திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! அதிகாரத்தை கையிலெடுத்தால் மக்கள் மாற்ற நினைத்ததை மாற்ற முடியும் என்பதற்கு நம்பிக்கையூட்டும் பாடல். பாருங்கள், பகிருங்கள்!
“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன்.” “எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். இவ்வுலகில் வாழ்வதைவிடச் சாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” இவை ரோகித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தில் காணப்படும் வரிகள்.
ரோகித் வெமுலா (கோப்புப் படம்)
தன்னைச் சுற்றியிருந்த மாணவர்களைச் செயல் துடிப்புள்ளவர்களாக மாற்றிய ஒரு இளைஞனை வெறுமையில் தள்ளியது எது? பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் தற்போது தான் வாழ்கின்ற சமூகம் வரையிலான அனைத்தின் மீதும் மாளாக்காதலுடன் அக்கறையும் கொண்டிருந்த ஒரு இளைஞனை, தன் மீதே அக்கறையற்ற பரிதாப நிலைக்குத் தள்ளியது எது?
யாகுப் மேமனின் மரண தண்டனையைச் சகித்துக் கொள்ள முடியாமல் துடித்த ஒரு மாணவன், முசாஃபர் நகர் படுகொலைகளைத் தனது கண் முன் நடைபெற்ற அநீதி போல் உணர்ந்த மாணவன், ‘வாழ்வதை விடச் சாவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக’க் கூறுகிறானே, அதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்ன?
வெமுலாவின் கடிதம் இச்மூகத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. தனது மரணம் ஒரு எதிர்ப்பலையை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம்கூட வெமுலாவின் கடிதத்தில் தென்படவில்லை. இதுதான் நம்மைக் குற்றவுணர்வில் ஆழ்த்தும் பழி. தனது முடிவுக்காக, தன்னை நேசித்தவர்களிடம் வெமுலா மன்னிப்புக் கேட்கிறான். ஆனால், தனது மரணம் மற்றவர்களிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தி விடாது என்ற “தெளிவு” வெமுலாவிடம் இருந்திருக்கிறது.
இறந்து போன எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகளோ, “இந்தக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில்தான் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக”க் கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவர்கள் எழுதிய தற்கொலைக் கடிதம் என்பது உண்மையாயின், அம்மாணவிகளின் எதிர்பார்ப்பு வெமுலாவின் மொழியில் கூறுவதெனில் மிகவும் பரிதாபத்துக்குரியது. கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களென அம்மாணவிகள் நம்புகின்ற எல்லா நிறுவனங்களும் நிர்வாகத்தின் குற்றக்கூட்டாளிகளே என்பது புரியாத காரணத்தினால் வந்த வெகுளித்தனமான எதிர்பார்ப்பு.
இந்த அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகள், இந்த அரசமைப்பு உருவாக்கியுள்ள விதிமுறைகள் மரபுகள், தான் நிலைநிறுத்த விரும்புவதாக ஆளும் வர்க்கமே கூறிக்கொள்கின்ற சமூக பண்பாட்டு விழுமியங்கள், ஆளும் வர்க்கம் பீற்றுகின்ற சட்டத்தின் ஆட்சி ஆகிய இவையனைத்துமே தோற்றுவிட்டன என்பதை உணர்ந்து கொள்ளாமல், அவற்றின் வரம்பில் நின்று ஏதேனும் சாதித்துவிட முடியும் என்று நம்புகிறவர்கள், தத்தம் சூழ்நிலைகள் தோற்றுவிக்கும் நிர்ப்பந்தங்களுக்கு ஏற்ப தற்கொலை மனோபாவத்துக்கு ஆட்படுகிறார்கள். விஷ்ணுப்பிரியா முதல் வெமுலா வரையிலான மதிப்பு மிக்க பல உயிர்களை இப்படித்தான் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
தற்கொலை மனோபாவத்திலிருந்து இளைஞர்களை விடுவிக்க வல்லதும் இத்தகைய கலகப் பண்பாடுதான்!
கேரளத்திலிருந்து கோழிக்கோடு வழியாக மங்களூருக்கும் தமிழ்நாடு வழியாக பெங்களூருக்கும் குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் ரூ.3 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டது.
இத்திட்டத்தின் மொத்தத் தொலைவான 884 கி.மீ.-ல் தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் மட்டும் 310 கி.மீ. தூரத்திற்கு இக்குழாய் பதிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில், 175 கிராமங்களிலுள்ள சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் நாசமாகும். 5000 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகவும் பல ஆயிரம் குடும்பங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படும்.
திட்டத்தின் கோர முகம்
இது விவசாயத்தைச் சீர்குலைக்குமென்பதால், இக்குழாய்களை நெடுஞ்சாலை ஓரமாகவோ, ரயில்பாதை ஓரமாகவோ கொண்டு செல்லுமாறு கோருகிறார்கள் விவசாயிகள். அவ்வாறு கொண்டு சென்றால் “குழாய்ப்பாதையின் நீளம் அதிகரிக்கும், செலவு அதிகரிக்கும், அதனை நுகர்வோர் சுமக்க வேண்டியிருக்கும்” என்பதுதான் கெயில் நிறுவனத்தின் ஆட்சேபம். எரிவாயு விலையை விருப்பம் போல உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கும் எரிவாயு நிறுவனம், நுகர்வோர் நலன் குறித்துப் பேசுவது ஒரு பித்தலாட்டம். தற்போது இந்தக் குழாய்ப் பாதையில் செல்லும் எரிவாயுவில் கூட 50 சதவீதத்துக்கு மேல் தனியார் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்குத்தான் செல்லவிருக்கிறது. இருப்பினும் இந்நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் உரிமையை, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காட்டிலும் மேம்பட்ட பொதுநலனாக நீதிமன்றம் கருதுகிறது.
இத்திட்டத்திற்காக நிலத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறது என்கிறது கெயில் நிறுவனம். அதுவும் 99 ஆண்டுகளுக்கு!
நிலத்திற்கு மட்டும்தான் இழப்பீடு. மரங்கள், பயிர்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், பசுமைக் குடில்கள், வீடு போன்ற கட்டுமானங்கள் மற்றும் விவசாயத்திற்காக அந்த நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகள் பட்டக் கடன்கள் போன்றவற்றிற்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது.
அப்படியானால், இழப்பீடு எவ்வளவு தருவார்கள்? நிலத்தின் சந்தை மதிப்பிற்கு 10% மட்டுமே வழங்கப்படும்.
குழாயின் இருபுறமும் சுமார் 30 அடி தூரத்திற்கு வேர் ஆழமாக செல்லும் மரங்களை வைக்கக் கூடாது. அதாவது, தென்னை, மா, புளி போன்ற மரங்கள் வெட்ட வேண்டும். குறுகிய கால பயிர்களை மட்டும் தான் பயிரிட முடியும். இதனை மீறி நட்டால் அந்த விவசாயிகள் கிரிமினல்களாகக் கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
இந்த இடத்திற்கு அருகில் நிலத்தை உழக் கூடாது. ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கூடாது.
குழாயைச் சுற்றி இருபுறமும் சுமார் ஒரு கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். அதாவது, இப்பகுதிகளில் கிணறு, வாய்க்கால் அல்லது குளங்கள் வெட்டக்கூடாது.
ஏழு மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டும். சுமார் ஆயிரம் நீர்நிலைகள் மூடப்படும். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிக்கப்படும்.
இறுதியாக ஒரு கேள்வி. இந்த எரிவாயு குழாய் பாதுகாப்பானதா? இல்லை என்பதற்கு சாட்சி, சென்ற ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நாகாராம் என்ற கிராமத்தில் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்லப் பதித்த குழாய்களில் கசிவு ஏற்பட்டு வெடித்ததால் 16 பேர் பலி ஆனார்கள் என்பதுதான்!
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதன் பாதிப்பு
இத்திட்டத்தின் படி விவசாய நிலங்களில்தான் குழாய் பதிக்கப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த உடையாண்ட அள்ளி, தொட்ட திம்மன அள்ளி, கருக்கன அள்ளி, தொட்ட மெட்டரை, போடிசிப் பள்ளி, அச்செட்டிப் பள்ளி, எடய நல்லூர், பூனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் வழியாக கர்நாடகத்திற்கு இக்குழாய் கொண்டு செல்லப்பட இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி, பாலக்கோடு வட்டங்களின் வழியாக இக்குழாயின் பாதை செல்கிறது.
இக்குழாய் பதிக்கப்படும் இந்தக் கிராமங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை, மா, பலா, தக்காளி, பூக்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல நூற்றுக்கணக்கான கிணறுகளும் ஏரிகளும் உள்ளன. பல லட்ச ரூபாய் கடன்பட்டு ஆழ்துளைக் கிணறுகளை விவசாயிகள் அமைத்துள்ளனர். இவை அனைத்தையும் நாசமாக்கும் வகையில்தான் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
சர்வக் கட்சி ஒத்துழைப்பு!
2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி (பா.ஜ.க. + திமுக + மதிமுக + பாமக கூட்டணி) காலத்தில்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, கெயில் நிறுவனத்துக்காக இந்திய அரசின் எரிபொருள் மற்றும் இரசாயனத் துறை அக்டோபர் 22-ம் தேதி அரசாணை பிறபித்தது. அதனைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிட்டு உடனடியாக இத்திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியது. கெயில் நிறுவனமும் குழாய் பதிக்க தேவையான விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளைத் துவங்கியது. விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை.
இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சட்டசிக்கல்களை உணர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரசு – போலி கம்யூனிஸ்ட் – திமுக கூட்டணி) தனது முதல் ஆட்சி காலத்தில் அமுல்படுத்தத் துணியவில்லை. இதனைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2ல் 2011-ல் பெட்ரோலியம் மற்றும் கனிம வளங்கள் குழாய் பதிக்கும் சட்டம் 1962-ல் ஒரு சட்டத்திருத்தத்தை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டது.
மினி நிலம் கையகப்படுத்தும் சட்டம்!
பெட்ரோலியம் மற்றும் கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டத்தில் 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி,
மத்திய அரசின் குழாய் பதிக்கும் திட்டங்களுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.
இச்சட்டத்தின் படி நிலம் கொடுத்த விவசாயிகளையே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்க முடியும். அதாவது, விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய், சேதமடைந்திருந்தாலோ, வேறு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, சம்பந்தப்பட்ட விவசாயி தான் பொறுப்பேற்க வேண்டும்.
தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்க வேண்டியது நில உரிமையாளரான விவசாயிகளின் பொறுப்பு.
குற்றம் சுமத்தப்பட்ட ஒரு விவசாயி தான் குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கத் தவறினால், தண்டனை மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இதில் சட்டத்துறை கட்டமைப்பு நெருக்கடி என்ன தெரியுமா? இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு ‘நிலம்’ மீதான அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டமும் நிலம் கையகப்படுத்தும் சட்டமும் (நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மோடி அரசு அமுல்படுத்த முயற்சிக்கும் மசோதா) அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் போலித்தனத்தை அம்பலப்படுத்தாமல், போலி கம்யூனிஸ்டுகள், தமிழக அரசிடம் கெஞ்சுகின்றனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள ‘உரிமை’யை நிலைநாட்டக் கோருகின்றனர்.
ஜெயலலிதாவின் நாடகம்!
இதன் பின்னர் 2013-ம் தொடக்கத்தில் இத்திட்டத்தை அமுல்படுத்தும் வேலையில் கெயில் நிறுவனம் ஈடுபட்டது. அதற்கு ஜெயலலிதா அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. இதற்காக விவசாய நிலத்தில் உள்ள மரங்களை பொக்லைன் இயந்திரம் வைத்து வேரோடு பிடுங்கி எறிந்தது; விவசாயிகளை பலவந்தமாக மிரட்டியது; மிரட்டி கையெழுத்து வாங்கியது; பலவந்தமாக குழாய் பதிக்கும் வேலையில் இறங்கியது; போராடிய விவசாயிகளை போலீசைக் கொண்டு அடித்து விரட்டியது; பொய்வழக்கு பதிவு செய்தது; பல விவசாயிகளை வீட்டுக்காவலில் வைத்தது.
அப்போது விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கருத்தைக் கேட்டு அமுல்படுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுருத்தியது. அந்தவகையில் மார்ச் 6, 7, 8 தேதிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். கருத்துக் கேட்பு கூட்டத்தை தனக்கு சாதமாக நடத்த கெயில் நிறுவனம் எடுத்துக்கொண்ட சதி வேலைகளை விவசாயிகள் தவிடு பொடியாக்கினர்.
விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளைக் கண்டஞ்சிய ஜெயா நாடகமாடத் தொடங்கினார். தனது அரசியல் பகடைக்காயாக இதனைப் பயன்படுத்த முடியும் என உணர்ந்த ஜெயா, “மக்களுக்காத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல, விவசாயிகளை பாதிக்கக் கூடிய வகையிலான் அதிட்டங்களை எனது அரசு அனுமதிக்காது” என்று சட்டமன்றத்தில் வாய்ச்சவடால் அடித்தார். விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கக் கூடாது என தடைவிதித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியது.
இங்கு கவனிக்க வேண்டிய விசயம், மார்ச் மாதத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்திலேயே 2011-ம் ஆண்டின் சட்டத்திருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதில் சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக ஜெயா வாயைத் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவசாய நிலங்களின் வழியே குழாய் பதிப்பதற்கும், அதன் பொருட்டு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும் அனுமதி மறுத்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகள் வழியாக குழாய் பதிக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டப்படி செல்லுபடியாது என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.
விவசாயிகளின் எதிரி உயர்நீதிமன்றம்
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த கெயில் நிறுவனத்திற்கு சார்பாக, விவசாயிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விவசாயிகளின் நலனுக்கு மேலான பொதுநலன் இந்த எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் இருப்பதாகவும், இந்தத் திட்டம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமென்றும் கூறி, விளைநிலங்களில் குழாய் பதிக்க அரசு பிறப்பித்திருந்த தடை உத்தரவை ரத்து செய்துள்ளது.
அதுமட்டுமல்ல; இத்திட்டத்தினை விவசாயிகள் ஏற்குமாறு செய்ய தமிழக அரசால் இயலுமென்றும், ஒருவேளை அவர்கள் ஏற்க மறுத்துப் போராடினால், கூடங்குளம் போராட்டத்தைக் கையாண்டதைப் போல இதையும் கையாள முடியுமென்றும், சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான அளவு வலிமை அரசுக்கு இருப்பதாகவும் நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியிருக்கின்றனர். இதனை எதிர்த்து தமிழக அரசும், விவசாயிகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
தொடரும் ஜெயலலிதா-நீதிமன்றங்களின் கூட்டு நாடகம்
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாயில் நடந்த விபத்து. படம் -indianexpress.com
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 2013-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்ற உத்திரவிற்கு இடைக்கால தடை விதித்தது. விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இடைக்கால தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது. கெயிலுக்கு எதிரானதாகத் தோன்றும் இந்த இடைக்கால உத்தரவு, முக்கியமாக அப்பொது தமிழகத்தில் நடந்து வந்த மீத்தேன் எதிர்ப்பு, ஜிண்டால் எதிர்ப்பு, தாதுமணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் கொள்ளை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, ஆற்றுமணல் கொள்ளை எதிர்ப்பு, வன உயிரியல் பூங்கா அமைக்கும் கொடைக்கானல் மலைவாழ் மக்கள் எதிர்ப்பு ஆகிய போராட்டங்களின் வீச்சின் பின்னணியுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில், தற்போது நடந்த இறுதி விசாரனையின் போது, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தையே சீரழிக்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக பாடகர் கோவனை போலீசு காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதா அரசு, அதற்கு மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடியது. ஜெயா மீதான கள்ளத்தனமான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல் முறையீடு செய்வதற்கு இவர்கள் நடத்திய பித்தலாட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜெயாவின் இந்தத் துரோகத்தை புரிந்து கொள்ள முடியும்.
இத்திட்டத்தை ஆரம்பம் முதலே ஜெயா கையாண்ட விதத்தையும், இது போன்ற ‘வளர்ச்சி’த் திட்டங்களான கூடங்குளம் அணுமின்நிலையத்திலும் ஜெயா அரசும் நீதிமன்றமும் மேற்கண்ட பாணியிலான நாடகத்தைத்தான் அரங்கேற்றின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் முகத்தில் குத்தும் உச்ச நீதிமன்றம்!
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய இறுதி விசாரணையில் நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 2-ம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில், “2011-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த பெட்ரோலியம் மற்றும் கனிமவளங்கள் குழாய் பதிக்கும் சட்டத்திருத்தத்தின் (பி.எம்.பி. சட்டம்)படி, மத்திய அரசு நிறுவமனமான கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை; மேலும், எரிவாயு பாதையை மாற்றுவதற்கும் தமிழக அரசுக்கு உரிமையில்லை”, “தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் செயல்படுத்தலாம்” என்று அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், “கெயில் நிறுவனம் எரிவாயு பதிக்கும் திட்டத்தை வரையறுக்கும் போதே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?”, “வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தத் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறதா?” என்று கேள்வி எழுப்பி தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் எரிவாயு குழாயில் நடந்த விபத்து. படம் – thehindubusinessline
“எரிவாயுக் குழாய் திட்டத்தால் நிலங்களை இழக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசு ஒருகுழு அமைத்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய சந்தை மதிப்பீடு எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்; அதன் அடிப்படையில் கெயில் நிறுவனம், விவசாயிகளுக்கு அவர்களது நிலத்தின் சந்தை மதிப்பில் 40 சதவீதத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
இடைக்காலத் தீர்ப்பு கெயிலுக்கு எதிராக, இறுதித் தீர்ப்பு விவசாயிகளுக்கு எதிராக – இதுதான் உச்ச நீதிமன்றம்! சதித்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாக உச்சநீதிமன்றம் விளங்குவதை இந்தத் தீர்ப்பின் மூலம் புரிந்து கொள்ள முடியும். மேலும், ஜெயலலிதா வாக்கு வங்கி அரசியலுக்காக இவ்வாறு செய்கிறாரா என்று கேட்பதன் மூலம் ஜெயாவை கெயில் எரிவாயுக் குழாய்க்கு எதிரானவராகக் காட்ட நினைக்கிறார் தலைமை நீதிபதி தாக்கூர். கெயில் திட்டத்திற்கு ஜெயா தெரிவிக்கும் எதிர்ப்பு என்பது நாடகமே என்பதை மறைக்கிறார்.
கேடி அரசு!
மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் தீவிரம் காட்டுவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தப் பிரச்சனைத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக வழக்காடியது யார்? பொட்ரோல் மற்றும் எரிவாயுத் துறைக்குத் தெரியாமலேயே அத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவிட்டார்களா? விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்வதை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று பா.ஜ.க.வினர் சொல்வது கடைந்தெடுத்தப் பொய் அல்லவா. ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக வழக்காடும் பார்ப்பன இந்து மதவெறியர்களான பா.ஜ.க.வினர்தான் மற்றொருபுறம், விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
கெயில் பொதுத்துறை நிறுவனம் தானே! ஏன் எதிர்க்க வேண்டும்?
சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்டு எல்லா ஓட்டுக் கட்சிகளும் கெயில் எரிவாயு குழாய் தேச வளர்ச்சிக்கானதுதான், ஆனால், அது விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் அமுல்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றன. கெயில் பொதுத்துறை நிறுவனம் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், இந்தப் பொதுத்துறையை தனியார்மயமாக்கம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இதற்கு இந்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருந்துள்ளனர் என்பதையும் நாம் உணர வேண்டும். மேலும், தற்போது கெயிலில் 30% பங்குகளை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையில்தான் உள்ளது.
இது மட்டுமல்ல, மீதியையும் படிப்படியாகத் தனியார்மயமாக்குவதுதான் அரசின் கொள்கை. ஏற்கெனவே கோதாவரிப்படுகை எரிவாயுக்கிணறுகள் அம்பானிக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. அவற்றிலிருந்து எடுக்கும் எரிவாயுவை ஆந்திராவிலிருந்து கர்நாடகா, மகாராட்டிரா, ம.பி., வழியாக குஜராத் கொண்டு செல்லும் குழாய்ப்பாதையும் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது. ம.பி.யிலிருந்து உ.பி.க்கு புதிய குழாய்ப்பாதையொன்றையும் அம்பானியின் நிறுவனம் அமைக்கவிருக்கிறது. நாட்டின் பொதுச்சொத்தான கோதாவரி எரிவாயுவின் விலையை ரிலையன்சும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமும்தான் இன்று தீர்மானிக்கின்றன. சொன்ன விலை தராவிட்டால் உற்பத்தியை முடக்குகின்றன.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பொதுவான ஒரு நிறுவனமாக இனியும் கெயில் இருக்க முடியுமா, சிந்திப்பீர்!
எரிவாயு யாருக்காக?
எரிவாயு யாருக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எரிவாயு என்பது மின்சார உற்பத்தி உள்ளிட்ட தேவைகளை ஈடேற்றக் கொண்டு செல்லப்படுகிறது என்று ஆளும் வர்க்கமும் ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் ஒரு சேர கூறுகின்றனர். இது தேச வளர்ச்சிக்கான திட்டம் என்றும் கூறுகின்றனர். இந்தக் கூற்று உண்மையா?
இந்த எரிவாயுவில் 50% தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. மீதியை யாருக்கு மக்களுக்கு என்று கருதினால் அதுவும் தவறு. ஏனெனில், அதிலும் தனியார்மயம் புகுந்து விளையாடும். ஏற்கனவே, எரிவாயுக்காக வழங்கப்பட்டு வந்த மானியங்கள் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில் எரிவாயு மக்களுக்கான என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடி. மொத்தத்தில், எரிவாயு முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளில் நலனிற்கும் கொள்ளைக்கும் தான் கொண்டு செல்லப்படுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய போது, இதே போன்ற ஒரு கருத்தைத்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஆளும் வர்க்கமும் முன்வைத்தன. ஆனால், நடந்தது என்ன என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். 15 நாட்களின் மின் உற்பத்தி தொடங்கிவிடும், மின்வெட்டு முடிவுக்கு வந்துவிடும் என்பதெல்லாம் இன்று நகைக்கத்தக்க பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். இந்த ஐந்து ஆண்டுகளில் மின்வெட்டு அதிகரித்திருப்பது மட்டுமின்றி மின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவைதான் உண்மை!
கெயிலை விரட்டியடி, நிலத்தைக் காப்பாற்ற கமிட்டி போடு!
ஏற்கெனவே ஆறு வழிச் சாலைகள், உயர் அழுத்த மின் கோபுரங்கள், இருவழி இரயில் பாதைகள், சிப்காட் போன்றவற்றுக்காக பொதுநலன் என்ற பெயரில் தமது நிலத்தை வழங்கிய விவசாயிகள், அதனால் அடைந்த பயன் என்ன? கிராமங்களுக்கு 10 மணிநேர மின்வெட்டு, நெடுஞ்சாலைகளில் டோல்கேட் வசூல், கிராமங்களில் நிற்கும் பாசஞ்சர் ரயில்கள் மென்மேலும் ரத்து செய்யப்பட்டு அதிவேக ரயில்கள் அறிமுகம் – என்பதுதான் இந்த “பொதுநலன்” விவசாயிகளுக்கு அளித்திருக்கும் பரிசு.
ஆகையால், பொது நலன், தேச நலன், வளர்ச்சி, முன்னேற்றம் என்ற வார்த்தைகளைக் கண்டு இனியும் விவசாயிகள் ஏமாறலாமா?
மாவட்ட ஆட்சியர், வி.ஏ.ஓ., நீதிமன்றம் என ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் விவசாயிகளுக்கு எதிராக இராணுவம் போன்று அணிவகுத்து நிற்கின்றன. ஓட்டுக் கட்சிகள் திட்டத்தை அமுல்படுத்திவிட்டு, வெளியே நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் இலாவணி பாடுகின்றன. இந்த நாடகத்தின் மூலம் விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கின்றன.
மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமுலுக்கு வர இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக தீர்வுக்கு வரவேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு போட்டுள்ள மறுசீராய்வு மனுவின் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள், நிலங்கள் கெயிலின் கட்டுப்பாட்டில் போய்விடும். எப்படியும் இது நடக்கும் எனத் தெரிந்தும், உச்சநீதிமன்றத்தின் முடிவை எதிர்ப்பார்ப்பதைவிட, உடனே களத்தில் இறங்க வேண்டும்.
இனி தீர்வு ஒன்றுதான். “யார் உத்தரவிட்டாலும் எங்கள் நிலத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எதிர்த்து நின்று போராடுவது மட்டும்தான் விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி.
அதற்காக, கிராமத்திற்கு கிராமம் விவசாயிகள் கமிட்டி அமைப்போம். விவசாயிகள் தமக்கான அதிகாரத்தை நிலை நிறுத்துவோம். கெயிலின் குழாய் பதிக்கும் எந்திரங்களையும் அதற்கு கங்காணிகளாக வர இருக்கும் அதிகாரிகளையும் போலீசையும் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்துவோம்!
மறுகாலனியாக்கமும் விவசாயத்துறை கட்டமைப்பு நெருக்கடியும்!
விவசாயத்தை அழித்து நாட்டை கார்ப்பரேட் கம்பெனிகள், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு திறந்துவிடுவதுதான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை. விவசாயத்தை அழிப்பது, இந்தியாவின் உணவுத்தற்சார்பை ஒழிப்பது, உணவுக்காக இந்தியாவை ஏகாதிபத்தியங்களிடம் கையேந்த வைப்பது இக்கொள்கையின் அடிப்படையிலான இலக்குகள். இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில்தான் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், தூத்துக்குடி கடலோர மாவட்டங்களில் தாதுமணல் கொள்ளை, மதுரை-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிரானைட் கொள்ளை, தேனி மாவட்டத்தில் நியூட்டிரினோ திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுத்தி வேடியப்பன் மலைகளை ஜிண்டாலுக்கு தாரைவார்த்தல், தமிழகம் முழுவதும் ஆற்றுமணல் கொள்ளை, ஆறுவழிச் சாலைகள், வனச் சரணாலயங்கள் போன்ற பல திட்டங்கள் வகுத்து அமுல்படுத்தப்படுகின்றன. இதுபோன்று நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.
இதற்கேற்ப இந்திய அரசின் கட்டமைப்பும் மாற்றப்படுகிறது. ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த மக்கள் நல அரசு என்ற போர்வையை தூக்கியெறிந்து பட்டவர்த்தனமாக கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன் முன்னிறுத்தப்படுகிறது. இதற்காக, விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன; விவசாயத்தில் உணவு உற்பத்தி ஒழிக்கப்பட்டு வருகிறது; பயோடீசல், பூ உற்பத்தி என்ற பெயரில் ஏற்றுமதி சார்ந்து தொடங்கப்பட்ட விவசாயம் எல்லாம் நட்டமடைந்து விவசாயிகள் நடுவீதிக்குத் தள்ளப்பட்டு விட்டனர். காட்டு விலங்குகளான யானை, காட்டுப் பன்றிகளால் விவசாயம் சேதமடைவது மட்டுமல்ல, காட்டு யானைகளால் விவசாயிகள் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது.
தற்போது விவசாயிகள் தற்கொலை என்ற அவலமும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.
இந்தத் தனியார்மயம் – தாராளமயக் கொள்கையை கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமுல்படுத்தியதன் விளைவாக இயற்கை அழிக்கப்பட்டு, மழை குறைந்துள்ளது; விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை; ரியல் எஸ்டேட் நிறுவனங்களினால் தொல்லை; உரம் பூச்சிக் கொல்லி மருந்து எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் போய்விட்டது; மரபணு மாற்றப்பட்ட விதைகள், ஹைபிரேட் விதைகள் போன்றவற்றால் விவசாயமே நஞ்சாகியுள்ளது; கால்நடைகள் குறைந்துவிட்டன; இயற்கையான உரங்கள் கிடைப்பதில்லை; இரசாயன் உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் நிலங்களே மலடாகிப் போயுள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக பார்க்கும் விவசாயம் என்ற கட்டமைப்பே சீரழிக்கப்பட்டுவிட்டது. விவசாயம் என்ற துறை இன்று மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியுள்ளது.
விவசாயிகளுக்கே அதிகாரம்!
அரசின் கொள்கைகள் என்பவை, கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் யுத்தம். இதில் நடுநிலை வகிப்பதாக சொல்லிக்கொண்ட அரசு, பட்டவர்த்தனமாக இன்று கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் தான் என்று அறிவித்துள்ளது. மற்றொருபுறம், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டமைப்பு நெருக்கடி என்பது, நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு நெருக்கடியின் ஒரு பகுதியாக உள்ளது.
அதனால், கெயில் எரிவாயு குழாய் பதிப்பது என்பது, அதனால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சனை.
இதனால் தான் நீதிமன்றத்தில் சென்றால் நீதி கிடைக்காமல் அநீதியே நடக்கிறது; சட்டப்படியே விவசாயிகள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன; எதிர்ப்பவர்கள் குற்றவாளிகளாக்கி தண்டிக்கப்படுகின்றனர்.
இனி ஒரு பாதைதான் உள்ளது. விவசாயிகள் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும். கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என்பது, விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை தீர்மானிக்கும் அதிகாரமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் விவசாயிகள் கையில் வந்து சேரவேண்டும். அந்தவகையிலான ஒட்டுமொத்த விவசாயிகளின் எழுச்சியாக, கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தை வளர்த்தெடுப்போம்!
மத்திய, மாநில அரசுகளே!
கெயில் எரிவாயு பதிக்கும் திட்டத்தை கைவிடு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே!
பெட்ரோல்-கனிமவளக் குழாய் பதிக்கும் சட்டம் 1962ஐத் திரும்பப் பெறு!
விவசாயிகளே!
விவசாயத்தை அழிப்பதே தேசமுன்னேற்றமாம் – இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!
விவசாய நிலத்தில் குழாய் பதிக்க வரும் கெயில் நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
கிராமந்தோறும் கமிட்டி அமைத்து விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநிறுத்துவோம்!
விவசாயத்தை அழிக்கும் நாட்டை மீண்டும் காலனியாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான தனியார்மய-தாராளமயத் திட்டங்களை முறியடிப்போம்!
விவசாயிகளைக் காக்க, விவசாயத்தைக் காக்க அனைத்து அதிகாரங்களையும் விவசாயிகள் கமிட்டிக்கே என முழங்குவோம்!
– விவசாயிகள் விடுதலை முன்னணி தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்கள்
தொடர்புக்கு: 96263 96699 – 97513 78495
காட்டு வேட்டை என்ற பெயரில் இந்திய அரசு பழங்குடியினருக்கு எதிராக நடத்திவரும் போரை மேலும் மூர்க்கமாகியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு. மைய அரசும், மாநில அரசும் பா.ஜ.க-வின் கைகளில் இருப்பது ஒடுக்குமுறையில் கொடூர வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற போலீஸ் அடியாள் அமைப்பை ஆரம்பித்துள்ள அரசு அதைக்கொண்டு காட்டுவேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் ஜனநாயக சக்திகளையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் சோனி சோரி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் தாக்கப்பட்டுள்ளார்.
சோனி சோரி
காட்டுவேட்டை என்ற பெயரில் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருபவர் பழங்குடிப் பெண்ணான சோனி சோரி. கடந்த 2010-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இவர் மீது பொய் வழக்கு சோடித்து கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது சத்தீஸ்கர் அரசு. 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த இவர் தொடர்ந்து அரசின் காட்டுவேட்டை அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இம்மாதம் 3-ம் தேதி பஸ்தாரின் மதுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட மலைபகுதியில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தப்பியோடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் அறிவித்திருந்தார் பஸ்தார் காவல்துறை ஐ.ஜி கலூரி. ஆனால் நடந்தது ஒரு போலி மோதல் கொலை என்பதை அம்பலப்படுத்தினார் சோனி சோரி.
அதாவது ‘தேசபக்த’ காவல்துறையினர் உயிரை பணயம்வைத்து சுட்டுக்கொண்டதாக கூறியது ஹத்மா கஷ்யப் என்ற பழங்குடி என்பதும்; வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தரை எழுப்பி காட்டில் வழிதெரியவில்லை வழிகாட்டுங்கள் என்று காவல்துறையினர் அழைத்து சென்றதையும்; அவரது மனைவி உறவினர்களை பத்திரிகைகள் முன்னிலையில் பேசவைத்து அம்பலப்படுத்தினார் சோனி சோரி. பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்பட்ட கணவன் வீடு திரும்பாததை கண்டு 4-ம் தேதி காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அவரது மனைவி கலோ கஷ்யப். அப்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த காவல்துறையினர் பின்னர் 10,000 ரூபாய் கொடுத்து இறுதி சடங்கு செலவுக்கு வைத்துகொள்ள கூறிய கொடூரத்தையும் அம்பலப்படுத்தினார் சோனி சோரி.
பாதுகாப்பு படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்காக வருகிற மார்ச் 8 பெண்கள் தினத்தன்று பேரணி நடத்தும் ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறர் சோனி சோரி.
சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றொதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கண் திறக்க முடியாத நிலையிலிருக்கும் சோனி சோரி தன்னை தாகியவர்கள் போலீஸ் ஆதரவாளர்கள் என்பதை தெரிவித்துள்ளார். தனனை தாக்கியவர்கள் மதுரம் போலி என்கவுண்டர் விசயத்தை இனி பேசக்கூடாது என்றும், ஐ.ஜி கலூரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் முயற்சிக்ககூடாது எனவும் மீறினால் சோனி சோரியின் குழந்தையையும் இதே கதிக்கு உள்ளாக நேரிடும் என்று மிரட்டியதை பதிவு செய்துள்ளார் சோனி சோரி.
இது ஏதோ தனித்த சம்பவமல்ல. இம்மாதத்தில் பஸ்தார் பகுதியில் செயல்படும் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியமும் , ஜகதால்பூர் சட்ட உதவி மைய வழக்கறிஞர்களும் போலீஸ் மற்றும் சமஜிக் ஏக்தா மஞ்ச் போலீசு அடியாள் இயக்கத்தின் அடக்குமுறைகளை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அரசின் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்முறைகள், போலி சரணடைவு சம்பவங்களை அம்பலப்படுத்தியவர் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம். கடந்த ஜனவரி 10-ம் தேதி மாலினி சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு வந்த சமஜிக் ஏக்தா மஞ்ச் அடியாள் அமைப்பினர் ” பஸ்தார் மற்றும் போலீசாரின் இமேஜை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தங்களின் கோபத்தை சந்திக்க நேரிடும்” என்று மிரட்டி சென்றனர். பழங்குடி பெண்கள் மீதான் பாதுகாப்பு படையினரின் பாலியல் வன்முறைகள் குறித்த செய்தியை சில மாதங்களுக்கு முன்னர் வெளிக் கொணர்ந்திருந்தார் மாலினி சுப்பிரமணியம். தன்னை மிரட்டி சென்றவர்களில் மனிஷ் பரக் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா பிரிவின் செயலாளர் என்பதும், சம்பத் ஜா என்பவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது என்று கூறுகிறார் மாலினி. இந்த நபர்கள் பஸ்தார் சரக ஜி.ஜி. கலூரியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது கேரவன் பத்திரிகை.
தொடர்ந்து இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் ஜக்தால்பூர் போலீசார் இப்பத்திரிகையாளரை தொந்தரவு செய்திருக்கின்றார். ஆயினும் அப்பகுதியிலிருந்து வெளியேறாமல் தொடந்து செயல்படவே கடந்த 8-ம் தேதி சம்ஜித் ஏக்தா மஞ்ச் அடியாட்கள் இவர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக வழக்கு பதிவு செய்தது காவல்துறை.
பஸ்தார் சரக ஜி.ஜி கலூரி கொடுத்த விருந்தில் சம்ஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பின் மனிஷ் பிரகா, சம்பத் ஜா. படம் : caravanmagazine
இந்நிலையில் கேரவன் பத்திரிகை சமஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பு குறித்தும், ஜி.ஜி கலூரி குறித்து பல உண்மைகளை கடந்த சில தினங்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. இந்த அடியாள் அமைப்பை இயக்கிவருவதே பஸ்தார் பகுதி ஜி.ஜி கலூரி தான் என்பதும், இந்த அதிகாரி மனிதத்தன்மையற்ற பேர்வழி என்பதையும், காவல் நிலைய பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், இப்பகுதியில் பதவி ஏற்றதும் மக்கள் மீது உச்சகட்ட வன்முறையை ஏவி வருவதையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அக்கட்டுரை.
சல்வாஜூடும் காலப்பகுதியில் பழங்குடியினரை கொத்து கொத்தாக கொன்றபாதுகாப்பு படையினர் சடலங்களை அப்படியே விட்டு சென்றதையும், தற்போது கலூரி பொறுப்பேற்ற பிறகு அக்கொலைகளை என்கவுண்டர் என்றூ கூறி வெற்றி செய்தியாக வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி பத்திரிகைகளுக்கு அறிவிப்பதையும் அம்பலப்படுத்தியது.
பஸ்தார் பற்றிய உண்மைச்செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்த சூழலில் தான் மாலினி சுப்பிரணியத்தின் வீடு தாக்கப்பட்டதோடில்லாமல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி மாலினி வீட்டு வேலை செய்யும் பெண்ணை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று விடுவிக்கவில்லை. இந்நிலையில் மாலினி வசிக்கும் வீட்டு உரிமையாளரை மிரட்டி மாலினியை வெளியேற்ற நிர்பந்தித்து வெளியேற்றியிருக்கிறது போலீஸ்.
ஜகதால்பூர் சட்ட உதவி மையத்தினர். படம் :thewire
இதே போல பழங்குடியினரில் வழக்குகளை நடத்தி வரும் ஜகதால்பூர் சட்ட உதவி மையம் என்ற அமைப்பை சேர்ந்தவர்களையும் முடக்கும் நோக்கில் பகுதி பார் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பது , மிரட்டுவது என பல ஆயுதங்களை பிரயோகித்த பிறகு சில தினங்களுக்கு முன்னர் இவ்வமைப்பில் செயல்படுவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தியிருக்கிறது காவல்துறை. ஆக இவர்களையும் தற்போது வெளியேற்றிவிட்டது.
ஒரு புறம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசு தனக்கு தடையாக இருக்கும் பெயரளவிற்கான சட்டங்களையும் மதிப்பதில்லை.
சர்குஜா மாவட்டத்தின் கட்பாரா கிராமத்தில் சுரங்க வேலைகளை செய்ய அதானி குழுமம் மற்றும் ராஜஸ்தான் அரசு நிறுவனங்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு அனுமதியளித்திருந்தது சத்தீஸ்கர் அரசு. இதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இங்கு மட்டுமல்ல சத்திஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவின் காடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் சுரங்க வேலைகளுக்காக பழங்குடியினர் விரட்டப்படுவதை எதிர்த்து தீரத்துடன் போராடிவருகிறார்கள். இவர்களுக்கு எதிராகத்தான் பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவப்படை களமிறக்கப்பட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
வன உரிமை பாதுகாப்பு சட்டப்படி பழங்குடியினரின் பாரம்பரியமான பகுதிகளில் பழங்குடியினரின் ஒப்புதலோடு மட்டுமே இந்நிலங்களை அரசு பயனபடுத்திக்கொள்ள முடியும். அப்படி அரசு அறிவித்த பாரம்பரிய வாழ்விடங்களுள் ஒன்றாக இக்கிராமம் வருகிறது. ஆனால் இக்கிராமத்தினரோ தங்கள் நிலத்தை தரகு முதலாளிகளுக்காக விட்டுத்தர தயாரில்லை.
கிராம சபையின் மூலம் அதானிக்கு நிலத்தைவிட்டுத்தர முடியாது என்று சட்டபூர்வமான வழியை கையாண்டார்கள் இக்கிராம மக்கள்.
இந்நிலையில் தான் சத்தீஸ்கர் அரசு கடந்த ஜனவரி அன்று ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் அப்பட்டமாகவே ” கிரமத்தினர் தங்களுக்கு அளிக்கப்ப்பட்ட உரிமையை சுரங்கம் அமைவதிற்கு எதிராக பயன்படுத்துவதாக” ‘குற்றம்’ சாட்டி அவ்வுரிமைமை பறித்திருக்கிறது. “நிர்வாகம் சுரங்க வேலைகளுக்காக காடுகளை மாற்ற முயன்றபோது ஆட்சியரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட நில உரிமையை பயன்படுத்தி பழங்குடியினர் இவ்வேலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர், போராடினர். அதை பரிசீலித்தபோது இந்நிலம் பழங்குடிகளின் உரிமையாக அறிவிக்கப்படும் முன்னரே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது தெரிய வந்ததை அடுத்து பழங்குடியினருக்கு இந்நிலத்தில் மீதான உரிமை நீக்கப்படுகிறது” என்று அவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து செய்திருக்கிறது அரசு. அரசு தான் சொல்லிக்கொள்ளும் குறைந்தபட்ச அறநெறிகளுக்குக்கூட எதிரான மக்கள் விரோத சக்தியாக மாறியிருப்பதையே இது குறிக்கிறது. பெயரளவிற்கான சட்டங்களும் செல்லாக்காசிவிட்ட நிலையில் இந்த அரசை நம்பி பிரயோஜனமில்லை.
தேசதுரோகி என்று சொந்த நாட்டு மக்களை விளிக்கும் பா.ஜ.க மற்றும் இந்திய அரசு இங்கே நடத்தி வரும் பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது? இராணுவம், போலிசு ஒடுக்குமுறை குறித்து எவரும் வாய் திறக்க கூடாது என்பதோடு, அதானிகளை பாதுகாக்க இவர்கள் எவ்வளவு கொடூரத்திற்கும் தயாராகிறார்கள் பாருங்கள்!
பத்திரிகையாளர்கள்,ஜனநாயக சக்திகளை விரட்டியடிக்கபடுவதும்,சல்வாஜுடும் போன்று புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதும்,போலி மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும் பழங்குடியினருக்கு எதிராக ஒரு மூர்க்கத்தனமான இறுதி படுகொலைகளுக்கு அரசு தயாராகிவருவதையே காட்டுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். பழங்குடிகளுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை! பாருங்கள், பகிருங்கள்!!
மூடு டாஸ்மாக்கை – தோழர் ராஜு உரை
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரை! பாருங்கள், பகிருங்கள்!!
ஸ்மிருதி ஈரானி: பல்கலைக்கழக மானியக் குழு முற்றுகை, ரோகித் வெமுலா…பிறகு இந்த ஜே.என்.யு மாணவர்கள் எல்லாம் தலைவலியாப் போச்சு. மோடி: ஆமாம். நம்ம ஏபிபிவி பசங்க பயந்து போயிட்டாங்க! நம்ம பாஸ்ஸுகிட்ட எப்படி டீல் பண்ணலாமுன்னு கேப்போம். ஹிட்லர்: உன்னோட கூட்டத்தை பாக். வாழ்க!ன்னு கோஷம் போட செட்டப் பண்ணு, பிறகு ஜே.என்.யு மாணவர்கள தேசத்துரோகின்னு முத்திரை குத்து! அப்பால தேசத்துரோக வழக்குல விலங்க போடு. (படம்: https://rebelpolitikblog.wordpress.com)
கல்வி நிலையங்களை பி.ஜே.பி அணுகும் விதம்: இங்கு வண்ணப்புத்தகம் இருக்கிறது. இங்கு உனக்கு ஒரே ஒரு நிறம் (காவி) தான் தேவைப்படும் (படம்: sanitarypanels.com)
சார்! மாணவர்கள் எல்லாம் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதியாய் இரு! நாம் மீண்டும் இந்த சக்கரத்தைச் சுற்றுவோம். (சக்கரத்தில் – தேசத்துரோகி என அழைக்கலாம். பாகிஸ்தானுக்கு அனுப்பலாம், பல்கலைக்கழகத்திலிருந்து மிரட்டி வெளியேற்றலாம், தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தலாம், சிறை வைக்கலாம், காவல் துறை அடக்குமுறையை ஏவிவிடலாம், மாணவர்களது குடும்பத்தை மிரட்டலாம் அல்லது சக்கரத்தை மீண்டும் சுற்றலாம். (படம்: sanitarypanels.com)
நபர் 1:ஜனநாயகத்தில் மாற்றுகருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்; நபர் 2: அப்படி என்றால் நீ தேசதுரோகி; நபர் 1:மம். அடக்குமுறையின் மூலம் மக்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகமல்ல; நபர் 2: நீ தீவிரவாதி. போலி மதச்சார்பின்மைவாதி; நபர்1: நான் பேசுவவதை நீ கவனிக்ககூட மறுக்கிறாய் ;நபர் 2 : நீ இந்திய எதிரி
நமக்கு புரியாத விசயமுன்னா அதுங்க (ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், நுண்கலை) எல்லாம் தேசத்துரோகம் தான்!
ஆர்.எஸ்.எஸ்: அடுத்து எந்த சீட்டை வைத்து விளையாடுவது? மோடி அலையா? தேசத்துரோகமா? இந்து ராஷ்ட்ரமா? கலவரமா? ஐ.ஐ.டி, ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜே.என்.யு, புனே திரைப்படக் கல்லூரிகளை அழிப்பதா? ஏபிவிபி: தேசத்துரோகி, ஜே.என்.யுவை மூடு (என்பதை எடுங்கள்). (படம்: https://rebelpolitikblog.wordpress.com).
தேசியவாத தணிக்கை வாரியம்: இங்கு எதுவெல்லாம் தேசபக்தி என்பது நிர்ணயம் செய்யப்படும். (நன்றி. தி இந்து ஆங்கில நாளேடு)
அரசாங்கத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் (Chaddi என்றால் டவுசர்) ராஜ்நாத் சிங், மோடி, டெல்லி காவல்துறை ஆணையர் பாஷி எல்லோரும் அரச பாசிசத்தை ஜே.என்.யு நோக்கி திருப்பிக் கொன்டிருக்கின்றனர் (படம்: https://rebelpolitikblog.wordpress.com).
ரோகித் வெமுலா – ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம் என்ற அமைப்பின் முன்னோடி. சனவரி 17-ஆம் தேதியன்று சக மாணவன் ஒருவனது அறையில் வெமுலா தற்கொலை செய்து கொண்டான். சக மாணவர்கள் யாரும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், வெமுலாவின் உடலை ஒரு அநாதைப் பிணம் போல அப்புறப்படுத்தியது பல்கலைக்கழக நிர்வாகம். வெமுலாவின் தாயை மட்டும் அழைத்து வந்த போலீசு, அவர்களுடைய குடும்ப வழக்கத்தின்படி உடலைப் புதைப்பதற்குப் பதிலாக, அவசர அவசரமாக எரியூட்டியது.
இது தற்கொலைதானா என்று சந்தேகிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளன. இது தற்கொலைதான் என்று நம்புவதற்கான ஆதாரம் ஒன்று உண்டெனில், அது வெமுலாவின் கடிதம். அக்கடிதம் வெளிப்படுத்தும் உணர்ச்சி உண்மையானது. போலிகளைத் தயாரிக்கும் கிரிமினல்தனத்தில் பெரும் திறமை பெற்றவர்கள்தான் என்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சித்திறனுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது அக்கடிதத்தில் வெமுலா வெளிப்படுத்தும் உணர்ச்சி.
பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான போராளி ரோகித் வெமுலா
வெமுலா, கல்லுடைக்கும் சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்து, தந்தை கைவிட்டு ஓடியதால், ஏழைத்தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளை. மார்க்சின் மீதும், அம்பேத்கரின் மீதும் பற்றும், பார்ப்பன இந்துவெறியின் மீது கடும் வெறுப்பும் கொண்ட ஒரு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம், யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்ததும், முசாபர்நகர் கலவரம் குறித்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தைத் திரையிட்டதும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் விடுத்த சவாலாக அமைந்தன.
இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கலாச்சார விழாவின் போது மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வெமுலா தலைமையிலான மாணவர்கள் எழுப்பியதன் காரணமாக ஏ.பி.வி.பி.யின் தூண்டுதலின் பேரில் கலாச்சார விழாவையே ரத்து செய்தார் துணை வேந்தர். பெரும்பான்மை இந்து மாணவர்கள் மாட்டுக்கறிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைத்து மாணவர்களின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பொதுக்குழுவில் பெரும்பான்மை மாணவர்கள் மாட்டுக்கறி உணவை ஆதரித்தால், அன்றாடம் உணவு விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க நீங்கள் தயார் என்றால் பொதுக்குழுவைக் கூட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வெமுலா உள்ளிட்ட மாணவர்கள். பீதியடைந்த நிர்வாகம் பொதுக்குழு யோசனையையே தலை முழுகியது.
அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் குறி வைக்கப்படுவதற்கு காரணமான சில சம்பவங்கள் இவை. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் நவீன அக்கிரகாரங்கள், முற்று முழுதாக காவிக்கொடியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் இன்றைய சூழலில், ஒரு தலித் மாணவன் இந்துத்துவத்தை எதிர்த்து சவால் விடுவதை பார்ப்பன பாசிஸ்டுகள் சகித்துக் கொள்வார்களா?
ரோகித் வெமுலாவின் தற்கொலையைக் கண்டித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்.
வெமுலாவின் மாதாந்திர கல்வி உதவித்தொகை, ஜுலை மாதம் முதற்கொண்டே நிறுத்தப்பட்டது. தனது பராமரிப்புக்கும் தனது தாயின் பராமரிப்புக்கும் இந்த உதவித்தொகையை மட்டுமே சார்ந்திருந்த வெமுலா பட்டினிக்கும் கடனுக்கும் தள்ளப்பட்டான். பின்னர் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் தன்னைத் தாக்கிக் காயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக, தான் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்றும் ஒரு ஏ.பி.வி.பி. பொய்யன் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தான். அவனுடைய உடலில் அடிபட்ட கொடுங்காயம் எதுவும் இல்லையென்றும், அடிபடுவதற்கும் குடல்வாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மருத்துவர் சான்றளித்தார்.
இருப்பினும், டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் (மனு)ஸ்மிருதி இரானியின் நடவடிக்கை.
“அவர்கள் விடுதியில் தங்கக்கூடாது, சாப்பிடக்கூடாது, வகுப்புக்கு வருவதைத் தவிர பல்கலைக்கழகத்தின் வேறு எந்த இடத்திலும் புழங்கக்கூடாது” என்று வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கையை அப்படியே ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் கோபால் குரு. உதவித்தொகை நிறுத்தப்பட்டு, ஒண்டுவதற்கு இடமும் இல்லாமல் வெளியேற்றப்பட்ட வெமுலாவும் நண்பர்களும் பல்கலைக் கழக வளாகத்தின் வெட்டவெளியில் உறங்கினார்கள். அந்த மாணவர்கள் இரண்டு வாரங்களாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய போதிலும், அவர்களை ஒரு ஆசிரியர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. “நாம் நாய்களைப் போல வீதியில் கிடக்கிறோம். யாரும் நம்மை லட்சியம் செய்யவில்லை என்று ரோகித் வருந்துவான்” என்று நினைவு கூர்கிறார்கள் நண்பர்கள்.
ஆதிக்க சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பாலும் அவமதிப்பாலும் தற்கொலை செய்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சித் துறை மாணவர் செந்தில்குமார். (கோப்புப் படம்)
எதிரிகளின் தாக்குதலைக் காட்டிலும் கொடியது இந்த ஆதரவற்ற நிலை. ஆறு மாதங்களாக சோற்றுக்கு வழியில்லாமல் தவித்து, பிறகு தங்குவதற்கு இடமின்றி வீதியில் வீசியெறியப்பட்ட பின்னரும் விடாப்பிடியாகப் போராடிய வெமுலாவால் இந்தப் புறக்கணிப்பை சகித்துக் கொள்ள இயலவில்லை. தாங்கள் பல ஆண்டுகாலம் வளைய வந்த பல்கலைக்கழகத்தில், அநாதைகளைப் போல தெருவோரமாக தாங்கள் படுத்துக் கிடக்கையில், அந்தக் காட்சியால் எந்தவித சலனத்திற்கும் ஆளாகாமல், பேசிச் சிரித்தபடிக் கடந்து செல்லும் சக மாணவர்களைப் பார்த்த வெமுலாவின் மனம் நிலைகுலைந்ததில் வியப்பென்ன? வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியவர்கள் எதிரிகள் அல்லர்.
இதே ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ரெட்டி சாதி மாணவனால் காதலித்து ஏமாற்றப்பட்டு கருத்தரித்த ஒரு தலித் பெண் தற்கொலை செய்து கொண்டாள். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த மாணவியின் உடல் விடுதியின் வாயிலில் கிடத்தப்பட்டிருந்த அதே நேரத்தில், விடுதிக்கு உள்ளே வேறொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்திருக்கின்றன.
தற்போது வெமுலா மீது நடவடிக்கை எடுத்த துணை வேந்தர் அப்பாராவின் இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீவத்சவா, 2008-இல் செந்தில் குமார் என்ற தமிழக தலித் மாணவனின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளி. பன்றி மேய்க்கும் சாதியில் பிறந்தவரான செந்தில் குமார் கணிதத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி. சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பும், அவமதிப்பும் அவரைத் தற்கொலைக்குத் தள்ளின. அன்றும் செந்தில் குமாரின் உடலைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பேராசிரியரும் வரவில்லை, மனித உரிமை செயற்பாட்டாளர் பாலகோபால், தலித் தலைவர் போஜா தாரகம் ஆகிய இருவர் மட்டுமே வந்தனர் என்று நினைவு கூர்கிறார்கள் மாணவர்கள்.
பல்கலைக்கழக ஆசிரியர் குடியிருப்பின் குழாய்த் தண்ணீரை எல்லா சாதியினரும் பயன்படுத்துவதால், அது தீட்டான தண்ணீர் என்று கூறி தனது வீட்டில் தனியே கிணறு தோண்டிக்கொள்ள ஒரு பேராசிரியப் பார்ப்பனருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது என்று சொன்னால் அந்தப் பல்கலைக் கழகத்தின் யோக்கியதை வேறெப்படி இருக்க முடியும்?
டில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரும், “ஒதுக்கீட்டின் குழந்தைகள்” என்ற நூலின் ஆசிரியருமான என்.சுகுமாரன், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தலித் மாணவன் அனுபவிக்கும் கொடுமையை ஒரு சித்திரமாகத் தருகிறார். “பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விடுதியில் இடம் கிடைக்காத தலித் மாணவர்கள் ஏராளம். வெளியில் அறை எடுத்து தங்க அவர்களுக்கு வசதி இருக்காது. சட்டவிரோதமாக விடுதி அறைகளில் அவர்கள் தம் நண்பர்களுடன் தங்கியிருப்பார்கள். அறையில் சோறு மட்டும் வைத்துக் கொள்வார்கள். உணவு விடுதியில் எல்லா மாணவர்களும் சாப்பிட்டு விட்டு கிளம்பும்வரை காத்திருப்பார்கள். சமையல் பாத்திரங்களில் குழம்பு, பொறியல் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று அவர்கள் துழாவும் அதே நேரத்தில், நாய்களும் பூனைகளும் எச்சில் தட்டுகளை நக்கிக் கொண்டிருப்பதை நான் என் கண்ணால் கண்டிருக்கிறேன்” என்கிறார் பேரா. சுகுமாரன்.
2008 முதல் இன்று வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 11 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சாதி ஆதிக்கமும் தலித் மாணவர்களின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக் கழகத்தின் பழகிப்போன எதார்த்தங்களாகி யிருக்கின்றன. “ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தலித் மாணவர்களைப் புறக்கணிக்கிறார்கள். அதேநேரத்தில், ஆதிக்க சாதி மாணவர்களோ தாங்கள்தான் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர்கள் என்று கருதுகிறார்கள் என்கிறார் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹரகோபால். டில்லி எய்ம்ஸ் முதல் சென்னை ஐ.ஐ.டி. வரையில் எல்லா உயர் கல்வி நிறுவனங்களின் நிலையும் இதுதான்.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு எதிராக ஸ்மிருதி இரானி தாக்குதல் தொடுத்த போதும், அம்மாணவர்களுக்கு ஆதரவான குரல் எதுவும் உள்ளேயிருந்து எழுந்துவிடவில்லை. வெளியிலிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களும் போராட்டமும் வலுப்பெற வலுப்பெறத்தான் ஐ.ஐ.டி. பார்ப்பனக் கும்பல் அஞ்சியது, பின் வாங்கியது. போராட்டம் நாடு முழுவதும் பரவியதன் விளைவாக, மோடி அரசு பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம், அந்த ஆதிக்கத்துக்கு எதிரான குரல்களை நசுக்குவதன் மூலம் அவற்றை இந்துத்துவக் கூடாரங்களாக்கும் மோடி அரசின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து முற்று முழுதாகவே வெளியேற்றவிருக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தனியார் உயர்கல்விக் கொள்ளையின் அமலாக்கம் – இவை தனித்தனிப் பிரச்சினைகளுமில்லை, இவற்றுக்குத் தனித்தனி தீர்வுகளும் இல்லை.
ஆனால் இவை ஒவ்வொன்றும் எண்ணற்ற வெமுலாக்களை மரணத்துக்குத் தள்ள வல்லவை. எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் தற்கொலை இதனை உணர்த்த வில்லையா என்ன?
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் – கலா குழுவினரின் தப்பாட்டம். பாருங்கள், பகிருங்கள்!
மூடு டாஸ்மாக்கை – திருச்சி மாநாட்டில் நாடகம்
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மதுரை மையம் வீதி நாடக இயக்கத்தின் நாடகம். பாருங்கள், பகிருங்கள்!
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் கோத்தகிரியைச் சேர்ந்த சிறுமி பாரதியின் உரை. தமிழனது சிறப்பான குணம் சாராயம் அருந்துவதாக மாறிவிட்டதை எள்ளி நகையாடுகிறாள், முதலாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி. பாருங்கள், பகிருங்கள்!
கல்யாணத்திலும் குடி கருமாதியிலும் குடி – சிறுமி காவ்யாஸ்ரீ
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் நீலகிரி மாவட்டத்தின் அவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி காவ்யாஸ்ரீயின் உரை. டாஸ்மாக் கடையிலேயே குடியிருக்கும் தமிழனை வெளியே வருமாறு அழைக்கிறாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி. பாருங்கள், பகிருங்கள்!
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! சாராய போதையில் சுயமரியாதை அற்றும், தமிழக வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பாரமுகத்தையும் கேலி செய்கிறது இந்தப் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!
மூடு டாஸ்மாக்கை : சான்றிதழைக் கிழித்த டேவிட்ராஜ்
திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்ராஜின் உரை இது.
அவர் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.
டாஸ்மாக்கிற்கு மனைவியை பலி கொடுத்த நாகராஜ்
திருப்பூரைச் சேர்ந்த நாகராஜின் கதை கொடூரமானது. குடிமைக்கு அடிமையாக இருந்த காலத்தில் அவரது மனைவி தீ வைத்து எரித்துக் கொண்டார். அந்த துயரத்தை முன்வைத்து டாஸ்மாக்கை மூடுமாறு மன்றாடுகிறார் இந்த ஏழை! பாருங்கள், பகிருங்கள்!
குடியால் அழிக்கும் அரசை கேள்வி கேட்கிறார் தெய்வக்கண்ணு!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தெய்வக்கண்ணு தனது ஊரில் டாஸ்மாக் ஏற்படுத்திய பேரழிவை விவரிக்கிறார். கூடவே ஊற்றிக் கொடுக்கும் அரசை தூக்கி எறிய வேண்டாமா என்று மக்களிடம் கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!
எங்களை விதவைகளாக்கியது யார்? மந்திரகுமாரி
கடலூர் மாவட்டத்தின் கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மந்திரகுமாரி தனது கிராமத்தில் டாஸ்மாக் நடத்திய பேரழிவினால் தோற்றுவிக்கப்பட்ட விதவைகளில் ஒருவர். தற்போது அரசை எதிர்த்து போராடும் வீராங்கனை! பாருங்கள், பகிருங்கள்!
காவிக்கும்பலுக்கு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் தேவைப்படாது என்பது தான் வரலாறு. சான்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் நீங்கள் பாகிஸ்தானுக்கு கைதட்டினால் தேசத்துரோகி ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம். இதே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆதரித்தால் நீங்கள் துரோகி அல்ல! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிற்கு அடிமைத்தனத்தை காட்டும் காவிக் கும்பல், பாக்கிடம் மட்டும் ஆண்டைத்தனம் காட்டும். காரணம், பாக்கை வைத்து இந்தியாவில் முசுலீம்களை அடிமைகளாக்குவது அவர்களின் இலட்சியம். முசுலீம் அல்லாதவர்கள் யாரெல்லாம் இந்த இலட்சியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களே ஆர்.எஸ்.எஸ்-ன் ஜன்ம பகைவர்கள்.
ஏ.பி.வி.பி காலிகள்
கிரிக்கெட் மேட்ச் மட்டுமல்ல, நீங்கள் மாட்டுக்கறி தின்றாலோ, முசபார்நகர் குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தி பேசினாலோ, பார்ப்பனிய வேதக் கலாச்சாரத்தை எதிர்த்தாலோ, சமஸ்கிருத எதிர்ப்பு பேசினாலோ, கலப்பு மணம் புரிந்தாலோ, சாதி வர்ண ஒழிப்பு பேசினாலோ, காதலித்தாலோ, நாத்திகராக கம்யுனிஸ்டாக இருந்தாலோ, பெரியார் கொள்கையைப் பரப்பினாலோ, அம்பேத்கரை பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஆயுதமாக காட்டினாலோ, சிறுபான்மை மதத்தவரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, இந்துத்துவத்தை எதிர்க்கும் தலித்தாக இருந்தாலோ, அல்லது பஸ்தார் சட்டிஸ்கர் பழங்குடியினராக இருந்தாலோ, அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பேசினாலோ, இந்துப் பார்ப்பனியத்தில் பெண்களுக்கு வழிபடும் உரிமை குறித்து பெண்களே போராடினாலோ, ஏன் அறிவாளியாக பத்திரிக்கையாளனாக விருதைத் திருப்பி அளிப்பவனாக இருந்தாலோ அவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் வரையறைப்படி தேசத்துரோகிகள்.
காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி பற்றிய போஸ்டர்
ஆக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காவி வானரங்களைத் தவிர தேசபக்தனாக திகழ்வதற்குண்டான வாய்ப்புகள் யாருக்குமே கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.
ஆகையால் தான் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது; புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்; ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா தொங்கவிடப்பட்டார்; இப்பொழுது ஒட்டுமொத்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் பாசிச பயங்கரவாதத்திற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.
12-02-2015 அன்று (இந்தியாவின் கூட்டு மனசாட்சியை நிறைவேற்றுவதற்காக) தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றுமாண்டு நினைவுக் கூட்டத்தை ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க! இந்தியா ஒழிக!’ என்று மாணவர்கள் கோசமிட்டதாக ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் வழக்கம் போல பா.ஜ.க எம்.பி.க்கு தெரிவிக்க, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி போன்றோரின் நேரடி தலையீட்டின் கீழ், டில்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகளை குற்றம் சாட்டப்படுவர் யார் என்று பெயரைச் சொல்லாமலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தொடுத்திருக்கின்றனர்.
டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.
இப்படிச் செய்வதன் மூலம் யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தலாம் என்பதற்கு நிருபணமாக டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.
மேலும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஏ.பி.வி.பி காலிகளின் துணையோடு, டெல்லி காவல் துறை பல்கலைக் கழக மாணவர்களை சூறையாட வெறிகொண்டு அலைந்து வருகிறது. நள்ளிரவில் பெண்கள் விடுதியைச் சோதனையிடுவது, அடையாள அட்டை வைத்திருக்காத மாணவர்களை சித்ரவதை செய்து பொய் கேசு போட முயல்வது, காஷ்மீரிலிருந்து வரும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கைது செய்ய முனைவது, இதுவரை மோடி அரசின் பாசிசக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவ கும்பலின் அரசியலையும் அம்பலப்படுத்திய மாணவர்களையும் குறி வைத்து வேட்டையாடுவது என ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் பல்வேறு மாணவர் பிரச்சனையில் அம்பலப்பட்ட பிறகும் கூட அடிபட்ட நரியாக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.
காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.
கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சாரம் என்ன? ஏதோ பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களுக்கத்தான் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்துத்துவ பாசிச கும்பல் சமூகத்தின் பொதுப்புத்தியில் தன்னை இருத்த தவியாய் தவிக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.
சான்றாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அப்சல் குரு நினைவுக் கூட்டம் நடத்திய உமர் எனும் மாணவர் லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் நேரடித் தொடர்புடையவர் என்று ஒரே போடாக போட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த புரளி, அரசின் புலனாய்வுத்துறையாலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது ராஜ்நாத்சிங்கின் களவாணித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் செய்யது நேரடியாக ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக கட்டியமைக்கப்பட்ட செய்தியும் ஹபீஸின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கும் போலியானது என்பதையும் வெளிச்சத்திற்கு வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கமும் அம்பலப்பட்டுவிட்டது. அதே போல பல்கலையில் “பாக் வாழ்க” கோஷம் போட்டவர்கள் ஏ.பி.வி.பியினரே என்று ஆம் ஆத்மி வீடியோ மூலம் அம்பலப்பட்ட பிறகும் அவாள் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்தவில்லை.
இந்துத்துவ கும்பல் இச்சந்தர்ப்பத்தை கணிசமாக தன்பக்கம் அறுவடை செய்யவும் தவறவில்லை. டில்லியில் தற்பொழுதைய நிலையில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு வெளியே இரயில் நிலையங்கள் உட்பட சங்கர்பரிவாரங்கள் ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி தாக்கி வருகின்றனர்.
பாட்டியாலா உயர்நீதி மன்றவளாகத்தில் வக்கீல்கள் என்ற போர்வையில் நுழைந்த இந்துத்துவ வானரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ நாளிதழ், எகனாமிக்ஸ் டைம்ஸ், கைரலி தொலைக்காட்சி, ஐ.பி.என் குழும நிருபர்களைத் தாக்கியிருக்கின்றனர். ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு ஆதரவாக கோர்ட் வளாகத்திற்கு வந்த மாணவர்களையும் தேசத்துரோகிகள் என்று இந்துத்துவக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதையும் காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அலோக் சிங் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.
வெள்ளைக் காரனின் காலை நக்கிப் பிழைக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச அரசியல்
பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான வன்முறைத்தாக்குதல் தனி வழக்காக பதியப்பட்டிருக்கும் நிலையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் இந்துத்துவ வானரங்கள், மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியிருக்கிறது. உச்சநீதி மன்ற கெடுபிடி உத்தரவுகள்! எல்லாம் மோடியின் பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் கழிவறைக்காகிதமாக நிற்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் இன்றைக்கு மிகவும் ஆபாசமாக தேசபக்தி கூச்சல் போட்டுவருகிறது என்பதை எவர் ஒருவரும் அறிவர். கடந்த வாரத்திற்கு முன்புதான் அமெரிக்க இந்தியாவிற்கு டேவிட் ஹெட்லி வாக்குமூலத்தை பரிசாக வழங்கிவிட்டு பாகிஸ்தானிற்கு எப்-1 ரக ஹெலிகாப்டர்களை வழங்கியது.
ஹெட்லியின் வாக்குமூலத்திற்கு பின் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவின் சதி வெளியில் வந்துவிட்டதாக பிரச்சாரம் செய்த மோடி கும்பல், அமெரிக்கா அதே ஐ.எஸ்.ஐ பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் வழங்கும் என்று தெரிந்தவுடன் தேசபக்தி கூச்சலை நவதுவராங்களிலும் இருந்தும் கசியவிடாமல் அடக்கி வாசித்தது.
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.
இந்துத்துவக்கும்பலின் இந்தக் கூச்சலுக்கு இசுலாமிய மதஅடிப்படைவாதமும் ஓரளவு தீனிபோட்டு வளர்த்திருக்கிறது. இந்துமதவெறியர்களை எதிர்க்கும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்தும் வேலையினை இசுலாமிய அடிப்படைவாதிகள் செய்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் நுகத்தடியை சாதி இந்துக்களும் சூத்திர தலித்துகளும் ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டிருக்கும் பொழுது மதச்சிறுபான்மையினர்கள் இரட்டை நுகத்தடியை சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இந்திய வாழ்நிலை.
அறிவிக்கப்படாத அவசரநிலை
சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஓட்டுப்பொறுக்கி போலி கம்யுனிஸ்டுகளின் ஓட்டாண்டித்தனம் ஜே.என்.யு விசயத்தில் இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதக் கனவையே உயர்த்திப்பிடிக்கிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதை மறைக்கும் இந்த ஓட்டாண்டிகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக காட்டிக்கொள்வது கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதமாகும். மேலும் இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு இந்துமதவெறியர்களை எதிர்ப்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பலத்தையே கொண்டு சேர்க்கிறது.
மறுகாலனியாதிக்க கொள்கைகளை விரைந்து தீவிரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பனிய இந்துத்துவத்தையும் இசுலாமிய மதவெறி அமைப்புகளின் அடிப்படைவாதத்தையும் முறியடிப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? பாராளுமன்றத்தில் ஜே.என்.யு விவகாரத்தைக் கிளப்பி “மோடியே பதில் சொல்! மவுனத்தைக் கலை!” “அமித் ஷா பதில் சொல்! ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேள்” என்று கேள்வி எழுப்புவார்களாம்.
பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.பி சர்மா சி.பி.எம் கட்சித் தொண்டரை பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நேரடியாக தாக்கி இதுதாண்டா பாசிசம் என்று எடுத்துக்காட்டுகிற பொழுது பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளிடமே சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் நியாயம் கேட்பார்கள் என்ற நிலைப்பாடு புழுத்து நாறும் புண்ணுக்கு புணுகு போடுவதைப்போன்றது.
சங்கப் பரிவாரங்களின் தேசபக்தி கூச்சல் பாராளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டியதல்ல. ஏனெனில் தேசபக்தி, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா”கத்தான் இருக்கிறது. பாசிஸ்டுகளின் செயல் எந்திரம் இது. இது தான் இன்றைக்கு ஜே.என்.யு விவகாரத்தில் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.
ஜே.என்.யு ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டன போராட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆக இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.
“மூடு டாஸ்மாக்கை” – திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், இளம் தோழர் ஒருவர் பாடிய பாடல்! ‘அம்மா’ என்றழைக்கப்படும் ஸ்டிக்கர் மாஃபியாவின் தலைவி குடியால் தமிழகத்தை கெடுத்ததை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!
”நான் சீனாவை வைத்து அந்த ஆளை ஏதோ ஒரு வகையில் சீக்கிரத்தில் ஒழித்து விடுவேன்”
”அப்படியென்றால் அது அரசியல் படுகொலையாக இருக்குமா?”
”அதை விட மோசமான முறைகள் கூட இருக்கிறது. இவன் ரொம்ப மோசமான ஆள் தெரியுமில்லையா?”
–இது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. நெறியாளர் பேட்டியெடுப்பது யாராவது மாபியா கும்பலின் தலைவனாக இருக்குமோ என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? குழப்பமே வேண்டாம், பேசியது மிக பயங்கரமான கார்ப்பரேட் மாஃபியா தான் . ஆனால், கெடுவாய்ப்பாக மேற்படி கார்ப்பரேட் மாஃபியா தான் எதிர்வரும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் வாய்ப்பு பெற்றவர். படுகொலையை விட மோசமாக ஏதோ செய்யப் போவதாக முழங்கியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப். இந்த ’நல்லவரின்’ வாயால் கெட்டவர் என்ற பட்டத்தைப் பெற்றிருப்பவர் கிம் ஜோங் உன், வட கொரிய அதிபர்.
உலக வரலாற்றிலேயே ஆக முட்டாள்தனமான தலைவர் என்கிற இழிபுகழ் பெற்ற ஜார்ஜ் புஷ்க்கு போட்டியாக அதே குடியரசுக் கட்சியில் இருந்து உதித்திருப்பவர் தான் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்கர்கள் எதிர் கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிமையான தீர்வுகளை கைவசம் தயாராக வைத்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப்பின் தேர்தல் முழக்கம் அமெரிக்காவை ‘மீண்டும் உயர்ந்த தேசமாக்குவது’! அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன?
அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? அதற்கு மெக்சிகன் குடியேறிகளும், இசுலாமியர்களுமே காரணம். அதற்கு என்ன தீர்வு? மெக்சிகன்கள் எல்லை தாண்டி வருவதை தடுக்க அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே பெரிய மதில் சுவர் ஒன்றைக் கட்டினால் போயிற்று. சரி, அதற்கு அதிகமாக செலவாகுமே? அந்த செலவை மெக்சிக்கன் அரசாங்கத்திடம் இருந்து வசூலித்தால் முடிந்தது வேலை. சரி முசுலீம்களை என்ன செய்யலாம்? அவர்கள் மொத்தமாக நாட்டுக்குள் நுழைவதையே தடுத்து விட வேண்டியது தான். அப்போது போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கேட்டு வருபவர்களை என்ன தான் செய்வது? வெளியே போடா என்று கழுத்தைப் பிடித்து தள்ளி விட வேண்டியது தான்.
அமெரிக்காவின் மிகப் பெரிய பிரச்சினையே முசுலீம்கள் தான். அதற்கு என்ன ஆதாரம்? இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்ட போது ஆயிரக்கணக்கான முசுலீம்கள் நியூ ஜெர்சி மாநிலத்தில் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அதற்கு என்ன ஆதாரம்? அதை நானே பார்த்தேன். அதற்கு என்ன ஆதாரம்? நான் பார்த்தது தான் ஆதாரம். வெளிநாட்டு முசுலீம்கள் உள்ளே வராமல் தடுப்பீர்கள், உள்நாட்டு முசுலீம்களை என்ன செய்வது? அவர்களின் மசூதிகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சந்தேகம் வருபவர்களைப் பிடித்து அவர்களின் முகத்தை தண்ணீரில் முக்கியெடுத்து கடுமையான முறையி விசாரிக்க வேண்டும். கேட்கவே கொடுமையாக இருக்கிறதே? இது ஐ.எஸ்.ஐ.எஸ் பின்பற்றும் வழிமுறையை விட நாகரீகமானது தானே.
ஒபாமா அறிவித்துள்ள மருத்துவ காப்பீடு திட்டம் சரியில்லை. சரி என்ன செய்யலாம்? அதை மொத்தமாக தூக்கி கடாசி விட வேண்டும். அதற்கு பதில் வேறு என்ன திட்டம் உள்ளது? ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுக்கு பதில் அட்டகாசமாக ஏதாவது செய்து விட வேண்டியது தான் ( Something Terrific ). வெளியுறவுக் கொள்கை? எனக்கு ரசியாவின் புடினை டீலிங் செய்வது ரொம்ப சுலபம்.. வெளியுறவுகளையெல்லாம் ஒரு கை பார்த்துடலாம்.
மேலே இருக்கும் உளறல் வன்முறைகள் எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மூன்று மாதங்களாக வாய் வழியே கழிந்து வைத்தவைகளில் ஒரு சிறு துளி. இவை தவிர எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டனை பாலியல் ரீதியில் விமர்சித்தது, தனது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் சக போட்டியாளரை “பீப்” வார்த்தையில் விளித்தது என்று டொனால்ட் ட்ரம்பின் வாய்க் கொழுப்பிற்கு நீண்ட பட்டியலே உண்டு.
இவை தவர பொருளாதாரம் குறித்தும், வரி விதிப்பு முறைகள் குறித்தும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்தும், அமெரிக்காவின் தேங்கிய பொருளாதாரம் குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த முத்துக்களைக் கோர்த்தால் அந்த மாலையை வைத்து இமயமலையை நாலைந்து சுற்று சுற்றிக் கட்டியே விடலாம்.
சுருக்கமாகச் சொன்னால் நரேந்திர மோடியின் பாசிச மூர்க்கத்தனமும் ஜார்ஜ் புஷ்சின் ஏகாதிபத்திய எகத்தாளமும் சேர்ந்து செய்த கலவை தான் டொனால்ட் ட்ரம்ப். மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பதிவர்கள் தற்போது டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனமான உளறல்களுக்கு அதிக முக்கியத்துவம் செய்து கேலியும் கிண்டலுமாக எழுதி வருகின்றனர்.
எனினும், ஊடகங்களின் கேலி கிண்டல்களைத் தாண்டி ட்ரம்ப் தொடர்ந்து வேட்பாளருக்கான போட்டியில் முன்னணி பெற்று வருகிறார். குடியரசுக் கட்சியினரிடையே எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முதலிடமும் பெற்று வருகிறார். படிப்பறிவில்லாத அமெரிக்கர்களிடமும் குறிப்பாக வெள்ளை நிறவெறியர்களிடமும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. வெளிப்படையாக செயல்பட முடியாத கூ க்ளஸ் க்ளான் என்கிற நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் நோக்கங்களை குடியரசுக் கட்சி முக்காடுடன் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அந்தக் கட்சியில் சேர்வது வழக்கமான ஒரு போக்கு – தற்போது குடியரசுக் கட்சியிலேயே இருக்கும் ஆகப் பிற்போக்கான வலதுசாரிகளும், நிறவெறியர்களும் டொனால்ட் ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து சுறுசுறுப்படைந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கும் ஜனநாயக கட்சி சார்புடைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் அமெரிக்கத்தனையுடையது அல்ல (Un American) என்று எழுதுகின்றனர். எனினும், அதிகரித்து வரும் டொனால்ட் ட்ரம்ப்பின் செல்வாக்கு வேறொன்றை உணர்த்துகின்றது – அவர் இந்தக் காலகட்டத்தின் தேவை. யாருடைய தேவை? கார்ப்பரேட் முதலாளிகள் தேசங்கடந்த தொழிற்கழகங்கள் மற்றும் நிதி மூலதன சூதாடிகளின் இன்றைய தேவையாக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கும் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. வால்வீதி சூதாடிகளின் சூதாட்ட வெறியில் புதைகுழிக்குள் வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அந்தப் புதைகுழியை மேலும் ஆழமாக்கியே உள்ளன. அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அனைத்தையும் குறைந்த உழைப்பில் நிறைந்த லாபத்தையும் அதிக சுரண்டல் வாய்ப்புகளையும் வழங்கும் கிழக்கத்திய நாடுகளுக்கு பெயர்த்தெடுத்துச் சென்று விட்டனர், முதலாளிகள்.
இந்தச் சூழலில் அமெரிக்க நடுத்தர வர்க்கம் மேலும் மேலும் கடனில் வீழ்ந்துள்ளது. கல்லூரிப் படிப்பை முடிக்கும் போதே மிகப் பெரிய கடன் சுமையோடு வெளியேறும் மாணவர்களை வேலையின்மை வரவேற்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரம் வாங்க ஆளில்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வறுமையும் பசி பட்டினியும் அதிகரித்து வரும் அதே நிலையில் அமெரிக்க சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளிகளோ தங்கள் செல்வங்களை பன்மடங்கு உயர்த்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏழை அமரிக்கர்களிடையே வன்முறைப் போக்கு ஒரு புறம் அதிகரித்து வருகிறதென்றால் இன்னொரு புறம் போதைப் பழக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ஃபின் என்ற வழக்கமான போதைப் பொருளை விட 100 மடங்கு வீரியம் கொண்ட – ஹெரோய்னை விட 40 மடங்கு வீரியம் கொண்ட – ஃபெண்டனில் (Fentenyl) என்கிற சிந்தடிக் ஓபியத்தின் பயன்பாடு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்தப் போதை மருந்தால் இறப்பவர்களின் சதவீதமும் திடீரென உயர்ந்துள்ளது. இது தவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாராத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் பெருமுதலாளிகளும் நிதி மூலதன சூதாடிகளும், பங்குச் சந்தை ஓநாய்களும் தான் என்பதை வால் வீதி முற்றுகை இயக்கம் மிகச் சரியாக முன்வைத்தாலும் ஒரு அரசியல் இயக்கமாக அது உருப்பெறவில்லை. என்.ஜி.ஓக்கள் மற்றும் அடையாள அரசியல் குழுக்களின் சங்கமமாக மாறி கடைசியில் பிசுபிசுத்துப் போனது. மக்களிடையே அரசியல் ரீதியில் நம்பிக்கையான மாற்று ஏதும் தோன்றாத நிலையில் “மீட்பரின்” வருகைக்கான களம் தயாராக இருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்ட அதே நிலை தான். பொதுவாக “மீட்பர்கள்” எனப்படுபவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் சவடால் பேச்சுக்கள் போதும்.
”எங்காளு ஆட்சிக்கு வந்தால் சீனாவின் தொடையில் நறுக்கென்று கிள்ளுவார், பாகிஸ்தானின் பொடனியில் பொட்டென்று போடுவார், ஒரு லிட்டர் பெட்ரோல் பத்து பைசாவுக்கு தருவோம், வெளிநாடுகளில் உள்ள பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு பத்து லட்சமாக பிரித்துக் கொடுப்போம், மொத்த நாட்டையும் சிங்கப்பூராக மாற்றுவோம்….”
”மீட்பர்களின்” உளறல்களுக்கெல்லாம் எந்த அறிவியல், தத்துவ, சித்தாந்த அடிப்படைகளும் தேவையில்லை. நோக்கம் ஒன்றே ஒன்று தான் – மக்களின் இன்பக் கிளுகிளுப்பைத் தூண்டுவது போல் பேச வேண்டும். தேர்ந்த எத்தனைப் போல் பேசி மக்களின் ஓட்டுக்களை கவர்வது முதல் கட்டம் – அதற்கு அடுத்தது, இந்த வெற்றியின் பலன்களை அறுவடை செய்யப் போகும் அதானிகளின், அம்பானிகளின் கட்டம்.
தற்ப்போது டொனால்ட் ட்ரம்ப் முதல் கட்டத்தில் இருக்கிறார். அனேகமாக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப் படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அமெரிக்கர்களின் வெள்ளை இன தேசிய வெறியை எவ்வளவு திறமையாக தூண்டுகிறார், மீண்டும் சிறந்த தேசமாக அமெரிக்கா உருவாவதற்கு யாரையெல்லாம் பயங்கரமான எதிரிகளாக அமெரிக்கர்களிடம் கட்டமைக்கப் போகிறார், அதற்கு அமெரிக்கர்கள் எந்தளவுக்குப் பலியாகப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தேர்தலில் வெல்வும் கூடும்.
அதன் பின் மீட்பர் கிடைத்த நிம்மதியில் அமெரிக்கர்கள் இன்பக் கனவில் மூழ்கியிருக்கும் நேரம் பார்த்து நிதிமூலதனச் சூதாடிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும் களமிறங்குவார்கள். டொனால்ட் ட்ரம்ப் தன்னளவிலேயே ஒரு ரியல் எஸ்டேட் முதலை என்பதோடு பல்வேறு நிதிமூலதனச் சூதாடிகளின் நெருக்கமான கூட்டாளியுமாவார். அவரது தேர்தல் பிரச்சார செலவுகளை நிதிமூலதனக் கும்பலே பின்னின்று கவனித்துக் கொள்ளும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருகின்றன.
ஜார்ஜ் புஷ்சுக்கு சற்றும் குறையாத போர் வெறியனாக தன்னை காட்டிக் கொள்வதில் ட்ரம்ப் எந்தக் கூச்சமும் அடைவதில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் இந்த நிலையிலேயே தனது எதிர்காலப் போர் இலக்குகளாக வட கொரியாவையும், ஈரானையும், சிரியாவையும் அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஒருவேளை தேர்தலில் வென்று அதிபரானால் போர்த்தளவாட கார்ப்பரேட்டுகளின் காட்டில் டாலர் மழை தான் என்பதில் சந்தேகமில்லை.
உலகின் பொருளாதார இயக்கம் மொத்தமும் அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் விளைவுகள் ஒவ்வொன்றும் நம்மையும் பாதிக்கப் போவது உறுதி.
டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் முழக்கம் ”மீண்டும் அமெரிக்காவை சிறந்த தேசமாக்குவோம்” என்பதாகும். ஒரு ஆச்சரியமான ஒற்றுமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தினசரி பஜனையின் கடைசிவரி – பரம் வைபன்யே துமே தத் ஸ்வராஷ்ட்ரம் (உலகில் சிறந்த தேசமாக்குவேன்) – பாசிஸ்டுகளின் மிக முக்கியமான ஆயுதம் தேசிய வெறியும், தேசம் குறித்த பழைய பெருமிதங்களுமே.
பாரசீக வளைகுடாவில் தோன்றி உலகை அச்சுறுத்துவதாக குறிப்பிடப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே வெட்கப்படுமளவு இந்த டொனால்ட் பேசுகிறாரே என்று சில அப்பாவி அமெரிக்கர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். எதற்கய்யா வருத்தம்? ஐ.எஸ்-க்கு குர் ஆனிலிருந்து, கில்லட்டின் வரை பயிற்சி கொடுத்தவர்களே அமெரிக்க ஆண்டவன்தான் எனும் போது இது பெருமைக்குரியதல்லவா!
“ஏதென்று தெரியாத இடத்தில்..
ஏதென்று தெரியாத நேரத்தில்..
என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்..
என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்..
மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்… ”
– கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழுவின் பாடல் வரிகளில் இருந்து..
போராடும் மக்கள் திரளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மொழியும், கலாச்சாரமும், பூகோள இடைவெளியும் தடைகளே அல்லவென்பதை, கேரளத்தின் ஆலப்புழாவில் இருந்து வந்த அந்தக் கலைக்குழு பாடிய பாடல்கள் உணர்த்தின. பார்வையாளர்களின் மொழி பாடகனுக்குத் தெரியாது; பாடகனின் மொழி பார்வையாளர்களுக்குத் தெரியாது. எனினும் எவரும் எழுந்து செல்லவில்லை; கூட்டம் சலசலக்கவில்லை… ஆழ்ந்த அமைதியில் ஏறி இறங்கும் பாடலின் தாள லயத்தில் மக்கள் கட்டுண்டு கிடந்தனர். அங்கே உணர்வுகளின் பரிமாற்றம் ஒரு உயர்ந்த தளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.
திருச்சியில் 2016 பிப்ரவரி 14-ம் தேதியன்று நடந்த “ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்! – மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு” இதைப் போன்ற எண்ணிறந்த தருணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் அலங்கார அலப்பறைகளோ, குவாட்டர்-கோழி பிரியாணி கும்பலையோ இங்கு நீங்கள் காண மாட்டீர்கள் என்ற எல்லோரும் அறிந்த உண்மைக்குள் மீண்டும் ஒருமுறை புகுந்து புறப்பட விரும்பவில்லை. மாநாட்டின் சில உணர்வார்ந்த தருணங்களை பரிமாறிக் கொள்வதே எமது விருப்பம்.
தஞ்சை ரெட்டிபாளையத்திலிருந்து வந்திருந்த ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழுவினரின் நிகழ்ச்சியோடு 14ம் தேதி மாலை மாநாடு துவங்கியது. அவர்களின் ஆக்ரோஷமான அடவுகளும் நரம்புகளைப் பிடித்து மீட்டும் பறையோசையும் மாநாட்டுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை சுமார் அரை மணி நேரம் கட்டிப் போட்டது. மாநாட்டில் தொடர்ந்து வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கும், உரைகளுக்கும் மக்களின் மனங்களை அந்தப் பறையோசை தயார்ப்படுத்தியது.
ரெட்டிப்பாளையம் தப்பாட்டக் குழுவினர்
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் மாநாட்டைத் தலைமை வகித்து நடத்தினார். சென்னையைச் சேர்ந்த உதவும் கைகள் என்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்தி அம்மாள் முதல் உரையை நிகழ்த்தினார். அவர் தெருவோரங்களில் கிடக்கும் அடையாளம் தெரியாத அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வதற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் அடக்கம் செய்தவர்களில் சுமார் 70 சதவீதம் மதுவால் இறந்தவர்கள். அவற்றில் பல பிணங்களை பல இடங்களில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளின் வாசலில் வைத்தே கைப்பற்றியுள்ளார்.
தோழர் காளியப்பன் – தலைமை உரைஆனந்தி அம்மாள்
அநாதைப் பிணங்களை உற்பத்தி செய்யும் நதிமூலங்களில் பிரதானமானது என்பதை உணர்ந்த பின் தனது சேவையை மாற்றிக் கொண்டு மது ஒழிப்பிற்காக போராடி வருகிறார். சமீபத்தில் மது விலக்கை வலியுறுத்தி நீண்ட நடைபயணம் ஒன்றை நடத்தி முடித்த அவர், அதன் அனுபவங்களைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மதுக் கொடுமையால் இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மதுவின் தாக்கத்தால் இழக்கப்படும் குற்றங்கள் குறித்து விவரித்தவர், இந்த மாநாடு வரை தமது அணுகுமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக இருந்தது என்றும் இதற்கு மேலும் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றால் இந்த மாநாட்டிற்குப் பிறகு தமது அணுகுமுறையே மாறும் என்றும் அரசுக்கு எச்சரிகை விடுத்தார்.
மாநாட்டின் அடுத்த உரை மொத்தக் கூட்டத்தையும் உறைய வைத்தது.. திருப்பூர் நாகராஜின் வாழ்க்கையின் வலி மிகுந்த பக்கங்களை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறோம்.
நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை.
நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்து விட்டு வந்து வீட்டுக்குள் நினைவிழந்து விழுந்துள்ளார். வெறுத்துப் போன மனைவி மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தன்னையே கொளுத்திக் கொள்கிறார். நெருப்பின் ஆங்காரம் அலறலாக பீறிட்ட போது தட்டுத் தடுமாறி விழித்துப் பார்த்த நாகராஜுக்கு என்ன செய்வதென்று தெரியாத அளவுக்குப் போதை தலையிக்கேறியிருந்தது.
மனைவி நெருப்பில் உருகிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே சென்று நெருப்பை அணைக்க முற்பட்டுள்ளார்… தீச் சூவாலைகளின் தீவிரத்தில் தன்னைத் தொட்ட ஏதோவொன்றை இறுக்கியணைத்துள்ளார் அந்தப் பெண். அது நாகராஜின் உடல் தான். அடுத்து என்ன நடந்ததென்று நாகராஜுக்குத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது அவர் அரசு மருத்துவமனையின் படுக்கையில். நெருப்பு அவரையும் உருக்குலைத்துப் போட்டிருந்தது; அவரது விரல்கள் மெழுகைப் போல் உருகிப் போயிருந்தன. ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் இரண்டு விரல்கள்.. கூட்டத்தைப் பார்த்து அந்தக் கையை உயர்த்திக் காட்டினார். அத்தனை பேர்களின் கண்களிலும் கண்ணீர்.. மூன்று மாதங்கள் கழித்தே அவரது மனைவி இறந்து விட்டதை அறிகிறார். இந்த செய்தியைக் கேட்பதற்காகவே அந்த மூன்று மாதங்களாக அவர் மனப்பிறழ்வுக்கு ஆளாகிய நிலையில் நெருப்பால் வெந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.
திருப்பூர் நாகராஜ்
“ஒரு காலத்திலே கையில இருந்த காசு தீர்ற வரைக்கும் குடிச்சவனுங்க. எம்பட கிட்ட வாங்கிக் குடிச்சவன் எத்தனையோ பேரு.. இன்னிக்கு என்னோட கை இப்படியாகிப் போச்சு.. என்னால வேலை செஞ்சி சம்பாரிக்க முடியாது.. என்ற புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..”
நிறுத்தி விட்டுத் தேம்பினார். சரியாக அந்த நேரத்தில்.. கூட்டத்திலிருந்த மக்கள் பொன்மனச் செல்வியாம் புரட்சித் தலைவின் பொற்கால ஆட்சியைக் குறித்து ஆவேசக் குரலில் சொன்ன சங்கதிகளுக்கு ஏழெட்டு தேச துரோக வழக்குகள் உறுதி. நாகராஜ் தொடர்ந்தார்.
“என்னோட புள்ளைக்கு ஒடம்பு சரியில்லெ.. ஆசுபத்திரிக்கி கூட்டிட்டுப் போக வர அஞ்சு ரூபா ஆகும்… அதுக்கு காசில்லாதனா போயிட்டேன்” மீண்டும் உடைந்தார் நாகராஜ்.. ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் டாஸ்மாக்கை எப்படியாவது மூடி விடுங்களென்று மக்களிடம் கேட்டு விட்டு அமர்ந்தார்.
இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீர்வதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர். எனினும் அது போராட்டமின்றிச் சாத்தியமில்லை.. ஆனால் போராட்டங்களோ மாலை நேரத் தேனீர் போல அத்தனை ரசமான அனுபவங்களாய் இருக்கப் போவதில்லை. தோழர்களுக்கு இது பழகியது தானென்றாலும் மக்களுக்கு இது புதிது. நரகத்தின் மத்தியில் நிற்பவர்களுக்கு கடினமான பாதை ஒன்றைக் கடந்தால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது தெரிந்து விட்டது.. அந்தப் பாதையைக் கடப்பதெப்படி? தனது அனுபவத்தின் மூலம் அதை விளக்கினார் மது ஒழிப்புப் போராளி டேவிட் ராஜ்.
டேவிட் ராஜ்
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ் ஒரு முன்னாள் இராணுவ வீரர் மட்டுமின்றி வாள் வீச்சில் தேசிய சேம்பியன். இந்த தேசத்திற்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியம். இராணுவத்தில் இருந்து கொண்டே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவரது தந்தை குடிக்கு அடிமையான தகவல் அவரை அடைகிறது. உடனடியாக ஊருக்கு வந்தவர் தந்தையின் நிலை கண்டு மனம் பதைக்கிறார். இது அவரது பிரச்சினை மட்டுமில்லை என்பதையும் இங்கே ஒரு சமூகமே குடி நோயின் பிடியில் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட ரீதியில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்கிறார்.
குடி உடல் நலனை மட்டுமில்லாமல் மன நலனையும் அழித்து ஒரு மனிதனை சிந்திக்க முடியாத வாழும் பிணங்களாக்குகிறது என்ற உண்மையை டேவிட் ராஜ் உணர்ந்து கொண்டு தனது இராணுவ வேலையை இராஜினாமா செய்து விட்டு ஊரிலேயே ஒரு விளையாட்டு மையம் ஒன்றைத் துவங்குகிறார் – அதோடு மது ஒழிப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார். சசி பெருமாளைப் பின்பற்றி மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு வருகிறார்.
அபினியால் தங்களை அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதை உணர்ந்த சீன மக்கள் தமது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை அபினி யுத்தத்திலிருந்து துவங்கினர். வெள்ளை ஏகாதிபத்தியும் அதன் அடிவருடிகளான சீன ஆளும் வர்க்கமும் அதை வெறும் போதைப் பழக்கத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நடவடிக்கையாகப் பார்க்கவில்லை. மக்கள் போதையிலிருந்து விடுதலை அடைவதை தங்கள் அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக் கொண்டு, கொடூரமான முறைகளில் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்டது சீன ஆளும் வர்க்கம். ஆளும் வர்க்கங்களின் சிந்தனைப் போக்கு மக்களைக் கிள்ளுக் கீரைகளாகப் பார்ப்பது எனபது உலகம் தழுவிய அளவிலும் நூற்றாண்டைக் கடந்த பின்னும் ஒன்றே போல் தான் உள்ளது என்பதைத் தமிழக போலீசு உணர்த்தியது.
மது ஒழிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட டேவிட் ராஜை சட்டவிரோதமாக கைது செய்த போலீசு, அவரை வேனில் வைத்தே கொலை வெறியோடு தாக்கியுள்ளது. கைது செய்யப் பட்டு ஆறு மணிநேரம் கழித்து நீதிமன்றத்தில் டேவிட் ராஜை ஆஜர் படுத்திய போலீசு, இந்த இடைவெளிக்குள் அவரது இடுப்பு எலும்பை அடித்தே உடைத்திருந்தது. சில மாதங்கள் எந்த அசைவுமின்றி படுக்கையிலேயே கிடப்பது என்பது எவ்வளவு நரக வேதனையை அளிக்கும் என்பதை வேறு எவரையும் விட விளையாட்டு வீரர்களே உணர முடியும். உடலின் ஆற்றல் அத்தனையும் வடிந்து போய் சொந்த பராமரிப்புக்குக் கூட இன்னொருவரின் தயவை நாடி நிற்கும் அவல நிலை அது.
டேவிட் ராஜ் அதைக் கடந்து வந்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்த டேவிட் ராஜ், தன்னை இயக்கிய உணர்ச்சி ஒன்றே ஒன்று தானென்றார். அது தமிழக இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியிலிருந்து விடுவித்தே தீர்வது என்கிற வெறி. போலீசு மிருகங்களின் அடியும் உதையும் லட்சிய உறுதி கொண்ட ஒருவருக்கு வலியைக் கொடுப்பதில்லை – மாறாக போராளியின் எஃகு போன்ற உறுதியைக் கொடுக்கிறது.
டேவிட் ராஜ் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.
டேவிட்ராஜ்
டேவிட் ராஜ் கிழித்தெறிந்த சான்றிதழ்கள் காற்றில் அலைந்து தரையைத் தொட்ட போது மேடைக்குப் பக்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் சிலரின் கண்களின் கண்ணீர் வழிந்ததைக் காண முடிந்தது. ஒருவேளை அவர்களும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சீருடைப் பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. அங்கீகாரம் பெற்ற மாநில, தேசிய சான்றிதழ் ஒன்றைப் பெறுவதன் வலி என்னவென்பதை உணர்ந்த அவர்களுக்கு டேவிட் ராஜின் லட்சிய உறுதியின் அடர்த்தி உறைத்திருக்கும்.
பாதையில்லாத பாதையில் முதலில் நடப்பவரே அத்தனை முட்களையும் தாங்கிக் கொள்கிறார். அவரைப் பின் தொடர்பவர்களும் அந்த வலியில் கொஞ்சம் பங்கு பெற்றுக் கொள்கிறார்கள்.. காலங்கள் கழித்து அங்கே பாதை உருவான பின் வருபவர்களின் கால்கள் முதலில் நடந்தவர்களின் வலியைப் புரிந்து கொள்ளுமா? நமது எதிர்கால சந்ததியினருக்கான முள்ளில்லாத பாதை சமைக்க நம்மில் எத்தனை பேர் தயாராக உள்ளோம்?
இதோ நமக்கு முன்னோடிகளாக டேவிட் ராஜ் மட்டுமில்லை.. குமரிக்கு வடக்கே இருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வக் கண்ணும் இருக்கிறார். மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பொய்வழக்கை சந்தித்து முப்பது நாட்கள் சிறையில் கழித்த பதினைந்து பேரில் ஒருவரான் அவருக்குஅதற்கு முன் அவ்வமைப்போடு எந்த தொடர்பும் கிடையாது.
இப்படியான உறுதியான போராளிகள் பலரை எமது அமைப்புக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொன்மனச் செம்மல், குடி வியாபாரி புரட்சித்தலைவிக்கு இந்த இடத்தில் ஒரு நன்றி.
தெய்வக்கண்ணுவோடு சேர்ந்து மொத்தம் நான்கு சகோதரர்கள். அரசாங்கத்தின் ஆலோசனையை நம்பி ஒவ்வொருவரும் ஒற்றைப் பிள்ளைகளாக பெற்று வைத்துள்ளனர். அந்தச் சகோதரர்களில் ஒருவருக்குப் பிள்ளையில்லை. தெயவக் கண்ணுவின் தம்பி மகன் டாஸ்மாக் அடிமை. குடிவெறியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அந்த இளைஞனை பறிகொடுத்த அந்தக் குடும்பம் வாரிசின்றி நிற்கதியாய் நிற்கிறது. தனது குடும்பத்திற்கு இந்த அரசு வழங்கிய அநீதிக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த தெய்வக்கண்ணு மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டம் குறித்து கேள்விப்பட்டு பங்கெடுத்துக் கொள்கிறார்.
மேலப்பாளையூர் டாஸ்மாக் மக்களின் கோபக் கனலில் இழுத்து மூடப்படுகிறது. ஆத்திரம் கொண்ட அதிகாரிகள், பொய்வழக்கில் போராட்டத்தில் முன்நின்றவர்களைக் சிறையில் தள்ளுகிறார்கள். தனது சிறை அனுபவம் நிறைய புதிய விசயங்களைக் கற்றுக் கொடுத்தது என்று தெரிவித்த தெய்வக்கண்ணு, குடியால் தனது கிராமத்தினர் அடைந்த துன்பங்களைப் பட்டியலிட்டார். பெண்களுக்கு குடிப்பழக்கமில்லாத மாப்பிள்ளைகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களைச் சொன்னவர்.. பல பெண்களுக்கு ஆண்களுக்கும் இதன் காரணமாகவே திருமணம் நடப்பது தடைபட்டுள்ளதை விவரித்தார்.
தெய்வக்கண்ணு
தானே 23 மாப்பிள்ளைகளைப் பார்த்துக் கொடுத்துள்ளதாகவும், அதில் 17 பேர் குடிகாரர்கள் என்றும் மீதியுள்ள 5 பேரும் எப்போது குடிக்கத் துவங்குவார்களென்று தெரியாது என்றும் வேதனைப்பட்டார். இது எங்கள் ஊர்.. .இங்கே சாராயக் கடை வேண்டாம் என்றும் நாங்கள் சொல்கிறோம் – திறப்பேன் என்று சொல்ல கலெக்டர் யார்? மக்களின் தாலியறுக்கும் இந்தப் பொம்பளை சொந்தக் கட்சிக்காரனுக்கு தாலியெடுத்துக் கொடுக்கிறதே.. அந்தக் குடும்பங்கள் விளங்குமா என்று ஒரு விவசாயிக்கே உரிய எளிய தர்க்கத்தை முன்வைத்த போது காவலுக்கு நின்று கொண்டிருந்த ஆய்வாளர் தனது தொப்பியைக் கழட்டி தலையைக் கவிழ்த்தார்.
ஐம்பதுகளில் இருக்கும் அந்த போலீசுக்கு குடிக்கும் ஒரு பொறுக்கி மகனோ அல்லது குடிகாரக் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்ணோ இருந்திருக்கலாம்.. அந்த வேதனையை ஒரு தகப்பனாக அவர் அந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்திருக்கலாம்.. அவரிடம் மட்டுமின்றி காவல் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற கீழ்நிலைக் காவலர்கள் முகங்களிலும் ஒரு வித குற்ற உணர்ச்சியைக் காண முடிந்தது.. அது ஒருவேளை டாஸ்மாக் வாசலில் குடிகாரர்களுக்கும் சரக்குக்கும் சால்னாவிற்கும் காவலாக நின்றதன் காரணமாக ஏற்பட்ட உறுத்தலாக இருக்கலாம் – அல்லது சமூகம் சமூகம் என்று சொல்லப்படுவதில் தாங்களும் ஒரு அங்கம் என்று துளியாக உணர்ந்த தருணமாகவும் இருக்கலாம்.
சரக்குப் பார்ட்டிகளின் முன் கவிழ்ந்த அந்த விரைத்த தொப்பிகளின் உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும்? அதை மையம் கலைக்குழு நடத்திய நாடகம் காட்சி வடிவிலேயே நம் கண்முன் நிறுத்திக் காட்டியது. போலீசின் தொப்பி மட்டுமா, நமது அமைச்சர்களின் முதுகுத் தண்டுவடங்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் விவரித்த அந்த நாடகத்தைக் காணாதவர்கள் வரப்போகும் மாநாட்டு சி.டியை வாங்கிப் பார்த்து இரசிக்கலாம்.
மையம் கலைக்குழவின் நாடகம்
சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையனும் தனது உரையில் ”போலீசே உணர்ந்து விட்டதால் இனி மற்றவர்களுக்கு உணர்த்துவது அத்தனை சிரமமில்லை” என்று குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மக்கள் அதிகாரத்தின் அரசியலையும் அதன் தேவையையும் ஏற்கனவே பேசி விட்டதையும் அதன் காரணமாக நேரம் குறைவு என்பதையும் பத்து மணிக்கு மேல் பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதையும் குறிப்பிட்டு தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் தோழர் மருதையன்.
தோழர் மருதையன்
மாநாட்டின் மற்றொரு சிறப்புரையாளரான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, இது இன்னுமொரு வழமையான மாநாடு இல்லை என்பதால் இங்கே மாநாட்டுத் தீர்மானங்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார். மதுவிலக்குக் கொள்கையில் ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டங்களை குறிப்பிட்டவர், தமிழக மக்கள் தேர்தலுக்காக காத்திருக்காமல் உடனடியாக களத்தில் இறங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே இம்மாநாடு விடுக்கும் அறைகூவல் என்றார்.
எங்கெல்லாம் மக்கள் தங்கள் பகுதியிலிருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடர்பு கொண்டால் தலைமையேற்று வழிநடத்த தயாராக இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டார். மேலும், ஒரு அமைப்பு என்கிற முறையில் தோற்றுப் போன இந்த அரசு நிர்வாகம் நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து டாஸ்மாக்கை மூடும் என்று நம்பத் தேவையில்லை என்றார் ராஜு. மேலும், ஜெயலலிதா காட்டும் இரட்டை இலை சின்னத்தில் ஒரு இலை போலீசு என்றால் இன்னொரு இலை போதை என்பதைக் குறிப்பிட்டவர், போதைக்கு அடிமையாக்கி மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்து மறுப்பவர்களைப் போலீசைக் கொண்டு வீழ்த்து என்பதே இந்த அரசின் கொள்கை என்பதை குறிப்பிட்டார்.
தோழர் ராஜு
நமது ஊரில் நமது விருப்பத்திற்கு மாறான ஒன்றை ஏன் அனுமதிக்க வேண்டும்? குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மக்கள் திரளாக நின்று எதிர்த்தால் அரசின் குண்டாந்தடியான போலீசால் என்ன செய்து விட முடியும் என்று கேள்வி எழுப்பியவர், ஐந்து மாவட்ட போலீசை இறக்கினால் மக்கள் பீதியடைவார்கள் என்பது அரசின் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால், ஐந்து மாவட்ட மக்களும் களத்தில் நின்றால் சில ஆயிரம் போலிசால் என்ன செய்து விட முடியும் என்கிற எதார்த்தத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றார். மக்கள் திரள் போராட்டங்களின் வெற்றியை ஏற்கனவே சந்தித்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடியது, பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்தது போன்ற போராட்ட அனுபவங்களையும் விளக்கினார்.
கடலூர் கச்சிராயநத்தம் கிராமத்திலிருந்து வந்த மந்திரகுமாரி தனது ஊரை டாஸ்மாக் எப்படி விதவைகளின் கிராமமாக மாற்றியது என்பதை விளக்கினார்.”அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படத்தின் கதையை அவரது உரை நிகழ்த்தியது. டாஸ்மாக்கை மட்டுமல்ல பல்வேறு அநீதிகளுக்கும் காவலாய் நிற்கும் நீதித்துறையை அம்பலப்படுத்திப் பேசிய தோழர் வாஞ்சி நாதன்,மழலை மொழியில் குடியின் கேடுகளை விளக்கிய சிறுமிகள், கேரளாவிலிருந்து வந்து கலை நிகழ்ச்சி நடத்திச் சென்ற கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு என்று மாநாட்டின் நிகழ்ச்சிகள் உணர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தன. மேடையில் டாஸ்மாக்கின் வேதனை சோகமான பாடலாக மலையாளத்தில் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழர் கண்ணோட்டம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒருவர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவோம், அதிகாரத்தைக் கையிலெடுப்போம் என்று தெய்வக் கண்ணு பேசிக் கொண்டிருந்த போது, மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட நடைமுறை சாத்தியமான வழி குர் ஆனில் இருப்பதாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒரு அப்பாவி!
தோழர் வாஞ்சிநாதன்
கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு
மந்திரகுமாரி
சிறுமிகள்
இறுதி நிகழ்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது. டாஸ்மாக் தொடர்பான புதிய பாடல்களோடு நடந்த அந்தக் கலைநிகழ்ச்சியின் விரிவான பதிவு பின்னர் வெளியிடப்படும் என்றாலும், பள்ளி மாணவி பாடிய பாடல் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்..
என்கிற பல்லவியோடு துவங்கிய அந்தப் பாடலின் வரிகள் ஒரு பெண் குழந்தையின் பார்வையில் குடிகாரத் தந்தையால் விளையும் துன்பங்களை பட்டியலிட்டது. ஆசையோடு தின் பண்டங்கள் வாங்கிக் கொண்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்த தன் தந்தையை ஏன் டாஸ்மாக்கைத் திறந்து கெடுத்தீர்கள் என்ற தேம்பும் குரலின் அந்தக் கேள்வி இதயம் கொண்டோரை உலுக்கும். மற்ற பிள்ளைகளின் தாய் தந்தையரெல்லாம் பள்ளிக்கு வருகிறார்களே.. நான் பாடல் போட்டியில் வென்று பரிசு பெறப் போகும் நிகழ்வுக்கு நீ வருவாயா அப்பா? இருட்டி விட்டதே… எனக்கு அச்சமாக இருக்கிறது.. நீ எங்கே விழுந்து கிடக்கிறாயோ அப்பா..?
நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியெல்லாம் அந்தப் பெண் தோழரின் ஏக்கமான குரல் மனதின் ஆழத்தில் குடைந்து கொண்டே இருந்தது…
ஆனால்.. இந்த பரிதவிப்பெல்லாம் மிடாஸ் முதலாளிகள் உணரமாட்டார்கள்..
உணர்ந்தவர்கள் முன் வாருங்கள்.. நாம் உணர்த்துவோம் என்பதே இந்த மாநாட்டின் செய்தி!