Tuesday, June 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!

மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!

-

செய்தி-92

மாருதி-தொழிலாளர்-குடும்பத்தினர்

மாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “தொழிலாளர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்றும் “வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை திரும்ப பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஹரியானாவின் ஹிஸ்சார், ரோஹ்தக், ஜிந்த், கைத்தால், நர்வானா, குர்கான், யமுனா நகர், குருக்சேத்ரா, கர்னால் பகுதிகளிலிருந்தும் உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடாவை சந்திக்க விரும்பினர்.

ஹரியானா போலீஸ் கமிஷனரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படையினரும் அவர்களது அந்த உரிமையை மறுத்தனர். அரசும், காவல் துறையும் மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் எதிராகவும் சுசுகி நிர்வாகத்துக்கு சாதகமாகவும் செயல்படுவது அனைவருக்கும் தெளிவானது.

அரசு அலுவலத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு முதலமைச்சருக்கான கடிதத்தை அலுவலர் ஒருவர் மூலம் அனுப்பினார்கள். கூட்டத்தில் தொழிலாளர்களின் உறவினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.

  • சுரேஷ் என்ற தொழிலாளரின் சகோதரர், “மாருதி நிர்வாகத்தின் கட்டளைக்கேற்ப தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்” என்று தெரிவித்து “அரசு நிர்வாகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
  • தொழிலாளர் ராம்விலாஸின் மாமா ரமேஷ் “குடும்ப உறுப்பினர்களைக் கூட விட்டு வைக்கவில்லை” என்றார்.
  • “நடந்த கலவரத்தில் நிர்வாகத்தின் பொறுப்பை பற்றிய முறையான விசாரணை நடத்த வேண்டும்” என்று சுஷ்மா கோரினார்.
  • ஜக்பீர் என்பவர் தனது மகனுக்கு இரண்டு முறை சிறந்த தொழிலாளர் விருதை வழங்கியது நிறுவனமே இப்போது அவரை சிறையில் அடைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.  “விசாரணை கூட நடக்காத நிலையில் அனைத்து தொழிலாளர்களையும் கிரிமினல்கள் என்று அழைக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.

“தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அரசு எந்த விதமான மதிப்பும் கொடுக்கவில்லை” என்பது அனைவரின் கருத்தாக வெளிப்பட்டது.

மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் குடும்ப உறுப்பினர்கள் குழுவின் பதாகைகள் பிடிக்கப்பட்டிருந்தன.

“தொழிலாளர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள், அனைத்து தொழிலாளர்களையும் உடனே விடுதலை செய்!”

“நிறுவனமே அரசே காவல் துறையே தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்து!”

“ஹூடா அரசே எங்களுக்கு பதில் சொல், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மதிப்பு கொடு!”

“குற்றம் செய்த மாருதி சுசுகி நிர்வாகத்தை தண்டி!”

என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்-

  1. ஜூலை 18 நள்ளிரவு முதல் கைது செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்!
  2. மாருதி சுசுகி நிர்வாகத்துக்கு எதிராக சதிச் செயல், கொலைக் குற்ற வழக்குகளை பதிவு செய்!
  3. வேலை நீக்கம் செய்யப்பட்ட 546 தொழிலாளர்களையும் திரும்ப பணிக்கு எடு!
  4. தொழிலாளர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் சித்திரவதை செய்யும் காவல் துறை அதிகாரிகளுக்கு தண்டனை கொடு!
  5. தொழிலாளர் நலச் சட்டங்களை மீறிய தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!

நன்றி

 இதையும் படிக்கவும்

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க