Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 658

‘வளர்ச்சி’ – போக்குவரத்து துறையை முன்வைத்து ஓர் ஆய்வு

14

நுண்ணறிவு போக்குவரத்துத் துறை என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி,  கடந்த ஆண்டுகளின் நிகழ்ச்சிப் போக்கு தொடர்ந்தால் 2020-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை 5.61 கோடியாக இருக்குமாம். இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி 1 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரத்து 433 வாகனங்கள் தமிழகத்தில் இயங்குகின்றன. அதாவது தமிழக மக்கள் தொகையில் 4 பேருக்கு ஒன்று என்ற வீதத்தில் வாகனங்கள் ஓடுகின்றன. 1993-ல் 13.91 லட்சமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2013-ல் 1.4 கோடியாக  (10 மடங்கை விட அதிகம்) அதிகரித்திருக்கிறது.

சென்னை வாகன நெருக்கடி
சென்னை வாகன நெருக்கடி

சென்னையில் மட்டும் 41 லட்சத்து 61 ஆயிரத்து 790 வாகனங்கள் இயங்குகின்றன. அதாவது சென்னையில் கிட்டத்தட்ட இரண்டு பேருக்கு ஒரு வாகனம் ஓடுகிறது.

2011-12-ம் ஆண்டில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 16.35 லட்சம் (அரசுக்கு சொந்தமான வாகனங்கள் 1.38 லட்சம் மட்டும் பதிவாயின). இதில் இரு சக்கர மற்றும் கார்களின் எண்ணிக்கை மட்டும் 16.06 லட்சம். இதனை 1993-ல் தமிழ்நாட்டில் ஓடிய மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 13.91 லட்சத்தோடு ஒப்பிட்டுப்  பார்க்கலாம். 1993 வரை பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த வாகனங்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் 2011-12 ஒரே ஆண்டில் சாலையில் இறக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் இறக்குமதிக்கான அன்னிய செலாவணி பிரச்சனை, சூற்றுச் சூழல் மாசுபடுதல், வேலைஇழப்பு, உடல்நலக் கேடு என்ற பல பிரச்சனைகளுக்கு உரம் போட்டு வளர்க்கும் இந்த நிலைமை, பொதுப் போக்குவரத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டி, பல வகை வெளிநாட்டு கார், பைக் ரகங்களை அனுமதித்து, எல்லோரையும் சொந்த வண்டியில் போக வைத்த தனியார் மய, தாராள மய, உலகமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உருவானது.

சென்னையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 42 சதவீதமாக இருந்த பேருந்து, தொடர்வண்டி பயணிகளின் எண்ணிக்கை தற்போது 31 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு இணையாக பொதுப்போக்குவரத்து நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வழித்தடங்கள் பலவற்றை நிறுத்தியுள்ளனர். 2008-ல் 3,260 ஆக இருந்த சென்னை பேருந்துகளின் எண்ணிக்கை, 2012-ல் 3,637 ஆக உயர்ந்து பின்னர் 2013-ல் 3365 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது, தன்னை ‘வாழ வைத்த’ பன்னாட்டு கார்/பைக் நிறுவனங்களுக்கு அம்மா செலுத்திய நன்றிக் கடன் என்றும் சொல்லலாம்.

இரு சக்கர வாகனங்கள்
சென்னை சாலைகளை நிறைக்கும் இரு சக்கர வாகனங்கள்

2008-ல் 47.76 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2010-11-ல் 55 லட்சமாக உயர்ந்து பிறகு 2012-13-ல் 48 லட்சமாக குறைந்தது. அதாவது 6 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்து பெருகி வரும் நகரத்தின் தேவைகளுக்கேற்ப வளரவில்லை. பேருந்து கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், பச்சை வண்ண எக்ஸ்பிரஸ் வண்டிகள் மற்றும் குளிர்சாதன வசதியுள்ள வண்டிகள் என பேருந்துகளை எளிய மக்களிடமிருந்து பிரிக்கும் வேலையை அரசு செய்து வந்துள்ளது.

அரசு பேருந்துகளுக்கு ஆண்டுக்கு ரூ 80 ஆயிரம் வரை வரி வசூலிக்கும் அதே வேளையில் கார்களுக்கோ ஆயுட்கால வரி ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிக்கிறது அரசு.

‘இந்தியாவில் கார் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், ஏற்றுமதி மூலம் அந்நிய செலவாணி அதிகரிக்கும்’ என்று வாதிட்டு சென்னையை அடுத்துள்ள சிறு நகரங்களில் ஃபோர்டு, ஹூண்டாய், நிசான் என்று வரிசையாக அன்னிய கார் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அடுத்தடுத்து மாநிலத்தை ஆண்ட கருணாநிதியும், ஜெயாவும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டனர். அதன்படி குறைந்த விலையில் நிலம், பல ஆயிரம் கோடி ரூபாய்  மதிப்பிலான வரிச்சலுகை, மானிய விலையில் தடையில்லா மின்சாரம், வரம்பின்றி நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி என சலுகைகளை வாரியிறைத்தார்கள். குடியிருந்த மக்களை, அரசே சொந்த பொறுப்பில் மிகக்குறைந்த நட்ட ஈடு தந்து வெளியேற்றியது. ஹூண்டாயும், ஃபோர்டும் வந்த பிறகு அப்பகுதியினை தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்றார்கள்.

உலகில் மிகப்பெரிய மோட்டார் வாகன தொழிற்சாலைகளில் 7 சென்னையில் அமைந்துள்ளன. ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ போன்ற கார் கம்பெனிகள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் துவங்கப்பட்டிருந்தன. 2007 இறுதியில் மலேசியாவை சேர்ந்த நாஸா ஆட்டோமோட்டிவ் நிறுவனம் ரூ 1,200 கோடி மதிப்பில் இப்பகுதியில் பட்ஜெட் வகை கார் உற்பத்தியை துவங்கியது. மகிந்திரா அண்டு மகிந்திரா செய்யாறில் தனது யூனிட்டை துவக்கியது. நிசான் நிறுவனம் படப்பையில் கார் உற்பத்தி செய்து வருகிறது.

சென்னை - தென்னிந்தியாவின் டெட்ராய்ட்?
சென்னை – தென்னிந்தியாவின் டெட்ராய்ட்?

2012-ல் ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் ஓரகடத்தில் தனது ஆலையை அமைத்தது. அதில் பேசிய முதல்வர் ஜெயா இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களில் 30 சதவீதம் சென்னையில் உற்பத்தியாவதாக குறிப்பிட்டார். சென்னையில் நிமிடத்திற்கு 3 கார்களும், 75 விநாடிகளுக்கு ஒரு சரக்கு வாகனமும் உற்பத்தியாவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அரசுக்கு இந்நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய், கொடுத்த சலுகைகளை விட மிகவும் குறைவு என்பதை பல்வேறு புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை இந்நிறுவனங்களில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சிபெறுபவர்கள் என்ற பெயரில் நிரந்தர பணி இன்றி குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.

இங்கு பன்னாட்டு கம்பெனிகள் தென்னிந்தியாவின் டெட்ராய்டை உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில்தான் உண்மையான அமெரிக்க டெட்ராய்டு ஆளரவமற்ற பகுதியாக மாறத் துவங்கியது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி முற்றி பல லட்சம் மக்கள் வேலை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக திரிந்து கொண்டிருந்தனர். இந்நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வாகனங்களுக்கான சந்தைத் தேவை வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் சென்னையில் தயாரான கார்களை ஏற்றுமதி செய்ய இயலவில்லை; அந்நியச் செலவாணியும் கிட்டவில்லை.

மாறாக, இங்கு ஏற்றுமதிக்காக தயாரான கார்களை உள்நாட்டிலேயே விற்கத் துவங்கினர். ஆரம்பம் முதலே இங்கு கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நோக்கமே இந்திய நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து தமது கார்களை விற்பதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வர்க்கத்தினருக்குக் கூட வங்கிக் கடன், மாத தவணை என்ற பெயரில் இந்தக் கார்கள் திணிக்கப்பட்டன. குறைந்த சம்பளம் வாங்குபவர்களும், கார் நிறுத்த இடம் இல்லாதவர்களும் கூட கார் வாங்க வைக்கப்பட்டனர். இதனால் நாடு அதிகளவில் பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று.

விற்கப்படாத கார்கள்
ஐரோப்பாவில் விற்கப்பட காத்திருக்கும் கார்கள்

2001-ம் ஆண்டு ஒரு நாளைக்கு 2,200 பேரல் கச்சா எண்ணெய் பயன்படுத்தி வந்த இந்திய பொருளாதாரம் 2011-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 3,400 பேரல்கள் பயன்படுத்துவதாக மாறியது. அதாவது, 10 ஆண்டுகளில் எண்ணெய் பயன்பாடு சுமார் 50% அதிகரித்திருக்கிறது. இது 1990-களுக்கு முன்பு ஒரு நாளைக்கு 1,000 பேரலுக்கும் குறைவாக இருந்தது. புதிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளில் எண்ணெய் இறக்குமதி அளவு 6 மடங்கு அதிகரித்திருக்கிறது; இதனால் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னியச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறி நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 2006-07ம் ஆண்டு ரூ 2.65 லட்சம் கோடியாக இருந்த பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி 2011-12-ல் ரூ 5.2 லட்சம் கோடியாக (இரு மடங்கு) அதிகரித்திருக்கிறது.

கார் உற்பத்தியில் வேலை வாய்ப்பு, கார் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி என்று பசப்பி அமல்படுத்தப்பட்ட தனியார் மய கொள்கைகள், உள்நாட்டில் வாகனங்களை அதிகரிப்பதன் மூலம் பெட்ரோல்/டீசலுக்கு அன்னிய செலாவணி விரயம், சுற்றுச் சூழல் பாதிப்பு, போக்குவரத்து நெருக்கடி, உடல் மற்றும் மன ரீதியான புதிதுபுதிதான நோய்கள் எனப் பிரச்சினைகளை அதிகரிக்கவே இந்த நவீன தென்னிந்திய டெட்ராய்டு உதவியது.

மாநகரங்களில் வாகன நெரிசலில் சிக்கி மக்கள் அதிகம் அவதிப்படுவது தினந்தோறும் அதிகரித்து வருகிறது. 1996-ல் சதுர கிமீக்கு 22 ஆக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 2004-க்குள் 52 ஆகப் பெருகி தற்போது இன்னும் அதிகரித்திருக்கிறது.

இரண்டு கார்கள் அடைத்துக் கொள்ளும் இடத்தில் ஒரு பேருந்து சுமார் 60 முதல் 100 பேருடன் பயணிக்க முடியும். எப்படி இருந்தாலும் காற்றை மாசுபடுத்தும் பிற வாகனங்களிலிருந்து 5 முதல் 50 வரையிலான எண்ணிக்கையை ஒரு பேருந்தினால் குறைக்க முடியும்.

அதிகரித்துக் கொண்டே வந்த வாகன எண்ணிக்கையினால் நகர்ப்புறங்களில் காற்று மாசுபடுதல் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. 2013 ஆகஸ்டில் வெளியான சிஎஸ்சி அமைப்பின் சர்வே படி சென்னையில் காற்றில் 10 மைக்ரோ மீட்டருக்கு குறைவான துகள்களின் அளவு 2007-ல் கன மீட்டருக்கு 32 மைக்ரோ கிராமாக இருந்து 2011-ல் 94 மைக்ரோகிராம் ஆக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இத்தகைய நுண்துகள்கள் மூச்சு விடுதல், நுரையீரல் தொடர்பான வியாதிகளை அதிகரிக்கின்றன.

வாகன நெரிசலும் காற்று மாசுபடுதலும்
அதிகரிக்கும் வாகன நெரிசல் காற்று மாசுபடுதலை மோசமாக்கியிருக்கிறது.

இதே கால கட்டத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு கன மீட்டருக்கு 9 மைக்ரோ கிராமிலிருந்து 24 மைக்ரோ கிராமாக அதிகரித்திருந்தது. நுண்துகள் மாசுபடுத்தலில் 14 சதவீதமும், நைட்ரஜன் ஆக்சைடில் 68 சதவீதமும் வாகன புகை மூலமே வெளிப்படுவதாக சென்னை ஐஐடியின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கனமீட்டரில் 2.5 மைக்ரோ மீட்டருக்கு குறைவான அளவுள்ள துகள்களில் 35 சதவீதம் வாகனங்களில் இருந்து வெளியாகின்றன. கொல்கத்தா (150), டெல்லி (100) க்கு அடுத்தபடியாக சராசரியாக தனிநபர் சுவாசிக்கும் வாகனப்புகையின் அளவு அதிகமாக இருப்பது சென்னையில்தான் (72). உண்மையில் வாகனங்களால் ஏற்படும் மாசு அதிகமாகவே இருந்தாலும்  நீண்ட கடற்கரை காரணமாக வாகனப் புகை அடர்த்தி குறைக்கப்படுகிறது.

தமிழகத்தில் இறப்பவர்களின் ஐந்தில் ஒருவர் சுற்றுப்புற காற்று மாசுபடுவதால் இறப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக கார்களை விற்பதன் மூலம் தனியார் மருத்துவ சேவைகளுக்கான தேவையை உருவாக்கி சந்தையை விரிவுபடுத்தியிருக்கின்றது இந்த மக்கள் விரோத மோசடி பொருளாதாரக் கொள்கை. சென்னையிலும் பிற நகரங்களிலும் சில ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கும் பல தனியார் மருத்துவமனைகள் முளைத்துள்ளன.

காற்று மாசுபடும் வீதம், அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 முதல் 2.42 மடங்கு வரை சமயங்களில் அதிகரித்திருந்ததும் தெரிய வந்தது. குறிப்பாக மணலி, கத்திவாக்கம், திருவெற்றியூர் பகுதிகளில் மாசு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கத்திப்பாரா, அண்ணா சாலை, ஆலந்தூர் சாலையில் காற்று மாசுபடுவது அதிகமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் முதலிடத்தில் வடக்கு உஸ்மான் சாலை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

பெட்ரோல் கார்களது மாசுபடுத்தும் துகளின் அடர்த்தியானது டீசல் காரை விட பத்து மடங்கு குறைவுதான். இஞ்சினுக்கு தக்கபடி 504 முதல் 592 கிராம் வரையிலான கார்பன் டை ஆக்சைடு வாயுவை கார்கள் வெளியேற்றுகின்றன. ஆனால் பெட்ரோலுக்கு அதிக விலை என்பதால் நாட்டின் அன்னிய செலவாணியை பறிகொடுப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். மேலும் கார்களில் ஒரிருவர் செல்வதால் நூற்றுக்கணக்கான கார்கள் ஏற்படுத்தும் மாசுபடுதலை விட நூற்றுக்கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் உருவாக்கும் மாசு குறைவுதான். எனவே பெட்ரோல் நல்லது, டீசல் கெட்டது என்ற பார்வையும் தவறுதான்.

தனியார் மயம், தாராள மயம், உலகமயம் தான் பிரச்சனை
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் தான் பிரச்சனை

அடிப்படை பிரச்சனையான தனியார் மய, தாராள மய, உலகமய பொருளாதார கொள்கைகளை சரி செய்யாமல் புற்றுநோய் வந்தவருக்கு தலைவலி தைலம் தேய்த்து விடுவது போல வாகனங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சீர்செய்ய நடவடிக்கைகளை எடுக்கிறது அரசு. நகரத்தின் பாதி வாகனங்களே அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாசினை வெளியிடுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 2 ஸ்டிரோக் வாகனங்களது பயன்பாட்டை தடுத்தல், சரக்கு வாகனங்களை பகலில் நகருக்குள் வர விடாமல் தடுத்தல், பார்க்கிங் வசதியை முறைப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இதனை சரிசெய்ய முயல்கிறது அரசு.

ஆனால், முதலாளித்துவ அராஜக உற்பத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வாகன பெருக்கம் பிரச்சனைகளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாலைகளின் எண்ணிக்கை, பாலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இப்பிரச்சினையை தீர்க்கலாம் என்றொரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லியில் இம்முறையினால் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதுடன், மணிக்கு 15 கிமீ வேகத்தில்தான் வாகனங்கள் முக்கிய நேரங்களில் நகர்கின்றன. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழகத்தில் ஒரு நாளில் பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை 4,000, புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களது எண்ணிக்கை 3,666. புதிதாக வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது 10 சதவீதமாக உயரும் எனத் தெரிகிறது.

சென்னையில் 7 சதவீதமாக இருந்த இருசக்கர வாகன பயன்பாடு தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1.5 சதவீதமாக இருந்த கார் பயன்பாடு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னர் 1991-ல் ஒரு வீட்டுக்கு 0.25 என்ற வீதத்திலான வாகன எண்ணிக்கை தற்போது 1.25 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே வாகன நெருக்கடியும் காற்று மாசுபடுதலும் அதிகமான மெக்சிகோ நகரத்தினை விட சென்னையில் மோட்டார் வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலக நேரத்தின் போது சில சாலைகளில் மணிக்கு 11-12 கிமீ வேகத்தில்தான் வாகனங்களில் பயணிக்க முடிகிறது.

அராஜக உற்பத்தி
முதலாளித்துவத்தின் திட்டமிடாத அராஜக உற்பத்தி தாக்குப் பிடிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

செல்பேசி குறுஞ்செய்திகள், டிஜிட்டல் ஃபோர்டுகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு முன்னரே நெரிசல் பற்றிய தகவல் தந்து விட்டால் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நெரிசலுக்குள்ளான சாலையை தவிர்த்து விடுவார்கள் என்றும் தீர்வு சொல்கிறார்கள். ஆற்றின் குறுக்கே அபாயகரமான ஆழத்தை அறிவிக்க வைத்திருக்கும் தூண் குறித்த காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது. (அதாவது அபாயகரமான ஆழத்தின் மட்டத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த தூண் தண்ணீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டியவுடன் நீரில் மூழ்கி விடும். புதிதாக வருபவர் அதனை பார்க்க முடியாது).

நகர, மாநகரங்களில் உள்ள மக்கட்தொகைக்கேற்ப பதிவு செய்யப்படும் வாகன எண்ணிக்கையை மட்டறுக்க வேண்டும் என்று தீர்வு முன் வைக்கப்படுகிறது. இத்தகைய அரைகுறை தீர்வுகளும் கூட தமது போதாமையால், ‘சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் கடவுள்’ என்ற உலகமய தாசர்கள் முன் வைக்கும் முதலாளித்துவ கோட்பாட்டை நிராகரித்து சமூக அளவிலான திட்டமிடலை கோருகின்றன.

கடன் வாங்கி கார் வாங்கி, தவணை கட்டத் தவறியவர்களை ஆள் வைத்து மிரட்டி அதிகமாக பணம் பறிப்பது போன்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இதுதான் இரு சக்கர வாகனங்களும், கார்களும் அதிகரித்த பிறகு நாடு அடைந்திருக்கும் சமூக வளர்ச்சி. தென்னிந்தியாவின் டெட்ராய்டு அடைந்துள்ள பிரமிப்பூட்டும் ‘வளர்ச்சி’.

ஒருக்கால் அரசு நடத்தும் பொதுப்போக்குவரத்துக்குரிய வசதிகளை மேம்படச் செய்தால் பேருந்துகள், ரயில்கள் மூலம் அனைவரும் விரைவில் பயணிக்கலாம் எனும் நிலைமை உருவாகும். இதன் மூலம் எரிபொருள் இறக்குமதியை குறைத்து அன்னிய செலவாணியை பாதுகாக்கலாம். மாறாக கார்களின் உற்பத்தி என்பது இந்தியாவின் வளங்களை மாசுபடுத்தி, நிதியாதாரத்தை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் இலாபத்தை கொள்ளையடித்து செல்வதற்கே பயன்பட்டு வருகிறது.

இதுதான் ‘வளர்ச்சி’ என்றால் நாம் இதை தற்கொலை என்றே அழைக்க வேண்டும். உலகமயத்தின் புதிய பொருளாதாராக் கொள்கை இப்படித்தான் போக்குவரத்து எனும் ஒருதுறையிலேயே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.

நாடு, மக்கள் நலனை  கருத்தில் கொண்டு, சந்தை விதிகளை தகர்த்து, சோசலிச முறையிலான திட்டமிட்ட உற்பத்தியை அமல்படுத்துவதுதான் இதற்கு தீர்வு என்பதை இப்போதாவது ஏற்கிறீர்களா?

–    அப்துல்

மேலும் படிக்க

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

29

வுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை.

ரொகிங்கியா மக்கள்
ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ரொகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரொகிங்கியா இன மக்கள் மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியான்மரின் பூர்வகுடிகள் என்று கருதும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950-க்கு முன்புள்ள எந்த பர்மீய ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்று கூறி இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.

1948-ல்  ஆங்கிலேயர்கள்  மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.

உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ, அதே போன்றதொரு சம்பவம் 2012 மே மாதம் ரொகிங்கியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர் பவுத்த மத வெறியர்கள்.

ரொகிங்கியா அகதிகள்
ரொகிங்கியா அகதிகள்

பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன. மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.

அதே வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள். வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூ கீ ரொகிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 20 வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பவுத்த இனவெறியர்களையும், வன்முறைகளில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பவுத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
“ரொகிங்கியா இனப்படுகொலையை நிறுத்து”

இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல் பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள் 2012-ம் வருடத்திலிருந்து மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம்.  அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.

ரொகிங்கியா மக்கள்
மதவெறியால் வேட்டையாடப்படும் ரொகிங்கியா மக்கள்

நியூ யார்க் டைம்ஸ் இதழின் செய்தி கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். ”இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின் ‘ஜனநாயக’ அரசு.

இப்படி பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் பொது பல சேனா உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராஜபக்சே, மியான்மரில் பவுத்த பிக்குகள் உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராணுவ சர்வாதிகார கும்பல், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் உருவாகியிருக்கும் சமூக உளவியல் பலத்தில் பாஜக என்று நம்மை பாசிசம் சூழ்ந்து நிற்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளிடம் ஒற்றுமையை வளர்த்து இந்த நச்சு சூழலை வெட்டி வீழ்த்துவோம்.

–    கௌதமன்

விருத்தாசலத்தில் கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

1
  • அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு !

  • அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்கு!

 

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

7.6.2014, சனி
விருத்தாசலம்

govt-school-standard-protestமாநாடு – பேரணி
மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு

பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி
வானொலித்திடல், விருத்தாச்சலம்

பெற்றோர்களே சிந்திப்பீர்!

  • குடிநீருக்காக ரோட்டுக்கு வரும் அறிவார்ந்த பெற்றோர்களே
    அரசுப் பள்ளிக்காக போராடாமல் விட்டில் பூச்சிகளாய் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்?
  • காசுக்கான வேசியும் கட்டிய மனைவியும் ஒன்றா?
    கல்வி சேவை அளிக்கும் அரசுப் பள்ளிகளோடு
    கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒப்பிடுவதா!
  • ஆங்கிலவழியில் படித்துவிட்டா திருவள்ளுவர் 1330 குறள் படைத்தார்!
  •  தாய்மொழியில் சிந்தித்தவர்கள்தான் உலகின் தலைசிறந்த அறிவாளிகள்!
  • samacheer-kalviஉங்களுக்குத் தெரியுமா?
    அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 1 கோடியே 35 லட்சம்!

    அரசுப் பள்ளிகள் மொத்தம் 56,573!
  • தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம்
    தனியார் மெட்ரிக் பள்ளிகள் சுமார் 16,000
  • தனியார் பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த போராடுவதுதான்
    நிரந்தரத் தீர்வு!
  • கல்வியை
    அரசு இலவசமாக வழங்குகிறது
    தனியார் அதை காசாக்குகிறது

    எது சிறந்தது? எது வேண்டும்?
  • தனியார் பள்ளி தரம் என போகும் பெற்றோர்களே!
    உயர்கல்வி, வேலைவாய்ப்பில் அரசிடம் வருவது ஏன்?
  • students-court-arrestதாய்மொழி கல்வி சுயசிந்தனையை வளர்க்கும்!
    ஆங்கில வழி கல்வி அடிமைத்தனத்தை உருவாக்கும்!
  • மாணவர்களை மனிதனாக்கும் அரசு கல்வி வளர வேண்டும்
    மார்க் எடுக்கும் எந்திரமாக மாணவர்களை மாற்றும் தனியார் கல்வி ஒழிய வேண்டும்
  • 4,000 சம்பளத்தில் தகுதியற்ற ஆசிரியர்கள் – தனியார் பள்ளி தரமானதா?
    40,000 சம்பளத்தில் தகுதியுடைய ஆசிரியர்கள் – அரசு பள்ளி தரமற்றதா?
  • சுயசிந்தனை, அறிவியல் மனப்பான்மை
    சாதி ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமுதாய வளர்ச்சி
    இதுவே கல்வியின் முழுமை!
    காசு, தரம், போட்டி என்று பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தள்ளி
    பிராய்லர் கோழியாக்குவது கொடுமை
  • கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட உங்கள் ஊரில் எமது பெற்றோர் சங்கத்தின் கிளையைத் துவங்க நாங்கள் உதவுகிறோம்.

எங்களோடு இணைந்து செயல்பட உடனே தொடர்பு கொள்ளுங்கள்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – கடலூர் மாவட்டம் – 9345067646
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம் 9360061121

—————————

மாநாடு

7-6-2014 சனி, மக்கள் மன்றம், விருத்தாசலம்.

காலை அமர்வு – 10 மணி

தலைமை
திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

வரவேற்புரை
திரு ச. செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்

அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது!

பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு)
கந்தசாமிகண்டர் கல்லூரி,
நாமக்கல்

இலவச கல்வியின் கழுத்து நெரிக்கும் தீர்ப்புகள்!

வழக்கறிஞர் ச. மீனாட்சி, உயர்நீதிமன்றம், சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம்

ஆங்கிலவழி கல்வி சொர்க்கத்துக்கு போகும் குறுக்கு வழியா?

உதவிப் பேராசிரியர் ஆ இளங்கோவன்,
விலங்கியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்

கல்வி கொள்ளையர்களாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்!

தோழர் த கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

விவாத அரங்கம்

மதிய அமர்வு 2.30 மணி

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும்

மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா?
பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா?

தலைமை
பொறியாளர் த.குணசேகரன், மாவட்டத் தலைவர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

ஒருங்கிணைப்பு

திரு சி.எஸ்.பி.ரவிக்குமார்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கொள்ளிடம்

பரிசளிப்பு நிகழ்ச்சி

பேச்சுப்போட்டி

விடுதலைப் போரின் வீரமரபு

ஓவியப்போட்டி

டாஸ்மாக் – சீரழிவு

திருக்குறள் ஒப்புவித்தல்

கல்வி, ஒழுக்கம் அதிகாரம்

போட்டிகள் ஒருங்கிணைப்பு

திரு க. செல்வக்குமார்,  திரு ஆ. செல்வம்,
திரு ப. தீபக்குமார், திரு ரா.குமார், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திரு. வா. அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்

பேரணி மாலை 5 மணி

துவங்குமிடம்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்

துவக்கி வைப்பவர்
திரு.வி சோமசுந்தரம், தலைவர், விருத்தாசலம்
தமிழ்நாடு செராமிக் & ரெப்ராக்டரீஸ் மேனுபேக்சரர் அசோசியேசன்

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி, வானொலித்திடல், விருத்தாசலம்

நம் பிள்ளைக்காக நாம் போராடாமல் யார் போராடுவது?

தலைமை
வழக்கறிஞர் ரெ புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

முன்னிலை
வழக்கறிஞர் சி.செந்தில், துணைச்செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்

திரு.ஜி.ராமகிருஷ்ணன், நகர தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு மு.முஜிப்பூர் ரஹ்மான், நகர செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்

திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சேத்தியாதோப்பு

உரையாற்றுவோர்

துரை.சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை

இமயம்,
எழுத்தாளர், விருத்தாசலம்

கோ பாக்கியராஜ், தலைமை ஆசிரியர்,
அரசு நடுநிலை பள்ளி, இலங்கியனூர்,
மாநிலத் தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

நன்றியுரை
வழக்கறிஞர் ச. செந்தில்குமார்,
இணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்.

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு

துருக்கி: 301 தொழிலாளிகளை கொலை செய்த தனியார்மயம்

0
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி
காயமடைந்த சுரங்கத் தொழிலாளி
காயமடைந்த சுரங்கத் தொழிலாளி

துருக்கியின் சோமா நகரில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13, 2014) பணிக்குழு மாற்றத்தின் (ஷிப்ட்) போது மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஏறக்குறைய 420 மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தில் சிக்கித் தவித்த சுமார் 800 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். 363 தொழிலாளிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். 201 தொழிலாளிகள் கொல்லப்பட்டு உயிரற்ற உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள 200-க்கும் மேற்பட்டவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. எஞ்சிய தொழிலாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.

சோமா நகரம் மேற்கு துருக்கியில் உள்ள மனிசா மாகாணத்தில் அமைந்துள்ளது. தலைநகர்இஸ்தான்புலில் இருந்து 250 கிமீ தூரத்தில் அமைந்துள்ள சோமா சுரங்கத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடி விபத்துக்கு நிகழ்ந்திருக்கிறது. விபத்து நடந்தவுடன் கார்பன் மோனாக்சைடு அதிக அடர்த்தியுடன் பரவி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் போதிய பிராண வாயு கிடைக்காமல் மாண்டு போயுள்ளனர்.

சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி
சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி

தரைக்கு அடியில் 2 கிமீ ஆழத்தில் துவங்கிய இந்த வெடி விபத்தைத் தொடர்ந்து சுரங்கத்திற்குள் மின்தூக்கிகள் செயலிழந்து போயின. உள்ளே சிக்கியுள்ளவர்களில் பலரும் முக்கிய கதவிலிருந்து 4 கிமீ தூரத்தில் இருக்க கூடும் எனத் தெரிகிறது. பணிக்குழு மாறும் போது விபத்து நேரிட்டதால் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு சொல்ல முடியாது என்கிறார்கள். இறந்தவர்களில் 15 வயது சிறுவனும் அடக்கம்.

சுரங்கத்திற்குள் ஆக்சிஜனை செலுத்தியபடி மீட்பு பணியை துரிதப்படுத்த முயன்றாலும் இரண்டாவது பிரிவு சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு மீட்புப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக மாறி விட்டது. சுரங்கத்தின் முக்கிய கதவை சுற்றிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நின்று கையறு நிலையுடன் அழுதபடியே நின்று கொண்டிருக்கின்றனர்.

துருக்கியின் பிரதமர் எர்டோகன் கடந்த 2002-ம் ஆண்டு, கமால் அட்டாடுர்க்கின் மக்கள் குடியரசு கட்சியை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார். இந்தியாவில் காந்தியிசம் என்ற பெயரில் மக்களை ஏய்த்து வரும் காங்கிரசுக் கட்சியைப் போன்று துருக்கியில் கமாலிசம் என்ற பெயரில் நாட்டை சுரண்டி வரும் கட்சி மக்கள் குடியரசுக் கட்சி. இக்கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளால் வெறுப்படைந்த மக்கள் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியைப் போன்று மதவாதம், கார்ப்பரேட் நலன்கள், மற்றும் உலகமயமாக்கத்துக்கு ஆதரவான எர்டோகனின் AKP கட்சியை தேர்ந்தெடுத்து, எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எரிகிற நெருப்பில் விழுந்தனர்.

போலீஸ் தாக்குதல்
போராட்டக்காரர்கள் ரப்பர் குண்டுகளால் தாக்கிய போலீஸ்

கடந்த 10 ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம், கட்டுமானத் துறையில் (ரியல் எஸ்டேட்) குவிந்த நேரடி அன்னிய முதலீடுகளாலும், வெளிநாட்டுக் கடன்களாலும் வேகமாக வளர்ந்தது. கோட்டு-சூட்டு போட்ட முதலாளிகள் உலகளாவிய நிதிச் சூதாட்டம் மூலம் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். உழைக்கும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து சூறையாடப்பட்டன. பன்னாட்டு தொழிலாளர் சபையின் (ILO) புள்ளிவிபரத்தின்படி பணியிடத்தில் உயிரைப் பறிக்கும் விபத்துகளின் எண்ணிக்கையில் துருக்கி ஐரோப்பாவில் முதலிடத்திலும், உலகிலேயே 3-வது இடத்திலும் உள்ளது.

2005-ல் சுரங்கங்களை தனியார்மயமாக்கிய பிறகு தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை எந்த நிறுவனமும் முறையாக பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இதுதான் விபத்துக்கு காரணம் எனத் தெரிந்தாலும் அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.

விபத்து நடந்துள்ள சோமா நகர சுரங்கங்களில் வழக்கமான வருடாந்திர பரிசோதனைகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை தொழிற்சங்கங்கள் கடந்த ஏப்ரல் 29 அன்று சுட்டிக் காட்டியிருந்தன. ஆனால் அதனை ஆளும் கட்சியும், பிரதமர் எர்டோகனும் ஏற்றுக் கொள்ளாமல் அலட்சியம் செய்து சுரங்கத்தை நடத்தும் தனியார் நிறுவனமான சோமா கோமர்-க்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இந்த விபத்து நடந்த பிறகு அரசு இட்டுக் கட்டும் வேலைகளை துவங்கி விட்டது. அதாவது 2012-லிருந்து கடந்த மார்ச் வரை ஐந்து முறை சுரங்கத்தை சோதனை செய்து விட்டதாக தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

காயமடைந்த தொழிலாளி
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் காயமடைந்த தொழிலாளி

1992-ல் துருக்கியில் கருங்கடலுக்கருகில் ஸோங்குல்டாக்கில் நடந்த சுரங்க விபத்துதான் இதுவரையில் அதிகமான பேரை பலி கொண்டதாக (270 பேர்) இருந்து வந்தது. அந்த சாவு எண்ணிக்கையை தற்போது தாண்டியுள்ள இந்த விபத்தை தனியார்மயம் கொண்டு வந்த படுகொலை என்றுதான் அங்கு போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

அரசு மூன்று நாள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது. மத விவகாரங்களுக்கான தலைமையகம் வரும் வெள்ளிக்கிழமை துருக்கியில் உள்ள மசூதிகளில் எல்லாம் சோமா சுரங்கத்தில் இறந்தவர்களுக்காக வழிபாடு செய்ய உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புறக்கணித்து தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு வழி வகுத்த சுரங்க முதலாளி சோமா நிறுவனம் தனது இணைய பக்கத்தை கருப்பு பக்கமாக்கி தனது துக்கத்தை பகிர்ந்து கொள்வதாக நாடகமாடுகிறது.

பிரதமர் எர்டோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் உலகில் பல சுரங்க விபத்துக்கள் நடப்பதாகவும், அவற்றில் பிரிட்டனில் 19-ம் நூற்றாண்டில் நடந்தவையும் அடங்கும் என்று விளக்கம் கூறியிருந்தார். எவ்வளவு முயன்றாலும் சிறு தவறுகள் நேருவது இயற்கைதான் என்றும் விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது முதலாளிகள் தமது லாபக் குவிப்பை அதிகப்படுத்த தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு 19-ம் நூற்றாண்டு முறைகளையே பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்.

சுரங்கத் தொழிலாளர்கள்
சோமா சுரங்கத் தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மக்கள் அரசுக்கு எதிராகவும், தனியார்மயத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி அங்காராவில் அமைந்துள்ள எரிசக்தித் துறை அமைச்சகத்தை நோக்கி பேரணி போகிறார்கள். இஸ்தான்புல்லில் அமைந்துள்ள கம்பெனியின் சுவற்றில் ‘படுகொலை’ என்று எழுதுகிறார்கள். ஆளும் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்தினர் சோமாவிற்கு வந்த பிரதமரின் காரை முற்றுகையிடுகிறார்கள். திருடன், கொலைகாரன் என்று திட்டி முழக்கமிடுகிறார்கள். இதை எதிர்கொள்ள இயலாத பிரதமர் எர்டோகன் தப்பியோடி அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் போலீசு உதவியுடன் ஒளிந்து கொள்கிறார். இதனால் கோபமான அவரது ஆலோசகர் யூசுப் எர்கல் என்பவர் போராடும் ஒருவரை போலீசாருடன் சேர்ந்து தாக்குவது போன்ற புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகவே மக்களின் கோபம் இன்னும் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமருக்கு எதிராக கண்டனங்கள் குவியத் தொடங்கியுள்ளன.

சோமா நகருக்கு வந்த துருக்கி பிரதமரை துரத்தியடிக்கும் மக்கள்

video platformvideo managementvideo solutionsvideo player

சுரங்க விபத்தையும், பாதுகாப்பற்ற பணிச்சூழலில் தொழிலாளர் உயிரிழப்பையும் கண்டித்து தேசத்தின் நான்கு முக்கிய தொழிற்சங்கங்கள் கடந்த வியாழக் கிழமை (மே 15) ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்தன. அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடத் துவங்கியுள்ளனர். சிறு நகரங்களிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தன. சிக்கன நடவடிக்கைக்காக யார் தொழிலாளிகளின் பாதுகாப்பை குறைத்துக் கொள்ள உத்திரவிட்டார்களோ அவர்கள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.  போலீசார் தண்ணீர் குழாய்களாலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் போராடுபவர்களை எதிர் கொண்டாலும் அடக்க இயலாமல் திணறுகின்றனர்.

வரும் ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால் அதுபற்றிய கவலையில் ஆளும் கட்சி இருக்கிறது. சோமா சுரங்க முதலாளியின் மனைவி ஆளும்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றவர். போராடும் பலரும் இளைஞர்கள். பிரதமரோ அடிப்படைவாதிகள் தமது அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக போராடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்.

முதலாளித்துவ லாப வெறிக்கு பலியான சோமா சுரங்கத் தொழிலாளிகளுக்கு உண்மையான அஞ்சலி என்பது உலக தொழிலாளிகள் தனியார்மயத்துக்கு பாடை கட்டுவதில்தான் இருக்கிறது என்பதை துருக்கி போராட்டம் முன்னறிவிக்கிறது.

வசந்தன்

மாநகராட்சி பள்ளிகளுக்கு பு.மா.இ.மு வாழ்த்து

3

2013 – 14 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. சென்ற ஆண்டை விட அதிகம். ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் தங்களின் தேர்ச்சி விகிதத்தைக் காட்டி அடுத்த கல்வியாண்டின் கொள்ளைக்காக தங்கள் விளம்பரங்களை செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் , சாலைகளிலும் வைத்து ஆரவாரமாக ஆள்பிடிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டன.

உண்மையில், தனியார் பள்ளிகளின் தேர்ச்சி எப்படி சாத்தியமாகிறது?

புமாஇமு ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி பள்ளிகளுக்கு ஆதரவாக புமாஇமு ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

தில்லு முல்லு வேலைகளை அரங்கேற்றியே தேர்ச்சி விகிதத்தை அதிகமாக்கும் கலையில் தனியார் பள்ளிகளை விஞ்சுவதற்கு யாருமில்லை. மாணவர்களுக்கு பிட் எழுதிக் கொடுப்பது, தேர்வு அறையிலேயே நோட்ஸ் கொடுத்து எழுத வைப்பது, தங்கள் பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் எங்கு திருத்தப்படுகின்றன என்பதை கண்டுபிடித்து, இலஞ்ச இலாவண்யங்கள் மூலமாக மதிப்பெண்கள் பெறுவது போன்ற திருப்பணிகளை செய்கின்றன. இதன் மூலம் தங்கள் பள்ளியின் ‘தரத்தை’ உயர்த்திக் கொள்கின்றன.

அதுமட்டுமல்ல, 10-ம் வகுப்பில் 450-க்கும் அதிகமான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு, அதன் மூலம் 12-ம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சியை உத்தரவாதப்படுத்தி, அதன் மூலம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளும் மோசடியை தனியார் பள்ளிகள் அரங்கேற்றுகின்றன. இதிலிருந்து படித்து மதிப்பெண் எடுப்பதில்ஆற்றல் குறைவான மாணவர்களை படிக்க வைத்து அவர்களை மதிப்பெண் எடுப்பவர்களாக மாற்றும் தகுதி தனியார் பள்ளிகளுக்கு கிடையாது என்பதை உணர முடியும்.

இப்படி, நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டும் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும் தனியார் பள்ளிகள், சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுகின்றன. ஊரப்பாக்கம் நீலன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்பு செல்லும் மாணவன் தமிழரசனை பள்ளி நிர்வாகம் கட்டாயமாக வெளியேற்றியது. காரணம், அம்மாணவன் 10-ம் வகுப்பு வந்தால் நன்றாக மதிப்பெண் எடுக்க மாட்டான் என்பதுதான். இதனால் மனமுடைந்த அம்மாணவன் அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தனியார் பள்ளிகளின் யோக்கியதைக்கு, கொடுமைக்கு இந்த ஒரு சான்றே போதுமானது.

தனியார் பள்ளிகளைக் கண்டு தரத்திற்காக மயங்கும் பெற்றோர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். வட்டிக்கு கடன் வாங்கி, தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது, பிள்ளைகளையும் பறிகொடுக்கும் இந்நிலையைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி கற்பிக்கும் அம்சங்கள் தனியார் பள்ளிகளில் ஏதுமில்லை. தரமற்ற ஆசிரியர்களை நியமித்து, அவர்கள் மூலம் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து, வெறும் மதிப்பெண் மட்டுமே பெறுகின்ற இயந்திரங்களாக மாணவர்களை உற்பத்தி செய்கின்றன. அப்படிப் பெறுகின்ற மதிப்பெண்களை மூலதனமாக வைத்தே ஒவ்வொரு வருடமும் பல ஆயிரங்கள் கட்டணத்தை உயர்த்துகின்றன.

இன்னொரு புறமோ அரசுப்பள்ளிகள் அமைதியாக சாதித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டை (79%) விட இந்த ஆண்டு (84%) ஐந்து சதவிகிதம் கூடுதலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. ‘எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளன, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளது, கட்டிடங்கள் பளபளப்பாக உள்ளன’ என்று பீற்றிக் கொள்ளும் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், அரசுப்பள்ளிகளின் சாதனை மகத்தானதாகும்.

அடிப்படை வசதிகள் இல்லாமல், கழிவறை, குடிநீர் வசதிகள் மிக அவசியமான வசதிகள் இல்லாமல், கற்கும் சூழல் மிக மோசமாக உள்ள நிலையிலும், எந்த வசதியும் செய்து கொடுக்காமல், பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர்களை நியமிக்காமல் அரசு திட்டமிட்டே அரசுப் பள்ளிகளை புறக்கணித்து, கல்வி தனியார்மயத்தை ஊக்குவித்து வரும்நிலையிலும் இந்தச் சாதனையை அரசுப் பள்ளிகள் நிகழ்த்தியுள்ளன என்பதே குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அரசுப் பள்ளிகள் தரமில்லையென்றாலும், தரமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே உள்ளனர். அவர்களின் கடுமையான உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலுமே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை. சென்னையில் மட்டும் நான்கு மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகள் 90%-க்கும் மேல் தேர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளன.

இதுவே அரசுப்பள்ளிகள் தரமாக இருந்தால், மாணவர்களுக்கு பிடித்தமான கற்கும் சூழல் இருந்தால் எந்த தனியார் பள்ளியும் அரசுப்பள்ளிகளின் அருகில் நெருங்க கூட முடியாது. கட்டணமில்லாமல் மாணவர்கள் தரமான கல்வியை பெற முடியும். அதைத்தான் மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி காட்டுகிறது. பல பெற்றோர்கள், தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, “மாநகராட்சி பள்ளிகளில் நன்றாக கற்பிக்கிறார்கள் என்பதற்காக மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கின்றோம்” என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, “தனியார் பள்ளிகளில் தாங்கள் சுயமரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறோம். ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எங்களை மதித்து நடக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளையும் அவர்களின் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்கிறார்கள்” என்று மாதவரம் சாலை, பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் முதல் மதிப்பெண் (1143) எடுத்த சுகந்தி என்ற மாணவியின் அப்பா கூறுகிறார்.

தனியார் பள்ளிகள் என்றால் தரம் என்று மயங்கும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் தரத்தைப் புரிந்து கொள்ள மேற்சொன்ன ஒரு உதாரணம் போதாதா?

அரசுப் பள்ளிகள் நமது பள்ளிகள். அங்கு நம் பிள்ளைகளை சேர்ப்போம். தரம் இல்லையென்று தனியார் பள்ளிகளுக்கு ஓடி, அங்கு தரமற்ற கல்வியை, காசு கொடுத்து பெறுவதை விட , தரமான ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உயர்த்தப் போராடுவோம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைவதன் மூலம் கண்டிப்பாக நாம் இதை சாதிக்க முடியும். தரமான இலவசக் கல்வியை பெற முடியும். மனப்பாடக் கல்விக்கு பதிலாக உண்மையான அறிவியல்பூர்வமான கல்வியைப் பெற முடியும். ஒற்றுமையின் மூலம் இந்த அரசைப் பணிய வைக்க முடியும்.

இந்த நோக்கத்தை வலியுறுத்தி, பரவலாக மக்களிடையே இந்தக் கருத்தை பதிய வைக்கும் நோக்கத்தோடு, அரசுப்பள்ளிகளின் சாதனைக்கு வித்திட்ட ஆசிரியர்களை வாழ்த்தி சென்னை முழுக்க புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

+2 தேர்வு முடிவுகள் - புமாஇமு சுவரொட்டி

நீதிமன்ற வாயில்கள், அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அலுவலகங்கள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என பரவலாக தோழர்கள் மக்களிடையே சுவரொட்டிப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர்.

இவண்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னைக் கிளை.

தேர்தல் முடிவின் பொருள் என்ன ?

86

ஜெயாங்குற லேடி, நரவேட்டை மோடி இருவருமே பாசிச கேடிதேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அளவில் மோடியின் வெற்றியையும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் வெற்றியையும் உறுதி செய்கின்றன. இந்த முடிவே முற்றிலும் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. இந்த முடிவின் வீச்சென்னவோ அவர்களே எதிர்பாராததுதான்.

பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்த பின், அந்த ஆட்சியின் மீதான அதிருப்தியை அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி அறுவடை செய்து கொள்வதொன்றும் இந்தியாவின் தேர்தல் அரசியலில் புதிய விடயமல்ல. அந்த வகையில் இந்த வெற்றி என்பது மன்மோகன் அரசு மோடிக்கு போட்ட பிச்சை. எனவே, பாரதிய ஜனதா தனது வெற்றி குறித்து மிகைபடப் பீற்றிக் கொள்வதை நாம் பொருட்படுத்த தேவையில்லை.

நமது கவலைக்கும் அக்கறைக்கும் உரிய விசயங்கள் வேறு.

1

ன்மோகன் சிங் அமல்படுத்திய மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, எந்த கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடம் இந்திய மக்கள் தமது வாழ்க்கையையும் உரிமையையும் பறிகொடுத்தார்களோ, அதே முதலாளி வர்க்கம், இந்த தேர்தல் மூலம் மக்களின் எதிர்ப்புணர்ச்சியையும் அறுவடை செய்து கொண்டு விட்டது.

மக்களின் எதிர்ப்புணர்ச்சியை முன்னறிந்து, அதனை தான் விரும்பிய திசையில் திருப்பி, வடிவமைத்து, பிறகு தனது கைப்பிள்ளையையே தங்களுடைய தலைவனாக ஏற்கும்படி மக்களை நம்ப வைப்பதிலும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கம் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசு அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற 2009-ம் ஆண்டிலிருந்தே, “எதிர்காலப் பிரதமர் மோடி” என்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தொடங்கி விட்டதையும், “ஒளிரும் குஜராத்” என்ற புனைகதையை பரப்பியதையும்  மே – 2014 இதழ் புதிய ஜனநாயகம் கட்டுரை விளக்கமாக கூறுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மன்மோகன் சிங் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த இந்திய கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், மக்களுடைய அதிருப்தியின் வழியாக தனது அதிருப்திக்கு விடை கண்டுவிட்டது; மோடிக்கு முடி சூட்டுவதென்ற தனது கருத்தை இந்திய மக்களின் பொதுக்கருத்தாக மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறது என்பதுதான் இந்த தேர்தல் வெற்றியின் உண்மையான பொருள். இந்த தேர்தல் முடிவு, அம்பானி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை பிரதமர் நாற்காலியில் நேரடியாகவே அமர வைத்திருக்கிறது என்று கூறலாம். தொண்டைமானுக்குப் பதிலாக எட்டப்பன் அரியணை ஏறியிருப்பதாகவும் புரிந்து கொள்ளலாம்.

2

“இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை பிரச்சினைகள்” என்று சிலவற்றை மூடிஸ் என்ற ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனம் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்போதே அறிவித்து விட்டது. கனிம வளக்கொள்ளைக்கு காடு, மலைகளைத் திறந்து விடுவது முதல் தொழிலாளர் உரிமைச் சட்டங்களை ரத்து செய்வது, காப்பீட்டுத் துறை தனியார்மயம் வரையிலானவை அந்த அடிப்படை பிரச்சினைகளில் அடக்கம்.

இது ஒரு புறமிருக்க, “ராமர் கோயில், காஷ்மீர் விவகாரம், பொது சிவில் சட்டம் போன்ற அடிப்படை பிரச்சினைகளை” மோடி கவனிக்க வேண்டுமென்று நேற்று ஆர்.எஸ்.எஸ் கூறியிருக்கிறது. “மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் நிர்ப்பந்தத்துக்கு பணியக்கூடாது” என்றும், “வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கார்ப்பரேட் எச்சில் பொறுக்கி ஊடகவியலாளர்கள், மோடிக்கு “அறிவுரை” கூறத்தொடங்கி விட்டனர். இனி ஊடகங்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் இதனைச் சுற்றி விவாதங்களையும் பொதுக்கருத்தையும் கொண்டு செல்வார்கள்.

ஆர்.எஸ்.எஸ், தான் எழுப்பும் அடிப்படைப் பிரச்சினைகளின் மீது மக்களின் கவனத்தை இழுக்கும். மூடிஸ் எழுப்பிய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் நாட்டை அறுத்து எடைபோடுவார் மோடி. தென்னிந்திய முஜாகிதீன், தென் மாவட்ட முஜாகிதீன், சைக்கிள் குண்டு, டிபன் பாக்ஸ் குண்டு ஆகியவை தினத்தந்தி, தினமலரின் தலைப்புச் செய்திகளாக பரபரக்க, காடுகளும் மலைகளும் ஓசைப்படாமல் கைமாறும். காட் ஒப்பந்தத்துக்கும் பாபர் மசூதி பிரச்சினைக்கும் இடையிலான உறவை அன்று இந்தியா புரிந்து கொள்ளவில்லை. இன்று “வளர்ச்சி”க்கும் இந்துத்துவத்துக்கும் இடையிலான உறவை மோடி இந்தியாவுக்குப் புரிய வைப்பார்.

3

ந்த தேர்தலில் அதிமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றியும் நமது கவனத்துக்குரியது. இந்த வெற்றிக்குக் காரணம், மக்களின் அறியாமை என்று சொல்வதை விட, “அறிவு” என்று சொல்வதே பொருத்தமானதாக தெரிகிறது. வாக்குகளை விலைக்கு விற்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பது போலத் தெரிகிறது. மக்களின் பேரம் பேசும் ஆற்றல், தேர்தலுக்கு தேர்தல் கூடி வருகிறது.

“நாயே சும்மாவாடா ஓட்டு போட்டே, காசு வாங்கல? ஐயா போன வாட்டி நூறு ரூபா கொடுத்தீங்க கட்டுப்படியாகல, இந்த வாட்டி நூத்தம்பது கொடுங்கன்னு கேளு, அது ஜனநாயகம்; அத வுட்டுட்டு உரிமை அது இதுன்னு பேசுற?” என்று இயக்குநர் வி.சேகர் திரைப்படமொன்றில் கவுண்டமணி மக்களைப் பார்த்து பேசும் வசனம் வரும்.

இதனை நகைச்சுவைக் காட்சி என்று கருதி தமிழர்கள் இனி சிரிக்க முடியாது. தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய தினம் போடப்பட்ட 144 தடை உத்தரவு, நம்பகமான அதிகார வர்க்கத்தின் பொறுப்பில், போலீசு வேன் மூலம் அதிமுக நடத்திய பண விநியோகம் போன்றவையெல்லாம் ஊர் சிரித்துப் போன உண்மைகள்.

ஓட்டுப் பொறுக்கிகளின் ஒழுக்கக்கேடு, பிழைப்புவாதம் ஆகியவை குறித்து நாம் பேசுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. அவையெல்லாம் மெல்ல மெல்ல மக்களின் பண்பாடுகளாக மாறி வருகின்றன என்பதுதான் இப்போது நம் கவலைக்குரிய விடயமாகியிருக்கிறது. அதிமுக வுக்கு பதிலாக திமுக வுக்குப் போட்டிருந்தால் அதன் காரணமாக ஒரு வெங்காயமும் மாறிவிடப் போவதில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும். நல்ல விலை கிடைத்தால் தங்களை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடைய பிழைப்புவாத மனோபாவம்தான், நம்மை அச்சுறுத்துகிறது.

இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய சவால் இது.

கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நேரடிக் கொடுங்கோன்மை, அதனை அமலாக்கும் எடுபிடிகளாக இந்து மதவெறிக் காலாட்படை, அதன் தலைவனாக ஒரு தொழில்முறைக் கொலையாளி, இவர்களுடன் கூச்சமே இல்லாமல் கூட்டு சேரத் தயாராக இருக்கும் பல வகைப் பிழைப்புவாதக் கட்சிகள், பார்ப்பனப் பாசிசக் கும்பலின் சேவகனாகவே வேலை செய்யத் தயாராக இருக்கும் அதிகார வர்க்கம், அரசியல் மடமையும் பிழைப்புவாதமும் இணைந்த கலவையாக மக்கள்!

– இந்தச் சேர்க்கைதான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வெற்றி என்று வெட்கமின்றி சித்தரிக்கப்படுகிறது.

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

தண்டனையிலிருந்து மக்களை விடுவிக்கும் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்வோம்.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம்: ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள் !

4

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல், அம்மாவின் செல்வாக்கை மட்டுமே நம்பி தனித்துப் போட்டியிடுவதாக அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் அவரது கைத்தடிகளும் கூறிவருகிறார்கள். வெளிப்பார்வைக்கு உண்மையைப் போலத் தெரியும் இந்தக் காட்சி ஒரு பொய்த் தோற்றம். தமிழக மக்களின் கண்ணுக்குப் புலப்படாத, ஒரு திரைமறைவான கூட்டணியை உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் கமிசன் ஆகியவற்றோடு அமைத்துக்கொண்டு, ஜெயா இந்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கிறார் என்பதே உண்மை. ஜெயாவிற்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் வருமான வரி வழக்கு ஆகிய இரண்டிலும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகள்; தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் தி.மு.க. தொடுத்த வழக்குகளைத் தேர்தல் கமிசனும், உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அணுகிய முறை; அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா எதிர்க்கட்சிகளின் குறுக்கீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தேர்தலுக்கு முன்பு தமிழகம் தழுவிய அளவில் தேர்தல் கமிசனால் போடப்பட்ட 144 தடையுத்தரவு – இவற்றையெல்லாம் நியாயமாகப் பரிசீலிக்கும் யாரும் மேற்கண்ட முடிவுக்குத்தான் வர முடியும்.

மைக்கேல் டி குன்ஹா
ஜெயா – சசி கும்பலுக்கு விலை போகாமல் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை நடத்தி வரும் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

1991-96-களில் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஜெயா நடத்திய ஊழல், கொள்ளை தொடர்பாக ஜெயா-சசி கும்பல் மீது நாற்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழிவகைகளைக் கையாண்டும், தனது பார்ப்பன சாதி செல்வாக்கு மற்றும் அரசியல், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் பெரும்பாலான வழக்குகளில் இருந்து தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார், ஜெயா. பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கு மற்றும் டான்சி வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களால் ஜெயா தண்டிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அசாதாரணமான முறையில் அவரைக் குற்றமற்றவராக அறிவித்தன. எனினும், சொத்துக்குவிப்பு வழக்கு, வருமான வரி வழக்கு உள்ளிட்ட மூன்று, நான்கு வழக்குகள் ஊத்தி மூடிவிட வாப்பின்றி, அவரது நிம்மதியை மட்டுமல்ல, அவரது அரசியல் நப்பாசைகளையும் கெடுத்து வருகின்றன. ஒரு புறம், நீதிபதிகள், சட்ட வல்லுநர்களையே திணறடிக்கும் வகையில் மனுவுக்கு மேல் மனு போட்டும், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கியும் இந்த வழக்குகளை ஜெயா கும்பல் இழுத்தடித்து வருகிறது என்றால், இன்னொருபுறம் நீதிமன்றங்கள் இவ்வழக்கு விசாரணையின் இக்கட்டான தருணங்களில் ஜெயாவைக் காப்பாற்றும் ரட்சகனாக நடந்துகொண்டு, இந்த வழக்குகள் நியாயமாகவும் விரைவாகவும் விசாரிக்கப்படுவதைத் தடுத்து வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராக நீடிக்க வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாதான் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஆண்டு ஜெயா-சசி கும்பல் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெயாவிற்குச் சாதகமாக அளித்த தீர்ப்பே குற்றவாளி ஜெயாவுக்கும் நீதியரசர்களுக்கும் இடையே இருந்துவரும் தொடர்பை அம்பலப்படுத்தியது. இன்னார்தான் தனக்கு எதிராக வாதாட வேண்டும்; இன்னார்தான் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்ட அதிசயமும்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சௌகானும் பாப்டேயும் அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்த விநோதமும் இந்த வழக்கில் நடந்தது கண்டு சட்ட வல்லுநர்களே விக்கித்துப் போனார்கள்.

பி.எஸ்.சௌஹான்
ஜெயாவின் ஏஜெண்டாகச் செயல்படும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான்

நீதிபதி பாலகிருஷ்ணா பதவி ஓவுபெற்ற பிறகும்கூட, அவரே இந்த வழக்கின் நீதிபதியாகத் தொடர வேண்டும் என்று ஜெயா கும்பல் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றமும் அவ்வாறே விரும்பியது. ஆனால், இந்த ஏற்பாடுக்குச் சம்மதிக்காமல் பாலகிருஷ்ணா கழண்டுகொண்ட பிறகு, புதிய நீதிபதியாக மைக்கேல் டி குன்ஹா கடந்த ஆண்டு இறுதியில் பதவியேற்றார். பாலகிருஷ்ணாவைப் போல புதிய நீதிபதி குன்ஹாவைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை ஜெயா-சசி கும்பல் புரிந்துகொண்டவுடனேயே, அக்கும்பல் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் கிரிமினல் வேலைகளை மீண்டும் தொடங்கியது.

மைக்கேல் டி குன்ஹா வழக்கின் இறுதிகட்ட விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டவுடனேயே, “தம்மிடமிருந்து கைப்பற்றப்பட்ட, அதேசமயம் இவ்வழக்கிற்குத் தொடர்பில்லாத பொருட்களைத் தம்மிடம் ஒப்படைக்க”க் கோரி ஜெயா கும்பல் கடந்த ஜனவரி மாத இறுதியில் மனு போட்டது. இம்மனுவிற்குப் பதில் அளிக்க தனக்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என வாய்தா கேட்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொள்ள முயன்றார், அரசு வழக்குரைஞர் பவானி சிங். “இது குற்றவியல் நீதிமன்றமா, அல்லது ஒத்திவைப்பு மன்றமா” என அப்பொழுதே கேள்வி எழுப்பிய நீதிபதி குன்ஹா, பவானி சிங்கின் கோரிக்கையை ஏற்க மறுத்து ஜனவரி 31-க்குள் பதில் அளிக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார்.

இந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செயப்பட்ட பின், இறுதிகட்ட விசாரணை பிப் 3 அன்று தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு வழக்குரைஞர் பவானி சிங்கோ அன்று இறுதிகட்ட வாதத்தைத் தொடங்குவதற்குப் பதிலாக, “ஜெயாவின் ஆலோசகராக இருந்த வி. பாஸ்கரன் நீதிமன்ற அனுமதியோடு வாங்கிப் போன 55 இலட்ச ரூபாய் மதிப்பு கொண்ட வெள்ளிப் பொருட்களைச் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகுதான் மூல வழக்கைத் தொடர வேண்டும்” எனக் கோரும் மனுவை அளித்தார். இந்த மனு அடிப்படையிலேயே பொய்யும் புரட்டுத்தனமும் நிறைந்தது; மூல வழக்கு விசாரணையை முடக்க வேண்டும் என்ற கிரிமினல் நோக்கில் போடப்பட்டது என்பது விசாரணையின்போது அம்பலமானது.

03-c-1பாஸ்கரன் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புற்றுநோய் முற்றி இறந்து போய் விட்டதை இவ்வழக்கில் அரசு தரப்பிற்கு உதவுவதற்காக அனுமதிக்கப்பட்ட தி.மு.க. வழக்குரைஞர் நீதிமன்றத்தில் போட்டுடைத்தார். இறந்துபோன பாஸ்கரனின் மகன் சாட்சி கூண்டிலேறி, “தனது தந்தை வாங்கிப் போன வெள்ளிப் பொருட்கள் முதல் குற்றவாளியின் – ஜெயாவின் போயசு பங்களாவில் இருப்பதை” அம்பலப்படுத்தினார்.

தனக்கு ஆலோசகராக இருந்த இதே பாஸ்கரன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிய இழிபுகழ் பெற்றது ஜெயா கும்பல். பாஸ்கரன் இறந்துபோவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இந்தப் பொய் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்படிபட்ட நபர் இறந்துபோனது தெரியாது என்பது போல நடித்தும், அந்த வெள்ளிப் பொருட்கள் ஜெயாவின் வீட்டிலே இருப்பதை மறைத்தும் இப்படியொரு மனுவை ஜெயா கும்பலும் அரசு வழக்குரைஞரும் கூட்டுச் சேர்ந்து போட்டிருப்பது பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாத கிரிமினல்தனம் அல்லவா! இந்த உண்மைகள் அம்பலமான பிறகும்கூட, பாஸ்கரன் இறந்து போனதைத் தான் இன்னமும் நம்பவில்லை எனச் சாதித்தார், ஜெயாவின் கைக்கூலியான அரசு வழக்குரைஞர்.

சதீஷ் கே. அக்னிஹோத்ரி
மினி பஸ்களில் உள்ள இரட்டை இலையை மறைக்கக் கோரி தி.மு.க தொடுத்த வழக்கில் ஜெயாவின் மனது புண்பட்டு விடாதபடி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதி சதீஷ் கே. அக்னிஹோத்ரி.

இம்மோசடியான மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மார்ச் 7 அன்று அரசு வழக்குரைஞர் தனது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டார், நீதிபதி குன்ஹா. ஆனால், பவானி சிங்கோ அன்று நீதிமன்றத்திற்கு வராமல் மட்டம் போட்டு நீதிமன்ற உத்தரவைக் கேலிக்கூத்தாக்கினார். இறுதி வாதத்திற்கான தேதி மார்ச் 10-க்குத் தள்ளிவைக்கப்பட்ட அன்றும் பவானி சிங் நீதிமன்றத்திற்கு வராமல் இருந்து வழக்கு விசாரணையைச் சீர்குலைத்தார். பிறகு மார்ச் 14 அன்று நீதிமன்றத்திற்கு வந்த பவானி சிங் இறுதி வாதத்தைத் தொடங்காமல், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி பத்து நாட்களுக்கு வழக்கை ஒத்தி வைக்கக் கோரினார். இது தொடர்பாக அவர் அளித்த மருத்துவச் சான்றிதழோ, மருத்துவரின் கையொப்பம்கூட இல்லாமல் மோசடியான முறையில் தயாரிக்கப்பட்டிருந்தது. நடப்பது நாடகம் என்பதைப் புரிந்துகொண்ட நீதிபதி குன்ஹா இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட, பவானி சிங் மறுக்க, இதன் காரணமாக அரசு வழக்குரைஞர் தனது ஒருநாள் சம்பளத்தை (ரூ.65,000-) அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு, விசாரணையும் மார்ச் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது. பவானி சிங் அன்றும் எவ்விதக் காரணமும் கூறாமல் நீதிமன்றத்திற்கு வாரமல் போனதால், அவருக்கு மறுபடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்து பவானி சிங் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வேறுவழியின்றி அரசு வழக்குரைஞர் பவானி சிங் இறுதிகட்ட வாதத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்த இறுதி வாதத்தின் பொழுது, 1991-96 காலகட்டத்தில் ஜெயா-சசி கும்பல் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் தமிழகமெங்கும் சொத்துக்களை வாங்கி குவித்தார்கள் என இவ்வழக்கின் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் படித்துக் காட்டினார், பவானி சிங். 1991-ல் வெறும் இரண்டு கோடி சொச்சம் சொத்துக்களைக் கொண்டிருந்த ஜெயாவின் சொத்து மதிப்பு, அவர் 1996-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து தமிழக மக்களால் துரத்தப்பட்ட சமயத்தில் 66 கோடியாக வளர்ந்து, இன்று அச்சொத்து களின் மதிப்பு 5,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பது இதன் மூலம் அம்பலமானது. பவானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் படித்துக் காட்டிய இந்த மலைக்க வைக்கும் சொத்துப் பட்டியலை தினகரன், முரசொலி உள்ளிட்ட தி.மு.க. ஆதரவு நாளேடுகள் மட்டுமே வெளியிட்டன. நடுநிலை நாளேடுகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்து, தினமணி உள்ளிட்டு பல நாளேடுகள் இந்த விவரங்களை வெளியிடாமல் ஜெயாவிற்கு விசுவாசமாக நடந்து கொண்டன.

****

அருணா ஜெகதீசன்
சொத்துக் குவிப்பு தொடர்புடைய வழக்கொன்றில் தனது வரம்பை மீறி ஜெயாவின் பினாமி நிறுவனங்களை விடுவித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

வானி சிங் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயா-சசி கும்பல் கொள்ளையடித்து வைத்திருந்த சொத்து விவரங்களின் ஆதாரங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், குற்றவாளிகள் தரப்பு இதனை முடக்கும் புதிய சதித் திட்டத்தை சென்னையில் அரங்கேற்றினர். சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த போது, அந்நீதிமன்றம் ஜெயா-சசி கும்பலின் பினாமிகளால் நடத்தப்பட்டு வந்த 22 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கித் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் அப்பொழுதே சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கைத் தூசி தட்டி எடுத்து, அதனை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை நீதிபதி அருணா ஜெகதீசனிடம் ஒப்படைத்தது. அந்நீதிபதியும், “இந்த 22 சொத்துக்களும் மூல வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குச் சொந்தமானதல்ல” எனத் தீர்ப்பெழுதி, அந்த நிறுவனங்களின் சொத்துக்களை விடுவித்துத் தனது “பொறுப்பை”க் கனகச்சிதமாக முடித்தார். மேலும், இந்த 22 நிறுவனங்களுக்கும் சொத்துக்குவிப்பு வழக்கிற்கும் தொடர்பிருக்கிறதா என்பதை மீண்டும் விசாரிக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுரையும் வழங்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மனுக்கள் எங்கு விசாரிக்கப்பட்டாலும், அதில் பவானி சிங் மட்டுமே அரசு வழக்குரைஞராக ஆஜராக முடியும். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கிலோ பவானி சிங்கிற்குப் பதிலாக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவரும் தமிழக அரசு வழக்குரைஞருமான இன்பதுரை அரசு வழக்குரைஞராக ஆஜராகி, ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல, இப்படியொரு வழக்கு சென்னையில் நடப்பதை குற்றவாளிகள் தரப்பு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் மூடிமறைத்து, நீதிபதியை ஏமாற்றியுள்ளனர். இந்தப் பித்தலாட்டத்தனங்கள் அனைத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றமும் உடந்தையாக நடந்து கொண்டுள்ளது.

பவானி சிங் மார்ச் 21 அன்று தனது இறுதிகட்ட வாதத்தை எடுத்துவைக்கத் தொடங்கிய மறுநாளே சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இப்படியொரு வரம்பு மீறிய தீர்ப்பு வெளிவந்திருப்பதைத் தற்செயலானதாகப் பார்க்க முடியாது. இந்த வழக்கு தொடர்புடைய சாட்சிகளுள் பெரும்பாலோர் வெளிநாட்டில் இருப்பது தெரிந்திருந்தும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருப்பது மூலவழக்கு விசாரணையைக் காலவரையின்றித் தள்ளிப்போடும் உள்நோக்கம் கொண்டதாகும்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் இத்தீர்ப்பை நீதிபதி குன்ஹா ஒதுக்கித் தள்ளியதோடு, மூல வழக்கு விசாரணையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நிறுத்த முடியாது எனக் குற்றவாளிகளின் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லிவிட்ட பிறகு, ஜெயா-சசி-பவானி சிங் கும்பல் மூலவழக்கு விசாரணையை முடக்கும் அடுத்த சதியை டெல்லியில் அரங்கேற்றினர்.

****

ரசு வழக்குரைஞர் பவானி சிங் தன் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதோடு தனது உடல் நிலையையும் காரணம் காட்டி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும்படியும் முறையிட்டார். சிறப்பு நீதிமன்றத்தால் பவானி சிங்கிற்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 1,30,000 ரூபாதான். ஆனால், இதனை ரத்து செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்து வழக்காடுவதற்கு, நீதிமன்றக் கட்டணம், வழக்குரைஞர் கட்டணம் எல்லாம் சேர்த்து பன்னிரெண்டு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழித்திருக்கிறார், அவர். 1,30,000 ரூபாயைக் காப்பாற்றிக் கொள்ள பன்னிரெண்டு இலட்ச ரூபாய் செலவு செவதால் பவானி சிங்கிற்கு இலாபமில்லைதான்; ஆனால், அவரை ஆட்டுவிக்கும் ஜெயா-சசிக்கு பம்பர் பரிசே கிடைத்தது.

"ஜெயா போலீசு"
ஜெயா கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில், அவர் உருவம் பொதித்த முகமூடியை கடமை தவறாது விநியோகிக்கும் “ஜெயா போலீசு”.

பவானி சிங்கின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான், செல்லமேஸ்வர் அமர்வு, வழக்கின் இந்தப் பின்னணியெல்லாம், குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவரும் கூட்டுக் களவாணித்தனத்தையெல்லாம் தெரிந்துதான், தமிழகத்தில் தேர்தல் முடியும்வரை விசாரணை நடைபெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன்தான், விசாரணைக்கு மூன்று வார காலம் – ஏப்ரல் 28 வரை தடைவிதித்து, ஜெயாவின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார்கள். ஏப்ரல் 28-க்குப் பிறகாவது வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுமா என்பதற்கும் எந்த உத்தரவாதத்தையும் தீர்ப்பில் கூறாமல், “அதற்குப் பிறகும் உங்களால் (பவானி சிங்) முடியாவிட்டால், கர்நாடகா உயர் நீதிமன்றத்திடம் முறையிடுங்கள்; வேறு வழக்குரைஞருக்கு வழிவிடுங்கள்” என்று அறிவுரை வழங்கி, ஜெயா-சசி கும்பல் வழக்கை மேலும் இழுத்தடிப்பதற்கான வாய்ப்பையும் திறந்துவிட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 7.4.2014 அன்று வெளியானது. அதற்கடுத்த இரண்டாவது நாளில்-9.4.2014 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கோடு தொடர்புடைய லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவொன்றை விசாரித்துவரும் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ய நாராயணா, “சொத்துக் குவிப்பு வழக்கில் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நாடகங்கள் அரங்கேறி வருகிறது. வழக்கைத் தாமதம் செய்ய பல வழிகளில் முயற்சி நடக்கிறது. அனைத்து மட்டத்திலும் நாடகமே அரங்கேறி வருவதாக” விசாரணையின்போது குறிப்பிட்டார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை முடக்கிப் போடுவதற்கு நடந்துவரும் சதிகள், மோசடிகளை விளங்கிக் கொள்வதற்கு இதற்கு மேலும் வார்த்தைகள் தேவையில்லை.

ஊழல், கிரிமினல் வழக்குகளில் சிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மார்ச் 10 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்பு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே முக்கியமானதொரு ஊழல் வழக்கில், பதினேழு ஆண்டுகளாகக் குற்றவாளிகளால் இழுத்தடிக்கப்படும் வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக விசாரணைக்குத் தடைவிதித்து நீதிபதிகள் தீர்ப்பெழுதுகிறார்கள் என்றால், ஊழலுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சண்டமாருதமெல்லாம் வெற்று வார்த்தைகள்தான்; ஆளுக்குத் தக்கபடி தீர்ப்புகளை எழுதுவார்கள், சட்டங்களை வளைப்பார்கள் என்பதுதானே உண்மை. நீதியின் செங்கோல் ஜெயாவிற்கு ஏற்றபடி வளையும் என்பதற்கு இன்னொரு உதாரணம் வேண்டுமென்றால், ஜெயா-சசிகலாவிற்கு எதிராக நடந்து வரும் வருமான வரி வழக்கில், அவ்விசாரணையை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பைக் குறிப்பிடலாம்.

***

சொத்துக்குவிப்பு வழக்கைப் போலவே வருமான வரி வழக்கும் கிட்டதட்ட 16, 17 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. ஜெயா-சசி கும்பல், இவ்வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு கடந்த எட்டு ஆண்டுகளாக ஊறுகாய் பானைக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. இவ்வழக்கை நான்கு மாதங்களுக்கு முன்பாகத் தூசிதட்டி எடுத்து விசாரிக்கத் தொடங்கிய கே.எஸ். ராதாகிருஷ்ணன் அமர்வு, தோழிகளின் மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த மார்ச் இறுதியில் உத்தரவிட்டது.

ஆ. ராசா மறியல்
அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதைச் சோதனைச் செய்யச் சென்ற தேர்தல் அதிகாரிகள் தி.மு.க.வினரை உடன் அழைத்துச் செல்ல மறுத்ததைக் கண்டித்து நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தலைமையில் நடந்த சாலை மறியல்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்துவரும் சென்னைப் பெருநகரப் பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.தெட்சிணாமூர்த்தி, ஜெயா – சசிகலா இருவரையும் ஏப்.3 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டவுடனேயே, வழக்கை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், ஜெயா. இந்த மனுவைப் பழைய மனு போல கிடப்பில் போடாமல் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, ஏப்.10 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கே.எஸ். இராதாகிருஷ்ணன் அமர்வு கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது எனக் கருத்து தெரிவித்தது. ஆனால், அடுத்த ஐந்து நாட்களில் என்ன மாயம் நடந்ததோ, மனுதாரரின் தேர்தல் பணிகளைக் கருத்தில்கொண்டு மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக ஏப்.15 அன்று தீர்ப்பு எழுதியது.

ஏப்ரல் 22 அன்றோடு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிடும் நிலையில் இவ்வழக்கை மேலும் மூன்று மாத காலம் நீட்டித்துத் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனினும், தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசு அமைப்பது தொடர்பான பேரங்களிலும் ஜெயா கலந்துகொள்வதற்கு வசதியாகவே இந்த கால அவகாசத்தை அளித்துள்ளனர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள். புதிய அரசில் ஜெயா பங்கு பெறும் நிலை ஏற்பட்டால், இந்த வழக்குகளின் நிலை அதோகதிதான்!

03-c-2

வருமான வரி வழக்கில் இன்னொரு சுவாரசியமான திருப்பமும் உண்டு. உச்ச நீதிமன்றம் விசாரணையை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து தீர்ப்பளித்த அதேநாள் காலையில் இவ்வழக்கை விசாரித்துவரும் ஆர்.தெட்சிணாமூர்த்தியை இடம் மாற்றம் செய்து, அவரது இடத்தில் நீதிபதி மாலதியை அமர்த்தி அறிவிக்கை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். எனினும், அன்று மாலையே நீதிபதி தெட்சிணாமூர்த்தியின் இடம் மாற்றல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவரை மீண்டும் பழைய இடத்திலேயே பணியமர்த்தும் உத்தரவு வெளியிடப்பட்டது. ஜெயாவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டதற்காக தெட்சிணாமூர்த்தி மாற்றப்பட்டார் என்று கொண்டால், சுடுகாட்டு ஊழலை விசாரித்துத் தமது முன்னாள் கூட்டாளி செல்வகணபதிக்குத் தண்டனை அளித்த நீதிபதி மாலதியை வருமான வரி வழக்கை விசாரிக்க நியமனம் செய்தது தோழிகளுக்கு உறுத்தலை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதுவதற்கு இடமுண்டு.

***

“என்னை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என சட்டசபையிலேயே திமிராக அறிவித்தவர்தான் ஜெயா. கடந்த பதினேழு ஆண்டுகளாக அப்பாசிச திமிரை அச்சுப்பிசகாமல் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், அவர். தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணைகளைச் சட்டப்படியும் நியாயப்படியும் சந்திக்காமல், பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேலிக்குள்ளாக்கி வருகிறார், அவர். தனக்குத் தலையாட்டாத நீதிபதிகளை மிரட்டி விரட்டியடிக்கவும் தயங்காதவர் அவர். ஆனாலும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட இதுவரை பாய்ந்ததில்லை. அந்தளவிற்கு நீதிமன்றங்கள் அவரது செல்வாக்கின் முன் செல்லாக்காசாக உள்ளன.

வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் தனது கட்சிக்காரர் தம்பிதுரைக்குச் சட்ட அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்து, தன் மீதான வழக்குகள் அனைத்தையும் ஊத்தி மூடிவிடவும் முயன்றார். அது முடியாமல் போன பிறகு, தனது சுயநலம் காரணமாக வாஜ்பாயி ஆட்சியைக் கவிழ்க்கவும் செய்தார். சட்டம், நீதி பரிபாலனம் உள்ளிட்டு சொல்லிக் கொள்ளப்படும் எந்தவொரு அறத்திற்கும் கட்டுப்படாமல், அனைத்திற்கும் மேலான எதேச்சதிகாரியாக அவர் நடந்து வருகிறார்.

அவரது நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுவதாக இருந்தேபாதும் மக்களின் அறியாமை, அதிகார வர்க்கம், ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகிறார். அவர் பதவியில் இல்லாதபொழுதுகூட சோ, சுப்பிரமணிய சுவாமி, சரத் பவார், தேவே கௌடா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள்; விஜ மல்லையா, சாராய உடையார் குடும்பம், ஸ்பிக் முத்தையா உள்ளிட்ட தரகு முதலாளித்துவக் கும்பல்; இந்து, தினமணி உள்ளிட்ட பத்திரிகை குழுமங்கள்; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சௌகான், கே.எஸ். இராதாகிருஷ்ணன் தொடங்கி ஓவுபெற்றுச் சென்றுவிட்ட நீதிபதி தினகர், தங்கராசு உள்ளிட்ட ஒரு பெரும் அதிகார வர்க்கக் கும்பல் – எனவொரு பெரும் பட்டாளமே ஜெயாவின் விருப்பங்களை ஈடேற்றி வைப்பதற்காக வேலை செய்து வருவது கண்கூடு.

இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டுதான், சொத்துக்குவிப்பு வழக்கில் நியாயமாக நடந்துகொண்ட அரசு வழக்குரைஞர் ஆச்சார்யாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகிக் கொள்ளும்படி செய்தார். ஆச்சார்யாவைப் போலத் தமக்குத் தலையாட்டாமல் நடந்துவரும் நீதிபதி குன்ஹா மீது கொலைவெறிேயாடு இருக்கும் ஜெயா கும்பல் அவருக்கு இன்னும் என்னென்ன குடைச்சல்களைக் கொடுக்குமோ?

– செல்வம்
__________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
__________________________________

‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?

5

தேர்தல் பரபரப்பில் தமிழகமே மூழ்கடிக்கப்பட்டிருந்த வேளையில், தமது திருபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் நிரந்தரத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது நோக்கியா நிறுவனம். இந்த உத்தரவு நோக்கியாவில் பணிபுரியும் 6,600 தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, நோக்கியாவிற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் பாக்ஸ்கான் உள்ளிட்டு அதன் துணைநிறுவனங்களில் பணிபுரிந்துவரும் 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நோக்கியாவின் இம்முடிவைக் கண்டித்து கடந்த ஏப்ரல்-1 அன்று சென்னை – சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர், நோக்கியா தொழிலாளர்கள்.

12பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான நோக்கியா, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்ததை வளர்ச்சியின் அடையாளமாகச் சித்தரித்துக் கொண்டாடினார்கள். அந்த வகையில் நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டுக் உரிமை பாராட்டிக் கொண்டனர். ஆனால், நோக்கியா தொழிலாளர்கள் தங்களது வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்தரவாதம் கோரி நடுத்தெருவில் நின்றபோது, இந்த இருவரில் ஒருவர்கூட அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

நோக்கியா தனது தொழிலாளர்களின் கழுத்தில் கத்தியை வைப்பதற்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டது. அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கடந்த செப்.2013-ல் கையகப்படுத்தியது. இதனையடுத்து நோக்கியா இந்தியாவிலுள்ள தனது ஆலைகள் மற்றும் சொத்துக்களை மைக்ரோசாப்டுக்கு மாற்றிக் கொடுக்க முனைந்திருந்த நேரத்தில்தான், அந்நிறுவனம் இந்திய அரசிற்குச் செலுத்த வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வரியைக் கட்டாமல் ஏத்திருப்பதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை, வட்டியோடு சேர்த்து 21,153 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டுச் சொத்துக்களை மாற்றிக் கொடுக்குமாறு நோட்டீசு அனுப்பியது. ஏய்த்த வரியைக் கட்ட நோக்கியா மறுக்கவே, அதன் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில், “வரியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்தால், சென்னை ஆலையை மூடிவிட்டு வெளியேறுவோம்” என வாதிட்டுத் தொழிலாளர்களைப் பணயம் வைத்தது, நோக்கியா. இதே சமயத்தில், நோக்கியா தமிழக அரசுக்குச் செலுத்த வேண்டிய 2,400 கோடி ரூபாய் விற்பனை வரியைக் கட்டாமல் தகிடுதத்தம் செய்திருப்பதும் அம்பலமாகி, தமிழக அரசும் வரியைக் கட்ட உத்தரவிட்டு நோட்டீசு அனுப்பியது.

மைக்ரோசாப்டோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தக் கெடு நெருங்குவதால், ஏய்த்த வரியைக் கட்டாமல் ஆலையை மூடிவிட்டு வெளியேறும் குறுக்கு வழியை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது, நோக்கியா. இதன் முதல்கட்டமாக தனது மாதாந்திர கைபேசி உற்பத்தி இலக்கை 1.3 கோடியிலிருந்து 40 இலட்சமாகத் திட்டமிட்டே குறைத்தது. அதனையடுத்து 6,600 தொழிலாளர்களைச் சிறுகச்சிறுக வெளியேற்றும் முடிவை அறிவித்திருக்கிறது. மேலும், சென்னை ஆலை மூடப்பட்டால் ஏற்படும் உற்பத்தி இழப்பை, சீனாவிலும், வியட்நாமிலும் திறக்கப்பட்டுள்ள புதிய ஆலைகள் ஈடு செய்துவிடும் எனத் தெனாவெட்டாக தெரிவித்திருக்கிறது.

வெறும் 600 கோடி ரூபாய் மூலதனத்துடன் தமிழகத்திற்கு நுழைந்த நோக்கியா அதைவிடப் பலமடங்கு இலாபத்தைச் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் சம்பாதித்துவிட்டு வெளியேற நாள் குறித்து விட்டது. ஆனால், எட்டாண்டுகளாகக் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்குக் கிடைத்து என்ன? இருண்ட, நிச்சயமற்ற எதிர்காலம். வளர்ச்சி, வளர்ச்சி என்று ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரேகுரலில் ராகம் போடுகிறார்களே, அதன் பொருள் இதுதானோ?
_____________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
_____________________________

வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்

269

சென்னை வாசக நண்பர்களை சந்திப்பதற்கான அறிவிப்பு வினவில் வெளியானதை அறிந்திருப்பீர்கள். தொடர்பு கொள்வதற்கான நேரம், இடம் ஆகியவற்றை அப்பதிவில் குறிப்பிட்டிருந்தோம். வினவின் அந்த அழைப்பை ஏற்று மே 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சில நண்பர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். வினவு சார்பாக புதிய கலாச்சாரம் அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

முல்லாஅப்போது ஒரு 10 பேர் கூட்டமாக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் யார் என்ன என்று அறிமுகம் செய்து கொள்ளவில்லை. கேட்ட பிறகு ‘நாங்கள் தவ்ஹீத் கொள்கைகளை பின்பற்றுபவர்கள்’ என்றனர். எனவே அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தோழர் பாண்டியனுக்கு தெரியாது. அப்படி ஒரு ஊகம் இருப்பினும் வந்தவர்கள் யாரும் பகிரங்கமாக இன்ன இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் ஆரம்பத்திலேயே அப்படி அறிவித்திருந்தாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அப்படி பகிரங்கமாக அறிவிப்பதில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தது என்று இப்போது தெரிகிறது.

அவர்களில் ஃபாருக் என்பவர் (இவர் டிஎன்டிஜே-வின் மாநில பேச்சாளராம், அப்போது தெரியாது) வினவு தளத்தை போற்றி புகழ்ந்தார். “ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக நீங்கள் மிக சிறப்பாக செய்கிறீர்கள், உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் நீங்கள் மட்டுமே இப்படி செய்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் தொடர்பாக எத்தனையோ முக்கியமான விசயங்களை அம்பலப்படுத்துகிறீர்கள்” என்றெல்லாம் சலிக்காமல் புகழ்ந்து தள்ளினார்.

இது சும்மா ஒரு முகதாட்சண்யத்திற்கு சொல்லப்பட்ட புகழ்ச்சி, பேசுவதற்கு ஒரு ஆரம்பம், வந்தவர்களின் நோக்கம் வேறு என்பது உடன் புரிய வந்தது.

“நீங்க மத பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தி எழுதுறீங்க, மக்களிடம் பகுத்தறிவை பரப்புறீங்க, நல்ல விசயம் தான். வரவேற்கிறோம். ஆனால் இசுலாத்தை பற்றி நீங்கள் எழுதியிருக்கின்ற பல கட்டுரைகளில் விசயங்கள் தவறாக இருக்கின்றன. நீங்கள் எழுதியிருப்பதில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை எங்களால் சொல்ல முடியும்” என்றனர்.

“சரி சொல்லுங்க” என்றோம்.

“இங்கே இல்லை, ஒரு பொதுமேடை அமைத்து அங்கே வைத்து அனைவருக்கும் முன்பாக சொல்கிறோம். நீங்கள் உங்களுடைய வாதங்களை வையுங்கள். நாங்கள் எங்களுடைய வாதங்களை வைக்கிறோம் அனைத்தையும் வீடியோ எடுப்போம் மக்கள் பார்க்கட்டும்” என்றனர்.

இப்படி ஃபாருக் பேசிய பிறகு அவருடன் வந்திருந்தவர்கள் ஆளுக்கொரு கேள்விகள் கேட்டனர். அவர்களோடு பொறுமையாக விவாதித்த தோழர் பாண்டியன் பேசியதின் சாரம் இதுதான்.

“அதெல்லாம் பேசி விவாதம் பண்ணி பதில் சொல்ற விஷயம் கிடையாது. எல்லா பிரச்சனைக்கும் குரானில் தீர்வு இருக்கு என்பது உங்க கொள்கை. 1300 வருஷத்துக்கு முன்னால எழுதிய புத்தகத்தில் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. குரானை, ஹதீசை படிச்சிட்டு நாங்க பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நாங்க எழுதியிருக்கிற விஷயங்கள் எல்லாம் சரி. அதில் என்ன தவறு என்று சொல்லுங்க”

“அதற்கான இடம் இதுவல்ல” என்றனர்.

இவ்வாறு விவாதித்துக்கொண்டிருக்கும் போது அவர்களோடு வந்திருந்தவர்களில் நான்கு பேர் நான்கு மூலைகளில் அமர்ந்துகொண்டு தங்களுடைய கேமரா போனில் விவாதத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

“என்ன பாய் பண்றீங்க, எதுக்கு போலீஸ்காரன் மாதிரி வீடியோ எடுக்கிறீங்க” என்றதும் முதலில் திகைத்தனர். பிறகு அணைத்து எடுத்து உள்ளே வைத்தனர். பிறகு செல்பேசி மூலம் ஆடியோவை மட்டும் மறைவாக பதிவு செய்ததாக இப்போது தெரிகிறது.

விவாதத்தின் போது தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தினர் பகிரங்க விவாதம், இசுலாம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்ற வரம்பிற்குள் நின்று மட்டுமே பேசினர். தோழரோ அத்தகைய மத விவகாரங்கள், குர் ஆனில் இத்தனாவது அத்தியாயத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது போன்றதாக விவாதம் போவதை அனுமதிக்காமல் நடப்பு வாழ்க்கை, அரசியலுக்கு இசுலாம் என்ன தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் கேட்டு வந்தார்.

“நாங்கள் எளிமையாக கேட்கிறோம். இன்றைக்கு இருக்கின்ற எந்த பிரச்சினைக்காவது இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறதா? மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் என்று மக்களின் அடிப்படையான பிரச்ச்சினைகளுக்கு இஸ்லாம் என்ன தீர்வை கூறுகிறது” என்றதற்கு “இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு உண்டு. இந்த பிரச்சினைகள் எதையும் கம்யூனிசத்தால் தீர்க்க முடியாது. ஆனால் அனைத்து வகை பிரச்சினைகளையும் இஸ்லாத்தால் தீர்க்க முடியும்” என்றனர்.

“எப்படித் தீர்ப்பீர்கள்” என்று கேட்டதற்கு, “ஒரு மேடையை போடுங்க, பகிரங்க விவாதம் வைத்துக்கொள்வோம். அனைத்து பிரச்சினைகளையும் அங்கே வைத்து பேசிக்கொள்வோம்” என்றனர். இப்படி விவாதம் திரும்பத் திரும்ப ஒரே எல்லைக்குள் நடந்து வந்தது. மேலும் வந்தவர்கள் கேள்விகளுக்குரிய பதில்களை பேச முடியாமல் திசை திருப்பவதிலேயே குறியாக இருந்தனர்.

“உங்களோடு பகிரங்க விவாதம் நடத்துவதா இல்லையா என்பதை எல்லாம் பிறகு முடிவு செய்யலாம், அதற்கு முன்பு இங்கே ஒரு ரிகர்சல் பார்க்கலாமே” என்றார் தோழர். அதற்கும் அவர்கள் தயாராக இல்லை. மீண்டும் மேடை, வீடியோ, பகிரங்கம் என்றே வலியுறுத்தினர்.

“பார்ப்பன பாசிஸ்ட்டான ஜெயலலிதாவை உங்கள் இயக்கம் ஆதரித்துவிட்டு பிறகு மூக்குடைபட்டதால் ஆதரவை வாபஸ் வாங்கியது ஏன்?” என்கிற கேள்விக்கு பதில் இல்லை. பதில் இல்லை என்பதோடு கூச்சலிட்டுக் கொண்டு கேள்வியை அமுக்க முயன்றனர். இருப்பினும் தோழர் அவர்களோடு நிதானமாகவே பேசி வந்தார். இதனால் அவர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டார்கள் என்பதல்ல. பதில் தெரியாத பாமரத்தனம்தான் அப்படி ஆளுக்கு ஆள் பேசி திருப்ப முயன்றது என்றும் சொல்லலாம்.

“தண்ணி குடிப்பதில் துவங்கி, தொழும் போது விரலை நீட்டிக்கொண்டு தொழ வேண்டும் என்பது வரை இது இது தான் இசுலாம், இது இதெல்லாம் இஸ்லாம் இல்லை என்று தடிக்கம்பை வைத்துக்கொண்டு இஸ்லாத்தை கற்பிக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? மக்கள் எதை பின்பற்றுகிறார்களோ அது தான் இசுலாமிய மதம். சந்தனக்கூடு திருவிழா, தர்கா வழிபாடு, சூஃபி போன்று உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு தவ்ஹீத் என்கிற குண்டாந்தடியை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டுவதற்கு நீங்கள் யார்?” என்ற கேள்விக்கு, “நாங்கள் தான் உண்மையான இசுலாத்தை பின்பற்றுகிறோம்” என்றனர். இப்படி ஒரிஜினல் இசுலாத்திற்கு அத்தாரிட்டி என்று யாரும் இல்லை என்பதை தோழர் வலியுறுத்தினார். மாறாக, ‘இதுதான் இசுலாம், இப்படித்தான் பின்பற்ற வேண்டும்’ என்று சொல்வது பாசிசம் என்றார்.

பிறகு, பின்லேடனை தீவிரவாதி, பயங்கரவாதி என்று ஏன் எழுதுகிறீர்கள் என கேட்டனர். அவர் அமெரிக்காவை எதிர்த்து போராடிய போராளி என்றும் கூறினர். அவர் போராளி அல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய கைக்கூலி என்று அம்பலப்படுத்தியதும் அடுத்த விசயத்திற்கு தாவினர்.

இவர்களோடு இப்படி மூச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் முக்கால் மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இனி இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து, “இத்துடன் நிறுத்திக் கொள்வோம் எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன, இது பற்றி பேசுவதற்கு நாளை மதியம் 2 மணிக்கு அலுவலகத்துக்கு வாங்க” என்றார் தோழர்.

அப்படின்னா “நீங்க பயந்துட்டீங்களா” என்றனர். “இன்று மற்ற வாசகரோடு பொதுவாக பேசவதற்கு திட்டமிட்டிருப்பதால் உங்களோடு தனிச்சிறப்பாக நாளை பேசலாமே” என்று தோழர் கேட்டுக் கொண்டார். அதற்கு “கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்து விட்டு இப்போது நாளைக்கு பேசலாம் என்பது சரியா” என்று கேட்டனர். “இன்று வினவு பேசும் அரசியல் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் வரும் வாசகர்களோடு பேசுவதற்கு திட்டமிட்டுள்ளோம். நீங்கள் வினவை எதிர்த்து பேச விரும்புகிறீர்கள், அதற்கு பதில் சொல்லவே விரும்புகிறோம், எனவே நாளையே கூட வாருங்கள்” என்று தோழர் தன்மையாக பேசினார்.

பிறகு கிளம்பியவர்கள், போகும்போது “மனம் புண்படும்படியா நாங்கள் எதாவது பேசி இருந்தால் மன்னியுங்கள்” என்று சொல்லி விட்டு போனார்கள். ஆனால் அவர்கள் மனத்தை பண்படுத்த வேண்டும் என்பதாலேயே, தோழர் பாண்டியன் கடுமையாக பேசியிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

குறிப்பாக இந்துமதவெறிக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் செய்து வரும் பணியினை பற்றி அவர்கள் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டனர்.

“அடுத்து, நீங்க எங்களுக்காக நிறைய பன்றீங்க நாங்க அதையெல்லாம் மதிக்கிறோம் ஆனால்..” என்று துவங்கியதுமே தோழர் குறுக்கிட்டு பின்வருமாறு பேசினார்.

“நாங்க உங்களுக்காக அதை பண்ணவில்லை. நாங்கள் உங்களுக்காக இந்துமதவெறியை எதிர்க்கிறோம் என்று நீங்களே நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய தவறு. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கபரிவாரங்கள் எங்களுடைய பரம விரோதிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவது தான் எங்களுடைய நோக்கம். அதை உங்களுக்காக செய்யவில்லை. பார்ப்பன பாசிசம் என்பது இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. அதனால் தான் அதை எதிர்க்கிறோமே தவிர அது இசுலாமியர்களுக்கு எதிரானது என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை.”

“அதே போல பார்ப்பனீயத்தை எதிர்ப்பது என்பது இஸ்லாமிய மதவெறியர்களையும் கடுங்கோட்பாட்டுவாதிகளையும் ஆதரிப்பதாகாது. ஆர்.எஸ்.எஸ் மதவெறி கும்பல் எப்படியோ அப்படித்தான் நீங்களும். அவர்கள் பெரும்பான்மை மதவெறியர்கள் நீங்கள் சிறுபான்மை மதவெறியர்கள். உங்களை நாங்கள் என்றைக்கும் ஆதரித்ததில்லை, ஆதரிக்கவும் மாட்டோம். உழைக்கும் இசுலாமிய மக்கள் வேறு, மத அடிப்படைவாதிகளான நீங்கள் வேறு என்று மக்களையும் உங்களையும் நாங்கள் பிரித்து தான் பார்க்கிறோம். எனவே உங்களை நட்பு சக்திகளாக கருத முடியாது” என்று தோழர் பாண்டியன் கடுமையாகவே பேசினார்.

இந்த கடுமையை எதிர்பார்க்காததால் அவர்கள், “எங்களையும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் ஒன்றாக கருதலாமா” என்ற கேள்வியை பலவீனமாகவே கேட்டனர்.

வந்திருந்தவர்கள் சொந்த கோபமோ, சொந்த வேகமோ இல்லாமல் மண்டபத்தில் சொல்லிக் கொடுத்ததை இங்கு பேச முயன்றனர் என்றே கூறவேண்டும். வினவு மீது அவர்கள் தலைமை கொண்டிருக்கும் ஜன்மப் பகை இவர்களுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதாவோடு கூட்டு, ஆர்.எஸ்.எஸ்-ஐ வளர்ப்பதற்கு உதவுகிறீர்கள் என்று தோழர் பேசியபோது அவர்கள் திணறியதற்கு காரணம், ஏதோ ஒரு வகையில் நியாயங்களை பரிசீலிக்க கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

நடந்த நிகழ்வின் சுருக்கம் இதுதான். இப்படி நடக்கவில்லை, அப்படி பேசவில்லை என்று வந்தவர்கள் கனவிலும் கருதமுடியாது. ‘அல்லா மீது சத்தியமாக’ இப்படித்தான் நடந்தது என்பதை அவர்கள் மறுக்க முடியாது. அப்படி மறுக்க மாட்டார்கள் என்று அவர்களது நேர்மை மீது எமக்கும் நம்பிக்கை இருக்கிறது.

வினவோடு நேருக்கு நேர் முடித்து விட்டு இந்த அப்பாவி ‘வீரர்கள்’ மண்ணடிக்கு சென்று தலைமையிடம் சொல்லியிருப்பார்கள். நடந்தது என்ன என்று பதிவு செய்து போட்டு காட்டினார்களா, அல்லது வாய் வழியாக சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதிர்பார்த்த அளவுக்கு சந்திப்பு காட்டமாக நடக்கவில்லை என்று மண்ணடியில் இருக்கும் தலைமைக்கு தெரிந்து விட்டது.

பொதுவாக சண்டையில தோற்று போனவர்கள், “அப்படி அடிச்சிருக்கணும், இப்படி அடிச்சிருக்கணும், அங்க விட்டுட்டோம், இங்க பிடிச்சிருக்கணும்” என்று பேசிக் கொள்வது போன்ற ஒரு சுற்று விவாதம் போயிருக்கிறது. ஆடியோவில் தோழர் பாண்டியன் கடுமையாக பேசிய விமரிசனங்களை சமாளிக்க பல ஆராய்ச்சி செய்து சில வார்த்தைகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். பிறகு அதை வைத்து புதிதாக ஒரு ஸ்கிரீன் பிளே எழுதுவோம் என்று தயாரித்து, விருப்பத்துக்கு திட்டி, “வினவு எனும் காகிதப் புலிகளுடன் TNTJ நேருக்கு நேர்” என்ற பெயரில் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த வீடியோவில் TNTJ மாநில துணைத்தலவர் எம்.எஸ்.சையது இப்ராஹிம் என்பவர் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் சசிகுமார் பேசுவது போல பேசுகிறார். தோழர் பாண்டியனோடு நேரில் பேசியவர்களின் நாகரீகம் இவரிடம் இல்லை. வினவு, மார்க்சியம், பெண்கள் அனைவரையும் ஒருமையில் பேசுவதோடு ஏகத்துக்கும் திட்டுகிறார் இந்த ‘சசிகுமார்’. நிறையற்ற குடம் மட்டுமல்ல, நேர்மையற்ற குடம் கூட தளும்பும், அதுவும் இது மதுரை தளும்பல் என்பதால் சவுடாலும், வசவும் அதிகம்.

புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் சண்டமாருதம் பண்ணியது போல காட்ட வேண்டும் என்பதற்காக விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் நடந்தவற்றை சன் டி.வி போட்டது போல எமது அலுவலகத்தில் பதிவு செய்தவற்றை வீடியோவில் பிட்-பிட் ஆக சொருகியிருக்கிறார்கள்.

இந்த காமெடி காட்சியை நேரில் இருந்து நாங்கள் பார்த்தவர்கள் என்ற முறையில், வந்து போனவர்களின் கதி என்ன ஆகியிருக்கும் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது, அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

“தேர்தலில் மோடி பிரதமாரகப் போகிறார் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்களும் நாங்களும் பார்ப்பன பாசிசத்தை எதிர்கொள்வது என்று தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஆட்கள் இங்கு வந்து வம்புக்கிழுத்திருக்கிறார்களே, இதிலேயே அவர்கள் முல்லா ஜோக்குக்கு உரியவர்கள் இல்லையா” என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் கவலை வேறு. தங்களை இசுலாத்தின் ஒரே பிரதிநிதியாக காட்டிக் கொண்டிருந்த வேசம், இந்த தேர்தல் புழுதியில் கரைந்து விட்டது. ஜெயலலிதாவை ஆதரித்து பிஜே பேசியதும், போயஸ் தோட்டத்திற்கு வெட்கம் கெட்டு போய் நின்றதும் இசுலாமிய மக்கள் மத்தியிலேயே கடும் விமரிசனத்தை ஏற்படுத்தின. ஆரம்பத்தில் ‘திமுகதான் பாஜகவின் நட்பு சக்தி, அம்மாதான் இசுலாமியர்களுக்கு உரிய சக்தி’ என்று பேசிவிட்டு பின்னர் பிளேட்டை அப்படியே திருப்ப வேண்டிய கேவலம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது. இடையில் மோடியின் தமிழக வருகை குறித்து எமது அமைப்புகள் வீச்சாக நடத்திய பிரச்சாரம் இசுலாமிய மக்களிடம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதிலிருந்தெல்லாம் வீழ்ந்து விட்ட தமது தலைமையை தூக்கி நிறுத்தவே, அவர்கள் வினவை எதிர்த்து தமது கெட்டப்பை காட்ட முனைகிறார்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியிலில் இவர்களது சரணடைவு தோற்றுவிக்கும் இழிவை மதத்தின் காவலன் என்ற வெத்து வேட்டு பட்டத்தினால் நிறைவு செய்ய விரும்புகிறார்கள்.

இனி தேர்தல் முடிவுகள் வெளிவந்து, மோடி பதவியேற்கும் பட்சத்தில் அவரை ஆதரித்து ஜெயலலிதா அமைச்சரவையில் பங்கேற்றால் மார்க்க தலைவர் கதி என்ன? அவரது கதி குறித்து குர்ஆனில் விளக்கத்தையா தேட முடியும்? ஏற்கனவே சென்ற தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பிரச்சாரம் செய்ய காசு வாங்கியது சந்தி சிரித்ததால் இந்த தேர்தலில் காசு வாங்காமல் அதிமுகவே எல்லா ஏற்பாடுகளும் செய்து பிரச்சாரம் செய்யலாம் என்று இருந்தவர்களின் நிலை என்ன?

எனவே எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமது பெயரை காப்பாற்றிக் கொள்வதுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சனை.

உங்களுக்கும் எங்களுக்கும் மோடி வரப் போகிறார் என்பது பிரச்சனை. தவ்ஹீத் ஜமாதுக்கு கோவணம் பறி போய், மானம் கப்பலேறியதுமே காலமெல்லாம் அச்சுறுத்தும் பிரச்சனை.

நமக்கு தெரிந்தவரை தமிழக தேர்தல் அரசியலில் மிகவும் மட்டமான அரசியல் செய்யும் நபர்களாக ராமதாசும், வைகோவும்தான் இருந்தார்கள். அவர்களையும் முந்திக்காட்டுவேன் என்று இந்த தேர்தலில் சாதனை செய்திருப்பவர் பி. ஜெயினுலாபிதீன்.

ஆகவே, இந்த சாதனை தரும் இழிவை துடைக்கவே இவர்கள் எம்மை குறிவைக்கிறார்கள். புதிய கலாச்சாரம் அலுவலகத்தில் பிரச்சனை செய்தது போல இனி வரும் நாட்களில், அப்பாவி பெண்கள் பர்தா போடாமல் போனால் மிரட்டி தங்கள் வீரத்தை காட்ட வாய்ப்பு இருக்கிறது. அல்லது சந்தனக்கூடு நிகழ்விற்கு போகும் ஏழைகளுக்கு பத்வா போட்டு எச்சரிக்கை விடுத்தும் தமது ‘புனித’த்தை காட்டுவார்கள். இப்படி அப்பாவிகளை வதைத்துதான் இசுலாமியர்களிடம் தமது பெயரை தக்க வைக்க வேண்டியிருக்கிறது. அதனால் இசுலாமிய மக்கள் அவர்களுடைய எதிர்கால நலனை வேண்டியாவது இவர்களை சும்மா இருக்கச் சொல்லி கேட்டுக் கொள்ள வேண்டும்.

மாறாக, இத்தகைய வேலைகளை செய்வதன் மூலமாக ஆர்.எஸ்எஸ் தரப்புக்கு மேன்மேலும் வலு கூட்டுகிறார்கள்.

இவர்கள் அழைக்கும் பகிரங்க விவாதம் குறித்து முன்னர் வினவு சார்பில் பின்னூட்டத்தில் தெளிவாக தெரிவித்திருக்கிறோம். இவர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி, விவாதிப்பதல்ல என்று பல முறை தெரிவித்திருக்கிறோம். மேலும் விவாதத்துக்கு தயாரா என்ற இவர்களது கேள்வியே ஒரு பெரிய காமெடி. கடவுள் இருக்கிறாரா இல்லையா, குரான் வசனம் சரியா தப்பா என்று விவாதிக்கும் உரிமை எந்த இசுலாமிய நாட்டிலாவது இருக்கிறதா? இல்லை இதே விவாதத்தை எந்த இசுலாமியராவது நடத்த தவ்ஹீத் ஜமாஅத் அனுமதிக்கிறதா?

மதத்துக்குள் ஜனநாயக உரிமை கிடையாது என்பதுதான் உங்கள் மதத்தின் முதல் கோட்பாடு. இந்த அக்மார்க் ஆதிக்கத்தை பின்பற்றும் இவர்கள் எம்மை ஜனநாயக ரீதியில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பது கேலிக்கூத்தல்லவா? இது சாதி வெறியர்களுக்கும் அப்படியே பொருந்தும். ராமதாசோடு போய் பகிரங்க விவாதம் நடத்தி என்ன பலன் ஏற்படும்? அது போலவே ஜனநாயகத்தை மறுக்கும் இசுலாமிய இயக்கங்களோடு எப்படி விவாதிப்பது?

கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் அனைத்து மக்களும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடவுள் நம்பிக்கை, வழிபாடு செய்வதும், ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதும் அடிப்படை உரிமை என்று அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஷரியத் ஆட்சி நடக்கும் இசுலாமிய நாடுகளில் ஒருவன் தன்னை கம்யூனிஸ்டு என்றோ இல்லை நாத்திகன் என்றோ அறிவித்து கொள்ளத்தான் உரிமை உண்டா? இப்படி அடிப்படை ஜனநாயகத்திற்கே எதிரான மதவெறியர்களை அம்பலப்படுத்துவதே எமது பணி அன்றி, அவர்களை சரிக்கு சமமாக கருதி உரையாடல் நடத்துவதல்ல.

விவாதத்துக்கு வரவில்லை என்றால் எங்களுக்கு சேலை, ஜாக்கெட் அனுப்பி வைப்போம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதாவிடம் போய் ‘ஏம்மா மோடியை எதிர்த்து பேச மாட்டேங்கிறீங்க’ என்ற கேள்வியைக் கூட எழுப்ப முடியாமலும், போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்து பிரச்சனை செய்யாமலும் பயந்து ஓடிய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஜெயலலிதா எதை அனுப்பி வைப்பார்?

பின் குறிப்புகள் :

      1. இது போல சேலை ஜாக்கெட் அனுப்புவதாக தவ்ஹீத் ஜமாஅத்தார் கூறியிருப்பது ஃபாத்திமா உள்ளிட்ட பெண்ணினம் முழுவதையும் அவமதிக்கும் செயல் என்பது எங்கள் கருத்து. இதற்கு தனியாக கண்டனம் தெரிவிக்கிறோம். இது தொடர்பாக பெண்களும், பெண்களின் உரிமைக்கு ஆதரவாக போராடும் அனைவரும் தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். கர்நாடகவில் காதலர் தினத்தன்று காதலர்களை அடித்து விரட்டியும், பெண்கள் மது அருந்தினார்கள் என்று கன்னத்தில் அறைந்தும் அச்சுறுத்திய சிறீராம் சேனா எனும் இந்துமதவெறி ரவுடிகளுக்கு பெண்கள் பிங்க் ஜட்டி அனுப்பி எதிர்ப்பைத் தெரிவித்தது போல தவ்ஹீத் ஜமாத் அலுவலகத்துக்கு அனுப்ப விரும்புபவர்கள் அனுப்பலாம்.
        முகவரி :
        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
        30, அரண்மனைக்காரன் தெரு,
        மண்ணடி, சென்னை-1
        போன்- 91 044 25215226
        மின்னஞ்சல்- tntjho@gmail.com
      2. தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசுபவர், புதிய கலாச்சாரம் அலுவலகம் பத்துக்கு பத்து அளவுள்ள இடத்தில், ஒரு கக்கூசை இடித்துவிட்டு கட்டிய தம்மாத்துண்டு இடத்தில் இருக்கிறது என்று நம்மை பணக்காரத்திமிருடன் கேலி செய்கிறார். அய்யா, நாங்கள் உழைக்கும் மக்களிடம் உதவி பெற்றுக் கொண்டு கட்சி நடத்துவதால் கக்கூஸ் அளவுள்ள இடத்தில்தான் அலுவலகம் நடத்துகிறோம். அமெரிக்காவின் அடியாள் சவுதி அரேபியாவில் இருந்து வரும் நிதியால் நீங்கள் மாளிகையில் கட்சி நடத்துகிறீர்கள். மேலும் எமது அலுவலகத்தை போல பெரும்பான்மையான இசுலாமிய உழைக்கும் மக்களும் குடிசைகளிலும், பத்துக்கு பத்து அளவுள்ள இடங்களிலும்தான் வாழ்கிறார்கள். அந்த வகையில் அம்மக்களுக்கு நாங்கள்தான் பிரதிநிதி என்பதை உங்கள் வாயாலேயே ‘அல்லா’ வரவழைத்து விட்டான்.
      3. எமது அலுவலகத்திலிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் சிக்கியுள்ள சகோதரர்கள் கிளம்பிய பிறகு, ஏற்கனவே வந்திருந்த நண்பர்களோடு மீண்டும் உரையாடலை துவங்கினோம். அவர்களில் ஒரு நண்பர் பின்வருமாறு கூறினார்.’நான் வினவை வாசித்த இத்தனை ஆண்டுகளில் எனக்குள் நெருடலாக இருந்த ஒரு விசயத்தை பற்றி இன்றைக்கு நேரடியாக கேட்டுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அதற்கான தேவை இப்போது இல்லாமல் போய்விட்டது’‘வினவில் எல்லா மதவெறியர்களை பற்றியும் நிறைய எழுதுறீங்க. ஆனால் குறிப்பா இந்து மதத்தை பற்றி மட்டும் தான் காட்டமா எழுதுறீங்க, மற்ற மதங்கள் மீது ஒரு மென்மையான போக்கு இருப்பதாக தான் நானும் நினைத்திருந்தேன். இதே கேள்வியை தான் பலரும் பின்னூட்டங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இப்போது விடை கிடைத்து விட்டது.” என்றார்.
      4. இசுலாமிய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் :பார்ப்பன இந்து மதவெறி பாசிசம் என்பது இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதால், நாம் ஒன்றுபட்டு அதை எதிர்த்து போராடுவது அவசியம். அதே நேரம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த இசுலாமிய மக்களையும் ஆர்.எஸ்.எஸ் தனிமைப்படுத்தி ஒடுக்க முனைகிறது. எனவே, நீங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பகிரங்கமாக கண்டிப்பது அனைத்து உழைக்கும் மக்களிடையே ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கும் இந்து மதவெறியை முறியடிப்பதற்கும் உதவி செய்யும். ஆகவே உரிமையுடன் கோருகிறோம்.
      5. பார்ப்பனர்கள் மோடியை ஏன் ஆதரிக்கிறார்கள் என்ற டி.எம். கிருஷ்ணா கட்டுரையை வினவில் வெளியிட்டு அது தமிழ் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது தொடர்பாக அக்மார்க் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகளும் வயிறு எரிந்து புலம்பித் தீர்த்தனர். அவற்றை எல்லாம் தொகுத்து ஒரு சூப்பர் கட்டுரை வெளியிடலாம் என்று யோசித்த தருணத்தில்தான் டி.என்.டி.ஜே எமது உழைப்பையும் நேரத்தையும் எடுத்துக் கொண்டது. எப்டீல்லாம் யோசிச்சு ஆர்.எஸ்.எஸ் க்கு எல்ப் பண்றாய்ங்கப்பா. இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

வீடியோ – இனி காமெடி டைமை பாருங்கள்

முதலீட்டு ஒப்பந்தங்கள்: இந்தியாவின் மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!

6

ந்நிய முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதொன்றுதான் நாட்டை முன்னேற்றுவதற்கு ஒரே வழி என்று ஆளும் வர்க்கமும் ஓட்டுக்கட்சிகளும் ஒரே குரலில் நெடுநாட்களாக கூவி வருகின்றனர். இருந்த போதிலும், அந்நிய முதலீட்டாளர்களுடன் அரசு போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் மட்டும் இராணுவ இரகசியத்தை விடப் பெரிய இரகசியமாக எல்லா அரசாங்கங்களாலும் பேணப்படுகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (–MOU) உள்ள ஷரத்துக்கள் என்ன என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கே இரகசியமாக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய இரகசியங்களைத் தோண்டித்துருவி, புலனாய்வு செய்துதான், டாடா, அதானி போன்ற நிறுவனங்களுக்குத் மோடி வழங்கியுள்ள சலுகைகள், நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள், போஸ்கோவுக்கு ஒரிசா அரசு வழங்கியுள்ள சலுகைகள் போன்றவை குறித்த விவரங்களைப் பத்திரிகையாளர்களோ, ஆர்வலர்களோ வெளிக்கொண்டு வருகின்றனர். இவையெல்லாம் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்த நிலைமை.

இவையன்றி முதலீடு செய்யும் நிறுவனங்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவையோ அந்த நாடுகளின் அரசுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களையும் (bilateral investment treaties) இந்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. 2012-ம் ஆண்டு ஜூலை நிலவரப்படி, இந்தியா இதுவரை 73 நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் சுமார் 20 நாடுகளுடனான ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன. நாடுகள் என்று அழைக்கப்படும் இவற்றில் பெரும்பாலானவை மொரிசியஸ், கேமேன் தீவுகள் போன்ற பன்னாட்டு முதலாளிகளின் பொம்மை அரசாங்கங்கள்.

இப்படி பிற நாடுகளுடன் போடப்படும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் எதுவும் நாடாளுமன்றத்தின் பார்வைக்குக்கூட வருவது கிடையாது. இவை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் மிகவும் இரகசியமாகவே போடப்படுகின்றன. முரண்பாடுகள் தோன்றி பிரச்சனை சந்திக்கு வரும்போதுதான், இந்த ஒப்பந்தங்களின் அபாயகரமான உண்மை உருவம் தெரியத் தொடங்குகிறது. மறுகாலனியாக்கம் என்பது காலனியாதிக்கத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை நிரூபிக்கும் எடுத்துக்காட்டுகள் இவை.

***

09-12ஜி அலைக்கற்றை ஊழல் என்று அறியப்படும் கார்ப்பரேட் கொள்ளை நாடறிந்தவொரு பிரச்சனை. சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும்” 2ஜி உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி 22 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 122 உரிமங்களை ரத்து செவதாக பிப்.2012 -ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, உரிமங்களை இழந்த நிறுவனங்களில் ‘லூப் டெலிகாம்’ என்ற நிறுவனமும் ஒன்று. 21 உரிமங்களை வைத்திருந்த இந்நிறுவனம், இத்தீர்ப்புக்குப் பின் பல்வேறு மாநிலங்களில் தான் வழங்கி வந்த செல்பேசி சேவைகளை நிறுத்த வேண்டியதாயிற்று. மேற்கூறிய ‘லூப் டெலிகாம்’ நிறுவனத்தின் 26 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த, ‘கேத்தான் ஹோல்டிங்ஸ் மொரிசியஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், இப்போது இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாகத் தனக்கு நட்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனைச் சரிசெய்ய, தனக்கு இந்திய அரசு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (8700 கோடி ரூபாய்) நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேத்தான் ஹோல்டிங்ஸ் கோரியிருக்கிறது.

முதலீட்டு அபிவிருத்தி, மற்றும் பாதுகாப்புக்கான இந்தியா -மொரிசியஸ் இருதரப்பு ஒப்பந்தத்தின்” கீழ் இந்திய அரசிடம் இந்த இழப்பீட்டைக் கேட்கிறது இந்நிறுவனம்.

இதேபோன்று, 2ஜி அலைக்கற்றை தீர்ப்பினால் தங்களது உரிமத்தை இழந்த ரசிய நிறுவனமான ‘சிஸ்டமா’வும் வழக்கு தொடுத்துள்ளது. உரிமத்தை இழந்த இன்னொரு நிறுவனம் நார்வே நாட்டின் ‘டெலிநார்’. டெலிநார் ஆசியா என்ற பெயரில் சிங்கப்பூரில் பதிவு செய்துள்ள தனது கிளை நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் முதலீடு செய்திருப்பதால், “இந்திய – சிங்கப்பூர் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தந்தின்” கீழ் 70,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரவிருப்பதாக டெலிநார் அறிவித்தது.

உடனே இந்திய அரசு டெலிநார் மற்றும் சிஸ்டமா தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அலைக்கற்றை மறுஏலத்தில் அவர்களுக்குப் போதுமான உரிமங்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டதுடன் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது.

அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடாக உரிமத்தைக் கொடுத்த குற்றத்துக்காக” ஆ.ராசா உள்ளே வைக்கப்பட்டார். ஆனால், முறைகேடாக உரிமத்தை வாங்கிய நிறுவனங்களிடம் மண்டியிட்டு சரணடைந்திருக்கிறது இந்திய அரசு. அதாவது, ஊழல் உள்ளிட்ட எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டாலும், அந்நிய முதலீட்டாளருக்கு எதிராக இந்திய அரசோ, நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல; ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, பன்னாட்டு நிறுவனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் இதற்கான இழப்பீட்டையும் இந்திய அரசு `செலுத்த வேண்டியிருக்கும் என்பதே இந்த இருதரப்பு ஒப்பந்தம் கூறும் உண்மை. சிங்கப்பூருடனான இந்த இருதரப்பு ஒப்பந்ததை 2003 மே மாதத்தில் வடிவமைத்தது வாஜ்பாயி அரசு; அதனை 2005-இல் இறுதியாக்கியது மன்மோகன் அரசு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

***

வேறொரு வழக்கில், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா போட்டிருக்கும் இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, நவம்பர் 2011-ல் சர்வதேசத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு, நீதிமன்றத் தாமதத்திற்காக இந்திய அரசுக்கு அபராதம் விதித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒயிட் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை அரசுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் ஜார்கண்டில் பிபாவார் எனுமிடத்தில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபடுத்தியிருந்தது. ஒயிட் இன்டஸ்ட்ரீஸ் தரமற்ற கருவிகளைத் தலையில் கட்டியதால், தனக்கு நட்டம் ஏற்பட்டதாகக் கூறி, ஒயிட் இன்டஸ்ட்ரீஸ் அளித்திருந்த வங்கி உத்திரவாதத் தொகை 27 இலட்சம் டாலரை எடுத்துக் கொள்வதாக கோல் இந்தியா 1999-ம் ஆண்டு அறிவித்தது.

இதனை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் 2011-ம் ஆண்டு வரை முடியாத காரணத்தினால், அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்துக்குச் சென்றது. இந்திய உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டு காலத்திற்கு மேல் இவ்வழக்கில் நீதி வழங்காமல் இழுத்தடித்ததால், இந்திய அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், ஒயிட் இன்டஸ்ட்ரீஸுக்கு ஒரு கோடி டாலர் நட்ட ஈடு அளிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்திருக்கிறது சர்வதேசத் தீர்ப்பாயம்.

மன்மோகன் - ஒபாமா
இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு ஒப்பந்தத்தை இறுதியாக்குவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (கோப்புப் படம்).

உச்ச நீதிமன்றத்தை விமரிசித்து, அதற்கு அபராதமும் விதிக்க வகை செய்கின்ற விதத்தில் இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறதென்றால், இதனை இறையாண்மை கொண்ட நாடு என்று கூறிக்கொள்வது வெட்கக் கேடில்லையா?

***

ரு தரப்பு ஒப்பந்தம் என்ற பெயரிலான அடிமைச்சாசனம், நீதிமன்றத் தீர்ப்பை மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நேரடியாகவே கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதை வோடோபோன் நிறுவனம் நிரூபித்திருக்கிறது.

பன்னாட்டுத் தொலைதொடர்பு நிறுவனமான வோடாபோன், 2007-ம் ஆண்டு ’ஹட்ச்’ நிறுவனத்தை வாங்கியதில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு மோசடி செய்தது. வருமான வரித்துறைக்கு எதிராக வோடபோன் நிறுவனம் தொடுத்த வழக்கில், “வரியைக் கட்டத் தேவையில்லை” என்று வோடோஃபோனுக்கு ஆதரவாக பிப்ரவரி 2012 – இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு மிகப்பெரும் அளவிலான வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், அதனைச் சமாளிக்கும் பொருட்டு, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பொது விதிகளை (GAAR) அறிமுகம் செய்யவிருப்பதாக ” அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தைத் தடுக்க பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் அரசுக்குக் கொடுத்த அழுத்தம் ஒருபுறமிருக்க, வோடாஃபோன் நிறுவனமோ, இரு தரப்பு ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய அரசை நேரடியாகவே எச்சரித்தது.

“பின்தேதியிட்டு அறிமுகப்படுத்தப்படும் இந்த சட்டத்திருத்தம், இந்தியா – நெதர்லாந்து இருதரப்பு ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு எதிரானதாகையால், நாடாளுமன்றத்தில் இப்படியொரு சட்டத்திருத்தம் கொண்டுவரும் முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேசத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்போம்” என்று வோடாஃேபான் நிறுவனம் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது. பிரணாப் முகர்ஜி கொண்டுவருவதாகக் கூறிய சட்டத்திருத்தம், நிரந்தரமாக சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டது.

இந்தியாவில் தொழில் நடத்தி இலாபமீட்டும் ஒரு பன்னாட்டு நிறுவனம், இருதரப்பு ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையே ரத்து செய்ய முடியும் என்பதற்கு இது சான்று.

***

09-2து மட்டுமல்ல, இரு தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசின் உள்நாட்டு கொள்கை முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்க முடியும் என டி.சி.ஐ. என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஹெட்ஜ் ஃபண்டு நிறுவனம் நிரூபித்து வருகிறது.

நம் நாட்டின் பெரும்பாலான நிலக்கரிச் சுரங்கங்களைத் தன் வசம் வைத்திருக்கும் கோல் இந்தியா என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம், பொதுத்துறை அனல் மின் நிலையங்களுக்கு உலகச் சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு நிலக்கரியை விற்று வருகிறது. மின்சாரத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விலைக்குறைப்பு முடிவை எதிர்க்கின்ற டி.சி.ஐ. நிறுவனம், உலகச் சந்தை விலைக்குத்தான் நிலக்கரியை விற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மின் உற்பத்திக்காக சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு நிலக்கரியை விற்பதால், கோல் இந்தியா நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 2,000 கோடி டாலர் வருவா இழப்பு ஏற்படுவதாகவும், ஒரு பங்குதாரர் என்ற முறையில் இந்த இழப்பு தன்னுடைய இலாபத்தை பாதிப்பதாகவும் டி.சி.ஐ. கூறுகிறது. இந்தியா-பிரிட்டன் மற்றும் இந்தியா-சைப்ரஸ் இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் முதலீட்டாளரான தனது நலனை இந்திய அரசின் முடிவுகள் பாதிப்பதால், இந்திய அரசுக்கு எதிராகச் சர்வதேசத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

அதாவது, நம் நாட்டில் கிடைக்கும் நிலக்கரியை, நம் நாட்டு அனல் மின் நிலையங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்று ஒரு அயல்நாட்டு நிறுவனம் அரசுக்கு ஆணையிடுகிறது. “காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்” என்ற கதைதான்! ஆனால், அன்று வெள்ளையனின் முழு அடிமையாக இந்தியா இருந்ததனால், அப்படி உத்தரவிடுவதற்கான அதிகாரத்தை பிரிட்டன் பெற்றிருந்தது.

இன்று கோல் இந்தியா நிறுவனத்தின் 90% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. டி.சி.ஐ. என்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனத்திடம் 1.1% பங்குகள் மட்டுமே உள்ளன. அதுவும் எவ்வித அவசியமுமின்றி, தனியார்மயக் கொள்கைகளின் கீழ் கட்டாயமாக விற்கப்பட்ட பங்குகளே இவை. இந்த ஒரு சதவீத பங்குகள் சாதாரண உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரு சதவீதத்தால் 90 சதவீதத்தை மிரட்டியிருக்க முடியாது. ஆனால், இந்த ஒரு சதவீத பங்குதாரர் ஒரு அந்நிய முதலீட்டாளர் என்பதால்தான், அரசை மிரட்ட முடிகிறது.

***

ரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உண்மையில் இவையனைத்தும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் என்ற ஒரு தரப்பைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தங்களே. 1994-க்குப் பின்னர்தான் இந்திய அரசு இத்தகைய ஒப்பந்தங்களைப் போடத் தொடங்கியது. காட் ஒப்பந்தம் என்பது எல்லா நாடுகளுக்குமான பொது விதி என்ற பெயரில் போடப்பட்டிருக்கும் ஒரு பல தரப்பு ஒப்பந்தம்.

சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த பல தரப்பு ஒப்பந்தமே பின்தங்கிய நாடுகளைச் சுரண்டும் விதத்தில்தான் ஏகாதிபத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது பல்வேறு பிரச்சினைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்த பலதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பொதுவான நியாயத்தை எழுப்புவதற்கான வாப்பையும் அடைத்து, பின்தங்கிய நாடுகளுக்குக் கிடுக்கிப்பிடி போடும் விதத்தில்தான் இந்த இருதரப்பு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தொடர்ச்சியாக சர்வதேசத் தீர்ப்பாயத்தில் அடுக்கடுக்காக பல வழக்குகள் தொடுக்கப்படுவதால் இந்திய அரசு புதிய இருதரப்பு ஒப்பந்தங்களை ஒத்தி வைத்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படியே சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அரசிடம் இழப்பீடு கோரும் பல வழக்குகள் சர்வதேசத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேசத் தீர்ப்பாயம் என்பது சர்வதேச வணிகச் சட்டங்களுக்கான ஐ.நா. கமிசனுடைய விதிகளின்படி அமைக்கப்படும் மூவர் குழுவாகும். இக்குழுவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் பன்னாட்டு முதலாளிகளின் சட்ட ஆலோசகர்கள்தான்.

இவை அனைத்திலும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. “நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுதல், முதலீட்டாளரின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடத்தப்படுதல், பாரபட்சமின்மை ” என்பன போன்ற பொதுவான சோற்றொடர்கள் எல்லா இருதரப்பு ஒப்பந்தங்களிலும் நிறைந்திருக்கின்றன. இந்த சோற்றொடர்களைத் தங்கள் நலனுக்கு ஏற்ப வளைத்து விளக்கம் கூறும் வாப்பை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அரசு அதிகாரிகளும், பன்னாட்டு சட்ட வல்லுநர்களும் திட்டமிட்டேதான் ஒப்பந்தங்களை இப்படித் தயாரித்திருக்கிறார்கள்.

போட்ட மூலதனத்துக்கு பாதுகாப்பு வேண்டும்” என்ற நியாயமான நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாக பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அரசின் இறையாண்மை, உள்நாட்டுத் தொழில்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துக்கும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதன் மூலம்தான் பன்னாட்டு மூலதனத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.

சர்வதேச வர்த்தகச் சட்டங்களின் படி, இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் முதல் நகராட்சி, ஊராட்சி மன்றங்கள் வரையான அனைத்து அரசு உறுப்புகளின் நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசு உறுப்புகள் மட்டுமல்ல, ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தினால், அதற்கும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அதாவது, ஒரு பன்னாட்டு நிறுவனம் சுற்றுச்சூழலை அழிப்பதையோ, இயற்கை வளத்தைச் சூறையாடுவதையோ, தொழிலாளர் உரிமையைப் பறிப்பதையோ எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி, அதனை அரசு தடுக்கத் தவறியதன் விளைவாக பன்னாட்டு நிறுவனத்தின் இலாபத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதற்காகவும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசைச் சர்வதேச விசாரணைக்கு இழுத்து, இழப்பீடு கோர முடியும்.

இது என்றோ வரவிருக்கும் அபாயம் குறித்த முன்னறிவிப்பு அல்ல, இன்று நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை. மக்களுக்குத் தெரியாத வண்ணம் அரசாலும் ஆளும் வர்க்கத்தாலும் ஓட்டுப் பொறுக்கிகளாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள பிரச்சினை.

– அழகு.
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

7

“என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லாரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலை ஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்
உன்னத இமயமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தியெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந் நாளோ?”

அரசுப் பள்ளி
அடிப்படை வசதிகள் அற்ற அரசுப் பள்ளிகள்.

என்று தமிழகத்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஏக்கத்துடன் கனவு கண்டார் பாரதிதாசன். இன்னும் அந்த ஏக்கம் தீராத நிலையில், அரசால் புறக்கணிக்கப்பட்ட அடிப்படை வசதிகள், கல்விச் சூழல் குறைபாடுகள் இவற்றிற்கு இடையே அரசுப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ப்ளஸ் டூ தேர்வில் தங்களது முன்முயற்சியால் 84 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியும், அவற்றில் நான்கு மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் காட்டியுள்ளன.

இந்த சாதனையும், முன்முயற்சியும் சாதிக்கப்பட்ட சூழல் என்ன தெரியுமா?

அரசு, சட்டத்தில் கிறுக்கியுள்ள எந்த தரம் பற்றிய விதியோடும் அரசுப் பேருந்துகள் ஓடுவதில்லை என்பதை போல்தான் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணைப்படி (நிலை எண்: 270) அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகள் எந்த பள்ளிகளிலும் இல்லை.

குடிநீர்க் குழாய், கழிப்பறை வசதி, துப்புரவு உள்ளிட்ட கல்வி பயில்வதற்கான சூழல் அனைத்துமே பிரச்சனைதான். மேற்கூரை இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் மட்டுமல்ல, மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களும் கிடையாது. உடற்பயிற்சி, கணினி அறிவியல், இசை, ஓவியம், தொழில்பயிற்சி போன்ற பாடங்களுக்கு பல இடங்களில் ஆசிரியர்கள் இல்லை, இருக்கும் ஒரு சில பள்ளிகளிலும் நிரந்தரப் பணி ஆசிரியர்களில்லை. இந்த லட்சணத்தில் பள்ளிகளில் எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளைப் பார்த்துக் கொள்வதும் இந்த பற்றாக்குறை ஆசிரியர்கள்தான்.

அரசாணைப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை நிறைவேற்றாத அரசு, இருக்கின்ற குறைவான ஆசிரியர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் வேலைகள், ஆதார் அட்டை விசாரணை என பல வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த வேலைகளுக்கு தனியாக ஊழியர்களை உருவாக்கி பயன்படுத்தாமல், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டிய ஆசிரியப் பணியை கெடுக்கும் வகையிலும் அரசு செயல்படுகிறது.

தனியார் பள்ளிகள்
கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்

பள்ளி ஆய்வகத்தில் தண்ணீர், ஆய்வுப் பொருட்கள் மட்டுமல்ல தேவையான ஆய்வக உதவியாளர் (LAB ASSISTANT) கூட இல்லாமல் இயங்கும் இந்த இடர்பாட்டு நிலைமைகளுக்கிடையே தான் அரசுப் பள்ளியின் ஏழை, எளிய மாணவர்களும் அரசுப் பள்ளியின் பொறுப்புள்ள ஆசிரியர்களும் சேர்ந்து இந்த தேர்ச்சி விழுக்காட்டை எட்டியுள்ளனர் என்பது வியக்கத்தக்க விசயம்!

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களாய் பார்த்து தள்ளிக் கொண்டு போய் தனியே உரம் போட்டு, வளர்க்கும் தனியார் பள்ளிகளின் சாதனை இதற்கு முன் சாதாரணம் தான். “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தாரேன் எம் புள்ளைய ஒடுக்கெடுத்து ஒரு மெடிக்கல், இன்ஜினியரிங் காலேஜ் சீட்டா மாத்திக் கொடுங்க” என்று பெற்ற பிள்ளையை தனியார் பள்ளிகளிடம் விற்கும் பெற்றோர்களின் செழிப்பான பொருளாதாரச் சுழலுடன் ஒப்பிடுகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் பெருவாரியாக படிக்கும் அரசுப் பள்ளிகளின் சாதனை மெச்சத்தகுந்தது.

விரல்விட்டு எண்ணக் கூடிய முதலிடம், இரண்டாமிடம் என்று கதாநாயகர்களைக் காட்டும் தனியார், சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் பலரை கேட்டுப்பாருங்கள்! பலரது மதிப்பெண் 800, 830 என்று தொள்ளாயிரத்துக்கும் கீழ்தான்.

பர்ஸ்ட் ரேங்கை காட்டி பரபரப்பூட்டி உங்கள் பல்சை ஏத்தி, பர்ஸ் ரேங்க்கை கொள்ளையடிப்பதுதான் தனியார் பள்ளிகளின் தந்திரம். மற்றபடி தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டாலே பையன் மார்க்கு தள்ளும் ஏ.டி.எம். மிசினா மாறிடுவான் என்று நம்புகிறவர்கள் எண்ணத்தில் மண்தான்!

மூணு சப்ஜெட்டில் பெயில் அரசு பள்ளியில் பார்ப்பதில் ஆச்சரியமில்லை, அங்கே அரசாங்கமே பெயிலாகி கிடக்கையில், பிள்ளைகள் பாசாவதுதான் அதிசயம். ஆனால், சொத்துல பாதியக்கொட்டி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட வாரிசு அங்கேயும் மூணு சப்ஜெக்ட்ல பெயில் என்பதைப் பார்க்கையில் தனியார் பள்ளியின் தரத்தையும், மேட்டுக்குடியின் வர்க்கத் தரத்தையும் உரித்துக் காட்டுகிறது, கெட்டாலும் மேன் மக்களே!

குறைபாடுகளுடைய அரசுப் பள்ளிச் சூழலுக்கிடையேயும் சாதாரண ஏழை உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பெருமளவு தேர்ச்சியும், மதிப்பெண்களும் பெற்றிருப்பதன் மூலம் அரசால்தான் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கமுடியும் என்ற உண்மை பளிச்சிடுவதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம்.

விறகு வெட்டும் தொழிலாளியின் மகள் உசிலம்பட்டி உஷாராணி புவியியலில் 200 -க்கு 200 என பொளந்து கட்டியிருக்கிறார். பென்னாகர் அரசுப் பள்ளி மாணவி பச்சையம்மாள் நர்சிங் பாடத்தில் 192 எடுத்து மாநிலத்திலேயே மூன்றாவது வந்துள்ளார். (முதல் மதிப்பெண் 193 – தான்).

கட்டணக் கொள்ளை
தங்களால்தான் இந்த தரம் சாத்தியம் என்று தம்பட்டமடித்து தனியார் பள்ளிகள் கல்லா கட்டத்தான் இந்த அதிக மார்க் ஆர்ப்பாட்டம் பயன்படுகிறது.

அரசே அனைத்து பள்ளிகளையும் நடத்தி, தரமான கல்வி வழங்கினால், எத்தனை ஏழை, எளிய மாணவர்கள் கல்வியின் மூலமாக தங்களது திறனை இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியும், வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு ஒப்பீட்டிற்காக மதிப்பெண், மாநிலத்தில் வரிசைத்தரம் என இருக்கிற நிலையை புரிந்து கொள்ள பேசலாமே தவிர, தேர்ச்சியைத் தவிர எதற்கு இந்த மாநிலத்திலேயே முதல், இரண்டு, மூன்றாம் இடம் என்ற பரபரப்பு?

பாசானவனெல்லாம் பெரிய அறிவாளி என்ற பந்தா எதற்கு? வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!

அறிவுக்கும், மார்க்குக்கும் சம்பந்தமில்லாத நாட்டில், இந்த ஆர்பாட்டமெல்லாம் ‘பாரு பாரு எங்க பள்ளி பர்ஸ்ட் ரேங்க்கு’ என்று சீன்காட்டி நம்மிடம் காசு புடுங்கத்தான் பயன்படும்!

ஊருக்குள் நடந்தால் இன்னும் ஒரு மாசத்துக்கு தனியார் பள்ளிகளின் தேர்ச்சி புராண ப்ளக்ஸ் பேனர் தொல்லை தாங்க முடியாது! முதலில் கண்ணை பிடுங்கும் விளம்பரம், பின்பு காசை புடுங்கும் கல்வித்தரம்! இதுதான் தனியார் பள்ளியின் தந்திரம்!

தேர்ச்சி விகிதத்தோடு அறிவிப்பு போதும், முதலில் பெயிலானவர்கள், பின் தங்கியவர்களை, ஏற்றத்தாழ்வு காண்பிக்கும் இந்த பர்ஸ்ட்மார்க் பந்தா, ஆரவாரத்தை நிறுத்த வேண்டும்!

“தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” என்ற வள்ளுவரின் அழகிய கருத்தினிமை போல கல்வியின் இன்பம் அதை பிறரும் பெறுவதைக் காணும் இன்பம்தானே ஒழிய பீத்திக்கொண்டு அலையத் தேவையில்லாதது.

தங்களால்தான் இந்த தரம் சாத்தியம் என்று தம்பட்டமடித்து தனியார் பள்ளிகள் கல்லா கட்டத்தான் இந்த அதிக மார்க் ஆர்ப்பாட்டம் பயன்படுகிறது.

அரசாங்கமே வறண்டு போகுமளவுக்கு அனைத்து சூழலையும் சுரண்டிக்கொள்ளும் தனியார் பள்ளிகளை ஒழித்தால்தான் பெருவாரியான மக்களுக்கு கல்வி விடுதலையே கிடைக்கும்.

மாணவர்கள், இளைஞர்கள் போராட வரமாட்டார்கள் என்பது நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல், பத்து முறை சொன்னாலும் பிள்ளைக்கு அ – னா எழுத வரவில்லை என்பதற்காக யாரும் தற்குறியாய் விடுவதில்லை, எப்படியாவது தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று விடாப்பிடியாய் போராடுவது போல தங்களுக்கு தேவையான அரசுப்பள்ளிகளை அனைவருக்கும் பெற போராடித்தான் ஆகவேண்டும்! “அரசே அனைவருக்கும் தரமான தாய்மொழிவழிக் கல்வியை வழங்கு” என்று வீதிக்கு வந்து பாடம் படிக்கத்தான் வேண்டும்! “எதுக்கு தனியாரு? எங்களுக்குத் தேவை அரசுப் பள்ளிகள்தான்” என்று தமிழகமே முழங்க வேண்டும்!

எனவே கல்வியை காசாக்கும் தனியார்மயக் கயமையை முதலில் ஒழித்துகட்ட வேண்டும், கல்வியின் சமுதாய நலன்களை சீரழித்து, சுயநல, சுயநிதி வெறியைத் தூண்டும் கல்வி முறையை மாற்ற வேண்டும்!

அனைத்து பள்ளியையும் அரசே ஏற்று நடத்து! அனைவருக்கும் தரமான தாய்மொழிவழிக் கல்வியை அரசே வழங்கு!” என்ற அரசியல் தேர்ச்சிதான் இனி நம் தலைமுறையைக் காப்பாற்றும்.

– துரை.சண்முகம்

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !

4

ரசியலையும் வரலாற்றையும் ஆழமாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் திடீர்த் தோற்றமும் தேர்தல் வெற்றியும் அதிசயக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் பின்னணியைப் புரிந்து கொள்ளாத பல அரசியல் விமர்சகர்கள் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டிலும் என்.டி.ஆர். ஆந்திரத்திலும் திடீரென்று அரசியல் கட்சிகளைத் தொடங்கி, குறுகிய காலத்திலேயே – 16 மாதங்களிலேயே – ஆட்சியைப் பிடித்ததை ஆம் ஆத்மி கட்சியின் “சாதனை”யோடு ஒப்பிடுகிறார்கள்.

ஆனால், பலரும் காணத் தவறிய, ஒரு உண்மை உண்டு. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசு கட்சியும் அந்நிய சக்திகளின் தூண்டுதலினால், ஒரே காரணத்தால், ஒரே வகையான வரலாற்றுப் பின்னணியில் தோற்றமெடுத்தவை என்பது மறுக்க முடியாது. இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பரில், ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் விவசாயம் மற்றும் வருவாய்த்துறை செயலராக இருந்த ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற வெள்ளை அதிகாரியின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகக் குமுறிக்கொண்டிருந்த இந்திய மக்கள் கொந்தளிப்பில் இருப்பதாக, உளவுத்துறையின் ஏழு தொகுப்பு இரகசிய அறிக்கைகள் ஹுயூமிடம் கையளிக்கப்பட்டு, அதைக் காப்பதற்கான வடிகாலாகத்தான் இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சியை ஆங்கிலேயர்கள் தோற்றுவித்தார்கள் என்பது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை.

(TTCSP) சின்னம்
“சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களி்ன் திட்ட”த்தின் (TTCSP) சின்னம்.

இப்போது இந்திய மக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல; செயலிழந்துவரும் அரசு, அதிகரித்துவரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்துவரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது என்பதுடன், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசன் நிறுவனத்தின் நிதியளிப்பில் இயங்கி வரும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை நடத்தும் அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோதியா, யோகேந்திர யாதவ் முதலானவர்கள் ஆம் ஆத்மி கட்சியை 2012-ம் ஆண்டு தோற்றுவித்தார்கள். பின்னாளில் நாடுமுழுவதும் உள்ள இலட்சக்கணக்காண அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் – இப்போது அவர்கள் குடிமைச் சமூகம் என்று தமக்குப் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர் – இந்தக் கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளன.

குடிமை சமூகம் இதழ்
குடிமை சமூகம் முதல் இதழில் – 2003 செப்டம்பரில் அரவிந்த் கேஜ்ரிவால் குறித்த அட்டைப்படக் கட்டுரை (இடது); மற்றும் அரசுசார தொண்டு நிறுவனங்கள் அரசியலில் ஈடுபடுவதைக் குறித்து விவாதம் நடப்பதாக அட்டைக் கட்டுரை இடம் பெற்ற குடிமை சமூகம் 2003 நவம்பர் இதழ்.

இந்த விவரம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியின் பூர்வீகம், அடிப்படை, நோக்கம், எதிர்கால இலட்சியம் போன்றவை அவர்களுக்குத் தெரியா. அரசியல் கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காகவும் ஆதாயத்துக்காகவும் எதிராளிகள் மீது “அந்நிய (குறிப்பாக அமெரிக்க) நிதி உதவி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு-சதி” என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்தி வருகின்றன. அது ஒருபுறமிருக்க, உலகமயமாக்கமும் மறுகாலனியாதிக்கமும் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதில் இருந்து நமது நாட்டின் அரசியல் அமைப்பில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பங்கேற்பு அதிகாரபூர்வமாகவே அதிகரித்து வந்திருக்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலம் முதல், மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்களின் மக்கள் நலப்பணிகள் திட்டமிடுதல்களில், அமலாக்கங்களில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டன. அந்த மட்டங்களில் இருந்து பிரதமர், அமைச்சகங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது வரை அவற்றுக்கு அரசுடன் கலந்துறவாட இடமளிக்கப்பட்டது. அரசு அமைப்பில் உயரதிகாரிகளாக இருந்து கொண்டே, அந்நிய, குறிப்பாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு அரசே நிதியளிக்கவும் செய்தது.

இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? ஏகாதிபத்திய உலகமயமாக்கம் திணித்த புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசியல் கட்டுமானச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. “இனி நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்துத் துறைகளிலும் சட்ட திட்டங்கள் எதுவானாலும், அரசின் முறைசார்ந்த அமைப்புகள் மட்டும் தீர்மானிப்பதாகவும் செயல்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது. அப்படியான சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா என்று அறியவும் அல்லது மாற்றுக்களைப் பரிந்துரைக்கவும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் தீர்மானிக்க வேண்டும்” என்பது கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அரசு – அது எதுவானாலும் – அமலாக்கிவரும் புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்பின் முக்கியமான கூறு ஆகும். அரசின் முறைசார்ந்த அமைப்புகளான தேர்தல் அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கத்தினர் முதலானவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றச்செயல்கள் காரணமாக அவற்றின்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவை இதற்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

08-c-1

இது, மேற்பார்வைக்கு மிகவும் ஜனநாயகபூர்வமானதாகத் தோன்றும். இதைத்தான் ‘அடிமட்ட/ வேர்வரையிலான ஜனநாயகம் (grassroot democracy); மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பது (Empowerment of people)’ என்கிறார்கள். இது உண்மையில் ஒரு மாபெரும் சதி/தந்திரம். அரசுத்துறை, பொதுத்துறைத் தொழில்கள், நிறுவனங்கள் திறமையான நிர்வாகம், முன்முயற்சி, அக்கறை, பொறுப்பு இல்லாததால்தான் நட்டமடைந்து, நலிந்துபோய்விட்டன; அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்களின் திறமையான நிர்வாகம், முன்முயற்சி, அக்கறை, பொறுப்பு காரணமாக தொழிலும் பொருளாதாரமும் செழித்து வளரும் என்று சொல்லித்தான் அவற்றை கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டு, பொதுச்சொத்தைச் சூறையாடினர்.

அதேசமயம், அரசின் முறைசார்ந்த அமைப்புகளின் மிக முக்கிய அங்கமாகவும் ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் அதிகார வர்க்கத்தைக் கட்டுமானச் சீரமைப்பு ஒழிப்பதில்லை. மாறாக, அதற்கு மேலும் அதிகாரம் கொடுக்கச் சொல்லுகிறது. ஓய்வுபெற்ற அதிகார வர்க்க நபர்கள் ஒழுங்குமுறை ஆணையங்கள், சிறப்பு ஆலோசகர்கள், நிபுணர் குழுக்கள் என்ற பெயரில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு மேல் நிறுத்தப்படுகிறார்கள். மேலும், பல முன்னாள் அரசு அதிகார வர்க்கத்தினர் தரகு முதலாளிகளின், பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும் பதவியளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஓய்வுபெற்ற பிறகும் அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியம் செய்து, எல்லா இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகளுக்குமான ஊடகமாகச்செயல்படுகிறார்கள். தூய்மையான அரசு நிர்வாகத்துக்காகப் ‘மாபெரும்’ போராட்டங்கள் நடத்தும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவற்றை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. காரணம், மேட்டுக்குடி வர்க்க சகோதர பாசம்தான்.

பார்த்தா ஜெ.ஷா
குடிமை சமூகங்களின் மையத்தை நடத்தும் பார்த்தா ஜெ.ஷா, அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்றவர்.

இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தூய்மையான அரசு நிர்வாகத்துக்காகப் ‘மாபெரும்’ போராட்டங்கள் நடத்தும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும் அவற்றை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளையும் நடத்திவரும் அதே நபர்கள்தாம், நாட்டின் தற்போதைய எல்லா அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கேடுகளுக்கும் காரணமாகவுள்ள புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்புக் கொள்கைகளை அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து வகுத்து அமலாக்குகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூக, மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் “கொள்கை” முடிவெடுக்கவும் “திட்டங்கள்” வகுக்கவும் பொறுப்பேற்கும் மந்திரிகளில் ஏறக்குறைய எவருக்குமே அந்தத் “தகுதி” கிடையாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தக் காலியிடத்தை நிரப்புவதுடன், இந்த உண்மையை இப்போது அப்பட்டமாகவே ஒப்புக்கொள்ளும் வகையில் உருவாகியிருக்கின்றன, சிந்தனைக் குழாம்கள் (“திங்க் டாங்க்ஸ்”) என்ற ஏற்பாடுகள். அதாவது, ஆலோசனை வியாபாரிகள். ஒரு சிந்தனைக் குழாம் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பது சமூகக் கொள்கைகள், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும் சேவை நிறுவனங்கள்.

ரக்-ஷக் ஃபவுண்டேசன், விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன், இந்தியன் கவுன்சில் ஆன் குளோபல் ரிலேஷன்ஸ் போன்றவை இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் சில. மொத்தம் 269 சிந்தனைக் குழாம்களைக் கொண்டுள்ள நமது நாடு, அவற்றின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக்கழகக் கல்வி, உணவு பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாகச் சீர்திருத்தங்கள், அவற்றைக் கணினிமயமாக்கம்-நவீனமயமாக்கம் செய்தல் – இப்படிப் பன்முகப் பணிகளில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

08-c-2

இந்தப் பன்முகப் பணிகளில் சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செயல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கை களையும், திட்டங்களையும் அரசை ஏற்கச் செய்யும், அழுத்தம்கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

சிந்தனைக் குழாம்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகள் பற்றி இங்கே, இதுவரை சொல்லப்பட்டிருப்பவை எதுவும் ஆதாரமற்ற, கற்பனையான கோட்பாடுகள் அல்ல. அவை ஆதாரபூர்வமானவைதாம். “சிந்தனைக் குழாம்கள் -குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்” (TTCSP)என்ற இணையத்தளத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டிருக்கிறது:

08-c-3

“உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் மீது கொள்கை நிறுவனங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பது பற்றி அமெரிக்கப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்தின் கீழ் ‘சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்’ (TTCSP) ஆய்வுகள் நடத்துகிறது. அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் உள்ள அயலுறவுக் கொள்கை ஆய்வகத்தில் 1989-ம் ஆண்டு ‘சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்’ (TTCSP) அமைக்கப்பட்டது; அது, 2008-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்துக்கு மாற்றப்பட்டது. பெரும்பாலும் சிந்தனைக் குழாம்கள் (திங்க் டாங்க்ஸ்) என்று சொல்லப்படும் Kசிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP)” பொதுத் துறைகளின் கொள்கை ஆய்வு அமைப்புகளுடைய பரிணாம வளர்ச்சி மற்றும் பங்கு பாத்திரத்தைப் பரிசீலிக்கின்றது. சர்வதேச அமைதி-பாதுகாப்பு, உலகமயமாக்கம்-ஆட்சி நிர்வாகம், சர்வதேசப் பெருமாதாரங்கள், சுற்றுச்சூழல், சமூகம் – தகவல், வறுமைக்குறைப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றின் பாரிய கொள்கைத் தளங்களுக்கும் திட்டங்கள்-கொள்கைளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பி ஒரு உலக முன்முயற்சிக்கான அடித்தளமிடுவதைக் கடந்த 20 ஆண்டுகளாக சிந்தனைக் குழாம்களும் மற்றும் குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) கட்டமைத்து வருகிறது. இந்தச் சர்வதேசக் கூட்டுறவு முயற்சி பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான கொள்கை நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் அடங்கிய ஒரு வலைப்பின்னலை நிறுவும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது; அந்த வலைப்பின்னல் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நிறுவனங்கள், சமூகங்களின் கொள்கை உருவாக்கத்தை முன்னேற்றி அவற்றுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தும்”.

ஜெயபிரகாஷ் நாராயணன்.
ஆம் ஆத்மி கட்சியைப் போலவே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் லோக்சத்தா கட்சியை நிறுவிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயபிரகாஷ் நாராயணன்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏழாண்டுகள் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, இந்தியாவின் பொருளாதார, சமூக, அரசியல் சுதந்திரத்துக்காக இரண்டாவது விடுதலை இயக்கம் நடத்தப் போவதாகக் கூறிக்கொண்டு 1997-ல் நாடு திரும்பினார், குஜராத்தைச் சேர்ந்த பார்த்தா ஜெ. ஷா. அவர் இப்போது தில்லியில் “குடிமைச் சமூகங்கள் மையம்” என்ற பெயரில் ஒரு சிந்தனைக் குழாமை நடத்தி வருகிறார். அது இந்திய மற்றும் குஜராத் அரசுகளுக்காக பல துறைகளில் பணியாற்றுகிறது. அது, பென்சில்வேனியா பல்கலைக்கழகச் சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) 2012-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகிலேயே 55-வது இடத்தில் இருக்கிறது. இப்படிப் பல பார்த்தா ஜெ.ஷாக்கள் அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளில் இருந்து கடந்த 10, 15 ஆண்டுளில் இந்தியா வந்திறங்கினார்கள்.

அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து 2000 -ம் ஆண்டில் இருந்தே சிந்தனைக்குழாம்களின் மத்தியில் விவாதங்களும் ஆய்வுகளும் நடந்து வந்தன. இந்த விவாதங்கள், ஆய்வுகளில் பிறந்தவைதாம் ஆந்திராவில் லோக்சத்தா கட்சியும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும். பலரும் எண்ணுவதைப்போல அன்னா ஹசாரே தலைமையிலான Kஊழல் எதிர்ப்பு இந்தியா” இயக்கம் பிளவுபட்டு அரவிந்த் கேஜரிவால் கும்பல் திடீரென்று உருவாக்கியதல்ல, ஆம் ஆத்மி கட்சி.

(தொடரும்…)
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________