்த அறிக்கை கோரவில்லை, கோராது.

“வரித் தள்ளுபடியை இந்திய அரசாங்கம் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரியின் அளவை மேலும் குறைக்கக் கூடாது. தனது தொழிலாளர்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசாங்கம் உதவி செய்ய வேண்டுமே ஒழிய பங்குதாரர்களுக்கு மட்டும் நன்மை செய்யும் நிறுவனங்களுக்கு அல்ல.” என்று ஆக்ஸ்பாம் கூறியுள்ளது. பெரு நிறுவனங்களுக்கான வரியின் அளவை மேலும் குறைக்க கூடாது என்றுதான் இந்த அறிக்கை சொல்கிறதே அன்றி கூட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த வகையில் முதலாளிகள் ஏதாவது தாமே பார்த்து ஏழைகளுக்கு செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கை மறைமுகமாக  கோருகிறது போலும்.

வியாபாரத்திற்கும் அரசியலுக்கும் உள்ள நெருங்கிய உறவை இந்நிறுவனம் கடுமையாகச் சாடி இருக்கிறது. பெருநிறுவனங்களின் முன்னாள் அதிகாரிகள் தான் அரசின் துறை சார்ந்த பொறுப்புகளை வகிக்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்வதானால் பெருநிறுவனங்களின் பங்குதாரரர்கள் தான் கட்சிகளையும் அரசுகளையும் வழி நடத்துகிறார்கள். இதனால் முதலாளிகள் யாரும் இனி நேரடி அரசியலில் இறங்க கூடாது என்று சட்டம் போட முடியுமா? மல்லையா போன்றவர்கள் காங்கிரசு, பாஜக ஆதரவால் எம்.பி ஆவதைத்தான் தடுக்க முடியுமா?

வரி ஏய்ப்பின் காரணமாக வளரும் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 6,70,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்திப்பதாக வர்த்தக மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாட்டு கருத்தரங்கு (The UN Conference on Trade and Development) கணக்கிட்டுள்ளது.

“வரி ஏய்ப்புச் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரி ஏய்ப்பாளர்களின் புகலிடமாக இந்தியா இருப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும். பொது சுகாதாரத்திற்கும் கல்விக்கும் தேவையான நிதியை அரசுக் கண்டிப்பாக உருவாக்க வேண்டும். சுகாதரத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(GDP) ஒரு விழுக்காட்டில் இருந்து 3 விழுக்காடாகவும் கல்விக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 லிருந்து 6 விழுக்காடாகவும் அரசு அதிகரிக்க வேண்டும்.” என்று அந்நிறுவனம் மேலும் கூறியிருக்கிறது. கல்வி, சுகாதாரத் துறையில் தனியார் மயம் கோலேச்சும் காலத்தில் அரசு இவ்வளவு ஒதுக்கத் தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, தனியார்மயத்தை தடை செய்யாமல் இந்த ஒதுக்கீட்டை எப்படி உயர்த்த முடியும்? இதைப் பற்றி அறிக்கை பேசவில்லை, பேசாது.

ஆக்ஸ்பாம் போன்ற முதலாளித்துவ நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை உருவாக்குபவர்களிடமே அதனை ஒழிப்பதற்கு முறையிடுவது நகைப்பிற்குரியது. ஒரு விழுக்காடு பணக்காரர்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பு முறையை 99 விழுகாட்டினருக்கு சேவை செய்வதற்கானதாக மாற்றுவது என்பது இந்த முதலாளித்துவ அமைப்பை வீழ்த்துவதன் வாயிலாகவே நடந்தேறும்.

ஆம். வரலாற்றில் உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு வடிகாலாக இருந்த மக்கள் நலம்புரி அரசுகளுக்கான (welfare states) காலம் முடிந்துவிட்டது. தனியார்மய தாராளமய திட்டங்களை செயல்படுத்திய பிறகு பெயரளவிற்கு இருந்த கவர்ச்சித் திட்டங்களும் காற்றில் பறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. மீண்டும் அரசுகளிடம் மன்றாடுவதன் மூலம் வரலாற்றை பின்னோக்கி இழுக்க முடியாது.

ஒருவேளை ஆக்ஸ்பாம் கூறுவது போல பில்கேட்ஸ் டிரில்லியனர் கூட ஆகலாம். எனில் அந்த வரலாற்றுப் பிழைக்கு 99 விழுக்காட்டு மக்களுக்காக போராடும் புரட்சிகர சக்திகளும் சமூக இயக்கங்களும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

– சுந்தரம்

மேலும் படிக்க…

மெரினாவில் குற்றவாளி ஜெயா சமாதியை உடனே அகற்று ! மக்கள் அதிகாரம்

10

குற்றவாளிக்கு அரசு மரியாதையா ?

_______________

மெரீனாவை களங்கப்படுத்தும் ஜெயா !


_______________

எங்கு காணினும் தீய சக்தியடா!

_______________

தூய்மையான தமிழகம் வேண்டுமா ஜெயாவின் சின்னங்களை அகற்று!

_______________

அம்மாவுக்காக எரிக்கப்பட்ட மாணவிகளின் ஆன்மாவுக்கு என்ன பதில்!

_______________

ரத்ததின் ரத்தங்களே! மொட்டை, பால்குடம், தீச்சட்டை, மண்சோறு எதுவும் சின்னமாவுக்காக இல்லையா?

_______________

இனி மிச்சமிருப்பது நீயும் நானும் தான்!

_______________

அ.தி.மு.க மூளையே 420 என்றால் கட்சி…?

_______________

ஜெயா – சசிகலாக்கள் உருவாவதை இந்தத் தீர்ப்புகள் தடுக்குமா ?

 

_______________

இதுவா நீதி ?

_______________

உடனே தீர்வு வேண்டுமா ? உதை !

தகவல் :
மக்கள் அதிகாரம்.
சென்னை, பேச : 91768 01656

பா.ஜ.க -வின் ஐஎஸ்ஐ அவதாரம் : கேலிச்சித்திரங்கள்

0

பா.ஜ.க-வின் ஸ்லீப்பர் செல்கள் : வடக்கும் தெற்கும் !

கருத்துப் படம் : சர்தார்

______________

 

நந்தினி குடும்பத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் !

 

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588


இணையுங்கள்:

போயஸ் தோட்டத்து பூசாரி : தத்துவஞானி சமஸ் – தி இந்து அன்றும் இன்றும்

9
சமஸ்

 தத்துவஞானி சமஸ் அன்றும் இன்றும்

“குமாரசாமியின் காந்தி கணக்கு” தீர்ப்பால் ஜெயா விடுதலையானதும் தத்துவஞானி சமஸ் என்ன சொன்னார்?

“இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16, 2015 அன்று அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள்….

“ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூடச் சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று. ஒரு தலைவருக்கு கூட இங்கு  திராணி இல்லையே, ‘நீதிமன்றத்தில் அவர் வென்றால் என்ன; மக்கள் மன்றத்தில் அவரை நாங்கள் வெல்வோம்’என்று சொல்ல? இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பின் நியாய தர்மங்களை முன் வைத்து விவாதிப்பதில் அரசியல்ரீதியாக அர்த்தம் ஏதேனும் உண்டா?

ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும். அதுதான் அவரை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான அரசியல் வெற்றி. தமிழக எதிர்க் கட்சிகளிடம் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடி அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து ஜெயலலிதாவை வீழ்த்தும் உத்தி இல்லை. மாறாக, ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கின் மனநிலையில் இருக்கின்றன; ஜெயலலிதாவை வீழ்த்தி, தங்கள் இருப்பை வெளிக்காட்ட இந்த வழக்கை மட்டுமே ஒரே துருப்புச் சீட்டாகப் பிடித்துத் தொங்குகின்றன. ஜெயலலிதா இல்லாத இடத்தில் கம்பு சுழற்ற ஆசைப்படுகின்றன.

ஜெயலலிதா வழக்கு அதிமுகவுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்துகொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த, மக்களை அணிசேர்க்க இவர்களுக்குத் தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா என்ன?”……

-சமஸ் (மே 2015)

இனி இன்று அதாவது ஜெயா சசி கும்பல் தண்டிக்கப்பட்ட பிறகு பிப்ரவரி 15, 2017 அன்று தத்துவஞானி சமஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு “ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்..மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!”. அதிலிருந்து ஒரு மேற்கோள்..

“கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. ஒருகுற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவதைக் காட்டிலும் கொடுமை இல்லை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ்தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருக்கிறது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது? நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமானபங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்!”

– சமஸ் (பிப்ரவரி 2017)

இரண்டையும் படித்த பிறகு திருவாளரும் தத்துவஞானியுமான சமஸை எப்படி அழைக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தி இந்து அன்றும் இன்றும்

ரோடு ஒத்துப்போவதில் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மட்டும் விதிவிலக்கல்ல. தி இந்துவின் தமிழ்ப் பதிப்பே பாசிச ஜெயாவுக்கு சிறப்பிதழ் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். ஜெயலலிதாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்த போது “தி இந்து” என்ன எழுதியது?

அன்று………..

போயஸ் தோட்டத்தின் ஆஸ்தான பூசாரியான தினமணிக்குப் போட்டியாக அறிவார்ந்த முறையில் காவடி தூக்கிய “திஇந்து” குமாரசாமி தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஜெயலலிதாவின் மறுவருகை நல்லதாக அமையட்டும் என்று தலையங்கம் தீட்டியது. அதில் ஜெயாவின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக ஆரூடம் கூறும்ஆசிரியர் அசோகன், “சுணங்கி நிற்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து அடித்து ஓட்டுவது எவருக்கும்சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் மாநிலம் அதைத் தான் எதிர்பார்க்கிறது” என்கிறார்.

நீதிபதி குமாரசாமி கணக்கில் செய்துள்ள மோசடி அம்பலமாகி நாறிக் கொண்டிருந்த போது, நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தா தொகையைக் கூட்டினால் இந்தக் கணக்கு நேராகிவிடும் என்று ஜெ. கும்பலுக்கு ஆறுதல் கூறும் தி இந்து, ஜெ.கும்பல் வாரியிறைத்த பல கோடி பணத்தில் நீதித்துறையின் ஒவ்வொரு படிக்கட்டையும் உரிய முறையில் கவனித்துப் பச்சையான அயோக்கியத்தனங்கள் மூலம் ஜெ. கும்பலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ள அ.தி.மு.க. வக்கீல்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தவர்கள், “ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று தலைப்பிட்டு ஏதோ மாபெரும் சாதனையாளர்களாகக் காட்டியது. அப்போது சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெரிய தடையைத் தாண்டிய அம்மா, இடைத்தேர்தல் என்ற சிறிய தடையை அலட்சியமாகத் தாண்ட ஓடோடி வருவதைப் போல கருத்துப்படம் போட்டு தனதுவிசுவாசத்தைப் பறைசாற்றியது.

இன்று………

“நல்ல எச்சரிக்கையாக அமையட்டும்!” என்று பிப்ரவரி 15, 2017 அன்று தலையங்கம் எழுதியிருக்கிறது தி இந்து. அதிலிருந்து சில மேற்கோள்கள்….

//ஆளும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டும். “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாகச் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்டஇல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு. வருவாய்க்குப் பொருந்தாமல் ஈட்டும் முறைகேடான பணத்தைச் செலுத்துவதற்காகவே முகமூடி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதை அதிமுகவினர் ஊன்றிப் படிக்க வேண்டும்.

இந்த வழக்கில் ஏற்பட்ட தாமதம் மக்களுக்குக் கசப்பைத் தருவது, அது இந்திய நீதித் துறையின் பெரிய பலவீனம் என்றாலும், ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அவர்கள் உடனிருக்கும் நிழல் அதிகார மையங்களும் என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதியின் முன்னர் தண்டனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனும் நம்பிக்கையை மக்கள் மனதில் இத்தீர்ப்பு விதைத்திருக்கிறது. அரசியல் தூய்மை எனும் பதம் வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் இனியேனும் நனவாகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் எழுவதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் இத்தீர்ப்புக்கு முகங்கொடுக்க வேண்டும். அவர்களுடைய மாற்றம்அதிமுகவிடமிருந்து தொடங்க வேண்டும்!//

தி இந்து தலையங்கம் (பிப் 15 2017)

பாருங்கள்.. தீர்ப்பை ஊன்றிப் படிக்க வேண்டும், முகங்கொடுக்க வேண்டும் என்று உபதேசிப்பவர்கள், தங்கள் முகத்தில் தாங்களே துப்பிக் கொள்கிறோம் என்று நினைக்கவில்லை. தி இந்துவின் ஆசிரியர் அறிவாளிகளை விட அதிமுகவினர் எவ்வளவோ மேல்!

பாக்கின் உளவாளி பாஜக துருவ் சக்சேனா கைது !

2
துருவ் சக்சானா மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

हम तुम्हे मारेंगे और ज़रूर मारेंगे लेकिन हु बन्दूक हमारी होगी, गोली भी हमारी होगी, वक़्त भी हमारा होगा बस जगह तुम्हारी होगी” (hum tumhe maarenge aur zaroor maarenge lekin hu bandook hamaari hogi, goli bhi hamaari hogi, vaqt bhi hamaara hoga bas jagah tumhaari hogi)

துருவ் சக்சேனா

– கடந்த 2016-ம் ஆண்டு, செப்டம்பர் 29 அன்று ட்விட்டரில் துருவ் சக்சேனா.

தன் பொருள் ”நாங்கள் உன்னைக் கொல்வோம்; நிச்சயம் கொல்வோம். துப்பாக்கி எங்களுடையதாக இருக்கும், தோட்டாக்களும் எங்களுடையதாக இருக்கும், நேரம் கூட எங்களுடையதாக இருக்கும் – ஆனால், இடம் மட்டும் உன்னுடையதாக இருக்கும்” – இது சாவ்தாகர் எனும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் பேசிய வசனம்.

அது இந்திய இராணுவம் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்களின் மேல் ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் நடத்தியதாக பீற்றிக் கொண்ட சமயம். எனவே இந்த வீரவசனத்தை துருவ் சக்சேனா யாரைப் பார்த்து சொல்லியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப் போவதில்லை. ஆம், பாகிஸ்தானைப் பார்த்து துருவ் சக்சேனா அடித்த பல்வேறு வீர வசனங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. துருவ் சக்சேனாவின் பிற சமூக வலைத்தள பதிவுகளில் தேசியம், தேசபக்தி குறித்தெல்லாம் நாட்டு மக்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறார்.

யார் இந்த துருவ் சக்சேனா?

துருவ் சக்சேனா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். குறிப்பாக அதன் இணையப் பிரச்சார பீரங்கிகளில் ஒருவர் – மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தேசபக்தர்களின் சார்பாக தீவிரமாக களமாடி வந்த துருவ் சக்சேனா, தற்போது தீவிரவாத தடுப்பு போலீசாரால் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

துருவ் சக்சேனா செய்த குற்றம் – தேசதுரோகம். குறிப்பாக சொல்வதானால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு இந்திய இராணுவம் குறித்த இரகசிய தகவல்களை கள்ளத்தனமாக கொடுத்தார் என்பது தான் துருவ் சக்சேனாவின் மீதான குற்றச்சாட்டு. இந்தக் கைது நடவடிக்கையில் மேலும் சில ஆச்சரியங்கள் உள்ளன. பாகிஸ்தான் உளவாளிகளாகச் செயல்பட்டு துருவ் சக்சேனாவுடன் கைது செய்யப்பட்ட மற்ற பத்து பேரில் ஒருவர் கூட முசுலீம் இல்லை. மத்தியில் மட்டுமின்றி மத்திய பிரதேசத்திலும் நடப்பது பாரதிய ஜனதா ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தடுப்புப்  பிரிவைச் சேர்ந்த போலீசு உயரதிகாரி சஞ்சீவ் சமி கூறும் போது, கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே நடத்தி வந்தார்களெனவும், அந்தத் தொலைபேசி இணைப்பகத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்திய இராணுவ அதிகாரிகள் பேசுவது போல பேசி ஜம்மு காஷ்மீரில் நிலை கொண்டிருக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகளிடமிருந்து இராணுவ நடவடிக்கைகள் குறித்த இரகசியத் தகவல்களைப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். துருவ் சக்சேனாவும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் பணத்துக்காகவே இந்தக் காரியங்களில் ஈடுபட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை மோடியை எதிர்ப்பதோ, மத்திய பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளை விமர்சிப்பதோ தேசதுரோகச் செயலாக சித்தரிப்பது வழக்கம். தமது தலைவரின் மேல் சொல்லப்படும் எந்தவொரு சிறிய விமர்சனத்துக்கும் சீறியெழுந்து எதிரி வினையாற்றும் பாரதிய ஜனதாவின் இணையக் கூலிப்பட்டாளம், விமர்சிப்பவர்களை மட்டுமின்றி அவர்களது ஏழேழு தலைமுறையினரையும் இந்தியாவுக்கு எதிரானவர்களாகவும் தேசதுரோகிகளாகவும் சித்தரிப்பது வழக்கம். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தேசபக்தர் துருவ் சக்சேனாவோ இந்திய நாட்டுக்கும் பாகிஸ்தான் கொடுத்த நோட்டுக்கும் ஒரே நேரத்தில் வாலாட்டியுள்ளார்.

இந்துத்துவ கும்பலுக்கு இந்திய சுதந்திரப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த துரோக வரலாறு இருக்கும் நிலையில், எங்கே விவாதமென்றாலும் அங்கெல்லாம் ஆஜராகி தேசபக்த கூச்சலை ஓங்கி ஒலிப்பதும், இந்திய தேசியத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மைக் காட்டிக் கொள்வதும் வழக்கம். கூட்டமாக உள்ள பேருந்தில் குசு விட்டவன் எவனோ அவனே எல்லோரையும் முந்திக் கொண்டு “என்னய்யா நாத்தம்” என மூக்கைச் சுளிப்பது போல அடிவயிற்றிலிருந்து ‘பாரத் மாதாகீ ஜேய்’ என்று கூவிக் கொண்டே தேசத்தை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளார் துருவ் சக்சேனா.

பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் உடன் துருவ் சக்சேனா

பெரும்பாலான முதலாளிய ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து பேசாமல் கள்ள மௌனம் சாதித்தாலும்,  ஓரிரு ஊடகங்களில் செய்தியாக வெளியாகி நாற்றமெடுக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் துருவ் சக்சேனாவுக்கும் தமது கட்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படையாக மறுத்துள்ள மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர்கள், தனிப்பட்ட முறையில் தமது கட்சியினுள் அந்நிய தேசத்தின் உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக இந்தியா டுடே பத்திரிகையின் செய்தியாளரிடம் புலம்பியுள்ளனர்.

அரசியல் ரீதியில் உருத்திரண்டுள்ள இந்துத்துவ சித்தாந்தம் அதன் பிறப்பிலேயே ஏகாதிபத்திய சேவையையும், தேச துரோகத்தையும் அடித்தளமாக கொண்டதாகும். ‘சுதந்திர’ இந்தியாவில் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க தனி அமைச்சகம் அமைத்து சேவை புரிந்த ஒரே ஆட்சி பாரதிய ஜனதாவினுடையது என்பதும், இராணுவத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அதற்கான சமீப கால நிரூபணங்கள். விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?

தேசத்தின் மேல் பற்றுக் கொண்டவர்கள் பாரதிய ஜனதாவையும் இந்துத்துவ கும்பலையும் வேரோடு ஒழித்துக் கட்டுவது ஒன்றே தலையாய தேசபக்த நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்வதோடு உடனடியாக அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும்.

மேலும் படிக்க

ISI agents arrested in Madhya Pradesh linked to BJP; party leaders privately express anguish over possible infiltration

மகிழ்ச்சி என்பது போராட்டமே : மெரினா முதல் புச்சாரெஸ்ட் வரை

1
ருமேனியாவின் மோடி: பிரதமர் சோரின் க்ரிண்டேனு
ருமேனியாவின் மோடி – பிரதமர் சோரின் க்ரிண்டேனு

மிழகத்தின் உரிமைகளைத் தொடர்ச்சியாக நசுக்கி வரும் மத்திய அரசுக்கும், அதற்குத் துணை போகும் மாநில அரசுக்கும் எதிராக 2017 ஜனவரி மாதம்  மெரினாவிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான  போராட்டத்தைப் பெருந்திரளாக இலட்சக்கணக்கான தமிழக மக்கள் ஒன்றிணைந்து நடத்தினர். அதைப் போன்றதொரு பெருந்திரள் மக்கள் எழுச்சி ருமேனியா நாட்டிலும் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக  நடைபெற்று வருகிறது. வால்வீதி ஆக்கிரமிப்புப் போராட்டம் தொடங்கி தற்போது தமிழகம், ருமேனியா வரை, தங்களைக் காப்பாற்றுவதாக கூறிக் கொள்ளும் அரசு இயந்திரத்தின் மீதான நம்பிக்கையை இழந்த மக்கள், தங்களது உரிமைகளை பறித்தெடுக்க சமரசமின்றி வீதியில் இறங்கிப் போராட ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஆளுங்கட்சியான சோசலிச டெமாக்ரட்டிக் கட்சி, கடந்த 2017 ஜனவரி மாதம் 31-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில்  ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியது. அந்த அவசரச்சட்டத்தின் படி ருமேனியாவில் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஈடுபடும் முறைகேடுகளின் மதிப்பு 48,000 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக இருந்தால் அவை குற்றமாகக் கருதப்படாது. அவர்களை சிறையில் அடைக்கத் தேவையில்லை. அதே போல், ஏற்கனவே சிறையில் இருப்பவர்களின் சிறை தண்டனையை ரத்து செய்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்றும் ஒரு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டது ருமேனிய அரசு.

ருமேனியாவில் இது வரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தற்போது தண்டனையை அனுபவித்து வரும் மற்றும் விசாரணையில் இருக்கின்ற அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை சுமார் 2,000 பேர். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை தப்புவிப்பதற்காகவே கொண்டு வரப்படும் இச்சட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் சோரின் க்ரிண்டேனு கூறியிருக்கும் காரணம் என்ன தெரியுமா ? சிறைகளில் ஏற்பட்டிருக்கும் இட நெருக்கடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இது என்று அறிவித்திருக்கிறார் கிரிண்டேனு.

rome-people-protest-flag
வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்

பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பல்கள் சூதாடுவதற்கு ஏதுவாக நமது கையில் ரொக்கமாக இருக்கும் ஒட்டுமொத்த பணத்தையும் வங்கிகளில் குவிப்பதற்காகச் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என அறிவித்த மோடியிடமிருந்து தான் இந்த உபாயத்தை கிரிண்டேனு கற்றிருப்பார் போலும்.

ஊழல் அதிகாரிகள் மட்டுமல்லாமல், குறிப்பாக தமது ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லிவியூ ட்ராக்னியாவை அதிகார துஷ்பிரயோக முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவிக்கவே இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது ருமேனிய அரசு. இதனை உணர்ந்தே ருமேனிய மக்கள் ஆத்திரமடைந்து வீதிக்கு வந்திருக்கின்றனர். ஊழல்வாதிகளுக்கு ஆதரவான இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், இத்தகைய மோசமான சட்டத்தைக் கொண்டு வந்த ஆளும் கட்சி பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தலைநகரான புச்சாரெஸ்ட்டில் 3,00,000க்கும் அதிகமான மக்கள் ஒன்று குழுமி 15 நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தவிர ருமேனியாவின் 55 முக்கிய நகரங்களில், மக்கள் அரசு அலுவலகங்களின் முன்னால் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.

பொதுமக்களின் ஆத்திரத்தைக் கண்டு மிரண்ட ருமேனிய அரசு, கடந்த 2017 பிப்ரவரி 5, ஞாயிறன்று அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும் ஆட்சியாளர்கள் பதவி விலகினால் தான் அங்கிருந்து கலைவோம் எனப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கும் தமிழக மக்களால் நிகழ்த்தப்பட்ட மெரினா எழுச்சிக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கின்றன.

rome-people-protest-night
செல்போனின் ஒளி வெள்ளத்தில் – மெரினாவின் அதே உற்சாகம்

பாலாற்றுப் பிரச்சினை, காவிரி பிரச்சினை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி மறுப்பு, ஜல்லிக்கட்டுக்கு சட்டதிருத்தம் கொண்டு வர மறுப்பு எனத் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சித்து வந்த மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசிற்கு எதிராக, தமிழக மக்கள் மெரினாவில் கொதித்தெழுந்தது போல், தொடர்ச்சியான ஊழல் முறைகேடுகளாலும், அதிகார துஷ்பிரயோகங்களாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வந்த ருமேனிய மக்கள் ஒட்டுமொத்தமாக கொதித்தெழுந்து வீதிக்கு வந்து விட்டனர்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கண் துடைப்புக்காக அவசரச் சட்டத்தை இயற்றிவிட்டு பிரச்சினை முடிந்துவிட்டது என அறிவித்த பன்னீரைப் புறக்கணித்து நிரந்தரச் சட்டம் இயற்றும் வரைப் போராடுவோம் எனத் தமிழக மக்கள் தொடர்ந்து போராடியதைப் போல ருமேனிய மக்களும் ஆளும் சோசலிஸ்ட் டெமாக்ரடிக் அரசாங்கம் பதவி விலகும் வரை களையப்போவதில்லை என தொடர்ந்து போராட்டத்தில் இருக்கின்றனர்.

இரவிலும் அதே உற்சாகத்துடன் போராட்டக்காரர்கள்.
இரவிலும் அதே உற்சாகத்துடன் போராட்டக்காரர்கள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவசரச் சட்டத்தை ஏற்காமல் நிரந்தரச் சட்டத்திற்காகத் தொடர்ந்து போராடிய இளைஞர்களையும், மாணவர்களையும், பாஜக, அதிமுக மற்றும் அவர்களின் அடிவருடிக் கும்பல்கள் எவ்வாறு சமூக விரோதிகள் எனச் சாடினார்களோ அதைப் போலவே, ருமேனியாவிலும் போராட்டத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் மக்களை சமூகவிரோதிகள் பின் இருந்து இயக்குவதாக ஆளும் கட்சியின் மூத்த தலைவரான லிவியூ ட்ராக்னியாவும் கூறியுள்ளார். மக்கள் எழுச்சியை ஒடுக்க ஆளும்வர்க்கங்கள் ஆர்வத்தோடு உபயோகிக்கும் மூன்று சொற்கள் –” சமூகவிரோதிகள் – தேசவிரோதிகள் – தீவிரவாதிகள் ” உலகம் முழுவதும் போராடும் மக்களைச் சமூக விரோதிகளாகச் சித்தரிப்பது தான் ஆளும்வர்க்கங்களின் ஒருமித்த சித்தாந்தக் கோட்பாடாக இருக்கும் போலிருக்கிறது.

தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை
தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை

ருமேனிய மக்களின் எழுச்சி குறித்துப் பேசும் போது, மற்றொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்று ருமேனிய மக்கள் எந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்களோ, அத்தகையதொரு சட்டம் , தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் முதல் ஜெயலலிதாவால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர் தொடங்கி, உயரதிகாரிகள் வரை, யார் மீதாவது லஞ்ச ஊழல் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனில், தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தான் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று ஜெயா அரசு ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. மக்களைச் சுரண்டி அரசு அதிகாரிகள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கை முழுங்கிக் கொழுத்த ஜெயா, தனக்கு சம்பாதித்துத் தரும் தனது அடிமைகளைப் பாதுகாக்க இந்த அரசாணையைப் பிறப்பித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் தமது உரிமைகளை மீட்க சிலிர்த்தெழுந்த இதே தமிழக மக்கள் கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட  இந்த அரசாணை குறித்து எவ்வித எதிர்ப்புமின்றி அமைதியாயிருந்தனர். ஒரு வருடத்தில் மக்கள் எழுச்சி நிகழும் அளவிற்கு அப்படி என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன ? மேலே நாம் குறிப்பிட்ட பல்வேறு காரணங்களோடு மற்றுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அது ஜெயலலிதா என்னும் தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை ஒழிந்தது தான்.

rome-people-protest
ஏகாதிபத்தியத்திற்கு சவக்குழி தோண்டும் மக்கள்

உலகம் முழுவதிலும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி இவ்வாறு பெருந்திரளாகத் திரண்டு நின்று போராடுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. வால்வீதி போராட்டம் தொடங்கி, தற்போது மெரினா, ருமேனியா என்று தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களாகவே இருந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

பெருந்திரளாகக் கூடி ஒரு திருவிழாவைப் போல தமது போராட்டத்தை நடத்திய தமிழகத்தை நாம் மெரினாவில் கண்டோம். இதோ ருமேனியாவின் புச்சாரெஸ்ட்டிலும் அதைப் போன்றதொரு திருவிழாவாக இப்பெருந்திரள் மக்கள் எழுச்சியை மக்கள் கொண்டாடுகின்றனர். அவர்களின் போராட்டம் வெல்கிறதோ, தோற்கிறதோ ஆனால், இது உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்களின் அடிவயிற்றைக் கலங்கச் செய்து கொண்டிருக்கிறது. சட்ட வரையறைகளைத் தாண்டி நடைபெறும் இத்தகைய மக்கள் போராட்டங்கள், தோற்றுவிக்கும் போராட்ட உணர்வு, உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களின் பெருங்கனவிற்கு சவக்குழி தோண்டத் தொடங்கியிருக்கின்றன. ஆசான் மார்க்சின் சொல் உழைக்கும் வர்க்கத்தின் சொல்லாகவே என்றென்றும் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான நிரூபனம் தான் மெரினாவும், புச்சாரெஸ்ட்டும்.

marina-protest
மெரினாவில் திரண்ட தமிழ் மக்கள்

”மகிழ்ச்சி என்பது போராட்டமே ” – மார்க்ஸ்

– கதிர்

செய்தி ஆதாரம்:
Bucharest: Thousands protest decriminalising corruption
Protesters in Romania denounce plan to decriminalise misconduct offences
Romania protests continue despite repeal of corruption decree

போலீஸ் வன்முறை : எங்களை எதிர்த்துப் பேச எங்களிடமே அனுமதியா ?

0

கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ல்லிகட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மீது தடியடி நடத்திய  காவல்துறையை கண்டித்து  கோத்தகிரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.

ஜல்லிகட்டு வேண்டும் என்று போராடிய மணவர்கள், இளைஞர்கள், மாணவிகள் பொதுமக்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி தடியடி நடத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியது, அதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.   100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அந்த செயலை கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி 4 நாள் முன்னதாகவே 31.01.2017 அன்று கேட்கப்பட்டது.  ஏற்றுக்கொண்ட கோத்தகிரி ஆய்வாளர் இறுதி நாளில் அனுமதி இல்லை, இன்னும் மூன்று நாட்கள் கழித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேளுங்கள் என்றனர். அதன்படி 03.02.2017 அனுமதி கேட்டகப்பட்டு திட்டமிட்டபடி கோத்தகிரி ஜீப் நிலையம் பகுதியில் காலை 10.30 மணி முதல் 11.45 வரை நடந்தது. அதில் மக்கள் அதிகார அமைப்பை சார்ந்த தோழர்.ரவி தலைமை வகித்தார்.

கண்டன உரை நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தை சார்ந்த பொருளாளர் விஜயன் உரையாற்றினார்.  அவர் பேசுகையில் காவல்துறையினர் வெறி செயலை அம்பலப்படுத்தினார்.  மேலும் அவர்களை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரை மக்கள் முன்னால் கிழித்துள்ளனர்.  கிழித்த காவல்துறையை கண்டித்து பேசினார்.  வேடிக்கை பார்த்த பொதுமக்களுக்கு அறைகூவலாக நீங்கள் வீதியில் இறங்கி இதுபோல் அமைப்புகளில் இணைந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறி முடித்தார்.

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பாலன் கண்டன உரையாற்றினார்.  அவர் பேசுகையில் துரோகிகள் யார், நாட்டுப் பற்றாளர்கள் யார்? நாட்டையும் இயற்கை வளத்தையும், நீர்நிலைகளையும் காக்க போராடுபவர்கள் தேச துரோகி என்றால், நாங்கள் அதை செய்கிறோம், அப்படியே நாங்கள் தேசத் துரோகியாகவே இருக்கிறோம் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.  யார் தேச துரோகி யார் நாட்டு பற்றாளர்கள் என்று ஜல்லிகட்டு போராட்டத்தில் வெளிப்படுத்தினார்கள்.  மத்திய மாநில அரசுகளை எப்படி திட்டினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இனி நாட்டை சூறையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்  மாணவர்கள் இளைஞர்கள் என்று கூறி முடித்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது
பார்ப்பனிய கும்பல் தமிழகத்தை அழிக்க நினைத்தது.  அது இலட்சக்கணக்கான காளைகளை உருவாக்கியது. அந்த எழுச்சியை உலகமே திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது. மத்திய மாநில அரசுகளை தன் வார்த்தைகளால் குத்தி கிழித்தது.  அதை கண்டு அஞ்சி நடுங்கிய அரசுகள் நீர்த்து போகும் வண்ணம் ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்தது.  அதை ஏற்க மறுத்த மாணவர்கள் உறுதியாக போராடினார்கள்.  அதை கண்டு சமூக விரோதிகளை உள்ளே சென்று விட்டனர் என்று தடியடியை நியாயப்படுத்தியது.  காவல்துறை ஒரு ஏவல்துறையாக மாறிவிட்டது. அனைத்து போராட்டத்தையும் ஈவு இரக்கம் இன்றி அடித்து சித்திரவதை செய்கிறது.  காவேரி போராட்டம் முல்லைபெரியார் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், மாற்றுத் திறனாளிகள் போராட்டம், மக்கள் நல பணியாளர்கள் போராட்டம், தேயிலை விவசாயிகள் போராட்டம் என அனைத்து வாழ்வாதார பிரச்சனைக்காக போராடினாலும் அடித்து சித்திரவதை செய்வது பொய்வழக்கு போடுவது என்று உள்ளனர்.

இதற்கு மக்கள் அதிகாரம் தான் மாற்று என்று  பேசியதோடு பாதிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பொதுமக்கள் அனைவருக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.  தடியடி நடத்திய காவல் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி  விடுதலை  செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் பெரிய போராட்டத்திற்கு தயங்க மாட்டார்கள் மக்கள் என்று எச்சரித்து பேசினார்.  ஆர்ப்பாட்டம் இடையே ஜல்லிகட்டுக்கு இல்லை டில்லிக்கட்டு, தேசத் துரோகி ஆக வேண்டும் என்றால் பெப்சியை குடி, திருத்த முடியுமா போலீசை திருத்த முடியுமா என்ற பாடல்கள் பாடப்பட்டது.  இறுதியில் நன்றியுரையாற்றினார், மக்கள் அதிகார அமைப்பு சார்ந்த வெங்கட்.

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி.

***

எழுந்துநின்ற தமிழகமே எதிர்த்து நில்! போடியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மெரினாவில் மாணவர்களின் போராட்டத்தைக் கலவர பூமியாக்கி நரவேட்டை நடத்திய போலிசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, தேனி மாவட்டம் போடி நகரில் கடந்த 03/01/2017 அன்று விவிமு சார்பில் கண்டனக் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக, அனுமதி கோரியபோது, “எங்களை திட்டுறதுக்கு எங்ககிட்டயே அனுமதி கேட்டு வர்றியா” என்று விறைப்பாக பேசி மறுத்துவிட்டனர். அடுத்து டி.எஸ்.பி.இடம் முறையிட்டபின், மாவட்ட எஸ்.பி. இடம் பேசிவிட்டு, “இங்க எந்த அசம்பாவிதமும் நடக்கலையே. தேனியில்தான் சின்ன தள்ளுமுள்ளு நடந்தது. நீங்க அங்க போயி ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டியதுதானே” என்று சலித்துக் கொண்ட டி.எஸ்.பி இறுதியில், “ஒரு மணி நேரத்தில் முடித்துக் கொள்ள வேண்டும்” என்று பெரிய மனதுடன் அனுமதித்தார். இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்த்து போடி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய நகர்பகுதிகளில் குறிப்பாக மாணவர்களிடம் பிரசுரம், போஸ்டர் மூலமாக விரிவான  பிரச்சாரம் செய்திருந்தோம். பஸ் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் உணர்வுபூர்வமான ஆதரவுடன் தாராளமாக நன்கொடை அளித்தனர் !

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். வாஞ்சிநாதன்

போடி நகரச் செயலாளர் தோழர் A.T. கணேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். வாஞ்சிநாதன் அவர்கள் பேசுகையில் “தமிழகம் முழுக்க ஆறுநாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல்தான் இருந்தது. போலிசு நுழைந்த பிறகுதான் கலவரமானது. போராடிய மாணவர்கள் இளைஞர்கள், பெண்களை மண்டையை உடைத்தது, ஆட்டோக்களுக்கும், குடிசைகளுக்கும், மீன் மார்க்கெட்டுக்கும் தீயிட்டுக் கொளுத்தியது, வீட்டிற்குமுன் இருந்த வாகனங்களை அடித்து உடைத்தது எல்லாமே போலீசுதான்! இதுவெல்லாம் அப்பட்டமாக மீடியாக்களில் அம்பலாமான பிறகும் சமூகவிரோதிகள் தான் கலவரத்துக்கு காரணம் என்று சாதிக்கிறது தமிழக அரசு!

உண்மையான சமூக விரோதிகள் போலீசுதான் என்பது ஊடகங்கள் மூலம் மக்களிடம் அம்பலமாகிப் போனதால் தற்போது கண்துடைப்பு விசாரணைக் கமிசன் அமைத்து நாடகமாடுகிறது அரசும் போலீசும்!” என்று சமூகவிரோதிகளை தோலுரித்துக் காட்டியவர் மேலும், “போராடிய மாணவர்களை மட்டுமல்ல, அடைக்கலம் கொடுத்து உதவிய மீனவ மக்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறது போலீசு ! போராட்டம் நடந்த ஆறு நாட்களும் இந்த அரசும், போலீசும், நீதிமன்றங்களும், இவர்களின் சட்டங்களும் முற்றாக செயலற்று முடங்கிப் போனது ! சுமூகமாக இப்போராட்டத்தை முடித்தால் ருசிகண்ட பூனைகளாக ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் இதுபோன்ற போராட்டங்களுக்கு மக்கள் திரண்டு விடுவார்கள். தங்களது அதிகாரத்தை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். மீண்டும் இப்படி ஒரு ஆபத்து நமக்கு எதிராக திறந்துவிடக் கூடாது என்ற பயத்தில்தான் போலிசின் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது அரசு ! இந்த அரசின் கட்டமைப்பு முழுவதும் தோற்றுப் போனதன் அடையாளம்தான் இந்த தாக்குதல்!” என்று தாக்குதலுக்கான காரணத்தையும் விளக்கிப் பேசினார்.

இறுதியாக, “முல்லைப்பெரியார் அணிக்காகவும், காவிரி நீர் உரிமைக்காகவும் போராடிய விவிமு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்காக போராடிய ம.க.இ.க., டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம், ஆகிய அமைப்புகளைத்தான் சமூக விரோதிகள் என்று போலீசும், அரசும் பீதியூட்டி வருகிறது! புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளும்தான் உண்மையான மக்கள் நண்பர்கள் என்பதை இப்போராட்டம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது!” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இறுதிவரை களையாமல் நின்று கேட்டுசென்றனர். அலங்காநல்லூர் மக்களின் அனுபவத்தை சம்பவமாக தோழர் விவரித்துக் கூறியது பலரையும் கவர்ந்ததாக மக்கள் கூறினார். மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலரும் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி
தேனி மாவட்டம்.

***

வேதையில் மக்கள் அதிகாரம் சார்பில் 4.2.17 அன்று சல்லிக்கட்டு போரட்டத்தை கலவரமாக்கிய போலிஸ் அதிகாரிகளை கண்டித்தும் அவர்களை கைது செய்திட வலியுறுத்தியும் தோழர் தனியரசு தலைமையில் (மக்கள் அதிகாரம்) மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைப்பெற்றது. இதில் வேதையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் (தி.மு.க), தோழர் ஒளிச்சந்திரன் (விவசாயிகள் அமைப்பு), மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மாரிமுத்து, பாலு, ஆசாத், வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். சிறப்புரையாக தோழர் காவேரி நாடன் (மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்),காவல் துறையின் அதிகாரத்திமிரை விளக்கி  பேசினர். சுமார் 100க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டம் பகுதி மக்களிடம் வரவேற்பை உருவாக்கியுள்ளது. வேறு எந்த அரசியல்; அமைப்புகளும் இதுபற்றி வாய்திறக்காத நிலையில் மக்கள் அதிகாரம் தலைமையேற்று நடத்தியது சிறப்பாக அமைந்தது.

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

ஜெயா சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான் !

28
தமிழகத்தைக் கவ்வியிருந்த பீடை
ஓவியம்: முகிலன் (2014-ம் ஆண்டு)

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள்.

குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முழு தீர்ப்பையும் படிக்கும்போது மேலும் விவரங்கள் தெரியவரும்.

அன்று குன்ஹாவுக்கு எதிராக அதிமுக காலிகள் நடத்திய வெறியாட்டங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்தக் காலிகள் எல்லாம் இப்போது பன்னீர் பக்கம் இருக்கிறார்கள். அல்லது வந்து விடுவார்கள். அல்லது இன்னொரு கும்பல் சசி சார்பில் உருவாகும்.

பரப்பன அக்ரகாரா சிறையில் இருந்தபோது, தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா என்ற குற்றவாளியின் படத்தை மாட்டி வைத்துக் கொண்டுதான் பன்னீர் ஆட்சி செய்தார். எல்லா அரசு அதிகாரிகளின் தலைமீதும் அந்த குற்றவாளியின் படம்.

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்து சிறை சென்றிருந்தால், மீண்டும் படத்தை வைத்து ஆட்சி நடத்தியிருப்பார்கள். இதில் சந்தேகமே இல்லை.  ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருக்கும் அதிமுகவினர் அந்தப் படத்தை எடுத்து கொளுத்தவா போகிறார்கள்?

இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது போல கொண்டாடுகிறது பாரதிய ஜனதா கும்பல். பாரதிய ஜனதாவும் சோ, குருமூர்த்தி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும் இதுநாள் வரை குன்ஹா தீர்ப்பைப் பற்றி சொல்லி வந்தது என்ன? இந்த பார்ப்பன வெறி பிடித்த கிரிமினல்கள்தான் இன்று சசிகலாவை மட்டும் வில்லியாக்கி, ஜெயாவை தேவதையாக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெயலலிதா ஆரம்பத்தில் ஊழலின் கறை படியாமல்தான் இருந்தாராம். இவர்களுடைய சகவாசத்தின் காரணமாகத்தான் அவர் ஊழலுக்கு பலியாகிவிட்டாராம். இப்போது யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைத்திருக்கிறதாம். இது நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் தீர்ப்பு பற்றி தமிழிசை சவுந்தரராசனின் தொலைபேசி பேட்டி.

நாம் எதிர்த்துப் போராடவேண்டிய மிக முக்கியமான பித்தலாட்டம் இதுதான்.

இந்த தீர்ப்பு நமக்கு தெரியாத புதிய உண்மை எதையும் புதிதாக சொல்லி விடவில்லை. உண்மையிலேயே இதில் பெருமை ஏதேனும் உண்டென்றால், அது குன்ஹாவை மட்டுமே சாரும். ஜெயலலிதாவின் கிரிமினல்தனங்களையும் அவரால் கூலிக்கு அமர்த்தப்பட்ட மாபெரும் சட்ட வல்லுநர்களின் தகிடுதத்தங்களையும் மீறி, சட்டத்தின் எந்த சந்திலிருந்தும் தப்பிக்க முடியாத வண்ணம் மடக்கி, ஒரு தீர்ப்பை வழங்கினாரே, அது மாபெரும் சாதனைதான்.

அதாவது இந்த சட்டங்களின் வரம்புக்கு உட்பட்டு ஜெயலலிதா சசிகலா என்ற கிரிமினல் இரட்டையர்களை தண்டித்தது என்பது, கல்லில் நார் உரித்ததற்கு சமமானது. அதை குன்ஹா செய்தார்.

இந்த தீர்ப்பை மட்டுமே வைத்துக் கொண்டு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டுவிட்டது என்றோ, இனி ஊழல் பேர்வழிகள் அஞ்சி நடுங்குவார்கள் என்றோ யாரும் கருதிவிட வேண்டாம். அப்படி ஒரு வெங்காயமும் நடக்காது.

66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு. கடந்த 5 ஆண்டுகளிலேயே அந்த தொகையைப் போன்று ஆயிரம் மடங்குக்கும் மேல் சொத்து குவித்து விட்டது ஜெ சசி கும்பல்.

பன்னீர், நத்தம், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தது. அதற்குப் பிறகு என்ன? அன்புநாதன் மீது என்ன நடவடிக்கை? சேகர் ரெட்டி, ராம் மோகன ராவ் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் நேரத்தில் மூன்று கன்டெயினர் பிடித்த விவகாரத்தில் நடந்தது என்ன?

இது வெறும் சசிகலா விவகாரமல்ல, ஜெயா விவகாரம் மட்டுமல்ல. அ.தி.மு.க என்பதை ஒரு கிரிமினல் மாஃபியா கும்பல். அது தேன் எடுத்தவன் புறங்கை நக்குவது என்பதைப் போல ஊழல் செய்யும் கும்பல் அல்ல. கொள்ளையடிப்பதற்காகவே திட்டங்கள் தீட்டுகின்ற, கொள்ளையடிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்ட கிரிமினல் கும்பல். இந்த கும்பலை ஒரு கட்சி என்று அங்கீகரிப்பதும், அதற்கு வேறு தலைவர் தேர்ந்தெடுத்துக் கொண்டால் நல்லாட்சி நடத்துவார்கள் என்று கூறுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இப்போது அப்படிப்பட்ட அயோக்கியத்தனம்தான் நடக்கிறது. பன்னீர், எடப்பாடி, செங்கோட்டையன், தம்பிதுரை என்ற எந்த கிரிமினல் தலைமை தாங்கப் போகிறார்கள் என்பதா நமது கவலை? இந்தக் கிரிமினல் கும்பல் தலையெடுக்கவே கூடாது. அதிமுக என்ற கிரிமினல் கும்பலுக்கு மக்கள் தருகின்ற ஒரு தண்டனை எல்லா கட்சிகளின் கிரிமினல்களுக்கும் பாடமாக இருப்பது மட்டுமல்ல, கிரிமினல்களை மக்கள் நேரடியாக தண்டிப்பது என்பதற்கும் ஒரு முன்னோடியாக அமைய வேண்டும்.

மன்னார்குடி மாஃபியாவை வழக்கு போட்டு தண்டிப்பதென்றால் ஒரு காலத்திலும் முடியாது. சரியாக சொல்வதென்றால், சட்டபூர்வமான முறைகளின் மூலம் ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க முயல்வது என்பது முட்டாள்தனமானது  என்பதற்கு ஜெயலலிதா மீதான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு நிரூபணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த வழக்கில் கடந்த காலத்தில் நடந்திருக்கும் விசயங்களை ஒவ்வொன்றாக நினைவு படுத்திப் பார்ப்பீர்களேயானால், இந்த உண்மை புரியும்.

இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் முதல் தத்து, குமாரசாமி உள்ளிட்ட பல நீதிபதிகள் வரை உடந்தையாக இருந்திருக்கிறார்கள். பலர் பயந்து ஓடியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இத்தனை காலம் இழுத்தடிக்கப்பட்டதே ஒரு நாடகம். இது முன்னரே வந்திருந்தால் ஜெயா உள்ளே போக வேண்டியிருந்திருக்கும்.

இந்த மொத்த வழக்கிலும், குன்ஹா அளித்த தீர்ப்பு என்பது ஒரு விதிவிலக்கு. பரப்பன அக்கிரகாரா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயாவும் சசியும் திருந்தி விட்டார்களா? முன்னை விட வெறியுடன் கொள்ளையடித்தார்கள். 2001 முதல் இன்று வரை இவர்கள் சேர்த்திருக்கும் சொத்துகள் எத்தனை? ஜாஸ் சினிமாஸ் போல எத்தனை சொத்துகள்? அவையெல்லாம் யார் மீது வழக்கு போட்டு எப்போது பறிப்பது?

வழக்கு போட்டு நீதிபெறும் வழி முறையை, ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

மோடி சட்டத்தை திருத்தினால்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியும், மாநில அரசு எதுவும் செய்ய முடியாது என்றார்கள். பிறகு பன்னீர் கேட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் திருத்த முடியாது, நீங்கள் மாநிலத்தில் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வாங்கித்தருகிறோம் என்றார் மோடி. இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிடக் கூடாது என்பதால், தீர்ப்பு சொல்லாதே என்றார்கள். உச்ச நீதிமன்றமும் தீர்ப்பை நிறுத்தி வைத்தது. அப்புறம் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கு விலங்கு நல வாரியம் உள்ளிட்டோர் இடைக்கால தடை வாங்காமல் கவனித்துக் கொண்டார்கள்.

இத்தனையும் எப்படி நடந்தது. ஏன் நடந்தது? மெரினா போராட்டம் தொடங்கும் வரையில் எதுவுமே முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், போராட்டத்தின் தீவிரத்தை கண்டார்கள். “நீ சட்டம் போடுவியோ, தீர்ப்பு எழுதுவியோ அது உன் வேலை. ஜல்லிக் கட்டு நடக்கும் என்று உறுதியாகும் வரை நாங்கள் விடுவதில்லை” என்று மக்கள் நின்றார்கள். சட்டத்தை மக்கள் மதிக்கவில்லை. தடையை மீறி நடத்தினார்கள்.

இனிமேல் இதனை அங்கீகரிக்காவிட்டால், சட்டத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள் என்பது மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கும் புரிந்து விட்டது.

அதனால்தான் ஏதாவது ஒரு வழியில் இதனை சட்டரீதியாக தீர்த்து வைக்கவில்லை என்றால், மக்கள் படிப்படியாக அரசாங்கத்தின் அதிகாரத்தையே எல்லா விவகாரங்களிலும் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற அச்சம் ஆளும் வர்க்கத்துக்கு வந்தது.

அதன் விளைவுதான் மாநில அரசின் சட்டம்.

அதாவது மக்களின் விருப்பத்துக்கு அரசும் நீதிமன்றமும் பணிந்தன.

அதே வழிமுறையை ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவும் நாம் கையாள முடியும். கையாள வேண்டும்.

அதிமுக என்ற கிரிமினல் மாஃபியாவை அரசியலிலிருந்தே ஒழித்துக் கட்ட வேண்டும். அந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவரின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அம்மா என்றழைக்கப் படும் கிரிமினலின் படங்களும் பெயர்களும் தமிழகத்தின் முகத்திலிருந்து துடைத்தெறியப்படவேண்டும்.

இதை நோக்கி நமது கோரிக்கைகளை அமைத்துக் கொள்வோம். போராடுவோம்.

 

கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !

12
பணத்தோடும் பந்தலோடும் வரவேற்கிறது காஞ்சிமடத்தின் முகப்பு.

வேதம் விதித்த தர்ம வழியில் நடப்பவன் புண்ணியத்தைத் அடைகிறான். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்பவன் பாவத்திற்கு ஆளாகிறான்”- இது இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியாரின் சிந்தனை. “கற்புக்கரசிகளை மனைவியாகக் கொண்டிருப்போருக்குத்தான் கடவுள் தெரிவார்” – இது வைகைப்புயல் வடிவேலாரின் சிந்தனை. முன்னதின் தராரதரத்தை பின்னவர் ‘புரிய’ வைக்கிறார் என்பதற்கு காஞ்சி சங்கரமடத்தில் பார்த்ததும் கேட்டதுமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு நண்பரைப் பார்ப்பதற்கு காஞ்சிபுரம் சென்றிருந்தேன். ஊர் சுற்றி பார்க்கும் வைபவத்தில் காஞ்சி மடமும் உண்டு என்பதால் அங்கும் சென்றோம். அன்று கூட்டம் அதிகமில்லை. இருப்பினும் வந்தவர்களில் பெரும்பான்மையினர் சுண்டிவிட்டால் சிவக்கக்கூடிய வெண்ணிற வேந்தர்கள்தான். எங்களையும் உள்ளிட்ட ‘கரிய’ அசுரர்கள் ஓரிருவர்தான். முதலில் சங்கராச்சாரி தரிசனம் தரும் கருவறை இதுதான் என்று கல்லாலான கால் பாதத்தைக் காண்பித்தார்கள். அந்த அறையில்தான் ஜயேந்திர சரஸ்வதி பொது மக்களுக்கு காட்சி அளிப்பாராம். இப்போதெல்லாம் அவர் அதிகம் பேசுவதில்லையாம். அதுவும் அதிஷ்டம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காட்சியும் கொஞ்சம் கற்கண்டும் கிட்டும் என்றார்கள். கருவறையின் அருகிலேயே மண்டையில முக்கால் பாக முடிய வழித்து விட்டு கால் பாக முடியோட புண்ணியத்தை அடையும் வழியான வேத பாடத்தைப் பதினைந்து வயது மதிக்கத்தக்க பார்ப்பன சிறுவர்கள் பரிதாபமான முறையில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து கண்ணாடி அறை ஒன்றில் மனுசனா சிலையா என்று இனங்காண முடியாத காஞ்சிப் பெரியவரின் மெழுகுச்சிலையொன்று இருந்தது. அதற்கு மிகவும்  சுத்தமான ஆடை, செருப்பு மற்றும் அதனை சுற்றி பணம் (பக்தர்கள் போடும் காணிக்கை) என எல்லாம் பளிச்சென்று இருந்தது. உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது.

அதுக்கு நேர்மாறாகக் கருவறைக்குப் பின்புறம் ஒரு இடத்தில் சிலையைப் போல் அமர வைக்கப்பட்டிருந்தார், ஒரு உயிர் உள்ள வயதான சாமியார். அவருக்கு சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கலாம். ஒரு குடித்தன வீட்டில் ஓரமாக இருக்கும் மாட்டுத் தொழுவம் போல இருந்தது அந்த இடம். நீளமான வரண்டாவின் ஓரம் இரண்டடி சிமண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் அவர். இரண்டு சொம்புத் தீர்த்த தண்ணீர், ஒரு சொம்பு குடிதண்ணீர், ஏதோ இரண்டு ஆன்மீகப் புத்தகங்கள், ஏதோ சாமி புகைப்படம், விபூதி, குங்கும கிண்ணம் எல்லாம் அந்த சாமியாரின் அருகில் அதே பெஞ்சில் இருந்தன. அவர் உடம்பு முழுவதும் விபூதி பட்டை, சந்தன குங்குமப் பொட்டு, கழுத்தில் மணி மாலை, வரித்து கட்டியக் கோவணம், தூக்கிக் கட்டிய கொண்டை தலைமுடி, ஒரு முழ நீளத்துக்குத் தாடி என வீற்றிருந்தவரைப் பார்க்கும் போது பக்தியை விட பரிதாபமே வரும்.

உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது. – பெரிய சங்கராச்சாரியாரின் மெழுகுச் சிலை.

அந்த இடம் பல நாள் சுத்தம் செய்யாத நிலையில் எலி நடமாட்டத்துக்கு சாட்சியாக எலிப் புழுக்கைகள் தெயவீக் மணத்தை தாண்டி மணம் வீசின. அங்கேதான் அவர் தங்கியும் இருக்கிறார். அவர் அமர்ந்திருந்த திண்ணைக்கு கீழேயே டாய்லெட் வடிவில் சிமெண்டால் கட்டியிருந்தார்கள். அதில் சிறுநீர் கழித்தால் அது சாக்கடையோடு சேர்ந்து விடும். அதுல வேதனை என்னன்னா அவசரத்துக்குக் கோவணத்த அவுத்துட்டு அவரால ஒன்னுக்குக் கூடப் போக முடியாது. தடியக் கூட ஊனி நேரா நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில இருக்கும் அவரால இருக்கி கட்டிய கோவணத்த (சன்னியாசி கோவணக்கட்டு) எப்படி அவிழ்க்க முடியும்?

மூன்று நாள் விடாது பெஞ்ச மழையில கூட அவர வெத்து உடம்போட  வச்சுருந்ததப் பாக்க மனசு தாங்கல. சாப்டிங்களா குளிருக்குப் போர்வ வேணுமான்னு ஒரு குழந்தையிடம் கேட்கச் சொன்ன போது, அது அவர் காதுக்கே கேட்டு உடனே திரும்பிப் பார்த்தார். அதில்   ஏக்கம் இருந்தது. அதே நேரம் அப்போது அங்கே வந்த ஒரு நடுத்தர மனிதர், “நல்லபடியா திருப்பதி போய்வர உங்க ஆசீர்வாதம் வேணுன்னுப் அந்தப் பெரியவரிடம் கேட்டதும் கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போல அவர் பார்வையில் அத்தனை எரிச்சலும், சலிப்பும் இருந்தது. “கடவுள் இல்லேன்னு சொல்றவன விட இருக்குன்னு சொல்றவனுக்குதான் கடவுள் இல்லைன்னு உறுதியா தெரியும்”னு சொன்ன பெரியாரின் உண்மையை நினைவுபடுத்தியது அந்த பார்வை.

ஒரு பச்சக் குழந்தை முகத்துக்கு முன்னாடி ஒரு கிலுகிலுப்பையை ஆட்டினா அது சிரிக்கும் உற்சாகமடையும். அதே குழந்தை வளர்ந்து முதிர்ந்து கட்டிலில் கிடக்கும் போது உற்சாகமூட்ட கிலுகிலுப்பையை ஆட்டுனா சிரிக்குமா.? சிரிக்காது. முடியாத முதுமையில் ஜீவனற்றப் பார்வையும் உணர்ச்சியற்ற முகமுமாகப் பார்ப்போரை பரிதாபப்பட வைக்கும் தோற்றத்தோடு இருந்தவரை ஒரு சாமியாராக் பிடித்து வைத்திருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் இருக்கும் தொன்மம் வாய்ந்த பொருள் போல அல்லது உயிரியல் பூங்காவில் இருக்கும் அபூர்வ விலங்கு போலவும், அதை பலர் அதியசமாக பார்ப்பதுமாய் இருந்தது அந்த சாமியாரின் நிலைமை. நல்ல உணவும் உறக்கமும் தேவைப்படும் தள்ளாத வயதில் இல்லாதக் கடவுளைக் காப்பாத்த இவரை சித்திரவதை செய்கிறார்கள்.

அடுத்து உயிரற்ற சிலையையும் உயிருள்ள மனிதனையும் காட்சிப் பொருளாக்கி ஆன்மீகத்தை நிலைநிறுத்தி ஆளுகின்ற காஞ்சி சங்கரமடத்தின் மற்றொரு பாவக்கணக்கைப் பார்ப்போம்.

சென்னை ராஜிவ்காந்தி மருந்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் நோயாளி அல்லாத காத்திருப்போர் தங்குமிடத்தில் தற்செயலாக கோகிலாம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்டு ஒரு பத்து நாள் இருக்கும்.

சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க – கோகிலாம்மா. இடம்: சென்னை அரசு மருத்துவமனை.

“சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க. அறிமுகம் இல்லாத மனுசாள் கூட என்னப் பாத்து பாவம் பண்ணின ஜென்மமுன்னு சொல்லும் போது பூமிக்கு பாரமாத்தான் நான் பொறந்தேன்னு நெனைக்காம இருக்க முடிலையே!. யாரைச் சொல்லியும் குத்தமில்ல. சக மனுசாகிட்ட எப்புடி நடந்துக்கனுமின்னு பணம்தான் சொல்றது. ராமா! ராமா! இதுக்கு மேலேயும் லோகத்துல நேக்கு இருக்க முடியலப்பா….” என்று திடிரெனக் கதறி அழுதார் கோகிலாம்மா.

ஐம்பது வயதைக் கடந்திருக்கும் அவர் 20 நாளுக்கு மேலாகக் கணவருடன் மருத்துவமனை வளாகத்தில் தான் தங்கியிருந்தார். மிகவும் பரிதாப நிலையில் தரையில் சுருண்டு அவர் கணவர் படுத்திருந்தார். வயிறு வலி, கிட்னியில் பிரச்சனை என்று இங்கு சேர்ந்த அவர்களைப் பாண்டிச்சேரி புற்றுநோய் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்து வரச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. வீடே இல்லாத அவர்கள் புதுவைக்குப் போக பஸ்சுக்குப் பணமில்லாது அங்கேயே தங்கியிருந்தனர்.

கோகிலாவின் கணவர் பாலசுப்பிரமணியன், புரோகிதத்தையே தொழிலாகக் கொண்டவர் . இவர்களுக்குப் பிறந்த குழந்தை மனவள பாதிப்போடு வளர்ந்து இன்றைக்கு அவனுக்கு பதினைந்து வயது இருக்கும் என்றார் கோகிலா. மகன் பிறந்ததும் சிறிது காலத்திலேயே புரோகிதத் தொழில் பிடிக்காமல் விசேசத்துக்குச் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளார். காலப்போக்கில் மனவளர்ச்சி பாதித்த மகனுக்கு மருத்துவம் செய்துகொண்டு சென்னையில் வாழ்வதற்கான வருமானம் கிடைக்காததால் சொந்த ஊர் சாதிசனத்தின் மேல் நம்பிக்கை வைத்து காஞ்சிபுரத்துக்குத் திரும்பியுள்ளார். ஐயர் என்ற தகுதியில் சங்கரமடத்தில் சமையல் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

“காஞ்சியில ஒரு சின்ன வாடகை வீட்டுல குடியிருந்துட்டு சங்கரமடத்துல 12 வருசமா சமையல் வேலை செஞ்சுட்டு இருந்தோம். சாப்பாடு மடத்துல முடிஞ்சுரும். வாங்கற சம்பளம் வாடகை, மருந்துக்கும் தான் சரியாருக்கும். ஆசப்பட்டு  ஒன்னு கூட வாங்கிச் சாப்பிட முடியாது.

எந்த நேரமும் அவர் அனல்லேயே நிப்பார். பாத்தரம் தேய்க்கறது, காய் கழுவறது, சுத்தம் செய்றதுன்னு தண்ணியிலேயே எம்பொழப்பு போகும். கால் கையெல்லாம் நரம்பு இழுத்துகிட்டு புண்ணாயிருச்சு. அவருக்கும் கிட்னியில கட்டி வந்தது. நாலு பேரு நல்லவங்க வர்ர எடம் உங்களப் பாத்து முகம் சுழிக்கக் கூடாது வேற வேலை பாத்துக்குங்கன்னு சங்கர மடத்துல சொல்லிட்டாங்க. பத்து வருசத்துக்கு மேல மடத்துல வேலபாத்தோம். திடீர்னு ஒரு நாள் எந்த உதவியும் செய்யாம வரவேணாம்னு சொன்னதும் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னே ஒண்ணும் தோணல”.

மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

மடத்தில் உள்ள சில மேல் மட்ட நிர்வாகிகளிடம் உதவி கிடைக்கவில்லை என்றதும் மடாதிபதி ஜெயேந்திர  சங்கராச்சாரியிடமே கோகிலா தம்பதியினர் தன் குறையைக் கொட்டியுள்ளார்கள்.

“அய்யா நாங்க 10 வருசத்துக்கு மேல மடத்துலதான் வேலை செய்றோம். உங்கள விட்டா எங்களுக்கு வேற போக்கிடம் கெடையாது. முடியாத பிள்ளைய வச்சுருக்கோம். நீங்க பாத்து உதவி செஞ்சாதான் உண்டுன்னு ஒரு தடவ இல்ல நாலு தடவ சங்கராச்சாரி கால்ல விழுந்துருக்கேன். மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

புளிச்ச ஏப்பக்காரனுக்கு பசியேப்பம் புரியாதுங்க. அதனாலதான் ‘அழுவாதப் பாப்பா இந்தா வாழப்பழம்னு’ கல்கண்டத் தூக்கி கையில கொடுக்குறாரு சங்கராச்சாரி. சாதி பாசமெல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கற வரைதான். முடியாதவங்கள யாரு வேலைக்கி வச்சுக்குவா? நல்லவா கெட்டவா யாருன்னு தெரியாம உலகம் புரியாம இருந்துட்டோம். எங்க ஆளுங்களுக்கு நீங்க எவ்வளவோ தேவலாம்”.

ஆயிரம் பேருக்கு அன்னதானமா இருந்தாலும் அற்புதமா சமைப்பாராம் கோகிலாவின் கணவர். அவர் சமைச்சதை வயிராற சாப்பிட்டு வாயார வாழ்த்தினவங்க எத்தனெப் பேர் இருப்பாங்க, ஒருத்தர் புண்ணியம் கூட அவங்களக் காப்பாத்தாம நடுத்தெருவுல விட்ட போது பார்ப்பனராவே இருந்தாலும் கடவுள் மேல கோபம் வரத்தேனே செய்யும்?

பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு.

“வாடகை கொடுக்க முடியாம வீட்ட காலி செஞ்சுட்டு கோயில்ல அன்னதானம், தெரிஞ்ச வீட்டு திண்ணையிலப் படுக்கையின்னு ஆறு வருசமா இப்படிதான் வாழ்க்கைய ஓட்டறோம். இந்த நெலமையில எம்பிள்ளைய எங்கூட எப்புடி வச்சுக்க முடியும். அவர் தங்கச்சிதான் பாத்துக்குது. அவங்களும் வசதியானவங்க கிடையாது. ஏதோ எங்க கையில கெடைக்கிற காச எப்பையாவது கொடுப்போம்.

மடத்துக்கு வந்துபோன மாமா ஒருத்தர் நாலு வருசமா மாசம் 500 ரூபா உதவி செஞ்சாரு. அவருக்கும் பெரிய சம்பாத்தியம் இல்ல, பிள்ளைகள வச்சுட்டு சிரமப்படுறவருதான் இருந்தாலும் எங்க மேல எறக்கப்பட்டு குடுத்துட்டு இருந்தாரு.  பிறகு அவரும் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சம்பாத்தியம் போதல மண்ணிச்சுருங்கோ, மாமின்னு கைய விரிச்சுட்டார்.”

 

இதுதான் கோகிலாம்மாவின் கதை. அரசு மருத்துவமனையில் இருக்கும் இல்லாமை எனும் வறுமையை கொண்டிருக்கும் மக்கள் கோகிலாம்மாவுக்கு முடிந்த அளவு உதவுகிறார்கள். அம்பானி, டாடா, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்கள் வந்து போகும் பணம் பிதுங்கும் சங்கர மடம் உதவ முடியாதென்று கைவிரித்து விட்டது. பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு என்பதை கோகிலாம்மாவும் அந்த தொண்டுக் கிழ சாமியாரும் உணர்த்துகிறார்கள்.

காஞ்சிப் பெரியவரின் அருளுரையின் படி பார்த்தால் காஞ்சிமடத்தில் இருந்த பெரியவர், வேதம் விதித்த தர்ம வழியைப் பின்பற்றிப் புண்ணியத்தை அடைந்தவர். கோகிலா தம்பதியோ ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்து பாவத்துக்கு ஆளானவர் என்பதுதான்.

மனு தர்மத்தை ஒழிக்காமல் சங்கரராமன்களுக்கும், கோகிலாம்மாக்களுக்கும் நீதி கிடைப்பதில்லை, சங்கராச்சாரிகளுக்கும் தண்டனை கிடைப்பதில்லை!

– சரசம்மா