பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் உரையாற்றிய கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன், பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு அனைவரும் அடிபணிந்து விட்டனர் எனக் கூறியுள்ள வீடியோ பதிவு பிரபல மலையாள பத்திரிகையான மலையாள மனோரமாவின் இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்

பூட்டிய அரங்கிற்குள் நடத்தப்பட்ட பாஜக உட்கட்சிக் கூட்டத்தில் கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் சபரிமலையின் தந்திரி (தலைமைப் பூசாரி) தனக்கு அழைத்ததாகவும், தனது ஆலோசனையின் பெயரிலேயே வயதுக்கு வந்த பெண்கள் வந்தால் கோவில் நடையை இழுத்து மூடுவேன் என தந்திரி அறிவித்ததாகவும் கூறியுள்ளார்.

“சபரிமலை நமக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு. அது ஒரு பிரச்சினைக்குரிய விசயம். நேர்வழியில் சபரிமலைப் பிரச்சினையை தீர்ப்பது என்பது சாத்தியமற்றது. நாம் (பாஜக) ஒரு நிகழ்ச்சிநிரலை முன் வைத்தோம். எதிர்க்கட்சிகளைத் தவிர அனைவரையும் அது அடிபணியச் செய்துவிட்டது” என்று கூறியிருக்கிறார் ஸ்ரீதரன்.

படிக்க:
♦ சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

மேலும், அக்டோபரில் கோவில் திறந்ததுமே ஒட்டுமொத்த போராட்டத்தையும் பாஜக திட்டமிட்டதாகவும் தெரிவித்தார். ”நமது பாஜக செயலாளர்கள், தங்களால் என்ன எவ்வலவு வெற்றிகரமாக செய்யமுடியுமோ அதனை செய்து முடித்தனர். இரண்டு பெண்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீஜித் ஐ.ஏ.எஸ் அவர்கள் மலைக்குச் செல்கையில், ஒரு இளைஞரணித் தலைவர்தான் பக்தர்களை அழைத்து அவர்களைத் தடுத்து  நிறுத்தினார். வெளி உலகிற்கு இது எதுவும் தெரியாது.” என்றார்.

ஆண்கள் பலரைக் கொண்ட கும்பல் ஒன்று கேரள ஐ.ஜி ஸ்ரீஜித், கவிதா ஜக்கால் மற்றும் ரெஹானா பாத்திமா ஆகிய இரண்டு பெண்களை அழைத்துச் செல்கையில் தடுத்து நிறுத்தியது.

கலவரத்தில் ஈடுபட்ட சங்கபரிவார காலிகள்

மேலும், கோவில் தந்திரி கண்டரரு ராஜீவாரு, பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடுவது குறித்து தன்னிடம் ஆலோசித்ததாகவும், அவ்வாறு செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வருமா எனவும் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

“தந்திரி சமூகம் பாஜகவை நம்புகிறது. குறிப்பாக அதன் மாநிலத் தலைவரை நம்புகிறது. பெண்கள் கோவிலுக்கு அருகில் அழைத்து வரச் செய்யப்பட்ட போது, அவர் எனக்கு அழைத்தார். என்னிடம் கோவில் நடையை மூடுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா என்று கேட்டார். நான் அவரிடம், அது நீதிமன்ற அவமதிப்பு கிடையாது என்றும், அவர் தனியாக இல்லை என்றும் கூறினேன்.

ஒருவேளை அவ்வாறு வழக்கு பதியப்படுவதாக இருப்பினும் அது பாஜகவுக்கு எதிரானதாக இருக்கும். ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தருவர். நான் அவரிடம் பயப்பட வேண்டாம் எனச் சொன்னபோது, அவர் அப்போதுதான் தான் நிம்மதியாக இருப்பதாகச் சொன்னார்” என்று கூறினார்.

திருப்பி அனுப்பப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த பெண்மணி மாதவி

வெளியான இந்த வீடியோவில் தந்திரியின் பங்கு குறித்து ஸ்ரீதரனிடம் பத்திரிகையாளர்கள் கேட்கையில், தாம் கோவில் தலைமை தந்திரியிடம் ஒரு வழக்கறிஞராகப் பேசியதாகக் கூறினார்.

“தந்திரி உட்பட பல்வேறு மக்கள் என்னை அழைத்து சட்டரீதியான ஆதரவு கோரினர். எங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இருந்ததால், நான் எதுவும் பதிலளிக்கவில்லை. அவ்வழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த ஒருவரால் தொடுக்கப்பட்டது” என்றார் ஸ்ரீதரன்

கேரளாவில் இந்தப் பேச்சு மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசும், சி.பி.ஐ(எம்)-ம் கேரளத்தில் பாஜகவின் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் திட்டம் அம்பலமாகியுள்ளதாகக் குற்றம்சாட்டி இருக்கின்றன. மாநில காங்கிரசு தலைவர் சென்னிதாலாவிடம், காங்கிரசும் பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்ததா எனக் கேட்கையில், சபரிமலையில் வயது வந்த பெண்கள் நுழைவது கூடாது என்ற கருத்து புதியது அல்ல” என்று கூறியிருக்கிறார்.

மீடியாக்களில் வெளியாகியிருக்கும் இந்தப் பேச்சு, சங்கப் பரிவாரத்தின் நடைமுறை உத்திகளின் ஒரு வகை மாதிரியை அம்பலப்படுத்தியிருக்கிறது. அனைத்து விவகாரங்களிலும், பிரச்சினையாக இல்லாததைக்கூட  பிரச்சினையாக மாற்றுவது, பொய்களையும், பீதியையும் பரப்பிவிட்டு பொதுமக்களை வன்முறைக்குள் இழுத்துவிடுவது போன்ற வேலைகளைத்தான் இவ்வளவு காலமாக செய்து வருகிறது சங்க பரிவாரக் கும்பல். தற்போது சபரிமலையில் தாம் தூண்டிவிட்ட வன்முறைகளைத் தனது வாயால் தானே ஒப்பித்துள்ளார் ஸ்ரீதரன்.

ஸ்ரீதரன் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, அமைதியான ஒரு சூழலை வெறிகொண்ட வன்முறைக் களமாக மாற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் செயல்தந்திரம் என்பது ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது. ’இந்து’ என்ற அடையாளத்தை வைத்தே நம்மையும் தனது அடியாட்படையாக்கி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடங்கி நடக்கும் ஒரு அடிமையாக நம்மை இருத்தி வைத்திருப்பதே இந்தக் கிரிமினல் கும்பலின் நோக்கம். தற்போது வெளியான இந்த வீடியோவைப் பகிர்ந்து பரப்பி காவிக் கும்பலின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

வீடியோவைக் காண : மலையாள மனோரமா

தமிழாக்கம்:

 

நன்றி : தி நியூஸ் மினிட்

5 மறுமொழிகள்

  1. RSS ,பா.ஜ.க பயங்கரவாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்புவதுடன் மக்களை பிளவுபடுத்தும் கிரிமினல் வேலைகளை செய்கின்றனர்.பாசிச பயங்கரவாதி மோடி கடந்த நாலரை வருடங்களில் கூறிய பொய்களை கணக்கிடவே முடியாது.ஹிட்டலரின் கோயபெல்ஸே பிரதமர் மோடியின் பொய்கள் கண்டு வெட்கப்படுவான்.

  2. அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்!

    தற்பொழுது தீபாவளி எனும் இந்துமத பண்டிகைக்காக எந்நேரமும் வெடி வெடிப்பது தடை செய்திருக்கிறது நீதிமன்றம் மகிழ்ச்சி!

    பரபரப்பான பட்டாசு சப்தங்களும் கந்தக அமில துர்நாற்றமும் ஓரளவுக்கு அடங்கி இருப்பது உண்மைதான்!

    அடடா.., என்ன இது! இந்திய குடிமக்களின் மீது அப்படி ஒரு அக்கறை?

    மனுவின் நீதியின் மீது மாறாத பற்று கொண்ட மன்றத்திற்கு மக்களின் மீது அக்கறையா?

    மோடியின் ஆட்சியில் நீதிமன்றங்கள் சுதந்திரமாக தீர்ப்புகளை எழுதுகிறது என்று சங்கிகள் மார்தட்டிக் கொள்ள வேண்டாம்!

    சமூகத்தின் வளர்ச்சிப் பாதையில் தவிர்க்கமுடியாத தீர்ப்புகள் என்று முற்போக்காளர்கள் நம்பிவிட வேண்டாம்!

    இதோ இதுதான் உண்மை!

    மக்கள் விரோத மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டது இந்திய குடிமக்கள் மட்டுமல்ல!

    இந்திய மக்களை சுரண்டி கொழுப்பதற்காக மோடியின் அரசால் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கப்பட்ட ஆகப் பெரிய கார்ப்பரேட் வணிக நிறுவனங்களும் தான்!

    பண இருக்கத்தில் இருக்கிற மக்களிடம் உள்ள ஒரு சொற்ப தொகையை தன் சொந்த தேசத்து உற்பத்தியை செய்கிற பட்டாசு நிறுவன சிறு முதலாளிகளின் மக்கள் நுகர்வதால் கார்ப்பரேட்டுகளுக்கு என்ன லாபம்?

    பட்டாசுகளுக்கான செலவை மிச்சப்படுத்துவதன் மூலமாக, நாம் காலையில் எழுந்து பல் துலக்கும் பற்பசை முதற்கொண்டு இரவு உறங்கச் செல்லும் பொழுது பயன்படுத்தும் கொசுவர்த்திச்சுருள் வரை அதானி அம்பானிகளின் பொருட்களை நுகர்வதில் மூலமாக அவர்களுக்கான லாபத்தை செழுமைப்படுத்துவது தான் இவர்களின் ஆகப்பெரிய நோக்கமாகும்!

    சரி, இப்பொழுது ஒரு கேள்வி வரும்!
    சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்போக்கானது தானே? இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்கிற கேள்வி நமக்குள் தொக்கி நிற்கும்?

    இதோ பதில்..,

    கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் புரட்சிகரமான தீர்ப்புகளை எழுதுகிற இந்த உச்சநீதிமன்றம், பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படி தீர்ப்புகள் எழுத தயாரா?

    இப்போது இவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு புரிந்திருக்கும்.

    சாதிய கட்டமைப்பு இருக்கட்டும் ஆனால் தீண்டாமை கொடுமை மட்டும் வேண்டாம் என்று மூடத்தனமாக முழங்கிய காந்தியாரின் முற்போக்கு கொள்கைகளுக்கும்,

    தமிழ் இனத்திற்கும் அவர்தம் பண்பாட்டிற்கும் எந்த தொடர்புமே அற்ற தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாட்டும்! ஆனால் பட்டாசு மட்டும் நேரத்திற்கு வெடிக்க வேண்டும் என்று கருதுகிற நீதிமன்றத்தின் முற்போக்கும்,

    தன் சொந்த தேசத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும், அவர்தம் பண்பாட்டிற்கும் நிச்சயம் கேடு விளைவிப்பவைதான் என்பது உண்மையிலும் உண்மை!

    – மு. தமிழ் மறவன்.

  3. அது என்ன பிஜேபி ஒப்புக்கொள்வது, யதார்த்த உண்மை அது தானே, உங்களை போன்ற அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் ஹிந்து மத எதிர்ப்பு என்பது பிஜேபிக்கு லாபம் தான்.

    கம்யூனிஸ்ட்கள் மற்றும் கிறிஸ்துவ மதவாதிகளின் ஹிந்து மதவிரோத போக்குகள், இயல்பாக மக்கள் மத்தியில் பிஜேபிக்கு ஆதரவை கொண்டு வரும்.

    தீவிர காங்கிரஸ் ஆதரவாளன் நானே வரும் தேர்தலில் பிஜேபிக்கு வாக்கு அளிக்க போகிறேன்.

  4. சபரி மலை அடக்குமுறை.

    ஆயிரக்கணக்கான அதிரடிப் படையினரைக் குவித்து, சோதனை என்ற பெயரில் ஐயப்ப பக்தர்கள் அவமதிப்பு.

    தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் உள்பட யாரும் இரவில் தங்க அனுமதி மறுப்பு.

    மண்டபங்களும், ஓய்வு அறைகளும் பூட்டப்பட்டு சாவிகள் போலிசிடம் ஒப்படைப்பு.

    கடைகள், ஓட்டல்கள் திறக்க அனுமதி மறுப்பு.

    குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

    தந்திரி அறை உள்பட சன்னிதானத்தின் அனைத்துப் பகுதியிலும் செல்போன்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டு வெளி உலக தொடர்பு முற்றிலும் துண்டிப்பு.

    வழிபாட்டுச் சுதந்திரம் இல்லை.

    சஞ்சார சுதந்திரம் இல்லை.

    உணவு உண்ண சுதந்திரம் இல்லை.

    குடிநீர் குடிக்க சுதந்திரம் இல்லை.

    உறங்கவும் சுதந்திரம் இல்லை.

    ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நம் நாட்டின் ஜனநாயகத் தூண்கள் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்றால் மட்டும் வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், தூக்கிப் போட்டு மிதிக்கவும் துணிந்துவிட்டன.

    பினராயி விஜயனின் சவாலை ஏற்று உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடைத்யெறியப் போராடும் ஆயிரக்கணக்கான காவிகளின் வீரத்திற்கும் உணர்வுக்கும் தலைவணங்குகிறேன்.

  5. எழுதுகிற இந்த உச்சநீதிமன்றம், பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படி தீர்ப்புகள் எழுத தயாரா?…//

    எழுதி விட்டார்கள், பிஜேபி ஆளும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிங்னப்பூர்(Shingnapur) என்னும் ஊரில் உள்ள சனி கோவிலில் பெண்கள் அனுமதிக்க படுவதில்லை, அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை ஏற்றுக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதிவிட்டது .. இப்போது பெண்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்…

    ஆதாரம்:- https://www.thehindu.com/news/national/other-states/shani-shingnapur-temple-lifts-ban-on-womens-entry/article8451406.ece

Leave a Reply to முரளி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க