டெல்டா விவசாயத்தை திட்டமிட்டு அழிக்கும் எடப்பாடி, மோடி கும்பலைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் !

காவிரி நீர்ப் பங்கீட்டில் கழுத்தறுப்பு, காவிரி தடுப்பணைகளை உரிய முறையில் பராமரிக்காதது, கால்வாய்களைத் தூர் வாராமல் விடுவது எனத் தொடர்ச்சியாக டெல்டா விவசாயத்தை சீரழிக்கும் நாசவேலையில் மத்திய மோடி அரசும் அடிமை எடப்பாடி அரசும் ஈடுபட்டுவருகின்றன. இவையனைத்தும் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி விவசாயிகளைக் கூண்டோடு விரட்டிவிட்டு, ஒட்டு மொத்த டெல்டா பகுதியையும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் படுகைகளாக மாற்றி வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்க்கும் சதித்திட்டமே.

இந்த மாபாதகச் செயலைச் செய்துவரும் மோடி, எடப்பாடி அரசுகளைக் கண்டித்து  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 20-09-2018 (வியாழக் கிழமை) காலை 10 மணியளவில் திருவாரூர் இரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர் !

தகவல்: மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு: 96263 52829

*****

எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !
மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம்!

பிள்ளையார் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழகத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் வண்ணம் தொடர்ந்து பேசி வரும் பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா-வை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில், வன்முறையை தூண்டி கலவர பூமியாக மாற்றும் பயங்கரவாதி எச்.ராஜாவை ஊபா சட்டத்தில் கைது செய் !

தகவல்: மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம்
தொடர்புக்கு: 81108 15963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க