ட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் எடுத்த நேர்காணல், இது. பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, அதனைக் கண்டுகொள்ளாமல் நிவாரணப் பணிகளை ஆமை வேகத்தில் செய்யும் அரசு நிர்வாகம் ஆகியவை குறித்து தமது சொந்த அனுபவத்திலிருந்து விவரிக்கிறார் அவர்.

*****

எல்லா மரமும் போச்சு, ஒன்னு ரெண்டு மரம்தான் நிக்குது. எந்த மரமும் இல்ல.  புயல் கரையேறிய அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை 15 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. பேராவூரணி 2 கிலோ மீட்டர்ல இருக்கு. இங்க பாதிப்பில்லாத வீடு எதுவுமில்லை. பட்டுக்கோட்டையில மட்டும் சுமாரா 12,000 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போஸ்ட் கம்பம் விழுந்துடுச்சி. இது வந்து எங்கூர் மின்சார ஊழியர் சொன்னது. எங்க ஊரு அலிவளத்தில் மட்டுமே 60 போஸ்ட் மரம் விழுந்திருக்கு.

இங்க குட்டை ரக தென்னை மரம் எல்லாம் முறிஞ்சி போயிடுச்சி.  பழைய தென்னை எல்லாம் உறுதியா இருக்கும்.  இப்ப உள்ள தென்னையின் தண்டு பகுதி வலிமை இல்லாம இருக்கு. அதுல காய் காய்ப்பு திறனை அதிகப்படுத்தி இருக்காங்க.  அதுகிட்ட நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை. மொத்த மரமும் முறிஞ்சி ரெண்டா விழுந்திருச்சி. அதாவது இந்த தென்னை மரத்தை மட்டும் நம்பி இருந்த பல குடும்பங்கள் கண்ணீரோடு அமர்ந்திருக்கு.

குடி தண்ணிக்கு என்ன பன்றீங்க?

குடி தண்ணிக்கு பழைய டேங்குல  தண்ணிய சுட வச்சி குடிச்சி கிட்டு இருக்கோம். இப்பதான் இரண்டு பாட்டிலு 50 ரூபாய்க்கு வாங்கிட்டு வறேன். இரண்டு லிட்டர் தான். காசு இல்லாதவங்க இன்னா பன்றாங்கன்னா கும்பகோணத்துல போயிட்டு தண்ணி தூக்கிட்டு வராங்க.

நீங்க போயிட்டு வாங்கிட்டு வறிங்களா?

இல்ல. வாட்டர் ஏஜெண்ட் போயிட்டு வாங்கிட்டு வராரு. நான் போயிட்டு ஒரு கேன் அறுபது ரூபா கொடுத்து வாங்கிட்டு வரேன். இது உள்ளூர் கம்பனி. எங்க ஊர்ல 120 கிலோ மீட்டர் வேகத்துல புயல் அடிச்சிது. இன்னொரு விசயம் புயல் அடிக்கும்னு எச்சரிக்கை கொடுத்தாங்க. ஆனா அதோட எதிர் திசையில வெற்றிடத்தை நிரப்பு ஒரு புயல் வரும்னு எந்த மீடியாவும் சொல்லவில்லை. எல்லாம் அடிச்ச பிறகு தான் சொல்றாங்க.  எதிர் திசையில அடிச்ச காத்துதான் மிகபெரிய பாதிப்பை எற்படுத்தினது. மூன்றறை மணிக்கு அடித்த புயலின் பாதிப்பு கம்மி தான். எதிர் திசையில புயல் அடிக்கவும் இரண்டு பக்கத்து மரங்களும் முறிஞ்சிடுச்சி.

பஞ்சாயத்து போர்டுல யாருமெ இல்ல. அவங்கள எதுவ்மெ கேட்க முடியாது. ஏன்னா உள்ளாட்சி தேர்தலே நடக்கல. அதிகாரிகள் எல்லாருக்கும் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வந்துடும். அதனால் அவங்களால் இந்த வலியை உணர முடியல.  நம்ம ஏழை குடும்பத்துல பிறந்ததால் அந்த வலியை உணர்ந்து உங்ககிட்ட பேசுறேன்.

இப்ப கவர்ன்மெண்டு தான் சொல்லுதுல்ல எல்லா முன்னெச்சரிக்கையும் எடுத்துட்டோம்னு?

காவிரி டெல்டா மாவட்டங்களை அலட்சியப்படுத்திட்டாங்க. அது மிகப்பெரிய தவறு. ஏன்னா இதுவரை கடந்த காலங்கள் பாத்திங்கன்னா புயல் வர்ரதுக்கு முன்ன மழை பேஞ்சுக்குட்டுத்தா இருக்கும், அப்போ புயல்னு ஒரு பயம் இருக்கும், இப்போ முத நாள் சாயங்காலம் வரை வெயிலடிக்கிறதல அத நம்ப முடில. இதே பாலசந்தர் (வானிலை ஆய்வுமைய அதிகாரி) என்ன சொல்ராரு, பாம்பனுக்கும் ராமேஸ்வரத்துக்கும் நடுவுல கரைய கடக்கும்ன்றாரு, அவரு வேதாராண்யத்தயே கடைசில தான் சொன்னாரு, அதே பிரதீப் ஜான் என்ன சொல்ராரு வேதாராண்யத்துல கரையை கடக்கும்ன்றாரு, அப்போ வந்து ஒரு புரிதல் இல்லாம இருக்கு ஏன்னா காற்று வந்து திசை மாறிப் போய்டுச்சு, அப்படிம்பாங்க. இன்னோன்னு, இந்த அபிராமண்டலத்துல புயல் கடக்கலாம்ன்ர வாய்ப்பே சொல்லல அவுங்க. ஆனா, அபிராமண்டலத்துல ஒரு குறிப்பிட்ட அளவு காற்று கரைய கடந்துருக்கு. இப்போ வந்து வேதாராண்யம்தான் தனித்தீவாய்டுச்சுன்னு சொல்றாங்க, ஆனா பட்டுக்கோட்டையும் வந்து மிகப்பெரிய தனித்தீவா இருக்கு. பொருளாதார சேதமும் மிகப்பெரிய அளவுல ஏற்பட்டிருக்கு. ஏன்னா கரையை ஒட்டிதா நாங்க இருக்குறோம்.

புயலோட கண் பகுதில இருந்து 20 கி.மீ. ல இருக்குறோம். அதுனால மிகப்பெரும் பாதிப்பு, இன்னும் வந்து கரண்ட்டு வர்றதுக்கு 20 நாள் ஆகும்ன்றதுக்கு என்ன பண்றதுன்னே தெரியல!

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?

பட்டுக்கோட்டைல கரண்ட் இருக்கா?

இல்லை, பட்டுக்கோட்டைல கரண்ட் இல்லை, மூணு நாள் ஆவுது, எல்லோரும் வந்து குளத்துலதா குளிக்கிறாங்க. நகரத்துல இருந்து கிராமத்துக்கு வந்து குளுச்சுட்டு போறாங்க.  நான் போய் இப்பத்தா குளுச்சுட்டு வந்தேன்.

எங்க போய் குளுச்சுட்டு வந்தீங்க?

நான் போய் எங்க அம்மா ஊர்ல போய் குளுச்சுட்டு வந்தேன். அங்க குளத்துல பாத்திங்கன்னா ஒரே கும்பலா இருக்கு. ஆண்கள் பெண்கள் எல்லா குளிச்சுட்டு போராங்க. அங்கருந்து காரெடுத்துட்டு இங்க வந்து குளிச்சுட்டு போராங்க. ஏன்னா உள்ள தண்ணிக்கான வசதியே கிடையாது. ஜெனரேட்டர் வந்து வீட்டுக்கு 500 ரூபா போட்டு இப்பத்தா பம்பு செட் வச்சு தண்ணி ஏத்துறதுக்கு முயற்சி பண்ணீட்டிருக்காங்க.  தன்னார்வலர்களா வந்து வீட்டுக்கு 100 ரூபான்னு வசூல் பண்ணிட்டு போராங்க.

சரி இப்ப ஜெனரேட்டரை காசு போட்டு வாங்கிட்டு வந்துட்டாங்க எப்புடி தண்ணி ஏத்துவாங்க.?

ஊர் டேங்க்ல தண்ணி வண்டிய கூட்டிட்டு வந்து, ஜெனரேட்டர் மூலமா ஊர்ல இருக்க மோட்டார் வச்சு மேல ஏத்த முயற்சி பன்னீட்டு இருக்காங்க. இப்ப மிகப்பெரிய பிரச்சனை குடிதண்ணி.

அப்போ சமைக்கிரதுக்கு தண்ணீ?

அதுக்கு அரும்பாடு பட்டுட்டுதா இருக்கோம்.

சாப்பாடு உணவு பொருள் அதெல்லாம்?

எனக்காவது வீடு இருக்கு, தண்ணீய பத்தி யோசிக்கிறேன், நிறையா பேத்துக்கு வீடே இல்லையே. அவுங்கள்லா தூங்குறதுக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அருகிலுள்ள பள்ளிகளுக்கெல்லாம் அனுப்பிருக்காங்க, அங்க தண்ணி, அரிசி, பருப்புலாம் யாரு அனுப்புறது. பிரசிடெண்ட் இருந்தா யாரு அவரை கேக்கலாம், வார்டு மெம்பர் இருந்தா அவரை கேக்கலாம்.

ஒரு பள்ளிகூடத்துல சுத்தி உள்ள ஊர்ல பாதிக்கப்பட்ட மக்களைலா கூப்ட்டு அடைச்சு வச்சுருக்காங்க, அவுங்களுக்கு தண்ணீர், உணவெல்லாம் ஏற்பாடு பண்றதுக்கு பொறுப்பான நபர் இல்லை அந்த ஊருக்கான தலைவரை கேக்கலாம்னா அவருக்கு இதுல அக்கரயில்லை.

பொறுப்பான அதிகாரிகங்க இல்லை. அதிகாரிகள் என்னன்னா ஜீப்பவிட்டு இறங்கவே யோசிக்கிறாங்க. இப்ப எங்க ஊர்ல இருக்க பள்ளில சத்துணவுக்கு வெச்சுருந்ததைத்தான்  எல்லாரும் சாப்புட்டுட்டு இருக்காங்க, யாரை கேக்குரதுன்னு தெரியாம, அவுங்களாதா காலிகூடத்த திறந்து சமைச்சு சாப்புட்டுட்டு இருக்காங்க. எல்லா ஊர்லையும் இதான் நடக்குது.

தென்னை மரங்கள் பாத்தீனா மிகப்பெரிய அழிவ சந்திச்சுருக்கு. ஒரு தோப்புல 500 மரம் இருக்குன்னா, 75% மரங்கள் போய்டுச்சு, மீதி உள்ள மரத்துக்கும் குருத்து வந்து ரெண்டு பக்கமும் திருகியிருக்கு, அப்படி திருகிப் போச்சுன்னா அதுவும் நிலைக்கிரதுக்கான வாய்ப்பு கம்மீன்னு சொல்ராங்க. இப்ப விவசாயிகள் வந்து விழுந்து கிடக்குர மரங்களை அகற்றுனா போதும்ன்றாங்க. ஆனா உணவுப் பொருளுக்கு யாரும் கையேந்தல, தண்ணீருக்குத்தா மிகப்பெரிய பிரச்சனையாயிருக்கு.

மரங்களை அகத்துரதுல என்ன பிரச்சனை இப்ப?

ஒவ்வோரு மரமுமே வந்து அறுத்தான் தூக்கமுடியும், அருக்குறதுக்கான எந்திரமில்லையே.

ஒவ்வொடு ஊர்லையும் குறைஞ்சது எத்தனை மரம் அறுக்குற எந்திரமிருக்கு?

எந்த ஊர்லையும் எந்திரமில்லை, இது வந்து மரம் வெட்டுற நபர்கள் மட்டும்தா வெச்சுருந்தாங்க, மிஷின் இருந்தாலும் இங்க தேவை அதிகமா இருக்கு. அதுனால ஊர்ல இருக்க தன்னார்வலர்கள் சேர்ந்து வரிசையா யார் யார் வீட்டுக்கு பாதையில்லையோ அதை மட்டும் மிஷின்ன வெச்சு ஏற்படுத்தி குடுத்தாங்க. டூ வீலர் போறதுக்கான வழிகள், நானே இப்ப ரெண்டு நாள் கழுச்சு வண்டி எடுத்துட்டுப் போய் குளிக்க முடிஞ்சுது. ஏன்னா எங்க வீட்டை சுத்தி மரமா இருந்துச்சு. அந்த மரம் எல்லாமே மிகப்பெரிய மரங்கள், வீட்டை சுத்தி இவ்வளவு பெரிய மரம் இருக்கனால, ரம்பமே, அருவாளோ வெச்சு வெட்ட முடியலை. அதுக்கு இந்த மெஷின்தான் தேவைப்படுது. அதுக்கு இந்த பெட்ரோல், டீசல் ஊத்த வேண்டியிருக்கு. பல மரங்கள் கம்பில சுத்தி போஸ்ட் மரத்த சாச்சிருக்கு.

இப்போ உங்க ஊர்ல 70,80 போஸ்ட்டுமரம் விழுந்துருச்சுனா உங்க ஊர்ல இருக்க போஸ்ட்டு மரத்த மட்டும் நட்டு இந்த கம்பிய மாட்டிட்டா கரண்ட்டு வந்துருமா.?

வராது. ஏன்னா இப்ப வந்து பட்டுக்கோட்டைல இருக்கக்கூடிய மின் பகிர்மான இடத்துலையே பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அப்ப அந்த மின் பகிர்மான இடத்துல இருந்து ஒவ்வொரு ஸ்டெப்பா கொண்டு வரனும். ஏன்னா கொலாப்ஸ்ன்றது, ஒரு ஏரியா மட்டுமில்ல மொத்தமா ஒரு 20கி,மீ அருந்திறுக்கும் போது, புதுசா மறு நிர்மாணம்தான் பண்ண முடியும். பட்டுக்கோட்டை வந்து மிகப்பெரிய நகரம். பட்டுக்கோட்டைய சுத்தி ஒரு முப்பது, நாற்பது கிராமங்களுக்கு இதுதான் நடைமுறை. ஏன்னா சுத்தி நாற்பது ஊருன்னா நாற்பது ஊருக்குமான கனெக்ஷனும் கட்டாயிருக்கு. இனி எல்லாம் புதுசா போடுர மாதிரிதான்.

எல்லா டிரான்ஸ்பாரம்முமே குப்புற தரையில கிடக்குது. நெடுஞ்சாலைத்துறை வந்து ஈசியா வேலை பாத்துருக்கு. என்ன காரணம்ன்னா அவுங்க வந்து 3 பொக்லைன் வெச்சு பூரா ஒதுக்கி வெச்சுட்டு போய்ட்டாங்க, பஸ் போய்டுச்சு.  அவுங்க வேலை ஈசியா முடிஞ்சிருச்சு. பெருமாள் கோயில்ல மிகப் பெரிய ஒரு போராட்டம் ரோட்ல உக்காந்தாங்க. பட்டுக்கோட்டைலிருந்து 3 கி.மீ தள்ளி புதுக்கோட்டை போர வழில 2 மணி நேரமா போக்குவரத்து பாதிப்பு. இந்த போராட்டம் அடிப்படை வசதிக்கான போராட்டம். நேத்து வரை எனக்கு 300 தென்னை மரமிருக்குன்னு சொன்ன ஆளு இப்போ வந்து ஒன்னுமே இல்லாம இருக்காப்ல.

ஒரு ஒரு ஏக்கர் தென்னை மரம் ஒருத்தர்ட்ட இருக்குன்னா அவருக்கு வருஷத்துக்கு எத்தனை வெட்டு?

3 மாசத்துக்கு ஒரு வெட்டுன்னா, வருசத்துக்கு 4 வெட்டு.

ஒரு வெட்டுக்கு ஒரு ஏக்கருக்கு தோராயமா எவ்வளவு கிடைக்கும்?

தோராயமா 30,000 ரூபாய் கிடைக்கும்.  ஒருவெட்டுக்கு 30,000ன்னா, வருஷத்துக்கு சராசரியா 80,000 குறைஞ்சது கிடைக்கும்.

இங்க சராசரியா 4, 5 ஏக்கர் வெச்சுருக்காங்கள்ல?

ஆமா, எல்லாம் 4, 5 ஏக்கர்னு வெச்சுருக்க ஆளுங்கதா, நிறையா பாதிக்கப்பட்டிருக்காங்க..

தென்னை மரங்கள் நம்ம கவனத்துல இருக்கு மத்த மரங்களும் வந்து பாதிப்புதானே?

என்னன்னா நானே ஆச்சிரியப்படுறேன். அவ்வளவு ஸ்ட்ராங்கான தேக்கு மரமே வந்து வேரோட சாஞ்சு போச்சு. தேக்கு மரம் வேர் ஸ்ட்ராங்குன்னு நினைச்சேன். இன்னோன்னு முக்கியமா, பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகள்ல இந்த கூரையில போடுற சீட்டு போடுவோம்ல மேல, ஒரு 2 லட்ச ரூவா செலவு பண்ணி சீட்டு போட்டமோ, அங்கங்கெல்லாம் அனைத்து சீட்டுமே  போய்டுச்சு, எங்க வீடு உட்பட.

ஆனா அதிகாலையில புயல் அடிச்சதுனால அந்த டாட்டா சீட்டு தூக்கியெறியப்பட்டதுனால உயிர் சேதம் எதுவும் ஏற்படல. இதே புயல் வந்து பகல்ல அடிச்சிருந்ததுன்னா, டாட்டா சீட்டு, டாட்டா கம்பியினால, மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்த சீட்டு, அந்த ஆங்கிள் எல்லாமே காஸ்ட்லி, எல்லா 4 கி.மீ.-க்கு தூக்கி எரியப்பட்டிருக்கு.

பட்டுக் கோட்டை மசூதி

பட்டுக்கோட்டையில மசூதி இடிஞ்சிருக்கு, அப்புறம், மின் டவர்லா காத்து உள்ள போய் வெளிய வர்றது மாதிரி இருக்கும். அதையுமே வந்து புயல் தாக்கிருக்கு. புயலுக்கு அப்பறம் ஒரு மழைகூடயில்லை. பட்டுகோட்டையில மிகப்புரிய தட்டுப்பாடு எதுக்குன்னா, மெழுகுவர்த்தி. எல்லாம் அந்த குத்து விளக்கத்தான் பயன் படுத்தீட்டிருக்காங்க எண்ணைய ஊத்தி. ஏன்னா இப்ப யாரு வீட்லையும் கரண்டில்லை.

விவசாயிங்களுக்கு ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் உழைச்சு வாங்குன சொத்தெல்லாம் போய்டுச்சு. இவுங்கள நம்பி வேலை பாக்குர கூலி தொழிலாளர்கள் அவுங்களோட நிலமை என்ன?

இப்ப என்னன்னா, ஒவ்வொரு தென்னந் தோப்புக்குள்ளையும், அம்பலக்கார் குடும்பம்தா தங்கியிருக்கும், அவுங்கதா மேக்சிமம் அந்த தோப்ப பாத்துகுவாங்க. அவுங்க வந்து அங்க இந்த மட்டையெடுத்து போட்டு அவுங்க குடுக்குர காசை வாங்கிட்டு அமைதியா வாழ்ந்துட்டிருந்தவுங்க. அவுங்களோட வாழ்க்கைதான், எதிர்காலமே இல்லாம நிக்கிது.

அவுங்கள்லா உள்ளூர சேர்ந்தவுங்கள்லா வெளியூர சேர்ந்தவங்களா ?

அவுங்கள்ல சில பேர் உள்ளூர்லயே தங்கியிருப்பாங்க, சில பேர் உள்ளுக்குள்ளையே ஆடு வளத்துக்குட்டு மாடு வளத்துக்குட்டு இருப்பாங்., அவுங்கள்லாம், அந்த முதலாளியையும் அந்த தென்னந்தோப்பையும் சார்ந்து வாழ்ரவங்கதான். அந்த குடும்பங்களுக்கு இப்ப எதிர்காலம் வந்து கேள்விக்குரிய நிக்கிது.

ஏன்ன டெல்டா விவசாயிகள் வந்து உணவுக்கு வந்து யாருகிட்டையும் கையேந்தல. ஏன்னா எல்லார்ட்டையும் உணவுப்பொருள் வந்து இருக்கு. ஆனா குடி தண்ணீருக்கு கையேந்தி நிக்குறாங்க. நம்ப சமூகத்துல என்னன்னா, மின்சக்தி இல்லைன்னா மாற்று எரிசக்தி என்னன்னு யாரும் யோசிக்கவேயில்லையே. அந்த நேரத்துல தான்னே யோசிக்கோம். நம்ம0 யூ.பி.எஸ் மட்டும்தா வாங்கி வச்சோம், அது ஒரு மணி நேரம் கூட நிக்கலையே.

செல்போன் சார்ஜ்க்கெல்லாம் என்ன பன்றாங்க?

நானே பவர் பேங்க வச்சு ரெண்டு நாள் போட்டேன், இங்க தனியார் பள்ளிங்கள்ல ஜெனேரேட்டர் இருக்கு. அங்கதா போய் போட்டுக்குறோம். முற்றிலும் தொலை தொடர்பு வந்து துண்டிக்கப்பட்டிருக்கு.

இப்ப ஒரு வாரம் கழுச்சு எல்லா துணி தொவைக்கனும், கரண்ட் வர்ரதுக்கு ஒருமாசம் ஆகும் போல இருக்கு?

அருகில் இருக்கிற, ஏரி குளங்கள்ளதான் மக்கள் துணி தொவச்சுட்டிருக்காங்க. அதுதா ஒரே சோர்ஸ். பட்டுக்கோட்டைல, நேத்து நால்ல டைல்ஸ் போட்ட பாத்ரூம்ல குளிச்சவன் பூராம், குளத்துல இறங்கி மேல் வரையும் சோப்பு போட்டு குளுச்சுட்டு, கரைல நின்னு துவட்டீட்டு போரான்.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

பட்டுக்கோட்டய சுத்தி குளத்துல இறங்கி குளிக்க வர்ராங்கன்னா எந்த ஊர் குளத்துல குளிக்கிறாங்க?

பட்டுக்கோட்டை மெயின், கரிக்காடு இங்க உள்ளவங்கெல்லாம் காட்டாற்று மஹாராஜா ஆற்றுல குளிச்சுட்டு போராங்க. புயல்ல பஸ் கூட விழுந்துச்சுல, அந்த ஆற போய் பாத்திங்கன்னா ஒரே ஜே ஜே ஜேன்னு இருக்கு கூட்டம்.

தண்ணி வருதா என்ன ஆத்துல?

ஆத்துல தண்ணி வருது. மழை பேஞ்ச தண்ணி சேர்ந்து ஓடியாருது, நான் போய் நரி மேட்ல குளுச்சேன், ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே இடத்துல தான் குளிக்க வேண்டியிருக்கு. நகரத்து பெண்களுக்கு குளத்துல குளிக்கிறது பழக்கப்படாம இருக்கு, இங்க எங்க ஊரு பொண்ணுங்க பாவாடைய நெஞ்சுவர கட்டீட்டு குளிச்சுட்டு போவுது, இதுங்களுக்கு அது பழக்கப்படாம இருக்கு. டவுன் ஆண்களுக்கு நீச்சல் தெரியல, நம்ம போரோம் டைவ் அடுச்சுட்டு குளிச்சுட்டு வாரோம், அவுங்களுக்கு சிரமம். இப்புடி நிறையா இடர்பாடுகள் இருக்கு.  மீடியாக்கள் வந்து பட்டுக்கோட்டையில 20% பாதிப்புதா ஏற்பட்டிருக்குன்னு போட்டுறுக்காங்களே எவன் வந்து பாத்தான் இங்க. இது வந்து மன ரீதியா மக்களை வருத்துது. மக்கள் வந்து மீடியாக்கள் மேல கடும் கோவமா இருக்காங்க. ஏன்னா இந்த அடிப்படை தேவையான உணவு, உடை. இருப்பிடம் இதுல பாதிப்பு வரும் போது அடுத்த கட்டமா வந்து போராடத்தான் தோணும். அவனுடைய தேவை கிடைச்சா போராட மாட்டான்.

இந்த அடிப்படை தேவைகள் பால், தண்ணீர்லாம் விலை அதிகமா விக்கிறாங்களா?

ஆமா அது உண்மை. என்னன்னா, ஒரு சில பேர் ஒரு நல்ல எண்ணத்துல குடுக்குராங்க, இதுதா சந்தர்ப்பம்னு பஜ்ஜிய 10 ருவாய்க்கும், தண்ணிய 30 ரூவாய்க்கும் விக்கிர குரூப்புமிருக்கு.

இன்னோரு ஊர்ல இருக்க மக்கள், பிரச்சனை சரியாவுர வரைலயும் உள்ளூர்ல இருக்க மாட்லருந்து பால் கரந்து யாரும் விக்கக்கூடாது, நம்ம சொந்த பயன்பாட்டுக்கு மட்டும்தா பயன்படுத்தனும்னு கூட்டம் போட்டு முடிவெடுத்தாங்களா?

அது வந்து கிராமங்கள்ல ஒரு ஜாதியா இருக்க மக்கள்தான் அப்படி பன்னிக்குராங்க, ரெண்டு மூனு ஜாதிங்க கலந்திருக்க ஊர்ல இந்த மாதிரியானது நடக்க வாய்ப்பில்ல ஏன்னா, ஏ நம்ப ஊட்டினது அங்க போகனும்னு நினைக்கிரான். அதுவும் நல்லா உத்து பாத்திங்கன்னா ஒன்னு கள்ளர் ஊட்டு குடும்பமா இருக்கும் இல்லை தேவர் ஊட்டு குடும்பமா இருக்கும்.

எந்த கம்யூனிட்டி அங்க ஜாஸ்தி?

இங்க பட்டுக்கோட்டைய பொருத்தளவு மூணு ஜாதி அதிகமாயிருக்கு, வெள்ளாளர்தான், முஸ்லி33னு சொல்லுவாங்க அதுல அவுங்கதா அதிகம், ப்ளஸ் தேவரு, கள்ளரு, செட்டியூல்டு அப்புறம் அம்பலக்காரங்க, இடையர், கோனார் கொஞ்சம் அதிகமா இருக்காங்க.

பள்ளிகூடங்க நிலைமை என்ன?

எல்லா பள்ளிகளயுமே மரங்கள் வந்து உடைஞ்சு, ஆள் நுழைய முடியாமதா இருக்கு. பட்டுக்கோட்டைல வந்து கல்வித்துறையோ, மாவட்ட கல்வி அலுவலரோ, மாவட்ட முதன்மை கல்வு அலுவலரோ பள்ளி என்ன கண்டிசன்ல இருக்குன்னு யாரும் கேக்கல. பள்ளிகள்ல இருக்க மரங்கள்ல வெட்டியெடுக்க ஒருவாரம் ஆகும், அதுக்கான முன்னெச்சரிக்கைய யாரும் ஒன்னும் செய்யலை. இதுனால பள்ளிகள்லாம் துவங்குவதற்கு மினிமம் 15 நாள் ஆகும்.

மரங்களை வெட்டி யெடுக்க கலெக்ட்டர் என்ன பன்னாரு, இன்னும் சி.ஓ வே வந்து பாக்கலை. சி.ஓ வும் பாக்கலை, டி.ஓ வும் பாக்கல.  அனைத்து பள்ளிகள்ளயுமே அந்த ஊரு மக்கள்தான் தங்கியிருக்கு.

எடப்பாடி அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ல நல்லா செயல்பட்டதா, ஸ்டாலின், தமிழிசையெல்லாம் பாராட்றாங்க அத பத்தி என்ன நினைக்கிறீங்க?

கஜா புயல் முன்னெச்சரிக்கை வந்து பாலசந்தர் வந்து ரெண்டு நாள் தூங்காம இருந்தாரு இதுலா வந்து சேட்டிலைட் மூலமா பாத்து சொன்னது, இவுங்க வந்து மனிதர்களாக, என்னத்த கொண்டு போய் சேர்த்தாங்கன்றது முதல் கேள்வி. உணவு பொருட்களாய் கொண்டு போய் சேர்த்தாங்களா, தண்ணீர்லா டேங்க்ல சேமிச்சு வெச்சாங்களா, உணவுப் பொருள்ல முகாம் மாறி அமைச்சு எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தாங்களா. இல்லை. இவுங்க வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைனு எதை சொல்றாங்கன்னா. வானிலைல டி.வில உக்காந்து வசிக்கிறத முன்னெச்சரிக்கைன்னு சொல்றாங்க. முன்னெச்சரிக்கைனா எந்தெந்த ஊர்ல கிராமங்கள்ள எச்சரிக்கையோ, அங்கங்கெல்லாம் மண்டபத்த புடுச்சு, மக்களை தங்கவெச்சு அவுங்களுக்கு உணவு பொருட்களை குடுத்து, அவுங்களுக்கு முழு வசதிய பன்னிக்குடுக்குறதுதான் சிறந்து செயல் படக்கூடிய அரசோட இலட்சணம். தவிற நீங்க வந்து டி.வில சொல்லக்கூடியத வெச்சு நேத்து வந்துவிஜயபாஸ்க்கர் வந்து 108 கண்ட்ரோல்லையும், பாலசந்தர் வந்து மெட்ராலஜிக்கள் டிப்பார்ட்மெண்ட்லையும் உக்காந்துக்குட்டு செயல் படுறது எப்படி வந்து சிறந்த அரசாக இருக்க முடியும்? மக்களோட இருக்கனும், மற்ற மாவட்டங்கள்ளையும் உள்ள அனைத்து விதமான ஊழியர்களையும் கொண்டாந்து புயல் பாதிக்கப்பட்ட இடத்துல சேர்க்கனும். சென்னைல நடந்த துரித நடவடிக்கைகள்ல 0.01% கூட டெல்டா மாவட்டங்கள்ல நடக்கலை.

வெளியூர்லருந்து மக்கள் யாராவது உதவுக்கு வர்ராங்களா?

வரலை, நாங்க வந்து உணவு எதிர்பாக்கலை முக்கியமா மரங்களை வந்து அகற்றனும், குடிதண்ணீருக்கான மின்சார வசதி, அதை சரி பன்னனும், 32 மாவட்டங்கள்ல 5 மாவட்டம் பாதிக்கப் பட்டிருக்கு, மத்த மாவட்டங்கள்ல உள்ள அனைத்து விதமான மின் ஊழியர்களையும் இங்க வந்து இறக்கி ஒரு போர்க்கால நடவடிக்கைல மீட்பு பணி நடக்கனும். பேரிடர் மீட்புக்குழுன்ரது கடல்ல போய் மீட்டுட்டு வர்ரது மட்டுமில்ல, மக்களோட அடிப்படை தேவை என்ன பாதிக்கப்பட்டிருக்கோ அதை சரி செய்யுரதுதான் பேரிடர் மீட்புக்குழு. பேரிடர் மீட்புக்குழு குறுக்க உள்ள கம்பியக்கூட இன்னும் அகற்றலையே.

பட்டுக்கோட்டைல ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களும் கம்பி வயர்களும் அறுந்து கிடக்கு, இது எதையுமே அகற்றல, அப்ப இது என்ன பேரிடர் மீட்புக்குழு? இது எப்படி சிறந்த அரசா செயல்படும்? விழுந்தது விழுந்த படிதாங்கிடக்கு. ஒன்னு கம்பிய தாண்டிப் போரான், இல்ல குனுஞ்சு போரான். அத அவுக்க கூட ஆளில்லையே. ரைட்டு ஒரு மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்லுவீங்க, ஒரு அறிவிப்பு வெளியிடலாமே, இத்தனை ஆட்களை கூட்டிட்டு வந்து இந்த பணியை செய்யப்போரோம்னு, இத்தனாந் தேதிக்குள்ள சரி பன்னிடுவோம்னு சொன்ன அந்த நம்பிக்கையோட இருப்போமே, அத கூட செய்யாதத எப்புடி சிறந்த மீட்புப்பணினு சொல்ல முடியும் ? சொல்லவே முடியாது.

5 மறுமொழிகள்

  1. //பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் எடுத்த நேர்காணல், இது. //

    பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி, இன்னும் இது மாவட்டமாக ஆக்கப்படவில்லை. பிழையை திருத்தி விடவும்.

  2. You can’t CHANGE
    How PEOPLE treat
    You or WHAT they
    SAY about you
    All you CAN do is
    Change HOW you
    REACT to it.

    -படித்ததில் பிடித்தது-

  3. ஒரு செய்தியாளனாகச் சொல்கிறேன்; பீத்திக்கொள்ளும் பெருவணிக ஊடகங்களில் இதுவரை இப்படியான ஒரு தெளிவான சித்திரத்தை செய்தியாக நான் பார்க்கவில்லை. மக்கள் ஊடகங்களின் பணி வலுவாக வாழ்த்துகள்!

  4. குறள் : சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்

    பொருள் : இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம்.

Leave a Reply to suspense பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க