Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 508

மோடி – ஜிஎஸ்டி – பணமதிப்பழிப்பு – தீபாவளி : மாபெரும் சர்வே முடிவுகள்

0

வினவு – அக்டோபர் 2017 மாபெரும் கருத்துக்கணிப்பு : பாகம் 2

மது கருத்துக்கணிப்பில் கமல்ஹாசன் குறித்த கேள்வியைத் தவிர்த்து பிற கேள்விகள் அனைத்துக்குமே மக்கள் ஏதோவொரு வகையில் பாரதிய ஜனதாவைப் பொறுப்பாக்கி பதிலளித்ததை பார்க்க முடிந்தது. நீட் தேர்வு-அனிதா மரணம் தொடர்பான கேள்விக்கும் சரி தமிழகத்தில் நிலவும் அரசியல் சீரழிவுப் போக்கிற்கும் சரி பாரதிய ஜனதாவே குற்றவாளியென மக்கள் கருதியதை உணர முடிந்தது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மோடி குறித்த அபிப்பிராயங்களைப் பற்றிய கேள்விகளின் போது மக்கள் கொந்தளித்து விட்டனர். கேள்விகளில் எந்த வகையிலும் பக்கச்சார்பு வெளிப்பட்டு விடக்கூடாது என்பற்காகவே விடைகளில் மோடி பக்தர்கள் தெரிவு செய்யக்கூடுமெனக் கருதி அதற்கான வாய்ப்புகளையும் வைத்திருந்தோம்.

எனினும், “மோடி பற்றி..?” என்கிற கேள்விக்கு பதிலளித்த மக்கள் ஏகோபித்த வகையில் அவர் ஒரு “ஏமாற்றுப் பேர்வழி” என்கிற பதிலையும் “கார்ப்பரேட் முதலாளிகளின் கையாள்” என்கிற பதிலையுமே தெரிவு செய்தனர். கருத்துக் கணிப்புக்காகச் சென்ற நமது செய்தியாளர் குழுவின் காதுகளே கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தனர்.

கேள்வி : மோடி பற்றி..?

  • சொன்னதைச் செய்த திறமைசாலி
  • ஏமாற்றுப் பேர்வழி
  • கார்ப்பரேட் முதலாளிகளின் கையாள்
  • நல்லவர்தான் ஆனால் திறமையில்லை

மக்கள் கருத்து : மோடி பற்றி..?

  • சொன்னதைச் செய்த திறமைசாலி – 8.8% (109 – பேர்)
  • ஏமாற்றுப் பேர்வழி – 39.5% (488 – பேர்)
  • கார்ப்பரேட் முதலாளிகளின் கையாள் – 36.9% (457 – பேர்)
  • நல்லவர்தான் ஆனால் திறமையில்லை – 14.8% (183 – பேர்)

முசுலீம்கள் தான் என்றில்லை. “அவன் ஒரு பொறம்போக்கு சார்” எனத் துவங்கிய குட்டி யானை ஓட்டுனர் ஒருவர் தொடர்ந்து வட தமிழக மண்ணுக்கே உரித்தான வார்த்தைகளில் திட்டத் துவங்கி விட்டார். அவரது ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

“ஏங்க என்ன இருந்தாலும் நம்ம நாட்டோட பிரதமருங்க… எனக்கும் கூட அவர் மேல வருத்தம் இருக்கு தான்.. அதுக்காக இப்படியெல்லாம் திட்டறது அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களையே அவமானப்படுத்தற மாதிரி இல்லையா? என்று கேட்டோம்.

“சார் எல்லாம் போச்சி சார்… ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னான்.. அப்பத் தான் விழுப்புரத்துல வூட்ட வித்து சொந்தமா ஆட்டோ வாங்க கைல காசு வச்சினு இருந்தேன். ஒருவாரம் சார்.. கையில லச்ச ரூபாய்க்கு மேல் காசு இருந்தும் துன்றதுக்கு சோறு இல்லாம அலைஞ்சேன். மூணு வாரம் கழிச்சி ஒத்தன் நுப்பது பர்சண்டு கமிசன் வாங்கினு காசெல்லாம் மாத்திக் குடுத்தான். வந்த காசு வண்டி விலைக்கு பாதி தான் தேறுச்சி. பொண்டாட்டி நகைய அடமானம் வச்சியும் சேட்டு கிட்ட கடன் வாங்கியும் இந்த வண்டிய வாங்கி தண்ணிக் கேணு போட்டுனு இருந்தேன். அதுக்குள்ற ஜி.எஸ்,டி கொண்டாந்துட்டான்.. தண்ணிக் கேனு வாங்கற கம்பெனிக்காரங்க ஜி.எஸ்.டி நெம்பரு இருந்தா வா இல்லாட்டி போயினே இருன்றாங்க. ரெண்டு மாசமா ட்யூ கட்டல சார்… சேட்டு வேற போன் மேல போனு போட்டுனு இருக்கான்.. வாழ்றதா சாவறதான்னே தெரியல” எனச் சொல்லச் சொல்ல அவரது கண்கள் குளமாகின.

கேள்வி : மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்கு பாதிப்பு ?

  • கருப்புப் பணமுதலைகள்
  • சாதாரண பொதுமக்கள்
  • சிறு வணிகர்கள்
  • கருப்புப் பண முதலைகள்
    தவிர அனைவருக்கும்

மக்கள் கருத்து : மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் யாருக்கு பாதிப்பு ?

  • கருப்புப் பணமுதலைகள் – 10.9 % (135 – பேர்)
  • சாதாரண பொதுமக்கள் – 60.6% (750 – பேர்)
  • சிறு வணிகர்கள் – 6.2% (77 – பேர்)
  • கருப்புப் பண முதலைகள்
    தவிர அனைவருக்கும் – 22.2% (275 – பேர்)

அரசியல் பேசுதவற்கு வழியில்லாத பிரிவினராக கருதப்படும் பெண்கள் கூட மோடியின் மீது கடும் வெறுப்பைக் கொண்டிருந்தனர். மோடியின் மூன்றாண்டு குறித்த பேச்சுவந்த போது, “அக்கா, மோடி இன்னும் எத்தனை வருசத்துக்கு பிரதமரா இருப்பார்?” என்று கேட்டார்கள் இரண்டு இளம் பெண்கள். இன்னம் இரண்டு ஆண்டுகள் என்றதும் “என்னது இரண்டு வருசமா, எப்பக்கா நம்ம பிரச்சனை தீரும்” என்றார்கள்.

வெகு சொற்பமானவர்கள் மோடியை ஆதரித்தனர். அவர்களும் அவருக்காக திறமையற்றவர் என்கிற பதிலையே தெரிவு செய்தனர். அரசு ஊழியரான ஒரு பெண், “மோடியை பத்தி ஒருவரில எல்லாம் சொல்ல முடியாதுங்க.. வேணும்னா காமெரா கொண்டாங்க நல்லா சொல்றேன்” என்கிறார். சமீப மாதங்களில் குடும்பச் செலவுகள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், அதில் எதைக் குறைத்துக் கொள்வது எனத் தெரியாமல் தவிப்பதாகத் தெரிவித்தார்.

கேள்வி : ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குப் பிறகு உங்கள் செலவு கூடியிருக்கிறதா ?

  • ஆம்
  • இல்லை

கேள்வி : ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குப் பிறகு உங்கள் செலவு கூடியிருக்கிறதா ?

  • ஆம் – 89.7% (1110 – பேர்)
  • இல்லை – 10.3% (127 – பேர்)

மோடியின் மீதான ஆத்திரத்திற்கு அவர் முன்னெடுத்த இரண்டு முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளான பணமதிப்பழிப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையே காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் கேள்விகளுக்கு மக்கள் எவ்வாறு பதிலளித்தனர்?

கடற்கரையில் சுண்டல் பொறி விற்பவர் ஒருவரிடம் ஜி.எஸ்.டியால் விலைகள் குறைந்துள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சொல்கிறாரே என்றோம்.

“எப்டி சார் குறைஞ்சிருக்கு? 250 ரூபா வித்த பொரி மூட்டை இப்ப 300 ரூபா. 80 ரூபாவுக்கு வித்த மிச்சர் பாக்கெட் இப்ப 120 ரூபா. ஆனா நாங்க இன்னும் பழைய விலைக்குத் தான் வித்துகிட்டு இருக்கோம். விலைய கூட்டினா மக்கள் வாங்க மாட்றாங்க சார். தோ இன்னிக்கு பீச்சை பாருங்க, ஞாயித்துக் கிழமை மாதிரியா இருக்கு? சனிக்கிழமை அளவுக்குத் தான் கூட்டமே இருக்கு. மத்த நாள்ல இதுவும் இல்லாம காத்து வாங்குது. நாங்கெல்லாம் எப்படி சார் பொழைக்கிறது? என்கிறார்.

கேள்வி : மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் யாருக்கு பலன் அதிகம் ?

  • கார்ப்பரேட் முதலாளிகள்
  • விவசாயிகள்
  • தொழிலாளர்கள்
  • வணிகர்கள்
  • யாருமில்லை

மக்கள் கருத்து: மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் யாருக்கு பலன் அதிகம் ?

  • கார்ப்பரேட் முதலாளிகள் – 74.7% (924 – பேர்)
  • விவசாயிகள் – 1.5% (18 – பேர்)
  • வணிகர்கள் – 1.5% (18 – பேர்)
  • தொழிலாளர்கள் – 1.4% (17 – பேர்)
  • யாருமில்லை – 21% (260 – பேர்)

கார் பைக்குகளுக்கு சீட் கவர் விற்பனை செய்யும் சிறு வணிகர் ஒருவரிடம் பேசினோம். “ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு சொன்னப்ப வியாபாரம் படுத்தது தான் இன்னும் எழுந்துக்கவே இல்லைங்க” என்றார். கடையில் இப்போது நடக்கும் வியாபாரம குறித்து கேட்ட போது, “பூட்டியிருக்கிறதும் திறந்திருக்கிறதும் ஒன்னு தான் சார்” என முடித்துக் கொண்டார்.

“முன்னே எல்லாம் மதியம் 80 ரூபா இருந்தா பிரியாணியே சாப்பிடலாம். இப்ப ஜி.எஸ்.டிக்கு அப்புறம் பிரியாணி விலை 20 ரூபா கூடியிருக்கு. ஒவ்வொரு ஓட்டல்லயும் 15லேர்ந்து 20 ரூபா வரைக்கும் விலை கூட்டியிருக்காங்க. அதுக்காகவே இப்ப நான் மதியம் சாப்பிடறதை நிப்பாட்டிட்டேன். ஒரு டீயும் பிஸ்கட்டும் தான்” என்றார் ஒரு பெயிண்டர். இவரது நாள் கூலி 500 ரூபாய். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலை கிடைத்தால் அதிர்ஷ்டம். வாரம் 1500ல் இருந்து 2000 ரூபாய் கிடைக்கலாம். இதில் இவர் ஒருவரின் ஒரு வேளை சாப்பாட்டுக்கே 70 – 100 ரூபாய் செலவழித்து விட்டால் வாரச் சம்பளத்தில் 500ல் இருந்து 700 வரை துண்டு விழுந்து விடும்.

மோடியின் மேல் மக்களுக்கு இருக்கும் வன்மத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பாரதிய ஜனதாவின் மகளிர் அணியைச் சேர்ந்த நான்கு பெண்கள் மோடியின் சாதனைகளைக் குறித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்ய திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிக்குச் சென்றுள்ளனர். பகுதி மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்ததாக குறிப்பிட்டனர். “பொம்பளைங்களா போயிட்டாங்க சார்.. இல்லேன்னே வேற மாதிரி ஆகியிருக்கும்” என்கிறார் மளிகை கடை நடத்தும் வணிகர் ஒருவர்

மோடியின் மூன்றாண்டுகால ஆட்சியில் பலனடைந்தது யார் என்கிற கேள்விக்கு பலர் “கார்ப்பரேட் முதலாளிகள்” என்கிற விடையைத் தெரிவு செய்தாலும், கணிசமானோர் “யாருமில்லை” என்றும் குறிப்பிட்டனர். இந்தக் கேள்வியைப் பொருத்த வரை மக்களின் பொதுபுத்தியில் மோடி கையாலாகாதவர் என்பது பதிந்து விட்டதால் அவரால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இருக்க முடியாதென மக்களுக்கே ஒரு முன்முடிவு இருந்ததைப் பார்க்க முடிந்தது. எனவே தான், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளையும் தாண்டி மோடியால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை என பலரும் கருத்து கொண்டிருந்தனர்.

ஜி.எஸ்.டி குறித்த கேள்விக்கு பலரும் “ஏன் பாதிப்பில்லை” என்பதை ஒரு தெரிவாக வைத்துள்ளீர்கள் என நம்மிடமே சண்டைக்கு வந்து விட்டனர். இரண்டாவது கேள்விக்கான விடைத் தெரிவுகளைப் பார்த்ததும் “நீ பாதிப்பு இல்லைன்னு வேற சொல்லிடுவியா” என ஆத்திரத்தோடு கேள்வித் தாளைத் திருப்பிக் கொடுத்தனர். அவர்களிடம் “பக்கச்சார்பின்றி கருத்துக்கணிப்பு எடுக்க வேண்டிய” எமது நிலைப்பாட்டை விளக்கிக் கூறிய பின்னரே கருத்துக் கணிப்பில் மேலும் பங்கெடுத்தனர்.

பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பொருத்தவரை பெருவாரியாக “குழந்தைகளுக்காக கொண்டாடுவோம்” எனவும், கணிசமானோர் “கொண்டாட வருமானமில்லை” எனவும் பதிலளித்தனர். பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடுமையான தேக்க நிலை மக்களின் ஆன்மீக வாழ்க்கையையும் அவர்களது நம்பிக்கைகளையுமே கூட புரட்டிப் போட்டு விட்டதைப் பார்க்க முடிந்தது.

கேள்வி : இந்த வருட பண்டிகையை எப்படி கொண்டாடுவீர்கள் ?

  • மகிழ்ச்சியாகக் கொண்டாடுவேன்
  • குழந்தைகளுக்காக மட்டும்
    கொண்டாடுவேன்
  • கொண்டாட வருமானமில்லை

மக்கள் கருத்து: இந்த வருட பண்டிகையை எப்படி கொண்டாடுவீர்கள் ?

  • கொண்டாட வருமானமில்லை – 48.4% (604 – பேர்)
  • குழந்தைகளுக்காக மட்டும் – 33.8% (418 – பேர்)
    கொண்டாடுவேன்
  • மகிழ்ச்சியாகக் கொண்டாடுவேன் – 17.4% (215 – பேர்)

“குடிக்க கூழு இல்ல, கொண்டாட்டம் தானா கேடு?” என்ற நடுத்தர வயதுப் பெண்ணிடம், “தீபாவளி கொண்டாடறது மத வழக்கப்படி முக்கியமானதாச்சே?” என்றோம். “ஏம்பா சாமியா வந்து சோறு போடுது? நான் ஒழைக்கிறேன், சோறு துன்றேன். அதெல்லாம் இல்லபா.. நம்ம வீட்டுப் புள்ளைங்க அந்த நாள் அன்னைக்கு மத்தவங்கள பாத்து ஏங்கிப் போயிறக் கூடாதேன்னு தான் இருக்கு. அதுக்கோசரம் புதுத் துணி பட்டாசுன்னு வாங்கித் தொலைய வேண்டியிருக்கு” என்றவர், இந்தாண்டு பட்டாசு வாங்குவதற்கு ஆதார் எண் கேட்பதாக குறிப்பிட்டார் இது உண்மையே இல்லை என்றாலும் ஆதார் வன்முறைகளின் விளைவு மக்களை இப்படியெல்லாம் பேச வைக்கின்றது.

பொதுவில் மக்களின் மத நம்பிக்கைகளையும், கொண்டாட்டங்களையும் அதற்காக வீணாக்கப்படும் பொருளாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய வேலையே முற்போக்கு இயக்கங்களுக்கு இல்லை. அந்த வேலையை எதிர்மறையாக மோடி அரசு செய்து வருவதை இந்தக் கருத்துக் கணிப்பு தெளிவாக உணர்த்தியது. மேலும், மோடி மற்றும் பாரதிய ஜனதாவின் மேல் மக்களுக்கு இருக்கும் ஆத்திரம் அதன் உச்சத்துக்கு போயிருப்பதையும் குறிப்பாக உணர்த்துகின்றது.

மக்களின் மன ஓட்டம் இதுவென்றாலும் பாஜக அரசுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் இருக்கும் வரை, பாஜகவை போர்க்குணமிக்க முறையில் எதிர்க்கும் மக்கள் இயக்கம் உருவாகாத வரை, மோடியின் பிம்பம் வம்படியாக தொடர்ந்து ஏற்றப்படும். எனினும் அதற்கும் ஓர் முடிவு இருக்கும் என்பதை இந்த கருத்துக் கணிப்பு நம்பிக்கையுடன் விளக்குகிறது.

வினவு கருத்துக் கணிப்புக் குழு

வரைபடங்கள்: வேலன்

( 1237 மக்களிடம் 08.10.2017 அன்று எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் இறுதி பாகம். ஆன்ட்ராய்டு செல்பேசி செயலி மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்களிடம் எடுக்கப்பட்ட துல்லியமான கருத்துக் கணிப்பு இது)

இந்த கருத்துக் கணிப்பின் முந்தய பாகத்துக்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

வினவு – அக்டோபர் 2017 மாபெரும் கருத்துக்கணிப்பு : பாகம் 1

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு : சாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியுமா ?

2

மிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மக்களை மிரட்டி வருகிறது. என்ன ஏது என்று தெரியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். தனியார் மருத்தவமனைகள் கைவிடும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் வந்து சேரும் மக்களுக்கு அங்கே போதுமான வசதிகள் – மருத்துவம் கிடைப்பதில்லை. தொலைக்காட்சியைத் திறந்தாலே ஆங்காங்கே பதிவு செய்யப்படும் மரணங்கள் நம்மை திடுக்கிடச் செய்கின்றன. மருத்துவம் முன்னேறிய  நவீன காலத்தில் நம் மக்கள் ஏன் இப்படிச் சாக வேண்டும்?

“டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், மத்திய அரசின் உதவியை கோரும் நிலையில் பிரச்சினை இல்லை. தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகிறது” என்கிறார் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர். இவ்விளக்கத்தின் உண்மை நிலை என்ன? வினவு செய்தியாளர்கள் நேரில் சென்று பார்த்தார்கள்.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 24 மணி நேர சிகிச்சை மையம்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் பிரிவு செயல்பட்டு வருகிறது. ஐந்து போர்வைத் துணிகளை கட்டி கூடாரம் போல் மருத்துவமனை முகாம் ஒன்று  வராண்டாவில் அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருக்க கொஞ்சம் பேர் அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். உடல்நிலை மோசமாக இருந்தவர்கள் படுத்திருந்தனர்.

வரிசையில் வரும் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார் “பத்மாவதி ஹாஸ்பிட்டல் ஒப்பந்த நிறுவன” செக்யூரிட்டி. இந்த நிறுவனம் ஏ 2 குற்றவாளி சசிகலாவின் பினாமிகளுக்கு சொந்தமானது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள். இடையிடையே செவிலியர்களுக்கு தெரிந்த நோயாளிகள் மட்டும் அந்த கூடாரத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். மற்றவர்கள் முறையான வாய்ப்புகளுக்கு காத்திருந்தனர்.

சிகிச்சைக்காக வந்திருந்த பலர் நடுத்தர வயதினர் மற்றும் குழந்தைகள். காலையில் கூட்டம் அதிகம் என்பதால் அவர்களை கவனிக்க 6 செவிலியர்களோடு, இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர்.

முறையான சிகிச்சையளிக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபடும் நோயாளிகள்

அனைத்து நோயாளிகளுக்கும் நிலவேம்பு கசாயம் குடிக்க சொல்லி அறிவுறுத்தினார்கள்.  சிகிச்சைக்காக வந்திருந்த பலருக்கும் ஒரு பதட்டம் இருந்ததை காணமுடிந்தது. டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்போமோ என்ற அச்சம் அதிகமாகவே இருந்தது. அங்கு வந்திருந்த நோயாளிகள் ஒரு சிலர் காய்ச்சலுக்காக தினமும் மருத்துவமனைக்கு வருவதாக கூறுகிறார்கள்.

புதிதாக காய்ச்சலுக்காக வந்திருந்த 50 வயதுடைய பெண் ஒருவர்  செக்யூரிட்டியிடம் சென்று….

“காய்ச்சலுக்கு எங்க பாக்கறது” என்று கேட்க,

அவரோ……… “பக்கத்துல இருக்க  அவரச வார்டுக்கு போயி, (ஒருவர் கையில்  வைத்திருந்த சீட்டை காட்டி….)  இந்த மாதிரி சீட்டு தருவாங்க வாங்கிட்டு இங்க வந்து பாரு” என்றார்.

அந்த அம்மாவோ இடம் தெரியாமல் மீண்டும் கேட்க, எரிச்சலானர் செக்யூரிட்டி. பிறகு அவருக்கு அங்கு நின்றிருந்த நோயாளிகள் உதவினர். புதிதாக வரும் மக்களுக்கு கிழக்கு எது மேற்கு எது என்பது தெரியாது. அவர்களை முறைப்படி வழிநடத்த போதுமான காவலாளிகளோ உதவியாளர்களோ அங்கில்லை.

சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்ததால் வலியுடன் அதிகம் நேரம் நிற்க முடியாமல் கத்த ஆரம்பித்தனர்.  சிகிச்சைக்கு வரும் சிலரை தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளித்து சிகிச்சை வழங்கியதாக கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  சத்தம் கேட்டு உடனடியாக வந்த போலீசு சமாதானப்படுத்திய பிறகு தான் நோயாளிகள் அமைதியாகினர். இப்படி தற்காலிக பிரச்சனைகளும் சண்டைகளுமாக அந்த இடம் காய்ச்சலோடு போட்டியிட்டுக் கொண்டு சூடு பிடித்தது.

ஸ்டான்லி-மருத்துவமனையில்-டெங்குவிற்காக-அனுமதிக்கப்பட்டிருக்கும்-நோயாளிகள்.

அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி நீண்ட நேரமாக முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அவருடைய உறவினர்கள் அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.  அவரிடம் என்ன ஏதுவென்று விசாரிக்கையில், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவரை விஜயலட்சுமியின் கணவர் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

சாதாரண காய்ச்சல் தான் என்று சிகிச்சை வழங்கியிருக்கிறார்கள். காய்ச்சல் விடாமல் அடிக்க, பிறகு இரத்தப் பரிசோதனை எடுக்குமாறு மருத்துவர்கள் சொல்ல, ஞாயிற்றுக் கிழமை தான் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள்.

பரிசோதனையில் டெங்கு என்பது உறுதியானதும் மருத்துவமனை நிர்வாகம், விஜயலட்சுமியின் கணவரை கூப்பிட்டு “உங்க மனைவிக்கு ரத்தம் கம்மியா இருக்கு… ரத்தம் ஏத்துற வசதி எங்ககிட்ட இல்ல. நீங்க அரசு ஆஸ்பித்திரிக்கு போங்க” என்று அனுப்பி விட்டது.

இதுவரைக்கும் அந்த ஆஸ்பிட்டலுக்கு 7,000 ரூபா செலவாயிருக்கு.  நா… மேல பணம் செலவு பண்ண கூட தயாரா தான் இருக்கேன்.  ஆனா இங்க அனுப்பி விட்டுட்டாங்க….  இங்க வந்து ரிப்போர்ட் எல்லாம் காட்டுனேன்…  அத பாத்துட்டு அவசர வார்டுக்கு போங்கன்னு சொன்னாங்க. அங்க போனா கீழ போயி பாருங்கன்னு சொல்லுறாங்க…. என்ன பண்றதுன்னே ஒன்னும் புரியல…

இதுக்கு முன்னாடி எம்பொண்ணுக்கு வந்துச்சி… இப்ப என்னோட மனைவிக்கு வந்திருக்கு… வீடு வாசல் அக்கம் பக்கம் எல்லாம் சுத்தமா தான் இருக்கு அப்புறம் எப்படின்னே புரியல….சார்.

நான் மினி வேன் ஓட்டுறேன்.. இப்ப ஒரு வாரமா வேலைக்கு போக முடியல.. கையில காசு கூட இல்ல. வீட்டுல இருந்த நகைய தான் அடமானம் வச்சி பார்த்தேன். இப்ப இன்னும் எவ்ளோ நாள் ஆகும்னு தெரியல.. நா… நோய பாக்குறதா இல்ல பொழப்ப பாக்குறதான்னே தெரியல என்று சொல்லி அழவும் தெம்பில்லாமல் அமைதியானார் அவர்.

ஸ்டான்லி மருத்துவமனை

அதேபோல் இரண்டாவது மாடியில் டெங்குவோடு இதர இனம் புரியாத மர்ம காய்ச்சல்களால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். காய்ச்சலுக்கு என்று தனி வார்டு எதுவும் இல்லை. “ஆண்கள் அறுவை சிகிச்சை” பகுதியில் தான் அனைவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 102 இருக்கைகள். ஆனால் அனுமதிக்கப்படிருந்தவர்கள் 107 பேர். அப்போதே அரங்கம் நிரம்பி வழிந்தாலும் மேற்கொண்டு காய்ச்சல் அதிகம் என்று வருபவர்களுக்கு இருக்கை வசதியும் இல்லை.. தனி வார்டுகளும் இல்லை. அதற்குள்ளேயே அனைவரையும் அடைத்து வைக்க வேண்டிய நிலை தான்.

இந்த நோயாளிகளை காய்ச்சல் குறைந்தவர்கள்.. காய்ச்சல் தீவிரமாக இருப்பவர்கள் என்று இரண்டு வகையாக பிரித்திருந்தார்கள்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அரக்கோணத்தைச் சேர்ந்த வள்ளியம்மை. அவருடைய கணவர், மகள், மகன் அனைவரும் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தார்கள். அவர் சாதாரண கூலித்தொழிலாளி. மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதை விளக்க வேண்டியதில்லை.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் என்று ஊரில் உள்ள தனியார் கிளினிக்கில் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இரண்டு மூன்று நாட்களாகியும் குணமாகாததால் அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது தனியார் மருத்துவமனை. அரக்கோணம் மருத்துவமனையில் ஒருவாரம் சிகிச்சை பார்த்திருக்கிறார்கள். அங்கும் குணமடையவில்லை என்பதால் சென்னையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பியதால் இங்கே சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏறக்குறைய அங்கே சிகிச்சை பெறுபவர்கள் பெரும்பாலானோர் சாதாரண காய்ச்சல் என்று தனியார் மருத்துவமனைக்கு சென்றவர்கள். அவர்களிடம் முடிந்த அளவிற்கு தனியார் மருத்துவமனைகள்  பணத்தை கறந்து கொண்டு இறுதியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றன. பிறகு ஏன் அரசு மருத்துவமனைகளில் பிரச்சனைகள் ஏற்படாது?

குப்பை மேடாக மாறியுள்ள ஸ்டான்லி மருத்துவமனை

இது குறித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவர் ஒருவரிடம் கேட்கையில், “தனியார் மருத்துவமனையைப் பொறுத்த வரை முதற்கட்டமாக சிகிச்சை அளிக்கிறார்கள்.  டெங்கு என்று தெரிந்ததும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை என்று அனுப்பி விடுகிறார்கள்.” அரசு மருத்துவமனையில் இருக்கின்ற வசதிகளை கொண்டு நோயாளிகளை குணப்படுத்துகிறோம்.

ஆனால்… அரசு மருத்துவமனையில் தான் அதிக அளவு மரணம் என்ற செய்தி வருகிறதே என்று கேட்டபோது,

“தனியார் மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் நோயாளிகள் டெங்கு முற்றிய நிலையில்” தான் அனுப்பி வைக்கிறார்கள். தங்கள் மருத்துவமனை பெயர் அடிபட்டு விடக்கூடாது எனும்போது அனுப்பி விடுகிறார்கள்.  நாங்கள் முடிந்த அளவிற்கு முயற்சி செய்கின்றோம் என்கிறார்.

தரமான சிகிச்சைகளை அளிக்கிறோம் என்று கூவி அழைக்கும் தனியார் மருத்துவமனைகள் உண்மையில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டோரை வைத்துக் கொள்வதில்லை. ஆரோக்கியமாக இருப்போரை மட்டும் வைத்து தொழிலை நடத்தும் இவர்கள்தான் தனியார்மயம் பெற்றெடுத்த மருத்துவ எமன்கள்.

சென்னை தங்கசாலையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மக்களின் அவலங்களுக்கு குறைவில்லை. நாளொன்றுக்கு மூன்றாயிரம் புறநோயாளிகள் வந்து போகும் இந்த மருத்துவனையில் 24 மணி நேரக் காயச்சல் பிரிவில் ஒரு செவிலியர், ஒரு மருத்துவர் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். இனி மோடி அரசின் நீட் தேர்வு உபயத்தால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற சேவையாற்ற எவர் வருவார் சொல்லுங்கள்?

இங்கும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கென்று தனி வார்டுகள் எதுவும் இல்லை.  நீரிழிவு நோயாளிகள் வார்டை ஒதுக்கி காய்ச்சல் வார்டு என்று 09.10.2017  அன்றுதான் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.

இந்த மருத்துவமனையில் அடிக்கடி தீவிபத்து நடக்கும் என்கிறார்கள் அருகாமையில் இருக்கும் சிறு வணிகர்கள். அதுமட்டுமில்லாமல் இம்மருத்துவனை கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. அதுவும் டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் கட்டிடத்திலேயே ஏராளமான கொசு உற்பத்தி தொழிற்சாலை உள்ளது என்பது ஒரு கொடூரமான உண்மை. கட்டிடத்தின் உள்ளேயே குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றியுள்ளார்கள்.

ஒரு மாநிலத் தலைநகரில் உள்ள மருத்துவமனைகளிலேயே இதுதான் நிலைமை என்றால் கிராமப்புற மாவட்ட மருத்துவமனைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. சுகாதாரமும் தனியார் மயம், துப்புறவுப் பணியும் தனியார் மயம் என்றான பிறகு நாம் இந்த அழுக்கை எப்படி ஒழிப்பது? எப்படி சுகாதராத்தைப் பேணுவது?

டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வண்ணம் அலட்சியமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். எனில் முதலில் உள்ளே போகவேண்டியவர் அவர்தான். மக்களை மிரட்டும் இவர், சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று பெயருக்கு கூட சொல்லவில்லை.

தற்போது முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்குவையும் பெரிய மனதுடன் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளார் அமைச்சர். அதுவும் ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நாளொன்றுக்கு ரூ 2000 ரூபாய் வரையிலும் காப்பீட்டுத் திட்டத்தில் பெறலாமாம். இதன்படி தனியார் மருத்துவமனைகள் இனி ஏழைகளை சேர்த்து டெங்குவே இல்லையென்றாலும் காப்பீடுப் பணம் பெறுவார்கள். மரணத்திலும் கூட தனியார் மருத்துவமனையின் வருமானத்திற்காக கவலைப்படும் இந்த குட்கா ஊழல் அமைச்சரை பெற்றது நம் பாக்கியம்.

கடந்த ஜனவரி 2017 முதல் 12,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 400 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதகாவும், நாளொன்றுக்கு 10 பேர் டெங்குவால் இறப்பதாக செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ அவசர நிலையை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அடிமை எடப்பாடி அரசோ அதனை கண்டுகொள்ளாமல் “டெங்கு ஒழிப்பு தின விழா” நடத்தி கொண்டாடுகிறார். போரடித்தால் எம்ஜிஆர் விழா, சிலீப்பர் செல்களை அடக்கும் திரைமறைவு விழாக்கள் என்று பிசியாக உள்ளது இந்த நீரோக்களது அரசு.

ஸ்டான்லி மருத்துவமனை வெளி பகுதி

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை, மருந்துகள் இல்லை. சென்னையை பொறுத்தவரை கொசு ஒழிப்பு பணியில் மலேரியா துறையை தனியாரிடம் ஒப்படைத்து விட்டது மாநகராட்சி.  தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம் செயலற்று போய்விட்டது. சுகாதாரத்தில் திட்டமிடல் இல்லாமலும், பொது சுகாதாரம் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாமலும் கொள்ளையடிப்பதிலேயே குறியாக செயல்பட்டு வருகிறது தமிழக அரசு. இப்படி கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொழிப்பதற்காக பொது சுகாதாரத் துறையை கொன்று வரும் கயவர்கள் இப்போது டெங்குவிற்காக போராளி வேடம் போடுகிறார்கள்.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும்.

அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி உறுப்பினர்கள் அனைவரும் இதை சீராக்கும் வரை சுகாதாரத் துறை நிர்வாக வேலைகளையே இடைவிடாமல் செய்ய வேண்டும்.

மலேரியா துறை முற்றிலும் அரசுடமையாக்கப்பட்டு, ஊழியர்கள் நிரந்தரமாக்கப் படவேண்டும்.

தமிழகமெங்கும் உள்ள தற்காலிக துப்புறவுத் தொழிலாளிகள் நிரந்தரமாக்கப்பட்டு, முறையான அரசு ஊதியத்துடன், டெங்கு அழிப்பு சிறப்பு பணிக்காகன சிறப்பு ஊதியம் அளிக்கப்பட்டு களமிறக்கப்படவேண்டும்.

டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தீவிர காய்ச்சல் நோய்கள் கட்டுப்படும் வரை தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட வேண்டும். மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை உறுதி செய்த பிறகு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குமாறு கேட்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் பிதுங்கி வழியும் மக்களுக்கு சமூக இயக்கங்கள் – கட்சிகளின் தன்னார்வலர்கள் நேரில் சொன்று உதவ வேண்டும்.

இதை தமிழக அரசோ, மத்திய அரசோ அமல்படுத்த மறுக்கும் பட்சத்தில் மக்களும், இயக்கங்களும் தீவிரமான போராட்டத்தை எடுக்க வேண்டும்.

இல்லையேல் தனியார் மருத்துவமனைகளில் காசை இழந்து அரசு மருத்துவமனைகளுக்கு வந்து  உயிரை விடும் மக்களை நம்மால் காப்பாற்ற இயலாது!

–    வினவு செய்தியாளர்கள்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

யேசிடி : ஐஎஸ் பயங்கரவாதிகளால் அழிக்கப்படும் ஈராக்கின் ‘இந்து’ மதம் !

0

ராக்கில், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களுக்கு காலத்தால் முந்திய யேசிடி மதத்தை பின்பற்றும் மக்களைப் பற்றி, நீண்ட காலமாக உலகம் அறிந்திருக்கவில்லை. ஏன், மத்திய கிழக்கிலும், அந்த மக்களின் தேசமான ஈராக்கிலும் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 2014 -ம் ஆண்டு, ஐ.எஸ். அல்லது ISIS என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்து யேசிடிக்களை படுகொலை செய்த பின்னர் தான், உலகின் கவனம் அவர்கள் மேல் திரும்பியது.

யார் இந்த யேசிடிக்கள்?

வட ஈராக்கில் வாழும், குர்திய மொழி பேசும் இந்தோ – ஆரிய இன மக்கள். அவர்கள் பின்பற்றும் யேசிடி மதம் இஸ்லாத்திற்கு முந்தியது. அரேபியப் படையெடுப்புகள் காரணமாக, இன்றைய ஈராக் முழுவதும் இஸ்லாமிய மயமாகிய போதிலும், யேசிடி மக்கள் புராதன மத நம்பிக்கைகளை கைவிடவில்லை. பெரும்பாலான குர்தியர்கள் காலப்போக்கில் இஸ்லாமியராக மதம் மாறிய போதிலும், இவர்கள் மட்டும் தமது பழைய மதத்தை பின்பற்றினார்கள்.

ஈராக் சிரியா எல்லையில் யேசிடி மதத்தினர்

உதாரணத்திற்கு இப்படி ஒன்றைக் கற்பனை செய்து பார்ப்போம். தமிழர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக, அல்லது இஸ்லாமியராக மாறி விட்ட பின்னர், சில ஆயிரம் பேர் மட்டும் இந்துக்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் ஈராக்கி – குர்திஸ்தானில் உள்ளது. இதுவே அண்மைக் காலத்தில் அங்கு நடந்த அரசியல் பிரச்சினைகளின் அடித்தளமும் ஆகும்.

பொதுவாக, ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில், யேசிடிகள் பற்றிய அறியாமை நிலவுகின்றது. அவர்கள் பேய், பிசாசை வழிபடுவதாக பலர் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. யேசிடி மதத்தில் பிசாசு, அல்லது சாத்தான் என்ற ஒன்று கிடையாது. அதை ஓரளவுக்கு இந்து மத நம்பிக்கையுடன் ஒப்பிடலாம். “இந்து” என்பது கூட, இந்தியாவில் இருந்த புராதன மதங்களுக்கான பொதுப் பெயர் தான். ஆகவே, யேசிடியையும் அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்.

யேசிடிக்கள் தினந்தோறும் சூரிய வணக்கம் செய்ய வேண்டும். ஆகையினால், அவர்களை “ஒளியின் குழந்தைகள்” என்றும் அழைப்பார்கள். அதே நேரம், ஏழு அல்லது எட்டு தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். மயில் தெய்வம் மிகவும் முக்கியமானது. அதைப் பற்றி ஒரு புராணக் கதையும் உள்ளது. இறைவன் ஆதாம் என்ற முதல் மனிதனை படைத்து விட்டு, அனைத்து ஜீவராசிகளையும் வணங்குமாறு சொன்னாராம். ஆனால், மயில் மட்டும் மறுத்து விட்டதாம். அந்தக் கதை கூட பிற்காலத்தில் வந்ததாக இருக்கலாம். அதாவது, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதப் பரம்பலுக்கு எதிர்வினையாக உருவாகி இருக்கலாம். ஏனென்றால், “ஆதாமுக்கு அடிபணியாத மயில் தேவதைக் கதை” இன்றைக்கும் யேசிடிகளின் மதப் பெருமிதங்களில் ஒன்று.

ஆச்சரியப் படத் தக்கவாறு, யேசிடிக்கள் இன்று வரைக்கும் சாதியக் கட்டமைப்பை பேணி வருகின்றனர். இதுவும், அவர்களுக்கு இந்திய இந்துக்களுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. திகைக்காதீர்கள்! நான் சரியாகத் தான் எழுதி இருக்கிறேன். அது சாதி அமைப்பு தான். குறிப்பாக மூன்று வகையான பெரிய சாதிப் பிரிவுகள் உள்ளன. பூசாரிகள் சாதி. இந்தியாவில் பிராமணர்கள் மாதிரி, யேசிடிகள் மத்தியிலும் பூசாரிகள் சாதியில் பிறந்த ஒருவர் மட்டுமே கோயில் பூசாரி ஆகலாம். அதற்கு அடுத்த படியாக கோயில்களுக்கான பல்வேறு பணிவிடைகள் செய்வோர் தனியான சாதியாக உள்ளனர். மூன்றாவது சாதியாக உடல் உழைப்பாளிகள் உள்ளனர்.

சாதிகளுக்குள் உட்பிரிவுகள் உள்ளன. அதாவது, இந்தியாவில் பிராமணர்களுக்கு இடையில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரி என்றெல்லாம் கோத்திரங்கள் இருப்பதைப் போன்றது. இவற்றை விட, வர்க்க வேறுபாடுகள் தனியானவை. அது எல்லா சாதிகளிலும் ஊடுருவி உள்ளது. வர்க்கப் பிரிவினையானது நவீன காலத்திற்கு உரியது என்பதால், ஒவ்வொரு சாதியிலும் இரண்டு வர்க்கங்கள் இருக்கலாம்.

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம்: திருமணம். யேசிடிகள் தத்தமது சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குள்ளும் குலம், கோத்திரம், வர்க்க வேறுபாடுகளை பார்ப்பதுண்டு. மேலும் ஒருவர் யேசிடி தாய், தந்தையருக்கு பிறப்பதால் மட்டுமே அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். யாரும் மதம் மாறி வர முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட தகவல்களை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அண்மைக் கால அசம்பாவிதங்கள், எவ்வாறு யேசிடி சமூகத்தை பாழ்படுத்தியது என்பதைப் புரிந்து கொள்ள அது உதவும். மிகக் கடுமையான சமூக- மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றிய யேசிடிகள், யுத்த அனர்த்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டனர். அண்மைய யுத்தமானது தீராத வடுக்களை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கத்தில் சமூக சீர்திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஈராக்கில் யேசிடிகளின் வாழ்விடமான சின்ஜார் மலைப் பிரதேசம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. வடக்கே இஸ்லாமிய குர்தியர்கள், தெற்கே இஸ்லாமிய அரேபியர்கள். இரண்டுக்கும் நடுவில் தனித் தன்மை பேணும் யேசிடிக்கள். இது எவ்வளவு கடினமான விடயம் என்று சொல்லத் தேவையில்லை. யேசிடிகள் மொழி அடிப்படையில் குர்தியர்கள். ஆகையினால், குர்திஸ்தான் பாதுகாப்புப் படையான பெஷ்மேர்கா வீரர்கள் தமது பிரதேசத்தை காவல் காப்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

அதே நேரம், யேசிடி பிரதேசத்தில் கணிசமான அளவு அரேபியர்கள் வாழ்ந்தனர். அவர்களது வீடுகளும் அருகருகே இருந்தன. யேசிடிகளும், அரேபியரும் ஒரே பள்ளிக்கூடங்களில் படித்தார்கள். ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்தார்கள். மற்றைய சமூக வணிகர்களின் கடைகளில் பொருட்களை வாங்கினார்கள். பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உணவு பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு சகோதர உணர்வுடன், மிகவும் அன்னியோனியமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், 2014 -ம் ஆண்டு நடந்த ஐ.எஸ். படையெடுப்பு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது.

அப்போது ஐ.எஸ். இயக்கம் ஈராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. குர்திய பெஷ்மேர்கா காவல் காப்பதால், தமது பிரதேசத்திற்கு ஐ.எஸ். வர மாட்டாது என்று யேசிடி மக்கள் நம்பினார்கள். ஆனால், நடந்ததோ வேறு. ஒரு நாள் இரவோடு இரவாக ஐ.எஸ். போராளிகள் யேசிடி கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். காலையில் எழுந்து பார்த்தால், காவல் கடமையில் இருந்த பெஷ்மேர்கா வீரர்களை காணவில்லை. தமது சொந்த இனத்தவர்களே தமக்கு துரோகம் செய்து விட்டனர் என்பதை உணர அதிக நேரம் எடுக்கவில்லை.

ஆர்மேனியாவில் உள்ள யேசிடி ஆலயம்

ஐ.எஸ்., யேசிடி கிராமங்கள், நகரங்களை கைப்பற்றியதும், சிலர் தற்காப்பு நடவடிக்கையாக தம்மிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து சுட்டனர். இந்த சண்டைகள் நடந்து கொண்டிருந்த குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, ஏராளமானோர் சின்ஜார் மலைகளின் மேல் ஓடித் தப்பினார்கள். அங்கு உணவு, தண்ணீர் இன்றி பலர் உயிரிழந்தனர். நாட்கணக்காக எந்தவொரு உதவியும் வரவில்லை. பழமைவாதிகளின் குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இறுதியில், சிரியாவில் இருந்த PKK/YPG குர்திய படையணிகள் வந்து தான் காப்பாற்றினார்கள். அவர்கள் ஒரு பாதை அமைத்து, அதன் வழியாக யேசிடி மக்களை சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். இங்கே ஒரு கேள்வி எழலாம். ஏன் ஈராக்கி குர்திஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஈராக்கி குர்திஸ்தான் அரசியல் தலைமையானது பழமைவாத- தேசியவாதிகளின் கைகளில் உள்ளது. ஆகவே, ஒரு  பிற்போக்கான- பழைமைவாத அரசாங்கம், “வேற்றினமாக நடத்தப்பட்ட” யேசிடிகளுக்கு உதவ மறுத்ததில் வியப்பில்லை.

ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையில் மத வெறுப்புணர்வும் இருந்துள்ளது. அதாவது, இஸ்லாமிய குர்தியர்கள் யேசிடி குர்தியர்களை வெறுத்தனர். குர்தியர்கள் என்றால் இஸ்லாமியர் மட்டுமே என்பதும், ஒரே மொழி பேசினாலும் யேசிடிகள் வேறு இனம் என்பது போலவும் நடந்து கொண்டனர். இது ஈழத்தில் தமிழர் – முஸ்லிம் வெறுப்புணர்வு போன்றது.

அதற்கு மாறாக, PKK/YPG இயக்கத்தினர், மதச்சார்பற்ற சோஷலிசவாதிகள். அதனால் தான் தக்க சமயத்தில் வந்து உதவினார்கள். (பார்க்க: அமெரிக்காவின் “மனிதாபிமான வான் தாக்குதல்” – அம்பலமாகும் பொய்கள் ) இன்றைக்கும் சின்ஜார் மலைப் பகுதி, PKK போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால், யேசிடிகளின் பிரதேசம், எதிர்கால அரசியல் உரிமை கோரல்களுக்கு காரணமாக வாய்ப்புண்டு.

ஐ.எஸ். கைப்பற்றிய யேசிடி கிராமங்கள், நகரங்களில் அகப்பட்டுக் கொண்டவர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆயிரக் கணக்கான ஆண்கள் சுட்டுக் கொல்லப் பட்டு, புதைகுழிகளுக்குள் போட்டு மூடப் பட்டனர். பெண்கள் அடிமைகளாக விற்கப் பட்டனர். இளம் பெண்கள் மட்டுமல்லாது, குழந்தைகளுடன் இருந்த திருமணமான பெண்களும் பண வசதி படைத்த ஐ.எஸ். முக்கியஸ்தர்களால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். அவர்கள் பாலியல் அடிமைகளாகவும், வீட்டு வேலையாட்களாகவும் கொடுமைப் படுத்தப் பட்டனர்.

சின்ஜார் மலையில் PKK/YPG போராளிகள்

அந்த வீடுகளில் இருந்த அரேபியப் பெண்களும் யேசிடி பெண்கள் மீது இரக்கப் படவில்லை. அவர்கள் உணவு கொடுக்காமல், தண்ணீர் கொடுக்காமல், இன்னும் அதிகமாக கொடுமைப் படுத்தினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமது கணவன் பாலியல் அடிமையை வைத்திருப்பதால் ஏற்பட்ட பொறாமை. இரண்டு, யேசிடிகள் மனிதர்களே அல்ல என்ற மதம் சார்ந்த வெறுப்புணர்வு.

தற்போது யுத்தம் முடிந்து, ஐ.எஸ். வசம் இருந்த பிரதேசங்களை ஈராக்கிய இராணுவம் கைப்பற்றி விட்டது. அதனால், ஆயிரக் கணக்கான யேசிடி பெண்களுக்கு விடுதலை கிடைத்தது. இருப்பினும் இன்னும் சிலர், குறைந்தது ஆயிரம் பேராவது, சிரியாவில் சுருங்கி வரும் ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருக்கலாம். சிலர் அடிமைகளாக சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கலாம்.

ஐ.எஸ். எதற்காக யேசிடிகளை அடிமைகளாக்கியது? அதற்கு அவர்கள் பின்பற்றிய கடும்போக்கு மதவாதம் முக்கியமான காரணம். ஒரு  இஸ்லாமிய தேசத்தினுள், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மட்டுமே சிறுபான்மை மதத்தவராக அங்கீகரிக்கப் படலாம். அதற்காக அவர்கள் ஒரு வரியை கட்டி வந்தால் போதும் என்று குரான் சொல்கிறது. ஆனால், யேசிடி போன்ற “குரானுக்கு அப்பாற்பட்ட மதத்தவர்களை” என்ன செய்வது என்று சொல்லப் படவில்லை.

இது குறித்து ஐ.எஸ். தனது இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை கேட்டது. அவர்கள், இஸ்லாமிய மதம் தோன்றிய காலத்தில், புராதன மதங்களை பின்பற்றிய மக்கள் எவ்வாறு நடத்தப் பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது, “அவர்கள் ஒன்றில் இஸ்லாமியராக மதம் மாற வேண்டும், அல்லது கொல்லப் படலாம், அடிமைகளாக விற்கப் படலாம்.” 1500 வருடங்களுக்கு முந்திய அரேபியாவில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களை, ஐ.எஸ். நவீன உலகத்தின் கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டியது.

isisflagதற்போது ஐ.எஸ். பிடியில் இருந்து மீட்கப் பட்டுள்ள யேசிடி பெண்கள், ஈராக்கி குர்திஸ்தானில் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பலர் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த கால கசப்பான அனுபவங்கள் காரணமாக மறு திருமணம் செய்வதற்கு அஞ்சுகின்றனர். மிகவும் பழைமைவாத கட்டுப்பாடுகளை கொண்ட யேசிடி சமூகத்தில் இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.

ஏனெனில், சிறுவயது முதலே கற்பை வலியுறுத்தி வரும் சமூகம் அது. திருமணம் செய்யும் வரையில் ஒரு பெண் (ஆணும் தான்) கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. திருமணம் முடித்த தம்பதிகள் மணமுறிவு பெறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. அவ்வாறான பழைமைவாத சமுதாயத்தில், ஐ.எஸ். கொடூரர்களால் பாலியல் அடிமைகளாக வைத்திருந்து கொடுமைப் படுத்தப் பட்ட பெண்களை என்ன செய்வது?

இது தொடர்பாக உள்ளூரிலும், வெளிநாடுகளில் இருந்தும் கடுமையான அழுத்தம் கொடுக்கப் பட்டது. இறுதியில் தலைமை மதகுருவானவர் பாதிக்கப் பட்ட பெண்களை மீண்டும் மதத்தில் சேர்த்துக் கொள்ள இணங்கினார். அதற்காக புனித நீர் தெளித்து தூய்மைப் படுத்தும் சடங்கு நடைபெற்றது. இது அந்த மதத்தைப் பொறுத்தவரையில், ஒரு நவீன தோற்றப்பாடு எனலாம். ஏனெனில், வழமையாக வேறு மதத்திற்கு மாறியவர்களை கூட மீண்டும் சமூகத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு தடவை, 2007 -ம் ஆண்டு, ஒரு பருவ வயது யேசிடி இளம்பெண், இஸ்லாமிய குர்திய இளைஞனுடன் காதல் வசப் பட்டு கூட்டிக் கொண்டு ஓடி விட்டாள். சில மாதங்களின் பின்னர், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரிந்து வந்துள்ளாள். ஆனால், அவளை ஏற்றுக் கொள்ள குடும்பத்தினரே மறுத்து விட்டனர். அவளது மைத்துனர்களால், பட்டப் பகலில், பலர் கூடிப் பார்த்திருக்க, கல்லால் அடித்து கௌரவக் கொலை செய்யப் பட்டாள்.

ஐ.எஸ். பிரதேசத்தில், பாலியல் அடிமைகளாக சொல்லொணா கொடுமைகளை அனுபவித்த பெண்களில் சிலர், தாமாகவே முன்வந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்குக் காரணம், இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் அவர்கள் அடிமைகளாக நடத்தப் படவில்லை. சாதாரண “இஸ்லாமிய தேசப் பிரஜையாக” வாழ முடிந்தது.

இருப்பினும், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு, தப்பியோட முனையக் கூடாது என்றும், அவர்களுக்கு பொறுப்பான முல்லா சுட்டிக்காட்டும் ஒருவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு இருந்தது. இன்று இஸ்லாமியராக மதம் மாறிய யேசிடி பெண்கள், திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சிலநேரம், அவர்களது பிள்ளைகளே “யேசிடிகள் பிசாசை வணங்குவோர்” என்று சொல்கின்றன.

யேசிடி சமூகத்தினரின் இன்னொரு பிரச்சினை, அது தற்போது விரைவாக அழிந்து கொண்டிருக்கும் மதமாக உள்ளது. கனடா உட்பட, பல மேற்கத்திய நாடுகள் ஆயிரக் கணக்கான யேசிடிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துச் சென்றுள்ளன. ஏற்கனவே, ஜெர்மனியில் மிகப்பெரியதொரு புலம்பெயர்ந்த யேசிடிகள் சமூகம் உள்ளது. அவர்கள் பெரும்பாலும் பல வருடங்களுக்கு முன்னர் துருக்கியில் இருந்து சென்று குடியேறியவர்கள். அண்மைக் காலம் வரையில் ஈராக்கில் மட்டுமே குறிப்பிடத் தக்க யேசிடி சமூகம் பெரும்பான்மையாக இருந்து வந்துள்ளது. சிரியா, துருக்கி, ஆர்மேனியா, ஜோர்ஜியாவில், இன்னமும் யேசிடிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.

யேசிடிகள் புலம்பெயர்வதற்கு முக்கிய காரணம், அந்தப் பிரதேசத்தில் யாரையும் நம்ப முடியாது என்பது தான். “ஒரே மொழி பேசும்”, “சொந்த இனமான” (இஸ்லாமிய) குர்தியர்களைக் கூட நம்பத் தயாராக இல்லை. பெஷ்மேர்கா வீரர்கள் காட்டிக் கொடுத்த துரோகம் காரணமாகத் தான், அவர்களது பிரதேசத்தை ஐ.எஸ். ஆக்கிரமிக்க முடிந்தது. அதே காலத்தில், இன்னொரு அதிர்ச்சியையும் சந்தித்தனர்.

நேற்று வரையில் சகோதரர்கள் போன்று பழகிய அயலவர்களான அரேபியர்கள், ஐ.எஸ். வந்தவுடன் அவர்களுக்கு பின்னால் திரிந்தார்கள். ஒரு சில அரேபியர்கள் பாதுகாப்பு வழங்கியதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையானோர் ஐ.எஸ்.க்கு காட்டிக் கொடுத்ததுடன், சொத்துக்களையும் சூறையாடினார்கள். அந்தப் பிரதேசத்தில், இனப் பிரச்சினை எந்தளவு ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதனால், எதிர்காலம் நிச்சயமற்றது என்பதை உணரும் யேசிடிகள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதே பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள்.

  • கலையரசன்

நன்றி : கலையகம்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கமலஹாசன் – அதிமுக – நீட் அனிதா : மாபெரும் சர்வே முடிவுகள்

1

மிழகத்தின் நடப்பு அரசியல் குறித்தும் மோடி அரசு மூன்றாண்டுகளில் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும் மக்களின் கருத்து என்ன? சென்னையில் மக்கள் கூடுமிடங்களில் அவர்களைச் சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்த திட்டமிட்டோம். கருத்துக்கணிப்பை துல்லியமாக மேற்கொள்ளவும் உடனடியாக முடிவுகளை வெளியிடவும் வசதியாக ஆண்டிராய்ட் செல்பேசி இயங்குதளத்திற்கென பிரத்யேகமான கருத்துக்கணிப்பு செயலி ஒன்றை எமது தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியது. இத்தகைய தொழில் நுட்பத்தில் நாங்கள் நடத்தும் இரண்டாவது கருத்துக் கணிப்பு இது.

உழைக்கும் மக்கள், வணிகர்கள் நிறைந்த பகுதியான சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மற்றும் தமிழக மக்களின் சுற்றுலாத் தலமான மெரினா கடற்கரைப் பகுதிகளை தெரிவு செய்தோம். இதன்படி சர்வே கருத்துக்கள் குறித்து சென்னை மற்றும் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதறிய முடியும். சோதனை முயற்சியாக திருச்சியிலும் சிறிய அளவில் ஒரு பகுதியை தெரிவு செய்தோம்.

சென்னையில் பதிமூன்று பேர் அடங்கிய செய்தியாளர் குழுவும், திருச்சியில் மூன்று தோழர்கள் அடங்கிய குழுவும் கேள்விகளுடன் மக்களைச் சந்திக்க களமிறங்கியது.

கமல்ஹாசனின் அரசியல் பேச்சுக்கள், அனிதா மரணம், அதிமுகவில் நிலவும் குழப்படிகள், மோடியின் பொருளாதார தாக்குதல்களான பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஆகியவற்றை கருத்துக் கணிப்புக்கான கேள்விகளாகத் தெரிவு செய்தோம். இதோடு மக்களின் பொதுவான பொருளாதார நிலைமையைப் பரிசீலிக்க ஏதுவாக பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறித்தும், மோடி என்கிற ஆளுமையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஒரு கேள்வி என மொத்தம் எட்டு கேள்விகளை இறுதி செய்திருந்தோம். எல்லாக் கேள்விகளுக்கும் அனைத்துக் கோணங்களிலும் விடையளிக்குமாறு பதில்களை கொடுத்திருந்தோம்.

கேள்விகளை ஒரு தாளில் அச்சிட்டு மக்களிடம் வாசிக்க கொடுத்து விட்டு அந்தக் கேள்விக்கான பதில்களை அவர்கள் சொல்லச்சொல்ல திறன்பேசியின் செயலியில் பதிவு செய்து கொண்டோம். இதன் மூலம், பதில்களைப் பதிவு செய்வதிலும் பின்னர் அவற்றைத் தொகுத்துப் பரிசீலிப்பதிலும் தவறுகள் நடப்பதைத் தவிர்த்துக் கொள்வதோடு முடிவுகளைத் துல்லியமாக கணிக்கவும் முடியும்.

கேட்கப்பட்ட எட்டுக் கேள்விகளை “தமிழக நிலைமை” மற்றும் பா.ஜ.க + பொருளாதாரம் எனப் பிரித்துக் கொண்டு முடிவுகளை வெளியிகிறோம். அந்த வகையில் இந்தப் பகுதியில் தமிழக அரசியல் நிலை குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்ப்போம்.

தமிழக ஓட்டுக்கட்சிகளின் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் “வெற்றிடத்தை” நிரப்பவுள்ள மீட்பராக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் கமல்ஹாசன் பேசும் அரசியலைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
கேள்வி : நடிகர் கமலஹாசன் பேசும் அரசியல் எது ?

  • திராவிட அரசியல்
  • கம்யூனிச அரசியல்
  • நடுநிலையான அரசியல்
  • பாஜக அரசியல்
  • குழப்பமான அரசியல்

மக்கள் கருத்து : நடிகர் கமலஹாசன் பேசும் அரசியல் எது ?

(i)     குழப்பமான அரசியல்            – 53.6% (663 – பேர்)
(ii)    நடுநிலையான அரசியல்     – 28.1%  (348 – பேர்)
(iii)   திராவிட அரசியல்                  – 6.7%     (83 – பேர்)
(iv)   பாஜக அரசியல்                        – 6.5%     (80 – பேர்)
(v)    கம்யூனிச அரசியல்                – 5.1%     (63 – பேர்)

தமிழக ஓட்டுக்கட்சிகளின் அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் “வெற்றிடத்தை” நிரப்பவுள்ள மீட்பராக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் கமல்ஹாசன் பேசும் அரசியலைக் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

“அவரு பேசறது அரசியலே இல்லைங்க” என்றார் ஒரு ஆட்டோ ஓட்டுனர். பெருவாரியானவர்கள் கமல் பேசுவது குழப்ப அரசியல் என்கிற விடையையே தெரிவு செய்தனர். எமது செய்தியாளர் குழு எதிர்கொண்ட ஒருசில கமல் இரசிகர்கள் “நடுநிலை அரசியல்” எனத் தெரிவு செய்தனர். அதில் ஒருவரோடு பேசிய போது, “கமல் வந்தாலும் எந்த மாற்றமும் வரப் போறதில்லை சார்.. ஆனா நான் இரசிகனாச்சே? எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.. அதான் ‘நடுநிலைன்னு’ போட்டிருக்கேன்” என்றார். அந்த வகையில் நடுநிலை ஆதரவையும் குழப்பம் என்றே வகை பிரிக்கலாம்.

தொழிலாளிகள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கத்தைச் சேர்ந்த மக்களில் பலர் கமலின் அரசியல் ”அதிரடிகளைக்” குறித்து அதிகம் அறியாதவர்களாக இருந்தனர்.  ட்விட்டரில் கமலைப் பின் தொடர்வதற்கு இவர்களிடம் விலைகூடிய திறன்பேசிகள் இல்லை என்பதோடு, ஆனந்த விகடனுக்கு வாராவாரம் 30 ரூபாய் தண்டம் கட்டி கமலின் ”புரட்சிகர” ஆவேசத்தை தரிசிக்கவும் இவர்களுக்கு வாய்ப்பில்லை.

“தொலைக்காட்சி விவாதங்கள்ல கமல் பேசியதை கேட்டிருப்பீங்களே?” என ஒருவரிடம் கேட்டோம்.

“அவரு எப்பைங்க புரியறா மாதிரி பேசறாப்ல?” என பதில் பதில் வந்தது.

“சரி, ஒருவேளை அவர் கட்சி ஆரம்பிச்சா அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தால் என்ன?” எனக் கேட்டோம்.

“சார், அவரு சினிமாக்காரர். இத்தனை நாள் அரசியல் பத்தி ஒன்னும் பேசாம இப்ப ஆளுங்க இல்லைன்னு அதிகாரத்தை பிடிக்க ஆசைப்படறார்.. அவருக்கு ஏன் ஓட்டுப் போடனும்? இத்தனை வருசத்துல எத்தினி போராட்டம் செய்தாரு.. எத்தினி வாட்டி ஜெயிலுக்கு போனாரு?” என எதிர்க் கேள்விகள் வந்து விழுந்தன.

அதிமுக தொண்டர் (ஓ.பி.எஸ் ஆதரவாளர் எனத் தன்னைச் சொல்லிக் கொண்டார்) ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்ட போது சுவாரசியமான பதில் ஒன்றைச் சொன்னார்… ”சார் அரசியல்ன்னா சினிமா மாதிரி ஜாலின்னு அவருக்கு நினைப்பு இருக்கும் போல.. கிளைக்கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம், மாநிலக் குழு அப்படின்னு நிறைய இருக்கு.. அப்புறம் மாணவர் அணி, இளைஞர் அணி, வக்கீல் அணி, விவசாயிகள் அணி, தொழிலாளர் அணின்னு ஒவ்வொன்னுக்கு ஒவ்வொரு பிரிவு இருக்கனும்… இதெல்லாம் போக ஒவ்வொரு பூத்துக்கும், வார்ட்டுக்கும் ஆள் போடனும்.. இவரு கிட்டே எதுவுமே இல்லாம 100 நாள்ல தேர்தல் வந்தா சந்திப்பேன்னு எப்படி சொல்றார்னு தெரியலை” என்கிறார்.

ஒருசிலர் கமலின் தனிப்பட்ட ஒழுக்கத்தை விமரிசித்தும், பாராட்டியும் வேறு சிலர் அவருக்கு மண்டைகணம் அதிகம் என்றும் கருத்து தெரிவித்தனர். பொதுவில் கமலை ஒரு குழப்பவாதியாகவே மக்கள் கருதுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

திருபாய் அம்பானி ஊழல் பல செய்து தொழிலதிபரானாதையே தனது இலட்சிய அரசியல் பிரவேசத்தின் “இன்ஸ்பிரசேனாக” கருதும் கமலஹாசன், அரசியலில் தான் இடதோ, வலதோ அல்ல, இரண்டுக்கும் நடுவில் என்கிறார். இந்த நடு இடம் என்பது வலதின் மேக்கப் முகம் என்பதைக் கூட அறியாத பேரரறிஞர் அவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதில் அவர் வைத்திருக்கும் கருவி மூலம் விழும் இத்துப் போன பஞ்சரான டயலாக்குகளை பேசிவிட்டு என்ன இன்னும் கை தட்ட வில்லையே என்று அரங்கில் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களைப் பார்ப்பார் கமல். அரசியலையும் அவர் அவ்வளவு மலிவாக எடை போட்டாலும் மக்கள் அவரை வெயிட்டாகவே தீர்ப்பளித்து விட்டனர்.

***

அதிமுகவில் நடக்கும் கழுத்தறுப்புச் சண்டைகள் மற்றும் குழப்பங்களால் அந்தக் கட்சி அழிந்து போனால் அதனால் யாருக்கு நட்டம் என்கிற கேள்விக்கு மக்கள் எவ்வாறு பதிலளித்தனர்?
கேள்வி : அதிமுக அழிந்தால் யாருக்கு நட்டம் ?

  • தினகரன் – சசிகலா
  • ஓபிஎஸ் – எடப்பாடி
  • பாஜக
  • மக்கள்
  • மக்களைத் தவிர
    மற்ற அனைவருக்கும்

மக்கள் கருத்து : அதிமுக அழிந்தால் யாருக்கு நட்டம் ?

(i)    மக்களைத் தவிர
மற்ற அனைவருக்கும்  – 28.1% (348 – பேர்)
(ii)  மக்கள்                                  – 23%     (285 – பேர்)
(iii)  ஓபிஎஸ் – எடப்பாடி       – 19.2% (237 – பேர்)
(iv)  தினகரன் – சசிகலா         – 18.1% (224 – பேர்)
(v)   பாஜக                                    –  11.6% (143 – பேர்)

எடப்பாடி-பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா-தினகரன் கும்பல்களின் அக்கப்போர்களுக்கு அப்பால் ஜெயலலிதா புனிதராக இன்னும் பலரால் கருதப்படுகிறார். அதே நேரம் மக்களில் பலர் அதிமுக ஏற்கனவே அழிந்து போய் விட்டதென்றும், இனிமேல் புதிதாக அழிவதற்கு ஒன்றும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். ஜெயா இருந்த வரை இவர்களெல்லாம் அடங்கிக் கிடந்தனர் என்பதை சுட்டிக்காட்டி “அந்தப் புண்ணியவதி போய்ச் சேர்ந்த ஒடனே நண்டு சிண்டுகளுக்கெல்லாம் கொழுப்பெடுத்துப் போச்சு” என்றார் ஒரு அம்மா.

கட்சி சாராத ஒரு நபர் ஜெயா என்னதான் கொள்ளையடித்தாலும் மக்களுக்கு ஏதோ செய்தார் என்றும், இப்போது நடக்கும் ஆட்சியில் கொள்ளை அடிப்பதற்கும் அதைப் பங்கு போடுவதற்குமே இவர்களுக்கு நேரமிருக்கிறது என்றும் சலித்துக் கொண்டார்.

மற்றபடி, அதிமுக ஒழிந்து போவது யாருக்கு நட்டமோ இல்லையோ மக்களுக்கு லாபம் என்பதே பெருவாரியானவர்களின் கருத்தாக இருந்தது. பலருக்கும் அதிமுக இன்றைக்கு அடைந்திருக்கும் திரிசங்கு நிலைக்கும், ஆட்சியின் அலங்கோலத்துக்கும் பாரதிய ஜனதாவே காரணம் என்கிற அபிப்பிராயம் இருந்ததைப் பார்க்க முடிந்தது.. “சேட்டுக் கட்சிக்காரனுங்க தமிழ்நாட்டை நாசமாக்கறதுக்கே அம்மாவை ஒழிச்சிக் கட்டிருப்பாங்க சார்” என்கிறார் இளநீர் விற்பவர் ஒருவர்.

***

கேள்வி : நீட் – அனிதா தற்கொலைக்கு காரணம் யார்?

  • தமிழக அரசு
  • மோடி அரசு
  • உச்சநீதி மன்றம்
  • எதிர்கட்சிகள்
  • எதிர்கட்சிகள் தவிர அனைவரும்

கேள்வி : நீட் – அனிதா தற்கொலைக்கு காரணம் யார்?

(i)    மோடி அரசு                                               – 45.8% (567 – பேர்)
(ii)   தமிழக அரசு                                             – 26%    (322 – பேர்)
(iii)  எதிர்கட்சிகள் தவிர அனைவரும்  – 17.1% (212 – பேர்)
(iv)  உச்சநீதி மன்றம்                                     – 6.4%  (79   – பேர்)
(v)   எதிர்கட்சிகள்                                            – 4.6%  (57   – பேர்)

அனிதாவின் மரணம் தொடர்பான கேள்விக்கு பரவலாக மத்திய மாநில அரசுகள் என்கிற விடையையே மக்கள் தெரிவு செய்தனர். வெகு சொற்பமானவர்களே நீதிமன்றத்தை குறிப்பிட்டனர். நீட் தேர்வை எதிர்த்து கருத்து தெரிவித்தவர்களில் சிலரும் அனிதாவின் மரணத்துக்கு அனிதாவே காரணம் எனக் குறிப்பிட்டனர். குறிப்பாக அடிப்படை வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகள், ”படிப்பு தான் வாழ்க்கையா நாங்களெல்லாம் படிக்காமல் பிழைக்கவில்லையா?” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தனர். நீட் தேர்வை ஏழைகளுக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் கூட அனிதா தற்கொலை செய்திருக்க கூடாது என்றும், போராடியிருக்க வேண்டும் எனவும் அவசரப்பட்டுவிட்டாள் எனவும் கருத்து தெரிவித்தனர். ஆனால் பெருவாரியான மக்கள் மோடி அரசையே குற்றவாளி என தீர்ப்பளித்தனர். இரண்டாவதாக தமிழக அரசு வருகின்றது. கிருஷ்ணசாமி வகையறாக்கள் கூறும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு மக்களின் ஆதரவில்லை. ஐந்தில் ஒரு பங்கு மக்கள் எதிர்க்கட்சிகள் தவிர அனைவரும் அனிதாவின் மரணத்திற்கு காரணம் என்றனர்.

இந்த எண்ணிக்கைதான் தமிழக அரசியலில் ஒரளவு அரசியல்படுத்தப்பட்டிருக்கும் பிரிவு. மற்ற கேள்விகளிலும் இதே அளவு எண்ணிக்கையை சரியான பதில்களுக்கு மக்கள் அளித்ததை பார்க்கும் போது தமிழகம் நடப்பு அரசியல் பிரச்சினைகளில் பொதுப்புத்தி அல்லது ஊடகங்கள் – ஆளும் வர்க்கங்கள் கட்டியமைக்கும் கருத்துலகிலிருந்து விடுபட்டு வருவதை பார்க்க முடிந்தது.

தமிழக மக்களிடம் மோடியின் செல்வாக்கு எப்படி இருக்கிறது? இந்த பிரிவில் வரும் ஐந்து கேள்விகளுக்கான பதில்களை நாளை பார்க்கலாம். இந்த சர்வேயில் மொத்தம் 1237 மக்கள் பங்கேற்றார்கள். முடிவுகளை மக்களின் எண்ணிக்கை அடிப்படையிலும், சதவீத அடிப்படையிலும் வரைபடங்களாக தருகிறோம்.

(தொடரும்)

– வினவு கருத்துக் கணிப்புக் குழு
வரைபடங்கள்: வேலன்.

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை வைப்பு – கோவை காவி + காக்கிகளின் கள்ளக்கூட்டு !

2

மோடியின் GST வரிவிதிப்பால் திருப்பூர் – கோவை மாவட்டங்களில் உள்ள அனைத்து குறு, சிறு தொழில்களும் அழியும் நிலையில் உள்ளன. ஜி.எஸ்.டி வரியின் பாதிப்பு பற்றி இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்து, கடந்த 27.09.2017 அன்று கோவையில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்ற 11.10.2017, புதன் கிழமை மாலை 5:00 மனியளவில்  அன்று கோவை பாப்பநாயக்கன் பாளயம் – காய்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதற்காக திருப்பூர் – கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் சுவரொட்டி ஒட்டியும், துண்டறிக்கைகள் விநியோகம் செய்தும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் கோவை – இராமநாதபுரம் பகுதியில் 08.10.2017 ஞாயிறு மாலை பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அப்பகுதியில் இந்து முன்னணி கும்பலின் ரஞ்சித்குமார் என்பவர் இப்பகுதியில் மோடியை – BJP யை எதிர்த்து பிரச்சாரம் செய்யக்கூடாது. இது எங்கள் ஏரியா நீங்கள் வெளியேறுங்கள் என தகராறு செய்துள்ளார்.

இந்து முன்னணி கும்பலின் ரஞ்சித்குமார்

தோழர்கள் இது தொழிலாளி வர்க்கத்தின் கோட்டை BJP – இந்து முன்னணிக்கு இங்கு ஒருவேலையும் இல்லை, அதுமட்டுமல்ல இங்குள்ள அனைத்து மக்களும் GST யால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து உள்ளனர், வியாபாரம் இல்லாமல்  அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர், அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து விட்டது எனக் கூறி பகுதியில் பிரச்சாரம் செய்யாமல் செல்லமாட்டோம் என உறுதியாக நின்றனர்.

இந்து முன்னணி – BJP ஆட்கள் அங்கிருந்து நைசாக கிளம்பி மேற்படி ரஞ்சித் குமார், தனது மனைவியின் பெயரில் கோவை – D1 இராமநாதபுரம் காவல் நிலையத்தில் அனைத்து  வீட்டிலும் நோட்டீஸ் கொடுத்து கட்டாய வசூல் செய்கிறார்கள் என புகார் கொடுத்துள்ளார்.

மக்கள் அதிகாரத்தின் மீது எதாவது ஒரு புகார்  வராதா என எதிர்பார்த்த போலீசு உடனடியாக 8  தோழர்களை கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர்.

IPC 384 -ன் படி ஜாமினில் விடாமல் சித்தார்த்தன், மகேஸ்(எ) பழனிச்சாமி, தமிழ் உரியன், சரவணக்குமார் என்ற 4 தோழர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இறக்கும் தருவாயில் துடிக்கும் அட்டைபோல நாடு முழுவதும் BJP – இந்து முன்னணியினர் நாட்டுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வருகின்றனர்.

உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மக்களைப் பிளந்து உறிஞ்சும் இந்து மதவெறி  கும்பலையும் அதற்கு துணை போகும் அரசு கட்டமைப்பையும் அடித்து நொறுக்க அணி திரள்வோம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை – 95858 22157. 

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும்

12

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 3

சுமார் ஐந்து அல்லது ஆறு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே மனித மூளையின் திறன் கொண்ட இயந்திரம் ஒன்றை உருவாக்குவது குறித்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் துவங்கி விட்டன. இந்த முயற்சியில் குறுக்கிட்ட பல்வேறு தோல்விகளையும் தடைகளையும் கடந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து வந்தன.

அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்குமான பனிப்போர் உச்சமடைந்திருந்த சமயத்தில், ரசிய மொழியில் இருந்த இரகசிய ஆவணங்களை இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்ய “தானியங்கி மொழிக் கையாள்கை ஆலோசனைக் குழு” (ALPAC – Automatic Language processing committee) ஒன்றை அமெரிக்கா அமைத்தது.

சுமார் இரண்டாண்டுகள் நடந்த ஆராய்ச்சிகளுக்குப் பின், ஒரு மொழியில் எழுதப்பட்ட வாக்கியத்தை வேறொரு மொழிக்கு மாற்றுவதென்றால் அந்தக் குறிப்பிட்ட வாக்கியம் அந்த மொத்த கட்டுரை அல்லது நூலின் சாரத்தோடு எப்படி ஒத்துப் போகிறது என்கிற புரிதல் இருக்க வேண்டியது அவசியம் என்றும். இத்தகைய புரிதல் என்பது இயந்திரத்தின் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதென்றும் முடிவெடுத்து 1966-ம் ஆண்டு ஆராய்ச்சியைக் கைவிட்டனர்.

மனித மூளையின் ஆற்றலை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்யும் முயற்சிகள் பின்னர் எழுபதுகளிலும், எண்பதுகளிலும், தொன்னூறுகளிலும் மேற்கொள்ளப்பட்டு, அவை எதிர்பார்த்த வெற்றிகளை அளிக்கவில்லை. இதற்கிடையே கணினிகளும் அவற்றின் கணக்கீட்டுத் திறன் (Compute Power) வளர்ச்சியும் மிகப்பெருமளவு வளரத் துவங்கியது. செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகளில் கணினிகளும் அதிகரித்து வந்த அவற்றின் கணக்கீட்டுத் திறனும் இணைந்தன.

மனித மூளையின் ஆற்றல் கொண்ட இயந்திரம் அல்லது செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் கணினிகளின் துணையோடு வளர்ச்சியுறத் துவங்கின. ஆய்வுகள் பரிசோதனைக் கூடங்களில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும் தாண்டின. அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் மனித இயந்திரங்கள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

அதியுயர் திறன் கொண்ட கணினிகளின் உதவியால் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளோடு மீப்பெரும் மின் தரவு மற்றும் அதன் பகுப்பாய்வு முறைமைகள் (Big Data & Analytics) வந்து இணைந்தன. அதைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறத் துவங்கியது.

***

சாதாரண கணினிகளைப் பொருத்தவரை, அவை ‘பேசுவதாலோ’, ‘காண்பதாலோ’, ‘கேட்பதாலோ’ சொந்த முறையில் சிந்திக்கும் அறிவுத் திறன் கொண்டதாகி விடுவதில்லை. சமூக வலைத்தளங்கள், இணையம், தகவல் தொழில்நுட்பம் என இன்று பிரம்மாண்டமாகத் தோன்றும் அனைத்தையும் நுணுகிக் கொண்டே சென்றால் இறுதியில் எஞ்சுவது பூஜ்ஜியமும் ஒன்றும் தான். இது மட்டும் தான் கணினியைக் கட்டமைத்துள்ள மின்னணு உதிரிபாகங்களுக்குப் புரிந்த மொழி.

கணினிகளில் நிறுவப்பட்டுள்ள இயங்குதளம் (Operating system), மனித மொழியில் உள்ளீடு செய்யப்படும் கட்டளைகளை மின்னணு உதிரிபாகங்களுக்குப் புரிந்த இயந்திரமொழியில் (Machine Language) மொழி பெயர்த்துச் சொல்லி அந்தக் கட்டளைகளில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும்படி செய்யும். அதன்பின், உள்ளீடு செய்யப்பட்ட கட்டளையின் அடிப்படையில் நடந்த வேலையின் முடிவை மனித மொழியில் மொழிபெயர்த்துச் சொல்லும்.

மனித மூளையின் செயல்பாட்டுக்கும் சாதாரண கணினியின் செயல்பாட்டுக்குமான அடிப்படை வேறுபாடாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது – கணினி கட்டளைக்கு ஏற்ப செயல்படும் இயந்திரம்; மனித மூளையோ சொந்த முறையில் சிந்திக்கவும், முடிவுகளை எடுக்கவுமான ஆற்றலைக் கொண்டது.

கணினிகளுக்கு வழங்கப்படும் கட்டளைகளை மனிதன் தீர்மானிக்கிறான் அல்லது உருவாக்குகிறான். தீர்மானிக்கப்பட்ட கட்டளைகளை எந்த நேரத்தில் எந்த அளவுகளில் கணினியிடம் கொடுத்து என்ன மாதிரியான வேலைகளை நிறைவேற்றுவது என்பதையும் மனிதன் தீர்மானிக்கிறான்.

இது ஒரு சாதாரண கணினி செயல்படும் விதம்.

செயற்கை நுண்ணறிப் பொறி (AI – Engines) மென்பொருள், தனிப்பட்ட கணினிகளின் கூட்டுத் தொகுதிகளின் (Grid) மீதோ, அதியுயர் கணினியின் மீதோ தான் நிறுவப்படுகின்றது. செயற்கை நுண்ணறிப் பொறி, கணினிகள் எடுக்கும் தீர்மானம் அல்லது அவை இயங்க வேண்டிய முறைகள் குறித்த முடிவுகளைச் சொந்த முறையில் எடுக்கின்றது.

தீர்மானிக்கும் அல்லது முடிவெடுக்கும் ஆற்றலை அது சொந்த முறையில் பெறுவதற்குத் தேவையான மின் தரவுகள் செயற்கை நுண்ணறிப் பொறியில் உள்ளீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அடுத்து, அவ்வாறு உள்ளீடு செய்யப்பட்ட மின் தரவுகளைப் பகுத்தாயும் முறையும், பகுத்தாய்வின் முடிவுகளை 360 டிகிரி கோணத்தில் அலசி ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு பொருத்துவதற்கான தொழில்நுட்பங்களும் தேவை.

மீப்பெரும் மின் தரவுகளின் வரவுக்கு முன், செயற்கை நுண்ணறிக் கணினிகளுக்குக் கிட்டிய தரவுகளுக்கு வரம்புகள் இருந்தன. உதாரணமாக, தொன்னூறுகளில் ஐ.பி.எம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட சதுரங்கம் விளையாடும் நுண்ணறிக் கணினியின் உள்ளே அந்த விளையாட்டின் லட்சக்கணக்கான சாத்தியமான நகர்வுகள் பதியப்பட்டிருந்தன; அதனடிப்படையில் தன்னுடன் விளையாடும் மனிதனின் நகர்வுகளுக்குப் பொருத்தமான எதிர் நகர்வுகளை அது மேற்கொண்டது.

மீப்பெரும் மின் தரவுகளின் வரவுக்குப் பின், திறன்பேசிகளின் (Smart phones) மூலமோ, தனிப்பட்ட கணினிகளின் மூலமோ உலகமெங்கும் இணையத்தில் பல கோடிக்கணக்கானவர்கள் சதுரங்கம் விளையாடும் முறை, அவர்களின் நகர்வுகள் மற்றும் எதிர் நகர்வுகள், வெற்றி தோல்விகள் என பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் மின் தரவுகளாக சேமிக்கப்பட்டு பகுத்தாயப்பட்ட நகர்வுகள் செயற்கை நுண்ணறிக் கணினிக்குக் கிடைக்கின்றன.

மனிதர்கள் குறிப்பான ஒரு தருணத்தில் மேற்கொள்ளும் கோடிக்கணக்கான எதிர்நகர்வுகளின் வகைமாதிரிகளும் (Pattern) மீப்பெரும் மின் தரவுகளாகப் பகுப்பாய்வுக்குக் கிடைக்கின்றன.  இப்போது செயற்கை நுண்ணறிக் கணினி எடுக்கும் முடிவுகளை மீப்பெரும் மின் தரவுகள் மேலும் மேலும் துல்லியமாக்குகின்றன.

அதியுயர்திறன் கொண்ட கணினிகளாக இருந்தாலும் அவை குறிப்பிட்ட நிரல்வரிசையின் (Algorithms) அடிப்படையிலேயே செயல்பட்டன. செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பமானது மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ”சொந்தமாகக் கற்றுக் கொள்கின்றது”.

இயந்திரக் கற்றுணர்தல் (Machine Learning) எனப்படும் முறையின் மூலம், மின் தரவுகளில் இருந்து கற்றுக் கொண்டு அதனடிப்படையில் துல்லியமான முடிவுகளை எடுப்பது மட்டுமின்றி – தான் செயல்படுவதற்குத் தேவையான நிரல்வரிசையைத் தானே எழுதும் ஆற்றலையும் பெறுகின்றது. இணையத் தேடுபொறி இயந்திரமான கூகுள் மற்றும் சமூக வலைத்தள கார்ப்பரேட்டான ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையிலான பகுத்தாய்தலையும், செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகின்றன.

***

முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் செயல்படும் விதத்தைப் பற்றியும் அந்தச் செயல்பாட்டுக்கு பின்னுள்ள “மூளை” செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் என்பதையும் முந்தைய பகுதியில் பார்த்தோம்.

உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களின் இணையச் செயல்பாடுகளை பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக மின் தரவுகளாகச் சேமித்து அவற்றைப் பகுத்தாய்வுக்கு உட்படுத்துவதன் வழியே நுண்ணறி இயந்திரங்கள் ”என்ன செய்ய வேண்டும்” என்பதைக் கற்றுக் கொள்கின்றன.

அப்படிக் கற்றுக் கொள்வதன் அடிப்படையிலேயே செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் தமது செயல்பாடுகளையும் முடிவுகளையும் தீர்மானிக்கின்றன. இவ்வாறு மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையில் கற்றுக் கொள்வது இயந்திரக் கற்றுணர்தல் (Machine Learning) எனப்படுகின்றது.

இதே தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட ஒரு நோயைக் குறித்து ஆராய்வதற்கோ, நிகழவிருக்கும் இயற்கை சீற்றம் ஒன்றைக் குறித்து ஆராய்வதற்கோ, குறிப்பிட்ட ஒரு நபரின் நிதி நடவடிக்கைகளை ஆராய்ந்து அவருக்குக் கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கோ பயன்படுத்த முடியும் – பயன்படுத்தப்பட்டும் வருகின்றது. தற்போது இயந்திரக் கற்றுணர்தலின் அடுத்த கட்டமாக ஆழ்ந்து கற்றுணர்தல் (Deep Learning) வந்துள்ளது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட விசயம் தொடர்பான தரவுகளை வெவ்வேறு பரிமாணங்களில் வைத்து பகுத்துப் பார்த்த பின் அதைப் பற்றி ஒரு இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்.

மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் நிகழும் இயந்திரக் கற்றுணர்தலின் மூலம் பின் வரும் ஐந்து படிநிலைகளில் செயற்கை நுண்ணறிக் கணினி “அறிவை” பெறுகின்றது.

முதலாவதாக, குறியீட்டுவாதம் (Symbolism). அதாவது ஒரு விசயத்தைக் குறியீடாக்கிப் புரிந்து கொள்வது. விசயங்களுக்கு இடையில் உள்ள இடைவெளிகளைக் குறீயிடுகளின் மூலம் நிரப்பி அதைத் தொகுப்பாகப் புரிந்து கொள்வது.

இரண்டாவதாக, இணைப்புவாதம் (connectionism). மிகச் சிக்கலான கணினி வலைப்பின்னலில் உள்ள பரஸ்பர இணைப்புகளின் மூலம் நடக்கும் பல்வேறு செயல்பாடுகளில் ஒத்திசைவான செயல்பாடுகளை ஒன்றிணைத்து அவற்றுக்கிடையிலான பொதுத் தன்மைகளைக் கற்பது.

மூன்றாவதாக, பரிணாமவாதம் (evolutionism). ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது போக்கு அல்லது விசயம் எப்படி பரிணமித்து வளர்ந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்பதைக் கற்பது.

நான்காவதாக, பெயெசியவாதம் (Bayesianism). 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தாமஸ் பெயெஸ் (Thomas Bayes) என்பவர் நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு (Probability) பங்களித்தவர். புள்ளியியலை பெயெசிய நிகழ்தகவுக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவது – அதாவது, புள்ளிவிவரங்களில் இருந்து ஒரு சாத்தியமான தீர்மானத்தை வந்தடைவது. இந்த வகையில் தரவுகளைச் சலித்து எடுக்கப்படும் முடிவுகளில் பிறழ்வுகளையும் குறைகளையும் தவிர்த்துக் கொள்வது.

ஐந்தாவதாக, ஒப்பிடுதல் (analogize). ஒரு விசயத்தை அதற்கு முந்தையதுடனோ அல்லது வேறு தருணத்தில் நிகழ்ந்த அதே போன்ற விசயத்துடனோ ஒப்பிட்டுப் புரிந்து கொள்வது.

இவை ஐந்து முறைகளையும் “இயந்திர அறிதல் முறையின் ஐந்து ஆதி குடிகள்” (Five Tribes of Machine Learning) என்று அழைக்கின்றனர். மனித மூளையும் கூட ஏறத்தாழ இதே போன்ற அடிப்படைகளின் மூலம் தான் தரவுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்றது. நமது மூளை விசயங்களைக் குறியீடுகளின் மூலம் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது; பதிவு செய்யப்பட்ட விவரங்களுக்கு இடையே இருக்கும் தொடர்புகளை இணைத்துப் புரிந்து கொள்கின்றது.

ஒரு விசயத்தின் ஆதித் துவக்கம், அது எதிலிருந்து கிளைத்து வந்தது, எந்த வகையில் படிப்படியாக வளர்ந்து வந்தது என்பதைப் புரிந்து கொள்கின்றது; கிடைக்கும் விவரங்களைச் சலித்து அதிலிருந்து தொகுப்பான ஒரு முடிவுக்கு வருகின்றது; கடைசியில் ஒரு விசயத்தை அதை ஒத்த பிறவற்றுடன் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வந்தடைகின்றது. இந்தப் போக்கில் மேலே குறிப்பிட்டுள்ள பிற காரணிகளும் இணைத்து பரிசீலிக்கப்பட்ட பின்னரே அறுதி முடிவு அல்லது தீர்மானம் எடுக்கப்படுகின்றது.

இதில் கவனிக்க வேண்டியது – கிடைக்கும் தரவுகளில் இருந்து தர்க்க ரீதியில் அடையக் கூடிய முடிவுகளை எட்டும் ஆற்றலைத்தான் தற்போதைய ஆராய்ச்சிகள் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்திற்கு வழங்கியுள்ளன. மனித மூளையோ தரவுகள் காட்டும் தர்க்கரீதியான சாத்தியங்களுக்கு அப்பாலும் புதிய முடிவுகளை எடுக்கின்றது; அது மட்டுமின்றி சக மனிதர்களின் மேலும், அவர்களின் வாழ்க்கைச் சூழலின் மீதும் மனித மூளை காட்டும் அனுதாபம் (empathy) இயந்திர மூளைக்கு இன்னும் சாத்தியமாகவில்லை.

மேலும், ஒரு செல் உயிரியாக இப்பூமிப் பந்தில் தோன்றிய நாள் முதல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியின் போக்கில் இயற்கையுடன் உயிரினங்கள் கொண்ட முரண்பாடும் அதன் போக்கில் கற்றுக் கொண்டவைகளும் வழிவழியாக கடத்தப்பட்டு நமது மரபணுக்களின் பதிவுகளாகவும், நமது மூளையின் நனவிலிப் பதிவுகளாகவும் உறைந்து போயுள்ளன.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தர்க்கப்பூர்வ விளக்கங்களுக்கு அப்பாற்பட்டு அனிச்சையாக மூளை எடுக்கும் தீர்மானங்களில் இத்தகைய பதிவுகளின் தாக்கங்களும் உள்ளன. தற்போதைய வளர்ச்சி நிலையில் மனித மூளையின் தனிச்சிறப்புகள் அனைத்தையுமே இயந்திர மூளை அடையவில்லை எனினும், எதிர்காலத்தில் அவை சாத்தியப்படாது எனச் சொல்வதற்கில்லை.

***

ற்போதைய நிலையிலேயே கூட மனித மூளையிடம் இல்லாத சில குறிப்பிட்ட ஆற்றல்கள் அல்லது வாய்ப்புகள் கணினியின் செயற்கை நுண்ணறி இயந்திரத்திடம் உள்ளது.

முதலாவது, கொள்ளளவு. செயற்கை நுண்ணறி இயந்திரம், உலகெங்கும் இணையத்துடன் இணைக்கப்பட்ட பல்வேறு பொருட்களில் (IOT – Internet of Things) இருந்து ஒவ்வொரு நொடியும் ஏராளமாக வந்து குவியும் மீப்பெரும் மின் தரவுகளைச் (Big Data) சேமித்து அதைப் பகுத்துப் பார்க்கின்றது. அதன் மூலம் வந்தடையும் முடிவை உடனடியாக மெய்நிகர் எதார்த்த நிலையில் (Virtual Simulations) வைத்து சோதித்தறிகின்றது. இவ்வாறான சோதனைகளைப் பல இலட்சம் முறை மீண்டும் மீண்டும் செய்து ஒரு துல்லியத்தை எட்டுகின்றது.

 

இரண்டாவது, ஒரே விசயத்தை வெவ்வேறு பரிமாணத்தில் இடையீடு செய்து பெறப்பட்ட விதவிதமான தரவுகள். உதாரணமாக சைக்கிள் என்றவுடன், உங்கள் மனத்திரையில் இதுவரை நீங்கள் கண்ட சைக்கிள்களின் மாதிரி உருவங்கள் வந்து செல்லும் – ஐம்பது வகையான சைக்கிள்களை நீங்கள் பார்த்து நினைவில் வைத்திருப்பீர்கள் என்று கொள்வோம்.

ஆனால், சைக்கிள் என்கிற ஒன்று தோன்றிய நாளில் இருந்து இன்று வரை ஒவ்வொரு கட்டத்திலும் அது எந்தவகையான வடிவ மாற்றங்களுக்கு உள்ளானது, ஒவ்வொரு நாட்டிலும் எந்த மாதிரியான சைக்கிள்கள் பயன்பாட்டில் உள்ளது, சைக்கிளின் வடிவத்தைப் பொருத்தவரை மஞ்சளினத்தவரின் தேர்வு எது, கருப்பினத்தவருக்கு எது பொருந்தும், இந்தியர்கள் எம்மாதிரி வடிவம் கொண்ட சைக்கிளை விரும்புவார்கள் – என்பன போன்ற விவரங்களுடன், இன்றைய தேதியில் உலகம் முழுவதும் எத்தனை நிறுவனங்களின் சைக்கிள்கள் உள்ளன.

அவை என்னென்ன வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன, அதன் உதிரி பாகங்கள், மூலப் பொருட்கள், தயாரிப்பு முறை, தயாரிப்பதற்கான கால அளவு, செலவு உள்ளிட்டு சகல தரவுகளும் பகுப்பாய்வுக்குத் தயாராக செயற்கை நுண்ணறி இயந்திரத்திடம் இருக்கும். இவையனைத்தையும் சலித்து, பகுத்து, தொகுத்து அந்தப் புரிதலின் அடிப்படையில் இருந்து சைக்கிளைக் குறித்து நீங்கள் கேட்கும் கேள்விக்கான ’ஒரு சின்ன’ பதிலை அது வழங்கும்.

அல்லது மருத்துவம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு மனித மருத்துவரால் ஆயிரம் மருத்துவ ஆராய்ச்சி நூல்களை படித்து அவற்றின் சாரத்தை நினைவு வைத்துக் கொள்வது சாத்தியமாகலாம். அசாதாரண மருத்துவரென்றால் பத்தாயிரம் நூல்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

ஆனால், செயற்கை நுண்ணறிக் கணினியோ மருத்துவம் என்கிற விஞ்ஞானம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை எழுதப்பட்டு அச்சில் இருக்கும் அனைத்து நூல்களையும், ஆராய்ச்சி விவரங்களையும், சோதனை முடிவுகளையும், நோயாளிகளின் பரிசோதனை விவரங்களையும், லட்சக்கணக்கான மருத்துவக் குறிப்புகளையும் ஒரு எழுத்து விடாமல், காற்புள்ளி அரைப்புள்ளி தவறாமல் மின் தரவுகளாக சேமித்து வைக்கவும், அவற்றை ஒரே நேரத்தில் மொத்தமாகப் பகுத்தாயவும் கூடிய திறனைக் கொண்டது.

ஆவணப்படுத்தப்பட்டுள்ள மனித சமூகத்தின் அனுபவம், அறிவு ஆகியவற்றை ஒரு மனிதன், கட்சி அல்லது அமைப்பு உட்செரித்து அதனடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கொள்ளளவு ரீதியிலும் செயலாக்க ஆற்றலின் (Processing power) அடிப்படையிலும் இதன் வரம்புகள் அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு தாண்டிச் செல்கிறது. மனித மூளையின் “உள்ளுணர்வு” (intution) மட்டும் இயந்திர மூளைக்கு சாத்தியமாகவில்லை. எனினும், இயந்திர மூளையின் கொள்ளளவும் அதன் செயலாக்க ஆற்றலும் மனித மூளையின் ஆற்றலுக்கு அப்பால் உள்ளது.

***

றிவியலின் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகளுக்காக மட்டும் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 200 பில்லியன் டாலர்கள் முதலீடாக செய்யப்படும் என ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது.

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஆராய்வதற்கு பிலிப்ஸ், ஐ.பி.எம் மற்றும் ஆல்ஃபாபெட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாக ஃப்ரோஸ்ட் & சல்லிவன் நிறுவனம் கணித்துள்ளது. இண்டெல் நிறுவனம் மட்டும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தானியங்கிக் கார்களுக்காக சுமார் 15 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிதல் துறையில் நடந்து வரும் ஆய்வுகளின் நடைமுறை விளைவுகள் சாராம்சமாக இரண்டு அம்சங்களில் வெளிப்படுகின்றது. ஒன்று – முன்னறிப் புலனாய்வு (Predictive intelligence) இரண்டு – தானியங்கல் (Automation).

தொடர்ச்சியாக நடந்து வரும் ஒரு காரியத்தை தானியங்கி முறையில் இயக்குவது என்பது ஒரு மேலோட்டமான விளக்கம். குறிப்பான அந்தக் காரியம், ஏன் நடக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், அதைச் செய்யும் போது வரும் இடையூறுகளைக் களைவது எப்படி, எம்மாதிரியான முடிவுகள் வர வேண்டும், விரும்பிய முடிவுகள் வர என்ன செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்டு ஏராளமான அம்சங்களைக் கணக்கில் கொண்டது தான் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட தானியங்கல் முறை. இது நடைமுறையில் எவ்வாறு செய்யப்படுகின்றது, இதன் சமூகத் தாக்கம் என்னவென்பதை ஐ.டி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தானியங்கல் (automation) நடவடிக்கைகளைக் கொண்டு இனி வரும் பகுதிகளில் புரிந்து கொள்வோம்.

அதே போல் மரபணுக்களை ஆய்வு செய்து புற்றுநோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களைகளைக் கூட செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான முன்னறிப் புலனாய்வின் மூலம் கண்டறிந்து கொள்ள முடியும். எனினும், இதையும் நாம் ஒரு சமூகப் பயன்பாட்டின் அடிப்படையில் வைத்து அடுத்து வரும் பகுதிகளில் புரிந்து கொள்வோம்.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான மின் புத்தகமாக வாங்க

20.00Read more

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !

3

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர் பாபி கோஷ், கடந்த செப்.11, 2017 அன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்கா திரும்பவிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

மோடியுடன் ஷோபனா பார்த்தியா

ஆனால் பாஜக தரப்பிலிருந்தும், அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நிர்பந்தங்களின் காரணமாகத்தான், பத்திரிக்கை நிர்வாகத்தால், அவர் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என ’தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் கோஷுடன் பணிபுரிபவர்களும் அவ்வாறே கருதுவதாகக் கூறுகிறது.

பாபி கோஷ் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இதற்கு முன் ‘குவார்ட்ஸ்’ என்ற பத்திரிக்கையின் நிர்வாக இயக்குனராகவும், ’டைம்’ பத்திரிக்கையின் சர்வதேச பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பதவியேற்ற பின்னர், பல புதிய புதிய விசயங்களைச் செயல்படுத்தினார்.

கடந்த ஜூன் மாதம் ‘ஹேட் ட்ராக்கர்’ என்ற ஒரு இணையதளத்தை ஏற்படுத்தி அதில், வெறுப்பரசியல் காரணமாக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்துப் பதிவு செய்து வந்துள்ளார். பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசைக் கண்டித்து தலையங்கமும், கட்டுரைகளும் எழுதிவந்தார். அவர் பதவியேற்ற பின்னர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் அரசியல் பார்வை, மத்திய அரசு மற்றும் சங்க பரிவாரக் கும்பலுக்கு குடைச்சலாக இருந்துள்ளது.

பாபி கோஷ்

இந்நிலையில் தான் இந்தப் பத்திரிக்கையின் உரிமையாளர் ஷோபனா பார்த்தியா தனது பத்திரிக்கையின் நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக மோடியை அழைப்பதற்காக அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களிலேயே பாபி கோஷ் வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடியுடனான சந்திப்பில், பாபி கோஷின் அமெரிக்கக் குடியுரிமை குறித்து சோபனா பார்த்தியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், பாபியை ஏன் ஆசிரியராக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம் வைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்த சிலர் கூறியதாக, ’தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது.

’தி ஹிந்து’ நளேட்டில் ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜனை (தற்போது ’தி வயர்’ இணையதள நிறுவனர்), அமெரிக்கப் பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தால் அவர் அந்நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தகுதியற்றவர் என்று சுப்பிரமணியசாமியால் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்திய சட்டங்களின் படி அவரது நியமனம் செல்லத்தக்கதாகும் எனக் கூறி இந்த வழக்கில் தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கை சோபனா பார்த்தியாவிடம் எடுத்துக் கூறி மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர், மத்திய அரசின் மிரட்டல் குறித்து கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியதாகவும், அதற்கு சோபனா பார்த்தியா, ’சுப்பிரமணியசாமி என்னும் தனிநபர் வேறு, அரசாங்கம் வேறு, இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கூறியதாகவும், இதன் தொடர்ச்சியாக பாபி கோஷ் வெளியேற்றப்பட்டதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழைச் சேர்ந்தவர்கள் கூறியதாக ‘தி வயர்’ இணையதளம் தெரிவித்திருக்கிறது.

மேலும் சோபனா பார்த்தியா, பாபி கோஷ் வெளியேறுவது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், அவர் இராஜினாமா செய்ததாகக் குறிப்பிடப்படவில்லை. பாபி கோஷ் அவரது சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு திரும்ப விருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். கோஷும் தான் அமெரிக்கா திரும்பப் போவது பற்றி தனிப்பட்டரீதியில் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. வழக்கத்திற்கு மாறான இந்த நிலைமைகள் பாபி கோஷ் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது ’தி வயர்’ இணையதளம்.

இதை உறுதி செய்யும் வண்ணம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் சமீபத்திய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. பாபி கோஷின் இராஜினாமா செய்தி வெளியிடப்பட்ட பிறகு இரண்டு நாள் கழித்து செப். 13 அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ன் ட்விட்டர் பக்கத்தில், ’ஹேட் ட்ராக்கர்’-ன் தகவல்கள் ஒரு ட்விட்டில் வெளியிடப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் கீட்டிகா ருஸ்டகி என்ற ஹிந்துஷ்தான் டைம்ஸ் நிர்வாகி ஒருவரிடமிருந்து அதன் ஆசிரியர் குழுவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.

அதில், ”ராஜேஷின் வழிகாட்டுதலின் படி, ‘ஹேட் டிராக்கர்’ குறித்த செய்திகளை மறு அறிவிப்பு வரும் வரையில் யாரும் மீண்டும் ட்வீட் செய்யக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தது. ராஜேஷ் மஹாபத்ரா என்பவர், ஷோபனா பார்த்தியாவிற்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்டவர். ஹேட் டிராக்கர் இணையதளம் அலுவலகரீதியாக முடக்கப்படவில்லை எனினும், சமூக வலைத்தளங்களில் ஹேட் டிராக்கரின் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்ததாக ‘தி வயர்’ இணையதளம் கூறுகிறது.

மற்ற ஊடகங்களில் பணி புரியும் மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் அவரது பணி விலகல் செய்தி வெளியானதும், அவர் முயற்சித்து உருவாக்கிய ’ஹேட் ட்ராக்கர்’ இணையதளம் தான் அவருக்கு பிரச்சினை ஏற்படுத்தியவற்றில் முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ’தி வயர்’ இணையதளம் முன் வைத்த கேள்விகளுக்கு, சோபனா பார்த்தியாவின் கடிதத்தையே பதிலாகக் கூறி, மற்ற கேள்விகள் அனைத்தும் வெறும் அனுமானங்கள் என்றும், அனுமானங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்று தவிர்த்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம்.

கடந்த ஆண்டில், இது போன்று பல்வேறு சமயங்களில் பிரபல பத்திரிக்கைகளின் ஆசிரியர்களுக்கும் ஆளும் கட்சிக்கும் மற்றும் அரசிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பத்திரிகை இணையதளங்களில் வெளியிடப்பட்ட பாஜகவினரின் மீதான விமர்சனக் கட்டுரைகள், அழுத்தம் காரணமாக சத்தமின்றி நீக்கப்பட்டுள்ளன.

ஒருபுறம் தம்மை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களையும், பத்திரிக்கை நிறுவனங்களையும் மிரட்டிக் கொண்டே மறுபுறத்தில் தமக்கு ஆதரவான பத்திரிக்கையாளர்களையும், தமது ஹிந்துத்துவ செயல்திட்டத்திற்கு ஆதரவாகவும் உள்ள பத்திரிக்கையாளர்களையும் ஊடகங்களையும் வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது பாஜக.

பாஜக ஆட்சியில்தான் பத்திரிக்கையாளர்கள் அதிகமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த ஆட்சியில்தான் பத்திரிக்கையாளர்கள் அதிகமாகத் தாக்கப்படுகின்றனர். இத்தகைய பாசிச நிலையில்தான் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டுள்ளார். நடுநிலையாளர்கள், நேர்மையாளர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் இத்தகைய பாசிச வெறிக்கெதிராக அணிதிரள வேண்டிய நேரம் இது !

மேலும் படிக்க:

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மணல் கொள்ளையை நிறுத்து ! – கூடலையாத்தூர் பொதுக்கூட்டம் !

1

விவசாயியை வாழவிடு மணல்கொள்ளையை நிறுத்து!
ஊர் கூடி ஒரு பொதுக்கூட்டம்!

கடலூர் மாவட்டம், கூடலையாத்தூர், வெள்ளாறு மணல் கொள்ளையை நிறுத்தக்கோரியும், ஊழல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பில் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் சேத்தியாத்தோப்பு கடை விதியில் 01.10.2017 அன்று மாலை 5.00 மணியளவில் பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர்
ஆர். வெங்கடேசன் தலைமை தாங்கினார். கண்டன உரை தோழர். முருகானந்தம், வட்டார ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம், விருதை மற்றும் வழக்கறிஞர் செந்தில் ,மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தோழர் மா.மணியரசன் (செயலர்) புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருதை. சிறப்பு உரை தோழர். வழக்கறிஞர் .சி. ராஜீ மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினர்,

பொதுக்கூட்டத்தில் பேசும் தோழர் ராஜூ

ஆர். வெங்கடேசன் அவர்கள் தலைமை உரையில் குவாரியை மூடவேண்டும், விவசாயி வாழவேண்டும் என்று மக்கள் போராடினால், வாழவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்வது இந்த அரசும், அரசியல்வாதிகளும். கூடலையாத்தூரில் வெள்ளாற்றில் வெயிலில், சுடுமணலில், பெண்களும், மாணவர்களும், மக்களும் உட்கார்ந்துக்கொண்டு மணல் குவாரியை முடியே தீர வேண்டும் என்ற உறுதியோடு போராடுகிறோம்.

போராடுகின்ற எங்களுக்கு தண்ணீர் கூட தரமறுத்தது இந்த போலீசுத் துறை. குவாரியை தற்காலிகமாக மூடுகின்றோம் என்று சிதம்பரம் கோட்டாட்சியரும் போலீசும் கூறி நாடகமாடி  போராட்டத்தை கலைத்தனர்.  ஆனால் இரண்டாம் நாளே குவாரியை திறந்துவிட்டார்கள், இந்த ஊழல் அதிகாரிகள்.  விவசாயிகள் நாம் வாழவேண்டும் என்றால் மக்களாகிய நாம் தாம் அதிகாரத்தை கையில் எடுத்து  மூடவேண்டும் என்று தலைமை உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் தெய்வக்கண்ணு அவர்கள் பேசும்போது மணலை அள்ளுவதற்கு வெள்ளாற்றிலே தார் ரோடு போடுகின்ற இந்த அரசு, மக்களும், மாணவர்களும் நடத்து செல்ல ரோடு போட்டுக்கொடுக்க துப்பில்ல அதோடு இல்லங்க, காவனூர் ஆற்றின் குறுக்கே மக்கள் நாங்களே முன் முயற்சியோடு ஈடுபட்டு நடைபாதைக்காக போட்டு இருந்த அந்த மண்பாதையை கூட உடைத்து தேங்கியிருந்த  நீரை வடிக்கட்டி மணலை அள்ளுவதற்கு உதவி செய்கிறார்கள் இந்த அதிகாரிகள்.  அதனால் தான் இந்த மக்களுக்கு எதிராய் இருக்கின்ற ஊழல் அதிகாரிகள் எங்களுக்கு தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம் என்றார்.

வெள்ளாறு , கூடலையாத்தூர் பகுதியில் வாழும் தி.மு.கவை சேர்ந்த ஆசை தம்பி, பேசும்போது விவசாயிகள் நாம் விளைவிக்கின்ற உணவு பொருட்களை சாப்பிடுகின்றவர்களிடமே ’விவசாயிகளை வாழ விடு’ என்று கெஞ்சுகின்ற அவல நிலையை உருவாக்கிய தரம் கெட்ட அரசின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதோடு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது, சம்பா சாகுபடிக்கு ஆற்றில் நீர் இல்லை, இப்படி இருக்கின்ற சூழலில ஆற்றில் உள்ள மணலை ஓட்ட சுரண்டுவது, ஒரு தாயின் மார்பை அறுப்பதற்கு சமம், மணல் திருட்டு நடக்கின்றது,  ஓவர் லோடு என்று அதனை பிடித்துக்கொடுகின்றோம். பிடித்துக்கொடுக்கின்ற எங்கள் மீது 107 வழக்கு என்றால், மணலை திருடுகின்றவனுக்கு என்ன தண்டனை? என்ற கேள்வியை பொதுக்கூட்டத்தில்  மக்கள் மத்தியில் எழுப்பினார்.

மக்கள் அதிகாரத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர். முருகானந்தம் பேசுகையில் ”மக்கள் அதிகாரம் கூட்டம் நடத்துவது, காவல்துறையையும் போலீசையும் திட்டுவதற்காக கூட்டம் நடத்தவில்லை,  மக்களுடைய ஆதங்கத்தையும், கொத்தளிப்பையும் மதிக்காமல் நடத்துக்கொள்ளும் பீர்பாஷா போன்ற போலீசு அதிகாரிகளை, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காகவும் குவாரியை மூடவேண்டும் என்றும்  நாங்கள் நீதிமன்றத்தில் அனுமதி  வாங்கிக் கூட்டம் நடத்துகின்றோம்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி

மக்களுடைய வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டு, மக்களை ஒடுக்குகின்ற போக்கை இந்த அரசு கையாளுகின்றது.  எனவே தான் மாற்றி அமைக்கின்ற ஒரு சக்தியாக மக்கள் அதிகாரமாக, மக்கள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறி முடித்தார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் செந்தில் பேசுகையில் “ நாங்கள் எடுத்தவுடன் வெள்ளாற்று மணல் குவாரியை முற்றுகையிடவில்லை.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, அதன் துறை சார்ந்த அனைத்து பிரிவு அதிகாரிகளிடமும் மனு கொடுத்து விட்டோம் அந்த மனு மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ எதுவும்  இல்லை,  அதனால் தான் மக்களை திரட்டினோம். 21.08.2017 அன்று குவாரியை முற்றுகையிட வெள்ளாற்றில்  இறங்கினோம், போராடினோம், போராட்டத்தில்  உளவு பிரிவு போலீசார் கலவரத்தை மூட்டுவதற்கான  வேலையை செய்தார்கள்.  இதனை புரிந்து கொண்ட மக்களும், இளைஞர்களும் தெளிவாக இருந்தனர்.  போராட்டத்தில் போராடுகின்ற மக்கள் கொண்டு வந்த தண்ணீரைக் கூடத் தர மறுத்தனர் சாமியனா பந்தல் போடக்கூடாது என்று மிரட்டினர்.  மக்களை தள்ளுமுள்ளுக்கு ஆளாக்கினர்” என்றார்.

ஓட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் ரவி கூறுகையில் “வெள்ளாற்றில் ஒரு தடுப்பணைக்கூட கிடையாது. இருப்பதோ சேத்தியாத்தோப்பு அருகில் ஆங்கிலயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு அதனை திறந்தால் ஆற்றின் மொத்த நீரும் கடலுக்கு தான் செல்லும், வெள்ளாற்றை நம்பி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  ஆனால் பொதுப்பணித்துறையால்  விவசாயத்திற்கு எந்த வித நீர்பாசன கால்வாயோ தடுப்பணையோ எதுவும் இல்லை. ஆனால் அரசு டாஸ்மாக் கடையை மட்டும் மூடுகின்ற மாதிரி மூடி, தெருவிற்கு தெரு திறக்கின்றனர். நாங்கள் அரசிடம் கேட்பது மூன்று கோரிக்கைதான் கல்வி, மருத்துவம், தண்ணீர் இவைகளை இலவசமாக கொடுத்தாலே மக்களாகிய நாங்கள் வாழ்ந்துகொள்வோம்” என்று பேசினார்.

அவரை தொடர்ந்து மா. மணியரசன் செயலர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி “வெள்ளாற்றில் 21 ம் தேதி போராட்டம் தொடங்கியது ஆனால் ஒரு கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது போல் 5 டி.எஸ்.பி, 500 – க்கும் மேற்பட்ட காவலர்கள்  என்று ஆற்றில் குவித்தனர்.  மக்களை அச்சுறுத்தினர், இருந்தாலும் மக்கள் குவாரியை மூடினால் தான் ஆற்றை விட்டு வெளியேறுவோம் என்று முழக்கம் இட்டப்படி போராடினர்.

வெள்ளாற்றில் மணல் கொள்ளை அடிக்கப்படுவது, அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவோ, டெங்குவால் பலியாக கூடிய சிறுமியின் உயிரைத் தடுக்கவோ, இப்படி எதற்கும் பயன்படாத அதிகார வர்க்கம் நடத்தக்கூடிய, கொள்ளையடிக்கக்கூடிய மணல்குவாரியை இழுத்து மூடவேண்டும், நீட் தேர்வில் மாணவி அனிதாவை நம்பவைத்துக் கழுத்தை அறுத்தது மோடி அரசும், எடப்பாடி அரசும், நீதிபதிகளும். அதே போல் ஆகஸ்ட் 21  ல் மக்கள் அதிகாரம் தலைமையில் நடந்த மணல் குவாரி முற்றுகை போராட்டத்தில் விவசாயிகளை   நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள்,  இந்த அதிகாரிகள். இப்படி நம்ப வைத்துக் கழுத்தை அறுத்த அதிகாரவர்க்கத்தை விழ்த்த மாணவர்கள் இளைஞர்கள் பகத்சிங் பாதையில் அணிதிரள்வோம்” என்றார்.

சிறப்புரையாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜீ பேசுகையில் “ கடந்த மூன்று மாதகாலமாக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தோடு எமது மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து வெள்ளாற்றில் இயங்கி வரும் கூடலையாத்தூரில் மணல் குவாரியை மூடியாக வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம் அதாவது நாம் மக்கள் இடத்தில் கூறுவது கூடலையாத்தூரில்  நடப்பது என்ன?

மணல் கொள்ளையர்கள் ஆற்றில் உருவாக்கியுள்ள சாலை

மணலை வெட்டி எடுக்கின்றனர் வெட்டி எடுக்கும் இடம் 8 நம்பர் சர்வேயில், 2-ஏக்கர், 3 அடி ஆழம் சிவப்பு துணி கம்பு எல்லை வரைவு என்று அவர்கள் பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளனர். நடப்பது என்ன வென்றால் 30 அடிக்கும் கீழாக, கணக்கு காட்டிய தூரம் வரையில் வெட்டி எடுக்கின்றனர், எல்லை வரைவு கம்பம் என்று எதுவும் கிடையாது, அங்கேதான் இல்லை என்று பார்த்தால் தமிழ்நாட்டில் எந்த குவாரியிலும் இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லை. அதோடு லாரிக்கு பரிமிட் கிடையாது, ஓவர்லோடில் மணல் கொள்ளை போகிறது,  எனப் பலமுறை திருமுட்டம் காவல் ஆய்வாளர் பீர்பாஷாவிடமும், பொதுப்பணித்துறை இன்ஜீனியர் சரவணனிடம் சொன்னதற்கு எதனையும் கண்டுகொள்ளவில்லை  அதோடு பொதுமக்களிடம் நாயினும் கீழாக பீர்பாஷா நடந்து கொண்டார். கூடலையாத்தூர் ஆக. 21 மணல் குவாரி முற்றுகை போராட்டத்தின் பொழுது குவாரிக்கு விடுமுறை  ஆனால் குவாரி அதிகாரிகளை பணி செய்யவிடவில்லை என்று ஊர் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர்கள் மீதும்  போலீஸ் வழக்கு பதிவு செய்தது. ஜெயலலிதா மரணத்தை எடுத்து கொண்டால் போதும் ஒட்டுமொத்த அரசும் மக்களுக்கு  எதிராக மாறி தோற்று உள்ளது என்று தெரியும். மேலும் டெங்கினால் பாதிக்கப்பட்டு தினமும் குழந்தைகளும் மக்களும் இறந்து கொண்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையிலும் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்று நீதி விசாரணை வேண்டும் என்கிறது பா.ஜ.க. கைக்கூலி எடுபிடி எடப்பாடி அரசும், ஆட்சியாளர்களும் அடிக்கிற கூத்து தொலைக்காட்சி செய்தியை பார்தாலே உங்களுக்கு புரியும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டுமென்றால் அரசை நம்பி பலன் இல்லை மக்கள் நாம்தான் ஒவ்வொரு ஊர்களிலும்  குழுக்களை உருவாக்கி அந்த குழுக்களின் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து மூடவேண்டும். இல்லையென்றால் இவர்களிடம் மனு கொடுத்து உண்ணாவிரதம் இருந்து எதையும் சாதிக்கமுடியாது.

ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையோ மணல் கொள்ளை போகுது  என்று லாரியை பிடித்து கொடுத்த ஆசைதம்பி மீது 107 பிரிவு கீழ் (ரவுடி) வழக்கு போடுவேன் என்று மிரட்டுகிறது. இப்படி ஒட்டுமொத்த அரசும் கிரிமினல்மயமாகவும், ஊழல்மயமாகவும் உள்ளது. இதைதான் மக்கள் அதிகாரம் கட்டமைப்பு நெருக்கடி என்கிறது இதற்கு மாற்றுதான் மக்கள் அதிகாரம் என்கிறோம். இந்த கிராமத்தை சேர்ந்த  ஆசைத்தம்பி, செங்குட்டுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் சுற்று வட்டாரங்களில் உள்ள வருவாய் துறை, பொது பணிதுறை அலுவலகத்தையும், காவல் நிலையங்களையும் முற்றுகையிட்டு எந்த அதிகாரிகளையும் உள்ளே போகவிடாமல் கைது செய்தவர்களை விடுதலை செய்யும்வரை நாம்  அடுத்தக்கட்ட போராட்டத்தை கட்டியமைக்கவேண்டும். இந்த பொதுக் கூட்டத்திற்கான நோக்கம் என்னவென்றால் மணல் கொள்ளை அடிப்பது குற்றமா, அதை தடுப்பது குற்றமா, இக்கொள்ளையை ஏற்று நடத்துகிற எடுபிடி எடப்பாடி கும்பலும், அதிகாரவர்க்கமும் குற்றவாளிகளா? இந்த கொள்ளையை கேள்வி கேட்கின்ற பொதுமக்கள் குற்றவாளிகளா?. வெள்ளாற்றை ஒட்டி உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை கட்டியமைத்து, மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக வேண்டும். மக்களுக்கு எதிராக இருக்கின்ற இந்த  அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவதற்கான ஒரே தீர்வு மக்கள் அதிகாரம் தான்” என்றார்.

அக்டோபர் 1, 2017 அன்று கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கமும், மக்கள் அதிகாரமும் இணைந்து நடத்திய ”மணல் கொள்ளையை நிறுத்து! ஊழல் அதிகாரிகளைக் கைது செய்!” பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. கடலூர் மாவட்டம் கூடலையாத்தூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என அனைத்து கிராம மக்கள் சார்பாக தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
  2. கூடலையாத்தூர் மணல் கொள்ளை தினமும் தொடர்கிறது. திருட்டு லாரிகளை மக்கள்தான் பிடித்துக் கொடுத்தார்கள். மணல் கொள்ளைக்கு உடந்தையான பொதுப்பணித் துறை பொறியாளர் சரவணன், திருமுட்டம் ஆய்வாளர் பீர்பாஷா மீது ஊழல் கிரிமினல் வழக்கு பதிவு செய்து உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உரிய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
  3. வெள்ளாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு வெள்ளாறு மீளமுடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டுள்ளது. எனவே நிலத்தடி நீர் ஆதாரத்தைக் காக்க உரிய தடுப்பணை கட்டவும், விவசாயிகளின் போர் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசே ஆழ்துளை போர் போட்டு இலவசமாக விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
  4. வாழ்வாதாரங்களைக் காக்க அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக அச்சுறுத்தும் கடலூர் மாவட்ட காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். போடப்பட்ட வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
  5. கிரானைட் கொள்ளையை விசாரித்த சகாயம் கமிஷனைப் போன்று தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஆற்றுமணல் கொள்ளையை விசாரிக்க நீதிபதிகள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் அடங்கிய கமிட்டி மூலம் விசாரிக்க தமிழக அரசை நிர்ப்பந்தித்து அனைத்து மக்களும் போராட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
  6. கூடலையாத்தூர் மணல் குவாரியை ஒரு வாரத்திற்குள் பொதுப் பணித் துறை மூடவில்லை என்றால் அனைத்து கிராம மக்களையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். அது வெள்ளாற்றைக் காத்திட சிறை செல்லும் போராட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  7. வெள்ளாற்றைக் காக்க அனைத்து கிராமங்களிலும் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்க அனைவரும் உறுப்பினராக சேர வேண்டும். சட்ட விரோத மணல் லாரிகளை மக்கள் கண்காணித்து தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
  8. 30-9-17 அன்று கடலூர் கெடிலம் ஆற்றில் மாமூல் கேட்டு சக்ரபாணி என்ற மாட்டு வண்டி தொழிலாளியை போலீசார் ஹெல்மெட்டால் அடித்துப் படுகொலை செய்துள்ளனர். குற்றவாளி போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் உயிரிழந்த சக்ரபாணி குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

மணல் குவாரிக்கு எதிரான இந்தப் பொதுக்கூட்டத்தில் பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கோயில் திருவிழாவை ஊர் கூடி நடத்துவதைப்போல ஊர் கூடி இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வந்திருந்த மக்களில் பலரும், போலீசுக்கு எதிராக தானும் கருத்துச் சொல்ல வேண்டும் என்று கூறி பதிவும் செய்தனர். தோழர் ராஜூ பேசிய பின்னர், 8 வயது சிறுமி ஒருவர் வெள்ளாற்றை காக்க வேண்டும் என்ற பாடலை பாடியது மெய்சிலிர்க்க வைத்தது. போலீசைத் திட்டக்கூடாது என்று  போலீஸ் நிலையத்தில் இருந்து துண்டுச்சீட்டை கொடுத்துக்கொண்டே இருக்க, மக்களோ தாங்களே முன்வந்து போலீசின் யோக்கியதையை அம்பலப்படுத்திக்கொண்டே இருந்தனர்.

ஒருங்கிணையக்கூடாது என்று மக்களை என்னதான் போலீசு அச்சுறுத்தினாலும் அந்த அச்சுறுத்தலே மக்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக உறுதியாகப் போராடவும் வைக்கிறது என்பதை இப்பொதுக்கூட்டம் கண்முன்னே காட்டியது.

தகவல்
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம்

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 

பிரச்சாரம் செய்த ‘குற்றத்திற்காக’ தருமபுரி புமாஇமு தோழர்கள் கைது !

1

ருமபுரி அரசு கலை (ம) அறிவியல் கல்லூரியில் பு. மா. இ.மு. தோழர்கள், கடந்த 04/10/2017 அன்று மாலை 3.00 மணியளவில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரச்சாரமும், பு.மா.இ.மு. உறுப்பினர் சேர்க்கையும் செய்து கொண்டிருந்தனர். தோழர்கள் சத்தியநாதன், அன்பு, மலர்கொடி ஆகியோரை தருமபுரி கியூ பிரிவு போலீசு வலுக்கட்டாயமாக  கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தோழர்களை B1 காவல் நிலையத்தில் அடைத்துவைத்தனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள்

கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்க்க வழக்கறிஞர்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர். இது சட்டவிரோதமானது எனக் கூறிய போது, கியூ பிரிவு இன்ஸ்பெக்டர்  ”யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கோ, நான் அப்படி தான்” என சர்வசக்தி படைத்தவர் போல் பேசியிருக்கிறார்.

பின்னர் தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இது புதிதல்ல இதற்கு முன்னால் தமிழகமே நீட் எதிர்ப்புப் போரட்டத்தில் இருந்தபோது இந்த அரசுக்கு எதிராக இதே கல்லூரியை சார்ந்த மாணவர்களை போராட தூண்டியதாக அதியமான்கோட்டை போலீசரால் ஒரு முறையும், பென்னாகரம் அரசு ஆண்கள் (ம) பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகளிடம் நீட் தேர்வையும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை வியக்கியானம் செய்ததாகக் கூறி கியூ பிரிவு தூண்டுதலின் விளைவாக பென்னாகரம் டவுன் போலீசரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தற்போது மூன்றாவது முறையாக கைது நடவடிக்கை, இவர்கள் மீது நடந்துள்ளது. அரசின் அயோக்கியதனத்தை யாராவது தோலுரித்து காட்டினால் அவர்களைக் கைது செய்வது, குண்டாஸ் போடுவது என இது போன்ற நடவடிக்கைகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. கைதுக்கும், சிறைக்கும் அஞ்சுபவர்கள் மாணவர்களாகிய நாங்கள் அல்ல.

இனி வருகின்ற ஒவ்வொரு நாளும் இந்த அரசையும், அதிகாரத் திமிரையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வீதியில் ஓடவிடுவதே மாணவர்களாகிய எங்களின் முதல் கடமை.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
தருமபுரி .

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் !

2

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 2

முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், யூடியூப் போன்ற காணொளி அலைபரப்பும் தளங்களும், இவற்றையொத்த சேவைகளை வழங்கும் இணையதளங்கள் அனைத்தும் மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் இயங்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட சமூகவலைத்தள ஊடகத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் தனக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவத்தை (Personalised experience) அடைவதை இத்தொழில்நுட்பம் உத்திரவாதப்படுத்துகின்றது. சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளின் வருமானமே பயனர்கள் அடையும் “தனிப்பட்ட அனுபவத்தை”த்தான் அச்சாணியாகக் கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் இல்லை. தங்களது வருமானத்திற்கு இந்த நிறுவனங்கள் விளம்பரங்களையே நம்பியிருக்கின்றன. சாதாரண விளம்பரங்களுக்கும் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளில் வருவதைப் போல இணையத்தில் பயனர்கள் அனைவருக்கும் பொதுவான விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளம்பரங்கள் தெரிகின்றன. ஒரு குறிப்பிட்ட பயனரின் விருப்பம் என்ன, அவரது செலவழிக்கும் ஆற்றல் என்ன. எந்த பொருளை என்ன விலையில் எப்போது வாங்குவார் என்பது வரை துல்லியமாக மதிப்பிட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

உதாரணமாக, ஒருவர் யூடியூபில் நவீன கார்கள் குறித்த வீடியோ ஒன்றைக் கண்டு விட்டு அடுத்ததாக தனது முகநூல் கணக்கில் நுழைந்தால் தானாகவே கார்கள் குறித்த விளம்பரங்களையும் கார் கடன் குறித்த விளம்பரங்களையும் காண்பார். இணைய உலாவிகள் (Browsers) ஒருவர் பார்க்கும் இணையதளங்கள் குறித்த தகவல்களை குக்கீஸ்களாக (Cookie) சேமித்து வைக்கும்.

பின்னர் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் உள்நுழையும் போது, குக்கீஸ்களை சேகரித்துப் பரிசீலிப்பதன் மூலம் கடந்த சில நாட்களில் அல்லது வாரங்களில் அவர் எந்தெந்த தளங்களுக்குச் சென்றுள்ளார், என்ன விவரங்களைத் தேடியுள்ளார் என்கிற விவரங்களையும் அறிந்து கொள்ளும். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர், உடனே கார் வாங்கும் மனநிலையில் இருக்கிறாரா அல்லது வெறுமனே அது தொடர்பான தகவல்களை நேரப் போக்கிற்காக மேய்ந்து கொண்டிருக்கிறாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.

சமூக வலைத்தளங்கள் செய்யும் “விளம்பரம்” என்பது, “1431 பயோரியா பல்பொடி” விளம்பரத்தைப் போல் பொதுவானதல்ல – மாறாக குறிப்பானது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் அதற்கு கிடைக்கக் கூடிய வரவேற்பு மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளை சமூக வலைத்தளங்களிடம் இருந்து பெறும் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிட்டுக் கொள்கின்றது.

ஒருவர் இணையத்தில் செலவழிக்கும் நேரம் – அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விசயங்கள் – அந்த விசயங்களின் அரசியல், சமூக மற்றும் வணிக மதிப்பு உள்ளிட்டவைகளை செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் மிகத் துல்லியமாக கணிக்கின்றன. கூடுதலாக, ஒரு நபர் ஓய்வில் செலவழிக்கும் நேரத்தையும், அந்த நேரத்தை எதற்காக செலவழிக்கிறார் என்பதையும் கொண்டு அந்த நபரின் ஆளுமையையும் துல்லியமாக கணிக்க முடியும்.

வேறு விதமாகச் சொன்னால், தனது வாழ்நாள் முழுவதும் விகடன், குமுதம், குங்குமம், முத்தாரம் போன்ற பத்திரிகைகளை மட்டுமே ‘வாசிக்கும்’ பழக்கம் கொண்ட ஒருவர் அரசியல் மொக்கையாக இருப்பார் என்பதை கணிப்பது எளிமையானது தானே?

செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் பயனர் ஒருவரின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து அவரது ஆளுமை குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வருகின்றன. பிறகு அவரது ஆளுமையில் சிறு பகுதியாக இருக்கக் கூடிய, நுகர்பொருள் மோகம் அல்லது பாலியல் சார்ந்த பலவீனம் போன்ற ஏதோவொன்றை மென்மேலும் தூண்டி வளர்க்கின்றன. இதன் மூலம் வணிக நோக்கத்தை மட்டுமின்றி அரசியல் பண்பாட்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். மதப் பற்றை மதவெறியாகவும், மொழிப்பற்றை இனவெறியாகவும் மடை மாற்றிவிட முடியும்.

ஒரு குறிப்பிட்ட பயனரின் கண்ணில் எவையெல்லாம் விழ வேண்டும் என்கிற முடிவை அவரிடம் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளை மட்டும் ஆய்வு செய்து சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சமூகவலைத்தள பயனர் சார்ந்துள்ள நாடு, பிரதேசம், மொழி, கலாச்சாரம், மதம் உள்ளிட்ட மக்கள் தொகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் அந்த செயல்பாடுகளின் திசைவழி ஆகியவற்றை மின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின்னரே அவரது கண்கள் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகின்றது.

***

மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு சதாகாலமும் இணையத்தின் மூலமாகவே அரசியல் ‘பேசும்’ நபர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்

ஒருவேளை சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருவர் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். அல்லது முற்போக்கு அரசியல் தொடர்பான செய்திகளையே பின் தொடர்கிறார் என்றால், அந்த நபர் எந்த குறிப்பான அரசியல் கருத்தை தொடர்ந்து கவனிக்கிறாரோ, அந்தக் கருத்துக்கள் மட்டுமே ஒரு கட்டத்திற்கு மேல் அவரது முகநூல் பக்கம் முழுவதையும் அடைத்துக் கொள்ளும்.

தமிழனவாதம் என்றால் முழுவதும் தமிழினவாதம். இடதுசாரிக் கருத்துக்கள் என்றால், முழுவதும் இடதுசாரிக் கருத்துக்கள். இப்போக்கின் விளைவாக, ஒரு கட்டத்திற்கு மேல் இணையத்தில் மட்டுமே இயங்குகின்றவர்கள் ஒற்றைப்படையான கருத்தியல் நிலைக்கு வந்து சேர்கின்றனர்.

எந்த ஒரு அரசியல் கோட்பாடாக இருந்தாலும் அதனைச் சமூக நடைமுறையுடன் இணைந்து கற்றுக் கொள்ளும் போது தான் அதனை சரியான பொருளில் உள்வாங்கிக் கொள்ள முடியும். அதன் குறை நிறைகளை புரிந்து கொள்ளவும் முடியும். மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு சதாகாலமும் இணையத்தின் மூலமாகவே அரசியல் ‘பேசும்’ நபர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறார். முகநூல் ஒரு பயனரின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு தொடர்ந்து அதே போன்ற ஒற்றைப் பரிமாண நிலைத்தகவல்களை அவரது பக்கத்தில் காட்சிப்படுத்தும் – சமூக வலைத்தளங்களின் பின்னே உள்ள செயற்கை நுண்ணறி நிரலி இவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களின் மேற்படியான வடிவமைப்பு, இத்தளங்களில் தொடர்ந்து இயங்கும் பயனர்களை சில மாதங்களிலேயே மேலும் மேலும் தீவிரமாகவும், வறட்டுத்தனமாகவும், மொக்கையாகவும், (முக்கியமாக முட்டாள்தனமாகவும்) சிந்திக்கச் செய்கின்றது. இந்த வகையில் பெரும் தொகுதியான மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதிலும் குறிப்பான திசைகளில் செலுத்துவதிலும் ஆளும் வர்க்கங்களின் கைகளில் சமூக வலைத்தளங்கள் ஆயுதமாகின்றன. வண்ணப்புரட்சிகளுக்கு மக்களைத் தயார்படுத்துவதில் சமூக வலைத்தளங்களே முதன்மைக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.

அரசியல் ‘செயல்பாட்டாளார்கள்’ உள்ளிட்ட சமூக வலைத்தள பயனர்கள், இணையத்தில் செலவிடும் நேரமும், அந்த நேரத்தில் அவர்களது “அரசியல் செயல்பாட்டிற்கு” இடையே காணும் விளம்பரங்களும் – அதனால் கிடைக்கும் நேரடி வருவாயும். அவரைக் குறித்த தரவுகளும் சமூக வலைத்தள நிறுவனத்திற்கு நேரடியாக ஆதாயம் அளிக்க கூடியவை.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாடு என்கிற மாநிலத்தில் சென்னை என்கிற அதன் தலைநகரில் உள்ள மக்களில் எத்தனை சதவீதம் பேர் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு ஆட்பட்டவர்கள், பொதுவான அரசியல் மனநிலை என்ன, என்ன பொருட்களை வாங்குவர், என்ன மாதிரியான கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுவர், என ஒரு சமூகத்தைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை செயற்கை நுண்ணறி இயந்திரம் அறிந்து கொள்கின்றது.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றவர்கள் ஒருவித போதைக்கு ஆட்பட்டதைப் போல் மேலும் மேலும் அதனுள்ளேயே தங்களது நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு ஏறக்குறைய ஒரு நச்சு வளையத்துக்குள் தங்களையே சிக்க வைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே சமீப ஆண்டுகளில் சமூகவலைத்தள கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளது.

***

சமீபத்தில் வெளியான புள்ளி விவரக் கணக்கு இது – இன்றைய தேதியில் உலகளவில் சுமார் 187 கோடி பேர் முகநூலில் கணக்கு வைத்துள்ளனர். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வீ -சாட் உள்ளிட்ட அரட்டையடிக்கும் தளங்களில் சுமார் 310 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர். ட்விட்டரில் சுமார் 31 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் ட்விட்டர், கூகுள் பிளஸ் தவிர்த்து ஒவ்வொரு சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

சமூக வலைத்தளங்களைக் கொண்டு மக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய முடியும் என்றும், இன மத மொழி ரீதியில் மக்களைப் பிளவு படுத்த முடியும் என்றும், இதன் மூலம் தேர்தல் ஆதாயங்களை அடைய முடியும் என்றும், குறிப்பிட்ட ஒரு நபரின் மேல் மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றியமைக்க அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதையும் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா நிரூபித்துக் காட்டியது.

சமூக வலைத்தளங்களைக் கொண்டேமக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய முடியும்.

2013-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தளங்களின் போக்கை நினைவு கூர்ந்து பாருங்கள். ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண எதிர்ப்பு, லோக்பால், காங்கிரசின் செயலின்மை ஒருபுறமும், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் சீன பேருந்து நிலையம், குஜராத் காந்திநகரில் அமைந்துள்ள நியூயார்க் தெரு போன்ற புகைப்படங்களும், மோடியின் பராக்கிரமங்கள் குறித்த கதைகளும் (17 இன்னோவாவில் பல்லாயிரக்கணக்கான குஜராத்திகளை உத்தராகண்ட் நிலச்சரிவில் இருந்து மோடியே முன்னின்று மீட்ட கதை மறக்குமா என்ன?) அப்போது சமூக வலைத்தளங்களை நிறைத்தன.

இவ்வளவும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோ, பாரதிய ஜனதா ஆதரவாளர்களோ செய்யவில்லை. ஆப்கோ என்கிற அமெரிக்க நிறுவனம் மோடியின் பிரச்சாரங்களையும் அவரது பிம்ப மேலாண்மையையும் கையாண்டது. மேலும், இந்தியாவிலேயே செயல்படும் நிழல் பிம்ப மேலாண்மை நிறுவனங்களையும் கூலிக்கு அமர்த்தினர். ஆயிரக்கணக்கான போலியான சமூக வலைத்தள கணக்குகளுடன் களமிறங்கிய இந்த கூலிக் கும்பல், மோடிக்கு ஆதரவாக நாடெங்கும் ஒரு பேரெழுச்சி இருப்பதாக போலியான தோற்றத்தை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்து பயனர்கள் குறித்த மின் தரவுகளைப் பெற்ற பிம்ப மேலாண்மை நிறுவனங்கள், அந்த மின் தரவுகளைச் சலித்தெடுத்து, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக விரிவான திட்டமிடலைச் செய்தனர். நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிவைத்து மோடியை சந்தைப் படுத்தினர். தேர்தல் வெற்றிக்காக சமூகத்தை மதரீதியில் பிளவுபடுத்தும் வேலைகளையும் எவ்வாறு திட்டமிட்டு இந்தக் குழு செய்தது என்பதை 2013-ம் ஆண்டில் “கோப்ராபோஸ்ட்” இணையதளம் மேற்கொண்ட இரகசியப் புலனாய்வு (Sting operation) அம்பலப்படுத்தியது.

***

தொகுப்பாகப் பார்த்தால், சமூக வலைத்தள செயல்பாடுகள் அனைத்தும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன; சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் வழி சேகரிக்கப்படும் தரவுகளே மீப்பெரும் மின் தரவுக்கான கச்சாப் பொருளாக உள்ளன; மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக வலைத்தளங்களைத் தவிர, பொருட்களின் இணையம் (IOT) என்று சொல்லப்படும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன.

குறிப்பிட்ட தனிநபர் ஒருவரின் ஆளுமையை சமூக வலைத்தளங்கள் வடிவமைப்பதும், தொடர்ந்து போதைப் பழக்கத்தைப் போன்று அடிமையாக்குவதும் எவ்வாறு நடக்கின்றது என்பதைப் பார்த்தோம். இனி இதன் பின்னுள்ள செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் இயங்கும் விதம் குறித்துப் பார்ப்போம்.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான மின்னூலாக வாங்க

20.00Read more

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

அகதிகளா தலித் மக்கள் ?- புதிய கலாச்சாரம் மின்னூல்

2

“கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும் போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது.” – தற்கொலை என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஹைதராபாத் பல்கலை நிர்வாகத்தால் கொலை செய்யப்பட்ட ரோகித் வெமுலாவின் வார்த்தைகள் இவை.

தலித் மக்கள் மீதான அடக்குமுறை இல்லாத மாநிலமோ வருடமோ இந்தியாவில் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணைப் புரத்திலேயே இன்றும் தலித் மக்களுக்கு தனித் தேநீர்க் குவளைதான். கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம், நத்தம் காலனி இளவரசன், கடைசியாக திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ். கொல்லப்பட்டவர்களுக்கும், கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் முடிவில்லை.

மராட்டியத்தின் “கயர்லாஞ்சி படுகொலை”யில் போட்மாங்கே என்ற தலித்தின் மனைவியையும், மகளையும் வன்புணர்ச்சி செய்து கொன்று, மகன்கள் இருவரையும் கொலை செய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

இராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரிதேவி என்ற ‘கீழ்சாதி’ப் பெண்ணை ஆதிக்கசாதி இந்துக்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.

பா.ஜ.க ஆட்சியில் முசுலீம்கள் மற்றும் தலித்துக்களை கொல்வதற்கு போட்டியே நடக்கிறது. பார்ப்பனியமும், பாராளுமன்றமும் தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை வளர்க்கிறது. நீதிமன்ற – போலிஸ் கூட்டணியோ சாதி வெறியர்களை விடுதலை செய்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.

அகதிகளா தலித் மக்கள் ?

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி
  • தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
  • கோலாரில் சாகக் கோருகிறது ஒரு தலித் குடும்பம்
  • தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை!!
  • கயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்!!
  • கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா?
  • கத்ரா, பாக்னா : சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
  • பொறியியல் கல்லூரி தலித் மாணவிகள்– புள்ளிவிவர மயக்கம் !
  • பதனி டோலா படுகொலை தீர்ப்பு: நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம்!
  • ஊராட்சியில் சேரிக்கு இடமில்லை!
  • சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
  • தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!
  • தீண்டாமை இல்லையென்றால் பரிசு! இருந்தால் தண்டனை இல்லை!!
  • வன்கொடுமைகள்தான் இந்தியாவின் வளர்ச்சி!
  • சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர், பெரியாருக்குத் தடை !

பதினைந்து கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !

0

செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், நிரந்தர வாகன ஓட்டுநர்  பணியை சட்டவிரோதமாக பர்வீன் டிராவல்ஸ் -இடம் ஒப்பந்தமுறைக்கு விட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். இத்னால் இங்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ள ஒரு பணியில் ஒப்பந்தமுறையைக் கொண்டுவரும் போது அதற்கு உரியமுறையில் தொழிலாளர் துறையில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு எந்த உரிமமும் பெறாமல் கல்லூரி நிர்வாகம் ஓட்டுநர் பணிகளில் ஒப்பந்தமுறையை தன்னிச்சையாக அமல்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து அக்கல்லூரியில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தொழிலாளர் நலத்துறையில் புகாரளிக்கப்பட்டு அது சம்பந்தமான தாவா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகமானது தொடர்ந்து தொழிலாளர்களை அவர்களது பணியைச் செய்யவிடாமல் தடுத்துவருகிறது. சட்டவிரோதமான ஒப்பந்த முறையை அமல்படுத்துவதுடன் தொழிலாளிகளை ’செட்டில்மெண்ட்’ வாங்கிக் கொண்டு பணியைவிட்டு விலகுமாறு நிர்பந்தம் கொடுத்துவருகிறது.

அதுமட்டுமில்லாமல் தொழிலாளிகளின் வங்கிக் கணக்கில் ’செட்டில்மெண்ட்’ தொகையை கடந்த 15.09.2017 அன்று செலுத்தியது நிர்வாகம். இதனை சங்கப் பொதுக்குழு கூடி ஏற்க மறுத்ததுடன் தொழிலாளர்கள் அனைவரும் அப்பணத்தை ஏற்க மறுத்து கடிதம் அனுப்பினர்.

இவ்வாறு நிரத்தரத் தொழிலாளிகளின் இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி தொழிலாளிகளிடையே பிளவு ஏற்படுத்தி நேரடிப் பிரச்சினையை ஏற்படுத்த முயன்று வருகிறது. திட்டமிட்டே சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

அதனால் தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த 20.09.2017 அன்று சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றனர். அங்கு இருந்த ஆய்வாளர் திரு.சுந்தர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் திரு.வசந்தராஜா ஆகியோர் உதவி ஆணையர் திரு.ஐயப்பன் அவர்களிடம் புகாரை கொடுக்கச் சொல்லியுள்ளனர். அதனடிப்படையில் புகாரளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான FIR நகலை தராமல் மழுப்பியது காவல்துறை.

அதன் பின்னர் 21.08.2017-ல் பேருந்தை எடுத்து வந்த எமது தொழிலாளர்களிடம் மாணவர்களை கல்லூரிக்குள் இறக்கி விட்டுவிட்டு பேருந்தை வெளியே வேறிடத்தில் கொண்டு போய் நிறுத்த சொன்னது நிர்வாகம். ஏன் என கேட்ட போது, ”இனி பர்வீன் டிராவல்ஸ் தான் பேருந்தை இயக்குவார்கள்” என்றது நிர்வாகம்.

இதன் மீது நடந்த பேச்சுவார்த்தையில் நாங்களே பேருந்தை இயக்குவது என முடிவானது. 22.08.2017 அன்று வழக்கம் போல் கல்லூரிக்குள் பேருந்தை எடுத்து வந்தோம் காலை 11:00 மணிக்கு கல்லூரிக்கு விடுப்பு எனவும் சங்கத்தின் நிர்வாகிகள் எட்டு பேரை வேலை நீக்கம் செய்யப்படுவதாக வாய்வழியாக அறிவித்தது நிர்வாகம். பிறகு அவர்கள் வீட்டிற்கு தபால் மூலம் வேலை நீக்க உத்தரவு அனுப்பபட்டு இருந்தது.

22.08.2017 முதல் 27.08.2017 வரை உங்கள் அனைவருக்கும் விடுமுறை என அறிவித்துவிட்டது நிர்வாகம். பிறகு  28.08.2017 அன்று முதல் உங்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்கிறோம். பர்வீன் டிராவல்ஸ் மூலம் ஒப்பந்தம் செய்து விட்டோம். நீங்கள் செட்டில்மெண்ட் பெற்றுக்கொள்ளுங்கள் என தொழிலாளர்களின் வீடுகளுக்கு கடிதம் அனுப்பியது நிர்வாகம்.

28.08.2017 அன்று பர்வீன் டிராவல்ஸ் மூலம் பேருந்தை இயக்கியது நிர்வாகம். நாங்கள் தான் இயக்குவோம் என பேச்சு வார்த்தை நடத்தி எங்கள்  உரிமையை நிலை நாட்டினோம். மேற்கண்ட அனைத்து வகையிலும் பின்னடைவு கண்ட நிர்வாகம் 21.08.2017 தேதியிட்ட கடிதத்தில் 30 நாட்கள் கால அவகாசம் என 18.08.2017 முதல் 17.09.2017 வரை முன் தேதியிட்டு அறிவிப்பு வெளியிட்டது நிர்வாகம். இதன் மூலம் எமது நிரந்தர பணியை ஒழித்து கட்ட சட்ட விரோதமான வழிமுறைகளை கையாண்டது நிர்வாகம்.

அதன்  தொழிற்சங்க முன்னனியாளர்கள் எட்டு பேர் மீது பொய் புகார் கூறி, 22.08.2017 அன்று நள்ளிரவு 11:30 மணிக்கு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்தது கல்லூரி நிர்வாகம்.

20.08.2017-ல் புகார் செய்த எமது சங்கத்தின் புகாருக்குக்கான நகலை வழங்காமல் மழுப்பிய போலிசு அதிகாரிகள் ஏ.சி. திரு.ஐயப்பன், இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் திரு.வசந்தராஜன் ஆகியோர் 22.08.2017 அன்று நள்ளிரவில் புகார் செய்த நிர்வாகத்திற்கு அப்போதே அதற்கான நகலை வழங்கி தமது காவல் துறை ‘மாண்பை’ காட்டியுள்ளனர்.

தொழிலாளிகளை மிரட்டும் அடியாட்களாக செயல்படும் போலீசு

இந்நிலையில் மீண்டும் கடந்த 22.09.2017 அன்று மாலை கல்லூரி வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்வதற்கு முன்பாக போலீசார் உளவுபிரிவு போலீசார் திரு.பாபு தலைமையில் வந்தனர். அவருடன் சில சீருடை அணியாத போலீஸ்காரர்கள் எனப்படுபவர்கள் வந்தார்கள். பிறகு  திரு.ஐயப்பன் அவர்களின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசு தடியுடன் வேனில் வந்து இறங்கியது.

பிறகு செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மேலும் சில காவலர்கள் வந்தனர். போராட்டகாரர்களை கைதுசெய்ய பயன்படுத்தபடும் வண்டி வந்தது ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தை பெரும் கலவரம் நடக்கப்போகும் இடமாக மாற்றினர் ‘கண்ணியமிகு’ காவல் துறையினர்.

20.09.2017-ல் நடந்த பேச்சு வார்த்தையில் 25.09.2017 அன்று காலை 11:30 தொடங்கபடும் எனவும், நிர்வாக தரப்பில் மேற்படி நிர்வாகத்தில் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நிர்வாக அதிகாரியை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும்படி தொழிலாளர் நல உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தொழிலாளர் தரப்பில் இருந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், இப்பிரச்சினைகள் குறித்து போலீசாரிடம் உரிய முறையில் புகாரளித்துள்ளது தொழிற்சங்கம்.

இவ்வாறு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர் ஆணையத்தில் புகாரளித்து அதற்கான தாவா நடந்து வருகிறது.

ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவாக போலீசு நடந்துவருகிறது. அதனடிப்படையில் தான் கவசவாகனங்கள், குண்டாந்தடிகள், போலீசு பட்டாளம் என தொழிலாளிகளை மிரட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் திட்டமிட்டே சட்ட-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது அதனை சாக்காக வைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை கைது செய்து அவர்களின் போராட்டங்களை முடக்குவது என நடந்து கொள்கிறது போலீசு.

கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து சட்டவிரோதமாகவே செயல்பட்டு வருகிறது.

  • நிர்வாகம் இந்திய அரசின் தொழில் தகராறுகள் சட்டத்தை எதையும் மதிக்காமல் சட்ட விரோதமாக செயல்படுகிறது
  • நிரந்திர தொழிலாளர்களின் இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்தி நேருக்கு நேராக அவர்களை மோதவிடும் வகையில்  சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முற்படுகிறது.

ஒரு நிர்வாகம் ஒரு தொழில் ஒப்பந்த முறையை செயல்படுத்த வேண்டுமானால் அது சம்மந்தமான உத்தரவை தமிழ்நாடு அரசு தொழிலாளர் அதிகாரியுடன் மனு செய்து உரிய உரிமம் பெறாமல் ஒப்பந்தப் பணி நிர்வாக முறைக்கு பயன்படுத்த முடியாது.

அப்படி ஒரு உரிமத்தைப் பெறாமலே பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்திடம் ஒப்பந்தம் விட்டு நிரந்திர தொழிலாளர்களை ஒழித்து கட்டும் நிர்வாகத்தின் சட்ட விரோத செயலுக்கு துணை நிற்கும் போலீசு அதிகாரிகள் திரு.ஐயப்பன், இன்ஸ்பெக்டர் திரு.சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா மற்றும்  உளவுபிரிவு இன்ஸ்பெக்டர் திரு.பாபு ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், மேலும் தொழிற்தகராறு சட்டம் 1947 –ன் கீழ் கூறப்பட்டுள்ள சட்டபடியான தொழிலாளர் உரிமைகளை உத்தரவாதப்படுத்த ஆவண செய்யும் படி கோரியும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் – வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகரகாவல் ஆணையர், தொழிலாளர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் அக்கல்லூரியில் 16 ஆண்டுகளாக பணிபுரிபவரும் திரு.பச்சைமுத்து என்பவரது மகன் பரத் அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு M.E. படித்துவருகிறார்.

மாணவர் பரத்

அவரது தந்தை  திரு.பச்சைமுத்து தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அவரை வேலையைவிட்டு விலகும்படி கல்லூரியின் நிர்வாகி திரு அபிலாஷ் மற்றும் திருமதி ரெஜினா ஆகியோர் மிரட்டியுளனர். மேலும் அவரது மகன் பரத் -தை கடந்த 26.09.2017 அன்று நடந்த தேர்வை எழுதவிடாமல் தடுத்துள்ளனர்.

இதனை அறிந்த தொழிலாளர்கள் அனவரும் திரு.பச்சைமுத்து -உடன் நேரடியாக அண்ணா பல்கலைக் கழகத்துக்குச் சென்று புகாரளித்தனர். இதனடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமானது மாணவரைத் தேர்வு எழுத அனுமதியளித்து எழுத்துபூர்வமாக உத்திரவளித்தது.

ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ஜேப்பியாருக்கே உரிய ரவுடிபாணியில் மிரட்டுகிறது நிர்வாகம். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி உறுதியாகப் போராடி வருகின்றனர் தொழிலாளிகள்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94871 51165.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கொலைகார கோலாக்கள் ! – புதிய கலாச்சாரம் மின்னூல்

0

நீரின்றி அமையாது உலகு” என்பது குறள். உயிரின் ஆதாரமான நீரை லாபத்தின் ஊற்றாக கருதுகிறது உலக முதலாளித்துவம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மண் தனியார்மயமாகிவிட்டது. இது மழை தனியார்மயமாகி வரும் காலம்.

தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகம் மறுப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் விளைவாக தஞ்சை பாலைவனமாகி வருவதும் தெரியும். தஞ்சை மட்டுமல்ல, தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. கிருஷ்ணா நீருக்காக ஆந்திரத்திடம் கெஞ்சுகிறது தமிழக அரசு. கடல் நீரைக் குடிநீராக்குகிறது. குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை குடிநீராக்குகிறது. அடுத்து சாக்கடைத் தண்ணீரைக் குடிநீராக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய நிலையில் தவிக்கிறது தமிழகம்.

இப்படிப்பட்ட சூழலிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்க அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழகத்தின் இளைஞர் சமூகமும், வணிகர் சமூகமும் கோக் பெப்சிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்றன. இந்த சூழலில் மோடியை சென்று சந்திக்கிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவர். கோக் பெப்சி நிறுவனத்து தண்ணீரை உறிஞ்சி விற்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

தண்ணீரைப் பண்டமாக்கி விற்பவர்கள் மனித குலத்தின் எதிரிகள், கொடிய பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவைதான் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றமும் என்ற உண்மையை, காலிக் குடங்களுடன் சாலைகளை மறிக்கும் பெண்களுக்குச் சொல்லுங்கள்.

20.00Read more

கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் !

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தண்ணீர் தனியார்மயம் : பேரழிவின் தொடக்கம் !
  • அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர் !
  • உலக வங்கி – சர்வதேச நாணயநிதியம் : பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் !
  • ராஜஸ்தான் : கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
  • குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில் ! – சாய்நாத்
  • பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
  • கோக் எதிர்ப்பு : பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி !
  • மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
  • காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
  • கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
  • நெல்லையைக் குலுக்கிய கோக் எதிர்ப்புப் போராட்டம்
  • கோக் – பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?

பன்னிரெண்டு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஓசூர் : “விவசாயியை வாழவிடு !” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

0

க்கள் அதிகாரத்தின் சார்பில் கடந்த ஆகஸ்ட் 5, 2017 அன்று தஞ்சையில் நடத்தப்பட்ட “விவசாயியை வாழவிடு !” மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் 24.09.2017 அன்று மாலை 4:00 மணியளவில் ஓசூரில் உள்ள பாகலூர் சர்க்கிள் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சூடாபுரம் கேபிள் ஆபரேட்டர் திரு முருகேசன், சேவகானப்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திரு கோவிந்தராஜ், பாகலூரை சேர்ந்த விவசாயி திரு. செயராமன், பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ரவிச்சந்திரன், மக்கள் அதிகாரத்தின் தர்மபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், பு.ஜ.தொ.மு -வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ சிறப்புரையாற்றினார். இறுதியாக, பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர் ராமசாமி நன்றியுரையாற்றினார்.

தோழர் நாகராஜ் தனது தலைமை உரையில், தஞ்சை மாநாட்டிற்கு அரசு கொடுத்த பல்வேறு தடைகளையும் அவைகளை கடந்து மாநாடு நடத்தப்பட்ட அனுபவங்களையும் விளக்கி பேசினார்.

அதன் பின் பேசிய சூடாபுரம் கேபிள் ஆபரேட்டர் திரு முருகேசன் தனது உரையில் இங்கு இயங்கிவரும் ஆலைகளின் கழிவுகள் மற்றும் பெங்களூரின் கழிவுகள் தென்பெண்ணையாற்றில் கலக்கப்படுகிறது. அதனால் ஆறு அதன் தன்மை இழந்து நிலத்தடி நீர் மாசடைந்து குடிக்க இலாயக்கற்றதாகியுள்ளது. மேலும், ஏற்கனவே, செய்துவரும் அரைகுறை விவசாயம் கூட தொடர்ந்து செய்யமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்ற யதார்த்த நிலையை அம்பலப்படுத்திப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ரவிச்சந்திரன் தனது உரையில், இன்றைக்கு விவசாயத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகளை  பயன்படுத்துவதால் மண்ணே மலடாக்கப்படுகிறது. மேலும், விதைகளை எடுத்து விவசாயி அதனை  பாதுகாத்தால் அவனை குற்றவாளியாக சித்தரிக்கிறது இந்த அரசு என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

விவசாயிகள் தாங்களே ஒரே வழியை தேடிக் கண்டு, விவசாயம் செய்தபோதும், விளைபொருளுக்குரிய விலை கிடைக்காமல் போண்டியாகி கடனாளியாக்கப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலையை விளக்கிப் பேசினார்.

ஓய்வுபெற்ற தலைமையாசிரியரும் விவசாயியுமான திரு கோவிந்தராஜ், அவரது உரையை அவரின் தாய் மொழியான தெலுங்கில்; விவசாயிகளுக்கே உரிய பாணியில் ஒரு கதையை சொல்லி தொடங்கினார். “ஒரு பள்ளியில் அன்றாடம் வேப்பம் எண்ணையில் மதிய உணவு சமைத்துப் போட்டார்கள். அந்த உணவு கசப்பாக இருந்தாலும் மாணவர்கள் அதனை தட்டிக்கேட்காமல் சகித்துக்கொண்டு சாப்பிட்டு வந்தார்கள்.

சிறிது காலம் சென்றபின்பு கசப்பான அந்த உணவை தொடர்ந்து சாப்பிட முடியாததால் எதிர்த்து குரலெழுப்பினர்.  அதன் பின்னர் நல்ல எண்ணெயில் சமைத்துப் போட்டார்கள். இதுபோல கசப்பான பல சம்பவங்கள் இந்த சமுதாயத்தில் நடக்கிறது. இதனை அகற்றவேண்டுமெனில் நாம் போராடவேண்டும். நான் விவசாயி என்பதால் விவசாயத்தால் நான் மட்டும் பயன் அடைவதில்லை, மனித இனங்களோடு சேர்த்து மற்ற உயிரினங்களும் பயனடைகின்றன.

சின்ன வயதிலிருந்து எதை சாப்பிட்டாலும் அனைவருக்கும் பகிர்ந்து தான் சாப்பிடுவேன் என் அம்மா சின்ன வயதில் சொல்லிக்கொடுத்தது. அதுபோல விவசாயத்தின் பயன்களை நான் மட்டும் அனுபவிக்காமல் எல்லா மக்களுக்கும் கொடுக்கிறேன். இந்த சமுதாயத்தில் விவசாயம் என்பதை அழிக்க பார்க்கிறார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை” என விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து திரு ஜெயராமன் தனது உரையில்; “விவசாயிகள் இல்லையென்றால் சாப்பாடு இல்லை. கடன், மானியம், விதை உரம் எதையும் அரசு கொடுப்பதில்லை. விளைந்த பொருட்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது அரசுதான், அவர்களை பாதுகாக்கத் தவறுகிறது. இந்நிலையில் தான் நாம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கிப் பேசினார்.

அதன் பின்னர் பேசிய தோழர் முத்துக்குமார் தனது உரையில், நீட் தேர்வைக்கொண்டு வந்து அனிதாவை படுகொலை செய்த இந்த அரசுதான் விவசாயிகளையும் வாழவிடாமல் அவர்களின் வாழ்வைப் பறித்து தற்கொலைக்குத் தள்ளி கொன்றுகுவித்து வருகிறது என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்திப் பேசினார்.

தோழர் பரசுராமன் தனது உரையில் இந்த அரசுக்கட்டமைப்பு தொழிலாளர்கள், தற்போது போராடிவரும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும், அவர்கள் ஏற்கனவே போராடி பெற்ற உரிமைகளையும் பறித்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கி வருகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்லி தொழிலாளர்களின் பொது எதிரியாக இருக்கக்கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகதான் விவசாயத்தை அழித்துவருகிறது இந்த அரசு என்பதை விளக்கிப் பேசினார்.

பொதுக்கூட்டத்தின் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தனது சிறப்புரையில், விவசாயிகளின் உழைப்பு என்பது அளவிட முடியாதது. அதனை இந்த அரசு அங்கீகரித்திருந்தால் விவசாயிகளின் தற்கொலை இங்கே நடந்திருக்க முடியாது. ஆனால் நமது அரசு அவ்வாறில்லை. தமிழகத்தில் விவசாயிகள் 400 பேர் இறந்த செய்தியை நாம் ஊடகங்களில் பார்த்திருப்போம். ஆனால் அரசால் பதிவுசெய்யப்பட்டது வெறும் 17 பேர்தான். இந்த அரசின் யோக்கியதையே இதுதான்.

விவசாயத்துறையை சேர்ந்த அமைச்சர் அதிகாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகளின் தற்கொலையை காதல் தோல்வியால் இறந்தான், குடும்பப் பிரச்சினையால் இறந்தான் என்று சொல்லி அவர்களது இறப்பையும் அவமானப்படுத்துகின்றனர்.

தொழிலாளர்களுக்கு கூட அவர்களை பாதுகாக்க பெயரளவிலான தொழிற்சங்க சட்டங்கள் இருக்கிறது. இதை இந்த அரசே அமுல்படுத்தவில்லை என்பது வேறு விவகாரம். ஆனால் அந்தளவுக்கு பெயரளவிலான சட்டப்புத்தகங்களில்கூட விவசாயிகளுக்கு பாதுகாப்பில்லை. இந்த விவசாயிகளை விவசாயத்தையே செய்யாமல் விவசாயத்தை விட்டே விரட்டியடித்து அவர்களை கார்ப்பரேட்டுகளின் நேரடி கொத்தடிமைகளாக்குவதை கொள்கையாக கொண்டிருக்கிறது இந்த அரசு என்பதை பல்வேறு விவரங்களுடன் தொகுத்து அம்பலப்படுத்திப் பேசினார்.

இறுதியாக, விவசாயிகள் மட்டுமின்றி, தொழிலாளர்கள், சிறுமுதலாளிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினர்களும் இந்த அரசுக்கட்டமைப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆளத்தகுதியற்ற இந்த அரசுக்கட்டமைப்பை வீழ்த்தி மக்கள் அதிகாரம் படைப்பது ஒன்றே இவை அனைத்திற்கும் தீர்வாக முடியும் என்று சொல்லி. அத்தகையதொரு போராட்டத்திற்கு அணியமாவோம், மக்கள் அதிகாரம் படைப்போம் என்ற வகையில் அறைகூவி பேசினார்.

கூட்டத்தின் இறுதியாக, பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் இராமசாமி நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தை இறுதிவரை கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை ! – மின்னூல்

27

காந்தியை பற்றி பாடப்புத்தகங்களிலும் பொதுவிலும் ஆளும்வர்க்க அடிபொடிகளால் சொல்லப்படும் கருத்துக்கள் தான் பொதுவெளியிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. காந்தி உண்ணாவிரதமிருந்தார், ராட்டை சுற்றினார் என்று மாணவர்களுக்கு, அஹிம்சை போதித்தார், சத்யாகிரகம் செய்தார், உண்ணாவிரதம் இருந்தார் என்றெல்லாம் வகுப்பெடுக்கப்படுகின்றது.

உண்ணாவிரதமிருந்தார் தான் ஆனால் யாருடைய நலனுக்காக? காந்தி போராடினாரா? போராட்டத்தை காட்டிக்கொடுத்தாரா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்காக அம்பேத்கரை எதிர்த்து ஏன் உண்ணாவிரதமிருந்தார்? சாதி பற்றிய காந்தியின் கருத்து என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியம்.

காந்தி பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பம் உண்மையானதா? என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் தலைவர்களின் எழுத்திலும் பேச்சிலும் பார்க்கலாம். குறிப்பாக பார்ப்பன இந்துமதத்தின் சாதிமுறைக்கு எதிராக இறுதிவரை போராடிய பெரியார், அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்து தெரிந்து கொள்வதற்கு ஏராளமிருக்கின்றன.

காந்தி யாருக்கான தலைவர்?

பிரிட்டிஷாரை எதிர்த்த காந்தியின் போராட்ட நோக்கத்தை அம்பலப்படுத்துகிறார் பெரியார். ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் போராட்டத்தை கட்டியமைத்தவர் தான் காந்தி. பொதுவுடைமை கொள்கை செல்வாக்கு பெறாமல் இருப்பதற்காக காந்தியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டிய தேவை ஆங்கில அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும், ஜமீன்தார்களுக்கும், பார்ப்பன ஆதிக்க சாதிகளுக்கும் இருந்தது. அந்த புரவலர்களின் உதவியால் காந்தி மக்களை கட்டி போட்டதையும் முக்கியமாக அவரே இதை ஒப்புக்கொண்டதையும் அம்பலப்படுத்துகிறார் பெரியார்.

 

மகாத்மா காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
  • ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
  • வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
  • அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

நான்கு கட்டுரைகள் – 96 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி