ஏன் என்றால் சிறைவாசமா ? | தோழர் தியாகு – பி.யூ.சி.எல். முரளி உரை | காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கலந்து கொண்ட தோழர் தியாகு மற்றும் பி.யூ.சி.எல் முரளி ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “மோடி மட்டும் பிரதமர் ஆகாமல் இருந்திருந்தால் எப்பொழுதோ குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பார். கொலை என்பது இவர்கள் பணி. அதனால்தான் யாரைப் பார்த்தாலும் இவர்களுக்கு கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். மோடி ஒரு RSS வேட்பாளர், மோடி பணியை சரியாக செய்யவில்லை என்றால் மோடியையும் கூட இவர்கள் கொலை செய்வார்கள். கல்புர்கி, கெளரி லங்கேஷ் வரை இவர்கள்தான் கொலை செய்தார்கள். இதுகுறித்து மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும்.

வாஞ்சிநாதன், அரிராகவன் மீது பொய் வழக்கு. மக்களை அச்சுறுத்த இது போன்ற வேலைகளைச் செய்கிறது மோடி அரசு. அந்த வகையில்தான் முற்போக்காளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 5 பேர் மட்டும் இல்லை 5,000 பேர் இருக்கிறோம். மக்களுக்கு நாம் விழிப்பூட்ட வேண்டும். மோடி ஆட்சியை எதிர்த்து சிறை செல்வது நமக்குப் பெருமை. மோடி ஆட்சியினால் நமக்கு நிறைய பாதிப்பு. முதலாளிகளுக்கு எதிராக நாம் களமிறங்க வேண்டும். மக்கள் அதிகாரம் முன்னெடுக்கும் அனைத்து போராட்டத்திற்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் முழுமையாக நிற்கும்.” என்று கூறினார்.

முழுமையான உரையைக் காண

 

ந்நிகழ்ச்சியில் பி.யூ.சி.எல் அமைப்பின் மாநில செயலாளர் முரளி பேசுகையில், ”ஏன் இது போன்ற கைதுகள்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஜனநாயகக் குரல்களை நெறிப்பதற்கு விதவிதமாக கற்றுத் தேர்ந்து உள்ளனர். பீமா கோரெகான் வன்முறையை உருவாக்கியது இந்துத் தீவிரவாதம்தான். 3 மாதங்களில் மட்டும் 22 பேர் UAPA-வில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூத்துக்குடியில் மக்கள் அதிகாரம் என்ன செய்தனர்? ஆனால் அவர்கள் மீதும் தேசதுரோக வழக்கு, அடக்குமுறை. என் வீட்டில் விடியற்காலை 3 மணிக்கு வந்து காவல் துறையினர் உனக்கும் மக்கள் அதிகார அமைப்பிற்க்கும் என்ன தொடர்பு, வாஞ்சிநாதனை எப்படித் தெரியும் என்று கேட்கின்றனர். நான் அவர் ஒரு வழக்கறிஞர், பார்த்துள்ளேன் பேசுவேன் என்றதற்கு என் மீது வழக்கு. RSS-ன் அடாவடித்தனம் மிகவும் அதிகமாகி வருகிறது. திட்டமிட்டு பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகாரர்களைக் கொண்டுதான் அவர்கள் கொலை செய்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எல்லாவற்றின் மீதும் அடக்குமுறை. ஒவ்வொரு மாநிலத்திலும் அடக்குமுறைக்கு புதிய உத்திகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர். நீதிமன்றமும் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றன. சட்டத்திற்கு புறம்பாகத்தான் அவர்கள் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறார்கள். ஒடுக்குவது, நசுக்குவது, இதற்காக சட்டங்களை அதிகமாக போட்டு உள்ளனர். மக்களின் குரல் என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மாற்றி எழுத வைக்கும். போராட்டங்களுக்குத் தயங்கக் கூடாது” என்று பேசினார்

முழுமையான உரையைக் காண

– வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க