Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 509

நாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்

80
கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

ர்மயோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி தயாரித்துள்ள வானுயர்ந்த சிவன் சிலையைத் திறந்து வைக்க வரும் 2017 பிப் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஈஷா ஆசிரமம் என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் என்னும் கார்ப்பரேட் சாமியார் பல பத்தாண்டுகளாக இயற்கையின் மீதும் மக்களின் மீதும் நடத்திவரும் யுத்தம் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மோடியை வரவேற்பதற்காக மட்டுமே கோவையில் 6000-த்துக்கும் அதிகமான விளம்பர ஹோர்டிங்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்றால் மொத்த ஏற்பாட்டின் பணமதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஈஷா யோகா மையம் பற்றியும், சத்குரு என்னும் இந்த மோசடி பேர்வழியின் ஆசிரமத்துக்குப் பிரதமர் வருவதற்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு குறித்தும் எந்த ஊடகமும் பேச மறுப்பது ஏன்? ட்விட்டரில் கமல்ஹாசன் ஆய் போனால் கூட பிரேக்கிங் நியூஸ் போடும் இவர்கள் அதேச் சமூக வலைதளங்களில், சத்குரு-மோடி-கோவை வருகைக் குறித்து எண்ணற்ற எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதுகுறித்து கண்டுகொள்ளாதது ஏன்? ’அதற்கான தகுதி தங்களுக்கு இல்லை’ என உளப்பூர்வமாக உணர்ந்து குற்றவுணர்ச்சியில் குனிந்துகொண்டே கடந்து செல்கிறார்களா? அப்படி அவசரப்பட்டு தப்புக்கணக்குப் போடத் தேவையில்லை. அவர்களின் ஒரிஜினல் கணக்கு வேறு.

கழனியை அழித்த சிவன் – கட்டுமானத்திற்கும் முன்பும் பின்னும்

ஏன் மீடியா பேச மறுக்கிறது? விளம்பரங்களை அள்ளித் தருகிறார்கள் என்பது ஒரு கோணம். அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் இப்போது மோடியின் வருகையை ஒட்டிதான் ஜக்கி விளம்பரம் டி.வி.யில் வருகிறது. இதற்கு முன்பு ஈஷா நிகழ்ச்சிகளுக்கான அவ்வப்போதைய விளம்பரம்தானே தவிர, அட்டிகா கோல்ட் கம்பெனி போலவோ, லலிதா ஜூவல்லரி போலவோ தொடர் விளம்பரங்கள் ஈஷாவில் இருந்து வருவது இல்லை. எனவே விளம்பரம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாறாக இந்த கார்ப்பரேட் சாமியார் முன்வைக்கும் யோகா ஆன்மீகத்தில் இவர்கள் லயித்துப் போகிறார்கள். அதில் உண்மையாகவே மன அமைதி கிடைப்பதாக நம்புகின்றனர். அப்படி நம்ப வைப்பதற்காக வெள்ளியங்கிரி ஈஷா ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்பு யோகா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதனால் தான் சத்குரு மனைவியின் மர்ம மரணம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதைப்பற்றி எந்த மீடியாவும் பேச மறுக்கிறது. ஈஷாவில் தங்களின் இரண்டு மகள்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு பெற்றோரின் கண்ணீர் பேட்டிகள் பரபரப்பான ஊடக விவாதமாக மாறாமல் அந்த நேரத்து துணுக்குச் செய்தியாக மாறிப்போனதன் பின்னே உள்ளது இதுதான்.

எனவே தற்போது ஜக்கி வாசுதேவின் அட்டகாசம் குறித்தும், விதிகளை மீறி காடுகளை ஆக்கிரமித்து அழித்துள்ளது குறித்தும், யானைகளின் வழித்தடம் அழிக்கப்படுவது குறித்தும் எந்த ஊடகமும் பேசப்போவது இல்லை. நேர்ப்பட பேச்சு, ஆயுத எழுத்து, கேள்வி நேரம், காலத்தின் குரல் என எந்த நிகழ்ச்சியிலும் ஜக்கியைக் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். மோடி என்னும் பெரிய கேடியே ஆசீர்வாதம் செய்ய வரும்போது சின்னக் கேடியைப் பற்றி இவர்கள் வாய் திறப்பார்களா என்ன? அப்படி வாய் திறக்கும் யோக்கியத் தன்மை எந்த மீடியாவுக்காவது இருக்கிறதா?

கங்கைக் கரையில் டபுள் ஸ்ரீ ரவிசங்கரின் இயற்கை அழிப்பு மநாட்டிற்குச் சென்ற மோடி, கோவைப் பகுதியில் காடு கழனிகளை அழிக்கும் ஜக்கியின் நிகழ்ச்சிக்கு வருகிறார்.

தென் தமிழ்நாட்டு கடலோரத்தின் மணல் வளத்தை வெட்டி கூறுபோடும் கொள்ளையன் வைகுண்டராஜன் நடத்தும் நியூஸ் 7 சேனலுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா, வைகுண்டராஜனின் தேசிய வெர்ஷன்; நாட்டை கொள்ளை அடிப்பதில் இரண்டு தலைமுறை அனுபவம் கொண்ட ரிலையன்ஸ் அம்பானி நடத்தும் நியூஸ் 18, பொத்தேரி என்னும் பத்து ஏரிகள் நிறைந்த ஊரை கபளீகரம் செய்து எஸ்.ஆர்.எம் கல்வி கொள்ளை வளாகத்தை நிறுவி இன்று அதை நாடு தழுவிய அளவில் விஸ்தரித்துள்ள புதிய தலைமுறை, ஆளும் வர்க்கத்துக்கு கூழை கும்பிடு போட்டு அண்டிப் பிழைப்பதைப் பெருமையென கருதும் தந்தி டி.வி… என யாரும் இதுகுறித்துப் பேசப் போவது இல்லை.

மற்ற நேரத்தில் தங்களுக்குள் போட்டி இருப்பதைப் போலக் காட்டிக்கொள்ளும் இவர்கள், டி.ஆர்.பி.யை பிக்-அப் செய்யும் நோக்கத்தில் கூட ஜக்கியின் பக்கித்தனத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். நொடிக்கு ஒரு தரம் பிரேக்கிங் நியூஸ் போட்டு பார்வையாளர்களை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் இவர்கள், பல புதிய பிரேக்கிங் செய்திகளுக்கு வாய்ப்பு இருந்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். மாறாக வரும் 24-ம் தேதி மோடியின் கோவை வருகையைப் போட்டிப் போட்டுக்கொண்டு லைவ் கவரேஜ் செய்வார்கள். தங்கள் ஓபி வேன்களை நிறுத்தி நிருபர்களை லைவில் கதறவிட்டு அந்த பரபரப்பின் வெளிச்சத்தில் ஜக்கியின் மொத்த பித்தலாட்டங்களையும் மறக்கடிப்பார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி தினத்தில் நடுக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்குள் புகுந்த போலீஸ் வெறியாட்டம் நடத்தியது. அதற்கு முந்தைய கணம் வரைக்கும் இடைவிடாமல் லைவ் செய்தவர்கள், போலீஸ் அடிக்கத் தொடங்கிய அந்த நொடி முதல் கேமராவை வேறுபக்கம் திருப்பிவிட்டார்கள். ஒரு வார காலமாக மல்டி கேமரா செட்-அப்புடன், ஜிம்மி-ஜிப் எல்லாம் போட்டு கடற்கரையே கதி என கிடந்த தமிழக தொலைகாட்சிகள், குப்பத்து மக்கள் அடித்து நொறுக்கப்படுவதைக் காட்ட மறுத்தன. போலீஸ், லத்தியால் மக்களின் மண்டையைப் பிளந்தது என்றால் மீடியாக்கள் தங்களின் கேமராக்களை வேறுபக்கம் திருப்பி அந்த மக்கள் அடிபட்டு சாவதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. அந்தச் சதியின் கூட்டுப் பங்காளிகளாக இவர்கள் இருந்தார்கள். நடுக்குப்பம் வன்முறையை ஒட்டி மீடியாவில் வெளிவந்த காட்சிகள் மிக, மிகக் குறைவு. மாறாக அங்கே இருந்த தனிநபர்கள் தங்கள் செல்போன் வழியே எடுத்து பதிவேற்றிய காட்சிகளே அதிகம். அவற்றைக் கூட எந்த தொலைகாட்சியும் எடுத்து ஒளிபரப்பவில்லை.

122 அடி சிலை உருவாக்குவதற்கு அழிக்கப்பட்ட மக்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன?

எனவே இந்தத் தொலைகாட்சிகள் காட்டும் பரபரப்பின் பரப்பு மிகவும் ஆபத்தானது. அது நம்மை பரபரப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. மாறாக உண்மையாகவே மக்கள் பாதிக்கப்படும் காட்சிகள், அது எவ்வளவு பரபரப்புத் தன்மை கொண்டதாயினும் இவர்கள் அதைக் காட்டப்போவது இல்லை.

ஜக்கி வாசுதேவ் என்னும் ஆன்மிகக் கொள்ளைக்காரனின் வன ஆக்கிரமிப்பை, ஈஷா என்ற பெயரில் தமிழகத்தில் நடத்திவரும் ஒரு கருத்தியல்-பொருளியல் சூறையாடலை வெளிப்படையாக விவாதிக்கும் துப்பு தமிழகத்தின் எந்த மீடியாவுக்கும் இல்லை. ஜெகத்குரு, சங்கர்ராமனை கழுத்தறுத்தபோது மௌனம் காத்த இவர்கள், இப்போது சத்குரு வெள்ளியங்கிரி மலைக்காட்டை வெட்டி கூறுபோடும் போதும் தங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்களின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.

ஆனால் இது பேச வேண்டிய தருணம். இன்னும் இரண்டு நாட்கள். இன்று தேதி 22. வரும் 24-ம் தேதி மோடி கோவை வருகிறார். இப்போது தொடங்கி இன்னும் இரண்டு நாட்களுக்கு நாம் ஜக்கி வாசுதேவ் என்னும் கொள்ளைக்காரனின் திருட்டுப் பக்கங்களையும், இதற்கு ஆசீர்வாதம் அளிக்கவரும் பெரிய கேடி மோடியைப் பற்றியும், இவை எவற்றையும் பேசாத தமிழக ஊடகங்களையும் அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதுவோம்; பேசுவோம்; விவாதிப்போம். இதை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றுவோம். மெய்நிகர் உலகின் சூடு மெய்யுலகை தழுவட்டும்.

ஜக்கியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! மோடியே திரும்பிப் போ! பேச மறுக்கும் மீடியாவே பேசு!

– முத்து

ஓசூரில் குற்றவாளி ஜெயா படத்தை நீக்கிய பள்ளி மாணவர்கள் !

0

சூரில் பாடப் புத்தகங்களில் உள்ள தண்டனைக் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் உருவப்படம் பொருந்திய ஸ்டிக்கர் ஒட்டி மாணவர்கள் எதிர்ப்பு!

21-02-2017 செவ்வாய் மாலை 4 மணியளவில் ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் உருவப் படத்தை ஒட்டி மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர்எதிர்ப்புத் தெரிவித்தனர். பிறகு திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

திருட்டுத்தனமாக சொத்து சேர்த்த வழக்கில் ஏ1 குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டவர்களின் குற்றம் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டனைக் குற்றவாளி என்பது உச்சநீதிமன்றத்தாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் அவரது படம் நீக்கப்பட வேண்டும்; அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற பெயர்கள் நீக்கப்பட்டு அரசு பெயரில் மாற்றப்படவேண்டும். ஆனால், இந்த அரசு குறைந்த பட்சம் இந்த நியாயத்தைக் கூட கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. நீதிமன்றமும் இந்த விசயத்தை தானாக முன்வந்து வலியுறுத்தவோ, நிலைநாட்டவோ போவதில்லை.

காரணம், இந்த அரசுக் கட்டமைப்பு ஊழல் மயமாகிவிட்டது. அதனால், தண்டனை குற்றவாளி கிரிமினல் ஜெயலலிதாவின் படத்தை மக்களே அணிதிரண்டு அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பினர் முழக்கமிட்டு ஆர்ப்பாடம் செய்தனர். இன்று மாலை ஒசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்பாக மாணவர்களுக்கு அறிவித்து மாணவர்களின் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயாவின் உருவப் படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கர் ஒட்டினர்.

மாணவர்களும் திரளாக நின்று தங்கள் பாடப் புத்தகங்களில் உள்ள ஜெயா படத்தின் மீது திருவள்ளுவர் ஸ்டிக்கரைக் கேட்டு பெற்று ஒட்டினர். வியாபரிகளும் பொதுமக்களும் இதுதான் சரியான போராட்டம் என்று ஆதரித்தனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னணித் தோழர்கள் காந்தராஜ், ராமசாமி, செல்வி மற்றும் பலரும் பங்கேற்றனர்.

ஆர்பாட்டம் துவங்குவதற்கு முன்பு பள்ளியின் அருகிள் உள்ள கடைகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது, பிரசுரத்தை பார்த்தவுடன், யாரும் இப்படி சுட்டிகாட்ட முன்வரவில்லை நீங்கள் செய்வது எடுத்துக்காட்டாக உள்ளது என ஆதரித்தார்கள். பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

நாம் ஒருசில மாணவர்களின் நோட்டு, புத்தகங்களில் திருவள்ளுவர் உருவப் படத்தை ஒட்டினோம், பின்னர் மாணவர்களே முன் வந்து மூன்று, நான்கு என திருவள்ளுவர் படத்தை நம்மிடம் கேட்டு வாங்கி தனது பாட புத்தகம், நோட்டுகளில் உள்ள ஜெயா உருவப் படத்தை மறைத்து அதன்மீது திருவள்ளுவர் உருவப் ஒட்டினார்கள். மேலும், கடைகாரர்கள், ஆசிரியர்கள், பேருந்தில் செல்லும் பொது மக்கள், மாணவர்கள் என அனைவரும் இந்தப்போராட்டத்தை கவனித்து ஆதரவு கொடுத்துச்சென்றார்கள். முன்னதாக, கடந்த இரண்டுநாட்களாக “குற்றவாளிக்கு அரசு மரியாதையா?” என்ற தலைப்பில் முழக்கவடிவில் துண்டறிக்கை அச்சிட்டு மக்களிடையே வீடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
செய்தியாளர், புதிய ஜனநாயகம்,
ஓசூர். செல்-9944958840.

மெரினாவை அழகுபடுத்துவோம் ! கருத்துப் படங்கள்

0

அ.தி.மு.க -வும் 135 திருடர்களும் !

__________

அம்மாவின் ஆட்சி தொடரும்… – எடப்பாடி பழனிச்சாமி.

__________

மெரினாவை அழகுபடுத்துவோம் வாருங்கள் !

படங்கள் : துரை

இணையுங்கள்:

சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !

1
தருண் விஜய் – கேலிச்சித்திரம் : முகிலன் (கோப்புப் படம்)

ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு…..

அன்பார்ந்த மாணவர்களே வணக்கம்….

முன்னால் எம்பி தருண் விஜய் நமது பல்கலைக்கழகத்திற்கு (சென்னை பல்கலைக்கழகம்) வருகிறார். யார் அவரை அழைத்தது? எதற்காக வருகிறார்? ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி தான் அவரை அழைத்து வருகிறது. மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து பாசிச அடக்குமுறைகளை ஏவி வருகிறது. வரலாற்றுக்கு மாறான பொய்களையும் மதவெறி கற்பனைகளையும் பாட நூல்களில் திணித்து வருகின்றது.

கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் ஏபிவிபி மூலம் நுழைந்து மாணவர்களின் ஒற்றுமையைக் குலைத்து அவர்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து வருகிறது. குறிப்பாக இவர்கள் உயர்கல்வி நிறுவனங்களைக் குறி வைத்திருக்கின்றனர். உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே இயல்பாக உள்ள முற்போக்கு, ஜனநாயக கருத்துக்களை ஒழித்துக்கட்டிவிட்டு மதவெறி கொள்கைகளைத் திணிப்பது தான் இவர்களின் நோக்கம். இதை எதிர்த்துப் போராடும் மாணவர்களைத் தேச விரோதிகளாகச் சித்தரிக்கிறது பா.ஜ.க. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இந்துத்துவா கொள்கைக்கு எதிராகவும், மாணவர்களின் உரிமைக்காகவும் போராடிய ரோஹித் வெமுலாவை ஏபிவிபி தூண்டுதலின் பேரில் நிறுவனப் படுகொலை செய்தது ஹைதராபாத் பல்கலைக்கழகம்.

ஜேஎன்யு-வில் இடதுசாரி கருத்துக்களைப் பேசி வந்த மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரித்து சிறையில் அடைத்தது பா.ஜ.க அரசு. இந்த நடவடிக்கைக்கெதிராக மாணவர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள ஜனநாயக சக்திகளும் போராடினர். பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட்டு அம்பலமானது. அதன் பிறகு நஜீப் என்கிற மாணவர் திடீரென்று காணாமலடிக்கப்பட்டார். இன்று வரை அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கு பின்னாலிருப்பது ஏபிவிபி கும்பல் தான்.

  • நஜீப்

    அதே போல பெரும்பான்மை ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமூகநீதி கொள்கையை ஒழித்துக்கட்டும் நோக்கில் நீட்  NEET நுழைவுத்தேர்வைத் திணிக்கிறது.

  • புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் நவீன குலக்கல்வியை திணிக்கிறது.
  • நீட் தேர்வுக்கு இணையாக பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வைத் திணிக்கவிருக்கிறது.
  • நாடு முழுவதுமுள்ள பிராந்திய மொழிகளை ஒழித்து செத்துப்போன சமஸ்கிருதத்தை திணிக்கிறது. அதற்காக 1500 கோடி மக்கள் பணத்தை ஒதுக்குகிறது. கல்வித்துறையில் அன்னியமுதலீட்டை அனுமதித்து ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்க முயற்சிக்கிறது.
ரோகித் வெமுலா

பா.ஜ.க அரசின் இந்த நோக்கங்களை எல்லாம் தடையின்றி அமல்படுத்துவதற்காகத் தான் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் அமைப்பான ஏபிவிபி பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இயங்கி வருகிறது. சுயமரியாதை மண்ணான தமிழகத்தில் கால் பதிக்கப் படாதபாடு படும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழ் மொழியின் உயர்வையும், திருக்குறளின் மேன்மையும் பேசி, கொல்லைப்புற வழியாக காலூன்ற முயற்சிக்கிறது. இந்த வேலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பவர் தான் தருண் விஜய். தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை மென்மையான முறையில் பேசிவரும் நரி தான் இந்த தருண் விஜய். நமது பல்கலைக்கழகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்குவதற்காக தான் தருண் விஜயை அழைத்து வருகிறது ஏபிவிபி இவர்களை பல்கலைகழகத்தில் அனுமதிப்பது வரலாற்றுப் பிழையாகும்.

எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நோக்கத்துடன் நுழையும் ஆஎஸ்.எஸ் தருண் விஜய்யை மாணவர்களாக ஒன்றிணைந்து விரட்டி அடிப்போம்.

இடம்: சென்னைப் பல்கலைக்கழக நுழைவுவாயில், நாள்: 22.02.2017,  நேரம்: 01.15pm

தகவல்: STUUNOM,
STUDENTS UNION UNIVERSITY OF MADRAS

ஒவ்வொரு நாளும் தனியே அழுது கொண்டிருக்கிறேன்

1

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்  – பாகம் 2

நந்த கிஷோர், (22 வயது, தற்போது வேலையின்றி இருக்கும் முன்னால் ஆலைத் தொழிலாளி) – இது தான் அரசு கொள்கைகளை வகுக்கும் முறையா?

நான்கு வருடங்களுக்கு முன் பீகாரின் கயாவிலிருந்து வேலை தேடி லூதியானா வந்தவர் நந்த கிஷோர். கம்பளித் தொழிற்சாலை ஒன்றில் 7,500 ரூபாய் மாதச் சம்பளத்தில் அவருக்கு வேலை கிடைத்தது – தற்போது அதை இழந்து விட்டு வேறு வேலை தேடி வருகிறார். தொழிலாளிகள் அடர்த்தியாக வசிக்கும் சுந்தர் நகரில் தனது நாட்களை கழித்து வருகிறார்.

அவருக்கு வேறு வேலைகள் ஏதும் கிடைக்கவில்லை – கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் அவரது துன்பத்தை அதிகரித்துச் செல்கின்றன. “நான் சொந்த ஊரிலிருக்கும் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. அங்கே எனது வயதான பெற்றோர் இருக்கின்றனர். நான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நானே வேலையற்று இருப்பதைக் காண அவர்களுக்கு வருத்தமாக இருக்கும்” என்கிறார் நந்த கிஷோர்.

இப்போதைக்கு அவரது சொந்த ஊரிலிருந்து வந்து இங்கே தங்கியிருக்கும் வேறு நான்கு பேரின் அறையில் தங்கிக் கொள்ளும் முடிவில் இருக்கிறார். ஊரிலிருக்கும் பெற்றோருக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வந்தார் நந்தா. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ஏதும் அனுப்ப முடியவில்லை. “அவர்களது ஒரே மகனான எனக்கு இது பெரும் மனவலியை அளிக்கிறது” என்கிறார் அவர்.

தொழிலாளிகளை ஆலை முதலாளிகள் சுரண்டினார்களென ஆத்திரப்படுகிறார் – “இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்ததற்கு பாதி சம்பளத்தில் வேலை தருவோம் என்கிறார்கள். வேறு வழியில்லாத பலரும் அப்படி வேலைகளை ஏற்றுக் கொண்டனர், வேறு சிலர் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டார்கள்” என்கிறார்.

ஆனால், அரசைத் தான் அறுதியிட்டு குற்றம் சாட்டுகிறார் – ”ஏ.டி.எம் வாசலில் நிற்கும் துன்பம் மட்டும் என்றால் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், எனது வேலையைப் பறித்து விட்டார்கள்” வானத்தை வெறித்தபடி பேசுகிறார் கிஷோர். “இப்படித் தான் அரசு முடிவுகளை எடுக்குமா? எனக்கு அரசாங்கம் எப்படி இயங்குகின்றது என்பது தெரியாது. ஆனால் எனது வாழ்க்கையை சீரழிவுக்குள் தள்ளிவிட்டார்கள் என்பது மட்டும் தான் புரிகின்றது”

***

பர்மிந்தர் சிங், (30 வயது. தொழிற்சாலை சூப்பர்வைசர்) – ”பணமதிப்பழிப்பினால் எனது தாயார் இறந்து விட்டார்”

னது தாயைக் குறித்து பேசும் போது பர்மிந்தரின் கண்களில் கண்ணீர் வழிகின்றது. ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் வரிசையில் நின்று கொண்டிருந்த போது பர்மிந்தர் சிங்கின் தாயார் இறந்துள்ளார். அவரது மகளின் திருமணத்திற்கு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் சென்ற பர்மிந்தர் சிங்கின் தாயாருக்கு வயது 50.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக வங்கி வரிசையில் காத்திருக்கும் போதோ அல்லது ரூபாய்த் தாள் கட்டுப்பாட்டின் விளைவாக போதிய பணம் கட்டமுடியததால் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டோ சுமார் 80 பேர் வரை இறந்துள்ளார்கள் என அறியப்பட்டுள்ளது.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாகவே எனது தாயார் இறந்தார். இனி எத்தனை கோடி கொடுத்தாலும் அவரைத் திரும்ப கொண்டு வர முடியாது” என்கிறார் பர்மிந்தர்.

ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரியும் பர்மிந்தருக்கு மாதச் சம்பளம் 13,000. தனது மனைவி, மகள் மற்றும் தங்கையுடன் நடுத்தரவர்க்க குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். இருபத்தைந்து வயதான சகோதரி தனது தாயின் மரணத்துக்கு தன்னையே பழித்துக் கொள்வதாக கூறுகிறார் பர்மிந்தர் – “எனது தங்கையை இந்த நிலையில் பார்ப்பதற்கு இதயமே நொறுங்குகிறது. அவளுக்கு முன் தைரியமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறேன்; ஆனால், ஒவ்வொரு நாளும் எனது அறையில் தனியே அழுது கொண்டிருக்கிறேன்” என்கிறார் பர்மிந்தர்.

பர்மிந்தர் அரசின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் – “அது எனது தாயின் பணம். தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக எனது தாய் இறந்திருக்க கூடாது. எந்த இடையூறும் இன்றி தனது பணத்தை எடுக்கும் உரிமை அவருக்கு உண்டு”

***

யமுனா பிரசாத் (29 வயது, ஆலைத் தொழிலாளி) – ”ஒரு பணக்காரனால் தனது தாயை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்ய முடியும்?

முனா பிரசாத் உடைந்து போயிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் 70 வயதான தனது தாயை இழந்ததில் இருந்து இதே நிலையில் தான் இருக்கிறார் அவர் – “ இறந்து போன எனது தாயை இரண்டு நாட்களாக அடக்கம் செய்யக் கூட முடியவில்லை. அந்த சமயம் கையில் காசில்லை”

டிசம்பர் 25ம் தேதி வயிற்று வலி என்று சொன்ன தனது தாயாரை அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் யமுனா பிரசாத் – “அரசு மருத்துவமனைகள் எவ்வளவு கேவலமான முறையில் நடத்தப்படுகின்றன என்பது இங்கே எல்லோருக்கும் தெரியும்”

தனியார் மருத்துவமனைக்கு தனது தாயாரை அழைத்துச் சென்றிருந்தார் சிறப்பான மருத்துவம் கிடைத்திருக்கும் என்று யமுனா பிரசாத் நம்புகிறார். தனியார் மருத்துவமனை என்றால் நிறைய பணம் செலவாகும் – அந்த சமயத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தின் முன் பணத்திற்காக காத்திருக்கும் அளவுக்கு அவருக்கு நேரமில்லை.

பணமில்லாத நிலையில் தனது தாயின் இறுதிச் சடங்கைக் கூட அவரால் உரிய நேரத்தில் செய்ய முடியவில்லை – “இப்போது எல்லாம் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், எனது அம்மாவுக்கு ஒரு கௌரவமான இறுதிச் சடங்கைக் கூட செய்ய முடியாமல் தவித்ததை என்னால் எப்படி மறக்க முடியும்?” என்கிறார் யமுனா பிரசாத்.

உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்காக பத்தாயிரம் ரூபாய்கள் கொடுத்து உதவியுள்ளார். அருகிலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் 12 மணி நேர ஷிப்டில் வேலை செய்யும் யமுனா பிரசாத்துக்கு மாதச் சம்பளம் வெறும் எட்டாயிரம் ரூபாய் தான். இந்தச் சம்பளத்தில் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பிழைப்பு நடத்தியாக வேண்டும். எந்தச் சேமிப்புக்கும் வழியில்லாததால் தன்னுடைய குழந்தைகளும் தன்னைப் போலவே தொழிலாளியாகவே ஆவார்கள் என கவலைப்படுகிறார் யமுனா பிரசாத்.

அரசாங்கம் பணக்காரர்களுக்கு பயன்படும் திட்டங்களைத் திணிப்பதாகவும், தன்னைப் போன்ற ஏழைகளைக் கண்டு கொள்வதில்லை எனவும் சொல்கிறார் யமுனா பிரசாத் – “ஏழைகளின் மீது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கவலையே படாமல் ஏன் திட்டங்களை வகுக்கிறார்கள்? ஒரு பணக்காரன் தன்னுடைய அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க வங்கிக் கடனட்டையைத் தேய்க்க முடியும். என்னைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள்?”

***

அனிஷா கத்தூன், (48 வயது இல்லத்தரசி) – ”அந்தப் பணத்தைச் சேமிக்க பல வருடங்களானது எனக்கு”

த்தாயிரம் ரூபாயைச் சேமிக்க தனக்கு பல ஆண்டுகள் ஆனதாகச் சொல்கிறார் அனிஷா கத்தூன். தனது கணவருக்குத் தெரியாமல் சேமித்து வந்த அந்தப் பணத்தைக் கொண்டு எப்படியாவது தனது மகளின் திருமணத்தை நடத்தி விடும் திட்டத்தில் இருந்திருக்கிறார் அனிஷா.

அனிஷா கத்தூனின் கணவர் புது தில்லியை அடுத்துள்ள நோய்டாவில் ரிக்சா இழுக்கிறார். அவர்கள் நோய்டாவின் செக்டார் 16-ல் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள குடிசை ஒன்றில் வசிக்கிறார்கள். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து அனிஷா சேமித்திருந்த பத்தாயிரமும் செல்லாக்காசுகளாகி விட்டன. வேறு வழியின்றி தனது கணவரிடம் சொல்லியிருக்கிறார். தனக்கே தெரியாமல் தனது மனைவி காசு சேர்த்திருப்பதை அறிந்த அந்தக் கணவன் ஆத்திரப்பட்டுள்ளார் – தன்னால் வங்கியின் முன் வரிசையில் நிற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

“இதே பகுதியில் இருந்த ஒரு பையனின் உதவியோடு தான் பணத்தை மாற்ற முடிந்தது – மாற்றித் தருவதற்கு அவன் இரண்டாயிம் ரூபாயை கமிஷனாக எடுத்துக் கொண்டான்” என்ற அனிஷா, ”பலருக்கும் நான் சேர்த்திருந்த தொகை பெரியதாகத் தெரியாது. ஆனால் அது மட்டும் தான் எனது சேமிப்பு. கமிஷனுக்காக நான் இழந்த இரண்டாயிரம் ரூபாய் எனக்குப் பெரிய தொகை” எனக் குறிப்பிட்டார்.

கணவர் சம்பாதிக்கும் ஒன்பதாயிரம் ரூபாயில் குடும்பத்தை நடத்தி வரும் அவர், அரசாங்கம் தன்னை ஏமாற்றி விட்டதாக குறிப்பிடுகிறார் – “பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏழைகளுக்கு நல்லது நடக்கும் என்று அரசாங்கம் சொன்னது. எனக்கோ அந்தப் பணத்தை சேர்க்க வருடக்கணக்கானது. அதில் கொஞ்சத்தை இழந்ததை நினைத்தால் எனது இதயமே நொறுங்கிப் போகிறது”

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

தமிழாக்கம்: முகில்
நன்றி : அல்ஜசிரா
100 days of demonetisation: Stories of hardship

பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !

0

டெல்டா மாவட்டங்களில் இரு நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் சாவுகளுக்கு நீதி கேட்டு, நிவாரண உதவி கேட்டு அனைத்து விவசாயிகள் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, அரைவேக்காட்டு அமைச்சர்களை அனுப்பி ஒப்புக்கு ஆய்வுசெய்து, போனால் போகட்டும் என்று சில நிவாரண அறிவிப்புகளையும் வெளியிடிட்டிருந்தார், முன்னாள முதலமைச்சர் ஓ.பி.எஸ்.

“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5,465 ரூபாய்  வறட்சி நிவாரணமாக வழங்கப்படும். மேலும், காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 25,000 ரூபாய் பெற்றுத் தரப்படும். தற்கொலை செய்துகொண்ட 17 பேருக்கு தலா மூன்று இலட்சம் வழங்கப்படும்” எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கண்முன்னே பயிர் கருகுவதைக் கண்டும், கடன் சுமையாலும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் செத்துவிட்ட செய்தி வந்த பிறகும், வெறும் 17 பேருக்கு மட்டுமே நட்டஈடு வழங்கியிருப்பது அயோக்கியத்தனம் என்றால், நிவாரணத் தொகையும் அற்பத்தனமாகவே உள்ளது.

“ஒரு ஏக்கருக்கு ரூ.20,000 வரை விவசாயிகள் முதலீடு செய்திருக்கும்போது 5,465 ரூபாய் என்பது மிகவும் குறைவு. வறட்சி நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாய்க்கு மேல் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இதனடிப்படையில்தான் மாநில அரசு இந்த இழப்பீடை முடிவு செய்துள்ளது. தனது விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது” என்று ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலை எதிரொலிக்கிறார், அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொருளாளர் நாகை எஸ்.சிறீதர்.

“இந்த ரூபாயும் மொத்தமா கிடைக்காது. ரூ.4000 தான் எங்கள் கைக்கு வரும். மீதியெல்லாம் லஞ்சமாப் போயிரும். அந்த நாலாயிரமும் எப்போ வரும்னு தெரியலையே” என்று புலம்புகிறார்கள் விவசாயிகள். அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரணத்தின் இலட்சணம் இதுவென்றால், அரசு வாங்கித் தருவதாகக் கூறும் காப்பீட்டுத் தொகையின் கதையோ பெரும் மோசடியாக இருக்கிறது.

1999 முதல் 2014 வரை நடைமுறையில் இருந்துவந்த பழைய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி, அரசு காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக இழப்பீடு வழங்கி வந்தன. ஆனால், மோடி அரசு அந்நிய மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய “தேசிய வேளாண் காப்பீட்டு”த் திட்டத்தை கடந்த 2015 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது.  மூன்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே இருந்த இடத்தில், தற்போது 16 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதித்துள்ளது மோடி அரசு.   இதற்கு வசதியாக பழைய விதிமுறைகளை நீக்கப்பட்டு, தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குச் சாதகமான புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளன.

பயிர்க் காப்பீடு செய்த வயலை ஸ்மார்ட் போன், ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யும் அதிகாரிகள். (கோப்புப் படம்)

சிறுவிவசாயிகளுக்கு 2.5%, பிற விவசாயிகளுக்கு 1.5% என்றிருந்த பிரிமியத் தொகை, தற்போது 16% என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 25,000  ரூபாய் காப்பீடு செய்ய 4,000 ரூபாய் பிரிமியமாகச் செலுத்த வேண்டும். இதற்கு எதிராக விவசாய சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்திய பின்,  2% பிரிமியத்தை மட்டும் விவசாயிகள் செலுத்துவது என்றும், மீதியை மத்திய-மாநில அரசுகள் மானியமாக வழங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, தற்போது விவசாயிகள் 800  ரூபாயும், மத்திய, மாநிலஅரசுகள் ரூ.3,200-ஐயும் செலுத்தி வருகின்றன. உர மானியம் ரத்தானது போல, இந்த மானியமும் நாளை பறிக்கப்படலாம்!

பழைய காப்பீட்டுத் திட்டப்படி, 100% இழப்புக்கு  5%-ஐக் கழித்து  95% இழப்பீடு பெறமுடியும். விவசாயிகள் காப்பீடு செய்துள்ள தொகைக்கு மேல் இழப்பானாலும், அதை மத்திய, மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் விதிமுறைகள் இருந்தன. ஆனால், புதிய திட்டப்படி 100 இழப்பீட்டிற்கு நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு  70%, பிற மாவட்டங்களுக்கு 60% மட்டுமே இழப்பீடு பெறமுடியும். மேலும் 150%க்குமேல் இழப்பு ஏற்பட்டால், (அதாவது ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய்  என விவசாயிகள் காப்பீடு செய்திருக்கும்போது, இழப்பு 37,500 ரூபாய்க்கு மேல் இருந்தால்)  முழு இழப்பீட்டையும் மத்திய-மாநில அரசுகளே ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில்தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இறங்கியுள்ளன.

இதன்படி, “ தற்போது 25,000 ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ள நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் ரூ.17,500-ம், பிற மாவட்ட விவசாயிகள்  ரூ.16,000-ம் தான் இழப்பீடாக பெறமுடியும். அரசு கூறுவதுபோல 25,000 ரூபாய் பெறுவதற்கு புதிய திட்டத்தில் இடமில்லை. தமிழக அரசு நாடகமாடுகிறது” என்று சாடுகிறார் திருவாரூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் திரு.காவிரி தனவேல்.

இழப்பீட்டைக் கணக்கிடுவதிலும் புதிய திட்டம் விவசாயிகள் நலனுக்கு எதிராகவே உள்ளது. பழைய திட்டத்தில், 5  வருட சராசரி மகசூலில் குறைந்த மகசூல் உள்ள 2 வருடத்தை நீக்கி விட்டு, மீதமுள்ள 3 வருட மகசூலில் இருந்து உத்தேச மகசூல் தீர்மானிக்கப்படும். ஆனால், புதிய திட்டத்தில், 7 வருட சராசரியில், அதிக மகசூல் உள்ள 2 வருடத்தைக் கழித்து மீதியுள்ள 5 வருட சராசரியிலிருந்து உத்தேச மகசூல் கணக்கிடப்படுகிறது. எனவே, பழைய திட்டத்தைவிட புதிய திட்டத்தில் இழப்பீடு குறைவாகவே இருக்கும்.

இவ்வாறு எல்லாவகையிலும் விவசாயிகளை விட, ஐ.சி.ஐ.சி.ஐ.,லாம்போர்டு, ஹெச்.டி.எஃப்.சி., இஃப்கோ-டோக்கியோ போன்ற 16 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டதுதான் மோடியின் தேசிய வேளாண் காப்பீட்டுக் கொள்கை.

கடந்த வருடம் தமிழக அரசு செலுத்த வேண்டிய  பிரிமியத் தொகை ரூ.19 கோடி, மற்றும்  பங்குத் தொகையான ரூ.198 கோடியையும் இன்றுவரை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் 2015-ஆம் ஆண்டிற்கான  இழப்பீடே கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கும் நிலையில், நடப்பு வறட்சி நிவாரணமும், காப்பீட்டுத் தொகையும் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.  பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்ட டோல்கேட் கட்டண வசூலை, ஒரே வாரத்தில் அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கிய மோடி, தமிழக வறட்சிக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்து வருகிறார்.

பழைய காப்பீடு திட்டப்படி, அடுத்த பருவம் தொடங்குவதற்கு முன் இழப்பீடு தரவேண்டும். புதிய திட்டப்படி, இழப்பு ஏற்பட்ட 30 நாட்களில் இழப்பீட்டுத் தொகையை வழங்கவேண்டும்  என்று அரசு விதி இருக்கிறது. தான் இயற்றிய விதிமுறைகளுக்கு தானே கட்டுப்படாத தான்தோன்றி அரசு, தனது குடிமக்களை காப்பாற்றும் என நம்புவது ஏமாளித்தனமல்லவா!

– கதிர்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள்

0

பணமதிப்பிழப்பு : மோடி அரசின் அழிவுக் கதைகள் – பாகம் 1

லூதியானா மற்றும் நோய்டா, இந்தியா – கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று நள்ளிரவுக்குச் சில மணிநேரங்கள் முன் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்காக தொலைக்காட்சியின் தோன்றினார். உயர்மதிப்புக் கொண்ட பணத்தாள்களான 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்பதை அவர் அறிவித்தார்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இடத்தைப் பிடித்திருக்கும் ”கருப்புப் பணம்” அல்லது கணக்கில் வராத வருமானத்தை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கை இது என அவர் தெரிவித்தார். ஆனால், பெரும்பான்மையாக பணப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய சமூகமோ திடீரென நின்று போனது. குறிப்பாக தினக்கூலிகளும் ஏழை இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதோ, ஏழு இந்தியர்கள் பணமதிப்பழிப்பு தொடர்பாக தங்கள் கதைகளை விவரிக்கின்றனர் –

மோனிகா, இல்லத்தரசி (48 வயது) – பணமதிப்பிழப்பு எங்களை பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது.

இந்தியாவின் 86 சதவீத பணத்தாள்களைத் தடை செய்யும் மோடியின் முடிவைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகத் தனது குடும்பம் அனுபவித்த துயரங்களை மோனிகாவால் மறக்க முடியவில்லை.

மொடியின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டின் விளைவாக லூதியானாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் தனது கணவருக்கு தொடர்ந்து இரண்டு மாத சம்பளம் நிறுத்தப்பட்டதை வீட்டில் உள்ள ஒடுங்கிய சமையலறையில் நின்றவாறே விவரிக்கிறார் மோனிகா.

இருபத்தோரு வயதான மகளையும் பதினான்கு வயதான மகனையும் சேர்த்து நான்கு பேர் கொண்ட குடும்பம் அது. மோனிகாவின் கணவருக்குக் கிடைக்கும் ஒன்பதாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தை நம்பியிருந்த அக்குடும்பம் சில சமயங்களில் உணவுக்கே வழியின்றித் தவித்துள்ளது.

”எனது குடும்பத்தினர் பல நாட்கள் சாப்பிடாமல் உறங்கினர்” என்கிறார் அவர். ”இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை எங்களைப் பிச்சையெடுக்கும் நிலையை நோக்கித் தள்ளி விட்டது. இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்கிறார் மோனிகா. ”தெருவில் இறங்கி மக்களிடம் கைநீட்டி காசு கேட்பதற்கு நாங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை” என சமயலறை ஜன்னலில் நிலைகுத்திய பார்வையோடு சொல்கிறார்.

அப்படியே ஒருவேளை கேட்டிருந்தாலும் கூட அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் கூட உதவும் நிலையில் இல்லை என்பதை விளக்கிய மோனிகா, “இந்தப் பகுதியில் எல்லோருமே ஏழைகள் தான். எல்லோருமே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்” என்கிறார்.

பணத்தடை மோனிகாவின் அக்கம்பக்கமாக வசிக்கும் ஏழைகளையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. தனது கணவருக்கு தற்போது தவணை முறையில் சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட மோனிகா, இப்போதும் நிலைமை சீரடையவில்லை என்கிறார். சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் பணப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட நாட்டில், பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவாக செல்லாக்காசாகிப் போன பழைய பணத்தாள்களை மாற்ற கோடிக்கணக்கானவர்கள் வங்கிகளின் முன் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.

ஆனால், மோனிகாவுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, “நாங்கள் ஏழைகள், எங்களுக்கு வங்கிக் கணக்கெல்லாம் கிடையாது” என்கிறார். மேலும் கூறுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை எங்களது எதிர்காலத்துக்கு எப்படி நன்மை செய்யும் எனத் தெரியாது – ஆனால், தற்போதைய வாழ்க்கையை அது கொடுங்கனவாக்கி விட்டது” என்கிறார்.

***

ஹேமலதா (தையல் தொழிலாளி, 29 வயது) – கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் காலி வயிற்றோடு உறங்கினார்களா?

லூதியானாவின் சாம்ராலா சௌக்கில் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களுக்காக அரசு நிர்மாணித்த வீடுகளின் தொகுப்பில் வசிக்கும் மோனிகாவின் கதை மட்டும் தனித்துவமானதல்ல. அதற்கு இணையான கதைகளும் அங்கே நிறைய இருக்கின்றன.

மோனிகாவின் அண்டை வீட்டைச் சேர்ந்தவர் 29 வயதான ஹேமலதா. பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அருகிலிருக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இவரது கணவருக்கு வேலை பறிபோயிருக்கிறது. தொகுப்பு வீடுகள் கொண்ட அந்த காலனியின் மையத்தில் வேறு சில பெண்களுடன் அமர்ந்திருக்கிறார் ஹேமலதா. மிக நெருக்கமாக கட்டப்பட்ட சுமார் 30 கான்க்ரீட் வீடுகளைக் கொண்ட அந்தக் காலனியில் அவர்கள் அமர்ந்திருந்த பகுதி தான் ஓரளவுக்கு பொதுப் புழக்கத்திற்கு பயன்படும் பகுதியாகும்.

கணவரின் வேலையிழப்பைத் தொடர்ந்து வருமானம் நின்று போனதை ஈடுகட்ட பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார் ஹேமலதா.

”சால்வைகளை வெட்டிக் கொடுக்கும் இந்த வேலையை பக்கத்து வீட்டினர் தான் எனக்கு கொடுத்தனர். ஒரு சால்வையை வெட்டிக் கொடுத்தால் ஐம்பது பைசா கிடைக்கும். ஒவ்வொரு நாளும் 50-லிருந்து 60 சால்வைகள் வரை வெட்டிக் கொடுக்க முடியும்” என்ற ஹேமலாதாவைச் சுற்றி சால்வைகள் குவிந்திருக்க, அவரது மூன்று வயது பெண் குழந்தையும் அமர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவர் சம்பாதிக்கும் முப்பது ரூபாய்களை வைத்துக் கொண்டு அந்தக் குடும்பத்தின் மிக அடிப்படையான தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது.

”இது மிகக் குறைவான தொகை. இதை வைத்துக் கொண்டு ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது. நான் வாடகை கட்ட வேண்டும், மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணமெல்லாம் வேறு இருக்கிறது” எனச் சொல்லும் போதே அவரது குரல் உடைகிறது. “வேறு வழியில்லை. எனது கணவர் இன்னொரு வேலையைத் தேடிக் கொள்ளும் வரை எப்படியாவது சமாளித்தாக வேண்டும்” என்கிறார் ஹேமலதா.

இத்தனை செலவுகளைத் தாண்டி பிறந்ததில் இருந்தே பல நோய்களால் அவதிப்படும் தனது இரண்டு வயது குழந்தைக்கும் அவர் மருந்துகளை வாங்க வேண்டும். “எனது மகளுக்கு தினமும் மருந்து கொடுத்தாக வேண்டும். வேறு வழியில்லாமல் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ கந்து வட்டிக்காரர்களிடமோ தான் கடன் வாங்க வேண்டியிருக்கிறது” என்ற ஹேமலதா, “அதையெல்லாம் எப்படித் திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ?” எனக் கேட்கிறார்.

இந்தியாவின் சராசரி மாதச் சம்பளமான 16,660 ரூபாயை விட ஹேமலதாவின் கணவர் பெற்று வந்த மாதச் சம்பளமான 7000 குறைவு தான் என்றாலும், நால்வர் கொண்ட அந்த குடும்பத்தை எப்படியே கரையேற்றி வந்தது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அவரது கணவருக்கு வேறு வேலையும் கிடைக்கவில்லை.

ஆயத்த ஆடைகளுக்குப் பெயர் போன லூதியானா ஒரு பெரிய தொழில் நகரம். லூதியானாவில் மட்டும் சுமார் 12,000 ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. ஆனால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அடுத்து இந்நிறுவனங்களில் சுமார் எழுபது சதவீதத்துக்கும் மேல் மூடப்பட்டு சுமார் நான்கு லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

அரசின் முடிவால் தனது கணவரின் வேலை பறிபோனதென அவர் ஆத்திரப்படுகிறார் – “அரசின் எல்லாத் திட்டங்களும் பணக்காரர்களுக்கானவை என்றே நினைக்கிறேன்; அவர்கள் ஏழைகளைப் பற்றி நினைத்துக் கூட பார்ப்பதில்லை” என்ற ஹேமலதா, ”தயவு செய்து பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் வைத்திருந்த ஒருவராவது பட்டினியோடு தூங்கினார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா” எனக் கேட்கிறார்.

தங்களைப் போன்ற ஏழைகளுக்கு அரசு ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டுமெனச் சொல்லும் ஹேமலதா, “இது மாபெரும் பேரழிவு. மீண்டும் எனது வாழ்கை சீரடையும் எனத் தோன்றவில்லை” என்கிறார்.

***

ராஜ்விந்தர் சிங் (34 வயது, தொழிற்சங்கத் தலைவர் ) – இந்த நடவடிக்கை மக்களை வேலையற்றவர்களாக்கி பட்டினியிலும் நம்பிக்கையற்ற நிலைக்கும் தள்ளியிருக்கிறது.

”பணமதிப்பழிப்பு நடவடிக்கை எந்த வகையில் பயனுள்ளது என்பது எனக்குத் தெரியாது; ஆனால், முறைசாராக் கூலித் தொழிலாளிகளுக்கு அது ஒரு மாபெரும் பேரழிவு” என்கிறார் ராஜ்விந்தர் சிங். கர்கானா மஸ்தூர் யூனியனின் (ஆலைத் தொழிலாளர் சங்கம்) தலைவர் ராஜ்விந்தர். லூதியானாவில் உள்ள அரசு தொகுப்பு வீடுகள் காலனியில் இருக்கும் ஒரு சிறிய நூலகத்தில் அமர்ந்திருந்தார் ராஜ்விந்தர்.

பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பு வந்த உடனேயே மொத்த விலைச் சந்தை சுமார் 20 நாட்களுக்கு மூடப்பட்டதாக குறிப்பிடும் ராஜ்விந்தர், “அது மக்களின் வேலைகளைப் பறித்து பட்டினியிலும் நெருக்கடியிலும் தள்ளிவிட்டது” என்கிறார். மேலும் பேசும் போது, “சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து விற்பனை நின்று போனது. இதனால் ஆலைகளின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு எஞ்சிய ஆலைகளில் 50 சதவீத அளவுக்கு ஆட்குறைப்பும் செய்யப்பட்டது” என்கிறார்

”எனக்குத் தெரிந்து 250 தொழிலாளர்களுடன் இயங்கி வந்த ஆலைகள் எல்லாம் இப்போது பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெறும் ஐந்து தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றது” எனக் குறிப்பிட்ட ராஜ்விந்தர், பீகார், மேற்குவங்கம், உபி போன்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்த கூலித் தொழிலாளிகள் வேறு வழியின்றி சொந்த ஊர்களுக்கே சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

“கடந்த பல நாட்களாக வீட்டில் உணவில்லாமல் அல்லாடிய பல தொழிலாளர்களைப் பார்த்து விட்டேன் – ஏன் அவர்களுடைய குழந்தைகளும் கூட பட்டினி தான் கிடந்தார்கள்” என்ற ராஜ்விந்தர், சில ஆலை முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களுக்கு செல்லாத நோட்டுகளில் சம்பளம் வழங்கியதாக குறிப்பிடுகிறார் – “அந்தக் காசை வாங்கிக் கொண்டு வங்கிகளின் முன் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதைத் தவிற ஏழைகளுக்கு வேறு வழியில்லை. இவர்கள் தினக்கூலிகளாகவும் இருப்பதால் இந்த வாய்ப்பை விட்டால் அன்றைய கூலியும் கைக்கு வராது” என்றவர் தனது கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

தொழிலாளிகளின் துன்பதுயரங்கள் அவரையும் வெகுவாக பாதித்திருந்தது. “தொழிலாளிகளிடம் இருந்து வசூலிக்கும் சந்தாவில் இருந்து தான் எனக்கு சம்பளம் தரப்படுகின்றது. தொழிலாளியிடமே பணமில்லை என்றால், தொழிற்சங்கத்துக்கு யார் தான் சந்தா கட்டுவார்கள்?”

– தொடரும்

தமிழாக்கம்: முகில்
நன்றி : அல்ஜசிரா
100 days of demonetisation: Stories of hardship

களவாணி ஜெயா படங்களை அகற்று ! தடையை மீறி தமிழகமெங்கும் போராட்டம் !!

10

விழுப்புரம்

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் இன்று -20.02.2017 திங்கள் காலை 10.00 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை  அருகே குவிந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். மோகன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழக்கங்கள் எழுப்பினர். பீதியடைந்த போலிசு வழக்கம் போல  குற்றவாளி ஜெயாவுக்கு ஆதரவாக களமிறங்கி போராடிய மக்கள் அதிகார அமைப்புதோழர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்ததனர்.

கைது செய்யும் போது அதைப் பார்த்த கூடி நின்ற மக்களில் பெண்கள் கோபமாக பேசிக்கொண்டார்கள்….
“ஆமாமாம் அவள உடக்கூடாது. அவ போட்டோ இருக்கக்கூடாது. மிக்சி, கிரைண்டர்ளல இருக்கறத எடுக்கனும். அத வேற ஊட்ல போய் சொரண்டனுமா. அவ இருக்கும்போதும் நமக்கு தொல்ல. போனபிறகும் தொல்ல. சே.. சனியன். அந்த இன்னொருத்தி இருக்கா பாரு சசிகலா அவள ஜெயில்ல போடக்கூடாது. தூக்குல போட்டு அவகதையும் முடிக்கணும். அப்பத்தான் நம்மள புடிச்ச தொல்லவுடும்.”


( படங்களைப்பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம். தொடர்புக்கு: 99441 17320.


மதுரை

க்கள்  அதிகாரம் மதுரை  மண்டலம் சார்பில் சொத்துகுவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட களவாணி ஜெயாவின் படத்தையும் பெயரையும் அரசின் அத்தனை திட்டங்களிலிருந்தும் பாடநூல்களிலிருந்தும் நீக்க வேண்டும். மேலும்
மாணவர்களின் மகத்தான போராட்டத்தால் அடையாளம் பெற்ற மெரினா கடற்கரையில் குற்றவாளி ஜெயாவின் கல்லறை அதுவும் அரசின் செலவிலேயே இருப்பது  வெட்கக்கேடு! ஆகவே குற்றவாளி ஜெயாவின் கல்லறையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்!

என்ற முழக்கத்தோடு 19.2.2017 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி காலை 11 மணிக்கு வாசக அட்டைகள், கொடிகள், மெகா ஃபோனுடன் தோழர்கள் அங்கே கூடினர். கூடியவுடனே  தோழர்களை விட அதிக எண்ணிக்கையில் காத்திருந்தது போலீஸ் படை. அனுமதி இல்லை கைது செய்வோம் என்று கூறினர் மிரட்டினர். கைது செய்தாலும் பரவாயில்லை நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கூறி தோழர்கள் முழக்கம் போட ஆரம்பித்தனர். முழக்கம் முடித்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி பேட்டி கொடுத்தார்.

அதன் பிறகு மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது உரையாற்றினார். அவர் பேசும் போது ஜெயா முதல் முறையாக முதல் அமைச்சராக இருந்த 1991- 96 வருடகாலகட்டமானது தமிழகத்தின் இருண்ட காலம். அந்த அளவுக்கு அது காட்டாட்சியாக இருந்தது. அரசு சொத்துக்கள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கப்பட்டது, அரசு நிலங்கள் ஜெயாவின் பெயரில் சர்வசாதாரணமாக மாறியது. இதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

21 வருடத்திற்கு பிறகு தற்போது உச்சநீதிமன்றம் தண்டணையை உறுதி செய்துள்ளது. அதற்குள் ஜெயா இறந்துவிட்டார். இவ்வளவு தாமதமான‌ தீர்ப்பு வருவதற்கு ஜெயாவின் இழுத்தடிப்பு ஒரு முக்கியமான காரணம். இதனால் வாய்தாராணி என்றே பெயர் பெற்றவர் ஜெயலலிதா. 2 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி குன்ஹா ஜெயாவின் களவானிதனத்தை 1500 பக்க அறிக்கையில் விவரித்து தண்டனை அளித்து தீர்ப்பு தந்தார். ஆனால் அதன் பிறகு அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தத்து உடனடியாக பினை வழங்கினார். களவானி ஜெயா நீதிமன்றத்தை 20 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி அலையவிட்டாலும் பரவாயில்லை ஜெயாவின் மேல்முறையீட்டை மட்டும் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இல்லாத ஒரு சட்டமாக ஒரு குற்றவாளியின் மேல் முறையீட்டை உடனே ஏற்றுக்கொண்டு 2 மாதத்தில் பைசல் செய்யப்படும் என்று சொன்ன ஒரே நீதிபதி தத்துதான். அதன்படி குமாரசாமி ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூட்டல் கணக்கை தீர்ப்பாக வழங்கினார். ஜெயாவை விடுதலை செய்தார்.

தற்போது உச்சநீதிமன்றம் குமாரசாமியின் தீர்ப்பை நீதிமன்ற தீர்ப்பின் வரலாற்றிலேயே இல்லாததாக முழுவதுமாக ரத்து செய்துள்ளது. ஜெயாவை முதல் குற்றவாளியாக அறிவித்துள்ளது. சட்டப்படியும் நியாயப்படியும் பார்த்தால் ஜெயாவின் படத்தையும் பெயரையும் அத்தனை அரசு கோப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். ஆனால் ஓ.பி.எஸ். அம்மாவி ஆட்சி மீண்டும் வரும் என்கிறார், எடப்பாடி அம்மாவின் ஆசியோடு ஆட்சி தொடரும் என்கிறார்.

தங்கத்தாரகை, புரட்சித்தலைவி என்கின்றனர்.  ஒரு குற்றவாளியை போற்றும், அவரின் படங்களை  சட்டைப்பையில் வைத்துக் கொண்டு திரியும் எவரையும் கிரிமினல் போலத்தான் நாம் பார்க்க வேண்டும். ஒரு களவாணியின் ஆசியோடு ஆட்சி நடத்துவோம் என்று மந்திரிகள் தைரியமாக கூறுவார்கள் என்றால் அவர்கள் மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள். எனவே முதல் கட்டமாக களவானி ஜெயாவின் பெயரையும் படத்தையும் அரசின் பள்ளி பாடநூல்களிலிருந்து நீக்க வேண்டும். அங்கே திருவள்ளுவர் படத்தை ஒட்டவேண்டும்.

… என்று பேசிக்கொண்டிருக்கும் போதே  காவல் துறை  கைது செய்ய ஆரம்பித்துவிட்டது.

அதன்பிறகு கைது செய்யப்பட்ட தோழர்களை மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு ஒட்டு மொத்தமாக மண்டபத்தில் தோழர்கள் பேசிக்கொள்வதை வீடியோ ரெக்கார்ட் செய்ய ஆரம்பித்தார்கள் காவல் துறையினர். தோழர்கள் தட்டிக் கேட்கவே எங்களை புதிதாக இப்படி வீடியோ எடுக்க சொல்லியுள்ளார்கள் என்றது போலீஸ். எந்த சட்டத்தில் இது உள்ளது சொல்லுங்கள் என்று கேட்டு நீங்கள் இதை நிறுத்த வில்லை என்றால் நாங்கள் அனைவரும் இங்கேயே உண்ணாவிரதம் இருப்போம், யாரும் பெயரை பதிவு செய்யமாட்டோம் என அறிவித்தவுடன் அதை கைவிட்டது காவல்துறை.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மதுரை.


கோவில்பட்டி

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 20.02.2017 அன்று கோவில்பட்டியில் குற்றவாளி ஜெயாவின் சின்னங்களை அகற்று ! எனும் தலைப்பின் கீழ் ஆர்ப்பாட்டமானது நடத்தப்பட்டது.

( படங்களைப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவில்பட்டி.


கோவை

கோவையில் 18.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காந்திபுரம் பேருந்துநிலைம் எதிரில் குற்றவாளி ஜெயாவின் சமாதியை மெரினாவில் இருந்து அகற்று என்ற ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காந்திபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு கொடிகள், பதாகைகள், தட்டிகள் என விண்ணதிரும் முழக்கங்களுடன் அங்கு குவிந்திருந்த போலீசின் முன்னிலையிலேயே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இதில் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் உரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நீடித்தது இதில் கோத்தகிரி, உடுமலைப் பேட்டைத் தோழர்களும் பங்கேற்றனர். பெருந்திரளான மக்களும் நின்று ஆர்ப்பாட்டத்தை கவனிக்க ஆரம்பித்தனர். இதனால் காவல்துறை தோழர்களைக் அவசர அவசரமாகக் கைது செய்ய ஆரம்பித்தது. தோழர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.

அங்கும் தோழர்கள் மதியம் 1:00 மணி முதல் 5:30 வரை விவாதம், பேச்சு, புரட்சிகரப் பாடல்,  என கருத்தரங்கம் போல நிகழ்சி நடத்தினர். பின்னர் மாலை 6:00 மணிக்கு பதாகைகளை போலீசு வழக்கு ஆதாரமாக வாங்கிக் கொண்டு அனைவரையும் விடுதலை செய்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை. 95858 22157.

( படங்களைப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கோவை.

அரசு மிக்ஸியில் குற்றவாளி ஜெயா படம் அகற்றப்பட்டது !

1

மிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொதுச் சொத்துக்களில் மற்றும் மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் குற்றவாளியின் படத்தை ஒட்டிவைத்திருப்பது அவமானம், அவற்றை அகற்ற வேண்டும் என்ற தலைப்பின் கீழ் பிரச்சாரம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 20.02.2017 அன்று விருத்தாச்சலத்தில் அரசு மக்களின் வரிப்பணத்தில் வழங்கியுள்ள விலையில்லா மிக்ஸியில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தின் மீது திருவள்ளுவரின் படம் ஒட்டப்பட்டது. இதனை ஏராளமான மக்கள் கவனித்தனர். மேலும் பொது மக்களிடமும் அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் பள்ளிப்பாட புத்தகங்கள், நோட்டுக்களில் ஜெயாவின் படங்களை நீக்கச்சொல்லி பிரச்சாரம் செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விருத்தாச்சலம்.

சீர்காழி விவசாயத்தை சிதைத்த அரசு – நேரடி ரிப்போர்ட்

0

நாகை மாவட்டம் காவிரி டெல்டாவின் ஒரு பகுதி. காவிரி ஆற்றில்  கட்டப்பட்டுள்ளது கல்லணை. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்டகாவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்புவில்  உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.

கல்லணைக் காவிரி பின்னர் காவிரி ஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம் என 4 ஆகப் பிரிகிறது.  பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புதுஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

அதாவது வெள்ளக் காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடதுபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில்  திருப்பிவிடப்படுகிறது. காவரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம் என்ற பெயர்க்காரணமும் சொல்லப்படுவதுண்டு. கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் கனஅடி  நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரைத் தேக்கிப் பாசனத்துக்கு திருப்பி விட்டால் இந்த ஆண்டு சம்பா நடவுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும்.  வாடி- பணங்காட்டான்குடி அருகே தடுப்பணைக் கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை இந்த அரசு அலட்சியப்படுத்தியதால் தண்ணீர் முழுவதும் வீணாகக் கடலில் கலக்கிறது.

வாடி- பணங்காட்டான்குடியில் தடுப்பணைக் கட்டுவதன் மூலம் சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம் உள்ளிட்ட  பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் முப்போகமும் விவசாயம் செய்ய முடியும். ஆனால் அரசு திட்டமிட்டே இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறது.

சீர்காழி ஒன்றியத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் இருபத்து ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயம் முற்றிலும் பாழாகியுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க சென்றோம். நாங்கள் செல்லும் வழியெல்லாம் பாதி நிலங்கள் கரம்பாகவும், மீதி நிலங்கள் கதிர் வரும் நிலையில் பயிர்கள் காய்ந்தும் அவற்றில் கால்நடைகள் மேய்ந்து கொண்டும் இருந்தன.

ஒரு காலத்தில் இப்பகுதியில் கணிசமான அளவு வாழை, மல்லிப்பூ உள்ளிட்டவை எல்லாம் செழிப்பான முறையில் விவசாயம் செய்து வந்தனர்.  ஆனால் தற்பொழுது காடும் காய்ந்து, வீடும் வாழ்விழந்து தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

விவசாயி இமயவரம்பன்

இமயவரம்பன்  65 வயது விவசாயி. பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இன்றும் பல போராட்டங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர். அவர் கூறுகையில் இருபது வருசத்துக்கு முன்னாடி விவசாயம் செய்யும் போது ஏர் உழுவ வேண்டும்’ன்னா வீட்ல இருக்கற எல்லோரும் கழனிக்கு சென்று விடுவோம். இயற்கையான விவசாயம்.

ஏர் உழுவதற்கு முன்னாடி எருவு அடிப்போம், தழை வெட்டிப் போடுவோம்,  அறுவடை முடிஞ்சதும் மாட்டை எல்லாம் கழனில கட்டிடுவோம். அது அங்கேயே சாணியப் போடும். அது தான் கழனிக்கு ஊட்டச்சத்து மாதிரி. மாட்டை விக்கவே மாட்டோம். சூடு அடிக்கனும்’ன்னா மாட்டை கட்டி தான் அடிப்போம்.

நாலு மடையிலும் தண்ணி வரும். அந்தத் தண்ணிய பாக்கும் போதே அள்ளி மொண்டு குடிக்கணும் போல இருக்கும். தண்ணி வர வேகத்துல மீன்கள் எல்லாம் துள்ளி குதிக்கும். மூணு போகமும் சுகபோகமாகத்தான் இருக்கும். விவசாயத்தை அவ்ளோ ஆர்வமா செய்வோம். இப்ப விவாசாயம் செய்யவே மனசு இல்லை.

இப்ப ஏன் விவசாயம் செய்வதில்லை?

தண்ணி இல்ல தம்பி, காவிரித் தண்ணியும் வரல. நிலத்தைடி நீரை நம்பியும் பயிர் வைக்க முடியல. நீர் மட்டம் சுத்தமா  கொறஞ்சிடுச்சி. பத்து அடிக்கு மேல போர் போட்டா, உப்பு தண்ணி தான் வருது. இந்த நெலமையில எப்படி விவசாயம் பண்றது?

பல வருசமா கல்லணையில இருந்து தண்ணியத் தொறக்க சொல்லி போராடுறோம். அதிகாரிங்க காதுலையே போட்டுக்க மாட்றாங்க. ஒவ்வொரு வருசமும் கொள்ளிடத்துல தண்ணி வீணாப் போய் தான் கடல்ல கலக்குது. பணங்காட்டாங்குடில தடுப்பணைக் கட்டச் சொல்லி எத்தனை மனு, எத்தனை போராட்டம். இந்த அரசு கண்டுக்கவே இல்லை என்றார்.

விவசாயி காந்தி

அருகாமை கிராமத்தில் உள்ள காந்தி என்பரைச் சந்தித்தோம்.

அவர் கூறுகையில், எழுநூத்து ஐம்பது கோடியில ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்  திட்டத்துக்கு ஒதுக்குறாங்க. நாங்க காமராஜர் ஆட்சில இருந்தப்பவே வடரங்கத்தில் ஒரு பெட்டேம்  கட்ட சொல்லி மனு கொடுத்தோம்.  இது வரைக்கும் இந்த அரசாங்கம் கண்டுக்கவே இல்ல. திமுக ஆட்சில இருக்கும் போது வந்து அளந்துட்டு போனதோட சரி.. அந்தம்மா இருந்தப்ப 400 கோடி ஒதுக்குனதா சொன்னங்க. சொல்லி ரெண்டு வருஷம் ஆகுது ஒரு கால் கூட நடவே இல்லை.

இப்ப தண்ணி இல்லாம பயிர் எல்லாம் காயுது. குடிக்க தண்ணி இல்லாம நாங்க படாத அவதிப்படுறோம். 25 வருசமா இந்த கொள்ளிடத்துல ஆத்து மணலை ராவும் பகலுமா கொள்ளையடிச்சி  தண்ணியப் பூரா உறிஞ்சிட்டானுங்க. அப்புறம் எங்கத் தண்ணி இருக்கும்.  நாங்க போர் போட்டு தண்ணி எப்படி எடுக்க முடியும்.? மீறி போட்டா எல்லாம் உப்பு தண்ணியா தான் வருது. இந்த உப்பு தண்ணி உள்ள வர்றதைக் கூட இந்த அரசால தடுக்க முடியல. அப்புறம் நாங்க எங்கிருந்து விவசாயம் செய்யறது, என்ற ஆவேசமான பேச்சில் தென்பட்டது. அவர் அகிம்சைவாதி காந்தியல்ல.

விவசாயி சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம் 85 வயது. கொள்ளிடம் பாசன சங்கக் கூட்டமைப்பின் தலைவரைச் சந்தித்தோம். விவசாயிகளின் நலனுக்காக இந்தத் தள்ளாத வயதிலும் தளராமல் போராடி வருகிறார். மேட்டூர்ல இந்த வருஷம் 85 அடி தண்ணீர் இருந்தது. ஞாயமாக எங்களுக்கு 10 சதவீதம் தண்ணிய திறந்து விடனும். ஆனால் இந்தத் தண்ணிய  திறந்து விடாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது அரசு.

திருச்சியில் உள்ள செயற்பொறியாளரைத் தொடர்பு கொண்டு பல முறைப் பேசியும் தண்ணீரை திறந்து விடவில்லை. அப்படியே திறந்து விட்டாலும் ஆச்சாலபுரம் வரைக்கும் போய் சேராது. எந்தக் கிளை வாய்க்காலும் தூர் வாராமல் மேடும் பள்ளமாவும் இருக்கு. எப்படி தண்ணீ போய் சேரும். தூர் வாரச் சொல்லி எத்தனையோ போராட்டம் நடத்தியாச்சு. இதையும் கூட இந்த அதிகாரிங்களால செய்ய முடியல.

விவசாயத்துக்கு மானியம் கொடுக்கிறோம்னு சொல்றாங்க. ஆனா எந்த மானியமும் எங்களுக்கு வரதே இல்லை. சென்ற ஆண்டு இன்சூரன்ஸ் கட்டினோம். இதுவரைக்கும் அந்தத் தொகை வரவில்லை. முதலைமேடு கூட்டுறவு சங்கம் இங்கு இருக்க கூடிய விவசாயிகளை எல்லாம் ஏமாற்றுகிறது. மொத்தமாக இந்த அதிமுக அரசே எங்களுக்கு எதிரியா தான் இருக்கு. இந்த அரசை நம்பி எங்க வாழ்க்கை எல்லாம் வீணானது தான் மிச்சம் என்றார்.

பல ஆண்டுகாலமாக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அணை கட்டுவதற்கும், நீரை திறந்து விடுவதற்கும் ஏன் இந்த அரசு தயங்குகிறது.  விவசாயத்தை திட்டமிட்டே ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தான் இவர்கள் நோக்கம். குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் நடந்து வரும் மணற்கொள்ளை எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் விவசாயிகளின் கோரிக்கை இத்தனை ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.அது மட்டுமில்லாமல், இறால் பண்ணை முதலாளிகளின்  நலனும் அடங்கியுள்ளது.

கடல் நீர் உட்புகுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் திட்டமிட்டு  நிராகரித்துள்ளார்கள். அளக்குடி முகத்துவாரம்  வழியாக  கொள்ளிடம் ஆற்றில் சுமார் பதினைந்து கிலோ மீட்டர்  தூரத்திற்கு கடல் நீர் மேலேரியுள்ளது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு அதனைச் சுற்றயுள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்படைந்துள்ளது.  நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்துள்ளதால் குடிதண்ணீருக்கு கூட இப்பகுதி மக்கள் கடுமையாக திண்டாடி வருகிறார்கள்.  சுமார் 10 ஆயிரம் ஏக்கர் உவர்நிலமாக மாறி விவசாய நிலங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது.  அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்தியுள்ளார்கள்.

நல்லூர் உப்பனாறு வழியாக கடல் நீர் வருதல்

நல்லூர், முதலைமேடு அதனைச் சுற்றியுள்ள  கிராமத்தில் விவசாய நிலத்தில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இறால் பண்ணை  அமைத்துள்ளார்கள். இந்த பண்ணைகளுக்குத் தேவையான கடல் நீரை நல்லூர் உப்பனாறு வாய்க்கால் வழியாகக் கொண்டு வந்துள்ளார்கள். இந்த மோசடித் தனத்தை எதிர்த்து அப்பகுதி மக்களைத் திரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணியினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக இறால் பண்ணைகள் அகற்றப்பட்டு, அங்கு கடல் நீர் உட்புகுவதை தடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் விளைவாக தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமில்லாமல் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் வழியாக சுமார் சீர்காழி நகரம் வரை கடல் நீர் உட்புகுந்துள்ளது. இந்த ஆற்றினை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கரில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணைகளுக்கு தேவையான நீர் இந்த ஆற்றில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. எடமணல், திருணகிரி இதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில்  கடல் நீர் ஏறியதன் விளைவு சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம் செய்வதற்கான தகுதியை இழந்துள்ளது. ஆழ்குழாய் மூலம் நீரை எடுத்து வயலுக்கு பாய்ச்சுவதால் நீரில் உள்ள நச்சுத்தன்மை  மண்ணை மாசாக்குகிறது. இதே பகுதியில் ONGC நிறுவனம் இரண்டு பிளாண்ட்களை நிறுவியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வட்டப்பாதையில் சீர்காழி முழுவதும் திட்டமிட்டே சிதைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. முதலாளிகளின் கொள்ளை சூரையாடளுக்காக சீர்காழி நகர மக்களின்  வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

தற்பொழுது நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த பெரும் அபாயத்தை முறியடிக்க  அரசிடம் மனு கொடுப்பதோ, அல்ல பன்னீரையோ, சசிகலாவையோ  முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலமோ இந்த அயோக்கியத்தனங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. ஏனென்றால், கொள்ளிடத்தை கொள்ளையடித்தது பன்னீர்  தான். இது மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கு தெரிந்து தான் நடந்தது. இவர்களால் இதை தடுக்க முடியாது. நம் வாழ்வை சூறையாடியது இந்த அரசும், ஓட்டுக்கட்சிகளும் தான். யாரைத் தேர்ந்தெடுப்பது என யோசிக்காமல் நாமே நம் அதிகாரத்தை கையில் எடுப்பது மட்டும் தான் தீர்வு. விவசாயிகள் ஒருங்கிணைந்து போராடினால் தான் இதனை வீழ்த்த முடியும். போராடுங்கள்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்

திருச்சி : புத்தகங்களில் குற்றவாளி ஜெயா படம் நீக்கம் 5 தோழர்கள் கைது !

1

திருச்சி: பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகத்திலிருந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்றி திருவள்ளுவர் படத்தை ஒட்டிய மக்கள் அதிகாரத்தின் 5 தோழர்கள் கைது!

குற்றவாளி ஜெயாவின் படங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயாவின் சமாதியை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகம் தழுவிய பிரச்சாரம் மற்றும் போராட்ட  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 20.02.2017 காலையில் திருச்சி மாநகரின் மையமான பகுதியில் அமைந்துள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி முன் நின்று மாணவர்களின் பாட புத்தகங்களில் இருந்த தீய சக்தி ஜெயாவின் படத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தை தந்து ஒட்டுமாறு கோரினோம். இதை ஏற்று மாணவர்களும், மாணவர்களை அழைத்து வந்த பெற்றோரும் ஆர்வமாக வாங்கி ஒட்டிக்கொண்டனர்.

ஆனால், குற்றங்களின் அம்மாவை மறைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டுவதை சட்டத்தின் காவலர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் அதிகாரம் தோழர்களின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து கைது செய்தனர்.

குற்றவாளியும் தீய சக்தியுமான ஜெயாவின் படம் மாணவர்களின் பாட நூல்களில் இருப்பது சரியல்ல என்று விவாதித்ததை ஏற்காமல் கைது செய்த அடாவடி செயலை கண்டித்து உடனடியாக மற்ற பிற தோழர்கள் காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர். ஆய்வாளர் “என்னைக் கேட்காதீர்கள், இது மேலிடத்து உத்தரவு” என்றார். உதவி ஆணையரை அணுகிய போது அவரும் “என்னைக் கேட்காதீர்கள், இது மேலிடத்து உத்தரவு” என்று தெரிவித்தார். தோழர்கள், “கைது செய்தது நீங்கள், அப்படியிருக்க எந்த மேலிடத்தை கை காட்டுகிறீர்கள்” என்று கேட்டதற்கு காவல் அதிகாரிகளிடம் பதிலில்லை.

எனவே, காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அப்போதே விண்ணப்பிகப்பட்டது. தங்கள் அடாவடித்தனம் மேலும் மேலும் அம்பலமாவதை விரும்பாத காவல் துறை ‘மேலிடத்தில்’ பேசி வேறு வழியின்றி உடனடியாக தோழர்கள் 5 பேரையும் விடுவித்தது.

 

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.

குற்றவாளி ஜெயா படங்களை அகற்று : தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் !

0

ஜெயா படத்தை அகற்றுங்கள்! – திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஏ 1 குற்றவாளி அம்மாவின் வாரிசுகள் அவரது ஆட்சியை அமைக்க சபதம் ஏற்றுக்கொண்டு சட்டமன்றத்தை சண்டைக்களமாக மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில், 18.02.2017 அன்று காலை 10.30 மணியளவில்

“குற்றவாளிகளுக்கு அரசு மரியாதையா? மெரினாவிலிருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று ! மாணவர்களே தீயசக்தி ஜெயாவின் படத்தை பாடநூலிலிருந்து அகற்றுங்கள்! மக்களே விலையில்லா பொருட்கள் கிரிமினல் போட்ட பிச்சையல்ல! ஜெயா படத்தை அகற்றுங்கள்!”

என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி-சத்திரம் பேருந்து நிலையத்தில் பறை ஓசையுடன் விண்ணதிரும் முழக்கங்களுடன் தொடங்கியது மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமையேற்க, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினர்.

அவர் உரையில்: “ஜெயா-சசி கும்பல் ஒரு புதிய வரலாற்றை தமிழகத்தில் படைத்துள்ளது. “அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கையில் அவரது ஆட்சி எப்படி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் 20 வருடங்களுக்குப் பிறகு தவிர்க்க முடியாமல் சொத்து குவிப்பு வழக்கில் போட்டுஉடைத்துள்ளது. ஜெயலலிதாதான் சொத்து குவிப்பு வழக்கின் மூளையாக செயல்பட்டுள்ளார். சசி கும்பலை பயன்படுத்தி குற்றங்களிலிருந்தது தப்பித்திக்கொள்ளவே ஜெ முயற்சித்துள்ளார் என அவரது கிரிமினல் -கேடித் தனத்தை  நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை தொடர்ந்து அம்பலப்படுத்துயுள்ளது உச்சநீதிமன்றம்.

  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெயாவுக்கு அரசு மரியாதையில் மெரினாவில் சமாதி இருப்பது சட்டத்திற்கு விரோதமானது. அதை உடனே அகற்ற வேண்டும்!
  • கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட ஜெ வின் படங்கள் மற்றும் குறிப்புகளை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும்! அதற்கு பதிலாக தமிழகத்தின் பெருமையாக இருக்க கூடிய திருவள்ளுவர் படங்களை ஒட்ட வேண்டும்!

மக்கள்வரிப்பணத்தில் செயல்படுத்தக்கூடிய மக்கள் நலத்திட்டங்களை  , இலவசத்திட்டங்கள் என அறிவித்து தமிழக மக்களை பிச்சைகாரர்களாக கருதிய பார்ப்பன பாசிஸ்ட், ஊரறிந்த கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாது நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.”

காவல் துறையின் அனுமதி இன்றி நடந்ததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி. பேச:9445475157.  

_______________

சீர்காழியில் தோழர்கள் கைது : உச்சநீதிமன்ற உத்தரவை துடைத்துப் போட்ட காகிதமாக மதிக்கும் சீர்காழி காவல்நிலையம்

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா? ‘மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!”
என்ற முழக்கம் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் சுவரொட்டியாக ஒட்டப்பட்டது. அதே முழக்கத்தை அச்சடித்து சுவரொட்டியாக சீர்காழி நகரத்தில் ஒட்டப்பட்டது. மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவியும், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சுப்ரமணியன் அவர்களும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது சிவில் உடையில் இருந்த காவலர்கள் சுவரொட்டியையும், பசை குண்டானையும் பாய்ந்து குதறினார்கள். போலீஸ்தான் என்று தெரிந்தவுடன் போலிசை அம்பலப்படுத்தியும், தமிழகத்தில் நடைபெறும் மாபிஃயா கும்பலின் ஆட்சியையும், ஜெயா சமாதியை அகற்றும் முழக்கங்களை தோழர்கள் போட்டார்கள். 18-02-2017 காலை 08-00 மணிக்கு கைது செய்யப்பட்டு சீர்காழி காவல்நிலையத்தில் U/S 153, 504, IPC R/W  PUBLIC PLACE DISTRUBMENT ACT  ல் கைது செய்யப்பட்டு சீர்காழி நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, மாலை மயிலாடுதுறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் தோழர் ரவி மீது சீர்காழி மற்றும் புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் சுவரொட்டி ஒட்டியதற்கு வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளிவந்துள்ளார். சீர்காழி மற்று புதுப்பட்டினம் காவல் நிலையங்கள் ஜனநாயக விரோதமாகவும், பாசிச நடைமுறையோடும் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.தொடர்பு : 9843480587

_______________

 சென்னையில் ஆர்ப்பாட்டம் !

“குற்றவாளிக்கு அரசு மரியாதையா?மெரினாவில் இருந்து ஜெயா சமாதியை உடனே அகற்று!” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அண்ணா சாலை பேருந்து நிலையத்திலிருந்து முழக்கமிட்டவாறே ஆர்ப்பாட்டம் தொடங்கியது. மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் ”ஜெயா- சசி கும்பல் குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது பெரிய சாதனையாக பேசி கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பை வியந்து பேசிகிறார்கள். இதில் ஒரு புதிய விசயமும் இல்லை. மக்கள் ஏற்கனவே இவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிட்டார்கள். இப்போது தான் நீதிமன்றம் 21 வருடங்களுக்கு பிறகு, எல்லோருக்கும் தெரிந்த விசயம் என்பதால் வேறு வழியில்லாமல் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு சரி என்றால் ஏற்கனவே தவறான தீர்ப்பு சொன்ன குமாரசாமி, தத்துவிற்கு என்ன தண்டனை? இவர்கள் சொல்லும் சட்டப்படியே ஒரு நிரூப்பிக்கப்பட்ட குற்றவாளி அரசு துறைகளில் வேலை செய்ய கூடாது என்று இருக்கிறது. இவர்கள் சொல்லும் சட்டத்தின் படியே ஜெயலலிதாவின் சமாதி மெரினாவில் இருக்க கூடாது. மெரினா என்பது மக்களின் சொத்து. குற்றவாளிகளுக்கு அங்கு இடம் கிடையாது உடனே அகற்ற வேண்டும் இதை இந்த அரசு செய்யுமா? செய்யாது. மக்களாகிய நாம் தான் இதை செய்ய வேண்டும் அதற்கு தொடக்கமே இந்த போராட்டம் என்று பேசினார்.

அதை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் அவர்கள் இன்று ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்தது வெறும் 66 கோடி என்று தான் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அவர்கள் அடித்த கொள்ளை இதை விட பல கோடி அதிகம். அ.இ.அ.தி.மு.க என்பது ஒரு கட்சியல்ல, அது ஒரு கொள்ளை கூட்ட கும்பல். இதில் சசிகலா, டி. டி. வி தினகரன், ஒ.பி.எஸ், எடப்பாடி அனைவரும் குற்ற கும்பல் தான். இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது மங்காத்தா சீட் போல் யாரை சேர்ந்தெடுப்பது என்ற சூதாட்டம் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தை வைத்து கொண்டு பேரம் பேசி எம். எல். ஏக்களை யார் வாங்குவது என்ற குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் எங்கேயிருந்தார்கள் இந்த எம்.எல்.ஏ க்கள் கூவத்தூரில் சொகுசு விடுதியில் கைதிகளாக வைக்கப்பட்டிந்தார்கள். எப்படி புழல் சிறையிலிருந்து வெளியே வர முடியாதோ, எப்படி பரப்பன அக்கிரக்கார சிறையில் இருந்து சசிகலா வெளியில் வர முடியாதோ? அது போல் எம்.எல்.ஏ க்களும் சொகுசு விடுதிலிருந்து வெளியே வர முடியாது. அவர்கள் உள்ளூக்குள் இருந்து கொண்டே எங்களை யாரும் அடைக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வெளியில் விட்டால் பணம் விலையாடும், கட்சி தாவிவிடுவார்கள் என நம்பாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களா மக்கள் பிரச்சனைகளை தீர்க்க போகிறார்கள்? இனி இவர்களை நம்பி பயனில்லை. இதை மாற்ற ஒரு அறைகூவல் தான் இந்த மக்கள் போராட்டம் என்று பேசினார்.

மக்கள் அதிகம் கூடும் பகுதி என்பதாலும், வாகன போக்குவரத்து அதிகமுள்ள இடம் என்பதாலும் பலரிடம் இந்த போராட்டமும், முழக்கமும் சென்றடைந்தது. வரவேற்பை பெற்றது. குழந்தைகள் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜெயா சமாதியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்ற உறுதியோடு போராடினர்.

போலிஸ் உடனே கைது செய்ய தயாராக வேன்களை நிறுத்தி வைத்திருந்தது. உடனே போராட்டத்தை முடித்து கொள்ளும் படி போலிஸ் நெருக்கடி கொடுத்தது. அனைவரையும் போலிஸ் கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
சென்னை. தொடர்புக்கு : 91768 01656


சென்னையின் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் நோட்டுப் புத்தகங்களில் உள்ள குற்றவாளி ஜெயா படத்தை திருவள்ளுவர் படம் ஒட்டி மறைக்கின்ற இந்த படம் சமூகவலை தளங்களில் வெளியாகியுள்ளது. இவர்களைப் போன்று அனைவரும் பாட புத்தகங்களில், நோட்டுக்களில் உள்ள குற்றவாளி ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும். தமிழகத்தின் சுயமரியாதை மரபு இளம் குருத்துக்களின் மத்தியில் துளிர்ப்பதை வரவேற்போம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )


பென்னாகரம் : பொது இடங்களில், மக்கள் சொத்துக்களில் குற்றவாளி படங்களை வைப்பதா ?

குற்றவாளி ஜெயாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து உடனே அகற்று ! என மக்கள் அதிகாரம் தோழர்கள் 20.02.2017 அன்று காலை பென்னாகரத்தில் போராட்டம் நடத்தினர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி

பூலோகத்தின் நரகம் : மும்பை பொதுக் கழிப்பறைகள் !

2

பிப்ரவரி 4-ம் தேதி அதிகாலை. கிழக்கு மும்பையிலுள்ள இந்திரா நகர் குடிசைப் பகுதி. அங்கிருக்கும் மூன்று ரூபாய் கட்டணக் கழிப்பறையின் முன் ஹரிஷ் டிகேதார்(40), கணேஷ் சோனி(40) மற்றும் முகமது இசாஃபில் அன்சாரி(30) ஆகியோர் வரிசையில் நிற்கின்றனர். காலை எட்டு மணிக்குச் சற்று முன்பாக திடீரென இவர்கள் நின்றிருந்த தரைத்தளம் உடைந்து நொறுங்குகிறது. மூவரும் 15 அடி ஆழ கழிவுத் தொட்டியினுள் விழுந்து மூழ்கி இறந்தனர் – பின் இறந்தவர்கள் வெறும் புள்ளிவிவரங்களாயினர்.

மும்பை பொதுக் கழிவறை

நொறுங்கிச் சரிந்த கழிப்பறையின் தரைத்தளத்தினுள் சிக்கி மலத்தொட்டியினுள் மூழ்கிய மூவரைத் தவிர சிராஜ்ஜுதின் துராட்(25) மற்றும் ரமாகாந்த் கனோஜியா(35) ஆகியோரும் அந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவரும் உடைந்த தரையின் முனையைப் பிடித்து தொங்கியதால்  காப்பாற்றப்பட்டனர். ஐந்து பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தனியார் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டனர். இருபது நிமிடங்கள் கழித்தே தீயணைப்புத் துறை வந்து சேர்ந்தது. குழியில் விழுந்தவர்களை வெளியே இழுத்துப் போட்ட போது அவர்கள் அடையாளம் காண முடியாதபடிக்கு உடல் முழுக்க மலம் அப்பியிருந்தது.

”எங்கள் கால்களுக்குக் கீழே தரை நழுவிச் சென்ற போது நாங்கள் நின்று கொண்டிருந்தோம்” அச்சுறுத்தும் பழைய நினைவுகளால் நடுங்கியவாறே சொல்கிறார் துராட். ”அவர்கள் மூவரும் நேரடியாக குழியில் விழுந்து விட்டனர். எனது தோள் வரை மலச்சேற்றுக்குள் புதைந்து போனேன். அந்தச் சேறு என்னை கீழே இழுத்துச் சென்றது.. ஆனால், எப்படியோ நான் பக்கவாட்டில் இருந்த பலகையைப் பிடித்துக் கொண்டேன். யார் யாரோ என்னை மேலே பிடித்து இழுத்துப் போட்டார்கள்; அப்புறம் நான் மயங்கி விட்டேன்”

மும்பையின் சேரிகளில் மலஜலம் கழிப்பது போன்ற எளிய காரியங்களைச் செய்யவே ஒருவர் கடும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டும். கிழக்கு மும்பையின் சேரிகளான பைன்கன்வாடி, சிவாஜி நகர், கோவந்தி, சீட்டா கேம்ப், ரஃபீக் நகர், வாஷி நாகா, மந்தாலா மற்றும் மன்குர்ட் போன்ற மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இந்த அபாயங்கள் பன்மடங்கு அதிகம். இந்தப் பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளன.

மும்பை மாநகரின் 24 நிர்வாக வார்டுகளில் மும்பை கிழக்கும் ஒன்று. இங்கே பகுதிகளை விட ஏழ்மை அதிகம் என்பதோடு பொது வசதிகளும் குறைவு. இந்த வார்டில் உள்ள சேரிகள் தாம் மும்பையிலேயே மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. மும்பை மாநகராட்சியில் உள்ள மொத்த இடங்களான 227-ல், மும்பை கிழக்கு வார்டில் மட்டும் சுமார் 15 இடங்கள் உள்ளன. மாநகராட்சி இருக்கைகளை வைத்துப் பார்த்தால் மற்ற வார்டுகளை விட மும்பை கிழக்கு தான் அளவில் பெரியது. எனினும், கழிப்பறை விபத்துகளை எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

பிப்ரவரி 4-ம் தேதி நடந்த மரணங்கள் எதேச்சையானவைகளோ, எதிர்பாராதவைகளோ, விபத்தோ அல்ல. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இதே விதமான விபத்துகளில் ஏழு பேர் மரணித்துள்ளனர்.

“இது போன்ற பொதுக் கட்டிடங்களைக் கட்டுவதற்கு குறைந்தபட்சமாகவாவது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் மரணங்களைத் தவிர்க்க முடியாது” என்கிறார் பிப்ரவரி 4-ம் தேதியன்று நடந்த விபத்தில் உயிர் பிழைத்த, இருவரைக் காப்பாற்ற உதவிய ரஸாக் ஷேக். அவரே மேலும் கூறும் போது, “ஒவ்வொரு முறையும் விபத்து நடந்து முடிந்த பின் நிவாரணத் தொகைக்கான செக்குகளுடன் எம்.பி எம்.எல்.ஏக்கள் வருவார்கள்; இந்த முறையும் சமாஜ்வாடி கட்சியின் அபு அஸீம் அஸ்மி வந்தார். இந்த நிவாரணங்களால் என்ன பயன்? மும்பையில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால், இந்தளவுக்குமா மலிவாகி விட்டது?” என்கிறார்.

பூட்டப்பட்டக் கழிவறை

சம்பவம் நடந்த அன்று இந்திரா நகரில் அமைந்திருந்த அந்த குறிப்பிட்ட பொதுக்கழிவறையில் நிறைய கூட்டம் இருந்துள்ளது. அதற்கு பக்கத்திலிருந்த இன்னொரு பொதுக்கழிவறை சேதமடைந்து பூட்டப்பட்டதே இங்கே கூட்டம் அதிகளவில் கூடியதற்குக் காரணம். ஒவ்வொரு பொதுக்கழிவறைத் தொகுதியையும் சுமார் நான்காயிரத்திலிருந்து ஆறாயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.

“சில நேரம் கழிவறையைப் பயன்படுத்த நாங்கள் அரை நாள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும்” என்கிறார் ஐம்பது வயதான ஸுமைதா பானு.

மும்பை சேரிகளில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிவறைகளில் 78 சதவீதம் தண்ணீர் கிடையாது; 58 சதவீத கழிவறைகளில் மின்சார இணைப்பு இல்லை.. மேலும் பல கழிவறைகளுக்கு கதவுகளோ, பெண்கள் நாப்கின்களைப் போடுவதற்கான ஏற்பாடுகளோ இல்லை. பெரும்பாலான பெண்கள் கூலி வேலைகளுக்கோ, வீட்டு வேலைகளுக்கோ செல்லும் இடங்களில் உள்ள கழிவறைகளையே பயன்படுத்துகின்றனர். அதிலும் பல மேட்டுக்குடி குடும்பங்கள் தங்களிடம் வீட்டு வேலைக்கு வருகிறவர்கள் கழிவறையைப் பயன்படுத்தக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் தான் வேலைக்கே சேர்க்கிறார்கள்.

அரசியல் தொடர்புடையவர்களே கழிவறைக் காண்டிராக்டுகளை எடுக்கின்றனர். ஒருவர் ஒரு முறை கழிவறையைப் பயன்படுத்த 2 அல்லது 3 ரூபாய்களைக் கட்டணமாக கொடுக்க வேண்டும். ஒரு கழிவறைத் தொகுதியை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், சாதாரணமாக மாதம் ஒன்றுக்கு சில பல லட்சங்களை காண்டிராக்டர் சம்பாதித்து விடுகிறார். எனினும், குறைந்தபட்ச வசதிகளைக் கூட செய்வதில்லை.

”மும்பை முழுவதும் உள்ள பொதுக் கழிவறைகளின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 392 கோடி ரூபாய் வசூலாகின்றன. அதாவது நாளொன்றுக்கு மும்பையைச் சேர்ந்த ஏழைகள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மலம் கழிப்பதற்காக மட்டுமே செலவிடுகின்றனர்” என்கிறது அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்கிற தனியார் சிந்தனைக் குழாம் வெளியிட்ட ஆய்வறிக்கை.

மேற்படி ஆய்வறிக்கையை எழுதிய தாவல் தேசாய் என்பவர் இதை மாபெரும் கிரிமினல் குற்றம் என்கிறார். ஆய்வுக்காக சந்தித்த மக்களில் 83 சதவீதம் பேர் தங்களால் சொந்தமாக கழிவறைகளை அமைத்துக் கொள்ள முடியுமென்றும், மாநகராட்சி நிர்வாகம் சில்லறையான காரணங்களைச் சொல்லி அனுமதி மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள் என தெரிவித்துள்ளார் தேசாய்.

சேரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்களில் அமைந்திருப்பதாக நுட்பமான சட்டவாத விளக்கங்கள் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இதே சேரிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு மின்சார இணைப்பையும் வழங்கியுள்ளனர் – வீட்டு வரியும் வசூலிக்கப்படுகின்றது. மும்பையின் சேரிகளுக்கு அரசு தரப்பில் பின்பற்றப்படுவதாக சொல்லப்படும் இதே சட்டவாத அளவுகோள்கள் நாடெங்கும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கட்டப்பட்டிருக்கும் சாமியார் மடங்களுக்கோ, கல்வித் தொழிற்சாலைகளுக்கோ பொருந்துவதில்லை என்பதோடு, அரசே முன்வந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அடாவடியாக பிடுங்கி பன்னாட்டு தொழிற்கழகங்களுக்கு தாரை வார்த்து வருகின்றது.

இது ஒருபுறமிருக்க, மக்களே சொந்தமுறையில் கழிவறைகளை அமைத்துக் கொள்ள அனுமதிக்க மறுப்பதன் பின் வேறு காரணங்களும் உள்ளன. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படும் பொதுக் கழிவறைகளைக் நிர்மாணிப்பதற்கும் பராமரிப்பதற்குமான காண்டிராக்டுகள் வளம் கொழிக்கும் தொழிலாக இருக்கின்றது. இந்தக் காண்டிராக்டுகளை எடுக்கும் பகுதியைச் சேர்ந்த அரசியல் ரவுடிகள் யாருக்கும் பதில் சொல்லவோ, கணக்குக் காட்டவோ கடமைப்பட்டவர்கள் அல்ல.

மூன்று ஏழைகளைப் பலிகொண்ட இந்திரா நகர் பொதுக்கழிவறை சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சம்பவம் நடந்த பின் அதைக் கட்டிய காண்டிராக்டர் ராஜ்தேவ் ராம்நரேஷ் பாரதி கைது செய்யப்பட்டு பின் உடனடியாக விடுவிக்கப்பட்டும் விட்டார்.

சேரிகளின் நிலை இவ்வாறிருக்க, இதே கிழக்கு மும்பையைச் சேர்ந்த செம்பூர், ட்ரோம்பே போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் போதிய அடிக்கட்டுமான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதே மும்பையின் சிறுபான்மை மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதிகளோ வழுக்கும் சாலைகளோடும், படாடோபமான கட்டிடங்களோடும் நரகலின் மத்தியில் சொருகப்பட்ட ரோஜாவைப் போல் பளீரிடுகின்றது.

எல்லாம் போகட்டும், மோடி பீற்றிக் கொண்ட தூய்மை இந்தியா திட்டம் என்னவாயிற்று?

“இங்கே கழிவறை மற்றும் குடிநீரின் நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், ஸ்வச் பாரத் எல்லாம் நகைப்புக்குரிய திட்டம் தான்” என்கிறார் அமிதா பிதே.

உண்மையில் அத்திட்டம் நகைப்புக்குரியதல்ல, அத்திட்டத்தின் மூலம் மோடி தலைமையிலான ஆளும் கும்பல் தான் மக்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றது.

மேலும் படிக்க,

– முகில்

In Mumbai’s poorest slums, water and sanitation carry a steep price tag – sometimes deat

 

பன்னீர் VS சசி : முன் விட்டையா, பின் விட்டையா ?

2

ரண்டு திருடர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது? சிரித்த முகமும் அடிமைக்குரிய பணிவும் காட்டும் பன்னீரையா? மன்னார்குடி மாஃபியாவின் தலைவியான சசிகலாவையா? பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவர்தான் முதல்வராக முடியும் என்ற அடிப்படையில் தன்னை ஆட்சியமைக்க அழைக்காமல், ஆளுநர் உள்நோக்கத்துடன் காலம் கடத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார் சசிகலா. தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னிடமிருந்து விலகல் கடிதம் மிரட்டி வாங்கப்பட்டதாகவும் கூறிக் கண்ணீர் வடிக்கிறார் பன்னீர்.

இந்த இரு கும்பல்களில் யாரொருவரும் தன்னை யோக்கியன் என்றோ, தங்களுக்கு ஒரு கொள்கை இருக்கிறது என்றோ வாய்தவறிக் கூடச் சொல்லிக்கொள்ள இயலாதவர்கள். சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது என்றால், பன்னீர் – சேகர் ரெட்டி – நத்தம் ஆகியோருக்கு எதிராகச் சில மாதங்களுக்கு முன்னர்தான் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

யாரைத் தேர்ந்தெடுப்பது? பணிவு பன்னீரையா அல்லது அல்லிராணியின் அன்புச் சகோதரியையா?

இருந்த போதிலும், சசிகலா மட்டும்தான் ஊழல் பேர்வழி என்பதைப் போலவும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன் ஆளுநர் அவரைப் பதவியேற்க அழைப்பது நெறிகெட்ட செயல் என்பதாகவும் பாரதிய ஜனதா பேசுகிறது. ஜெயலலிதாவின் கன்டெயினர் கடத்தல் முதல் தேர்தல் தில்லுமுல்லு வரை எல்லா முறைகேடுகளுக்கும் துணை நின்ற பாரதிய ஜனதா, நல்லொழுக்கத்தின் காவலனாக நடிக்கிறது. ஜெயாவின் மரணத்தில் சசிகலா மீது விழுந்துள்ள சந்தேகத்தையும், மன்னார்குடி மாஃபியா மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பையும் பன்னீருக்கு ஆதரவாகத் திருப்பும் பணியிலும், பன்னீருக்கு ஆள் பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக மக்களால் காறி உமிழ்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பா.ஜ.க., இப்போது நடுவர் தோரணையில் பேசுகிறது. சசிகலா மீது தமிழக மக்களுக்கு, குறிப்பாக அ.தி.மு.க. வின் வாக்கு வங்கியாகிய பெண்கள் கொண்டிருக்கும் வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இரட்டை இலைச் சின்னத்தின் வாரிசாக பன்னீர் கும்பலைக் கொண்டு வந்து, அதன் வழியாக அ.தி.மு.க.வைத் தனது கைப்பாவைக் கட்சியாக்கிக் கொள்ள முனைகிறது.

பன்னீர், சசி ஆகிய இருவரில் ஒருவரைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும்; அல்லது தி.மு.க. கூறுவதைப் போலச் சட்டமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தல் நடத்த வேண்டும். இவைதான் தமிழக மக்கள் முன்னால் உள்ள தெரிவுகள் என்று கூறப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் போலீசின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பன்னீரின் கண்ணீருக்கு நிவாரணம் வழங்க வேண்டுமா? கடன்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் தஞ்சை விவசாயிகளும், வறட்சியால் மடிந்து கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளும் சசிகலாவின் சட்டபூர்வ உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமா? இந்தக் கழிசடைகளா மக்களின் பிரதிநிதிகள்?

இவர்கள் காட்டுகின்ற கட்டத்தில் டிக் அடிப்பதைத் தவிர நமக்குத் தெரிவு இல்லை என்றோ, இவர்கள் கூறுகின்ற சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் இல்லையென்றோ சிந்தித்திருப்போமானால், மெரினா எழுச்சியே சாத்தியமாகியிருக்காது. இந்த அரசும் பணிந்திருக்காது. இவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வறட்சி, நீர்நிலைப் பராமரிப்பு, உதய் திட்டம், உணவு மானிய வெட்டு, நீட் தேர்வு, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், பிரச்சினைகளுக்கு காரணமானவர்களே இவர்கள்தான். இப்பிரச்சினைகளுக்கு ஏதேனும் தீர்வு உண்டென்றால், அது இவர்களுக்கு வெளியில்தான் இருக்கிறது.  இந்தக் கட்டமைப்புக்குள் சிந்திக்கும் பழக்கத்திலிருந்து நம் சிந்தனையை விடுவிப்போம். மெரினா எழுச்சியால் தலை நிமிர்ந்த தமிழகம் தலை குனிந்துவிடக் கூடாது.

-புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

குமாரசாமி தீர்ப்பின் போது விகடன் சொன்னது என்ன ?

7

வினவு குறுஞ்செய்திகள்:

போயஸ் தோட்டத்து பூசாரி விகடன் : அன்றும் இன்றும் 5

நீதி நின்று கொல்லும்!” – இது பிப் 22 2017 தேதியிட்ட ஆனந்த விகடனின் தலையங்கம். உச்சநீதிமன்றமே குற்றவாளிகள் என்று தண்டித்துவிட்டதால் விகடன் நிறுவனம் தைரியமாக ஜெயாவைப் பற்றி எழுதுகிறது. தலையங்கத்தில் இருந்து சில மேற்கோள்களைப் படியுங்கள்:

//தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்' என்று அரசியல்வாதிகள் சம்பிரதாயமாகவும் சந்தர்ப்பவாதத்துக்கும் பயன்படுத்திய வார்த்தைகள் இப்போது உண்மையிலேயே அர்த்தம் பெற்றிருக்கின்றன. ஜெயலலிதா மரணமடைந்ததாலேயே அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறாரே தவிர, அவர் குற்றம் இழைக்காதவர் என்பதால் அல்ல. ஓர் அரசியல் தலைவரின் மரணத்தோடு அவரது அரசியல் தவறுகளும் முறைகேடுகளும் மறைந்து போய்விடாது.ஒரு ரூபாய்தான் சம்பளம்’ என்று ஜெயலலிதா அறிவித்த ஆட்சிக் காலத்தில்தான் இந்த அநீதியான சொத்துக் குவிப்பு நடந்தது என்பதை மறக்கவும் முடியாது… மன்னிக்கவும் கூடாது.

ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் குன்ஹா வழங்கிய தீர்ப்பை, விகடன் தலையங்கம் வரவேற்று எழுதியிருந்தது. குன்ஹா வழங்கிய தீர்ப்பு, நீதியை அடிப்படையாகக்கொண்டது என்று மனச்சாட்சியுள்ள அனைவரும் அப்போது வாழ்த்தி வரவேற்றார்கள். ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதம் வரை சொத்து சேர்க்கலாம்' என்று குமாரசாமி வழங்கியநவீன’ தீர்ப்போ நீதியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

ஆனால், நீதியின் வெற்றியைத் தள்ளிப்போடலாமே தவிர, தடுக்க முடியாது என்பதைத்தான் இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிரூபித்திருக்கிறது.//

சரி, இப்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்தவர்கள், குன்ஹாவையும் ஆதரித்திருக்கிறார்கள். எனில் விகடன் கம்பெனி குமராசாமி தீர்ப்பை கண்டித்து எழுதியிருக்க வேண்டுமல்லவா? குறைந்த பட்சம் இப்போது எழுதியிருப்பது போல அதிர்ச்சியாவது அடைந்தார்களா?

“மீதம் இருக்கும் தீர்ப்புகள்!” – இது 20 மே 2015 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழின் தலையங்கம்! குமராசாமி தீர்ப்பால் ஜெயா விடுதலை ஆனதும் எழுதப்பட்ட தலையங்கம் இது! என்ன சொல்கிறார்கள் படியுங்கள்:

// “சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கட்சியினர் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். தங்கள் தலைவியின் வருகையைக் கொண்டாடுவது, அவர்களின் உரிமை. ஆனால் ஓர் அரசாங்கம் என்ற வகையில், இப்போது தமிழ்நாடு அரசு உடனடியாக உண்மையாக செய்ய வேண்டியது என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ‘4 ஆண்டு சிறை,100 கோடி ரூபாய் அபராதம்’ என்ற தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்தார். ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார். இடையில் இந்த ஏழரை மாதங்கள் மொத்தத் தமிழ்நாடும் நிர்வாகக் குளறுபடிகளால் ஸ்தம்பித்தது.

மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. ஏற்கெனவே இருந்த பல திட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன. புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதிநிலையோ மிக மோசமானது. புதிய நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகின்றன. ஏற்கெனவே இருக்கும் முதலீடுகள் வெளியேறுகின்றன.

எதைக் கேட்டாலும் ‘அம்மா வரட்டும்… அம்மா வந்தால்தான்…’ என்றே எல்லா மட்டங்களிலும் சொல்லப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11-ம் தேதி விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள், செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள்.//

ஆக குமராசாமி தீர்ப்பு குறித்து விகடன் எதிர்த்து எழுதாதது மட்டுமல்ல, கடுகளவு அதிர்ச்சியும் அடையவில்லை. அதை சரி செய்வதற்காக ஓபிஎஸ் ஆண்ட அந்த குமராசாமி தீர்ப்பால் வந்த ஆட்சியை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்த நாட்களில் தமிழக அரசு செயல்படவில்லை, வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின என்று விளக்குகிறார்கள். அதுவும் ஜெயலலிதா ஆண்டிருந்தால் இந்த முடக்கம் வராது என்று மறைமுகமாக மட்டும் கூறவில்லை. இனியாவது அவர் வளர்ச்சியை குறித்துக் கொண்டு செயல்படவேண்டும் என்று மயிலிறகால் போதனை செய்கிறார்கள்.

அப்போது ஜெயாவின் குற்றம் குறித்தோ இல்லை இதற்கு உச்சநீதிமன்றத்திலாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்றோ ஏன் விகடன் எழுதவில்லை? பயமா? இல்லை பாசாங்கா? இல்லை செலக்டிவ் அம்னீஷியாவா? இந்த செலக்டிவ் அம்னீஷியா கூட ஜெயலலிதா பயன்படுத்திய வார்த்தைதான். சந்தர்ப்பவாத விகடனுக்கு அது கண்டிப்பாக புரிந்திருக்கும்! நீதி, நேர்மை, அறம் போன்ற வார்த்தைகளெல்லாம் நெருக்கடியான நேரத்திலும் நாம் அப்படி வாழ்கிறோமா பேசுகிறோமா என்பவையோடு தொடர்புடையவை! விகடனோ எல்லாரும் தைரியமாக பேசும் போது கூட்டத்தோடு கூட்டமாக ஜெயாவைக் கண்டிக்கிறது. இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுகள் பத்திரிகை நடத்தி ஈட்டிய நற்பெயரின் இலட்சணம்!

_________

குற்றவாளி ஜெயா கும்பலை ஆதரிக்கும் சினிமா குற்றவாளிகள்!

ஜெயா-சசி கும்பல் குற்றவாளிகளே என்று நீதிபதி குன்ஹா செப் 27, 2014 அன்று தீர்ப்பளித்தார். அப்போது குன்ஹாவுக்கு எதிராக அதிமுக பொறுக்கிகள் நடத்திய கலவரங்களை அறிவீர்கள். அதில் தமிழ் திரையுலகம் கூடுதல் பொறுக்கித்தனத்துடன் நடந்து கொண்டது. கவிராயர்களும், கலைமாந்தர்களும் நிறைந்திருக்கும் துறை என்பதால் “தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா” என்றெல்லாம் பிளக்ஸ் வைத்தார்கள்.

தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் இந்த சினிமா பொறுக்கிகளுக்கு யார் தண்டனை கொடுப்பது?
முழுக்கட்டுரை, படங்களை படிக்க பார்க்க:

கொள்ளைக்காரி ஜெயா விடுதலை ஏன்? நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் ஜெயா-சசி கும்பல் விடுதலை ஆன போது வினவு தளம் உடன் வெளியிட்ட கட்டுரை தலைப்பு இது. இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு மற்ற ஊடகங்கள் குறிப்பாக ஜெயாவுக்கு சொம்படித்த பத்திரிகைகள் ஊழலுக்கு எதிராகவும், ஜெயாவுக்கு எதிராகவும் பேசுவதாக நடிக்கின்றன. குமாரசாமி தீர்ப்பின் போதோ இவர்கள் இதே ஜெயாவை சாதனை நாயகியாக பாராட்டினர்.

ஆனால் குமாரசாமி தீர்ப்பின் போது வினவு மட்டுமே ஜெயாவை கொள்ளைக்காரி என்று அழைத்து தீர்ப்பை விமரிசித்தன. அப்போது ஜெயாவின் காட்டாட்சிதான் நடந்து கொண்டிருந்தது. இந்த தலைப்பு வைப்பதனால் வரும் அடக்குமுறைகளை எதிர்பார்த்து ஆலோசித்து விட்டே வெளியிட்டோம்.

ஊடக தர்மம், நியாயம், கொள்கை, அறம் போன்றவை மற்ற ஊடகங்களின் காலில் மிதிபடும் பொருட்கள். அதற்கு மெரினாவில் அகற்றப்பட வேண்டிய குற்றவாளியாக கொலுவிருக்கும் ஜெயாவே சாட்சி

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்.

இணையுங்கள்: