ழல் – பாலியல் சீரழிவு  – நிர்மலாதேவி – என சீரழிக்கப்படும் உயர்கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், நீட் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மோடி அரசின் அறிவிப்பு என உயர்கல்வி மீதான மோடி அரசின் தொடர் தாக்குதல்களை கண்டிக்கும் விதமாகவும் கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

வருகிற மே.13 அன்று மாலை.5 மணியளவில் சென்னை சி.ஐ.டி.காலனி, கவிக்கோ மன்றத்தில் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் ’’கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி’’ என்ற நூலை வெளியிடப்போவதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்பாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோடி அரசால் திணிக்கப்பட்ட நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி உரிமையை பறித்து மாணவி அனிதாவை கொன்றது. இன்று வெளிமாநில தேர்வு மையம், சோதனை, கட்டுப்பாடு என்ற பெயரில் சி.பி.எஸ்.இ வாரியம் செய்த சித்திரவதையால் மூன்று பெற்றோர்கள் நெஞ்சு வெடித்து செத்திருக்கிறார்கள். “நீட் தேர்வை ரத்து செய்” என்று ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் மக்களும் ஓராண்டாக போராடி வருகிறோம். இதையெல்லாம் மயி…க்கு சமமாகக் கூட மதிக்காத மோடி அரசு தமிழக மாணவர்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி இழைக்கிறது. தகுதி திறமையின் பெயரால் நடக்கும் இந்த நீட் தேர்வு என்பதே ஒரு பயங்கரவாதம்.

இன்னொரு பக்கம், அருப்புக்கேட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி 4 மாணவிகளை உயர் அதிகாரிகளின் காமவெறிக்கு பலியாக்க முயன்ற விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் ஆளுநர் வரை சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வசமாக சிக்கிக்கொண்ட ஆளுநரோ துணைவேந்தர் அமைத்த விசாரணைக் குழுவை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக தானே ஒரு விசாரணைக்குழு அமைத்திருக்கிறார். பி.ஜே.பி-யின் அடிமையான அ.தி.மு.க. அரசின் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார்கள்.

‘இது பத்தாண்டுகள் கதை’ என்று ஆளுநர் மாளிகை, உயரதிகாரிகள் தொடர்பு பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் நிர்மலா தேவி. சூரப்புலிகள் சந்தானம் குழுவும், சி.பி.சி.ஐ.டி யும் நிர்மலா, முருகன், கருப்பச்சாமி என மூன்று பேரை மட்டும் குற்றவாளியாக்கி வழக்கை ஊத்தி மூடப்பார்க்கிறது. குற்றவாளிகளே விசாரணை கமிசன் அமைத்தால் வேறு என்ன நடக்கும்?

தமிழகத்திலுள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு RSS காரர்களை துணைவேந்தர்களாக நியமித்துள்ளார் ஆளுநர். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாநிலக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகியவைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தர அடிப்படையிலான தன்னாட்சி வழங்கியுள்ளது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்.

இதன் விளைவு, புதிய பாடதிட்டங்கள், பாடப்பிரிவுகள், துறைகளை ஆரம்பிக்கவும், பேராசிரியர் தேர்வுகள், மாணவர் சேர்க்கைக்கும் UGC ன் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. இப்பல்கலைக்கழகங்கள் சந்தையின் தேவையையொட்டி புதிய படிப்புகளையும், திறன் படிப்புகளையும் சுயநிதி முறையில் (self financing mode) வழங்கலாம். வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம்.

பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் நிதி படிப்படியாக குறைக்கப்படும். நிதி சுமையை சமாளிக்க கல்விக் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்படும். இடஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்படும், கல்வி உதவித்தொகைகள் நிறுத்தப்படும். கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் அண்ணா பலகலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலை உருவாகும். ஏறத்தாழ அரசு பல்கலைக்கழகங்களை தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கையே தர அடிப்படையிலான தன்னாட்சியாகும்.

இலஞ்ச-ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றச்சாட்டுகள், தனியார்மயம் என ஒட்டுமொத்த உயர்கல்வித்துறையுமே கிரிமினல்மயமாகி மாணவ சமுதாயத்திற்கு எதிரானதாக மாறியுள்ளதையே இதெல்லாம் காட்டுகின்றன. உயர்கல்வி சீரழிக்கபப்டுவதற்கு மூல காரணமான கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம். அனைவருக்கும் தரமான – இலவச கல்வி கிடைக்க மாணவர்கள் – ஆசிரியர்கள் – பெற்றோர்கள் குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப்போம்! வாரீர்!” என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


”கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி”

நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்

 

நாள்: மே.13  நேரம்: மாலை.5 மணி,
இடம்: கவிக்கோ மன்றம், சி.ஐ.டி காலனி,சென்னை.
( மியூசிக் அகாடமி அருகில் )

 


நிகழ்ச்சி நிரல்:

தலைமை;

தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

கருத்துரை;

திரு.பேரா ப.சிவக்குமார்,
மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசுக்கல்லூரி.

திரு.பேரா அ.கருணானந்தன்,
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி.

திரு.பேரா அ.சீனிவாசன்,
தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு.

திரு.பேரா ஜெ.அமலநாதன்,
பொருளாதாரவியல் துறைத்தலைவர்,
புனித சவேரியர் கல்லூரி,நெல்லை.

திருமதி.பேரா சி.சாந்தி, சென்னை.

நன்றி உரை;

தோழர்.வா.சாரதி,
மாவட்ட செயலாளர், பு.மா.இ.மு. சென்னை.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல்,
சென்னை -95, 94451 12675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க