மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?

தேதி; 29.05.2018

பத்திரிக்கைச் செய்தி!

அரசாணை என்பது கபட நாடகம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடாது!
போராடும் மக்களை பயபீதியில் உறைய வைத்து
போராட்டத்தை கைவிடச் செய்யவே துப்பாக்கிச் சூடு – படுகொலை!

தூத்துக்குடியில் கடந்த 22-05-2018 அன்று கொலைகார ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீர்த்த 13 போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எல்லாக் கட்சி ஆட்சிகளிடமும் முறையிட்டுள்ளோம். மாவட்ட கலெக்டர்கள், போலீசு அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் நூற்றுக்கணக்கில் மனுக்கொடுத்தாகிவிட்டது. ஒன்றும் நடக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் நச்சுகளால் இன்று மூச்சுக்காற்றும் நஞ்சாகிவிட்டது, குழந்தைகள் பிறக்கும் போதே ஊனமாக பிறக்கிறார்கள், புற்றுநோயால் சாகிறோம், இன்னும் பல நோய்களால் தாக்கப்பட்டு வருகிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஏன் சாக வேண்டும்?.

இந்த போராட்டம் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, சரக்குப்பெட்டக இணையம் எதிர்ப்பு போராட்டங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது, மீறினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்ற பயபீதியை போராடும் மக்களிடம் ஏற்படுத்தி பணியவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திட்டமிட்ட படுகொலை, போலீசு வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆலையை முடு என அமைதி வழியில் தொடர்ந்து போராடிய தூத்துக்குடி மக்கள் அதே வழியில் நூறாவது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முடிவு தெரியாமல் வீடு திரும்ப மாட்டோம் என முடிவு எடுத்தனர்.  22 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் மக்களை அமைதி வழியில் போராட அனுமதித்திருந்தால் எதுவும் நடந்திருக்காது. அல்லது தற்போது அரசாணை போட்ட அரசு பத்து நாட்களுக்கு முன்பு செய்திருந்தால் இந்த கொடூரமான அரசு படுகொலை நடந்திருக்காது.

போராட்டத்தை பிளவுபடுத்தி சீர்குலைத்து ஒடுக்க முயன்றது, 144 தடை உத்திரவு போட்டது, அலை அலையாக காட்டாற்று வெள்ளமாக வந்த மக்களை தடுத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி மண்டையை உடைத்தது, கலெக்டர் போன்ற வருவாய் துறை அதிகாரிகள் இல்லாமல் ஆயுதங்களோடு போலீசாரே முழுமையாக மக்களை மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது, இவைகள்தான் மக்கள் ஆத்திரப்படுவதற்கு காரணம்.

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?.

தீ வைப்பு சம்பவங்கள், வன்முறை போன்றவற்றில் போலீசாரின் திட்டமிட்ட பங்கு எவ்வளவு என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளில் போலீசு நடந்துகொண்டதை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஸ்டெர்லைட் ஆலையின் முதலாளி, முதலமைச்சர், டி.ஜி.பி. அளவில் திட்டமிடப்பட்டு முழுமையாக ஒரு கொடூரமான கொலைவெறித் தாக்குதலை போராடிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அருகில் இருந்தும், குறிவைத்தும் நேருக்கு நேராக போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராடும் முன்னணியாளர்களை இயக்க நிர்வாகிகளை குறிபார்த்து சுட்டு கொலை செய்திருக்கிறார்கள். எத்தனை பேர் பலியானார்கள் என்பதை அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது.

இந்த போராட்டம் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, சரக்குப்பெட்டக இணையம் எதிர்ப்பு போராட்டங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது, மீறினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்ற பயபீதியை போராடும் மக்களிடம் ஏற்படுத்தி பணியவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திட்டமிட்ட படுகொலை, போலீசு வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மக்களாட்சி, போலீசு மக்களின் காவலர்கள் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

தூத்துக்குடி கிராம – நகர பொது மக்கள் அடங்கிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புதான் போராட்டத்தை வழி நடத்தி வந்தது. அதன் வழிகாட்டுதலை அனைத்து பிரிவு மக்களும் ஆதரித்து பங்கேற்று வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் அதை மூடியேத் தீர வேண்டும் என அறிவுப்பூர்வமாக நன்கு அறிந்து கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒற்றுமையாக போராடி வருகின்றனர். அம்மக்களை போராடுவதற்கு வெளியில் இருந்து தூண்டுகிறார்கள் என அனில் அகர்வாலும் சொல்கிறார். போலீசும் சொல்கிறது. இது போராடும் மக்களை முட்டாளாக கருதி கொச்சைப்படுத்துவதாகும். ஐ.ஏ.எஸ். அல்லது அமைச்சர்கள் யாரானாலும் தூத்துக்குடி பெண்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? முடியாது.

பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு காரப்பரேட் முதலாளியை எதிர்த்து ஒரு மாவட்ட மக்கள் மட்டும் எப்படி போராடி வெல்ல முடியும். மக்கள் போராட்டத்தை ஆதரித்து அதில் பங்கேற்பவர்களை விசமிகள், வன்முறையாளர்கள் என்பது முற்றிலும் தவறானது கண்டிக்கத்தக்கது.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பவர்கள் யாரும் அந்த மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்வதில் தவறு இல்லை. போராடி வரும் பல ஆயிரக்கணக்கான மக்களில் பலர் பல்வேறு அமைப்பு, கட்சிகளை சார்ந்தவர்கள் தான். பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?. பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு காரப்பரேட் முதலாளியை எதிர்த்து ஒரு மாவட்ட மக்கள் மட்டும் எப்படி போராடி வெல்ல முடியும். மக்கள் போராட்டத்தை ஆதரித்து அதில் பங்கேற்பவர்களை விசமிகள், வன்முறையாளர்கள் என்பது முற்றிலும் தவறானது கண்டிக்கத்தக்கது.

மக்கள் அதிகாரம் வன்முறை அமைப்பு அல்ல. டாஸ்மாக்கை மூடும் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மத வெறி பாசிசம்,  பணமதிப்பு நீக்கம், ஒக்கிப்புயல், மீனவர்கள் படுகொலை, வெள்ளப்பேரழிவு இப்படி எண்ணற்ற பிரச்சினைகளில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம், ஆர்ப்பாட்ம், பொதுக்கூட்டம், மாநாடு என நடத்தி தேசநலன், மக்கள் நலன் சார்ந்து கொள்கைப் பூர்வமாக தமிழக மக்களின் மதிப்பை, நம்பிக்கையை பெற்றுள்ளது. போராட்டத்தை வைத்து பிழைப்புவாதம் செய்யாமல் தியாகப்பூர்வமாக போராடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

போராட்ட உணர்வுகள், போராட்ட ஒற்றுமைகளை மழுங்கடிக்கச் செய்ய அவர்களுக்கு சிலகாலம் தேவை. அது முடிந்தவுடன் மீண்டும் கோர்ட் உத்திரவுப்படி ஆலையை இயக்குவார்கள்.

தேர்தல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இது ஆட்சியாளர்களுக்கும் போலீசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடத்திய போராட்டத்தில் திட்டமிட்டு போலீசு நடத்திய துப்பாக்கிச்சூடு வன்முறை வெறியாட்டத்திற்கு காரணம் விஷமிகள், சமூக விரோதிகள், என சித்தரித்து மக்கள் அதிகாரம் அமைப்பை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்தில் போலீசும் ஆட்சியாளர்களும் செயல்படுகின்றனர். இதற்கு  சில பத்திரிக்கை – ஊடகங்கள் பலியாகி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை, அதன் அடிவருடியான போலீசின் இந்த பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பத்தயாராக இல்லை. போலீசு எப்போதும் போராடும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எதிரான வன்முறை கருவிதான்.

தமிழக அரசு தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட போடப்பட்டுள்ளது தமிழக அரசின் அரசாணை அல்ல, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு அதிகாரி மூலம் போடப்பட்ட உத்திரவுதான். இது வெற்றுக்காதிகம், வலுவற்றது. இதற்கு நீதிமன்றத்தில் உடனே தடை வாங்கிவிட முடியும். இதை வெற்றி என கருதி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது. போராட்ட உணர்வுகள், போராட்ட ஒற்றுமைகளை மழுங்கடிக்கச் செய்ய அவர்களுக்கு சிலகாலம் தேவை. அது முடிந்தவுடன் மீண்டும் கோர்ட் உத்திரவுப்படி ஆலையை இயக்குவார்கள். எனவே தமிழக அரசு கொள்கை முடிவாக தமிழகத்தில் இனி காப்பர் ஆலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்து அதை சட்டமாக இயற்ற வேண்டும். அதுமட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்கடி மக்கள் எந்த காலத்திலும் இயக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற போராட்ட உறுதிதான் வேதாந்தா முதலாளி நாங்கள் தமிழகத்தலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை காலி செய்து எடுத்து கொண்டு போகிறோம் என்று அறிவிக்க வைக்கும். அதுதான் நிரந்தரமான இறுதியான வெற்றி. 

♦ இரத்தத்தை உறைய வைக்கும் படு பயங்கரமான இந்த துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு காரணமான  முதல்வர், போலீசு அதிகாரிகள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட வேண்டும்.

♦ சுட்டுக் கொன்றுவிட்டு இழப்பீடு தந்தால் போதும் என கருதுவது துப்பாக்கிச்சூட்டைவிட கொடூரமானது வக்கிரமானது. இந்த துப்பாகிச் சூடு குறித்து உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

♦ கொலைகாரர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவே ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை பயன்படும். டி.ஜி.பி. தூத்துக்குடி எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

 

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

கலந்து கொண்டோர்:
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

____

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க