தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.
இந்தச் சாவுக்கு காரணம் மருத்துவர்களின் அலட்சியமோ, ஊழியர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளின் பற்றாக்குறையோ அல்ல; தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைவு, இளவயது திருமணம், குழந்தைகளின் எடைக் குறைவு, மூச்சுத் திணறல் நோய் போன்றவையே மரணத்துக்குக் காரணம் என்று மருத்துவத்துறை அதிகார வர்க்கமும் அரசும் கூறுகின்றன.
“போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. மொத்தத்தில் சுமார் 400 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் 28 குழந்தைகளைக் கவனிக்க இரண்டு செவிலியர்கள்தான் உள்ளனர். போதிய இன்குபேட்டர்கள் இல்லாத காரணத்தால் ஒரு இன்குபேட்டரில் 2,3 குழந்தைகள் வைக்கப்படுகின்றனர். கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் உதவித்தொகை மாதக்கணக்கில் வழங்கப்படுவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய மருத்துவர்களோ, மருத்துவக் கருவிகளோ இல்லை – இவை போன்றவையே குழந்தைகளின் மரணத்துக்கான உண்மையான காரணங்கள்; இவற்றை அரசு இருட்டடிப்பு செய்கிறது” என்று ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும், சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்களும் கூறுகின்றனர்.
மருந்தில்லை, மருத்துவரில்லை, கருவிகள், கட்டில்கள் இல்லை என்பனவெல்லாம் மறுக்கவியலாத உண்மைகள்தாம். படுப்பதற்கான பாயைக்கூட பிரசவத்துக்கு வரும் பெண்கள்தான் கொண்டுவர வேண்டும் என்பது தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எழுதப்படாத விதியாக இருக்கிறது என்கிறார்கள் மக்கள். பற்றாக்குறைகள்தான் பிரச்சினையா? போதுமான மருத்துவர்களும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருந்திருந்தால் இத்தகைய மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பதுதான் இதிலிருந்து எழும் கேள்வி. இதற்கெப்படி விடை காண்பது? தற்போது பதவியில் இருக்கும் மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தையிலிருந்துதான் இதற்கான விடை நமக்குக் கிடைக்கிறது.
தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்த செய்தி வெளியானவுடனே, “இதெல்லாம் சகஜம், தேசிய சராசரியை விட இந்த சாவு எண்ணிக்கை குறைவுதான்” என்று பதிலளித்தார் அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன்.
மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிராத இந்த மருத்துவர்களிடமிருந்து நோயாளிகள் என்ன சேவையைப் பெற்றுவிட முடியும்?
“விலங்குகளைப் போல குளிர்காலத்தில் கூடுவதால் இந்த சீசனில் பிரசவமும் அதிகம், மரணமும் அதிகம் என்ற பொருள்பட, இதெல்லாம் திருப்பதி சீசன் போல ஒரு சீசன்” என்று விசாரிக்கச் சென்ற மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் திமிராகப் பேசியிருக்கிறார் மருத்துவமனையின் டீன் நாராயண பாபு. “மதுரை மருத்துவமனையில் கூடத்தான் ஒரே நாளில் 66 குழந்தைகள் இறந்தன” என்றது மருத்துவர்கள் சங்கம். “மருத்துவர்களையும் ஊழியர்களையும் குறை சொல்லாதீர்கள்” என்று எச்சரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்.
இவர்கள் யாருடைய அறிக்கையிலாவது பாதிக்கப்பட்ட மக்கள் மீதான கரிசனையோ, குழந்தைகளின் மரணம் குறித்த துயரமோ, இந்த மரணங்களை எப்படித் தடுப்பது என்ற அக்கறையோ கடுகளவேனும் தென்படுகிறதா? இவர்களுடைய பேச்சு முழுவதும் நிரம்பி வழிவது அதிகார வர்க்கக் கொழுப்பு, மக்களுக்கு எதிரான வன்மம், ஏழைகள் மீதான வெறுப்பு, மேட்டுக்குடி வர்க்கத் திமிர் ஆகியவை மட்டும்தான்.
மருத்துவர் பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை என்பதெல்லாம் உண்மைதான். எனினும், இரக்கமற்ற இத்தகைய கொடூரர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதனால் மக்கள் அடையப் போகின்ற பயன் என்ன? இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை என்ற பொருளில் தனியார் மருத்துவக் கொள்ளைக்கு மாற்று அரசு மருத்துவமனை என்று கூறப்பட்டாலும், மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிராத இந்த மருத்துவர்களிடமிருந்து நோயாளிகள் என்ன சேவையைப் பெற்றுவிட முடியும்?
தற்போது தருமபுரி சாவுகள் அம்பலமான பின்னர், இறந்து போன பெரும்பான்மையான குழந்தைகளின் தாய்மார்களை கவுன்சலிங் செய்கிறோம் என்ற பெயரில் வெளியே விட மறுக்கிறது மருத்துவமனை நிர்வாகம். வெளியேறிய தாய்மார்களிடம் இறந்துபோன குழந்தைகளின் கேஸ் ஷீட் தரப்படவில்லை. இறந்துபோகும் குழந்தைகளின் உடல்களை, ஏழைப் பெற்றோரிடம் நள்ளிரவில் ஒப்படைத்து வெளியேற்றுவதன் மூலம் சாவுக் கணக்கை குறைத்துக் காட்டும் தந்திரம் இந்த மருத்துவமனையில் நீண்ட காலமாக நடப்பதும் தெரிய வந்திருக்கிறது. லாக்-அப் கொலையை மறைக்கும் பொருட்டு தடயங்களை அழிக்கும் காக்கி உடைக் கிரிமினல் கும்பலின் அதே உத்தியைத்தான் இந்த வெள்ளை உடைக் கிரிமினல்களும் கடைப்பிடிக்கிறார்கள்.
கொலைக்கூடமான மருத்துவமனை
போலீசு, அதிகார வர்க்கம், நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பின் உறுப்புகள் தாம் அறிவித்துக் கொண்ட நோக்கத்துக்கு நேர் எதிராகச் செயல்படுவதை அன்றாடம் பல செய்திகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. கனிமவளக் கொள்ளையை தடுக்க ஏற்படுத்தப்பட்ட துறையே திருட்டுக்கு ஏற்பாடு செய்து தருவது போல, சட்டம் – ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
__________________________________ புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014 (தலையங்கம்)
__________________________________
போதை மருந்து கடத்தியதாகப் பொய்வழக்கு சோடிக்கப்பட்டு, கடந்த 2011 நவம்பரிலிருந்து இலங்கைச் சிறையில்அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனை வரை போய், அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள், இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள். ஒருபுறம் பொய்வழக்கு என்ற சதி; இன்னொருபுறம் மீட்பு, விடுதலை என்ற நாடகம் என்பவைதான் இதன் பின்னுள்ள உண்மைகள்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரசு கூட்டணி அரசு தமிழக மீனவர் பிரச்சினையில் அலட்சியம் காட்டுவதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமையை மாற்றியமைப்போம் என்றும் மோடி சவடால்அடித்தார். மோடி ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுடுவதில்லை என்பதைக் காட்டி, மோடியைக் கண்டு இலங்கை அரசு அஞ்சுவதாக ஒரு மாயத் தோற்றத்தை இந்துவெறி கும்பலும் பார்ப்பன ஏடுகளும் உருவாக்கின. மீனவர்களைச் சுடாதீர்கள், படகுகளை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று ராஜபக்சேவிடம் கூறியுள்ளதாக சு.சாமி திமிராகப் பேசினார்.இதன் அடுத்த கட்டமாக, தூக்குத் தண்டனை விதித்து தமிழக மீனவர்களைஅச்சுறுத்தும் கிரிமினல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது
இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனையும் உள்ளடங்கியிருந்தாலும், 1976-க்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு அரசுத் தலைவர் பொதுமன்னிப்பு வழங்கி அது ஆயுள் தண்டனையாக்கப்படுவதுதான் வழக்கமாக உள்ளது. கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் போதைமருந்து வைத்திருந்ததற்கான எவ்வித ஆதாரத்தைக்கூட காட்டமுடியாத நிலையிலும், வேண்டுமென்றேதான் இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியிருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதான பொய்வழக்கை ரத்து செய்யவும், அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மோடி அரசின் வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வழக்குரைஞர் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழக அரசுதான் ரூ 20 லட்சத்தை இந்திய வெளியுறவுத்துறையின் மூலம் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனாலும், சிறையிலுள்ள மீனவர்களைச் சந்தித்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தூதரக அதிகாரி மேற்கொண்டாரென்றும், பிரதமர் மோடி அவர்களைத் தமிழகச் சிறைக்கு மாற்றக் கோரி ராஜபக்சேவிடம் தொலைபேசியில் பேசியதாகவும் மோடி அரசின் ஆத்மார்த்த முயற்சியால்தான் அவர்களை ராஜபக்சே விடுதலை செய்துள்ளதாகவும் துதிபாடுகின்றன, பார்ப்பன ஏடுகள்.
விடுதலையான மீனவர்களை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு சென்று பின்னர் சென்னைக்குக் கொண்டுவந்திருப்பதும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என்று பா.ஜ.க. சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக பா.ஜ.கவின் நாடகத்தை அம்பலமாக்கியிருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தப் பொய்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு மறுத்துள்ளது. ஒரே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பினருக்கு விடுதலையும் மற்றொரு தரப்பினருக்கு தூக்குத் தண்டனையும் அளிக்கப்படும் வினோதமும் இந்த நாடகத்தில் நடந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, விடுவிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தினார்கள் என்ற அவதூறு – அவமானக்கறை இன்னமும் நீங்கிவிடவில்லை. அவர்கள் ராஜபக்சேவின் கருணையினால் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளே அன்றி, நிரபராதிகள் அல்ல என்கிறது இலங்கை அரசு. சிங்கள கடற்படையை யோக்கியவான்களாகவும், தமிழக மீனவர்களைக் கிரிமினல் குற்றவாளிகளாகவும் காட்டும் இந்த அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொண்டுதான் இம்மீனவர்களை மீட்டுவந்துள்ளது மோடி அரசு.
எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள் அடைபட்டு வதைபடுகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமே சிதைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரண்டு விசைப்படகுகள் பழுதடைந்து கடலில் தத்தளித்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து கொக்கரிக்கிறது.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு, அனகாரிக தர்மபாலா என்ற சிங்கள இனவெறி புத்த பிட்சுவுக்கு அஞ்சல் தலைவெளியீடு, இலங்கை கடற்படை துணைத்தளபதி ஜெயந்த் பெரோராவுக்கு இந்தியக் கடற்படை அணிவகுப்பு மரியாதை, சிங்கள கடற்படைக்கு இந்திய அரசு அளித்துவரும் பயிற்சி, மீண்டும் அதிபர் பதவியில் அமர ராஜபக்சேவுக்கு மோடிதெரிவித்திருக்கும் வாழ்த்து – இவையனைத்தும் தமிழின விரோதப் போக்கில் மோடி அரசு, காங்கிரசு அரசை விஞ்சுவதையே காட்டுகின்றன. மோடியைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்த வீடணர்கள், இப்போது அவர் வாலைக்குழைத்துக்கொண்டு அந்தப் பக்கம் போவதைப் பார்த்து, இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவர்கள் போல நடிக்கிறார்களே, இந்த நாடகம் மோடி நடத்தியிருக்கும் தூக்குமேடை நாடகத்தையே தூக்கியடிக்கிறது.
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1981-82ம் ஆண்டு மேல்நிலைக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட போது, நியமிக்கப்பட்ட அதே அளவு ஆசிரியர்கள்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதும் உள்ளனர்.
+1,+2 வகுப்புகளில்
853 மாணவிகளுக்கு ஒரு தமிழ் ஆசிரியர்
622 மாணவிகளுக்கு ஒரு இயற்பியல் ஆசிரியர்
622 மாணவிகளுக்கு ஒரு வேதியல் ஆசிரியர்
415 மாணவிகளுக்கு ஒரு கணித ஆசிரியர்
தான் உள்ளனர். பாடம் நடத்துகின்றனர்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும், கால தாமதமாகுமெனில் இதர அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை தற்காலிகமாக மாற்றுப் பணியிலாவது உடன் நியமிக்குமாறு மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு 10.07.2014ல் மனு அனுப்பப்பட்டது. மேலும் பெற்றோர் கையொப்பமிட்ட 300 மனுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் 07.08.2014 அன்று அனுப்பப்பட்டது.
போராட்டமே அதிகார வர்க்கத்தை பணிய வைக்கும் – ராஜஸ்தான் பீம் நகரில் தமது பள்ளியில் போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பேரணியாகச் சென்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள். (படம் : நன்றி thehindu.com)
அப்பள்ளியின் பெற்றோர்களுடன் விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாற்றுப் பணியில் ஒரு வாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாவட்டக் கல்வி அலுவலர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
கடந்த 2 ஆண்டுகளில் பொதுத் தேர்வில் +2 மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்ததில் 80 சதவீத மாணவிகள் 50 சதவீத மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றுதான் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தாங்கள் விரும்பும் உயர்கல்வியில் அரசு கல்லூரிகளில் சேர முடியாமல் உள்ளனர். பள்ளிவாரியாக +2 மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் பற்றி கல்வித்துறை பெருமையாக பேசினாலும் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவிகள் தரமான தேர்ச்சியின்றி உயர்கல்விக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் விளைவாக தனியார் கல்லூரிகளுக்கு அதிகக் கட்டணம் செலுத்தி சேர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் கல்வி தனியார்மயக் கொள்கைதான் காரணம், காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்பது காட்டுமிராண்டித்தனமானது. அனைவருக்கும் சமமான, தரமான, இலவசக் கல்வியை தாய்மொழியில் பெறுவதற்கு பெற்றோர்களாகிய நாம் சங்கமாக இணைந்து போராட வேண்டும்.
பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்பது எமது விருப்பமோ, வேண்டுதலோ அல்ல. போதுமான ஆசிரியர்கள் நியமிக்கபடாததால் வேறு வழியில்லாமல்தான் பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையின் தடித்த தோலுக்கு அப்போதாவது உறைக்கிறதா என்று பார்ப்போம்.
“கல்வித்துறையின் தடித்த தோலுக்கு உணர்ச்சியீட்ட வருகை தாரீர்” என்ற முழக்கத்தோடு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் 09.12.2014 செவ்வாய்க் கிழமை அன்று பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம்.
பாஸ் ஆனால் மட்டும் போதுமா? நல்ல மார்க் எடுக்க வேண்டாமா?
விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1, +2 வகுப்பில் 800 மாணவிகளுக்கு ஒரே ஆசிரியர் போதுமான ஆசிரியரை நியமிக்க எத்தனை ஆண்டுகள் முறையிடுவது?
மறியல் போராட்டம்
9-12-2014 செவ்வாய், காலை 9 மணி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு, விருத்தாசலம்
தற்போது எங்களது போராட்ட நிர்ப்பந்தத்தினால் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து கடலூர் முதன்மைக் கல்லூரி அலுவலர் அவர்கள் கீழ்க்கண்ட ஆசிரியர்களை தற்காலிக மாறுதலில் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு +1, +2 வகுப்பிற்கு பணியமர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.
1. திரு. M. கிருஷ்ணமூர்த்தி (கணித ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
2. திரு. D. அன்பழகன் (தமிழ் ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
3. திருமதி J. சசிகலா (இயற்பியல் ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
4. திரு. S. மரியக் குழந்தை (வேதியல் ஆசிரியர்) அரசு மேல்நிலைப் பள்ளி, இருப்பு
மேற்கண்ட ஆசிரியர்கள் தற்போது விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்காலிகமாக ஆசிரியர்களை பணியமர்த்தியதைத் தொடர்ந்து 09.12.2014 அன்று நாங்கள் நடத்த இருந்த மறியல் போராட்டத்தினை தற்காலிகமான ஒத்தி வைத்துள்ளோம். நிரந்தரமாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். தவறினால் போராட்டம் தொடரும்.
தெருவில் இறங்கி போராடும் ராஜஸ்தான் பள்ளி மாணவிகள் (படம் : thehindu.com)
மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட போராட பெற்றோர்கள் சங்கத்தில் சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமையாசிரியர் கடிதம்
பெற்றோர் சங்கத்திற்கு தலைமையாசிரியர் கடிதம்
பெற்றோர் சங்கத்தின் பத்திரிகை செய்தி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம். தொடர்பு : 9345067646, 9443264315
6000-க்கும் மேற்பட்ட மக்களை இதுவரையிலும் பலிவாங்கியிருக்கிறது எபோலா காய்ச்சல். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் இந்த கொள்ளை நோயை எப்படி கையாளுகின்றன; என்ன வகையான மருத்துவ உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கின்றன போன்ற கேள்விகள் நமக்குள் இயல்பாக எழுகின்றன.
சியரா லியோனுக்கு வந்து இறங்கும் கியூப மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும். (படம் : நன்றி theguardian.com)
சர்வதேச நாடுகள் உதவி செய்கின்றன என்பது பொதுவான உண்மை என்றாலும் கியூபா அதில் முதன்மை பங்கு வகிக்கிறது. 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கியூபா தனது நாட்டின் மருத்துவர்கள் 456 பேரை எபோலா பாதித்த நாடுகளின் மக்களிடம் பணியாற்ற அனுப்பி உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் பெயரளவுக்கு மட்டுமே சில உதவிகளை செய்கின்றன. பிரிட்டன் 30 மருத்துவர்களை மட்டும் அனுப்பி உள்ளது. அமெரிக்க மருத்துவர்கள் 10 பேருக்கும் குறைவாக விருப்பம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்று கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம்.
மாறாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏதோ கலகம் ஏற்பட்டிருப்பதை போன்ற பாவனையில் பெருமளவுக்கு ராணுவத்தை அனுப்பி வைத்திருக்கின்றன அமெரிக்காவும், பிரிட்டனும்.
கியூபா மருத்துவர்கள் சிலருக்கு எபோலா தொற்றி பாதித்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து களத்தில் மக்களிடையே பணியாற்றி வருகிறார்கள். ஆனால், உலகின் பேரபாயமாக எபோலா எடுக்கவிருந்த அவதாரத்துக்கான சாத்தியங்கள் குறைந்து இருப்பதை அடுத்து மேற்கு ஊடகங்கள் இந்த பிரச்சினையில் கொண்டிருந்த ஈடுபாடு வற்றி உள்ளது.
கியூபாவின் மருத்துவக்குழு சியரா லியோன் வந்த போது அந்த நாட்டின் அதிபர் எர்னஸ்ட் பாய் கொரொமா நேரில் சென்று வரவேற்றார். இக்கட்டான நேரத்தில் தமது மக்களை காப்பாற்ற வந்த கியூபாவின் மருத்துவர்களை அவர் பாராட்டினார்.
கியூபா மருத்துவர்களின் மெச்சத்தகுந்த பணியை அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் பாராட்டியுள்ளது. கியூபாவின் மக்கள் அரசாங்கத்தை தூக்கியெறிய முப்பது வருடங்களாக முயன்று வரும், தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு சேவை செய்து வரும் அமெரிக்கா தேசங்கடந்த பொதுநலத் தொண்டில் கியூபாவின் முழங்கால் அளவுக்கு கூட வளரவில்லை என்பது தான் உண்மை.
மேற்கத்திய நாடுகளில் எபோலா பற்றிய அறிதல் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு அமெரிக்க மதப் பிரச்சாரகர்களுக்கு எபோலா காய்ச்சல் பாதித்த பிறகுதான் ஏற்பட்டதாக கூறுகிறார், ஊடகவியலாளர் ஆன்ட்ரி கெரிலொ. ஒரு பக்கம் எண்ணற்ற கருப்பின ஆப்பிரிக்கர்கள் தங்கள் படுக்கைகளில் வேதனையால் நெளிந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இரண்டு வெள்ளை அமெரிக்கர்களின் துயரை மிகுதியாக செய்தியாக்குவதன் நிர்ப்பந்தம் தன்னை மிகவும் வருத்தியதாக குறிப்பிடுகிறார், ஆன்ட்ரி.
மேற்கத்தியர்கள் பாதிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக ஒரு சோதனை மருந்து கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஹவானாவில் கியூப மருத்துவர்கள் (படம் : நன்றி theguardian.com)
“எபோலாவால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் எண்ணிக்கைகளாக சுருங்கி விட ஓரிரு மேற்கத்தியர்களின் பாதிப்பு மட்டும் விலாவரியான முக்கியத்துவம் பெறுவது ஏன் என்பது குறித்த உணர்வு நமக்கு இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஆன்ட்ரி. மேற்கத்திய நாடுகளின் கவனம் முழுக்க தமது எல்லைகளை இந்த வைரஸ் தொற்று தொட்டு விடக்கூடாது என்பதில் தான் இருக்கிறது.
வளர்ந்த நாடுகள் துரிதகதியில் செயல்பட்டிருந்தால் மேற்கு ஆப்பிரிகாவின் கினி நாட்டில் ஆரம்ப நிலையிலே எபோலாவை கட்டுப்படுத்தியிருக்க முடியும். லைபீரியாவுக்கும், சியரா லியோனுக்கும் அது பரவிடாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று எபோலா நோய் தொற்று கடுமையாக பரவியிருக்கும் நிலையில் சியரா லியோனுக்கு மட்டுமே 10,000 மருத்துவர்கள் தேவைபடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
கியூபாவின் உலக மக்கள் நலன் சார்ந்த பணி எபோலா நோய் ஏற்படுத்தியிருக்கும் இப்போதைய நெருக்கடியில் மட்டும் வெளிப்படவில்லை. 2010-ம் வருடம் லத்தீன் அமெரிக்காவின் ஹைத்தியில் புயல் வீசி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் கியூபா மருத்துவர்கள் பிரதிபலன் பாராத மருத்துவ உதவிகளை செய்தார்கள். 40% மக்களை தமது மருத்துவத்தால் ஆற்றுப்படுத்தினர். ஹைத்தியில் ஒரு நீடித்த அரசு சுகாதார அமைப்பு ஏற்படவும் துணை நின்றார்கள்.
1960-ம் ஆண்டில் சே குவேரா ‘ஒவ்வொரு மருத்துவரும் தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் மக்களுக்கும், புரட்சிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று வழிகாட்டிய நெறியை பின்பற்றி ஒழுகுகிறார்கள் கியூபா மருத்துவர்கள்.
1960-களில் காங்கோ மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு மக்களின் விடுதலைக்கு துணை நின்றார் சே குவேரா. அதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களின் நேசத்துக்கு உரியவரானார், சே. 1970-களில் கியூபாவுக்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு மேலும் வலுப்பட்டது. அங்கு இடதுசாரி குடியரசுகள் ஏற்பட்டன.
லைபீரியாவுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு கியூப மருத்துவர்கள், மேற்கு ஆப்பிரிக்க பணிக்கு போவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறினர். “என்னுடைய சக மருத்துவர்கள் போகும் போது நான் ஏன் போகக் கூடாது” என்று சிலர் கேட்கின்றனர் என்கிறார் மருத்துவர் அட்ரியன் பெனிடஸ்.
அவருடன் இருந்த மருத்துவர் லியனார்டோ ஃபெர்னாண்டஸ் உதவி செய்தே தீர வேண்டும் என்று தன்னார்வலர்கள் உணர்வதாக கூறினார். “நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளாத ஒன்றை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்று தெரிகிறது. என்ன நடக்கலாம் என்று தெரிகிறது (இறந்தும் போகலாம்). ஆனால், இது எங்கள் கடமை. இப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்” என்கிறார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய மருத்துவர்களின் மருத்துவப்பணியை நேரடியாக கண்ணுறும் மக்கள் ‘புரட்சி வாழ்க’ என்று முழக்கங்களுடனான சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். அமெரிக்காவின் செவிகளில் இந்த முழக்கம் எட்டாமல் இல்லை. 40 கோடி டாலர் உதவியை அமெரிக்கா செய்ய முன்வந்துள்ளது. ஜப்பான் 4 கோடி டாலரை அளிக்கிறது. எனினும் மக்கள் உண்மையான ஆபத்துதவிகளை அடையாளம் காணத் தெரியாதவர்கள் அல்லர்.
2005-ம் வருடம் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கியூபா 2,400 மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. காயமடைந்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு அவர்கள் சிகிச்சை அளித்தார்கள். கியூபாவின் சர்வதேசிய மருத்துவம் (Cuban Medical Internationalism) என்ற நூலின் ஆசிரியர் ஜான் கெர்க் என்பவர் கியூபா மருத்துவர்களால் உலகில் லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 33 நாடுகளில் 30 லட்சம் மக்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்துள்ளார்கள் கியூபா மருத்துவர்கள்.
2005-ம் வருடம் லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியை (Latin American Medical School) நிறுவிய கியூபா ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. இது வரையிலும் 23,000 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே சென்று உலகின் ஏழை மக்களுக்கு பணியாற்றுகிறார்கள்.
அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. 1960-களில் அமெரிக்க தொழில் நிறுவனங்களை கியூபாவில் தேசிய உடைமையாக்கி, இன்றுவரை அவற்றின் ஆதிக்கத்தை அனுமதிக்காத ஆத்திரத்தில் அமெரிக்கா இருக்கிறது. வெளியே மனித உரிமை மீறல் என்று பொய்யுரைக்கிறது. அமெரிக்க அணி நாடுகளைத் தவிர்த்து பல்வேறு நாடுகள் கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க ஐ.நா.வில் வாக்களித்தாலும் எந்தப் பயனுமில்லை. ஐ.நா என்பது அமெரிக்கவிற்கான உலக தூதராக இருக்கும் வரை கியூபாவின் நிலைமை சிக்கலாகத்தானிருக்கும்.
பொருளாதாரத் தடையை விலக்கினால் இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு கியூபாவால் உதவி செய்ய முடியும்.
நமது ஊரில் ப்ளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க விழையும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க இருப்பதாக கூறுவதை ஒவ்வொரு வருடமும் கேட்கிறோம். ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செயல்படுகிறவர்களை நாம் பார்த்ததில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்க்ரெட் சான், உலகில் ஏழை மக்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்திருக்கும் ஒரே நாடு கியூபா என்று புகழ்கிறார். கியூபாவின் ஐம்பதாயிரம் மருத்துவர்கள் உலகம் முழுவதிலும் 60 ஏழை நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நாட்டில் மழை ஏன் பொழிகிறது என்றால் ”இங்கு நல்லவர்கள் கொஞ்சம் பேராவது இருப்பதால் தான்” என்று சிலர் சொல்வது நமது காதில் அடிக்கடி விழுகிறது. இந்த உலகம் ஏன் கொள்ளை நோயால் கொல்லப்படவில்லை என்றால் உலகம் முழுவதும் கியூபா மருத்துவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் செய்து வருகின்ற தொண்டூழியத்தால் தான் என்று கூறுவது மிகையாகுமா?
1. புரட்சிக்கு ஏங்குது நாடு! இதுதான் தருணம் போராடு!! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் அறைகூவல்
2. தலையங்கம் : அதிகார வர்க்கத்தின் அலட்சித்திற்குப் பலியான மழலைச் செல்வங்கள்!
3. மோடி அரசு : அதானி குழுமத்தின் ஏஜென்சி!
4. எம்.ஜி.ஆர் கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தை தள்ளிய பாசிசக் கோமாளி! இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர் என்பதே உண்மை.
5. எட்டப்பன் போனார்! தொண்டைமான் வந்தார்! நாட்டைப் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின், உள்நாட்டு தரகு முதலாளிகளின் சொத்தாக்கிவிடும் திட்டத்தோடு செயல்படுகிறது மோடி அரசு.
6. 2ஜி ஊழல் : பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு! 2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கி விட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது இந்தியா டுடே.
8. இலக்கு வைத்த அரசே நடத்தும் கொலைகளும் கொள்ளைகளும்! “டாஸ்மாக்” சாராயக் கடைகளுக்கு, மின் வாரிய வசூல் மையங்களுக்கு, “பிரீமியம்” ரயில்களுக்கு இவ்வளவு தொகை “கல்லா கட்ட வேண்டும்” என்று தான்தோன்றித் தனமாக ஒரு இலக்கு வைத்து அரசே கொள்ளையிடுவது – வழிப்பறி செய்வது பற்றிய செய்தி விமர்சனம் எழுதுவதற்கு எண்ணினோம். ஆனால், இத்தனை நாட்களில் இத்தனை பேரை கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்யும் ஒரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.
9. தமிழ் முகமூடி அணிந்துவரும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக…
10. மீனவர் தூக்கு ரத்து : இது நரேந்திர மோசடி!
11. தோழர் சிவா விடுதலை : அறிவும் மானமும் இல்லாத அதிகார வர்க்கம்!
12. “வாத்தியாரைப் போடு” பா.ஜ.க அரசைப் பணியவைத்த பள்ளி மாணவிகளின் போராட்டம்! அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தைப் போல நாடெங்குமே நடத்த வேண்டும்.
13. கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டு நிறைவு: மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே! ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும், எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும், பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.
14. அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரசை விடக் கொடியது.
பல்லவபுரம் நகராட்சியில் திருநீர்மலை போகிற வழியில் ஜி.எஸ்.டி பிரதான சாலையை ஒட்டியுள்ளது காமராஜ் நகர் பகுதி. பல்லவபுர நகராட்சியின் 3-வது வார்டாக உள்ள இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. பெரும்பாலும் அருகிலுள்ள நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாகவும், உதிரி வேலை செய்பவர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் உள்ள உழைக்கும் மக்கள்தான் இவர்கள்.
இங்கே பெரும்பாலான குடும்பங்களுக்கு கழிவறை வசதி கிடையாது. அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் முட்புதரையே கழிவறையாக பயன்படுத்தும் அவலநிலைதான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்பகுதியின் முன்பாக பணக்காரர்கள் வசிப்பதற்காக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் “ஒலிம்பியா” அடுக்குமாடி குடியிருப்பை அமைக்க, அந்நிறுவனத்திடம் எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காமராஜ் நகர் பகுதி மக்களின் கழிவறை பிரச்சினை பெரிதாக தெரியவில்லை என்பது இயல்பான விசயம்தான்.
இம்மக்கள் கழிவறையாக பயன்படுத்தும் அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. அதிகாரிகளின் உதவியோடு பல்லாவரம் பகுதியில் உள்ள திமுக, அதிமுக வைச் சேர்ந்த பெருச்சாளிகள் இவ்வேலைகளில் ஈடுபட்டு வருவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த மக்கள் இப்பிரச்சினையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். பிரச்சினையின் உடனடி முக்கியத்துவத்தை உணர்ந்த தோழர்கள் உடனே ஊர்க்கூட்டத்தை கூட்டி, மக்களிடத்தில் ஓட்டுக் கட்சிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தி, போராட அறைகூவினார்கள். அதன் பொருட்டு போராட்டக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது.
அடுத்த நாளே மக்களிடம் நிதி திரட்டி பிரச்சினையை விளக்கி பல்லாவரம் முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வீச்சான பிரச்சாரன் கொண்டு செல்லப்பட்டது.
அதே சமயம் எதிரிகளிடத்திலும் சலசலப்பை உருவாக்கியது. அவர்கள் தொலைபேசி செய்து மிரட்டிப் பார்த்தார்கள். அருகில் உள்ள பகுதியான கல்யாணிபுரம் பகுதியில் அதிமுக வைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், அமைப்பிற்கு தொடர்பு கொண்டு, “கழிவறை கட்டுவதற்காக ஏற்கனவே 20 லட்சம் ஒதுக்கப்படுள்ளது, இடம் தான் இல்லை. ஆனால் நீங்கள் செய்வது அவதூறு செய்வதாக இருக்கிறது, வழக்கு தொடுப்போம்.” என்று மிரட்டிப் பார்த்தார்.
எப்போதோ 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் பகுதி மக்களுக்கு இந்த ஒதுக்கம் இந்தக் கணம் வரை தெரியாது. இதைத் தெரிந்து கொண்ட மக்கள் முன்னிலும் கோபமாக நினைக்கத் துவங்கினர். இப்படி அவர்கள் மிரட்டல் மூலம் புதுப்புது திரை மறைவு துர்நாற்றங்களை வெளியே கொண்டு வந்தார்கள்.
பிறகு “பல்லாவரம் அதிமுக எம்.எல்.ஏ தன்சிங்கை பார்த்துப் பேசலாம் வாங்க” என்று சமரசம் செய்யப் பார்த்தார்கள். மக்களும் தோழர்களும் அதை ஏற்காமல் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள். பகுதி மக்கள் ஓட்டுப் பொறுக்கிகளை காறி உமிழ்ந்தனர்.
பகுதி மக்கள் ஓட்டுப் பொறுக்கிகளை காறி உமிழ்ந்தனர்.
தொடர்ச்சியாக, 05-12-14 அன்று காலை பல்லவபுர நகராட்சிக்கு புமாஇமு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் 20 இளைஞர்கள் முழக்கமிட்டு சென்றனர். நகராட்சித் தலைவர் இல்லாததால் கீழ்நிலை அதிகாரியிடம் மனுவை அளித்தோம். இதை எப்படியோ மோப்பம் பிடித்த ராஜேஷ் அங்கேயும் வந்து தன்னை அம்பலப்படுத்திக் கொண்டார்.
மக்களிடம் வந்து “நீங்க ஏன் இங்க வந்தீங்க, நாங்க செய்து தருகிறோம்” என்று நைச்சியமாக பேசிப் பார்த்தார். மக்களோ “இவ்வளவு நாட்கள் எங்க போன, இன்னிக்கு வந்து பேச வந்துட்ட” என்று திட்டி அனுப்பினர். அங்கு வந்திருந்தவர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டுப் போனார். இம்மனு கொடுக்கும் நிகழ்வின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது.
“இவ்வளவு நாட்கள் எங்க போன, இன்னிக்கு வந்து பேச வந்துட்ட”
சிறிது நேரத்தில், நகராட்சித் தலைவர் நிசார் அகமது தோழர்களை தொடர்பு கொண்டார். பகுதி நிலைமை அவரிடத்தில் விளக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (09-12-14) காலை 10.00 மணிக்கு காமராஜ் நகர் பகுதிக்கு நேரில் வந்து புறம்போக்கு இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மக்கள் ஓர் அமைப்பின் கீழ் திரண்டு தொடர்ச்சியாக போராடத் தொடங்கியவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
இவ்வளவு ஆண்டுகளாக அம்மக்கள் தங்கள் பிரச்சினையைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத, அக்கறையில்லாத நகராட்சியும், அரசியல்வாதிகளும் இப்போது அம்மக்கள் ஓர் அமைப்பின் கீழ் திரண்டு தொடர்ச்சியாக போராடத் தொடங்கியவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
மக்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக நின்று போராடும்பொழுது தான் நிர்ப்பந்தத்தை உருவாக்கி சாதிக்க முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
இது முதற்கட்ட வெற்றி மட்டுமே. தொடர்ச்சியாக அருகில் உள்ள பகுதி மக்களையும் ஒன்றிணைத்து பரவலான போராட்டமாக இதை மாற்ற வேண்டியுள்ளது.
மக்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக நின்று போராடும்பொழுது தான் நிர்ப்பந்தத்தை உருவாக்கி சாதிக்க முடியும்
உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!
மக்கள் போராட்டத்தின் மூலம் நிர்ப்பந்தப்படுத்துவோம்!
“கைய்ஸ்.. அயம் வெரி ப்ரௌட் டு ஹேண்ட் ஓவர் மை ரெஸ்பான்சிபிலிட்டீஸ் டு அவர் ஒன் அண்ட் ஒன்லி அனந்தா.. ஆல் நோ ஹி டிசர்வ்ஸ் திஸ் பொசிஷன். லெட்ஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்” ( நண்பர்களே, என்னுடைய பொறுப்பை நமது அனந்தாவுக்கு கொடுப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். அவருக்கு உங்களுடைய பாராட்டை கை தட்டி தெரிவியுங்கள்).
வாய் நிறைய சிரிப்பும் மனம் நிறைய வெறுப்புமாய் சித்தார்த் தனது சிற்றுரையை முடித்து வைக்க அறுபது பேர் கூடியிருந்த அலுவலக ஆலோசனை அறையில் (conference room) கைத்தட்டல் நிற்க மூன்று நிமிடங்கள் பிடித்தது. வெட்டப்பட்ட கேக்கின் மேல் பகுதியிலிருந்து வழித்தெடுக்கப்பட்ட க்ரீமை அனந்துவின் முகத்தில் அபிஷேகம் செய்து வைத்தார் சித்தார்த். மற்றவர்கள் அந்த சடங்கை தொடர்ந்தனர், அதில் சில எதிர்கால அனந்துக்களும் இருந்தனர்.
தேனீர் விருந்து முடிய இரவு பத்தாகி விட்டது. அனந்துவின் டிசையர் காரில் முதன் முதலாக பயணிக்கிறேன்.
”மச்சி! வள்ளியோட நிலைமை கொஞ்சம் மோசமா இருக்கு. இப்பல்லாம் சுத்தமா பேசவே மாட்றா. வீட்டுக்குப் போகணும்னு நினைச்சாலே என்னவோ மாதிரி இருக்கு. பேசாம ஆபீஸ்லயே இருந்துடலாம்னு தோணுது. நீ எதுனா சொல்லேன். வேணும்னா நீயும் உன் வொய்பும் வந்து அவட்ட ஒரு தரம் பேசிப் பார்க்கறீங்களா?”
நான் பேசவில்லை. இது பற்றி நானே கேட்டாலும் நீ பேசக் கூடாது என்பது அவனது உத்தரவு.
ஆறு மாதங்களுக்கு முன்பு……………..
“ஆறு வருசமா என்னோட ரேட்டிங் (மதிப்பு) அவுட்ஸ்டேண்டிங்ல போயிருக்கு மச்சி. இத்தனை வருசமா என்னோட அப்ரெய்சல் பர்சண்டேஜ் (பணித்திறன் விகிதம்) உங்க எல்லாரையும் விட அதிகம். இதெல்லாம் சும்மா வரல்லே. ராத்ரி பகல்னு பார்க்காமே நான் கஷ்டப்பட்டிருக்கேன். இப்ப நீ என்னா சொல்றே… எல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டு பொண்டாட்டிய சுத்தி பாத்துட்டு வீட்ல இருக்கச் சொல்றியா?”
“அனந்தா உனக்கு நல்ல ரேட்டிங் குடுத்திருக்கானுகன்றது சரி தான். அதே மாதிரி உனக்குத் தான் அப்ரைசல் பர்சண்டேஜும் அதிகம். ஆனா எவ்ளோ அதிகம்? எல்லோருக்கும் 10 குடுத்தா உனக்கு 10.5 தர்றான். மத்தவங்களுக்கு 12 குடுத்தா உனக்கு 12.5. இந்த அரை பர்சண்டேஜுக்காக நீ வாழ்க்கைல நிறைய மிஸ் பண்றேன்னு புரியலையா?”
”மத்தவனுக்குத் தான் பொறாமைன்னா உனக்குமாடா? காசுன்னு பாத்தா கம்மி தான். பட் (ஆனால்), டாப் மேனேஜ்மெண்ட் (மேல்மட்ட நிர்வாகம்) வரைக்கும் நான் விசிபிளா (பார்வையில்) இருக்கேண்டா. நம்ம டிவிஷன்ல (பிரிவில்) எதுன்னாலும் வி.பி (துணைத் தலைவர்) என்னைத் தான் கூப்டு பேசறாப்ல. பிராஜக்ட் மேனேஜரை (திட்ட மேலாளர்) கூட அவர் நம்பரதில்லை. அடுத்த வருசம் சித்தார்த் சாரை நீல்சன் பிராஜக்டுக்கு (திட்டத்துக்கு) மாத்திடுவானுக. அப்ப இந்த டிவிஷனுக்கு நான் தான் பி.எம். உனக்கும் சேர்த்துத் தான். புரியுதா?”
“புரியுது. ஆனா அதுக்காக நீ எவ்ளோ இழந்திருக்கே தெரியுதாடா?”
நீண்ட மௌனத்தையும் அதன் கூடவே நிறைய புகையையும் வெளியேற்றினான்.
“நீ சொல்றது புரியுது.”
”சரி என்னா செய்யப் போறே?”
“தூக்கித் தெருவில வீசிடலாம்னு தான் ஒரு சமயம் தோணுது. ஆனா… த்தா பாக்க பாவமாவும் இருக்கு. என்னையே நம்பி வந்தவ. சனியன்… ஒரு சமயம் ஏன் தான் கல்யாணம் செய்தோம்னு இருக்கு. ஒரு சமயம் பயமாவும் இருக்கு. இப்டியே இருந்து எதையாவது இழுத்து வச்சிட்டான்னா என்ன செய்ய முடியும்? என்ன தாண்டா செய்யச் சொல்றே? எதுனா சைக்யாட்ரிஸ்டு (உளவியல் மருத்துவர்) கிட்டே காட்டலாமா?”
“சைக்யாட்ரிஸ்டு கிட்டே காட்டலாம். ஆனா அவளை மட்டும் இல்லே, உன்னையும் தான். மனசாட்சியை தொட்டு சொல்லு அனந்தா… நீ காரணமில்லே?”
நீண்ட மௌனத்திற்குப் பின் வாய் திறந்தவன், “மச்சி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இனிமே இந்த மேட்டர் (பிரச்சினை) பத்தி என்ட்டே நீ எதுவும் பேசக்கூடாது. நானா கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாது. சொன்னியன்னா நம்ம ப்ரென்ஷிப் (நட்பு) அத்தோட கட்டாயிடும். ஓக்கே?”
அன்றிலிருந்து அனந்துவுக்கு அலுவலகமே வீடானது. உழைப்பு மட்டுமே உயர்வைக் கொடுத்து விடாத கார்ப்பரேட் சூழலில் உள்ளரசியல் ஒன்றே அவனுக்குக் கைகொடுத்தது; அனந்து அதில் நிபுணன். சித்தார்த்துக்கு யாரையெல்லாம் பிடிக்காது என்பதையும் யாருக்கெல்லாம் சித்தார்த்தை பிடிக்காது என்பதையும் நுண்ணுணர்வோடு மோப்பம் பிடித்து காய் நகர்த்தினான். மூன்று மாத இறுதியில் அவன் எதிர்பார்த்த அப்ரெய்சல் (பணித்திறன்) முடிவுகள் அவன் எதிர்பார்த்த வண்ணமே வந்தது. கழுத்தறுப்புப் போட்டியில் வெற்றி.
ஆனால், வள்ளியம்மை வேறு திசையில் பயணித்திருந்தாள்.
ஊரில் இருந்த காலத்திலிருந்தே எனக்கு வள்ளியம்மையைத் தெரியும். குணத்தில் அனந்தாவுக்கு நேர் எதிர். டிபிக்கல் காரைக்குடி “அட இந்த நெய் முறுக்கு சூப்பரா இருக்கே” – ஆறே ஆறு வார்த்தைகள் போதும். ”அண்ணா… தோ இந்த பாத்திரம் புல்லா நிரப்பிருக்கேன். அண்ணிக்கும் கொண்டு போய் கொடுங்களேன்”. தின்ன வைத்து திணறடித்தல் இருந்தாலும் மற்றவருக்காக முசிந்து வேலை செய்யவும் ஒரு கருணை அவளிடம் எப்போது இருந்தது.
காரைக்குடியில் வள்ளியம்மையின் குடும்பம் பெரியது. நாங்கள் ஒரே ஊர்தான். அனந்துவும் எங்கள் ஊர் தான்; பக்கத்துத் தெரு. அண்ணன், அக்காள், தங்கை, தம்பி அப்புச்சி, அம்மச்சி, தாத்தாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், மாமா மாமிகள், மச்சான்கள்… தமிழில் உறவு முறையைச் சொல்ல என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையிலும் குறைந்தது இரண்டு பேர்கள் வரை இருப்பார்கள். வள்ளியம்மை ஊரில் இருந்த ஒரு பள்ளியில் கணக்கு டீச்சராக சில வருடங்கள் வேலை பார்த்தாள். மிக தூரத்தில் பார்த்தால் எனக்கு சகோதரி.
“அண்ணே இந்த பெங்களூர்ல எப்போயும் எழவு வுழுந்தா மாதிரியே எல்லாரும் இருக்காங்களே ஏண்ணே?”
“அண்ணே நீங்க அடுத்த முறை வரும் போது அண்ணிய கூட்டி வாங்களேன். இந்த நாலு வருசத்தில நாலு சொவத்தை தாண்டி யாரையுமே தெரியாம போச்சின்னே. அவுக அஞ்சாவது சொவருண்னே”
“அது என்னா அப்பிரெய்சல்? எந்த நேரமும் இவுக அதே சிந்தனையாத்தேன் இருக்காக. சாப்பிடும் போது கூடவா உர்ர்ருன்னே இருப்பாக?”
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
வள்ளியம்மையின் கேள்விகள் மிக எளிமையானவை தான்; எனது குழப்பமெல்லாம் ‘கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வள்ளிக்கு எங்கேயிருந்து சொல்லிப் புரியவைப்பது?” என் மனைவியும் வள்ளியம்மையும் ஊரில் இருந்தே தோழிகள் தான்.
அனந்தா என்னிடம் புலம்புவதும் வள்ளி என் மனைவியிடம் புலம்புவதுமாக மாதங்கள் ஓடின.
“சம்திங் ராங் (ஏதோ தவறு) மச்சி. எப்ப பாரு எதையோ இழந்தவ மாதிரியே இருக்கா. நான் என்ன குறை வச்சிருக்கேன்? தோ.. பழைய ஜென்னை (மாருதி கார்) கடாசிட்டு டிசையர் இறக்கி ஒரு வருசம் கூட ஆவலை. ஜ்வெல்ஸ் (நகைகள்) வாங்கிக் குடுத்திருக்கேன்… பட் அவ கிட்ட என்னவோ பிரச்சினை இருக்குடா”
“அன்னிக்கெல்லாம் நைட்டு ஒரு ரெண்டு மணி இருக்கும். திடீர்னு தூக்கத்திலேர்ந்து முழிச்சி பார்க்கறேன். தலைய விரிச்சிப் போட்டுட்டு பேய் மாதிரி வெறிக்க வெறிக்க ஒக்காந்துனு இருக்கா. பேஜாராயிடிச்சி மச்சி”
“யார்ட்டயுமே பேச மாட்றாடா. நம்ம ஆபீஸ் கெட்டுகெதர்க்கு (அலுவலக விழா) அழைச்சிட்டு வந்தேன்ல. நீ கூட பாத்தியே… பட்டிக்காடு மாதிரி ’பே’ன்னு முழிச்சிட்டே இருக்கா”
என் மனைவி வள்ளியை வீட்டில் சந்தித்து விட்டு வந்தாள்.
“வள்ளி ரொம்ப லோன்லியா பீல் (தனிமை சிந்தனை) பண்றா மாதிரி இருக்கு. எனக்கென்னவோ இது டிப்ரஷன்ல (மன அழுத்தம்) மாதிரி தெரியுது. உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க. இப்டியே விட்டா சீரியஸா எதுனா பிரச்சினை ஆயிடுமோன்னு நினைக்கிறேன்”
“அவ சின்ன வயசுல விளையாடின பொம்மை ஒன்னு வச்சிருக்கா. அது ஏதோ உயிரோட இருக்கிற ஆள் மாதிரி நினைச்சு பேசறா சிரிக்கிறா. எனக்கே என்னவோ போல ஆயிடிச்சிங்க. சீக்கிரம் உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க”
ஆனால், அதற்குள் அலுவலகத்தில் சாதிக்கும் வேலையில் அனந்து மும்முரமாகி புராஜக்ட் மேனேஜராகவும் (திட்ட மேலாளர்) ஆகியிருந்தான்.
பதவி உயர்வு கிடைத்து சில மாதங்களுக்குப் பிறகு…
”தப்புப் பண்ணிட்டமோன்னு நினைக்கிறேன் மச்சி. ஒருத்தன் காலை வாரிவுட்டு மேல வர்றது ஈசியா இருந்திச்சிடா.. இங்கே மிடில் லெவல்லே (நடுத்தர நிலை) என்னை மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கான். எல்லா நேரமும் கவனமா இருக்க வேண்டியிருக்கு”
“த்தா.. என்னால ரெவின்யூ (நிறுவனத்தின் வரவு) ஏறும் போது கூப்டு பல்லைக் காட்டினானுக. இப்ப ரெவின்யூ குறையும் போது கூப்டு சாவடிக்கிறானுக. இத்தனைக்கும் மார்ஜின்ல (இலக்கில் சற்று குறைவு) லேசா டவுன் ஆகியிருக்கு, அவ்ளோ தான். வீட்ல வேற வள்ளியோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. பயம்மா இருக்கு மச்சி”
“வீட்ல பேசி ஒரு மாசமாச்சிடா. இந்த க்வார்ட்டர் டார்கெட்டுக்கு (காலாண்டு இலக்கு) இன்னும் 2 க்ரோர் பில் (2 கோடி) ஆகணும். ரெண்டே வாரம் தான் இருக்கு. பாஸ் கூப்டு லெப்ட் அண்ட் ரைட் சொருவிட்டாரு. எனக்கு வேற கொஞ்ச நாளாவே பட படன்னு அடிச்சிது. தெனமும் காலைல லேசா தடுமாறினுச்சி. போய் செக் பண்ணேன். ஆன்க்சைட்டின்னு (படபடப்பு) சொல்லி மாத்திரை குடுத்திருக்கானுக”
நாள் ஒன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் நாற்காலியில் அமர்ந்து, தாகத்திற்கும் அவசரப் பசிக்கும் கோக்கை உள்ளே இறக்கி, மதியம் பற்றியெறிந்த வயிற்றுக்குப் பீஸாவும் பர்கரும் வார்த்து கம்பெனி நிர்ணயித்த காலாண்டு இலக்குகளை நிறைவேற்றத் தடுமாறிக் கொண்டிருந்த இடைவெளியில் 34 இன்சுகளாக இருந்த அனந்துவின் இடுப்பு 40 இன்சுகளானது. நின்றாலே மூச்சு வாங்கியது.
”மச்சான்.. இந்த எர்வாமேட்டின் (தலையில் முடி வளர ‘அமேசான் காடுகளிலிருந்து கிடைக்கும் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும்’ தைலம்) சுத்த பிராடுடா. ங்கொய்யாலெ ஏழெட்டு லிட்டர் வாங்கி தலைய முக்கியே எடுத்திருப்பேன்; ஆனா இந்த ப்ளே க்ரௌண்டு (வழுக்கைத் தலை) மட்டும் விரிஞ்சி கிட்டே போவுது”
இடையில் வள்ளியின் நிலைமை மோசமாகி அனேகமாக பேச்சையே நிறுத்தியிருந்தாள். முன்பொரு காலத்தில் பட்டாம் பூச்சியாக இருந்த அவளது இன்றைய கூட்டுப்புழு வாழ்க்கையைக் காண எனக்கு மனம் ஒப்பவில்லை. நான் அவளை இனிமேல் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். அனந்து ஒரு முறை பேசும் போது வீட்டை ’பேய் குகை’ என்றான்; அலுவலகத்தை ’பிசாசுக் குழி’ என்றான். பிந்தையது அவனது விருப்பத் தேர்வாக இருந்த காரணத்தால் முந்தையதை அவனே உருவாக்கியிருந்தான். ஆரம்பத்தில் கவர்ச்சியாகத் தோன்றிய பிசாசுக் குழி அவனை மொத்தமாக உள்ளிழுத்து மூழ்கடித்தது.
அனந்துவின் உழைப்பை மட்டுமின்றி, அவனது சொந்த வாழ்க்கை, நிம்மதி, ஆரோக்கியம் என்று சகலத்தையும் தின்று இலக்குகளை அடைந்த நிறுவனம் மூன்றாம் ஆண்டின் இறுதியில் ’இனி பிழிவதற்கு ஏதுமற்ற சக்கை இவன்’ என்று முடிவு கட்டியது.
நான்காம் ஆண்டின் துவக்கத்தில் அனந்து ஒரு உப்புமா பிரிவுக்குத் தூக்கியெறியப்பட்டான். அந்தப் பிரிவுக்குச் செல்பவர்களின் நிறுவன வாழ்க்கை அடுத்த நான்கைந்து வருடங்களில் முடிந்து விடும் என்பது எழுதப்படாத விதி. நிறுவனம் என்கிற அந்த இயந்திரத்திலிருந்து ’கழிவுகளை’ வெளியேற்றும் குழாயாக அந்தப் பிரிவு செயல்பட்டு வந்தது.
தருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது!
“பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப்புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.
திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்கு ஆதரவு’ போஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது.
உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார்.
போதாதா? “பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.
திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர் ‘எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்.
இதன்அடையாளமாக, “மத்திய துணை ராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்கள் திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள், அதன் அர்த்தத்தை விளக்குங்கள், மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் ஏராளமான வீரர்களை இழந்ததற்கு படையினருக்கு மனஉறுதி குறைவாக இருந்ததும் காரணமாகும். போர் முறைகள், போர் தந்திரங்கள் தொடர்பாக குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்! அதன் அர்த்தத்தை விளக்குங்கள்” என்று திருக்குறள் என்ற அற நூலை, பார்ப்பன மனு நூல் போல, பகவத்கீதை போன்ற வஞ்சக யுத்தவெறியும், ரத்தவெறியும் பிடித்த நூலைப் போன்றதுதான் என திரிக்க ஆரம்பித்துள்ளார்.
சத்தீஸ்கர், ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களான காடுகள், மலைகள், கனிம வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு சூறையாட மத்தியப் படையினரை கூலிப்படையாக பயன்படுத்துகிறது அரசு. நாட்டு வளங்களை அபகரிக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடும் மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்; வழிகாட்டும் நூலாக அமையும்.
கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
என்று எச்சரித்த திருக்குறள் கேடுகெட்ட அரசுக்கு எதிர் நூலாகும். மக்களின் எதிர்ப்புக் குரலாகும்.
மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்
ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக் கருவியாகவும், காவி பயங்கரத்தின் திரிசூலமாகவும் திருக்குறளையும், தமிழையும் உருமாற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சதித்தனங்களை தோலுரிக்காமல், வைரமுத்துவும், பல ஆளும் வர்க்க தமிழ் ‘வயிறு’ முத்துக்களும் “ஆகா! வடக்கு வாசல் திறக்கிறது!” என்று வாயைப் பிளந்தால், அட உண்ட கட்டிகளா! அது எதுக்கு? என்று எதிர்த்து இந்த தமிழ் ஆர்.எஸ்.எஸ். களையும் அடையாளம் காட்ட வேண்டும். இந்த ஜந்துக்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் திருவள்ளுவர்
“வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள் போல் பகைவர் தொடர்பு”
என்று வெளிப்படையான பகைவரை விட, நண்பர் போல் நடிக்கும் பகைவன் ஆபத்தானவன் என்று குறிப்பு காட்டி இருக்கிறார்.
கொலை, கொள்ளை, களவு, சூது, கள்ள உறவு போன்ற சமூகத் தீங்குகளையும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற பார்ப்பனப் பாதகங்களையும், அதைப் பற்றி ஒழுகும் அரசமைப்பையும் அக்காலத்திய நிலைமைக்கேற்ப கண்டித்தும், பொது நோக்கிலான அறத்தோடும் அந்தக்கால உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப மக்களின் ஏக்கமாய் மலர்ந்தும், சூழலுக்கேற்ற பலவீனங்களையும் கொண்டது திருக்குறளின் கருத்துச்சாரம்.
‘யார் செத்தால் இருந்தால் என்ன சூதாடு! மனைவியையும் வைத்து சூதாடு! போரின் எதிரில் மாமனாயினும் போடு! சகோதரனாயினும் வெட்டு, குத்து‘ என்ற பார்ப்பன வெறிக்கொள்கை கொண்டது பகவத்கீதை, மகாபாரதம்! இவைகளின் பெருமிதத்தில் ஆட்சி நடத்தும் மோடி அரசின் பரிவாரங்கள் திருக்குறள் எனும் மனுநீதியின் பகைநூலை உறவாடிக் கெடுப்பதற்கு ஏற்றாற் போல், உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ராணுவத்திற்கு வழிகாட்டும் நூலாக திருக்குறளைத் திரித்துக் காட்டுவது அனைத்து எதிர் முனைகளையும் ஆரிய பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய, தமிழ்ப்பாசம் அல்ல! இதை திருக்குறளின் மெய்ப்பொருளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.
என்ற குறள் நிச்சயம் ஒரு கூலிப்படைக்கு பொருந்த முடியாது. திருவள்ளுவர் இந்தக் குறளில் சொல்லுவது, “தம்மைக் காத்தவர் அல்லது ஆதரித்தவர் கண்ணீரில் நீர் பெருகுமாறு சாகின்ற சாவு வருமானால் அந்தச் சாவு கெஞ்சிக் கேட்டாவது பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது” என்கிறார். மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் நக்சல்பாரிகளுக்கே இந்தப் பாடல் பொருத்தமடைகிறதே ஒழிய, தன்னை எப்போதும் ஒடுக்கும் மேலதிகாரியை சுட்டுவிட்டு நிம்மதியடையும் ஒரு இராணுவ வீரனுக்கு இது பொருந்துமா?
ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!
இதுமட்டுமல்ல, படைமாட்சி என்ற அதிகாரத்தில் (குறள் – 766)
அதாவது வீரம், மானம், மக்களுக்கு துன்பம் செய்யாத விழிப்படையும் போர்த்தெளிவு – இந்தப்போர் ஏன்? எதற்கு? யாருக்கு? என்ற தெளிவு, அரசியல் நான்குமே படைக்குப் பாதுகாப்பு என்கிறார். சாதாரண வீரப்பன் வேட்டையிலேயே கோழி, ஆடு, பெண்கள் என்று குதறும், ஏன் இந்த சண்டை என்று கேள்வி கேட்க உரிமையில்லாத இந்த ஆளும்வர்க்க படைக்கு எதிர்க்குரலாகத்தான் திருக்குறள் ஒலிக்கிறது.
என்கிறார். ஒரு ஒப்பீட்டுக்குச் சொன்னால் கம்யூனிஸ்டுகளைத் தவிர ஒரு படைக்கும் இந்த யோக்கியதை கிடையாது. அதாவது “கீழ்த்தரமான பண்புகளும் தலைமையின் மீது அளவு கடந்த வெறுப்பும், வறுமையும் இல்லாத படையையே வெல்லும்” என்கிறார். காஷ்மீரத்திலே இந்த ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!
இவைகள் மட்டுமல்ல, படைமாட்சி, படைச்செருக்கு, அரண், உட்பகை… என்று எந்த அதிகாரங்களிலும் திருவள்ளுவர் காவி தருண்விஜய் கக்குவதுபோல, போர்வெறி, போர்த்தந்திரம், போர் முறை என்ற அடிதடி அர்த்தத்தில் குறளே இயற்றவில்லை, கருவிகளைக் கையாளும், வஞ்சகத்தை அரங்கேற்றும் பார்ப்பன படு பாதக பகவத்கீதை போல கொலை நூலாக இல்லாமல், போர் பற்றிய இடத்திலும் அறநெறி, ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பிலான தற்காப்பு நிலை, தாக்க வேண்டிய நிலைவரினும் அதிலும் முறைமை என்ற கோணத்திலேயே குறட்பாக்கள் உள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு கூலிப்படையாக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அரசுக்கு எதிராகத்தான் அந்த நிலையிலும் பேசி இருக்கிறது திருக்குறள்.
(குறள் – 557) -இல்
“துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளிஇன்மை வாழும் உயிர்க்கு”
குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.
என்று இரக்கமற்ற அரசனை சாடியும், (குறள் – 736) – இல்
“கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா; நாடுஎன்ப நாட்டின் தலை”
என்று இயற்கையை அழிக்கும் காவி, கார்ப்பரேட் அரசை கண்டிப்பது போல், எது நாடு? எது வளர்ச்சி? என்று கேள்வி கேட்க குறிப்பு காட்டி உள்ளார் வள்ளுவர். இந்த திருடர்களுக்கும், திருக்குறளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை!
எல்லாவற்றுக்கும் மேலே
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்”
என்று பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு மக்களை தள்ளிய அரசு/ இயற்றியவன் அலைந்து கெட்டொழிக என்று ஒலிப்பதுதான் குறள். இந்த சுரண்டல் அரசை ஒழிக்கும் நக்சல்பாரிகளின் குரலுக்கு ஆதரவாய் ஒலிக்கிறதே ஒழிய தேசியத் திருடர்களுக்கு ஆதரவாக இல்லை.
காவிப் பயங்கரவாதிகளை கண்டுகொள்ளும் விதமாக
“தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண் நீரும் அனைத்து”
என்று குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.
திருக்குறளின் ஆரியப் – பார்ப்பன எதிர்ப்பு பரிமாணங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்; ‘தமிழ் திருக்குறள்’ எனும் பெயரில் எதிரிகள் கைக்கு தமிழகம் நழுவாதிருக்க மக்களிடம் ஆரியப் – பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிரான அரசியல் உணர்வினை வளர்ப்போம்!
தனியார் கல்லூரி என்று நாம் கேட்கும் போது மாண்வர்கள் படும் அவஸ்தை நம் கண் முன்னே தோன்றும். தனியார் கல்லூரிகள் மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. அது சரி தனியார்மயம் யாரைத் தான் விட்டுவைத்துள்ளது!
KSM பாலிடெக்னிக் கல்லூரியில் நிலவும் சூழலை இங்கு பகிர்ந்து கொள்வது இதற்கு நல்ல உதாரணமாக அமையும்.
KSM பாலிடெக்னிக் கல்லூரி மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரத்தில் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது. இது ஒரு கல்லூரி அல்ல காயலாங் கடை என்பதை மாணவர்களிடம் சிறிது நேரம் பேசும் பொழுதே தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்பு இந்த கல்லூரி பல வருடங்களாக அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. அந்தத் தொழில் போணியாகாத காரணத்தால் பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றபட்டது. மோசமான கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் சரியில்லாமலேயே இயங்கி வருகிறது இந்தக் கல்லூரி. இச்சிறிய தகவலே இந்த கல்லூரியின் லட்சணத்தினை மேலோட்டமாக அறிய உதவிகரமாக அமையும்
இந்த கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினால் பிரச்சனைகள் உள்ளன
மாணவர்களின் பிரச்சனைகள்:
கல்லூரி துவங்கியவுடன் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு தாமதம். மாணவர்களின் முறையான படிப்பிற்கும் பயிற்சிக்கும் இது தடையாக அமைந்துள்ளது
ஆய்வக கட்டணம் 800 ரூபாய் வாங்கப்பட்டு போதிய உபகரணங்கள் முழுமையாக வழங்குவதில்லை. ஆதலால் மாணவர்களுக்கு துறை சம்மந்தமான நடைமுறை அறிவு (Practical Knowledge) கிடைப்பதில்லை.
மாணவர்களுக்கு மொத்தமாக புத்தகங்கள் வாங்கும் பொழுது 40- 50% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால் நிர்வாகம் புத்தகத்தினை தள்ளுபடி விலையில் வழங்காமல் கமிசன் அடிக்கிறார்கள்.
முறையான குடிநீர் வசதி கிடையாது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பலகை வைத்து உப்புத் தண்ணீர் வழங்கப்படுகிறது.
வகுப்பறையில் போதுமான அளவில் மின்விசிறிகள் கிடையாது. மழை நேரங்களில் வகுப்பறை வெளிச்சமாக இருக்க மின் விளக்குகள் முறையாக இல்லை.
சில கரும்பலகைகளில் எழுதுவது கூட தெரியாத அளவு மோசமான பராமரிப்பு.
விடுதி மாணவர்கள் நிலைமை இன்னும் மோசம். அனைத்து வசதிகளும் கொண்ட அறை உள்ளது என்று புளுகிவிட்டு கட்டில் கூட இல்லாது கட்டாந்தரையில் தான் படுக்க வைத்துள்ளார்கள்.
அறைக்கு பத்து முதல் பதினைந்து மாணவர்கள் வரை கூட்டமாக அடைத்து வைப்பது.
போதிய அளவு கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கிடையாது, அடர்ந்த புதர்களுக்குள் தான் மலம் கழிக்க வேண்டிய அவல நிலைமை உள்ளது.
விடுதியில் மாணவர்களுக்கு மட்டமான உணவு தயாரிக்கப்படுவதோடு கல்லூரி முதல்வர் மற்றும் காசாளர்க்கு தனியே எடுத்து வைக்கபட்ட நல்ல உணவு வழங்கபடுகிறது.
கல்லூரியை சுற்றி அடர்ந்த புதர் காடுகள் இருப்பதினால் விஷப் பூச்சிகளை மாணவர்கள் அடித்துள்ள சம்பவங்கள் பல நடந்துள்ளன.
மாணவர்கள் விளையாட முறையான மைதானமோ அதற்கான ஆசிரியர்களோ இல்லை
இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் மாணவர்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இக்கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் விவசாய பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்
ஆசிரியர்களின் பிரச்சனைகள்
ஆய்வகத் தேர்வு நடத்துவதற்கு 3 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இங்கு வசதி குறைவு என்பதால் 5- 6 ஆசிரியர்கள் (Internal Examiner)தேவைப்படுகிறார்கள். மேலும் External Examiner வருவார். ஆய்வக தேர்வு முடியும் பொழுது அரசு அந்த தேர்வை நடத்திய ஆசிரியர்களுக்கு பணம் தரும். ஆனால் இங்கு நிர்வாகம் (External Examiner)க்கு மட்டும் பணம் அளித்து (Internal Examiner)இடம் பணம் வாங்கியதாக கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் தரமாட்டார்கள். இதை தட்டிக் கேட்டு கையெழுத்து போட மறுத்த ஆசிரியர்களை குறிவைத்து பழிவாங்கும் விதமாக பணியை விட்டு விலகுமாறு வற்புறுத்துகிறார்கள். (தற்போது பணம் வழங்கப்பட்டு வேலையை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள்)
ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் பொழுது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது வேலை செய்ய வேண்டும் இடையில் செல்லக் கூடாது (அரசு பணி தவிர) என ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி உள்ளார்கள்.ஆனால் ஒரு வருடம் முழுமையாக வேலை பார்த்திராத ஆசிரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்தால் பணியை விட்டு செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.
ஆசிரியர்களுக்கு குடிநீர் வசதி கிடையாது. தங்கள் செலவில் நீர் அருந்த வேண்டியுள்ள நிலைமை உள்ளது, ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதில்லை.
ஆய்வக வசதிகள் குறைவாக உள்ளது என தொடக்கத்திலே நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியும் உபகரணங்கள் இறுதியிலேயே கிடைக்க பெறும்.
ஆசிரியர்கள் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து டீ அருந்தக் கூடாது, ஒன்றாக சேர்ந்து கழிப்பறை செல்லக் கூடாது என சுற்றறிக்கை விடப்பட்டு ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் இதனை நடைமுறைபடுத்தாதால் நிர்வாகத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது
இந்த பிரச்சனையை சில ஆசிரியர்கள் கேட்ட பொழுது, ‘நீ அதிகாரம் பண்ணக் கூடாது, நான் தான் உன்ன அதிகாரம் பண்ணனும்’ என கூறி அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்தார்.
இப்பிரச்சனைகள் அனைத்தையும் தொகுக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் லாபவெறிக்காக மறுக்கப்படுகிறது. பல்வேறு தனியார் கல்லூரிகளில் இத்தகைய பிரச்சனைகள் நிறைந்துள்ளன. இப்பிரச்சனைகள் இல்லா கல்லூரிகளும் உள்ளன. ஆனால் அவையெல்லாம் அதிகமான கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள்.
இவை அனைத்தையும் நிர்வாகத்தின் முறைகேடாக பார்ப்பது சரியானதாக இருக்காது. இவையனைத்திற்கும் தனியார்மயத்தின் லாபவெறியே காரணம்.
மறுபுறம் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு எதிராக பேச மறுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பணி நிரந்தரமின்மை ஒரு புறம் ஆசிரியர்களை வாட்ட, பொறியியல் படித்தவர்களுக்கு தொழில்துறையில் (இண்டஸ்ட்ரியல் செக்டார்) வேலை கிடைக்காததால் வருடாவருடம் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை நோக்கி அதிகமாக வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி குறைந்த சம்பளம் வழங்குவது, சம்பள குறைப்பு என கட்டற்ற சுரண்டலை ஆசிரியர்கள் மேல் நடத்துகிறார்கள்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தாகட்டும் இக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையாகட்டும், பெற்றோர்கள் மேல் திணிக்கப்படும் கட்டண உயர்வாகட்டும் இளைஞர்களின், வேலையின்மை, குறைந்த ஊதியம் மற்றும் வேலை நிரந்தரமின்மை அனைத்திற்கும் தனியார்மயமே காரணமாக உள்ளது என்பதை நாம் அறிய முற்பட வேண்டும்.
மறுபுறம் அரசும் இதைத்தான் ஊக்குவித்து கொண்டு அரசு பள்ளிகளையும், அரசு கல்லூரிகளையும் அடியோடு மூட அனைத்து வேலைகளை செய்கிறது. இதன் மூலம் ” காசு இருப்பவனுக்கே கல்வி “ என்ற நவீன தீண்டாமையை நம்மிடையே புகுத்துகிறது.
நம் அடிப்படை உரிமையான இலவச கல்வியை பெறுவதற்கு, வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனியார்மயத்தினை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுத்து, நமக்கான அரசை நாமே கட்டியமைக்க வேண்டிய காலம் நம்மை நெருங்குகிறது.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சிவகங்கை மாவட்டம்,
+91 9443175256
காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து…. கிருஷ்ணகிரியில் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து 03.12.2014 அன்று கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகே விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத் தலைமை தோழர் முருகேசன்
‘காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக’ என்று கர்நாடக அரசு சொல்கிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணைகள் கட்டவிருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக கர்நாடக அரசு தற்போது 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்துவருகிறது. இதில் 52 சதவீதம் நீர் வீணாக்கப்படுவதாக கர்நாடக அரசு கூறியிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்தினாலே பெங்களூருக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்துவிடலாம். மேலும், பெங்களூரில் மால்கள், செயற்கைக் கடல், தீம்பார்க்குகள், எம். என். சி -கம்பெனிகள், நட்சத்திர விடுதிகள் போன்றவை பெருமளவு தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. இதனால்தான் காவிரியிலிருந்து வரும் நீர் பெங்களூர் மக்களுக்கு சென்று சேர்வதில்லை. இதற்கு மேல் தற்போது காவிரியில் அணைக்கட்டு நீரை எடுத்தாலும் இது பெங்களூர் மக்களுக்கு கிடைக்காது. ஆகையால் பெங்களூர், கர்நாடக மக்கள் தனியாருக்கு தண்ணீர் கொடுப்பதையும் எதிர்க்கவேண்டும்.
கண்டன உரையாற்றும் தோழர் சந்தோஷ்
மேலும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டங்களை பாலைவனமாக்க கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி மீத்தேன் எடுக்கும் பணிகளை செய்துவருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதன்மூலம் தற்போது காவிரியில் வருகிற நீர் தடுக்கப்படுமானால் அது மீத்தேன் எடுப்பதற்கு உதவியாகவும் அங்கிருந்து ஒரு கோடி மக்களை வெளியேற்றுவதையும் எளிதாக்கும் என்பதால் அணை கட்டும் திட்டம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சதித்திட்டம். இதனை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். நீதிமன்றங்களையும், மோடி அரசையும் நம்பி ஏமாறக்கூடாது என கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சந்தோஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி பொறுப்பாளர் தோழர் முருகேசன் மற்றும் இச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
நன்றியுரையாற்றும் தோழர் முனியப்பன்
இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றியத்தை சேர்ந்த தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள்
குழுமியிருக்கும் செய்தியாளர்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பிறக்குற கொழந்தையெல்லாம்
ஒண்ணு ஒண்ணா சாகுது – இந்த
பிள்ளைக்கறி திண்ணும் அரச
நெனச்சாலே வேகுது
பிரசவம் பாக்கவோ உருப்படியா டாக்டரில்ல
பெற்றோரே பிராணவாயு பொருத்துகிற அவல நெல
ஒத்த இன்குபேட்டர் மூணு கொழந்த அதுக்குள்ள – இத
இயற்கை மரணம் என்பவன அடிக்க வேணும் மொறத்துல
அவசர சிகிச்சையின்னா கொலையே நடுங்குது
அலட்சியமும் மெத்தனமும் ஆப்பரேசன் நடத்துது
பத்துமாதம் சுமந்த உசுரு கைவிலகிப் போகுது – இந்த
பாவத்துக்குத் தண்டனையா எவன் உசிர எடுப்பது
அரசு மருத்துவமனை துடைச்சிடுமா கண்ணீர-லஞ்சம்
அய்நூறு கொடுக்கலன்னா அழைக்குது பிணவறை
பிரசவ வார்டுதான் குழந்தைகளுக்கு கல்லறை – பணப்
பேய்களுக்கு எதுக்குடா விதவிதமா வெள்ள உடை
பெருச்சாளி திண்ணுருச்சி குழந்தைய சென்னையில
இழுத்துப் போயிருச்சி தெருநாயி திருச்சியில
பாம்பு பார்வையிடுது வார்டுகள தஞ்சையில
அம்மா பாதம் தவிர வேறொண்ணும் பன்னீருக்குத் தெரியவில்ல
பொறுப்பில்லாத அரசுதானா ஏழைக்கு போக்கிடம்
போகுதடா அரசு இப்போ தனியார் கைவசம்
இறப்புக்கும் இரங்காத அரசின் மெத்தனம்
இதச் சொல்லித் திருத்த முடியாது
அறுவை சிகிச்சை பண்ணணும்
அரசை அறுவை சிகிச்சை பண்ணணும்
பாடல் – இசை : மக்கள் கலை இலக்கியக் கழகம், மைய கலைக்குழு
கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதைகுழியில் சிக்கியிருக்கிறது. 2011-ல் திணற ஆரம்பித்து 2012-ல் மூச்சை விட்ட விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் அடியொற்றி இப்போது ஸ்பைஸ் ஜெட் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது; இந்திய தனியார் விமான சேவைத் துறையின் அடுத்த கோல்மால் திவால்.
தரை தட்டும் ஸ்பைஸ் ஜெட்
சனிக்கிழமை (நவம்பர் 29, 2014) இரவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சஞ்சீவ் கபூர், “நவம்பர் சம்பளம் வழங்குவது 1-3 நாட்கள் தாமதமாகும்” என்று அந்நிறுவனத்தில் பணி புரியும் 5,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். ஒரு நிறுவனம் திவாலாவதன் கடைசி அறிகுறி இதுதான் என்பது கிங் ஃபிஷர் அத்தியாத்திலேயே பார்த்தோம்.
மாறன் சகோதரர்களது விமானம் தள்ளாடக் காரணம் என்ன? குத்தகைக்கு (லீஸ்) எடுத்த விமானங்களுக்கு வாடகைப் பணம் கட்ட முடியவில்லை. கட்டண நிலுவைக்காக ஒரு டஜன் போயிங் 737 விமானங்களை அவற்றின் சொந்தக்காரர்கள் திரும்ப பெற்றிருக்கின்றனர். ஜூலை மாதம் 33 போயிங் 737-800 விமானங்கள், 6 போயிங் 737-900ER விமானங்கள் மற்றும் 15 Q400 விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் கைவசம் இருந்தன. இப்போது 20 போயிங் விமானங்கள் மட்டுமே உள்ளன, அவற்றில் 18 மட்டுமே இயக்கத்தில் உள்ளன.
ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமானது.
விமானங்களை பராமரிப்பதற்கான உதிரி பாகங்கள் வாங்க பணம் கொடுக்க முடியவில்லை. தரையில் நிற்கும் விமானங்களிலிருந்து பாகங்கள் கழற்றி பறக்கப் போகும் விமானத்தில் பொருத்தி ஓட்டுகிறார்கள் என்று ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.
நவம்பர் மத்தியில் ரத்து செய்யப்பட்ட 75 சேவைகள் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது நடக்கவில்லை. விமானம் புறப்படும் நேரங்களில் மாற்றம், விமான சேவை ரத்து போன்ற தகவல்களை பயணிகளுக்கு கடைசி நேரத்தில் தெரிவித்து அதிர்ச்சி கொடுக்கிறது ஸ்பைஸ் ஜெட். அதனால், பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
இந்தூர், வாரணாசி, அவுரங்காபாத், சூரத், மைசூர், திருவனந்தபுரம், ஷார்ஜா, காத்மாண்டு, காபூல் ஆகிய இடங்களில் தனது செயல்பாட்டை முடக்க திட்டமிட்டுள்ளது, ஸ்பைஸ் ஜெட்.
தொடர்ந்து 5 காலாண்டுகளாக நஷ்டம். “நிறுவனத்தின் மொத்தக் கடன்கள் மொத்த சொத்து மதிப்பை விட ரூ 1,459 கோடி அதிகமாக உள்ளன” என்று அதன் கணக்குகளை தணிக்கை செய்த பத்லிபாய் என்ற தணிக்கை நிறுவனம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முடிந்த நிதியாண்டில் சுமார் ரூ 1,000 கோடி இழப்பு. ஸ்பைஸ் ஜெட்டை இந்த புதைகுழியிலிருந்து மீட்பதற்கு குறைந்தது ரூ 1,500 கோடி ($25 கோடி) தேவை; அதில் ரூ 1000 கோடி உடனடியாக வேண்டும் என்று ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் மதிப்பிட்டுள்ளது.
“சன் தொலைக்காட்சியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான கலாநிதி மாறனுக்கு, பத்தோடு பதினொன்றாக இருப்பதில் நம்பிக்கை இல்லை. எதைச் செய்தாலும் அதில் முதல் இடத்தை பிடிக்க முயற்சிப்பவர்” என்று தொடங்குகிறது 2010-ம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட்டை சொந்தமாக்கிக் கொண்டதை அடுத்து கலாநிதி மாறனைப் பற்றி எழுதப்பட்ட ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும், எதையும் பிளான் பண்ணி வெற்றிகரமாக செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே” என்று அவரது தமிழக ஜால்ராக்கள் கலாநிதி மாறனைப் பற்றி புகழ்ந்து வருகின்றனர்.
சிக்கனமான, ஒழுக்கமான’ தமிழ் முதலாளி கலாநிதி மாறன்
மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு பிறகு அப்போது லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 37.75% பங்குகளை ரூ 940 கோடி கொடுத்து வாங்கி அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் கலாநிதி மாறன். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 130 கோடி ரூபாய் கொடுத்து தனது பங்கு விகிதத்தை 48.59% ஆக உயர்த்திக் கொண்டார், டிசம்பர் மாதம் அது 53.48% ஆக உயர்ந்தது.
‘விஜய் மல்லையா போன்று கவர்ச்சிப்பட காலண்டருக்கு ஃபோட்டோ எடுப்பது, கார் பந்தய நிறுவனத்தில் காலை விடுவது என்று மூலதனத்தை வீணாக்காத, ‘சிக்கனமான, ஒழுக்கமான’ தமிழ் முதலாளி கலாநிதி மாறன். பூமாலை வீடியோ இதழில் ஆரம்பித்து 33 சேனல்கள் கொண்ட சன் தொலைக்காட்சி குழுமம், எஸ்சிவி கேபிள் வலைப்பின்னல், இந்தியா முழுவதிலுமாக 45 பண்பலை வானொலி சேவைகள், மலேசிய முதலாளி அனந்தகிருஷ்ணனுடன் இணைந்து சன் டைரக்ட் டி.டி.எச் சேவை, தமிழில் 5 வார பத்திரிகைகள், 2 தினசரிகள், சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு வினியோக நிறுவனம் என்று பல தொழில்களுக்கு சொந்தக்காரர். கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி குழுமம் ஆசியாவின் மிக லாபகரமான தொலைக்காட்சி நிறுவனம் என்று ஹாங்காங்கைச் சேர்ந்த மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு தரகு முதலாளியாக மாறன் சகோதரர்கள் உயர்ந்து விட்டனர். அத்தகைய கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் இப்போது மல்லாந்து உயிரை விட ஆரம்பித்திருக்கிறது. அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும் விமான சேவை வழங்கி வந்த காலத்தில், ‘பொதுத்துறை என்றால் ஊழியர்கள் வேலை செய்ய மாட்டார்கள், விமானம் தாமதமாக போகும், நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும். தனியார் வந்தால்தான் எல்லாம் சரியாகும்’ என்று உதார் விட்டுக் கொண்டிருந்தனர் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் இந்திய வாழ் அமெரிக்க கனவு நடுத்தர வர்க்கத்தினரும். அந்த கனவை நனவாக்கும் விதமாக 1991 முதல் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ 20 செலவில் காலம் தள்ளினாலும், எஞ்சிய 20%-ஐ கணக்கு போட்டுப் பார்த்தாலே நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை 20 கோடி வருகிறது. அது அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு நிகரானது. அதற்கு மேற்கத்திய தரத்திலான, மேற்கத்திய பாணியிலான பொருட்கள், சேவைகள் விற்க வேண்டும், விற்க முடியும்’ என்று பன்னாட்டு நிறுவனங்கள் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தனியார் விமான சேவைகள்.
பன்னாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க இந்திய தனியார் விமான சேவைகள்
விமான பைலட்டுகள், பொறியாளர்கள் என்று திறமை வாய்ந்த ஊழியர்களுக்கும் பல லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும்; விமான எரிபொருள் வாங்க பணத்தை எண்ணி வைக்கா விட்டால் தொழிலை தொடர முடியாது; விமானங்களை விற்கும் அல்லது குத்தகைக்கு விடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கறாராக பணம் கட்ட வேண்டும்; விமான நிலையங்களை பயன்படுத்த பணம் கட்ட வேண்டும். இருப்பினும் எரிபொருள் வாங்கவும், விமான நிலைய கட்டண பாக்கியையும் இந்திய அரசு கடனாக பலருக்கும் கொடுக்கிறது. அதாவது அரசு பணத்தில் தனியார் முதலாளிகள் தொழில். இது போக அரசு வங்கிகள் மூலதனக் கடனைவே வாரி வழங்குகின்றன.
அப்படித்தான் மல்லையா பட்டை நாமம் போட்டார்.
இந்நிலையில் பல நிறுவனங்கள் போட்டி போடும் போது, விமானத்தில் பறக்கப் போவதாக சொல்லப்பட்ட நடுத்தர வர்க்கமோ ஆகக் குறைந்த பயணச் சீட்டு எங்கு கிடைக்கும் என்று வேட்டையாடி, ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்பதன பெட்டி கட்டணத்தோடு ஒப்பிட்டு, சல்லிசாக டிக்கெட் கிடைத்தால்தான் தான் விமானப் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். வாடிக்கையாளர்களிடமிருந்து லாபம் சம்பாதிக்க வழி இல்லை. ஸ்பைஸ் ஜெட் கூட இந்த ஆண்டு தொடக்கத்தில் பல காலாண்டுகள் நஷ்டத்தைத் தொடர்ந்து சிறப்பு தள்ளுபடி கொடுத்து வருமானத்தை பெருக்க ஆரம்பித்திருந்தது.
“விமான போக்குவரத்துத் துறையில் கிட்டத்தட்ட ஏகபோக நிறுவனமாக இருந்தால் எளிதாக லாபம் ஈட்டலாம். துறையில் முன்னணி வகிக்கும் ஜெட் ஏர்வேஸ் கூட போட்டியை எதிர் கொள்ளும் போது திணறுகிறது” என்கிறார் அஞ்சுலி பார்கவா என்ற பிசினஸ் ஸ்டேண்டர்ட் பத்திரிகையாளர். ‘பல நிறுவனங்கள் போட்டி போட்டு சிறப்பாக சேவை வழங்குவதால் நுகர்வோர் பயன்பெறுவார்கள்’ என்ற சந்தை பொருளாதாரவாதிகள் முன் வைக்கும் அடிப்படையின் லட்சணம் இவ்வளவுதான்.
இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் அல்லது சில லட்சம் மேட்டுக்குடியினருக்கு சேவை அளிக்க போட்டி போடும் போது, ஒவ்வொன்றும் ஆக அதிக பங்கை பிடிக்க முயற்சிக்கும் போது குழப்பங்களும், அராஜகமும்தான் மிஞ்சுகின்றன.
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை புறக்கணிக்கும் மறுகாலனியாக்கம்.
எனவே, 1991-ல் விமான போக்குவரத்துத் துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கை போயிங், ஏர்பஸ் போன்ற பன்னாட்டு விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானங்களை விற்பதற்கு சந்தையை உருவாக்கிக் கொடுப்பதைத் தவிர எதையும் உருப்படியாக சாதிக்கவில்லை. டெக்கான், சஹாரா, தமானியா, ஈஸ்ட்-வெஸ்ட், கலிங்கா, என்.ஈ.பி.சி, பாரமவுண்ட் என்ற பல பெயர்களில் தொடங்குவதும், இணைவதும், மூடுவதுமாக பல தனியார் நிறுவனங்கள் பூச்சி காட்டிக் கொண்டிருக்கின்றன; இந்த வரிசையில் சமீபத்தில் வீழ்ந்ததுதான் மல்லையாவின் கிங் ஃபிஷர். முக்கியமான இந்த வீழ்ச்சியில் இந்திய அரசின் பணம் அதாவது மக்களின் பணம் ஏராளமிருக்கிறது.
1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மோடி-லுஃப்ட் நிறுவனம். ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவனத்துக்கும் இந்திய தரகு முதலாளி எச்.கே மோடிக்கும் இடையேயான கூட்டு முயற்சி. லுஃப்தான்சா தனது விமானங்களை வாடகைக்கு விட்ட வகையிலும், தொழில்நுட்ப ஆலோசனை சேவை என்ற வடிவத்திலும் பணம் சம்பாதித்தது. 3 ஆண்டுகளுக்குள் லுஃப்தான்சாவுக்கு குத்தகை கட்ட முடியாமல் மோடி லுஃப்ட் ஊத்தி மூடிக் கொண்டது. வெவ்வேறு பெயர்களில் பல முதலாளிகள் வசம் இருந்த அந்நிறுவனத்தின் விமான சேவை உரிமம் இப்போது ஸ்பைஸ் ஜெட் என்ற பெயரில் கலாநிதி மாறனிடம் உள்ளது.
இப்போது ஸ்பைஸ் ஜெட் செய்திருப்பது போலவே விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2011-ம் ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதை தாமதப்படுத்த ஆரம்பித்தது; அக்டோபர் 2012 வாக்கில் மேலும் பணம் இல்லாமல் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்களின் சம்பளப் பணத்துக்கு நாமம் போட்டதோடு, பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ 7,000 கோடி கடனுக்கும் கோவிந்தா போட்டு செட்டிலாகியிருக்கிறார் விஜய் மல்லையா.
கலாநிதி மாறன் பல ஆயிரம் கோடி மதிப்பிலான தனது சார்மாஜ்யத்தை கட்டுவதற்கு உதவியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு அவரது தாத்தாவின் கட்சி மத்தியில் ஆளும் அரசில் பங்கேற்றது; அவரது தந்தை மத்திய அமைச்சராக இருந்தார்; பின்னர் தம்பி தயாநிதி மாறன் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஒருக்கால் இவர்கள் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் இந்த வளர்ச்சியை சாதித்திருக்கவே முடியும். அதாவது முதலாளிகளுக்குள் கட்சி பேதம் எதுவுமில்லை. எல்லா முதாளிகளும் அரசின் செல்லப் பிள்ளைகள்தான்.
இந்த பொருளாதாரக் கொள்கைகளை பயன்படுத்தி பணத்தைக் குவித்துக் கொண்ட தரகு முதலாளிகளோ தனி விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பறக்கிறார்கள். 2010-11ம் ஆண்டில் கலாநிதி மாறனுக்கும், அவரது மனைவி காவேரி மாறனுக்கும் சன் தொலைக்காட்சி குழுமம் மொத்தம் ரூ 128 கோடி ஊதியமாக வழங்கியிருக்கிறது. இவ்வளவு பணத்தை கொடுத்த மக்களோ சன் தொடர் அழுகை சீரியல்களை பார்த்து கண்ணீரை விரயமாக்கியிருக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு மோடி அமைச்சரவை வந்த உடன் ஸ்பைஸ் ஜெட், ஜிண்டால் ஸ்டீல், டி.எல்.எஃப், போன்ற காங்கிரஸ் பிரிவு தரகு முதலாளிகளுக்கு அதிர்ஷ்டம் குறைவாகவும் மோடியுடன் இணக்கமான தரகு முதலாளிகளான அதானி, அம்பானி, பூர்த்தி போன்ற நிறுவனங்களுக்கு அளவிலா யோகமும் ஆரம்பித்திருக்கின்றது. நெருக்கடிகளில் சிக்கும் போது வங்கிக் கடனோ, அரசு உதவியோ பெறுவதற்கு ஆளும் கட்சியின் நல்லாசி இல்லாத முதலாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.
தனியார் மயத்தின் புகழ் பாடிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம, தான் கனவு கொண்ட சொர்க்கம், கொடுங்கனவாக மாறி வருவதை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களை கொடூரமாக சுரண்டும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் இப்போது பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தையும் நடுத்தெருவில் விட்டு வருகிறது.
ஸ்பைஸ் ஜெட் விமான ரத்துக்களைத் தொடர்ந்து “சென்னையிலிருந்து புறப்படும் எல்லா ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன” என்று வாட்ஸ்-அப்பிலும், டுவிட்டரிலும் தகவல்கள் பறந்தன. கலகலத்துப் போன பல பயணிகள் தொலைபேசியில் ஸ்பைஸ்ஜெட் கால் சென்டரை தாக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் நேராக சென்னை விமான நிலையத்துக்கே போய் விட்டார்கள்.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று விமானத்தில் இடம் கேட்டு ஸ்பைஸ்ஜெட் கவுண்டர்கள் முன்பு குவிந்தார்கள். அந்த விமானங்கள் நிரம்பியிருந்ததால், அவர்கள் ஜெட் ஏர்வேஸ் கவுண்டருக்கு போனார்கள். அங்கு டிக்கெட்டுக்காக ஒருவருக்கொருவர் அடித்துப் பிடித்துக் கொண்டார்கள் என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
“ஹைதராபாத்துக்கு தவிர்க்க முடியாத ஒரு பிசினஸ் சந்திப்புக்குப் போக முன்பதிவு செய்திருந்தேன். அதை ரத்து செய்து ஸ்பைஸ் ஜெட் அனுப்பிய குறுஞ்செய்தியில் நாங்கள் வேறு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ஸ்பைஸ் ஜெட் கால் சென்டருக்கு பேசினோம். ஆனால், என்னை இரண்டு முறை 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்கள். கடைசியில் விலை அதிகமாக கொடுத்து ஏர் இந்தியா விமானத்தில் போக வேண்டி வந்தது.” என்றார் பிரதீக் ரக்சன் என்பவர்.
“வழக்கமாக ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,300 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. 10% முதல் 12% அழைப்புகளை ஏற்க முடியாமல் கைவிட்ட அழைப்புகள் என்று நாங்கள் ஒதுக்குகிறோம். ஸ்பைஸ் ஜெட் விமானங்களை ரத்து செய்ததால், வாடிக்கையாளர் அழைப்புகள் இன்னும் அதிகமாகி ஒதுக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்ந்திருக்கிறது” என்கிறார் ஒரு மிகப்பெரிய பயண முகவர் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர். தனியார் வழங்கும் வாடிக்கையாளர் சேவை என்று இதைத்தான் மெச்சிக் கொள்கிறது நடுத்தர வர்க்கம்.
சென்னையைச் சேர்ந்த அனந்த் மூர்த்தி என்ற பத்திரிகையாளர் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள குவகாத்தி செல்ல செப்டம்பர் மாதமே முன்பதிவு செய்திருந்தார். பயண தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு அவரது விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. மறு பதிவு செய்ய வாய்ப்புள்ள அடுத்த விமானம் திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் புறப்படுகிறது. “பதிலாக கிடைத்த பணம் இன்னொரு விமானத்தில் கடைசி நேரத்தில் பதிவு செய்வதற்கு தேவையானதில் 4-ல் ஒரு பங்கு கூட இல்லை. நான் எனது பயணத்தை ரத்து செய்தேன்” என்கிறார் மூர்த்தி.
கடைசி நேரத்தில் சீட்டு வாங்குபவர்களுக்கு அதிக விலை, முன் கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி என்ற போட்டிச் சந்தை அராஜகத்தினால் மூர்த்தி நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
மோடி லுஃப்டில் ஆரம்பித்து ஸ்பைஸ் ஜெட் வரையிலான இந்த நிறுவனத்தின் வரலாறு இந்தியாவின் மறுகாலனியாக்கத்தோடு ஒட்டி வளர்ந்திருக்கிறது. இதன் பேரலையில் மக்கள்தான் திண்டாடுகிறார்கள். முதலாளிகளோ தங்கள் நிறுவனங்களை திவாலாக்கிவிட்டு சொந்த சொத்துக் கணக்கை குறைவில்லாமல் பெருக்கிக் கொள்கிறார்கள். அமெரிக்க வீட்டு கடன் நெருக்கடியிலேயே இதைத்தான் நாம் பார்த்தோம்.
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் பெரும்பான்மை மக்களை புறக்கணித்து அன்னிய முதலீடு, மால்கள், சொகுசு பங்களா வீடுகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என்று பெரும்பான்மை மக்களை புறக்கணித்து வகுக்கப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் ஸ்பைஸ் ஜெட் விமானங்களைப் போல தரை தட்டி வீழ்வது உறுதி.
ஆனால் இந்த தரைதட்டலில் மாறன் சகோதரர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இவர்களது நிறுவனங்களை நம்பி வாழ்க்கையை அமர்த்திக் கொண்ட ஊழியர்கள் பாடுதான் திண்டாட்டம். கூடவே அரசு பணம் என்ற பெயரில் மக்கள் பணம் இவர்களை தூக்கி நிறுத்த பயன்படுத்துவார்கள்.
ஆகவே தனியார்மயத்தை கூண்டோடு புதைக்காமல் இந்தியாவுக்கு விடிவு காலமில்லை.
தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14 தேதி தொடங்கி அடுத்தடுத்து 16 பச்சிளம் குழந்தைகள் கோரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சேலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்ற 9 பச்சிளம் குழந்தைகள் இறந்து போயின. இவ்வாறு தொடர்ந்து நடந்தேறிய இந்த சம்பவங்களுக்கு மருத்துவர் அலட்சியமோ அல்லது மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றக்குறையோ காரணம் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மூடிமறைக்கும் வேலையில் இறங்கியது. மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது என்று செய்தி வெளியிட்டுக் கொண்டு மருத்துவ உபகரணங்களை அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து இறக்கியது.
ஆனால் இது வரை குழந்தைகள் என்ன காரணத்தால் இறந்தன என்று முழுமையான விவரமோ, இறந்த குழந்தைகளின் பெற்றோர்க்கு நட்டஈடு கூட அறிவிக்கவில்லை. மாறாக, குழந்தைகள் மரணத்திற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, பருவகால மரணம், குறை பிரசவம் என்று மரணத்திற்கான காரணத்தை தேடிபிடித்து வெளியிட்டு இந்த பிரச்சனையை மூடிமறைக்கும் வேலையில் அரசும் ஆட்சியாளர்களும் இறங்கினர். மேலும் பெற்றோர்கள் மீதே பழியை போட்டுள்ளனர்.
மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவமனை சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் சில அமைப்புகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இதனை நிறுத்தி கொள்ளவேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். இறந்த குழந்ததைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்ககூட அமைச்சர் தயார் இல்லை.
இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளின் மரணம் என்பது தனியார்மயத்தின் படுகொலை என்பதை அம்பலப்படுத்தியும், “காசில்லாதவர்களின் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறை“, “தனியார் மருத்துவ கிரிமினல் கும்பலின் கொள்ளைக்காக பிள்ளைகறி தின்னுகிறது அரசு” என்பதை விளக்கியும், “மருத்துவம் நமது பிறப்புரிமையை மீட்டெடுப்போம்” என்கிற வகையில் மக்களை அறைகூவி போராட்டத்திற்கு அழைத்தது விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
பேருந்து, கடைவீதி பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், கிராம பிரச்சாரம், வீட்டு பிரச்சாரம் என பல வகையில் ஒருவாரகாலம் மக்கள் மத்தியில் பரவலாக பிரச்சாரத்தை கொண்டு சென்றோம். இதன் இறுதியாக தருமபுரி நகரத்தில் தந்தி அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம்.
தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் 25 பச்சிளம் குழந்தைகள் படுகொலை! காசில்லாதவர்களின் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறை! தனியார் மருத்துவ கிரிமினல் கும்பலின் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசு!
கண்டன பொதுக்கூட்டம்
இந்த பொதுக்கூட்டத்திற்கு விவிமு வட்டார செயலர் தோழர். கோபிநாத் தலைமை தாங்கினார். “மருத்துவமனையை ஆய்வு செய்துவிட்டு சிறப்பாக இருக்கிறது மருத்துவமனை என்றால் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதே மருத்துவமனையில் தங்கள் குடும்பத்தினர்க்கு பிரசுவம் பார்ப்பார்களா” என்று இவர்களின் பொய்களை அம்பலப்படுத்தி தலைமையுரை ஆற்றினார்.
அடுத்ததாக பேசிய தோழர் ராஜா பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர், போராட்டமே தீர்வு என்பதையும் மருத்துவமனை சீர்கேட்டையும் விளக்கி பேசினார்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர்.ஜானகிராமன் வழக்கறிஞர் பேசும்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதையும், சட்ட ரீதியாக மருத்துவமனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், ஜோசப் கண் மருத்துவமனையில் 66 பேருக்கு கண்பார்வை பறிபோனது அதற்காக போராடி நட்டஈடு மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்பதையும் விளக்கி பேசினார்.
சிறப்புரையாற்றிய தோழர். விளவை இராமசாமி பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர், “மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு குறித்து படம்பிடிக்காமல் நியாயத்தை கேட்கும் எங்களை படம்பிடித்து அரசுக்கு தெரிவிக்கிறது, உளவுத்துறை.” என்று உளவுத்துறை ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்படுவதை அம்பலப்படுத்தினார். அரசு மருத்துவமனைகள் நாடு முழுவதும் சீர்கெட்டு இருப்பதையும், அரசு மருத்துவ மனைகளை தனியாருக்கு கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தியும், அமைச்சர்கள் அதிகாரிகளும் தான் குற்றவாளிகள் என்றும் “சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை” என்றும், “இவர்கள் தான் தனியார்மயத்தின் ஊழியர்கள் எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் நமக்கு வாழ்வில்லை” என்பதை போர்குணத்தோடு விளக்கியும் உரையாற்றியது மக்களுக்கு உணர்வூட்டியது.
இதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது புரட்சிகர பாடல்கள் மூலம் தெருக்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூட இறுதிவரை நின்று பார்த்துவிட்டு ஆதரவும் நிதி அளித்து சென்றனர். இறுதியாக தோழர். தாமரைச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.
பத்திரிகைச் செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தருமபுரி மாவட்டம் 9943312467