Thursday, August 14, 2025
முகப்பு பதிவு பக்கம் 658

விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !

0

Manadu Posterன்பார்ந்த பெற்றோர்களே ! வணக்கம்

ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற பெரும்பான்மையான நாடுகளில் தாய்மொழியில்தான் அனைவரும் கல்வி கற்கிறார்கள். கல்வியை பொதுப் பள்ளிகள் மூலமாக அந்த நாடுகளின் அரசுதான் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அருகமை பள்ளி முறை – அதாவது நம்ம ஊர் ரேஷன் கடை போன்று அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்கும் அருகாமை பள்ளி முறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

10, +2 தேர்வு முடிவுகளை, 100% தேர்ச்சி, மாநிலத்தில் முதலிடம், மூன்றாவது இடம் என நாள்தோறும் பத்திரிகையில் வரும் தனியார் பள்ளிகளின் விளம்பரங்கள் ஆடித் தள்ளுபடிக்கு வரும் வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரத்திலிருந்து எந்த வகையில் வேறுபட்டது? மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதற்கு பதிலாக, கல்வியையும், மாணவர்களையும் விற்பனை சரக்காக்கி, பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மாற்றுவதை நாம் அனுமதிக்க முடியுமா?

உங்களுக்கு தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 1 கோடியே 35 லட்சம். தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம். அரசுப் பள்ளிகள் மொத்தம் 56,573, தனியார் மெட்ரிக் பள்ளிகள் சுமார் 16,000. ஆனால் அரசுப் பள்ளிகளின் சாதனை மறைக்கப்பட்டு தனியார் பள்ளிகளை தவிர வேறு இல்லை என்பது போல் திட்டமிட்டு விளம்பரம் செய்கிறார்கள். இதன் நோக்கம் அரசுப் பள்ளிகளை முடமாக்கி கல்வி வியாபாரத்தை விரிவுபடுத்துவதன்றி வேறு என்ன? இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணை போகிறார்கள்.

‘மார்க் எடுக்கும் மாணவர்கள் அறிவாளிகள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் முட்டாள்கள் அல்லது படிக்க முடியாதவர்கள்’ என்ற தவறான கருத்து இன்றைய கல்விமுறையில் உருவாக்கப்படுகிறது. இது களையப்பட வேண்டும். வகுப்பறை என்பது ஒரு தலைமுறை மாணவர்கள் தம் சிந்தனையை உருவாக்கிக் கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதநேயம் சார்ந்த வகுப்பறை சூழல் வேண்டும். கட்டிடங்கள் கல்வியை கற்பிக்காது. ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு உள்ள ஆசிரியர் சமூகத்தால்தான் சரியான கல்வியை கற்பிக்க முடியும்.

அனைவருக்கும் இலவச கல்வி உரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக உள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து பள்ளிகளின் தரம் உயர்த்த போராடாமல் கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் ஆங்கிலவழி பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டண சுமையை வாழ்நாள் முழுவதும் தங்கள் தோளில் சுமப்பது ஏன்?

ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இலட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.

கன்னடம், தெலுங்கு போன்று ஆங்கிலமும் ஒரு மொழி. அமெரிக்காவில் ஆங்கிலம் பேசிதான் பிச்சை எடுக்கிறான். ஆனால் ஆங்கில வழியில் படித்து மம்மி,டாடி என்றால் தான் அறிவாளிகள் என்ற, விஞ்ஞானத்திற்கு புறம்பான கருத்து மக்கள் மீது ஆழமாக பல்வேறு வடிவங்களில் வியாபார நோக்கில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.

இதனால் தங்கள் பிள்ளைகளை ஏ.டி.எம் மெஷினாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பித்து பிடித்து ஓடுகிறார்கள். மாணவர்களை மார்க் எடுக்கும் எந்திரமாக்கி பிராய்லர் கோழியாக மாற்றும் தனியார் பள்ளியில் தள்ளும் கொடுமை இங்குதான் நடக்கிறது.

தனியார் பள்ளி தரம் என போகும் பெற்றோர் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு அரசு கல்லூரிகளுக்கு வருவது ஏன்? பச்சமுத்து உடையார், சண்முகம் முதலியார், ஜே.பி.ஆர் சாராய உடையார் என தனியார் நடத்தும் கல்லூரிகளுக்குப் போகாமல் இருப்பது ஏன்?

ஆங்கில வழியில் படித்து விட்டா திருவள்ளுவர் 1330 குறள் படைத்தார். தாய்மொழியில் படித்தவர்கள், சிந்தித்தவர்கள்தான் உலகின் தலைசிறந்த அறிவாளிகளாக, விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்றைக்கு பல துறைகளில் உயர்பதவி வகிக்கிறார்கள்.

பெற்றோர்களாகிய நாம் சங்கமாக இணைந்து போராடினால் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை, ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பெற முடியும்.

கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை உடனே துவங்க முயற்சியுங்கள். அனைத்திற்கும் நாங்கள் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்.

நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் யார் போராடுவார்கள்.

தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் சிறு தொகை கூட பல போராட்டங்களை உயிர்ப்பிக்கும்.

நிதி தாருங்கள், மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

7.6.2014, சனி
விருத்தாசலம்

மாநாடு – பேரணி
மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு

பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி
வானொலித்திடல், விருத்தாச்சலம்

மாநாடு

7-6-2014 சனி, மக்கள் மன்றம், விருத்தாசலம்.

காலை அமர்வு – 10 மணி

தலைமை
திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

வரவேற்புரை
திரு ச. செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது!

பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு)
கந்தசாமிகண்டர் கல்லூரி,
நாமக்கல்

இலவச கல்வியின் கழுத்து நெரிக்கும் தீர்ப்புகள்!

வழக்கறிஞர் ச. மீனாட்சி, உயர்நீதிமன்றம், சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஆங்கிலவழி கல்வி சொர்க்கத்துக்கு போகும் குறுக்கு வழியா?

உதவிப் பேராசிரியர் ஆ இளங்கோவன்,
விலங்கியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்

கல்வி கொள்ளையர்களாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்!

தோழர் த கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

விவாத அரங்கம்

மதிய அமர்வு 2.30 மணி

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும்

மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா?
பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா?

தலைமை
பொறியாளர் த.குணசேகரன், மாவட்டத் தலைவர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

ஒருங்கிணைப்பு

திரு சி.எஸ்.பி.ரவிக்குமார்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கொள்ளிடம்

பரிசளிப்பு நிகழ்ச்சி

பேச்சுப்போட்டி

விடுதலைப் போரின் வீரமரபு

ஓவியப்போட்டி

டாஸ்மாக் – சீரழிவு

திருக்குறள் ஒப்புவித்தல்

கல்வி, ஒழுக்கம் அதிகாரம்

போட்டிகள் ஒருங்கிணைப்பு

திரு க. செல்வக்குமார்,  திரு ஆ. செல்வம்,
திரு ப. தீபக்குமார், திரு ரா.குமார், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திரு. வா. அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்

பேரணி மாலை 5 மணி

துவங்குமிடம்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்

துவக்கி வைப்பவர்
திரு.வி சோமசுந்தரம், தலைவர், விருத்தாசலம்
தமிழ்நாடு செராமிக் & ரெப்ராக்டரீஸ் மேனுபேக்சரர் அசோசியேசன்

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி, வானொலித்திடல், விருத்தாசலம்

நம் பிள்ளைக்காக நாம் போராடாமல் யார் போராடுவது?

தலைமை
வழக்கறிஞர் ரெ புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

முன்னிலை
வழக்கறிஞர் சி.செந்தில், துணைச்செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

திரு.ஜி.ராமகிருஷ்ணன், நகர தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு மு.முஜிப்பூர் ரஹ்மான், நகர செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சேத்தியாதோப்பு

உரையாற்றுவோர்

துரை.சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை

இமயம்,
எழுத்தாளர், விருத்தாசலம்

கோ பாக்கியராஜ், தலைமை ஆசிரியர்,
அரசு நடுநிலை பள்ளி, இலங்கியனூர்,
மாநிலத் தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

நன்றியுரை
வழக்கறிஞர் ச. செந்தில்குமார்,
இணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்.

தொடர்புக்கு:

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – கடலூர் மாவட்டம் – 9345067646
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம் 9360061121

ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

16

டந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள் இரு காவலர்கள் உள்ளிட்ட ஏழு ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பிறகு கிராமத்தில் பொது இடத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள்
கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள்

15, 14 வயதுடைய அந்த இருவரும் சகோதரிகள். வீட்டில் கழிவறை வசதியில்லாத காரணத்தால் அருகிலுள்ள மறைவான பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு போகின்றனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள், உசைத் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றனர். ஆனால் அங்கிருந்த சர்வேஷ் யாதவ் உள்ளிட்ட நான்கு காவலர்கள் புகாரை பெற்றுக்கொள்ளாமல் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதில் சந்தேகமடைந்த கிராம மக்கள் சகோதரிகளை பல இடங்களில் தேடிப் பார்த்தார்கள்

மறுநாள் அதிகாலை வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள மாமரத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்குவதை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தருகிறார்கள். ஆயினும் அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக வராமல் இழுத்தடிக்கின்றனர். கோபமடைந்த பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்ட ஆதிக்க சாதியை சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் இறங்கினர். அதன் பிறகுதான் போலீசார் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். தூக்கில் தொங்கிய பிணங்களை போலீசார் கைப்பற்றுவதற்கு போராடியவர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் பகுஜன் சமாஜவாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நீரஜ் மவுரியா, காங்கிரசு கட்சியின் பிரிஜபால் சாக்கியா போன்றோர் தலையிட்டு மக்களை அமைதிப்படுத்திய பிறகுதான் போலீசாரால் பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிந்தது.

புகாரை பெற்றுக்கொள்ள மறுத்த காவலர்கள் சர்வேஷ் யாதவ், ரக்ஷ்பால் யாதவ், ராம் விலாஸ், சத்ரபால் யாதவ் என  நான்கு காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக டி.ஐ.ஜி. ரத்தோர் கூறியுள்ளார். அவர்களில் சர்வேஷ் யாதவ் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர் என்பதால் அவர் மாத்திரம் கைதும் செய்யப்பட்டுள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த பப்பு யாதவ் மற்றும் அவரது சகோதரர்கள் பிரிஜேஷ், அவதேஷ் ஆகியோர் உள்ளிட்ட ஏழு பேர் இக்கும்பல் வல்லுறவில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் அனைவருமே ஆதிக்க சாதியான யாதவர் சாதியை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் பப்பு யாதவும், பிரிஜேஷூம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாதவ குலத்திலகமான கண்ணனை முன்னிறுத்தி சாதிப்பெருமை பேசும் இந்த சாதிவெறியர்கள் உண்மையிலேயே கிருஷ்ணனது வாரிசுகள்தான். வருணக்கலப்பினால் தர்மம் குலையும் என்று கீதையில் ஊளையிட்ட பகவானது பார்ப்பனிய ஆதிக்கம் இங்கே தலித் மக்களின் மீதான இரக்கமற்ற வன்முறையாக கொலையாக நடந்தேறியிருக்கிறது.

உஷைத்-லிலாவன் சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்களோ உஷைத் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று கோரினர். இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவர்களை உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி இரண்டு சகோதரிகளும் பாலியல் வல்லுறவினால் மாத்திரம் இறக்கவில்லை, தூக்கிலிடப்பட்ட பிறகுதான் இறந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரை முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை என்கிறார்கள் போராடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள்.

கிராம மக்களும் போலீசும்பதூன் மக்களவை உறுப்பினர் தர்மேந்திர யாதவ் (முலாயம் சிங்கின் மச்சான்) சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். இப்பகுதியில் ஆதிக்க சாதியாக இருக்கும் அவரது சாதியினர்தான் இப்பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநிலத்திலும் அவர்களது ஆட்சிதான் நடைபெறுகிறது. சம்பவ இடத்திற்கு அவரோ அல்லது அவரது கட்சியினரோ நேரில் வரவில்லை. அகிலேஷ் யாதவ் நான்கு போலீசாரை இடைநீக்கம் செய்திருப்பதை மாபெரும் நடவடிக்கையாக முன்னிறுத்துகிறார். இவர் அறிவித்த கருணைத் தொகையை அந்த சகோதரிகளின் பெற்றோர்கள் தூக்கி வீசியிருக்கின்றனர். கொலைகாரர்களை கைது செய்து தண்டனை கொடுக்காமல், கொலைகாரர்களின் சார்பில் நட்ட ஈடு கொடுப்பது போன்ற இந்த தந்திரத்தை மக்கள் புரிந்தே வைத்திருக்கின்றனர். சமூகநீதிக் காவலராக தன்னை அகில இந்திய அளவில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் காட்டிக் கொண்டாலும் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவதை பொறுத்த வரை இன்னபிற ஆதிக்கசாதிகளுடன் இணைந்துதான் அவரது கட்சியினர் செயல்படுகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே குற்றச் செயலில் ஈடுபட்ட யாதவர் சாதியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் முனைப்பு காட்டுவதில்லைதான். ஆதிக்க சாதியின் அரசியல்தான் சமூகநீதிக் கட்சிகளின் அரசியலாக வெளிப்படுகிறது.

இதற்கிடையில் நடந்த சம்பவத்திற்கு ஒரு நீதி விசாரணை தேவை என்று அகில இந்திய பெண்கள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசிடமிருந்து அறிக்கை கோரியிருக்கிறார். முசாஃபர் நகர் கலவரத்திற்கு பிறகு இந்துக்கள் என்ற முறையில் ஒன்றுதிரண்டுள்ள ஆதிக்க சாதியினர் பெருவாரியாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை உ.பி.யில் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிறகும் கூட பா.ஜ.க ஒரு வெற்று மிரட்டலுக்காக அகிலேஷ் சிங் யாதவை மிரட்டிப் பார்க்கிறது. மற்றபடி சாதிவெறியை பொறுத்தவரையில் பாஜகவின் இளைய பங்காளியாகத்தான் சமாஜ்வாதி கட்சியும் செயல்பட்டு வருகிறது என்பது எல்லோருக்குமே தெரியும்.

உத்திர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஜாட் சாதிவெறியும், இந்துமத வெறியும் கைகோர்த்துதான் அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் செயல்படுகின்றன. அதனை உறுதி செய்து ஓட்டுக்களாக மாற்றத்தான் அமித் ஷாவை உத்திர பிரதேசத்துக்கு முன்னரே அனுப்பி வைத்தார் மோடி. அதுதான் முசாஃபர் நகரில் கலவரமாக வெடிக்கும் போது பயன்படுத்தப் பட்டது. ஏற்கெனவே வாஜ்பேயி ஆட்சி காலத்தில் தான், ஹரியானாவில் செத்த மாட்டை தோலுரித்த காரணத்துக்காக ஐந்து தலித்துகளை தோலை உரித்துக் கொன்று தொங்க விட்டார்கள் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்த ஆதிக்க சாதிவெறியர்கள். இப்போது மோடி ஆட்சி வந்திருப்பதால் தைரியமாக தலித் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவதுடன் நில்லாது, பொது இடத்தில் தூக்கிலும் ஏற்றி விடுகின்றனர். ஜாட் சாதிவெறியின் அபிமானத்தை பெற்றிருக்கும் பாஜக இனி யாதவ சாதிவெறியர்களின் அபிமானத்தை பெற்றால்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியும். இது ஒன்றே இவர்கள் யார் பக்கம் என்பதை அறியத்தரும்.

போலீஸ் படை குவிப்புஇந்த குற்றச்செயலில் காவல்துறையினரும், ஆதிக்க சாதியினரும் திட்டமிட்டே ஈடுபட்டுள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வல்லுறவில் ஈடுபடும் காவலர்கள் பெரும்பாலும் துறைசார்ந்த விசாரணையை தாண்டி கைது போன்ற நடவடிக்கைக்கெல்லாம் உள்ளாவதில்லை. இந்த அதிகாரவர்க்க தைரியமும், ஆதிக்க சாதித் திமிரும்தான் தலித் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவாக அவர்களிடம் வெளிப்படுகிறது. மேலும் எல்லாக் கட்சிகளின் அரசாங்கங்களும் தமது ஆட்சிக்கு  காவல்துறையை நம்பியே இருக்கின்றன. இதனால் இயல்பாகவே காவல்துறையின் அதிகாரத்திமிர் அதிகரித்து வருகிறது.

போலீசையும், ராணுவத்தையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதுதான் பாசிஸ்டுகளின் கொள்கை. நீதிவிசாரணையை விட ஒரு போலி என்கவுண்டர் மூலமாக தீர்ப்பையே எழுதி விடலாம் என்பதுதான் அவர்களது ‘ஜனநாயக’ வழிமுறை. சுதந்திரம் என்பதற்கு இவர்களைப் பொறுத்த வரையில் குடிமக்கள் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடல் என்றுதான் பொருள். அரசுக்கெதிரான போராட்டங்களை போலீசு நசுக்கி எறிவதற்கு உபகாரமாக அவர்கள் செய்யும் இதுபோன்ற குற்றங்களை கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர். தில்லி மருத்துவ மாணவி மீதான வன்புணர்ச்சி மற்றும் கொலையில்  குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும் என்று கூவியவர்கள் இங்கே யாதவ மற்றும் போலிஸ் குற்றவாளிகளை அப்படி தண்டிக்க வேண்டும் என்று மறந்தும் பேசுவதில்லை.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களை தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆகவே அம்மக்கள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என காவல்துறை நினைக்கிறது. அடக்குவது என்ற பெயரில் அத்துமீறலாம், அயோக்கியத்தனம் என்பதை தமக்கு வழங்கிய உரிமையாகவே போலீசு கருதுகிறது. ஆதிக்க சாதி மற்றும் நிலவுடமையாளர்களுக்கு இது கிராமத்தில் அவர்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான உரிமையாகவே கருதப்படுகிறது.

இப்போது கைதான காவலர் மீது சதித் திட்டம் தீட்டியதாகவும் (பிரிவு 120B), மற்ற ஆதிக்க சாதியினர் மீது கொலை (302), பாலியல் வல்லுறவில் (376) ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி தனித்தனியாக வழக்குகளைப் பிரித்து பதிவு செய்வதே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி மக்களின் கோபத்திற்கு வடிகாலாக இடைநீக்கம், கைது போன்ற நடவடிக்கைகளை ஆளும் வர்க்கம் எடுக்கிறது. சாதியும், வர்க்கமும் இணைந்துதான் தலித் சகோதரிகள் மீதான வன்முறையாக வெளிப்பட்டிருக்கிறது.

ஒருவேளை அப்பெண்களின் வீடுகளில் கழிப்பறை இருந்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காதில்லையா ? என்று சிலர் அறிவாளி போன்று கேட்கிறார்கள். கழிப்பறை தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஆனால் கழிப்பறை இருந்துவிட்டால் இந்த வன்புணர்ச்சி கொலை நடக்காது என்ற முட்டாள்தனத்தை எப்படி புரியவைப்பது? மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் பிள்ளைகளை படிக்க வைத்து வாழ்வில் முன்னேறலாம் என்று நம்பியிருந்தார் பையாலால் போட்மாங்கே என்ற தலித். 2006 செப்டம்பர் 29-ம் தேதி அவரது மனைவி, மகள், மகன்கள் என அனைவரும் அவர் கண்ணெதிலே கும்பல் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொல்லப்பட்ட போது அவர் உடைந்து தான் போனார். அவரது மகள் 17 வயது பிரியங்கா வல்லுறவில் இறந்த பிறகும் தொடர்ந்து மொத்த ஊரும் சேர்ந்து அந்த கொடூரத்தை மீண்டும் இழைத்தது. இதுதான் ஆதிக்க சாதிவெறியின் ஆணாதிக்க மனோபாவம். இதுதான் இன்று உத்திர பிரதே மாநில் கத்ரா கிராமத்திலும் வெளிப்பட்டுள்ளது. ஆகவே கழிப்பறை கட்டியிருந்தால் ஆதிக்க சாதிவெறியர்கள் இன்னும் கொடூரமாக நடப்பார்கள் என்பதுதான் எதார்த்தம்.

பீகார், ஜார்கண்டில் ஆதிக்கசாதிவெறியர்களுக்கும் அவர்களின் குண்டர் படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் மட்டுமே இந்த கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவார்கள்.

பீடித் தொழில் – ஒரு பார்வை

5

ரிரு ரூபாய்களில் விற்கப்படும் மினி சிகரெட் முதல் பத்திருபது ரூபாய்களில் விற்கும் உள்நாட்டு-வெளிநாட்டு கிங்ஸ் சிகரெட்டை புகைப்போர் உலகம் தனி. புகை பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்றாலும் அதற்கு பலியாகியிருப்போர் பலர். ரூபாய்களில் வாங்கி புகைக்க முடியாத சாதாரண  உழைக்கும் மக்கள் இன்றும் பீடியைத் தான் பயன்படுத்துகிறார்கள். இன்றளவும் உடலுழைப்பு வேலை செய்யும் தொழிலாளர்கள் பரவலாக பீடி பயன்படுத்துவதை பார்க்கலாம். பெருகி வரும் வாழ்க்கை பிரச்சினைகளின் பதட்டத்தை சிறு அளவில் தணிப்பதாக நம்பி புகை பிடிக்கும் பழக்கம் இங்கே வேரூன்றியிருக்கிறது. புகை பிடிப்பதை குறைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் அரசு ஆண்டுக்காண்டு சிகரெட், பீடி விலையை ஏற்றுகிறது.

பீடி சுற்றும் பெண்கள்
பீடி சுற்றும் பெண்கள்

இதனால் புகை பிடிக்கும் பழக்கம் குறைகிறதா இல்லை மக்கள் அதற்கு அதிகம் செலவு செய்கிறார்களா? இதில் பின்னதுதான் நடக்கிறது என்பது சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகரித்து வரும் இலாபத்தின் மூலம் தெரிய வருகிறது. அதே நேரம் பீடி தயாரிக்கும் சிறு நிறுவனங்களும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளும் இந்த அதிக வரியினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் பீடியின் விலையை சிகரெட் போல ஏற்ற முடியாது. இந்த சுமையை இவர்களே தாங்கிக் கொள்வதால் முன்பு போல பீடி தொழில் இயங்கவில்லை.

சாதாரண மக்களுக்கான பீடி எப்படி தயாராகிறது? அந்த தொழில் எப்படி இயங்குகிறது?

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தான் பீடி தொழில் அதிகமும் பிரசித்தம். பெண்கள் தான் பெருமளவில் பீடி சுற்றும் வேலையில் கணிசமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலை என்பதால் பெண்கள் மத்தியில் முன்பு இந்த தொழில் பிரபலமாக இருந்து வந்தது. தற்போதும் குறைந்து விட்டாலும் இப்போதும் பெண்களே வேலை செய்கின்றர்.

வறுமை, பெண்களுக்கு படிப்பு தேவையில்லை, திருமணத்திற்கு நகை சேர்க்க வேண்டும், தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என பல காரணங்களால் படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு, பல பெண்கள் பீடி சுற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். பீடித் தொழிலில் ஒரு ஆள் பார்க்கும் வேலை செய்யும் தகுதி அடைந்தால் ஒரு கார்டு கொடுப்பார்கள். வேலைக்கு வரும் பெண்கள் அனுபவத்தில் இரண்டு மூன்று  கார்டுகள் பெறும் போது, அதாவது ஒரு ஆள் மூன்று ஆட்கள் வேலை செய்யும் நிலை அடையும் போது, அவர்களுக்கு திருமண சந்தையில் கிராக்கி அதிகம். அதாவது வரதட்சணை பேரத்தில் கொஞ்சம் கருணை காட்டப்படுவார்கள். இதனாலேயே இந்த தொழிலுக்கு நேர்ந்து விடப்பட்டவர்கள் பலர். அதுவுமன்றி பொருளாதாரம் நலிவுற்றிருக்கும் இக்காலத்தில் வீட்டு கைச்செலவுக்கு பணம் கிடைப்பதால் பல பெண்களும் இவ்வேலையை விரும்பியே செய்கிறார்கள்.

“முன்னாடியெல்லாம் நானும் என் தங்கச்சியும் சேந்து மூன்று கார்டு சுத்துவோம். வீட்டுக்கு தெரிஞ்சி இரண்டு கார்டு, யாருக்கும் தெரியாம மூணாவது கார்டு. அது எங்களுக்கு தாவணி எடுக்கவும், வளையல் எடுக்கவும் உதவும். அப்படி எடுக்கும்போது தான் எங்க மூணாவது கார்டு வீட்டுக்கே தெரியவரும்…….” என்று தன் மலரும் நினைவை கூறுகிறார், ஒரு பெண் தொழிலாளி.

டெலிபோன் பீடி
டெலிபோன் பீடி

ஒரு காலத்தில் யானை மீது விளம்பர ஊர்வலம், கோவில் கொடைகளுக்கு ஸ்பான்சர் செய்து அதன் நடுவில் தங்கள் பீடி விளம்பரம் செய்வது என்று கோலோச்சிய பீடி தொழிலின் இன்றைய நிலை என்ன?

இன்று  தட்டி போர்டு விளம்பரத்திற்கு கூட வழியில்லாமல் இருக்கிறது அத்தொழில். “முந்திலாம் யானை மேல பீடி வெளம்பர போர்ட வெச்சி வெளம்பரம் பண்ணுவோம். இன்னைக்கு தொழில் முடங்கி போச்சி. ஒரு காலத்துல சோறு போட்ட தொழிலுங்கிறதால விடாம பண்ணுதேன்” என்று பீடி தொழிலின் இன்றைய நிலை சொல்லும் மீரா சாகிப், ஒரு பீடி கம்பெனி ஏஜென்டாக இருக்கிறார்.

பீடி தொழிலில் பீடி சுற்றுபவர்கள், பீடி நிறுவனம் இவர்களுக்கு நடுவே மீரா சாகிப் போன்ற ஏஜெண்டுகள் எனும் மூன்றாம் தரப்பினரும் உள்ளனர். இந்த ஏஜெண்டுகள் தான் பீடி தொழிலாளிகளுக்கு பீடி கம்பெனிகளுக்கும் பாலமாக இருப்பவர்கள். நாம் பேசிக் கொண்டிருக்கும் மீரா சாகிப், குஜராத்தை சேர்ந்த டெலிபோன் பீடி என்ற நிறுவனத்திற்கு ஏஜென்டாக இருக்கிறார். அந்த நிறுவனம் இவருக்கு இலை, புகைத்தூள் மற்றும் கூலியாட்களுக்கான சம்பளம் ஆகியவற்றை கொடுத்து விடும். இவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களிடம் மூலப்பொருட்களை விநியோகித்து, பீடியாக மாற்றி குஜராத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதற்கு இவருக்கு கமிசன் கிடைக்கும். தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் இப்படி தனியாக ஏஜெண்டுகளைக் கொண்டிருப்பதில்லை. தாங்களே நேரடியாக அனைத்து வேலைகளையும் செய்து கொள்கிறார்கள்.

இந்திய அளவில் மங்களூரை சேர்ந்த கணேஷ் பீடி அதிகமாக விற்பனையாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 10-ம் நம்பர், செய்யது பீடி, காஜா பீடி, எம்.எஸ்.பி, சந்திரிகா பீடி, மோகம், பாலகன் போன்று 25 நிறுவனங்களுக்கு மேல் உள்ளன. இதைப் போன்று குஜராத்தின் டெலிபோன், மலபார் பீடி, சேஷாய் பீடி போன்ற நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களின் ஏஜெண்டுகளோ இல்லை நேரடி கம்பெனிகளோ பல சிறு கிராமங்களுக்கு மையமான ஒரு ஊரில் தங்கள் கிளைகளை திறந்திருக்கிறார்கள்.  பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட விரும்புபவர் ஏதாவது ஒரு ஏஜென்டிடம் சேர்ந்து கொள்ள வேண்டும். சேர்ந்தவுடன் அவர்களுக்கு என்று  தனியாக ஒரு கணக்கு துவங்கப்பட்டு அதற்கான புத்தகம் வழங்கப்பட்டு விடுகிறது. இந்த புத்தகம் தொழிலாளி பெற்றுக்கொண்ட மூலப்பொருட்கள், சமர்ப்பித்த பீடி எண்ணிக்கை போன்ற கணக்குகளை பராமரிக்க பயன்படுகிறது. சிலர் இரண்டு மூன்று புத்தகங்களும் வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு பெண், மூன்று நபர்கள் செய்யும் வேலையை செய்கிறார் என்று பொருள். இதைத்தான் மூன்று கார்டு என்று ஏற்கனவே பார்த்தோம்.

பீடி சுற்றுவதற்கான இலை மற்றும் தூளை ஏஜெண்டே கொடுத்து விடுவார். அதற்கு பணம் எதுவும் தரத் தேவையில்லை. அரைக்கிலோ இலைக்கு 200 கிராம் தூள் என்ற விகிதத்தில் மூலப்பொருட்கள் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்தி ஒரு கட்டுக்கு 25 பீடிகள் என்ற விகிதத்தில் நாற்பத்தியைந்து கட்டுகளை ஏஜெண்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது அரை கிலோ இலையில் 25X45=1125 பீடிகள் தயாரிக்க வேண்டும். இதற்கு ரூ 145 சம்பளமாக வழங்கப்படுகிறது. சம்பளம் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடுகிறது. தமிழகத்தின் பத்தாம் நம்பர் பீடி, இதே வேலைக்கு ரூ 155 சம்பளமாக தருகிறது. இந்த நிறுவனம தான் தமிழகத்தில் அதிக மார்க்கெட் கொண்ட நிறுவனம் என்கிறார் சாகிப் பாய்.

டெண்டு இலை
டெண்டு இலைகளை சுமந்து செல்லும் டோங்கிரியா கோண்டு இனப் பெண். (பீடியில் புகையிலை தூளை வைத்து சுருட்டப்படும் இலை இதுதான்).

கொடுக்கப்பட்ட இலைகளைக் கொண்டு பீடி இலக்கை அடைவது சற்று கடினம் தான். அதை அடைய இலை வெட்டுவதிலிருந்து நூல் சுற்றுவது வரை பல வித்தைகள் உள்ளன.  இவற்றில் எதில் சொதப்பினாலும் கைக்காசை செலவழிக்க வேண்டி வரும். உதாரணமாக பீடி இலையிலிருந்து தேவையான இலையை வெட்டி எடுப்பது என்பது ஒரு கலை.  ஏஜெண்ட் கொடுக்கும் இலையை பதப்படுத்தி அதிலிருந்து எந்த அளவுக்கு அதிகமாக உபயோகமான பகுதிகளை கத்தரித்து எடுக்கிறோமோ அந்த அளவுக்கு 1125 என்ற இலக்கை அடையமுடியும். இலை வெட்டும் திறமையின்மையினாலோ அல்லது மோசமான இலை காரணமாகவோ சமயங்களில் இலக்கை அடைய முடியாமல் போகலாம். அப்படியெனில் சம்பந்தப்பட்ட நபர் சொந்த செலவில் இலைகளை வாங்கி சமாளிக்க வேண்டும். இந்த இலைகள், பெரும்பாலும் அதே ஏஜெண்டிடமிருந்தும், வெளிச்சந்தைகளிலும் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அரைகிலோ இலை ரூ 100 என்ற விலையில் விற்கப்படுகிறது. எப்போதாவது சில சமயங்களில் இலக்கை மீறி அதிக எண்ணிக்கையில் பீடி சுற்றி விட்டால் அதில் கிடைக்கும் மீதமான பீடியை  வரும் காலங்களில், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதை கணக்கில் கொண்டு சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.

நிறுவனத்தின் அளவுகோல்களுக்கு ஏற்றபடி சுற்றா விட்டாலும் பிரச்சனை தான்.  ஒவ்வொரு நிறுவனத்தின் பீடியும் நீளம், பருமன், பீடி நூல்களின் வண்ணம் ஆகியவற்றால் வேறுபடுகின்றன. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அந்த பீடிகளை தரம் இல்லை என்று  நிறுவனத்தினர் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இதனால் ஏற்படும் இழப்பையும் தொழிலாளிதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சம்பளத்தை பொறுத்தவரை 200 கிராம் புகைத்தூளுக்கு (1125 பீடிக்கு) ரூ 145 முதல் 155 வரை கிடைக்கிறது.  சராசரியாக ஒரு நபர் ஒரு நாளில் 1,125 பீடி சுற்றிவிட முடியும். இதையே முழுநேரமாக செய்தால் 300 கிராம் தூள் வரை சுற்றலாம். தினம் 145 வீதம் வைத்துக்கொண்டால் மாதம் ரூ 4,000 முதல் ரூ 5,000 வரை தான் இவர்களின் சம்பளம் இருக்க முடியும். வீட்டில் சும்மா இருப்பதற்கு இதாவது கிடைக்கிறதே என்றுதான் பலர் இந்த தொழில் செய்கிறார்கள். இந்த சம்பளத்தில்  சேமநலநிதியும் பிடிக்கப்படுகிறது.  பெரும்பாலானவர்கள் இந்த சம்பளத்தில் சீட்டு கட்டுகிறார்கள். பணம் தேவைப்படும் நேரங்களில் பி.எஃப் கணக்கை முறித்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

சில நிறுவனங்களில் வார சம்பளமாகவும், சில நிறுவனங்கள் மாத சம்பளமாகவும் தருகின்றன. இந்த குறைந்த சம்பளத்திற்காக பீடி தொழிலாளர்கள் இழப்பது அதிகம். எப்பொழுதும் புகைதுளோடு புழங்குவதால், பீடிசுற்றும் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் கூட காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்குகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட பின்னரும் வேறு வழியின்றி பீடி சுற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

தங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக சேமநல நிதி, இ.எஸ்.ஐ மருத்துவ காப்பீடு, குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை போன்றவற்றை பெற்றிருந்தாலும் இவை பெயரளவிற்குதான் உள்ளன.  பீடி சுற்றுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்திருப்பதாகவும் ஆனால அப்படி ஓய்வூதியம் யாரும் பெற்றதுபோல தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.

பீடி ஏஜென்டுகள் வேறு விதமான பிரச்சனைகள் சந்திக்கிறார்கள்.

மங்களூர் கணேஷ் பீடி
மங்களூர் கணேஷ் பீடி

“தமிழகத்தில் வட இந்திய கம்பெனிகள் தான் அதிக அளவில் பீடி உற்பத்தி செய்கின்றன என்றாலும் அவற்றின் உற்பத்தி மையங்கள் தென் தமிழகத்தில்தான் இருந்து வந்தன. தற்பொழுது வட இந்தியாவிலும் பீடி சுற்றும் தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் தமிழகத்தை விட குறைந்த கூலியில் செய்ய தயாராக இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் 200 கிராம் தூளுக்கு சம்பளம் வெறும் ரூ 100 தான்.

அதுபோக இலை மற்றும் புகைத்தூளை அங்கிருந்து கொண்டுவந்து பீடியாக்கி மீண்டும் அங்கு கொண்டு செல்ல செலவு இருமடங்காவதோடு, பல்வேறு வரிகளும் கட்ட வேண்டியிருப்பதால் தமிழகத்தை சமீப காலமாக தவிர்த்து வருகிறார்கள் வட இந்திய முதலாளிகள். இதனால் வட இந்திய நிறுவனங்களுக்கு வேலை செய்யும் என்னை போன்றோர் பாதிக்கப்பட்டுள்ளோம். இதுபோக இப்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் இல்லை. புதிதாக பீடி தொழிலுக்கு யாரும் வருவதும் இல்லை. இப்போ எல்லோரும் குளத்து வேலைக்கு (நூறு நாள் வேலை திட்டம்) சென்று விடுகிறார்கள்” என்கிறார் மீரா சாகிப்.

அது போக வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் பீடியிலிருந்து சிகரெட்டுக்கு மாறிவிட்டதால் பீடி நிறுவனங்கள் தங்கள் சந்தையை கணிசமான அளவில் இழந்துள்ளன. 80-களில் மாதத்திற்கு ஒரு கோடி பீடி  செய்து அனுப்பிக் கொண்டிருந்த மீரா சாகிப் தற்போது 7 லட்சம் பீடி தான் சப்ளை செய்கிறார். “இப்போ எல்லாரும் சிகரெட்டு, பாக்கு அது இதுனு மாறிட்டாங்க. யாரும் பீடியை விரும்புறதில்லை. அரசாங்கமும் பீடிக்கு விளம்பரம் செய்ய கூடாதுனு சொல்லுது” என்று சந்தையின் வீழ்ச்சிக்கான காரணங்களை சொல்கிறார் அவர். முன்னர் வள்ளியூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், புளியங்குடி  உள்ளிட்ட ஊர்களில் டிப்போக்களை கொண்டிருந்த இவரது நிறுவனம் தற்போது திருநெல்வேலி, புளியங்குடி என இரண்டாக குறைந்து விட்டது.

தமிழகத்திலிருந்து தினம் எவ்வளவு பீடி உற்பத்தியாகிறது என்று கேட்டபோது

“அது தெரியாது. ஆனால் டெலிபோன் நிறுவனம் தினசரி ஒரு கோடி பீடிகளை  தமிழகத்திலிருந்து எடுத்து சென்றது ஒரு காலம். இப்போது அது  20 லட்சம் பீடிகளாக குறைந்து விட்டது. அப்பொழுது  டெலிபோனுக்கு மட்டும் என்னை போன்று 170 நபர்கள் ஏஜென்டுகளாக இருந்தோம். இப்போ 60 பேர் தான் இருக்கிறோம்.” என்றார்.

ஏஜென்டுகளைப் பொருத்தவரை, ஆயிரம் பீடிக்கு ஐந்து ரூபாய் வீதத்தில் கமிசன் கிடைக்கிறது. நிறுவனம் கொடுக்கும் மூலப்பொருட்களுக்கு, 52 கிலோ இலைக்கு 1 லட்சம் பீடி என்ற வீதத்தில் இவர்கள் சப்ளை செய்ய வேண்டும். இலை எப்படி மோசமாக இருந்தாலும் இவர்கள் பீடி எண்ணிக்கையை குறைக்க முடியாது. இதனால் ஏற்படும் சுமை இறுதியாக பீடி தொழிலாளர்கள் தலையில் தான் விழும். மீரா சாகிப்பும் இதை தான் சொல்கிறார்.

தினேஷ் பீடி
கேரள தொழிலாளர் கூட்டுறவு தினேஷ் பீடி

“உங்களுக்கு மாசம் எவ்வளவு  கிடைக்கும் ? “

“அது புள்ளைகள எவ்வளவு களவாங்குதமோ அத பொருத்து.  நம்மள எவ்வளவு களவாங்குறானோ அந்த அளவு கம்பெனிகாரனுக்கு லாபம்” என்று  ‘புள்ளைகள்’ அனைவருக்கும் கேட்கும்படி சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார் சாகிப்.

தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தான் முதலாளிகளின் லாபம் என்பதை அனுபவபூர்வமாக சொல்கிறார் இந்த பாய். ஆனால் மெத்த படித்த முதலாளித்துவ அறிவுஜீவிகள் இதை ஒப்புக் கொள்வதில்லை. மேலும் மீரான் பாயிடம் பீடி தொழில் செய்வது இசுலாத்திற்கு விரோதமில்லையா என்றுகேட்ட போது, “இஸ்லாத்தில் அப்படி இருப்பதாக தெரியவில்லையே” என்றவர், “ஒருவேளை அப்படியே இஸ்லாத்துக்கு விரோதமென்றாலும் வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியில்லை என்பதால் செய்துதான் ஆகவேண்டும்” என்றார். ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பது வர்க்கமா, மதமா என்று இதைவிட அழகாக யாரும் விளக்க முடியாது.

தங்களுக்கு கிடைக்கும் ஐந்து ரூபாய் கமிசனில் தான் இவர்கள் தங்களது அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். திருநெல்வேலியிருந்து இலை மற்றும் புகைத்தூளை எடுத்து ஒவ்வொரு ஊர் அலுவலகத்திற்கும் கொண்டு சேர்க்க ஆகும் செலவுகள், ஒவ்வொரு கிராமத்திலும் ஆபீஸ் ரூம் வாடகை, பின்னர் பீடியை  டிப்போவிற்கு கொண்டு சேர்ப்பதற்கான செலவு போன்ற பல செலவுகளை இந்த ஐந்து ரூபாய் கமிசனிலிருந்து தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த தொழிலில் நஷ்டம் அதிகமாகி தற்கொலை செய்து கொண்ட ஏஜெண்டுகளும் இருக்கிறார்கள் என்கிறார் மீரான். இது போக புகைத்தூளினால ஏற்படும் அனைத்து வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படுகின்றன. ஆயினும் வேறு வழியில்லாததால் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.

உலகம் பீடியிலிருந்து நவீனமாக சிகரெட்டுக்கு மாறிவிட்டதன் பின்னணியில் புதிய தலைமுறையினர் யாரும் பீடித்தொழிலுக்கு வருவதில்லை.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் தன்னையும் தன்னை நம்பியவர்களையும் காத்துக்கொள்ள பீடி உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. ஒருக்கால் புகை பிடிக்கும் பழக்கம் குறைவதன் நீட்சியாக இந்த அழிவை எடுத்துக் கொள்ளலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த அழிவு சிகரெட் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்குத்தான் இலாபமாக மாறி போகிறது.

ஐ.டி.சி ஏகபோகம்
ஐ.டி.சி ஏகபோகம்

சிகரெட்டுக்கு அதிக வரி போட்டாலும் புகை பிடிப்போரே அதன் சுமையை சுமக்கின்றனர். நிறுவனங்களுக்கோ இலாபம் பல மடங்குகளில் அதிகரிக்கிறது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டிருக்கும் ஐ.டி.சி எனும் பன்னாட்டு நிறுவனம், 2012-13-ம் ஆண்டில் மட்டும் 27,136 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றிருக்கிறது. இதில் இலாபம் மட்டும் 8,694 கோடி ரூபாயாகும். இது போக நுகர்பொருள் தொழில், ஓட்டல் என்று நிறைய தொழில் செய்யும் இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருமானத்தில் சிகரெட் மட்டும் 56% பங்கை அளிக்கிறது. ஆனால், நிறுவனத்தின் இலாபத்தில் சிகரெட்டின் பங்கு 82% ஆகும். அதாவது, விளம்பரம் செய்யத் தேவையில்லாத, போட்டி இல்லாத சிகரெட் விற்பனையில் குறைந்த செலவில் அதிக கொள்ளை அடிக்கிறது ஐ.டி.சி. இந்தியாவின் ஒட்டு மொத்த சிகரெட் சந்தையில் ஐ.டி.சியின் பங்கு  80% வரை இருக்கிறது.

சிகரெட் விளம்பத்திற்கும் தடை இருந்தாலும் ஐ.டி.சியின் ஏகபோகம், மற்றும் பல்வேறு பதிலி விளம்பரங்களால் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தல் தொடர்வதாலும் ஐடிசியின் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்தே வருகிறது. எனவே பீடியின் அழிவை ஐ.டி.சியின் பொலிவோடு சேர்த்து பார்க்க வேண்டும். சிகரெட்டுக்கு வரிபோடும் மத்திய அரசு அதை நிறுவனத்தின் தலையில் சுமத்துவதில்லை. ஒரு வேளை புகை பிடிக்கும் பழக்கம் குறைய வேண்டும் என்றால் சிகரெட் உற்பத்தியை நிறுத்துவதுதான் சரியான அணுகுமுறை, அதை விடுத்து வரி போடுவது என்பது பன்னாட்டு முதலாளிகளின் ஆதாயத்திற்கே வழிவகுக்கும்.

இந்தியாவின் புகையிலை நுகர்வில் 48% பீடியின் பங்காக இருக்கிறது. சிகரெட்டை விட பீடியில் கார்பன் மோனாக்சைடு, நிகோட்டின், தார் போன்ற உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். எனினும் சாதாரண மக்கள் தமது வருமானத்தில் இதை விடுத்து பில்டர் சிகரெட்டுக்கு மாறுவதை நினைத்துப் பார்க்க முடியாது. உடல் நலனை பீடி மட்டும்தான் கெடுக்கிறது என்று அட்வைசு செய்யும் நண்பர்கள் முதலில் இந்த தொழிலாளிகளின் கடும் உழைப்பு வேலைகளுக்கு மாற்று என்ன என்பதையும் யோசிக்க வேண்டும். அதற்கு தீர்வுகாணாமல் குடியும், புகைபிடிக்கும் பழக்கமும் ஒழிவது சிரமம்.

17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் புகையிலை சாகுபடி இந்தியாவிற்கு அறிமுகமானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் பீடி புழக்கத்திற்கு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் குஜராத்தின் பட்டேல் சாதியைச்சேர்ந்த முதலாளிகள்தான் பீடி தொழிலை ஆரம்பித்திருக்கின்றனர்.

தற்போது சுமார் 30 இலட்சம் இந்திய மக்கள் பீடித்தொழிலில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. பீடி தொழில் ஆரம்பத்திலிருந்தே குடிசைத் தொழிலாக கருதப்பட்டு வந்தது. தற்போது ஏனைய குடிசைத் தொழில்களுக்கு கிடைத்த மானிய வெட்டு, சலுகை ரத்து பீடி தொழிலுக்கும் பொருந்தும்.

மங்களூர் கணேஷ் பீடி எனும் முதலாளியின் நிறுவனம் பீடித்தொழிலில் ஏக போகம் செலுத்திய போது கேரளாவின் பீடி தொழிலாளிகள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தொழிலாளர் கூட்டுறவு சங்க தயாரிப்பாக தினேஷ் பீடி அறிமுகம் செய்யப்பட்டு பெரும் இயக்கமாக கொண்டு செல்லப்பட்டது. கேரள ‘சகா’க்களின் ( தோழர் எனும் வார்த்தையின் மலையாள வார்த்தை சகா) ஒரு அடையாளமாக தினேஷ் பீடி இருந்தது. இன்றும் கூட கேரளாவில் சராசரி மலையாளிகளின் அடையாளமாக பீடி இருக்கிறது என்று கூற முடியும். அதே நேரம் சேட்டன்களும் சிகரெட்டுக்குத்தான் மாறி வருகின்றனர் என்பதை மறுக்க வேண்டியதில்லை.

பீடியை விட அதிகம் ஆபத்துள்ள நேரடி புகையிலை பொருட்களை விழுங்கும் பான் வகையைச் சேர்ந்த புகையிலை பொருட்களே தற்போது அதிகம் நுகரப்படுகின்றன. சில வருடங்களிலேயே இதன் பாதிப்பு பாரதூரமாக வெளிப்படுகிறது. இரண்டு ஷிப்டுகள் தொடர்ந்து வேலை பார்ப்பது, தொடர்ந்து கண் விழிப்பது என்று பல்வேறு இடர்ப்பாடுகளை இத்தகைய புகையிலை பொருட்கள் ‘தணிக்கின்றன’. இறுதியில் அந்த தொழிலாளிகளின் உயிரும் கூட சராசரி இந்தியர்களின் ஆயுளை விட குறைந்த காலத்திலேயே சீக்கிரமே இயங்காமல் நின்று விடுகிறது.

தன்னார்வக் குழுக்களின் ஆரோக்கியக்கேடு என்பதாக மட்டும் பீடி பிடிப்பதை பார்க்காமல், பொருளாதார ஏற்றத்தாழ்வின் அவலமாக பீடி தொழிலை பார்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். ஆரோக்கியத்தின் பொருட்டு புகை பிடிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றால் முதலில் ஐ.டி.சி நிறுவனம் இழுத்து மூடப்படவேண்டும். அப்போதும் கூட பீடித்தொழிலுக்கு மாற்றை அரசு உருவாக்க வேண்டும்.

–    வினவு செய்தியாளர்.

புதுச்சேரி மின்துறை ஆணைய அலுவலகம் முற்றுகை !

6

“பாராளுமன்றம் டம்மி! ஆணையங்களின் காலை நக்கும் ‘ஜிம்மி’”! என்ற முழக்கத்தின் கீழ் மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மின் துறை ஆணையம் முற்றுகை! 29 பேர் கைது!

கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கட்டண உயர்வுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அறிவித்த ஜெயலலிதா, இரண்டு தினங்களுக்கு முன் இனிமேல் தமிழகத்தில் மின் வெட்டே இருக்காது எனவும் பெருமையாக அறிவித்தார். ஆனால், இதுவரை நடந்த மின் வெட்டிற்கும், மின் கட்டண உயர்வுக்கும் காரணம் யார் என்ற உண்மையை மறைத்து விட்டார். ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியோ, இவை எல்லாம் தெரிந்தும் தனக்கு எதுவும் தெரியாதது போல் பம்மிக் கொண்டார்.

கடந்த ஆண்டு மே முதல் இவ்வாண்டு மே வரை ஆறு முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இது மக்களின் மீது தாளாத சுமையாக மாறியுள்ளது. இதனால், இம்முறை மின் கட்டண உயர்வை அறிவித்தவுடனே மக்கள் தன்னிச்சையாக தாங்கள் மின் கட்டணம் செலுத்தும் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மின் கட்டண உயர்வுக்கும், மின் வெட்டிற்கும் உண்மையில் யார் காரணம் என்பதையும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படிப்பட்ட போராட்டங்களைக் கட்டியமைப்பது என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில், புதுச்சேரி மின் துறை ஆணையத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த மின் கட்டண உயர்வுக்குக் காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் எம்.எல்.ஏ, க்களோ, எம்.பி. க்களோ அல்ல. இவர்கள் அனைவரும் எந்தவித அதிகாரமுமற்ற டம்மி பீஸ்கள் தான். இதை தனது வாயாலேயே ஒத்துக் கொண்டு விட்டார் தமிழக முதலமைச்சர். பம்மிக் கொண்டார் புதுச்சேரி முதலமைச்சர்.

அப்படியென்றால், மின் கட்டணத்தை உயர்த்துவதும், அதை அமல்படுத்த இவர்களுக்கு உத்தரவிடுவதும் மின் துறை ஆணையம் தான். இவர்கள் தான் உண்மையில் அதிகாரம் படைத்தவர்கள். வறுமையைப் பற்றியோ, விலைவாசி உயர்வினால் மக்கள் படும் அவதிகளைப் பற்றியோ அறியாத கலெக்டர், தாசில்தார், தொழில்நுட்ப வல்லுநர்கள் என மேட்டுக்குடி வர்க்கத்தினர் இவர்கள். முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடியாட்கள். பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களோ இவர்களின் கட்டளைக்கு ஓடும் ஏவல் நாய்கள் தான்.

மக்களின் சேவைத்துறையாக இருந்த மின் துறையைத் தனியாருக்குக் கொடுத்து, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி, அதை தனியார் முதலாளிகளுக்கு சலுகை விலையில் வழங்குகின்றனர். இதனால், தமிழக மின் துறைக்கு ரூ 75,000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மின் துறையிலோ ரூ 900 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த வருவாய் இழப்பையும், அதிக விலைக்கு வாங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவையும் மக்களின் தலையில் சுமத்தி தனியார் முதலாளிகளின் கொள்ளையை உத்திரவாதப்படுத்துகின்றனர். இந்தக் கொள்ளை தான் மின் கட்டண உயர்வுக்குக் காரணம். இந்நிலைமைகளை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 28.05.2014 அன்று மதியம் 3.00 மணியளவில் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முழக்கமிட்டுக் கொண்டே ஊர்வலமாக சென்று, சாரம், சத்யா நகரில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மின் துறை ஆணையத்தின் மக்கள் குறை தீர்வு அவை அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அலுவலக வாயிலைத் தாண்டி அலுவலகத்தினுள் சென்று அமர்ந்தோம். முழக்கங்கள் இடைவிடாது தொடர்ந்துகொண்டே இருந்தது. காவல் துறை, “எந்தப் பிரச்சினையென்றாலும் வெளியில் நின்று தான் முறையிட வேண்டும், அலுவலகத்தினுள் வரக்கூடாது” என சொல்லிப் பார்த்தது. பின் மிரட்டிப் பார்த்தது. ஆனால், தோழர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கத்தைத் தொடர்ந்தவாறே இருந்தனர். ஒரு கட்டத்தில், “நாங்கள் உங்களைக் கைது செய்வோம்” என்று மிரட்டினர். “எங்கள் கோரிக்கைகள் மக்களுக்கானது. அதனால், நாங்கள் கைதாக மாட்டோம்” என அறிவித்தோம். இவ்வாறு பேசிக் கொண்டிருந்தாலும் மறுபுறம் முழக்கங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

ஒரு கட்டத்தில் முழக்கமிடும் தோழரை தனியாக பிரிக்கப் பார்த்தது. ஆனால், தோழர்கள் தங்களுக்குள் சங்கிலி போன்ற பிணைப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதனால், காவல் துறையினரால் தனியாக பிரிக்கமுடியவில்லை. அதைப் பார்த்த காவல் துறை அதிகாரி, சிறிது நேரம் கத்தி ஓய்ந்துவிடுவார்கள். பிறகு அவர்களைப் பிரிக்கலாம் என சற்று நேரம் அமைதியாக இருந்தனர். ஆனால், நேரம் செல்ல செல்ல பல முனைகளி லிருந்து முழக்கம் இடைவிடாது தொடர்ந்த வண்ணம் இருந்தது. இனி பொறுத்து பயனில்லை என்பதை உணர்ந்த காவல்துறை அதிகாரி, கூடுதல் காவலர்களை வரவைத்து தோழர்களைக் குண்டுகட்டாக தூக்கியும், தரையோடு தரையாக இழுத்துக் கொண்டு வந்தும் வெளியில் தள்ளிக் கைது செய்ய முடிந்தது. இதே போல் பெண் தோழர்களைக் கைது செய்ய ஆண் காவலர்கள் முயற்சித்தபோது, இதைக் கடுமையாக கண்டித்து பேசியவுடன் காவலர்கள் பின் வாங்கினர். அதன்பின் அந்த பெண் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்த பின் நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி, “சம்மந்தப்பட்ட துறைக்குச் சென்று முறையிட வேண்டும். மேலும், அலுவலகத்தினுள் வந்து போராட்டம் செய்வது சட்டவிரோதமானது” என்றார்.

“சம்மந்தப்பட்ட துறைக்கு வந்து தான் முறையிட்டுள்ளோம். மேலும், மனு கொடுத்து முறையிடுவதால் பலன் ஏற்படவில்லை” என் நாம் கூறினோம்.

“என்னிடம் மனு கொடுங்கள் நான் சம்மந்தப்பட்ட துறையிடம் தங்களை அழைத்துச் செல்கிறேன், பிரச்னையை அங்கு முறையிடலாம்” என்ற அந்த காவல் துறை அதிகாரியிடம்,

“ஏற்கனவே, இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள லியோ பாஸ்டனர்ஸ் என்ற நிறுவனத்தில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடிய போது, அங்கிருந்த காவல்துறை எஸ்பி, தங்களது கோரிக்கைகளைக் கடிதமாக தரச்சொல்லிக் கேட்டு வாங்கினார். ஆனால், அது பற்றி எந்தத் தகவலும் இல்லை. அந்த கடிதத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவலைக் கேட்டபோது, இது தொழிலாளர் சம்மந்தப்பட்ட பிரச்சினை இதில் நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரமில்லை என்று பதில் அளித்திருந்தார்” என்ற கடந்த கால அனுபவத்தைக் கூறி

“இது போலவே இப்போதும் நடக்கும். இது மக்களுக்குத் தீர்வு தராது” என விளக்கிப் பேசி “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் கைதாகி பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

முற்றுகைப் போராட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி – ஓங்குக!

புதுவை அரசே! புதுவை அரசே!
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும்
மின் கட்டண உயர்வினை
ரத்து செய்! ரத்து செய்!

புதுவை அரசே! புதுவை அரசே!
மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள
தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க
உழைக்கும் மக்களை பலியிடாதே!

புதுவை அரசே! புதுவை அரசே!
புதுச்சேரி மின் துறையில்
900 கோடி ஊழல் செய்த
மின் துறை அதிகாரிகளின்
பதவியைப் பறித்து சொத்தைப் பறித்து
தண்டனை வழங்கு! தண்டனை வழங்கு!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
போராடுவோம்! போராடுவோம்!
உழைக்கும் மக்களின் தாலியறுக்கும்
மின்கட்டண உயர்வினை
ரத்து செய்யப் போராடுவோம்!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
தனியார் முதலாளிகள் கொள்ளைக்கான
கூடுதல் மின் கட்டணத்தை
செலுத்த மறுப்போம்! செலுத்த மறுப்போம்!

உழைக்கும் மக்களே! புதுவை மக்களே!
அதிகாரத்தைக் கையிலெடுத்து
நியாயமான கட்டணத்தை
நிர்ணயிப்போம்! நிர்ணயிப்போம்!

ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த
எம்.எல்.ஏ. – வுக்கு அதிகாரமில்லை!
எம்.பி. – க்கும் அதிகாரமில்லை!
ஆணையங்கள் என்ற பெயரில்
கொட்டமடிக்கும் அதிகாரவர்க்க
கும்பலுக்கே முழு அதிகாரம்!

கல்வியில் தனியார்மயம்!
மருத்துவத்தில் தனியார்மயம்!
தொலைபேசியில் தனியார்மயம்!
மின்சாரத்தில் தனியார்மயம்!
தண்ணீரிலும் தனியார்மயம்!
விலைவாசி உயர்வுக்கும் கட்டண உயர்வுக்கும்
காரணமே தனியார்மயம்!

முதலாளிகளுக்கு சேவை செய்யும்
தனியார்மயக் கொள்கைகளை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
மக்களுக்கு அதிகாரம் வழங்கும்
மக்கள் சர்வாதிகார மன்றங்களைக்
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க!
புதிய ஜனநாயகப் புரட்சி – ஓங்குக!

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – புதுச்சேரி
தொடர்புக்கு : 95977 89801

அஞ்சலையின் இருபது வருடப் போராட்டம்

9

ரிதினும் அரிதான வழக்குகளில் மட்டும்தான் காவல்துறையினர் கைது செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளிலும் கூட நீதி கிடைப்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் சில பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதிருக்கும். அதிலும் அவர்கள் ஏழைகளாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து விட்டால் நீதியை அவர்கள் கனவில்தான்  பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.

அஞ்சலை
அஞ்சலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வசிக்கும் அஞ்சலை என்ற பெண்ணுக்கு இப்படி ஒரு காலம் தாழ்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. சென்னை கொத்தவால் சாவடியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த அஞ்சலையின் கணவனை 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு விசாரணைக்காக அழைத்துச் சென்றார் பாடலூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஆய்வாளர் கஸ்தூரி காந்தி.

பாண்டியனுடைய தம்பி செல்லத்துரை, ஆதிக்க சாதியை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் மோகன் என்பவரது இள வயது மகளை காதலித்து பின்னர் கடத்திச் சென்று விட்டார் என்பது தான் வழக்கு. காதலர்கள் சிக்காத காரணத்தால் அடைக்கலம் தந்திருப்பாரோ என்ற சந்தேகத்தின் பேரில் பாண்டியனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு சென்ற பாண்டியன் வீடு திரும்பவில்லை. இரு நாட்கள் கழித்து கிழுமத்தூர் சின்னாற்றங்கரையில் உள்ள வேப்ப மரமொன்றில் தூக்கில் தொங்கியபடிதான் அவரது உடலை உறவினர்களால் மீட்க முடிந்தது. பாண்டியனது கைகள் பின்னால் கட்டப்பட்டும், ஆசன வாயில் துணி செருகப்பட்டும் இருந்தது தெரிய வரவே இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள் சேர்ந்து பல்வேறு மறியல், முற்றுகை போராட்டம் நடத்திப் பார்த்தார்கள். அரிசி ஆலை அதிபரது சகோதரன் சுப்பிரமணியம் என்பவர், நடந்த சம்பவத்திற்கு போலீசுதான் காரணம் என ஊர் மக்களிடம் தெளிவாகக் கூறி விட்டார். பிரேத பரிசோதனை செய்த மருத்துவரும் பாண்டியன் தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்கிறார். மக்களின் போராட்டத்தால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக 1995-ல் இச்சம்பவத்தை விசாரித்த கோட்டாட்சியர் இதனை தற்கொலை தான் என்று தீர்ப்பெழுதி தனது அதிகார வர்க்க பாசத்தை நிரூபித்துக் கொண்டார்.

மறுபுறம் தனது கணவனது மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சிவில் உரிமைக் கழக (பி.யூ.சி.எல்) உதவியுடன் அஞ்சலை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2003-ல் நீதிமன்றம் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி வழக்கை தள்ளுபடி செய்தது. மீண்டும் டிவிசன் பெஞ்சில் அப்பீல் செய்தார் அஞ்சலை. 13 டிசம்பர் 2013-ல் நீதிபதிகள் எலிப்.பி.தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வானது இக்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டதுடன், குற்றச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் அஞ்சலைக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்திரவிட்டது.

பிறகு சிபிஐ விசாரணை துவங்கியது. மாநில காவல் துறையினரே இக்கொலை வழக்கில் குற்றவாளிகளாக இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு அவர்கள் யாரும் ஒத்துழைக்கவில்லை. பாண்டியனது பிரேதப் பரிசோதனை அறிக்கை, அவர் தூக்கில் தொங்கும் புகைப்படம் போன்றவற்றையெல்லாம் கூட அஞ்சலையிடமிருந்துதான் சிபிஐ பெற்றுக் கொண்டிருந்தது. ”இன்னும் எத்தனை வருஷத்துக்கு விசாரித்துக் கொண்டே இருக்கப் போகிறீர்கள்” என்று விரக்தியாக சிபிஐ அதிகாரிகளிடம் அஞ்சலை கேட்டாராம்.

கஸ்தூரி காந்தி
கஸ்தூரி காந்தி

கடந்த திங்கள்கிழமை (26-05-2014), மதுரை மாநகர கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை உதவி ஆணையராக (AC) பணியாற்றும் சி. கஸ்தூரி காந்தியையும், திருச்சி விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் ரவி (பாண்டியன் கொலையான போது இவர் குன்னம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்) என்பவரையும் சென்னைக்கு சம்மன் அனுப்பி வரவழைத்த சிபிஐ  அவர்களை கைது செய்தது. குன்னம், பாடலூர் காவல் நிலையங்கள், பழைய திருச்சி மாவட்டத்திற்குள் வருவதால் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். முன்னர் திருச்சியில் உதவி ஆணையராக பணியாற்றி இருந்த கஸ்தூரி காந்திக்கு திருச்சியை நெருங்கும்போதே நெஞ்சு வலிப்பதாக சிபிஐயிடம் தெரிவித்தார். உடனடியாக அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்த்தனர். தலைமை நீதிபதி ஏ.பி. பாலச்சந்திரன் முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்ட ரவிக்கும், அவருக்கும் வரும் ஜூன் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இருவர், தான் தொடர்ந்த வழக்கினால் கைதாகியிருப்பது கூட தெரியாமல் வேப்பூர் கிராமம், ஆதிதிராவிடர் காலனியில் வசித்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார் அஞ்சலை. இந்த கைது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு ”எப்படியோ எனக்கு வாழ்க்கை பறிபோயி 19 வருஷம் கழித்தாவது நியாயம் கிடைத்ததே அதுவே போதும். இப்போது அந்த போலீசு அதிகாரி நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரில படுத்திருக்காருன்னு சொல்றாங்க. ஒரு கைதுக்கே அவங்களுக்கு நெஞ்சு வலி வருதுன்னா கணவரை பறிகொடுத்த என்னோட நெஞ்சு என்ன பாடு பட்டிருக்கும்.” என்கிறார் இன்று ஐம்பது வயதை தொட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலை.

இருபதாண்டு காலம் ஆதிக்க சாதிகளுடன் இருக்கும் ஊரில் கணவனை இழந்த ஒரு தலித் பெண் தனியாக வாழ்வது அப்படியொன்றும் எளியதல்ல. ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் சம விகிதங்களில் கலந்து ஒடுக்குகையில் அதனை ஒருபுறம் எதிர்கொண்ட படியேதான் தங்களது தினசரி வாழ்வை தினந்தோறும் நாடு முழுக்க கடத்திக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சலை போன்ற பெண்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் அந்த வாழ்க்கை முள்ளில் பட்ட சேலையாக இருபதாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் ‘என்னோட நெஞ்சு என்ன பாடுபட்டிருக்கும்’ என்று சொல்கிறார் அஞ்சலை.

இத்தகைய வறிய வாழ்விலும் தனது கணவனை கொன்ற போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை கொண்டிருந்தார். கணவன் இறந்த எட்டாண்டுகளில் உயர்நீதி மன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்த போது அஞ்சலை சோர்ந்து விடவில்லை. மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தின் கதவை தன்னந்தனியாக அவர் விடாமல் தட்டிக் கொண்டே இருந்தார்.

கொட்டடி கொலைகணவன் இறந்த சில மாதங்களிலேயே கோட்டாட்சியர் விசாரணை நடத்தி நாடறிந்த கொலையை தற்கொலைதான் என்று ஊத்தி மூடிய போதே அவரது நெஞ்சு வெடித்துச் சிதறியிருக்கும் தான். ஆனால் ஆரம்பத்தில் அஞ்சலை சோர்ந்து விடவில்லை. மனித உரிமை அமைப்புகளும் அவருக்கு துணை நின்றன. ஆனால் காலம் செல்லச் செல்ல கொலைகார போலீஸ்காரர்களை தண்டிப்பது சுலபமல்ல என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம்.

”போலீசுக்காரங்க சாதாரண ஜனங்கள துன்புறுத்தறதுக்கு முன்னாடி தன்னை அந்த இடத்துல நிறுத்திப் பார்த்துக்கணும்” என்று தற்பதைய தீர்ப்புக்கு பிறகு அஞ்சலை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார். தன்னுடைய கணவனை கொடூரமாக கொன்ற கயவர்களான காவல்துறையிடமும் மனிதநேயப் பரிவோடு பேசுகிறார். தனது துயரத்தை எதிரிகளான போலீசாராலும் புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார். ஆனால் மக்களை ஒடுக்குவதற்கென்றே சிறப்பு பயிற்சிகளையும், அதிக சலுகைகளையும் பெற்று வாழும் அந்த வன்முறை எந்திரத்திடம் இந்த ஏழையின் சொல் ஏறாது.

பயிற்சியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே தங்களை சமூகத்திலிருந்து விடுவித்துக் கொண்டு, அதனை அடக்க பிறந்தவர்களாக நினைக்கும் காவல்துறையினர் அதன்படியே மக்களை நடத்துகின்றனர். அதாவது பழக்கப்படுத்தப்படும் ஜமீன்தார் வீட்டு வேட்டை நாய்க்கும், காவல்துறைக்கும் ஒப்பீட்டளவில் எந்த வேறுபாடுமில்லை என்றே சொல்லலாம். ஆனால் அவர்களையும் மதித்து அஞ்சலை ”இன்றைக்கு அந்த போலீசுகாரனுக்கு நேர்ந்தது வேற யாருக்கும் வராதபடி போலீசுகாரங்க நடந்துகிட்டா அதுவே நான் இவ்வளவு காலம் போராடியதற்கு கிடைத்த வெற்றி” என்கிறார்.

தன் எதிரிக்கும் சேர்த்து யோசிக்கும் அஞ்சலையின் இப்படி ஒரு வார்த்தையை போலீசோ, நீதிபதிகளோ எந்தக் காலத்திலாவது சொல்ல முடியுமா? கனவிலும் தப்பித் தவறிக் கூட சொல்லி விட மாட்டார்கள் அவர்கள்.

அஞ்சலை பள்ளிக்கூட படிப்பை கூட முடிக்காதவர் தான். வழக்கு போட முயன்ற இவரால் நடந்த சம்பவங்களை கோர்வையாக கூட சொல்ல இயலவில்லை என்கிறார்கள் பி.யூ.சி.எல் அமைப்பினர். இருபதாண்டுகள் போராடிய பிறகுதான் நீதி கிடைக்கும் எனும்பட்சத்தில் அதற்கு எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்?

அஞ்சலை - பாண்டியன்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலை – பாண்டியன்

கைது நடவடிக்கை என்றவுடன் இப்போது பயந்து போய் நெஞ்சு வலி வந்திருப்பதாக சொல்லும் ஏசி கஸ்தூரி காந்திக்கு, 20 வருடங்களுக்கு முன்னர் விசாரணைக்காக தன்னால் அழைத்துச் செல்லப்பட்ட பாண்டியன், அஞ்சலை தம்பதியின் வலி என்றுமே புரியாது. ஒருக்கால் செய்த குற்றம் குறித்த குற்றவுணர்ச்சியெல்லாம் இருந்திருந்தால் அவர் நிச்சயமாக நெஞ்சு வலிப்பதாக கதையெல்லாம் கட்டியிருக்க மாட்டார். இவ்வளவுக்கும் சிறையோ, நீதிமன்றமோ எதுவானாலும் தனது பங்காளிகளில் ஒருவரான அவரை கைவிட்டு விடப் போவதில்லை என்பதும் அவருக்கு நன்கு தெரியும். ஆனாலும் பிறரை கைது செய்து மட்டுமே பழக்கப்பட்ட அவருக்கு தானும் ஒருநாள் கைது செய்யப்படுவோம் என்பதை மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாண்டியனைப் போன்ற ஏழைகளுக்கு மனித உரிமை, முற்போக்கு மற்றும் இடதுசாரி அமைப்புகள்தான் உடன்நிற்கின்றன. எனினும் எந்த போராட்டமும் இன்றி சட்டப்பூர்வமாக நீதியை வாங்குவது அப்படி ஒன்றும் எளிதல்ல. அதற்கு பாதிக்கப்பட்டவர்களது தரப்பின் அயராத ஒத்துழைப்பும் ஒரு முன் நிபந்தனையாகிறது. ஒருவேளை சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் மேல்முறையீடு செய்து எளிதாக வெளியே வந்து விடுவார்கள்.

பொதுவாக காவல்துறையின் அத்துமீறலை நிரூபித்தாலும் தண்டனை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, ரீட்டா மேரி என நிறைய வழக்குகளே இதற்கு சாட்சி. பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பின் வழக்கு விசாரணைக்கு முன்னரே ஒன்றுமில்லாமல் செய்ய விசாரணை கமிசன்கள் அமைக்கப்பட்டு இருப்பதற்கு சான்றுகள் தாமிரபரணி படுகொலையும், பரமக்குடி படுகொலையும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அஞ்சலைக்கும் முழுநீதி கிடைத்து விட்டது என்றோ இனி கண்டிப்பாக கிடைக்கும் என்றோ கூறிவிட முடியாது. உயர்நீதிமன்றத்தில் விட்டதை இவர்கள் உச்சநீதிமன்றத்தில் பிடிக்கமாட்டார்களா என்ன?

ஆனாலும் தனது கணவனது கொலைக்காக ஒரு ஏழைப்பெண் இருபது வருடங்களாக போராடி காத்திருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கும் ஜனநாயகம் மற்றும் நீதி அமைப்புக்களின் தரம் என்ன?

–     கௌதமன்.

படங்கள் : நன்றி தி ஹிந்து

மோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி

12

நாடாளுமன்ற தேர்தல் முடிவின் பொருள் என்ன என மே 16-ம் தேதி வினவில் வெளியான பதிவு இப்படி முடிகிறது :

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

தற்போது மோடி தனது உணர்த்தும் பணியினை ஆரம்பித்து விட்டார். ஆனால் மோடிக்கு கொடி பிடித்த அறிவுஜீவிகள் எத்தனை பேர் இதை உணர்வார்கள், தெரியவில்லை.

மோடி அமைச்சரவையின் முதல் முடிவே, “தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய் – TRAI) தலைவராக பணியாற்றுபவர்கள், பதவிக் காலம் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசு பதவிகளுக்கு நியமிக்கப்படக் கூடாது.” என்ற டிராய் சட்ட விதிமுறையை அவசர சட்டம் மூலம் மாற்றியதுதான். இதற்கு என்ன தலை போகும் அவசரம் என்று கேட்கிறீர்களா?

நிருபேந்திர மிஸ்ரா
நிருபேந்திர மிஸ்ரா

இப்படி சட்டத்தை திருத்தினால் இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் 70 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டு வந்து விடலாம் என்று யாரோ மோடிக்கு சொல்லி விட்டதால் சூப்பர்மேன் மோடி வழக்கமான அதிகாரவர்க்க இழுபறிகளை உடைத்தெறிந்து அவசர சட்டம் போட்டு விட்டார் என்று மோடி ரசிகர்கள் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட நினைக்கலாம்.

உண்மையில் அப்படி இல்லை. 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை டிராய் தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா என்ற உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை பிரதமரின் முதன்மை செயலராக நியமிக்க மோடி விரும்பியிருக்கிறார்.

மிஸ்ரா மீது மோடிக்கு அப்படி என்ன பாசம் என்று பார்க்கலாம். டிராய் என்பது 1990-களுக்குப் பிறகு நாட்டை அன்னிய நிறுவனங்களின் சுரண்டலுக்கு திறந்து விடும் மறுகாலனியாக்க கொள்கையின்படி தொலை தொடர்பு, பங்குச் சந்தை, மின்சாரம், தேசிய நெடுஞ்சாலை சாலை போன்ற துறைகளில் உருவாக்கப்பட்ட ஒழுங்கு முறை ஆணையங்களில் ஒன்று. துறை ரீதியான கொள்கை முடிவுகளை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அதிகாரிகள் அல்லது நேரடியாக கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் எடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள். நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகிய பாரம்பரிய அரசு அமைப்புகளுக்கு மேலாக முதலாளிகளுக்கு நேரடியாக சேவை செய்யும் கடப்பாடு உடையவை.

நிருபேந்திர மிஸ்ரா டிராய் தலைவராக பதவி வகித்த காலகட்டத்தில்தான் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் டாடா, ஏர்டெல், அம்பானி முதல் டஜன் கணக்கிலான கார்ப்பரேட்டுகளுக்கு ரூ 1.76 லட்சம் கோடி மதிப்பிலான பொதுச் சொத்தை கொள்ளை கொடுப்பது நடத்தி முடிக்கப்பட்டது. மிஸ்ராவை கார்ப்பரேட்டுகள் நேசிப்பதற்கு இது ஒன்றே போதுமானதுதான்.

மேலும் அமெரிக்காவின் ஹார்வர்டின் ஜான் எஃப் கென்னடி அரசாங்கத்துக்கான கல்லூரியில் (college of Government) மேல்படிப்பு பயின்ற மிஸ்ரா நிதி அமைச்சகத்திலும், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும், உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் பணியில் இருந்தவர். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நேபாள அரசு இவற்றுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்யாண் சிங்
பாபர் மசூதி இடிப்பை நடத்திய பா.ஜ.கவின் கல்யாண் சிங்

இவற்றுக்கு மேலதிகமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாபர் மசூதியை இந்து மதவெறி கும்பல் சட்டவிரோதமாக இடித்துத் தள்ள ஏற்பாடு செய்து கொடுத்த கல்யாண் சிங் அரசின் முதன்மை செயலராக பணியாற்றியவரும் இந்த மிஸ்ராதான். மசூதி இடிப்பிற்கு 2 மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு மாற்றப்பட்டு நோய்டா தொழிற் பேட்டை ஆணையத்தின் தலைவராக விவசாய நிலங்களை பிடுங்கும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

எனவே ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சேவை, இந்துத்துவ அரசியலுக்கு உறுதுணை என்று இரட்டைத் தகுதி கொண்ட மிஸ்ராதான் தனது முதன்மை செயலர் ஆக வேண்டும் என்று மோடி விரும்பியதில் ஆச்சரியமில்லைதானே.

அப்படி ‘பாதுஷா’ மோடி முடிவு செய்த பிறகு பார்த்தால், டிராய் தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவை டிராய் சட்ட விதிமுறையின்படி மத்திய அரசு பதவி எதற்கும் நியமனம் செய்ய முடியாது என்று தெரிந்ததாம். ஒழுங்குமுறை ஆணையங்களின்  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பதவி ஆசைக்கு மயங்கி ஊழலில் இறங்கி, முதலாளிகளின் நலனுக்கு பாதகம் விளைவித்து விடக் கூடாது என்ற அக்கறைதான் டிராய் சட்டத்தின் இந்த விதிமுறையின் அடிப்படை..

ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்ய மிஸ்ராதான் சரியான ஆள் என்று இந்துத்துவ மோடி விரும்புவதை யார் மறுத்து விட முடியும்? ’60 கோடி வாக்காளர்களின் ஒருமித்த தேர்வாக’ பிரதமர் ஆனவராச்சே! சட்ட அமைச்சகம் அவசர அவசரமாக அவசர சட்டத்தை தயாரித்து கொடுக்க, மோடியின் அமைச்சரவை சட்டத்தை திருத்த ஒப்புதல் அளித்து விட்டது. இப்படி ஒரு அடியாள் அதிகாரியை நியமிப்பதற்கே அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்தால் மற்ற நடவடிக்கைகளுக்கு என்னவெல்லாம் நடக்கும்?

ஜான் கெர்ரி
ஜான் கெர்ரி

அமெரிக்காவுக்கு அடிபணிவதில் மோடியும் அமைச்சரவை சகாக்களும் ஒத்த கருத்துடையவர்கள் என்பதற்கு சான்றாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய-அமெரிக்க பொருளாதார உறவை $500 பில்லியன் அளவுக்கு அதிகரிப்பது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் (அமைச்சர்) ஜான் கெர்ரியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பாதுகாப்புத் துறை, இணைய வணிகம், காப்பீடு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதையும், அமெரிக்கத் தரப்பு வலியுறுத்துகிறது. அதாவது இவற்றினை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்திரவை அமெரிக்கா நினைவுபடுத்துகிறது. பதிலுக்கு சுஷ்மா சுவராஜ், தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி நடத்திய பேச்சு வார்த்தை விபரங்களையும் கெர்ரியிடம் விளக்கியிருக்கிறார். அதாவது அமெரிக்காவின் நலனில் தங்களது எலும்புத்துண்டுகளை காணும் இந்திய தரகு முதலாளிகளின் வர்த்தக நலனுக்காகவே இந்த தெற்காசிய தலைவர் சந்திப்பு என்பதை  பணிவுடன் விளக்கியிருப்பார்.

நிருபேந்திர மிஸ்ரா நியமனம், முசாஃபர் நகர் கலவர குற்றவாளி சஞ்சீவ் பலியானை அமைச்சர் ஆக்கியது என்று முதலாளித்துவ அறிஞர்கள் போற்றும் நாடாளுமன்ற, அரசியல் சட்ட மரபுகளை எல்லாம் தன் தலையில் எஞ்சியிருக்கும் மயிருக்கு சமமாகக் கூட மதிக்காமல் மோடி நடந்து கொள்வதைப் பார்த்து உயர்படிப்பு படித்து, அமெரிக்காவில் எல்லாம் பணி புரிந்த அம்பிக்கள் சிலருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பி.எஸ் ராகவன் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது வலைப்பதிவில் ஒரு தனிநபரை பதவியில் அமர்த்துவதற்காக ஒரு அவசர சட்டம் பிறப்பிப்பது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று புலம்பியிருக்கிறார்.

மோடி“நிருபேந்திர மிஸ்ராவிடம் அப்படி என்னதான் இருக்கிறது, 62 வருஷத்துக்கு முன்பு ஐ.ஏ.எஸ்சில் சேர்ந்த நான் இது வரை வந்த எல்லா அதிகாரிகளையும் பார்த்து விட்டேன். இந்த ஆளுக்கு அப்படி எந்த ஸ்பெஷல் தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று வயிறு எரிகிறார். “மோடியோ அவரது உதவியாளர்களோ கொஞ்சம் முயற்சித்திருந்தால் நிருபேந்திர மிஸ்ரா போன்ற அரை டஜன் அதிகாரிகளை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம்” என்று மோடிக்கு வகுப்பு எடுக்கிறார். மோடியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு லேடியாக இருந்தாலும் சரி, ‘ஒரு விஷயத்தை நினைச்சிட்டா அதற்கு மாறா அவங்க பேச்சையே அவங்க கேட்க மாட்டாங்க’ங்கறது இந்த அறிவாளிக்கு தெரியவில்லை. மேலும் இது மோடியின் தனிப்பட்ட முடிவு மட்டுமில்லை, தரகு முதலாளிகளின் சேவைக்கு பொருத்தமான நபர் என்ற ஆளும் வர்க்கத்தின் முடிவாகவும் இருக்கிறது. அந்த வகையில் மிஸ்ராவின் ‘சேவைகளை’ ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதுவும் ராகவனுக்கு தெரியவில்லை.

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை ஒரு தனி மனிதருக்காக திருத்துவதன் மூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, ஒழுங்குமுறை ஆணையங்களின் புனிதத்தையே மோடி குலைத்து விட்டிருக்கிறார் என்றும் வருத்தப்படுகிறார் ராகவன்.

குஜராத்தில் இந்து மத வெறியர்கள் அப்பாவி முஸ்லீம் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை கண்டு கொள்ளாமல் இருக்கச் சொன்னதிலிருந்து, ஹரேன் பாண்டியா முதல், இஷ்ரத் ஜகான், சொராபுதீன் ஷேக் வரை பலரை போலி மோதல் கொலையில் தீர்த்துக் கட்டுவதை வழி நடத்தியதிலிருந்து, பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஒட்டுக் கேட்க உளவுத் துறையை பயன்படுத்தியது வரை நூற்றுக் கணக்கான வழிகளில் இந்த மோடி என்ற கேடி செய்த கட்டுடைப்புகள் எல்லாம் இந்த ஐ.ஏ.எஸ் அறிவாளிக்கு தெரியாததன் காரணம் என்ன?

டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 900 ஏக்கர் நிலத்தை ஒரே வாரத்தில் ஒதுக்கியது, 2000 கோடி ரூபாய் முதலீடுக்கு 20,000 கோடி ரூபாய் குறைந்த வட்டியில் நீண்ட கால கடன் அளித்தது ஆரம்பித்து, அதானி, அம்பானி, சுசுகி என்று உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளை குளிப்பாட்டி மோடி உருவாக்கிய முன்உதாரணங்களை வியந்து போற்றியவர்கள்தான் இந்த அறிவுஜீவிகள்.

ஜி.எல்.சிங்கால்
ஜி.எல்.சிங்கால்

நிருபேந்தர மிஸ்ரா நியமனம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியோ, “நாடாளுமன்றம் ஜூன் 4-ம் தேதி கூடவிருக்கையில் அவசர சட்டம் மூலம் முதன்மை செயலரை நியமித்தது தேவைதானா” என்று மென்மையாக விமர்சிக்கிறது. “நாங்கள் ஆட்சியில் இருந்த போது உணவு பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவற்றுக்கு அவசர சட்ட வழியை பயன்படுத்திய போது இதே பா.ஜ.க எங்களை எதிர்த்தது” என்கிறார் காங்கிரசின் அஜய் மாக்கன். காங்கிரஸ் இந்த அவசர சட்ட திருத்தம் கொண்டு வருவதை எதிர்க்கவில்லை. மாறாக, அவர்கள் கொண்டு வந்த போது பா.ஜ.க எதிர்த்ததைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கடைசியாக, குஜராத் படுகொலைகள் உள்ளிட்ட சி.பி.ஐ விசாரணைகள், உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கு நடத்துவது அனைத்தும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன. இந்நிலையில் குஜராத்தில் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலை வழக்கில் கைதாகி தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜி.எல்.சிங்கால் என்ற காவல்துறை உயர் அதிகாரியை மீண்டும் பணியில் சேர்க்க மோடியின் விசுவாசி ஆனந்திபென் அரசு முடிவு செய்துள்ளது. ஜி.எல் சிங்கால் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலைக் குற்றவாளி மட்டுமின்றி, மோடிக்காக இளம் பெண் ஒருவரை அமித் ஷா உத்தரவு படி வேவு பார்ப்பதையும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மே 16-ம் தேதி வெளியான தீர்ப்பு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஜி.எல். சிங்காலை கடுமையாக விமர்சித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 33 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஜி எல் சிங்கால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல்,  அப்பாவி முஸ்லீம்களை பிடித்து சித்திரவதை செய்து, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தூக்குத்தண்டனை வாங்கி கொடுத்திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஆனால், மோடியோ பா.ஜ.கவோ அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அதே தீர்ப்பில் அக்சர்தாம் தாக்குதல் வழக்கில் அப்பாவி முஸ்லீம்கள் மீது பொடா சட்டத்தின் வழக்கு தொடர்வதற்கு குஜராத் உள்துறை அமைச்சர் அலட்சியமாக ஒப்புதல் கொடுத்திருப்பதை உச்சநீதிமன்றம் விமர்சித்திருக்கிறது. அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் வேறு யாருமில்லை, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான். மோடியே பிரதமர் ஆகி விட்டதால் அவருக்கு அடியாளாக இருந்த சிங்காலை மீண்டும் பதவியில் அமர்த்துவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது.

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனைதான் பா.ஜ.கவின் தேர்தல் வெற்றி என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார். புரிந்தவர்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

–    செழியன்

மேலும் படிக்க

ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமா – வேண்டாமா ?

1

‘ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் இணைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், மக்களின் செல்வம் அதிகரிக்கும், கடன்களுக்கு வட்டி குறையும், விலைவாசி குறையும் என்ற பிரச்சாரங்களுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியமும், யூரோ ஒற்றை நாணய நாடுகளும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.  ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. யூரோ ஒற்றை நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் மீது அது ஒரு சுமையாக மாறியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம்யூரோ பொது நாணயத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியில் சிக்கியிருக்கும் யு.கே (இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து), டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் சரி, யூரோவை ஏற்றுக் கொண்டு அல்லல்படும் பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளிலும் சரி, யூரோவுக்குள் நுழைவதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவரலாம் என்ற கனவு எதிர்மறையாகவே நடந்து வருகிறது. இவர்களோடு ஒப்பீட்டளவில் ஏழை நாடுகளாக இருக்கும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் முன்னாள் சோசலிச குடியரசுகளிலும் சரி, சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் 751 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கழட்டிக் கொண்டு தனியாக வேண்டும்” என்ற  கொள்கைகளை உடைய கட்சிகள் தமது செல்வாக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டுள்ளன.

இங்கிலாந்தில் – ஐரோப்பாவிலிருந்து தனித்து செயல்படுவதை ஆதரிக்கும் “யு.கே சுதந்திரக் கட்சி”யும், ஃபிரான்சில் – யூரோ நாணய மண்டலத்தை நிராகரித்து, பிற நாட்டினர் பிரான்சுக்கு குடிபெயர்வதை எதிர்க்கும் “தேசிய முன்னணி” கட்சியும் முதலிடம் பிடித்துள்ளன. பெரிய கட்சிகளான ஆளும், எதிர்க் கட்சிகள் 2-ம், 3-ம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இசுலாமிய எதிர்ப்பு,  யூரோ எதிர்ப்பு கட்சி இரண்டாவது இடத்தை பிடித்திருக்க, டென்மார்க்கிலும், ஹங்கேரியிலும், ஸ்வீடனிலும், ஃபின்லாந்திலும் வலது சாரி, புலம்பெயர் பிறநாட்டவரை எதிர்க்கும் கட்சிகள் தம்து செல்வாக்கை வளர்த்துக் கொண்டு அதிக இடங்களை பிடித்திருக்கின்றன.

யு.கே சுதந்திரக் கட்சி என்பது 1993-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தும் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தை எதிர்க்கும் பல்வேறு கட்சி உறுப்பினர்களின் குழுவினரால் ஏற்படுத்தப்பட்டது. யு.கேவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கிக் கொள்வதுதான் அந்த கட்சியின் அடிப்படை நிலைப்பாடு. ஐரோப்பாவுடன் நெருக்கமாகும் கொள்கையை எதிர்க்கும் கன்சர்வேடிவ் கட்சியினரில் பலர் இந்தக் கட்சியை ஆதரிக்கின்றனர். ‘ஐரோப்பாவிலிருந்து வெளியேறுவது என்ற ஒற்றை நிலைப்பாட்டை கொண்ட கட்சி’ என்ற பிம்பத்தை மாற்றுவதற்கு தற்போதைய தலைவர் நீகல் ஃபாரஜ் பொருளாதாரம், வரி விதிப்பு,  மருத்துவத் துறை, குடியேற்றம் போன்ற துறைகளில் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளை முன் வைக்கிறார்.

பிரான்ஸ்
பிரான்சின் தேசிய முன்னணி 25% வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது.

பிரான்ஸ் நாட்டில் தேசிய முன்னணி கட்சி பிரெஞ்சு இனவாதத்தை முன் வைத்து 1970-களில் தொடங்கப்பட்டது. அதன் முக்கிய கொள்கைகள், பொருளாதாரத் துறையில் தேசிய பாதுகாப்பு வாதம், போராட்டங்களை ஒடுக்க கடுமையான சட்டங்கள் மற்றும் வெளிநாட்டவர் குடிபெயர்வதை எதிர்ப்பது ஆகியவை.. 1990-கள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பியர் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை எதிர்க்கும் இக்கட்சி சட்ட விரோதமாக குடியேறிய மற்றும் வேலை இல்லாத வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இனவெறி பேசுகிறது.

இத்தாலியில் முதல் இடம் பிடித்த ஆளும் இடது சாரி கட்சி, ஜெர்மானிய முதலாளிகள் ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளை நிராகரிக்கப் போவதாகவும், பொதுத்துறை முதலீடுகளை அதிகரித்து வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. கிரேக்கத்திலும் இத்தகைய கொள்கைகளை வலியுறுத்தும் இடதுசாரி சிரிசா கட்சி முதலிடம் பெற்றுள்ளது. இத்தகைய இடதுசாரி கட்சிகள் நம்மூர் போலிக்கம்யூனிஸ்டுகளின் பல்வேறு வகைமாதிரிகளாகவே இருக்கின்றனர்.

வலது தீவிரவாத அமைப்புகளின் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தொடர்ந்து பிற நாடுகளின் வலது, இடது சாரி வெகுஜனக் கட்சிகளும் குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவது, வெளிநாட்டவர் நாட்டுக்குள் வருவதை கட்டுப்படுத்துவது போன்ற கொள்கைகளை முன் வைக்கின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் வெட்டு, வெளிநாட்டவர் எதிர்ப்பு, தொழிலாளர் உரிமைகளை பறித்தல் போன்ற கொள்கைகளை வெளிப்படையாக பேசும் இங்கிலாந்தின் டோரி கட்சி (கன்சர்வேடிவ்) போன்றவை வலது சாரி கட்சிகளாகவும், அவற்றை எதிர்த்தாலும் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றபடி மேலோட்டமான சீர்திருத்தவாதத்தை முன் வைக்கும் இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சி போன்றவை இடது சாரி கட்சிகளாகவும் ஐரோப்பாவில் சித்தரிக்கப்படுகின்றன.

இந்த போலி சோசலிச இடது சாரி கட்சிகள், ஐரோப்பிய நாடுகளை இணைத்து பொதுச் சந்தையை உருவாக்குவது முதலாளித்துவ லாப வேட்டைக்குத்தான் பயன்படுகிறது என்பதை மறைத்து ஐரோப்பிய நாடுகளை இணைப்பதன் மூலம் தொழிலாளர் உரிமைகள், ஆண்/பெண் சமத்துவம் போன்ற வெற்று வாக்குறுதிகளை வென்று விட முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பதாக நாடகமாடுகின்றனர்.

யூரோ ஒற்றை நாணயம், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய நாடுகளை சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளால் பெருமளவு ஆதாயம் அடையும் ஜெர்மனியில் ஆளும் கட்சி முதலிடத்தை தக்க வைத்திருந்தாலும், மாற்று அரசியலை முன்வைக்கும் அல்டர்நேட்டிவ் ஃப்யுர் டாய்ச்லாந்து கட்சி (யூரோ ஒற்றை நாணயத்தை எதிர்த்து, ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் கட்சி) செல்வாக்கை அதிகரித்துக்  கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 751 இடங்களில், ஒன்றியத்தை கலைக்க வேண்டும் என்று கோரும் கட்சிகள் மொத்தம் 142 இடங்களை வென்றிருந்தாலும், வலது சாரி (214 இடங்கள்), இடது சாரி (189 இடங்கள்), தாராளவாத (66 இடங்கள்) மற்றும் கிரீன் பீஸ் (52 இடங்கள்) கட்சிகள் இணைந்து முதலாளிகளுக்கு தேவையான ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து நடத்தும்படியான பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஒற்றை நாணயமாக யூரோ பயனுக்கு வந்த கடந்த 15 ஆண்டுகளில் ஐரோப்பிய முதலாளிகள் குறிப்பாக ஜெர்மனிய முதலாளிகள் கிழக்கு ஐரோப்பிய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளுடன் தமது வர்த்தகத்தை பெருமளவு அதிகரித்துக் கொண்டுள்ளனர். பொது நாணயமான யூரோ ஜெர்மானிய தொழில்துறை ஏற்றுமதிகளை ஒப்பீட்டளவில் மலிவானவையாக பராமரிக்கிறது. அவற்றை எதிர்கொண்டு தமது தேசியத் தொழில்களை பாதுகாப்பதற்கான சுயேச்சையான கொள்கைகளை வகுத்துக் கொள்ளும் சுதந்திரம் பிற நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி மறுக்கப்படுகிறது. ஜெர்மன், பிரெஞ்சு முதலாளிகள் தமது உற்பத்தியை, புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு இடம் மாற்றுவதன் மூலம் தத்தமது நாடுகளில் சம்பளங்களை குறைத்து ஆட்குறைப்பும் நிகழ்த்துகின்றனர்.

1999-ம் ஆண்டு முதல் ஜெர்மனி தொடர்ந்து ஏற்றுமதிகள் மூலம் உபரியை ஈட்டி வந்திருக்கிறது. இதற்கு நிகராக கிரேக்கம், ஸ்பெயின், போர்ச்சுக்கல் முதலான தெற்கு ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அமெரிக்க வீட்டுக்கடன் நெருக்கடிக்கு பிறகும் ஜெர்மனியும் உலகளாவிய முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் அது பிற ஏழை ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியோடு தன்மையில் வேறுபட்டது.

தெற்கு ஐரோப்பிய நாடுகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடன் நெருக்கடியிலிருந்து வெளிவர உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடன் பத்திரங்களை வெளியிடலாம் என்ற திட்டத்தை ஜெர்மானிய நிதித்துறையினரும், முதலாளிகளும் எதிர்க்கின்றனர். கிரேக்கம் போன்ற நாடுகள் தமது செலவுகளைக் குறைக்கும் படியும், மக்கள் நலத் திட்டங்களை வெட்டும்படியும், வரிவிதிப்பை அதிகரிக்கும்படியும் ஆலோசனை கூறுகின்றனர். இதன் மூலம் நிதி சூதாட்டத்தின் பலன்களை அறுவடை செய்து கொண்ட முதலாளிகள் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்றனர்.

புதைகுழியில் ஐரோப்பாகிரேக்கம், ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற தெற்கு ஐரோப்பிய நாட்டு முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஜெர்மனியின் கட்டளைக்கு அடிபணிந்து தமக்குத் தேவையான நிதிக் கடன்களை பெறுவதற்கு கைமாறாக மக்கள் நலத் திட்டங்களை வெட்டியும், பொது நிறுவனங்களில் ஆட்குறைப்பு செயும் உழைக்கும் மக்கள் மீது கடும் சுமைகள் மேலும் மேலும் ஏற்றி வருகின்றனர். இந்நாடுகளில் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், அரசு ஊழியர் போராட்டங்கள், மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கிரேக்க நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் சென்ற ஆண்டை விட 7.5 சதவீதம் சுருங்கியிருக்கிறது.

இருப்பினும், கிரேக்கம் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எரியும் நெருப்புக்குள் விழுவதாகவே முடியும். சுயசார்பு தொழில்துறை பொருளாதாரம் அழிக்கப்பட்டு உலகளாவிய ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் பிணைக்கப்பட்டுள்ள அந்நாடுகளின் பொருளாதாரங்கள் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வரும் சிக்கல்களில் மேலும் சீர்குலைவை எதிர்கொள்ள நேரிடும்.

பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வரும் மக்களை அமைப்பாக்கி போராடும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இல்லாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள்தான் நெருக்கடிகளுக்கு காரணம் என்று இனவெறியையும்,  நிறவெறியையும், மதவெறியையும் தூண்டி விடும் வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. தொழில் ‘அமைதி’ வேண்டும் முதலாளிகளின் ஒரு பிரிவினர் இந்த புதிய பாசிசக் கட்சிகளை நிதி கொடுத்து ஆதரிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் ஒன்று சேருவதை இனவெறி தடுக்கும் என்பதால் இந்த உதவி.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோசலிச முகாமுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேற்கு ஐரோப்பாவை மாற்றுவது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கு தேவையாக இருந்தது. இராணுவ ரீதியாக நேட்டோ அமைப்பை ஏற்படுத்தி இராணுவ ஆதிக்கத்தை ஐரோப்பாவில் நிலை நாட்டிக்கொண்டாலும், பொருளாதார ரீதியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே போட்டியை தவிர்த்து ஒன்றுபடுத்தும் தேவை ஏற்பட்டது. பின்னர் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனி ஏகாதிபத்தியங்களின் நலனுக்கானதாகவும் இந்த கோரிக்கை மாறிப்போனது.

இந்தச் சூழலில் ‘ஐரோப்பாவில் அமைதியையும் சாந்தியையும் ஏற்படுத்தவும் தங்களுக்குள் போரை தவிர்க்கவும்’ நிலக்கரி, மற்றும் உருக்கு துறைகளில் போட்டிச் சந்தையை ஒழிப்பதற்காக பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. இந்த அமைப்பு ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பாக வளர்ச்சி பெற்று அடுத்த 30 ஆண்டுகளில் டென்மார்க், அயர்லாந்து, யுகே, கிரேக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகள் அதில் இணைந்தன. அதாவது, அமைதியும், வளர்ச்சியும் வேண்டுமென்றால் சந்தையில் நடக்கும் கழுத்துப்பிடி சண்டையை தவிர்க்க வேண்டும் என்று முதலாளிகளே ஒத்துக் கொள்கின்றனர். ஆனாலும், முதலாளித்துவத்தின் இயல்பான முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் போட்டியையும், போரையும் தோற்றுவித்து விடுகின்றன.

1989-ல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட பிறகு கிழக்கு ஜெர்மனியை மேற்கு ஜெர்மனியுடன் இணைத்து ஒன்றுபட்ட ஜெர்மனியை உருவாக்குவதற்கு நிபந்தனையாக ஐரோப்பிய பொது நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் நிபந்தனை விதித்து. கிழக்கு ஜெர்மனி மற்றும் பின்னர் முதலாளித்துவ கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவிருக்கும் பிற கிழக்கு ஐரோப்பிய மற்றும் முன்னாள் சோசலிச குடியரசுகளின் பொருளாதாரத்தையும், உழைப்பையும் சுரண்டுவதற்கு பிரெஞ்சு முதலாளிகளுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1993-ல் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. யூரோ நாணயம் 1999-ம் ஆண்டு முதல் வர்த்தக பரிமாற்றங்களிலும், 2002 முதல் பொது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் அமலுக்கு வந்தது. வளர்ந்து வந்த உலகமயமாக்கலின் அழுத்தத்தின் கீழ் 1990-களில் ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் இணைக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய கனவை முன் வைத்து, 2000 ஆண்டுகளில் சைப்ரஸ், செக், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, ரொமேனியா, பல்கேரியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் எஸ்டோனியா, லட்வியா, லித்துவேனியா ஆகிய முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளும் மால்டா,  ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், முதலாளித்துவ பொருள் உற்பத்தியும் வர்த்தகமும் உலகளாவிய அளவில் நடைபெற்றாலும் முதலாளித்துவ பெருநிறுவனங்கள் தத்தமது நாட்டு அரசுகளை பயன்படுத்தி தமக்கு சாதகமான அரசியல், பொருளாதார, இராணுவ நடவடிக்கைகளை எடுக்கின்றன. இந்நிலையில் முதலாளிகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் வெடித்து வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன.

தரமான கல்வியும் மருத்துவமும் கைக்கெட்டாத உயரத்தில், அன்றாட பொருட்கள் விலைவாசி கண்ணுக்கெட்டாத தொலைவில், சாதாரண மக்கள் கல்விக் கடனுக்காகவும், வீட்டுக் கடனுக்காகவும் துரத்தியடிக்கப்படும் போது கார்ப்பரேட்டுகளும், வங்கிகளும் பல ஆயிரம் கோடி வங்கிக் கடன்களுக்கு பட்டை நாமம் போடுவது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, சிறு வணிகர்களுக்கு நெருக்கடி, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று பொருளாதார நெருக்கடிகளால் பீடிக்கப்படும் ஐரோப்பிய மக்கள் கலவரத்தைத் தூண்டும், இன வாத, மதவாத அமைப்புகள் பக்கம் சாய்கின்றனர். “அதோ பக்கத்து நாட்டிலேர்ந்து வந்து இங்கு அரை வயித்து கஞ்சிக்கு உழைக்கும் கூட்டம்தான் பிரச்சனைகளுக்கு காரணம், இவனுங்களை துரத்தி விட்டுட்டா நமக்கு வேலைவாய்ப்பு பெருகும், பிரச்சனைகள் தீர்ந்து விடும்” என்று வன்முறையை தூண்டும் கும்பலுக்கு இலக்காகி வருகின்றனர்.

மாறாக, இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமான நிதித்துறை நிறுவனங்களையும், வங்கிகளையும், கார்ப்பரேட்டுகளையும் எதிர்த்து உழைக்கும் மக்கள் சார்பாக நடத்தப்படும் போராட்டங்கள் மூலம்தான் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களை உறுதி செய்யும் அமைப்பை உருவாக்க முடியும். அதை கம்யூனிஸ்ட்டு கட்சிகள் இன்றி செய்ய முடியாது.

ஒருவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி என்பது அமெரிக்க நெருக்கடியோடும் இணைந்திருக்கிறது. அமெரிக்க இன்ஜினே உலக முதலாளித்துவ பொருளாதர ரயிலை இழுத்து வருகிறது என்பதால் அங்கே நெறி கட்டினால் இங்கே தும்ம வேண்டியிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு ஏகபோக ஆதிக்கத்தை தட்டிக் கேட்கும் வலிமையை ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பாக ஜெர்மனி அடையும் போது இந்த முரண்பாடு உலக அளவில் பிரதிபலிக்கும்.

எப்படி பார்த்தாலும் முதலாளித்துவத்தை வீழ்த்தும் சோசலிசப் புரட்சி இன்றி ஐரோப்பா எழ முடியாது. அது ஒருவேளை நடைபெறாவிட்டால் போர்களும், அழிவும் கேட்காமலேயே வருவதற்கு காத்து நிற்கின்றன. ஐரோப்பிய மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

– அப்துல்

மேலும் படிக்க

மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியரை கொல்ல முயன்றது யார் ?

3

கொலை முயற்சி வழக்கில் தேடப்படும் குற்றவாளி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனைக் கைது செய்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை பல்கலை பாதுகாப்பு குழு இணைந்து போராட்டம்!

mku-demo-poster

துரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் அ.சீனிவாசன் மீது கூலிப்படையை ஏவி கொலை வெறித்தாக்குதல் நடத்திய பல்கலை துணைவேந்தர் கல்யாணி மதிவாணனைக் கைது செய்யக் கோரி 27.05.2014 காலை 11 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

மனித உரிமை பாதுகாப்புமையம், மதுரை பல்கலை பாதுகாப்புக்குழு (Save MKU) பணியாளர், ஓய்வூதியர் சங்கங்கள மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த முற்றுகைப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பேராசிரியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக மதுரை நகர், புறநகர் காவல் துறையினரிடம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியதை காவல் துறை மறுத்து விட்டது. புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து அனுமதி கோரியபோது கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, “வழக்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். பல்கலைக் கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் வேண்டாம்” என்று நைச்சியமாகக் கூறி அனுமதி மறுத்து விட்டார்.

ஆனால் அவர் கூறியதற்கு எதிர்மாறாக குற்றவாளிகளுக்கு சாதகமாக காவல் துறை நடந்து வருகிறது. எனவே மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் ஆதரவு சக்திகளைத் திரட்டி காவல் துறையின் அனுமதி கோராமல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இறுதிக் கட்டத்தில் காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்க முன்வந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்து முற்றுகைப் போர் நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். துண்டறிக்கை வெளியிடப்பட்டு பல்கலைமுன்பு விநியோகிக்கப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ம் தேதி மதுரை பல்கலை துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் பொறுப்பேற்றார். பல்கலை துணை வேந்தரைத் தெரிவு செய்யும் குழுவுக்குத் தனது தகுதி பற்றி தவறான தகவல் தந்து முறைகேடாகப் பொறுப்புக்கு வந்துள்ளார் அவர். நாவலர் நெடுஞ்செழியன், தற்போதைய அதிமுகவின் அவைத் தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோரின் மருமகள் என்ற தகுதியின் அடிப்படையிலேயே அவர் துணை வேந்தர் பொறுப்பைப் பெற்றார். பல்கலை மான்யக் குழுவின் விதிகளின்படி 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவரே துணைவேந்தர் பொறுப்புக்கு வரமுடியும். ஆனால் கல்யாணி சென்னை எத்திராஜ் கல்லூரியில் 5 ஆண்டுகள் துணைப் பேராசிரியராக மட்டுமே பணியாற்றியுள்ளார். இதனை மறைத்து அவர் பதவிபெற்றதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

மதுரை பல்கலை உயிரி பொறியியல் துறைத்தலைவர், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி “பல்கலைக் கழகங்களில் மானியக்குழுவின் விதி முறைகளின்படி தகுதிபெற்றவர்களை மட்டுமே துணை வேந்தராக நியமிக்க வேண்டும்” என்று வழக்குத் தொடுத்திருந்தார். அவ்வழக்கு குறிப்பாக (Specific) இல்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்ற வழக்குகளை விசாரணைக்கே வரவிடாமல் தனது செல்வாக்கால் தடுத்து வருகிறார் இந்த கிரிமினல் துணைவேந்தர் கல்யாணி.

பல்கலையில் ஏராளமான ஊழல் முறைகேடுகள், நிர்வாக சீர்கேடுகள், அதிகார துஷ் பிரயோகங்கள் நடத்து வருவது வாடிக்கையாக உள்ளது. கல்யாணி மதிவாணன் சிண்டிகேட், செனட், அதிகாரிகள், பணியாளர்களிடையே தனக்கு ஆதரவான ஒரு ஜால்ரா கோஷ்டியை உருவாக்கி வைத்துக் கொண்டு அவரது ஊழல் முறைகேடுகளைக் கேள்வி கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளார். உயர்கல்வி ஆய்வு மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவது, அவர்களுக்கு வழிகாட்டும் பேராசிரியர்களை மாற்றுவது, பல்கலைக் கழகத்தையே மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடிய உயர்கல்வி மாணவர்களை பணியாளர்களை ஏவி விட்டுத் தாக்கியும், காவல்துறையை ஏவி கைது செய்தும் அராஜகம் செய்துள்ளார். பல்கலைக்குள் காவல்துறையை நிரந்தரமாகத் தங்க வைத்தும், வாயில்களை மூடிவைத்தும் அடையாள அழிப்பு செய்து வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில்தான் இப்பல்கலையில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் பேராசிரியர் அ.சீனிவாசன் அவர்களை அமைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக்குழு துணைவேந்தரின் ஊழல் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போராடியது. மதுரை பல்கலை ஆசிரியர் சங்கம் (MUFA) மற்றும் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் ஆசிரியர் கூட்டமைப்பு (TANFUFA) ஓய்வூதியர் சங்கம், SC/ST சங்கம் ஆகியவை அதற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தன. இவர்களுடன் மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து சென்ற மாதம் துணைவேந்தரை தகுதிநீக்கம் செய்யக்கோரி பல்கலை நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பழிவாங்கப்பட்டவர்களில் ஒருவராகிய உயர்கல்வி ஆய்வு மாணவர் ஈஸ்வரி பண்டார நாயகா என்கிற மாற்றுத் திறனாளிக்காக, மாற்றுத் திறனாளிகள் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதற்கும் அசைந்து கொடுக்காத எதைப் பற்றியும் கவலைப்படாத, எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தும் பாசிஸ்டாக கல்யாணி இருந்து வருகிறார். துணைப் பேராசிரியர் நியமனம், அலுவலக ஊழியர் நியமனம், இடைநிலை ஊழியர் நியமனம் மற்றும் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு இன்னும் பல்வேறு பணிகளை அவர் விருப்பம் போல் நடத்தி வருகிறார்.

பல்கலையில் பதிவாளர் பொறுப்பு வகிக்கும் முத்து மாணிக்கம், மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பு அறிவழகன், ஓய்வு பெற்ற பண்டக சாலை மேலாளர் எஸ்.வி.கே செல்வராஜ் ஆகியோர் கல்யாணியின் ஊழல் நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்றனர். மேலும் கல்யாணியின் கருணையினால் பணி நியமனம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தையும் வேலையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக கொத்தடிமை கைக்கூலிகளாக மாறி கல்யாணியின் அதிகார அத்துமீறல்களுக்குத் துணை போகிறார்கள்.

கடந்த 15-ம் தேதியன்று இந்து நாளிதழில் வெளியான செய்தியொன்றில் கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜார்ஜ் என்பவர் தன்னுடைய தகுதி இன்மையை மறைத்து ஏமாற்றி பதவிக்கு வந்ததன் காரணமாக பல்கலை வேந்தரான கேரள ஆளுனர் அவரைப் பதவி நீக்கம் செய்த செய்தி வெளியானது. அந்தச் செய்தியுடன் கல்யாணி மதிவாணனையும் அதுபோல தகுதியின்மை அடிப்படையில் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பல்கலைப் பாதுகாப்புக்குழு அமைப்பாளர் பேராசிரியர் அ.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையும் இந்து ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்டது.

16.5.2014 (தேர்தல் முடிவுகள் வெளியான அன்று) அதிகாலையில், தான் குடியிருக்கும் நாகமலை பகுதியில் நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பேராசிரியர் சீனிவாசனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரண்டுபேர் மடக்கி இரும்புத் தடிகளால் கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். மணடையைக் குறிவைத்துத் தாக்கியதைத் தனது இரு கைகளாலும் மாறிமாறித் தடுத்ததில் அவரது இரண்டு கைகளும் பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியுள்ளன. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்தவர்கள் தூக்கிவந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரண்டு கைகளிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடை எலும்பு ஒன்றை எடுத்து ஒட்ட வைக்கப்பட்டுள்ள நிலையில் படுத்த படுக்கையாக கிடக்கிறார். 67 வயது நிரம்பிய, பல்கலையின் முன்னேற்றத்துக்காக முழுமனதோடு நேர்மையாக உழைத்து, மாணவர்களால் அன்புடன் ஐயா என்று அழைக்கப்படும் பேராசிரியர் அ.சீனிவாசன் கொஞ்சமும் அஞ்சாமல் மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் சிரித்த முகத்தோடு தைரியம் சொல்லி அனுப்பும் அவரது பண்பு, துணிச்சல் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம் என்கிற பெருமிதம் அவரது முகத்தில் தென்படுகிறது.

மருத்துவமனையில் பேராசிரியர் அ.சீனிவாசன்
மருத்துவமனையில் பேராசிரியர் அ.சீனிவாசன்

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், பதிவாளர் பொறுப்பு முத்துமாணிக்கம், பி.ஆர்.ஒ பொறுப்பு அறிவழகன், இளைஞர் நலத்துறைத் தலைவர் செல்லத்துரை, தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் பண்டகசாலை மேலாளர் எஸ்.வி.கே செல்வராஜ்  ஆகியோர்தான்; இவர்கள்தான் கூலிப்படையை ஏவி கொலை முயற்சி செய்துள்ளனர் என பேராசிரியர் சீனிவாசன் தெளிவாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 216/2014 பிரிவுகள் 294 (b) 324, 307, 109, IPC-ன் கீழ் A1 ஆக கல்யாணி மதிவாணனும் மற்றும் 4 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக வழக்கில் உள்ளனர்.

தாக்கிய கூலிப்படையினர் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த நபர்கள். அவர்களை மறுநாளே காவல்துறை கைது செய்து விட்டது. கூலிப்படையைச் சேர்ந்த சிவா என்ற வயக்காட்டு சாமி மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தில், “தி.மு.க. தொண்டரணிச் செயலாளர் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் தான் பேராசிரியரை அடையாளம் காட்டி தாக்கச் சொன்னார்கள். அவ்வாறு செய்தால் பல்கலையில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்” என்று தெளிவாக அவர்களின் பெயர் முகவரியுடன் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர்.

தாக்குதல் நடந்து 10 நாட்களாகியும் தாக்கிய இருவரைத் தவிர வேறு யாரையும் காவல் துறை கைது செய்யவில்லை. தி.மு.க. தொண்டரணியைச் சேர்ந்த ஜெயராமன், சரவணன் ஆகியவர்களின் பெயர்முகவரி தெளிவாகத் தெரிந்திருந்தும் காவல் துறை அவர்களைக் கைது செய்யவில்லை. தேடப்படும் குற்றவாளிகளாகிய கல்யாணி உட்பட 4 பேரும் அன்றாடம் பல்கலையில் பணிசெய்து வருகின்றனர். வெளிப்படையாகக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்; பொது இடங்களுக்கு வந்து போகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மேற்படி தி.மு.க. குண்டர்கள் இருவரையும் பல்கலை விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு காவல் துறை அவகாசம் அளித்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமன் முன்ஜாமீன் தாக்கல் செய்தபோது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் துணைச் செயலாளரும், உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான தோழர் வாஞ்சிநாதன் எதிர்த்து வாதாடி ஜாமீன் தரவிடாமல் தடுத்துள்ளார். அதுபோல் 28/05/2014 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் பிணை தரக் கூடாது என்று தடுத்துள்ளார். ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் இதில் தலையிட்டு கல்யாணியையும். தி.மு.க இளைஞரணி குண்டர்களையும் பாதுகாத்து வருகின்றனர்.

நாட்டில் நடைபெறும் சிறுசிறு நிகழ்வுகள் கூட முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மக்கள் மத்தியில் சீன் காட்டுகிறார். “ஓர் உயர்கல்வி நிறுவனத்தில் அதுவும் ஆற்றல்சால் பல்கலைக் கழகத்தின் (University in Excellence) துணை வேந்தராக இருப்பவர் தகுதியில்லாதவர், பொய்யான தகவலைத் தந்து அரசை ஏமாற்றியிருக்கிறார். இப்போது அவரது பாசிச கொடுங்கோன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரமுயற்சித்த ஒரு பேராசிரியரையே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.” இந்தச் செய்தி ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்து நாறுகிறது. இது ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போகவில்லையா? அப்படி போனாலும் தான் நியமித்த விசுவாசிகளை ஜெயலலிதாவோ இந்த அரசோ விட்டுக் கொடுக்கமாட்டார்கள். அதை நாம்தான் போராடி சாதிக்க வேண்டும்.

‘நான் ஒரு குட்டி ஜெயலலிதா. இங்கே நான் வைத்ததுதான் சட்டம்’ என்றும் ‘3 கோடி கொடுத்து பதவியைப் பிடித்துள்ளேன் இன்னும் 2 கோடி பாக்கி தர வேண்டியுள்ளது. அதை எப்படி நான் அடைப்பேன்’ என்று பகிரங்கமாக கல்யாணி சொல்லி வருவதாகவும் பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கிறன. துணைவேந்தர் அம்மாவுக்கு பயந்து முகம் காட்ட மறுக்கின்றனர். காமராசர் பெயரில் உள்ள ஓர் உயர்கல்வி நிறுவனத்தின், உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின், மதுரையின் பெருமை என்று போற்றப்படும் நிறுவனத்தின், தமிழ் அறிஞர்கள் மு.வ., தெ.பொ.மீ. போன்றவர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இன்றைக்கு தகுதியற்ற, ஒரு பாசிஸ்டு கிரிமினல் அமர்ந்திருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே மிகப் பெரிய அவமானம்.

என்ன செய்வது பேய் ஆட்சி செய்யும் பிரதேசத்தில் பிணம் தின்னும் சாத்திரம் தான் இருக்கும் என்று சும்மா இருந்து விட முடியுமா? நமது வரிப் பணத்தில் நடைபெறும் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் ஒன்றினைந்து போராடி தீமையை அகற்றி நன்மையை அமர்த்த வேண்டாமா?

1) காவல் துறை முதல் தகவல் அறிக்கை

2) குற்ற வாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம்.

3) ஊடகங்களில் வெளியான செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு நாட்டின் அறிவுச்சொத்து. நாலந்தா பல்கலைக் கழகம் நம் தேசத்தின் வரலாற்றுப் பெருமை, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் பெருமையுடையது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில் இன்றைக்கு இப்படி பல பல்கலைக் கழகங்கள் கிரிமினல்களின் பிடியில் சிக்கித் தவிப்பது ஏன்?

உலகமயமாக்கச் சூழலில் கல்வி, தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கும் வணிக நிறுவனங்களாகவும் மாணவர்களின் அறிவுத்திறன் கார்ப்பரேட்டுகளுக்கு கைகட்டிச் சேவகத்துக்காகவும் என்று மாறிவிட்டபின் அரசு நிறுவனங்களில் பணம் கொடுத்து பதவியைப் பிடிக்கும் போக்கு இயல்பாகியிருக்கிறது. கல்யாணி மதிவாணனுக்கு முந்தைய துணை வேந்தர் கற்பக குமாரவேல், அவருக்கு முந்தைய மருதமுத்து ஆகியோரெல்லாம் ஊழல்வாதிகளாகவும், பெண் பித்தர்களாகவும் இருந்ததன் தொடர்ச்சிதான் கல்யாணி மதிவாணன் கொலை முயற்சியில் இறங்கியிருப்பது. கல்வி கடைச்சரக்கு என்கிற நிலையை மாற்றி, புதிய சமூக உருவாக்கத்திற்கு  விளை நிலமாக்கப் பாடுபடவேண்டும்.

போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு, வழக்கு பதிவு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :-
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
மதுரை மாவட்டக்கிளை

கோச்சடையான் படையுடன் அண்ணாச்சி படைவீச்சு !

10
கோச்சடையான் - ரசிகர் பாலாபிஷேகம்
கோச்சடையான் - பொம்மை பட பீலாவிற்கு ரசிக வாலின் பால் ஸ்பேரே!

மசாலா: “உலகம் முழுவதும் 3000-த்திற்கும் அதிகமான திரையரங்கில் வெளியாகி இருக்கும் ‘கோச்சடையான்’ திரைப்படம் 42 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 30 கோடியும், இதர நாடுகளில் 12 கோடியும் வசூல் செய்திருக்கிறது” – படத்தினை வெளியீட்டு இருக்கும் ஈராஸ் நிறுவனத்தின் பத்திரிகை செய்தி!

மருந்து: சரிடே, 3000 தியேட்டரை 42 கோடியால வகுத்தா ஒரு தியேட்டருக்கு ரூ 1,40,000 வருது. இதை மூணு நாளால வகுத்தா ஒரு நாள் வசூலுன்னு 46,666 ரூபா வருது. ஒரு நாளைக்கு ஐஞ்சு காட்சி மேனிக்கு வகுத்தா ஒரு காட்சி வசூல் 9,333 ரூபா வருது. ஒரு டிக்கெட் தோராயமா 200 ரூபா வைச்சு வகுத்தா ஒரு ஷோவ 46 அறிவாளிங்கதான் பாத்தாங்கன்னு வருது! இந்த படத்த ஒரு ஷோவுக்கு 46 கூமுட்டைங்கதான் பாத்தாங்கிறத மறைக்கதுக்கு ஏம்டே இப்படி, “பட்டையக் கிளப்பும் வசூல் 42 கோடி, பாரதப் பிரதமர் நம்ம மோடி”ன்னு ஒப்பாரி வைக்கீக!
____________

மசாலா: பெங்களூரில் ஊர்வசி, பாலாஜி, முகுந்தா உள்ளிட்ட பல திரையரங்கங்களில், ‘கோச்சடையான்’ படத்திற்கு ரூ 200 முதல் ரூ 1000-வரை செலவிட்டு லட்சக்கணக்கானோர் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தனர். பிறகு படத்தின் ரிலீஸ் திடீரென தள்ளிப்போனதால் முன் பதிவு பணம் வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் திரையரங்கங்களை வியாழக் கிழமை மாலை முற்றுகையிட்டனர்.இதனால் தியேட்டர் உரிமையாளர் களுக்கும்,முன்பதிவு செய்தவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மருந்து: இதான் சேதின்னா நானு மொதல்ல போட்ட கணக்க மாத்தணும் போலயே! 1000 ரூபாய் டிக்கெட்ட இலட்சக்கணக்கானோர் எடுத்து, மூணு நாளா பாத்து, அத 42 கோடியில வகுத்தா ஒரு காட்சிய பத்துப் பதினைஞ்சு ஈ காக்காங்கதான் பாத்துருக்கும்ணு தோணுது!
_______________

கோச்சடையான் - ரசிகர் பாலாபிஷேகம்
எலே நீ பீச்சறது பாலா இல்லை பீராடே

மசாலா: இதுவரை பாப்கார்ன் போடுவதற்கு மட்டும்தான் இந்த திரையரங்கினுள் பார்வையாளர்கள் வாய் திறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அதற்கு அப்படியே மாறுபட்ட சூழல். இங்கு எத்தனையோ படம் பார்த்ததுண்டு. மயான அமைதி கொடுக்கும் அதே திரையரங்கம் இன்று திருவிழா கோலம் பூண்டதென்ன!? காரணம் சொல்லவா வேண்டும்? நீங்க வந்தா மட்டும் போதும் என்று காத்திருக்கும் ரசிகருக்கு ‘உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு வந்துவிட்டேன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை தந்து விட்டேன்’ என்று எஸ்.பி.பியின் கர்ஜனைக் குரலுடன் வீரனாக ரணதீரனாக சூப்பர் ஸ்டார். அவ்வளவு தான் பாப்காரன்களை எல்லாம் கார்னர் செய்து விட்டு, ஆக்ரோஷம், அதிமகிழ்ச்சி நிறைந்த தலைவா எனும் கோஷங்கள், விசில் பாய்ச்சல்கள் அரங்கத்தையே அலங்கரித்தது. – பேஸ்புக்கில் சினிமா பித்தன்.

மருந்து: ஏலே பித்து தம்பி, வாய தொறக்கதுக்கு நெறய சமாச்சாரம் இருக்குடே! பல்லு கழுவ, வாய கொப்பளிக்க, சொத்தப் பல்ல புடுங்க, சாப்பிட, குடிக்க, சாமிக்கு அலகு குத்த, மிட்டாய் கடையை வாய் பாக்க, கொட்டாவி விட, கடைசியில செத்தா வாய்க்கரிசி வாங்கறதுக்கும் வாய தொறக்கணும்லா! வாயக் கட்டி வயித்த சுருக்கி சனமான சனம் பொழக்கதுக்கே அல்லாடுத நாட்டுல கோச்சடையானுக்கு வாய தொறந்தான்னு ஒருத்தன் எழுதி, அதை தமிழ்இந்துக்காரன் வெளியிடுறான்னா, இந்த நாடு நாசமா போவட்டுமுடே!
________________

மசாலா: ‘கோச்சடையான்’ திரைப்படத்தைப் பார்க்க செல்லும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருந்து: ஜட்ஜ் ஐயா, அந்த கருமத்தை தருமமா நெனச்சு நம்ம அப்பராணி கோயிந்து தம்பிக பாக்கானுகளே, அவனுக தியாகத்துக்கு என்ன தருவீக! படத்த தயாரிச்ச பணக்காரன், பாக்க வந்த பரதேசிங்களுக்கு தலைக்கு 1000 ரூபா அபராதம் கட்டச் சொல்லி ஆர்டர் போடுவீகளா?
_____________________

மசாலா: ரஜினிகாந்த் நடித்து வெள்ளிக்கிழமை வெளியான கோச்சடையான் திரைப்பட போஸ்டரில், ‘2016-ல் கோட்டையில் எங்கள் கோச்சடையான் ஆட்சி உறுதி’ என்ற போஸ்டரை சேலம் மாநகரம் முழுவதும் ரசிகர்கள் ஒட்டி, அவரை அரசியலுக்கு இழுக்க அச்சாரம் போட்டுள்ளனர்.

மருந்து: ஆமப்பா, மோடிக்கு தேத்தண்ணி கொடுத்தாரு உங்க சூப்பர் ஸ்டார்ன்னு,  படத்தோட ரிலீஸ் தேதிக்கு உன்னைய லபோலபோன்னு அலைய வச்சு தண்ணி காட்டுனது யாருலே? முடியில்லாத அழகு ராஜாங்கெல்லாம் விக்கு போடுத மாறி , வழியில்லாத ரசிகனுங்கோ போஸ்டர்தான் ஒட்ட முடியும்!
____________________

மசாலா: சேலம் 5 ரோடு கௌரி தியேட்டரில் கோச்சடையான் படம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் ரஜினியின் உருவம் பொறித்த பனியன் அணிந்து ஊர்வலமாக வந்தனர். ரசிகர்கள் பால், சந்தனம், மஞ்சள் குடம் எடுத்து கொண்டு வந்தனர். தியேட்டர் முன்பு ரஜினியின் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று கிடா வெட்டி 101 தேங்காய், 5 பூசணிக்காய் உடைக்கப்பட்டது.

மருந்து: நம்மூரு சுடலைக்கு கிடா வெட்டையில, இதே மாதிரி பால்குடம், அபிஷேகம், ஊர்வலம், மஞ்ச டிரஸ் எல்லாம் உண்டுடே. சரிப்பா, இங்கன யாரை வெட்டப் போறிக? ‘பாவிகளா’ ரஜினி ‘பாவம்’டே!
_______________________

மசாலா: வீரத்தாலும் ராஜ தந்திரத்தாலும் ராஜ்ஜியங்களைக் கவிழ்க்கும் ஒரு படைத்தளபதியின் பழிவாங்கும் படலம்தான் ‘கோச்சடையான்’. இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்கத் தொழில்நுட்பம் (மோஷன் / பெர்ஃபார்மென்ஸ் கேப்சர்) என்கிற பெருமையுடன் வெளிவந்திருக்கிறது. – தமிழ் இந்து விமரிசனம்.

மருந்து: செவ்வாய் கெரகத்துல குந்திக்கிணுதான்,  ஊசிப்போன உன்னியப்பத்த துன்ன, பிளான் பண்ணி  ராக்கெட் வுட்டோம்னு பீலா வுட்டா உதப்பியா, வாழ்த்துவியா?
____________________

மசாலா: இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரஜினியைப் பார்த்ததும் ரசிகர்கள் எந்த மனநிலைக்குச் செல்லப் போகிறார்களோ என்கிற ஆவல் படம் தொடங்கியதும் இருக்கவே செய்கிறது. – தமிழ் இந்து விமரிசனம்.

மருந்து: இருக்கும்டே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் லட்ட பாத்த மார்வாடி சேட்டுக்கும், நல்லி எலும்ப பாத்த அடையாறுவில்லா பங்களா நாயுக்கும் ஜொள்ளு ஊத்தும்ணு, அல்லா பயபுள்ளகைளுக்கும் தெரியுமிலே! இதுல என்னடே த்ரில் வேண்டி கிடக்கு!
________________________

மசாலா:  “ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை 3டி அனிமேஷன் மூலமாக விரிவடையச் செய்ய அவர் ஏன் முன்வந்தார் என்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு சிக்கல் தரும் அம்சமே இதுதான்.” என்று பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

மருந்து: செக்க சுத்துற மாடு சிங்கிள் பேக்கோடு சுத்துனா என்ன, சிக்ஸ் பேக்கோடு சுத்துனா என்ன? இதுதான் வர்மா சாஃப்பின் கலை பார்வையின்னா, அதுக்குப் பேரு கலையில்ல ராசா, கொலை!
____________________

மசாலா: வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதில் பிரச் சினை ஏற்பட்டதாலேயே கோச்சடையான் படத்தை வெளியிட காலதாமதமானதாக கூறப் படுகிறது. படத்தை தயாரிக்க ஒரு தனியார் வங்கியிலிருந்து ரூ 41 கோடி வாங்கியதாகவும், அந்தக் கடனை வரும் 16-ம் தேதிக்குள் திரும்ப செலுத்த வேண்டிய நெருக்கடி தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மருந்து: உசிலம்பட்டி சுந்தரி தங்கச்சி, எம்.ஏ. தமிழ் படிக்க கடன் கொடுக்காத அந்த தனியாரு வங்கிக்காரன், பொம்ம படம் எடுக்க, சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு 41 கோடி கொடுத்துருக்கான்னா, என்னடே நாயம்?
_______________

மசாலா:  “ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்று அப்பா (ரஜினிகாந்த்) சொல்லிக் கொண்டே இருப்பார். சமூக தளங்களில் இணையும்படி பல நாட்களாகவே நிறைய பேர் அப்பாவிடம் வலியுறுத்தி வந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது. எல்லோருக்கும் இது மகிழ்ச்சி. தற்போது வெளி யாகும் ‘கோச்சடையான்’ படம் வெளியாகும் நேரத்தில் ட்விட்டரில் இணைந்திருப்பது இயல்பாக நடந்த ஒன்றுதான்.” –சௌந்தர்யா ரஜினிகாந்த்.

மருந்து: பூச்சி கடிச்ச மொச்சக்கொட்டை மாதிரி, மொக்கையான ஒரு காலி டப்பா பொம்ம படத்தை, நம்ம தலையில கட்ட இந்த பொண்ணு எப்டில்லாம் டிரைபண்ணுது! இது தெரியாம நம்ம டிவிட்டரு தம்பி மாறு எத்தன பேரு கோச்சடையானுக்கு மொய் எழுதுனாய்ங்களோ, தெரியல!
______________

மசாலா: லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு பெப் தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் கோச்சடையான் ஜெயித்திருக்கிறான்! சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும் பிடிக்கும்… எனும் அளவில் இருக்கிறது கோச்சடையான்! ஆகமொத்தத்தில், கோச்சடையான் – கோலோச்சுகிறான் – இன்னும் கோலோச்சுவான்!! – தினமலர் விமரிசனம்.

மருந்து: ஜால்ராவல்லாம் ஏம்லே விமரிசனம்னு கொல்லுதீக! மயிலாப்பூர் மாமி லதா ஃபேமிலி புராஜக்ட்ட, தினமலர் ராமசுப்பய்யர் ஃபேமிலி என்னைக்குடே வுட்டுக் கொடுக்கும்? சரி, அண்ணாச்சி மத்த மீடியாகாரன் ஆதரிக்கதுக்கு என்ன காரணமுன்னு கேக்கியளா? தினமலர் ஆதரிக்கது நம்மாளுன்னு பெருமையில, மத்தவன் ஆதரிக்கது நம்ம ஆண்டைய ஆதரிச்சா நமக்கு பெருமைல்லான்னு!
_______________

மசாலா: கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள். அவரச ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்து விட்டோம். இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும். கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றனர். அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று  படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகரன் கூறியுள்ளார்.

மருந்து: கோச்சடையானே ஒரு காலி டப்பாங்கிறப்போ அந்த டப்பாவோட டிரைலரை மட்டும் ஈஃபிள் டவராவா காட்ட முடியும்? பொண்டாட்டி உழைப்புல சொகுசா முறுக்கை கடிச்சுக்கிட்டும், டிகாஷன் காஃபிய குடிச்சிக்கிட்டும் வேலை வெட்டியில்லாத இலக்கிய பாய்ஸ்தான் கேன்ஸ் விழாவை உலக சினிமா விழான்னு கொண்டாடுதான். கோச்சடையான் டிரைலரெல்லாம் கேன்ஸில் வெளியாகும்னா, அது கேன்ஸ் திரைப்பட விழவா இல்ல, கேன்சர் விழிப்புணர்வு முகாமா?
________________

மசாலா:  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளிவந்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் இசை பற்றி ரசிகர்கள் அதிகமாகவே பேசி வருகிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது என அனைவருமே பாராட்டுகிறார்கள். ஆனால், கோச்சடையான் படத்திற்கு இசையமைப்பது தனக்கு சவாலாக இருந்தது என்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

மருந்து: ஒத்துக்குறோம். சரக்கே இல்லாத பார்ட்டிக்கு சைட்டிஷ் செய்யுறதுன்னா சும்மாவா?
________________

மசாலா: செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் என்ற பெயரில் அப்பா மற்றும் கணவன் பெயர் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த செளந்தர்யா, “ஏன்? ஐஸ்வர்யா ராய் பச்சன் இல்லையா? அவரை கேட்டீர்களா இப்படி? எல்லோருக்கும் பிடித்த என் அப்பாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும். பிறந்ததில் இருந்து என் பெயருடன் இருக்கிறது அப்பாவின் பெயரும், இருந்துவிட்டு போகட்டுமே” என்றார்.

மருந்து: இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த அஸ்வின்னு ரெண்டு பேருல விநியோகஸ்தரு, தியேட்டர் ஓனரு, மீடியாக்கமாறு, தயாரிப்பாளரு அல்லாரும் எதப்பாத்து டீல் பேச வருவான்? சௌந்தர்யா அக்காவுக்கு அப்பா சென்டிமெண்ட விட அப்பாவோட பிராண்டுதானே உதவியா இருக்கு?
_____________________

மசாலா: “எனது மகள்கள் சவுந்தர்யா அஸ்வின், ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே அவர்கள் கணவரின் அனுமதியுடனேயே படம் இயக்கி வருகிறார்கள். என் மகள்கள் இயக்குனர்களாக வெற்றி பெற்றுள்ளதில் பெருமை அடைகிறேன். ஆனால் அவர்கள் ஆளுக்கு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு குடும்ப தலைவியாக, சிறந்த குடும்ப தலைவிகள் என அனைவருக்கும் உதாரணமாக வாழ வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். கோச்சடையான் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தாலும் அதில் மயங்கி விடாமல், பட வாய்ப்புக்களை ஒத்திவைத்து விட்டு சவுந்தர்யா தனது குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் பெண்கள் மிக முக்கியமானவர்கள். பெண்கள் தங்கள் குழந்தைகளை குறைந்தது 12 வயது வரை அவர்களுடனேயே இருந்து, அவர்களை நல்ல சிட்டிசன்களாக வளர்க்க வேண்டும். எனது மகள்களும் இது போல் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. பட வாய்ப்புக்களை விட குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” – கோச்சடையான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.

மருந்து: பொம்பளைங்கன்னா குடும்பம், குழந்தைங்கன்னு மட்டும் இருக்கணும்னு சூப்பர் ஸ்டார் சொல்றாரு. செக்க சுத்ற மாட்டுக்கு சிக்ஸ் பேக்கு ஒரு கேடான்னு நான் கேட்ட கேள்வி இப்பவாச்சும் புரியுதாலே?

_____________________

மசாலா: “படத்தை விட படத்தின் மேக்கிங்-ஐ தான் பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. குழந்தைகளைக் காட்டி படத்தை ஓட்டிவிடுவார்கள். திரையரங்கில் அதிகம் குழந்தை ரசிகர்கள் தான்.. மொக்க அனிமேஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால் கோச்சடையான் நல்ல முயற்சி தான். ஆனால் என்னதான் சமாதானம் சொன்னாலும்.. தீபிகாவை இவ்வளவு மொக்கையான ஒரு பொம்மையாக பார்க்க நேர்ந்ததுதான் ஜீரணிக்க முடியவில்லை.. அடுத்த பார்ட்லயாவது அந்த புள்ளையை நல்லபடியா காட்டுங்கப்பா..சவுந்தர்யா ரஜினி அஸ்வின் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. “ – பேஸ்புக்கில் கார்ட்டூனிஸ்ட்  பாலா

மருந்து: பாலா தம்பி, அனிமேஷன் படத்துல அனிமேஷனையே மொக்கைண்ணு மொத்துண கையோட, கோச்சடையான் நல்ல முயற்சின்னு எழுதியிருக்கீகளே, இது நாயமா மக்கா? பெறவு தீபிகாவை பொம்மையாக காட்டிட்டாணேன்னு வருத்தப்படுதீரு! அந்த அக்கா நடிக்கிற பூரா பாலிவுட் படத்துலயும் ஒரே மாதிரி சேட்டு வூட்டு பொம்மையத்தாம்வே வருது! பொம்மைய பொம்மையாத்தான் காட்டோணும், கிளியா காட்டுணா கிலிதாம்வே வரும்

– காளமேகம் அண்ணாச்சி

அடிக் குறிப்பு: தலைப்பில் வரும் “படை வீச்சு” – சிலம்பாட்டத்தில் வரும் ஒரு வீச்சின் பெயர். கம்பை நாற்புறங்களிலும் சுழட்டியவாறு சண்டையிடும் அல்லது திறமை காட்டும் ஒரு முறை.

மழலையர் பள்ளி நடத்து – பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

9

அரசு துவக்கப்பள்ளிகளில் மழலையர் பள்ளி வகுப்புகளை (LKG & UKG) உடனடியாக தொடங்கி நடத்த போராடுவோம்!
தனியார் பள்ளிகளின் கட்டண பகற்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!!

பள்ளிக்கல்வி இயக்குனரகம் முற்றுகை

நாள் : 30.05.2014 காலை : 11 மணி

ல்லா செல்வங்களுள் உயர்ந்த செல்வம் நம் மழலைச் செல்வங்கள் தான். 3 முதல் 6 வயதுடைய மழலைகள், பச்சைக் களிமண் போன்றவர்கள். அவர்களை ‘பிள்ளையாராகவும்’ பிடிக்க முடியும் ‘குரங்குகளாகவும்’ பிடிக்க முடியும். பல்வேறு குழந்தைகள் மனநல நிபுணர்கள், கல்வியாளர்கள் 3 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கு புலனறிவு கல்வி முறையில் கற்பிக்க வேண்டுமென்று கூறுகின்றனர். புத்தகமில்லாமலும், ஆடல், பாடல் மூலமாகவும் ஐம்புலன்களை பயன்படுத்த கற்றுத்தர வேண்டுமென்றும், கிறுக்குதல், தாள்களை கிழித்தல், கசக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகளையே விளையாட்டு முறையில் (Play Way Method) கற்பிக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.

குழந்தைகள் போராட்டம்

மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கழகத்தால் (NCERT) உருவாக்கப்பட்ட தேசிய பாடத்தொகுப்பிற்கான கட்டமைப்பு (National Curriculam Framework, 2005) இத்தகைய கல்விமுறை எந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு பெரிய அளவில் திட்டத்தை தயாரித்துள்ளது. (இன்றுவரை அது எழுத்தில் மட்டுமே உள்ளது) இதனடிப்படையில் குழந்தைகளின் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சேவை (Integerated Child Development Services) என்று மத்திய அரசு திட்டமிட்டு அங்கன்வாடி, பால்வாடி நிலையங்களை ஏற்படுத்தினாலும், மழழையர்களுக்கான கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மழலைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டிய அரசு சாராயம் விற்பதில் பிசியாக இருக்க, மறுபுறமோ தனியார் பள்ளிகள் மழலையர் பள்ளிகள் நடத்துகிறோம் என்ற போர்வையில் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றன.

முதல் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளை நடத்துகின்றது. அப்படி இருக்கும்பொழுதே ‘அவற்றில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளில்லை, மாணவர்கள் சரியாக தேர்ச்சி பெறுவதில்லை, சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை’ என்று பல காரணங்களை காட்டியே கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளுக்கு, மழலையர் பள்ளி வகுப்புகளை அரசு நடத்தாமல் இருப்பதும், மழலையர் பள்ளி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளையே பெற்றோர்கள் சார்ந்திருக்கும் சூழலும் ஆட்டுக் கிடைக்கு ஓநாய்களை காவல் வைத்தது போலாகிறது.

பெட்ரோல், விலையை போன்று ஆண்டுக்காண்டு எகிறும் மழலையர் பள்ளி வகுப்புகளுக்கான கட்டண உயர்வினால் பெற்றோர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். காசிருப்பவர்களும், கடன் பெற்று சமாளிப்பவர்களும் மட்டுமே மழலையர் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கமுடியும், காசில்லாதவன் குழந்தைகளுக்கு ‘மழலையர் பள்ளிகளில் பயில வக்கில்லை’ என்ற ‘மனு’ நீதி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படி அரும்பாடுபட்டு தங்கள் குழந்தைகளை மழலையர் பள்ளி வகுப்புகளில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையான கல்வி போதிக்கப்படுகிறது என்பது தெரியாது. 8 க்கு 10 அளவிலான சிறிய இடத்தில் கூட ‘வகுப்பறைகளை’ நடத்தும் தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் என, பிஞ்சுக் குழந்தைகளை பிணைய கைதிகளாக வைத்து பணம் பறிக்கும் வழிப்பறி கூட்டத்தில் சிக்கி பெற்றோர்கள் சின்னாபின்னமாகின்றனர்.

தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக் கழகம், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் நல நிபுணர்கள் கூறுவது போன்ற கல்விமுறை இங்கில்லை. மாறாக 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு செக்குமாட்டுத்தனமான, அறிவியலுக்கு முரணான கல்விமுறை இங்கு ‘கட்டாயமாக புகட்ட’ப்படுகிறது.

மனப்பாட கல்விமுறைகளை புகுத்துவது, நிறைய புத்தகங்களை கொடுத்து மழலைகளை சுமை தூக்கிகளாக மாற்றுவது போன்ற பித்தலாட்டத்தங்கள் மூலம் ’கல்வித்தந்தைகளான’ தனியார்பள்ளி கொள்ளையர்கள், பெற்றோர்கள் கொடுக்கும் ‘விலைக்கு’ உரிய ‘பொருளை’ வழங்குவதாக ஏமாற்றுகின்றனர்.

பெற்றோர்களும் தங்களின் மழலைச் செல்வங்கள் ஊசி போட்டு பெருக்கப்படும் ‘கறிக்கோழிகளாக’ மாற்றப்படுவது பற்றிய விபரீதம் அறியாமல், ‘என் பிள்ளை நிறைய ரைம்ஸ் சொல்கிறான், இங்கிலீசில் பேசுகிறாள்’, அந்த ’ஸ்கூலில் நிறைய புக்ஸ் கொடுக்குறாங்க’, ’தினமும் ஹோம் ஒர்க் தர்றாங்க’ என்று பூரிக்கின்றனர். தங்கள் இலாபவெறிக்கு, மழலைகளின் சிந்தனையை முடமாக்கும் இந்த அயோக்கியத்தனம் ஒழிக்கப்படவேண்டுமென்றால் ‘மழலையர் பள்ளி வகுப்புகளை’ அரசே தொடங்கி நடத்த வேண்டும்.

இவ்வாறு தொடங்கி நடத்தப்படும் ‘மழலையர் பள்ளி வகுப்புகள்’ 3 முதல் 6 வயதில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாகவும், இலவசமாகவும், தாய்மொழியிலும், அறிவியல்பூர்வமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் நமது குழந்தைகள் சிந்தனை ரீதியாக முடமாவதை நிறுத்தவோ, காசில்லாதவன் குழந்தைகள் கற்க தகுதியில்லை என்ற மனுநீதியை தடுக்கவோ முடியாது.

மழலையர் பள்ளி வகுப்புகளை அரசே தொடங்கி நடத்தக்கோரி எமது அமைப்பால் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட “மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் (PUSER)”, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டதில் 4 வாரங்களில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை நீங்கள் நாளேடுகளில் பார்த்திருப்பீகள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மழலையர் வகுப்புகளை 25 மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கப்போவதாக சென்னை மாநகர மேயர் அறிவித்துள்ளார். ஆனால் தமிழகம் முழுவதும் இருக்கும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை பற்றி தமிழக அரசு ஏன் வாய் திறக்க மறுக்கிறது?

“மழலையர் வகுப்புகளை அரசு ஆரம்ப பள்ளியில் இந்த கல்வியாண்டே தொடங்க வேண்டும்” என தமிழக அரசையும், கல்வித்துறையையும் வலியுறுத்தி கல்வி இயக்குநரகத்தை 30.05.2014 அன்று காலை 11 மணியளவில் முற்றுகைப் போரட்டம் நடத்த உள்ளோம்.

தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதை தடுக்கவும், அரசுப் பள்ளியில் தரமான கல்வியை வழங்கு என்ற கோரிக்கையின் நீட்சியாக அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு தொடங்கக் கோரும் இந்தப் போராட்டம் தனியார்மய காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

நமது குழந்தைகளின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

children-protest-2

குறிப்பு :

குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை (PUSER) சென்னையிலும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் ஆர்வமுள்ள பெற்றோர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் எம்மை தொடர்புகொள்ளும்படி தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.
தொடர்புக்கு – 9842812062

போதையா – புரட்சிகர உணர்வா?

1

​ NTC தேர்தல் : போதையா – புரட்சிகர உணர்வா? வெற்றி பெறப் போவது எது?

மிழ் நாட்டில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஏழு மில்களிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் வரும் 30.05.2014 தேதியன்று நடைபெற உள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உட்பட பதினோரு சங்கங்கள் போட்டியிடுகின்றன.

1972 -ம் ஆண்டு என்.டி.சி துவங்கப்பட்டது. 2010 -ம் ஆண்டில்தான் பு.ஜ.தொ.மு சங்கத்தின் முயற்சியால் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. தேர்தல் முறை வந்து விடக்கூடாது என நமது சங்கங்கள் தவிர பத்து சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடிப் பார்த்தார்கள். அத்தனையும் முறியடித்து தேர்தலை கொண்டு வந்தோம்.

2010 – ஆம் ஆண்டு நடந்த அங்கீகாரத் தேர்தலில் நான்கு சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன. ஏழு மில்களிலும் பத்து சதவிகிதம் வாக்குகள் பெற்ற சங்கங்கள் வெற்றி பெற்றன. அதன்படி தி.மு.க இரண்டு பிரதிநிதிகளும் , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (என்.டி.எல்.எப்) ஒரு பிரதிநிதியும், சி.ஐ.டி.யு ஒரு பிரதிநிதியும் , ஐ.என்.டி.யு.சி ஒரு பிரதிநிதியும் பெற்றனர். நம்மை தவிர மீதி மூன்று சங்கங்களும் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து தொழிலாளர்களுக்கு பிரியாணி, பிராந்தி, வேட்டி- சேலை, குடம், குத்து விளக்கு வழங்கி வெற்றி பெற்றன.

மூன்று ஆண்டு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கீகாரத் தேர்தல் வரும் 30.05.2014 -ம் தேதி நடைபெற உள்ளது.

முதலில் 20.03.2014 -ம் தேதியில் தேர்தல் நடை பெறும் என நிர்வாகம் அறிவித்தது. அனைவரும் தேர்தல் பிரச்சாரம் செய்து முடிந்த நிலையில் MLF சங்கம் நீதி மன்றத்தில் தடையாணை பெற்றது. பனியன் கம்பெனி முதலாளி திருப்பூர் சு. துரைசாமி தனது பாணியில் சதி செய்து தடையாணை வாங்கினார். மீண்டும் நமது சங்கம் ரிட் அப்பீல் செய்து தேர்தலை கொண்டு வந்தோம். தேர்தலை தடை செய்யும் MLF சங்கத்தின் முயற்சிக்கு CITU சங்கம் துணை நிற்கிறது. HMS சங்கம் , AITUC சங்கம் , BMS சங்கம் ஆகியோரும் துணை போகிறார்கள். தேர்தலே வேண்டாம் என்று தங்களது உண்மையான நிலையைச் சொன்னால் தொழிலாளர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகும் என்பதால் வேறுவகையில் சூழ்ச்சி செய்கிறார்கள். அதாவது கிளையளவில் பத்து சதவிகிதம் வாக்குகளைப் பெறும் சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார்கள்.

C.S.W மில்லில் மொத்த தொழிலாளர் 120 பேர். இதில் 12 ஓட்டுகள் பெறும் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வைக்கிறார்கள். அதன்படி ஏழு மில்களிலும் எழுபது சங்கங்கள் வெற்றிபெறும். ஒரு சங்கத்திற்கு 2 பேர் வீதம் 140 பேர் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள். இதன்மூலம் தேர்தல் முறையின் அடிப்படையே தகர்ந்து போகும். 140 பேரை வைத்து என்.டி.சி- யில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனை விளக்கி நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் சார்பில் வாதாடினோம்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி அக்னி ஹோத்ரி , சுந்தரேசன் அடங்கிய அமர்வு அளித்த வழிகாட்டுதல் என்னவென்றால், “30.05.2014 -ல் தேர்தல் நடத்துங்கள், வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக் கூடாது.  இதன் மீதான இறுதி விசாரணை வரும் 18.06.2014 அன்று நடைபெறும். அதில் கிளை அளவில் பத்து சதவிகிதமா? ஒட்டு மொத்த அளவில் பத்து சதவிகிதமா? என்பதை நாங்கள் சொல்கிறோம். அதன்படி முடிவுகளை அறிவியுங்கள்” என்பதாகும்.

மேற்கண்ட அடிப்படையில் தற்சமயம் தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகின்றன. N.D.L.F சங்கம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டும் , மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு உதவியுடன் ஆலைவாயில் கூட்டங்களை நடத்தியும் பிரச்சாரம் செய்து வருகிறது.

அண்ணா தொழிற் சங்கம் (ATP) சங்கம் தனது வழக்கமான பாணியில் ஒவ்வொரும் தொழிலாளர் வீட்டுக்கும் சென்று ரூ. 1000/- , 2000/- கொடுக்கிறார்கள். தொழிலாளர்கள் வாங்க மறுத்தால் வீட்டில் வலுக்கட்டாயமாக வைத்துவிட்டு வருகிறார்கள். பணம் வேண்டாம் என்றால் அரை மூட்டை அரிசி கொடுகிறார்கள். ஆனால் மூட்டையின் மீது கை வைத்து சத்தியம் வாங்குகிறார்கள்.

அண்ணா தொழிற் சங்கத்தை பொறுத்த வரையில் முப்பது இலட்சம் ரூபாய் செலவு செய்ய திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திமுக சங்கமான (LPF) தனது பங்கிற்கு ராம்ராஜ் காட்டனில் வேட்டி- சட்டை கொடுக்கிறார்கள். பெண்களுக்கு சேலை கொடுத்து தங்கள் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டுள்ளார்கள். HMS சங்கம் தமது பங்கிற்கு ஒவ்வொரு வாக்காளருக்கும் பால் குக்கர் கொடுத்துள்ளார்கள்.

இது போக எல்லா சங்கங்களும் தனது முன்னணியாளர்களுக்கு பிரியாணி , பிராந்தி எனக் கொடுத்து பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் , கமுதகுடியில் உள்ள பயோனியர் மில்லில் நாம் ஆலைவாயில் கூட்டம் நடத்திய போது ATP சங்கத்தவர்கள் ரகளை செய்தார்கள். 24.05.2014 -ல் நடந்த வாயில் கூட்டத்தில் வெளிப்படையாகவே மிரட்டி இதோ அன்வர் ராஜா எம்பிக்கு போன் செய்து உங்களை உள்ளே தள்ளுவோம் என்றார்கள். தாராளமாக செய்யுங்கள் என்றோம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து நமது சங்கம் மட்டும் வெளிப்படையாகவே கடந்த ஒருவார காலமாக பிரச்சாரம் செய்து வருகிறோம். ஏழு மில்களிலும் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. CITU சங்கம் வழக்கம் போல் கள்ள மவுனம் சாதித்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை ஊக்குவித்து வருகிறார்கள்.

கோவையை பொறுத்தவரை நமது கூட்டத்தில் கலவரம் செய்தால் சிக்கலாகி விடும் என ATP -யினர் பயப்படுகின்றனர். ஏனெனில் சின்னியம் பாளையம் தியாகிகள் , ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் வாரிசுகளான நாம் களத்தில் நிற்கிறோம். நமது ஆலை வாயில் கூட்டங்களில் புஜதொமு சங்கம் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்டிரிஸ் தொழிலாளர்களும் , CRI பம்ப் தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டு தங்கள் சகோதர ஆதரவை வழங்கி வருகிறார்கள். இவர்களை அடித்தால் திருப்பி அடித்து விடுவார்கள் என்னும் பயம் ஓட்டு கட்சி தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. போலிசை வைத்து மிரட்டி கைது செய்தால் உடனடியாக சந்தோசமாக சிறைக்கு போய்விடுகிறார்கள். இது தேர்தலில் மிகப்பெரிய பிரச்சாரமாக மாறி தாங்கள் தோற்று விடுவோம் என பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். இந்து மதவெறியர்களுக்கு (BMS) தொழிலாளர் மத்தியில் பெரிதாக அமைப்பு பலம் இல்லாத காரணத்தால் அமைதியாக தேர்தலில் போட்டியிட்டு அடக்கம் காட்டுகிறார்கள்.

தில்லை கோவிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை கண்டித்த 50 தொழிலாளர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் துவண்டுவிடவில்லை.  பின்னர் மீண்டும் வெளியே வந்து தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தோழர்கள் சாதாரண தொழிலாளியாக சிறைக்கு போனவர்கள் வெளியே வரும்போது போராளியாக வந்தார்கள். வந்த பின்பும் மீண்டும் இரட்டிப்பு உற்சாகத்துடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை கண்ணுற்ற ஓட்டுக் கட்சி தொழிற்சங்கத் தலைவர்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என உணர்ந்து அமைதி காக்கிறார்கள்.

நமது மைய கலைக்குழு, தொழிலாளர்கள் சந்திக்கின்ற மின் வெட்டால் லே-ஆப் , கேண்டின் விலை ஏற்றம் , இலவசம் கொடுப்பது போன்ற பல பிரச்சனைகளை படைப்பாற்றல்லோடு பாடலாக மாற்றி பாடுகின்றார்கள். இது ஆலை வாயில் கூட்டங்களை அற்புதமான இலக்கியமாக்குகிறது. ஓட்டு கட்சி முன்னணியாளர்களுக்கு பிரியாணியும், பிராந்தியும் வாங்கிக் கொடுத்தால்தான் தேர்தல் வேலை செய்வார்கள். நமது தோழர்களோ தங்களது துன்பங்களை பாடல் மூலம் கேட்கும் போது கூடுதல் உற்சாகம் பெற்று தேர்தல் பணிகளை செய்கிறார்கள்.

மைய நிர்வாகக் குழு சார்பில் மாநிலத் தலைவர் தோழர். அ. முகுந்தன், பொதுச் செயலாளர் தோழர் சு ப தங்கராசு , மாநில இணைச் செயலாளர் தோழர். வெற்றி வேல் செழியன் களத்தில் நேர் நின்று வழிகாட்டி வருகின்றனர்.,

வெற்றி பெறப்போவது போதையா? புரட்சிகர உணர்வா? என்பது வாக்கு எண்ணிக்கையின் பொழுது தெரியும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோவை.

பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !

10

2012 டிசம்பரில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிருபயா என்ற பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிறகு நாடு முழுக்க பாலியல் அத்துமீறலுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. ஆனால் எந்த சட்டம் வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் காவல்துறையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், பல சமயங்களில் அவர்களே குற்றவாளிகளாக இருக்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் காணத் தவறி விடுகிறார்கள். அதுவும் குற்றவாளி ஒரு உயரதிகாரி எனில் கேட்கவும் வேண்டுமா என்ன?

கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத்
கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத்

கர்நாடக மாநிலத்தின் ரிசர்வ் போலீசு துறையின் கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத், வயது 50. அடுத்து பெங்களூரு நகர காவல்துறை ஆணையராக வர வாய்ப்புள்ளவராக கருதப்படும் ரவீந்திர நாத் ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி. மட்டுமின்றி இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும் தனது சிறப்பான காவல்துறை பணிகளுக்காக பெற்றவர். இவர்தான் ஒரு பாலியல் அத்துமீறலை நிகழ்த்தி விட்டு எந்தவித தடையுமில்லாமல் ஹாயாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவர்.

ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார். தங்கள் அனுமதியில்லாமல் யாரோ தங்களை படம் பிடிப்பதை தெரிந்து கொண்ட அந்த இரு பெண்களும் அவரிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டபடியே தப்ப முயற்சி செய்துள்ளார் ரவீந்திரநாத். அந்தப் பெண்களோ அவரிடமிருந்த செல்பேசியை பிடுங்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை தள்ளி விட்ட ரவீந்திர நாத் தப்பியோட முயற்சிக்கையில் அங்கிருந்த இன்னொரு வாடிக்கையாளரான ஸ்ரீதர் என்பவர் அப்பெண்களுக்கு ஆதரவாக வந்திருக்கிறார். ரவீந்திரநாத்திடமிருந்து இவர்கள் செல்பேசியை கைப்பற்றியுள்ளனர்.

அப்பெண்களை ஆபாசமான கோணத்தில் ரவீந்திரநாத் படம் பிடித்திருப்பது செல்பேசியில் இருந்த இரு புகைப்படங்களின் வழியே திட்டவட்டமாக தெரிய வந்தது. உடனடியாக ”நான் யார் என்று தெரியாமல் சண்டை போடாதீர்கள். நான் நினைத்தால் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என அப்பெண்களை மிரட்டி உள்ளார் ரவீந்திரநாத். பொதுவாக பிடிபடும் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் இப்படி பாதிக்கப்படும் பெண்களிடம் உதார் விடுகிறார்கள். காரணம் அதிகார மையத்தில் இருப்பதால் ரவீந்திரநாத் அப்பெண்களை கிள்ளுக்கீரையை விட கேவலமாகத்தான் கருதியிருப்பார்.

மீண்டும் அவர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட ரவீந்திரநாத் முயற்சிக்கவே, அப்பெண்கள் அழுது கூக்குரலிட்டனர். வெளியில் போய் கொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் அப்பெண்களுடன் இணைந்து அவரைப் பிடித்து ரோந்து வந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரது செல்பேசியும், சிம் கார்டும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது

போலீசாரிடம் தனது காவல்துறை அடையாள அட்டையை காண்பித்து அவர்களை மிரட்ட துவங்கினார் சாதாரண உடையில் இருந்த ரவீந்திரநாத். தவறின் லட்சணத்தை பற்றிய குறைந்த பட்ச குற்றவுணர்வு கூட இல்லாமல் அதிகாரத் திமிரை போலீசிடமும் காட்ட முயன்றார். அந்த அடையாள அட்டையை போலி என்று கருதி, அவரது சட்டையை கழற்றிய ஹைகிரவுண்டு போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்தனர். இந்திய தண்டனை சட்டம் 354 மற்றும் 506-ன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் ‘அடையாளம் தெரியாத நபர்’ என்று காவல்துறையினர் குறிப்பிட்டிருந்தனர்.

கைது நடவடிக்கையை சிறிதும் எதிர்பார்த்திராத ரவீந்திரநாத் உடனடியாக மூத்த அதிகாரிகளுக்கு தன்னிடமிருந்த இன்னொரு செல்பேசி மூலமாக தகவல் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அங்கு வந்த மூத்த காவல்துறை அதிகாரி ரவீந்திரநாத்தை விடுவிக்குமாறு செய்தார். இன்னார் எனத் தெரிந்தவுடன் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட கீழ்நிலைக் காவலர்கள் ரவீந்திர நாத்திடம் வருத்தம் தெரிவித்தனர். என்னதான் கடுமையான சட்டங்கள் வந்தாலும் அதற்கு காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரையில் அரை மணி நேரம்தான் ஆயுள் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டினர்.

உயர் அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறும் ரவீந்திரநாத்
உயர் அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறும் ரவீந்திரநாத்

அன்று மாலை 4 மணிக்கு மாநில அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதிலும் குற்றவாளியான ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அதில் தன்னை காலையில் ‘துன்புறுத்திய’ ஹைகிரவுண்டு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இவ்வளவுக்கும் மற்ற கைதிகளை விட மரியாதையாகத்தான் அவரை நடத்தியுள்ளார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காவலர்களை இடைநீக்கம் செய்ய மாநில காவல்துறை தலைமை அதிகாரி (DGP) லால்ரோகுமா பச்சாவ் மறுத்து விட்டார்.

மறுநாள் ரவீந்திரநாத்தைப் பற்றிய செய்திகள் ஊடகங்கள் வாயிலாக கசியத் துவங்கவே அதே காபி ஷாப்பில் ஒரு நிருபர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் அவர். அதற்கு முன்னரே உள்துறை அமைச்சர் ஜார்ஜ், ரவீந்திரநாத் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தி அறிக்கை தர உத்திரவிட்டிருந்தார். தான் விசாரணைக்கு தயாராக இருப்பதாக ரவீந்திர நாத் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். ”உண்மையில் என்ன நடந்தது என்பதை சொன்ன பிறகும் காவல்துறையினர் என்னை கைது செய்து விட்டனர். நான் அப்பெண்களை புகைப்படம் எடுக்கவில்லை. முதல் மாடியில் இருந்து வந்த ஒருவர் என்னை தாக்கி விட்டு எனது செல்போனை பறித்துச் சென்று விட்டார். அவர் அப்பெண்களுக்கு தெரிந்தவர் தான். மாலை வரை அவர்தான் என்னுடைய செல்பேசியை வைத்திருந்தார். அவரை விசாரித்தால் உண்மை தெரிய வரும்” என்றும் திசை திருப்பி விட்டார். அவரை பிடிக்க வந்தவர்களையே குற்றவாளிகளாக்கவும் முயன்றார். ஆனால் உண்மையில் அவரிடமிருந்துதான் செல்பேசியை கைப்பற்றியதாக ஹைகிரவுண்டு போலீசார் தெரிவிக்கின்றனர்.

அங்கு வேலை செய்யும் ஒருவரை பத்திரிகையாளர்களிடம் பேச வைத்துள்ளார் ரவீந்திரநாத். ”சார் எங்களோட தினசரி வாடிக்கையாளர். எப்பவுமே வந்தால் அமைதியாக செல்போன நோண்டிக் கொண்டிருப்பார். இதுக்கு முன்னாடி யாரையும் அவர் செல்போனில் புகைப்படம் எடுக்கவில்லை” என்று அவர் கூறியிருக்கிறார். காபி ஷாப்பில் வேலை செய்பவருக்கு இவர் செல்போனில் என்ன செய்தார் என்று எப்படி தெரிந்திருக்க முடியும் என்ற எளிய கேள்வி கூட அவருக்கு எழ முடியாமல் அதிகாரபோதை அவரது கண்களை மறைத்திருக்கிறது.

இந்த நாடகத்தை தொடர்ந்து, தான் கைதான ஹைகிரவுண்டு காவல்நிலையத்திற்கு போயிருக்கிறார் ரவீந்திரநாத். மூத்த போலீஸ் அதிகாரி என்பதால் அங்கிருந்த போலீசார்  அனைவரும் அவருக்கு எழுந்து நின்று வணக்கம் செலுத்தியுள்ளனர். உடனே ”நேற்று என்னை உட்கார வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்ட அதே இடத்தில் இன்று மரியாதையாக உட்கார வைத்துள்ளீர்கள்” என்று ஏளனமாக பேசியிருக்கிறார். “புகார் பதிவு செய்யப்பட்டிருப்பின் என்னை கைது செய்யுங்கள்” என்றும் கூறியிருக்கிறார். அவரை அங்கிருந்த கீழ்நிலை காவலர்கள் சமாதானப்படுத்தி உள்ளனர். பிறகு டிஜிபி அலுவலகம் சென்ற அவர் அங்கிருந்த நிருபர்களிடம் ஒரு நேர்மையான போலீசு அதிகாரியாக இருப்பதன் கஷ்டங்களை விளக்கியிருக்கிறார். ஏறக்குறைய 27-ம் தேதி முழுதும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். வழக்கமாக போலிசுதான் குற்றவாளிகளைத்தான் அழைத்துக் கொண்டு குற்றம் நடந்த இடங்களுக்கு சென்று எப்படி குற்றம் நடந்தது என்று நடித்துக் காட்டச் சொல்வார்கள். இங்கே குற்றவாளி நேரெதிராக போலிசை கிண்டல் செய்து சுற்றுகிறார். காரணம் அவர் ஒரு உயர் போலீசு அதிகாரி.

சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டு ரவீந்திரநாத் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாத உள்துறை அமைச்சர் ஜார்ஜ் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடாததை அதற்கு காரணமாக சொல்லியிருக்கிறார். அவரை எப்போது கைது செய்வீர்கள் என்று கேட்டதற்கு காவல்துறை உயரதிகாரிகள் நானில்லை, நீயில்லை என்று தப்பித்துக் கொள்கின்றனர். ரவீந்திர நாத்தை நான்கு மாத மருத்துவ விடுப்பில் சென்று விசாரணையை எதிர்கொள்ளுமாறு முதல்வர் சீத்தாராமைய்யா அறிவுறுத்தியிருக்கிறார்.

ரவீந்திரநாத்தற்போது அவரது செல்பேசியை தடயவியல் துறையின் ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். சம்பவம் நடைபெற்ற ஆவ் பொன் பெய்ன் காபி ஷாப்பில் சிசிடிவி சரிவர வேலை செய்யாத காரணத்தால் என்ன நடந்தது என்பது சரியாக தெரியாவிட்டாலும், தடயவியல் துறை முடிவின் படி ரவீந்திரநாத் மாட்டிக் கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள் என அரசு தரப்பு அனைத்துமே காவல்துறை உயரதிகாரி என்பதற்காக ரவீந்திர நாத்தை பாதுகாக்க முனையும் போது காவல்துறையின் கீழ் இயங்கும் தடயவியல் துறை மாத்திரம் அவரை கைவிட்டு விடாதுதான் என்பதையும் மறுப்பதற்கில்லை. கடைசியில் குற்றவாளியே பாதிக்கப்பட்டவரைப் போல மாற்றப்படுவதுதான் இந்த சட்டம் மூலமாக நமக்கு கிடைக்கும் ‘நீதி’.

1990 ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ரவீந்திரநாத் ”பெங்களூரு மாநகர காவல்துறை ஆணயர் அரேட்கர் புலனாய்வு துறை டிஐஜி ஆக இருந்த போது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு டிஐஜி ஆக இருந்த என் மீது நக்சல் தொடர்பு இருப்பதாக தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார். விசாரணையில் அது தவறான குற்றச்சாட்டு என தெளிவாகவே இப்போது பெண்களை வைத்து என்னை சிக்க வைக்க பார்க்கிறார்” என்று அரேட்கர் மீது பழி போடப் பார்க்கிறார். இவரது குற்றச்சாட்டை அரேட்கர் மறுத்து விட்டார். அவருக்கு எதிராக துறையில் சதிவலை பின்னப்படுவதாக கூறும் அளவுக்கு இவர் அவ்வளவு ஒர்த் இல்லை என்பது ஒரு விசயம். அடுத்து இதுவே பாஜக-வின் வட இந்திய மாநிலங்களாக இருந்தால் இது பாகிஸ்தான் சதி, ஐஎஸ்ஐ பயங்கரம் என்று கூட இவர் சொல்லலாம்..

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் உறவினர்கள். அதில் ஒருவர் முன்னாள் பத்திரிகையாளர். தங்களது புகாரில் கூட அடையாளம் தெரியாத நபர் தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாட்டிக் கொண்ட பிறகு தன்னை நியாயப்படுத்துவதற்காக சதித்திட்டம் ஒன்று தன்னைச் சுற்றிப் பின்னப்படுவதாக கதை கட்டுகிறார் ரவீந்திரநாத். பாலியல் குற்றச்சாட்டில் கையும் மெய்யுமாக பிடிபடும் எல்லா ஆணாதிக்க பொறுக்கிகளும் தப்பிக்க முயலும் பல வழிகளில் இதுவும் ஒன்று.

பாலியல் அத்துமீறல் குற்றம் புரிந்துள்ள ரவீந்திர நாத்தின் தனிப்பட்ட செல்பேசி ஹைகிரவுண்டு போலீசிடம் இருந்த போதிலும் அவருக்கு வழங்கப்பட்ட துறை சார்ந்த செல்பேசியை கைதின் போது அவர் பயன்படுத்த முடிந்திருக்கிறது. சாதாரணமாக கைது செய்யப்படும் மக்களுக்கு வழங்கப்படும் உரிமை அல்ல இது. ஆனாலும் தனது சட்டையை கழற்றி சிறையில் அடைத்தார்கள் என்பதற்காகவே பொங்கியெழுகிறார் ரவீந்திரநாத். பெரும்பான்மை மக்களுக்கு காவல் நிலையத்தில் வழங்கப்படும் அதே ‘மரியாதை’யை அவருக்கு கீழிருக்கும் அதிகாரிகளே சில மணித்துளிகள் மட்டும் காட்டியதற்காகவே ரவீந்திர நாத் பொங்குகிறார். ஆனால் இதை விட கேவலமாகத்தான் மொத்த சாதாரண, நடுத்தர மக்களை அவர்கள் காலம் காலமாக நடத்தி வருகிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது பற்றிய இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்கின் முடிவில் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இது ரவீந்திர நாத் போன்ற போலீசார் விசயத்தில் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் சுதந்திரமாக அரசுப் பதவிகளில் நீடிக்கவும் முடிகிறது.

இந்த வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ரவீந்திரநாத் கோரியிருக்கிறார். அதாவது மாநில அளவில் விசாரணை நடந்தால் அவருக்கு நீதி கிடைக்காதாம். துறையில் நடக்கும் கூட்டுச்சதியில் அவர் பலிகடாவாகி விடுவாராம். இப்படி கோருவது சாமான்யர்களுக்கு சாத்தியமில்லை என்பது ஒருபுறமிருக்க, விசாரணையை இழுத்தடிப்பதற்காக அவர் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது. சிபிஐ விசாரணையெல்லாம் முடிந்து தீர்ப்பு வருவதற்கு எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்?

ஏதோ தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற தோன்றத்தை ஏற்படுத்திட முயல்வது தான் காலத்தின் கொடுமை. தன்னை நியாயப்படுத்துவதற்காக பல வழிகளிலும் முயல்கிறார் ரவீந்திரநாத்.

2013 டிசம்பரில் ஒரு இளம்பெண்ணும், தாயும் மூன்று இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டனர். அடுகோடி போக்குவரத்து காவல்நிலையத்தின் உள்ளே வைத்து இச்சம்பவம் நடைபெற்றது. அடித்தவர்கள் போலீசாரின் மகன்கள் என்பதால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மக்கள் போராடிய பிறகு உயர் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டுதான் வேறு வழியேயில்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டியதாயிற்று. ஆனால் இப்போது மாட்டியிருப்பவரோ மாநில அளவில் உயரதிகாரி. விசாரிப்பவர்கள் ஏறக்குறைய இவருக்கு சம அந்தஸ்திலோ அல்லது அதற்கும் சற்று குறைவான அந்தஸ்திலோ இருப்பவர்கள். நிச்சயமாக ரவீந்திர நாத் போன்ற பொறுக்கியை பாதுகாக்க தான் முயல்வார்கள். இந்த பாலியல் அத்துமீறல் செய்த பொறுக்கியை பிடித்து கொடுத்த மக்கள் இன்னும் தொடர்ந்து போராடினால் கூட ரவீந்திர நாத் போன்றவர்களை அரசாங்க தரப்பும் தண்டிக்காது.

இவ்வளவு வெட்டி நியாயம் பேசும் ரவீந்திரநாத் வழக்கை சட்டப்படி எதிர் கொள்ள ஏன் பயப்பட வேண்டும்? மாறாக என்னை விசாரிக்கவே கூடாது என்று ஏன் மிரட்ட வேண்டும்? போகட்டும், ஒரு குற்றவாளி அப்படி நடப்பது இயல்புதான் என்றால் அரசாங்கம் அவரை கைது செய்து உள்ளே தள்ளி வழக்கை நடத்த தயங்குவது ஏன்? இது என்ன ஜனநாயகம்?

சட்டமும், போலிஸ் துறையும், நீதித்துறையும் மக்களுக்கானதில்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறது. மக்களுக்கு மட்டும் சட்டத்தின் பார்வையில் தண்டனை, போலிசுக்கு இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

போலிசு ஆளும் வர்க்கத்தின் ஏவல் நாய் என்பதை இனியும் யாராவது மறுப்பீர்களா?

–    கௌதமன்.

பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !

13

பாசிசம் பெற்றுப் போட்ட இந்துமதவெறியர்களுக்கு ஜனநாயகத்தின் வாசனை அறவே பிடிக்காது.

பால்தாக்கரே மரணம் கைது
சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் கைது செய்யப்பட்ட பெண்கள்.

2012 நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம் பெண்களின் மீது 66A சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டதுடன் மட்டும் நில்லாமல் ஷாகினின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றும் சிவசேனா கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆட்சியில் இல்லாத காலத்திலேயே இப்படி அராஜகமாக நடந்து கொண்ட சிவசேனா போன்ற இந்துத்துவா பொறுக்கி கும்பல்கள் இப்போது நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சிக்கு வந்திருப்பதால் கள் குடித்த குரங்கின் நிலைமைக்கு வந்துள்ளனர்.

மோடி பதவியேற்கும் வைபவத்திற்கு முன்னதாகவே கோவா மாநிலத்தில் ஒருவர் மீதும், பெங்களூருவில் ஒருவர் மீதும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவாவில் குறி வைக்கப்பட்டிருப்பவர்  தேவு ஜோடங்கர், வயது 31, ஒரு கப்பல் கட்டுமான பொறியாளர். ஏறக்குறைய 47,000 பேர் கொண்ட Goa+ என்ற முகநூல் குழுவில் அவர் ஒரு உறுப்பினர். மார்ச் மாதம் 23-ம் தேதி முகநூலில் ஜோடங்கர் ஒரு பதிவினை இடுகிறார். “(கோவா) பரிக்கார் அரசின் தந்திரமான கொள்கைகள் மூலம் , குஜராத்தில் நடந்தது போன்ற ஒரு ஹோலோகாஸ்ட் நடப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று எழுதியிருந்தார். அதாவது மோடி ஆட்சிக்கு வந்தால் கூடவே ஒரு இன அழிப்பு நடவடிக்கையும் பின் தொடரும் என்றும், தெற்கு கோவா பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களின் தனித்த அடையாளங்களை அவர்கள் இழக்க வேண்டியதிருக்கும் என்றும் வர இருக்கும் அபாயத்தை குறிப்பிடுகிறார்.

இப்படி எழுதிய ஜோடங்கர் ஒரு பாஜக அனுதாபி என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்சி மோடியை பிரதமராக முன்னிறுத்துவதை பிடிக்காத அவர் இந்த தேர்தலில் பாஜக கட்சிக்காக வேலை செய்யவில்லையாம். பாஜகவில் இருக்கும் அனைவரும், பார்ப்பன பாசிச சித்தாந்தத்தை மனதார ஏற்றவர்கள் என்று கூற இயலாது. பல்வேறு காரணங்களால் அவர்கள் காவிப்படைக்கு சென்றாலும், சில நேரங்களில் விலகவே விரும்புகின்றனர். ஜோடங்கரும் அப்படி குஜராத் இனப்படுகொலையில் மோடியை மன்னிக்க முடியாதவராகவும், அதே நேரம் அவரில்லாத பாஜகவை ஏற்பவராகவும் இருந்திருக்கலாம். எனினும் இந்த முரண்பாடு இந்த தேர்தலில் ஒரு முடிவை நோக்கி சென்றதாக தோன்றுகிறது.

ஜோடங்கர் ஃபேஸ்புக் பதிவு
ஜோடங்கரின் ஃபேஸ்புக் பதிவின் மீது கிரிமினல் வழக்கு பதிவு

இந்நிலையில் ஜோடங்கரின் ஃபேஸ்புக் பதிவை  CII (Confederation of Indian Indutries) என்ற முதலாளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அதுல் பாய் கானே பார்வையிடுகிறார். அவர் இதனை பாஜகவுக்கு எதிரான பதிவாக பார்க்கவில்லையாம். மாறாக அப்பதிவு சமூக அமைதியை கெடுக்கும் வண்ணம்  இருப்பதாகவும், பாஜகவுக்கு ஓட்டுப் போடுபவர்களை மிரட்டும் வண்ணம் இருப்பதாகவும் படுகிறது என்று காவல்துறையிடம் கானே புகார் செய்யவே முதல் தகவல் அறிக்கை தேவு ஜோடங்கர் மீது பதிவு செய்யப்படுகிறது. இறுதியில் பாஜக தலைவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி அதுல் பாய் கானேவிடம் வேறு நோக்கமில்லை என்று தெரிகிறது. உண்மையிலேயே சமூக அமைதியை கெடுப்பது யார், குலைப்பது யார் என்று இந்த கைபுள்ளைக்கு தெரியாதாம். விட்டால் இஷ்ரத் ஜஹானா இல்லை குஜராத் முசுலீம் மக்களோ வாழ்க்கையை வெறுத்து விட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்று கூட இவர் பேசலாம். இல்லையெனில் அப்போதெல்லாம் இவரது அறச்சீற்றம் சீறிப்பாய்ந்திருக்கும் அல்லவா?

பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் கானேவின் புகாரை ஏற்றுக் கொண்ட பானாஜி வட்டார காவல்துறையினர், ஜோடங்கரின் முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றத்தில் எதிர்த்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விசாரணை நீதிமன்றம் கடந்த மே 23-ம் தேதி அவரது முன் ஜாமீன் மனுவையும் நிராகரித்து விட்டது. முதல் தகவல் அறிக்கையில் ஜோடங்கர் மீது 153 A, 295 A ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125-ன் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66A-ன் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகள் ஆகும். காவல்துறை விசாரணைக்கும், நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தற்போது தலைமறைவாக இருக்கும் ஜோடங்கர் தனது பதிவில் உள்ள சில அதீத வார்த்தை பிரயோகங்களுக்காக பதிவை அழித்து விட்டார். எனினும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை இன்னொரு வலைத்தள குழுவான Goa Speaks-ல் தெரிவித்துள்ளார்.

மே 24-ம் தேதி இவருக்கு ஆதரவாக தலைநகர் பானஜியில் சில மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துறை தலைமையகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தினர். மும்பை பகுதி முன்னாள் ஐஐடி மாணவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். ‘இன்றைக்கு ஜோடங்கர் மீது கைது நடவடிக்கை எனில் நாளை நமக்கும் இதுதான் கதி’ என்று அவர்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். சில எதிர்க்கட்சிகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன.

சையத் அகமது வாக்கஸ் பர்மாவர்
சையத் அகமது வாக்கஸ் பர்மாவர்

பாஜக முதல்வர் பாரிக்கரோ ”இந்த வழக்கிற்கும் பாஜக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உச்சநீதிமன்ற வழிகாட்டல் படி காவல்துறையினர் சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர். நீதிமன்றமும் அது சரி என தீர்ப்பளித்துள்ளது. முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தான் நிராகரித்துள்ளது” எனக் கூறி சட்டவாதம் மூலமாக ஜனநாயக விமரிசனங்களுக்கெதிரான தனது அரசு காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார். பாபர் மசூதி இடிப்பு போன்ற சட்டவிரோதங்களை பெருமையாக கருதுபவர்கள் இங்கே சட்டத்திற்காக பேசுகிறார்களா, விமரிசனமற்ற சர்வாதிகாரத்திற்காக பேசுகிறார்களா என்பதை உலகமே அறியும்.

சைபர் க்ரைம் பிரிவை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் ஜாப் ”இவர்கள் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்டி சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்க முயன்றதால் காவல்துறை விசாரணை அவசியம்.” என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். மேலும் அவரிடமிருந்து கணினி சம்பந்தப்பட்ட விசயங்களை கைப்பற்ற வேண்டியுள்ளது என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய ஜோடங்கரை தப்பி ஓடும் தீவிரவாதி போல அரசும், நீதிமன்றமும், போலீசும், பாஜக சார்பு முதலாளிகளும் சேர்ந்து சித்தரிக்க முயல்கின்றனர். இதுவே குஜராத்தாக இருந்தால் என்கவுண்டரே நடந்திருக்கும் போல.

கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சிதான். எனினும் இங்கே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அந்த பயம் ஆளும் காங்கிரசு கட்சிக்கு இருக்கிறது என்பதை இந்த செய்தி காட்டுகிறது. பெங்களூருவில் தான் அனுப்பிய எம்.எம்.எஸ் செய்திக்காக இங்கு கைதாகி இருப்பவர் 24 வயதான சையது வாக்கஸ் பர்மாவர். கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பட்கலை சேர்ந்த இவர் ஒரு எம்.பி.ஏ மாணவர். இவரது தந்தை சமிமுல்லா பர்மாவர் கர்நாடகத்தின் பிரபலமான உருது கவிஞர். வாக்கஸ், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த அடையாளங்களைத் தாண்டி அவர் ஒரு முசுலீம் என்பதே காவல்துறைக்கு போதுமான ஒன்று.

இவர் கடந்த மே 16 அன்று தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது தனக்கு வந்த எம்.எம்.எஸ் ஐ தனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறார். அந்த எம்.எம்.எஸ் இல் பாஜகவின் தேர்தல் முழக்கமான ‘அப் கி பார் மோடி சர்க்கார்’ என்பதைக் கொஞ்சம் மாற்றி ‘அப் கி பார் அந்திம் சன்ஸ்கார்’ என எழுதியிருந்ததாம். இதன் பொருள் ‘இந்தமுறை மோடி ஆட்சி” ‘ என்பதற்கு பதிலாக ‘இந்த முறை (மோடிக்கு) இறுதி அஞ்சலி’ என்பதே. கூடவே மார்ஃபிங் முறையில் மோடியை பிணமாக காட்டி ஒரு இறுதிச்சடங்கு நடப்பதாகவும் அதில் பாஜக மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொள்வதாகவும் காட்டியிருந்ததாம். இந்த காட்சி வாட்ஸ் ஆப் எனும் செல்பேசி வலைப்பின்னல் மூலமாக ஜெயந்த் முகுந்த தினேகர் என்ற பாஜகவின் தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலருக்கும் சென்றிருக்கிறது.

இந்துமதவெறியர்கள் கொன்ற சிறுபான்மை மக்களின் இரத்தம் இன்னும் காயாத நிலையில் மோடி குறித்த இந்த கற்பனையைக் கூட இவர்கள் சகித்துக் கொள்வதில்லை.

உடனே இதனை தில்லியிலுள்ள மூத்த பாஜக தலைவர்களுக்கு அவர் அனுப்பி வைத்தாராம். அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அவரை புகார் தரச் சொன்னார்கள். பங்காளி ஜெயாவுக்கு ஆதரவாக கர்நாடக நீதித்துறையின் பெரும்பகுதி செயல்படும் போது பாஜகவிற்கு மட்டும் கர்நாடகம் ஏமாற்றி விடுமா என்ன? புகாரை, பெல்காம் சைபர் கிரைம் போலீசாரிடம் தினேகர் கடந்த 22-ம் தேதி அளித்தார். பெங்களூருவில் உள்ள வசந்த் நகரில் நண்பர்களுடன் தங்கியிருந்த வாக்கஸை கைது செய்த போலீசார், அறையில் தங்கியிருந்த ஏனைய இசுலாமிய நண்பர்களையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். மத்திய புலனாய்வு துறையினர் அறையில் சோதனை நடத்தினர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505-ன் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66A-ன் கீழும் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்வதற்காக போலீசார் இவரது செல்பேசியை தொடர்ந்து கண்காணித்து வந்தார்களாம். இல்லையெனில் ‘இத்தீவிரவாதிகள்’ பாகிஸ்தானுக்கோ இல்லை வங்கதேசத்திற்கோ ஓடிவிடுவார்கள் இல்லையா?

வாக்காஸ் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யாவிடில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்கிறது ஆம் ஆத்மி கட்சி. இவரது கைதுக்கு கர்நாடகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. போலீசாருக்கும் உண்மையில் இந்த எம்.எம்.எஸ் ஐ உருவாக்கியது யார் என கண்டுபிடிக்க முடியாத நிலைமைதான் தற்போது வரை நீடிக்கிறது. அதனால் பழியை வாக்காஸ் மீது போட்டு வழக்கை முடித்து விட நினைக்கிறது.

யூ ஆர் அனந்தமூர்த்தி
யூ ஆர் அனந்தமூர்த்தி

இந்த இரண்டு கைது நடவடிக்கைகளும் மோடி பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னரே நடந்துள்ளன. இனி வரும் காலங்களில் பாஜக வின் பாசிச ஆட்சியின் கீழ் பல கைது நடவடிக்கைகளை புரட்சிகர-ஜனநாயக-மதச்சார்பற்ற அமைப்புகள் மட்டுமல்ல, ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதற்கு இவை கட்டியம் கூறுகின்றன. கார்ப்பரேட் ஊடகங்கள் எல்லாம் மோடி பின்னால் கொடி பிடித்து அணிவகுக்கும் போது வாய்ப்பற்ற மக்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் ஓரளவுக்கு இவர்களை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். அதை ஒழிக்கவே இந்த கைது நடவடிக்கைகள்.

கர்நாடகாவில் எழுத்தாளர் யூ ஆர் அனந்தமூர்த்தி, “மோடி வெற்றி பெற்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று தேர்தலுக்கு முன்னர் சொன்னதை வைத்து இந்துமதவெறியர்கள் அவரை உண்மையிலேயே விரட்டுவதற்கு முயன்று வருகின்றனர். அவர்களது சித்திரவதை தாங்காமல் அனந்தமூர்த்தியும் தெரியாமல் சொல்லி விட்டதாக பின்வாங்குகிறார். மோடியின் வெற்றி இந்தியாவுக்கு நல்லதல்ல என்பதைக் ஒரு குறியீடாகக் கூட சொல்வதற்கு ஒருவருக்கு உரிமையில்லையா? அதுவும் இதில் அனந்தமூர்த்தி தனக்குத்தான் தண்டனை  கொடுக்கிறாரே ஒழிய மோடியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. இதையே இந்துமதவெறியர்கள் கடுஞ்சினத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மற்றவர்களின் நிலை என்ன?

ஆகவே பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்திற்கு பாடை கட்டும் வரை இந்தியாவில் அமைதியோ, ஜனநாயகமோ, கருத்துரிமையோ எதுவும் நீடிக்கப் போவதில்லை. இந்த கைதுகளை கண்டிப்போம், காவிகளை முறியடிப்போம்!

–    கௌதமன்

மேலும் படிக்க

பேராசிரியர்களுக்கு புதிய ஜனநாயகம் அவசியமா ?

4

திருச்சியில் புதிய ஜனநாயகம் வாசகர் வட்டக் கூட்டம் !

திருச்சி பகுதி புதிய ஜனநாயகம் வாசகர் வட்டம் 21.05.2014 புதன்கிழமை மாலை 7 மணியளவில் பு.ஜ. விற்பனைக்குழு தோழர் சேகர் தலைமையில் திருச்சி ஸ்ருதி மஹாலில் நடைபெற்றது. இதில் பல வாசகர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கூறினர். ஒரு பேராசிரியர், “நான் பாடம் நடத்தும் போது பு.ஜவில் படித்த கட்டுரைகளை எனது மாணவர்களுக்கு கூறுவேன். அவர்களிடமும் இப்பத்திரிக்கையை கொடுத்து படிக்க வைப்பேன். ஒரு ஆங்கில நாளிதழில் அருந்ததிராய் கூறியது என் நினைவிற்கு வருகிறது. பத்திரிக்கைகளின் 90% லாபம் விளம்பரங்களின் மூலம்தான் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பு.ஜ எந்த விளம்பரங்களும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக வருவது ஆச்சரியமாக இருக்கிறது. பு.ஜ.படித்துதான் அரசியல் கற்றுக் கொண்டேன். இதுவரை தேர்தலில் ஓட்டுப் போடவில்லை. எனது மாணவர்கள் சிலரையும் தேர்தலை புறக்கணிக்க செய்துள்ளேன்” என்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். வாசகர்களின் கேள்விகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய தோழர் காளியப்பன் கூறியதாவது:

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை ஜெயலலிதா தனது தேவைக்கேற்ப வளைக்கிறார் என்பது ஒருபுறமிருக்க நீதிமன்றங்களே வளைந்து கொடுக்கின்றன என்பதே உண்மை. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெறும் முறை அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை துல்லியமாக மெய்ப்பிக்கிறது. ஏழை-பணக்காரன், தொழிலாளி-முதலாளி, கீழ்சாதி-மேல்சாதி என இரு கூறாகப் பிளவுபட்டிருக்கும் சமுதாயத்தில் அரசு என்பது நடுநிலையானதாக இருக்க முடியாது. சொத்துடைமை வர்க்கத்தை காக்க பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு பலாத்கார நிறுவனமே அரசு. போலீசும், நீதிமன்றமும் அத்தகைய பலாத்கார அமைப்புகளேயன்றி எல்லோருக்கும் நடுநிலையாக நின்று நீதி வழங்கும் அமைப்புகளல்ல. மக்கள் போராட்டங்களின் காரணமாக ஒரு சில தவிர்க்க முடியாத நேரங்களில் நடுநிலை வகிக்கும்படி நிர்பந்திக்கப் படுகின்றன, அவ்வளவே. உதாரணத்திற்கு சமச்சீர்கல்வி வழக்கில் தமிழக மாணவர்களின் போராட்டம்தான் சாதகமான தீர்ப்பை தந்தது.

70-களில் தொழிற்சங்கங்களின் வலிமையும் போராட்டங்களும்தான் தொழிலாளிகளுக்கு ஆதரவான தீர்ப்புகளை பெற்றன. இன்று கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாகவே நீதிமன்றங்கள் மாறி விட்டன.

பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது போல் சலுகைகளும், வாய்தாக்களும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் என கற்பனை கூட செய்ய முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்த சட்டத்தின்படியோ அரசு வழக்குரைஞரையும், விசாரணை நீதிபதியையும் குற்றவாளி தீர்மானிக்க முடியாது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த உரிமையை ஜெயலலிதாவுக்கு வழங்கியதோடு இதை முன்னுதாரணமாகக் கொண்டு வேறு யாரும் கோரமுடியாது என ஜெயாவிற்கு மட்டும் தனிச்சட்டம் போட்டது. வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடந்திருந்தால் அந்த நாடே கொந்தளித்திருக்கும்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா செய்தது கிரிமினல் குற்றம் என்று ஒத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் அவரை இதற்காக தண்டிக்க முடியாது எனக் கூறி, ஜெயலலிதாவே கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்த அதிசயம் வேறு எந்த நாட்டிலும் நடக்க முடியாதது. பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தை சூறையாடிய சகாரா குழும முதலாளி சுப்ரதாவுடன் பேரம் பேசும் நீதிமன்றம், சிறு குற்றமிழைக்கும் சாதாரண மக்களை எவ்வளவு கொடுமைப் படுத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

நீதிமன்ற தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் எல்லா நிலைகளிலும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதை எளிதாக உணரலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 70% பேர் உயர்சாதி பார்ப்பனராக உள்ளனர் என்பது மட்டுமல்ல, பகுத்தறிவுச் சிந்தனையற்றவர்களாகவும், பார்ப்பன சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். ஒரு புராண கட்டுக்கதையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சு.சாமி தொடுத்த வழக்கை ஏற்றுக் கொண்டு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் முடக்கியதைக் கொண்டே இவர்களின் யோக்கியதையை அறிய முடியும். உழைக்கும் மக்களின் அதிகாரம் நிலைநாட்டப்படும் போதுதான் உழைக்கும் மக்களுக்கு நியாயமும், ஜனநாயக உரிமைகளும் கிட்டும் எனக்கூறி தோழர் காளியப்பன் தனது உரையை முடித்தார்.

அடுத்து ½ மணி நேரம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. வாசகர்களின் அரசியல் உணவை தட்டியெழுப்பும் வகையில் தோழர்கள் பாடல்களை பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இறுதியில் பு.ஜ விற்பனைக்குழு தோழர் ஜோசப் நன்றி கூறினார்.

செய்தி:
பு.ஜ விற்பனைக்குழு,
திருச்சி