Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 506

தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !

1

இவர்களுக்கில்லை தீபாவளி! படக்கட்டுரை

மோடியின் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு, பணமதிப்பழிப்பு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு  காரணமாக இன்று எந்த பண்டிகைகயும் கொண்டாடத்தக்கதாக இல்லை. ஒருவாரம் முன்பிருந்தே ஆரம்பிக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் இந்தவருடம் மிகவும் குறைவான  கொண்டாட்டங்களே காணப்பட்டன.

ஆனாலும் மக்கள் “ஆட்சியாளர்கள் யாரும் சரியில்லை, ஒருத்தனும் யோக்கியன் இல்லை…” என்று சொன்னாலும், தேர்தல் நாளில் வரிசையில் நின்று எப்படி வாக்களிக்கிறார்களோ அதுபோல தீபாவளியும் இன்று ஒரு பழக்கத்தால் கொண்டாடப் படுகிறது. ஆனாலும் இந்த சம்பிரதாயமான கொண்டாட்டம் கூட இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் பேசுகின்றனர். இந்த நேர்காணல் தீபாவளி அன்று சென்னை நகரின் சில பகுதிகளில் எடுக்கப்பட்டது.

ரவி, கோடம்பாக்கத்தில் கரும்புச்சாறு கடை வைத்திருப்பவர்.

தீபாவளி நமக்கு எல்லாம் இல்ல… பசங்களுக்கு தான். போன வருசத்தை விட இந்த வருஷம் எல்லா பொருளும் வெல அதிகம். வேல செஞ்சா தான எதுனா வாங்கி குடுக்க முடியும்.”

செல்வி, பெரியார் நகர் துப்புரவு தொழிலாளி.

எனக்கு அஞ்சும் பொண்ணுங்க. புருஷன் ஒரு குடிகாரன். இருக்குற பொண்ணுங்கள கட்டிக்கொடுக்கணும். நா… வேலைக்கு வந்தா தான் பொழப்பு ஓடும். இதுல எங்க தீபாவளி கொண்டாடுறது. வெறும் ரூ.6,000 சம்பளம். இத வச்சிக்கிட்டு இன்னா பண்றது. இதுக்கே நான் கான்ராட்டு தொழிலாளி தான். எங்கள நிரந்தரம் பண்ண சொல்லி பல போராட்டம் பண்ணிட்டோம், ஒன்னும் ஆகல. எப்ப நிரந்தமா வேலை கெடக்கிதோ அது தான் எனக்கு தீபாவளி.”

சுரேஷ்குமார், துப்புரவு தொழிலாளி.

தீபாவளி கொண்டாடுறதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு. காலைல இருந்து இந்த குப்பைய வாரிகிட்டு இருக்கேன். ஒன்பது மணிக்கு வாங்கி வச்ச இட்லி. இப்ப மணி பதினொன்னு ஆகுது. இன்னும் சாப்படல. இது தான் எங்க பொழப்பு. நான் வாங்குற சம்பளத்துக்கு தீபாவளி ஒரு கேடா? என்னால என் புள்ளைங்களுக்கு பட்டாசு வாங்கி தர முடியல. என் தம்பி தான் வாங்கி தந்தான். நாள் முழுக்க ஒழச்சாலும் ஒன்னும் ஒட்டலையே!”

ருக்கு, வள்ளுவர் கோட்டம் அருகே 20 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர்.

“ இன்னா கொண்டாட சொல்ற. மோடி வந்து எல்லாத்துக்கும் டேக்சு போட்டுட்டாரு. யாரும் பூ கூட வாங்க வர மாட்றாங்க. வந்தாலும் வெலைய கேட்டுட்டு போயிடறாங்க. இன்னிக்கு விக்கிற வெலவாசிக்கு ஒருகிலோ கறி எடுத்து துன்ன முடில. தோ… காய் கொழம்பு சாப்ட்டுன்னு கீறேன். எல்லா காலமும் ஒழப்பு…ஒழப்பு தான். என்னிக்கு கண்ணா மூடுரனோ அது தான் எனக்கு ரெஸ்ட்.”

பார்த்திபன், அகத்தி கீரை விற்பனையாளர்.

“விடிய காத்தால கொல்லைல இருந்து எடுத்துட்டு வந்தது.. இத அதிகமா கோசாலைக்கு தானமா கொடுக்க சேட்டுங்க தான் வாங்குவாங்க. நம்மாளுங்க ஏதாவது வைத்தியத்துக்கு தான் வாங்குவாங்க. இன்னைக்குள்ளே இதை வித்துடனும். இல்லனா வீணா போய்டும். இது வித்துட்டாலே எங்களுக்கு தீபாவளி தான்.”

சிவக்குமார், மாநகரப் போக்குவரத்து கழக தொழிலாளி.

எந்த ஒரு பண்டிகையும் மகிழ்ச்சியா இருக்கத் தான். ஆனா இன்னைக்கு நெலம அப்படி இல்ல. அதனால் நமக்கு இன்னைக்கு தீபாவளி இல்ல. மத்த மக்கள் மகிழ்ச்சி தான் எங்களோட மகிழ்ச்சி.

ராஜேந்திரன், சைக்கிள் கடை.

“எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ… இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும். இதை விட வேறென்ன பண்டிகை எனக்கு வேணும்.”

சுப்ரமணியன், புதினா – கொத்தமல்லி விற்பவர்.

“சம்பாதிக்கிற பணம் வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் தான் இருக்கு. இதுல தீபாவளிய எப்படி கொண்டாடுறது. எனக்கு ரெண்டும் பொண்ணு தான். இன்னிக்கு வேல இருந்தா வர வருமானத்த கொண்டு பசங்களுக்கு ஏதாவது வாங்கி தரலாம்னு வந்தேன். வேலை இல்லாததால இப்ப சும்மாவே திரும்பி போறேன். இனிமே தான் யார்கிட்டயாவது ஒரு 500 ரூபா கடன் கேட்டு பார்க்கணும்”.

ஏழுமலை, இருபது ஆண்டாக இளநீர் விற்பனை செய்து வருபவர்.

“நாம என்ன அரசாங்க வேலையா செய்யுறோம். கையெழுத்து போட்டு சம்பளமும் போனசும் வாங்கி கொண்டாடுறதுக்கு. மழையானாலும், வெயிலானாலும் வேலைக்கு வந்தா தான் சோறு.”

பொன்னம்மாள், சைதாப்பேட்டை மார்கெட்டில் பூ, தோரணம் விற்பவர்.

“ நேத்துலாம் கீர வித்தேன். இன்னிக்கு எங்கயும் கீரை கெடக்கல. இந்த பூவும் தோரணமும் தான் கெடச்சது. இதை வித்தா தான் எனக்கு சோறு.”

ஆட்களிளில்லாத சைதாப்பேட்டை மார்க்கெட்டில் வாடிக்கையாளரின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்  பாட்டிகள்.

இவர்களுக்கு இல்லை தீபாவளி !

-வினவு செய்தியாளர்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு – கருத்துக் கணிப்பு

1

தீபாவளிக்கு ஒரு புயல் கரையைக் கடக்கும் என்றார்கள். அந்தப் புயல் கரையைக் கடக்கவில்லை. ஆனால் வாரா வாரம் திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் “என்னுள்ளே மையம் கொண்ட புயல்” தொடரை ஆ.விகடனில் வெளியிடுகிறார்.

ஒருத்தருக்குள்ளே மையல்தான் வரும். புயல் வருவதாக இருந்தால் ஏதோ சில பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டு பாரதூரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். கமல் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் சாதரணமாக நடந்தாலே கண்ணி வெடிக்குரிய சோதனைகள் மாதிரி செக் பண்ணிவிட்டுத்தான் உலவ விடுகிறார்கள் அவரது அணியினர்.

கமலைப் போன்றவர்களின் புயலை புரளி என்பதா, இல்லை புதிரா என டிவிட்டர் துவங்கி ஃபேஸ்புக் வரை அவ்வ்ப்போது ஆய்வுகள் நடக்கின்றன. நடக்கட்டும்! செயலுக்கு வழியில்லாத போது சிதறல்களே மாபெரும் ஆய்வுகளாவதில் தவறில்லை!

மேற்படி புயல் தொடரில் மூன்றாமாவது பாகத்தில் அன்னார் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தி வெளியானது. என்னவாம்?

பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, மோடி கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறார் என்று நம்பி அதை ஆதரித்தவர்கள் பலர். அவர்கள் பெரும்பான்மை மக்கள்.

இது மோசடி என்று தெரிந்தும், இதை எதிர்த்துப் பேசினால், கருப்பு பண பேர்வழி என்ற முத்திரையை மோடி நம் மீது குத்தி விடுவார் என்று பயந்து வரவேற்றவர்கள் பலர்.

ரஜனிகாந்த் முதல் பல கருப்பு பண நட்சத்திரங்களும் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

முதல் நாளன்றே இதனை எதிர்த்து, இதன் நோக்கத்தை அம்பலப் படுத்தியவர்கள் சிலர். அவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் இடதுசாரிகள்.

அன்று கமல் இதை ஆதரித்தார்.

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதனால் அழிந்தவர்கள் கருப்பு பண பேர்வழிகள் அல்ல, சாதாரண மக்களும் அவர்களுடைய சிறு தொழில்களும்தான் என்பது உலகத்துக்கே வெளிச்சமாகிவிட்டது.

போனமாதம் (செப் 22 ஆம் தேதியன்று) பணமதிப்பழிப்பு பற்றி கேட்டபோது, உரிய ஆதாரம் இல்லாமல் அதனை விமரிசிக்க முடியாது என்று பதிலளித்தார் கமலஹாசன். ஸ்வச் பாரத், பண மதிப்பழிப்பு போன்ற நடவடிக்கைகளின் நோக்கம் நேர்மையானது என்று மோடிக்கு சான்றிதழ் வேறு கொடுத்தார்.

தினத்தந்தி, தினகரன், நக்கீரன், ஜுவி படிக்கின்ற சராசரித் தமிழர்கள் மட்டுமின்றி, நம்மாள் செய்வது சரியில்லை என்று அவாளுக்கே புரியத்தொடங்கிய காலத்திலும் கமலுக்கு இந்த உண்மை புரியவில்லையாம். உலக சினிமா, உலக கவிதை, இலக்கியமெல்லாம் படிக்கும் இந்த ஞானிக்கு பொருளாதார அறிஞர்கள் சிலர் தொலைபேசியில் சொன்ன பிறகுதான் மேட்டரே புரிந்ததாம்.

அதற்குப் பிறகுதான் கமலின் இந்த மன்னிப்பு. தான் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி மோடியையும் மன்னிப்பு கேட்குமாறு சிபாரிசு செய்திருக்கிறார் கமல். இதுதான் மிகப்பெரிய கேலிக்கூத்து.

ஐயா, செல்லாத நோட்டு விவகாரத்தில் செத்தவர் எத்தனை, வியாபாரத்தை இழந்தவர் எத்தனை பேர், வேலைகளை விட்டு துரத்தப்பட்டவர் எத்தனை பேர் என்பதை உலகமே அறியும். ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து டவிட்டரிலும், தனது கிச்சன் கேபினட் மூலமாக  உலகையும் பார்க்கும் கமல் அவர்களுக்கு அது தெரியாததில் வியப்பில்லை.

முக்கியமாக ஹிட்லர் கூட ஒரு ஹாய் மன்னிப்பு என்று கேட்டால் பெருந்தன்மை என ஆசிரியப்பா பாடும் வல்லமை கொண்ட கமல்ஹாசனின் அரசியல் அறிவு, பிரவேசம் குறித்து யோசித்தால் டெரராக இருக்கிறது.

விடுங்கள்!

கமல்ஹாசனின் அந்த பகிரங்க மன்னிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்

  • நேர்மையான மன்னிப்பு
  • டேமேஜ் ஆன இமேஜை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி
  • கோழைத்தனம் பாதி சந்தர்ப்பவாதம் பாதி
  • நேர்மையில்லைதான், இருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்கிறாரே

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

உளுந்தூர் பேட்டையில் டெங்கு : போராட்டமில்லாமல் ஆரோக்கியம் வருமா ?

0

உளுந்துர்பேட்டை பேருராட்சி ஆணையருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

மிழகத்தில் டெங்குகாய்ச்சலால்  பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்கள் குழைந்தைகள் என 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக பலவேறு ஊடக செய்திகள் கூறுகின்றன. அரசோ இந்த எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு தீயாய் வேலை செய்கிறது.  சுகாதார சீர்கேட்டால் நோய் தீவிரமடைந்துள்ளது, தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் உளுந்துர்பேட்டை, திருக்கோயிலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளில் மருத்துவமனை அதை சுற்றியுள்ள உட்பகுதி, நகரம் முழுவதும் டெங்குவின் பாதிப்பை விளக்கி 5,000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. உளுந்துர்பேட்டை நகரை சுற்றியும் கழிவுக் கொட்டப்படுகிறது. அரசு மருத்துவமனை சுற்றியும் சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இந்திரா நகர் பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது, பேருந்து நிலையமும் பின்புறமும் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சட்டமன்ற அலுவலகம் அருகாமையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. உளுந்துர்பேட்டை கள்ளக்குறிச்சி ரோட்டின் அருகில் நகரத்தின் கழிவுகள் கொட்டபடுகிறது. நகரத்தின் அருகாமையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது 180 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியைச் சுற்றிலும் குளம்போல் நீர்தேங்கியுள்ளது. விடுதிஅருகாமையில் சாக்கடை ஓடுவதால் அம்மாணவர்களுக்கு நோய் தோற்றும் அபாயம் உள்ளது .

இந்த பதிப்பு அனைத்தையும் மனுவாக தயாரித்து   16-10-2017 அன்று காலை 12 மணியளவில்  மக்கள் அதிகாரம் உளுந்துர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அரிகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முழக்கம் போட்டுகொண்டு பேருராட்சி அலுவலம் வரை ஊர்வலமாக சென்று பேருராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்டு மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், ஆணையர். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் அதிகபடியான மக்களை திரட்டி முற்றுகையிடுவோம் என்பதை மக்கள் அதிகாரம் சார்பாக  தெரிவிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கிருஷ்ணம்மாள் சாகும் போது ஒரு மருத்துவர் கூட இல்லை !

0

ருத்துவம் என்பது நமது பிறப்புரிமை ஆனால் அரசோ நமக்கு இறப்பை மட்டுமே கொடுக்கிறது! தருமபுரி மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக பென்னாகரம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் 800 -க்கும் அதிகமான மக்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கிறார்கள்.

கடந்த 15.10.2017 அன்று காலை பிரசவத்திற்காக கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த அன்பரசு அவர்களின் மனைவி கிருஷ்ணம்மாள் (25 வயது) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.  10.30 -க்கு சுகபிரசவமாக பெண் குழந்தை பிறந்தது அவருக்கு இது இரண்டாவது குழந்தை என்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கலேதும் இல்லை. தாயும் சேயும் நலமுடனே இருந்தனர்.

திடீரென கிருஷ்ணம்மாளுக்கு ரத்தபோக்கு ஏற்றபட்டுள்ளது. இந்த பிரச்சினையை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முறையாக கவனிக்காமல் இருந்துள்ளனர். ரத்தபோக்கு அதிகமானவுடனே கிருஷ்ணம்மாள் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார்.

இதில் ஆகக்கொடுமையான விசயம் என்னவெனில் கிருஷ்ணம்மாள் நிலை மோசமாக இருக்கும் போது மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை என்பதுதான். இவ்வாறு முறையான மருத்துவமின்றி அநியாயமாக உயிரிழந்தார் கிருஷ்ணம்மாள்.

அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனை அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் அவரது உறவினர்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவமனை அதிகாரி போராடி கொண்டிருக்கும் மக்களை சந்திப்பதற்கு பதில் மருத்துவ மனையில் முறையாக மருத்துவம் பார்க்காத மருத்துவர்களை காப்பற்றுவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குப் பிறகுதான் அதிகாரிகள் பேச வந்தனர்.

கிருஷ்ணம்மாள் இறப்பு குறித்து உறவினர்களை அழைத்து பேசும்போது மருத்துவம் பார்க்க தவறிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க என்பதை குறித்து மேலிடத்திற்கு அனுப்பிய புகாரை படித்துக்காட்டுங்கள் என உறவினர்கள் கேட்டனர். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கிருஷ்ணம்மாளுக்கு மருத்துவம் பார்த்தனர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் குற்றவாளிகளை தப்ப வைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் செய்த பிறகே மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர். இப்படி மருத்துவம் முறையாக பார்க்காமல் இறப்பது ஏதோ ஒரு சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது. மொத்த அரசு மருத்துவமனையின் நிலைமையும் இதுதான். மாவட்ட தலைமை மருத்துவமனையில் 40 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் கூட இல்லாமல் கிருஷ்ணம்மாள் இறந்து போயுள்ளார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையே இப்படி என்றால் இதற்கு கீழ் இருக்கும் மருத்துவமனைகளின் நிலை என்னவாக இருக்கும். ஏழை மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் மரணம் தான் என்பது இன்றைய அரசு மருத்துவமனையின் நிலை. மக்கள் இன்று அரசு மருத்துவமனை என்றலே அச்சப்படுகிற நிலைதான் இருக்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்து கொள்ள சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்கின்றனர் மக்கள்.

விஞ்ஞானம் வாளர்ந்து விட்டது ‘நிலவில் தண்ணீர்’ இருப்பதை கண்டு பிடித்து விட்டோம். உலக அரங்கில் தனி இடத்தை பிடித்துவிட்டோம் என மார்தட்டி பேசி கொள்ளும் ஆட்சியாளர்கள். இன்னும் அடிப்படை மருத்துவம் கூட இல்லாமல் மக்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செத்து மடிகிறார்கள்.

டெங்கு வந்து நாடு முழுவதும் மக்கள் செத்துக்கொண்டு இருக்கும் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டெங்குவால் ஒருவர் கூட தமிழ்நாட்டில் இறக்கவில்லை என்று பேசுகிறார். நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேலானவர்களுக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் ‘சாணத்தை வீட்டு முன்னால் தெளியுங்கள்’ டெங்கு வராது என்று பேசுகிறார்கள் அமைச்சார்கள். மற்றொரு அமைச்சர் மாட்டு மூத்திரத்தை பயன்படுத்த சொல்கிறார்.

மக்கள் நோய் வந்து சாகும்போது மருத்துவர்களை நியமிப்பது, மருந்துகளை தரமாக கொடுப்பது, சுகாதாரத்தை தரப்படுத்துவது, என்ற அடிப்படை வேலையை கூட அரசு செய்வதற்கு துப்பபற்று கிடக்கிறது. மக்கள் கொத்து கொத்தாய் சாகும்போது மக்களை பாதுக்காப்பதை விட்டு டெங்கு மரணங்களை மூடி மறைக்கும் வேலையைதான் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு செய்கின்றனர்.

மக்களுக்கு முறையான மருத்துவம் கிடைக்காத அவலநிலையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் தங்கள் கொள்ளையையால் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றனர். அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் நோயாளிகளை தொட்டுகூட பார்பதில்லை, நோயாளிகளை பார்த்தவுடன் மருத்துவ சீட்டில் மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றர்.

என்ன பிரச்சனை என்றுகூட கேட்பதில்லை, ஆனால் இவர்கள்  வெளியில் நடத்தும் மருத்துவமனையில் இரவு 12 மணி என்றால் கூட வந்து பார்க்கின்றர். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 2 மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்கள், தனியாக நடத்தும் கிளினிக்குகளில் குறைந்த பட்சம் 500 ரூபாய் மருந்து எழுதி கொடுக்கின்றனர்.

மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தை மறுத்து, சட்டபூர்வ கொள்ளைக்கு வழி வகுப்பதே அரசின் தற்போதைய கொள்கையாக உள்ளது. நீட் வருவதால் தரமான மருத்துவமோ அல்லது அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவம் கிடைப்பதையோ உறுதிசெய்ய முடியாது.

மோடி அமுல்படுத்தி வரும் நிதி ஆயோக் திட்டம் அரசு மருத்துவமனையை தனியாருக்கு தரைவார்க்க சொல்கிறது. மருத்துவம் என்பது நமது பிறப்புரிமை, நமது உரிமையை மருத்துவத்தை சேவையாக, இலவசமாக பெற போராடுவதே நமக்கு தற்போது தேவையாக இருக்கின்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
பென்னாகரம், தொடர்புக்கு – 81485 73417.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஜி.எஸ்.டி – யை அம்பலப்படுத்தி கோவை மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

1

லகோடி மக்களின் வாழ்வையும், லட்சக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், சிறு குறு நிறுவனங்களையும் சூறையாட வந்துள்ளது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடவடிக்கை. இதனை எதிர்த்து மக்கள் அதிகாரம் கோவை மண்டலம் சார்பாக பாப்பநாயக்கன் பாளையம் காய்கடை மைதானத்தில் 2017 செப் 27 அன்று பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு அப்பகுதியின் C2 போலீசு நிலையத்தில் 31.08.17 அன்று முறையாக கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டஒழுங்கு கெட்டுவிடுமென காரணம் காட்டி அனுமதி தரமறுத்தது போலீசு. அதனை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்து 11.10.2017 -அன்று கூடம் நடத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது (ஆணை எண் 25561/17).

ஆனால் அதற்கான அனுமதிக் கடிதத்தை தருவதற்கு 10.10.2017 வரை இழுத்தடித்து, அதையே காரணம் காட்டி திட்டமிட்டிருந்த நாளில் பொதுகூட்டத்தை நடத்தவிடாது சதி செய்தது போலீசு. கோவை மண்டலம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மேற்கண்ட பொதுக்கூட்டம் குறித்து துண்டறிக்கைகள் விநியோகித்து பேருந்து, இரயில், சிக்னல், குடியிருப்பு பகுதி, கடைவீதி என பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத, காவிக்கும்பல் – காக்கிகளின் துணையுடன் 08.10.2017 ஞாயிறு அன்று கோவை இராமநாதபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எட்டு தோழர்கள் மீது IPC 384 சட்ட பிரிவின் படி வழக்கு தொடர்ந்து போலீசு நிலையத்திலேயே இரவு முழுதும் அடைத்து வைத்தது. மறுநாள் காலை தோழர்களை, நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது போலீசு. மேலும் நமது வழக்கறிஞர்களின் தொடர் வாதத்தால் நீதிபதியின் முன் காக்கி(விக)ள் முகம் தொங்கிப்போனது.

இதனிடையே 11.10.2017 -லும் பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் தள்ளிபோட சொன்ன C2 காவல்துறை, உயர்நீதிமன்ற ஆணைக் கடிதத்தை பார்த்தும் ஏதும் அறியாததை போல் நடித்தது. மக்கள் அதிகாரத்தின் தொடர் போராட்டத்தால் 13.10.2017 கூட்டம் நடத்த அனுமதியளித்தது. கோவை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மீண்டும் பிரச்சாரம் வலுப்பெற்றதை பார்த்த காவல்துறை, அனுமதி கேட்ட ஓரிரு நாட்களில் பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில், மாநகர நிர்வாகம் சாக்கடை சீரமைப்புப்பணி என்ற பெயரில், ஒரு பெரும் குழியை வெட்டியது. இதுவே சாக்கென்று போலீசு கூட்டத்திற்கு அனுமதியை மீண்டும் மறுத்துப் பேச தொடங்கியது.

அவர்களிடம் தோழர்கள் உங்கள் ‘அக்கறையை’ பாராட்டுகிறோம். கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என கூறி பொதுக்கூட்ட வேலையை தொடங்கினர். இதனூடே பிரச்சாரம் செய்த 4 தோழர்களின் கைதை கண்டித்து ஒட்டப்பட்ட தோழமை இயக்க போஸ்டர்களை போலீசே கழுதை போல மாறுவேடத்தில் சென்று கிழித்து எரிந்தது.

13.10.17 பொதுக்கூட்ட பகுதியை சுற்றியுள்ள கடைகள், குடியிருப்புகள், கிரைண்டர் – மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து, பொதுக்கூட்டதிற்கு அழைக்கும் பணியில் தோழர்கள் ஈடுபட்டனர். மாலை எதிர்பாராத மழையை கூட ஒரு பொருட்டாகவே எண்ணாமல் நனைந்துகொண்டே மகஇக கலைக்குழு தோழர்களின் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கியது, மழையின் காரணமாக ஆரம்பத்தில் தயங்கிய மக்கள், பின்னர் தானாக முன்வந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.

கூட்டத்திற்கு கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை தாங்கினார். பிரச்சாரத்தில் ஈடுபட்டு கைதான தோழர்களை போலீசின் சதியை அம்பலப்படுத்தி ஒரே நாளில் பிணையில் எடுத்த தோழர் பாலமுருகன் (PUCL) GST யின் சட்ட விதி மீறல்களை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்து பேசிய தோழர் கிருஷ்ணமூர்த்தி (CITU மாநில நிர்வாக குழு) GST வரி விதிப்பால் இலட்சகணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், பலநூறு சிறுகுறு நிறுவனங்கள் அழிந்து வருவதை அம்பலப்படுத்தினார்.

திரு.மாணிக்கம் (தமிழ்நாடு வணிகர் சங்கம் – தலைவர் கோவை) GST வரியினால் இலட்சகணக்கான வியாபாரிகள் தமது தொழிலை இழக்கப்போவதையும், அதன் மூலம் ஊகவணிகம், விலைவாசி உயர்வு அதிகரித்து வருவதையும் பற்றி விளக்கிப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் – கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ் ஏற்கனவே தேயிலை தொழில் நலிவுற்றதையும், எஞ்சியதை GST வரி காவுகொள்ள காத்திருப்பதையும் விளக்கினார்.

பின்னர் பேசிய பு.ஜ.தொ.மு மாநில துணை தலைவர் தோழர் விளவை ராமசாமி GST -யின் வரிமுறையால் பஞ்சாலைகள் மற்றும் மில்கள் உள்நாட்டு பொருளாதார நெருக்கடியால் மூடப்படுவதையும் அதற்கு BJP அரசு துணைபோவதை அம்பலப்படுதிப் பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் மேற்கண்ட வரிவிதிப்பு நடைமுறையால் கருவாடு தொழில் முதல் கம்ப்யூட்டர் விற்பனை வரை எதுவும் தப்பாமல் அழியப்போகும் ஒரு மோசமான சூழலை எதிர்கொண்டு இருப்பதையும், அதை எதிர்க்க மாநில அரசுகள் திராணியற்றுப் போயுள்ளதையும், பணமதிப்பழிப்பு தொடங்கி GST வரையிலான தொடர் பொருளாதார தாக்குதல்களை குறிப்பிட்டு அவற்றை விளக்கி பேசினார்.

கூட்டத்தின் ஒருபகுதியாக பொதுக்கூட்டப் பிரச்சாரத்தின் போது காவிகளின் பொய்ப்புகாரால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ள தோழர்கள் மேடை ஏற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் புத்தகங்களை போராட்ட நினைவாக வழங்கினார்.

இறுதியாக மகஇக கலைக் குழுவினரின் புரட்சிகர பாடல்களால் GST, NEET, டெங்கு ஆகியப் பிரச்சினைகளை அம்பலப்படுத்தினர். இறுதியாக தோழர் சூரியா நன்றியுரை கூற பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்திய வரலாறு : பொது அறிவு வினாடி வினா !

சென்ற முறை தமிழகத்தின் விவரங்களை வினாடி வினாவில் கேட்டிருந்தோம். மொத்தம் 14 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிப்பது சிரமம் என்றாலும் பத்திற்கும் மேற்பட்டோர் இலக்கை எட்டியிருந்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பதினெட்டு நாடுகளில் இருந்து நண்பர்கள் இப்பகுதியில் பங்கேற்றிருக்கிறார்கள். சென்னை, இந்தியா போக அமெரிக்கா, இந்தோனேசியா, வளைகுடா நாடுகளில் இருந்து கணிசமான தமிழ் மக்கள் இப்போட்டியில் பங்கேற்றிருக்கிறார்கள்.

இக்கேள்விகள் அதிகம் எண்ணிக்கையில் வருவதால் நினைவில் வைத்திருப்பது சிரமம் என்றார் ஒரு தோழர். அதை கணக்கில் கொள்கிறோம். இன்று இந்திய வரலாறு குறித்து சில கேள்விகள். கூடுதலாக கேள்வியின் வரலாற்றுக் குறிப்பையும் தந்திருக்கிறோம். இது இன்னும் அழுத்தமாக அந்த செய்தியை  நினைவில் நிறுத்த பயன்படும். படிவத்திற்கு கீழே கேள்விகளையும், அதற்கான குறிப்புக்களையும் தந்திருக்கிறோம். அதை நிதானமாக படித்து விட்டு படிவத்திற்கு வாருங்கள்! வாழ்த்துக்கள்!

 

1. பார்ப்பனியத்தின் சதி – உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடை செய்த ஆங்கிலேய ஆட்சியாளர் யார்?

பிற்கால வேதங்களில் சதி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் மன்னர் குலத்தில் இருந்த இக்கொடிய பழக்கம் பின்பு சில ‘இந்து’ சமூகப் பிரிவுகளில் பரவ ஆரம்பித்தன. கி.பி 1815 -ம் ஆண்டில் வங்கத்தில் 378 ஆக இருந்த சதி படுகொலை கி.பி 1818 -ல் 839 ஆக அதிகரித்தது.

2. இந்தியாவின் முதல் ஆங்கில தினசரி எது?

கி.பி 1780 -ல் இவ்வாரப் பத்திரிகையை ஹிக்கி எனும் ஐரிஷ் நாட்டவர் ஆரம்பித்தார். அப்போது இருந்த கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் -ஐ விமரிசித்த இப்பத்திரிகை கிழக்கிந்திய கம்பெனி அலுவலர்களின் ஊழலை வெளியிட்டு வந்ததால் இரு ஆண்டுகளில் பலவந்தமாக நிறுத்தப்பட்டது. அதனால்தான் என்னவோ இன்றைக்கும் பெரும்பாலான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்தின் நலனையே செய்திகளாக வெளியிடுகின்றன.

3. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ரௌலட் சட்டத்தை அமல்படுத்திய ஆங்கிலேய வைஸ்ராய் யார்?

The Anarchical and Revolutionary Crimes Act, 1919, எனப்படும் ரௌலட் சட்டம் அப்போதிருந்த இந்தியாவின் போராளிகளை கைது செய்து விசாரணையின்றி சிறையலடைப்பதற்கு ஆங்கிலேய அரசால் கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு இருந்த தடா, பொடா சட்டங்களின் முன்னோடி. சிட்னி ரௌலட் எனும் நீதிபதி கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

4. பாஜக -விற்கு பிடிக்காத தாஜ்மகாலைக் கட்டிய தலைமைப் பொறியாளராக கருதப்படுபவர் யார்?

உ.பி மாநிலத்தின் ஆக்ராவில் மொகலாய கட்டடக் கலையின் அழகோடு இருக்கும் தாஜ்மகால் சந்தன மற்றும் வெள்ளை மார்பிளால் கட்டப்பட்டது. யமுனைக் கரையில் கி.பி 1632 -ம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் திறந்து வைக்கப்பட்டது. இப்போது 2014 -ம் ஆண்டு கணக்கின் படி தாஜ்மகாலைப் பார்த்தோர் எண்ணிக்கை சுமார் 80 இலட்சம் பேர்.

5. உலகம் ரசிக்கும் தாஜ்மகாலை கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் ஆயிற்று?

இன்றைய மதிப்பில் சுமார் 52.8 பில்லியன் ரூபாயில் தாஜ்மகால் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 20,000 தொழிலாளிகள் பங்கேற்றிருக்கின்றனர். 1983 -ம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பால் “உலகில் பாரம்பரிய சின்னமாக” அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்துமதவெறியர்கள் இச்சின்னத்தை உ.பி சுற்றுலாக் கையேட்டில் இருந்து எடுத்து விட்டிருக்கின்றனர். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!

6. இந்தியாவை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய கோட்டை எது?

கி.பி 1644 -ம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியால் கட்டப்பட்ட கோட்டை. அவர்களது வணிக நடவடிக்கைகள், நிர்வாக பேச்சு வார்த்தைக்காக கட்டப்பட்டது.

7. அக்பர் நாமா எனும் அக்பரின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் யார்?

கி.பி 1556 முதல் 1605 வரை ஆண்ட அக்பரின் வரலாற்றை பெர்சிய மொழியில் கூறுகிறது இந்நூல். ஏழு வருடங்களில் எழுதப்பட்ட இந்நூலில் விவரணைகளோடு அரிய ஓவியங்களும் இருந்தன. தற்போது இதன் பிரதி ஒன்று 116 அரிய ஓவியங்களோடு லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

8. வங்கமாதாவிற்காக எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடல் இடம் இடம்பெற்ற நாவல் எது?

முசுலீம் குறுமன்னர்களை எதிர்த்து இந்து விவசாயிகள் போராடுவதான இக்கதையில் வரும் வந்தே மாதரத்தை காங்கிரசு கட்சி முதலில் அரசியலில் அறிமுகப்படுத்தியது. இதில் மாதாவை உருவகப்படுத்த வரும் இந்து மத தெய்வங்களால் அப்போதே முசுலீம்களால் எதிர்ப்பு தெரிக்கப்பட்டது. இந்திய அரசியலில் இந்துத்துவம் நுழைக்கப்பட்டதில் வந்தே மாதரத்திற்கும் முக்கிய பங்குண்டு.

9. இந்துமதத்தை சீர்திருத்துவதற்காக 1875-ம் ஆண்டில் “ஆர்யா சமாஜ்” இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் பெருமிதத் தேடல்களின் விளைவில் இதுவும் ஒன்று. வேதங்களின் புனிதத்தை ஏற்றுக் கொண்ட சமாஜம், சில சீர்திருத்தங்களுக்காக பிரச்சாரம் செய்ததாலும் அடிப்படையில் வருண தர்மம் அல்லது சாதிய அமைப்பை ஏற்றுக் கொண்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து முசுலீம் பிரிவினையின் போது சமாஜம், இந்து தர்மத்திற்காக பரிந்து பேசியது.

10. தற்போதைய ஐ.ஏ.எஸ் எனப்படும் இந்திய குடிமைப் பணி பதவிகளை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய கவர்னர் யார்?

கி.பி 1858 -ல் ஏற்படுத்தப்பட்ட இப்பதவி அப்போது இந்தியன் சிவில் சர்வீஸ் என அழைக்கப்பட்டது. வரிவசூல் உள்ளிட்ட அனைத்து ஆட்சிப் பணிகளையும் இக்கலெக்டர்கள் மேற்கொண்டார்கள். 1947-ம் ஆண்டில் 322 இந்தியர்களும் 688 ஆங்கிலேயர்களும் கலெக்டர்களாக இருந்தனர். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் இன்றைய மாவட்ட ஆட்சியர்களின் பயிற்சி அனைத்திற்கும் இத்தகைய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

11. மதம் கடந்து வங்கதேசிய ஒற்றுமையால் பிணைக்கப்பட்ட வங்கத்தை பிரிக்க முடிவெடுத்த ஆங்கிலேய வைஸ்ராய் யார்?

கி.பி 1905-ம் ஆண்டில் வங்கம் பிரிக்கப்பட்டது. முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு வங்கமும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்கு வங்கமும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக பிரிக்கப்பட்டன. ஆனால் மக்கள் மதம் கடந்த ஒற்றுமையுடன் இப்பிரிவினையை எதிர்த்துப் போராடினர். அதன்பிறகு 1911-ம் ஆண்டில் வங்கம் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இப்போராட்டம் ஒரு சான்று.

12. இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியை 1885-ம் ஆண்டில் துவக்கியவர் யார்?

இன்றைக்கு சோனியா காந்தியின் தலைமையில் இருக்கும் காங்கிரசுக் கட்சி 1885-ம் ஆண்டில் துவக்கப்பட்டது. நவீன இந்தியாவின் முதல் அரசியல் இயக்கம் என்று அழைக்கப்பட்டாலும் இது வெள்ளையர்களிடம் கருணை மனு கொடுத்து தமது பிரச்சினைகளை இந்திய மக்கள் தெரிவிப்பதற்காகவே முதலில் துவக்கப்பட்டது. இன்றும் அதன் பாரம்பரியம் உலக வர்த்தக கழகம், உலக வங்கி, அமெரிக்கா என்று தொடர்கிறது.

13. யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனப் பயணி யுவான் சுவாங் இந்தியாவிற்கு வந்தார்?

கி.பி 602-ல் பிறந்த யுவான் சுவாங் – சென் இ – கி.பி 664-ல் மரணமடைந்தார். புத்த துறவியான இவர் சீனாவில் இருந்து இந்தியா வந்து இங்கே பல மொழிகளைக் கற்று ஏராளமான புத்த இலக்கியங்களோடு சீனா சென்றார். அக்காலத்தில் இது அபராமான சாதனை. இவரைப் பற்றிய ஆங்கிலப் படம் 2016-ம் ஆண்டில் வெளிவந்தது.

14. பகவான் கிருஷ்ணனால் நாகஸ்வரன் கொல்லப்பட்டதை மக்கள் கொண்டாடுவதே தீபாவளி எனும் புராண விளக்கத்தின் சமூகவியல் பின்னணி என்ன?

பூர்வகுடி இந்திய பழங்குடிகளை ஆரியர்கள் போரிட்டு வென்றதன் குறியீடு
நல்ல சக்தி கெட்ட சக்தியை அழித்ததன் குறியீடு
வாழ்வில் ஒளியேற்றும் மங்களகரமான நாளின் துவக்கம்
மோட்சம் செல்வதற்கு கடவுளிடம் கோரிக்கை வைக்கும் நாளின் குறியீடு

_____________

இந்தக் வினாடி வினா பகுதி உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !

3

இதுதான் இன்றைய உலகம்

தீபாவளி மழையில் வெளியே செல்வதற்கு மக்கள் யோசிக்கிறார்கள். நனைவதோடு, சாலைப் பள்ளங்களின் விபத்துக்கள், மழையால் ஏற்படும் நெரிசல் போக்குவரத்து காரணமாக வீட்டில் முடங்க வேண்டிய கட்டாயம். நகரப் பேருந்தோ இல்லை இரு சக்கர வாகனமோ இருந்தாலும் மழையில் எதிர் நீச்சல் போடுவது சிரமம்.

கார்களின் நெரிசலில் தத்தளிப்பது சென்னையின் அன்றாடக் காட்சிகளில் ஒன்று. அனேக கார்களில் ஒரிருவரே பயணிக்கிறார்கள். அன்றைக்குரிய கோட்டாவை முடித்தால்தான் ஊக்கத்தொகை கிடைக்குமென்பதால் ஓலாக்களும், உபர்களும் பறக்கின்றன அல்லது காத்துக் கிடக்கின்றன. இதன்றி வீட்டில் இடமின்றி தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் கார்-காரர்கள் சென்னையில் அதிகம்.

ஆனால் தங்க விமானப் படிக்கட்டில் மன்னர் இறங்கும் சவுதி மற்றும் வளைகுடாவின் நிலைமை வேறு! அங்கே கார்கள் என்பது பயணத்திற்கானதல்ல. அந்தஸ்தை பறைசாற்றுவது!

அரபுலகின் முதல் சூப்பர்கார் என அழைக்கப்படுகிறது லைக்கன் ஹைப்பர் பி போர்ட் கார் – Lykan HyperPport. லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது.

இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. டைட்டானியம் எல்டி தகடுகளில் மொத்தம் 420 (15 காரட்) வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ப விதவிதமான வைரக்கற்கள் விதவிதமான வண்ணங்களில் கிடைக்கும்.

இரட்டை டர்போ 3.8 லிட்டர் ஆறு குழாய் என்ஜின் மூலம் 780 குதிரைச் சக்தி வெளியாகும். மூன்றே வினாடிகளில் அறுபது மைல் வேகத்தை (96) கி.மீ) அடையலாம். அதிக பட்சம் 240 மைல்கள் (386 கி.மீ) வேகமெடுக்கிறது இந்த கார்.

உலகின் அதி உயர் விலைக் கார்களில் இதுவும் ஒன்று என மார் தட்டுகிறார்கள், அரபு ஷேக்குகள். விலை என்ன தெரியுமா? 22 கோடியே ஆறு லட்சத்தி 43 ஆயிரம் ரூபாய்.

அந்த மார்தட்டலைப் பார்க்கும் போது இங்கே மூச்சு விடக்கூட முடியாமல் ஒரு பேருந்தில் மக்கள் பயணிக்கிறார்கள். இந்த பேருந்து இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இல்லை வங்கதேசத்திலோ பல இடங்களில் பார்க்க முடியும். விடுமுறை நாட்களில் தோளில் தொங்கும் பைகளுடன் இந்த மனிதக் கூட்டம் பெரும் அபாயத்துடன் பயணிக்கின்றது. தீபாவளி நாட்களில் திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகளில் மக்கள் பயணிப்பதற்கு பெரும் போரே நடத்த வேண்டியிருக்கும்.

மேற்கண்ட அரபு காரின் விலையில் எத்தனை பேருந்துகள் வாங்க முடியும் தெரியுமா?

150 பேருந்துகள் வாங்க முடியும். இதுதான் இன்றைய உலகின் அந்தஸ்து ஆற்றும் அறம்!

செய்தி ஆதாரம் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பச்சைக் குழந்தைகளோடு பரிதவிக்கும் ரோஹிங்கியா தாய்மார்கள் !

1

னக்கு பிறக்கப் போகும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்திருந்தார், 24 வயதான சாமிரான். அச்சமயத்தில் தான் மியான்மர் இராணுவம் அவரது கிராமத்துக்குள் புகுந்து மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருந்தது.

கொடுமைக்குள்ளாக்கப்படும் ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த சாமிரானும், அவரது கணவர் அன்வர் மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையான சபிகாவும், மியான்மரின் ராக்கைன் மாநிலத்தின் ராஜர்பில்லில் உள்ள தங்களது வீட்டை விட்டு கடந்த ஆகஸ்ட் 25  அன்று தப்பித்து வெளியேறினர்.

நிறைமாத கற்பிணியான சாமிரான், தன் குடும்பத்தாருடன் இரவு முழுக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினார்.

சாமிரான் தனது பச்சிளம் குழந்தை சாதிகாவுடன்

”காலையில் நாங்கள் இட்டெல்லா எனும் கிராமத்தை அடைந்தோம். அந்த கிராமம் மியான்மர் படைகளால் தாக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டிருந்தது” என நினைவுகூர்கிறார் சாமிரான்.

பிறகு அவர்கள் கைவிடப்பட்ட ஒரு வீட்டை காண்கிறார்கள். அதில் ஐந்து நாட்கள் அவர்களுக்குப் போதுமான உணவு பொருட்கள் கிடைக்கிறது. ஆனால், இராணுவம் மீண்டும் அக்கிராமத்தினுள் நுழைந்தது,

”நாங்கள் அங்கிருந்து தப்பிவிட்டோம்” என்கிறார் சாமிரா.

அவர்களது அடுத்தகட்ட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. உணவு, தண்ணீர் கூட இல்லாமல் ஒரு நாள் பகல், இரவு முழுக்க அக்குடும்பம் நடந்தது.

“அந்த வலியைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட விரும்பவில்லை.  எனக்கு வயிற்றில் தொடர்ச்சியான வலி இருந்தது. மிகவும் மோசமான உடல்நிலையை உணர்ந்தேன். தாங்க முடியாத வலி என் வயிற்றில் வரும் போதெல்லாம், அதனைச் சிறிது குறைக்க சிறிது நேரம் உட்கார்ந்து, குனிந்து ஆசுவாசப்படுத்துவேன்”  எனக் கண்ணீரோடு நினைவுகூர்கிறார் சாமிரான்.

”அது எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டமாகும். நான் மூச்சுவாங்கிக் கொண்டு நடையைத் தொடர்ந்தேன். என்னையும் எனது மகளையும் மாறி மாறி எனது கணவர் சுமந்து நடந்தார். என் மகளாலும் நடக்க முடியவில்லை. ஓய்வில்லா பயணத்தின் வலியால் அவள் அழத் தொடங்கினாள். வலியாலும், பசியாலும், விரக்தியாலும் நாங்கள் அனைவரும் அழுதோம். ” என சாமிரான் கூறினார்.

சமீரானின் குடும்பம் ஒருவழியாக மோங்கினி பாராவை அடைந்தது. அங்கு அப்போதும் சில குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. சாமிரான் குழந்தையைப் பெற்றெடுக்க அங்குள்ள வயது முதிர்ந்த பெண்கள் சிலர் உதவினர்.

“5 நாட்களுக்குப் பிறகு நாங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியது இருந்தது.  நான் நடக்க கூடிய நிலைமையில் இல்லை. எனினும், ஒரு வழியாக நடந்து ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குதான் நாஃப் நதியைக் கடந்து  வங்காளதேசத்தை அடைய ஒரு படகு கிடைத்தது. படகு சவாரிக்கு 650,000 கியாட்(31,022 ரூபாய்) தேவைப்பட்டது. எங்களிடம் போதிய பணமில்லாததால் படகில் ஏற்ற மறுத்தார்கள். ஆனால் மக்களில் சிலர் உதவியதன் காரணமாகப் படகில் ஏறி வந்தேன்” என்கிறார் வங்க தேசத்தின் துறைமுக நகரான காக்ஸ் பசாரில், ஒரு மசூதிக்கு வெளியே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  மருத்துவமனையில் உதவிகளுக்காக வரிசையில் தனது கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சாமிரான்.

அவரது அயராத பயணத்தாலும், நலிந்த உடல்நிலையாலும், அவரால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.  “பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ?” எனக் கேட்கிறார் சாமிரான்.

பலரும் இதே நிலைமையில் தான் இருந்தார்கள்.

யூனிசெஃப்-ஐச் சேர்ந்த மாயங்க் சாரி எனும் ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், “இளம் தாய்மார்களும் குழந்தைகளும்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மிகக் கடுமையான மனஅழுத்தமும், மோசமான நிலைமைகளும் தாய்மார்களையும் அவர்களது குழந்தைகளையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியது.  இதுவே அவர்களுக்குத், தங்களது குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.  இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறலாம்” என்று கூறுகிறார்.

காலிதா(20) தனது ஒரு வயது மகளான சஹானாவுடன் இருக்கிறார். “எங்களது ஊரில் இராணுவம் புகுந்து, வீடுகளுக்கு தீவைத்து மக்களைக் கொன்று குவித்தது. எங்கள் உயிரைப் பாதுகாக்க நாங்களும் ஓடி, படகில் வங்கதேசத்திற்கு எல்லை கடந்து வந்தோம். படகில் இங்கு தப்பித்து வர ஐந்து நாட்கள் ஆனது. நான் என்னை அதிர்ஸ்டசாலி என்றே கருதுகிறேன். காரணம், எனது மொத்தக் குடும்பமும் இன்று என்னுடன் உள்ளது. எனது கணவர் உணவு வாங்க சென்றுள்ளார், எனக்கும் அவரோடு சென்று உணவு வாங்கி வரவேண்டும் என்று ஆசை ஆனால் கைக்குழந்தையுடன் உணவுக்காக நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருப்பதும், உணவுக்காகப் போராடுவதும் இயலாத காரியம்.” என்று கூறுகிறார் காலிதா

சோனா மெஹர்(45), தனது மூன்று மாத குழந்தையான மிரனா பேகத்தோடு இருக்கிறார். ”எனது ஏழு குழந்தைகளையும் நானே தனியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு தோள்பட்டையில் குண்டடி பட்டுவிட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். உணவு பெறுவதற்காக, இந்த கைக்குழந்தையுடன் நான் ஒரு நாள் முழுக்க வரிசையில் நிற்கிறேன்.” எனக் கூறுகிறார் சோனா மெஹர்.

ஹசீனா(25), தனது 18 மாத குழந்தை முனீராவோடு இருக்கிறார். ”எனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நான் இங்கு வந்தேன்.  இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவை மட்டுமே எங்களால் எடுத்துக் கொள்ளமுடிந்தது. மீத நாட்களில் நாங்கள் பட்டினியோடே நடந்தோம். எங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் சூழலில் எனது பசுவை அங்கேயே விட்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அதையும் என்னோடு கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என்கிறார் ஹசீனா.

33 வயதான ஹமீதா தனது 4 மாத மருமகன் யூசஃபுடன். ”இவனது பெற்றோர்கள் ராணுவத்திரனால் கொல்லப்பட்டனர். இவனை நான் காப்பாற்றி என்னோடு கொண்டு வந்துவிட்டேன். இல்லாவிட்டால் இவன் அங்கேயே இறந்திருப்பான். எனக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள், அதில் ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதகாலமே ஆகிறது.  இவர்கள் இருவருக்கும் இந்த உணவை வழங்க முடியாது என்பதால், இருவருக்கும் நான் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது இருக்கிறது.  எனக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கிடைப்பதே அரிதானதாக இருக்கும் சூழலில் இது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது” என்கிறார் ஹமீதா .

16 வயதான புஷ்ரா பேகம் தனது 3 மாத மகன் முகமது கைசருடன் இருகிறார். ”நாங்கள் வங்கதேசத்துக்கு நடந்தே வந்து சேர்ந்தோம். குடுபலாங்கில் உள்ள இந்த அகதி முகாமிற்கு வந்து சேர்வதற்கு எங்களுக்கு 10 நாட்கள் ஆகிவிட்டது. நான் எனது மகனைக் குறித்தே முகவும் கவலையுறுகிறேன். இந்த நெடும்பயணத்தால் அவனை மிரளச் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து அவன் மிகவும் குறைந்த அளவிலேயே பால் குடித்தான். பயணம் மிகவும் கடுமையானதாக இருந்தது. போதிய உணவில்லாமல்  பல நாட்கள் கடந்தன. இதுவும் அவனது உடல்நிலையை பாதித்திருக்கிறது” என்கிறார் புஷ்ரா.

35 வயதான ஹமீதா தனது ஒரு வயது மகன் முகமது ஆலமுடன் இருக்கிறார். ”அவர்கள் என் கணவரை கொன்று விட்டார்கள். எனது 5 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற நான் ஓடவேண்டியது இருந்தது. உதவியையும், நிவாரணப் பொருட்களையும் பெற எனக்கு உதவ இங்கு யாரும் கிடையாது. எனது குழந்தைகளுக்கு உணவளிக்க எனக்கு உணவுப் பொட்டலங்கள் அவசியமாகத் தேவை. கடந்த 3 மணிநேரமாக வரிசையில் நின்றும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆண்கள் அரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பதால் எங்களை நோக்கித் தூக்கி வீசப்படும் உணவுப் பொட்டலங்களை எளிதில் அவர்களால் குதித்துப் பெற்றுக் கொள்ள முடிகிறது. என்னைப் போன்ற பெண்கள் காத்துக் கிடக்க வேண்டியதுள்ளது” என்று கூறுகிறார்.

24 வயதான தாகிரா தனது ஏழு மாத மகள் ருஷ்மா அக்தருடன் இருக்கிறார். ”நாங்கள் எங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வெளியில் அலறல் சத்தம் கேட்டது. வெளியே எங்கும் தீப் பற்றி எரிவதையும் மக்கள் ஓடுவதையும் தான் கண்டோம். எனது கணவர் எனது மகளைப் பற்றிக் கொள்ள, நாங்கள் மற்றவர்களோடு வெளியேறினோம். எங்களது உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும். சுவற்றிலிருந்த எங்களது குடும்பத்தின் பெரிய புகைப்படத்தை எப்படியாவது பெறவேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறுகிறார் தாகிரா.

ஷாம்ஸ் உன் நெகார் (35) தனது இரண்டு மாத இரட்டைக் குழந்தைகளுடன்(ஈசா, முசல்) இருக்கிறார். ”எனக்கு இவர்களைத் தவிர மேலும் 10 குழந்தைகள் உள்ளனர்.நாங்கள் மூன்று நாட்கள் நடந்து வங்க எல்லையை அடைந்தோம். இந்த மூன்று நாட்களில் ஒரு கவள உணவு கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக  என்னால் இந்தக் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியவில்லை. தாகத்தாலும் பசியாலும் அவர்கள்  அழுது கொண்டே இருந்தனர். என் கண்முன்னேயே எனது குழந்தைகள் இது போன்று பட்டினியாக இருந்தது, மிகவும் அச்சுறுத்துவதாகவும் வலிமிகுந்ததாகவும் இருந்தது” என்று கூறுகிறார்..

யேமீனா அரா, (30) தனது ஆறு மாத மகள் ரோஹனாவுடன் இருக்கிறார். ”எங்களது கிராமம் பக்ரீத் அன்று தாக்கப்பட்டது. அன்று நாங்கள் தப்பித்து விட்டோம். இங்கு வந்து சேர 5 பகல்களும், இரவுகளும் எடுத்துக்கொண்டன. குழந்தைகளால் வெகுதூரம் நடக்க முடியாத காரணத்தால், வங்கதேச எல்லைக்குள் வருவதற்கு,  நானும் எனது கணவரும் குழந்தைகளைக் கைகளிலும், தோள்பட்டையிலும் தூக்கிச் சுமந்து வந்தோம்” என்கிறார்.

நன்றி : அல்ஜசீரா

_____________

இந்த படக்கட்டுரை பிடித்திருக்கிறதா? இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும் வினவு தளம் வலுப்பெற உதவுங்கள்! சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு : விருதை – ஓசூர் – தருமபுரி ஆர்ப்பாட்டங்கள் !

0

மிழகம் முழுக்க இலட்சக்கணக்கான மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் செயலற்ற எடப்பாடி அரசு மக்களையே குற்றவாளிகளாக்க காட்டும் வகையில் பேசி வருகிறது. அரசு மருத்துவமனைகள் டெங்கு நோய் தாக்கப்பட்டவர்கள் பலரையும் உரிய சிகிச்சையளிக்காமல் சாதாரணக் காய்ச்சல் மர்மக் காய்ச்சல் என அனுப்பிவைக்கிறது. அவ்வாறு அனுப்பச்சொல்லி அரசே சொல்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் இறந்த பின்னும் 16 பேர்தான் இறந்துள்ளனர் என மோசடியாக கணக்கு கூறுகிறது எடப்பாடி அரசு. இந்நிலையில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள 33 -வார்டுகளில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆய்வு செய்து அதனை புகைப்பட ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 13.10.2017 அன்று மதியம் 12:00 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. மேலும் மாநகராட்சி அலுவலரிடம் புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்யவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இதற்கு மக்கள்அதிகாரம் வட்டார ஒருங்கிணைப்பாளா் தோழா் முருகானந்தம் தலைமையேற்றார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இந்த முற்றுகையில் பங்கெடுத்துக் கொண்டனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம்.

***

சூர் – பாகலூர் சர்க்கிள் அருகே, மக்கள் அதிகாரம் சார்பில் “எதிர்க்கட்சித் தலைவர்களே, ஊடகங்களே, ஜெயா, எப்படி செத்தால் என்ன?, செயலற்ற அரசுதான் மக்களின் மரணத்திற்கு காரணம்! டெங்கு, மலேரியா பிரச்சனைக்கு தீர்வு காண பேசுங்கள்!“ என்ற முழக்கத்தின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பாகலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் தலைமைத் தாங்கினார், சூடாபுரம் கேபிள் ஆப்பரேட்டர் திரு. முருகேசன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, மக்கள்  அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி நன்றியுரையாற்றினார்.

தலைமையுரையாற்றிய தோழர் காந்தராஜ் பேசுகையில், ‘ இங்கே பாகலூரில் ஆர்ப்பாட்ட துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்து பிரச்சாரம் செய்ததன் விளைவாக இது நாள் வரை தூங்கிக் கொண்டிருந்த அரசு நிர்வாகம் இப்ப வந்து அவசர அவசரமாக கொசு மருந்து அடிச்சிட்டு போயிருக்கிறது என்று தன்னிடம் தாய்மார்கள் வந்து கூறியதை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார். மேலும், இது மாதிரி தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைக்கு முகம் கொடுத்து களம்  காண்பதன் மூலமே டெங்கு முதல் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வழி பிறக்கும் என்றார்.

அடுத்து பேசிய திரு.முருகேசன், ‘ ஒட்டுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை சந்திக்க வருகின்றனர். ஆனால் மக்கள் அதிகாரம் 24 மணி நேரமும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருவது தன்னை நெகிழச் செய்து இருக்கிறது என்ற வகையில் மக்கள் அதிகாரம் தோழர்களின் அடுத்தடுத்த போராட்டங்கள் முன் முயற்சிகளை பட்டியலிட்டு  மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.

அடுத்து உரையாற்றிய தோழர் ரவிச்சந்திரன்,   “பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம், அரசுப் பொது மருத்துவமனைகளே நோயை உற்பத்தி செய்யும் ஆலைகளாக உள்ளது” என்ற தகவலை தாங்கள் ஆய்வு செய்த போது கிடைத்த அனுபவங்களை தொகுத்து பேசினார்.

அதனையடுத்து பேசிய தோழர் பரசுராமன் ,  டெங்கு கொசு ஒழிக்கப்பட முடியாத விசயமல்ல. அரசுக்கு ஒழிக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மாறாக, மக்களை சுரண்டும் அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மருத்துவத்துறையை மேலாண்மையோடு முடுக்கிவிட்டு மரணங்களை தடுக்காமல் 20,000 பேருக்கு நோட்டீசு கொடுத்து மக்களையே குற்றவாளியாக்கி சித்தரிக்கிறது.

மேலும், சித்த மருத்துவத்துறைக்கு உள்நோயாளியாக அனுமதிக்கக் கூடாது என்ற இயக்குனர் அறிவிப்பானது அரசு கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுக்கு அடியாளாக போயுள்ளதை அம்பலப்படுத்தி இந்த அரசு மக்களை காக்காது என்றார். தோற்று நிற்கும் இந்த அரசுக் கட்டமைப்பு தூக்கி எறியும் திசை வழியில் போராட்டங்களை செல்வது ஒன்றே ஒரே தீர்வு என்று பேசினார். திரளான மக்கள் இறுதி வரை இருந்து ஆர்ப்பாட்டத்தை ஆர்வமுடன் கவனித்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பாகலூர் பகுதி. தொடர்புக்கு : 9994884923.

***

டெங்கு : தொடரும் மரணம் செயலிழந்த  எடப்பாடி  அரசும் நகராட்சியுமே குற்றவாளிகள் – தருமபுரி ஆர்ப்பாட்டம்.

டெங்குவால் தமிழகத்தில் அன்றாடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். இதனை தடுக்க வக்கற்ற இந்த அரசுதான் குற்றவாளி என்றதை உணர்த்தும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பு தெருமுனைக்கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்களை  நடத்தி வருகிறது. அதனுடைய  ஒருபகுதியாக தருமபுரி தந்தி அலுவலகம் முன்பு 14.10.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டம் தோழர் சிவா தலைமையில் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மண்டல குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் பேசுகையில், ஒரு காலத்தில் அம்மை நோய்க்கு மருத்துவம் இல்லாமல் கொத்துக் கொத்தாக இறந்தனர்.  ஆனால் இன்றைக்கு டெங்குவுக்கு மருத்துவம் இருந்தும் கொத்துக் கொத்தாக இறக்கின்றனர். சாணம் தெளித்தால் கொசு வராது என்கிறார் அமைச்சர்.

மக்களின் உயிரோடு விளையாடும் அமைச்சர்களும், அதிகாரிகளும் நமக்கு தேவையா? அமைச்சர்களின் இந்த திமிர்த்தனமான பேச்சு “பட்டபகலில்  மக்களை  கொலை  செய்வதற்கு  சமம்”.  மக்களை  தூய்மையாக  இருக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் சாக்கடையை தூர்வாராமல், குப்பை தேங்கி நிற்கிறது. குப்பை அள்ளுவதற்கு லண்டன் நிறுவனங்கள். இதற்காக பலதிட்டம், நிதி ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் ஊழல்.

இதனால் புதிய புதிய நோய்கள் பரவி வருகிறது.  “நாமக்கல்லில் ஒரு தாய் தனது குழந்தைக்கு  மருத்துவம் பார்க்க முடியாமல் தனது குழந்தையோடு தற்கொலை செய்து கொள்கிறார்” என்றால் நாம் எப்படி பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை பரிசீலிக்க வேண்டும். நிதி ஆயோக், அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்கிறது. நமது  மருத்துவ உரிமைகளை பறிப்பவனிடம் நியாயம் கேட்க முடியுமா? எனவே இந்த நாட்டையே கொள்ளையடிக்கும், மக்களின் உயிரோடு விளையாடும் அமைச்சர்களையும்,  அதிகாரிகளையும் தண்டிக்காத வரையில் தீர்வு கிடைக்காது என்றார்.

தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்  முத்துக்குமார் பேசுகையில், டெங்குவால்  இறக்கும் மக்களை மர்ம காய்ச்சல் என்று மூடி மறைந்து கொண்டு இருக்கிறார்கள். 400 கோடி ஊழல் செய்த ‘குட்கா’ அமைச்சர்கள் எப்படி மக்களை சுகாதரமாக பாதுகாப்பார்கள்? சாராயக்கடையைத் திறந்து  மக்களை கொலை செய்பவர்களிடம் எப்படி நியாத்தை எதிர்பார்க்க  முடியும்?

இலவச மருத்துவம் இல்லை, இலவச கல்வி இல்லை,  இலவச தண்ணீர் இல்லை, 400 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். காவிரி பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடிந்ததா? எனவே மக்கள் பிரச்சனையை தீர்க்க துப்பில்லாத இந்த அரசின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு எதிராக போய்விட்டது. எனவே இதற்கு எதிராக மக்கள் அனைவரும்  ஒன்றிணைவதுதான்  ஒரே மாற்று என்று அறைகூவல் விடுத்தார்.  இந்த ஆர்ப்பாட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நின்று கவனித்தனர்.

தகவல் :
மக்கள்  அதிகாரம்,
தருமபுரி. தொடர்புக்கு; 81485 73417

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தானியங்கல் தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம் வேலையிழப்பு மட்டுமல்ல !

6

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 4

வர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றவர் – நெருங்கிய உறவினர். வழக்கமாக உற்சாகமான ஒரு துள்ளலுடன் வருகிறவர், இன்று இறங்கிய தோள்களுடன் கருத்த முகத்துடன் வந்திருந்தார். நிறைய புகைத்திருப்பார் என்று தெரிந்தது – அவரோடு கை குலுக்கிய பின் எனது கையிலும் புகையிலையின் தீய்ந்த வாடை தொற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமண அழைப்பு கொடுக்கத் தான் வந்திருந்தார்.

அவரது சோர்வுக்கு என்ன காரணம் என்று விசாரித்தேன். அவரது நிறுவனம் தன்னை திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் (Performance Improvement Plan) சேர்த்திருப்பதாகச் சொன்னவர், ஒருவரை வேலையை விட்டுத் தூக்குவதற்கு முன் செய்யப்படும் கண் துடைப்பு தான் இந்த திட்டம் என்றார். இன்னும் ஒரு மாதத்தில் திருமணம், இரண்டு மாதத்தில் வேலை இழப்பு. பெண்ணுக்கும் அவரது வீட்டாருக்கும் விசயத்தை சொல்லி விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். வேலை இழப்புக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயன்றேன்.

அவர் மெய்நிகர் இயங்குதளமான (Virtualization) விஎம்வேர் (Vmware) மென்பொருளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். மெய்நிகர் இயங்குதளத்தில் தேவையான சர்வர்களை ஏற்படுத்திப் பராமரிப்பது, சர்வர்களுக்கு இடையே மின் தரவுகளை இடம்பெயர்ப்பது (Data Migration) தேவையான சேமிப்பு இடங்களை (Storage Space) உண்டாக்குவது போன்ற நிர்வாக வேலைகளைச் செய்து வந்துள்ளார். இதே வேலையில் சுமார் ஆறாண்டு அனுபவம் கொண்டிருந்தார்.

தற்போது அவரது நிறுவனம், இது போன்ற வழமையான நிர்வாகப் பணிகளை (Routine management tasks) தானியங்கி முறையில் (Automate) நிறைவேற்றும் பொருட்டு விஎம்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள வி.ரியலைஸ் (Vrealize) எனும் மென்பொருளைப் பயன்படுத்த துவங்கியுள்ளது – இதனால் அவரது நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பது ஊழியர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வி.ரியலைஸ் என்பது தானியங்கித் தொழில்நுட்பத்தின் (Automation) மிக அடிப்படையான வடிவம். இதே தொழில்நுட்பம் தற்போது மிகப் பெரியளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அமல்படுத்தப்பட்டு பல லட்சம் தொழிலாளர்களின் வேலையைக் காவு வாங்கத் துவங்கியுள்ளது. மனிதக் கட்டுப்பாட்டின் (Manual Control) கீழ் செய்யப்பட்டு வந்த வழமையான நிர்வாகப் பணிகளை விட தானியங்கி முறை குறைவான நேரத்தையும் மனித ஆற்றலையும் கோருவதால் பல நிறுவனங்களும் இப்புதிய தொழில்நுட்பத்தை சுவீகரிக்கத் துவங்கியுள்ளன.

இந்தியாவில் சுமார் 31 லட்சம் தகவல் தொழில்நுட்ப வேலைகள் இருப்பதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கின்றது – தானியங்கித் தொழில்நுட்பம் முழுவீச்சில் அமல்படுத்தப்படும் போது சுமார் 6 லட்சம் பேர் வேலையிழப்புக்கு ஆளாவார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் நடக்கவுள்ள வேலை இழப்புகள்.

உற்பத்தியில் தானியங்கி முறை என்பது புதிய போக்கல்ல. மனிதக் கரங்களை இயந்திரக் கரங்களால் மாற்றீடு செய்வது முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொடர்ந்து நிகழும் போக்காகும். சந்தையை வேகமாகக் கைப்பற்றுவது, அதற்காக உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்திப் பொருளை உடனடியாக சந்தைக்குக் கொண்டு சேர்ப்பது, சந்தையில் நிலவும் போட்டியை முன்னரே கணித்து அதற்கேற்ப உற்பத்தியை அதிகரிப்பது என முதலாளித்துவ உற்பத்திமுறை தனது தோற்றத்தில் இருந்தே மனித ஆற்றலை விஞ்சிய இயந்திர ஆற்றல்களைத் தேடத் துவங்கி விட்டது.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கணினிகளுக்கு தனித்தனியாக செலுத்தும் ஆணைகளை தேவைக்கேற்ப நிரல்களாக (Programme) எழுதுவது வழக்கம் தான். எனினும், ஏற்கனவே வழக்கத்தில் உள்ள தானியங்கி முறைகள் அனைத்தும் மனித மூளையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக் கூடியதாக இருந்தன.

அதாவது வழமையான தானியங்கி முறையை இயக்குபவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும், தீர்மானிப்பவர்களாகவும் மனிதர்கள் இருந்தனர். இது குறிப்பிடத்தகுந்த அளவுக்கு தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்தது என்றாலும் இன்னொரு முனையில் புதிய வேலைகளை (குறைந்த விகிதத்திலாவது) உருவாக்கியது. மேலும் தானியங்கி முறையில் நடக்கும் உற்பத்தியைக் கண்காணிக்கும் பணியை மனிதர்கள் செய்தனர்.

ஆனால், தற்போது கூறப்படும் “தானியங்கித் தொழில்நுட்பம்” என்கிற சொல்லின் பொருளும் பரிமாணமும் முற்றிலும் வேறானதாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக செயற்கை நுண்ணறித் திறனில் உருவான பாய்ச்சல் வளர்ச்சியின் தாக்கம் தானியங்கித் தொழில்நுட்பத்திலும் பிரதிபலித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது, எப்படி, எந்த வகையில் தானியங்கல் முறையில் செயல்படுத்த வேண்டும் என்கிற முடிவை எடுப்பதற்கும், அதை செயல்படுத்துதற்குமான இடத்தை செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்துள்ளது.

மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வேலை அதற்கு முன் எங்கெல்லாம் நடந்தது, அவ்வாறு நடந்த வேலைகளின் விளைவு என்ன, என்னென்ன சாத்தியமான தவறுகள் ஏற்படலாம் என்பதை செயற்கை நுண்ணறிக் கணினிகள் ‘கற்றுள்ளன’. எனவே மென்பொருட்கள் விடுக்கும் கட்டளைக்குப் பதிலாக, செய்யப்படும் வேலைகளைச் சோதித்தறிவதும், சூழலுக்குத் தகுந்தாற் போல் எதிர்வினையாற்றுவதும் செயற்கை நுண்ணறிக் கணினிகளுக்கு தற்போது சாத்தியமாகியுள்ளது.

ஆலை உற்பத்தித் துறைகளைப் பொருத்தளவில் – குறிப்பாக இயந்திரவியல் துறையில் – என்பதுகளிலேயே மெல்ல மெல்ல தானியங்கித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வந்தது. கடந்த பத்தாண்டுகளில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியின் விளைவாக இயந்திரக் கரங்களின் துல்லியம் அதிகரித்துள்ளது.

ஆலை உற்பத்தியில் இதுவரை புகுத்தப்பட முடியாமல் இருந்த வேலைப் பிரிவுகளுக்கெல்லாம் தானியங்கல் உற்பத்தி முறை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அமெரிக்காவில் நடந்த 50 லட்சம் வேலையிழப்புகளில் சுமார் 88 சதவீதம் தானியங்கித் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதால் நிகழ்ந்துள்ளது என்கிறது பால் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின்  ஆய்வு ஒன்று.

அடுத்த பத்தாண்டுகளில் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டு பல்வேறு துறைகளில் சுமார் 38 சதவீத வேலைகளை தானியங்கித் தொழில்நுட்பம் காவு வாங்க உள்ளதாக ப்ரைஸ்வாட்டர் கூப்பரின் ஆய்வறிக்கை ஒன்று எச்சரிகை மணி அடிக்கின்றது. இந்தியாவில் மட்டும் அடுத்த நான்காண்டுகளில் சுமார் 23 சதவீத தொழிலாளர்கள் தானியங்கித் தொழில்நுட்பத்தால் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்கிறார் பீப்பிள்ஸ்ட்ராங் நிறுவனத்தின் தலைவர் பன்சால்.

இப்புதிய போக்கு ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. உதாரணமாக மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம்.

மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களைக் கண்டறிய SOAP (Subjective, Objective, Assessment and Plan) முறை பின்பற்றப்படுகின்றது. நோயாளி ஒருவரின் பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்டு அகநிலையாக (Subjective) அந்த நோய் அல்லது பிரச்சினை உருவாக என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்வது. பின் புறநிலையாக (Objective) பல்வேறு சோதனைகளின் மூலம் அந்த நோயைப் புரிந்து கொள்வது. பின் சோதனை முடிவுகளை அலசி ஆராய்வது (Assessment). இறுதியாக அவரது நோயைக் குணப்படுத்தும் திட்டம் (Plan) ஒன்றை வகுப்பது என்பதே தற்போது கைக்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ நடைமுறை.

இதில் சோதனைகளைப் பரிசீலித்து நோயின் தாக்கத்தைப் புரிந்து கொள்வது என்ற கட்டத்தில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரத் துவங்கியுள்ளது. குறிப்பாக ஐ.பி.எம் நிறுவனம், மெர்ஜ் ஹெல்த்கேர் எனும் நிறுவனத்தை சுமார் 1 பில்லியன் டாலர் செலவில் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மெர்ஜ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வசமிருந்த சுமார் 30 ஆயிரம் கோடி மருத்துவ ஆய்வறிக்கையின் படிமங்களுக்கு (Scanned images) உரிமம் பெற்றுள்ளது.

சுமார் 7,500 மருத்துவமனைகளின் பரிசோதனைக் கூடங்களில் இருந்து பெறப்பட்ட இந்த ஆய்வறிக்கைப் படிமங்களை தற்போது ஐ.பி.எம் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிக் கணினியான வாட்சனில் (Watson) பதிவேற்றியுள்ளது. குறிப்பிட்ட நோயைக் கண்டறியச் செய்யப்படும் ஸ்கேன் அறிக்கைக்கைகளை வாட்சனிடம் கொடுத்தால், அது தன்னிடம் இருக்கும் படிம மாதிரிகளோடு ஒப்பிட்டு நோய் தாக்கு உள்ளதா, எந்த அளவில் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லிவிடும். அதாவது, இன்று எக்ஸ் ரே அல்லது ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து ஒரு ரேடியாலஜிஸ்ட் அல்லது சிறப்பு மருத்துவர் கூறுகின்ற மதிப்பீட்டினை, அவர்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு துல்லியத்துடன் வாட்சனால் கூற முடியும்.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள திறன் கடிகாரம் (Smart watch) வாட்சனின் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது உடலின் வெப்ப நிலை, இதயத் துடிப்பின் வேகம், உடலின் இயக்கம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து கண்காணிக்கும் ஆற்றல் கொண்ட திறன் கடிகாரம், அவ்வப்போதைய உடல் நிலைக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய செயல்களை பரிந்துரைக்கும். உதாரணமாக, உங்களது கொழுப்பின் அளவுக்கு இன்று நீங்கள் ஐந்து கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பதோடு, நீங்கள் நடக்கிறீர்களா இல்லையா என்பதையும் கண்காணிக்கும். மேலும் உங்களது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், வெப்ப நிலை உள்ளிட்ட தகவல்களைத் தொடர்ந்து வாட்சனுக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கும்.

தற்போது நோயை முன்கூட்டியே கண்டறியும் கட்டத்தைக் கடந்து, குறிப்பிட்ட நோயாளியைக் குணப்படுத்துவதற்கான பிரத்யேகமான மருத்துவ திட்டங்களையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் மூலம் வகுப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றது. இதன் மூலம் மருத்துவர்களை ஒரேயடியாக இயந்திரங்களின் மூலம் மாற்றீடு செய்ய முடியுமா அல்லது அப்படி செய்வது சாத்தியமா என்றும் மேற்குலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பான ஒரு நோயாளியின் சூழல், அவரது கலாச்சாரம், அவர் சார்ந்த வர்க்கம் உட்பட பல்வேறு புறநிலை மற்றும் அகநிலை அம்சங்களையும் கணக்கெடுத்தே அவரைத் தாக்கியிருக்கும் குறிப்பிட்ட நோய்க்கு தீர்வளிக்க முடியும் – சுருக்கமாகச் சொல்வதென்றால் நோய்க்கான மருத்துவத்தை அறிவியல் என்று சொன்னால், அதை யாருக்கு எப்போது எந்த அளவில் வழங்குவது என்பதை மருத்துவர் தீர்மானிப்பது ஒரு கலையாகவும் இருக்கிறது.

மருத்துவரின் அனுபவ அறிவு, நோயாளியின் வாய்மொழி, உடல்மொழி உள்ளிட்டவற்றை மதிப்பிடும் அவருடைய திறன் மற்றும் மருத்துவரின் உள்ளுணர்வு உள்ளிட்ட பல அம்சங்கள், மருத்துவத்தை ஒரு “கலை”யாகவும் ஆக்குகின்றன. இதை செயற்கை நுண்ணறிவு மாற்றீடு செய்ய முடியுமா என்பது குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் மேற்குலகில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

சட்டத் துறையை எடுத்துக் கொண்டால், ஐ.பி.எம் வாட்சன் செயற்கை நுண்ணறிக் கணினியில் இயங்கும் ராஸ் இண்டெலிஜென்ஸ் (ROSS Intelligence) எனும் தொழில்நுட்பம், சட்ட ஒப்பந்தங்களின் படிம மாதிரிகளை (Scanned images) ஆய்வு செய்து சட்ட ஆலோசனை வழங்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான சட்ட நூல்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட மில்லியன் கணக்கிலான தீர்ப்புகள், மாதிரி சட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டு பல கோடிக்கணக்கான சட்ட ஆவணங்கள் படிமங்களாக (Images) செயற்கை நுண்ணறிக் கணினியில் ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் பற்றிய சட்ட ஆலோசனை பெற வேண்டுமெனில், அந்த ஒப்பந்த நகலை ஸ்கேன் செய்து வாட்சனிடம் கொடுத்தால் துல்லியமான ஆலோசனையை அது வழங்கி விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த தணிக்கை நிறுவனமான டெலோய்டி, செயற்கை நுண்ணறித் திறன் கொண்ட தானியங்கி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட சில வருடங்களில் கீழ்நிலை சட்ட உதவியாளர்களாக உள்ள சுமார் 40 சதவீத வழக்கறிஞர்கள் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்கிறது. ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த ஆவணத்தை மனித ஆற்றலைக் கொண்டு ஆய்வு செய்து சட்ட ஆலோசனை வழங்கும் போது 65 சதவீத அளவுக்கே பிழையற்ற அலோசனை கிடைக்கிறது.

இதே செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது சுமார் 98 சதவீத அளவுக்கு துல்லியமான ஆலோசனை கிடைக்கின்றது. எனினும் மருத்துவத் துறையில் நடக்கும் விவாதத்தைப் போலவே சட்ட உலகிலும், மனித மூளையின் முடிவெடுக்கும் திறனுக்கு இயந்திரத்தின் முடிவெடுக்கும் திறனுக்கும் ஒப்பீடு செய்து விவாதங்கள் நடந்து வருகின்றன.

கட்டுமானத் துறை தொடங்கி ஆலை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை வரையிலான எந்தத் துறையும் தானியங்கல் தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. தற்போது இந்திய ஐ.டி துறை ஊழியர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தானியங்கல் முறையை இந்தப் பின்புலத்தில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத் துறை என்பதே பிற துறைத் தொழிலாளர்களுடைய வேலைகளைத் தின்று தான் வளர்ந்தது. தற்போது செயற்கை நுண்ணறித் திறனும் தானியங்கல் தொழில்நுட்பமும் அதே துறையினைச் சேர்ந்த ஊழியர்களை ரத்தப்பலி கேட்கத் தொடங்கியிருக்கிறது.

குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிக பட்ச உற்பத்தி; உற்பத்திச் செலவைக் குறைப்பது; உற்பத்தித் திறனைக் கூட்டுவது; மனிதர்களை இயந்திரங்களைக் கொண்டு மாற்றீடு செய்வது என்பவையெல்லாம் முதலாளித்துவ நியதிகளின்படி  தவிர்க்கவியலாத போக்குகள். இதன் விளைவாக வேலையற்றோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

தொழில் துறைகளில் முன்னறிப் புலனாய்வுத் திறன் ஏற்படுத்தி வரும் மாற்றங்களும், அதன் விளைவான வேலையிழப்புகளும் ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் ஆளும் வர்க்கங்களின் கைகளில் இத்தொழில்நுட்பம் புதிய ஆயுதங்களைக் கொடுத்துள்ளது. மீப்பெரும் மின் தரவுகளை ஆய்வு செய்வதன் மூலம் சமூகத்தை மேலிருந்து கட்டுப்படுத்துவதற்கும் இயக்குவதற்கும் தேவையான முடிவுகளை வந்தடைகின்ற சாத்தியங்களை இத்தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கின்றன.

எதிர்காலம் குறித்து துல்லியமாக அனுமானிக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் அடைந்து வருகிறது. மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் மென்மேலும் ”கற்றுக் கொள்கிறது”. இதன் காரணமாகவே துல்லியமான அனுமானங்கள் சாத்தியமாகின்றன. எதிர்காலம் குறித்த இந்த முன்னறிப் புலனாய்வுத் (Predective intelligence) திறனின் விளைவுகள் தாம், கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக தானியங்கல் தொழில்நுட்பத் துறையில் பிரதிபலிக்கின்றன.

செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருக்குமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள, அந்த முடிவுகளை வந்தடைய இத்தொழில்நுட்பம் கைக்கொள்ளும் முன்னறிப் புலனாய்வு (Predictive intelligence) முறையையும் அது தொடர்பான பகுப்பாய்வு (analytics) முறைகளையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் !

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர்  மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60,  தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

_________________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : பாஜக விரும்பும் தொலைக்காட்சிகள் எவை ?

0

தொலைக்காட்சி நெறியாளர்கள் இரண்டு விசயத்தை விரும்புவார்கள். ஒன்று பிரபலமாக வேண்டும், இரண்டு நடுநிலையாளராக அங்கீகரிக்கப்பட வேண்டும். பிரபலமாவதற்கு பரபரப்பான தலைப்புக்களில், பிரச்சினைக்குரிய விருந்தினர்களை வைத்து ஏட்டிக்கு போட்டியாக கேட்டால் போதும். நடுநிலைமை என்று வந்தால் அது பொதுப்புத்தியை மீறக்கூடாது என்பது போக வேறு கவலை இல்லை. இன்றைக்கு பாஜக -வும், முன்பு ஜெயாவும் இவர்கள் நினைக்கின்ற பொதுப்புத்தியை தீர்மானிப்பதாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட தலைப்புக்கு உட்பட்டு விருந்தினர்களிடம் அதுவா இதுவா, அதுவென்றால் இது, இதுவென்றால் அது என்று கேட்பார்கள். பாஜக நிர்மலா சீதாராமன் என்றால் அடக்கிவாசிப்பதும், அய்யோ பாவம் நபர்கள் என்றால் சீறுவதும் இவர்களது சுபாவம்.

டெங்கு கொசு கேரளாவிலிருந்து வந்தது என்று அதிமுக அமைச்சர் சொன்னால்அது எப்படி வந்தது?… என்று கூட கேட்பார்கள். இவையெல்லாம் கேட்பதற்கே அருகதை அற்ற முட்டாள்தனம் என்பது அவர்களுக்குத் தெரியாது. குறிப்பிட்ட செய்தி, நிகழ்வுகளில் மக்கள் நலன் என்பதே ஒரு பத்திரிகையாளர் கொண்டிருக்க வேண்டிய சார்பு நிலை என்பதை இவர்கள் நடுநிலை தவறல் என்று நினைக்கிறார்கள். போகட்டும்!

ஒரு மனிதன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதிலிருந்து அவனை – அவளை மதிப்பிட முடியாது. அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை மதிப்பிட முடியும். இங்கே அந்த மற்றவர்கள் பாஜக – ஆர்.எஸ்.எஸ் – இவர்கள் சார்பு ‘சமூக ஆர்வலர்களாக’ இருக்கும் பட்சத்தில் விடை என்னவாக இருக்கும்? அதற்கு தனிப்பட்ட நெறியாளர்களாக இருந்தால் பட்டியல் பெரிதாக இருக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அபிமானம் பெற்ற தொலைக்காட்சி என்பதாக மாற்றிக் கொள்வோம்.

கேள்வி இதுதான்.

விவாதங்களில் பாஜக-வினர் பங்கேற்க விரும்பும் தமிழக செய்தி தொலைக்காட்சிகள் எவை?

  • தந்தி டிவி
  • புதிய தலைமுறை
  • நியூஸ் 7 தமிழ்
  • நியூஸ் 18 தமிழ்
  • சன் செய்தி
  • கலைஞர் செய்தி
  • பாலிமர் செய்தி
  • மக்கள் தொலைக்காட்சி

குறிப்பு: பாஜக-வினர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளை விரும்பக்கூடும் என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளை நீங்கள் தெரிவு செய்யலாம்.

இறுதியில் புகழ்பெற்ற நெறியாளர்கள் அடங்கிய தொலைக்காட்சிகளின் ‘நடுநிலைமை’ என்ன என்பதை கண்டுபிடித்து விடலாம்! வாக்களியுங்கள்!

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நடப்பவைகளை சகிக்க மாட்டேன் – நான் நரகாசுரன் !

3

அசுர வெடி!

நடப்பவைகளை
சகித்துக்கொள்ள முடியாதபோது
நான் நரகாசுரன்.

எங்கிருந்தோ வரும் தேவர்கள்
எனது கதிராமங்கலத்தை
துளையிடுவதை
எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

மூலதன கூர்ம அவதாரங்கள்
எனது நெடுவாசலை
பாயாய் சுருட்டிக் கொண்டு
ஓட வருகையில்
வீதிக்கு வந்து விரட்டினால்
நான் நரகாசுரன்.

தமிழகத்தையே மத்தாக்கி
‘கெயில்’ ஆதிசேசன்
இறுக்குகையில்
அமிழ்தம் ‘மேல்’ லோகத்திற்கு
விசம் எங்களுக்கா?
என ஆர்த்தெழுந்து போராடினால்
நான் நரகாசுரன்.

பசும்தளிர்
அகலிகையை அபகரிக்க
‘மேக் இன் இந்தியா’
மாறுவேடத்தில் வரும்
பன்னாட்டு இந்திரனை
தடுத்து நிறுத்தினால்,…
நான் நரகாசுரன்.

அழகிய தாமிரவருணியை
ஆக்கிரமிக்க வரும்
அமெரிக்க பிரகஸ்பதியை,
“என்னைக் கொன்றுவிட்டு
தீபாவளி
என் ஆற்றை கொன்றுவிட்டு
கோக் கோலாவா?”
என எதிர்த்துக் கேட்டால்
நான் நரகாசுரன்.

வல்லினம், மெல்லினம்
இடையினமாய்
உயிராய், மெய்யாய்
உயிர் மெய்யாய்
அணி, அணியாய்
அளபடயாய்
இலக்கணமாய், இலக்கியமாய்
இன்னிசையாய்
எம் குருதி கலந்த தாய்த் தமிழை
ஆதிக்கம் செய்யவரும் சமஸ்கிருதத்தை
அடித்துத் துரத்தினால்
நான் நரகாசுரன்.

கருவறைக்கு வந்தால் தீட்டு
கல்வி பயில வந்தால் நீட்டு
பூர்வகுடி உரிமைகளுக்கு பூட்டு
என்ன அநியாயம்!
இந்த அரசுக் கட்டமைப்பையே ஓட்டு!
என தெளிந்து நின்றால்…
நான் நரகாசுரன்.

– துரை. சண்முகம்

_____________

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !

0

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உள்ளது புதுப்பட்டி கிராமம். குறு விவசாயிகள் நிறைந்த பூமி இது.  விவசாயிகள் மானாவரியாகவும், கிணற்றுப் பாசனமாகவும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விளைநிலங்களுக்கு இடையில்தான் டாஸ்மாக் கடை கடந்த 4.9.2017 ல் திறக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் மக்கள் அதிகாரத்துடன் இணைந்து டாஸ்மாக் எதிர்ப்புக் குழு ஒன்றை அமைத்துப் போராடினர். அந்த செய்தி  நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு – விவசாயிகள் போர்க்கோலம் ! என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளிவந்துள்ளது.

முதல் நாள் போராட்டம் முடிவில், மக்கள் கடைசி வரை எதிர்பார்த்து காத்திருந்தும் மண்டல மேலாளர் (DM) வரவேயில்லை. ஆனாலும் மக்களின் போராட்டம் உறுதி குன்றாமல் இரவும் தொடர்ந்தது. 12.10.2017 அன்று காலையே போராட்டத்தின் போது  பந்தல் போடுவதற்கு அனுமதிக்காத போலீசு, இரவில் ட்யூப்லைட் போடுவதற்கும் அனுமதிக்கவில்லை. ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, மேலதிகாரிகள் அப்படிச் செய்ய அனுமதி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது என்று இன்ஸ்பெக்டர் வெளிப்படையாகவே கூறினார். எப்படியாவது மக்களை கலைந்து செல்ல வைக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் புரிந்தது.

இரவு முழுவதும் தொடர்ந்த லேசான தூறலிலும் மக்கள் உறுதியுடன் இருந்தனர். மக்களே ஏற்பாடு செய்த ஒற்றை பெட்ரோமாக்ஸ் லைட்டை கொண்டே இருட்டை விரட்டினோம். குழுவாக அமர்ந்து போராட்டங்கள் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் உரையாடி அறியாமையும், தயக்கத்தையும் விரட்டினோம்.

மக்கள் தூங்கினாலும் ‘உளவுத்துறையோ தூங்காமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.’ இதனிடையே பின்னிரவு வரையிலும் மண்டல அதிகாரி வராததால் மேலும் மக்களின் கோபம் அதிகமானது. இரவோடு இரவாக மண்டல அதிகாரி வராததைக் கண்டித்து விடிய விடிய போராட்டம் தொடர்வதாக ஆலங்குளம் புதுப்பட்டி வட்டாரத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அடுத்த நாள் காலையும் – போராட்டம் தொய்வின்றி தொடர்ந்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இருந்தனர். வெயில் அதிகரிக்கவே அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மீண்டும் பந்தல் போட முயற்சித்தபோது, இன்ஸ்பெக்டர் வந்து போடக்கூடாது என்று தடுத்தார். மக்களின் பாதுகாப்பை விட மேலதிகாரியின் உத்தரவையே முக்கியமாக கருதி செயலாற்றினார்.

இந்த முறையோ மக்களே கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். மண்டல மேலாளர் வருவதற்கு நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் எங்களைத் தடுக்காதீர்கள். மீறித் தடுத்தால் சாலை மறியலில் இறங்குவோம் என்று துணிந்தனர். அதன் பிறகே பணிந்த்து போலீசு. மண்டல மேலாளருக்கு போன் செய்து தயவு செய்து உடனே வந்துவிடுங்கள் என்று தொலைபேசியில் மன்றாடினர். மதியம் 1.30 மணிக்கு மண்டல மேலாளர் வந்துவிடுவார், அதுவரைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று போலீசு கேட்டுக்கொண்டது.

மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார்

1.45 -க்கு வந்த மண்டல மேலாளர் எடுத்த எடுப்பிலேயே தாசில்தார் பேசியதையே வாந்தி எடுத்தது போல் இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் என்றார். மக்களோ உடனே மூடுங்கள் என்று உறுதியுடன் நின்றனர். பின்னர் தீடீர்னு கடைய எடுக்க சொன்னால் எப்படி என்று மக்களையே குற்றம் சாட்டத் தொடங்கிய அந்த அதிகாரி, உடனடியாக மாத்த முடியாது, அதற்கு தயாரிப்பு செய்ய வேண்டும். இடம் பார்க்க வேண்டும், பிறகுதான் மாற்ற முடியும் என்று அலட்சியமாக பேசினார்.

அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனத்தை கண்முன்னே கண்ட  மக்களோ, தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்? என்று முகத்தில் அடித்தது போல் அம்பலப்படுத்தினர். கடையை மூடும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று அறிவித்தனர் மக்கள். தொடர்ந்து அதிகார வர்க்கத்தைக் கண்டித்த முழக்கங்களால் அந்தப் பகுதியையே அதிர்ந்தது.

அரசோ மக்கள் சாராயத்தை குடித்து அடிமையாக கிடக்க வேண்டும் என்று விரும்புகிறது. மக்களோ சுயமரியாதையுடன்தான் இருப்போம் என்று போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

மக்களின் கேள்விகளையும், உறுதியையும் எதிர்கொள்ள முடியாமல் ஓடிப்போய் வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டார் அதிகாரி. போலீசோ மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்தனர்.

மக்கள் போராட்டத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியில் இருந்த தி.மு.க – எம்.எல்.ஏ பூங்கோதை அங்கு வந்தார். அவரிடமும் மக்கள் கடையை மூடும் வரை ஓயமாட்டோம். அதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர்.  அவரோ நானும் வருகிறேன், வாருங்கள் தொகுதி அதிமுக எம்பி பிரபாகரன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மறுபடியும் வடிவேல் போல முதலில் இருந்து தொடங்கினார். போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நின்றிருந்த மக்களோ எல்லாரையும் சந்தித்து விட்டோம். மூடுவதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர்.

தி.மு.க. – எம் எல் ஏ பூங்கோதை

அதன் பிறகு எம்.எல்.ஏ வும், மண்டல அதிகாரியும் நாங்கள் உடனே கலெக்டரைச் சந்தித்து பேசுகிறோம் என்று கிளம்பிச் சென்றனர். போராட்டமும் தொடர்ந்தது.

மக்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டு, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, அதிலிருந்து மீளவும் வழிதெரியாத நிலையில் தவித்து நிற்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த அரசுதான் என்பதை தங்களின் அனுபவங்களின் மூலமாக உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த தீயில் எண்ணைய் ஊற்றுவது போல்தான் அதிகார வர்க்கம் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து நடந்து கொண்டது.

மக்களின் உறுதியான, விடாப்பிடியான, சமரசமற்ற போராட்டத்துக்கு முன்னால் ; தெளிவாகச் சொன்னால் மக்களின் அதிகாரத்துக்கு முன்னால் எதுவும் செல்லுபடியாகாது என்பது அங்கே நிரூபணமானது.

13.10.2017 அன்று மாலை 6:00 மணிக்கு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், ஒரு வாரத்தில் சாராய பெட்டிகளை எடுத்துவிடுவதாகவும் அறிவித்து அதிகார வர்க்கம் பணிந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் அதிகாலையில் ஆலங்குளம் நகரம்,  சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதிலும் மக்களின் இந்த வெற்றியை பிரகடனப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

டாஸ்மாக் மட்டுமல்ல, மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே தீர்வு என்பதை இந்தப் போராட்டத்தின் மூலம் ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட மக்கள் மக்கள் அதிகாரத்தோடு இணைந்து பயணிப்பதற்கு ஆயத்தமாயுள்ளனர்.

இறுதி வரை இந்த போராட்டத்தில் மக்களோடு இருந்து போராடியது மக்கள் அதிகாரம் தோழர்கள் தான் என்பதை இந்த போராட்டச் செய்தியை  வெளியிட்ட எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. மக்கள் அதிகாரம் எனும் அமைப்பின் பெயர் மக்களிடம் சென்று விடக் கூடாது என்பதில் ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் ஒன்றுபட்டு நின்றன. ஆனால் மக்கள் மனதில் நிலைத்து விட்டதை இவர்களால் என்ன செய்ய முடியும்?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்

1

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளையும் மக்கள் அதிகாரம் அமைப்பு ஆய்வு செய்தது. வார்டுகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள  அடைப்புகள், உடைப்புகள், தண்ணீர் குழாய் இணைப்புகள் உடைந்து சாக்கடை நீருடன் குடிநீரும் கலந்து வருவது, சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீர் மற்றும் குப்பைகள், அரசு மருத்துவமனைகள், அலுவகங்கள் வளாகத்தில்  புதர் மண்டிக் கிடப்பது, மருத்துவ கழிவுகள் முறையின்றியும், பாதுகாப்புமின்றியும் கொட்டப்படுவதும் சாதாரணமாக இருக்கிறது.

போதிய மருத்துவர்கள் இல்லாதது. 100, 150 பேருக்கு ஒரு மருத்துவர், 32 படுக்கை வசதி கொண்ட வார்டுகளில் 60, 80 நோயாளிகளை சேர்ப்பது, போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாதது, நோய் கருவிகள், சுத்தப்படுத்துவதற்க்கான பொருட்கள், உபகரணங்கள் பற்றாக்குறை என தமிழக அரசும், மாவட்ட, நகராட்சி நிர்வாகமும் செயலற்று, மக்களை பாதுக்காக்க துப்பில்லாமல் தகுதிழந்து நிற்பது தெரிய வந்தது.

ஏடிஎஸ் கொசுக்களுக்கு போட்டியாக மக்களை காவு வாங்க இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், ஊடகங்கள், டெங்கு சம்மந்தப் பட்ட மருந்துக்கு 16 கோடி நிதி, சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ ஊர்திகள், அரசு சுனாமி வேகத்தில் வேலை செய்து வருகிறது என்ற வெற்றுப் பீற்றல்கள், மக்கள் தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று பாதிக்கப் பட்ட மக்களையே குற்றவாளியாக்குவது என்று தினம் தினம் ஒரு பொய்யை மக்கள் மத்தியில் பேசி வருகிறார்கள்.

இதை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக 12.10.2017 அன்று மக்கள் அதிகாரம்  தோழர்கள்  விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் தலைமையில் புகைப்பட ஆதாரங்களோடு இந்த அரசையும், நகராட்சியையும் கண்டித்து முழக்கமிட்டவாறு நகராட்சி ஆணையரை நோக்கி சென்று முற்றுகையிட்டனர்.

முழக்கத்தை கேட்டவுடன் அருகில் இருந்த மக்கள் குவிய தொடங்கினர். நகராட்சி  ஊழியர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பின் நகராட்சி ஆணையர் தோழர்களை உள்ளே அழைத்தார். பின் தோழர்கள் ஆய்வின் விவரங்களையும், புகைப்படங்களையும் ஆணையரிடம் காண்பித்து கேள்விகளை எழுப்பினர்.

தண்ணீர் தேங்கினால் மக்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் என்றால் இதோ, உங்கள் அலுவலகத்தை பாருங்கள், மாவட்ட ஆட்சி அலுவலகத்தை பாருங்கள், வட்டாச்சியர் அலுவலகத்தை பாருங்கள். நீங்கள் மக்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? என்று கேட்டதற்கு  ஆணையர்  “எங்களால் முடிந்த வரை நாங்கள் செய்து வருகிறோம். ஆனால் அரசு மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எங்கள் அதிகாரத்தில் இல்லை, அதை அவர்கள் தான் செய்ய வேண்டும்” என்றார்.

இப்படி அரசு நிர்வாகமானது தங்களுக்குள்ளாகவே முரண்பட்டுக்கொண்டு தன் பொறுப்புகளை துறப்பதும், மக்களை காக்க எந்த திட்டம் இல்லாமல் தோல்வி அடைவதுமான நிலையை நகராட்சி ஆணையரின் பதில்கள் உணர்த்தின. இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே விழுப்புரம் நகர காவல் நிலையத்திலிருந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4-காவலர்கள், 4- உளவு பிரிவு போலீசு வந்து சேர்ந்தனர். பின் நகராட்சி ஆணையர் உங்கள் குறைகளைக் எழுதி கொடுங்கள் இரண்டு நாட்களில் கட்டாயம் சரிசெய்கிறோம் என்றார். தோழர்களும் அந்தக் கெடுவை ஏற்றுக் கொண்டு அவை நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தொடருமென்று கூறிவிட்டு வந்தனர்.

  • அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ வசதிகளை எற்படுத்து!
  • டெங்குவை கண்டறியும் மருத்துவ கருவியை வாங்கு!
  • ஆய்வகத்தை உடனே ஏற்படுத்து!
  • தற்காலிக நடமாடும் மருத்துவமனைகளை உடனே உருவாக்கு!
  • சுகாதாரம் பராமரிப்பு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் செய்!”
  • “மக்கள் அதிகாரத்தை” கையிலெடுப்போம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

2

காவிரி நியூஸ் என்னும் செய்தி தொலைக்காட்சியில் ‘8 திசை’ என்னும் நிகழ்ச்சியில் நடந்த விவாதமிது. “டெங்கு: நிலவேம்பு நிவாரணமா?” என்ற பெயரில் அந்த விவாத நிகழ்ச்சியை நெறியாளர் தமிழினியன் ஒருங்கிணைத்தார்.

டெங்கு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை குறித்த இந்த விவாதத்தில் பொதுநல மருத்துவர் ராஜேந்திரன் (அலோபதி), மருத்துவர் சக்திவடிவேல் (கொசுக்கள் மற்றும் அதன் மூலம் பரவும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்பவர், அலோபதி), குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் (அலோபதி), மருத்துவர் சாம்ராஜ் (சித்த மருத்துவர்) ஆகியோர் பங்கேற்றனர்.

நெறியாளர் தமிழினியன்

இந்த விவாதம் சாராம்சமாக,  நிலவேம்பு போன்ற சித்தமருத்துவ முறைகளின்  உண்மைத் தன்மை, நவீன மருத்துவத்தின் சிகிச்சை முறை, டெங்கு கொசு வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு – உடல் மாற்றங்கள், டெங்கு மரணங்களுக்கான காரணங்கள், டெங்கு பரவுவதற்கான் காரணங்கள்,  தடுப்பு மருந்து குறித்த நிலவரங்கள்  ஆகியவற்றை அறிவியல் ரீதியில் அலசியிருக்கிறது.

வாட்ஸ்அப்பில் வதந்திகளும், அறைகுறை உண்மைகளும் மக்களைக் குழப்பி வரும் நிலையில் இந்த விவாதம் பெருமளவில் டெங்கு குறித்த மாயைகளை அகற்றி உண்மைகளை எடுத்து வைக்கிறது எனலாம்.

டெங்கு கொசுக்கள் – புரளிகளும் உண்மைகளும் :

கொசுக்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் மருத்துவர் சக்திவடிவேல், டெங்கு கொசுவான ஏடிஸ் எஜீப்பியா கொசுக்கள் குறித்து பரப்பப்படும் புரளிகள் குறித்து சில விளக்கங்களை முன் வைத்தார்.

தேங்கிய நீரில் பிளீச்சிங் பவுடர் போடுவதல், ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்கள் வீரியம் அடைந்து அதன் வாழ்நாள் 21 நாட்களிலிருந்து 40 நாட்களாக அதிகரித்துவிட்டது என்று கூறப்படுவதில் துளியும் உண்மையில்லை என்பதையும், இந்தக் கொசுக்களுக்கும் ஆயுள் 21 நாட்கள் தான் என்றும் தெரிவித்தார். அதே போல, ஏசியில் இருந்தால் கொசு வராது, மேல்மாடிக் குடியிருப்புக்கு கொசு பறந்து வராது ஆகிய கருத்துக்கள் தவறானவை என்றார்.

ஏடிஸ் வகைக் கொசுக்கள், கொசு வகைகளிலேயே மிகவும் சோம்பேறியானவை என்றும் அது உற்பத்தியாகும் பகுதியில் இருந்து அதிகபட்சம் 100 மீட்டர் தூரம் மட்டுமே அது பயணிக்கும் என்றார். மேலும், ஏடிஸ் எஜிப்பியா வகைக் கொசுக்களின் முட்டைகள் ஒரு வருடம் வரை, அதாவது அடுத்த சீசன் வரும் வரை உயிர்ப்போடு இருக்கும் தன்மை கொண்டவை என்றும் கூறினார்.

மருத்துவர் ராஜேந்திரன்

இவ்வகைக் கொசுக்கள்  சிறு அளவில் தேங்கியிருக்கும் தண்ணீரில் கூட முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக் கூடியவை என்றும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து (ஏசி) நீர் வடியும் இடத்தில் கூட அதனால் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய முடியும் என்கிறார்.

ஒரு ஏடிஸ் எஜிப்பியா கொசு தனது வாழ்நாளில் 400 முதல் 600 முட்டைகள் வரை இடும். மற்ற மலேரியா கொசுக்களைப் போல், இவை நீரின் மேற்பரப்பில் முட்டையிடாமல், நீர் தேங்கியிருக்கும் பாத்திரம் அல்லது இதர கொள்கலனின் ஓரப் பகுதியில் முட்டையிடுக்கின்றன. இதன் காரணமாகவே அவற்றால் பல மாதங்களுக்கும் உயிர்ப்போடு இருக்க முடிகின்றது என்கிறார். இதன் காரணமாகத் தான் சமீபகாலங்களில் கோடைகாலத்திலும் டெங்குக் காய்ச்சல் வருவதைச் சுட்டிக் காட்டினார். ஆகவே திறந்து வைக்கப்படும் தண்ணீரை காலி செய்வதோடு சம்பந்தப்பட்ட பாத்திரங்களை தேய்த்து கழுவ வேண்டுமென்றார்.

சித்த மருத்துவமுறை – தீர்வைத் தருமா?

தமிழக அரசின் சுகாதாரத் துறை டெங்குவை ஒழிக்க அனைத்து இடங்களிலும் நிலவேம்புக் குடிநீர் கொடுப்பதாகவும், 45,000 சுகாராதரப் பணியாளர்கள் பணியில் இருப்பதாகவும் கூறுகிறது. அந்த நிலவேம்புக் குடிநீரை / கசாயத்தை டெங்குவிற்கு மருந்தாகவோ, தடுப்பு மருந்தாகவோ உபயோகிக்க முடியுமா? நிலவேம்புக் கசாயத்தை மட்டும் மருந்தாக எடுத்துக் கொண்டால் போதும் என சித்தமருத்துவர்களால் உறுதியாகக் கூற முடியுமா? நிலவேம்புக் கசாயத்தின் மருத்துவத்தன்மை அறிவியல் ரீதியில் சர்வதேச மருத்துவத்துறையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா ? டெங்கு காய்ச்சலுக்கான சித்த வைத்திய முறை அறிவியல்ரீதியில் பல மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டதா?  அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா ?   நிலவேம்புக் கசாயம் குறித்த மேற்கண்ட கேள்விகளை சித்த மருத்துவர் சாம்ராஜிடம் முன்வைத்தார் நெறியாளர்.

மருத்துவர் சாம்ராஜ்

அதற்குப் பதிலளித்த மருத்துவர் சாம்ராஜ், நிலவேம்புக் கசாயம் என்பது வெறும் நிலவேம்பு மட்டுமல்லாது வேறு சில 8 மூலப் பொருட்கள் கலந்து உருவாக்கப்படுவதே என்றார். மேலும் நிலவேம்புக் கசாயம் டெங்குவின் பாதிப்பால் குறையும் இரத்தவட்டுக்களை அதிகரிக்கிறது என்பதையும், பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மனப்பாகு ஆகிய மருந்துகளும் இரத்தவட்டுக்களை அதிகரிக்க உதவுகிறது என்றும் கூறினார்.

நிலவேம்புக் கசாயத்தை நோயின் நிலையறிந்து தான் தாங்கள் பரிந்துரைப்பதாகவும், நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அலோபதியோடு இணைந்தே சித்தமருத்துவத்தை பரிந்துரைப்பதாகவும் சாம்ராஜ் கூறினார்.

நிலவேம்பு குறித்து அறிவியல் ரீதியில் மத்திய சித்த மருத்துவக் கழகத்தால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, அதில் வைரஸ் விரோத,  காய்ச்சல் விரோதத் தன்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மருத்துவத் தன்மை குறித்து, கேஸ் கண்ட்ரோல் ஸ்டடி மற்றும் பைலட் ஸ்டடி (Case control Study and Pilot Study) உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்ப்பட்டுள்ளன என்றார். இதற்கு அடுத்த கட்டமான ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றார். ( இந்த ஆய்வுகளை நவீன மருத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சையான ஆய்வு நிறுவனம் சுயேச்சையாக ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட வேண்டும்.)

நவீன மருத்துவத்தைப் போன்று (அலோபதி )போன்ற ஒரு ஆய்வு முறையும் ஆவணப்படுத்துதல் முறையும் சித்தா மருத்துவத்தில் இல்லாதது ஒரு பெரும் குறை தான் என்பதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் சாம்ராஜ், அதனை முறைப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுத்து வரப்படுவதையும் குறிப்பிட்டார்.

மேலும் உலக சுகாதார நிறுவனம், இரண்டு சித்த மருத்துவ மருந்துகளை அங்கீகரித்திருப்பதையும், மேலும் பல மருந்துகள் அவ்வாறு அங்கீகரிக்கப்பட ஆய்வகச் சோதனைகளும், ஆவணப்படுத்தப்படுதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விவாதத்தில் சில அலோபதி மருத்துவர்கள் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்காத நிலையில் நிலவேம்பு கசாயத்தை பரிந்துரைக்க முடியாது என கூறிய பதிவுகள் காட்டப்பட்டன. விவாதத்தில் கலந்து கொண்ட அலோபதி மருத்துவர் சக்திவடிவேல், ஆராய்ச்சி இதழில் நிலவேம்பு குறித்த கட்டுரைகளை படித்திருப்பதாகவும் அதை மருந்து என்பதற்கு பதில் கூடுதல் ஊக்கச் சக்தியாக (டானிக் – வைட்டமின் போல) பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்தார்.

டெங்கு வந்தால் – உடனே மரணமா ?

டெங்கு வந்தால் இறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என மக்கள் மத்தியில் ஒரு தேவையற்ற பீதி நிலவுகிறது என்கிறார் மருத்துவர் ராஜேந்திரன். “சாதாரண காய்ச்சல் வந்தாலும் அது டெங்குவாக இருக்குமோ என பீதி அடைகின்றனர்.  மக்கள் முதலில் தைரியத்தோடு இருக்கவேண்டும். டெங்குவிற்கென்று தனிச்சிறப்பான மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவிற்கு சிகிச்சை மூலம் தீர்வு இருக்கிறது என்றார். இரத்தத்தில் நீர்ச் சத்து குறைவதைத் தடுத்து நீர்ச்சத்தை அதிகரிப்பதன் மூலம் தான் டெங்குவை குணப்படுத்த முடியும் என்றார்.

மேலும் அனைத்துக் காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் அல்ல. டெங்கு கொசு கடித்த நூறில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் வரலாம். அவர்களையும் உரிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். டெங்கு காய்ச்சல் ஆட்கொல்லி நோய் அல்ல என்றார்.

மருத்துவர் சக்திவடிவேல்

டெங்குக் காய்ச்சலின் போது உடலில் உள்ள இரத்தவட்டுக்கள் வெகுவாகக் குறைகின்றது. இரத்தவட்டுக்கள் 10000 -க்கும் கீழ் குறையும் போது இரத்தவட்டுக்களை வெளியில் இருந்து உட்செலுத்தப்படும். இயல்பாகவே இரத்தவட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என மருத்துவர் இராஜேந்திரன் கூறினார்.

குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் இது குறித்துக் கூறுகையில், “குழந்தைகளுக்கு இரத்தவட்டுக்களின் எண்ணிக்கை 10,000 கீழ் போகும் போது அது ‘டெங்கு அதிர்ச்சி நோய்க்குறியை’ (Dengue Shock Syndrome) வெளிப்படுத்துகிறது.

டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி (Dengue Shock Syndrome) என்பது இரத்தநாளங்கள் உடைந்து இரத்தம் வெளியேறுவது ஆகும். குறிப்பாக இரத்தநாளங்களில் உள்ள  நீர் வெகுவாகக் குறையும், இதனைப் போக்கவே தொடர்ச்சியாக நீராகாரங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு அதிர்ச்சி அறிகுறிகள் இரத்த வட்டுக்கள் 3000த்திற்கும் குறைவாக போகும் போது கூட ஏற்படலாம். அப்போதும் உரிய சிகிச்சை இருக்கிறது. அது கொடுக்கப்படவில்லை என்றால் இரத்தநாளங்களில் ஏற்படும் கசிவால், நீர் வெளியேறி மூளை மற்றும் நுரையீரலில் போய் சேருகிறது. இத்தகைய உள்ளர்ந்த நீர்க் கசிவு காரணமாக மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த நீர்க்கசிவால் இரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து விடும். அசூழலில் வெளியில் இருந்து இரத்தவட்டுக்களை உட்செலுத்துவதும் சிரமமாகிவிடும்” என்று கூறினார்.

அரசுக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தோல்வி – டெங்கு :

டெங்குவை சரி செய்ய வீட்டிற்குள் நீர் தேக்கி வைப்பதை மட்டுமே காரணமாக அரசு கூறுகிறது. வீதியில் சாக்கடை உடைந்து ஓடுவதையும், வீதிகளில் நீர் தேங்கிக் கிடப்பதையும் மக்கள் மட்டும் சரி செய்து விட முடியாது. அதோடு டெங்குவைத் தடுப்பது சுகாதாரத்துறையால் மட்டுமே செய்யக் கூடிய காரியமும் அல்ல. பொதுப்பணித்துறை, மெட்ரோ, நெடுஞ்சாலைத்துறை, கழிவுநீரகற்றுவாரியம், போன்ற பல்வேறு அமைப்புகளும் இதில் பங்கு செலுத்த வேண்டியது உள்ளது. தற்போது இவை அனைத்தின் தோல்வியே டெங்கு பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது என்றார் மருத்துவர் ரெக்ஸ். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்புப் பிரிவுகள் திறக்க வேண்டும் என்றார்.

குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ்

மருத்துவர் இராஜேந்திரன் இது குறித்துக் கூறுகையில், டெங்கு வெகுவாக ஏழைகளுக்குத் தான் வருகிறது. ஏனெனில் அவர்களால் தான் சத்தான ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே ஏழைகள் அதிகமாக பலியாகிறார்கள்.

இந்தியாவில் ‘வகை 3’ (Type 3) இரக டெங்குக் காய்ச்சலே வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், வகை 3 , வகை 4 இரக டெங்குக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்துகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் அதனை நம்மால் அவ்வளவு சாதாரணமாக வாங்கி உபயோகிக்க முடியாததற்கான காரணம் அதன் விலை அதிகம் என்பது தான். 3 டோஸ்(Dose) தடுப்பு மருந்தின் விலை 207 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பிப்படி ரூ.13,443).

டெங்குவைப் பொறுத்தவரையில் நோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சையை வகை பிரித்து அதற்கான நமது மருத்துவ வரைமுறையை (medical protocol) முதல் நிலை முதல் நான்காம் நிலை வரை பிரித்து எந்த நிலைக்கு என்ன மருத்துவம் கொடுக்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இங்கு டெங்கு நோய்க்கு அரசாங்கம் இப்படிப்பட்ட வரைமுறை எதையும் வகுக்கவில்லை என்று கூறிய மருத்துவர் இராஜேந்திரனிடம், “உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்திய அளவில் டெங்குவிற்கு அது போன்று எதுவும் நடைபெறவில்லையே ஏன்?” என நெறியாளர் தமிழினியன் கேட்டார்.

டெங்கு சமீபமாகத் தான் வந்திருக்கிறது, அது குறித்து இனி தான் ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும் என்று கூறிய மருத்துவர் இராஜேந்திரனிடம், டெங்கு மரணத்தை ஏற்படுத்தத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன என நெறியாளர் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட மருத்துவர் இராஜேந்திரன், “நமது நாட்டில் மருத்துவத் துறையில் ஆராய்ச்சி என்பது மிகக் குறைவு அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறினார்.

இது டெங்குவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கான ஒட்டு மொத்தப் பிரச்சினை. இந்த வீடியோவைப் பாருங்கள்! டெங்கு குறித்த நமது கேள்விகள் பலவற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் விடையளிக்கிறார். அரசை எதிர்த்துப் போராடுவதோடு அறியாமையையும் எதிர்த்துப் போராடுவோம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி