Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 564

இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !

0

ந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் சர்வதேச போதை பொருள் வலைபின்னலின் முக்கிய தலைவனாக செயல்பட்டுவந்தது தெரியவந்துள்ளது. விமானப்படையின் கமாண்டராக செயல்பட்டுவந்த ராஜசேகர் ரெட்டி என்ற அந்த அதிகாரி தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போதை பொருள் கடத்தல் மட்டுமல்லாமல் அதை தயாரிக்கும் வேலையையும் ஒருங்கிணைத்துள்ளார் இவ்விமானப்படை அதிகாரி. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தனது நண்பராண வெங்கட்ராம ராவ்(37) மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து “ஆம்ஃபிடமின்” என்ற போதை பொருளை தயாரித்து பல நாடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளனர். இதற்கென ஹைதராபாத்தில் பிரத்யேக ஆய்வக வசதிகளுடன் கூடிய போதை பொருள் உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். ஹைதாராபாத்தில் தயாரிக்கப்பட்டு தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென் கிழக்காசிய நாடுகளுக்கும் விற்பனை செய்துவந்துள்ளனர். அவ்விஞ்ஞானி மற்றும் அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தவிர விமானப்படையின் மேலும் பல அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாதிரி படம்
கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாதிரி படம்

“சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் “மெத்தாம்பெடாமைன்” என்ற போதை பொருளுடன் ஜீவன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் சென்னை மண்டல் போதைபொருள் தடுப்பி பிரிவு இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

தமிழகத்தில் சமீப காலமாக டாஸ்மாக் போதையோடு விதவிதமான நவீன போதை பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைபொருள்கள் விற்கப்படுகின்றன. சமீபத்தில் ஆர்.கே நகர் பள்ளி அருகில் மாணவர்களிடம் போதை சாக்லேட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக சென்னை சவுகார்பேட்டையின் மொத்த விற்பனையாளர் கணேஷ் சுக்லாவிடம் விசாரணை நடத்துதாக அப்போது அறிவித்திருந்தது தமிழக அரசு.

சென்னை பள்ளி மாணவர்களிடம் வெகு வேகமாக பரவி வரும் மதுவல்லாத பிற போதைபொருள்கள் குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ராஜா கூறியதாவது “கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மதுவல்லாத பிற போதை பொருள் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளை பொருத்தவரை “கூல் லிப்”(COOL LIP) என்று மாணவர்களால் அழைக்கப்படும் ஒரு வகையான போதை பொருள் புழக்கத்தில் உள்ளது. ஹான்ஸ் புகையிலை போன்று வாயில் ஒராமாக வைத்துக்கொள்ளப்படும் இப்போதை பொருளை வகுப்பறையிலேயே பயன்படுத்துகிறார்கள். மாணவர்களையே கஞ்சா விற்பனை பிரதிநிதியாக்கி பள்ளிகளில் விற்கவைக்கிறார்கள் கஞ்சா வியாபாரிகள். இவர்கள் மூலம் பள்ளிகளின் ரூ.30-க்கே கஞ்சா கிடைக்கிறது. மேலும் பெண்களுக்கு பிரசவத்தின் போது தரப்படும் மாத்திரைகளை பயன்படுத்தியும் போதை ஏற்றிக்கொள்கிறார்கள்.

உயர் நடுத்தர பிரிவினர் படிக்கும் பள்ளி மாணவர்களிடையே ஒரு வகையான பாம்பை கடிக்க வைத்து போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு முறை கடிக்க வைப்பதற்கு 10,000 செலவு செய்கிறார்கள் இம்மாணவர்கள். மேலும் கஞ்சா, ஊசி மூலம் போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கமும் இப்பிரிவு மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது.

இதற்கென தனிச்சிறப்பான வலைபின்னல்கள் செயல்படுகின்றன. கணிசமான மாணவர்கள் இவ்வகையிலான போதை பழக்கத்திற்கு ஆழாகியிருக்கின்றனர் ” என்று அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார்.

“உலகில் 15-64 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் அதாவது போதை பொருள் பயன்படுத்த வாய்ப்புள்ள சந்தையில் 18% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இப்பிரிவினரை குறிவைத்து போதை பொருள் சந்தையின் முக்கியமான இலக்காக இந்தியா இருக்கும்” என்றும் எச்சரிக்கிறது 2014-ல் வெளியிடப்பட்ட  போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா அமைப்பின் அறிக்கை. 2004 ஐ.நா மற்றும் சமூக நலன் மற்றும் மேம்பாட்டு அமைச்சக புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் 1.07 கோடி பேர் மதுவல்லாத போதை பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதில் 8 லட்சம் பேர் கஞ்சாவிற்கும், 2 லட்சம் பேர் ஒப்பியத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் போதைப் பொருள் பயன்படுத்துவதில் முதன்மையாக உள்ளது. அம்மாநிலத்தில்  67 சதவீத ஊரக குடும்பங்களில் குறைந்தது ஒரு போதை அடிமையாவது இருப்பதாக தெரிவித்திருந்தது.  எய்ம்ஸ் மருத்துவமனை 2015-ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, ஆண்டு தோறும் சுமார் 7500 கோடி மதிப்பிலான போதை வஸ்துக்களை பஞ்சாப் மாநிலம் மட்டும் நுகர்ந்து வருகிறது.

போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலம் பஞ்சாப்
போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் மாநிலம் பஞ்சாப்

பஞ்சாபின் போதை புழக்கத்தை பற்றிய வினவில் விரிவான கட்டுரை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். ( பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை ! ). அம்மாநிலத்தின் போதை மருந்து பிரச்சணைக்கு காரணம் எல்லை தாண்டிய பயங்கரவாத கும்பல் தான் என்று பிரச்சாரம் செய்துவந்தது ஆளும் பா.ஜ.க – அகாலிதள கும்பல். ஆனால் ’தேசபக்த’ ராணுவத்தினர் போதை பொருள் வலைபின்னலில் நதிமூலமாக இருக்கிறார்கள் என்பது மேற்கண்ட விமானப்படை அதிகாரியின் கைதின் மூலம் தெரியவந்துள்ளது. இராணுவத்தை கேள்விகேட்பதே மாபெரும் தேசதுரோக செயலாக பிரச்சாரம் செய்யப்படுவதும் அதற்கு மக்கள் பலியாவதும் இராணுவ கிரிமினல்களுக்கு வசதியாக உள்ளது. யாரும் தங்களை கேள்விகேட்க முடியாது என்பதும் அப்படி கேட்டால் அவகளது தேசபக்தியை சந்தேகத்துள்ளாக்கி அவர்களை மதிப்பிழக்க செய்ய முடியும் என்ற தைரியம் தான் இராணுவ கிரிமினல்களின் மூலதனமாக இருக்கிறது. போதையும், போலீசும், ராணுவமும் வேறு வேறல்ல. ஒன்றுக் கொன்று பொருத்தமான நலன்களுடன் இவைகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. போதை பொருள் ஒழிப்பிற்காக நாம் ஒரு பெரும் போரே நடத்த வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க :

நீர்நிலைகளை மீட்கும் வழித்தடம் போராட்டம்தான் – சென்னை உரை

0
தோழர் . அமிர்தா
தோழர் . அமிர்தா

நீர் நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும் !

சென்னை கருத்தரங்க உரைகள்

தோழர் . அமிர்தா
தோழர் . அமிர்தா

சென்னை பூந்தமல்லியில் மக்கள் அதிகாரம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் மாணவரணி செயலர் தோழர் பிரின்ஸ் என்னரசு பெரியார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தோழர் சுந்தரவள்ளி, மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் உரையாற்றினார்கள். இதில் திரளாக தோழர்களும், ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கிற்கு மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல குழு உறுப்பினர் தோழர் அமிர்தா தலைமை தாங்கினார்.

 இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்
பிரின்ஸ் என்னாரசு பெரியார்

”இந்துத்துவாவிற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.  நாம் ஒன்று சேர்ந்தால் இந்துத்துவாவிற்கு எதிராக மாறுவோம் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் அதனால் திட்டமிட்டே கலவரங்களை உருவாக்குகிறார்கள். மேலும் நதிநீர் இணைப்பு பேசப்படுகிறது. ஆனால் இன்று நதிநீர் இணைப்பு சாத்தியமா? இல்லையா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இது யாருக்கு சாதகம், பாதகம் என்று நாம் ஆய்ந்து பார்க்க வேண்டும்.

முல்லை பெரியார் அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கட்டிடங்களாக மாறியுள்ளன. அந்த அணையினுடைய நீர் மட்டத்தை உயர்த்தினால் அந்த கட்டிடங்களில் முதலீடு செய்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள். பெரும் முதலாளிகளின் சொத்து பாதிக்கப்படும் என்ற காரணத்தால் முல்லை பெரியாறு அணையின்  நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என அவர்கள் பிரச்சினை செய்கிறார்கள். இது எல்லாவற்றையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் நர்மதா அணை பிரச்சனை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

தோழர் . பிரின்ஸ் என்னாரசு பெரியார்
தோழர் . பிரின்ஸ் என்னாரசு பெரியார்

மூன்றாம் உலக நாடுகளில் உருவாக்கும் தொழிற்சாலைகளை நாம் தொழில் வாய்ப்பாக பார்த்தோம். ஆனால் திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் வரும் சாயப்பட்டறை கழிவுகளால் நாம் நம் நீராதாரங்களை இழந்திருக்கிறோம். ஒரு ஜீன்ஸ், ஒரு டி-சர்டை உருவாக்க ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் செலவாகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்று சொல்லப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தும் அரசின் புறம்போக்கு நிலத்தில் தான் கட்டப்பட்டிருக்கிறது. சென்னையைச் சுற்றிருந்த நீர்நிலைகளை தான் இன்று நாம் வாழ்விடங்களாக மாற்றியிருக்கிறோம். காரணம் மக்கள் தொகையும், பொருளாதாரமும் பெருகியிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் 30 கோடியாக இருந்த மக்கள் தொகை 120 கோடியை தாண்டியிருக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இடம் விரிவாகவில்லை. இடங்களை ஆக்கிரமிக்க வேண்டிய நிலையில் எளிதாக கிடைப்பது நீர்பிடிப்பு இடங்கள் தான். பல்லாயிரம் ஏக்கர்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை பற்றி பேசுவதில்லை. யாரும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஊடகமும் எழுப்பாது. அரசு நான்கு ஏக்கரில் ஒரு பேருந்து நிலையம் அமைத்தால் அதை ஊடகங்கள் குற்றஞ் சாட்டுகிறது. ஏனென்றால் தங்களின் முதலாளிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களை குற்றம் சாட்டமுடியாது என்ற நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆக நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தே நமக்கு மிக தாமதமாக வந்து சேர்கிறது. இந்த பிரச்சனை என்பது காவிரியோடு, முல்லை பெரியாரோடு, பாலாறோடு, கிருஷ்ணா நதியோடு, வைகையோடு முடிவதில்லை, ஆக்கிரமித்திருக்கிற நீர்நிலைகளோடு மட்டும் முடிவதில்லை. மிக பரந்துப்பட்டளவில் இதைப்பற்றிய பார்வை தேவைப்படுகிறது. இதை மக்களிடத்தில் பரவலாக கொண்டு செல்ல வேண்டிருக்கிறது” என பேசினார்.

நேர்மையான மக்கள் போராட்டத்தை  மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம் !
– தோழர் சுந்தரவள்ளி

”இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் கருந்தரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. மிக குறுகிய காலத்தில் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு விரைவாக வளர்ந்து வரும் இயக்கமாக உள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு இந்த சமூகத்தில் ஒரு முன்மாதிரியான அமைப்பாக நிற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நாம் தண்ணீர் வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் தீச்சட்டி எடுத்து தெரு தெருவாக அம்மாவிற்காக காவடி எடுக்கிறார்கள். மீனவருடைய பிரச்சனையை மீனவருடைய பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். ஒரு நெசவாளியின் பிரச்சனையை நெசவாளியின் பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். ஒரு தொழிலாளியின் பிரச்சனையை தொழிலாளியின் பிரச்சனையாக பார்க்க பழகிவிட்டோம். அதே போலத்தான் ஒரு விவசாயினுடைய பிரச்சினையை கூட இத்தனை ஆண்டு காலம் விவசாயினுடைய பிரச்சனையாக மட்டுமே பார்த்தோம். விவசாயி கடன் கட்டவில்லை என்றால் கைது, ஆனால் பல கோடி கொள்ளையடித்த முதலாளியின் ரேசன் அட்டையை மட்டும் முடக்குகிறது அரசு. அவன் தான் தினமும் ரேசன் கடையில் நின்று பாமாயில், மண்ணெண்ணெய் வாங்க போகிறானா? எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறது இந்த அரசு.

தோழர் . சுந்தரவள்ளி
தோழர் . சுந்தரவள்ளி

காவிரிப் பிரச்சினையை இரண்டு மாநிலங்களின் பிரச்சனையாக மட்டும் சுருக்கி பார்க்க முடியுமா? ஜல்லிகட்டு பிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக சொன்ன மோடி அரசு, ஏன் காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை அமுல்படுத்த மறுக்கிறது? காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த உடனே தண்ணீர் பிரச்சனை தீரும் என்பது மூட நம்பிக்கை. ஏற்கனவே கர்நாடகாவில் மாற்றி மாற்றி காங்கிரசும், பி.ஜே.பியும் தான் ஆட்சிக்கு வருகிறார்கள். அதனால் ஓட்டு வங்கியாக மக்களை பயன்படுத்த இரண்டு கட்சிகளும் செயல்படுகிறார்கள். அதனால் தான் இந்த பிரச்சனை தீர்க்கபடாமல் இருக்கிறது. தமிழகமே வறண்டு போய் கொண்டிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகள் தெளிவாக சுரண்டுகின்றன. ஒரு பக்கம் கோக் கம்பெனி தண்ணீரை உறிஞ்சு எடுக்கிறான். கேரளாவில், ஒரு பிளாச்சிமடா என்ற கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து தலைவர் பிளாச்சிமடாவிற்குள் கொக்கோ கோலா கம்பெனி வர கூடாது என்று கூற முடிகிறது. ஆனால் இந்திய அரசால் தடைவிதிக்க முடியாது.

பன்னாட்டு கம்பெனிகள் நம்முடைய தண்ணீர் வளத்தை பல விதத்தில் சுரண்டுகின்றன. தாமிரபரணி தண்ணீர் கொள்ளையடிக்கப்படுகிறது. நீர் மேலாண்மை குறித்து இன்று இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அறிவில்லை, தமிழர்களுக்கு அறிவு உண்டு. கோயில்களுக்கு முன்பு குளம் இருந்தது. அது ஊரில் நீராதாரமாக இருந்தது. ஆனால் இன்று மதுரை நீதிமன்றமே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது. ஏரி, குளங்களை அழித்துவிட்டோம். காவிரிக்காக போராடும் அதே நேரம் உள்ளூரில் இருக்கும் முதலாளிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் முதலாளிகளை எதிர்த்து போராட வேண்டிருக்கிறது. நீரை ஒரு கருவியாக வைத்து நம்மை காலில் விழ வைக்கும் வேலையை பா.ஜ.க அரசாங்கம் செய்கிறது.

கர்நாடகாவை எதிர்ப்பதோடு நம்முடைய போராட்டம் சுருங்கி விட கூடாது. உள்ளூரில் நீராதாரங்களை காப்பாற்றுவதுடன் மத்திய அரசு நமக்கு எதிராக இருப்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழர்களுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக போராடும் அதே நேரத்தில் உள்ளூர் நீர்நிலை காப்பாற்ற போராடும் போது தமிழகத்திற்கான நீராதாரங்களை நாம் பெற முடியும். அத்துனை வேலைகளிலும் நாம் ஒன்றாட இணைந்து செயல்பட வேண்டிருக்கிறது. அதற்கான ஒரு வழித்தடத்தை உண்மையிலேயே மக்கள் அதிகாரம் தொடங்கியிருக்கிறது. இந்த அமைப்புடன் இன்னும் முற்போக்கு இயக்கங்களை ஒன்று திரட்டி கொண்டு ஒரு நேர்மையான மக்கள் போராட்டத்தை  மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்ப்போம்”

ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் கிரிமினல்மயமாகியிருக்கிறது !
தோழர் ராஜு, மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்

”தண்ணீர் விட மாட்டேன் என்கிறது கர்நாடக அரசு, மைய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. உச்சநீதிமன்றமும் சொன்னது சரிதான் என்று சொல்லிவிட்டது. இப்போது காவிரியில் இருந்து தண்ணீர் வருவது உத்திரவாதம் கிடையாது. விவசாயிகள் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இழுத்தடித்தால் பருவமழை வந்துவிடும். இப்படி அவர்கள் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கட்சிகளை மக்கள் பிரச்சனையை தீர்ப்பார்கள் என்று அவர்கள் பின்னால் போக முடியாது. பிரச்சினை தீர்ப்பது என்பது காவிரியோடு முடிவதில்லை. நீர்நிலைகள் முழுவதும் நாம் பாதுகாக்க வேண்டும்.  யார் நீர்நிலைகளை அழித்தார்களோ, ஆற்றை கொள்ளையடித்தார்களோ, அவர்களை வைத்து கொண்டு அவர்களிடம் மனு கொடுத்து எப்படி காப்பாற்ற முடியும்? மணற் கொள்ளை சம்பந்தமாக பொதுப்பணித்துறை பொறியாளரிடம் பேசினால் காசு வாங்காத கட்சிகள் யாரும் கிடையாது.

தோழர் . ராஜூ
தோழர் . ராஜூ

இந்த மணற் கொள்ளை என்பது அதிகாரிகள் தான் செய்கிறார்கள், ஆட்சியாளர்கள் தான் செய்கிறார்கள், நீதிமன்றங்கள் அதை பாதுகாக்கிறது. நிலத்தடி நீர் பல மடங்கு குறைந்து விட்டது. இதை பார்த்து தான் மணற்கொள்ளைக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். ஆனால் சாதி கலவரத்தை தூண்டுவது, பொய் வழக்கு போடுவது, மத கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு போடுவது என்று ஒடுக்குகிறார்கள். ஒரு தாசில்தாரோ, போலீஸ்காரர் ஒருத்தரோ உண்மையிலேயே பிடிக்க போனால் அவர்களை கொலை செய்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக எல்லா ஆறுகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆற்றின் மணல் மீண்டும் வந்த சேர எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல முடியாது. இது எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும். யாரை வைத்து இதை தடுக்க போகிறோம். நீராதாரங்களை காப்பாற்ற போகிறோம்.

இந்த கட்டமைப்பு பிரச்சனைகளுக்கு என்ன தீர்வை சொல்வது என்ற ஆற்றலை இழந்து நிற்கிறது. தோற்றுப்போய்விட்டது, மக்களுக்கு வேண்டாத சுமையாக மாறிவிட்டது. மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. அதனால் இந்த அரசு கட்டமைப்பில் முறையிட்டு இவர்களிடம் நாம் பிரச்சனையை தீர்க்க முடியாது. இந்த கட்டமைப்பிற்கு வெளியில் தான் மாற்று இருக்கிறது.

காவிரி பிரச்சனை 100 ஆண்டுகளாக இருக்கிறது. விவசாயிகள் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்ட இந்த பிரச்சனை இன்று ஒட்டு மொத்த தமிழகத்தின் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இது ஒரு சாதகமான விசயம்.

காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு கிடையாது, மத்திய அரசிற்கும் கிடையாது, கர்நாடக அரசிற்கும் கிடையாது, தமிழக அரசிற்கும் கிடையாது. வழக்கு போட்டால் முடிந்து விட்டது என்று தான் நினைக்கிறார்கள். இது என்ன ஜெ-வினுடைய சொத்து குவிப்பு பிரச்சனையா? தனியாக பார்ப்பதற்கு. தமிழகத்தினுடைய பிரச்சனை. அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி  இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என ஏன் செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, என்கிறான். பேச்சு வார்த்தை நடத்தி தீர்க்க முடியவில்லை என்பதால் தானே நீதிமன்றத்திற்கு 30 வருடத்திற்கு முன்பே இப்பிரச்சினை சென்றிருக்கிறது. பிரச்சினையை  மத்திய அரசு தான் தீர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை குறைத்து கொண்டு வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு உண்மையாக இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற நோக்கமில்லை. ஆனால் கர்நாடகாவில் வெறித்தனமாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் ”வாழு வாழவிடு” என்கிறது. மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கூடாது என்கிறார். காங்கிரஸ் அடிக்கடி கூடி உச்சநீதிமன்றத்திற்கு எதிராக தீர்மானம் போடுகிறது. உன்னுடைய தீர்ப்பு ஒன்றும் என்னை கட்டுபடுத்தாது என்கிறான்.

மக்கள் (1)இதில் கட்டமைப்பு நெருக்கடி என்பது, இந்த பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்க்கணும் என்று நினைத்தாலும் மேலும் மேலும் பிரச்சனையை உருவாக்குகிறது. மோடி பிரச்சனையை தீர்க்கனும் என்று நினைத்தாலும் மேலும் மேலும் அதிகரிக்கிறது. சுவாதி கொலையில் ஏன் சி.சி டி.வி வைக்க வில்லை என்று நீதிமன்றம் கேட்கிறது. சி.சி.டி.வி வைக்காதது தான் சுவாதி கொலைக்கு காரணாமா? சேலம் வினுப்பிரியா போலிசிடம் போன பிறகும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை, தற்கொலை செய்து கொண்டார். அதனால் போலீசிடம் போனாலும் அது தான் கதி. காவிரி பிரச்சனை லட்சக்கணக்கான விவசாயிகளின் பிரச்சனையாக பார்க்கப்படுவதில்லை.

பி.ஜே.பி  – ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய கொள்கையை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்வேன் என்று சொல்லி அதிகாரத்தை பிடிப்பதில்லை.  மற்ற கட்சிகளை போல் அதை செய்தேன், இதை செய்தேன் என்று பேசுவதில்லை. சாதி, மத, இன கலவரத்தை வைத்து பிணந்தின்னி கழுகை போல தான் அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். அதை தான் அவர்கள் யுத்தியாக, சாதனையாக வைத்திருக்கிறார்கள். இது தான் அவர்களின் அடிப்படை சித்தாந்தம். கர்நாடகாவில் சிறுபான்மை தமிழர்களை எதிரியாக உருவாக்குகிறான். பெரும்பான்மை கன்னடர்களை வாக்குவங்கியாக மாற்ற முயல்கிறான்.

கர்நாடாகா அரசு விவசாய நிலபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.  பெங்களூருக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறான். நீச்சல் குளத்திற்கு கொண்டு செல்கிறான். போராடும் விவசாயிகளுக்கு சாதாரண மக்களுக்கு போதுமான அளவு காவிரி நீர் போவதில்லை. அங்கு குடகுமலையில் கேளிக்கை விடுதிகள் கட்டுகிறான், காபி தோட்டங்களை போடுகிறான், தனியார்மய, தாராளமய கொள்கையின் இயற்கை அழிப்பால் பொதுவிலேயே மழை குறைந்துவிட்டது. அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.  பெங்களூரில் தண்ணீர் விநியோக உரிமையை பன்னாட்டு கம்பெனிகள் வைத்திருக்கிறான். எவ்வளவு பிரச்சனையிருந்தாலும் மத்திய மாநில் அரசுகளின் கொள்கை தனியாருக்கு தண்ணீர் தருவதாக தான் உள்ளது. எவ்வளவு தண்ணீர் இருக்கிறதோ தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை பற்றி பேச வேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் பேசாது, மத்திய அரசு பேசாது. எந்த அமைப்பிடம் போய் கேட்பது. இதை தான் கட்டமைப்பு நெருக்கடி என்கிறோம்.

DSCN0286தமிழ்நாடு பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, இவையெல்லாம் வேறூன்றிய நாடு. அவனால் நம்மை அழிக்க முடியவில்லை. தமிழ் சமஸ்கிருதம் கலக்காமல் தனியாக நிற்கிறது. மலையாளம் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதத்தை கலந்து விட்டான். ராமனை செருப்பால் அடிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம். பிள்ளையாரை புறக்கணிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் சாத்தியம்.

கெயில் குழாய் பதிப்பு பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு எதிராக சொல்கிறான். கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் அங்கு மேலும் இரண்டு அணு உலைக்கு அனுமதி கொடுக்கிறார்கள். போராடுகிற மக்கள் மீது அரசுக்கு எதிராக போர் தொடுப்பது என்ற  வழக்கு போடப்படுகிறது. யாருக்கு ஆதரவாக இருக்கிறது மத்திய அரசாங்கமும் நீதிமன்றமும். காவிரியில் தண்ணீர் வந்தால் மணல் அள்ள முடியுமா? காவிரியில் தண்ணீர் வந்தால் மீத்தேன் வாயுவை எடுக்க முடியுமா? நிலக்கரி எடுக்க முடியுமா? விவசாயிகள் நிலங்களை விட்டு விரட்டப்படனும். தண்ணீர் விட்டாலும் கடைமடை பகுதிக்கு போகுமா? பாசன வசதி இருக்கிறதா? லட்சக்கணக்கான விவசாயினுடைய எதிர்காலம் குறித்து எந்த திட்டமும் இல்லை. தண்ணீர் என்பது மனிதர்களுக்கு மட்டும் உரியது இல்லை. ஒட்டுமொத்த ஜீவராசிகளுக்கு உரியது.  எதிர்கால  தலைமுறைக்கு உரியது. இந்த அரசு என்பது இயற்கை வளங்களின் காப்பாளர் தான். உரிமையாளர் கிடையாது. காப்பாளர் விற்க முடியாது. தண்ணீர் வந்து விவசாயம் செய்தால் விளைப்பொருளுக்கு பணம் தருவதில்லை. கரும்பு ஆலை முதலாளிகள்  கரும்புக்கு 850 கோடி பணம் தரவில்லை. எல்லா வகையான போராட்டங்கள் செய்தும் வரவில்லை.

எல்லா பிரச்சனைக்கும் இந்த கட்டமைப்பில் தீர்வு இல்லை. கல்வி பிரச்சனை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, போலீசே திருடுவது, கொலை, கொள்ளையை தடுக்க முடியாததது என எல்லாவற்றையும் தொகுத்து பார்த்தால் இந்த முடிவிற்கு வர முடியும். ஆகவே ஜனநாய முற்போக்கு சக்திகள் இணைந்து  இற்றுப்போன எதிர்நிலை சக்தியாகிப்போன இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிவோம்.”

தகவல் : மக்கள் அதிகாரம்,
சென்னை. தொடர்புக்கு 91768 01656

Add to Anti-Banner

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2016 மின்னிதழ்

0

puthiya-jananayagam-october-2016

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை!

2. பா.ஜ.க.-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?

3. பாக். மீது தாக்குதல் : சண்டையா… சண்டைக் காட்சியா?
“அடி பின்னிவிட்டோம்” என்கிறது மோடி அரசு. “இல்லவே இல்லை” என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

4. கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி!
செத்த பிறகு தியாகி பட்டம் பெற விரும்பும் ரியல் எஸ்டேட் ரவுடிகள், காமவெறிக் கயவர்கள், கந்துவட்டிக்காரர்களே! உங்கள் அனைவரையும் இந்து முன்னணி அறைகூவி அழைக்கிறது. (கிறித்தவ, முஸ்லீம் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை).

5. கோவை தாக்குதல்: திருப்பியடிப்போம்!

6. ராம்குமார் மரணம் : போலீசைத் தண்டிக்க என்ன வழி?
சுவாதி கொலையிலும் ராம்குமாரின் மர்மமான மரணத்திலும் போலீசும் நீதித்துறையுமே கூண்டிலேற்றி விசாரிக்கப்பட வேண்டிய முதன்மைக் குற்றவாளிகள்.

7. ரிலையன்ஸ் ஜியோ: அம்பானி – மோடி இணைந்து வழங்கும் பாசிசக் கொடுங்கனவு!
ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும்.

8. ஆர்.எஸ்.எஸ்.-இன் பார்ப்பனக் குசும்பு!
மாவலி மன்னன் நினைவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகையை, அந்த அசுர குல அரசனைச் சதி செய்து கொன்ற வாமன அவதாரத்தின் நினைவாகக் கொண்டாடக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்.

9. “பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள்!
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கு லைசன்சு வழங்கியிருக்கிறது மோடி அரசு.

10. இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை!
தன்னை முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பவில்லை என்றே பொருள் எனப் பேசியிருக்கிறார் சர்மிளா. இது தன்னுடைய வீழ்ச்சிக்கு அவரே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.

11. ஏழைகளைச் சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள்
ஆதார் கார்டுக்கும், ரேசன் கார்டுக்கும் அப்பாவிகளைத் தெருநாயாக அலையவிடும் நாட்டில், நுண்கடன் நிறுவனங்கள் ஏழைகளின் வீடுதேடி வந்து அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுப்பது ஏன்?

12. மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு!
ஹவாலா திருடர்களையே ரூட் போட்டு திருடும் தமிழக போலீசை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? சரியான பெயரைத் திருடர்கள்தான் சொல்ல வேண்டும்.

13. தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்
நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் சட்டவிரோதமான சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; சோதனை நடத்திய வருமான வரித் துறையும் கண்டுகொள்ளவில்லை.

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 1.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !

4

த்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் பிஸ்ரக். இக்கிராமத்தில் தான் இராவணன் பிறந்ததாக அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இக்கிராமத்தில் கோவிலில் நிறுவி வழிபடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இராவணன் சிலையை சேதப்படுத்திய இந்துமத வெறியர்கள் கோவிலையும் தாக்கியுள்ளனர்.

பார்ப்பனிய செல்வாக்குள்ள வடமாநிலங்களில் நவராத்திரி தசரா திருவிழாவில் இராவணன் உருவப்பொம்மைகளை எரித்து இராவணனின் சாவை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இக்கிராமத்தில் நவராத்திரி நாட்களை துக்க தினமாக கடைபிடிக்கிறார்கள். மேலும் தசரா அன்று இராவணனுக்காக யாக குண்டம் வளர்த்து வழிபடுகிறார்கள். இக்கிராமத்தின் பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் நடக்கும் இவ்வழிபாட்டிற்காக ஆண்டு தோறும் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கோவில் மட்டுமல்லால் அப்பகுதியின் பல கோவில்களில் நவராத்திரிக்கு பதிலாக இராவணன் யாகங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் நவரத்திரி கொண்டாடினால் ராவணனின் கோபத்திற்கு தாங்கள் ஆளாக நேரிடும் என்று அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்

இக்கிராமத்தில் சமீபத்தில் இராவணனுக்கு சிலை அமைத்து வழிபாடு செய்ய மக்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி(09-08-2016) அன்று சிலை மற்றும் பிரகாரம் நிறுவுவதற்கான வேலைகள் முடிந்து சிலை நிறுவப்படவிருந்தன. இச்சமயத்தில் மற்ற பகுதிகளை சேர்ந்த இந்து மத வெறியர்கள் இராவண சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழாவின் இரண்டு நாட்களுக்கு முன்னர் 9-08-2016 அன்று வெளியூரிலிருந்து ஐந்து கார்களில் வந்த இந்துமத வெறியர்கள் கோவில் முன் தகராறு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். பின்னர் நிறுவுவதற்கு வைக்கப்பட்டிருந்த இராவணன் சிலைகளை உடைத்துள்ளனர். பின்னர் தங்கள் கையிலிருந்த துப்பாக்கிகளை காட்டி இராவண சிலை நிறுவினால் சுட்டு கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

மேற்கண்ட சம்பவம் குறித்து போலீசில் புகாரளித்துள்ள கிராமமக்கள் பசுப்பாதுகாப்பு குழுக்களை சேர்ந்தவர்களும், பிற கோவில்களின் தலைவர்களும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தாங்கள் வழிபடும் இராவணனை கொடூரமானவராக காட்ட முயலுவது துரதிர்ஷ்டம் வரபோவதற்கான அறிகுறி என்றும் அப்பகுதி மக்கள் கவலைப்படுகின்றனர். ஒருவகையில் இந்தியாவில் நடக்கும் பா.ஜ.க ஆட்சி கொண்டு வந்திருக்கும் கேடுகாலத்தை மக்களின் இந்த நம்பிக்கை கவித்துவமாக சுட்டிக் காட்டுகிறது போலும்.

இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் நாளை(11-10-2016) தசாரா நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் இக்கிராமத்தினர் இராவணனுக்காக வழிபாடு செய்ய தயாராகி வருகிறார்கள். இது குறித்து ஸ்ரீ பாபா மோகன் ராம் கோவில் அர்ச்சகர் அகிலேஷ் சாஸ்திரி கூறுகையில் “முந்தைய ஆண்டுகளைப் போல இவ்வாண்டும் இராவணனுக்கான பூஜைகள் நடக்கும் என்று என்னிடம் மக்கள் கூறியிருக்கிறார்கள். இராவணன் சிலை நிறுவமுடியாவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும்” என்கிறார்.

இந்து மத வெறியர்களின் அச்சுறுத்தலுக்காக இக்கிராம மக்கள் பணியவில்லை. இக்கிராம தலைவர் அஜய் பாடி கூறிகையில் “ எங்கள் வழக்கமான திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. கிராமத்தில் கண்காணிப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்த உள்ளோம். எவன் எங்களை தடுக்க வருகிறான் என்று பார்ப்போம்”. “உடைக்கப்பட்ட இராவண சிலைகளுக்கு பதிலாக மாற்று சிலைகள் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம்.சிலை கிடைக்கப்பெற இரண்டு மாதங்கள் ஆகும். அது வந்ததும் முன்னர் எந்த இடத்தில் நிறுவப்பட இருந்ததோ அதே இடத்தில் நிறுவுவோம்” என்று ஆணித்தரமாக கூறுகிறார். மேலும் இராவண சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காசிபார் பகுதி கோவிலை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்கு இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறுகிறார் கிராம தலைவர் பாடி.

இந்து மத வெறியர்களால் சேதமாக்கப்பட்ட இராவணை சிலை இருந்த இடம்
இந்து மத வெறியர்களால் சேதமாக்கப்பட்ட இராவணை சிலை இருந்த இடம்

கான்பூர் அருகிலுள்ள ஒரு கோவிலிலும் “ ஜெய் லங்கேஷ், லங்காபதி நரேஷ் கி ஜெய்” என்ற முழக்கங்களுடன் தசாரா என்று இராமனுக்கு பதிலாக இராவணனை வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது. இதே போல மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட மாநிலங்களின் வசிக்கும் அசுர் என்ற பழங்குடி இன மக்கள் நவராத்திரி மற்றும் துர்கா பூஜையை துக்க தினமாக அனுசரிக்கிறார்கள். துர்காவின் 9 நாள் போர் என்ற புராணகதைகள் அவர்கள் ஏற்பதில்லை. தங்கள் மன்னர் மகிஷாசுரன் சதி செய்து வீரமரணமடைந்ததாக கருதுகிறார்கள்.

அப்பழங்குடி பிரிவைச்சேர்ந்த சுஷ்மா அசுர் என்ற பெண் தங்கள் வரலாறை ஆவணப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறார். அவர் கூறுகையில் “ராவணனும் மகிஷாசுரனும் எங்கள் முன்னோர்கள். அவர்களை சதி செய்து கொல்லப்பட்டதை விழாவாக கொண்டாடுவது தொடரக்கூடாது. இந்திய புராண பழங்கதைகளை ஆவணப்படுத்தியதில் ஆதிக்க சாதியினர் கை மேலோங்கியிருந்தது. அதனால் பழங்குடிகளின் பக்கசார்பிலான கதைகள் புறக்கணிக்கப்படுகின்றன.” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் விரிவாக பின்னர் எழுதுகிறோம். அசுர் பழங்குடியினர் தங்கள் பண்பாட்டின்படி மகிஷாசுரனுக்கு வீர வணக்க நாள் நிகழ்வுகள் கடைபிடிப்பதையும் இந்துமத வெறியினர் எதிர்க்கிறார்கள். தங்கள் பக்க புராணகதைகளை வெளியில் பிரச்சாரம் செய்யவும் பழங்குடிகளை தடை செய்கிறார்கள் இந்துமத வெறியர்கள். ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் அசுர் பழங்குடியினரின் பக்க சார்பிலான துண்டறிக்கைகளை வெளியிட்டதை கண்டித்து பாராளுமன்றத்தில் பேசினார் ஸ்மிருதி இராணி.

ஐதராபாத், ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைகழகத்தில் அசுர் பழங்குடியின் கதைப்படி விழா எடுப்பதை தடுத்து அசுரர் தினம் கொண்டாடுவதை எதிர்த்து பிரச்சனை செய்கிறது நிர்வாகமும் ஏ.பி.வி.பி கும்பலும். ஆரிய பார்ப்பனர்களின் ஒற்றை கலாச்சாரத்தையே இந்திய பாரதீய கலாச்சாரமாகவும் பிற திராவிட, பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை நைச்சியமாகவும், பலாத்காரமாகவும் அழிக்கும் வேலையை கனக்கச்சிதமாக செய்கிறது பார்ப்பனியம். தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டு மகிஷாசுரன், இராவணன் கொல்லப்பட்ட புராணகதைகளின் நாட்களை கொண்டாடுபவர்கள் மேற்கண்ட கிராமமக்கள் மற்றும் பழங்குடியின மக்களிடமிருந்து கற்றுகொள்ள நிறைய இருக்கிறது. இந்தியாவை ஆரிய பார்ப்பன் சமஸ்கிருதமயாக்கும் பா.ஜ.கவின் அரசியலை முறியடிக்க இதுபோன்ற பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை வரித்துக்கொள்வது தேவையாக இருக்கிறது.

– அமலன்

(மேலும் படிக்க)

பிரான்சுக்கு பழைய பேப்பர் கடையா இந்தியா ?

1
இங்கு

க்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்துப் போட வேண்டும் என்று மக்களுக்கு உபதேசிக்கும் ஆளும் கும்பல், ஏகாதிபத்திய நாடுகளின் கழிவுகளை அமெரிக்க டாலருக்காக இறக்குமதி செய்து, இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக்குகின்றது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இந்தியாவிற்குப் புத்தாண்டு பரிசு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறது. அந்தப் பரிசின் பெயர் “கிளெமோன்ஸோ” என்ற பழைய விமானம் தாங்கி போர் கப்பல். பிரெஞ்சு கப்பற்படையில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டுவிட்ட இந்தப் போர் கப்பல், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஆலங் துறைமுகத்தில் உடைக்கப்படுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Clemenceau1
பிரான்ஸின் கிளெமோன்ஸோ என்கிற விமானம் தாங்கி போர் கப்பல்

ஆலங் துறைமுகத்தில் இந்தக் கப்பல் உடைக்கப்பட்ட பின் 30 கோடி ரூபாய் பெறுமான பழைய இரும்பு கிடைக்கும். எனினும், இந்தக் கப்பல் வெறும் மூன்று கோடி ரூபாய்க்கு தான் விற்கப்பட்டுள்ளது. வியாபார அளவுகோலின் படி பார்த்தால், பழைய இரும்புக்காக இந்தக் கப்பலை வாங்கிய நிறுவனத்திற்கு கொழுத்த இலாபம்தான். ஆனால், இந்தக் கப்பல் ஆலங் துறைமுகத்தில் கப்பலை உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கும்; அத்துறைமுக வட்டாரத்தின் சுற்றுச்சூழலுக்கும் என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பதை இப்பொழுது கூற முடியாது. ஏனென்றால், இந்தக் கப்பலை உடைக்கும் பொழுது, நெஞ்சகப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) தகடுகள், நூற்றுக்கணக்கான டன் அளவில் கழிவாகக் கிடைக்கும். இந்தக் கல்நார் கழிவை அறிவியல் ரீதியாக அப்புறப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆலங் துறைமுகத்தில் இல்லாததால், இந்தக் கல்நார் கழிவு இக்கப்பலை உடைக்கும் கூலித் தொழிலாளர்களையும்; அத்துறைமுக வட்டாரச் சுற்றுச்சூழலையும் மோசமாகப் பாதிக்கும் எனப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன.

கல்நார் தகடுகள் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இதனைத் தொழிற்துறையிலோ, வீட்டு உபயோகத்திற்கோ பயன்படுத்துவது பிரான்சு நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான இந்தக் கப்பலை, பிரான்சிலேயே உடைக்காமல், இந்தியாவின் தலையில் கட்டியுள்ளனர். ஆனால், இந்திய அரசோ அந்நியச் செலாவணி வருமானம் என்ற கண்ணாடியை மாட்டிக் கொண்டு, இந்தக் கப்பலின் வருகையைப் பார்க்க வேண்டும் என நியாயப்படுத்துகிறது.

ஆலங்
ஆலங் துறைமுகம்

பிரான்சில் இருந்து கடந்த ஆண்டின் கடைசி நாள் (2005 டிச. 31) இரவில் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டுவிட்ட இந்தக் கழிவுக் கப்பல், பிப்ரவரி இரண்டாவது வாரம் ஆலங் துறைமுகத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், “இந்தக் கப்பலை இந்தியாவிற்கு அனுப்பக் கூடாது; பிரான்சிலேயே உடைக்க வேண்டும்” என பிரான்சு உள்ளிட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் நடத்திவரும் போராட்டங்களையடுத்து, இந்திய உச்சநீதி மன்றம், இந்தக் கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைய இடைக்கால தடை விதித்திருக்கிறது. மேலும், இந்தக் கப்பலில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அபாயகரமான கழிவுகள் எவ்வளவு உள்ளன என்ற விவரத்தைத் தருமாறு பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசிடம் கேட்டிருக்கிறது.

தில்லியின் அழகுக்காகத் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு, அவர்கள் நகரை விட்டுத் துரத்தியடிக்கப்பட்ட பொழுது; வனப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஆதிவாசிகள் காடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பொழுது, எந்த நீதிமன்றம் அவர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க முன்வந்தது? இந்தக் கழிவுக் கப்பல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்குச் சொந்தம் என்பதால், உச்சநீதி மன்றத்தின் “நடுநிலையான நியாய உணர்ச்சி” விழித்துக் கொண்டுவிட்டது.

இந்தக் கப்பலில் வெறும் 45 டன் கல்நார் கழிவுகள்தான் இருப்பதாகவும்; எஞ்சியவற்றை இந்தியாவிற்கு அனுப்பும் முன் பிரான்சிலேயே அப்புறப்படுத்திவிட்டதாகவும் பிரெஞ்சு அரசு கூறுகிறது. ஆனால், இந்தக் கப்பலில் இருக்கும் கல்நார் கழிவுகளை அகற்ற பிரெஞ்சு அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்ட, “டெக்னோப்யூர்” என்ற பிரான்சு நிறுவனம், பிரெஞ்சு அரசு கூறுவதை மோசடி என்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் தங்களின் சொந்த செலவில் இந்தியாவிற்கு வந்து உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ள சாட்சியத்தில், “இந்தக் கப்பலில் இன்னும் 500 டன்னுக்கு மேல் கல்நார் கழிவுகள் இருப்பதாக” வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்தக் கப்பலில் பல ஆண்டுகள் வேலை பார்த்து, அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு கப்பற்படையைச் சேர்ந்த எடினி லீ குலிசெர், லீடஃப் என்ற இரு முன்னாள் ஊழியர்கள், “இந்தியாவிற்கு வரும் அந்தக் கப்பலில் வெறும் 45 டன் கல்நார் கழிவுதான் இருக்கும் என்பது கேலிக்குரியது” என ’தி இந்து’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளனர்.

இங்கு
ஆலங் துறைமுகத்தில் எந்தவித பாதுகாப்பு கவசமின்றி இரும்பை உடைக்கும் கூலி தொழிலாளி

இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, புவியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள பேசல் மாநாட்டு ஒப்பந்தம், சுற்றுச் சூழலை மாசடையச் செய்யும் அபாயகரமான கழிவுப் பொருட்களை ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியாவும், பிரான்சும் இந்த விதிமுறைகளை மயிரளவுக்கு கூட மதிக்கவில்லை.

உச்சநீதி மன்றம் பேசல் ஒப்பந்தத்தைக் காட்டியே, இந்தக் கழிவுக் கப்பல் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடை செய்திருக்க முடியும். ஆனால், மாண்புமிகு நீதிபதிகளோ, தாங்கள் விதித்துள்ள இடைக்காலத் தடையைச் செல்லாக் காசாக்கும் வண்ணம், “வேண்டுமானால் எண்பது கோடி ரூபாயை பிணைத் தொகையாகக் கட்டிவிட்டு இந்தக் கப்பல் இந்தியாவிற்குள் நுழையலாம்” என்ற சலுகையை பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு அளித்துள்ளனர்.

இந்தக் கழிவுக் கப்பல் ஏற்றுமதியை நியாயப்படுத்துவதில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தைவிட, இந்திய ஆளுங்கும்பல்தான் முன்னணியில் நிற்கிறது. “குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிக்கட்டுமானம் நிறுவனம் பிரான்சுக்கே சென்று, இந்தக் கப்பலை ஆய்வு செய்திருப்பதாக” குஜராத் கடல்சார் வாரியம் கூறியிருக்கிறது. இந்தக் கப்பலை உடைப்பதற்கு ஏலம் எடுத்துள்ள சிறீராம் நிறுவனத்தின் சகோதர நிறுவனம்தான் குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அடிக்கட்டுமானம் நிறுவனம். வேலிக்கு ஓணான் சாட்சி.

குஜராத்தில் உள்ள ஆலங் துறைமுகத்தில் கப்பலை உடைக்கும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரிசாவையும், பீகாரையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், தலைக்கவசம் கூட இல்லாமல், சுத்தியலையும், ஆக்ஸா பிளேடையும், காலாவதியாகிப் போன வெல்டிங் மிஷின்களையும் கொண்டு, தினந்தோறும் மரணத்தோடு போராடி, வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். உடைந்த கப்பல்களில் இருந்து அவர்கள் எடுத்துவரும் பிளாஸ்டிக் ஷீட்டுகள்தான், அவர்கள் வீட்டுக் கூரைகள். அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கழிப்பறைகூட அத்துறைமுகத்தில் கிடையாது.

clemenceau-r98-abandoned-aircraft-carrier
கிளெமோன்ஸோ

ஒரு கப்பலை உடைக்கும் பொழுது ஒரு தொழிலாளி மரணமடைவது நிச்சயம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள், குஜராத் ஆலங் துறைமுகத்திலும், வங்காள தேசத்திலும் (கப்பலை உடைக்கும் பொழுது) 110 கூலித் தொழிலாளர்கள் பலியாகிவிட்டதாகச் சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. கை கால்களை இழந்து முடமாகிப் போனவர்களின் எண்ணிக்கை கணக்கிலேயே வராது.

கப்பலை உடைத்து எடுக்கப்படும் பழைய இரும்புக் கழிவுகளுக்குத் தரும் மதிப்பைக் கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு முதலாளிகள் தருவதில்லை. ஒரு சராசரித் தொழிலாகக் கூட அங்கீகரிக்க முடியாத இந்தக் கப்பல் உடைப்பை, ஒரு தொழிற்துறையாக அங்கீகாரம் அளித்திருக்கிறது, இந்திய ஆளும் கும்பல்.

இந்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம், “பிரெஞ்சுக் கப்பலில் உள்ள கல்நார் கழிவுகளை சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அகற்றும் தொழில்நுட்பம் ஆலங் துறைமுகத்தில் இருப்பதாகவும்; அனைத்தும் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே நடப்பதாகவும்” அறிக்கைவிட்டு, இந்தக் கப்பல் பேரத்தை நியாயப்படுத்தியிருக்கிறது.

ஏழை நாடான துருக்கி கூட, இந்த பிரெஞ்சு கழிவுக் கப்பலை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டது. ஆனால், ஏழை நாடுகளின் தலைவனாகவும், வருங்கால “வல்லரசாகவும்” தன்னைப் பீற்றிக் கொள்ளும் இந்திய ஆளும் கும்பலோ வலியப் போய், இந்த அபாயகரமான கழிவை தள்ளிக் கொண்டு வருகிறது. ஓரங்கட்டப்பட்ட கப்பல்கள் மட்டுமின்றி, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் நுகர்ந்து தள்ளும் பிளாஸ்டிக் பொருள்கள், கணினி இயந்திரங்கள் தொடங்கி அணுக் கழிவுகள் வரை, எல்லாவிதமான கழிவுகளையும் அந்நியச் செலாவணிக்காக இறக்குமதி செய்து, இந்திய நாட்டின் நிலத்தையும், நீரையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி வருகிறது. 2020-இல் இந்தியா “வல்லரசாக” மாறப் போவதில்லை; மேற்குலகின் குப்பைத் தொட்டியாகத்தான் மாறப்போகிறது!

– மு ரஹீம்
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2006.

அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !

30
தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சிவகுருநாதன்.

ளவரசன், கோகுல்ராஜ், சங்கர் வரிசையில் இன்னுமொரு ஆதிக்க சாதிவெறிப் படுகொலை !

நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தில் தேவர் சாதி பெண்ணை காதலித்ததற்காக அருந்ததிய இளைஞர் சிவகுருநாதனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் தேவர் சாதி வெறியினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தின் இளைஞர் சிவகுருநாதன், அருந்ததி சாதியைச்சேர்ந்தவர். எம்.எஸ்.சி முடித்து மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் செவிலியர் வேலை கிடைத்து பாப்பம்பட்டி-நெய்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தேவர் சாதியைச் சார்ந்தவர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன். கொலை செய்த இலட்சுமணப் பெருமாள்.
கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன். கொலை செய்த இலட்சுமணப் பெருமாள். படம் நன்றி: நக்கீரன்.

தாங்கள் காதலை பெற்றோர்களிடம்  தெரியப்படுத்தியிருக்கிறார் கஸ்தூரி. “சக்கிலிய பயலை எப்படி காதலிக்கலாம்”, என்று ஆத்திரமுற்ற பெற்றோர் பெண்ணிற்கு பணியிட மாற்றம் பெற்று செங்கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவும் பயனளிக்காமல் போகவே கடந்த 20 நாட்களாக அப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

வீட்டிலும் உணவை மறுத்து தனது போராட்டத்தை தொடர்ந்துள்ளார் கஸ்தூரி. கஸ்தூரியின் நிலையை கண்டு எரிச்சலைடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் இப்பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதென திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படியில் கஸ்தூரியின் தாய் மாமா உள்ளிட்ட உறவினர்கள் சிவகுருநாதனை தங்களிடம் வந்து பேசுமாறு அழைத்துள்ளனர். தங்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்துவிட்டதாக கருதியஅப்பாவி கஸ்தூரியும் சிவகுருநாதனை வரவழைத்துள்ளார். சிவகுருநாதனும் அது உண்மையென நம்பி மேல இலந்தைகுளம் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

கிராமத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் குறித்து போலீசாரிடம் பேசியதிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் சக்திவேல் எங்களிடம் கூறியதாவது,” பெண் வீட்டிற்கு சென்ற சிவகுருநாதனை சாதி வெறியுடன் வீட்டின் உள்ளே கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. வாசலிலேயே தடுத்து அருகில் இருக்கும் கோவிலில் வைத்து பேசிக் கொள்ளலாம் என்று அழைத்து சென்றிருக்கிறார்காள். அங்கு பெண்ணின் தந்தை, தாய் மாமா, மற்றும் சில இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பெண்ணின் தந்தை மாற்று திறனாளி, கால் ஊனமானவர்.

அவர்கள் கஸ்தூரியை மறந்துவிடுமாறும் தங்களால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் கூறி மிரட்டியிருக்கிறார்கள். சாதியைக் குறிப்பிட்டு எப்படி மகளைக் கொடுக்க முடியும் என்று சாதிவெறியோடு கூறியிருக்கிறார்கள்.

தான் படித்து நல்ல வேலையில் இருப்பதாகவும் அதே போல கஸ்தூரியும் நல்ல வேலையில் இருப்பதால் கஸ்தூரியை தன்னால் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும் என்று அவர்களிடம் சுயமரியாதையுடன் பேசியிருக்கிறார் சிவகுருநாதன்.  இப்படி அவர் விடாப்பிடியாக மறுத்து பேசவே  சாதிவெறியேறிய நபர்கள் அவரை கொலை செய்திருக்கிறார்கள். அப்பெண்ணின் மாமாவும் தற்போது சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். மாற்றுதிறனாளியான கஸ்தூரியின் தந்தை மட்டும் இக்கொலையை செய்திருக்க முடியாது.

இது வாக்குவாதத்தால் வந்த உணர்ச்சி வசப்படுதலால் செய்த கொலை அல்ல. ஊர்மானம், சாதி மானம் என்று வெறியேறி திட்டமிட்டு குழுவாக சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். கொலை நடந்த சமயத்தில் இரண்டு இளைஞர்கள் தெருவழியே ஓடியதை கிராம மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவ்விளைஞர்கள் குறித்து கஸ்தூரியின் மாமாவிடம் விசாரணை நடந்துவருவதாக சங்கரன்கோவில் டி.எஸ்.பி என்னிடம் கூறினார்” என்கிறார் சக்திவேல்.

தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சிவகுருநாதன்.
தேவர்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சிவகுருநாதன். படம் நன்றி: நக்கீரன்.

மேலும் சிவகுருநாதன் தானாக பெண்வீட்டிற்கு சென்றார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருப்பதை மறுக்கிறார் சக்திவேல். சிவகுருநாதன் மற்றும் கஸ்தூரியின் செல்போன்களை கைப்பற்றியுள்ள போலீசார் அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கஸ்தூரி மற்றும் அவர்களது வீட்டின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றிருக்கிறார் என்பதை உறுதிசெய்துள்ளதாகவும், சங்கரன்கோவில் டி.எஸ்.பி தன்னிடம் தெரிவித்த தகவலை தெரிவித்தார் சக்திவேல்.

இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் அக்கிராமத்தினரிடம் விசாரித்து கூறியதாவது ”பெண்வீட்டாரின் அழைப்பின் பேரின் சிவகுருநாதனும் அவரது நண்பர்களும் பெண்வீட்டிற்கு பேச சென்றிருக்கிறார்கள். வீட்டின் வாசலில் வைத்தே சிவகுருநாதனை கம்பியால் அடித்திருக்கிறார் பெண்ணின் அம்மா. இதை எதிர்பார்க்காத சிவகுருநாதனும் அவரின் நண்பர்களும் ஓட முயற்சித்திருக்கிறார்கள்.ஆனால் சிவகுருநாதன் மீது அடி பலமாக இருக்கவே அவரால் ஓட முடியவில்லை.

அக்கிராம் தெருக்களின் வழியே ஓடிய அவரது நண்பர்களை பக்கத்து கோனார் சாதி தெருக்கார்கள் ஏதோ திருடிவிட்டி ஓடும் நபர்கள் என பிடித்து விசாரித்திருக்கிறார்கள். பின்னர் ஆட்டோவில் ஏறி அவர்கள் சென்றதாக தெரிகிறது. அடிபட்டு சுருண்டு விழுந்த சிவகுருநாதன் பின்னர் அருகில் இருக்கும் கோவில் வாசலில் வைத்து கொல்லப்பட்டிருக்கிறார்.” என்கிறார்.

போலீசாரிடம் பேசியதிலிருந்து சக்திவேல் கூறுவதிலும், கொலை நடந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுவதிலும் சில தகவல்கள் வேறுபட்டாலும் இது ஒரு திட்டமிடப்பட்ட தேவர் சாதிவெறி கொலை என்பது மட்டும் உறுதி. தற்போது தன் உறவினர்களையும், கொலையில் ஈடுபட்ட இளைஞர்களையும் காப்பாற்றும் நோக்கில் சரணடைந்துள்ளார் கஸ்தூரியின் தந்தை லெட்சுமணப் பெருமாள்.

சிவகுருநாதன் குடும்பம்

சிவகுருநாதனின் தந்தை சின்னகண்ணு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக இருக்கிறார். அவரது இரண்டு சகோதரகள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். முதல் தலைமுறை இளைஞராக எம்.எஸ்.டி படித்து வேலை பார்த்து வரும் சிவகுருநாதன் தனது படிப்பும் வேலையும் தங்களது காதலுக்கு கைகொடுக்கும் என்று நம்பியிருக்கிறார். அதனடிப்படையில் பெண்வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். ஆனால் சாதிவெறி அவரைக் கொன்று விட்டது.

சிவகுருநாதனது தந்தையை மிரட்டி கொல்லப்பட்டவரது உடலை அவர்களது வழக்கப்படி புதைக்காமல் எரிக்க வைத்திருக்கிறது போலீசு. தலித் சாதிகளிலேயே கடை நிலையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் சிவகுருநாதனது தந்தையும் தேவர் சாதிவெறியையோ இல்லை அந்த சாதிவெறியை காத்து நிற்கும் அதிகார வட்டங்களையோ எதிர்த்து நிற்கும் நிலையில் இல்லை.

சிவகுருநாதன் ஒரு நிலையான வேலையில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்தவர். அவரது காதலும் விடலைப் பருவ காதல் அல்ல. அதே போல கஸ்தூரியும் தேவர் சாதிவெறிக்கு பெயர் போன வட்டாரத்தில் இருந்து வந்தாலும் அதை தள்ளியெறிந்து உண்மையாக காதலின் பக்கம் நின்றிருக்கிறார். இப்படி அநேக ‘பொருத்தங்களுடன்’ இருந்த ஒரு காதல் இணையை பிரித்து காதலனை கொன்றிருக்கிறார்கள் தேவர் சாதி வெறியர்கள்.

சாதி மாறி காதலித்தால் அதுவும் தலித் சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் காதலித்தால் அதை பண்பாட்டு ‘சீரழிவு’ என்று நரித்தனமாக எதிர்க்கும் ராமதாஸ்கள் நிறைந்திருக்கும் தமிழகத்தில், கோவைப் பகுதியில் கோகுல்ராஜ்களைக் கொன்று விட்டு நெல்லைப் பகுதிகளில் தெனவெட்டாக திரியும் யுவராஜ்களின் காலத்தில் சிவகுருநாதனது காதல் எப்படி நிறைவேறும்?

இந்துமதவெறியர்கள் தமது இயக்க இருப்பையும் விஸ்தரிப்பையும் அதிகரிப்பதற்கு இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்களையே நம்பியிருக்கின்றனர். அதே போன்று தமிழ் தேசியம் பேசும் இனவாதிகளும் ஆதிக்க சாதிவெறியை கண்டிக்காமல் தமிழன் என்ற பெயரில் ஆதரிக்கின்றனர். ஓட்டுக் கட்சிகளோ, அதிகாரி – போலிஸ் வட்டாரங்களோ ஆதிக்க சாதி இட்ட சட்டங்களை நிறைவேற்றும் கருவிகளாக செயல்படுகின்றனர்.

அதனால்தான் இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா? பிறப்பால் தேவர் சாதியில் பிறந்திருப்போரும், ஏனைய ஆதிக்க சாதிகளின் பெயர்களை சான்றிதழ்களில் பயன்படுத்துவோரும் இத்தகைய கொலைகளை பகிரங்கமாக கண்டிப்பதோடு, பொதுவெளியில் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும். இல்லையேல் நாம் காட்டுமிராண்டிகளின் காலத்திற்கு திரும்ப வேண்டியிருக்கும்.

– வினவு செய்தியாளர்.

தறியோட வாசத்தை மூக்கு சுவாசிச்சு கிட்டே இருக்கணும் !

0
லுங்கி நெசவுத் தொழிலாளி உதாரணப்படம்

“நான் ஏழு வயசுல நெசவு தொழிலுக்கு வந்தேன். இந்த ஊருக்குள்ள தொழில்ல என்ன அடிச்சுக்க யாராலும் முடியாது. நூலுக்கு பாவு போட்றதுல இருந்து தறியில உள்ள ஆசாரி வேலை மொதக்கொண்டு நானே பாத்துருவேன். தறி சத்தத்த கேட்டே எந்த எடத்துல பிரச்சனையின்னு சொல்லிருவேன். இருந்தாலும் இந்த தொழில நம்பி நிதமும் வயிறார சாப்பிட முடியுமான்னா முடியாது. பல நாள் பட்டினி கெடந்த அனுபவமெல்லாம் உண்டு. சொந்தமா தறி வச்சுருக்கேன். ஆனா சக்திக்கு மீறி கடனாளியா இருக்கேன்.”

இரண்டு தலைமுறை நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர் 32 வயதான குமார். பல வருடங்கள் கூலி நெசவுக்கு போனவர் தற்போது சொந்த தறியில் நெய்கிறார். கூட்டுறவு சங்கதில் உறுப்பினராக இல்லையென்றாலும் அங்கிருந்து வரும் ஆர்டர்களுக்காக நெசவு நெய்கிறார். ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் தறியே பெரும் இடத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. தறி ஓசையை தாலாட்டாக கேட்டு வளரும் குழந்தைகளுக்கு படுக்குமிடமே அறையின் பாதையாக இருக்கும் இடம்தான்.

“இது போல எத்தன நாளைக்கி பட்டினி கெடக்க முடியும். பல பேர் நெசவ விட்டுட்டு சமையல் மாஸ்டர், சப்ளையருன்னு வேற வேலைக்கி போறாங்க. எத்தன கஸ்டம் வந்தாலும் என்னால போக முடியல. இந்த தொழில  நேசிக்கிறேன். புடவை நெய்யும் பேது ஒரு புள்ளி மாத்தி வந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது அம்மா.”

குடும்ப உழைப்பில் இயங்கும் நெசவு தொழில் விளக்கப்படம்
குடும்ப உழைப்பில் இயங்கும் நெசவு தொழில் – மாதிரிப் படம்

“மனைவி உழைப்பையும் சேத்துதான் என்னால இந்த தொழில உயிரோட வச்சுருக்க முடியுது. மத்த வேலைகளப் போல இல்ல நெசவு. தறி குழிக்குள்ள எறங்கிட்டா ஐம்புலனும் வேலை செய்யனும். ஒரு நூல் இழை மாறாம கண்ணு பாக்கணும். தறியோட ஒவ்வொரு சத்தத்தையும் காது கேட்கணும். குழந்தையப் போல தறியில கையி துறுதுறுன்னு விளையாடணும். நெய்யும் போது மேல் வேலைக்கி உதவியாளர வாய் கூப்பிட்டுட்டே இருக்கனும். தறியின் வாசத்தை மூக்கு சுவாசிச்சுட்டே இருக்கனும். இது மட்டும் இருந்தா பத்தாது கலை ரசனையும் வேணும்.”

“தறி நெய்றத விட அதுக்கு மேல் வேலைதான் அதிகம் செய்யனும். என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் தறியில ஒரு நூல் அறுந்துட்டா ஒடனே ஓடி வந்து எடுத்து தருவா என் மனைவி. இருந்தும் என் முன் கோபத்துல எத்தனையோ தடவ அவள நான் திட்டியிருக்கேன்.”

இடையில் புகுந்தார் மனைவி அஞ்சலி. “நூல் பாவு போட மேல் ஆள் வச்சுக்க முடியாம நாங்க ரெண்டே பேருதான் போடுவோம். எத்தன தடவ சொல்லிக் கொடுத்தாலும் ஏதாவது தவறு செஞ்சுருவேன். கூடவே வேலை பளு கடன் சுமை அதனால கொஞ்சம் கத்துவாரு. ஒரு பட்டுப் புடவை உருவாகனுன்னா மொத்த குடும்பமும் பாடுபடனும். என்னால முடிஞ்சத செய்வேன்.”

“எங்க வீட்டுக்காரரு தறி அறுக்கும் போது கொஞ்சம் குடிப்பாரு. மத்தபடி எந்த கெட்ட பழக்கமும் இல்ல. இருந்தும் எங்களால கடன் இல்லாம இருக்க முடியல. சாண் ஏறுனா முழம் சறுக்குது. மழை காலத்துல நூல் இழையெல்லாம் ஈரப்பதமாயி தறி ஓடாது. வேலையும் சில நேரம் இருக்காது. வேலையை சேத்து செஞ்சு விட்ட இடத்தை நெரப்ப முடியாது. அதுக்கு உண்டான நேரத்த குடுத்து ஒவ்வொரு இழையாதான் பாத்து பாத்து நெஞ்சாகனும். அதுக்குள்ள வட்டியே கடன் தொகையை தாண்டிரும். சொந்த தறியில விடியவிடிய கூட நெய்யலாம். கூலிக்கு போறவங்க பாடு ரொம்ப மொசம்.”

பல ஆயிரங்களில் மின்னும் பட்டாடை
பல ஆயிரங்களில் மின்னும் பட்டாடை

“எங்க அப்பா நூல் தறி கைலி, பாய் நெய்வாரு. இவருதான் பட்டுத்தறி நெய்றவரு மாப்பிள்ளையின்னதும் பட்டு புடவை அவர் கையால நெஞ்சு தருவாறுன்னு எதிர்பாத்தேன். 5000 ரூபாய்க்கு வாங்கிதான் கொடுத்தாங்க. இனியாவது தருவாரான்னுஆசையா இருக்கு.” என்றார் ஏக்கம் கலந்த காதலுடன் தன் கணவனை பார்த்தபடி.

“எனக்கும் ஆசைதான். ஆனால் சத்தியமா என்னால முடியாது” என்றார் குமார்.
“என்னோட அஞ்சு வயசு பொண்ணுக்கு ஒரு பட்டு பாவாடை நெஞ்சு குடுக்கனுன்னு ஆசை. ஆனா கொழந்தை ஆசையா கேக்குற தீனியையே வாங்கி கொடுக்க முடியல. பட்டுல பாவாடையோ, சேலையோ நெய்ய அதுக்கான பொருள் வாங்க ஆயிரக் கணக்குல மொத்தமா அத்தன பணத்துக்கு நான் எங்க போக. சொன்னா நம்ப மாட்டிங்க. எங்க கல்யாணத்துக்கு எடுத்த அந்த ஒரு பட்டுப் புடவையையும் தாங்காத வறுமைக்கி வித்து சாப்பிட்டோம்.”

“இந்த வருசம் (2016) வந்த மழை வெள்ளத்துக்கு யார் வீட்டுலயும் தறி ஓடல. ரெண்டு மாசம் முடங்கி போச்சு. பத்து வருசமா வேலை செஞ்ச முதலாளிக்கிட்ட போயி குடும்பமே பசி பட்டினியா இருக்குது ஏதாவது உதவி செய்ங்கன்னு கேட்டதுக்கு ஏங்கிட்டயா நீ வேலை செய்றன்னு அவமான படுத்திட்டு 500 பணம் கொடுத்தாரு. எங்க கஷ்ட காலம் வாங்கிக்க வேண்டிய நெலமை.”

“சொந்தமா தறி வச்சுருந்தாலும் கூலிக்கு வேலைக்கி போனாலும் தறியில உக்கார்ர எங்க வீட்டு அடுப்பு பல நாள் அணைஞ்சுரும். ஆனா அதை விக்கிற முதலாளிங்க கார், பங்களான்னு பளபளப்பா இருக்கானுங்க. அவனோட பந்தாவுக்கும் பவுசுக்கும் நாமதான் காரணம்னு தெரியுது. என்ன செய்ய முடியும். காசு அவங்கிட்டதானே இருக்கு கை நீட்டி கடன் வாங்கிதான் ஆகனும். அவன் சொல்றத கேட்டு அடிமையா வேலை செஞ்சுதான் ஆகனும்.”

“கூட்டுறவு சங்கத்துல உறுப்பினரா இருக்கறவங்களுக்கு விசைத் தறி மோட்டார் கொடுக்குறாதா சொல்றாங்க. நெசவாளர் குடும்பத்துக்கு 200 யூனிட் கரண்ட் இலவசம்னாங்க. கரண்டாபீசுக்கும் வீட்டுக்கும் அலஞ்சு பாத்துட்டேன் கெடைக்க மாட்டேங்குது. எதுவும் ஒழுங்கா உரியவனுக்கு போய் சேர்ரது இல்ல.”

“அவ்வளவு ஏன்! இந்த மாசம் தேசிய கைத்தறி நெசவாளர் சிறப்பு விருது கொடுத்தானுங்க. அங்கையும் அரசியலுதான். ஆளுங்கச்சிய சேந்த கட்சிக்காரங்க அவங்களுக்கு வேண்டிய கூட்டுறவு சங்கத்த சேந்த அம்மாவுக்கு மோடி கையால விருது வாங்கி கொடுத்தானுங்க. அந்தம்மா என்னமோ தறி குழிக்குள்ள உக்காந்து நெஞ்சாமாதிரி. அதுக்கு ஒரு பாராட்டு விழா காஞ்சிபுரத்துல வச்சானுங்க. எவ்வளோ ஏக்கத்தோட போனோம் தெரியுமா? நமக்கு பரிசு குடுக்க வேண்டாம். ஒரு துண்டு போட்டு பாராட்டி ஊக்குவிக்கலாம்.” என்றார்.

அடுத்து, சோமசேகரன் என்ற 70 வயது நூல் தறி நெசவாளரை பார்க்க அவர் வீட்டுக்கு போனோம். தறியும் நடைபாதையும் கொண்ட சின்ன அறையில் கையை தூக்கினாலே இடிக்கும் அஸ்பெட்டாஸ் கூறைக்கு கீழே கைலி நெய்து கொண்டிருந்தார் அந்த பெரியவர். தறிக்குள் போகவோ வெளியே வரவோ முடியாத இட நெருக்கடிக்குள் இருந்தது அறையின் அமைப்பு. அவரை நெருங்கி பேசலாம் என அருகில் போன நான் அதிர்ந்து விட்டேன்.

லுங்கி நெசவுத் தொழிலாளி விளக்கப்படம்
லுங்கி நெய்யும் நெசவுத் தொழிலாளி – மாதிரிப்படம்

வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது. முறையாக வேலை இருந்தால் ஒரு நாளைக்கி 80, 100 ரூபாய் கூலி கிடைக்குமாம். இத்தனை வயது உழைப்பில் பிள்ளைகளுக்கு உரிய வயதில் முறையான திருமணம் கூட செய்து கொடுக்க முடியாதவராய் வயித்து பாட்டுக்கு தறி தொழிலோடு போராடுகிறார்.

“ஒரு கைலி நெய்ய மூனு நாள் ஆகும். வீட்டம்மா பரூடத்துல நூல் ஏத்தி திரிச்சு தருவாங்க. நெய்ய தேவையான பொருள் செலவு போக ஒரு கைலிக்கி 250, 300 கெடைக்கும். கைலியின் அளவை பொருத்து 400 முதல் 600 வரை குடுப்போம். தறி தொழிலே அழிஞ்சு போச்சு. இந்த வயசுல வேற வேலைக்கு போக முடியாது. என்ன செய்றதுன்னு தெரியல போயிட்டு இருக்கு பொழப்பு.”

“அச்சு மரம் பிடித்த கை இன்னைக்கி சாம்பார் வாளி பிடிக்குது” என்றார் நெசவுத் தொழிலைக் கைவிட்ட மூர்த்தி.

“எந்தங்கச்சி தறி மிதிப்பா, நூல் இழைப்பா, நெசவுல எல்லா வேலையும் தெரியும். நொடிஞ்சுப் போன இந்த தொழிலாலும், குடிகார புருசனாலும் பிள்ளைகளுக்கு ஒரு வேளை சாப்பாடு ஒழுங்க போட முடியல. தறி நூலைக் கூட அடகு வச்சுட்டு குடிக்கிறான் அவ புருசன். இப்ப ஓட்டல்ல பாத்திரம் கழுவுற வேலைக்கி போறா. எந்த நேரமும் தண்ணியில ஊறி கையும், காலும் பொணம் போல இருக்கு. கால் நரம்பு சுருட்டு நோய் எந்தங்கச்சி உட்பட பல பெண்களுக்கு தொழில் சார்ந்த நோயாவே இருக்கு.”

“முக்கியமா மூகூர்த்த வேலைக்கி நெசவாளிங்க போறதே வயிரற சாப்பிட்டு மிச்சம் மீதி இருந்தா வீட்டுக்கு பொண்டாட்டி பிள்ளைக்கி எடுத்துட்டு வரலான்னுதான். கல்யாண வீட்டுல போட்ற பலகாரமெல்லாம் இந்த வீட்டு பிள்ளைங்க கண்ணுல கூட பாத்துருக்காது. புதையல் வருமான்னு எதிர் பார்க்கும் மன நிலையில குழந்தைங்க பெத்தவங்கள பலகாரத்துக்காக எதிர் பார்ப்பாங்க. எல்லாத்த விட கொடுமையான விசயம் அன்னதான சாப்பாட்டுக்கு கோயில்ல காத்துருப்பதும், வயசானவங்க கடைத்தெருவுல செலவுக்கு கை நீட்டுறதும் பாக்க முடியலிங்க.”

உழைக்கிற வரைக்கும் கூடவே இருந்த தன்மானம் உழைப்பை பிடுங்கிய பிறகு பறி போய் விட்டது. மன்னர் காலம் முதல் முதலாளி காலம் வரை கௌரவத்தின் அடையாளமாக பட்டு நெய்து கொடுத்த நெசவாளர்களின் வாழ்க்கை நைந்து போன கந்தல் துணியாக உள்ளது.

பட்டுக்கு பெயர் போன காஞ்சியில் தான் பல்லவர் காலத்து வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் உள்ளன. கோயில் கட்டுமானமும், கலை நுட்பமும் நம் கண்ணை கவரும் நேரம், அதில் ஈடுபட்டோரின் உழைப்பின் வலியும் உயிர் பலியும் நாம் அறியோம். அப்படிதான் பளபளக்கும் பட்டுக்கு பின்னே நைந்து கிடக்கிறது நெசவாளர்களின் வாழ்க்கை.

குரங்கிலிருந்து தோன்றி அம்மணமாக திரிந்த மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியில் உடையும் முக்கியமானது. அதனால்தான் உழவும், நெசவும் எல்லா நாடுகளிலும் அந்தக் காலத்தில் முக்கியமான தொழில்களாக இருந்தன. உழவன் ஏர் பிடித்தான். நெசவாளன் தறி பிடித்தான். ஆண்டிகளின் கோவணமானாலும், அரசனின் பட்டாடையானாலும் அடிப்படையில் மனிதனின் மானம் காக்கும் மகத்தான தொழிலாக நெசவு இருக்கிறது. இன்றைக்கு நெசவை பெரும் எந்திரங்களும், ஆலைகளும் செய்து வந்தாலும் கையால் நெய்யப்படும் தறிகளே அவற்றின் தோற்றம். அந்த நெசவாளர்களோடு ஒரு நாள் செலவழித்த போது உடைகளின் கதை புரிந்தது. நெய்பவர்களின் வியர்வை தெரிந்தது.

தமிழகத்தில் மற்ற பகுதி மக்களை விட பொருளாதாரத்தில் இத்தகைய கைத்தறி நெசவாளர்கள் மிகவும் வறிய நிலையில் காலம் தள்ளுகிறார்கள். சோத்துக் கஞ்சியே அவர்களது வீட்டில் ஆடம்பர உணவு. கோழித் தலையும், காலும் அவர்களுக்கு அசைவ விருந்து. தி நகர் கடைகளில் பட்டுச் சேலைகளை விதவிதமான தேடி எடுக்கும் கைகள் அந்த பட்டின் பின்னே வழியும் ரத்தத்தை ஒரு போதும் அறியாது.

பட்டு நெய்யும் தொழிலாளிகளுக்கு நைந்து போன கைலிதான் உடை! இத்தகைய சர்வ வறுமை வாழ்க்கை இல்லாமல் சர்வ இலட்சணப் பட்டு இல்லை!

– சரசம்மா

குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி

2
நுள்ளிவிளை போராட்டம்

பேயன்குழி – நுள்ளிவிளை சந்திப்பு பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கூறி அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி அமைப்பின் தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

டாஸ்மாக் கடை முற்றுகையிட திரளும் மக்கள்
டாஸ்மாக் கடை முற்றுகையிட திரளும் மக்கள்

தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் முற்றுகை இவற்றைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை இடம் மாற்றி விடுவதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. டாஸ்மாக் மண்டல மேலாளர் முற்றுகை, மீண்டும் டாஸ்மாக் கடைகள் முற்றுகை என்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடந்த அனைத்து போராட்டங்களிலும் போலீசின் மூலம் அச்சுறுத்துவது, அதிகாரிகள் அலட்சியப்படுத்துவது என்ற நிலையில் துளியும் சோர்வின்றி, எங்களை சீரழிக்கின்ற இரு டாஸ்மாக் கடைகளையும் மூடும்வரை போராடுவோம் என்ற உறுதியுடன் 04-10-2016 அன்று பேயன்குழி – நுள்ளிவிளை டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரம், மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியின் அணி திரட்டலில் முற்றுகையிட மக்கள் தயாராயினர்.

கடந்த கால போராட்டங்களின் போது கிராமம் கிராமமாக, தெருத்தெருவாக, காக்கிச் சட்டை போலீசு மூலமும் உளவுத் துறை போலீசு மூலமும், டாஸ்மாக் கடைகளின்  முன்பு நூற்றுக் கணக்கான போலீசை குவித்தும் மக்கள் திரளாமல் தடுக்க எடுத்த முயற்சியில் தோற்றுப் போன அரசு இம்முறை மக்களிடம் தங்கள் தடுப்பு நடவடிக்கைள் எடுபடாது என்பதை புரிந்து கொண்டு இரு கடைகளுக்கு மட்டும் கடுமையான பாதுகாப்பு கொடுத்தது.

இரு கடைகளையும் நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் திட்டமிட்டபடி 04-10-2016 அன்று காலை 12.00 மணிக்கு தலைமையில் முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் சென்று விடுவார்கள் என்று நினைத்த போலீசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடையை மூடினால்தான் கலைந்து செல்வோம் என்று கூறியவர்களை எளிதாக கைது செய்ய முடியவில்லை. பெண்கள் பலரையும் பலவந்தமாக தூக்கிச் சென்றே கைது செய்தார்கள். கைது செய்து மண்டபம் அழைத்து சென்றபோதும் வேனிலிருந்தும் மக்கள் இறங்க மறுத்து விட்டனர். இறங்கி மண்டபத்தினுள் செல்லாமல் மைதானத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். போலீசின் மிரட்டலுக்கும், கெஞ்சலுக்கும் சிறிதும் அடிபணிய மறுத்து மைதானத்திலேயே அமர்ந்து தொடர்ந்தது போராட்டம். வயதான பெண்களை சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்க மறுத்து மிரட்டியது போலீசு. மைதானத்தில் அமர்ந்து போராடுவது பொது மக்களுக்கு தெரிந்து விடாதபடி வாசலில் வாகனத்தை நிறுத்தி மறைத்தனர் போலீசார்.

கடையை முற்றுகயிட்ட பெண்கள்
கடையை முற்றுகயிட்ட பெண்கள்

“உருவத்தைத்தானே மறைக்க முடியும், குரலை மறைக்க முடியுமா இவனுகளால” என்று பாட்டி ஒருவர் இயல்பாகக் கூறிக் கொண்டே முழக்கத்தைத் தொடர்ந்தார். மதியம் உணவு உண்ண மாட்டோம் என்று மக்கள் அறிவித்து விட்டனர். இம்முறை பெயர், முகவரி கேட்பதை போலீசாரே தவிர்த்து விட்டனர். கடந்த முறைகளில் மக்கள் தர மறுத்திருந்தனர் என்ற பாடம் அவர்களுக்கு நினைவு வந்திருக்கும்.

உடல்நலம் குன்றியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிஸ்கட்டுகளை வாங்கி வந்திருந்தனர் ஊர் நிர்வாகிகளும், ஆதரவாளர்களும். பிஸ்கட்டுகளை கொடுக்க விடாமல் அது ஏதோ வெடிகுண்டு போல தீவிரமாக பாதுகாத்தது போலீஸ். அதையும் மீறி பிஸ்கட்டை கொடுத்து விட்டதால், பயங்கரவாதிகளை கையும் களவுமாக பிடித்து விட்டதாக எண்ணி மிரட்டத் தொடங்கிய போலீசாரிடம், “கொள்ளைக் காரனிடமும், கொலைகாரனிடமும், கற்பழித்தவனிடமும் காட்டாத வீரத்தை பிஸ்கட் கொடுத்தவர்களிடம் காட்டுகிறீர்கள், நாங்கள் குற்றவாளிகள் அல்ல, போராளிகள். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தனர், மக்கள்.

“நீங்கள் உங்க வீட்டு மாப்பிள்ளைக்கு அடங்காதவர்கள்தானே” என்று ஆணாதிக்க திமிரில் வக்கிரமாக பேசிய ஒரு சார்பு ஆய்வாளாரிடம், “உன் வீட்டுப் பெண்களுக்கும் சேர்ந்துதான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் கண்ணியமாக போராடுகிறோம். நீ எப்படி இவ்வாறு பேசலாம், மரியாதையாகப் பேசு” என்று எச்சரித்தனர், பெண்கள்.

மாலை 5.30 மணிக்கு, “உங்களை விடுவித்து விட்டோம்” என்று அறிவித்தனர் போலீசார். “நீங்கள் விடுவித்தாலும் கடையை முடாமல் வீட்டுக்கு செல்வதில்லை. சிறையில் அடைத்தாலும் இரு கடைகளையும் அடைக்காமல் வீட்டுக்குச் செல்லப் போவதில்லை” என்று மக்களும் திருப்பி அறிவித்தனர்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் செல்கின்றோம்” என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்து சென்று விட்டனர் போலீசார். இரவு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் தொடர்ந்தது. “நாங்கள் எத்தனை நாளானாலும் இங்கிருந்து போராடுவோம். அதிகாரிகளா, நாங்களா என்று பார்த்து விடலாம்” என்று போராட்டம் வேகமடைந்தது.

மண்டபத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள்
மண்டபத்திற்கு வெளியே திரண்ட பொதுமக்கள்

போராட்டத்திற்கு ஆதரவளித்து மண்டபத்திற்கு வெளியில் நின்ற ஊர் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களை நேரடியாக போராட்டத்திற்குள் வரவழைத்து விட்டது, அதிகாரிகள் போலீசாரின் இந்த நடவடிக்கை. போராட்டம் விரிவடைந்தது. மேலும் பல ஆண்களும், பெண்களும் வந்தனர். இம்முறை முன்னின்று அணிதிரட்டியது வெளியில் நின்று ஆதரவளித்த ஊர் நிர்வாகிகளும், உறவினர்களும், பிரமுகர்களும். போராட்டம் அவர்களுடையதாகவும் மாறியது.

பதறியடித்து ஓடி வந்தனர் விட்டுச்சென்ற போலீசார். அணிதிரண்டு வந்த மக்கள் மண்டபத்தில் உள்ளவர்களுடன் இணைந்து விடாதவாறு தடுத்து விட்டனர். தாசில்தார் வந்து கொண்டிருப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், மக்களின் கோபத்தை, ஆத்திரத்தை தடுக்க இயலவில்லை. டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி மண்டப வாசலிலேயே முழக்கமிட்டனர், உறுதியுடன் போராடினர். உள்ளாட்சி தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்களையும் இழுத்துக் கொண்டது இந்தப் போராட்டம்.

வரமுடியாது என்று ஆணவத்துடன் இருந்த அதிகாரிகளை  வரவழைத்து விட்டது மக்களின் உறுதி. தாசில்தார் வந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். “கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்” என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை கேள்வி கேட்டனர் பெண்கள்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் “அடுத்த ஒரு மாதத்தில் ஒரு கடையையும் அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் அடுத்த கடையையும் இடம் மாற்றி விடுவதாக ஆட்சியர் என்னிடம் உறுதி கூறியுள்ளார்” என்று கூறியும் யாரும் ஏற்கத் தயாராயில்லை. எஸ்.பி நேரில் வந்தாக வேண்டிய சூழல். எஸ்பி ஃபோனில் கூறியதை நேரில் வந்து கூறியும் யாரும் ஏற்கவில்லை.

“நீங்கள் நாளையே மாற்றலாகி சென்று விட்டால் நாங்கள் யாரிடம் போய்க் கேட்போம்? இதற்கு முன்பும் மாவட்ட  டாஸ்மாக் அதிகாரி எழுதிக் கொடுக்கும் போது நானே கடையை மாற்றும் அதிகாரம் பெற்றவர் என்று கூறித்தான் எங்களுக்கு எழுதிக் கொடுத்தார். இன்றுவரை அவர் பதில்கூட சொல்லவில்லை.” “நான் மாவட்ட அதிகாரி கூறுகின்றேன்” என்று எஸ்.பி கூறியதும். “இதற்கு முன்பு எழுதிக் கொடுத்ததும் மாவட்ட அதிகாரிதானே” என்று மக்கள் மடக்கினர்.

“தற்பொழுது இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடுகின்றோம்” என்று கூறிப் பார்த்தார். இரண்டு கோரிக்கையையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை மக்கள். வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியரை செல்பேசியில் அழைத்து பேசிய எஸ்.பி, “ஒரு கடை இன்றுமுதல் மூடப்படுவதாகவும், இன்னொன்று இன்றிலிருந்து (04-10-206) 30 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு விடும் என்றும் கலெக்டர் கூறி விட்டார்” என்று கூறினார்.

“கலெக்டர் கூறுவதை நாங்கள் எப்படி நம்புவது? எழுதிக் கொடுங்கள். இன்றே மூடுவதாகக் கூறிய டாஸ்மாக் கடையை இப்போதே சீல் வையுங்கள்” என்று கலெக்டரின் வாக்குறுதியை கேள்விக்குள்ளாக்கினர். எஸ்.பி “இதற்கு நான் பொறுப்பு, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று நான் கடிதம் கொடுத்து விடுகின்றேன். நீங்கள் கஷ்டப்பட்டு போராடுவதை புரிந்து கொண்டதால் உங்களுக்கு உதவி செய்யவே நான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்” என்றும் கூறினார். மேலும் இதை ஒலிபெருக்கி மூலம் அனைவரிடமும் பகிரங்கமாக அறிவித்தார்.

“இந்த வாக்குறுதிக்கு மாறாக கடைகள் திறக்கப்பட்டால் நாங்கள் மீண்டும் போராடுவோம்” என்று எஸ்.பியிடம் அறிவித்து விட்டு இரவு 10.30 மணியளவில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. கலைந்து செல்லாம்ல உடனே ஒன்று கூடி, “இது முழு வெற்றியல்ல, அரசாங்கம் சொன்னது போல் நடந்து கொள்ளுமா என்று தொடர்ந்து கண்காணிப்போம்! இருகடைகளும் நிரந்தரமாக அகற்றப்படும்வரை தொடர்ந்து போராடுவோம், நாளை கடை திறக்கப்பட்டால் மீண்டும் கடையை முற்றுகையிடுவோம்” என்று முடிவெடுக்கப்பட்டது. மறுநாள் இருகடைகளும் திறக்கப்படவில்லை. 06-10-2016 அன்று எஸ்.பி கூறியபடி ஒரு கடை மூடப்பட்டுள்ளது.

பெண்கள் பெரும்பான்மையாகவும், குறைந்த எண்ணிக்கையில் ஆண்களின் கன்ய குமரி டாஸ்மாக் முற்றுகை (1)பங்களிப்புடன் தொடங்கப்பட்ட போராட்டம் சாதி, மதம், எல்லைப் பிரச்சனை, மக்கள் அதிகாரம் மீதான தீவிரவாத அமைப்பு என்னும் அவதூறுகள் இவை அனைத்தையும் உடைத்து, பெருமளவு ஆண்களையும் இணைத்து, இந்து முன்னணி, கிறிஸ்தவ மத அமைப்புகள் இவற்றின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தி, மக்கள் போராட்டத்தின் மூலம் அதிகாரிகளின் ஆட்சியாளர்களின், அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணிய வைப்பதன் மூலமே மக்கள்  தங்கள் உரிமைகளை பெற முடியும் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கின்றது. இதை புரிந்து கொண்டு எல்லா உரிமைகளையும் மீட்டெடுக்க விடாப்பிடியாக போராடுவது ஒன்றே தீர்வு என்று மக்கள் தயாராகி வருகின்றனர். இதை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதால்தான் மக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பு என்று அரசாங்கத்தால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டனர்.

முன்னதாக 21-09-2016 அன்று நடந்த முற்றுகை போராட்டம் பற்றிய செய்தி

ன்னியாகுமரி மாவட்டம், பேயன்குழி – நுள்ளிவிளை பகுதியில் அருகருகே அமைந்துள்ள இரு டாஸ்மாக்கடைகளை நிரந்தரமாக மூடுமாறு கூறி, மக்கள் அதிகாரம் மற்றும் டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணியினர் 12-04-2016-ம் தேதி இரு கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தை பற்றி சிறிதும் அஞ்சாமல் நள்ளிரவு வரை விடாப்பிடியாக வீரமிகு போராட்டத்தை பெண்களும், ஆண்களும் நடத்தியதால் தேர்தல் முடிந்ததும் (ஜூன் 20, 2016) இரு கடைகளையும் அந்த இடத்திலிருந்து அகற்றி விடுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை இருகடைகளும் அதே இடத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

உழைக்கும் மக்களிடம் உள்ள நேர்மையும், வாக்கு நாணயமும், அதிகாரிகளிடமும், அதிகாரவர்க்கத்திடமும் இருக்காது என்பதையும், டாஸ்மாக்கை நமது பகுதியில் இயங்க விடாமல் தங்கள் அதிகாரத்தை போராட்டத்தின் மூலம் நிறுவுவது மூலமே டாஸ்மாக்கை மூட முடியும் என்பதையும் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்து கொண்ட பெண்களும், ஆண்களும், அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகினர். தீவிரவாதிகள் போராடுகிறார்கள், கிறிஸ்தவர்கள் போராடுகிறார்கள், எல்லைப் பிரச்சனைக்காகப் போராடுகிறார்கள் என்று பரப்பிய பொய் அவதூறுகளையெல்லாம் முறியடித்து உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து மீண்டும் 21-09-2016-ம் தேதி பேயன்குழி – நுள்ளிவிளை கடைகளை முற்றுகையிட்டனர்.

போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவே கிராமம் கிராமமாக தெருத்தெருவாக, உளவுத்துறை போலீசார் சுற்றி திரிந்தும் போராட்டத்திற்கு தயாரான திரளான பெண்களையும், ஆண்களையும் தடுக்க இயலவில்லை. போராட்டம் அறிவிக்கப்பட்ட அன்று வழிநெடுக காலை நூற்றுக்கணக்கான போலீசை குவித்து டாஸ்மாக் கடைகள் முன்பு பெண்கள் கூடி விடாதவாறு பெண்களை தடுக்க எடுத்த முயற்சியால் காக்கிச்சடை போலீசாருக்கும் தோல்வியே மிஞ்சியது.

போலீசின் அச்சுறுத்தலையும் மீறி டாஸ்மாக்கடையின் முன்பு திரளான பெண்களும், ஆண்களும் கூடி முற்றுகையிட்டனர்.

“போராட்டத்திற்கு அனுமதியில்லை, கலைந்து செல்லுங்கள்” என்று காவல்துறை அறிவித்தது.

“உங்கள் அனுமதி எங்களுக்கு தேவையில்லை” யென்று போலீசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினர் பெண்கள்.

“உங்கள் பிரதிநிதிகளை கலெக்டரிடம் அழைத்துச் செல்கின்றோம், கோரிக்கையை அவரிடம் கூறுங்கள்” என்று காவல்துறை கூறியது.

“கலெக்டரை நாங்கள் ஏன் சென்று பார்க்க வேண்டும். அவரை வேண்டுமானால் இங்கு வரச்சொல்லுங்கள், நாங்கள் பலமுறை அவரை சந்தித்துவிட்டோம். இனிமேல் சந்திக்க ஒன்றுமில்லை, கடையை மூடுமாறு கலெக்டரிடம் சொல்லுங்கள்” என்று போலீசிடம் கூறிவிட்டனர் பெண்கள்.

சிறிது நேரத்தில் பெண்களையும், ஆண்களையும் கைது செய்து மண்டபத்தில்சிறை வைத்தது போலீசு. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்து அழைத்து சென்ற போதும் கூட போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஏராளமான பெண்கள் வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை திருப்பி அனுப்பியது போலீசு.

“மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இங்கு வந்து தான் எழுதிக் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கூற வேண்டும். அதுவரை உணவருந்த மாட்டோம், பெயர், முகவரி தரமாட்டோம்” என்று கோரிக்கை வைத்து மண்டபத்திலும் போராட்டம் தொடர்ந்தது.

“கடையை மூடுங்கள் என்று கோரவில்லை. உங்களிடம் கோரிக்கை வைப்பதும் வீண, கடையை நாங்களே மூடிக் கொள்கின்றோம்” என்று தங்கள் கோரிக்கையையும் நிலைப்பாட்டை மண்டபத்தில் காவல் துறையினரிடம் தெளிவுபடுத்தினர் பெண்களும், ஆண்களும்.

மாலை 5 மணியாகியும் அதிகாரிகள் யாரும் வந்து சந்திக்கவில்லை.

“நாங்கள் தகவல் கொடுத்துவிட்டோம், தொடர்ந்து முயற்சி செய்கின்றோம், ஆனால் அதிகாரிகள் வர மறுக்கிறார்கள், நாங்கள் என்ன செய்வது, நாங்கள் பலமுறை இரண்டு கடைகளையும் மூடுமாறு அறிக்கை எழுதி அனுப்பியுள்ளோம், இன்று காலையும் கூட கலெக்டருக்கு நிலைமையை தெரிவித்துள்ளோம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வராமல் மீண்டும் மீண்டும் எங்களை அனுப்பி வைத்து விடுகிறார்கள், நாங்கள் என்ன செய்வது” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

500 கடைகளை மூடப்படும் என்ற அறிவிப்பு வந்த காலகட்டத்தில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்று “எங்களுக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றீர்களா” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்று கேட்டபோது, “இரு கடைகளையும் மூட வேண்டும் என்று நாங்கள் மேலே எழுதி அனுப்பிவிட்டோம்” என்று அங்குள்ள ஊழியர்கள் கூறினர்.

போலீசார் கூறியது, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியது, அதிகாரி வந்து பதில் கூற வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வராதது ஆகிய நிலைமைகளை மண்டபத்தில் வைத்து விவாதித்தனா. பெண்கள் உறுதியாகவும், விடாப்பிடியாகவும், போலீசுக்கு அஞ்சாமலும் கடைகளை நடத்த விடாமல் போராடினால் மட்டுமே டாஸ்மாக் சாராயக்கடைகளை மூட முடியும் என்பதையே அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் நடத்தைகள் நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துவதை சொந்த அனுபவத்தில் புரிந்து கொண்டனர்.

மேலும், “கடையை மூட வேண்டும் என்று அறிக்கை மேலே உள்ளவர்களுக்கு எழுதியதாக டாஸ்மாக் அதிகாரிகளும், போலீசும் கூறுகின்றனர், மேலே உள்ளவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்று அவர்களே கூறுகின்றனர் அப்படியெனில் அந்த மேலே உள்ளவர்கள் யார்? மேலே உள்ளவர்கள் என்றால் சாராய ஆலை முதலாளிகளா? நம்மை சாராய ஆலை முதலாளிகள் தான் ஆள்கின்றார்களா” என்றும் பெண்கள் கேள்வி எழுப்பினர்.

“போலீசுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம்! எத்தனை முறையானாலும் போராடுவோம்! குடும்பத்தினரையும், குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு போராடுவோம்! சிறை சென்றும் போராடுவோம்! கடைகளை மூடும் வரை விடாப்படியாக போராடுவோம்” என்று சூளுரைத்து மாலை 6.00 மணியளவில் அன்றையதினம் கலைந்து சென்றனர் திரளான பெண்களும், ஆண்களும்,

“மக்கள் அதிகாரத்தின் தலைமையின் கீழ் ஏன் போராடுகிறீர்கள், அரசியல் கட்சிகளை அழைத்து போராடுங்கள், எம்.எல்.ஏ-வை கூப்பிடுங்கள்” என்று திட்டமிட்டே உள்நோக்கத்துடன் கூறி வருபவர்களிடம், பிரச்சாரம் செய்பவர்களிடம், “நீங்கள் கூறுபவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக போராட தயாராகவில்லை, மக்கள் அதிகாரம் மக்களுக்கான அமைப்பு, நாங்கள் தான் மக்கள் அதிகாரம்” என்று பதிலடி கொடுத்து அடுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் பெண்கள்.

போராட்டப் படங்கள் : பெரிதாக பார்க்க படங்களை அழுத்தவும்!

போராட்டம் குறித்து வந்த பத்திரிகை செய்திகள்: பெரிதாக பார்க்க அழுத்தவும்

இவண்,
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு,
கன்னியாகுமரி மாவட்டம்.

அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !

6
போயஸ் தோட்டமோ, கொட நாடு எஸ்ட்டோ எங்கும் மர்மம்தான்!
போயஸ் தோட்டமோ, கொட நாடு எஸ்டேட்டோ எங்கும் மர்மம்தான்!

மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது ஏன்? இன்று வரை இந்தக் கேள்விக்கான பதில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடும் அதிகாரப் பூர்வ செய்தி அறிக்கைகளில் தள்ளாடுகிறது. ஆரம்பத்தில் நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல், இரண்டாம் நாளிலேயே வழக்கமான உணவு எடுக்கிறார் என்று கூறியது பிரதாப் ரெட்டியின் மருத்துவமனை.

சரி, ஏதோ சாதா காய்ச்சல் அதற்கு சிறப்பு சிகிச்சை எடுக்க சென்றிருக்கிறார் என்றார்கள். பிறகு முழு பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக மேலும் சில நாட்கள் இருப்பார் என்றார்கள். கடைசியில் லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர், தில்லியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு வந்தது. சாதா காய்ச்சலுக்கு ஏன் லண்டன், தில்லி சிறப்பு மருத்துவர்? என்றால் பதிலில்லை.

ஊடகங்களைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கையில் இருப்போரின் மருத்துவப் பிரச்சினைகள் தனிப்பட்ட விசயம், அதை பொது வெளியில் பகிர்வது தேவையற்றது என்பது நிலைப்பாடாம். இதை தந்தி பாண்டே முதல் இந்து தலையங்கம் வரை உபதேசிக்கிறார்கள். கூடவே “இருப்பினும் மக்களின் சந்தேகங்கள் போக்கப்படவேண்டும்” என்று பயந்து கொண்டே ஒரு பின் குறிப்பு போடுகிறார்கள்.

நோயே தெரியாமலல் சிகிச்சை விவரங்கள் எதற்கு?
நோயே தெரியாமலல் சிகிச்சை விவரங்கள் எதற்கு?

உடனே “அம்மா நலமாக இருக்கிறார், எந்தப் பிரச்சினையும் இல்லை, வதந்திகளை நம்பாதீர்கள்” என்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி. நம்புகிறார்கள், நம்மையும் நம்பச் சொல்கிறார்கள்.

இது போக திருமாவளவன் துவங்கி தா.பா கட்சியினர் வரை அப்பல்லோவின் முதல் தளம் சென்று அ.தி.மு.க நிர்வாகிகளை சந்தித்து “ஆமாம், அம்மா நலம்தான்” என்று செய்தி வெளியிடுகிறார்கள். ஆளுநருக்கு மட்டும் மருத்துவர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அண்ணா சாலையின் கிரீம்ஸ் சாலை பிரிவில் துவங்கி, அப்பல்லோ இரண்டாம் தளம் வரை பத்து கட்ட பாதுகாப்பு, தடையரண்களை போலீசு ஏற்படுத்தி அங்கேயே முகாமிட்டிருக்கிறது.

அம்மா கொடநாடு சென்றால் கூடவே செல்லும் தமிழக அரசின் உயரதிகாரிகள் இப்போது அப்பல்லோவில். ஊடக செய்தியாளர்களுக்கு உணவும், நீரும் கொடுத்து கூடவே செய்திகளையும் அளிக்கிறது தமிழக செய்தித்துறை.

டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் தைரியமாக முந்தாநாள் தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட உயர்நீதிமன்றம், இது பொது நல வழக்கு அல்ல, பொது விளம்பர வழக்கு என இன்றைக்குக் கண்டுபிடித்திருக்கிறது.

தமிழக சட்டமன்றம் என்றாலே விதி எண் 110 என்றாக்கினார்கள். அம்மா இருக்குமிடம் போயஸ் தோட்டமோ இல்லை கொடநாட்டு தோட்டமோ அதுதான் தலைமைச் செயலகம் என்று அதிகாரிகள் அங்கே நின்றார்கள். இதை யாராவது எழுதினால் அவதூறு வழக்கு. பாயும் என்பதை நிலை நிறுத்தினார்கள்.

அம்மா இருக்குமிடம்தான் அதிகாரிகள், போலீஸ் இருப்பிடம்!
அம்மா இருக்குமிடம்தான் அதிகாரிகள், போலீஸ் இருப்பிடம்!

தமிழக செய்தி ஒலிபரப்பு விளம்பரத் துறை ஃபோட்டோ ஷாப் படங்களோடு அம்மா ஆட்சி மகிமைகளை எடுத்துரைத்தது. ஜெயலலிதாவின் ஆட்சி என்பது என்றுமே மர்மமான ஆட்சிதான். மன்னார் குடி கும்பல், உளவு-போலீசு அதிகாரிகள், சோ முதலான பார்ப்பனக் கும்பல் ஆகியோர் மட்டும்தான், ஆகம விதிப்படி அம்மா அமர்ந்திருக்கும் கர்ப்ப கிருகத்துக்குள் நுழையும் அதிகாரம் படைத்தவர்கள். அம்மா இட்லி முதல் எலைட் பார் வரை எல்லா கொள்கை முடிவுகளும் அங்கேதான் எடுக்கப்படும். வெங்கய்யா நாயுடு, ஜெட்லி, மோடி, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட இயற்கைக் கூட்டாளிகளுக்கு மட்டும் ஸ்பெசல் தரிசனம் அனுமதிக்கப்பட்டது.

இப்போது கருவறையில் நுழைவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சை பெறும் இடத்தில் சசிகலா, இளவரசி போன்றோர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பிறகு பிரதாப் ரெட்டி மற்றும் பிற மருத்துவர்களை அனுமதிப்பதை தவிர்க்க இயலாது என்பதால் அனுமதிக்கப்படுகிறார்கள். ஸ்பெசல் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

அமைச்சர்கள் எல்லாம் பத்தாவது கட்ட பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே சூடம் கொளுத்தி, சாமியாடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, “என்ன, அம்மா நிலவரம் பற்றி ஏதாவது தெரியுமா? நான் கேட்டேன்னு சொல்லிடாதீங்க என்று பத்திரிகையாளர்களிடம் பணிவோடு விசாரிக்கிறார்கள்.“ காபினெட் என்று அழைக்கப்படும் கூட்டம், பகல் எல்லாம் கிரீம்ஸ் ரோடு பரோட்டாக் கடை ஓரமாக தேவுடு காத்து விட்டு, இருட்டிய பின் ஏ.சி ரூமுக்கு தூங்கப் போய்விடுகிறது.

மண் சோறு மகாத்மியங்களெல்லாம் வரலாற்றில் இடம் பெறும் அதிசயம்!
மண் சோறு மண்ணாங்கட்டிகளெல்லாம் வரலாற்றில் இடம் பெறும் அதிசயம்!

இப்படியான சூழ்நிலயில் உள்ளாட்சித் தேர்தல் முடிவை எடுத்தது யார்? அதற்கு அதிமுக வேட்பாளர்களைத் தீர்மானித்தது யார்? தடை விதித்திருக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதென முடிவு செய்தது யார்? காவிரி வழக்கில் மோடி அரசு செய்துள்ள அயோக்கியத்தனத்தை கண்டு கொள்ளாமல் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவு செய்திருப்பது யார்?

ஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா? அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா?

தமிழ்நாடு இயங்குகிறது. தமிழர்கள் எல்லோரும் முறையாக பல் விளக்கி, காலைக்கடன் கழிக்கிறார்கள். அம்மா உணவகத்தில் இட்லி தின்கிறார்கள். டாஸ்மாக்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது. காவிரியில் தமிழகத்தின் முதுகில் குத்திய பின்னரும், பாரதிய ஜனதாக் கட்சியின் “ஜி” க்கள் அனைவரும் அச்சமின்றி சந்தோசமாக நடமாடக்கூடிய அமைதிப்பூங்காவாக தமிழகம் இருக்கிறது. அம்மா நலமாக இருக்கிறார் என்பதற்கு இன்னும் எத்தனை ஆதாரங்கள் வேண்டும்?

விடுங்கப்பா! அறை எண் 2008 இல் கடவுள் இருக்கிறார்.

தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

3

மிழகத்தின் உரிமைக்கு எதிராக முல்லைப்பெரியாறு அணையில் கேரளாவின் துரோகம், காவிரியில் தொடரும் கர்நாடகவின் வஞ்சகம், கர்நாடக அரசியல் கட்சிகளின் பிழைப்புவாத அரசியல், இனவெறி அமைப்புகளின் காட்டுமிராண்டித்தனம், ஆர்,எஸ்,எஸ்.கும்பலின் திட்டமிட்ட கலவரம், தமிழக நலனுக்கு எதிராக அநீதி இழைக்கும் மத்திய மோடி அரசு, உச்சநீதிமன்றத்தின் கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புகள், ஆகிய அனைத்தும் அணிவகுத்து நிற்பது உண்மைதான். இருப்பினும் நாம் விடைதேட வேண்டிய வேறு சில கேள்விகளும் இருக்கின்றது!

நீர் பற்றாக்குறையுள்ள நம் மாநிலத்தில் இயற்கையாக உள்ள நீர்நிலைகளை தமிழகஅரசு முறையாகப் பராமரிக்கிறதா? பருவகாலங்களில் கிடைக்கும் மழைநீரைத் திறமையாகப் பயன்படுத்தும் வகையில், அறிவியல் பூர்வமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நம் மாநிலஅரசு என்ன முயற்சிகள் எடுத்துள்ளது? காவிரியில் கர்நாடகாவையும், முல்லைப் பெரியாறில் கேரளாவையும் எதிர்த்து போர்க்குரல் எழுப்புவதற்கு ஓட்டுக்கட்சிகள் தகுதியானவர்கள்தானா? தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களான விவசாயிகளின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் தகுதி தமிழக அரசுக்கு இருக்கிறதா?

Water Management
பழந்தமிழரின் நீர் மேலாண்மை

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 4௦ சதவீத பரப்பளவில்தான், அதாவது 13௦ லட்சம் ஏக்கரில்தான் விவசாய நிலங்கள் உள்ளது. இதில், ஆற்றுக் கால்வாய்கள் மூலம் பாசனம் பெறுவது 2௦ லட்சம் ஏக்கர். ஏரிகள்-குளங்கள் மூலம் பாசனம் பெறுவது 15 லட்சம் ஏக்கர். கிணறுகள் மூலம் பாசனம் பெறுவது 4௦ லட்சம் ஏக்கர். ஆக மொத்தம் 75 லட்சம் ஏக்கர்தான் நீர்ப்பாசன வசதியுடைய நிலங்கள்! மீதி 55 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள்தான்!

பாசன வசதிபெற்ற 75 லட்சம் ஏக்கர் நிலங்களில், சுமார் 4௦ லட்சம் ஏக்கரில் அதிக அளவில் நெல்லும், மற்றும் கரும்பு, வாழை, தென்னை, போன்ற பணப்பயிர்களும், மீதியுள்ள 35 லட்சம் ஏக்கரில் பிற காய்கறிகளும், தானியங்களும் பயிரிடப்படுகின்றது! இவற்றுக்கு ஒரு ஆண்டு நீர் தேவை 1,5௦௦ டி.எம்.சி! இதுதவிர, வளர்ந்துவரும் தொழிற்சாலைகளுக்கும், குடிநீர் தேவைக்கும் 2௦௦ டிஎம்சி- யையும் சேர்த்தால், தமிழகத் தின் ஒரு ஆண்டுத்தேவை 1,7௦௦ டிஎம்சி! இதுதான் வேளாண்மைத்துறை அதிகாரிகளும், நீரியல் வல்லுனர்களும் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கும் புள்ளி விவரங்கள்!

விருதுநகர் குண்டாறு நிலைமை
வறண்டு போன விருதுநகர் குண்டாற்றின் நடுவே ஊற்றைத் தேடும் பெண்மனி

தமிழகத்தின் மொத்த நீர் தேவையான 1,7௦௦ டிஎம்சி-யில், காவிரியில் தமிழகத்தின் உரிமையாக கர்நாடக அரசு திறந்து விடவேண்டிய நீரின் அளவு வெறும் 192 டிஎம்சிதான். ஆனால், கர்நாடகா காவிரித் தண்ணீரை திறந்து விடாததால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்து விட்டது போல ஓட்டுக்கட்சிகளும், மீடியாக்களும் ஊதிப்பெருக்குகின்றன! காவிரி நீர் போக மீதி 1,5௦௦ டிஎம்சிக்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்பதையும், தனது சொந்த மாநில மக்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறையுடன் நடந்து கொள்கிறது? என்பதையும் கேள்விக்குள்ளாக்காமல் திட்டமிட்டே திசைதிருப்பி வருகின்றனர்!

தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்! இயற்கையின் கொடையாக கிடைக்கும் இவ்வளவு நீர்வளத்தில் பாதியளவு நீரை சேமித்து வைக்கும் திறன் இருந்தால் கூட, இன்று நாம் அண்டை மாநிலங்களிடம் நீருக்காக கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது. மழைநீரைத் தாங்கி தேக்கி வைத்திருக்கும் ஏரி-குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டிய தனது கடமையை மாநில அரசு திட்டமிட்டே புறக்கணித்து வருவதால், 80 சதவீத மழைநீரை வீணாகக் கடலில் கலக்கவிட்டு, வெறும் 2௦ சதவீத நீரைத்தான் நாம் பயன்படுத்த முடிகிறது!

புல்காடாக ---கோவை அல்லிக்குளம்
தூர்வாராமல் புதர்மண்டிப்போன கோவை அல்லிகுளம் ஏரி

பொதுப்பணித்துறை ஆவணங்கள் தமிழகத்தில் 39,242 ஏறி-குளங்கள் இருப்பதாகக் கூறுகிறது. ஆனால் இதில் 1௦௦௦-க்கும் மேற்பட்டவை கிரிமினல் அரசியல்வாதிகளாலும், ரியல் எஸ்டேட்டு முதலாளிகள், மற்றும் கிரானைட் கொள்ளையர் களாலும் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன! சுமார் 2௦௦ ஏரிகள்-குளங்களை தின்று விழுங்கிதான் இன்றைய சென்னை மாநகரம் பிரம்மாண்டமாக நிற்கிறது! மதுரை-மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும், வானளாவிய அதிகாரமுள்ள சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையும் ஏரிகளை அழித்து கட்டப்பட்டதுதான்! திருச்சி கொட்டப்பட்டு குளத்தை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு தமிழக அரசு இலவசமாக கொடுத்த செய்தி சமீபத்தில் அம்பலமானது! இருக்கும் பல குளங்களும் அதிகாரிகளுடன் துணையுடன் முறைகேடான ஆவணங்கள் மூலம் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதி குளங்கள் நகராட்சி, பேரூராட்சியின் குப்பைக் கிடங்குகளாக சீரழிந்து கிடக்கிறது!

குட்டையாகிப் போன நொய்யால் ஆறு
குட்டையாகிப் போன நொய்யால் ஆறு

குளங்களைத் தூர்வார ஜப்பானிடம் வாங்கிய 4௦௦ கோடி ரூபாய் கடனுக்கு கணக்கு காட்டுவதற்காக ஓரிரு குளங்களின் கரையை உயர்த்தியதைத் தவிர, ஏரி-குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு துரும்பைக் கூட அசைக்கவில்லை!

பாலாறு தோல்கழிவுகளின் குப்பையாகவும், நொய்யல் ஆறு சாயப்பட்டறையின் கழிவுநீர் குட்டையாகவும் மாறிப்போனதற்கு ஆந்திர அரசைக் குற்றம் சுமத்த முடியுமா? தாமிரபரணியின் ஆற்றுநீரை கோக் கம்பெனி கொள்ளையடிக்க அனுமதித்ததும், போராடிய மக்களை அடித்து உதைத்து சிறையில் தள்ளியதற்கும் கர்நாடகா அரசைக் காரணம் சொல்ல முடியுமா? பெரியாற்று நீரைக் கொள்ளையடிக்க பெப்சிக் கம்பெனிக்கு அனுமதி வழங்கியதற்கும், நியூட்ரினோ ஆய்வகத்திற்காக தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை பெரியாற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்வதற்கும் கேரளா அரசா உத்தரவிட்டது? நீர்தேக்க அணைகளில் மேடிட்டுக் கிடக்கும் மண்ணை அகற்றி அணைகளை ஆழப்படுத்தாமல் இருப்பதற்கு கன்னடரும், மலையாளியும் தடை போட்டார்களா? நம் ஆற்றுமணலைக் கடத்திச் சென்று அண்டை மாநிலங்களில் விற்று கோடிகோடியாக சம்பாதித்தது தெலுங்கனா? கன்னடனா? மலையாளியா? தண்ணீருக்கே உத்தரவாதமில்லாத இடத்தில் வெறும் கால்வாயை மட்டும் வெட்டி கொள்ளையடிப்பவன் மராட்டியனா?

ஆற்றுமணல் கொள்ளை
ஆற்றுமணல் கொள்ளையில் ஈடுபடும் ’பச்சைத்தமிழர்கள்’

இவ்வளவு அக்கிரமங்களையும் செய்தவர்கள் எல்லாமே பச்சைத் தமிழர்கள்! இன்று ஒட்டுக்கட்சிகளின் பெருந்தலைகளாக உலா வருபவர்களில் பலரும் இவ்வகை பச்சைத் தமிழர்கள்தான். தமிழ், தமிழன், தமிழக உரிமை என்று கழுத்து நரம்பு புடைக்க முழங்கும் இனவாதத் தலைவர்கள் கூட மேற்கண்ட கிரிமினல் தமிழர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை! அண்டை மாநிலத்தவரின் அக்கிரமங்களுக்கு எதிராக துடித்து எழும் இவர்களின் முறுக்கு மீசை, அதையே தனது இனத்தான் செய்வதைக் காணும்போது தொங்கி விடுகிறது! இதுதான் இவர்களின் “இனமான உணர்வு”!

தாமிரபரணி
நமது நீர் வளங்களை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்கள்

தமிழக மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்! விவசாயத்தின் உயிர்நாடி தண்ணீர்! ஓடும் மழைநீரை தாங்கி நிறுத்தி, மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஏரிகளும், குளங்களும்தான்! ஏரி-குளங்களை அழிப்பதன் பொருள் விவசாயத்தையே ஒழித்துக்கட்டுவதுதான்! தொடர்ச்சியாக தமிழத்தை ஆண்டுவரும் கட்சிகள் இதைத்தான் செய்து வருகின்றன. நமது ஆறுகளை கோக்-பெப்சி கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலையில் நீண்டகாலக் குத்தகைக்கு விடும் தமிழக அரசு, தண்ணீர்கேட்டுப் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசக்கூட மறுத்து அவமதிக்கிறது! நமது ஆற்று நீரையே பாட்டிலில் அடைத்து தனக்கு ஒட்டுப்போட்ட மக்களுக்கே 1௦ ரூபாய்க்கு விற்று கொள்ளையடிக்கிறது!

குப்பைக் கிடங்காக காளிங்கராயன் கால்வாய்
குப்பைக் கிடங்காக மாறிப் போன காளிங்கராயன் கால்வாய்

ஆறுகளை மட்டுமல்ல, கால்வாய் பாசனத்தையே தனியார்மயமாக்க திட்டம் வகுத்திருக்கிறார்கள். தமிழக அரசின் “விவசாயிகள் நிர்வகிக்கும் பாசனமுறைச் சட்டம்-2000” (FARMER’S MANAGEMENT IRRIGATION SYSTEM ACT)- “பாசனக்கால்வாய்களை இனி விவசாயிகளே பராமரித்துக் கொள்ளவேண்டும். இதற்கென ஒவ்வொரு பாசனப்பரப்பிலும் உள்ள விவசாயிகளை ஒரு சங்கமாக்கி, அதன் நிர்வாகிகளிடம் அனைத்து நிர்வாகமும் ஒப்படைக்கப்படும். பாசனம் பெறும் விவசாயிகளிடம் ஒரு ஹெக்டேருக்கு 250 முதல் 500 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்கப்படும். தேவைப்பட்டால் சிறப்புக் கட்டணமும் வசூலித்து, பாசனக் கால்வாய்களை விவசாய சங்கங்களே பராமரித்துக் கொள்ளவேண்டும். தொழில்நுட்ப உதவிகள் செய்வதும், கண்காணிப்பதும் மட்டுமே அரசு அதிகாரிகள் வேலை!” என்று கூறுகிறது.

உலகவங்கியின் வழிகாட்டுதலில் செயல்படுத்தப்பட இருக்கும் இச்சட்டம், அமுலானால் சிறுகுறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விட்டு நிரந்தரமாக விரட்டியடிக்கப் படுவார்கள்! நம் விளை நிலங்களை பன்னாட்டுக்கம்பெனிகளும், புதுவகைப் பணக்கார்களும் கைப்பற்றிக் கொள்வார்கள்! இறுதியில், உணவுக்காக அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்! நாடு முழுவதும் இதுபோன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களை மத்திய அரசும் அமுல்படுத்தி வருகிறது.

ஆறுகள், ஏரி-குளங்களை, அழிப்பதோடு மட்டும் இவர்கள் நிற்கவில்லை. மீத்தேன், கெயில், சிறப்புப் பொருளாதார மண்டலம், போன்ற ‘வளர்ச்சித் திட்டங்களு’க்காக நமது விளைநிலங்களையும் நேரடியாகப் பறித்துக் கொள்கிறார்கள்!

இவ்வாறு, விவசாயிகளையும், விவசாயத்தையும் வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்டத் துடிக்கும் இம்மக்கள் விரோதிகளா நமது விவசாயத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்? தன் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை, ஆறுகளை காப்பாற்ற வக்கற்ற அரசுக்கு, அண்டை மாநிலங்களிடம் நம் உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? விவசாயத்தை ஒழித்துக் கட்டும் எதிரிகளிடமே “விவசாயத்தைக் காப்பாற்று” என்று போராடினால் நமக்கு நியாயம் கிடைக்குமா?

விவசாயத்தைக் காப்பாற்றும் பொறுப்பும், தகுதியும் நமக்குத்தான் உண்டு. எனவே நமது நீர்நிலைகளை இந்த எதிரிகளிடமிருந்து நாம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்! ஏரி-குளங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை விவசாயிகளே நேரடியாக இடித்து தள்ளவேண்டும்! நீர்நிலைகளின் மீது விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டவேண்டும்! இதுதான் மக்கள் அதிகாரம்! இதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதுதான் நம்முன் உள்ள ஒரேவழி. போராட்டம் இல்லாமல் வாழவே முடியாது என்பதுதான் காலத்தின் கட்டாயம்!

– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம் !

0

கோவை இந்து முன்னணி கலவரம் – சென்னை ஆர்ப்பாட்ட உரைகள் – 3

ந்துமதவெறி காவி கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அக்டோபர் 2, 2016 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட உரைகள் – 3

“பெரியார் மண் தான் என்பதை மீண்டும் மீண்டும் நாம் களத்தில் நிரூபிப்போம்” – ஆளூர் ஷா நவாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர்.

ஆளூர் ஷா நவாஸ்
ஆளூர் ஷா நவாஸ்

“இது பெரியார் மண் என்ற முழக்கத்தோடு நாம் இங்கு களத்தில் நிற்கிறோம். இந்தியாவில்  வடமாநிலங்களை முழுவதும் சூறையாடிவிட்டு தமிழ்நாட்டை எப்படியாவது பதம்பாத்து விட வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் இன்று நேற்று அல்ல கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முயன்று கொண்டிருக்கிறது. அந்த முயற்சி இன்னும் முயற்சியாகவே இருப்பதில் தான் இது பெரியார் மண் என்பதை நிரூபித்திருக்கிறோம்.

அவர்கள் எந்தளவிற்கு எரிச்சலடைந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி தான் நான்கு நாட்களுக்கு முன்னால் H. ராஜா நடத்திய கூத்துகள். இந்த தலைநகர் சென்னையில் அவர் ஒரு போராட்டம் என்கிற வடிவத்தில் அதாவது அறவழி என்கிற வடிவத்தில் ஒரு அராஜக வடிவத்தை அவர் கையில் எடுத்தார். அன்றைக்கு அவர் ஊடகங்களில் பேசும் போது அவருடைய உடல் மொழியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எப்படியாவது ஒரு முஸ்லிம் கையில் கிடைக்க மாட்டானா. அவனை கடித்து குதறியிருக்க மாட்டோமா என்ற வெறி அவரிடம் இருந்தது. அன்று போராட்டத்திற்கு அனுமதி இல்லை. ஆனாலும் அவர்கள் எழும்பூரில் கூடினார்கள்.

அதே நேரத்தில் இங்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு ஒரு போராட்டத்தை நடத்தி கொண்டிருந்தார்கள். அவர்கள் எதற்காக போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள் என்றால் முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களின் நலன்களுக்காக முஸ்லிம் செல்வந்தர்கள் அந்த சமூகத்திற்கு எழுதி வைத்து போயிருக்கிற சொத்துக்களை வக்ஃபு வாரியம் நிர்வகித்து கொண்டிருக்கிறது. அந்த சொத்துக்கள் பல பெரு முதலாளிகளின் கைகளில் சிக்கியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட அடித்தட்டு முஸ்லிம்களின் கையில் இல்லை. அதை ஆக்கிரமித்து கொண்டிருப்பவர்கள் பெரும் முதலாளிகள் அந்த முதலாளிகளை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் H. ராஜா அதை எப்படி சொல்கிறார் என்றால் “சசிகுமாரை கொன்றவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. சசிகுமாரை கொன்றதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி இல்லையா?” என்று கேட்கிறார். எவ்வளவு பெரிய மோசடி.

அவர்களை கைது செய்து வேப்பேரி மண்டபத்தில் வைக்கிறார்கள் அந்த வழியாக ஒரு முஸ்லிம் இளைஞர் போகிறார். அந்த பக்கம் மார்வாடியிடம் கொடுக்கல்-வாங்கல் காசுக்காக போயிருக்கிறார். கூலி வேலை செய்யக்கூடியவர். அந்த ஏழை முஸ்லிமை பிடித்து “இவன் இங்கே வெடிகுண்டு வீச வந்திருக்கிறான்” என்று சொல்லி காவல்துறையிடம் அடித்து ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழிசை, H. ராஜா இவர்களெல்லாம் “இவன் மீது வழக்கு போடு இவர் இங்கே குண்டு போட தான் வந்திருக்கிறான் வழக்கு போடு” என்று நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறார்கள்.

எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கோவையில் அவர்கள் 1997-ல் ஒரு திட்டமிட்டு ஒரு வன்முறையை நடத்தினார்கள். எதற்கென்றால் முஸ்லிம்களிடமிருந்து எதிர்வினை வர வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தினார்கள். அதற்கேற்ப முஸ்லிம்களிடமிருந்தும் எதிர்வினை வந்தது. அவர்கள் நினைத்தது நடந்தது. இந்த முறையும் அதற்கு தான் அவர்கள் திட்டமிட்டார்கள் ஆனால் ஒரு மாற்றம் என்னவென்றால் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் என்ற அளவிற்கு கூட எதிர்வினையாற்ற வரவில்லை. வந்தது முழுக்க ஜனநாயக சக்திகள். வந்திருப்பது முழுக்க இடதுசாரி, பெரியாரிய சக்திகள். இங்கே தான் அவர்கள் திகைத்து போயிருக்கிறார்கள். 1997-ல் கூட H. ராஜாவின் உடல்மொழி இவ்வளவு வன்மமாக மாறவில்லை. இப்போது உச்சபட்சமாக வெறிபிடிக்கிறது என்றால் எதிர்வினை எங்கிருந்து வருகிறது என்பதை பார்த்து தான். முஸ்லிம்களிடம் இருந்து எதிர்வினை வர வேண்டும் என எதிரபார்க்கிறார்கள் ஆனால் ஜனநாயக சக்திகளிடமிருந்து எதிர்வினை வந்ததை பார்த்து தான் அவர்கள் உண்மையில் அச்சம் அடைகிறார்கள். ஆக நாம் இங்க தான் அவர்களின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணையா குமார் மீது ஏன் கோபம்? ரோகித் வெமுலா மீது ஏன் கோபம்? பெரியார் மீது ஏன் கோபம்? என்று சொன்னால் இவர்கள் அவர்கள் சொல்லும் அத்தனை அவதூறுகளுக்கும் பதில் சொல்வதற்காக வருகிறார்கள். அம்பலப்படுத்த கூடியவர்களாக வருகிறார்கள். அந்த இடத்தில் ஒரு தவ்ஹித் ஜமாத் வர வேண்டும், அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் ஒரு மக்கள் அதிகாரம் வருகிறது, அந்த இடத்தில் ஒரு விடுதலைச் சிறுத்தை வருகிறது. அந்த இடத்தில் ஒரு திராவிடர் கழகம் வருகிறது. அந்த இடத்தில் இடதுசாரி கட்சிகள் வருகிறார்கள். இப்படி அம்பேத்கரிஸ்ட்கள் வருகிறார்களே என்று தான் அவர்களுக்கு கோபம் வருகிறது. ஆக அதை நாம் வலுப்படுத்த வேண்டும்.

அடிப்படையில் இந்த மதவாத சக்திகளை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அவர்கள் நூற்றுக்கணக்கான அமைப்புகளாக திரண்டிருக்கிறார்கள். ஆனால்  கருத்தளவில் ஒரே நோக்கத்தோடு இணைந்திருக்கிறார்கள். இந்துமுன்னணியும் இந்து மக்கள் கட்சியும் வெவ்வேறு அமைப்புகள். விஷ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் வேறு வேறு அமைப்புகள். ஆனால் அவர்கள் நோக்கம் ஒன்றுதான். இந்து ராஷ்டிரம், முஸ்லிம்கள் அந்நியர்கள், கிறிஸ்துவர்கள் எதிரிகள், இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் அனைவரும் இந்து மத விரோதிகள். இப்படிப்பட்ட சிந்தனையில் தெளிவாக இருக்கிறார்கள்.

நமக்கு சிந்தனை ஒன்றாக இருக்கிறது. ஆனால் நாம் அமைப்புகளாக சிதறி சிதறி நாம் வலிமையற்று போய் கிடக்கிறோம். இதுதான் பிரச்சனை. ஆக ஒன்று கூடல் இன்று அவசியம். எல்லோரும் ஒரு இயக்கத்தின் கீழ் அணி திரள்வது சாத்தியமில்லை. எல்லோரும் வெவ்வேறு அமைப்புகளில் இருக்கிறோம் ஆனால் நமக்கு கருத்தியல் ஒன்று தான். பார்ப்பனியத்தை வீழ்த்தும் கருத்தியல். எல்லோருக்கும் சமூக நீதி வழங்க வேண்டும் என்ற கருத்தியல். சமத்துவம் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்ற கருத்தியல். எனவே அந்த கருத்தியலில் நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இந்து முன்னணியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தேசத்திற்காக போராடி கொலை செய்யப்படவில்லை. இந்துக்களும் முஸ்லிம்களும் எங்கேயும் கலந்து விடக் கூடாது என்று துடிக்கிறார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் கலக்கும் இடங்களை குறி வைத்து அடிப்பது என்பது அவர்கள் செயல்திட்டம். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஓடிகிறது. அதில் இவர்கள் குண்டு வைத்தார்கள். அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தார்கள் அதிலும் முஸ்லிம்கள் தான் கைது செய்யப்பட்டார்கள் வழக்கம் போல. எப்படியோ ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்பதை கண்டு பிடித்துவிட்டார்கள். அங்கு ஏன் குண்டு வைக்கிறார்கள். அது இந்துக்களும் முஸ்லிம்களும் கலக்கும் இடம். மத அடையாள சின்னமாக இருந்தாலும் பெருமளவில் வெகுமக்கள் போகிறார்கள், அது அவர்களுக்கு உறுத்துகிறது. அது அவர்களுடைய செயல்திட்டம்.

கோவையிலும் அமைதி நிலவுகிறது. கோவையில் வியாபாரம் செய்ய கூடிய வணிக பெருமக்கள் இந்த அரசியலை புரிந்து கொண்டு ஒற்றுமையாக செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்பதனால் தான் அவர்கள் இன்று இந்துக்களையும் அடிக்க தொடங்கிவிட்டார்கள். பெஸ்ட் பேக்கரி தாக்கப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம் குஜராத்தில், அது ஒரு முஸ்லிம்க்கு சொந்தமானது. இங்கு ஒரு பேக்கரி தாக்கப்பட்டிருக்கிறது அது இந்துவுக்கு சொந்தமானது. திருச்சியில் ஒரு 10 ஆண்டுக்கு முன்னால் பிரவீன் தொக்காடியா சொன்னாரே “இந்த முனை முஸ்லிம்களுக்கு இந்த முனை கிறிஸ்வர்களுக்கு இந்த முனை மதச்சார்பின்மை பேசும் இந்துகளுக்கு” என்று. ஆக இந்து பேக்கரி தாக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக போராடுவது யார் முற்போக்காளர்கள். இதில் பலனடைய போகிறவர்கள் யார் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட இந்துக்கள். அந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் யார்? இந்த இந்துத்துவ அல்லது இந்துக்களின் நலனுக்காக போராடுகிறோம் என்கிற இந்த பாசிச சக்திகள். என்வே இவர்களை அம்பலப்படுத்த வேண்டும்.

அவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள். அது காவல் துறையாக இருந்தாலும், அது ஊடகமாக இருந்தாலும், அது இராணுவமாக இருந்தாலும் அது நீதித்துறையாக இருந்தாலும் எல்லா இடத்திலும் ஆர்.எஸ்.எஸ் சக்திகள் ஊடுருவியிருக்கிறார்கள். காவல்துறை கோவையில் அப்பட்டமாக தன்னுடைய முகத்தை வெளிக்காட்டியிருக்கிறது. மிக மிக வெளிப்படையாக வெளிக்காட்டியிருக்கிறது. ஒரு கும்பல் கூடுகிறது. கும்பல் என்றால் 100 பேர் 200 பேர் அல்ல 2000, 3000 பேர்களை கொண்ட கும்பல் கூடுகிறது. ஒரு படுகொலையை வைத்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த உண்மையை கண்டுபிடிக்க முடியாதா?

தர்மபுரியில் அட்டூழியம் நடத்தினார்கள். ஆறு மணி நேரம். திட்டமிட்டு கிராமம் கிராரமாக திரட்டி வந்து வண்டி கட்டி வந்து அடித்து நொறுக்கினார்கள். கொளுத்தினார்கள். வேடிக்கை பார்த்தது காவல்துறை.

பரமக்குடியில் வெறும் சாலைமறியலில் ஈடுபட்டதற்காக 7 பேரை சுட்டுக் கொன்றது காவல்துறை. அங்கு கூடியவர்கள் ஒரு கல்லை கூட வீசவில்லை. ஒரு கூட்டமாக திரண்ட காரணத்திற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஆனால், கோவையில் ஒரு கும்பல் கலவரம் நடத்திக் கொண்டிருக்கும் போது ஏன் உங்கள் துப்பாக்கிகள் வேலை செய்யவில்லை.

நீதிமன்றங்களும் இப்படி தான் நடந்து கொண்டிருக்கின்றன. ராம்குமார் வழக்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம். எந்த வித அடிப்படையும் இல்லாமல் சட்டத்தை மீறி நடந்து கொள்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் விசயமென்றால் இப்படி மேலாக வெளிக்காட்டுகிறது. இங்கே தான் நாம் மக்கள் அதிகாரம் என்ற முழக்கத்தை வைத்திருக்கிறோம். அதிகாரம் ஆதிக்க சக்திகள் கையில் இருக்கிறது. அந்த அதிகாரம் கைமாறி உழைக்கும் மக்கள் கையில் வரும் போது தான் நிலைமாறும். அதை நோக்கி இந்த மக்களை அணிதிரட்ட வேண்டிய பணி நம்மிடமிருக்கிறது. கடமையிருக்கிறது. எனவே இதை நாம் எடுத்து சொல்ல வேண்டும்.

கோவையில் அந்த வன்முறை நடந்த உடனே ஜனநாயக சக்திகள் பெருமளவில் திரண்டு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அது கோவையோடு சுருங்கிவிடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்திட்டம் கோவையோடு சுருங்கி போவதல்ல. தமிழ்நாடு முழுவதும் பரப்ப கூடிய வகையில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயல்திட்டம். அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இது பெரியார் மண் தான் என்பதை மீண்டும் மீண்டும் நாம் களத்தில் நிருப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த போராட்டம் காலத்தின் தேவை. ஜனநாயக சக்திகள் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.”

“போலீசு இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடக்காது, வேடிக்கை பார்க்கும். ஜனநாயக சக்திகள் வீதியில் இறங்கி வியாபாரிகளையும் மக்களையும் திரட்டி அவர்களை திருப்பி அடிப்பது தான் இதற்கு தீர்வு” – தோழர் மில்டன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின், செயலர்- சென்னை

தோழர் மில்டன்
தோழர் மில்டன்

கோவையில் ஒரு இந்து முன்னணி நபர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒரு மிகப் பெரிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சங்பரிவார கும்பல் செய்திருக்கிறது. அவர்களை பொறுத்தவரை கடவுளிலிருந்து கருமாதி வரை எதையாவது சொல்லி கலவரம் செய்வது, மக்களை பிளவுபடுத்துவது, ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்துவது, பாகிஸ்தான் சதி, முஸ்லிம் சதி, தீவிரவாதி என்று சொல்லி மக்களை அச்சுறுத்தி செல்வாக்கை பெறுவது என கலவரங்களை நிகழ்த்த தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் முதல் குற்றவாளி காவல்துறைதான்.

எத்தனை போராட்டங்கள் தமிழகத்தில் நடந்திருக்கு எவ்வளவு மோசமான படுகொலைகள் நடந்திருக்கின்றன. முத்துகுமார் இறந்த போது தமிழகமே வேதனையில் இருந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள். பல அமைப்புகள் கூடின. ஒரு கலவரம் நடந்ததா? ஒரு பஸ் கண்ணாடி உடைந்ததா? பரமகுடியில் வெறும் மறியல் செய்ததற்கு 7 பேரை சுட்டுக் கொன்றது. படுகொலைகள் நடக்கும் போது போராட்டங்கள் நடந்திருக்கிறது. மக்கள் கூடியிருக்கிறார்கள்.. அப்போது காவல் துறை எவ்வளவு ஏற்பாடுகளை செய்துயிருக்கிறது. கோவை கலவரத்தில் உளவுதுறை என்ன செய்து கொண்டிருக்கிறது.

டாஸ்மாக்கை மூடச் சொல்லி மக்கள் அதிகார தோழர்கள் மிக கடுமையாக போராடினார்கள். நாப்பாளையம் என்ற ஊரில் மக்கள் அதிகாரம் போராடியது. அதற்கு அடுத்த நாள் வீட்டிற்கு வீடு சென்ற ஐ.எஸ் அதிகாரிகள், “உன் பிள்ளை போராட போனால் அவன் மீது எஃப்.ஐ.ஆர் போடுவோம், வேலை கிடைக்காது, உள்ளே தூக்கி வைத்து விடுவோம். நடமாட முடியாது” என்று மிரட்டினார்கள்.

போராடக் கூடிய இடங்களில் எவ்வளவு போலிசை குவிக்கிறார்கள். ஒரு ஆளை பின் தொடர‌  பல பேர். ஆனால் கோவையில் திட்டமிட்டு கலவரம் செய்கிறார்கள். போலீஸ் வேடிக்கை பார்க்கிறது.

கலெக்டர், எஸ்.பி யும் ஊருக்கு புதிது சரி. டி.ஐ.ஜி ஊருக்கு புதிதா? ஐ.எஸ் உளவுத் துறை தெருவிற்கு தெரு இருக்கிறானே, அவன் ஊருக்கு புதிதா? நீ தான் கலவரம் பண்ண. நீ தான் பொறுப்பு. இந்த காவல்துறை, இந்த உளவுதுறை என்ன லட்சணத்தில் கலவரத்தை அடக்கினார்கள்.

சென்னையில் 10000 வழக்கறிஞர்கள் கூடினார்கள். எவ்வளவு தொல்லைகள். போராட கூடியவர்களிடம் பேசி அமைதியாக போராட்டத்தை நடத்த முடியும். நீ நினைத்தால் கலவரம் பண்ண விடுவாய். இப்படி கலவரத்தை வேடிக்கை பார்ப்பது காவல்துறையின் தொடர்ச்சியான பழக்கம். அயோத்தி மசூதி இடிக்க போகிறான் என்று உனக்கு தெரியாதா. ஆர்.எஸ்.எஸ் கலவரம் செய்வதும் அதை போலிஸ் வேடிக்கை பார்ப்பதும் வழக்கம்.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்ஸில் குண்டு வெடித்தால் ஊரோடு முஸ்லிம்களை தூக்கிவிடுவார்கள். பின்னால் தெரிந்தது ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்தான் என்று.

கூடங்குளம் மக்கள் போராடினாங்க, சகாயம் என்பவர் இறந்தார். அவருடைய உடலை முற்றிலுமாக கையகப்படுத்தி விட்டது போலீசு. “எப்போ உடலை எடுக்கனும், எப்பொழுது அறுவைக்கூறு சிகிச்சை செய்யனும். எத்தனை மணிக்கு கொண்டு போகனும், எத்தனை மணிக்கு அடக்கம் பண்ணனும், எந்த ஊரில் பஸ்ஸை மறிக்கனும்” எல்லாமே காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அப்போ நீங்க கோவையில் மட்டும் எதையுமே அடக்க முடியாத அளவிற்கு தகுதியிழந்து விட்டீர்களா? எல்லா ஊர்களிலும் சரியாக செய்கிறீர்கள். மற்ற அமைப்பு போராடும் போது சரியாக செய்கிறீர்கள். இதில் மட்டும் காவல்துறை எப்படி தோல்வியடைக்கிறது. அப்போ உங்கள் விருப்ப பூர்வமாக கலவரத்தை அனுமதிக்கிறீர்கள். ஜனநாயக சக்திகள் அதனால் தான் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த போலீசு இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடக்காது, வேடிக்கை பார்க்கும். அதனால் பெரியாரிய அமைப்பை சேர்ந்தவர்கள், தலித் விடுதலைக்காக போராடக் கூடிய அமைப்பை சார்ந்தவர்கள், இடதுசாரி அமைப்புகள் அனைவரும் வீதியில் இறங்கி வியாபாரிகளையும் மக்களையும் திரட்டி அவர்களை திருப்பி அடிப்பது தான் இதற்கு மருந்து. ஏற்கனவே அறிவியல் பூர்வமான கோவை மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். வியாபாரிகள் பெண்கள் திரண்டு வந்து அடித்திருக்கிறார்கள். அந்த இடங்களில் வெற்றியடைந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டு கலவரம் செய்கிறார்களோ நாமும் ஒழுங்கமைக்கப்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

எந்த ஊரிலாவது ஆர்.எஸ்.எஸ் நபர் இறந்து விட்டால் நாம் தயாராகி விட வேண்டும். இனி நாம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். போலிசு மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க போவதில்லை.

மக்கள் அதிகாரம் தமிழகம் தழுவிய அளவில் போராடி கொண்டிருக்கிறது. பல்வேறு ஜனநாயக சக்திகளை இணைத்து நடத்தி கொண்டிருக்கிறது. பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரியாக இருக்க கூடிய இந்த காவிக் கும்பலை ஒடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்”

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை – களச் செய்திகள் 06/10/2016

0

1. திருச்சி

கண்டன ஆர்ப்பாட்டம்!

kovai-hindu-munnani-riots-trichy-demo-01கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணி வானர படைகள் நடத்திய வன்முறை வெறியாட்டமும், கடைகள் சூறையாடி கொள்ளையடிக்கப் பட்டதும் நாடே அறிந்த செய்தி.
காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டே நாடு முழுவதும் கலவரங்களை நடத்தி மக்களை மோதவிடும் சூழ்ச்சியை செய்து வருகின்றனர்.

மாட்டுத்தோலை உரித்தார்கள் என காரணம் காட்டி வடமாநிலங்களில் கலவரம் செய்து மோதலை உருவாக்குகின்றனர். மதமாற்றம் செய்கிறார்கள் என காரணம் காட்டி சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுகின்றனர்.

kovai-hindu-munnani-riots-trichy-demo-02இஸ்லாமியர்கள், தலித் மக்கள், ஜனநாயக சக்திகள் என அனைவர் மீதும் தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும் இந்த காவி பயங்கரவாதிகள் தமிழகத்திலும் காலுன்ற பார்க்கின்றனர். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வரும் வெறியாட்டங்கள் ஒருபுறம், இன்னொருபுறம் இந்து முன்னணி, பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்பு நிர்வாகிகள் எனப்படுவோர் பெரும்பாலும் சமூகவிரோத கிரிமினல் கும்பலாகவே உள்ளனர். ரியல் எஸ்டேட் புரோக்கர் , கட்டப்பஞ்சாயத்து, கள்ளத்தொடர்பு என செத்துப்போன பெரும்பாலானோரின் பின்புலம் இதுவாகவே உள்ளது. காவல்துறை அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றது.

kovai-hindu-munnani-riots-trichy-demo-03இத்தகைய சூழ்நிலையில் தான் கோவையில் சசிகுமார் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவரின் இரத்தம் காயும் முன்னே வெறிகொண்டு முஸ்லீம் மக்களின் கடையை சூறையாடுவது, கொள்ளையடிப்பு, வாகனங்களை தீக்கிரையாக்குவது என பொறுக்கித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்துத்துவ வெறியர்கள்.
இஸ்லாமிய மக்களிடம் கோபத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காய செய்த சதியே இத்தகைய வன்முறைக்கு காரணம். இதற்கு காவல்துறை துணை போயுள்ளது. 12 கி.மீ ஊர்வலத்தை அனுமதித்து அவர்களின் (வன்முறைக்கு) கொள்ளைக்கு காவல் காத்து நின்றது.

kovai-hindu-munnani-riots-trichy-demo-04இதை அனுமதித்தால் நாளை நாடு முழுவதும் இத்தகைய சமூக விரோதச் செயல்களை நிறைவேற்றுவார்கள். ஆகவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி தரமறுத்தது. தடையை மீறி 04-10-2016 அன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.மா.இ.மு, ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட தோழர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

kovai-hindu-munnani-riots-trichy-demo-05கட்சிகளைச் சேர்ந்த பலர் தேர்தல் நேரம் என்பதால் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சென்றனர். ஆதித் தமிழர் கட்சி செயலர் வீரமுருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்.

இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ் தலைமையேற்று நடத்தினார். காலை 11.00 மணி அளவில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ஒட்டி தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி முறியடிப்பதே இன்றைய நமது முக்கிய கடமையாக உள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவண்
மக்கள் அதிகாரம்
திருச்சி
94454 75157

2. புதுவை

கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டம்!

kovai-hindu-munnani-riots-puduvai-demo-1டந்த 22/9/2016 அன்று கோவையில் இந்து முன்னணியை சேர்ந்த கட்டப் பஞ்சாயத்து ரவுடி, ரியல் எஸ்டேட் புரோக்கர் சசிகுமார் செத்து போனதற்கு கோவை நகரத்தையே கலவரத்தின் மூலம் அச்சுறுத்தி மக்களின் கடைகளை கொள்ளையடித்து சூறையாடி, அரசு வாகனங்களை உடைத்து- எரித்து குஜராத் மாடலில் வன்முறையை தூண்டினர் இந்துத்துவ ரவுடிகள். உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி தமிழகத்தில் காலூன்றவே பல கலவரங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த காவிபடையின் பாசிச வன்முறையை கண்டித்து புதுவையில் ஐந்து நாட்களாக மக்கள் மத்தியில் துண்டு பிரசுரம் கொடுத்து, “பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட மதவெறி அமைப்புகளை நமது நாட்டு மண்ணில் இருந்து அழித்தொழிக்காமல் மக்களுக்கு விடுதலை கிடையாது” என பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

kovai-hindu-munnani-riots-puduvai-demo-5கடந்த 30-09-2016 அன்று சாரம் பெரியார் சிலை அருகில் “காக்கிச் சட்டை அனுமதியுடன் காவிப்படை நடத்திய வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்” நடத்த புதுவை காவல் துறையிடம் அனுமதி கேட்ட போது , “நீங்கள் கேட்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது” என்று மறுத்துவிட்டனர்.

பிறகு “முத்தியால் பேட் மார்க்கெட்டில் நடத்திக் கொள்கிறோம்” என கேட்ட போது, “அங்கும் உங்களுக்கு அனுமதி இல்லை” என்றனர். “ஏன்” என்று கேட்டதற்கு, “அங்கு கோவில்கள் இருக்கின்றன, பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும்” எனக் கூறி அங்கேயும் அனுமதி மறுக்கப்பட்டது. “இனி நீங்கள் அனுமதி இல்லை என்று மறுத்தால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்று விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக மூன்றாவதாக கேட்ட சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதித்தது காவல் துறை, அதுவும் வாய்வழியாக.

தோழர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி தயாரித்துக்கொண்டிருக்கும் போது காவல் துறையில் எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்து நடத்திக்கொள்ள சொன்னார்கள். காக்கிகள் 7 நபர்களை பாதுகாப்பிற்கு அனுப்பி வைத்தனர்.

kovai-hindu-munnani-riots-puduvai-demo-3ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் சாந்தகுமார் ஜனநாயக சக்திகளை வரவேற்று துவக்கி வைத்தார்.

1. தோழர் தீனா அமைப்பாளர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி.

2. தோழர் கோகுல் காந்திநாத், ஒருங்கிணைப்பாளர், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், புதுச்சேரி

3. தோழர் புருசோத்தமன், பொதுச்செயலாளர், ஏ.ஐ.சி.சி.டி.யு, புதுச்சேரி

4. தோழர் தினேஷ் பொன்னையா, மாநிலக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி

5. தோழர் லோகநாதன், இணைச்செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. புதுச்சேரி.

இவர்கள் அனைவரும் இந்துமத வெறியர்களை கண்டித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடக்கும் போது இடையிடையே இந்து முன்னணி காலிகள் தோழர்கள் பேசுவதையும் எவ்வளவு பேர்கள் கலந்துகொள்கின்றனர் எனவும் ஆய்வு செய்தனர். கலவரம் எதுவும் செய்ய முடியாமல் தவியாய் தவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் புதுவை மக்களுக்கும் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு புது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காலிகளின் கால்களில் பெரியாரின் மண்ணை மிதிபட விடமாட்டோம்!
பார்ப்பனிய மதவெறி ஆட்டத்திற்கு முடிவுகட்டுவோம்!

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

3. தருமபுரி

தமிழகத்தின் மீதான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி!

ஒருதலை பட்சமான ஒருமைப்பாட்டுக்கு கட்டுப்பட மறுப்போம்

என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் சார்பாக தர்மபுரி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-யின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தியும், மோடியின் உருவ பொம்மையை எரித்தும் விண்ணதிரும் முழக்கமிட்டதும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

dharmapuri-modi-photo-burning-1அப்போது தோழர்களை கைது செய்ய முயன்ற காவல் துறையுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மக்கள் கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது பகுதி மக்களிடேயே காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் எதிரி பி.ஜே.பி-தான் என்பதை பதிய வைக்கும் வகையில் அமைந்தது. பிறகு பெண்கள் குழந்தைகள் உட்பட போராடியவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது மாலை 7 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தனர்.

தமிழ்நாட்டின் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம்
தமிழன் உணர்வை அவமதிக்கும்
மோடி அரசின் கயமைத்தனத்தை
தோலுரிப்போம் தோலுரிப்போம்.

dharmapuri-modi-photo-burning-4ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி
காங்கிரசுக்கு எதிராளி
தமிழன் உரிமை பறிப்பிலே
கர்நாடகத்தின் கூட்டாளி

சித்தராமையா நரேந்திரமோடி
ஊரை ஏமாற்ற லாவணி
காவிரி உரிமை மறுப்பிலே
தமிழனுக்கு எதிரணி

போதும்நிறுத்து போதும்நிறுத்து
உன் தேசிய ஒற்றுமை கூப்பாட்டை
போதும்நிறுத்து போதும்நிறுத்து

பதில்சொல் பதில்சொல்
நரேந்திரமோடியே பதில்சொல்.
தமிழகம் என்ன பாகிஸ்தானா
இல்லை-இந்தியாவிற்குள் தனிநாடா

dharmapuri-modi-photo-burning-7பதிலடி கொடுப்போம் பதிலடிகொடுப்போம்
மோடிஅரசின் காழ்ப்புணர்ச்சிக்கு
பதிலடிகொடுப்போம் பதிலடிகொடுப்போம்.

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்
கன்னட இனவெறி தூண்டிவிட்டு
தமிழன் உரிமைக்கு வேட்டுவைக்கும்
ஆர்எஸ்எஸ்- பிஜேபி கும்பலை
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்.

ஒண்றினைவோம் ஒண்றிணைவோம்
தமிழ்நாட்டுக்கு எதிரான
பார்ப்பன பாசிச பாஜகவை
பெரியார் பிறந்த மண்ணிலே
ஓட ஓட விரட்டியடிப்போம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
தருமபுரி

காஷ்மீரின் உண்மையான வரலாறு – வீடியோ

0

kashmiri-struggle-against-indian-oppression-7ன்று காஷ்மீர் தீவிரவாதம் பற்றி நாளேடுகளில் படிக்கின்ற வாசகர்கள் பலர் காஷ்மீர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வருகிறது என்று கருதக்கூடும். அது உண்மையல்ல. காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாக படங்கள் ஆதாரங்களுடன் உணர்த்துகிறது இந்த வீடியோ. செப்டம்பர், 1999-ல் புதிய ஜனநாயகம் வெளியிட்ட”காஷ்மீர் யாருக்குச் சொந்தம்?” என்ற சிறு வெளியீட்டை அடிப்படையாக வைத்து இந்த வீடியோ தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாருங்கள், பகிருங்கள்!

 

முசுலீம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரிதான் ஆர்.எஸ்.எஸ் !

0

கோவை இந்து முன்னணி கலவரம் – சென்னை ஆர்ப்பாட்ட உரைகள் – 2

ந்துமதவெறி காவி கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அக்டோபர் 1, 2016 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட உரைகள் – 2

“இஸ்லாமியர்கள் மட்டும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் எதிரிகளல்ல அவர்கள் இந்துக்களுக்கும் எதிரிகளே” – தோழர் காளியப்பன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மைய ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்.

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-kaliappan”சசிகுமார் என்ற இந்து முன்னணி நபர் கொல்லப்பட்டதற்காக இந்து மதவெறி பாசிஸ்டுகள் கோவையில் கலவரம் நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வெவ்வேறு கட்சிகளில், தி.மு.க கட்சியில் கூட கொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு தெரியும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று, யாரும் எங்கள் கட்சிக்காரர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கலவரம் செய்வதில்லை.

இவர்கள் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ரவுடிகள் கிரிமினல்கள் இவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் கொல்லப்படலாம். கொலை செய்தவனை கைது செய் என்று தான் சொல்லனும் அது தான் நியாயம். இவர்கள் மற்றவர்களுக்கு அதை தான் சொல்கிறார்கள். சட்டத்தின் படி நடந்து கொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் கலவரத்தை நடத்தி மக்களை அச்சத்தில் வைத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.

“பாகிஸ்தான் மக்களுடன் பேச போகிறேன். பாகிஸ்தானின் மக்களே உங்கள் தலைவர்களை கேளுங்கள் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு எங்களோடு போட்டி போடுவதற்கு தயாரா? பாகிஸ்தானிலே வறுமையை ஒழிப்பதற்கு போட்டி போட தயாரா? வேலையின்மையை ஒழிப்பதற்கு போட்டி போடுவோமா? வளர்ச்சியை நிலைநாட்டுவதற்கு போட்டி போடுவோமா? வாருங்கள் போட்டி போட்டு பார்ப்போம் அதிலெல்லாம் நாங்கள் தான் ஜெயிப்போம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, அமைதி, இதையெல்லாம் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தானும், இந்தியாவும் போட்டி போட்டால் இந்தியா தான் ஜெயிக்கும்” என்று பாகிஸ்தான் மக்களுக்கு சவாடல் விட்டிருக்கிறார் மோடி.

பா.ஜ.க.காரனும் அதையே பேசுகிறான். கோயம்பத்தூரில் 22-ம் தேதி முதல் நேற்று வரை அமைதியான வாழ்க்கை நீங்கள் சீர்குலைத்திருக்கிறீர்கள். திருப்பூரின் பொது அமைதியை சீர்குலைத்திருக்கிறீர்கள். நீங்கள் எங்கெங்கெல்லாம் கலவரம் செய்கிறீர்களோ மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மட்டுமல்ல அந்த பகுதியில் இருக்கக்கூடிய தொழில் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. பி.ஜே.பிக்காரன் வளர்ச்சி என்று சொல்வது பொய். வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அவர்கள்.

இஸ்லாமியர்களுக்கு மட்டும் அவர்கள் எதிரிகளல்ல அவர்கள் இந்துக்களுக்கும் எதிரிகள். எல்லா நிலைகளிலும் அவர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள். இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் தொகையில் கால் பங்காக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப் பெரும் எதிரியாக இருக்க கூடியவர்கள்.

குஜராத்தில் என்ன நடக்கிறது? மோடி சவடால் விட்டிருக்கிறார். ”தாழ்த்தப்பட்டவர்களை தாக்காதீர்கள். உங்களுக்கு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் வந்தால் என்னை கொலை செய்யுங்கள்” என்று அயோக்கியத்தனமாக பேசுகிறார். என்னை கொல்லுங்கள் என்றால் எப்படி முடியும் 100 போலிஸ்காரன் துப்பாக்கி வைத்து கொண்டு 7 கிலோமீட்டர் மக்களை தடுத்து விட்டு என்னை கொல்லுங்கள் என்று வெற்று சவாடல் அடிக்கிறார். இதே குஜராத்தில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். நான்கு நாட்களுக்கு முன்னால் ஒரு கர்ப்பிணி பெண்ணை செத்த மாட்டை எப்படி அப்புறப்படுத்த மறுக்கிறாய்? என்று சொல்லி அடித்து மனிதாபிமானமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறான். இந்த நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரும் எதிரியாக இருக்கின்றன இந்துத்துவ அமைப்புகள்.

இந்த கும்பல் கலவரத்தை திட்டமிடுவதின் மூலமாக இந்த நாட்டில் உள்ள மக்களை மதவாத அடிப்படையில் இரண்டாக பிளவுபடுத்தி பல்வேறு தரப்பு மக்களும் இணக்கமாக வாழ்கின்ற சூழலை அழித்து நிரந்தரமான பகையை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ள முயல்கிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலை போல அபாயமானவர்கள் எவரும் இல்லை.

இந்த மாதிரி சூழ்நிலையில் நம் நாட்டில் இருக்க கூடிய அரசியல் சக்திகள் குறிப்பாக பா.ம.க ராமதாஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்று சொன்னால் அந்த கோவை கலவரம் என்பது தன்னுடைய கட்சிக்காரர் சசிக்குமார் கொல்லப்பட்டதால் ஆதங்கத்தினால் வெளிப்பட்டது என்கிறார். இது அயோக்கியத்தனமானது. இப்படி சொல்லி கோவை கலவரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார். ராமதாஸ் மட்டுமல்ல அவரை போல சாதி மதவெறி அமைப்புகள் இப்படி தான் பேசுகின்றன. இந்த பிரச்சனையை எப்படி நாம் பார்ப்பது? இந்து-முஸ்லிம் என்று பார்ப்பதல்ல.

பாசிச கும்பலை ஒழித்துக்கட்டுவதன் மூலமாக மட்டும் தான் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்கு தான் இங்கு இருக்கூடிய ஜனநாயக சக்திகள், தமிழ் உணர்வாளர்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள், அமைதியை நேசிப்பவர்கள் எல்லோரும் இன்று ஒன்று திரண்டுயிருக்கிறோம். பெரியார் பிறந்த மண் என்று பேசிக்கொண்டிருப்பதிலே பலனில்லை. பெரியாரை செருப்பாலே அடிப்போம் என்று பேசும் அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது என்று சொன்னால் நாம் தோற்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இனியும் இது போன்ற கலவரங்களை தூண்டுகின்ற சக்திகளை நாம் என்ன விலை கொடுத்தேனும் முறியடிக்கவில்லை என்று சொன்னால். எதிர்கால தமிழகம் என்பது ஒரு குஜராத்தாக மாறும் என்ற அபாயமிருக்கிறது.

தமிழகத்தை குஜராத்தாக மாற்றும் என்று கோவை கலவரத்தில் கூட போலீசை வைத்து கொண்டே பேசுகிறான். இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான சூழலிலே நாம் இருக்கிறோம். இன்று பாசிச சக்திகள் மேலும் அதிகாரத்தை பெற்று வருகின்றன. காவல்துறையே பாசிசமயமாகி வருகிறது. எந்த ஜனநாயகத்தையும் அவர்கள் மதிப்பவர்களாக இல்லை. கோவை கலவரத்தை எதிர்த்து கூட்டம் போட்டால் என்ன ஆர்ப்பாட்டம் நடத்தினால் உனக்கு என்ன? போஸ்டர் ஒட்டினால் என்ன?

காவல் துறை கிரிமினல்மயமாகி வருவது மட்டுமல்ல. இந்து மதவெறி கும்பலாக மாறிக் கொண்டிருக்கிறது. அதனுடைய விளைவு தான் கோயம்பத்தூரில் நடந்த கலவரம். கோயம்பத்தூர் கடந்த 15, 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலே ஒரு தனித்து விடப்பட்ட பகுதியாக மாறியிருக்கிறது. தன்னுடைய சொல்லை மீறி காவல்துறை செயல்படாது என்ற அளவில் ஆர்.எஸ்.எஸ் பிடி ஓங்கியிருக்கிறது. ஒட்டு மொத்த காவல்துறையும் கையாளாக இருக்கிறது என்பது மிகப்பெரிய சோகம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டை சீர்குலைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது, அனுமதிக்க கூடாது. ஆகவே உழைப்பாளி மக்கள் நம்முடைய அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்துமத வெறி சக்திகளை முறியடிப்பதில் ஒற்றுமை நிலைநாட்ட வேண்டும் அதை நோக்கி எல்லா சக்திகளும் அணி திரள வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறேன். காவிவெறி கும்பலை தமிழகத்தை விட்டு விரட்டுவோம் என்று கூறி எழுச்சியுரையாற்றினார்.

“ஆர்.எஸ்.எஸ் யை விரட்டியடிக்க‌ தெருக்கள் வாரியாக பகுதி வாரியாக ஏராளமான குழுக்களை நியாயமுள்ளவர்கள், மக்களை பாதுக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயக சக்திகளுக்கு இருக்கிறது.” – தோழர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மாநில செயற்குழு உறுப்பினர்

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-cpm-com-kanagaraj“கோவையில் 23-ம் தேதி தொடங்கி 24, 25 தேதி வரை அவர்கள் கலவரத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மூன்று குழுக்கள் 26-ம் தேதி சென்றிருந்தோம்.

பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடைகள் சூறையாடப்பட்டிருந்தன. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் கொளுத்தப்பட்டிருந்தன. போலிஸ் வண்டி எரிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் தாக்கப்பட்டன. இரண்டு மசூதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கிறது. சர்ச் தாக்கப்பட்டிருக்கிறது. துடியலூர் பகுதியில் ஆறு குடும்பங்கள் வசிக்கிற ஒரு வீடு முழுவதும் முற்றிலுமாக தாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாட்டிறைச்சி கடை கிட்டத்தட்ட சூறையாடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து தான் மாடுகள் திறந்துவிடப்படுகின்றன. கன்றுக் குட்டிகளை தூக்கி செல்வது சமூக வலைத்தளங்களில் வந்திருக்கிறது.

ஒரு சூறையாடுகிற சமூக விரோத கும்பல் போல தான் இவர்கள் நடந்து கொண்டார்கள். அவர்கள் எங்கெல்லாம் திருட முடியுமோ சூறையாட முடியுமோ அங்கெல்லாம் திருடியிருக்கிறார்கள் சூறையாடியிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது. தாக்கப்பட்ட வீடுகளில் இருந்த ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது. இந்த கும்பல் வருகிறது என்ற சொன்ன போது அவர்கள் அந்த வீட்டை காலி செய்ததன் காரணமாக அவர்கள் தப்பித்தார்கள்.

கடந்த 13-ம் தேதி திருப்பூரில் அப்படி ஒரு வன்முறையை செய்ய முயற்சி செய்திருந்தார்கள். 13-ம் தேதி அன்று பக்ரித் அன்று தான் ஒரு பந்த்க்கு அவர்கள் அறைகூவல் விடுகிறார்கள். வேலூரில் இருக்க கூடிய ஒரு இந்து முன்னணி அமைப்பினுடைய ஒரு நிர்வாகியின் அலுவலகத்தில் ஒரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும். எனவே அதை கண்டித்து திருப்பூர் நகரில் ஒரு பந்த் நடத்த போவதாகவும் சொல்கிறார்கள். பக்ரீத் தினத்தன்று முஸ்லீம்கள் வெளியே வரகூடாது என்பது தான் அவர்களின் நோக்கம்.

ஆனால் 12-ம் தேதி அ.தி.மு.க தவிர அங்கிருந்த அனைத்து அரசியல் கட்சிகளும் “அடுத்த நாள் பந்த்தை முறியடிப்போம் என்றும் மக்கள் கடையை திறந்து வைக்க வேண்டும் நாங்கள் பாதுகாப்பு தருவோம்” என்று சொன்னார்கள். தொழிற்சங்கள் அப்படி கூட்டாக அறிவிப்பு விடுத்த பிறகு அவர்கள் 18 -ம் தேதி ஆர்ப்பாட்டம் என்று மட்டும் சொன்னார்கள்.

அதே போல் துடியலூர் பகுதியில் அவர்கள் தாக்குதல் இருந்திருக்கிறது. மகாலட்சுமி என்ற பேக்கரி உரிமையாளர் முதல் தலைமுறையாக இப்போது தான் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கணவனும் மனைவியும் அந்த இடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களிடம் கேட்ட போது இந்து முன்னணி ஒரு விநாயகர் ஊர்வலம் நடத்துகிறது. பி.ஜே.பி ஒரு விநாயகர் ஊர்வலம் நடத்தியிருக்கிறது. இவர்கள் 2000 ரூபாய் பணம் கேட்கிறார்கள். தர முடியாது 500 ரூ மட்டும் தான் தருகிறார் என்று கூறுகிறார். நீ கடை வச்சிருவியா என்று சொல்லிவிட்டு வந்து அந்த கடை முழுவதையும் அழித்திருக்கிறார்கள்.

அதே போல பல இடங்களில் கதவை உடைத்து திறந்து எடுத்திருக்கிறார்கள். யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும். அதே போல இதை தூண்டியவர்களை, இதை திட்டமிட்டவர்களை கடுமையாக ஒடுக்க வேண்டும். டி.ஜி.பி பெரிய பதற்றமடையவில்லை. மாநில காவல்துறை கண்டும் காணாமல் இருக்கும் போக்கை கடைப்பிடித்திருக்கிறது.

யாரெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பது வலைத்தளங்களில் வந்திருக்கிறது அவர்களை கைது செய்ய வேண்டும். ஒரு காவலரிடம் பேசும் போது வெறும் 26 லட்சம் தான் இழப்பு ஏற்பட்டதாக சொல்கிறார். ஊடகங்களில் வந்ததன் மூலமே எவ்வளவு திருட்டு நடந்திருக்கிறது என்பது தெரியும். கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் இப்படி செய்கிறார்கள். இப்படி நடந்தவுடன் போலீசை குவித்திருக்க வேண்டாமா? பொது மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை.

சசிகுமார் புனிதராக கூட இருக்கட்டும். அவரை கொன்றவரை தவிர மற்றவர்களை அடித்த போது காவல்துறை திருப்பியடித்திருக்க வேண்டாமா? இப்படி இருப்பது சமூகத்தை ஒரு காட்டுமிராண்டி கூட்டத்திடம், அவர்கள் தயவில் வாழ்வதற்கு நிர்பந்திக்கும் விஷயமில்லையா? எஸ்.பி.யும் கலெக்டரும் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் என்ன பேசுகிறார்கள் என்றால் நாங்கள் இந்த ஊருக்கு புதியது என்று பேசுகிறார்கள்.

தென்காசி கலவரத்தின் போது குண்டு வைத்து விட்டு முஸ்லிம்களின் தொப்பியை போட்டு விட்டு முஸ்லிம்கள் தான் கொன்றார்கள் என்று சொல்லிவிட்டு போக முடிகிறது. யாரோ ஒன்று இரண்டு அதிகாரிகள் கண்டு பிடித்த பிறகு தான் உண்மை தெரிகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை இந்தியா முழுவதும் நடக்கிறது.140 குண்டுவெடிப்புகளில் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள். உடனடியாக எங்கே குண்டு வெடித்தாலும் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மக்கா மஸ்ஜித் வழக்கில் 70 பேர் கைது செய்யப்படுகிறார்கள். 7 வருடங்கள் கழித்து வேறு அமைப்பு தான் காரணம் இவர்கள் இல்லை கண்டுபிடிக்கிறார்கள். அபினவ் பாரத் என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கிறது. இப்படி பல.

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு கைதானவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். “உள்ளே சிறைக்கு சென்றிருப்பவர்கள் உடனே வெளியே வர வேண்டாம். அங்கே கிரிமினல்கள் உள்ளே இருக்கிறார்கள். எவன் அரிவாளும் கத்தியும் எடுக்க தயாராக இருக்கிறானோ அவனெல்லாம் ஆண்மையுள்ளவன். அவர்களை ஆர்.எஸ்.எஸ் நோக்கத்திற்கு பயன்படுத்த தயார் பண்ணுங்க. உங்களுக்கு வேண்டிய சாப்பாடு எல்லாம் தரப்படும்.” திட்டமிட்டே சமூக விரோதிகளை தங்களுக்காக வெளியே நிற்க வைக்கும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே பரந்துபட்ட ஜனநாயக அடிப்படையில் அளவில் கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்கள் இல்லாதவர்கள் என அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டிருக்கிறது.

ஒரு நல்ல உதாரணம் கோவையில் விஜயா என்ற ஒரு பெண் தோழர் முதலில் 10 பேருடன் சேர்ந்து இவர்களை தடுத்து நிறுத்தினார். எதிரில் 50 பேர் வருகிறார்கள். ஆனால் இந்த பத்து பேரை பார்த்து விட்டு இன்னும் கொஞ்சம் ஆளை கூட்டிக் கொண்டு வருகிறேன் என்று போகிறார்கள். அதற்குள் தெருவில் இருக்கும் எல்லோரையும் கூப்பிட்ட பிறகு அந்த தெருவில் இருந்த வியாபாரிகள் முழுவதும் வந்து திருப்பியடித்திருக்கிறார்கள்.  விரட்டியடிக்க முடிந்திருக்கிறது.

இப்படி தெருக்கள் வாரியாக வீதிகள் வாரியாக ஏராளமான குழுக்களை நியாயமுள்ளவர்கள், மக்களை பாதுக்காக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எல்லாம் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு இருக்கு.

அனேகமாக நம்முடைய தொழிற்சங்களும் அரசியல் கட்சிகளும் இதனுடைய ஆபத்தை முழுமையாக புரிந்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. நாளைக்கே இங்கு மனித சங்கிலி போராட்டம் என்று வைத்தால் தொழிற்சங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனையில் நாம் கலந்து கொள்ள வேண்டுமா என்ற தயக்கம் இருக்கிறது. ஆனால் தனியாக சி.ஐ.டி.யு செய்யட்டும் மற்றவர்கள் போகட்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் காவல்துறை அனுமதி மறுக்கிறேன் என்று சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்க வேண்டிருக்கிறது.

கோவை கலவரத்திலும் கூட மிக அதிகமாக பயன்படுத்தியிருப்பது தலித் சமூகத்தை சார்ந்த இளைஞர்களை அவர்கள் குறி வைக்கிறார்கள். விநாயக சதுர்த்தியை ஒட்டி ஏராளமான பணத்தை கொட்டுக்கிறார்கள். அவர்களுக்கு சாராயம் வாங்கி தருகிறார்கள். அதில் சிலர் எங்கள் பிள்ளைகளை வெளியில் எடுங்கள் என்று இப்போது சொல்கிறார்கள். அவர்களிடமும் 20000 பணம் கேட்கிறார்கள்.

இப்படி கொள்ளை கும்பலை போல நடந்து கொள்கிற ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, சங்பரிவார் அமைப்புகள் மிக திறமையாக ஒவ்வொரு கலவரத்திற்கு பின்பாகவும் ஒரு அரசியல் வெற்றியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். கோயம்புத்தூரும் அதற்கு உதாரணம். இப்போது கூட அவர்களுடைய ஒரு தலைவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் இந்த முறை நாங்கள் 15 வார்டுகளில் கட்டாயம் வெற்றிப்பெற்று விடுவோம். நான்கில் ஒரு பங்கு வார்ட் என்று அவர் சொல்கிறார்.

வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கிறவர்களை அவர்கள் முழுமையாக ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பணம் தருகிறார்கள். ஏராளமான பணம் கொட்டப்படுகிறது. நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் ஒற்றுமை. பரந்துப்பட்ட ஒற்றுமையில்லாமல் இதை முறியடிப்பது என்பது சிரமம். இன்னொன்று இப்படி நிற்கிற போது முஸ்லிம் அமைப்புகள் அல்லது மற்ற அமைப்புகள் என்பதற்கு மாறாக மத நம்பிக்கையுள்ள இந்து மக்கள் நாங்கள் தான் உண்மையான இந்து மக்கள் என்று திருப்பி அடிப்பதற்கு முறையாக நிற்க வைப்பதன் மூலம் தான் இதை நாம் எதிர்கொள்ள முடியும். இத்தகைய இயக்கங்கள் தமிழக மக்கள் மத்தியில் இந்த பிரச்சாரத்தை எல்லா பகுதிகளிலும் கொண்டு போவது அவசியம்.

மக்கள் அதிகாரம் நடத்திகிற இந்த ஆர்ப்பாட்டம் அதனுடைய கோரிக்கைகள் வெல்லட்டும் நன்றி. காவல் துறையானாலும் சரி நிர்வாகமானாலும் சரி வியாபாரிகளாலும் சரி இவர்களிடம் இருக்கக்கூடிய ஜனநாயக பகுதிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் தான் இதை உருவாக்க முடியும். அது போராட்டங்களாக மட்டுமல்லாமல் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

“இந்துக்களின் எழுச்சியா காலிகளின் வன்முறையா?” – விடுதலை ராஜேந்திரன் – திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச் செயலாளர்

kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-com-viduthalai-rajendran
விடுதலை ராஜேந்திரன்

மக்கள் அதிகாரம் தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக இந்த கண்டன ஆர்ப்பட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.

நேற்று திருப்பூரில் இதே போல ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். 2000-க்கும் மேற்பட்ட மக்களை கைது செய்திருக்கிறார்கள். தடையை மீறி அவர்கள் போராடியிருக்கிறார்கள். இந்த கோவை கலவரத்தை மட்டுமே வைத்து கொண்டு அந்த ஒரு பிரச்சனையை மதவெறி சக்திகளோடு இணைத்து ஒரு எல்லைக்கோடு போட்டு கொண்டு முடித்து விட முடியாது. ஒட்டு மொத்தமாக இந்த சக்திகள் எப்படி கலவரத்திற்கு திட்டமிடுகின்றன. இவர்களுக்கு பின்னால் உண்மையிலேயே இந்துக்கள் என்று சொல்லப்படுகின்ற மக்கள் அணிதிரணடிருக்கிறார்களா? இந்த சக்திகளிடமிருந்து மக்களை எப்படி நாம் பிரித்து எடுக்க போகிறோம். அதற்கு எந்தெந்த முறைகளை நாம் கையாள போகிறோம் என்பது தான் நம் முன்னே உள்ள முக்கிய பிரச்சனையாக உள்ளது.

சில வன்முறையாளர்களை தேடிப்படித்து சிறையில் இருக்க கூடிய முன்னால் குற்றவாளிகளை  வெளியே கொண்டு வந்து வெளி மாநிலங்களிலிருந்து சில கலவரக்காரர்களை கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் வைத்து கலவரங்களை திட்டமிட்டு நடத்துகிறார்கள். அதன் வழியாக  ஒட்டுமொத்தமாக இந்துக்களின் எழுச்சி என்ற ஒரு பொய்யான ஒரு மாயையை அவர்கள் உருவாக்கும் முயற்சிதான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர இந்த கலவரக்காரர்களுக்கு பின்னால் எந்த மக்களும் அணிதிரண்டு நிற்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இது ஆர்.எஸ்.எஸ் தோன்றிய காலத்திலிருந்தே அவர்கள் உருவாக்கிய உத்தி, ஒரு இடத்தில் ஒரு கலவரத்தை உருவாக்குகிறார்கள் என்று சொன்னால் அந்த கலவரத்தின் வழியாக மக்களை கூறுபோட்டு அவர்களில் ஒரு பகுதியை தனக்காக வென்றெடுப்பது என்பது ஆர்.எஸ்.எஸ் காலங்காலமாக பின்பற்றுகின்ற நடைமுறை. ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து வடநாட்டிலே இது பின்பற்றப்பட்டு வந்தது. வடநாட்டில் இந்த முறைக்கு ஓரளவு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்.

ஆனால் அப்படிப்பட்ட ஒருநிலை தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதற்கான சூழல் தமிழக மண்ணை பொருத்தவரை கிடையாது. பெரியார் பிறந்த மண் என்று சொன்னால், ஏதோ இங்கிருக்கும் மண்ணை குறிப்பதாக அர்த்தமல்ல மாறாக மண்ணினுடைய ஒரு சிந்தனையோட்டம் என்பதை தான் அது உணர்த்துகிறது. வடநாட்டில் ஒரு மதக்கலவரம் துவங்குகிறது என்று சொன்னால், ஒரு இடத்தில் தொடங்கும் கலவரம் ஊர் கலவரமாக மாறி மாவட்ட கலவரமாக மாறி மாநில கலவரமாக மாறும். அளவிற்கு கொண்டு போக கூடிய ஒரு மதவெறி என்பது படிந்து போயிருக்கிற ஒரு சூழல் வடமாநிலங்களில் இருந்தாலும் தமிழகத்தில் நீங்கள் என்னதான் முக்கி முக்கினாலும் கலவரத்தை உருவாக்கினாலும் அந்த கலவரம் அந்த பகுதியை தாண்டி அடுத்த பகுதிக்கு இவர்களால் கொண்டு செல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒரு கண்டிப்பான சூழலில் தான் அவர்கள் இயங்க வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட வன்முறை சக்திகள் கலவரத்தை தூண்டி மக்களை அணிதிரட்டுகின்ற ஒரு முயற்சியை நாம் எவ்வாறு முறியடிக்கப்போகிறோம் என்பதை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்து முன்னணிக்காரர்கள் தான் இப்படி நடத்து கொள்கிறார்கள் என்பதல்ல மத்தியிலே இருக்க கூடியவர்கள் கோவையில் கலவரம் செய்த இந்து முன்னணிக்காரனை விட மிக மோசமான மனநிலை உள்ளவர்களாக இருப்பதை நாம் பாத்துக் கொண்டிருக்கிறோம்.

உலக வங்கிக்காரனிடம் ஒப்பந்தம் போட்டு 1960-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் இருக்கிறது. அந்த நதி நீரை நான் உனக்கு தர மாட்டேன் என்று அடாவடி செய்கிறார்கள். கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு எப்படி தண்ணீர் தரமாட்டேன் என்று ஒரு கன்னடவெறியோடு பேசுகிறானோ அதே பார்வையில் நான் உன்னை பழிவாங்குவேன் என்று நாட்டை ஆளுகின்ற நிலையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். பிரதமராக இருக்க கூடியவருடைய யோக்கியதை இப்படி இருக்கிறது.

தண்ணீர் தர முடியாது என்று இவர்கள் சொன்னவுடன் அதிகாரிகளெல்லாம் விளக்கம் தருகிறார்கள். அந்த முடிவிலிருந்தே பின்வாங்கி விட்டோம் என்று சொல்கிறார்கள். நாங்க பேசினால் தேச விரோதி என்பீர்கள் இப்போது ஆங்கில, தமிழ் ஹிந்து தினசரி பத்திரிகையில் எழுதுகிறார்கள். ஆனந்த விகடனில் எழுதுகிறார்கள் நிதானம் காட்டுங்க என்று எழுதுகிறார்கள். இரண்டு பேரும் அணு ஆயுதத்தை வைத்து கொண்டிருக்கிறான் யாருக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது.

இஸ்லாமியர்கள் என்று சொன்னால் அவர்களை எதிரியாக சித்தரித்து அவர்கள் மீது ஒரு யுத்தத்தை தொடங்க வேண்டும். மதம் என்கின்ற உணர்வை வெறியாக மாற்றுவதற்கு ஒரு சின்ன எல்லைக்கோடு தான் இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் ஒரு வெறியாட்டத்திற்கு தயாராக இல்லையென்றாலும் அவர்கள் உணர்வுகளை வெறியாக மாற்றுவது என்பது இன்று கட்டமைக்கப்படுகிறது.

பெரியார் கூட சொல்லியிருக்கிறார் மனிதன் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளிலேயே கடவுள் என்ற கண்டுபிடிப்பை விட மதம் என்ற கண்டுபிடிப்பு மிகவும் ஆபத்தானது. கடவுள் முன்னாடி எல்லாரும் சமம் என்று சொன்னால் எல்லோரும் ஏற்று கொள்வார்கள் எல்லா மதத்துக்காரனும் ஒன்று என்று சொன்னால் எந்த மதத்துக்காரர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள். சமூகத்தில் இருக்கும் அமைப்புகளிலேயே மோசமான ஒரு அமைப்பாக மாறிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வாதம் மதவெறியோடு முடிச்சு போடும் போது மிகவும் எளிதாக மாறுகிறது.

பெரும்பான்மை மக்கள் இன்று சுரண்டப்படும் மக்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அடிப்படை உரிமையில்லாமல் இருக்கிறார்கள். இந்துக்கள் நாங்க பெரும்பான்மையாக இருக்கிறோம் என்று பேசுகிறார்கள். சரிசமம் என்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்பது எங்கே வருகிறது. பெரும்பான்மை என்பது தவறான கோட்பாடு.

தேசபக்தியை மதவாதத்தோடு இணைக்கிறான். ‘மதவாதம் தான் தேசபக்தி. தேசபக்தனாக இருப்பவன் மதவாதத்தோடு தான் இருக்கனும்’ என்கிறான். தேச வெறியை கட்டமைத்து அதன் மூலம் மதவெறியை தூண்டுகிற ஒரு ஆபத்தாக இருக்கிறது.

தேசம் என்பது யாருக்காக? தேசம் என்றால் என்ன. மக்களுக்காகத் தான் தேசம், தேசத்திற்காக மக்கள் இல்லை. மக்களுக்கு அதிகாரமுள்ள ஒரு தேசத்தை நாம் உருவாக்குவோம்.

சாதி, மதம் யாரும் ஏற்று கொள்ளப்பட்ட அடையாளம் இல்லை. மக்களுக்கான, மக்கள் விடுதலைக்கான அடையாளத்தை நாங்களே தேர்ந்தெடுத்து கொள்கிறோம். இந்த அடையாளத்தில் குறுக்கிடுக்கின்ற மதமாக இருந்தாலும், சாதியாகயிருந்தாலும், தேசமாகயிருந்தாலும் அதை எதிர்த்து பெரியார் மொழியில் பேசுகின்ற ஒரு போராட்டம் இங்கு வர வேண்டும்”

தகவல்

மக்கள் அதிகாரம்,

சென்னை

இறுதி மூச்சு இருக்கும் வரை இந்து முன்னணியை விடமாட்டோம் !

0

கோவை இந்து முன்னணி கலவரம் – சென்னை ஆர்ப்பாட்ட உரைகள் – 1

ந்துமதவெறி காவி கூட்டம் சமீபத்தில் கோவையில் நடத்திய அட்டூழியத்தை எதிர்த்து, முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அக்டோபர் 1, 2016 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட உரைகள் – 1

“பக்தி இல்லாவிட்டாலும் நட்டமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்” – தோழர் குமரன், மாவட்டச் செயலாளர், த.பெ.திக

தோழர் குமரன்
தோழர் குமரன்

“தோழர்களே, செப்டம்பர் 22 அன்று இரவு சசிக்குமார் வெட்டிக்கொல்லப்படுகிறார். செப்டம்பர் 23-ம் தேதி ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. எதற்கு 12 மணி நேர இடைவெளி? தமிழகம் முழுவதும் இருந்து ஆட்களை திரட்டுவதற்கு அந்த இடைவெளியை கொடுத்து உள்ளது காவல்துறை. 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கிறது.

சிறையில் கொல்லப்பட்ட ராம்குமார் சடலத்தை பார்க்கக் கூட அனுமதி இல்லை. ஆனால், கோவையில் கலவரம் செய்ய அனுமதி உண்டு. 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி உண்டு. கலவரம் செய்த அத்தனைபேரும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள்தான். ஒருவன் கூட பார்ப்பனன் கிடையாது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாஸ்போட், விசா முடக்கப்படும் என்று காவல்துறை அறிவித்து இருக்கிறது. அதிலும் நம்ம முண்டங்கள்தான் பாதிக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் அல்ல.

ஒவ்வொருமுறை வினாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னரும் கலவரம் வருகிறது, ஊர்வம்பு வாங்கியதற்கு கொல்லப்படுகிறார்கள். வினாயகர் சதுர்த்தியில் வசூலை பிரித்துக்கொள்வதில் மோதல் வருகின்றது. இதற்கு கொலை நடக்கிறது. திண்டுக்கலில் தாங்களே பெட்ரோல் பாம் வீசிக்கொண்டு இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்கள்.

ஆணவக்கொலையில் எவ்வளவு பேர்கள் கொல்லப்படுகிறார்கள்! அவர்களுக்கு எச்சு ராஜா போன்ற யாராவது குரல் கொடுக்கிறார்களா? ஒரு நாய் குரல் கொடுக்கிறதா? அவர்கள் இந்துக்கள் இல்லையா? தாழ்த்தப்பட்ட பெண்கள் வன்புணர்வு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், இதைக்கேட்க துப்பில்லையா?

யார் இந்து? பார்ப்பனர்கள் தானே சிறுபான்மையினர்? தன்னை பெரும்பான்மையினராக மாற்றிகொள்ள இந்து என்ற போர்வையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள். கலவரம் செய்கிறார்கள். அன்றே பெரியார் சொன்னார் “பக்தி இல்லாவிட்டாலும் நட்டமில்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்”. அவர் சொன்னது கோவையில் நடந்ததா இல்லையா? இம்மாதிரி நேரத்தில் இப்படிப்பட்ட கண்டனக்கூட்டத்தை நடத்திய மக்கள் அதிகாரத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இப்போராட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”

“இறுதி மூச்சு இருக்கும் வரை இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை விட மாட்டோம்” -தோழர் பிரின்ஸ் என்னரெசு பெரியார், மாநில மாணவர் செயலர், திராவிடர் கழகம்

தோழர் பிரின்ஸ் என்னரெசு பெரியார்
தோழர் பிரின்ஸ் என்னரெசு பெரியார்

“எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக போராடுவோம் என்ற உணர்வு இருக்கக்கூடிய அருமைத்தோழர்களே! இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கும் தோழர்களே தலைவர்களே! அனைவருக்கும் வணக்கம்.

மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் ஏராளமான செய்திகளை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாம் யாருக்கு முக்கியமாக என்றால் நம்மைச் சுற்றி நம் பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டுள்ள அல்லது இந்துத்துவ சக்திகள் இங்கே வந்தால் அவர்களின் பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டுள்ள காவல் துறையினருக்குத்தான். காவல்துறையில் பணியாற்றக்கூடிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர்கள், பெண்கள் இவர்கள் அத்தனை பேருக்குமாக போராடக்கூடிய பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்புக்கள் போராடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் யாருக்காக போராடுகின்றோமோ அவர்களைக்கொண்டுதான் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களைக்கொண்டுதான் கலவரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன. அப்படித்தான் இந்த அரசாங்க கட்டமைப்பு அமைக்கப்பட்டு இருக்கின்றது. நாம் யாருக்காக போராடுகிறோமோ யார் தன்னை இந்து என்று சொல்கிறானோ யார் அந்த இழிவை சுமந்து கொண்டு இருக்கின்றானோ அவன் இச்செய்திகளைக் கேட்க வேண்டும்.

இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதை தோழர்கள் பதிவு செய்தார்கள். இந்தியா முழுவதும் ஏராளமான வரலாறுகள் அதற்கு சாட்சிகளாக இருக்கின்றன. பாபர் மசூதி தொடங்கி பிரியாணி திருட்டுவரை அப்படித்தான் நடைபெற்று இருக்கின்றது. முகநூலிலே எவ்வளவு ரூபாய் பணம் கொடுத்தால் எவ்வளவு பேர்களை கொலைசெய்வேன் என்றும் அதற்கு இவ்வளவு பணம் பேங்க் அக்கவுண்ட்டில் போட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவிக்கின்ற இந்துத்துவ ரவுடிக்கும்பல் இருக்கின்றதே காவல் துறையின் உளவுத்துறை என்ன செய்துகொண்டு இருக்கின்றது?

இல.கணபதி அனுமான் என்பவன் ஒரு பதிவைப் போடுகிறான். 1000 ரூபாய், 5000 பேர் எனக்கு அனுப்பினால் அடுத்தமாதம் 5 பேருக்கு பூஜைகள் போடப்படும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்களே. 1980-களிலே தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் நுழைகிறபோது ஆசிரியர் வீரமணி அய்யா சொன்னார் “கூலிப்படைதான் ஆர்.எஸ்.எஸ்” என்று. இன்று இந்து மக்கள் கட்சி, வி.ஹெச்.பி, இந்துமுன்னணி… மயிறு மக்காணி என்று வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை தகுதி என்ன? கட்டப்பஞ்சாயத்து செய்வதும் பொறுக்கித்தனம் செய்வதும்தானே?

500 பேரைக்கொன்னால் பிரதமர் வேட்பாளர். 2000 பேரைக் கொன்றால் பிரதமர். அதுதானே அதிகபட்ச அளவுகோல். ஆக இந்தக் கட்சியில் சேர்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? காவல்துறையின் பட்டியலிலே குண்டாஸ் பட்டியலிலே இருப்பவர்கள் தானே அவர்கள் . இவர்களை ஒடுக்குவதற்கு எங்களைவிட யாருக்கு அக்கறை இருக்க வேண்டும்.

கர்நாடகாவில் முத்தாலிக் என்று ஒருவன். காதலர்தினம் கொண்டாடியபோது முகத்தில் பூசியதும் தாக்குதலை நடத்தியதும் அவன்தான், அவனுக்கு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை அனுப்பியது வேறு செய்தி. அந்த முத்தாலிக் என்பவனைப்பற்றி தெகல்கா ஸ்டிங் ஆப்ரேசன் மூலம் ஒரு செய்தியை கொண்டு வந்தது அதாவது “ ஒரு ஊரில் கலவரம் நடத்த வேண்டும் என்றால் 60 லட்ச ரூபாய் கொடு. நான் கலவரம் செய்து தருகிறேன் ” என்று அவன் தன் வாயால் ஒப்புதல் அளித்திருக்கிறான் . அவன் கைது செய்யப்பட்டு இருக்கின்றானா?

வன்முறையாளர்கள் இந்துத்துவா வேடத்தில் காவியைக்கட்டிக்கொண்டு கலவரம் செய்கிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்கு பார்ப்பனர்கள், பார்ப்பனர்கள் சொன்னால் செய்வதற்கு காவலர்கள் என்று இந்த அமைப்பே தெளிவாக திட்டமிடப்பட்டு உள்ளது. எங்களைவிட யாருக்கு அக்கறை வேண்டும் என்றால் அரசுக்குத்தானே? அப்படி நடைமுறையில் இல்லையே. அதை நடைமுறைப்படுத்தி வருவதுயார்? அத்தனை ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து நிற்பதுதான் அதற்கான அடையாளம்.

இந்த நாட்டின் மக்களுக்காக போராடுவது யார்? ஏன்? பார்ப்பனர்களுக்கு எதிராகப் போராடுவது யார்? கருப்புச் சட்டைகளும் சிவப்புச் சட்டைகளும் தானே. சங்கரராமனை கொன்றவர்களை கைது செய்யப் போராடியது யார்? சுவாதி கொலைவழக்கில் விசாரணை நடத்தாதே என்கிறான் அவன்? விசாரணை செய் என்று நாம் தானே சொல்கிறோம். பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் அதற்கு இது பெரியார் பிறந்த மண் என்பதுதானே காரணம்.

“கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாளு கமிஷனர் எல்லாம் அவாளு” என்ற முழக்கத்தை முன்வைத்தோம் . காவல்துறையினரே உங்களுக்கு பாதுகாப்புகூட எங்களைப்போன்ற அமைப்பில் தான் கிடைக்குமே தவிர அங்கு இல்லை. ஆனால் எங்களைப்போன்ற ஜனநாயக சக்திகளுக்கு என்ன செய்தீர்கள் தெருமுனைக்கூட்டம் நடத்த தடை, பிரச்சாரம் நடத்த தடை, ஆர்ப்பாட்டம் நடத்த தடை, மாநாடு நடத்த தடை. இங்கே உள்ள பெரியாரிய இடதுசாரி அமைப்புக்களுக்கு எல்லாம் தடையைப் போட்டால் இந்துத்துவ அமைப்புக்கள் வளராமல் வேற என்ன எழவு வளரும்?

எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மருத்துவருக்கு, நோய்த்தடுப்பு ஊசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் தொற்றுநோய்கள் தான் பரவும்.

இது பெரியாருடைய மண். இந்த மண்ணிலே கழிவு நீரை கொட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் முயல்கிறது ஒருபோதும் அதை விடமாட்டோம். இறுதி மூச்சு இருக்கும் வரை இறுதிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை விட மாட்டோம். இத்தகைய பொதுவான களங்களில் நாம் அணி திரளவேண்டும்.”

“நாட்டை அச்சுறுத்துவது எது?” தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு

தோழர் கணேசன்
தோழர் கணேசன்

“ஆர்.எஸ்.எஸ் நடத்துகின்ற காவி பயங்கரவாதம், ராணுவமும் போலீசும் நடத்துகின்ற அரச பயங்கரவாதம். இதை யாரும் மறக்க முடியுமா?

கோவையில் நடைபெற்றதை பற்றி பல்வேறு பத்திரிகைகள் பல்வேறுவிதமாக கருத்துக்கள் கூறி வரும் நிலையில் பார்ப்பன பயங்கரவாதத்தை பரப்பும் துக்ளக்கோ சசிக்குமார் மரணத்திற்கு கோவை கொந்தளித்தது என்று எழுதுகிறது. பெரியார் பிறந்த மண்ணில் சோ ராமசாமிக்கு இந்தத்திமிர் எங்கிருந்து வந்தது. கோவைக்கலவரத்தை ஆதரித்து எழுதுகிறார். மக்கள் கொந்தளித்தார்களா? இல்லை.

தமிழகம் முழுவதும் பார்ப்பன பரிவாரக்கும்பல் திரட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்து மதவெறி பயங்கரவாதத்தை அடிமட்டத்தில் இருந்து தூண்டிவிட்டு கலவரம் செய்தே ஆட்சியை பிடிப்பதுதான் பி.ஜே.பி.யின் வேலை. அப்படித்தானே முசாபர் நகரில் கலவரத்தை உருவாக்கி மோடி ஆட்சியைப்பிடித்தார். அப்படி ஒன்றை ஏற்படுத்த தமிழகத்தில், பெரியார் பிறந்த மண்ணில் துடிக்கிறார்கள். அதற்கான முயற்சிகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுத்தாலும் இந்து பயங்கரவாதசக்திகள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

காவிரியில் தண்ணீர் தர மறுத்து அங்குள்ள தமிழர்களை எப்படி தாக்கினார்களோ அப்படித்தான் இங்கும் கோவையிலும் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கலவரம் செய்ய ஆட்கள் சிறையிலிருந்து கிடைக்கிறார்கள். அதனால்தான் போலீசுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் அப்படி ஒரு நெருக்கம்.

கோவையிலும் திருப்பூரிலும் பல்வேறு வேலைக்காக குவிகிறார்கள். ஏதாவது குற்றம் செய்யும் இளைஞர்களை சிறையிலிருந்து கொண்டு வந்து ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியின் அடியாட்படையாக மாற்றுகிறார்கள். இந்து முன்னணியின் – பார்ப்பன பரிவாரகும்பலின் நபர்கள் அனைவரும் பொறுக்கிகள்தான். கிரிமினல்கள்தான்.

இவர்களைப்போலத்தான் சசிக்குமாரும் ஏனைய பரிவாரக்கும்பலும். இவர்கள் எப்படி சாவார்கள்? 3 நாட்கள் கோவையை ஸ்தம்பிக்க வைத்து இருக்கிறார்கள். எங்கள் ஆட்கள் செத்தால் தமிழகத்தில் யாரும் நிம்மதியாக வாழமுடியாது என்ற நிலையை உருவாக்க நினைக்கக்கிறார்கள். எப்படி குஜராத்தில் கலவரம் செய்து மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தார்களோ அப்படி தமிழகத்திலும் ஒரு நிலையை உருவாக்க துடிக்கிறார்கள்.

ஐ.ஐ.டி.யில் பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராக பு.மா.இ.மு.வும், அ.தி.மு.கவைத்தவிர அனைத்து கட்சிகளும் களத்தில் நின்ற போது பின்வாங்கியது பார்ப்பன கும்பல். என்றாலும் கூட மீண்டும் முயல்கிறார்கள். கோவையில் துண்டறிக்கைகளை கல்லூரியில் கொடுத்தால் கூடாது என்கிறது ஆர்.எஸ்.எஸ், பிஜேபி. மாணவர்களை திரட்டி எதிர்கொள்கிறது பு.மா.இ.மு. இந்துத்துவ கும்பலின் வானரங்கள் வரவில்லை. மாறாக போலீசு வந்து நிற்கிறது. ‘ஏன் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறீர்கள்? அமைதியாக போ’ என்கிறது. ஏன் பெரியார் திடலில் போலீசு வந்து தாலியறுப்பு நிகழ்ச்சிக்குப்பின்னரும் கூட மற்ற நிகழ்ச்சியை நிறுத்த சொல்கிறது. அவர்களுக்கு ஒரு அஜெண்டா உள்ள இந்த நாட்டை பார்ப்பனீயமாக, இந்து ராஷ்டிரமாக மாற்றவேண்டும் என்பதுதான் அது.

அதற்காகத்தான் மாணவர்களை கவர்ந்து இழுக்க அரசின் துணையோடு போலீசோடு சேர்ந்து கல்லுரிகளுக்குள் நுழைகிறார்கள். கோவையில் முழக்கமிடுகிறார்கள் “ தமிழகத்தை குஜராத்தாக மாற்றிக் காட்டுவோம்” என்று.இவர்களின் கலவரங்களுக்கு எதிராக என்ன செய்ய முடியும் என்கிறார்கள். ஏனென்றால் ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில். இன்றுமட்டுமல்ல. எப்போதும் அப்படித்தான்.

போலீசு கலவரத்தை தடுக்காது. முடியவில்லை என்பதல்ல அது தடுக்காது என்பதுதான் உண்மை. போலீசு இந்து மனசாட்சி கொண்ட அமைப்பு. குஜராத்தில் கலவரத்தை செய்தது ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல போலீசும்தான். அப்படித்தான் கோவையிலும் செய்தார்கள்.மேலிருந்து கீழாக அப்படித்தான் போலீசு துறையே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரான துறை.

கர்நாடகாவில் தமிழகர்களைத்தாக்கிய ஆர்.எஸ்.எஸ் கும்பலை கண்டித்து அதன் தலைமையகமான சென்னை சேத்துப்பட்டில் 20-க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் முற்றுகையிட்டார்கள். அப்போது 50 ஆர்.எஸ்.எஸ் காலிகளோடு போலீசும் சேர்ந்து கொண்டு பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் இருந்து கொண்டு முற்றுகையிட வருபவர்களை ஒருகை பார்க்கலாம் என்று நிற்கிறார்கள். அன்றையை கொந்தளிப்பான சூழலில் பின் வாங்கி இருந்தார்கள். கர்நாடகாவில் தமிழர்களை தாக்கும் போதும் கோவையில் மக்களைத்தாகும் போதும் போலீசு எப்படி இருந்ததோ அப்படித்தான் இங்கும் இருந்தது. கர்நாடகாவில் நடைபெற்ற கலவரத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக ஒரு கும்பலை எப்படி கூடவிடலாம்? அதற்கு தலைமை உத்தரவு போடவேண்டிய அவசியம் இல்லை. போலீசின் மனசாட்சியே அப்படித்தானே உள்ளது.

அதனால் தோழர்களே, உழைக்கின்ற மக்களே, நண்பர்களே நம்முடைய கடமை மிகப்பெரியது. ஆர்.எஸ்.எஸ் அபாயம் நாட்டை அச்சுறுத்துகிறது. தமிழகத்தையும் கைப்பற்றத்துடிக்கிறார்கள். ஆனால் ஒன்றை மறந்துவிட்டார்கள் 2002-ல் தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் குஜராத் இன்று எப்படி இருக்கின்றது?

எந்த தலித்துகளை பயன்படுத்தி கலவரம் செய்தார்களோ அந்த தலித் மக்கள் இன்று அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். செத்த மாடுகளைக்கொண்டு அரசு அலுவலகங்களிலும் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி அலுவலகங்களிலும் நிரப்புகிறார்கள். இந்தியா முழுவதும் இதுதான் பி.ஜே.பி கும்பலுக்கு இனி நேரப்போகும் கதி . அதை தமிழகத்தில் நிரூபித்துக்காட்டுவோம். தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்கிறார்கள். அதுமுடியாது என்று அவர்களுக்கு மரண அடி கொடுப்போம், அதை செய்து காட்டுவோம்.

மாணவர்களை, இளைஞர்களை, மக்களை, தமிழின உணர்வாளர்களை ஓரணியில் திரட்டுவோம். ஆர்.எஸ்.எஸின் பி டீம் ஆக இருக்கும் அ.தி.மு.க.வையும் வீழ்த்துவோம். தோற்றுப்போனது இந்த காவல்துறை. மக்களுக்கு எதிராய்ப்போனது இந்த காவல் துறை. ஆர்.எஸ்.எஸ் எப்படி மக்களுக்கு எதிரியோ அப்படித்தான் காவல்துறையும் இந்த அரசுக்கட்டமைப்பும். கண்டிப்பாக மக்களின் பாதுகாப்பை இவர்களிடம் விடமுடியாது. நாமே அதிகாரத்தை கையில் எடுப்போம் என்று சொல்லும் மக்கள் அதிகாரத்தோடு இணைந்துதான் இந்த ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரக் கும்பலுக்கு முடிவு கட்ட முடியும். இந்தக்காலித்தனத்தை தமிழ் மண்ணில் இருந்து வேரறுக்க முடியும். அதற்கு அனைவரும் அணி திரள வேண்டும்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை