எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்..

அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும்.
அது தில்சன் பிறந்த வீடு. அது தில்சன் தவழ்ந்த இடம். அது தில்சன் நடைபயில பயன்பட்ட நாற்காலி. அது தில்சன் தத்தித் தத்தி நடந்த சுவர். அது தில்சன் ஓடியாடி விளையாடிய அறை. அது தில்சன் உணவருந்திய தரை. அது தில்சன் வீட்டுப் பாடங்களை எழுதிய இடம்.
இந்த வீட்டில்தான் தில்சன் வாய்விட்டு சிரித்தான். இதே வீட்டில்தான் ஐம்பது பைசா சாக்லெட்டுக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்தான்.
கைவிரல்களையே துப்பாக்கியாக்கி ‘டுமீல்… டுமீல்…’ என சுட்டு அவன் திருடன் போலீஸ் விளையாடிய இடமும் அதுதான். அக்கடா என்று படுத்து உறங்கியதும் அதே இடம்தான்.
பள்ளித் தேர்வுக்காக அவன் படித்ததும் அந்த இடம்தான். வீட்டுச் சூழ்நிலையை உணர்ந்து பனிரெண்டு வயதில் அவன் வேலைக்கு புறப்பட்டுச் சென்றதும் அதே இடத்திலிருந்துதான்.
இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புக்குள் வளர்ந்திருந்த வாதாம் மர கொட்டைகளை எடுப்பதற்காக கடந்த ஜூலை 3ம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு நண்பர்கள் சூழ அவன் புறப்பட்டதும் அந்த வீட்டிலிருந்துதான். வாதாம் மர கொட்டைகளை எடுத்த ‘பயங்கரவாத’ செயலுக்காக இராணுவ அதிகாரியின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி சடலமாக அவன் திரும்பி வந்ததும் அதே இடத்துக்குத்தான். பொது மக்களின் பார்வைக்கு அந்த பதிமூன்று வயது சிறுவனின் உடல் கிடத்தப்பட்டதும் அதே தரையில்தான்.
இனி தில்சன் சுவற்றில் தொங்கும் ஒரு புகைப்படம் மட்டுமே.
அது எஸ்.எம்.நகரும், காந்தி நகரும் இணைந்த குடியிருப்புப் பகுதி. கிட்டத்தட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கிருக்கின்றன. வீடுகள் என்றால் நான்கு பக்கமும் சுவர். கூரையாக ஆஸ்பெஸ்டாஸ் தகடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் துணி. ஆங்காங்கே கம்பை நட்டு அதன் மீது துணிகளை போர்த்தி உருவாக்கப்பட்ட வீடுகளும் அங்கு உண்டு. இடைவெளியின்றி இருக்கும் இந்த வீடுகளில் அதிகபட்சம் இரு அறைகள் இருக்கின்றன. ஐந்தடி உயரம் கொண்டவர்கள் கால் நீட்டி படுக்கலாம். அதற்கு மேல் உயரம் கொண்டவர்கள் கால்களை மடக்கித்தான் படுக்க வேண்டும். வாசல் கதவாக பெரும்பாலும் மைக்காவே இருக்கிறது. லேசான காற்றுக்கும் பலமாக அது ஆடுகிறது.
சென்னையின் மையப் பகுதியான அண்ணாசாலையிலிருந்து பாரிஸ் கார்னரை நோக்கிச் செல்லும் சாலையில், இப்படியொரு குடியிருப்பு இருக்கும் விஷயமே தில்சன் சுடப்பட்டு இறக்கும் வரை பலருக்கு தெரியாது. அண்ணாசாலையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு திரும்பும் பாடிகாட் முனீஸ்வரன் இருக்கும் சாலையில் திரும்பாமல் நேராக வந்தால் காயிதே மில்லத் பாலத்தில் முட்டி நிற்கும். இப்பாலத்தைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் பாரிஸ் கார்னரை அடையலாம். வலப்பக்கம் திரும்பினால், மெரீனா கடற்கரை சாலையை தொடலாம்.
இச்சாலையின் இடதுபுறத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு சொந்தமான குடியிருப்புகளும், வலது புறத்தில் தீவுத்திடலின் காம்பவுண்ட் சுவரும் இருக்கின்றன. இந்த இராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்புச் சுவர் ஐந்தரை அடி உயரத்தில் இருக்கிறது. அதற்கு மேல் இரண்டடி உயரத்தில் கம்பிகள். கம்பியின் நுனியில், வேல் போல் கூர்மை. இந்தச் சாலைதான் தில்சன் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடி மரச் சாலை.
காயிதே மில்லத் பாலம் ஆரம்பமாகும் இடத்தில், இடதுபுறமாக ஒரு தார்ரோடு பிரிகிறது. இந்தச் சாலைதான் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எம்.நகரும், காந்திநகரும் இருக்கும் குடியிருப்புப் பகுதியின் மெயின் ரோடு. இச்சாலையின் தொடக்கத்திலேயே இடதுபுறமாக மாநகராட்சிக்கு சொந்தமான கட்டணக் கழிப்பிடம் இருக்கிறது. இங்குதான் இப்பகுதி மக்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி தினமும் பயன்படுத்துகிறார்கள். சாலையின் இருபுறமும் இடைவெளியின்றி ஒன்று வீடுகள் இருக்கின்றன அல்லது நான்குக்கு நான்கு அளவில் கடைகள் இருக்கின்றன.
இந்தப் பிரதான சாலையின் வலதுபுறத்தில் ஆங்காங்கே சந்துகள் பிரிகின்றன. ஒவ்வொரு சந்திலும் இருபுறமும் வரிசையாக வீடுகள். சந்தின் அளவு மூன்றடி இருந்தாலே அதிகம். இச்சந்துகளுக்குள் இரண்டடி அகலமுள்ள கிளை சந்துகளும் உண்டு. அங்கும் வரிசையாக வீடுகள். பலரும் சந்திலேயே துணி துவைக்கிறார்கள் அல்லது அடுப்பை எரியவிட்டு சமையல் செய்கிறார்கள்.
மெயின் ரோட்டில் நூறடி நடந்தால் வலதுபுறமாக வரும் அரசு ஆரம்பப் பள்ளியை ஒட்டி ஒரு சந்து பிரிகிறது. அச்சந்துக்குள் இடப்புறமாக பிரியும் கிளைச்சந்தின் ஆறாவது வீடுதான், தில்சனின் வீடு.

”எனக்கு மொத்தம் மூணு புள்ளைங்க. பெரியவ தீபிகா. 18 வயசாகுது. பத்தாவது வரை படிச்சுட்டு கார்மெண்ட்ஸ்ல வேலை பாக்கறா. பை தைக்கிற வேலை. அடுத்து திலீபன். 16 வயசு. ஆறாவது வரை படிச்சிருக்கான். எனக்கொரு தம்பி உண்டு. அவன் மீன்பாடி வண்டி ஓட்டுவான். அவனுக்குத் துணையா திலீபன் போயிட்டு வர்றான். வண்டில மூட்டையை ஏத்தறதும், இறக்கறதும் அவன் வேலை. கடைசி புள்ளதான் தில்சன். 13 வயசாகுது. அஞ்சாவது வரை படிச்சிருக்கான்.
ராசா மாதிரி இருந்தாருங்க எம் புருஷன். குமாருன்னா எல்லாருக்கும் தெரியும். அவரும் மீன்பாடி வண்டி ஓட்டறவருதான். சொன்ன நேரத்துக்கு கரீட்டா சரக்கை கொண்டு போய் சேர்த்துடுவாரு. அதனாலயே பலபேரு அவர்கிட்ட சரக்கை டெலிவரி பண்ணச் சொல்வாங்க. யார் கண்ணு பட்டதுனு தெரியலை. அவருக்கு சக்கரை நோய் வந்துடுச்சு. ஓடியாடி வேலை செய்ய முடியலை. வண்டி ஓட்ட சிரமப்பட்டாரு.
சின்னதா… ரொம்ப லேசா அவர் கால்ல ஏற்பட்ட காயம், பெரிசாகிடுச்சு. டாக்டருங்க காலையே வெட்டி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றதுனே தெரியலை. சடார்னு டாக்டர் கால்ல விழுந்து ‘எப்படியாவது எம் புருஷன் காலை காப்பாத்திடுங்க’னு கெஞ்சினேன். அந்த மவராசன், ’80 ஆயிரம் ரூபா செலவாகும். பரவாயில்லையா’னு கேட்டாரு. வட்டிக்கு கடன வாங்கி அவர்கிட்ட பணத்தை கொடுத்தேன். புருஷன் காலை எப்படியோ குணமாக்கினாரு. ஆனா, திரும்ப வண்டி ஓட்டக் கூடாதுனு சொல்லிட்டாரு.
என்ன செய்யறதுனு தெரியலை. கடன் சேர்ந்துப் போச்சு. எம் பொண்ணும் பையனும் சம்பாதிக்கிற பணம் வட்டி கட்டத்தான் சரியா இருக்கும். குடும்பத்த எப்படி காப்பாத்த? நான் காலைல இரண்டு மணிநேரம் பேப்பர் பொறுக்கறேன். அதுல மாசம் ஆயிரத்தைனூறு ரூபா கிடைக்கும். அதுபோக சாயங்காலமானா, பூ கட்டப் போவேன். பூ விப்பேன். அதுல ஏதோ கிடைக்கும். இதை வச்சுட்டு அஞ்சு பேரு எப்படி சாப்பிடறது?
அப்பத்தான் தில்சன், ‘அம்மா நான் வேலைக்கு போறேன்’னு சொன்னான். இதைக் கேட்டுட்டு நானும் எம் புருஷனும் அழுதுட்டோம். இவனையாவது நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கு தகுந்தாமாதிரி அவனும் நல்லா படிச்சான். ஆனா, தலையெழுத்து அவனும் சம்பாதிச்சாதான் எங்களால திங்க முடியும்னு நிலை. என்ன செய்ய… சரினு சொல்லிட்டோம்.
ஆனா, தில்சன் உடம்பு பூஞ்ச உடம்பு. அவனால மூட்டை தூக்க முடியாது. மீன்பாடி வண்டி ஓட்ட முடியாது. அதனால எம் புருஷன் ரெகுலரா சரக்கு ஏத்தற கடை முதலாளிகிட்ட விஷயத்தை சொன்னோம். ‘சின்னப் ப்சங்கள வேலைக்கு வச்சிக்கறது தப்பு… ஆனா, உங்க குடும்ப சூழ்நிலை இப்படி இருக்கறதுனால யாருக்கும் தெரியாம நான் வேலை தர்றேன். அனுப்பி வை. ரெண்டாயிரம் ரூபா சம்பளமா தர்றேன்’னு சொன்னாரு.
காலைல 7 மணிக்கு தில்சன் வூட்ட வுட்டு கெளம்பினானா ராத்திரி 7க்குத்தான் வருவான். அங்க டீ, சாப்பாடு வாங்கிக் கொடுக்கறதுதான் அவன் வேலை. மதியம் அவன் சாப்பிட திலீபன்கிட்ட சோறு பொங்கி கொடுத்துவுடுவேன். சம்பளப் பணத்தை அப்படியே கொண்டு வந்து கொடுத்துடுவான். அதுல ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டான். செலவுக்கு காசு வேணும்னாலும் என்னான்டதான் கேப்பான்.
ஞாத்திகிழமை ஒருநாள்தான் அவனுக்கு லீவு. பசங்களோட இதோ இந்தச் சந்துலயேதான் கிரிக்கெட் ஆடுவான். இல்லைனா பீச்சுக்கு போவான். மத்தபடி வேற எங்கயும் போக மாட்டான். அந்தப் பொறம்போக்குங்க இருக்குங்குளே மிலிட்டரி இடம்… அங்க அவன் ஒருமுறை கூட போனதா எங்கிட்ட சொன்னதேயில்லை. நான் பேப்பர் பொறுக்க போறப்பவும், பூ விக்கப் போறப்பவும் பல பசங்கள அங்க பாத்திருக்கேன். ஒருமுறை கூட தில்சனை அங்க பார்த்ததில்ல. அதனாலயே அங்க போனப்ப அவன சுட்டுட்டாங்கனு சஞ்சய்யும், பிரவீன்னும் அழுதுகிட்டே வந்து சொன்னப்ப நம்ப முடியலை. ஆனா, இதுல எல்லாமா பசங்க பொய் சொல்லும்? கும்பலா ஓடிப் போய் பார்த்தோம்.
அங்க எம் புள்ள தலைல குண்டு பாஞ்சு சுயநினைவு இல்லாம விழுந்து கிடந்தான். படுபாவிங்க, அவன் மேல இலையை போட்டு மூடியிருந்தாங்க. யாருக்கும் தெரியக் கூடாதாம். நல்லா இருப்பாங்களா அந்தக் கபோதிங்க… வயிறு எரிஞ்சு சொல்றேன், நாசமா போவாங்க… விழுந்துக்கிடந்த தில்சனை அப்படியே தூக்கிட்டு ஆட்டோ பிடிச்சு கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேர்த்தோம். டாக்டருங்க எதுவுமே சரியா சொல்லலை. நேரம் பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. அப்புறம் தில்சன் செத்துட்டான்னு பொணமா கொடுத்தாங்க.
இப்ப வரைக்கும் எனக்கு புரியலைங்க… வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா… அதுக்காக சுட்டுக் கொல்வாங்களா? எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்…”
அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி.

அந்தக் குடியிருப்புப் பகுதி முழுக்கவே கொந்தளிப்பாக இருக்கிறது. இராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் அப்பகுதியில் மா மரங்களும், வாதாம் மரங்களும் நிறைந்திருப்பதால், அடிக்கடி சிறுவர்கள் அங்குச் சென்று பழங்களையும், கொட்டைகளையும் பறித்துச் சாப்பிடுவார்களாம். அதுபோன்ற நேரங்களில் கூப்பிட்டு, கண்டித்துத்தான் காவலாளிகள் அனுப்புவார்களாம். துப்பாக்கியை காட்டி இதுவரை யாரும் மிரட்டியதில்லை என்கிறார்கள் அக்குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள்.
”ஞாத்திக்கிழம அன்னிக்கி வாடா வாதாம் கொட்டய சாப்பிடலாம்னு நாங்கதான் தில்சனை கூட்டிட்டு அங்க போனோம். தில்சன் மரத்து மேல ஏறி வாதாம் காய பறிச்சு கீழ போட ஆரம்பிச்சான். நானும் சஞ்சய்யும் அத பொறுக்க ஆரம்பிச்சோம். அப்ப கார்ல ஒருத்தர் வந்தார். எங்கள பார்த்து சத்தம் போட்டார். உடன நானும் சஞ்சய்யும் சுவர் ஏறி குதிச்சு வெளில வந்தோம். தில்சன் மரத்த விட்டு வேகமா இறங்க ஆரம்பிச்சான். எங்கள மாதிரியே சுவர் ஏறி அவன் குதிக்க முயற்சி செஞ்சப்ப ‘டுமீல்’னு துப்பாக்கி சத்தம். அவன் தலைலேந்து ரத்தம் வர அப்படியே அந்தப் பக்கமா கீழ விழுந்தான். கார்ல இருந்தவரு உடனே போயிட்டார். நானும் சஞ்சய்யும் பயந்துபோய் ஓடி வந்து சொன்னோம்…”
கருவிழிகளில் பயம் மின்ன நடந்தக் கொடூரத்தை பிரவீன் சொல்லும்பொழுதே அடிவயிறு சில்லிடுகிறது. அப்படியிருக்க 13 வருடங்களாக அவர்கள் கண்முன்னால் வளர்ந்த ஒரு சிறுவன் குண்டடிப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த மக்களுக்கு எப்படியிருக்கும்?
சுட்டவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் செய்தார்கள். சுடப்பட்ட தில்சனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லாமல் இலை, தழைகளை போட்டு மூட முயற்சி செய்ததும், தண்ணீர் ஊற்றி உடனுக்குடன் தரையில் இருந்த அந்த ரத்தக் கறையை கழுவியதும் அவர்களது ஆவேசத்தை கிளறிவிட்டது. காவல்துறை வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் வரை மக்கள் தங்கள் மறியலை கைவிடவில்லை.

இதோ, இந்த நிமிடம் வரை இராணுவ வளாகத்துக்குள் நடந்த இந்தப் படுகொலை குறித்து இராணுவ அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாகவே சொல்லி வருகிறார்கள். முதலில் தில்சனை யாரும் சுடவில்லை. அவனாக சுவரிலிருந்து கீழே குதிக்கும்போது கம்பி குத்தி இறந்தான் என்றார்கள். ஆனால், பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தெளிவாக தில்சன் குண்டடிப்பட்டு பலியாகியிருக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. உடனே சுட்டது ஒரு இராணுவ வீரர்தான் என்றார்கள். இப்போது இல்லை… இல்லை… அது இராணுவ அதிகாரிதான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அந்த வளாகத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் இராணுவ வீரர்கள் அல்ல. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நடத்தும் தனியார் பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள். அவர்களிடம் துப்பாக்கி கிடையாது. லத்தி மட்டுமே உண்டு.
இந்த உண்மை அம்பலப்பட்டுப் போனதால் இப்போது அது இராணுவ அதிகாரிதான், லெப்டினன்ட் கர்னல்தான் என்கிறார்கள். அந்த அதிகாரி குடிபோதையில் இருந்ததால் இப்படி தன்னையும் அறியாமல் சுட்டுவிட்டார் என்று முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு மக்கள் வர அனுமதியில்லை என நியாயம் பேசுகிறார்கள். ஆனால், வெறும் இராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிதான் அது என்பதும், குடும்பத்துடன் இராணுவ அதிகாரிகள் உண்டு, உறங்கி, கக்கூஸ் போகும் ஒரு இடம்தான் அப்பகுதி என்பதையும் வசதியாக மறந்துவிடுகிறார்கள். மறக்கும்படி சொல்கிறார்கள்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த இராணுவ அதிகாரியை தமிழகக் காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி இராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வரும் தனது பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சத்தை தில்சனின் குடும்பத்தினருக்கு வழங்கியிருக்கிறார்.
”பணம் கொடுத்துட்டா எம் புள்ள திரும்பக் கெடைச்சுடுவானா? கொலக்காரன தப்பிக்க வைக்கத்தான் முயற்சி நடக்குது…” என்று கலைவாணி ஆவேசத்துடன் சொல்வதற்கு பின்னால் வலுவான காரணங்கள் இருக்கின்றன.

பூக்கடை போலீசார் முதலில் தில்சன் கம்பி குத்தி இறந்ததாகத்தான் வழக்கை முடிக்கப் பார்த்திருக்கிறார்கள். பகுதி மக்கள் சத்தம் போட்ட பிறகே குண்டு பாய்ந்து இறந்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.
இராணுவ வீரரோ அல்லது இராணுவ அதிகாரியோ பொது மக்களை இப்படி சுட்டுக் கொல்லும்போது, இறந்த மனிதர் பயங்கரவாதி என்று அறிவித்து அப்படுகொலையை நியாயப்படுத்துவதுதான் வழக்கம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அன்றாடம் நடப்பது இதுதான். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், சிறுவர்கள் பயங்கரவாத முகாம்களில் பயிற்சி எடுப்பவர்களாக சித்தரிக்கப்படுவதும், பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாவதும் இப்படித்தான்.
ஒருவேளை இராணுவத்தை சேர்ந்தவர்களை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும், காவல்துறையினரால் விசாரணை நடத்த முடியாது. இராணுவ வீரர்களுக்கென்றே இருக்கும் கோர்ட் மார்ஷல்தான் விசாரணை நடக்கும். அந்த விசாரணையும் இராணுவத்துக்கு சாதகமாகத்தான் இருக்கும். காரணம், அதிகார பலத்தில் இராணுவத்துக்கான நீதி, நியாயங்கள் வேறு.
இந்த அதிகார கொழுப்புத்தான் சென்ற தலைமுறையில் மாந்தோட்டத்தில் மாங்காய் பறிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சிறுவர்களை கட்டி வைத்து சவுக்கினால் விளாச வைத்தது. இதே கொழுப்புத்தான் நந்தனை உயிருடன் எரித்தது. சவுக்கினால் பண்ணையடிமையின் தோல் உறிவதைப் பார்த்து அன்று பண்ணையார்கள் சிரித்தார்கள். நந்தன் எரிவதைப் பார்த்து தீக்ஷிதர்கள் ஆர்ப்பரித்தார்கள். இன்று தில்சன் குண்டடிப்பட்டு இறந்ததைப் பார்த்து இராணுவ அதிகாரிகள் புன்னகைக்கிறார்கள். அதிகாரக் கொழுப்புகள் சமூக மாற்றத்தில் கரையவில்லை. கரைக்கப்படவில்லை. பதிலாக ஊதிப் பெருத்திருக்கிறது.
எந்த வேலையும் இல்லாமல் தின்னும் குடித்தும் பொழுதை போக்கும் இராணுவம்தான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நிலை கொண்டுள்ளது. காஷ்மீர், வடகிழக்கு, போன்ற இடங்களில் இராணுவத்திற்கு இருக்கும் உரிமை யாராலும் தட்டிக் கேட்க முடியாத ஒன்று. ஆயுதம் ஏந்தும் உரிமை இவர்களிடம் மட்டும் உள்ளதால் அதுவே இராணுவத்தின் கொழுப்பிற்கு காரணமாகிறது. இராணுவத்திற்கு அளிக்கப்படும் பயற்சியும், கட்டுப்பாடும் கூட பொது மக்களை அடக்கி ஒடுக்கி மிரட்டவே பயன்படுகிறது. அதிலும் இராணுவ வீரர்களை விட இராணுவ அதிகாரிகள் மிகுந்த சுகபோகிகளாகவே இருக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்.
ரத்தம் சிந்தி 13 வயது தில்சன் இதை அம்பலப்படுத்தியிருக்கிறான். மெளனமாக இதையும் ஒரு செய்தியாக கடந்துச் செல்லப் போகிறோமா?
___________________________________________________________
– வினவு செய்தியாளர்.
_________________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
- வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!
- ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அரசு பயங்கரவாதத்தின் கேடயம் !
- போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?
- பெடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா?
- மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!
- இந்திய அரசு நடத்தும் உள்ளாட்டுப் போர் [Operation Green Hunt] பதிவுகள் தொகுப்பு
- காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !
- ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
- காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
- “எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்
- காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !
- காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !
- காஷ்மீர் : காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு !
- காஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம்
- காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!
- “காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு!”
- பற்றி எரிகிறது காஷ்மீர் !!
- வந்தே மாதரமும் – தேசபக்தி வெங்காயமும் !!
- அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !
இது உண்மையில் ஒரு வேதனையான விஷயம் தான். ராணுவத்தினர் என்பதினால் காவல்துறையே இது போன்ற மூடி மறைக்கும் வேளையில் இறங்குவது வெந்த புண்ணில் விரலை பாய்ச்சும் முயற்சி.
ஹ்ம்ம், ஒரு பதிவை படித்த உடைனேயே அது உண்மையா பொய்யா என்று தெளிவாக யோசிக்காமல் உடனேயே ஒரு பின்னுட்டம் இடுவது தான் பகுத்தரிவு போலும். சம்மந்த பட்ட நபர் இராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்றவர் என்பதும், இராணூவ குடியிருப்பு அதிகாரிகளூக்கே தெரியாமல் அவர் ஒரு துப்பாக்கியை அதுவும் அனுமதி புதுபிக்க படாத ஒன்றை வைத்து இருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பதும் தற்போதைய செய்தி. போலிஸும் மனிதர்கள் தான். அவர்களூம் எடுத்த எடுப்பில் எதையும் செய்ய முடியாது.
பின் குறிப்பு: குற்றம் செய்யப்பட்டவர். தமிழன் என்பதும். இவர் MBC சாதிகாரர் என்பதும். மத மாறியவர் என்பது குறீப்பிட தக்கது. நல்ல வேலை, இந்த சம்பவத்தில் ஒரு வட நாட்டு பகுதியை சேர்ந்தவர் சம்மந்தபடவில்லை.
அது சரி, மாவோயிஸ்டுகளால், கொல்லப்படும் அப்பாவி மக்கள் மற்றும் கடை நிலை காவல் துறை உழியர்களை பற்றீய வினவின் அபிப்ராயம் என்ன? திபெத்தை ஆக்கரமித்த சீனாவை பற்றீய வின்வின் நிலை என்ன? ஒரு வேலை இது எல்லாம் RSS சதியாக இருக்குமோ 🙂
I second the opinion of the above comment. It is not right to mix politics and idealogy with a tragedy like this. If you think for a moment and analyze the reasoning behind why army would try to cover up the incident, it would be to avoid the same exact reasoning of this article. A shooting by one army personnel generalized as whole army against its own people.
The author tries to point out incidents in kashmir and north east. Can he give statistics on what the casuality is on the army side? And speaking of statistics did he even spent some time on what is the ratio of casualities of similar engagements in the world with the ones in India? How could he then say indian army is worse or better than the lankan?
“இப்ப வரைக்கும் எனக்கு புரியலைங்க… வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா… அதுக்காக சுட்டுக் கொல்வாங்களா? எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக் கபோதிய நான் சுட்டுத் தள்ளணும்…”
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!
– குர்ஆன் 5:45
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
-குர்ஆன் 5:32
எழவு வீட்டிலுமா பிராச்சாரம் செய்வது?
சரியா சொன்னிங்க ஸ்ரீனிவாசன். இந்த மாதிரி நாதாரிங்க செத்து சுடுகாட்டுக்கு போனாலும் நிம்மதியா இருக்க விட மாட்டானுங்க, அவங்களும் நிம்மதியா இருக்க மாட்டானுங்க !.வெறி புடிச்சு போய் திரியறானுங்க!..
சிறுவன் தில்ஷனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுவோம். கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு.
மாக்ஸிமம்
\\சிறுவன் தில்ஷனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுவோம். கூட்டு பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. \\
சாயீபாபாவுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.நிச்சயம் பயன் உண்டு. அப்படியே அவரது புகழை உங்கள் கடவுளர்களின் புகழை பரப்புங்கள். அது நிச்சயம் பிரச்சாரம் ஆகாது
கொல்லப்படுபவர்கள் வீட்டில் நாட்டில் உள்ள கொலைகாரர்களைப் பற்றிய பிரச்சாரம் செய்வது சரியானதா ?.. இல்லை அவன் கொன்னாலும் கடவுளை நம்பு என் கு*டிய நம்புன்னு பிரார்த்தனை செய்வது சரியானதா ?..
மிக வேதனையான செய்தி.:(
//அதிகாரக் கொழுப்புகள் சமூக மாற்றத்தில் கரையவில்லை. கரைக்கப்படவில்லை. பதிலாக ஊதிப் பெருத்திருக்கிறது.//
அதே..
ஊடகத்துறையிலும் ..
கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.அது நியாயம்.அதற்காக ராணுவதிற்கு எதிராக ஒரு சிறுவனின் மரணத்தினை பயன்படுத்துவது
அரசியல்.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கோபமும்,ஆத்திரமும் கொன்றவன் மீது வருகிறது,அது சரிதான்.அதனால்தான் அவர் அப்படிச் சொல்கிறார்.நீங்களோ அதை வைத்துக்கொண்டு உங்களுட்டைய அரசியலுக்கு ஆதரவு தேடுகிறீர்கள்.அதை அப்பகுதி மக்கள் ஆதரிக்கிறார்களா. அவர்களுக்கு ராணுவத்திற்கும் பெரிய பிரச்னை ஏதும் இருக்கிறதா. இருப்பது போல் தெரியவில்லை.அப்படி இருக்க நீங்கள் ஏன் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும்,விரோதம் உருவாக்கவும் முயற்சி செய்கிறீர்கள்.
தமிழக அரசு நியாயம் கிடைக்க முயற்சிகள் செய்து வரும் போது ஏனிந்த வேலைகளை செய்கிறீர்கள்.தமிழ்நாடு காஷ்மீர் அல்ல.அம்மாவின் ஆட்சியில் அது தமிழ் நாடாகத்தான் இருக்கும்.உங்களைப் போன்ற நக்சல்கள்,குழப்பம் விளைவிக்கும் சக்திகள் ரொம்ப துள்ளினால் அம்மாவால் உங்களின் கொட்டைத்தை அடக்க முடியும். எனவே குள்ள நரிக்கூட்டமே ஒவராக ஆட வேண்டாம்.ஆடினால் வால் ஒட்ட அறுக்கப்படும்.
சாந்தி வீட்டுல யாருக்காவது இப்படி இப்படி நடந்தா……உடனே சாந்தி ஜெய் ஹிந்த்…னு சொல்லி எல்லாருக்கும் மிட்டாய் குடுப்பாங்கப்பா……..
இங்கேயும் என் பேரில் போலிகளா?.:))
முடியல சாமி முடியல்..
தங்கள் பேரிலேயே கருத்தை சொல்ல பயமா?.
—-
வினவு இனி என் கமெண்டோடு மட்டும் என் வலைப்பூவும் வரும்..
jmms
http://punnagaithesam.blogspot.com
http://bit.ly/o4eToO
தீவுத் திடலும் தில்ஷனும்
————————-
//எனது பக்கத்து வீட்டாரில் பலர் இராணுவ வீரர்கள்தான் ஆனால் ஒருவரும் குடிக்காத நல்லவராக இல்லை.மனைவிமார்கள் தீயில் எரிந்து இந்த பழக்கத்தில் இருந்து வெளிவாருங்கள் என உயிரைக் கொடுத்தாலும் இந்த வெறி நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவதை நிறுத்தமுடிவதில்லை.
பொய்ச்சான்றிதழ் கொடுத்து இங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் போன்றவ்ர்க்கெல்லாம் இராணுவத்தில் இடம் கிடைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும்.ஒழுக்கம் கெட்டவர்கள் விபச்சாரிகளிடம் போவது மட்டுமின்றி எந்த வீடாவது திறந்துகிடக்காதா உள்ளே நுழைந்து விடலாமா எனப் பார்க்கும் போதை வெறி நாய்களைப் போன்றவரே இன்று நிறைய பேர்.//
Thann pillaiku mattu “sudu Saapadu”(Thann vittula eppadi nadandirundha YERI MALA pola veduchuruppiga,) mattra pillaiku “Palaiya SAAPADA!!!!(veliyala nadantha cool la eduthukireega!!!)Oru uyirin mathippu 5 latcham thaana…
//.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கோபமும்,ஆத்திரமும் கொன்றவன் மீது வருகிறது,அது சரிதான்.//
பாதிக்கப்பட்ட பெண்கள் காஷ்மீர், மணிப்பூர், தண்டேவடா, ஈழத்திலும்(இந்திய அமைதிப் படையின் பொறுக்கித்தனம்) உள்ளனர். முக்கியமாக பயங்கரமான ஆத்திரத்தில் உள்ளனர்.
ராணுவத்திற்கு எதிராக அல்ல ராணுவம் மக்கள் மீது பாய்ந்து குதறும் வெறிநாய்களாகவே எப்போதும் இருப்பதற்கு எதிரான உணர்வு நியாயமானது என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையிலேயே கட்டுரை உள்ளது.
இது என்ன பாகிஸ்தான் போர்டரா! துப்பாக்கியை எடுத்து பார்ப்பவர் மீதெல்லாம் சுடுவதற்கு, உடனே சுட்டவனை கைது செய்யாமல் கூடி நிற்பவர்களை விரட்டி அடிப்பது தான் போலீசின் வேலையா, தவறை மறைக்க தண்ணீர் உற்றும் அந்த போலீஸ் காரர்கள் கைது செய்ய பட்டார்களா?
Supera sonnel pongo!!! ivanuga eppavume ippadiye thaan.. tamilnaata indiavuku againsta thiruppi vittuttu aadhayam theda paapanga.kanna adhellam ennaikkum nadakkathu poi pulla kuteengala padikka veingappu Eppayume naange indians appuram thaan tamilan mannagatti ellam…….Feeling very sad about Dilshan though… May god bless his soul!!!
ஆக ஒரு இந்தியன் உம் வீட்டுப் பெண்ணை வம்பிழுத்தால் ஜெய்ஹிந்த் என்பீரோ ?..
Idho vandhuttaruya bhagat singhu… Nee enna koovunallum Tamilnaatula irukkura ellarum fist Indians appuram thaan tamizhan kumizhan ellam…Indha pirivinaiya vittutu vaya paarunga sirr.. satiyama nadakkathu unga ennam ellam…
//தமிழக அரசு நியாயம் கிடைக்க முயற்சிகள் செய்து வரும் போது ஏனிந்த வேலைகளை செய்கிறீர்கள்.தமிழ்நாடு காஷ்மீர் அல்ல.அம்மாவின் ஆட்சியில் அது தமிழ் நாடாகத்தான் இருக்கும்.உங்களைப் போன்ற நக்சல்கள்,குழப்பம் விளைவிக்கும் சக்திகள் ரொம்ப துள்ளினால் அம்மாவால் உங்களின் கொட்டைத்தை அடக்க முடியும். எனவே குள்ள நரிக்கூட்டமே ஒவராக ஆட வேண்டாம்.ஆடினால் வால் ஒட்ட அறுக்கப்படும்.//
Shut your Mouth and Ass please.
If someone is giving differnt view then it means they are நக்சல்கள்,குழப்பம் விளைவிக்கும் சக்திகள். Who is your Amma? what is her qualification? stop talking about her.
//தமிழக அரசு நியாயம் // Can your Amma bring back this kid? Can she stop atleast this happening again. Bullshit.
உங்கள் தமிழக அரசு தானே? நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் உங்கள் கொள்ளு பேரன் காலத்தில்… மனசாட்சி னு ஒன்னு சொல்வங்கலே கேள்வி பட்டுருகின்களா சாந்தி?
சாந்தி அக்கா வாழ்க. தங்கத்தாரகை அருமை அம்மா ஆட்சி வாழ்க.
இப்படிக்கு
வால் ஒட்ட அறுக்கப்பட்ட, கொட்டை அடக்கப்பட்ட வினவு.
இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்.
//இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது. தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து எந்த ஆதரவுமின்றி அழுது அரற்றிக்கொண்டிருக்கும் ஒரு காஷ்மீரத்து தாயின் வேதனையை இப்போதாவது புரிந்து கொள்வோம்//
நம் தேச பக்தி வீரர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது?
முந்தைய பின்னூட்டத்தில் அக்காகி சொன்னதைப்போல:
//காஷ்மீர் என்ற உடன் எங்களுக்கு தேச பக்தி போதை ஏற்றிவிடுகிறதே அதை எப்படி இழப்பது?
எங்களுடைய மற்ற பிழைப்புவாதத்தை, சந்தர்ப்பவாதத்தை, அப்பட்டமான சுயநலத்தை மறைக்க நாங்கள் எதை தான் பயன்படுத்துவது சொல்லுங்கள்?
இந்த நாட்டு பற்றையும், கிடிக்கெட்டையும் விட்டால் எதைக் கொண்டு எங்கள் சமூக அக்கரையை வெளிப்படுத்துவது???
அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் “காஷ்மீர் இந்தியாவின் பகுதி! அந்த பகுதி மக்களின் துயரங்களை கண்டுகொள்ள மாட்ட்டோம்!” அதை கேள்வி கேட்டால், இந்தியியாவின் பகுதியில்லை என்றால் நீ தீவிரவாதி!
மேலும், இந்தியியாவின் பகுதியில்லை என்றெல்லாம் நீங்கள் அமைதியாக உண்மையை பேசிவிட்டு போய்விட முடியாது, உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்! ஏனென்றால் எங்களது இறையான்மையை (பிழைப்புவாதத்தை, சந்தர்ப்பவாதத்தை, அப்பட்டமான சுயநலத்தை) நீங்கள் இழிவு படுத்துகிறீர்கள்!!!//
ஜெய் ஹிந்த்!! ஹ்ம்ம்…இது ஒண்ணுதான் கொறச்சல்…
இது காட்டு மிராண்டித்தனத்தின் உச்சம்..
கன்டிப்பாக… தன்டனை பெரவைப்போம் அல்லது பெட்ருதருவோம்
எப்படி?
அதுகாக நாம எல்லாரும் ஒண்ணா போராடணும்
நாம நம்ம எதிர்ப தெரிவிச்சுடே இருகணும்
வேதனையான விஷயம், நிச்சயம் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.
//பாதிக்கப்பட்டவர்களை விரட்டியடித்து ‘அமைதி’யை நிலைநாட்டும் போலீசு//
இவனுங்க தடுக்கி விழுந்தா கூட சாலை மறியல் பண்ணுவானுங்க இந்த முட்டா பசங்கள அடிக்காம கொஞ்ச சொல்லுறிங்களா? சாலைமறியல் செய்ததற்காக போலிஸ் அடித்தது சரியே.
//வாதாம் மர கொட்டைங்கள சாப்பிடறது ஒரு குத்தமா…//
வாதம் மர கொட்டை மட்டும் இல்லை பிஸ்த்தா கொட்டை, முந்திரி கொட்டை என எல்லாம் பல கொட்டையையும் சாப்பிடலாம் ஏன் மாங்கா கொட்டைய சாப்பிட்டா கூட குத்தம் இல்லை அது அவரவர் விருப்பம். ஆனால் அதை தன் வீட்டு மரத்தில் இருந்து பறித்து திண்ணவேண்டும் இப்படி சுவர் ஏறி அதுவும் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியில் போய் பறித்து தின்னது குத்தம்தான்.
ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியையும், பயிற்சி எடுக்கும் இடத்தையும் ரிசர்வ்ட் ஏரியா என்று சொல்வார்கள் அதன் அர்த்தத்தை இந்த பாமர சேரி மக்களுக்கு முன்பே அரசு விளக்கி இருக்கவேண்டும். இப்போது ஐந்து லட்சம் கொடுப்பதால் என்ன பயன்? இனி இந்த பாமர மக்களுக்கு ராணுவத்தினரை கண்டாலே ஏதோ விரோதியை பார்ப்பவர்கள் போல் தான் பார்ப்பார்கள். இருந்தாலும் அந்த ராணுவ அதிகாரி செய்தது குற்றமே அந்த சிறுவனை மிரட்டி அல்லது தண்டித்து அனுப்பி இருக்கலாம் இப்படி ஒரே அடியாக அனுப்பிவிட்டார், தண்டிக்கப்பட வேண்டியவர்.
வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை மென்மையாக அணுகுவது நல்லது. தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறார்களே? பிறகு ஏன் ராணுவத்தினரை ஏதோ சதிகாரர் போல் சித்தரிக்க வேண்டும்? தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குள் அவசரப்பட்டு எதையும் யூகித்துவிட வேண்டாம். ராணுவத்தினர் மேல் எப்போதும் மரியாதையுடன் அணுகுவதே நல்லது. இந்த விவகாரம் நாளை தமிழக மக்களுக்கு எதிரான ஒரு எரிச்சலை ராணுவத்தினரிடம் உருவாக்கி விட கூடாது. தன்னுடன் வேலை செய்யும் ஒரு நபர் குற்றம் செய்துவிட்டார் என்றால் அதை மற்றவர்கள் மறைப்பது(தவறான) இயல்புதான். தயவு செய்து ராணுவத்தினரை தவறாக சித்தரித்து எழுத, கண்டிக்க வேண்டாம்.
மக்கள் குடியிருக்கிற பகுதியில ராணூவம் மட்டும் வந்து குடியேறலாமா, தொப்பி?
//இவனுங்க தடுக்கி விழுந்தா கூட சாலை மறியல் பண்ணுவானுங்க இந்த முட்டா பசங்கள அடிக்காம கொஞ்ச சொல்லுறிங்களா? சாலைமறியல் செய்ததற்காக போலிஸ் அடித்தது சரியே. //
ஏனுங்க, பயனை ராணுவம் சுட்டுக் கொல்வதும், அதை போலீசு மூடி மறைப்பதும் தடுக்கி விழுகிற விசயமா என்ன? என்னே ஒரு மனிதாபிமானம்…..
//ஆனால் அதை தன் வீட்டு மரத்தில் இருந்து பறித்து திண்ணவேண்டும் இப்படி சுவர் ஏறி அதுவும் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியில் போய் பறித்து தின்னது குத்தம்தான்.//
நாட்டாமை, சொம்பு போன்று சில வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன…
//வினவு போன்ற சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை மென்மையாக அணுகுவது நல்லது. //
இத அட்வைசுனு இங்கிலீசுல சொல்வாங்க (தமிழ் தெரியாத இங்கிலிஸ்காரவுகளுக்காக). அட்வைஸு மட்டும்தான்… ம்…
//மக்கள் குடியிருக்கிற பகுதியில ராணூவம் மட்டும் வந்து குடியேறலாமா, தொப்பி?//
அப்ப எங்கே இருக்கணும்? கேஷ்மிர் பார்டரில்தான் அவர்கள் வசிக்கவேண்டுமோ?
//ஏனுங்க, பயனை ராணுவம் சுட்டுக் கொல்வதும், அதை போலீசு மூடி மறைப்பதும் தடுக்கி விழுகிற விசயமா என்ன? என்னே ஒரு மனிதாபிமானம்…..//
மனிதாபிமானத்தை சாலை மறியல் செய்துதான் காட்டவேண்டுமா?
நியாயம் கேட்கவேண்டும் என்றால் கேட்க வேண்டிய இடத்தில் சென்று கேட்கனும். சோம்பேறித்தனம் பட்டு நான் இருக்கும் இடத்திலேயே மறியல் செய்வேன் நீ இங்க வந்து என் பிரச்னையை தீர்த்துவை என்று எதற்க்கெடுத்தாலும் மறியலில் ஈடுப்பட்டால்?
சாலைமறியலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியும் வேதனை.
சாலைமறியல் இந்த சிறுவன் சுடப்பட்டதர்க்காகத்தான் இதுவரை தமிழக வரலாற்றில் நடந்ததா?
//நாட்டாமை, சொம்பு போன்று சில வார்த்தைகள் ஞாபகத்துக்கு வருகின்றன… //
//இத அட்வைசுனு இங்கிலீசுல சொல்வாங்க (தமிழ் தெரியாத இங்கிலிஸ்காரவுகளுக்காக). அட்வைஸு மட்டும்தான்… ம்…//
நல்ல விவாதம்.
தொப்பி தொப்பி,
இந்தக் கொலை யார் செய்தது என்று தெரிந்தும், அது குறித்து பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வந்தும் இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை? இதற்கு யாரிடம் சென்று முறையிட வேண்டும்? முப்படைகளுக்கும் குடியரசுத் தலைவர்தான் சேர்மன் என்பதால் அவரிடம் முறையிட வேண்டுமா? மக்கள் மறியல் செய்திருப்பதால் இது இந்த அளவுக்காவது வெளியே வந்திருக்கிறது. இல்லையேல் இதை கூண்டோடு மூடியிருப்பார்கள்.
இராணுவம் என்ன செய்தாலும் அதை சட்டப்படியே கேட்க முடியாது என்ற நிலைதான் தற்போது அந்த அதிகாரி குற்றவாளி காப்பாற்றபடக் காரணம். இதை எப்படி மாற்றுவது? யாரிடம் சென்று முறையிடுவது? கொஞ்சம் விளக்குங்களேன்!
தொப்பி தொப்பி
ஒரு குடிகார இராணுவ அதிகாரி இதைச் செய்திருக்கிறான். இதை சமூகத்தில் வேறு யாரும் செய்ய முடியுமா? அப்படி செய்தால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இங்கே அத்தகைய நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இராணவ ஏரியாவில் உள்ள வீட்டு, அலுவலக, சுத்தம் இதர வேலைகளுக்கு மட்டும் சேரி மக்கள் வேண்டுமா? ஏன் அதைக்கூட இராணுவ அதிகாரிகளே செய்தால் யாரும் உள்ளே நுழைய முடியாதே? தன் வீட்டு மரத்தில் உள்ள காயைத்தான் சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு சொந்தமாக வீடும், தோட்டமும் வேண்டும். அதன்படி மாளிகை தோட்டம் உள்ள பண்க்காரர்கள் மட்டுமே சாப்பிட முடியும். இது ஏழைகளை இழிவுபடுத்துவதாக உள்ளது.
நீங்கள் விஜயகாந்த், அர்ஜூன் படத்தில் உள்ள சினிமா இராணுவத்தை நம்புகிறீர்கள் போலும். நிஜ இராணுவத்தின் அட்டூழியத்தை இலங்கைக்கு சென்ற அமைதிப் படையின் வக்கிரங்களில் இருந்தும், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்.
இராணுவம் என்பது நீங்கள் நினைப்பது போல நமது மக்களை காக்கும் அமைப்பல்ல. அது இந்த நாட்டின் முதலாளிகள், அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளை பாதுகாக்கும் அமைப்பு. அதனால்தான் மக்களைக் கொல்லும் இராணுவத்தை நமது அதிகார அமைப்புகள் பாதுகாக்கின்றன.
இவ்வளவு பட்டவர்த்தனமாக ஒரு கொலை நடந்தும் அது யாரென்று தெரிந்தும் இன்னும் ஏன் கைது செய்ய முடியவில்லை? இராணுவம் தவறு செய்தால் யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பது ஏன்? அவர்களுக்கு ஏன் அவ்வளவு அதிகாரம்?
Thoppi kekarudhula enna thappiu, appo thiruttu thanatha nyayapaduthutha vinavu??
சிபிசிஐடி போலிசு குற்றவாளியை கைது செய்துவிட்டது. அவர் வேறு யாருமல்ல. ராமராஜ் என்ற ஒரு ராணுவ அதிகாரி தான்.
மாவோயிஸ்டுகள் சீனா போடும் எலும்பு துண்டுக்காக செய்யும் கொலைகளை பார்க்கும் பொழுது இராணுவன் செய்யும் தவறுகள் மிகக் குறைவு.
உங்களுக்கு சீன இராணூவம் செய்யும் தவறுகள் தெரியாதா?
என்ன கொடுமை இது, காவல் துறையில் இருப்பவர்களும் மனிதர்கள்தானே? விசாரணை செய்யாமல் எப்படி கைது செய்ய இயலும். இராணுவ அதிகாரி என்ன சங்கராச்சாரியாரா விசாரணை செய்யாமல் கைது செய்வதர்க்கு…
சம்மந்தபட்ட முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உரிய விசாரணை நடை பெற்றுவருகிறது.
இன்னும் எத்தனை நாளைக்கு?
\\வேதனையான விஷயம், நிச்சயம் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.\\
சட்டம் தன் கடமையைச் செய்யும். தொப்பி தொப்பி சொல்லிட்டாரப்பா
\\இவனுங்க தடுக்கி விழுந்தா கூட சாலை மறியல் பண்ணுவானுங்க இந்த முட்டா பசங்கள அடிக்காம கொஞ்ச சொல்லுறிங்களா? சாலைமறியல் செய்ததற்காக போலிஸ் அடித்தது சரியே. \\
சேரியில பொறந்தா முட்டாப்பசங்களாத்தான் இருக்க முடியும். பின்னே. சின்னப்பையந்தானே செத்து போயிருக்கான். இதுக்கெல்லாம் மறியல் செஞ்சா அடி உதைதான் விழும். பறப்பயலுவோ. இல்லயா தொப்பி தொப்பி.
\\வாதம் மர கொட்டை மட்டும் இல்லை பிஸ்த்தா கொட்டை, முந்திரி கொட்டை என எல்லாம் பல கொட்டையையும் சாப்பிடலாம் ஏன் மாங்கா கொட்டைய சாப்பிட்டா கூட குத்தம் இல்லை அது அவரவர் விருப்பம். ஆனால் அதை தன் வீட்டு மரத்தில் இருந்து பறித்து திண்ணவேண்டும் இப்படி சுவர் ஏறி அதுவும் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியில் போய் பறித்து தின்னது குத்தம்தான்\\
சேரிப்பயலுவோளுக்கு என்ன திமிரு. இவனுங்களுக்கு பாதாங்கொட்டை கேக்குதா. கொல்லு அவனுங்கள
\\ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதியையும், பயிற்சி எடுக்கும் இடத்தையும் ரிசர்வ்ட் ஏரியா என்று சொல்வார்கள் அதன் அர்த்தத்தை இந்த பாமர சேரி மக்களுக்கு முன்பே அரசு விளக்கி இருக்கவேண்டும். இப்போது ஐந்து லட்சம் கொடுப்பதால் என்ன பயன்?\\
தொப்பி தொப்பி. இவனுங்களுக்காக ஐந்து லட்சம் வரை நீங்க பேரம் பேசி அரசாங்கத்திடம் வசூல் செய்து கொடுக்க முன்வந்ததற்கு ரொம்பநன்றி. அப்படியே ஒவ்வொரு சாதியினருக்கும் ராணுவம் என்ன விலை வைத்திருக்கிறது என்று கூறி விட்டால் நாங்கள் குண்டடிபட்டு சாகும்போது எங்கள் விலை என்ன என்று தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அப்படியே காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம் இங்குள்ளவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் என்ன விலை என்றும் கூறிவிடுங்கள். உங்கள் புரோக்கர் கட்டணம் எவ்வளவு என்றும் கூறி விடுங்கள்.
\\இருந்தாலும் அந்த ராணுவ அதிகாரி செய்தது குற்றமே அந்த சிறுவனை மிரட்டி அல்லது தண்டித்து அனுப்பி இருக்கலாம் இப்படி ஒரே அடியாக அனுப்பிவிட்டார்\\
என்ன ஒரு பரிதாபம். ஐயோ பாவம்(அந்த ராணுவ அதிகாரி)
\\ராணுவத்தினர் மேல் எப்போதும் மரியாதையுடன் அணுகுவதே நல்லது. இந்த விவகாரம் நாளை தமிழக மக்களுக்கு எதிரான ஒரு எரிச்சலை ராணுவத்தினரிடம் உருவாக்கி விட கூடாது\\
ஐயோ எனக்கு ரொம்ப பயமாகி விட்டது. ராணுவத்தார் என்னையும் இப்படித்தான் சுட்டுக்கொன்று விடுவார்களா.நான் அவர்களிடம் ரொம்ப மரியாதையுடன் இனி அணுகிக்கொள்கிறேன். இல்லையென்றால் அவர்கள் எரிச்சலில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் கொன்று விட்டால் . . .
ஒரு சில ராணுவ வீரர்கள் செய்யும் தவறால் ஒட்டு மொத்த ராணுவத்தையும் குற்றம் சாட்டுவது சரியல்ல..
//இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது//
இதைதான் வேண்டாம் என்கிறேன். இப்படி போராடுகிறேன் என்று இந்திய ராணுவத்தினருக்கு எதிராக எழுதுவதும், கண்டிப்பதும் தவறான செயல்.
தயவு செய்து வினவு இதுப்போன்று எழுத, எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.
ஏன், சொன்னா என்ன? இந்திய ராணூவத்தால பொதுமக்களுக்குன்னு நடந்த ஒரு நல்ல சம்பவத்த சொல்லுங்க தொப்பி!
தொப்பி தொப்பி
இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை நூற்றுக்கணக்கான மக்களை கொன்று, பெண்களை வன்புணர்ச்சியும் செய்திருக்கிறது. இன்றளவும் இது ஈழத்து மக்களிடம் ஆறாத வடுவாகத்தான் இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? இதைக் கண்டிக்காமல் இராணுவத்தின் கீர்த்திக்கு அவப்பெயர் வராமல் பாதுகாக்க வேண்டும் என்று ஏன் கோருகிறீர்கள்?
இதற்க்காகத்தானே இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ் காந்தியை ‘மேலே’ அனுப்பினார்கள்…
இந்திய ராணுவம் புரையோடிப்போய் ரொம்ப வருஷம் ஆச்சு…
இந்திய ராணுவ வரலாற்றில் தில்ஷன் விஷயம் பத்தோடு பதினொன்னு.
அதுவும் அமைதி காக்கும் படை என்ற போர்வையில் வந்து…
Modhalla, inga irukka tamizhargal nalla irukkatum avanavan kalaikella 2 poradhukku edam illama thavikiran, 1 vera saaapatukku kashtapadran idhule ivanunga srilankan tamilsa pathi pesaranunga.. Poi washermanpet, Royapuram sidela trainla poittu va avanga padra avastha theriyum.. idhulla ilangai onnu thaan korachal…
//எதிராக எழுதுவதும், கண்டிப்பதும் தவறான செயல். // ஏன்?
//இலங்கை இராணுவத்தின் கொடூரத்தை சானல் 4 மூலம் கண்டிருக்கிறோம். இந்திய இராணுவத்திற்கு ஒரு சானல் 4 பத்தாது//
நண்பரே THOPPITHOPPI இந்த கூற்று சரியா தப்பா? அதை சொல்லுங்க
//தயவு செய்து வினவு இதுப்போன்று எழுத, எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.//
மேலே உள்ளதிற்கு பதில் சொல்லுங்கள் அதற்கு வினவு ஊக்கு விக்கிறது ஹேர் பின் விக்கிறது பத்தி பேசுவோம்
இதே போன்ற ஒரு சம்பவம்= ஓரான்டுக்கு முன்,அதே பகுதியில் ரானுவ வீரன் ஒருவன் ட்ராபிக் சிக்னலை மதிக்காமல் மிகப்பெரிய ரானுவ லாரியை ஓட்டி, எதிரில் வந்த வயதான ஒருவரைக் கொன்றான்.நினைவிருக்கிரதா? அவன் இப்ப எங்கே என யாருக்காஷும் தெரியுமா?
இவனுங்கலுக்கு பெரிய புடுங்கீங்கன்னு நெனப்பு, தின்னு கொழுத்த மயிரான்டிங்க.
யோவ் தொப்பி! ஒரு குழந்தைப் பையன் இதைச் செய்தது தப்பா? அதுக்கு அவன கொல்லுவானுக்ளா?