இளம் வயது கனவுகளோடும் ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் வாங்கியும் ஐ.டி துறையில் சேரும் ஊழியர்களின் பிரச்சினைதான் என்ன?
தன்னை நிறுத்திக் கொள்ள கடும் போட்டி, திறமைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், பணித்திறன் பற்றிய பயங்கள், ஆன்சைட் தோற்றுவிக்கும் ஆசைகள், இரவுப் பணி, திடீரென்று பெஞ்சில் அமர வேண்டிய துர்பாக்கியம், இறுதியில் பணி நீக்கம் என்று மொத்த வாழ்வும் துயரங்களால் சூழப்பட்டிருக்கின்றது.
மற்ற எவரையும் விட மனச்சோர்வும், உளவியல் பிரச்சினைகளும் ஐ.டி ஊழியர்களுக்கு அதிகம் ஏற்படுவதை அறிவோம். அதன் பின்னணி, செயல்பாடு, விளைவு குறித்து மருத்துவர் ருத்ரன் சுருக்கமாக விவரிக்கிறார்.
இறுதியில் தொழிற்சங்கம் என்பது ஐ.டி ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து என்பதை அனுபவத்துடன் விளக்குகிறார்.
ஐ.டி துறை நண்பர்களே!
Join us…….
https://www.facebook.com/VinavuCombatsLayoff
Phone : 90031 98576
Mail: combatlayoff@gmail.com
தன்னுடைய இயல்பான நிலையிலிருந்து பலபடிகளுக்கு உயர்ந்த நிலைக்கு சொந்தகாரராக (முழுவதுமாக தகுதி பெறுவதற்கு முன்னமே) காட்டிகொள்வதில் ஒருவருக்கு இருக்கும் மனக்கிளர்சிதான் இறுதியில் பல மன உளைச்சல்களுக்கும் காரணமாகிவிடுகிறது.
அவரது இயல்பான நிலையை எதிர்கொள்ளும் சூழ்நிலைவரும்பொழுது அதை சந்திக்கும் மனதைரியம் மன பக்குவம் இல்லாமல் போவதுடன் தமக்கு நடந்த அநீதியை கூட தட்டிகேட்க்கமுடியாத ஒரு அவலநிலைக்கும் கொண்டுசென்றுவிடுகிறது.