பத்திரிகை செய்தி                                                                     நாள் : 02.06.2018

அன்புடையீர் வணக்கம்,

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு சட்டமியற்ற வலியுறுத்தியும்  தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் நாளை (03.06.2018 ) மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு நேற்று அனுமதி மறுத்துள்ளது. இதனால் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கும்  உடனே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேதாந்தாவுக்காக மக்கள் மீது என்கவுண்ட்டர் செய்த போலீசு இப்போது தன்மீதான பழியை மறைக்க அரசிலமைப்பு சட்டத்தில் இருக்கும் கருத்துரிமையை என்கவுண்ட்டர் செய்துள்ளது. ஆகவே நாளை 03.06.2018 மாலை நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்கள்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க