முதல் வினாடி வினாவில் பங்கேற்ற, பங்கேற்கும், பங்கேற்க இருக்கும் நண்பர்களுக்கு நன்றி! அதில் 11 பேர் ஐந்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருக்கிறார்கள். 21 பேர் நான்கு கேள்விகளுக்கும், 74 பேர் மூன்று கேள்விகளுக்கும், 76 பேர் இரண்டு கேள்விகளுக்கும், மீதிப் பேர் ஒரு கேள்விக்கும் சரியான பதிலை அளித்திருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் மற்றவர்களும் பங்கேற்பார்கள் என்பதால் இந்தப் பட்டியல் முழுமையானது அல்ல.
இன்றைக்கு தமிழக நிர்வாக விவரங்கள் குறித்து பார்க்க இருக்கிறோம். நாம் தமிழ் நாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் முழு தமிழக விவரங்கள் – மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், மக்கள் தொகை, படிப்பறிவு இதர விவரங்கள் தெரியாது. தேர்ந்த பத்திரிகையாளர்களுக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கட்சி சார்பாக பேசும் தொழில் முறை பேச்சாளர்களுக்கும், அரசு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் இந்த விவரங்கள் தெரிந்தவைதான்.
மற்றவர்களுக்கு இந்த விவரங்கள் தெரியாமல் போனதன் காரணத்தை விட அதனால் ஏற்படும் விளைவுகள்தான் முக்கியம். ஒரு குறிப்பிட்ட அரசியல், பொருளாதார, பண்பாடு குறித்த செய்தியை முழுமையாக உள்வாங்கி சிந்தித்துப் பார்ப்பதற்கு இந்த விவரங்கள் அவசியம். அத்தகைய நோக்கத்தோடு இன்றைய கேள்விகளுக்கு விடையளியுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் – சிறார்களையும் உள்ளிட்டு – ஈடுபடுத்துங்கள்.
இவற்றை வெறுமனே வினாடி வினா என்பதைத் தாண்டி இந்த விவரங்களை மனதில் கொள்ள முயலுங்கள். தமிழகம் குறித்த செய்திகளைப் படிக்கும் போது இந்த அடிப்படை விவரங்களை நினைவு கூர்வதன் மூலம் நமது சிந்தனை நூலகத்தில் இவை அழுத்தமாக பதியும். நன்றி !
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பெரும் அழிவை உருவாக்கி வருகிறது. ஆனால் டெங்கு நோயை கட்டுப்படுத்த அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் 40,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 1,634 பூச்சியியல் வல்லுனர்கள் குழு களத்தில் இருப்பதாகவும் ஊடகங்களில் பேசுகிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜபாஸ்கர்.
மேலும் புதிய கொசு ஒழிப்பு உபகரணங்கள், மருந்துகள், விழிப்புணர்வுக்காக ரூ.13 கோடியே 95 லட்சம் சிறப்பு நிதி ஒதுக்கியதாகவும் கூறுகிறார். இருப்பினும் கொசுவும் ஒழிந்தபாடில்லை, மக்களின் மரணங்களும் தடுத்து நிறுத்தப்படவில்லை. ஏனிந்த நிலை? ஏன் கொசுக்களை ஒழிக்க முடியவில்லை?
“டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் சிக்குன் குனியா போன்றவற்றை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தரமான கொசு அழிப்பு மருந்துகளை பயன்படுத்த கடந்த காலங்களில் சீன தயாரிப்பான அபேட் (கெமிஃபாஸ்ட்) பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் விலை ஒரு லிட்டர் ரூ.1,200. இந்நிலையில் சீன தயாரிப்பு நிறுவன கெமிஃபாஸ்ட் விலை அதிகமாக இருந்ததால், அதே மருந்தை தயாரித்த ஒரு உள்நாட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லிட்டர் ரூ.500க்கு வாங்கி, கொசு ஒழிக்க தெளிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.”
இந்த செய்தியை படித்ததும் சம்பந்தப்பட்ட தொழிலாளிகளையும், ஊழியர்களையும் சந்தித்தோம்.
சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையில் 18 ஆண்டுகள் பணியாற்றி வரும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுசெயலர் சீனிவாசலு அவர்களிடம் பேசினோம்.
தமிழகம் முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் சுகாதாரப்பணி எப்படி உள்ளது?
சென்னை மாநகரட்சியில் ஒப்பந்த முறை புகுத்தப்பட்ட பிறகு மக்கள் நலன் என்பது எல்லாம் கைவிடப்பட்டு விட்டது. கடந்த 2004-ல் திமுக ஆட்சியின் போது ஓனிக்ஸ் என்ற சிங்கப்பூர் ஒப்பந்த நிறுவனத்திடம் பழைய மண்டலமாக இருந்த 6-ஐஸ்ஹவுஸ், 8-நுங்கம்பாக்கம், 10-கோடம்பாக்கம் மற்றும் அடையாரை துப்புரவு பணிக்காக ஒப்படைத்தனர். பிறகு 06.08.2010 அன்று நீல் மெட்டல் என்ற நிறுவனத்திடம் மண்டலம்-3 புளியந்தோப்பை ஒப்படைத்தனர்.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு புதிய மண்டலாமாக விரிவடைந்த மாநகராட்சியில் இணைக்கப்பட்ட மணலி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி ஆகியவற்றை இணைத்தார்கள். அதில் மண்டலம் 9,10,13 ஆகியவற்றை ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.
திரு சினிவாசலு
மேலும் மாநகராட்சி துப்புரவு பிரிவை NMR, சொர்ண ஜெயந்தி, சுய உதவிக்குழு, NULM (National Urban Livelihood Mission), ஒப்பந்த தொழிலாளி என்று ஐந்தாக பிரித்தார்கள். இந்த தொழிலாளிகள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளிகள் தான். அதில் அதிகபட்சமாக NMR ல் தான் 908 பேர் இருக்கிறார்கள். மாநகராட்சியில்அதிகாரிகள் உட்பட நிரந்தர தொழிலாளிகளாக வெறும் 9,800 பேர் உள்ளனர். இது போக ராம்கி நிறுவன தொழிலாளிகள் 4,400 பேர் உள்ளனர். இவர்களை கொண்டு தான் சென்னை முழுவதும் துப்புரவு பணி நடந்து வருகிறது. அதன் இலட்சணத்தை சென்னை முழுவதும் காண முடியும்.
1978 மாநகராட்சி துப்புரவு பணிகள் விதியின்படி 500 மீட்டருக்கு ஒரு ஆள் பெருக்க வேண்டும், 250 வீட்டின் குப்பைகளை ஒரு ஆள் அகற்ற வேண்டும் என்பது தான். இதற்கான பணி உபகரணங்கள், பாதுகாப்பு சம்மந்தப்பட்ட கவசங்கள் அனைத்தும் பொது பண்டக சாலை மூலம் மாநகராட்சி வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதனை இழுத்து மூடி விட்டார்கள்.
2013 -ல் மாநகராட்சியை மூன்றாக பிரித்தார்கள், அதாவது 1-5 மண்டலம் வடசென்னை என்றும், 6-10 வரை மத்திய சென்னை, 11-15 தென்சென்னை என்றும் பிரித்தார்கள். அப்பொழுது ஒவ்வொரு யூனிட்டிற்கும் துடைப்பம் வாங்குவதற்காக ஐந்து லட்சம் ஒதுக்கினார்கள். ஒரு யூனிட் என்பது ஐந்து வார்டுகளை உள்ளடக்கியது. பதினைந்து மண்டலத்தில் மொத்தம் 45 யூனிட்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலான இடத்தில் தொழிலாளர்களே வாங்கிக்கொள்கிறார்கள். அதாவது குப்பை காகிதங்கள், காலி பாட்டில்களை சேகரித்துக் கடையில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.
குப்பைகளை வாரி செல்லும் ஒரு வண்டிக்கு (tricycle) ஆண்டு பராமரிப்பு செலவு ரூ.1860 ஒதுக்குகிறார்கள். ஆனால் எந்த வண்டியையும் பராமரிப்பதில்லை. பிறகு எப்படி குப்பையை எடுக்க முடியும். தலையிலா சுமக்க முடியும்? இது ஒரு சாம்பிள் தான். இந்த நிலையில் தான் சென்னை மாநகராட்சியில் இப்பொழுது துப்புரவு நடைபெற்றுவருகிறது.
மலேரியா ஒழிப்புத் துறையின் தற்போதைய நிலை என்ன? கொசுவை ஒழிக்க என்ன நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்?
கொசுக்கள் ஒழிப்பை பொறுத்த வரையில் சுகாதாரத்துறை தான் மேற்கொண்டுவருகிறது. அதற்கென்று மலேரியா ஒழிப்பு துறை உள்ளது. இதில் ஒப்பந்த தொழிலாளியாக 1,800 பெரும் , நிரந்தர தொழிலாளியாக வெறும் சுமார் 900 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பாதி பேர் வயதானவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள், ஆளும்கட்சி, அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள் என்று வேலை செய்யாமல் இருப்பவர்கள். இவர்களை எல்லாம் கழித்து விட்டு பார்த்தால் முழுமையாக இப்பணியில் ஈடுபடுபவர்கள் 50 சதவீதம் கூட இல்லை.
மாநகரட்சி ஊழியர்கள் மாதிரிப்படம்
ஒப்பந்த தொழிலாளிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. வெறும் 240 ரூபாய் கூலி. அடிமாடாக பிழியப்படுகிறார்கள். இத்துறையில் பணியின் போதே இறந்து போனவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் இவர்களுக்கு மாற்றாக புதிய ஆட்களை எடுப்பதே இல்லை.
கொசு ஒழிப்பு முறையில் முதலில் லார்வாக்களை ஒழிப்பதற்கு அபேட் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஐந்து லிட்டர் தண்ணீரில் 5ML கலந்து அடிக்க வேண்டும். ஒரு ஆள் என்பது வீடுகளுக்கு தினந்தோறும் அடிக்க வேண்டும். வாரத்திற்கு 560 வீடுகளுக்கு அடிக்க வேண்டும். ஒரு வட்டத்திற்கு 150 முதல் 200 தெருக்கள் வரை உள்ளது.
ஒரு வட்டத்திற்கு குறைந்தது இப்பணியில் 20 பேராவது ஈடுபட வேண்டும். ஆனால் 3,4 பேர் மட்டுமே ஒரு வட்டத்தில் உள்ள எல்லாருடைய வீட்டிற்கும் அடிப்பதால் முதலில் அடித்த வீட்டிற்கு திரும்ப வருவதற்கு ஒன்றரை மாதம் ஆகி விடுகிறது. பிறகு எப்படி கொசுவை ஒழிக்க முடியும்? ஒரு யூனிட்டிற்கே வெறும் 10 பேர் தான் இருக்கிறார்கள்.
அதேபோல பறக்கும் நிலையில் உள்ள கொசுக்களை ஒழிப்பதற்கு பேட்டக்ஸ் மற்றும் பயோடக்ஸ் என்ற மருந்தை எட்டு லிட்டர் தண்ணீரில் 100ml கலந்து அடிக்க வேண்டும். அப்பொழுது தான் கொசு சாகும். ஆனால் மேற்கண்ட இந்த மருந்துகளை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.
தற்போது தரம் குறைந்த மருந்தான “விக்டோபேக்” மாதத்திற்கு இரண்டு முறை அடிக்கிறார்கள். 80 ml மருந்தை எட்டு லிட்டர் தண்ணியில் கலந்து அடிக்க வேண்டும். இது தரமான மருந்தே இல்லை. கொசு ஒழிப்பிற்கு தகுதியற்றவை.
மேலும், வேன் பாக் எனப்படும் புகைபரப்பியை கொண்டு கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் கொசுவை ஒழிக்கவே முடியாது. ஐந்து லிட்டர் டீசலுடன் 100 ml மெத்தலைன் கலந்து அடிக்கிறார்கள். இது கொசுவை மயக்கமடைய செய்யுமே தவிர ஒழிக்காது. இதனை எல்லாம் சாதாரண மக்கள் புழங்கக் கூடிய இடத்தில் தான் அடிக்கிறார்கள்.
ஆனால், ராஜ்பவன், அதிகாரிகள், அமைச்சர்கள் வீடுகள், உயர் மேட்டுக்குடி பகுதிகளான அண்ணாநகர், பெசன்ட் நகர், அடையாறு போன்ற இடத்தில் “பேகான்” என்கிற உயர் கொசு ஒழிப்பு மருந்தை பயன்படுத்துகிறார்கள். இருப்பதிலேயே இது தான் தரமான மருந்து. இங்கு “VIP டீம்” என்று போட்டு வேலை செய்கிறார்கள். இந்த பேகான் மருந்தை 1998ல் மாநகராட்சியில் இருந்து குறைந்த விலைக்கு சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதாக “அடிப்படை சுகாதார அலுவலர்” ஒருவர் மீது வழக்கும் பதியப்பட்டது. அந்த அளவிற்கு தரமான மருந்து. இந்த மருந்தை தமிழகம் முழுவதும் பயன்படுத்தினால் கொசுக்களை ஒழிக்க முடியும். ஆனால் நிதிப்பற்றாக்குறை என்று கூறி நிறுத்தி விட்டார்கள்.
குறைந்தபட்சம் மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பார்கள். இந்த வருடம் அப்படி மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டதா?
கொசு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மே-ஜூன்-ஜூலை ஆகிய மாதத்தில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆரம்பிக்க வில்லை. ஏனென்றால் மழை இல்லை. எல்லா இடங்களும் வறட்சியாக உள்ளது. கொசு தொல்லை இருக்காது என்றார்கள். முக்கியமாக “ஸ்லம்” ஏரியாவில் எல்லா வீட்டிற்கும் கொசு வலை, நொச்சி கன்றுகள் கொடுத்து விட்டோம். இனிமேல் கொசுப்பிரச்சினை இருக்காது என்று கூறினார்கள். அதனால் இத்துறையில் பணியாற்றிய பாதிபேரை வேலையிலிருந்தே நிறுத்தி விட்டார்கள்.
முன்பெல்லாம் கொசு உற்பத்தியாகும் இடமான கூவத்தை சுத்தப்படுத்துவார்கள். இப்பொழுது அந்த பணியில் சென்னை முழுவதும் பத்து பேர் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மழை நீர் வடிகால் என்பது மழை நீர் செல்வதற்கு மட்டும் தான். ஆனால் திருட்டு கனெக்சன் மூலம் தண்ணீர் எப்பொழுதும் மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. இது அதிகாரிகளுக்கும் தெரியும். இதனை பராமரிக்க ஐந்து பேர் தான் இருக்கிறார்கள்.
மேலும், கொசு உற்பத்தியை தடுக்க MLO என்ற ஆயிலை கோணியில் ஊற்றி கூவம் ஆற்றில் போடுவார்கள். இப்பொழுது அதனை செய்வதற்கு கூட ஆட்கள் இல்லை. அந்தளவிற்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.
மாதிரிப்படம்
சென்னையில் பல இடங்களில் கொசு மருந்து ஊற்றுவதற்கு மக்கள் அனுமதிப்பதில்லை. காரணம் நீர் பற்றாக்குறை தான். தண்ணீரை சேமிக்கும் போது அதில் மருந்தை ஊற்றினால் பயன்படுத்த முடியாது என்று தடுத்து விடுகிறார்கள். அதற்குரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வில்லை.
மொத்தத்தில் கொசு ஒழிப்பை பொறுத்த வரை பணி உபகரணம் இல்லை, தரமான மருந்து கொள்முதல் இல்லை, ஆட்கள் கடுமையான பற்றாக்குறை, வேன்பாக் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. சரியான பராமரிப்பும் இல்லை. ஆய்வாளர்கள் சோதனைக்கே வருவது இல்லை. மொத்த நகராட்சியுமே முடங்கி விட்டது.
சென்னையிலேயே சொற்ப நபர்கள் தான் இப்பணியில் ஈடுபடுகிறார்கள் என்றால் மற்ற மாவட்டங்களை நினைத்துப் பாருங்கள்?
மிக முக்கியமாக தனியார் மருத்துவமனைகள் காய்ச்சல் என்று வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் டெங்கு என்று பதிவு செய்யக்கூடாது என்று மாநகராட்சி சார்பாக மிரட்டி வருகிறார்கள். இப்படிபட்ட மோசடி தான் நடக்கிறது.
டெங்கு கொசு ஒழிப்பை பொறுத்த வரை இது தான் நிலைமை. அரசு கூறுவதுபோல் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டெங்கு பிரச்சினை தீவிரமாக முற்றிய நிலையில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்கிறது.
இடதுசாரி சிந்தனை கொண்ட உங்கள் சங்கம் தொடர்ந்து பொருளாதார கோரிக்கைக்காக பல போராட்டங்களை மாநகராட்சிக்கு எதிராக நடத்தியுள்ளீர்கள். ஆனால் இந்த ஊழல் பிரச்சனை குறித்து ஏதேனும் போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா?
நாங்கள் வெளிப்படையாக இந்த பிரச்சனைக்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. ஆனால் தரமற்ற மருந்து வாங்ககூடாது என்று எங்கள் சங்கம் சார்பாக கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளோம். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை அழைத்து தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை போக்க நேரம் காலம் பார்க்காமல் வேலையை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து சுகாதாரப்பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.
வினவ குறிப்பு: நண்பர்களே மக்கள் உயிருடன் அரசு விளையாடுகிறது என்பதற்கு இந்த நேர்காணலே சான்று. கொசு ஒழிப்பு வேலை செய்ய தொழிலாளிகள் இல்லை, மருந்தில் தரமில்லை, தரமான மருந்தை மேட்டுக்குடி ஏரியாவிலும், தரமற்றதை நமது பகுதியிலும் தெளிக்கிறார்கள், துடைப்பம் வாங்க பணமில்லை, வண்டியைப் பராமரிப்பதில்லை, மழைக்காலத்திற்கு முன்பேயே பணியைத் துவங்கவில்லை, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு என்று பதிவு செய்யக் கூடாது…………..
இப்போது சொல்லுங்கள்! மக்கள் மரணிப்பது டெங்குவிலா? அதிமுக ஊழல் அரசின் திமிராலா?
நேர்காணல் : வினவு செய்தியாளர்
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
அந்த ஆண்டவனே
தேடி நிற்கும்
சுயமரியாதைச் சுடர் ஏற்ற
அனைத்துச் சாதியினருக்கும்
கருவறையைத் திறப்போம்!
– துரை. சண்முகம்
_____________
இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
சினிமா கிசுகிசு செய்திகள் இல்லையென்றால் தமிழகத்தில் பல பத்திரிகைகள் மூடப்பட்டிருக்கும். சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு கிசுகிசுக்கள் எப்போதாவதுதான் பேசு பொருளாக மாறுகின்றன. மற்றபடி சினிமா விமர்சனங்கள், சினிமா உலகின் சங்கப் பிரச்சினைகள் இப்போது கடைசியாக கட்டண உயர்வு போன்ற செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன.
இணையத்தின் காலத்தில் டொரன்ட் தரவிறக்கம் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு சினிமா தொழில் சுருங்கி விட்டதாக சினிமா துறையினர் புலம்புகின்றனர். மறுபுறம் மக்களோ மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங், பாப்கார்ன், அதிக விலை கட்டணம் என குடும்பமாக படம் பாரக்க முடியாத அளவு கட்டணங்கள் அதிகம் என்று புகார் செய்கின்றனர்.
குறுகிய காலத்திலேயே ஒரு லாட்டரி பரிசு போல பணம் பார்த்த சில பல நட்சத்திரங்கள், நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் இப்போது போட்ட பணத்தை விட பல மடங்கு எடுப்பதற்கு சிரமப்படுகின்றனர். இருப்பினும் ஒரு படம் ஓடாவிட்டாலும் மூன்று நாள் திரையரங்கில் இருந்தாலே மற்ற மொழி உரிமை, வெளிநாடு – ஆடியோ – டிவி உரிமை என நன்றாகத்தான் இலாபம் பார்க்கின்றனர்.
ஆனால் அந்த மூன்று நாட்களுக்கு திரையரங்குகளுக்கு மக்கள் வந்தாக வேண்டுமே? மோடியின் ஜி.எஸ்.எடி வந்த பிறகு டிக்கெட் விலை எகிற ஆரம்பித்துவிட்டது. அத்தோடு தமிழக அரசின் கேளிக்கை வரி எல்லாம் சேர்ந்து தங்களுக்கு இலாபம் இல்லை என்று தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிலாக்கணம் பாட ஆரம்பித்தனர்.
இது குறித்து பல சுற்று பேசி தற்போது 25% கட்டண உயர்வை தமிழக அரசு அனுமதித்திருக்கிறது. இதோடு ஜி.எஸ்.டி வரி, கேளிக்கை வரி எல்லாம் சேர்த்து மல்டி பிளக்சில் சுமார் 200 ரூபாய்க்கு மேலாகவும் மற்ற திரையங்குகளில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும் கட்டணம் இருக்கலாம். இன்னும் இதில் குழப்பம் தீர்ந்த பாடில்லை.
எப்படிப் பார்த்தாலும் சினிமா கட்டணம் இருமடங்கு உயரப்போகிறது எனும் போது இனி மக்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பார்கள்?
சினிமா கட்டணம் குறைவாக அதாவது நியாயமான விலையில் இருந்தால்தான் மக்கள் அதிகம் திரையரங்கிற்கு வருவார்கள். மாறாக குறைவான நபர்கள் அதிக டிக்கெட் விலை கொடுத்து வந்தால் போதும் என்ற மனநிலையில் சினிமா முதலாளிகள் இருக்கின்றனர். காசு இருந்தால்தான் கல்வி, மருத்துவம், மின்சாரம் என்றான பிறகு சினிமாவையும் அப்படி ஆக்கி விட்டார்கள்.
ஆனால் மற்றவற்றை இணையத்தில் பெற முடியாது! சினிமாவைப் பெற முடியுமே! ஏற்கனவே தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சினிமாவைப் பார்த்தாலே போதும் என்ற மனநிலையில் திரையரங்கிற்கு செல்லும் இளைஞர்கள், ரசிகர்கள் இனி என்ன செய்வார்கள்? அதிக கட்டணம் கொடுக்க முடியுமா? மக்கள் கருத்தென்ன? வாக்களியுங்கள்!
இனிமேல் நீங்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள்?
தமிழ் ராக்கர்ஸ் – டொரண்ட் – செல்பேசி
தொலைக்காட்சிகள்
மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்
சாதாரண திரையரங்குகள்
பார்க்க மாட்டேன்
_____________
இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
டாஸ்மாக் கிற்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் !
நெல்லை மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் புதுப்பட்டி ஊர்களுக்கு இடையே விளை நிலங்களுக்கு மத்தியில் கடந்த 04.09.2017 அன்று புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட செய்தி தெரிந்ததும் புதுப்பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு கடையை முற்றுகையிட்டு கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தினர்.
அதன் விளைவாக திறந்த அன்றே கடை தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு மறுநாளே கடையை திறந்து விட்டார்கள். இதைக் கண்டு குமுறிய மக்கள் ஆலங்குளம் விவசாயிகள் திரண்டு கலெக்டர் தொடங்கி எம்.பி. வரையில் மனுக் கொடுத்துப் பார்த்தனர். எதுவும் நடக்கவில்லை. கடை மட்டும் கனஜோராக நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தான் மக்கள் அதிகாரம் தோழர்கள் தகவல் அறிந்து மக்களை சந்தித்துப் பேசினர். உடனடியாக டாஸ்மாக் எதிர்ப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு சுவரொட்டி அடித்து ஆலங்குளம் புதுப்பட்டி பகுதிகளில் ஒட்டப்பட்டது. தொடர்ந்து பிரசுரம் அடித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று வினியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சாராயக்கடை திறப்பதின் நோக்கம் குறித்தும், அரசின் தன்மை குறித்தும் பரப்புரை செய்யப்பட்டது. உறுதியான, சமரசமற்ற போராட்டமே தீர்வு என்பதை மக்கள் உணரத் தொடங்கினர்.
அடுத்ததாக, டாஸ்மாக் எதிர்ப்புக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் 12.10.2017 அன்று போராட்டம் நடத்துவது என்றும், டாஸ்மாக் கடையை மூடாமல் திரும்புவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி, 12.10.2017 அன்று காலை 11.00 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடங்கினர். காவல் துறையினரின் நைச்சியாமான சமாதானங்களை மீறி விண்ணதிரும் முழக்கங்களுடனும், விவாசாயிகள் தங்கள் அனுபவங்களை பேசுவதினூடாகவும் போராட்டம் வீரியத்துடன் தொடர்ந்தது.
நிலைமை சாதகமாக இல்லாததை உணர்ந்த காவல்துறையினர், மேலதிகாரிகளுடன் பேசி தாசில்தாரை வரவழைத்தனர். மதியம் 2.00 மணிக்கு வந்த தாசில்தார், மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஊருக்கு வெளியே தான் டாஸ்மாக் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, இது எங்கள் விவசாய நிலம் என்று பதிலடி கொடுத்தனர் விவசாயிகள். இரண்டு மாதம் அவகாசம் கொடுங்கள் கடையை மூடி விடுகிறோம் என்றார்.
உடனே மக்கள், இது வரை கலெக்டர் தொடங்கி அனைத்து அரசு அதிகாரிகளிடமும் கொடுக்கப்பட்ட மனுக்களை சுட்டிக் காட்டி இதற்கு என்ன பதில் என்றனர். செய்வதறியாது திகைத்த தாசில்தார். இதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய இயலாது டி. எம் -மை (மண்டல மேலாளர்) அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு பறந்தோடினார்.
நேரம் கடந்ததே தவிர எந்த மேலதிகாரியும் மக்களை வந்து சந்திக்கவில்லை. மீண்டும் காவல் துறையினர், நேரம் இருட்டத் தொடங்கி விட்டது, பெண்கள் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் கடையை திறக்க விடமாட்டோம். நீங்கள் கலைந்து செல்லுங்கள். வேண்டுமானால் காலையில் உங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொள்ளலாம் என்று பேசிப் பார்த்தனர். மக்களின் கருத்தைக் கேட்டதில் அவர்கள் உறுதியாக இருந்து கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று திடமாக நின்றனர். விடிய விடிய போராட்டம் தொடர்கிறது.
ஊடகத்துறைகளிலிருந்து நிருபர்கள் வந்திருந்து மக்களிடம் பேட்டி எடுத்து புகைப்படம் எடுத்து செய்தி சேகரித்துச் சென்றனர். ஆனால் காலையில் அனைத்து செய்தித்தாள்களிலும் ஒரே மாதிரியாக தாசில்தார் வந்து பேசியதும் அதை ஏற்றுக் கொண்டு மக்கள் கலைந்து சென்றனர் என்று செய்தி வெளியிட்டு தாங்கள் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.
இன்றும் இந்த நிமிடம் வரை போராட்டம் அதன் வீரியம் குன்றாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக “ஜெயா எப்படி செத்தால் நமக்கென்ன? மக்கள் சாகிறார்கள்! டெங்கு, மலேரியா – மரணங்களுக்கு செயலற்ற இந்த அரசுதான் காரணம்!” என்ற அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.
அந்த வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிலையத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மரணபீதியில் உள்ள சூழலில் சுவற்றின் அழகு கெட்டுவிட்டதாக கூறி மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மற்றும் விருதை பகுதி தோழர் முருகானந்தம் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் முழுமையாக செயலற்றுப் போன அரசு, போராடுபவர்களை குறிவைத்து வழக்கு போடுவது அவர்களின் போராட்டங்களை முடக்குவது ஆகியவற்றை மட்டும் செய்கிறது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம். தொடர்புக்கு – 81108 15963
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கமிஷனரின் ஆணை – கழிப்பறை காகிதம்! சன்பீஸ்ட் பிஸ்கட்ஸ் முதலாளியின் கொட்டம்!
புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் சன்பீஸ்ட், மேரி கோல்டு, மேரி லைட் ஆகிய பிராண்ட்களின் பிஸ்கட்டுக்களைத் தயாரிக்கும் வேல் பிஸ்கட்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் நிர்வாகம், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி வருகிறது.
இதை எதிர்கொள்ளும் வகையில் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம், சட்டத்தை மதிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கைக எடுக்க வலியுறுத்தி தொழிலாளர் ஆணையரை முற்றுகையிட்டு “தொழிலாளியின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ்” என்ற தலைப்பில் போராட்டம் நடத்தினோம்.
அந்த முற்றுகைக்குப் பின் தொழிலாளர் ஆணையர், நிர்வாகத்தை அழைத்து எச்சரித்தும் இன்று வரை தனது சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைகளையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தும் வகையில் நிறுவனத்தை சுற்றியும், தொழிற்பேட்டைப் பகுதிகளிலும் முழக்கத்தட்டிகள் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நமது பிரச்சாரம், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிப் போனது.
இதனால் ஆத்திரமடைந்த நிர்வாகம், அன்றாட வேலை நடைமுறைகளையே குற்றமாக்கி தொழிலாளர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தி கடிதம் கொடுப்பதை வழக்கமாகிக் கொண்டு விட்டது. மறுபுறம் சட்டப்படி நடப்பதாக சொல்லி முறையான காரணங்களின்றி தொழிற்சங்க முன்னணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து வருகிறது. அதன் மீதான விசாரணையைக் கூட “இயற்கை நியதிக் கோட்பாடு களுக்கு” உட்படுத்தாமல் தான் தோன்றித்தனமாக நடந்து வருகிறது.
மறுபுறம், சங்க இணைச் செயலாளர் மீதான பணியிட மாற்றம், சட்டப்படி செல்லாது என்றும், பணியிட மாற்றம் என்பதே சட்டவிரோதம் என்றும், பணியிட மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் பணிவழங்க தொழிலாளர் ஆணையர் ஆணையிட்டு கடிதத்தை அனுப்பிய போதும், அதை சற்றும் மதிக்காமல் இணைச் செயலாளருக்கு பணி வழங்க மறுத்து விட்டது. தனது ஆணை செல்லாக்காசாகிப் போனதால் பொங்கி எழுவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை தொழிலாளர் ஆணையர்.
சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, நமது தட்டி வைத்த தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் விளைவுகளை ஏற்படுத்தியதா இல்லையா என்பதை அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இரு பிரிவுகளாக்கி அவர்களின் கேள்விகளின் அடிப்படையில் விவாதம் நடத்தப்பட்டது. இறுதியில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் சென்றடைந்தது என்பதை ஏற்றுக் கொண்டதோடு, நிர்வாகம் கடிதம் கொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் உற்சாக மனநிலையோடு சென்றனர் தொழிலாளர்கள்.
அடுத்த நாள் தங்களுக்கு கடிதம் கொடுக்கப்போவதை அறிந்து ஒவ்வொரு தொழிலாளியும் தாங்களே அதிகாரிகளிடம் போய் தங்களுக்கு வரவேண்டிய கடிதத்தை கேட்டு பெற்றது நிர்வாகத்திற்கு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களை பயமுறுத்தும் தனது நடவடிக்கை பலனளிக்காமல் பல்லிளித்தது.
அடுத்த தொடர் நடவடிக்கையாக, நிர்வாகத்தின் சட்டத்தை மதிக்காத போக்குகளைக் கண்டிக்கின்ற வகையில் தொழிற்சங்கத் தலைவர் தோழர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டக்குழு தோழர்கள் செல்லக்கண்ணு, லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
தலைமையுரையில், நிர்வாகத்தின் சட்டவிரோத அடக்குமுறைகளைப் பட்டியலிட்டும், ஒரு தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டும் அதை துடைத்துப் போடும் காகிதமாக முதலாளி மதிப்பதைப் பற்றியும் பேசினார்.
தோழர் செல்லக்கண்ணு தனது உரையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வை நகர்த்தும் வகையில் தான் நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராடுகின்றனர். அதற்கு சங்கம் வைத்தால், தடுப்பது, அதையும் தாண்டி சங்கம் வைத்துவிட்டால், குறிப்பாக இந்த சங்கத்தில் சேரக்கூடாது எனவும் சொல்கின்றனர்.
அதற்கு முக்கிய காரணம், சட்டப் போராட்டம் மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு அரசியல் கற்றுக் கொடுப்பதால், அரசியலுடன் இணைத்து தங்களது கோரிக்கைகளைப் பேசி மடக்கும் போது பதிலளிக்க முடியாமலும், ஏமாற்ற முடியாமலும் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே, நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமெனில் அரசியல் ரீதியாக அணிதிரள வேண்டியது அவசியம் என விளக்கினார்.
தோழர் லோகநாதன் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான், இதைக் கொடு, அதைக் கொடு என கோரிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பது? ஒரே ஒரு கோரிக்கை மட்டும் தான் எங்களுக்கு தொழிற்சாலையைக் கொடுத்து விடு. லட்சம் லட்சமாக எண்ணிக்கையில் உற்பத்திப் பொருட்களை உற்பத்திசெய்ய முடிந்த எங்களால், ஒரு தொழிற்சாலையை நிர்வகிப்பது கடினமான வேலை இல்லை என்றார்.
எனவே, முதலாளிகளின் உற்பத்திச் சுரண்டலை ஒழிக்கும் படியான கோரிக்கைகள் மட்டுமே நமது உரிமைகளை மீட்க நிரந்தரத் தீர்வாக முடியும் என்பதையும், அதற்கு அரசிடம் கோரிக்கை வைத்துப் பலனில்லை. ஏனெனில், அரசின் கொள்கைகள் அனைத்தும் மக்களுக்கு எதிராக உள்ளது என்பதை பல்வேறு உதாரணங்களிலிருந்து விளக்கினார். எனவே, மக்களுக்கான அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை கையில் எடுப்பது தான் நம்முன் உள்ள கடமை என்று விளக்கினார்.
இந்த ஆர்ப்பாட்டம் நிர்வாகத்தின் சட்டவிரோத, சட்டத்தை மதிக்காத தன்மையை, துலக்கமாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. நிர்வாகம், திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக வாயை மூடி மௌனம் காத்ததுடன், நீங்கள் செய்வதெல்லாம் சரியில்லை என ‘மென்மையாக’ கண்டித்தது.
மேலும், தொடர்ச்சியாக தொழிலாளர்களை நேரில் நின்று மிரட்டும், மேலாளர், பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஒரு மாணவியை தற்கொலைக்குத் தள்ளிய குற்றத்தில் பணியிடை நீக்கத்தில் இருக்கும் அவரது இரண்டாவது மனைவி என குடும்பமே மக்களின் எதிரியாக மாறிப்போனதையும், தொழிலாளர் துறையில் பேச்சுவார்த்தைக்கு வந்து வாயைத் திறந்தாலே பொய் சொல்லும் HR மேலாளரையும் அம்பலப்படுத்தி சுவரொட்டி போடப்பட்டது.
அந்த ஆத்திரத்தையும் வெளிக்காட்ட முடியாமல், நீங்கள் சுவரொட்டி போடுவதால் தங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை. உங்களது பணம் தான் வீணாகிறது என தங்களது தொழிலாளர் விரோத செயல்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு விட்ட இந்த ‘நல்ல’ நயவஞ்சகர்கள் தங்களது கொடூர முகங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, வாட்ஸ் அப், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருக்கும் தங்களது மற்றும் தங்களது குடும்ப புகைப்படங்களை அகற்றி, தங்களது ‘துணிச்சலை’ வெளிப்படுத்தியுள்ளனர்.
முதலாளிகளின் லாபவெறிக்காக, அவர்களின் பாதந்தாங்கி சேவை செய்யும் இந்த மயிர் நீப்பின் உயிர் வாழா ‘கவரிமான்’ பரம்பரையின் வழிவந்த அதிகாரிகளின் அடுத்தடுத்த அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர் வேல் பிஸ்கட்ஸ் ஆலைத் தொழிலாளர்கள்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.
_____________
தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் இந்த வாரம் இரண்டு நாட்கள் நடந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 327 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், ஆர்டிஓ -க்கள் லாரிகளை எந்தவித காரணமும் இன்றி நிறுத்தி அபராதம் வசூலிக்க கூடாது. டீசல் விலையை மாதத்திற்கு ஒரு முறையே நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
சென்னை மாதவரம் சிஎம்டிஏ மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்
இந்தியா முழுவதும் 93 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.50 லட்சம் சரக்கு லாரிகள், மணல் லாரிகள் என எதுவும் இயக்கப்படவில்லை. வெளிமாநில லாரிகள், தமிழகத்தை சேர்ந்த லாரிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும் வெளி மாநிலத்துக்கு லோடு புக்கிங் செய்வதும் நிறுத்தப்பட்டது. உணவுப்பொருட்கள், அரிசி-பருப்புகள், காய்கறி, பூக்கள், கட்டுமான பொருட்கள் என அனைத்தும் முடங்கின. இவற்றின் விலைகளும் உயந்துள்ளது.
லாரிகள் ஸ்டிரைக்கின் மூலம் தமிழகத்தில் 2 நாட்களில் 3 ஆயிரம் கோடி சரக்குப் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாகவும், 10 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டுவதால் மக்கள் மூச்சு திணறுகிறார்கள். இச்சூழலில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான அவசியம் என்ன?
லாரிகள் வேலை நிறுத்தத்துக்கான அவசியம் குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலர் ரமேஷ்குமார் கூறியது,
சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குணசேகரன்
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வர உள்ள திருத்தங்கள் காரணமாக மோட்டார் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோர் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் மூலம் மோட்டார் வாகன தொழிலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்பது, “தற்போது ஆட்டோ மற்றும் டாக்சி சுயதொழில் என்ற அடிப்படையில் கோடிக்கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 2-ல் “அக்ரிகேட்டர்” என்ற வார்த்தையை புதிதாக உருவாக்கி உள்ளது. தற்போது சட்டப்பூர்வமாக அக்ரிகேட்டர் என்ற அங்கீகாரம் இல்லாத நிலையில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அக்ரிகேட்டர் என்பதன் அர்த்தம் பலரை இணைத்து கூட்டுத் தொழில் செய்வதாகும்.
சட்ட அங்கீகாரம் இல்லாமலேயே ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் தற்போது உள்ள சூழலை பயன்படுத்தி பலரை இணைத்து இத்தொழிலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். கட்டணம் உட்பட அவர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.
சட்ட அங்கீகாரம் உள்ள நிலையில் தனி நபர்கள் மட்டுமின்றி சில நிறுவங்கள் 100, 200 வண்டிகளை வைத்துக் கொண்டு இத்தொழிலில் நுழைவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் தனி நபர் ஆட்டோ, டாக்சி வைத்துக்கொள்ளும் சாத்தியம் இல்லாமல் ஆகிவிடும். ஆட்டோ மட்டுமின்றி சிறிய சரக்கு வாகனங்கள் அக்ரிகேட்டர் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட காரணங்களுக்காகவே அக்ரிகேட்டர் என்ற வார்த்தை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலை கையகப்படுத்தும் சூழ்நிலைக்கு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்டோ டாக்சி மற்றும் சிறிய சரக்கு வாகனங்கள் தொழில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும்.
லாரிகள் சரக்கு வாகனங்கள்:
அக்ரிகேட்டர் என்பது சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதால் சரக்கு போக்குவரத்திலும் அக்ரிகேட்டர் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வந்தால் கால் டாக்சிக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ அதே ஆபத்து தான் லாரி தொழிலுக்கும் வரும். மேலும், வொர்க் ஷாப்களில் தற்போது வாகனங்களின் எப்.சி. வேலைகள் பார்க்கப்படுகிறது. எப்.சி, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இச்சட்டத்தின் மூலம் எப்சி பணிகளை அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏஜென்சிகள் மூலம் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தியாளர்கள் நியமிக்கும் ஏஜென்சிகளே எப்.சி. பார்ப்பார்கள். வெளியில் வேலை பார்த்தல் அதனை நிராகரிக்கும் வாய்ப்பும் உண்டு. இதன் மூலம் பெரிய வேலைகள் பார்க்க முடியாது.
அதுமட்டுமில்லாமல் ஒரிஜினல் பாகம் தான் மாட்ட வேண்டும், ஷோ ரூமில் சென்று தான் எப்சி பார்க்க வேண்டும் போன்ற நிலைமை வந்தால் லாரி தொழிலில் சிறிய உரிமையாளர்கள் நிலைத்து நிற்க முடியாது.
அதேபோல் ஓவர் லோடு என்பதை காரணம் காட்டி மிகவும் கடினமான தண்டனை முன்மொழியப்பட்டுள்ளது. கூடுதலாக ஏற்றப்படும் ஒவ்வொரு டன்னிற்கும் தண்டனை தொகை விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.2000 முதல் ரூ.20,000 வரை விதிக்கிறார்கள். மேலும் ஓவர் லோடு இன்றி அதிக உயரம், அகலம், அதிக நீட்டல் போன்றவைகளும் அபராததிற்குரிய குற்ற செயல். அதேபோல இன்சூரன்ஸ் நஷ்ட ஈடு அதிகபட்சமாக மரணமடைந்தால் 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு 2.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நட்டஈட்டை அதன் உரிமையாளரே வழங்க வேண்டும் என்றும் திருத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்கான நட்ட ஈட்டை அரசும் பகிராமல் எங்கள் தலையில் சுமத்தினால் என்ன செய்வது? எனவே தான் இந்த போராட்டம் என்றார்.
லாரி தொழிலில் நடைமுறையில் உள்ள சிக்கல் மற்றும் ஜிஎஸ்டி ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு குறித்து சென்னை வால்டாக்ஸ் சாலை பார்சல் சர்விஸ் மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியது,
கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை நாங்கள் எப்பொழுதும் சந்தித்ததேயில்லை. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து நாகர்கோயில் செல்ல வேண்டுமானால் அனைத்து செலவுகளும் போக கணிசமாக ரூ.15,000 கிடைக்கும். ஆனால் இப்பொழுது மூன்றாயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் கிடைப்பதே பெரிய விஷயம் என்கிறார்.
நாகர்கோயில் to சென்னை சென்று வர நான்கு நாட்கள் ஆகும். இதற்கு டோல்கேட் கட்டணமாக ரூ.6000 ஆகிறது. ஒரு மாதத்திற்கு 8 ட்ரிப் எங்கள் வண்டி செல்கிறது. இதற்கே மாதம் ரூ.32,000 செலவாகிவிடும். எங்களிடம் பதினைந்து லாரிகள் இருக்கின்றன. மொத்தத்திற்கும் கணக்கு போட்டுப்பாருங்கள். டோல்கேட்டால் மாதம் ரூ.5 லட்சம் இழப்பு.
அடுத்தது, டீசல். ஒரு முறை சென்று வர 120 லிட்டர் போட வேண்டும். டீசல் விலையை பொறுத்து தான் விலையை தீர்மானிப்போம். திடீரென்று எதிர்பாராத விதமாக டீசலை ஏற்றி விடுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பு அனைத்தும் நாங்கள் சமாளிக்க வேண்டும். அந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். எங்கள் வருமானத்தில் 70 சதவீதம் வரை டீசலுக்காக ஒதுக்க வேண்டும்.
ஆண்டிற்கு ஒருமுறை எப்சி எடுக்க வேண்டும். அதற்கு பெயிண்டிங் மற்றும் டிங்கரிங் உட்பட ரூ.35000, ஸ்பீடு கவர் ரூ.7000, ஆர்.டி.ஓ. -விற்கு ரூ.2500 என்று ரூ.50,000 வரை செலவாகிவிடும். இதற்காக வருமானத்தில் மாதம் ஐந்தாயிரம் ஒதுக்க வேண்டும்.
லாரியின் டயர்கள். முன்பக்க டயர் விலை ஒரு ஜோடி ஜிஎஸ்டி -க்கு முன்பு ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை இருந்தது, தற்போது ரூ.35,000 வரை உயர்ந்துள்ளது. லாரியின் பின்புறம் பொருத்தப்படும் நைலான் ஃபைபர் டயர் ஒரு ஜோடி ரூ.35,000 லிருந்து இருந்து ரூ.40,000 ஆகவும், பெரிய நைலான் பைபர் டயர் ரூ.38,000 இருந்து ரூ.45,000 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பத்து மாதத்திற்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை சாலை வரி ரூ.3000, மாதம் தோறும் வருமான வரி ரூ.7,500 கட்ட வேண்டும். மேலும் டீசலுக்கான வாட் வரியும் 25 சதவீதம் கட்ட வேண்டும்.
அதேபோல் நாகர்கோயில்- சென்னை சென்று வர ஒருமுறைக்கு போலிசு மாமூல் ரூ.300. மாதம் எட்டு ட்ரிப் ரூ.2400 வரை ஆகிவிடும். இது போக மாதவரத்தில் இருந்து வால்டாக்ஸ் சாலைக்கு வருவதற்குள் தினமும் ரூ.200 பிடுங்கி விடுவார்கள்.
லாரி ஓட்டுனருக்கு ரூ.2500, கிளீனருக்கு ரூ.1500 மேலும் ஆட்கள் ஏற்று கூலி, இறக்கும் கூலி என்று ஒரு ஆளுக்கு தினமும் ரூ. 500 வரை வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வந்த பிறகு சரக்கு புக்கிங் குறைந்து விட்டதால் ஆட்கூலி கூட வழங்க முடிவதில்லை.
அதே போன்று சாலைகளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள், ஓட்டுனர்கள் தாக்கப்படுவது போன்றவை எப்பொழுதும் அச்சத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு போலிசே உடந்தையாக இருக்கின்றது.
ஜிஎஸ்டி எண் இல்லாத சிறு தொழில் நிறுவனங்கள் லாரிகளில் சரக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. லாரி புக்கிங் அலுவலகத்திலும் புக்கிங் செய்து அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 75 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து கொள்முதல் பகுதிக்கும், கொள்முதல் இடத்தில் இருந்து பிற சில்லறை வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லும் பதிவு பெற்ற சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டி -யில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும் போது ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குரிய ஜிஎஸ்டி -யுடன் கூடுதலாக 100 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனால் லாரிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலும் சரக்குகள் பதிவு செய்வது தடைப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சரக்கு லாரி வர்த்தகம் பாதிக்கிறது. இது எங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு. வழக்கமாக ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு நாளொன்றுக்கு எட்டு லோடுகள் வரை ஏற்றினோம். இப்பொழுது இரண்டிற்கே பெரும்பாடாக உள்ளது. ஒரு கிராம் எடுப்பதற்கு கூட சிரமாக உள்ளது.
லாரிகள் பழுது ஏற்படும் நிலையில் அதற்கான செலவு தனி. ஜிஎஸ்டி -க்கு பிறகு உதிரி பாகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் எப்பொழுதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தொழிலில் நிலைத்திருக்க முடியாது.
இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் ஜிஎஸ்டிக்கு பிறகு மூன்று லாரிகளை விற்பனை செய்து விட்டேன். விற்கும் போது ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்றார்கள். அதன் நடைமுறை சரியாக தெரியாததால் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் கூட பரவாயில்லை. பார்சல் சர்விஸ் வைத்துள்ளதால் குறைந்த பட்சம் சமாளிக்க முடிகிறது. ஆனால் மார்கெட்டில் ஓடும் லாரிகள் மிகக் கடுமையாக பாதிப்படைவார்கள். அவர்களுடைய நிலை தான் மோசம் என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் மயக்கமே வந்து விட்டது.
என்ன இருந்தாலும் பண்டிகை காலத்தில் வேலை நிறுத்தம் செய்வது பொது மக்களை தானே பாதிக்கும்?
உண்மை தான். ஆனால் மக்கள் பாதிப்படைவார்கள் என்பது குறித்து இந்த அரசு கவலைப் பட்டிருந்தால் எங்கள் கோரிக்கையை ஏற்று மக்களை பாதிப்பிலிருந்து காப்பற்றி இருக்கும். ஆனால் அரசு கவலை கொள்ளவில்லை. அதை விட முக்கியம் அரசு என்ற ஒன்றே இல்லை என்பதைத் தான் எங்களுக்கு உணர்த்துகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டம் நடத்துவோம்!
கூட்டிக் கழித்துப் பார்த்தால் லாரி தொழிலை ஒழிப்பதே மோடி அரசின் திட்டம் என்பது தெரிகிறது. புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வக்கற்ற மோடி அரசு இருக்கும் தொழில்களை அழிப்பதில் எப்படி உறுதியாக இருக்கிறது என்பதற்கு லாரி உ ரிமையாளர்களின் அவல நிலை ஒரு சான்று! இது ஏதோ அவர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல! லாரி தொழிலின் பாதிப்பு விலைவாசி உயர்வாக நம் மீதும் விழும். விழித்தெழுவோம். இல்லையேல் நமது வாழ்க்கை நம்மிடம் இல்லை!
செய்தி, படங்கள் : – வினவு செய்தியாளர்
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது. இவர்களில் 6 பேர் தலித்துகள். அதே நேரத்தில் தமிழகத்தில், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும் தீட்சையும் பெற்ற 206 மாணவர்கள் பத்து ஆண்டுகளாக, பணி நியமனம் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத்தீண்டாமையை ஒழிக்கவும் 1993 -ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். 2007 -ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள்.
பயனில்லை. 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்ற போதிலும், அதிமுக அரசு மாணவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. பார்ப்பனராகப் பிறக்காத ஒரேயொரு குற்றத்துக்காக தகுதியுள்ள இம்மாணவர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைக்கம் சென்று போராட்டம் நடத்திய பெரியார் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான்.
2006 -ல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து தடையாணை பெற்றவர்கள் மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள். 1972 -ல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்க திமுக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்களும் இவர்கள்தான். “தங்களைத் தவிர வேறு யாரும் கடவுள் சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும்” என்ற அப்பட்டமான தீண்டாமைக் கருத்தைத்தான் ஆகமவிதி என்ற பெயரிலும் மத நம்பிக்கை என்ற பெயரிலும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.
“பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மற்ற உட்பிரிவினர் கூட அர்ச்சகராக முடியாது” என்று சாமர்த்தியமாக வாதிடுவதன் மூலம் தங்களது சாதி – தீண்டாமை வெறியை இவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதை காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு என்று சாதியை தந்திரமாக நியாயப்படுத்துகிறார்கள்.
கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், நடராசர் கோயில், அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை, திருவையாறு, நெல்லை, ராமேசுவரம், பழனி உள்ளிட்ட எல்லா முக்கிய கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பார்ப்பன உட்சாதியினர் மட்டும்தான். 1972 சேசம்மாள் தீர்ப்பு, “வாரிசு உரிமையாக அர்ச்சகர் பதவியைக் கோர முடியாது” என்று தெளிவாக கூறிவிட்ட பின்னரும், தற்போது இத்தகைய பெருங்கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் 1174 -ல் 574 பேர் வாரிசுரிமையாக பதவி பெற்றவர்கள்தான்.
மேலும் 411 பேர் அவர்களால் சிபாரிசு மூலம் நுழைந்தவர்கள். அது மட்டுமல்ல, மதுரைக் கோயிலின் 116 அர்ச்சகர்களில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். சென்னை கபாலி கோயில் அர்ச்சகர்கள் 41 பேரில் 4 பேர்தான் ஆகமம் கற்றவர்கள். மற்றவர்களுடைய தகுதி சாதி மட்டும்தான் என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஆனால் தகுதியுள்ள பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது.
மேற்கண்ட கோயில்கள் அனைத்தும் பொதுக்கோயில்கள். அவை முன்னர் மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்று இக்கோயில்களின் பணிநியமனம் உள்ளிட்ட நிர்வாக விவகாரங்கள் அரசு அதிகாரத்தின் கீழ் வந்திருக்க வேண்டும்.
ஆனால், “ஆகமவிதி, மரபு, பழக்கவழக்கம், இந்துக்களின் மத உரிமை” என்ற போர்வையில் தமிழ்மக்களுடைய உழைப்பில் உருவான இந்தக் கோயில்களின் கருவறைக்குள் தமிழனே உள்ளே நுழையமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு வந்த தீட்சிதர்கள், இன்று “கோயிலே தங்களுக்கு சொந்தம்” என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.
அர்ச்சகர்களும் சங்கராச்சாரிகளும் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் “மரபு” என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது. கோயில் தேவதாசி முறையும், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பதும்கூட ஆகமவிதிகள்தான். பால்ய விவாகம், பலதார மணம், உடன்கட்டையேற்றுதல் போன்ற அனைத்தும் இந்து மரபுகள்தான். “பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்பதும் அத்தகையதொரு மரபு.
இதற்கு எதிரான வழக்கில், 2015 -ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தந்திரமான முறையில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். சட்டப்பிரிவு 25 -ன் படி அர்ச்சக மாணவர்களும், பல்வேறு சாதிகளிலும் பிறந்த இந்துக்களும் பெற்றிருக்கும் மத உரிமையைக் காட்டிலும், சட்டப்பிரிவு 26 இன்படி குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியை சேர்ந்த அர்ச்சகர்கள் கோரும் மரபுரிமைதான் பெரியது என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.
“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்ள் கூறுவது தீண்டாமைக்குற்றம் ஆகாது” என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருந்த போதிலும் மாணவர்களின் பணிநியமனத்துக்கு இத்தீர்ப்பு தடை விதிக்கவில்லை. அரசு இவர்களை நியமனம் செய்யலாம் என்றும், அந்த நியமனம் மரபுக்கு எதிரானது என்றால் அந்த நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.
தற்போது கேரளத்தில் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், அதனை எதிர்த்து பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதே கேரளத்தில் குருவாயூர், திருவனந்தபுரம், சபரிமலை போன்ற கோயில்களில் பார்ப்பனரல்லாதார் நியமிக்கப்படவில்லை என்பதையும், சபரிமலையில் வழிபடுவதற்கே பெண்களுக்கு உரிமையில்லை என்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கேரளத்து பார்ப்பன அர்ச்சகர்ளுக்கும் சாதகமானதுதான். அங்கே பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு போகாமலிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக ரீதியாகத் தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சமாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய அச்சவுணர்ச்சியை தமிழ்ச்சமூகம் அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஏற்படுத்தவில்லை என்பதே இந்த மாணவர்களின் அவல நிலைக்கு மிக முக்கியமான காரணம்.
2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீண்டாமைக்கு முட்டுக்கொடுக்கிறது என்ற போதிலும், அது பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்பதால், தமிழக அரசு, 206 மாணவர்களையும் பெருங்கோயில்களில் நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம். அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மட்டுமின்றி வீதியிலும் நாம் போராடவேண்டும்.
இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது. மரபுக்கு தலைவணங்குவது என்ற பெயரில் சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் தலை வணங்க முடியாது. அர்ச்சகர் நியமனத்துக்கு மட்டுமல்ல, தலித் கோயில் நுழைவு, சாதி – தீண்டாமை மறுப்பு திருமணம் உள்ளிட்ட அனைத்துக்கும் இது பொருந்தும்.
206 மாணவர்களை பெருங்கோயில்களில் தமிழக அரசு உடனே பணி நியமனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்குப் பொருள், “பார்ப்பனரல்லாதார் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும்” என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் கருத்துக்கு இந்த அரசு துணை நிற்கிறது என்பதுதான்.
அதனை முறியடிக்க தமிழகமெங்கும் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டுமென்று தமிழ் மக்களின் நலன் நாடும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் வைக்கம் வீரருக்கு நாம் செலுத்தும் மரியாதை. தமிழ் மக்கள் என்ற முறையில் அப்படிப் போராடுவதொன்றுதான் நமக்கு சுயமரியாதை! இது அர்ச்சக மாணவர்களின் பிரச்சினை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை.
பங்கேற்றோர்
திரு. சி.ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
திரு. சே.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திரு. சு.மில்ட்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திரு. அரங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
திரு. பாலகுரு, திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
திரு. திருமுருகன், திருவல்லிக்கேணி அர்ச்சகர் பயிற்சி பள்ளி
திரு. வெங்கடேசன், திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சி பள்ளி
இவண் :
சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
அலுவலகம்: 150-இ,
ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு. தொடர்புக்கு : 98653 48163.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
இணையத்தில் நுழையும் போது நாம் ஒரு புத்தகம் படிப்பது போல உறுதியாக கவனமாக ஈடுபடுவதில்லை. அதாவது அலைபாயும் மனதை இணையப் பரிமாணம் அலைக்கழிக்காத நாளில்லை. மவுசோடு மனமும் சேர்ந்து எங்கெங்கோ போகிறது. இணைய நேரம் முடிந்த பிறகு என்ன படித்தோம், எது நம் நினைவில் நிற்கிறது என்பதற்கு உத்திரவாதமில்லை. ஆகவே எவரும் எதிலும் அதிகம் நேரம் நின்று நிதானிப்பதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மனதின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதோடு சில பொதுஅறிவு விசயங்களை மனதில் நிலை நிறுத்தும் வண்ணம் இந்த புதிய பகுதியை ஆரம்பிக்கிறோம். வழக்கம் போல இதுவும் சோதனை முயற்சிதான்.
அரசியல் செய்திகளை படிப்போருக்கும் எழுதுவோருக்கும் களத்தில் பணியாற்றுவோருக்கும் அரசியல், பொருளாதாரம் குறித்த பொது அறிவு அவசியம் என்பதாலும் இந்த வினாடி வினா பகுதியை வெளியிடுகிறோம். பங்கேற்போடு ஆலோசனைகளையும் அளியுங்கள்! நன்றி
– வினவு
கீழே உள்ள வினாடி வினா பக்கத்தை அழுத்தி அடுத்து வரும் படிவத்தில் கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. சரியான பதில்கள் என நினைப்பதை டிக் செய்து இறுதியில் வினாடி வினாவை முடித்தால் எவை சரியான பதில்கள் என்பதோடு நீங்கள் தவறாக தெரிவு செய்த பதில்களும் வரும். முயற்சி செய்யுங்கள்!
டெங்கு காய்ச்சல் கொள்ளை நோயாக மாறிவிட்டது என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள். தமிழகமெங்கும் பல்வேறு மருத்துவமனைகளில் மரணச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழகத்திற்கு ஏன் இந்த அவல நிலை? காரணம் யார்? குற்றவாளிகள் யார்?
டெங்கு மரணங்களுக்கு யார் காரணம்?
கோஷ்டி மோதலில் காலம் தள்ளும் அதிமுக அரசு
தமிழகத்தை திட்டமிட்டே புறக்கணிக்கும் மோடி அரசு
சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள்
திடீர் படையெடுப்பு நடத்தும் கொசுக்கள்
கொசுவைத் தவிர அனைவரும்
_____________
இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்குப் பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
“டெங்கு : தொடரும் மரணம் ! செயலிழந்த எடப்பாடி அரசும் – நகராட்சியுமே குற்றவாளிகள் !” என்ற முழக்கத்தை முன்வைத்து தூத்துக்குடிசிதம்பரநகர்பேருந்துநிறுத்தம்அருகில்கண்டனஆர்ப்பாட்டம் 10.10.2017 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக, டெங்கு மரணத்திற்கு அரசே காரணம் என்பதை அம்பலப்படுத்தி தூத்துக்குடி நகர் முழுவதும் 400 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், நீதிமன்றம் ஆகிய இடங்களில் 3,000 பிரசுரங்கள் காட்சி விளக்க அட்டைகளை தோழர்கள் பிடித்துக் கொண்டு பரவலாக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து பலரும் தொடர்பு கொண்டு ஆர்வத்தோடு பேசினர். குறிப்பாக, மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர். இந்தப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்ஆதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்ட இணைச்செயலாளர் தோழர்கத்தார்பாலு கலந்து கொண்டு பேசினார். அதிமுக அரசு, பிஜேபி க்கு அடிமையாக இருந்து கொண்டு ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர்லயனர்அந்தோணிராஜ் அதிமுக அரசும் அதிகாரிகளும் எப்படி உண்மைக்குப் புறம்பாக பேசிக் கொண்டு ஏமாற்றுகின்றனர் என்பதை புள்ளிவிவர ஆதாரங்களோடு பேசினார். எப்படி அரசே டெங்கு கொசுவை ஒழிக்காமல், கார்ப்பரேட் மருந்து முதலாளிகளுக்காக கொசுவை வளர்க்கும் வேலையை செய்கிறது என்பதையும், டெங்குக்கு அரசு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளுக்கு புரோக்கராக அரசு செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்துக்குள் அபார்ட்மெண்ட் கட்டி கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை அம்பலப்படுத்தினார். தனியார் மருத்துவமனைகள் எப்படி வக்கிரமாக மக்களிடம் பணத்தைப் பிடுங்குகின்றனர் என்பதையும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் எப்படிக் கொள்ளையடிக்கின்றனர் என்பதையும் விளக்கிப் பேசினார்.
மக்கள் ஓட்டுப்போட மட்டும் உயிரோடு இருந்தால் போதும். மற்றபடி செத்துத் தொலையட்டும் என்ற கேடுகெட்ட எண்ணத்தோடு, இரக்கமே இல்லாத அரசை, அதிகார வர்க்கத்தை ஒழிக்காமல் டெங்குவை ஒழிக்க முடியாது. நம்முடைய எதிரிகள் நம்மை ஒழிப்பதற்கு முன் நாம் அவர்களை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதே தீர்வு என்பதை கூறி முடித்தார்.
மக்கள்அதிகாரம்தோழர். மாரிமுத்து நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வெளியில் நின்று கவனித்தவர்கள் பலரும் கடைசி வரை நின்று ஆர்வத்தோடு கவனித்து சென்றனர்.
நான்கு நாள் பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் தூத்துக்குடி வாழ் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தைப் பற்றிய பரவலான அறிமுகத்தையும், அரசியலையும் குறிப்பிட்ட அளவில் எடுத்துச் சென்றுள்ளது என்பதை உணர முடிந்தது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது )
தகவல் : மக்கள் அதிகாரம் தூத்துக்குடி.
_____________
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
அனிதாவின் மரணம், “ஏழைகளின் பால் அக்கறை கொண்ட மருத்துவர்கள் இனி தமிழகத்திற்கு கிடைப்பார்களா” என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. நீட் தேர்வை எதிர்த்தும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் போர்க்குணமிக்க முறையில் ஒரு மாத அளவில் தமிழக மாணவர்கள் போராடினார்கள்.
நீட் தேர்வு என்பது ஏதோ ஒரு சில மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சீட் கிடைப்பது தொடர்பான பிரச்சினை அல்ல. வருங்காலத்தில் அரசு மருத்துவமனை என ஒன்று இருக்குமா, அப்படி இருந்தாலும் அங்கே மருத்துவர்கள் இருப்பார்களா, இலவச மருத்துவம் என்பது பெயரளவுக்காவது இருக்குமா என்பது பற்றிய பிரச்சினைதான் நீட் தேர்வு.
தமிழகத்தில் உள்ள அளவு அரசு மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதேபோல, ஏராளமான குறைபாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் இருக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. நீட் தேர்வு தொடர்ந்தால், தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற பணக்கார வீட்டுப்பிள்ளைகளும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் படித்து முடித்து விட்டு அமெரிக்காவுக்கும், டெல்லிக்கும், மும்பைக்கும் பறந்து விடுவார்கள். அரியலூரிலும் பெரம்பலூரிலும் வேலை பார்க்க மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.
மற்ற அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப் படுவதைப்போல, அரசு மருத்துவமனைகளும் தனியார் மயமாக்க முனைந்திருக்கிறது மோடி அரசு இது கற்பனை அல்ல, அரசு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளை, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு 30 ஆண்டு குத்தகைக்கு விடவேண்டும் என்று மோடி உருவாக்கிய நிதி ஆயோக் அமைப்பு அறிவித்திருக்கிறது. கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல, தமிழக மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் அபகரிப்பதுதான் இந்த நீட் தேர்வின் நோக்கம். “தகுதி, திறமை, அதற்காகத்தான் நீட் தேர்வு” என்பதெல்லாம் மோடி அரசின் பம்மாத்து, பித்தலாட்டம்.
மருத்துவப் படிப்பிலிருந்து ஏழை அனிதாக்களை துரத்துவது என்பது தொடக்கம். நோய் நொடி என்றால் அரசு மருத்துவமனையை நம்பியிருக்கும், பணவசதியில்லாத ஏழைக் குடும்பத்தினரை அரசு மருத்துவமனைகளுக்குள் நுழையவிடாமல் துரத்துவது என்பதுதான் இதன் முடிவு. அனிதாவின் மரணம் என்பது, டெங்கு, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல் என்று விதவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு, இலவச மருத்துவம் கிடைக்காமல் மடியப்போகும் இலட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்துக்கு ஒரு முன்னோட்டம்.
அனிதாவின் மரணம் என்பது நமக்கு விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்பதை விளக்குகின்றன, இந்நூலின் கட்டுரைகள்.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி ! – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !
நீட் தேர்வு : அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !
நீட் தேர்வு : ஒரு சொந்த அனுபவம்
நீட் தேர்வால் சட்டப்பூர்வமாகும் மருத்துவக் கல்லூரிக் கொள்ளை !
பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?
நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் !
அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து – நேர்காணல்
அனிதாக்களுக்காக நீட் தேர்வை எதிர்ப்போம் !
நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் தனியார் மருத்துவமனைகள்
நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !
எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்
கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !
மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள்
நீட் தேர்வு போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?
நீட் தேர்வு நம்பவைத்து கழுத்தறுத்த பாஜக – அதிமுக கும்பல் ! தமிழகமே எதிர்த்து நில் !!
மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
நீதிமன்ற அவமதிப்பு: பணிய மாட்டோம்! கூண்டிலேறத் தயார்!!
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 300
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1600
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
வானதி சீனிவாசன், ’கே.டி’.ராகவன் உள்ளிட்ட பாஜக ‘யோக்கியர்களின்’ முறைகேடுகள் குறித்து வினவு தளத்தில் வெளி வந்த கட்டுரைகளை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் வானதி சீனிவாசன் குறித்த கட்டுரைக்கான தரவுகளின் மூல ஆதாரமாக விளங்கியவர் பாஜகவைச் சேர்ந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன். அவர் இது குறித்து அம்பலப்படுத்தி எழுதிய அனைத்து முகநூல் பதிவுகளின் முடிவிலும் தவறாமல் ஒன்றை எழுதியிருப்பார். ”இந்த விசயம் (மோசடி) குறித்து அமித் ஷாஜி மற்றும் மோடிஜியிடம் ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன், விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தனது நம்பிக்கையை தெரிவித்திருப்பார்.
என்னதான் ஆதாரங்களை அள்ளிக் கொடுத்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அமித் ஷாஜி நடவடிக்கை எடுக்கவில்லையே என பாலசுப்பிரமணிய ஆதித்யனே இதுநாள்வரை குழம்பியிருக்கலாம். அவரது முகநூல் பதிவுகளை நம்பி அமித் ஷாவின் நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த சில பாஜக ‘அப்பாவி’களும் கூட நடவடிக்கை எடுக்கப்படாததை எண்ணி சிந்தித்திருக்கலாம். அந்தக் குழப்பத்திற்கு விடை சொல்லியிருக்கிறார் ’தி வயர்’ இணையதளத்தின் பத்திரிக்கையாளர் ரோஹினி சிங்.
’தி வயர்’ இணைதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் பத்திரிக்கையாளர் ரோஹினி சிங்
ரோஹினி சிங் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர். கடந்த 2011-ம் ஆண்டில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதோரா, டி.எல்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து செய்த ரியல் எஸ்டேட் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தார். எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழில் பணியாற்றிய ரோஹினி சிங் , தற்போது ’தி வயர்’ இணையதளத்திற்கு கட்டுரைகள் மற்றும் புலனாய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.
ரோஹினி சிங் சிலநாட்களுக்கு முன்பு ”தி கோல்டன் டச் ஆஃப் ஜெய் அமித் ஷா” என்ற புலனாய்வுக்கட்டுரை ஒன்றை ‘தி வயர்’ இணையதளத்திற்காக எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை, மோடி பிரதமராக ஆட்சியில் அமர்ந்த பிறகு, அமித் ஷாவின் மகனான ஜெய் அமித்பாய் ஷா என்ற ஜெய் ஷா செய்யும் தொழில்களின் ஆண்டு வருமானம் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதோடு, அத்தொழில்களில் சம்பந்தப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்களையும், முறைகேடுகளையும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டியுள்ளது. ’யோக்கியர்களாகத்’ தங்களை சிங்காரித்துக் கொள்ளும் பாஜக கிரிமினல்களின் பெரும் வலைப்பின்னலில் ஒரு சிறு பகுதியை, அக்கட்டுரை தோலுறித்துக் காட்டியுள்ளது.
ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயர் ”டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்”. இந்நிறுவனத்தில் ஜெய் ஷாவுடன் அவரது தாய் சோனல்ஷா மற்றும் அவரது நண்பர் ஜிதேந்திரஷா ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர்.
நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies) அலுவலகத்தில் தாக்கல் செய்த கணக்குகளின் படியே டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம், 2012-2013ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.6230 நட்டம் என்றும், 2013-2014-ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.1724 நட்டம் என்றும் கணக்குக் காட்டி இருந்தது. மோடி ஆட்சி அமைத்த 2014 – 2015-ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் மொத்த வருமானம் ரூ.50,000 என்றும் அதில் இலாபம் ரூ.18,728 என்றும் கணக்குக் காட்டி இருந்தது. அதிலும் கடந்த 2015- 2016ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் திடீரென ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு ரூ. 50,000க்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு சிறு வணிகர், திடீரென ’ஆடி’ காரிலும் ‘பென்ஸ்’ காரிலும் வலம் வந்தால் என்ன நினைக்க முடியும்? சினிமாவில் ஒரே பாடலில் நாயகன் ‘உழைத்து’ப் பணக்காரன் ஆகிவிடுவது போல், எதார்த்தத்தில் ஒரே ஆண்டில் உழைத்துக் கோடீசுவரன் ஆகிவிட முடியுமா என்ன?
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கதையும் அதேதான். ஒரே ஆண்டில் அவரது நிறுவனத்தின் வருமானம் ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, 16,000 மடங்கு உயர்ந்திருக்கிறது. இது நேர்மையான வழியில் சாத்தியமா?
சம்பந்தமில்லாத இந்த வளர்ச்சி விகிதத்தை வைத்தே, இது சாத்தியமற்றது என்றும் கண்டிப்பாக முறைகேடுகள் நடந்திருக்கும் என்றும் ஒரே வார்த்தையில் கூறிவிடலாம். ஆனால் பத்திரிக்கையாளர் ரோஹினி சிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இந்த முறைகேடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தையும் அம்பலப்படுத்தி உள்ளார்.
ஜெய் ஷா – மோடி – அமித் ஷா
டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை, விவசாய விளைபொருட்கள் விற்பனை நிறுவனமாகப் பதிவு செய்துள்ளார் ஜெய் ஷா. கடந்த 2015- 2106-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் கே.ஐ.எஃப்.எஸ். என்ற வங்கியல்லாத நிதி நிறுவனத்திடமிருந்து(Non Banking Financial Institution) ரூ.15.78 கோடி கடன் பெற்றிருக்கிறது. இதனை ஜெய் ஷாவின் நிறுவனம் தனது ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கே.ஐ.எஃப்.எஸ். நிறுவனம் தனது ஆண்டுக்கணக்கு அறிக்கையில் ஜெய் ஷாவின் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனைக் கணக்கிலேயே காட்டவில்லை.
”சட்டப்பூர்வமாக இயங்கும் ஒரு நிறுவனத்திற்குக் கடன் கொடுக்கும் போது அதனைக் கணக்கில் காட்டாமல் இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்விக்குப் பதில் பெற கே.ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் பின்னணியைச் சற்று பார்க்க வேண்டும். இந்த கே.ஐ.எஃப்.எஸ் நிறுவனம் குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கந்த்வாலா குழும நிறுவனங்களுள் ஒன்று.
இந்நிறுவனத்தை ராஜேஷ் கந்த்வாலா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வட்டிக்கு கடன் வழங்குதல், வீட்டுமனை கடன் வழங்குதல், பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட நிதி சார்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. ராஜேஷ் கந்த்வாலாவின் மகளை, பாஜக எம்.பி.யும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – குஜராத் பிரிவின் தலைவருமான, பரிமள் நத்வானியின் மகன் திருமணம் செய்துள்ளார். அதாவது பரிமள் நத்வானியும், ராஜேஷ் கந்த்வாலாவும் சம்பந்திகள். கடந்த 2014ம் ஆண்டு மேல்சபைக்கு ஜார்கண்ட் மாநில பாஜகவினரால் பரிமள் நத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரும் தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும், சுருக்கமாகச் சொல்லப் போனால் விஜய் மல்லையாவைப் போல் இருந்து வருகிறார்.
பரிமள் நத்வானி – ராஜேஷ் கந்த்வாலா குடும்பத்தினர்
ஜெய் ஷாவின் நிறுவனத்திற்கு ’காப்பு அற்ற கடனாக’ (Unsecured Loan) ரூ.15.78 கோடி சர்வ சாதாரணமாக ”கூட்டு நிறுவனங்களுக்கு இடையிலான வைப்புத்தொகையாக” (Inter Corporate Deposits) கணக்கில் காட்டாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக, கந்த்வாலா நிறுவனத்திடம் (கே.ஐ.எஃப்.எஸ்) ’தி வயர்’ இணையதளம், ”ஜெய் ஷாவிற்குக் கொடுக்கப்பட்ட ரூ.15.78 கோடி கடன் தொகை கணக்கில் காட்டப்படாதது ஏன்?” எனக் கேட்டதற்கு இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை.
2015-2016-ம் ஆண்டிற்கான வருமானமான ரூ.80.5 கோடியில், 95 சதவீதத் தொகை, சரக்குகள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டியுள்ளார் ஜெய் ஷா. அதில் ரூ.51 கோடி வருமானம் வெளிநாட்டிற்குப் பொருளை விற்பனை செய்ததனால் கிடைத்த வருமானம் என கணக்குக் காட்டியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு ஒரு ரூபாய் கூட வெளிநாட்டிலிருந்து வருமானம் ஈட்டாத டெம்பிள் எண்டர்பிரைசஸ் ஒரே ஆண்டில் ரூ.51 கோடிக்கு வெளிநாட்டிலிருந்து வருமானம் ஈட்டியிருக்கிறது.
ஜெய் ஷா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.1.4 கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இந்நிறுவனத்தின் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார். குறுகிய காலத்தில் ரூ.80 கோடி வருமானம் ஈட்டித் தந்த ஒரு நிறுவனத்தை யாராவது ஊத்தி மூடுவார்களா என்ன?
கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கடனாகப் பெற்றது, ஒரே ஆண்டில் திடீரென அதிகரித்த ரூ.80.5 கோடி வருமானம், அதிலும் ரூ.51 கோடி வெளிநாட்டில் இருந்து வந்தது, வேலை முடிந்ததும் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது ஆகிய நடவடிக்கைகள், ஜெய் ஷா – ராஜேஷ் கந்த்வாலா கும்பல் முழுவதும் கருப்புப் பணப் பேர்வழிகள் என்ற சந்தேகத்தை உறுதிசெய்வதாக இருக்கிறது.
மோடியுடன் பரிமள் நத்வானி
பொதுவாகவே, கறுப்புப் பணப் பேர்வழிகள், அவ்வளவு ஏன், நமது ஏ1 ஜெயாவும் கூட இப்படித்தான் பல டுபாக்கூர் கம்பெனிகளை உருவாக்கி அதில் பணத்தை மாற்றிவிட்டு கருப்புப்பணத்தை வெள்ளையாக்கி சுருட்டிக் கொண்ட கதை நம் அனைவருக்கும் தெரியுமல்லவா? அதற்குச் சற்றும் குறையாத ஒரு நடவடிக்கையைத் தான் ஜெய் ஷா செய்திருக்கிறார்.
ஜெய் ஷா இத்தகைய நடவடிக்கைகளுக்காக மேலும் சில டுபாக்கூர் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கந்த்வாலாவின் நிதி நிறுவனம் கடனளித்த அதே ஆண்டில், ஜெய் ஷாவும் கந்த்வாலாவும் இணைந்து வரைமுறைக்குட்பட்ட பொறுப்புகொண்ட பங்குதாரர் (Limited Liability Partnership) நிறுவனமான ’சத்வா ட்ரேட்லின்க்’ (Sattva Tradelink) என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
துவங்கிய அதே ஆண்டில் அந்நிறுவனத்தையும் இழுத்து மூடியிருக்கின்றனர். இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஜெய் ஷாவின் வழக்கறிஞர், ’எதிர்நிலையான சந்தை நிலைமை’களின் காரணமாக, அந்த நிறுவனம் மூடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு கருப்புப் பணப் பரிமாற்றத்திற்காகத் துவங்கப்பட்ட டுபாக்கூர் ’லெட்டர்பேடு’ கம்பெனிதான் என்பது உறுதியாகிறது.
ஜெய் ஷா நடத்தி வந்த மற்றொரு நிறுவனம், குஷும் ஃபின்செர்வ். இந்நிறுவனத்திற்கு கடந்த 2014-2015 நிதியாண்டில் ரூ.2.6 கோடியை ”கூட்டு நிறுவனங்களுக்கு இடையிலான வைப்புத்தொகையாக” (Inter Corporate Deposits) (கடனாக) கந்த்வாலாவின் கே.ஐ.எஃப்.எஸ். நிறுவனம் கொடுத்ததாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அது ஒரு ”வரைமுறைக்குட்பட்ட பொறுப்புகொண்ட பங்குதாரர்” (LLP- Limited Liability Partnership) நிறுவனமாக மாற்றப்பட்டது. ஜெய் ஷா அந்நிறுவனத்தின் 60% பங்குகளைக் கொண்டிருந்தார்.
குஜராத்தில் உள்ள ’கலுப்பூர் வணிகக் கூட்டுறவு வங்கியில்’ இந்நிறுவனம் ரூ,25 கோடி கடன் வசதியைப் (Letter of Credit) பெற்றுள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் நிர்மா குழுமத்தைச் சேர்ந்த நபர்களும் இருக்கிறார்கள் என்பதோடு வங்கியின் தலைவரும் நிர்மா குழுமத்தைச் சேர்ந் அம்புபாய் மக்கான் பாய் பட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.
சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யஸ்பால் சுடசாமா
யஸ்பால் சுடசாமா என்ற அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குனரிடம் இருந்து வாங்கியதாகக் கூறப்படும் ரூ.1.2 கோடி சந்தை மதிப்புள்ள இடத்தையும், அமித் ஷாவின் பெயரில் உள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தையும் அடமானம் வைத்து ரூ.25 கோடி கடன் வசதியை இந்த வங்கியிலிருந்து பெற்றுள்ளார் ஜெய் ஷா.
இதில் குறிப்பிடப்படும் யஸ்பால் சுடசாமா என்பவர், சொராபுதீன் கொலைவழக்கில் அமித் ஷாவோடு சேர்த்து குற்றத்தை மறைத்ததாக சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர், அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் புண்ணியத்தின் விளைவாக இவ்வழக்கிலிருந்து வெளிவந்தவராவார்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது, அடமானம் வைக்கப்பட்ட இடங்களின் மதிப்பிற்கும், பெறப்பட்ட கடன் வசதியின் மதிப்பிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது தான். ரூ.6.2 கோடி மதிப்புள்ள இடத்தை அடமானம் வைத்தால் ரூ.25 கோடிக்கு கடன் வசதி பெற்றுக் கொள்வதில் எந்தக் குளறுபடியும் இல்லை என நியாயப்படுத்துகிறது ஜெய் ஷா தரப்பு. நிறுவனத்தின் இயங்கு மூலதனத்திற்காக 25 கோடி மதிப்புள்ள கடன் கடிதத்தின் வாயிலாக தேவையான சமயத்தில் கடன் பெற்றுக் கொண்டு, கடன் கடிதம் காலாவதியாவதற்குள் அதனைத் திரும்ப செலுத்திவிடுவதாகக் கூறுகிறது ஜெய் ஷாவின் தரப்பு.
இவ்வளவு சுலபமாக சாதாரணக் குடிமக்களுக்கோ, அல்லது சிறுதொழில் நிறுவனங்களுக்கோ இப்படி ஒரு ‘நிதிச்சேவை’ வழங்கப்படாத சூழலில் எந்த அடிப்படையில் ஜெய் ஷாவின் நிறுவனத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்பட்டிருந்தது என்பது தான் கேள்வி.
தற்போது அம்பலமாகியுள்ள ஜெய் ஷாவின் கலுப்பூர் கூட்டுறவு வங்கித் தொடர்பு மற்றும் அஹமதாபாத் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரான சுடசாமாவுடனான தொடர்புகள் ஆகியவை நமக்கு யாதின் ஓசாவை நினைவுப்படுத்துகின்றன. பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாதின் ஓசா, மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 2016, நவம்பர் 8 அன்று இரவு அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் பழைய நோட்டுக்களை குஜராத்தின் கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டதை அப்போதே அம்பலப்படுத்தியவர்.
அமித் ஷா கும்பல் – கூட்டுறவு வங்கி மூலம் கருப்புப்பணத்தை வெள்ளையாக்கியதை அம்பலப்படுத்திய முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. யதின் ஓசா
கருப்புப் பணத்தை கைப்பற்றுவதாக வீரவசனம் பேசிய பாஜக கும்பல், பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பிருந்தே இதுபோன்ற டுபாக்கூர் லெட்டர்பேடு கம்பெனிகளின் மூலம், கொடுக்கல் வாங்கலில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி கொடுத்து வந்துள்ளனர் என்பது இதுவரை பார்த்த நிகழ்வுகளில் தெளிவாகத் தெரிகிறது.
சரி விசயத்திற்கு வருவோம். இந்த குஷும் ஃபின்செர்வ் நிறுவனம், நிறுவனங்களுக்கான பதிவாளர் ஆவணங்களின் படி, பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருப்பதாகவே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்குத் துளியும் சம்பந்தமில்லாத வேறு சில தொழில்களிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்திருக்கிறது. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் கீழ் வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை எடுத்துச் செய்துள்ளது ஜெய் ஷாவின் குஷும் ஃபின்செர்வ் நிறுவனம்.
இத்தொழிலில் முன்பின் அனுபவம் இல்லாத ஜெய் ஷாவின் குஷும் நிறுவனத்திடம் மரபுகளை மீறி ரூ.15 கோடி மதிப்புள்ள, 2.1 மெகாவாட் காற்றாலையை நிறுவுவதற்கான அனுமதியைக் கொடுத்தள்ளது. அதோடு மத்திய அரசின் ’இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக் கழகம்’ (IREDA) சுமார் ரூ.10.35 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. அச்சமயத்தில் இத்துறையின் அமைச்சராக பியூஷ் கோயல் இருந்துள்ளார், தற்போது இவர் ரயில்வேத்துறை மற்றும் நிலக்கரித் துறையின் அமைச்சராக இருக்கிறார். இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது நல்லது அதனால்தான் அவர்கள் அனைவரும் தொழில் முனைவர்களாக இருக்கிறார் என்று திமிராக உளறியவரும் இவரே. ஒரு வேளை அமித்ஷாவின் மகன் திடீர் தொழிலதிபராக வளர்ந்ததை வைத்தும் அவர் சொல்லியிருக்கலாம்.
அனுபவமற்ற நிறுவனத்திற்கு அனுமதியும் கொடுத்து, கடனும் கொடுப்பது முறையானதா? என ’தி வயர்’ இணையதளம் ’இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக் கழகத்திடம்’ கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.ஆர்.டி.ஈ.ஏ. நிறுவனம், குஷும் ஃபின்செர்வ் நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கிய 10.35 கோடி கடன்
மொத்தத்தில், மோடி மத்தியில் ஆட்சி அமைத்த பின்னர், ஜெய் ஷாவின் பல்வேறு நிறுவனங்களும், அவற்றின் சந்தேகத்திற்கிடமான, கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகளும் நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளிலேயே தெளிவாகத் தெரிகின்றன.
திடீரென 16,000 மடங்கு உயர்ந்த ஜெய் ஷாவின் வருமானமும், திடீரென அதிகரித்த வெளிநாட்டுப் பரிவர்த்தனையும், இலாபத்தோடு ஓடிய நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் மூடப்படுவதும், திடீரென புதிய நிறுவனங்கள் துவங்கப்படுவதும், மூடப்படுவதும், இதுவரை நடந்த கருப்புப் பணப்பரிமாற்றங்களின் அதே வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டிருக்கின்றன.
துறை சாராத ஒரு நிறுவனத்திற்கு காற்றாலை அமைக்கும் பணி ஆணையை மத்திய அரசு கொடுத்ததும், அதற்குப் பொதுத்துறை நிறுவனம் கடன் கொடுப்பதும், வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் – மறுக்க முடியாத உண்மைகள்.
ஜெய் ஷாவிற்கு முறைகேடாக கடன் வழங்கிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், இவை வெளிப்படுத்தப்பட்ட பிறகும், இந்த ‘ஜனநாயக நாட்டின்’ எந்தத் தூணும் இதற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளி எறியவில்லை. ஆனால் ஜெய் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்ட குற்றக் கும்பலோ, உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறது. ஜெய் ஷா வயர் நிறுவனம் வெளியிட்ட கட்டுரையை மறுவெளியீடு செய்பவர்களும் அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன் காரணமாகவே, வயர் இணையதளத்தில் வெளியான இந்தக் கட்டுரை வேறு எந்த முக்கியப் பத்திரிக்கைகளிலும் வெளியாகவில்லை. ஜெய் ஷாவின் சார்பாக வழக்காடுவதற்கு, விதிமுறைகளை மீறி துணை சொலிசிட்டட்ர் ஜெனரலுக்கு அனுமதி வழங்கியுள்ளது சட்ட அமைச்சகம்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தி எழுதிய ரோஹினி சிங் மீது சமூக வலைத்தளங்களில் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது சங்கபரிவாரக் கும்பல். இத்தாக்குதல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ரோஹினி சிங். மேலும் “ நான் தைரியமானவள் என்பதனால் இதனைப் பற்றி பேசவில்லை. என் பணி பத்திரிக்கையாளர் பணி. அந்தப் பணியை நான் செய்தேன் அவ்வளவு தான்“ என்று கூறியிருக்கிறார் ரோஹினி சிங்.
ரோஹினி சிங் மீதும் , அவரது புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘தி வயர்’ இணையதளத்தின் மீதும் கிரிமினல் அவதூறு வழக்குப் பதிவு செய்து ரூ.100 கோடி மானநட்டஈடு கோரியிருக்கிறார் ஜெய் ஷா. உடன் இணைந்து மிரட்டுகிறார் மத்திய அமைச்சர். வழக்குகளின் முலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துவிட முடியும் என நினைக்கிறது காவிக்கும்பல்.
மோடி துதியை மட்டும் மந்திரமாகக் கொண்டு இயங்கும் ஊடக உலகில் இப்படி தைரியமாக அமித்ஷா குடும்பத்தின் ஊழலை வெளியே கொண்டு வந்த ரோஹினி சிங்கைப் பார்த்தாவது சுரணையற்றவர்களுக்கு சொரணை வரட்டும். வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு என்று நாடகமாடி நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அன் கோவை விரட்டாமல் மக்களுக்கு நிம்மதி இல்லை.
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி
மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள திரு. பி.பி. செல்லதுரை துணைவேந்தருக்குரிய தகுதி இல்லாத நிலையில் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு லயனல் அந்தோணி ராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. அந்த வழக்கில் 5-வது எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டுள்ள முனைவர் முருகதாஸ். அவர் தனது சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் முனைவர் மு.ராமசாமி மீது சில குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
முனைவர்மு.ராமசாமி , மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குப் புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்காக முதலாவதாகத் தேர்வு செயப்பட்ட மூவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். குழுவின் கூட்டுனரான முருகதாஸின் தில்லுமுல்லுகளை எதிர்த்துப் பத்து மாதங்களுக்கு மேல் போராடியும் பயனளிக்காத நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனக்கும் கூட்டுநர் முருகதாசுக்கும் இடையே நடைபெற்ற போராட்ட அனுபவங்களை முறையாகத் தொகுத்து உரிய ஆவணங்களுடன் ஒரு நூலாக.03.10.17 அன்று மதுரையில் செய்தியாளர்கள் அரங்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அளித்த செய்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது :-
‘அறம்செயவிரும்பு’
‘ஆகாயத் தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழி கூறும் திசைகாட்டிகளும்’ எனும் இந்நூல், ‘மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவிற்கான மூவரின் பெயர்ப்பட்டியலை மேதகு ஆளுநரிடம் பரிந்துரை செய்யும் குழுவில், பேரவை சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருந்தும், நான் ஏன் தேடுதல் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து 101/2 மாதங்களில் விலக வேண்டி வந்தது’ என்பதை விளக்குகிறது.
இதை நூலாக்கியதற்கான காரணம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில், மதுரையைச் சேர்ந்த திரு. இலயோனல்அந்தோணிராஜ், மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக, உயர் நீதிமன்றம் சென்றிருக்கிற நிலையில், அதில் எதிர் மனுதாரர் எண் 5 ஆகச் சேர்க்கப்பட்டுள்ள பரிந்துரைக் குழுவின் கூட்டுநர் முனைவர் முருகதாஸ், அவரின் எதிர்மனுவில் – புதிய தேர்வுக் குழுவில், துணைவேந்தர் தேர்விற்கான பரிந்துரைப் பட்டியலை உருவாக்கியதில் எந்தவகையிலும் இடம் பெற்றிருக்காத என் மேல் –பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது தான் !
இந்த நூல், ஒருவகையில், தவறுக்குத் துணை போகாத என்னின் தன்னிலை விளக்கமாயும், இன்னொருவகையில், கூட்டுநர் முனைவர் முருகதாஸின் அறக்கேடான பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவதுமாக அமைந்திருக்கிறது. அவரின் எதிர் மனுவில், நீதிமன்றத்திற்கு அவர் சொல்லியிருக்கிற தகவல்களை, என்பக்கச் சான்றுகளைக் கொண்டு அம்பலப்படுத்தும் நோக்கில் அவருக்கான எதிர்க் கேள்விகளை இதில் முன்வைத்திருக்கிறேன்.
அவரின்குற்றச்சாட்டு 1 : ‘I state that at the first meeting that was held on 24-04-2015, it was unanimously decided to follow the search process in a transparent manner and to invite eligible candidates through notification in the dailies and the website of the Madurai Kamaraj University’.- இது கூட்டுநர் முனைவர் முருகதாஸ் தன் எதிர் மனுவில் 5 -ம் பத்தியில் குறிப்பிட்டிருப்பது. இதை மேலோட்டமாகப் படிக்கையில் இதில் என் மேல்குற்றச்சாட்டு எதுவும் இருப்பதாய்த் தெரியாது. ஆனால், மிகப் பெரும் உண்மை கவனமாக மறைக்கப்பட்டுள்ளது.
என்பதிற்கேள்வி : அண்ணாமலைப் பல்கலை கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவிலும் அப்போது உறுப்பினராகச் செயல்பட்ட முனைவர் முருகதாஸ், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேடுதல் குழுவை அடியொற்றியே, சிற் சில மாற்றங்களுடன் அவரே முன்வைத்த விதிகளை, இந்நூலின்பக்கம் 68 முதல் 76 வரைக்கும் உள்ள ஆவணங்கள் தெளிவுபடுத்தும்.
அதிலிருப்பது அவரின் / என்னின் கையெழுத்துகள் மட்டுமே! பக்கம் 91 -இல் காணும் முனைவர் முருகதாஸ் கையொப்பமிட்டு வெளியிடப்பட்ட விளம்பரவாசகம் 26-04-2015 இல் ஏன் வெளிவரவில்லை என்பதன் பின்னிருக்கிற அரசியலை, அவரின் வெளிப்படைத் தன்மையற்ற, மூடிமறைத்த நடவடிக்கைகளுக்குள்ளிருந்தே இந்த நூல் பேசுகிறது.
மதுரைகாமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவின் முதல் கூட்டத்தில் (24-04-2015), விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதி நாளாக 01-06-2015 மாலை 5 மணி என்பதாக முடிவுசெய்து, 26-04-2015 -இல் அதை, The Hindu, தினமணி, தினத்தந்தி ஆகிய மூன்று நாளிதழ்களிலும் விளம்பரமாய் வெளியிடுவதாய்க் குழு உறுப்பினர்கள் மூவரும் எடுத்த ஒருமித்த முடிவு, (பக்கம்73-75), கூட்டுநரால் தன்னிச்சையாக நிறுத்திவைக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதும்.
நிகழ்வுப் பதிவில் குறிக்கப்பட்டிருக்கிற, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தேடுதல் குழுவின் விதியில் இருக்கிற ‘குற்ற வழக்குகள் எதுவும் என் மீது இல்லை’ என்கிற விண்ணப்பதாரரின் ஒப்புதல் பதிவை நீக்க, எங்களிடம் பொய்க்காரணம் கூறி, ஒரு மாதம் கழித்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தேடுதல் குழு விதி திருத்தப்பட்டு, அப்பதிவு நீக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய இறுதிநாள் 29-06-2015 மாலை 5 மணி என்பதாகவும் மாற்றப்பட்டதன் பின்னணி என்ன என்பதும், நூலின் பக்கம் 15-17 இல், அவற்றின் பின்னிணைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.
விளக்கம் : இந்நூலின் பக்கங்கள் 13 முதல் 17 வரையும், பின்னிணைப்புப் பக்கங்கள் 92 முதல் 96 வரையுமான, மே 1 முதல் மே 8 வரையுமான அவருடனான என்னின் மின்னஞ்சல் பதிவுகளும், முனைவர் முருகதாஸின் இந்த அறக்கேட்டையே விளக்குகின்றன.
அவரின்குற்றச்சாட்டு 2 : ‘In the meeting held on 22-08-2015, the decision to short list a panel of three names was evolved. In the same meeting, a hard copy of the consolidated list of 142 applications along with their details was provided to all the members of the search committee’. – இது அவரின் எதிர்மனுவின் 8 ஆம்பத்தியில் (நூலின்பக்கம் 137) குறிப்பிடப் பட்டுள்ளதாகும்.
என்பதிற்கேள்வி : மூவரும் கையொப்பமிட்டிருக்கிற 22-08-2015 நாளிட்ட நிகழ்வுப்பதிவு இந்நூலில் பக்கம் 103 இல் உள்ளது. அதில் இந்த நிகழ்வுகள் எதுவும் பதிவாகவில்லை. ஏனெனில் அப்படி எதுவுமே நிகழவில்லை.
அந்த நிகழ்வுப் பதிவில் ‘It is resolved to engage Thiru.IssacMohanlal, Advocate for WP no. 22565/2015 & 22566/2015 filed in the Madras High Court’ என்று மட்டுமே பதிவாகி உள்ளது.
24-07-2015 அன்று தான், விண்ணப்பங்கள் வந்து சேர்வதற்கான இறுதி நாள் எனில், வந்திருந்த விண்ணப்பங்கள் பற்றிய பதிவு, அந்த நாளுக்குப் பின் நடக்கின்ற இந்தக் கூட்டத்தின் நிகழ்வுப் பதிவில் பதிவாகி இருக்கவேண்டுமா இல்லையா? பதிவாகியிருக்கவில்லை.
விளக்கம் : இந்நூலின் 19 இலிருந்து 23 வரையுமான பக்கங்கள், முனைவர் முருகதாஸின் இந்த முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
அவரின்குற்றச்சாட்டு 3 : ‘In the subsequent meeting held on 10-10-2015, the process of short listing was almost completed. In the course of the meeting, Dr.Mu.Ramaswamy wanted to include one unqualified applicant in the panel. As his demand was not conceded to, there was apparently a change in the attitude of Dr. Mu. Ramaswamy’.- இது அவரின் 9 ஆவது பத்தியின் (நூலின்பக்கம் 137) என் மேலான குற்றச்சாட்டாகும்.
என்பதிற்கேள்வி : மூவரும் கையொப்பமிட்டிருக்கிற 10-10-2015 நாளிட்ட நிகழ்வுப்பதிவு இந்நூலில் பக்கம் 106 இல் உள்ளது. ‘Resolved to fix the norms’ என்று மட்டுமே உள்ளது. நீண்டநாள் விவாதத்திற்குப் பிறகு, அன்றுதான் விதிமுறைகள் வகுப்பதென்று முடிவு செய்யப்பட்டது.
எப்படி வகுப்பதென்று, மூவரும்கூடி எந்த முடிவும் எடுக்கவில்லை. விதிமுறைகள் வகுக்கிற பொறுப்பும் என்னிடம்தான் கொடுக்கப்பட்டிருந்தது. பக்கம் 107 இன், 16/17/18-10-2015 நாளிட்ட மின்னஞ்சல் பதிவுகளும், பக்கம் 108 இன் 21-10-2015 நாளிட்டு நான் வகுத்து, மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பியிருந்த மதிப்பெண் விதிமுறைகளும் இதைத் தெளிவுபடுத்தும்.
இதைத் தொடர்ந்து 17-11-2015 வரையும் எனக்கும் அவருக்குமான மின்னஞ்சல் பதிவுகளில் எந்த இடத்திலும், தகுதியற்ற ஒருவரை நான் பட்டியலில் சேர்க்கச் சொன்னதாக எங்குமே பதிவில்லை.
யார் பெயரைச் சொன்னேன் என்பதை இப்போதாவது வெளியிட்டிருக்கலாமே! ஆனால் முனைவர் முருகதாஸ், இறுதி நாளான 24-07-2015 -க்குப் பிறகு, 10-10-2015 அன்று முனைவர் மாணிக்கவாசகம் என்பவரிடமிருந்து தன் விவரக்குறிப்பு விண்ணப்பத்தை வாங்கி உறுப்பினர்கள் இருவருக்கும் தெரியாமல், பல்கலைக்கழக விண்ணப்பதாரர் பட்டியலில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார் என்பதுதான் அவர் மீதுள்ள இன்னொரு குற்றச்சாட்டு!
இந்நிலையில் அவர், ‘Please also note that I am not sponsoring anyone from my community or from my native place as against the impression created by certain persons in the university’ என்று, குற்றம் உள்ள நெஞ்சாக 09-02-2016 இல் மின்னஞ்சல் கடிதம் வழி குறுகுறுத்திருப்பதன் (நூலின்பக்கம் 129) நோக்கம் என்ன?
விளக்கம் : இந் நூலின் பக்கங்கள் 24 முதல் 28 வரை இந்த முறைகேட்டை விளக்குகிறது.
அவரின் குற்றச்சாட்டு 4 : ‘In the next meeting on 17-11-2015, Dr. Mu. Ramaswamy want only raised unwarranted issue of number of applications based upon a non–existent register purportedly maintained by the Registrar’s office. He want only stated that only 112 applications were received instead of the actual number of 142 applications’.-இது அவரின் எதிர்மனுவின் 10 -ஆம் பத்தியில் (நூலின்பக்கம் 138) கூறப்பட்டுள்ள என் மீதான குற்றச்சாட்டாகும்.
என்பதிற்கேள்வி : 17-11-2015 நாளிட்ட நிகழ்வுப்பதிவு என்ன சொல்கிறது என்பதைப் பக்கம் 117 -இல் காணலாம். அதில், ‘The committee met on 17-11-2015 at 11.00 am and the meeting was inconclusive due to the differences noticed in the number of applications received in office’ என்றுள்ளது. அதில் நான், ‘applications submitted before the advertisement and after the deadline should not be considered. 112 applications received by the office of the search committee after the advertisement should be taken into account for the search process’ என்று பதிவு செய்திருக்கிறேன்.
ஆனால் இந்தக் கூட்டத்தைப்பற்றி நான் மேதகு ஆளுநரிடம் 31-12-2015 -இல் முறையிட்ட நிலையில், 07-01-2016 -இல் கூட்டுநர் முனைவர் முருகதாஸ், மேதகு ஆளுநரின் முதன்மைச் செயலருக்கு, என் 31-12-2015 நாளிட்ட கடிதத்திற்குப் பதில் எழுதியிருக்கிற அவரின் கடிதத்தில், பக்கம் 125 -இல் குறிப்பிட்டிருக்கிற, ‘as far as the meeting of the search committee held on 7-11-2015 is concerned I wish to state that the meeting had to be closed earlier due to inclement weather’ என்பது உண்மையை மறைத்திருக்கிற மிகப்பெரும் பொய்யில்லையா?
இன்னொன்று, அந்தக் கடிதத்தில் பக்கம் 123 -இல் அவர் சொல்லுகிற, ‘including those applications sent to the residential address of the convener besides some applications forwarded to the convener by the office of the Excellency as well as the Higher Education Department’ என்பது எப்படிச் சரியானதாகும்?
24-04-2015 -இல் ஒருமித்து எடுத்திருந்த தீர்மானம் (நூலின்பக்கம்74/ 75) ‘ Three copies of application should be submitted. The application should be submitted to the convener, Search committee for recommending the panel for appointment as Vice-Chancellor, Office of the Search Committee, Madurai Kamaraj University, Madurai 625021, Tamilnadu…. Delay due to the postal delivery/ any other reason beyond the due date will not be accepted’ என்பது கூட்டுநருக்கும் சேர்த்துத்தானே?
அவர் வீட்டிற்கு வந்ததையும் மேதகு ஆளுநர் அலுவலகத்திற்கு வந்ததையும் உயர் கல்வித்துறைக்கு வந்ததையும் எந்தத் தேடுதல் குழுக் கூட்டத்திலாவது வைத்து விவாதித்திருக்கிறாரா? கூட்டுநர் அவர் விருப்பத்திற்கேற்ப, காலம் கடந்தும், விண்ணப்பங்களை மற்றைய உறுப்பினர்களுக்குத் தெரியாமல் சேர்த்துக் கொள்ளலாம் என்கிற விதி எங்குள்ளது?
அந்த உரிமை, அவருக்கு எங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது? இன்னொன்று, தேடுதல் குழு அலுவலகத்தில் தேடுதல் குழுவால் அனுமதிக்கப்பெற்று பெறப்பட்ட விண்ணப்பங்களின்பதிவேட்டை, ’பதிவாளர் அலுவலகத்தில் உள்நோக்கத்தோடு தயாரிக்கப் பெற்ற, தேடுதல் குழுவிலேயே இல்லாத பதிவேடு’ என்று கூட்டுநர் கூறினால் (நூலின்பக்கம் 138),தேடுதல்குழு அலுவலகத்திற் குவந்திருந்த விண்ணப்பங்களை நாள் வாரியாகப் பதிவு செய்த பதிவேடு எங்குள்ளது? யாரிடமுள்ளது?
அப்படி எதுவும் இல்லாமல், எங்கு, எப்படி, யாரால், எதைக் கொண்டு விண்ணப்பதாரர் பட்டியலானது தயாரிக்கப் பெற்றது? வானத்திலிருந்து தானாக வந்து சேர்ந்து கொண்டதா? இவை எதற்கும் கூட்டுநரிடமிருந்து நம்பத்தகுந்த பதில் இல்லை.
விளக்கம் : இவை யாவும் இந் நூலின் பக்கங்கள் 48 முதல் 53 வரையும் விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டுநர் முனைவர் முருகதாஸ் தேடுதல் குழுவில் நீடிப்பது சரியில்லை என்று மேதகு ஆளுநருக்கு 31-12-2016 இலும் கடிதம் அனுப்பியிருந்தேன். (பக்கம் 120-121). எதுவும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்ற நிலையில், என்னைக் கூட்டுநர் முனைவர் முருகதாஸே பொய்கூறி இப்பொழுது என்னை வம்பிற்கு இழுத்திருக்கிற நிலையில், நான் நடந்த உண்மைகளைக் கூறாதிருப்பது சரியல்ல என்பதால், இந்த நூலின் மூலமாய் என் விளக்கங்களை ஊடகத்தவர் முன்பு வைக்கின்றேன். உண்மையைக் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
நாள் : 03-10-2017 (மு.இராமசுவாமி)
தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி